Followers

Tuesday, November 22, 2022

விடைதேடும் வினாக்கள்

 விடைதேடும் வினாக்கள்


கோவை கார் சிலண்டர் வெடிப்பு


வைகறையின் கள ஆய்வு


கடந்த 23ம் தேதி அதிகாலை 4.05 அல்லது 4.30 மணியளவில் கோயம்புத்தூர், கோட்டை மேடு ஈஸ்வரன் கோயில் அருகில் TN 01 F 8163 எண்ணுள்ள மாருதி 800 (பொள்ளாச்சியை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான) காரில் இருந்த சிலிண்டர் வெடித்தது. காரை ஓட்டி வந்தவரின் உடல் கொஞ்சம் கருகிய நிலையில் காருக்கு வெளியில் கிடந்தது. உடனடியாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.


கார் வெடிப்பு 6 தனிப்படைகள் அமைப்பு என்ற செய்தி (போலீஸ் செய்தி) கேட்டவுடன் நாங்கள் (வைகறை நிருபர்கள்) ஒரு முடிவுக்கே வந்து விட்டோம். நிச்சயமாக இது ஒரு அரசியல் நகர்வு. 1998 போல மீண்டும் பிஜேபியை ஆட்சிக்கு கொண்டு வரவும், திமுக ஆட்சியை கலைக்கவும் திட்டமிட்டு செய்யப்பட்ட ஏற்பாடு. வழக்கம்போல பலியாடுகள் முஸ்லிம்கள் தான் என்று.


கார் வெடித்த நிமிடம் முதல் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கும் நொடி வரை செய்திகள் அனைத்தும் வழங்குவது போலீஸ்தான். ஏனெனில் அத்துனை ஆதாரங்களையும் போலீசார் மிக சாமர்த்தியமாக அவர்கள் கைகளில் கொண்டு சென்று விட்டனர். ஆம். அந்தப் பகுதியிலுள்ள 22 சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை அல்ல ஹார்ட் டிஸ்க்கையே கொண்டு சென்று விட்டனர். யார் கைகளிலும் கிடைத்துவிடக் கூடாதென்று!


முதல் செய்தி : ஈஸ்வரன் கோயில் அருகிலுள்ள (Speed Breaker) வேகத்தடையில் ஏறி இறங்கியதால் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து கார் சிதறியது. காரை ஓட்டி வந்தவர், காருக்கு வெளியே (தூக்கி வீசப்பட்டு) இலேசாக கருகிய நிலையில் பிணமாக கிடந்தார்.


நாங்கள் விபத்து நடந்த இடத்திற்கு சென்றபோது எந்த செய்தியாளரும் சம்பவ இடத்தை பார்வையிட அனுமதிக்கப்படவில்லை. காரையும், எரிந்த உடலையும் அப்புறப்படுத்திய பிறகே செய்தியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆக மொத்தத்தில் அங்கிருந்த ஆதாரங்கள் அனைத்தும் மிக கவனமாக அழித்துள்ளனர்.


அந்தக் காரிலிருந்து இலேசாக கருகிய நிலையில் இரண்டு வீட்டு உபயோக சிலிண்டர்கள் ஆணிகள், கோலி குண்டுகள் சிதறி கிடந்ததாகவும் இது திட்டமிடப்பட்ட சதிச்செயலாக இருக்கக்கூடும் என்றும் போலீசார் தெரிவித்தனர். வெடித்ததாக சொல்லப்பட்ட கார் உடனே அப்புறப்படுத்தப்பட்டது.


இரவு 8 மணிக்கு தான் இறந்தவர் யார் என போலீசார் அறிவித்தனர். அவர் பெயர் ஜமேஷா முபீன். கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர். இச்சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக காணாமல் போனவர்.


கோவை மாவட்ட காவல்துறை ஆணையர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்:


அந்தப் பேட்டியின் போது ஒரு நிருபர், "இறந்து போனவரின் உடலிலிருந்து கெரோசின் வாடை வந்ததாக சொல்லப்படுகிறதே? அவர் எரிக்கப்பட்டாரா” என்ற கேள்விக்கு, “உங்கள் கற்பனைக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” என்று எழுந்து சென்று விட்டார். ஆனால் அந்த காருக்குள்ளே ஒரு கெரோசின் கேன் இருந்தது.


இவரின் வீடு சோதனைக்குள்ளாக்கப்பட்டது. 75 கிலோ எடையுள்ள மிகவும் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் (Pentaerythritol tetranitrate (PETN) and Nitroglycerin) கைப்பற்றப் பட்டதாகவும் போலீசார் மற்றும் என்.ஐ.ஏ அறிவித்தனர். இந்த வெடிபொருட்கள் Flipkart, Amazon போன்ற இணையதளங்கள் வாயிலாக வாங்கியதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேற்சொன்ன வெடிபொருட்களை பொதுமக்கள் யாரும் அவ்வளவு எளிதாக வாங்க இயலாது என்றும் சொல்லப்படுகிறது. (The Times of India Dt.31.10.22)


பிரேத பரிசோதனைக்குப் பிறகு ஜமேஷா முபீன் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடல் அடக்கம் செய்யப்பட்டது.


இவனுடைய நண்பர்கள் என தல்ஹா, அசாருதீன், நியாஸ், ஃபெரோஸ், ரியாஸ் ஆகியோரை கைது செய்து UAPA சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர் போலீசார். இது எல்லாமே அவசரகதியில் நிகழ்த்தப்பட்டது!!


நாம் இவரது குடும்பத்தாரை பேட்டி கண்டதில் கிடைத்த தகவல்கள்:


ஜமேஷா முபீன் பி.இ. இன்ஜினியரிங் படித்த பட்டதாரி. புத்தக கடையில் வேலை பார்த்து வந்தவர். சொற்ப வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்தவர். வாய் பேசாத காது கேளாத மார்க்க கல்வி கற்ற ஒரு பெண்ணை தன்னுடைய வாழ்க்கைத் துணைவியாக தேர்ந்தெடுத்தார். ஒரு சைக்கிள் மட்டுமே இவருக்கு சொந்தமானது.


கார் பைக் என எதுவும் கிடையாது. கார் ஓட்டத் தெரியாது. எங்காவது மனைவி மற்றும் குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்வதானால் தன்னுடைய மைத்துனரிடத்தில் பைக் இரவல் வாங்குவார். இவர் கார் ஓட்டியதை இதுவரை யாரும் பார்த்ததேயில்லை.


கண் பார்வை தெளிவாக தெரியாது. ஆறு மாதத்திற்கு முன்பு தான் கண் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த அறுவை சிகிச்சைக்கு தேவையான பணம் நண்பர்கள் வசூல் செய்து தந்ததே! கண்ணை சுருக்கி தான் பார்ப்பார். ஐந்து வேளை தொழுவார். குர்ஆன் ஓதுவார். இதுதான் இவரிடத்தில் உள்ள சிறப்பம்சங்கள். கடந்த 2019ம் ஆண்டு என்.ஐ.ஏ இவரை விசாரணைக்கு அழைத்துச் சென்று இவர் மீது எந்த வழக்கும் பதியாமல் விட்டுவிட்டதற்கான காரணம் மடியில் கனம் இல்லை.


கடந்த ஓராண்டாகவே இவருக்கு சரியான வருமானமில்லை. பழைய இன்ஜினியரிங் புத்தகங்களை வாங்கி விற்பனை செய்திருக்கிறார். கடந்த ஒரு மாதமாக இவருடைய செல்போன் ஸ்டேடஸ்ஸில் இன்ஜினியரிங் புத்தகங்கள் தான் இருந்துள்ளன.


இரண்டு சிசிடிவி வீடியோக்களை போலீசார் வெளியிட்டனர். அதில் ஒரு வீடியோ:


ஒரு கார் பிகே செட்டி வீதியிலிருந்து வந்து வலப்புறமாக ஈஸ்வரன் கோயில் வீதியில் திரும்பி கொஞ்ச தூரம் சென்றவுடன் வீடியோ அதிர்கிறது.


இரண்டாவது வீடியோ: ஜமேஷா முபீன் வீட்டிலிருந்து நான்கு பேர் (ஜமேஷா முபீன் உட்பட) ஒரு பெரிய சாக்கு மூட்டையை எடுத்துச் செல்கின்றனர். இது குறித்து நாம் முபீன் மைத்துனரிடம் கேட்ட போது,


“இதுவரை இரண்டு வீடுகள் மாறிவிட்டார் என் மச்சான். அவ்வாறு வீடு மாறும்போது என்னையும் என் நண்பர்களையும் உதவிக்கு அழைப்பார். கடைசியாக இந்த வீடு மாறிய போதும் என்னை அழைத்தார். நானும் எல்லா பொருட்களையும் (அட்டை பெட்டி பெட்டியாக) எடுத்துச்சென்றபோது அந்த வீட்டு உரிமையாளர், “இந்த பெட்டியில் என்னதான் உள்ளது?” என கேட்டார். நான் என் மச்சானிடம் கூட கேட்காமல் அந்த அட்டை பெட்டியை திறந்து காட்டினேன். அதில் புத்தகங்கள் தான் இருந்தன என்றார்".


ஜமேஷா முபீனுடைய உடலுடைய (லேசாக கருப்படித்த ஆனால் எரியாத, வெந்து போகாத, வெடிக்காத) ஃபோட்டோ இவனுடைய மனைவியிடத்தில் காட்டி போலீசார் கேட்ட போது இது யார் என தெரியாது என இவர் மனைவி சைகை காட்டியுள்ளார். முபீனுடைய உடல் (ஜனாஸா) என போலீசாரால் கொடுக்கப்பட்ட உடலின் உயரம் 5.75.அடி. ஆனால் உண்மையில் முபீனுடைய உயரம் 5.25. அடி என்றார் அவர் உறவினர்.


கிட்டத்தட்ட இச்சம்பவத்தின் பிண்ணணியில் ஏகப்பட்ட அரசியல் உள்ளது.


இந்தக் கார் சம்பவத்தை 1998ம் ஆண்டு குண்டுவெடிப்புடன் ஒப்பிட்டு மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாகவும் தினத் தந்தி போன்ற சேனல்களில் டாக்குமென்ட்டிரிகள் வெளிவந்தன. ஒரு விதத்தில் நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஏன் தெரியுமா? 1998ம் ஆண்டு குண்டுவெடிப்பினால் பயனடைந்தவர்கள் பிஜேபியினர். ஆம். மத்தியில் ஆட்சியை கைப்பற்றினார்கள். ஆக ஒரு குண்டுவெடிப்போ அல்லது ஒரு கலவரமோ நடத்தினால் நிச்சயமாக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் அல்லது ஆட்சியை கைப்பற்றலாம் என்பது தான் பிஜேபியின் அஜெண்டா. நிச்சயமாக அந்த நோக்கத்திற்காக நடத்தப்பட்டது தான் இந்த கார் வெடிப்பு சம்பவமாக இருக்கக்கூடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.


விடை தேடும் வினாக்கள்..!


1. கஞ்சிக்கே வழியில்லாதவர் (ஜமேஷா முபீன்) கார் வாங்கினாரா?


2. கார் ஓட்டத் தெரியாதவரை இதுவரை அவர் (ஜமேஷா முபீன்) கார் ஓட்டி யாருமே பார்த்ததேயில்லையாமே அவர் மனைவி உட்பட! நிலைமை இப்படியிருக்க காரை உண்மையிலேயே ஓட்டியது யார்?


3. உண்மையிலே முபீன் கார் ஓட்டி வரும் சிசிடிவி பதிவுகள் ஏதும் உண்டா?


4. இந்த சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே ஜமேஷா முபீனை காணவில்லை! அவர் எங்கிருந்தார் அந்த இரண்டு நாட்களாக? கார் எங்கிருந்து புறப்பட்டது, கோவையில் எந்த வழியாக நுழைந்தது என்ற பதிவுகள் ஏதும் உண்டா?


5. கார் வெடித்ததா? ஒரேயொரு சிசிடிவி பதிவு தான் உள்ளது! அதுவும் கார் செல்வது போல்தானே உள்ளது? உண்மையிலே அது வெடித்திருந்தால் வெடித்த இடத்திற்கு அருகாமையில் உள்ள போத்தீஸ் குடோவுன் கேமரா பதிவு செய்திருக்கும், அந்த பதிவுகள் சொல்வது என்ன? அது 24 மணி நேரமும் தெள்ளத் தெளிவாக காட்டக் கூடிய கேமராவாச்சே?


6. காரின் பின்பக்க சிசிடிவி பதிவுகளை மட்டுமே வெளியிட்டுள்ளீர்கள். காரின் முன்புறம் (யார் காரை ஓட்டி வருகிறவர்) உள்ள சிசிடிவி பதிவுகளை ஏன் வெளியிடவில்லை? அதை வெளியிட்டால் உண்மையில் யார் காரை ஓட்டி வந்தார் என்பது தெரிந்துவிடும் அல்லவா?


7. ஈஸ்வரன் கோயில் வாயிலில் (இரவு காவலுக்காக) எப்போதுமே ஒரு போலீஸ் அமர்ந்திருப்பார். அன்று மட்டும் 3:30 மணிக்கு அவர் சென்றுவிட்டதாக கமிஷனர் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார்? அப்படியானால் அவருக்கு இது முன்கூட்டியே தெரியுமா?


8. சிலிண்டர் வெடித்துத்தான் கார் சிதறியது இல்லையா? வெடித்த சிலிண்டரின் ஒரு சின்ன பாகத்தை கூட காண முடியவில்லையே! ஏன்?


9. வெடித்ததில் கார் துண்டுதுண்டாக சிதறியது. ஆனால் ஜமேஷா முபீன் என்று கூறப்படும் நபர் மட்டும் (சுண்டு விரல் கூட உடையாமல்) காருக்கு வெளியில் லேசாக கருகிய நிலையில் கிடந்தார்.


இதென்ன மர்மம்? முடிச்சு அவிழுமா?


10. எல்லா சம்பவங்களிலும் சிசிடிவி பதிவுகளை மட்டும்தான் போலீஸ் கேட்டுப் பெறும். ஆனால் இந்த சம்பவத்தில் அந்த பகுதியில் உள்ள அத்துனை சிசிடிவியின் ஹார்டு டிஸ்க்கை எடுத்துச் சென்றுவிட்டது போலீஸ். ஆக யார் கையிலும் எதுவும் கிடைத்து, உண்மை வெளிவந்துவிடக் கூடாது என்பதனாலா என்று மக்கள் கேட்கிறார்கள்?


11. தற்கொலைப்படை தாக்குதல் நடத்துபவர்கள் தங்கள் உடலில் உள்ள ரோமங்களை அகற்றி விடுவது வழக்கம் என்று புதிதாக ஒரு செய்தி வந்துள்ளது!! அப்படி எத்துணை தற்கொலைப்படை தாக்குதல்களை இந்த செய்தி நிறுவனம் கண்டுள்ளது என்ற செய்திகளை வெளியிட முடியுமா?


நாங்கள் சொல்கிறோம். இதற்கு முன் தற்கொலைப்படை தாக்குதல் என்று என்.ஐ. ஏ.வால் வர்ணிக்கப்பட்ட தாக்குதலின் விவரத்தை ஆதாரத்துடன் தருகிறோம்.


2017ம் ஆண்டு காஷ்மீரில் ஆதில் அகமது என்ற 19 வயது சிறுவன் காணாமல்போகிறான். 2019ம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஒரு மிகப்பெரிய அசம்பாவிதத்தை நடத்தி மக்களின் கவனத்தை திசை திருப்புவார்கள் என தி ஹிந்து நாளிதழ் 2018ம் ஆண்டு எச்சரிக்கின்றது. அதற்கேற்றார்போல் ஐபியும் ஒரு மிகப்பெரிய தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக சொல்கிறது. 2019ம் ஆண்டு சொல்லி வைத்தாற்போல் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் செக்போஸ்ட் அருகே 350 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடி பொருட்களுடன் ஒரு வேன் வெடித்தது. வேனை ஓட்டி வந்தவன் துண்டுதுண்டாக சிதறிப்போனான். அவன்தான் ஆதில் அகமது என பாதுகாப்புப்டையினர் அறிவித்தனர். இதனை தற்கொலைப்படை தாக்குதல் என அறிவித்தனர். தி ஹிந்து நாளிதழ் சொன்னது போலவே நடந்தது. 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பிஜேபியினர் வெற்றி பெற்றனர்.


கிட்டத்தட்ட தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற கோவையை நுழைவாயிலாக ஆக்கிக் கொள்ள பா.ஜ.க.வினர் முயற்சித்துள்ளனர். ஆனால் இங்குள்ள இந்து முஸ்லிம் உறவுகளுக்கு முன்னால் இவர்களின் எல்லாவகையான சதித் திட்டங்களும் தவிடுபொடியாகி விடுகின்றன.


நிச்சயமாக தமிழகத்தில் இவர்களின் அரசியல் சித்துவிளையாட்டுக்கள் எடுபடாது.


"நியாயமின்றி ஓர் ஆன்மாவை கொலை செய்தவன், ஒட்டுமொத்த சமுதாயத்தையே கொலை செய்தவனுக்கு ஒப்பாவான்” என்ற குர்ஆன் வசனத்தை படித்த முபீன் இந்த சதியை அரங்கேற்றியிருக்க மாட்டான் என்ற உண்மையை மக்கள் உணர்வார்கள்.


இந்த கார் எரிப்பை செய்தவர்கள் யார் என்ற உண்மையை இறைவன் நிச்சயம் வெளிக்கொண்டு வருவான். சதிகாரர்கள் தோற்றுப்போவர்.


(நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. அசத்தியம் நிச்சயம் அழிந்தே தீரும்” என்று கூறுவீராக.


திருச்சியில் சதாம் ஹூசைன் வழக்கு NIA கீழ் தரப்பட்டபோது, அதை ஏற்க மறுத்துவிட்டது. அதனால் மாநில உளவுத்துறை அதிகாரி சுரேஷ் -இன் பெயர் நான்கு இடங்களில் இடம் பெற்றது.


இப்போது பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை யார், ஆளுநர் ஆகியோரின் அழுத்தங்களால் NIA -இடம் இந்த வழக்கு திணிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பா.ஜ.க.வினர் வென்றுவிட்டதாக நினைக்கின்றனர். இனி நமக்கு எல்லா அரசியல் இலாபங்களும் கிடைத்துவிடும் எனக் கருதுகின்றார்கள்.


அதனால் NIA என்ற தேசிய புலனாய்வு முகமை எல்லாக் கோணத்திலும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். நீதியை நிலைநாட்டிட வேண்டும். செய்யுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.


தொடக்க நாள்களில் NIA தொடங்கப்பட்டது, Saffron Terrorism என்ற காவித் தீவிரவாதத்தை தடுக்கத்தான் அல்லாமல் அதை பாதுகாப்பதற்கு அல்ல. இப்போது அப்படி ஒரு நிலை நிலவுகின்றது.


NIA கோவை சிலிண்டர் வெடி விபத்து வழக்கை விசாரிப்பவர்கள் The Hindu ஆங்கில இதழில் வந்த மிகவும் ஆதாரப்பூர்வமான இந்தச் செய்தியைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.


பெயர் சொல்லிட விரும்பாத, ஆனால் இந்த வழக்கோடு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி சொன்னார் :


இந்தக் கேஸ் சிலிண்டர் விவகாரத்தில் எந்த அமைப்பிற்கும் தொடர்பில்லை. The Hindu, Nov.2, 2022


இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தேசிய புலனாய்வு முகமை உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்திட வேண்டும்.


- கோவையிலிருந்து ஆசிஃப்


(வைகறை வெளிச்சம் நவம்பர் 2022 இதழில் விரிவாக கொடுத்துள்ளோம்)


இதுப்போன்ற தகவல்களுக்கு இணைந்திடுங்கள்... 


வைகறை வெளிச்சம் மாத இதழ்


ஆசிரியர்: மு.குலாம் முஹம்மது M.A., "வைகறை வெளிச்சம் ஆசிரியர் விடியல் வெள்ளி நிறுவுனர்"


ஆண்டு சந்தா: 480/-


தொடர்புக்கு: 8148129887, 8870960662

Monday, November 21, 2022

தண்ணீர் குடித்ததால் தீட்டாகி விட்டது

 

கர்நாடகா..

 

தலித்கள் பொது டேங்கில் தண்ணீர் குடித்ததால் தீட்டாகி விட்டது என்று கூறி மாட்டு மூத்திரத்தை டேங்கில் ஊற்றி தீட்டை கழித்ததை படித்தோம்.

 

இதனால் கோபமடைந்த தலித் இளைஞர்கள் கிராமத்தில் உள்ள அனைத்து தண்ணீர் தொட்டிகளிலும் சென்று நீர் அருந்தி புரட்சி செய்துள்ளனர்.

 

சங்கிகளின் ஆட்சியில் பொது மக்கள் நீர் அருந்துவது கூட பெரும் புரட்சியாக பார்க்கப்படுகிறது. அதுவும் 21 ஆம் நூற்றாண்டில்.

 

எப்படி இருந்த மாநிலம்!

 

தகவல் தொழில்நுட்பத்திலும், கல்வியிலும், சமூக பொருளாதாரத்திலும் தமிழ்நாட்டிற்கு கடும் போட்டியளித்த மாநிலம். என்றைக்கு சங்பரிவாரிடம் ஏமாந்தாங்களோ அன்றோடு மொத்தமும் போனது. இனியொரு பத்தாண்டுகளில் பீகார்,ம.பி ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்.




 

Saturday, November 19, 2022

மாட்டு மூத்திரத்தை கொண்டு வந்து சுத்தம் செய்து

 கர்நாடகா - சம்ரன்ஜ் நகர் தாலுகா


ஹெக்கோதரா கிராமம்..


18-11-2022 கடந்த வெள்ளியன்று இக்கிராமத்தில் தலித் குடும்பத்தினரின் திருமண வைபவம் நடைபெற்றது. திருமணம் முடிந்து விருந்து உண்டு விட்டு வந்த விருந்தினர்கள் பஸ் ஏற சிறிது தூரம் வந்துள்ளனர். அங்கு தண்ணீர் தொட்டி இருந்ததை பார்த்த ஒரு பெண் டேப்பை திறந்து தண்ணீர் அருந்தியுள்ளார். இதனை கண்ட மேல் சாதி இந்துக்கள் கூச்சலிட்டு ஊரை கூட்டி அந்த பெண்ணை சகட்டு மேனிக்கு திட்டி அனுப்பியுள்ளனர். அதன் பின்னர் தண்ணீர் தீட்டாகி விட்டது என்று கூறி டேங்கில் இருந்து முழு தண்ணீரையும் திறந்து விட்டுள்ளனர். அதன் பிறகு மாட்டு மூத்திரத்தை கொண்டு வந்து சுத்தம் செய்து தீட்டை போக்கியுள்ளனர்.


ஒரு மனிதன் வாய் வைத்து குடித்த தண்ணீரை அசுத்தமாகி விட்டது என்று மாட்டின் மூத்திரத்தை கொண்டு சுத்தம் செய்த இவர்களின் அறிவை என்னவென்பது? சனாதனம் இந்த மக்களை எந்த அளவு அரக்கர்களாக மாற்றியுள்ளது?


காசிக்கு சென்று 'ஹர ஹர மஹா தேவ்' என்று மோடிக்கு முன்னால் பாடிய இளையராஜாவுக்கு இந்த கொடுமையெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.











உலகத்தில் ஒரு சுவர்க்கம் இருக்குமென்றால்...


 


உலகத்தில் ஒரு சுவர்க்கம் இருக்குமென்றால் அந்த சுவர்க்கத்தில் தான் நான் இருந்தேன். அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக அனைத்தையும் தூக்கியெறிந்து விட்டு வந்தேன்” என்றார் சசி விஜேந்திரவாக இருந்து அவ்ப் ஹனீபாவாக வாழ்ந்து கொண்டிருக்கும் அன்பு சகோதரர் அவ்ப் அவர்கள்.

 

மாத்தளையில் வசித்து வரும், அவரை நேற்று மாலை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது தனது ஆரம்ப கால வாழ்வை பற்றி அவர் கூறிய வார்த்தைகள் தான் இவை.

 

ஆம், கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் இலங்கை சிங்கள சினிமா வரலாற்றில் யாரும் எட்ட முடியாத இதுவரையிலும் எட்டாத ஓர் உச்சத்தை தொட்டிருந்தவர் தான் நடிகர் சசி விஜேந்திர. முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தாலும், சினிமா மீது கொண்ட ஆசையினால் சினிமா துறைக்குள் நுழைந்து சிங்கள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வர்னிக்கப்பட்டவர் அன்றைய சசி விஜேந்திர. - அவ்ப் ஹனீபா

வெறும் 10 ஆண்டுகளில் 60 க்கும் மேற்பட்ட திறைப்படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றிப் படங்கள். புகழின் உச்சத்திற்கே சென்றார். தனக்காக நாடு முழுவதும், பல வெளிநாடுகளிலும் லட்சக் கணக்கான ரசிகர்களை பெற்றார். பிரபல நடிகருக்கான பல விருதுகளை பெற்றார். பல திறைப்படங்களுக்காக சிறந்த நடிப்பு, தயாரிப்பு, வசன எழுத்தாளர் என்ற பல விருதுகளை குவித்தார்.

நாடு முழுவதும் செல்லும் இடங்களிலெல்லாம் ரசிகர்களின் ஆரவாரம். கோடியில் ஒருவருக்கு கிடைக்கும் அனைத்தும் தனது 33 வயதுக்குள்ளாகவே பெற்றுக் கொண்டார்.

 

பணம், புகழ், செல்வாக்கு என எது வேண்டுமோ அனைத்தும் கிடைத்தது.

சிங்கள சினிமாவில் சசி விஜேந்திரவை தாண்டியோ, அவருக்கு நிகராகவோ எந்த நடிகரும் இவருடைய காலத்தில் இல்லை.

 

இப்படியொரு உச்சம் தொட்ட மனிதர் தனது திறைப்படங்களினால் கவரப்பட்ட தனது ரசிகை ஒருவரை திருமணம் செய்த சில நாட்களிலேயே அவருடைய வாழ்கை திசை மாறுகிறது.

 

ஆம், இஸ்லாத்தை புரிந்து ஏற்றுக்கொண்ட அந்த சகோதரி சசி விஜேந்திரவின் நடிப்பால் ஈர்க்கப்பட்டவர். திருமணத்தின் பின்னர் இஸ்லாத்தை மேலும் கற்றுக் கொள்வதற்காக இஸ்லாமிய வகுப்புக்களில் கலந்து கொண்ட பின், தன் கனவரின் சினிமா துறை இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டது என்பதை புரிந்து கொள்கிறார். இதை இஸ்லாம் அங்கீகரிக்க வில்லை என்பதை தெரிந்து கொண்டு தன் கனவருக்கு தினமும் அறிவுரை கூற ஆரம்பித்தார்.

 

10 வருடத்தில் 60 மேற்பட்ட வெற்றிப் படங்களை கொடுத்த சசி விஜேந்திரவுக்கு அல்லாஹ் ஹிதாயத்தை - நேர்வழியைக் கொடுத்தான்.

 

சினிமாத் துறையின் உச்சத்தில் இருந்தவர் தனது இளமையான 34 வயதிலேயே அத்துறையை விட்டும் முழுமையாக வெளியேறும் முடிவை எடுத்தார். தான் வாழ்வில் ஓடி ஓடி சம்பாதித்த அனைத்துப் பேர், புகழையும் தூக்கியெறிந்து இஸ்லாமே எனது வாழ்வு என முடிவெடுத்தார். சசி விஜேந்திர, - அவ்ப் ஹனீபாவாக மாறினார்.

 

தான் கடந்து வந்த பாதையை அவ்ப் ஹனீபா அவர்கள் விபரிக்கும் போது ஆச்சரியப்பட்டு யோசித்தேன்.

 

10 வருடத்தில் உச்சத்தை தொட்ட ஒரு மனிதன். தன்னைச் சுற்றி எப்போதும் ரசிகர்கள், ரசிகைகளை கொண்ட ஒருவர். எங்கு போனாலும் தன்னை தெரியாதவர் இல்லை எனும் அளவுக்கு அறிமுகமானவர். பேர், புகழ், பணம், அந்தஸ்து அனைத்தையும் இம்மார்க்கத்திற்காக துறந்தாரே... எப்படி முடிந்தது? அல்லாஹ்வின் கருணையும், அருளும் தான் அவரை நேர்வழியில் கொண்டு சேர்த்தது. - அல்ஹம்து லில்லாஹ்

 

இந்நாட்டின் மிகப் பெரும் புகழ்பெற்ற ஒருவரான சசி விஜேந்திரவா இவர் என்று யோசிக்கும் அளவுக்கு ஆடம்பரமற்று இருக்கிறார், அமைதியான தோற்றம். பண்பான மனிதர், நிம்மதியான வாழ்வை கழிக்கிறார். அல்ஹம்து லில்லாஹ்.

இன்றைய நாட்களில் சமூக வலைதளங்களில் சினிமாவுக்கும், வீனான காரியங்களுக்கும் பின்னால் சென்று வாழ்வை இழந்து கொண்டிருக்கும் இளைஞர்கள், இளம் பெண்களுக்கும் இவருடைய வாழ்க்கை அனுபவம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்.

 

சினிமாவுக்கும், போதைக்கும் அடிமையாகி வாழ்வை இழந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் இவருடைய அனுபவப் பகிர்வுகள் மாற்றத்தை கொடுக்க வாய்ப்பாக அமையும் இன்ஷா அல்லாஹ்.

 

பள்ளிவாயல் நிர்வாகங்கள் இவரை அழைத்து ஊர் மக்களுக்கு ஊரிலுள்ள ஆண்கள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்களுக்கென நிகழ்ச்சிகளை நடத்த முயற்சிக்க வேண்டும்.

 

பாடசாலை மாணவர்களுக்கு இவரை அழைத்து Motivation நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மாணவர் சங்கங்கள், ஊர் முக்கியஸ்தர்கள் முனைப்பெடுங்கள்.

இவருடைய அனுபவங்கள், இவர் கடந்து வந்த பாதை பலருக்கும் பலனளிக்கும். இன்ஷா அல்லாஹ்

 

இவர் பற்றிய விளக்க வீடியோ ஒன்றுடன் விரைவில் சந்திக்கிறேன். இன்ஷா அல்லாஹ்.

 

அன்புடன்,

ரஸ்மின் MISc

 

Monday, November 14, 2022

இஸ்லாமியர்களை மட்டும் ஏன் உலகமே இவ்வளவு எதிர்க்கிறது ?

 இஸ்லாமியர்களை மட்டும் ஏன் உலகமே இவ்வளவு எதிர்க்கிறது ? தயவுசெய்து சிறிது நேரம் செலவிடுங்கள் ஆச்சரியமான கட்டுரை.. ❤️*இஸ்லாம் பயங்கரவாதம் என்பதை எவ்வளவு சாமர்த்தியமாக உங்கள் இதயங்களில் பதிந்திருக்கிறார்கள்!


 -ரஞ்சித் லால் மாதவன்*


ரஞ்சித் லால் மாதவன் என்ற சகோதரர் , மலையாளத்தில் மிக அருமையான ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார்,


அதை வாசித்து கேட்டு அறிந்த உடன், தமிழில் இதை மொழிமாற்றம் செய்ய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது,


அதை நான் மொழிமாற்றம் செய்து இருக்கிறேன் சற்று நீண்ட பதிவுதான் என்றாலும் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய செய்தி அது உங்களுக்கு ரஞ்சித் லால் மாதவன் என்பவரிடமிருந்து ஒரு அழகான அறிவுரை!


உலகில் ஆண்டுக்கு 321 பில்லியன் டாலர் மதிப்பிலான போதைப்பொருள் வர்த்தகம் நடைபெறுகிறது


உலகில் மது விற்பனை ஆண்டுக்கு 1600 பில்லியன் டாலர்கள் நடைபெறுகிறது


இந்த உலகில் ஆண்டுக்கு சுமார் 100 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுத வர்த்தகம் நடைபெறுகிறது.


விபச்சார வணிகம் இந்த உலகில் ஆண்டுக்கு சுமார் 400 பில்லியன் டாலர் மதிப்புடையது.


சூதாட்ட வணிகம் இந்த உலகில் ஆண்டுக்கு சுமார் 110 பில்லியன் டாலர்கள் நடைபெறுகிறது. 


தங்க வணிகம் இந்த உலகில் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர்கள். 


கம்ப்யூட்டர் கேம் வணிகமானது உலகில் ஆண்டுக்கு $54 பில்லியன் ஆகும். 


ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் 2380 பில்லியன் டாலர் வணிகத்திற்கு எதிராக இஸ்லாம் நிற்கிறது! 


(மது, போதை, விபச்சாரம், சூதாட்டம் இவை அனைத்தும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை, தடை செய்யப்பட்டுள்ள செயல்களாகும்)


1 பில்லியன் டாலர் என்றால் 7000 கோடி ரூபாய்

2380 பில்லியன் டாலர்கள் என்றால் = 1,66,60,000 கோடி ரூபாய் (ஒரு கோடியே 66 லட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய்). 


2017ல் அருண் ஜேட்லி வெறும் 336 பில்லியன் டாலர் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.. மேற்கண்ட ஒவ்வொரு தொழில்களும் தனியார் கார்ப்பரேட் முதலாளிகளால் நடத்தப்படுகிறது.


மது, சாராயம், போதைப்பொருள் வியாபாரம் கூடாது என்ற இஸ்லாமியக் கொள்கையை உலகம் ஏற்றுக்கொண்டால் ஏற்படும் விளைவு நஷ்டம் 2000 பில்லியன் டாலர் போதைப்பொருள் மாஃபியாவின் வியாபாரம்! 


பூமியில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் பெட்ரோலுக்காக பிற நாடுகள் மீது படை எடுத்து, அப்பாவி மக்களைக் கொல்லாமல், ரத்தம் சிந்தாமல் இருந்தால், 100 பில்லியன் டாலர் ஆயுத மாஃபியாவின் வியாபாரம் முடிவுக்கு வந்துவிடும் இஸ்லாமிய சட்டம் ஒழித்துவிடும்! 


விபச்சாரத்தில் ஈடுபடக் கூடாது என்ற இஸ்லாமிய கொள்கை அமலுக்கு வந்தால் விபச்சார மாஃபியாவின் 400 பில்லியன் டாலர் வியாபாரம் முடிவுக்கு வரும்!


ஆபாச வீடியோக்கள் பார்ன் வெப்சைட்டுகள் பாதிக்கப்படும். 


சூதாடக்கூடாது என்ற இஸ்லாமியக் கொள்கையை உலகம் ஏற்றுக்கொண்டால், சூதாட்ட மாஃபியாவின் 110 பில்லியன் டாலர் வியாபாரம் முடிவுக்கு வரும்! 


ஒரு பெண்ணின் நிர்வாணம் மட்டுமே அவளது தனியுரிமை, அது கண்காட்சி அல்ல என்ற இஸ்லாமியக் கொள்கையை உலகம் ஏற்றுக்கொண்டால், 100 பில்லியன் டாலர் ஆபாச மாஃபியாவின் வியாபாரம் முடிவுக்கு வரும்! 


இந்த 2300 பில்லியன் டாலர் வர்த்தகத்தின் மீது போர் தொடுத்தது இஸ்லாம்தான்.. 


அந்த இஸ்லாத்தை  எதிர்க்காமல் வரவேற்கவா செய்வார்கள். 


இஸ்லாமிய பயங்கரவாதியாக ஆக்க உலக ஊடகங்களை இந்த மாஃபியாக்கள் விலைக்கு வாங்கி, இந்த மாஃபியாக்கள் வீசிய எலும்புத்துண்டுகளை தின்று ஊடக மாஃபியா வளர்ந்து செழித்திருக்கிறது.  


இஸ்லாம் தீவிரவாதம் என்று பாடி நாடு முழுவதும் ஊர்வலம் சென்றனர்.  இந்தப் பணத்தைக் கொண்டு தீவிரவாதத்தை வளர்த்தார்கள்.  


இந்த மாஃபியாக்கள் உருவாக்கும் பயங்கரவாதம் இஸ்லாமிய பயங்கரவாதம் எனப்படுகிறது!  


இஸ்லாம் தீவிரவாதம் என்று அனைவரும் ஒரே குரலில் சொன்னார்கள்.  அதற்காக இந்த பில்லியன் டாலர்களைக் கொண்டு அவர்களே சில முஸ்லிம்களை விலைக்கு வாங்கினார்கள். 


ஒருவரைக் கொல்வது எல்லா மக்களையும் கொல்வதற்கு சமம் என்று சொன்ன இஸ்லாம், தீவிரவாதத்தின் மதமாக மாறியது!


உங்கள் கண்களும் இதயங்களும் மதவெறியால் குருடாக்கப்படவில்லை என்றால், உங்கள் கண்களைத் திறந்து, உங்கள் இதயத்தைத் திறந்து கேளுங்கள்.. உங்கள் இறைவனின் வார்த்தைகளிலிருந்து எவ்வளவு திறமையாக அவர்கள் உங்களை விலக்கி கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை. 


.இஸ்லாம் பயங்கரவாதம் என்பதை எவ்வளவு சாமர்த்தியமாக உங்கள் இதயங்களில் பதிந்திருக்கிறார்கள்! 


உண்மையில், மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான் - திருக்குர்ஆன்!


- ரஞ்சித் லால் மாதவன்


தமிழில் : Shajahan Sahib.

Wednesday, November 09, 2022

திப்புசுல்தான் 1750 – 1799

 திப்புசுல்தான் 1750 – 1799

இன்று (நவம்பர் 10) திப்புசுல்தான் பிறந்த தினம் (திப்பு நவம்பர் 20 அன்று பிறந்தார் என்றும் தகவல் உள்ளது)
மைசூர்ப் புலி திப்பு சுல்தான் ஒரு தொலைநோக்குச் சிந்தனையாளர். அவர் ஆங்கிலேயரைக் குலை நடுங்கச் செய்தவர் மட்டும் அல்ல. ஒரு சீரிய மதச்சார்பற்ற ஆட்சியாளராகவும் சமூக சீர்திருத்தப் புரட்சியாளராகவும் விளங்கினார்.
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், தேவனஹல்லி கிராமத்தில் 1750, நவம்பர் 10-ஆம் நாள் பிறந்த திப்பு பல்வேறு போர்க்கலைகளை முறையாக தனது தந்தையிடம் பயின்றார்.
திப்பு சுல்தானின் வீர தீர சாகசங்கள் அனைவரும் அறிந்ததே. 1782-இல் தந்தை ஹைதர் அலி மறைவுக்குப் பின் மைசூருக்கு மன்னராகிய திப்புவின் மதச்சார்பற்ற ஆட்சி மற்றும் சமூக சீர்திருத்த நடவடிக்கைகள் அதிகம் அறியப்படாதவை.
திப்பு தனது ஆளுகையின் கீழ் உள்ள கோயில்களுக்குத் தாராளமாக மானியங்களை வழங்கினார். பட்டியல் இதோ
# கி.பி.1786 மேலக்கோட்டை நரசிம்மசாமி
கோயிலுக்கு தங்க, வெள்ளி ஆராதனைப் பாத்திரங்கள், பாரசீக மொழிப் பட்டயம் ஆகியவற்றுடன் 12 யானைகளும் பரிசாக வழங்கினார். நாராயணசாமி கோவிலுக்கும்,கந்தேஸ்வரசாமி கோவிலுக்கும் ரத்தின ஆராதனைத் தட்டுக்கள் வழங்கினார்.
# நஞ்சன் கூடுவில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர்
ஆலயத்திற்கும் மரகதலிங்கம் வழங்கினார். அதன் பெயர் இன்றும் ‘‘பாதுஷாலிங்கம்” என்று வழங்கப்படுகின்றது.
# குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கும்
அக்கோவிலைச் சுற்றியுள்ள நிலவரி வசூல் செய்யும் உரிமையை தானம் வழங்கினார்.
# கி.பி.1790-ல் காஞ்சிபுரம் கோவிலுக்கும் 10,000 வராகன் நன்கொடை வழங்கினார்.
# மைசூரில் உள்ள தொன்னூரில் இராமனுஜகுளம் துார்வாரி செப்பனிடப்பட்டார் திப்பு.
பாபாபுதன்கிரி என்ற தத்தாத்ரீயபீடம்
மடத்திற்கும் இருபது சிற்றூர்கள் இனாமாகவும், புஷ்பகிரி மடத்திற்கு இரண்டு கிராமங்கள் மானியமாகவும் திப்பு வழங்கினார்.
# சிருங்கேரி மடத்தில் ஹைதர் அலியின்
சனதுகள் (Grand) மூன்றும் திப்பு சுல்தானில் சனதுகள் முப்பதும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
# கி.பி. 1793-ல் சங்கராச்சாரியார் சச்சிதானந்த பாரதிக்கு திப்பு சுல்தான் எழுதிய கடிதம் இன்றும் மைசூர் நூலகத்தில் உள்ளது. இந்நூலகத்தில் ஹிந்துக் கோயில்கள் பலவற்றுக்கு திப்பு வழங்கிய மானியங்கள் பற்றிய அரசு ஆணைகள் பல உள்ளன.
__________________________________
சாரதாதேவி பீடம் மீட்டார்
__________________________________
கி.பி 1771-1772க் கிடையில் மராட்டியர்களுடன்
ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் பல போர்க்களங்களில் மோதி வெற்றி பெற்றனர். கொள்ளையர்களான மராட்டியர் சாரதா தேவி சிலையை (அன்றைய மதிப்பே 60 லட்சம் பொன்!) கொள்ளையடித்து “பரசுராம் பாகுவே" தலைமையில் சென்ற போது அவர்களை விரட்டியடித்து அச் சிலையைத் திரும்பக் கொணர்ந்து சிருங்கேரியில் நிறுவச் செய்த பெருமை திப்புசுல்தானையே சாரும்!
-_____________
# சமூக நீதி
# மக்கள் தொகை அடிப்படையில் மானியம்
__________________________________________________________
திப்பு ஆட்சி செய்த மைசூர் பகுதியில் 90 சதவீதம் ஹிந்துக்களும், 10 சதவீத முஸ்லிம்களுமே வாழ்ந்தனர். ஒரே ஆண்டுமட்டும் ஹிந்து கோயில்களுக்கும், அறநிறுவனங்களுக்கும் 1,93,959 வராகன்களும், பிராமண மடங்களுக்கு என 20,000 வராகன்களும் ஆக மொத்தம் 2,33,959 வராகன்களை திப்பு வழங்கினார்.
ஆனால் முஸ்லிம் நிறுவனங்களுக்கு 20,000 வராகன்கள் மட்டுமே வழங்கப்பட்டன. திப்புவின் கருவூலத்திலிருந்து அறநிறுவனங்களுக்கு மத ரீதியான மக்கள் தொகை விழுக்காட்டின் அடிப்படையில் சமநீதியுடன் வழங்கிய முதல் இந்திய மன்னன் திப்பு சுல்தான் மட்டுமே.
ஆதாரம் (கி.பி. 1798 MYSORE GEZETER பக்கம் 38. VOL IV 1929)
_______________
சீர்திருத்தம்
______________
மலபார் பகுதியில் பெண்கள் மேலாடையின்றி இருந்த பழக்கத்தை மாற்றி உயிர்-உயர் மானங் காக்க மேலாடை அணியும் பழக்கத்தை உருவாக்கினார் மாவீரன் திப்பு.
இதே போல் குடகு பகுதியில் ஒரே பெண்ணைப் பல ஆண்கள் மணந்து கொள்ளும் பழக்கத்தைச் சட்டம் இயற்றி தடுத்தார் திப்பு.
திப்புசுல்தான் மைசூரில் நரபலியையும், கோயில்களின் தேவதாசி முறையையும் ஒழிக்கச் சட்டம் இயற்றினார்.. மதுவிலக்கை முழுமையாக அமலாக்கினார்.
மத ஒற்றுமையும், மதுவிலக்கும் திப்பு சுல்தானின் இரு கண்களாக இருந்தன.
பிரமிக்கத்தக்க வகையில் அனைத்து மக்களையும் அரவணைத்து மதச்சார்பற்ற சமூக நீதி ஆட்சியை நடத்திய திப்புவை கண்டு அன்று ஆங்கிலேயர்கள் அஞ்சினார்கள். அவரை பற்றி அவதூறான வரலாறுகளை எழுதினார்கள்.
இன்றோ மதச்சார்பின்மையையும் சமூக நீதியையும் எதிர்ப்பவர்கள் மதச்சார்பற்ற சமூக நீதி ஆட்சியை நடத்திய திப்புவை இந்தியாவை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களின் வழியில் வெறுக்கின்றார்கள்.
(ஆதாரம்: Tipu Sultan The Great – Dr. P.Chinnaian
Vision of Tipu Sultan Tiger of Mysore – Dr. Sheik Ali
The Immortals - Syed Naseer Ahamed
மத நல்லிணக்கம் காத்த மாவீரன் திப்பு சுல்தான் - எம் கே ஜமால் முஹம்மது)



Sunday, November 06, 2022