Followers

Wednesday, June 28, 2006

மொழி வெறி நமக்கு தேவைதானா?

மொழி வெறி நமக்கு தேவைதானா?

'வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும் நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளது. அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.' - குர்ஆன் 30 :22

மேற்கண்ட வசனத்தின் மூலம் மொழிகள் வேறுபட்டிருப்பதையும், மனிதனின் நிறங்கள் வேறுபட்டிருப்பதையும் தன்னுடைய அத்தாட்சிகளில் ஒன்றாக இறைவன் கூறுகிறான். இதன் மூலம் நிறங்களை வைத்து மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வை கற்பிப்பதும், மொழிகளை வைத்து ஏற்றத் தாழ்வு கற்ப்பிப்பதும் கூடாது என்பது விளங்குகிறது.

குர்ஆன் அரபி மொழியில் இருக்கிறது. எனவே அது தேவ பாஷை என்ற அந்தஸ்த்தைப் பெறுமா? கண்டிப்பாக இல்லை. முகமது நபி அரபுகள் மத்தியில் தோன்றுகிறார். அவருக்கு தெரிந்த ஒரே மொழி அரபு மட்டுமே! எனவே குர்ஆன் அரபு மொழியில் இறங்கியது. முகமது நபி தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் குர்ஆன் தமிழ் மொழியிலேயே அருளப் பட்டிருக்கும்.உலக மக்களுக்கு இறை செய்தியை சொல்லுவதற்கு உலக வழக்கில் உள்ள ஏதாவது ஒரு மொழியில் தான் கொடுத்தாக வேண்டும்.

உதாரணத்துக்கு நமது தேசிய கீதத்தை எடுத்துக் கொள்வோம். ஜன கன மன என்றவுடன் ஒரு வித மரியாதையில் எழுந்து நின்று நாட்டுப் பற்றை எடுத்துக் காட்ட மரியாதை செய்கிறோம். இதனால் வங்காள மொழி சிறந்தது என்றாகி விடுமா? பல மொழிகள் பேசும் நம் நாட்டில், ஏதோ ஒரு மொழியில் தேசிய கீதம் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறோம். அதே போல் இறைவனின் கட்டளைகளை சொல்வதற்கு கடைசியாக பயன் படுத்தப் பட்டது அரபி மொழி. எனவே தான் குர்ஆன் அரபு மொழியில் இறங்கியது. இதனால் அரபு மோழி மற்ற மொழிகளையெல்லாம் விட சிறந்த மொழி என்று நினைப்தே இஸ்லாத்துக்கு மாற்றமானது.

பள்ளிவாசல்களில் தொழுகைக்கான அழைப்பு ஏன் தமிழில் கொடுப்பதில்லை?

ஒவ்வொரு நாளும் அரபு மொழியில் 'அல்லாஹீ அக்பர்'(இறைவனே பெரியவன்) என்று அரபியில் 'அதான்' அழைப்பு விடப் படுவதை நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம். இதை ஏன் தமிழில் மொழி பெயர்த்து சொல்லக் கூடாது? என்று கேட்பதும் நியாயமாகத்தான் படுகிறது. முதலில் இஸ்லாம் என்பது உலகம் தழுவிய மார்க்கம் எனபதை நாம் அறிவோம்.ஆப்ரிக்காவிலிருந்து ஒரு முஸ்லிம் தமிழகத்தை சுற்றிப் பார்க்க வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். தொழுகை நேரம் வந்தவுடன் பள்ளிவாசலில் இருந்து வரும் அழைப்போசையைக் கேட்டவுடன் 'இங்கு ஒரு பள்ளிவாசல் இருக்கிறது' என்று தொழுக சென்று விடுவார்.உலக நாடுகளில் அது கம்யூனிஷ நாடாகட்டும், அல்லது சோஷலிஷ நாடாகட்டும் எங்கு சென்றாலும் நீங்கள் கேட்கும் ஒரே ஒலி இந்த பாங்கோசைதான். இதுவும் நமது தேசிய கீதம் போல் உலக ஒருமைப் பாட்டிற்க்குத் தானே யொழிய அரபி மொழி சிறந்த மொழி என்பதற்காக அல்ல.

முஸ்லிம்கள் அரபியில் மட்டுமே தங்கள் பெயர்களை வைக்கிறார்களே ஏன்?

இஸ்லாத்தில் அரபியில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை. சாந்தி, அன்பு, அறிவழகன், முத்து போன்ற அழகிய பெயர்களை முஸ்லிம்கள் தங்களுக்கு வைத்துக் கொள்ள தடையேதும் இல்லை. ஆனால் முருகன், ராமன், கணபதி என்று உருவம் வைத்து வணங்கும் தெய்வங்களின் பெயர்களை வைக்க இஸ்லாம் தடை செய்கிறது.

உதாரணத்திற்கு குமார் என்ற நண்பர் பழைய பெயரிலேயே முஸ்லிம் ஆகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரை முதலில் சந்திப்பவர்கள் 'குமார் சௌகரியமா?' என்று விசாரித்தவுடன் மனதுக்குள் இவர் செட்டியாரா, கவுண்டரா, தேவரா, நாடாரா, தலித்தா, பிராமணரா? என்ற எண்ணம் ஓடும். சாதி நம் சமூகத்தில் அந்த அளவு புரையோடிப் போய் இருக்கிறது. அதே குமார் தனது பெயரை ரஹீம் என்று மாற்றி விட்டால் ஒரு நொடியில் சாதி எங்கோ சென்று விடுகிறது. எனவே தான் நமது இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இஸ்லாமியர்கள் அரபியிலேயே பெயர்களை வைத்துக் கொள்கிறார்கள்.

இப்றாகிம், மூஸா போன்ற பெயர்கள் அரபு பெயர்கள் அல்ல. இதை இன்றும் முஸ்லிம்கள் வைப்பதன் மூலம் அரபி அல்லாத பெயர்களை வைப்பதற்கு தடை இல்லை என்று அறியலாம். அரபியில் வைக்கும் பெயர்களில் கூட முஸ்லிம்களில் சிலர் பொருள் புரியாமல் வைத்து விடுகிறார்கள். அப்துல் முனாப், அப்துல் முத்தலிப், அப்துல் முகமது போன்ற பெயர்கள் வைப்பதற்கு இஸ்லாத்தில் தடை உள்ளது.
முனாப், முத்தலீப் போன்றவை அன்றைய அரபிகள் வணங்கி வந்த தெய்வங்களின் பெயர்கள். அப்துல் முனாப் என்றால் முனாபின் அடிமை என்று தமிழில் பொருள் வரும். 'அப்துல் முகமது' என்றால் முகமதின் அடிமை என்று பொருள் வரும் முகமது நபி இறைவனின் தூதர் தானே ஒழிய நாம் அவருக்கு அடிமைகள் அல்ல. அதே போல் அல்லாபிச்சை, மைதீன்பிச்சை என்று தன்னை இழிவு படுத்திக் கொள்வது போல் தோற்றமளிக்கும் பெயர்களையும் வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். தன்னை இழிவுபடுத்தும்படி வைக்கும் பெயர்களை மாற்றிக் கொள்ளும் படி முகமது நபி கட்டளை இட்டுள்ளார்.

என்னோடு ஒன்றாக வேலை பார்க்கும் ஹைதராபாத்தியுடன் ஒரு முறை மொழி சம்பந்தமாக சர்ச்சை வந்தது. 'இந்துக்களின் மொழி தமிழ் மொழி. நாங்கள் பேசும் உருது மொழி இஸ்லாமியருக்கு சொந்தமான மொழி' என்று ஏதோ மிகப் பெரிய தத்துவத்தை உதிர்ப்பது போல் பேசினான்.

'மூல மொழிகள் அனைத்துக்கும் தூதரையும் வேதங்களையும் அனுப்பியிருக்கிறேன் என்று குர்ஆனில் இறைவன் கூறுவது உனக்குத் தெரியுமா?' - சுவனப்பிரியன்

'ஆமாம். நானும் படித்திருக்கிறேன்' - ஹைதராபாதி

'உருது மொழி எப்போது உருவானது?' - சுவனப்பிரியன்.

'மொகலாயர்கள் காலத்தில்' - ஹைதராபாதி

'அப்படியானால் உருது மொழிக்கு வேதமோ தூதரோ வந்திருக்கிறார்களா?' -சுவனப்பிரியன்

'அதெப்படி! முகமது நபிதான் கடைசி நபியாயிற்றே! அவருக்கு பிறகுநபி வர முடியாதே!' - ஹைதராபாதி

'ஆதி மொழியான தமிழுக்கு வேதமும், தூதரும் இறைவனிடமிருந்து வந்திருக்கிறார்கள். உன் மொழியான உருதுக்கு அத்தகைய சிறப்பு ஏதும் இல்லை. அப்படியானால் நாம் இருவர் பேசும் தாய் மொழிகளில் யாருடைய மொழி சிறந்த மொழி?' - சுவனப்பிரியன்

இந்த கேள்விக்கு இன்று வரை அவனிடமிருந்து பதில் வரவில்லை. மொழிகளையும் நிறங்களையும் வைத்து உயர்வு தாழ்வு கற்ப்பிக்கும் மனப் பாங்கு என்று மாறுமோ தெரியவில்லை.

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.' - குர்ஆன் 14 :4

மேலும் முகமது நபியின் காலத்துக்கு முன்பு அரபுகள் மொழி வெறியின் உச்சத்தில் இருந்தார்கள். அரபி மொழி அல்லாத வேறு மொழி பேசுவோர் அனைவரும் ஊமைகளைப் போன்றவர்கள் என்றனர்.அதாவது அவர்கள் நினைப்பில் மற்ற மொழிகளுக்கு எந்த பொருளும் கிடையாது என்று விளங்கி வைத்திருந்தனர். அந்த நேரத்தில் தான் முகமது நபி பின் வருமாறு பிரசிங்கித்தார்.

'மக்களே! இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்! அரபு மொழி பேசுபவன், அரபு மொழி பேசாதவனைவிட உயர்ந்தவன் இல்லை. அரபு மொழி பேசாதவன் அரபு மொழி பேசுபவனை விட சிறந்தவனும் இல்லை.வெள்ளை நிறத்தவன் கருப்பு நிறத்தவனை விட உயர்ந்தவன் இல்லை அவர்கள் செய்யும் நல்லறங்கள் தான் அவர்களை உயர்த்துகின்றன. இன்று முதல் குலப் பெருமையை என் காலடியில் போட்டு மிதிக்கிறேன்' என்று சொன்னார்.

மேற்கண்ட நபிமொழியின் மூலம் ஒரு மொழியை உயர்த்தியும் மற்றொரு மொழியை தாழ்த்தியும் வாதங்கள் புரிவது இஸ்லாம் தடுத்துள்ளது என்று அறிகிறோம். எனவே உலகில் உள்ள மொழிகள் அனைத்தையும் நேசிப்போம். அதன்மூலம் மனித நேயத்தையும் வளர்ப்போம்.

இறைவனே மிக அறிந்தவன்

என்றும் அன்புடன்

சுவனப்பிரியன்

Sunday, June 25, 2006

இறைவனைக் காண முடியுமா?

இறைவனைக் காண முடியுமா?

இறைவனை நேரில் பார்க்க முடியுமா? என்றால் 'முடியாது' என்று இஸ்லாம் பதிலளிக்கிறது. இந்து மதத்திலும் ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத்தில் 'அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது.அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை' என்று வருகிறது.

'அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன். நன்கறிந்தவன்.'

குர்ஆன் 6 : 103

இறைவனை எந்த மனிதனோ இறைவனின் தூதர்களோ பார்த்ததில்லை என்பது மேற்கண்ட வசனத்திலிருந்து நாம் அறிகிறோம்.

'நீங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?' என்று முகமது நபியிடம் கேட்கப் பட்டபோது 'அவனோ ஒளி மயமானவன்.நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்? என்று பதிலளித்தார்.

ஆதாரம் : முஸ்லிம் :261 - புகாரி 3234, 4855, 7380

மேற்கண்ட நபி மொழி மூலம் முகமது நபியும் இறைவனைப் பார்த்ததில்லை என்று நம்மால் விளங்க முடிகிறது.

மோசே(மூஸா)யின் சமூகத்தார் இறைவனை நேருக்கு நேர் காட்டுமாறு மோசேயிடம் கேட்டபோது கோபமுற்ற இறைவன் அவர்களை இடியோசையால் தாக்கினான் என்று குர்ஆன் கூறுகிறது.

'முகம்மதே! 'வானத்திலிருந்து அவர்களுக்கு வேதத்தை நீர் இறக்க வேண்டும் ' என்று வேதமுடையோர் உம்மிடம் கேட்கின்றனர். இதை விடப் பெரியதை அவர்கள் மோசேயிடம் கேட்டுள்ளனர்..'இறைவனைக் கண் முன்னே எங்களுக்குக் காட்டு' என்று அவர்கள் கேட்டனர். அவர்கள் அநீதி இழைத்ததால் இடி முழக்கம் அவர்களைத் தாக்கியது.

குர்ஆன் 4 :153

இந்த வரலாறுகளின் மூலம் நமக்குத் தெரிய வருவது இறைவனை யாராலும் நேரில் பார்க்க முடியாது என்பதே! 'நான் இறைவனைப் பார்த்தேன்' என்று எந்த ஆன்மீகவாதியாவது சொன்னால் மக்களை ஏமாற்றுவதற்காக பொய் சொல்கிறார் என்று தான் நாம் முடிவுக்கு வர முடியும். இறைவனை எவரும் காண முடியாது என்று மக்கள் நம்பினால் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் பெருமளவிலான மோசடியை ஒழித்து விட முடியும். இன்று இந்து,இஸ்லாம், கிறித்தவம் என்று எந்த மார்க்கத்தையும் இந்த போலி ஆன்மீகவாதிகள் விட்டு வைக்கவில்லை.இதற்கெல்லாம் காரணம் நம்மை விட இந்த ஆன்மீகவாதிகள் இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என்ற போலி நம்பிக்கைதான்.

ஒரு முறை எங்கள் கிராமத்தில் ஒரு மௌலானா(ஆன்மீக குரு) என்ற பெயரில் ஒரு பெரியவர் வெளியூர்க்காரர் அனைவருக்கும் ஓதி விடுவதாகவும் மறைவான விஷயங்கள் பலவற்றை சொல்வதாகவும் நிறைய காணிக்கைகள் சேர்வதாகவும் கேள்விப் பட்டோம்.எங்கள் நண்பர்கள் குழு அவரை சந்திக்க சென்றோம். பெரிய தாடி. பெரிய தலைப்பாகை.கையில் மணிகள் என்று பார்த்தவுடன் மரியாதை வந்து விடும். அவரிடம் கேட்டோம் 'மௌலானா! 'உங்களை தொழுகைக்கு பள்ளிவாசலில் பார்க்க முடிவதில்லையே!' என்று கேட்டோம். அதற்கு அவர்,'நாங்கள் அத்தகைய வணக்கத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள்.கேள்விகள் கேட்காதீர்கள்.' என்று சிடுசிடுத்தார். 'அடப்பாவி!நெஞ்சார பொய்தன்னை சொல்கிறானே' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு இடத்தை காலி பண்ணினோம். அடுத்த இரண்டு நாளில் ஒரு பெண்ணிடம் சில்மிஷம் பண்ணினான் என்று ஊர்க்காரர்களே அடித்து விரட்டி விட்டனர். இது போல் பல நிகழ்வுகளை நாம் அன்றாடம் பத்திரிக்கைகளில் படித்தும் மக்கள் திருந்துவதாக இல்லை.

'இறைவன் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர்,தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதில்லை. மறுமையில் இறைவன் அவர்களுடன் பேசமாட்டான்.அவர்களைத் தூய்மைபடுத்தவும் மாட்டான்.அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.'

குர்ஆன் 2 :174

போலி ஆன்மீக வாதிகளுக்கு சாட்டையடியாக அமைந்துள்ளது மேற்கண்ட வசனம்.

அடுத்து நாத்திக வாதத்தை எடுத்துக் கொள்வோம்.நம் நாட்டிலும் மேலை நாடுகளிலும் நாத்திகத்தை பின் பற்றக் கூடியவர்கள் கணிசமான அளவு இருக்கிறார்கள்.இதற்கெல்லாம் காரணம் அவர்கள் மதத்தின் பலஹீனமான கொள்கைகளினால் வெறுப்புற்று நாத்திகத்தை நாடுகிறார்கள்.இறைவனை நேரில் காட்டினால்தான் இவர்கள் ஒத்துக் கொள்வார்களாம். உதாரணத்திற்கு காற்றை எடுத்துக் கொள்வோம். காற்றை நாம் கண்ணால் பார்த்ததில்லை. அந்த காற்று மரங்களை லேசாக அசைத்தால் தென்றல் காற்று என்கிறோம்.அதே காற்றினால் மரங்கள் வேரோடு சாய்க்கப் பட்டால் புயல் என்கிறோம்.காற்றை நாம் பார்க்கா விட்டாலும் அதன் சக்தியை நாம் உணருகிறோம்.

கேள்வி: அரைகுறையாக சமைக்கப் பட்ட மாமிச உணவைக் கூட இரைப்பை ஜீரணித்து விடுகிறது.மாமிசத்தால் ஆன இரைப்பை மட்டும் தன்னைத் தானே ஜீரணிப்பதில்லை. இந்த அதிசயத்தின் உண்மை என்ன?

சுஜாதா பதில் : இதை விளக்க நம் உணவுப் பாதையில் நடக்கும் அதிசயங்களைப் பற்றி ஒர கட்டுரையே எழுதலாம். இந்த ஜீரணம் இரைப் பையில் ஏற்படும் சுரப்பிகளால் நிகழ்வது. அதன் அமில சக்தி கல்லையும் ஜீரணிக்கும் அல்லது கொல்லைப் பக்கம் அனுப்பி வைக்கும்.இரைப் பையை பாதுகாப்பதற்குஅதில் முலாம் போல் உள் சுவர் பூச்சு உள்ளது.அதன் எதிரி சாராயம். ம்யூகோஸா என்னும் இந்த சளி போன்ற பூச்சிலிருந்து தான் ஜீரணத்துக்கான அமிலங்கள் சுரக்கின்றன. ஆனால் வயிற்றைக் கரைப்பதில்லை.இது எப்படி என்பது இயற்கையின் இதுவரை தீர்க்கப் படாத மர்மம்.

'விளங்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது' என்று பல இடங்களில் இறைவன் குறிப்பிடுவது இது போன்று அறிவியலால் விளக்க முடியாத உண்மைகளைத்தான்.இறைவன் மேலும் கூறுகிறான் :

'இறைவனே வானிலிருந்து தண்ணீரை இறக்கினான். பூமி இறந்த பின் அதன் மூலம் இதற்கு உயிரூட்டினான்.செவியுறும் சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.'

குர்ஆன் : 16 : 65

கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை உள்ளது.அதன் வயிறுகளில் உள்ள செறிக்கப் பட்ட உணவுக்கும், இரத்தத்துக்கும் இடைப்பட்ட நிலையில் தூய்மையான பாலை உங்களுக்குப் புகட்டுகிறோம்.அருந்துவோருக்கு அது இனிமையானது.'

குர்ஆன் 16 :66 - உண்மையில் இரத்தம் பாலாக மாறுவதில்லை.அறைக்கப் பட்ட உணவுக் கூழுக்கும்,இரத்தமாக மாறுகின்ற நிலைக்கும் இடைப்பட்ட பொருளில் இருந்துதான் பால் உற்பத்தியாகிறது என்ற இன்றைய அறிவியல் உண்மையை அன்றே குர்ஆன் சொல்லியிருக்கிறது.

'தேனிக்களின் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயதத்திற்கு இதில் சான்று உள்ளது.'

குர்ஆன் 16 : 69 - பெரும்பான்மையானோர் பூக்களிலிருந்து தேனை எடுத்து தனது கூட்டில் தேனிக்கள் வாய் வழியாக சேமிக்கின்றன.என்று தான் பலரும் நம்பியிருந்தோம். ஆனால் தேனை உறிஞ்சிய தேனீக்கள் அவற்றை உட்கொண்டு ஜீரணித்து பிறக வெளியாக்கும் கழிவுதான் நாம் ருசித்து சாப்பிடும் தேன் என்று இன்றைய விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பை அன்றே இறைவன் சுட்டிக் காட்டுகிறான்.

'நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை இறைவனே உயர்த்தினான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறான்.ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவு படுத்துகிறான்.

குர்அன் 13 :3

அவனே பூமியை விரித்தான். மலைகளையும் நதிகளையும் அதில் அமைத்தான். ஒவ்வொரு கனிகளிலும் ஒரு ஜோடியை அமைத்தான். இரவை பகலால் மூடுகிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

குர்ஆன் 13 :3

நான் எடுத்து எழுதியிருக்கும் அறிவியல் உண்மைகள் மிகச் சிலவே! இது போல் பல நூற்றுக் கணக்கான அறிவியல் உண்மைகளை குர்ஆனிலிருந்து எடுக்க முடியும். எவ்வளவு தான் முகமது நபி திறமையாக தன் சொந்த கற்பனையில் இந்த குர்அனை சொல்லியிருந்தாலும் மனிதன் என்ற நிலையில் ஒரு சில இடங்களிலாவது கண்டிப்பாக தவறுகள் வந்திருக்கும்.

'இந்த குர்ஆன் இறைவன் அல்லாதவரிடமிருந்து இட்டுக்கட்டப் படடதாக இல்லை. மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப் படுத்துவதாகவும் தெளிவு படுத்தும் வேதமாகவும் உள்ளது.இதில் எந்த சந்தேகமும் இல்லை.இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது.'

குர.ஆன் 10 :37

'இதனை இவர் இட்டுக் கட்டி விட்டார்' என்று அவர்கள் கூறுகிறார்களா?'நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வையன்றி உங்களால் இயன்றவர்களை துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள்.' என்று முகம்மதே கூறுவீராக!

குர்ஆன் 10 :38

தின மலர். அறிவியல் ஆயிரம்!கேள்வி: பலரது சந்தேகம் உலகம் எப்படி வந்தது? முதலில் ஒரு செல் உயிர் தோன்றியது என்றும்: சிலர் கடவுள் நம்மைப் படைத்தார் என்றும் கூறப்படுகிறது. எது நிஜம்?-பிரியங்கா, பண்ணைக்காடு, கொடைக்கானல்.

இங்கே உலகம் தோன்றுவதற்கும் உயிர்கள் தோன்றுவதற்கும் வெளியிலிருந்து ஒரு ஆள் தேவைப் பட வில்லை. எல்லாமே தானாக உதித்துக் கொள்ள முடியும் என்று அறிவியல் கூறுகிறது.கடிகாரம், பூட்டு, சாவி, பானை என்று எந்த செயற்கைப் பொருளைப் பார்க்க நேர்ந்தாலும் அவை யாராலோ செய்யப் பட்டது என்பது நமக்குத் தெரிகிறது. தனக்குத் தானாகவே ஒட்டிக் கொண்டும், பொருந்திக் கொண்டும், உருவாகிக் கொள்ளும் கருவியை மனிதன் இதுவரை கண்டு பிடிக்கவில்லை. எனவே செய்யப் பட்டவைகளுக்கு செய்தவர் உண்டு.சூரியன், உலகம், உயிர்கள் யாவும் செய்யப் பட்டவைகளா? இல்லையே. எனவே செய்தவர் எவரும் இல்லை.ஒரு நிமிடம் .... செயற்கைப் பொருட்கள் தாமாக செய்து கொள்ள முடியாதபோது.... இயற்கைப் பொருட்கள் மட்டும் எப்படி செய்து கொள்கின்றன? எனில், ஒரு செய்முறை தகவலின் அடிப்படையில் அவை செய்து கொள்கின்றன என்று அறிவியல் சொல்வதால்....இயற்கைப் பொருட்கள் தோன்றுவதற்கு முன்பாகவே ஒரு 'தகவல்' இருந்திருப்பது உறுதியாகிறது. அந்தத் தகவல் ....எது? யார?தினமலர்க் காரருக்கு வேண்டுமானால் யார் என்பதில் இன்னும் குழப்பம் இருக்கலாம். சுவனப் பிரியனான எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அது தான் அல்லாஹ், இறைவன், கர்த்தர், கடவுள் என்ற பெயர்களுடைய அனைத்தையும் படைத்து பரிபாலிக்கக் கூடிய ஒருவன்.


முத்து தமிழினி ஒரு பதிவில் 'சுவனப்பிரியன் இறைவனை நம்புவது எதன் அடிப்படையில்?' என்ற ஒரு கேள்வியை வைத்திருந்தார். அந்த நேரத்தில் பதில் தருவதற்கு நேரம் இல்லாமல் இருந்தது. முத்து தமிழினியின் கேள்விக்கு இந்த பதிவே பதிலாக அமைந்திருக்கிறது.

இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்! - அய்ந்து

இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்! - அய்ந்து

'நரசங்சா'

நரசங்சா என்ற பெயர் இந்து மத வேதங்களில் பல இடங்களில் வரும். இதை முறையே பிரித்தோமானால் 'நர' - 'அசஙசா' என்று வரும். நர என்றால் மனிதன் அசங்சா என்றால் புகழப்பட்டவர். ஆக நரசங்சா என்பதன் பொருள் புகழப்பட்டவர். புகழப்பட்டவர் என்ற பதத்தைத்தான் நாம் அரபியில் முஹம்மது என்கிறோம். இனி நரசங்சா என்று இந்து மத வேதங்களில் வரக் கூடிய இடங்களைப் பார்ப்போம்.

1) ரிக் வேதம் - புத்தகம் 1 - பாட்டு 13 - செய்யுள் 3

2) ரிக் வேதம் - புத்தகம் 1 - பாட்டு 18 - செய்யுள் 9

3) ரிக் வேதம் - புத்தகம் 1 - பாட்டு 106 - செய்யுள் 4

4) ரிக் வேதம் - புத்தகம் 1 - பாட்டு 142 - செய்யுள் 3

5) ரிக் வேதம் - புத்தகம் 2 - பாட்டு 3 - செய்யுள் 2

6) ரிக் வேதம் - புத்தகம் 3 - பாட்டு 29 - செய்யுள் 11

7) ரிக் வேதம் - புத்தகம் 5 - பாட்டு 5 - செய்யுள் 2

8) ரிக் வேதம் - புத்தகம் 7 - பாட்டு 2 - செய்யுள் 2

9) ரிக் வேதம் - புத்தகம் 10 - பாட்டு 64 - செய்யுள் 3

10) ரிக் வேதம் - புத்தகம் 10 - பாட்டு 182 - செய்யுள் 2

11) சாம வேதம் - உத்தராசிக் - மந்த்ரா 1349

12) யஜீர் வேதம் - அதிகாரம் 29 - செய்யுள் 27

13) யஜீர் வேதம் - புத்தகம் 1 - அதிகாரட் 6 - செய்யுள் 4

14) யஜீர் வேதம் - புத்தகம் 1 - அதிகாரம் 7 - செய்யுள் 4

15) யஜீர் வேதம் - அதிகாரம் 20 - செய்யுள் 37

16) யஜீர் வேதம் - அதிகாரம் 20 - செய்யுள் 57

17) யஜீர் வேதம் - அதிகாரம் 21 - செய்யுள் 31

18) யஜீர் வேதம் - அதிகாரம் 21 - செய்யுள் 55

19) யஜீர் வேதம் - அதிகாரம் 28 - செய்யுள் 2

20) யஜீர் வேதம் - அதிகாரம் 28 - செய்யுள் 19

21) யஜீர் வேதம் - அதிகாரம் 26 - செய்யுள் 42

ராமாயணமும் மகாபாரதமும் நம் அனைவருக்கும் மிகவும் பiரிச்சயமானது. இதன் கதாபாத்திரங்கள் இதில் வரும் சம்பவங்கள் அனைத்தும் நமக்கு அத்துப்படி. ஆனால் இந்த இரண்டு காவியங்களும் பிரபல்யமானதுபோல் இந்து மதத்தின் வேதங்களான ரிக் யஜீர் சாம அதர்வண வேதங்கள் மக்களிடையே கொண்டு செல்லப் படவில்லை. மக்களிடையே கொண்டு சென்றால் பல உண்மைகள் மக்களிடம் விளக்க வேண்டுமே என்ற தயக்கத்தின் காரணமாகத்தான் இந்து மத அறிஞர்கள் மறைத்து விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

கல்கி அவதாரம்!

கலகி என்ற இவரைப் பற்றி பல வதந்திகள் நம் நாட்டில் உலா வருகின்றன. ஆந்திராவில் விஜயகுமார் என்ற பட்டதாரி தன்னை கல்கி அவதாரம் என்று கூறிக் கொண்டு ஒரு கூட்டத்தையும் சேர்த்து விட்டார். இதை படித்தவர் முதல் பாமரர் வரை நம்பிக் கொண்டிருப்பதுதான் விஷேஷம். இது போன்ற போலிகள் அவ்வப்போது தலை எடுப்பதற்கு முக்கிய காரணம் அவரவர் மதத்தைப் பற்றிய உண்மையான புரிதல் இல்லாமையே! இந்து மதத்தை சேர்ந்தவர்களிலேயே அவர்களின் மதத்தின் வேதங்களைப் படித்தவர்கள் எத்தனை பேர் என்று கேளுங்கள். மிகக் குறைவாகவே பதில் வரும். அந்த வேதத்தின் மூல மொழியான சமஸ்கிரத பாஷையை கற்றவர்கள் எத்தனை பேர? ராஜ கோபாலச்சாரியார், சோ ராமசாமி,சங்கராச்சாரியார் போன்ற ஒரு சில பேரைத்தான் காண முடியும். தெரிந்த இந்த ஒரு சிலரும் வேதங்களை மக்களிடம் கொண்டு செல்ல முயற்ச்சிக்கவும் இல்லை.

இனி இந்த வேதங்களில் கல்கி என்ற அவதாரத்தைப் பற்றி என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்று சிறிது ஆராய்வோம்.

"சிலை வணக்கம் புரியப்படும் தலைவரின் குடும்பத்தில் அவர்களின் நகரான சம்பாலாவில் விஷ்ணுயாஸூடைய வீட்டில் கல்கி தோன்றுவார்"
"உலகத்தின் ரட்ஷகன் அவருக்கு எட்டு போற்றுதற்குரிய தகுதிகளைக் கொடுத்து அபரிமிதமான வெற்றியையும் மகிமையையும் பிரகாசத்தையும் கொடுத்து கெளரவிப்பார். குதிரை வாகனம் அவருக்கு தேவர்களால் கொடுக்கப் படும். அவருடைய கையில் வாள் இருக்கும். இரட்ஷகனின் துணை கொண்டு அனைத்து தீய காரியங்களையும் துரோகிகளையும் வென்றெடுப்பார்.மலையின் குகையில் இறைவனிடமிருந்து செய்திகளைப் பெறுவார். பிறகு வடக்கு நோக்கி சென்று திரும்பவும் தான் பிறந்த இடத்திற்கு திரும்புவார்."

பாகவதா புராணம் -காண்டம் 12 - அத்தியாயம் 2 - சுலோகம் 18 லிருந்து 20 வரை

"அறியாமைக் காலமான அந்த நாளில் கல்கி அவதரிப்பார்.அந்நாளில் அரசர்கள் மிகப் பெரிய கொள்ளயைர்களாக இருப்பர். உலகத்தை நேர்வழிப் படுத்த வந்த அவரின் தந்தை விஷ்ணுயாத் ஆவார். கல்கி என்ற பெயரிலும் அறியப் படுவார்."

பாகவத புராணம் - காண்டம் 1 - அத்தியாயம் 3 - சுலோகம் 25

விளக்கங்கள் :
1) கல்கியின் தந்தை பெயர் விஷ்ணுயாத் என்று சொல்லப் படுகிறது. இதைத் தமிழ்ப் படுத்தினால் விஷ்ணுவின் அடிமை என்று வரும். அதாவது இறைவனின் அடிமை. இதே வார்த்தையை நாம் அரபியில் சொன்னால் அப்து+அல்லா இறைவனின் அடிமை அப்துல்லா என்று வரும். ஆக விஷணுயாத் அப்துல்லா இறைவனின் அடிமை ஆகிய இம்மூன்றும் ஒன்றே. முகமது நபியின் தந்தை பெயர் அப்துல்லா. எனவே விஷ்ணுயாத் என்பது அப்துல்லா என்று விளங்குகிறது.

2) சம்பாலா என்ற நகரத்தில் பிறப்பார்
சம்பாலா என்ற பதத்திற்கு தமிழில் மொழி பெயர்த்தால் "அமைதியும் பாதுகாப்பும் கொண்ட இடம்" என்ற பொருள் வரும்.

"அந்த ஆலயத்தை மக்களின் ஒன்று கூடும் இடமாகவும் பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக" -குர்ஆன் 2 :125

கஅபா அமைந்திருக்கும் மக்கா நகர் அபய பூமி என்று அறிவிக்கப் பட்டு பதினான்கு நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும் எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்த பின்பும் அது இன்றளவும்; எந்த படையெடுப்புக்கும் ஆளாகாமல் அபய பூமியாகவும் பாதுகாப்பு கொண்ட ஊராகவும் அமைந்துள்ளது. மேலே உள்ள சம்பாலா என்ற ஊர் மக்காவையே குறிக்கும் . முகமது நபியும் மக்காவில் தான் பிறக்கிறார்.

4) கல்கி கடைசி அவதாரம்

வேதங்களில் கல்கி அவதாரம் தான் கடைசி அவதாரம் என்று சொல்லப் பட்டிருக்கிறது. இதையேதான் குர்ஆனும் உறுதி செய்கிறது.

"இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன்." - குர்ஆன் - 5 :3

"முகமது இறைவனின் தூதராகவும் நபி மார்களில் முத்திரையாகவும் இருக்கிறார்." - குர்ஆன் 33 :40

முகமது நபிக்கு பிறகு இனி வேதங்களும் வரப் போவதில்லை. இறைத் தூதர்களும் வரப் போவதில்லை.தூதுத்துவத்திற்கு சீல் வைத்தாகி விட்டது. இனி நபி வரப் போவதில்லை என இதன் மூலம் விளங்குகிறது. இந்து மத வேதங்களும் இதைத்தான் சொல்கின்றன.

5) "மலையின் குகையில் இறைவனிடமிருந்து செய்திகளைப் பெறுவார். பிறகு வடக்கு நோக்கி சென்று திரும்பவும் தான் பிறந்த இடத்திற்கு திரும்புவார்"

முகமது நபி மலைகளுக்கு நடுவே உள்ள ஹீரா குகையில் தங்கி தியானத்தில் ஈடுபட்டிருந்த போது வானவர் கேப்ரியேல் வந்து குர்ஆனின் முதல் வசனத்தை ஓதச் சொல்கிறார். அன்றிலிருந்து தான் சிறுக சிறுக குர்ஆன் இறங்க ஆரம்பிக்கிறது.
மக்காவாசிகளால் துரத்தப்படும் முகமது நபி வடக்கில் இருக்கும் மதீனா நகருக்கு தன் தோழருடன் பயணமாகிறார். மதினாவில் இவருக்கு ஆதரவு கிடைக்கிறது. சில காலத்துக்குப் பிறகு தான் பிறந்த மக்காவுக்கே திரும்பவும் வருகிறார்.

6) நன் நடத்தையில் மிகவும் போற்றுதலுக்குரியவராக இருப்பார்.

"முகம்மதே! நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்." -குர்ஆன் 68 :4

7) எட்டு போற்றத்தக்க தகுதிகள் கொடுக்கப் படுவார்.

அந்த எட்டு தகுதிகள் : 1) wisdom - அறிவுடைமை 2)Respectable lineage - மரியாதைக்குரிய பரம்பரை 3) Self control - தன்னடக்கம் 5) Revealed knowledge - அறிவை வெளிப்படுத்தும் திறமை 5)Valour - வீரம் தைரியம் 6)Measured speech - அளவான பேச்சு 7) Utmost charity - மிக உயர்ந்த ஈகை குணம் 8) Gratefulness - நனறி மறக்காத தன்மை.

1) அறிவுடைமை :
மிகச் சிறந்த அறிவு முகமது நபிக்கு கொடுக்கப் பட்டிருந்தது. நபியாக ஆவதற்கு முன்பே இவருக்கு இருக்கும் ஞானத்தைப் பற்றி அம் மக்கள் அறிந்திருந்தனர்.

2) மரியாதைக்குரிய பரம்பரை :
அந்த காலத்தில் மிகவும் உயர்ந்த குலமாக கருதப்பட்ட குறைஷி குலத்தில் முகமது நபி பிறக்கிறார்.

3) தன்னடக்கம் :
தன்னடக்கத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாக முகமது நபி திகழ்ந்தார். அவரை எதிரிகள் பல தடவை கோபப்படுத்தும் போதெல்லாம் அமைதியும் பொறுமையும் காத்து வந்ததை அவரின் வாழ்க்கையில் பல தடவை நாம் பார்க்க முடிகிறது.

4) அறிவை வெளிப் படுத்தும் :
படித்தவரும் பாமரரும் விளங்கிக் கொள்ளும் விதமாக அவர் மனிதர்களுக்கு அளித்த போதனைகள் படித்தவர்களையே வியப்பில் ஆழ்த்தியது.

5) வீரம் தைரியம் :
மிகச் சிறந்த உடல் வலிமையை முகமது நபி பெற்றிருந்தார். பல போர்களில் இவரே தலைமையேற்று சென்று வெற்றியும் பெற்று வந்திருக்கிறார். மற்ற நாட்டு தலைவர்களைப் போல் அரண்மனையில் அமர்ந்து உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருக்கவில்லை.

6) அளவான பேச்சு :
தேவைக்கு அதிகமான பேச்சு இவரிடம் இருக்காது. கேள்வி கேட்பவருக்கு அதற்குரிய பதில் மட்டுமே வரும். பதில்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருந்ததால் அவரின் தொழர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள ஏதுவாக இருந்தது.

7) ஈகை குணம் :
தேவை என்று வந்தவர்க்கு இல்லை என்று எந்த நேரத்திலும் எவரையும் திருப்பி அனுப்பியதில்லை. இவர் பொருளாதாரத்தில் சிரமப் பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் கூட பல வறிய குடும்பங்களை தன்னுடைய பொறுப்பில் பராமரித்து வந்தார்.

8) மதினாவில் அன்சாரிகள் இவருக்கும் இவரது தோழர்களுக்கும் சிரமமான நேரத்தில் செய்த உதவிகளை கடைசி காலம் வரை மறக்காமல் ஞாபகப் படுத்திக் கொண்டே இருந்தார்.

8) கல்கி உலகை நேர்வழிப் படுத்த வந்த ஆசான் :

கல்கியானவர் உலக மக்களை பாவங்களிலிருந்து மீட்பார்.உலக மக்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்.
இதையேதான் குர்ஆனும் முகமது நபி அரபு மக்களுக்கு மட்டும் வழி காட்டியல்ல.உலக மக்கள் அனைவருக்கும் வழி காட்டியாக அனுப்பப் பட்டவர் என்று கூறுகிறது.

"முகம்மதே! நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்." - குர்ஆன் 34 : 28

9)குதிரை வாகனம் அவருக்கு கொடுக்கப் படும். கையில் வாள் வைத்திருப்பார்.

முகமது நபியின் வாகனம் அதிகமாக குதிரையாகவே இருந்தது. அவர் தன்னிடம் எப்போதும் பாதுகாப்புக்காக வாள் ஒன்றையும் வைத்திருந்தார்.

10) கல்கி தீய காரியங்களை வென்றெடுப்பார்.

முகமது நபி அவதரித்த அந்த காலம் "அய்யாமுல் ஜாஹிலிய்யா" அதாவது "அறியாமைக் காலம்" என்று வரலாறுகளில் சொல்லப் படுகிறது. குடி கொள்ளை ஓயாத போர் பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தல் - பெண் குழந்தை பிறந்தால் சமூகத்தில் முகம் காட்ட கூச்சப் பட்டுக் கொண்டுபல நாட்கள் வீட்டை விட்டே வெளியேறி விடுதல் போன்ற பல அரக்க குணங்கள் நிறைந்த அந்த அரபுகள் மத்தியில் முகமது நபி தோன்றுகிறார். நபியானதற்கு பிறகு சில வருடங்களிலேயே அதிசயத் தக்க மாற்றங்களை அரபுக்கள் மத்தியில் உண்டாக்குகிறார். அனைத்து தீய பழக்கங்களும் அவர்களிடமிருந்து நீங்குகிறது.

11) கல்கி நான்கு தோழர்களின் துணை கொண்டு தீமைகளை வென்றெடுப்பார்.

முகமது நபிக்கு ஆரம்ப காலம் முதல் இறப்பு வரை தீமைகளை எதிர்த்து போரிடுவதில் நான்கு பேர் முன்னிலையில் இருந்தனர். அவர்கள் முறையே அபுபக்கர்- உமர் - அலி- உஸ்மான் ஆவர். இவர்கள் முகமது நபியின் மறைவுக்குப் பிறகுஇஸ்லாமிய சாம்ராஜ்யத்துக்கு ஜனாதிபதியாக இருந்து திறம்பட நிர்வாகம் செய்து வந்தனர். இந்த நால்வரையே மேலே சுட்டிக் காட்டப் படுகிறது.

12) கல்கி தேவர்களால் உதவி செய்யப்படுவார்

முகமது நபி பத்ர் என்ற போர்க் களத்தில் போரிடும் போதுசிரமமான நேரத்தில் வானவர்களை இறைவன் துணைக்கு அனுப்பினான். இதை குர்ஆனில் பின் வருமாறு கூறப்படுகிறது.

"நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடியபோது உங்களுக்கு பின்னால் அணி வகுக்கும் ஆயிரம் வானவர்களின் மூலம் நான் உங்களுக்கு உதபுபவன்" என்று உங்களுக்குப் பதிலளித்தான்." - குர்ஆன் 8 : 9

"நீங்கள் தாழ்ந்த நிலையில் இருந்த போது அல்லாஹ் பத்ர் களத்தில் உங்களுக்கு உதவி செய்தான். எனவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக இறைவனை அஞ்சுங்கள்." - குர்ஆன் 3 : 123

கல்கி என்று சொல்லப் பட்டது முகமது நபிதான் என்று ஆதாரங்களோடு விளக்கியுள்ளேன். கல்கி என்பவர் முகமது நபி அல்ல என்று வாதிடுபவர்கள் அதற்கான விளக்கத்தைத் தர கடமைப் பட்டுள்ளார்கள். என் கருத்தில் தவறு இருந்தால் அதை சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.

இறைவனே மிக அறிந்தவன்.

என்றும் அன்புடன்

சுவனப்பிரியன்.

Tuesday, June 20, 2006

என்கவுண்டர் : கொல்லப்படும் முஸ்லிம்கள்!

என்கவுண்டர் : கொல்லப்படும் முஸ்லிம்கள்!

என்கவுண்டர் என்ற பெயரில் முஸ்லிம்களை கொல்வது என்பது இன்று சர்வசாதாரணமாகி விட்டது. கொல்லப் படுவதில் அநேகம் பேர் நிரபராதிகள் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். இவர்களை உயிரோடு பிடிப்பதற்கு வாய்ப்பு இருந்தாலும் திட்டமிட்டு கொன்று விடுவார்கள். உயிரோடு பிடித்தால் வாக்கு மூலத்தின் மூலம் உண்மைகள் வெளி வந்து விடும் அல்லவா? எனவே தான் காவல் துறையினர் சாமர்த்தியமாக அனைவரையும் கொன்று விடுகிறார்கள்.

ரோபிர்சிங்

இவர் டெல்லியில் சிறப்புக் காவலராக பணிபுரிபவர். தீவிரவாத ஒழிப்புப் பிரிவின் முன்னணி வீரர்.இவர்தான் நாடாளுமன்றத்தின் மீது நடந்தத் தாக்குதல்களை ஆய்வு செய்த அதிகாரி. இவர் டெல்லி அன்ஸா பிளாசாவில் இரண்டு முஸ்லிம் இளைஞர்களை சுட்டுக் கொன்றார். முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப் படுவதை ஒரு டாக்டர் நேரிடையாக பார்த்து விட்டார். அந்த டாக்டரின் பெயர் ஹரி கிருஷ்ணா. அவர் அந்த சம்பவத்தை விளக்கும் போது 'பட்டப் பகலில் எந்த ஆயுதமும் இல்லாமல் நடந்து வந்து கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் மேல் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் போலீசார் சுட்டதை என் கண்களால் பார்த்தேன்.' என்று கூறினார். இந்தக் கொலைகள் நவம்பர் 2002-ல் நடந்தவை. பத்திரிக்கையிலோ தீவிரவாதிகள் இரண்டு பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர்
என்று செய்தி வந்தது. அதையே உண்மை என்று நாமும் நம்பி விடுகிறோம்.

தயா நாயக்!

காவல்துறையின் இணை ஆய்வாளராக பணிபுரியும் இவரின் தற்போதய சொத்துக்களின் மதிப்பு 100 கோடி.மும்பையில் பெரிய வியாபாரிகள் கடத்தல் காரர்கள் தங்களின் எதிரிகளை அழிக்க இவரிடம் பணம் தந்து விட்டால் போதும். என்கவுண்டர் என்ற பெயரில் கச்சிதமாக காரியத்தை முடித்து விடுவார்.அண்டை மாநிலமான குஜராத்தில் என்கவுண்டர் என்ற தாக்குதலுக்கு அதாவது காவல்துறையினர் செய்யும் படுகொலைகளுக்கு முஸ்லிம்கள் தேவைப் பட்டால் அதற்கும் உதவுவது இந்த தயாநாயக் தான். இதுவரை என்கவுண்டர் என்ற பெயரில் இவர் செய்த கொலைகள் 83. சேர்த்த சொத்துக்கள் 100 கோடி ரூபாய்.
இவரின் கொலைகளை வெளி உலகுக்கு கொண்டு வர பம்பாயைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கேட்டன் தாரோடக்கார் பல முயற்சிகளையும், வழக்குகளையும் போட்டார். எதுவும் பயனளிக்கவில்லை. முடிவில் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் தந்தார்.அவர்கள் இவரின் சொத்துக்களை கண்டு பிடித்தனர்.இவரது வீட்டை சோதனை போட்டபோது அன்றாடம் செலவுகளுக்கு ரூபாய் 42 லட்சம் வைத்திருந்தது கண்டு பிடிக்கப் பட்டது. காவல்துறையால் கைது செய்யப்பட்ட இவர் 22-4-2006 அன்று சாமர்த்தியமாக பிணையில் வந்து விட்டார். ஒரு கொலைகாரனுக்கு நம் நாடு கொடுத்த தண்டனையின் லட்சணம் இதுதான்.

இஸ்ரத் ஜஹான்:

இஷ்ரத் ஜஹான் என்ற பெண்மனி சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவம் நாமும் பத்திரிக்கை வாயிலாக படித்திருப்போம். பம்பாயிலிருந்து வெளிவரும் சண்டே மிட்டே, டெஹல்கா போன்ற பத்திரிக்கைகளின் புலனாய்வால் சுட்டுக் கொல்லப்பட்ட நால்வரும் நிரபராதிகள் என்ற நிரூபணம் ஆனது. எனவே வழக்கறிஞர்கள் குழு ஒன்று போலீசாருக்கு எதிராக வழக்கு தொடர்வது என்று முடிவு செய்து நீதி மன்றங்களை அணுகினார்கள். நீதி மன்றங்களில் வழக்கை அழுத்தமாக நடத்திட பிரேத பரிசோதனை அறிக்கைத் தேவை. இன்று வரை இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரும் குஜராத் அரசு பிரேத பரிசோதனை அறிக்கையைத் தந்திட மறுக்கிறது. காரணம் : இந்தப் படுகொலை வழக்குமன்றம் சென்றிடுமேயானால், அவை படுகொலைகள் தான், காவல்துறையினர் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக நடத்திய தாக்குதல்கள் அல்ல என்பது நிரூபணம் ஆகி விடுமல்லவா! எனவே தான் இன்று வரை அறிக்கையைத் தர குஜராத் அரசு மறுக்கிறது.

வத்வா என்கவுண்டர்!

வாரணாசி குண்டு வெடிப்பு ஹிந்து முஸ்லிம்களுக்கிடையில் பிளவுகளை உண்டு பண்ணி அரசியல் ஆதாயம் தேட முயற்ச்சித்த கயவர்களின் வேலை. நல்ல வேளையாக வாரணாசி ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக குண்டு வெடிப்பை எதிர்த்து குண்டு வைத்த வெறி நாய்களின் எண்ணங்களை தவிடு பொடி ஆக்கினார்கள்.
வாரணாசி குண்டு வெடிப்பு மார்ச் 7. 2006-ல் நடந்து நான்கு நாட்கள் கழித்து குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு பக்கத்தில் உள்ள வத்வா என்ற இடத்தில் நான்கு முஸ்லிம்களை சுட்டுக் கொன்றார்கள். இந்த நான்கு முஸ்லிம்களும் காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம் தீவிரவாதிகள் என்று அப்பொழுது சொல்லப் பட்டது. ஆனால் இந்த நான்கு முஸ்லிம்களும் காவல்துறையினரால் பிடிக்கப் பட்டு நான்கு மாதங்களாக காவல் துறையின் கட்டுப் பாட்டில் வைக்கப் பட்டிருந்தவர்கள். அகமதாபாத்துக்கு அருகில் ஒரு பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக இந்த நால்வரையும் போலீசார் அடைத்து வைத்துள்ளனர்.இவர்களை குஜராத் போலீசார் வசம் ஒப்படைத்தது மகாராஷ்டிர போலீசார் என்று சொல்லப் படுகிறது.இது போன்ற என்கவுண்டருக்கு அவ்வப்போது முஸ்லிம்களை சப்ளை செய்வது என்பது மகாராஷ்டிர போலீசுக்கு வழக்கமான ஒன்றே! மோடி அரசுக்கு ஆபத்து வரும்போதும், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்ற கோரிக்கை எழும்போதும் சாமர்த்தியமாக பிரச்னைகளை திசை திருப்பி என்கவுண்டரில் முஸ்லிம்களை போட்டுத் தள்ளுவது இவர்களின் வாடிக்கை. போலீசாரின்கட்டுப் பாட்டில் இருந்த இந்த நால்வரும் போலீசாரிடம் எதிர் தாக்குதல் நடத்தினர் என்று பழைய பஞ்சாக்கத்தையே இதிலும் பாடினர்.

ஷமீர்கான்!

2002 ஆம் ஆண்டு ஷமீர்கான் என்ற முஸ்லிம் இளைஞன் குஜராத் போலீசாரால் என்கவுண்டரில் சுடப்பட்டார். சுடப்பட்ட ஷமீர்கானோடு சேர்த்து பதினேரு பேர் கைது செய்யப் பட்டார்கள்.இவர்கள் மேல் சாட்டப்பட்ட குற்றம் இவர்கள் அனைவரும் அத்வானியையும், மோடியையும் கொல்ல திட்டமிட்டார்கள் என்பதே!ஷமீர்கானின் வாக்கு மூலம் தங்களிடம் இருப்பதாக போலீசார் கூறுகின்றனர். போலீசாரின் கஸ்டடியில் வாக்கு மூலம் தந்த ஷமீர் எப்படி போலீசாரை திருப்பி தாக்க முயற்ச்சிக்க இயலும்? என்ற கூட சிந்திக்காமல் போலீசார் பொய்களை ஜோடித்தனர். 2005-ல் கைது செய்யப் பட்ட அனைவரும் நிரபராதிகள் என்று உச்ச நீதி மன்றத்தால் விடுவிக்கப் பட்டனர். ஷமீர்கான் கொல்லப் படாமல் இருந்திருந்தால் அவரும் விடுதலையாகி இருப்பார். பாவிகள் என்கவுண்டரில் தீர்த்து விட்டார்கள்.

சாதிக் ஜமால்!

சாதிக் ஜமால் என்ற முஸ்லிம் இளைஞரை நரோடா என்னுமிடத்தில் அகமதாபாத் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். இவர் பாவ்நகர் என்ற இடத்தைச் சேர்ந்தவர். வேலை தேடி மும்பாய்க்கு சென்றுள்ளார். இவரை பம்பாயிலுள்ள போலீஸ் கேடி தயாநாயக் சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைத்துள்ளார். அஹமதாபாத் காவல்துறையுடன் தொடர்பு கொண்டு என்கவுண்டருக்கு தெவைப் பட்டால் என்னிடம் ஒரு முஸ்லிம் உண்டு என்ற செய்தியை கொடுத்திருக்கிறார். திட்டமிட்டபடி ஜமாலை திரும்பவும் அகமதாபாத்துக்கு அழைத்து வந்து என்கவுண்டரில் தீர்த்துக் கட்டினார்கள். இவரை கொன்றதற்கு காரணம் என்று போலீசாரால் சொல்லப் பட்டது ' நரேந்திர மோடியை கொல்ல வந்தார்' என்பதே!
மேலும் கணேஷ. குத்ரி, நரேஷ் யாதவ் என்ற இரண்டு பேரை மும்பை காவல் துறையினர் அகமதாபாத் காவல் துறையினரிடம் ஒப்படைத்திருக்கின்றனர். இவர்களை பிரம்தர்வாஜா என்னுமிடத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்தார்கள்.இவர்கள் தீவிரவாதிகள் என்றும் காவல்துறையுடன் எதிர் மோதலில் ஈடுபட்டதாகவும் கதை கட்டி விடப் பட்டது.

ஷமீர் சர்பராஷ் கான்:

இவர் ஒரு திருடர் எனவும் காவல் துறையின் கீழுள்ளகாவலர் ஒருவரை கொலை செய்து விட்டு பாகிஸ்தானுக்கு தப்பி ஓடி விட்டார் எனவும் அங்கு பயிற்சி எடுத்துக் கொண்டு வந்து குஜராத்திலுள்ள அதி முக்கியமானவர்களைக் கொலை செய்திட வந்தார் எனவும் குற்றம் சாட்டப் பட்டது. இவரையும் அகமதாபாத்தில் போலீசார் கொலை செய்து விட்டனர். ஆனால் இவரின் சொந்தங்கள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நீதி மன்றம் சென்றனர். ஷமீர் நிரபராதி என்பதை நிரூபித்தனர். காவல்துறையினர் உயர் நீதி மன்றம் சென்றனர்.உயர் நீதி மன்றமும் இவர் நிரபராதி என்று கூறி விட்டது. தீர்ப்பு வந்து என்ன பயன்? போன உயிர் திரும்ப வருமா?

மில்லிகெஜட் , ஏப்ரல் 2006

மேலே உள்ள கட்டுரையின் மூலம் முஸ்லிம்கள் யாரும் தவறுகளே செய்வதில்லை என்று சொல்ல நான் வரவில்லை. எல்லா சமூகத்திலும் உள்ளது போல் முஸ்லிம்களிலும் ஒரு சில சமூக விரோதிகள் இருக்கிறார்கள். அவர்களை இனம் காணுவதை விட்டு விட்டு இந்துத்வா வோடு போலீசாரும் கை கோர்த்துக் கொண்டு ஒரு சமூகத்தையே அழிக்க நினைக்கிறார்கள். இதனால் பாதிக்கப் படுவது நம் இந்தியாவின் முன்னேற்றமும் என்பதை ஏனோ இவர்கள் மறந்து விடுகிறார்கள். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் தீர்ப்பு என்ன? பானர்ஜியின் அறிக்கை மூலம் ரயில் பெட்டியின் உள்ளிருந்து தான் தீ பரவியது என்ற உண்மை வெளி வந்திருக்கிறது. இதைக் காரணமாக்கி 2000 முஸ்லிம்களை கொன்று குவித்த நரேந்திர மோடிக்கு இழந்த உயிர்களை திரும்ப கொண்டு வர முடியுமா? தான் திரும்பவும் ஆட்சியில் அமர வேண்டும் என்ற அற்ப பதவி வெறிக்காக கொன்று குவித்த உடல்கள் தான் எத்தனை! இது போல் அநியாயமாக உயிர்களையும் உடமைகளையும் இழந்தவர்களின் சொந்தங்கள் வெறுப்புற்று ஆயுதங்களை கையிலெடுக்க ஆரம்பித்தால் நம் நாடு தாங்குமா? வல்லரசாக துடித்துக் கொண்டிருக்கும் நம் நாட்டுக்கு இவையெல்லாம் பின்னடைவு இல்லையா?

இதற்கெல்லாம் தீர்வு தான் என்ன? அனைத்து அரசு துறைகளிலும் முஸ்லிம்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் திட்டமிட்டு செய்யப்படும் கலவரங்கள் பெருமளவு குறைய வாய்ப்புண்டு. சமீப காலங்களில் தான் படிப்பின் மீது முஸ்லிம்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். நடு நிலையாளர்களும், அரசும் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து இட ஒதுக்கீட்டை அமுல் படுத்த முன் வர வேண்டும். இந்தியா முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டுமானால் இது அவசியமும் கூட.

என்றும் அன்புடன்

சுவனப் பிரியன்

இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்! - நான்கு

இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்! - நான்கு

முகமது நபியைப் பற்றிய முன்னறிவிப்புகள் பலவற்றை இந்து மத வேதங்களில் இருந்து போன பதிவுகளில் கண்டோம். வேறு சில தகவல்களையும் இந்து மத வேதங்களில் இருந்து பார்ப்போமா!

அதர்வண வேதம் :

அதர்வண வேதம் 20 ஆவது புத்தகத்தில் குன்துப் என்ற பெயரில் ஒரு அத்தியாயம் உண்டு. 'குன்துப்' என்பதன் பொருள் 'அமைதியையும் பாதுகாப்பையும் தரக் கூடிய வழிகள்' என்ற பொருள் தரும். இதையேதான் நாம் அரபியில் இஸ்லாம் என்கிறோம். இந்த குன்துப் அத்தியாயத்தை புளூம் ஃபீல்ட், புரபஸர் ரால்ப் க்ரிபித்,பண்டிட் ராஜாராம் போன்றோர் மொழி பெயர்த்துள்ளனர். இந்த அதர்வண வேதத்தில் குன்துப் அத்தியாயத்தில் சுலோகங்கள் ஒன்றிலிருந்து பதின்மூன்று வரை வரக் கூடியவை.

மந்த்ரா ஒன்று

'அவர்தான் நரசன்ஸா அல்லது புகழப் பட்டவர்'

'அவர்தான் கருமா. அமைதியை விரும்பும் அவர் தன் நாட்டவர்களால் துரத்தப் படுவார் 60090 எதிரிகளிடமிருந்து காப்பாற்றப் படுவார்'

சமஸ்கிருத மொழியில் 'கருமா' என்பதற்கு 'அமைதியை பரப்பக் கூடியவர்' என்ற அர்த்தம் வரும். 'நாடு துறப்பவர்' என்ற பொருளிலும் வரும். இந்த இரண்டு செயல்களும் முகமது நபியின் வாழ்க்கையில் நடைபெற்றவை.

'நரசன்ஸா' என்பதற்கு புகழப் பட்டவர் என்று அர்த்தம் வரும். அரபியில் புகழப் பட்டவர் என்ற பதத்தில் வரும் பெயர் முகம்மது. மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வு இல்லை என்று பிரச்சாரம் செய்த அவர் மக்காவிலிருந்து மதினாவுக்கு அவரின் உறவினர்களாலும் எதிரிகளாலும் விரட்டப் பட்டார். அப்போது இருந்த மக்காவின் மக்கள் தொகை ஏறக்குறைய இதே எண்ணிக்கையில் இருந்தது.

மந்த்ரா இரண்டு

'அவர் ஒட்டகத்தில் சவாரி செய்வார். அவருடைய வாகனம் சொர்க்கத்தையும் தொட்டுவிடக் கூடியது'

ஒட்டகத்தில் பிரயாணம் செய்வது பிராமணர்களுக்கு தடுக்கப் பட்டுள்ளது. எனவே இதுவும் முகமது நபியைக் குறிப்பதாக உள்ளது.
முகமது நபி 'மிஃராஜ்' என்ற விண்வெளிப் பயணம் செய்து இறைவனோடு பேசியதையும், சொர்க்கம் நரகத்தை பார்வையிட்டதையும் பற்றி நமக்கு ஹதீதுகளில் காணக் கிடைக்கின்றது.

மந்த்ரா மூன்று :

'அவர் பெயர்தான் மாமாஹ் ரிஷி'

இந்த மந்த்ராவில் வரும் பெயர் மாமாஹ் ரிஷி. எந்த ஒரு இறைத் தூதரும் இந்த பெயரில் இந்தியாவில் அவதரித்ததாக வரலாறுகளில் காணப் படவில்லை. மாமாஹ் என்பதும் முஹம்மது என்பதும் ஒன்று தான் என்று இதன் மூலம் விளங்க முடிகிறது. இதற்கு முன்பே கூட இந்து வேதங்களில் முஹம்மது என்ற முழுப் பெயரும் குறிப்பிடப் பட்டுள்ளது.

மந்த்ரா பதினான்கு :

அந்த தலைவரை நாம் வாழ்த்தி வரவேற்போம். அவரை ஏற்றுக் கொண்டால் தவறுகளில் வீழ்ந்து விடாமல் பாதுகாக்கப் படுவோம்.

அதர்வண வேதம் :

'உண்மையான அந்த இறைவன் புகழப் பட்டவன். போர்க் களத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கை உடையவர்கள் ஆச்சரியப் படத்தக்க வகையில் பத்தாயிரம் பேரை வெற்றிக் கொள்வர். இது இறைவன் கிருபையால் நடக்கும்.'

அதர்வண வேதம் - அத்தியாயம் 21 - சுலோகம் 9

முகமது நபி சந்தித்த பத்ர் போரில் முஸ்லிம்களின் தரப்பில் இருந்தது வெறும் 3000 பேரே. ஆனால் எதிரிகள் தரப்பில் இருந்தது 10000 க்கும் அதிகமானோர். ஆச்சரியப் படும் வகையில் முஸ்லிம்கள் வெற்றியடைந்தனர். இந்த சுலோகத்தில் வரும் கடைசி வார்த்தையான 'அப்ரதி நி பசாயா' என்ற சொல் 'இறைவனால் ஆச்சரியப் படத்தக்க வகையில் இறை மறுப்பாளர்களுக்கு கொடுக்கப் பட்ட தோல்வி' என்ற பொருளில் வரும்.

அதர்வண வேதம் :

'20 அரசர்களும் 60000 எதிரிகளும் சேர்ந்து அந்த புகழப் பட்டவரை எதிர்ப்பர்'

அதர்வண வேதம் - புத்தகம் 20 - அத்தியாயம் 21 - சுலோகம் 9

முகமது நபி பிரசாரம் பண்ணிய காலத்தில் மக்காவின் மக்கள் தொகை ஏறக்குறைய 60000. மக்காவிற்குள்ளேயே ஒவ்வொரு குலத்துக்கும் கோத்திரத்திற்கும் சாதி வாரியாக கிட்டத்தட்ட இருபது தலைவர்கள் இருந்தனர்.இவர்கள் கையில் தான் அன்றைய மக்காவின் ஆட்சி இருந்தது. இவர்கள் தான் முகமது நபியை கடுமையாக எதிர்த்தனர். புகழப் பட்டவர் என்ற பதத்துக்கு அரபியில் முகம்மது பொருள் என்று வரும். 'அபந்து' என்ற வார்த்தைக்கு அர்த்தம் 'உதவி செய்யப் படாதவர்' என்று வரும். மக்காவாசிகளால் ஆரம்பத்தில் நிர்க்கதியாக முஹம்மது நபி விடப் பட்டதைத்தான் இங்கு சுட்டிக் காட்டப் படுகிறது.

சாம வேதம் :

'இந்தக் குழந்தையின் பழக்கம் வித்தியாசமாக இருக்கும். இந்தக் குழந்தை தன் தாயிடமிருந்து பால் அருந்தாது. அத்தகைய சூழ்நிலை அங்கு உருவாகாது.'

சாம வேதம் - அக்னி - மந்த்ரா 64
சாம வேதம் - புத்தகம் 1 - பிரிவு 2 - அத்தியாயம் 2 - சுலோகம் 2

முகமது நபி சிறு வயதில் தாய்ப் பால் அருந்த ஹலீமா என்ற பெண்ணிடம் அனுப்பப் பட்டு அங்கு தான் தனது சிறு வயதை கழித்தார்.அவரை பெற்றது ஆமினாவாகும். போதிய தாய்ப் பால் சுரக்காததால் அன்றைய வழக்கப்படி வாடகைக்கு பெண்களை நியமித்தனர்.

முகமது நபிக்கு அஹமது என்ற பெயரும் உண்டு

'இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அனுப்பப் பட்ட இறைவனின் தூதர். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப் படுத்துபவன் எனக்குப் பின்னர் வரவுள்ள அஹமத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்.' என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக!

குர்ஆன் - 61 : 6

மேற் கண்ட குர்ஆன் வசனத்தில் ஏசு தன் மக்களுக்கு பிரச்சாரம் செய்யும் போது அஹமத் என்ற ஒரு தூதர் எனக்கு பின்னால் வரப் போகிறார் என்று கோடிட்டுக் காட்டுகிறார். இதைத் தான் இங்கு இறைவன் குறிப்பிடுகிறான். முகமது நபிக்கு அஹமது என்ற மற்றொரு பெயரும் உள்ளது இதன் மூலம் தெரிய வருகிறது.

முகமது அகமது என்ற இரண்டு பெயர்களில் இந்து மத வேதங்களில் வரக் கூடிய பல முன்னறிவிப்புகளை இனி வரிசையாகக் காண்போம்.

அ) சாமவேதம் - உத்தரசிகா - மந்த்ரா 1500
(சாம வேதம் இரண்டாவது பிரிவு - புத்தகம் 7 - அத்தியாயம் 5 - செய்யுள் 1

ஆ)சாம வேதம் - இந்திரா அதிகாரம் 2 - மந்த்ரா 152
(சாம வேதம் புத்தகம் 2 - அதிகாரம் 2 - சுலோகம் 8)

இ) யஜூர் வேதா - அதிகாரம் 31 - செய்யுள் 18

ஈ) ரிக் வேதம் புத்தகம் 8 - துதிப் பாட்டு 6 - செய்யுள் 10

உ) அதர்வண வேதம் - புத்தகம் 8 - அதிகாரம் 5 - செய்யுள் 16

ஊ) அதர்வண வேதம் புத்தகம் 20 - அதிகாரம் 126 - செய்யுள் 14

எ) சாம வேதம் - உத்தர்சிக் - மந்த்ரா 1500 - பிரிவு 2

ஏ) சாம வேதம் - புத்தகம் 7 - அதிகாரம் 1 - பகுதி 5 - செய்யுள் 1

'அஹமத் இறைவனிடமிருந்து மனிதர்கள் பின் பற்றக் கூடிய சட்டத்தைக் கொண்டு வருவார். நான் அவரிடமிருந்து சூரியன் தரும் ஒளியைப் போன்ற ஞானத்தைப் பெறுவேன்.'

- சாம வேதம் - இந்திரா அதிகாரம் 2 - மந்த்ரா 152 - புத்தகம் 2 - செய்யுள் ஒன்றிலிருந்து எட்டு வரை

மேலே உள்ள அத்தியாயங்களில் அதிக இடங்களில் அஹமத் என்று வருகிறது. முகம்மதும் அகமதும் இவ்விரண்டும் முகமது நபியின் பெயர்களே! முகமது நபி இறைவனிடமிருந்து குர்ஆன் மூலம் மக்களுக்கு சட்டங்களை வழங்கினார். இதைத் தான் இங்கு சுட்டிக் காட்டப் படுகிறது.

'முஹம்மதே! நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.'

-குர்ஆன் 34 : 28

Friday, June 16, 2006

பொய் கூறிய முன் நெற்றி - ஓர் விளக்கம்!

பொய் கூறிய முன் நெற்றி - ஓர் விளக்கம்!

'இறைவன் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?அவ்வாறில்லை. அவன் விலகிக் கொள்ள வில்லையானால்முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி.'

-குர்ஆன் 96 : 14,15,16

இந்த வசனத்தில் முஸ்லிம்களை எந்த நேரமும் எதிர்த்துக் கொண்டும், அவர்கள் இறைவனை வணங்காமல் தடுத்துக் கொண்டும், பொய் பேசி திரிந்து கொண்டும் இருக்கும் நபர்களைப் பற்றி கூறப்படுகிறது.

குர்ஆன் இங்கு பொய் சொல்பவர்கள், தவறான நடத்தையில் ஈடுபடுபவர்கள் போன்றோரின் முன் நெற்றியைப் பிடிப்போம் என்று கூறுகிறது. பொய் சொல்வதற்கும்,தவறான நடத்தை நடப்பவருக்கும் அந்த நபரின் முன் நெற்றிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. ?

ஒரு மனிதனின் மூளையின் அமைப்பையும் அதன் முன் பக்கத்தையும் ஆராய்ந்து பாருங்கள்.அங்கு நமது தலையின் முன் பகுதியில் பெரு மூளை அமைந்துள்ளதைக் காணலாம். இதைப் பற்றி உயிரியல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? Essential of Anatomy & Physiology என்ற புத்தகம் மூளையின் செயல்பாடுகளை விரிவாக விவரிக்கிறது. மனிதன் அதிகம் உணர்ச்சி வசப்படுதல், பொய்,கோபம், முதலான உணர்வு சம்பந்தப் பட்டவைகள் அதிகம் நிகழ்வது மூளையின் முன் பக்கத்தில் இந்த முன் பக்கம் என்பது காதுகளின் ஓரத்துக்கும், தலையின் முன் பக்கத்திற்கும் அதாவது நெற்றியில் அமைந்துள்ள நரம்புகளால் இந்த செயல்கள் செயல் படுத்தப் படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நெற்றிப் பகுதியின் நரம்புகள் மனிதனின் அநேக செயல்களுக்கு காரணமாக அமைகிறது. இந்த இடமே ஒரு மனிதன் பொய் பேசுவதற்கும் உண்மை பேசுவதற்கும் தூண'டுகோலாய் இருக்கிறது.

இந்த உண்மை கண்டறியப்பட்டது சுமார் எழுபது வருடங்களுக்கு முன்புதான். இந்த உண்மையைத் தான் குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே உண்மைப் படுத்துகிறது. எனவே தான் 'பொய் பேசிய அந்த முன் நெற்றியை நாம் பிடிப்போம்' என்று இறைவன் கூறுகிறான். இந்த குர்ஆன் நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக் காட்டு.

Evidence from
1)This is the Truth (video tape)
2)Essential of Anatomy & Physiology, seeley and others, page 211. Also see The Human Nervous System, Noback and others, page 410,411
Figure 12 : Functional regions of the left hemisphere of the cerebral cortex. The prefrontal area is located at the front of the cerebral cortex. (Essentials of Anatomy & Physiology, Seelay and others, page 210.

மனிதனின் படைப்பின் ரகசியம் - ஓர் ஆய்வு

மனிதனின் படைப்பின் ரகசியம் - ஓர் ஆய்வு

'களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம். பின்னர் அவனை பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக ஆக்கினோம். பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையை சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.

- குர்ஆன் 23 : 12 , 13 , 14

முதல் மனிதனை களிமண்ணால் படைத்தேன் என்று இறைவன் கூறுகிறான். இதன் மூலம் டார்வினின் பரிணாமக் கொள்கை தவறு என்று விளங்குகிறது. அறிவியல் ரீதியாகவும் டார்வின் கொள்கை நிரூபிக்கப் படவில்லை என்று முந்தைய பதிவுகளிலும் விளக்கியிருக்கிறேன்.

மேலே உள்ள குர்ஆன் வசனத்துக்கு திரு பி.ஜெய்னுல்லாபுதீனும், புரபஸர் எமிரிடஸ் கெய்த் மூரும் விளக்கங்களை அளித்துள்ளார்கள். முதலில் நாம் பி.ஜெய்னுல்லாபுதீனின் விளக்கத்தை எடுத்துக் கொள்வோம்.

இவ்வசனங்களின் மூலத்தில் 'அலக்' எனும் சொல் இடம் பெற்றுள்ளது. இச் சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன. இரத்தக்கட்டி, தொங்கிக் கொண்டிருக்கும் நிலை,ஒன்றடன் ஒன்று கோர்த்துக் கொண்டது என்றெல்லாம் பொருள் உண்டு.

இந்த இடத்தில் இரத்தக் கட்டி என்று பொருள் கொள்ள முடியாது. கருவில் இரத்தக்கட்டி என்று ஒரு நிலை இல்லை.தொங்கிக் கொண்டிருக்கும் நிலை எனவும் பொருள் கொள்ள முடியாது.ஏனெனில் மனிதனின் மூலத்தைக் கூறும்போதுஅது ஒரு பொருளாகத்தான் இருக்க முடியும்.தொங்கும் நிலை என்பது ஒரு பொருள் அல்ல.

மனிதன் உருவாவதற்கு ஆணிண் உயிரணு, பெண்ணின் சினை முட்டையுடன் சேர்ந்து கருவுற்ற சினை முட்டையாக வேண்டும்.இது தான் மனிதப் படைப்பின் முதல் நிலை. ஆணின் உயிரணு மட்டுமோ, பெண்ணின் சினை முட்டை மட்டுமோ மனிதனின் முதல் நிலை அல்ல. இரண்டும் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொள்வதால் உருவாகும் பொருளிலிருந்து தான் மனிதன் படைக்கப் பட்டான். இதனால்தான் சுருக்கமாக கருவுற்ற சினை முட்டை என்ற தமிழ்ப் படுத்தியுள்ளோம்.இரண்டு பொருள்கள் ஒன்றுடன் ஒன்று கலப்பது என்பது இதன் நேரடிப் பொருள். இதன் கருத்து தான் கருவுற்ற சினை முட்டை.

அடுத்து புரபஸர் எமிரெடஸ் கெய்த் மூரின் கருத்துக்களை படிப்பதற்கு முன் இவரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்.

டாக்டர் கெய்த் மூர் உலக அளவில் புகழ் பெற்ற உயிரியல் துறை அறிஞர் ஆவார்.இவர் உயிரியலில் மனிதனின் கரு வளர்ச்சியைப் பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். அப்படி அவர் எழுதிய புத்தகங்களில் "The Developing Human" என்ற புத்தகம் அமெரிக்க அரசால் சிறந்த புத்தகமாக தெரிவு செய்யப் பட்டுள்ளது. டாக்டர் கெய்த் மூர் Anotomy and cell Biology துறைகளில் பேராசிரியராக டொராண்டோ பல்கலைக் கழகம் கனடாவில் பணியாற்றுகிறார். இக்கல்லூரியில் Anotomy துறையில் எட்டு வருடங்களாக தலைமைப் பதவியுலும் இருந்து வருகிறார். இனி அவர் தரும் விளக்கங்களை ஆங்கிலத்திலேயே பார்ப்போம்.

In the Holy Quran God speaks about the stages of Mans embryonic development:

“We created man from an extract of clay. Then we made him as a drop in a place of settlement, firmly fixed. Then we made the drop in to an alaqah (leech,suspended thing,and blood clot) then we made the alaqah in to a mudghah (chewed – like substance)…… “ - Quran 23 : 12,13 ,14

literally, the Arabic word alaqah has three meanings : 1) leech 2)suspended thing 3)blood clot.
1) In comparing a leech to an embryo in the alaqah stage, we find similarity between the two as we can see in figure 1. also the embryo at this stage obtains nourishment from the blood of the mother, similar to the leech ,which feeds on the blood of others.

Figure 1 : Drawing illustrating the similarities in appearance between a leech and a human embryo at the alaqah stage. (leech drawing from Human development as Described in the Quran and sunnah. Moore and others page 37, modified from integrated principles of zoology, Hickman and others.Embbroyo drawing from The developing Human, Moore and persaud,page 73)

2)The second meaning of the word alaqah is “suspended thing.” This is what we can see in figures 2 and 3 the suspension of the embryo, during the alaqah stage, in the womb of the mother.

Figure 2 : We can see in this diagram the suspension of an embryo during the alaqah stage in the womb (uterus) of the mother. ( The developing Human, Moore and persaud, 5th edition page 66

3) The third meaning of the word alaqah is “blood clot.” We find that the external appearance of the embryo and its sacs during the alaqah stage is similar to that of a blood clot. This is due to presence of relatively large amounts of blood present in the embryo during the stage.(see figure 4). Also during the stage, the blood in the embryo does not circulate until the end of the third week. Thus the embryo at this stage is like a clot of blood.

Figure 3 : In this photomicrograph, we can see the suspension of an embryo (marked b) during the alaqah stage (about 15 days old) in the womb of the mother. The actual size of the embryo is about 0.6 mm. (The developing Human,Moore,3rd edition page 66,from Histology, Leeson and Leeson.)

Figure 4 : Diagram of the primitive cardiovascular system in an embryo during the alaqah stage. The external appearance of the embryo and its sacs is similar to that of a blood clot, due to the presence of relatively large amounts of blood present in the embryo. (The developing Human, Moore 5th edition, page 65.)

ஆக 'அலக்' எனும் அரபி சொல்லுக்கு வரும் மூன்று விளக்கங்களும் கரு வளர்வின் ஆரம்பத்தில் உள்ள அடுத்தடுத்த நிலைகளை மிகத் துல்லியமாக விளக்குகிறது.

அடுத்த நிலையான 'முத்கா' என்ற நிலையை குர்ஆன் விளக்குகிறது. 'முத்கா' என்றால் நாம் ஒரு சூயிங்கம்மை வாயில் போட்டு நன்றாக மென்றவுடன் வரும் நிலை இருக்கிறதல்லவா அந்த நிலைதான் 'முத்கா' என்று அரபியில் சொல்லப்படும்.ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் “chewed like substance” என்று சொல்லலாம். இதைப்பற்றி திரு கெய்த் மூர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்:

The next stage mentioned in the verse is the Mudghah stage. The Arabic word mudghah means “chewed like substance.” If one were to take a piece of gum and chew it in his mouth and then compare it with an embryo at the mudghah stage, we would conclude that the embryo at the mudghah stage acquires the appearance of a chewed like substance. This is because of the somites at the back of the embryo that “somewhat resemble teethmarks in a chewed substance.” (see figures 5 and 6)

Figure 5 : photograph of an embryo at the mudghah stage (28 days old). The embryo at this stage acquires the appearance of a chewed-like substance, because the at the back of the embryo somewhat resemble teeth marks in a chewed substance. The actual size of the embryo is 4 mm. (The developing Human Moore and persaud, 5th edition, page 82, from professor hideo nishimura, Kyoto university, Kyoto,Japan)

Figure 6 : When comparing the appearance of an embryo at the mudghah stage with a piece of gum that has been chewed , we find similarity between the two.
a) Drawing of an embryo at the mudghah stage. We can see here the somites at the back of the embryo that look like teeth marks. (The developing Human, Moore and persaud,5th edition, page 79)
b) Photograph of a piece of gum that has been chewed


How could Mohammad have possibly known all this 1400 years ago, when scientists have only recently discovered this using advanced equipment and powerful microscopes which did not exist at that time? Hamm and Leeuwenhoek were the first scientists to observe human sperm cells (spermatozoa) using an improved microscope in 1677 (more than 1000 years after Mohammad. They mistakenly thought that the sperm cell contained a miniature preformed human being that grew when it was deposited in the female genital tract.

1981 ஆம் வருடம் புரபஸர் கெய்த் மூர் சவூதி அரேபியா தம்மாம் நகரில் நடந்த ஏழாவது மருத்துவ கருத்தரங்கிற்கு வருகை தந்திருந்தார்.அப்பொழுது அவர் தமது அறிக்கையை பின் வருமாறு சமர்ப்பித்தார் : 'எனக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது குர்ஆனின் மேற் சொன்ன வரிகள். மனிதனின் கருவில் நிகழும் அடுத்தடுத்த நிலைகளை குர்ஆன் மிகவும் துல்லியமாக பட்டியலிடுகிறது.ஏழாவது நூற்றாண்டில் அரிஸ்டாட்டில் மனிதனின் கரு வளர்ச்சியைப் பற்றி நன்கு ஆராய்ந்தார்.ஆனால் அதன் பிறகு தொடர்ந்து வரும் நிலைகளின் மாற்றங்களை அறியும் வாய்ப்பும் வசதியும் அரிஸ்டாட்டிலுக்கு அன்று கிடைக்கவில்லை. அவர் கோழி முட்டையின் கரு வளர்ச்சியின் அடிப்படையைத்தான் விளக்கி விட்டுப் போனார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை கருவியலைப் பற்றிய ஒரு தீர்க்கமான முடிவுக்கு அறிவியல் வரவில்லை. தற்போதுதான் கருவியல் ஓரளவு வளர்ச்சி கண்டுள்ளது. அதற்கான சாதனங்களும் வாய்ப்புகளும் தற்போதுதான் இலகுவாக கிடைக்கின்றன.

மருத்துவம் படிக்காத, எந்த நுண்ணோக்கி வசதியும் இல்லாத, எழுதப் படிக்கத் தெரியாத ஒரு சமூகத்தில் தோன்றிய ஒரு தனி நபரான முகமது நபி இப்படி ஒரு உண்மையை சொல்லவே முடியாது. குர்ஆன் கண்டிப்பாக இறைவனின் வார்த்தைகள் தான் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.' என்று தனது அறிக்கையை சமர்ப்பித்தார்.

இக் கட்டுரையில் வரும் அனைத்து விபரங்களுக்கும் உதவிய புத்தகங்கள் :

1) “The Developing Human” – Moor and Persaud, 5th edition, page8,65,9
2) “Human Development as described in the Quran and Sunnah” – Moor and others page no 36,37,38
3) The reference for this saying is “This is the Truth” (Video Tape) . For copy of this video tape please contact one of the organizations listed .
A) Islamic Foundation Of America
p.o. box – 3415, Merrifield,VA 22116,USA,
Tel : (703) 914-4982, Fax – (703) 914-4984
Mail – ifam@erols.com

B)Bader Islamic Association of Toronto
474 Roncesvalles Avenue, Toronto, Ontario M6R 2N5, Canada
Email : islam@badercenter.com

c) Al- Muntada Al-Islami Centre
7 Bridges Place, Parsons Green, London , SW6 4HW, UK
Mail : muntada@almuntada-alislami.org
mail@jimas.org

Tuesday, June 06, 2006

ஜிஹாத் - புனிதப் போர் ஓர் விளக்கம்!

ஜிஹாத் - புனிதப் போர் ஓர் விளக்கம்!

இந்த ஜிஹாத் என்ற பதம் ஹிந்துத்துவ வாதிகளால் தவறான பொருள் கொடுத்து பரப்பப்படுகிறது. முஸ்லிம்களில் கூட சிலர் ஜிஹாதை தவறாக பொருள் கொள்கிறார்கள். ஜிஹாத் என்பது புனிதப் போர் என்றும் அப்பாவி பொது மக்களை குண்டு வைத்து தகர்ப்பவர்கள் ஜிஹாதிகள் என்றும் பொய்யான பிரச்சாரம் நடந்து வருகிறது.

ஜிஹாத் என்ற அரபி வார்த்தை ஜஹாதா என்ற பதத்திலிருந்து வந்தது. ஜஹாதா என்றால் அரபியில் போராட்டம் என்ற பொருள் வரும். உதாரணத்திற்கு ஒரு மாணவன் பரீட்சையில் தேற வேண்டும் என்பதற்காக கடுமையாக போராடினால் அது கல்வியின் மீது அந்த மாணவன் தொடுக்கும் ஜிஹாத். அதே போல் தவறான எண்ணங்களிலிருந்து விடுபட அவன் தன்னுடைய மனத்தோடு நடத்தும் போராட்டமும் ஒரு வகை ஜிஹாதே!

முஸ்லிம்களிலேயே பலர் ஜிஹாத் என்றால் புனிதப் போர் என்று அர்த்தம் கொள்கிறார்கள். புனிதப் போர் என்ற வார்த்தைக்கு நேரடி அரபி பதம் "ஹரபுன் முகத்தஸா". இந்த வார்த்தை குர்ஆனிலோ ஹதீஸிலோ எந்த இடத்திலும் பயன் படுத்தப் படவில்லை.பிறகு எப்படி "புனிதப் போர்" என்ற வார்த்தை முஸ்லிம்களிடம் பிரபல்யமானது?

மதத்தின் பெயரால் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை பல ஆயிரக்கணக்கில் கொன்று அதற்கு "சிலுவைப் போர்" என்ற பெயரையும் இட்டனர். அவர்களை எதிர்ப்பதற்காக முஸ்லிம்கள் தரப்பில் படை திரட்டும் போது "புனிதப் போர்" என்ற பெயரிடப்பட்டது. அன்று ஆரம்பித்த இந்த "புனிதப் போர்" என்ற வார்த்தை இன்று வரை முஸ்லிம்களிடத்தில் நிலை பெற்று விட்டது. எனவே இனிமெலாவது ஜிஹாத் என்ற வார்த்தையை சரியான பொருளில் விளங்க முயற்ச்சிப்போம்.

இப்படி நாம் தீமையை எதிர்த்து போரிடும் போது நம்மை அழிக்க வரும் எதிரிகளையும் நாம் எதிர்க்க வேண்டி வரும். தன் வீட்டையும் தன் மனைவி மக்களையும் காப்பாற்றும் பொருட்டு ஒருவன் போராடினால் அதுவும் ஒரு வகை ஜிஹாதாகும். பத்திரிக்கையாளர் அருண்சோரி குர்ஆனின் ஒரு வசனத்தைக் குறிப்பிட்டு இது இந்தியாவில் உள்ள இந்துக்களைத்தான் சொல்கிறது என்று தவறான விளக்கம் அளித்திருந்தார்.

"அந்த இணை கற்ப்பிப்போரை கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களைப் பிடியுங்கள்! அவர்களை முற்றுகையிடுங்கள்!"

குர்ஆன் 9 : 5

மேற்கண்ட வசனத்தைத்தான் அருண்சோரி எடுத்துக் காட்டியிருக்கிறார். இந்த வசனம் எப்போது இறங்கப் பட்டது அந்த சூழ்நிலை என்ன என்று தெரியாமல் மேலோட்டமாக பார்த்தால் எவருக்குமே வித்தியாசமாகவே தெரியும்.

முகமது நபியும் அவரது தோழர்களும் வீடு வாசல் சொத்து சுகங்கள் அனைத்தையும் பறி கொடுத்து விட்டு மக்காவை விட்டு வெளியேற்றப் படுகின்றனர். அவர்கள் செய்த ஒரே குற்றம் இஸ்லாத்தை அந்த மக்களுக்கு எத்தி வைத்தது. இவர்கள் அனைவரும் மதினாவில் சென்று குடியேறுகின்றார்கள். அங்கு இஸ்லாத்துக்கு வரவேற்பு கிடைக்கிறது. மதினா மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். முகமது நபி அங்கு ஒரு இஸ்லாமிய அரசையும் உருவாக்குகிறார்.

மக்காவில் எஞ்சியிருந்த ஒரு சில முஸ்லிம்களும் காபிர்களால் (இணை வைப்பவர்களால்) துன்புறுத்தப் படுகின்றனர். மதினாவாசிகளை அழிக்க மக்காவாசிகள் படை திரட்டிக் கொண்டு வருகிறார்கள். இந்த நேரத்தில் போர் செய்யவில்லை என்றால் மதினா முற்றிலுமாக அழிக்கப் படும். இஸ்லாத்திற்கும் பின்னடைவு ஏற்படும். இந்த நேரத்தில் தான் முஸ்லிம்களின் மீது போரை இறைவன் கடமையாக்குகிறான்.

நம்மை ஏற்கெனவே அழித்த மேலும் தற்போது இஸ்லாமியர்களை முற்றிலுமாக அழிக்கும் நோக்குடன் ஒரு படை வந்து கொண்டிருக்கிறது. தற்போது முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும். தங்களை தற்காத்துக் கொள்ள ஆயுதம் ஏந்த வேண்டும். எதிரிகளை போர்க களத்தில் கொல்ல வேண்டும். சிறை பிடிக்க வேண்டும். இந்த நேரத்தில் தான் மேலே அருண் ஷோரி சுட்டிக் காட்டிய வசனம் வருகிறது.

"அந்த இணை கற்ப்பிப்போரை கண்ட இடத்தில் கொல்லுங்கள்.அவர்களைப் பிடியுங்கள். அவர்களை முற்றுகையிடுங்கள்.ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களுக்காக காத்திருங்கள்.அவர்கள் திருந்திக் கொண்டு தொழுகையை நிலை நாட்டி ஏழை வரியையும் கொடுத்தால் அவர்கள் வழியில் விட்டு விடுங்கள். இறைவன் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையவன்.

குர்ஆன் - 9 : 5

இது போன்ற ஒரு சூழ்நிலையில் யாரும் எடுக்கக் கூடிய ஒரு நிலைப் பாட்டைத்தான் குர்ஆனும் முஸ்லிம்களுக்கு கட்டளையாக இடுகிறது. இனி போர் சம்பந்தமாக வரும் வேறு வசனங்களையும் பார்ப்போம்.

"தமது உடன்படிக்ககைளை முறித்து இத்தூதரை (முகம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் யுத்தத்தைத் துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா?அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா?" -குர்ஆன் 9 :13

உடன்படிக்ககைளையும் முறித்து அவர்களாகவே போரைத் துவக்கியுள்ள நிலையில் முஸ்லிம்களை போர்டச் சொல்லி குர்ஆன் கட்டளை இடுகிறது.

"உங்களிடம் போருக்கு வருவோருடன் இறைவனின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! இறைவன் வரம்பு மீறுவோரை நேசிக்க மாட்டான்" - குர்ஆன் 2 :190

போரில் வரம்பு மீறக் கூடாது என்று முஸ்லிம்களுக்கு குர்ஆன் கட்டளை இடுகிறது.

"எங்கள் இறைவன் அல்லாஹ்வே" என்று கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப் பட்டனர் மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திரா விட்டால் மடங்களும் ஆலயங்களும் வழிபாட்டுத் தலங்களும் இறைவனின் பெயர் அதிகமாக துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப் பட்டிருக்கும்." - குர்ஆன் 22 :40

இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்துக்காக வீட்டை விட்டு முஸ்லிம்களை வெளியேற்றுகின்றனர். அந்த அநியாயக் காரர்களை எதிர்க்க சொல்கிறது குர்ஆன். அடுத்து பள்ளிவாசல்களும் கோவில்களும் சர்ச்களும் பாதுகாப்போடு இருக்க பலப் பிரயோகமும் அவசியம் என்று சுட்டிக் காட்டப் படுகிறது.

"போரிலிருந்து விலகிக் கொள்வார்களானால் இறைவன் மன்னிப்பவன்: நிகரற்ற அன்புடையோன்:" குர்ஆன் - 2 :192

போரிலிருந்து விலகிக் கொண்டவர்களை துன்புறுத்தக் கூடாது என்றும் இதிலிருந்து விளங்குகிறது.

'எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொருப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!" என்று கூறிக் கொண்டிருக்கின்ற ஆண்களில் பலவினமானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக இறைவனின் பாதையில் போரிடாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?" - குர்ஆன் 4 : 75

முதியோர்கள் பெண்கள் சிறுவர் போன்றவர்களின் உயிர்கள் அநியாயமாக பறிக்கப் படக் கூடாது என்பதற்காகவே சில நேரங்களில் முஸ்லிம்களின் மீது போரை கடமையாக்கினான் இறைவன். அதைத்தான் இங்கு சுட்டிக் காட்டப் படுகிறது.

"முகம்மதே! அவர்கள் சமாதானத்தை நோக்கிச் சாய்ந்தால் நீரும் அதை நோக்கிச் சாய்வீராக! இறைவனையே சார்ந்திருப்பீராக! அவனே செவியுறுபவன்: அறிந்தவன்:" - குர்ஆன் 8 : 54

எதிரிகள் சமாதானத்தை விரும்பினால் போரை நிறுத்தி சமாதானத்தின் பக்கம் வர வேண்டும். தேவையற்ற உயிர்ப் பலிகள் தடுக்கப் பட வேண்டும் என்று இந்த வசனத்தில் கட்டளையிடுகிறான்.

"இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து இறைவனை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார்" - குர்ஆன் 2 : 256

"இணை கற்பிப்போரில் உம்மிடம் அடைக்கலம் தேடுவோர் இறைவனின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவர்களுக்கு அடைக்கலம் அளிப்பீராக!பின்னர் அவர்களை பாதுகாப்பான இடத்தில் சேர்ப்பீராக!அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்." - குர்ஆன் 9 : 6

"உங்கள் மார்க்கம் உங்களுக்கு! என் மார்க்கம் எனக்கு" என முகம்மதே கூறுவிராக" - குர்ஆன் 109 : 6

மேற் கண்ட மூன்று வசனங்களும் கட்டாய மத மாற்றத்தை தடை செய்கின்றன. முஸ்லிம் அல்லாதவர்கள் பாதுகாப்பு கோரினால் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் என்றும் இதன் மூலம் விளங்குகிறோம்.மத மாற்றத்துக்காக போர்கள் கூடாது என்பதும் இதிலிருந்து விளங்குகிறது.

'நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்!இல்லையேல் நீங்கள் செய்ததற்காகக் கவலைப் படுவீர்கள்.' -குர்ஆன் 49 :6

இந்த வசனம் மூலம் விளங்குவது நம் பக்கம் நியாயம் இருப்பதாக தோன்றினாலும் உடன் ஆயுதத்தை எடுக்கக் கூடாது என்று விளங்குகிறோம். முதலில் செய்தி உண்மைதானா அல்லது வதந்தியா என்று முதலில் ஆராய வேண்டும். அரசு மூலம் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க முயற்ச்சிக்க வேண்டும். இதிலெல்லாம் எந்த பிரயோசனமும் இல்லை என்ற நிலை வரும் போது மட்டும் தான் ஆயுதத்தை நாம் எடுக்கலாம்.

'அல்லாஹ் தடை செய்துள்ள உயிர்க் கொலையை தக்க காரணமினறி செய்யாதீர்கள்.' -குர்ஆன் 17 :33

தக்க காரணமின்றி அநியாயமாக அப்பாவிகளைக் கொல்வதை மேற்கண்ட வசனம் தடுக்கிறது.

காபிர்கள் என்று குர்ஆனில் பல இடங்களில் வருகிறதே?

காபிர் என்ற வார்த்தை குப்ர் என்ற வார்த்தையிலிருந்து பிறந்தது. குப்ர் என்ற வார்த்தைக்கு ஏற்க மறுத்தல் என்று தமிழில் பொருள் வரும் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்காத அனைவரும் காபிர்கள் என்று அழைக்கப் படுவர். இது எதும் அவமானகரமான வார்த்தைப் பிரயோகம் ஒன்றும் அல்ல.காபிர் என்ற வார்த்தையை தமிழ்ப் படுத்தினால் இணை வைப்பவர் அதாவது இறைவனுக்கு இணை வைப்பவர் என்ற பொருளில் வரும்.எனவே இதை ஒரு வித்தியாசமாக பார்க்கத் தேவையில்லை. மேலும் பல விபரங்களை அடுத்தப் பதிவில் பார்ப்போம் இறைவன் நாடினால்.