Followers

Thursday, October 31, 2019

மக்களே உஷார். திருடர்கள் ஜாக்கிரதை....

மக்கள் உழைத்து சம்பாதித்து தங்கத்தில் முதலீட்டை போட்டு வைத்திருப்பர். இனி மோடி அரசு அதற்கும் ஆப்பு வைக்க தொடங்கியுள்ளது. ரஷீது இல்லாமல் நீங்கள் நகைகளை வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும். அதை காரணமாக வைத்து கைது கூட செய்யலாம்.
ரிசர்வ் வங்கி கையிருப்பில் இருந்த நகையை எல்லாம் மோடி அரசு எடுத்து விட்டது. இனி பொது மக்கள் தலையில் கை வைக்கப் போகிறார்கள்!
மக்களே உஷார்.
திருடர்கள் ஜாக்கிரதை....


Wednesday, October 30, 2019

மோடி அரசின் நாடகத்தில் நான் பங்கேற்கமாட்டேன்....

“காஷ்மீரில் பாசாங்கு செய்யும் மோடி அரசின் நாடகத்தில் நான் பங்கேற்கமாட்டேன்” : ஐரோப்பிய எம்.பி. ஆவேசம்!
பல தலைவர்கள் இன்னும் வீட்டுச் சிறையில் இருப்பதாகவும், சிறுவர்களைக் கூட சிறையில் அடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், காஷ்மீரின் கள நிலவரம் பற்றி அறிவதற்காக, ஐரோப்பிய கூட்டமைப்பை சேர்ந்த 27 எம்.பி.க்கள் இந்தியாவுக்கு வந்துள்ளனர்.
அவர்கள் காஷ்மீர் பகுதியில் உள்ள மக்களிடம் உரையாட இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்தியாவில் உள்ள முக்கிய எதிர்கட்சி தலைவர்கள் மற்றும் ஜனநாயக அமைப்பினருக்கு மறுக்கப்பட்ட உரிமை ஐரோப்பிய எம்.பி களுக்கு வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக எதிர்கட்சி, இடதுசாரிகள் ஜனநாயக அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துவித்து வருகின்றனர். ஆனால் இதனை மோடி அரசாங்கம் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
குண்டு துளைக்காத காரில் பாதுகாப்பு படையினரால் ஐரோப்பிய கூட்டமைப்பு எம்.பி.,க்கள் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அப்போது, மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பல்வேறு இடங்களில், பாதுகாப்பு படையினர் மீது, போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனிடையே, காஷ்மீரைப் பார்வையிடும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் இடம்பெறுவதாக இருந்த வடமேற்கு இங்கிலாந்தை சேர்ந்த லிபரல் ஜனநாயக கட்சியின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஸ் டேவிஸ் தன் நிபந்தனையை ஏற்க்காமல் தனக்கு அளித்த வந்த இடத்தை மோடி அரசாங்கம் மறுத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
மேலும் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிரிஸ் டேவிஸ், “எனக்கு இதுபோல அழைப்பு கடிதம் வந்ததும், முதலில் ஆர்வமாக இருந்தது. பின்னர் என் பயணத்தின் போது இந்திய ராணுவத்தின் மேற்பார்வை இல்லாமல், காஷ்மீரில் தான் விரும்பிய இடங்களுக்கு எல்லாம் சென்று பார்க்கவும், விரும்பியவர்களை சந்தித்துப் பேசவும் சுதந்திரம் வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தேன்.
ஆனால், இந்த நிபந்தனையை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாமல் மோடி அரசாங்கம் நிராகரித்தது. பின்னர் இந்தப் பயணத்திற்கு தேவைப்படுவோர் அனைவரும் கிடைத்துவிட்டதாகவும், எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை திரும்ப பெறுவதாகவும் என்னிடம் தெரிவித்தார். இந்த பதிலால் நான் ஆச்சரியமடைவில்லை. இந்த பயணம் பற்றி தெரியும்போதே நரேந்திர மோடியின் விளம்பர உத்தியாகவே எனக்கு இது தெரிந்தது.
பின்னர், மோடி அரசாங்கத்தில் காஷ்மீரில் எல்லாம் நன்றாக உள்ளது என பாசாங்கு செய்யும் அரசின் பிரசார நாடகத்தில் நான் பங்கேற்கமாட்டேன் என மின்னஞ்சல்கள் மூலம் தெரியப்படுத்தினேன். அங்கு ஜனநாயக மீறப்பட்டுள்ளது. அதை உலகம் உற்று நோக்கவேண்டிய தேவை உள்ளது.
இதன் மூலம் பல கேள்விகள் எழுகிறது. குறிப்பாக உள்ளூர் மக்களை ஏன் சுதந்திரமாக பேச பத்திரிகையாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஏன் அனுமதி வழங்கவில்லை? மேலும், காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகள் எவ்வளவு குறைவாக கவனம் செலுத்துகிறதோ, அந்தளவுக்கு மோடி அரசு மகிழ்ச்சி அடையும்” என அவர் தெரிவித்துள்ளார்.


இந்தியாவிலிருந்து பிரிந்து செல்ல மணிப்பூர் விரும்புகிறது!

இந்தியாவிலிருந்து பிரிந்து செல்ல மணிப்பூர் விரும்புகிறது!
மணிப்பூர் மன்னர் லேசெம்பா சுஞ்சோபா இந்தியாவிலிருந்து மணிப்பூர் பிரிந்து செல்ல விரும்புவதாக கூறியுள்ளார். தற்போதுள்ள நரேந்திர மோடி அரசு இந்துத்வாவை அனைத்து மட்டத்திலும் நுழைக்க விரும்புகிறது. இது எங்களின் தனி கலாசாரத்தையும் பன்முகத் தன்மையையும் சிதைத்து விடும் என அஞ்சுகிறோம். எனவே இந்தியாவிலிருந்து பிரிந்து சுதந்திரமாக செயல்பட விரும்புகிறோம் என்கிறார். இது வரை 4500 பேரை கொன்று குவித்துள்ளது இந்திய ராணுவம். எங்களின் மக்கள் ரத்தம் சிந்துவதை அனுமதிக்க முடியாது என்கிறார் மன்னர். இதற்கு மணிப்பூர் அரசு தரப்பிலிருந்தும் கணிசமாக ஆதரவு பெருகியுள்ளது.
ஆர்எஸ்எஸ் அரசு நிர்வாகத்தில் தலையிட்டதால் முன்பு பாகிஸ்தான் என்ற நாடு பிரிய காரணமாயிருந்தது. தற்போது காஷ்மீர் பற்றி எரிகிறது. மணிப்பூரும் தன் பங்குக்கு கொடி பிடிக்க தொடங்கியுள்ளது. அழகிய இந்த நாட்டை காவிகள் துண்டு துண்டாக உடைத்து விட்டுத்தான் ஓய்வார்கள் போல் உள்ளது.
They said that Manipur is being ruled through draconian laws by the Indian occupation government “under the Republic Constitution of India including Arms Forces (Special Powers) Act 1958”.
They said that thousands of people have been killed since the occupation of Manipur. Nearly 4500 have been killed unlawfully in the last 10 years and more than 1500 are in prisons in illegal custody. The total loss of life stands at around 15,000 in the last few decades, they said referring to a BBC report which had unearthed the scale of unlawful killings and human rights violations.
They said: “There are more than 1,528 cases of the extra-judicial killing which are pending in the Supreme Court of India. They victim were killed without trial of law. Indian army forces kill the people of Manipur with impunity. The Manipuri human right activist Irom Charu Sharmila, known as the ‘Iron Lady of Manipur’, started protest fasting for 16 years against the controversial Armed Forces (Special Powers) Act and human rights abuses. The brave women of Manipur staged nude protests in front of the Indian Army centres to condemn inhuman torture and killing of innocent people of Manipur.”
Thanks to
GeoTv
29-10-2019



133 கோடி ரூபாயை அகல் விளக்கில் செலவழித்த யோகி அரசு!



133 கோடி ரூபாயை அகல் விளக்கில் செலவழித்த யோகி அரசு!
உத்தர பிரதேசத்தின் சரயு நதியில் சென்ற 27-10-2019 அன்று 6 லட்சம் அகல் விளக்குகளை அரசு செலவில் ஏற்றி தீபாவளியை கொண்டாடியுள்ளது யோகி அரசு. உலக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டுமாம்.
இதே உத்தர பிரதேசத்தில்தான் மதிய உணவு குழந்தைகளுக்கு தொட்டுக் கொள்ள உப்பு கொடுக்கப்பட்டது. அதற்கான காரணம் நிதி பற்றாக்குறை என்றும் சொல்லப்பட்டது.
வறுமையில் உழலும் ஒரு மாநிலத்துக்கு அகல் விளக்கை ஏற்ற 133 கோடி ரூபாயை செலவழிப்பது சரிதானா என்று கேட்டால் நீங்கள் தேச துரோகியாக்கப்படுவீர்கள். 

Tuesday, October 29, 2019

குஜராத்தில் 1500 தலித்கள் புத்த மதத்தை தழுவினர்!

குஜராத்தில் 1500 தலித்கள் புத்த மதத்தை தழுவினர்!
உனா போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பசுவின் பெயரால் தலித்கள் கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளது. சமூகத்திலும் தலித்களுக்கு இந்து மதத்தில் சம அந்தஸ்து கிடைப்பதில்லை. இதனால் வெறுப்புற்று 1500 தலித்கள் குஜராத் அஹமதாபாத்தில் உள்ள வல்லபாய் பட்டேல் ஞாபகார்த்த கட்டிடத்தில் புத்த மதத்தை தேர்ந்தெடுத்தனர். இந்திகழ்வு சென்ற 27-10-2019 அன்று நடந்தேறியது.
Around 1,500 Dalits from different parts of Gujarat resolved to follow Buddhism at a function organised at the Sardar Vallabhbhai Patel National Memorial in Shahibaug area of Ahmedabad on Sunday.
The function, organised by the Gujarat chapter of Buddha’s Light International Association (BLIA), an international Buddhist organisation, was presided over by Hsin Bau, the religious head of BLIA, and Buddhist monk from Taiwan. A number of Buddhist monks from India and abroad took part. People took the pledge to follow Buddhism after getting themselves registered with BLIA for the function.
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
29-10-2019
பவுத்த மதத்தையும் பார்பனியம் என்றோ விழுங்கி விட்டது. இந்து மதத்தின் ஒரு சாதிப் பிரிவாகத்தான் பவுத்தம் இன்று உள்ளது. பார்பனியத்துக்கு சரியான பதிலடி கொடுக்கும் ஒரே மார்க்கமாக இருப்பது இஸ்லாம் ஒன்றுதான். எனவே தான் இந்துத்வாவின் முக்கிய இலக்காக இஸ்லாம் உள்ளது.
எப்படியோ... அடிமைத் தளையிலிருந்து தற்காலமாகவாவது சிறிது விடுதலை கிடைக்கும் மதம் மாறிய தலித்களுக்கு.


முகேஷ் அம்பானி சவுதியில் முதலீடு செய்ய திட்டம்

மோடி சவுதி அரேபியா பயணம். இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்திப்பதால் முகேஷ் அம்பானி சவுதியில் முதலீடு செய்ய திட்டம். - செய்தி
மோடி சவுதி அரேபியா பயணம். இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்திப்பதால் முகேஷ் அம்பானி சவுதியில் முதலீடு செய்ய திட்டம். - செய்தி

முஸ்லிம்களை இந்தியாவிலிருந்து தூரமாக்க வேண்டும் என்று சங் பரிவாரத்தினர் பல வழிகளிலும் முயன்று வருகின்றனர். உலக முடிவு நாள் வரையில் இதில் அவர்கள் வெற்றியடைய போவதில்லை.

ஆனால் பாருங்கள்... இவர்கள் எந்த அளவு முஸ்லிம்களை வெறுக்கின்றனரோ அந்த அளவு முஸ்லிம்களும் இஸ்லாமிய நாடுகளும் இந்தியாவுக்கு தேவைப்படுகின்றன. :-) இந்திய பொருளாதாரம் சரியும் போதெல்லாம் இவர்களின் கவனம் முஸ்லிம நாடுகளை நோக்கியே செல்கின்றன. இதுதான் யதார்த்தம்.




யார் இந்த அபூபக்ர் அல்பஃக்தாதீ?

யார் இந்த அபூபக்ர் அல்பஃக்தாதீ?
- அ. முஹம்மது கான் பாகவி
இராக்கிலும் சிரியாவிலும் மனித நாகரிகம் கண்டிராத காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை இஸ்லாத்தின் பெயரால் நிகழ்த்திவரும் ஐ.எஸ். இயக்கம் உண்மையில் யாருடையது; அதன் நிறுவனரும் தலைவரும் நான்தான் என்று வீடியோக்களில் காட்சியளித்து, தூய அரபிமொழியில் மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கும் அபூபக்ர் அல்பஃக்தாதீ என்பார் யார்? இவர்களின் பின்னணி என்ன என்பதெல்லாம் தெரியாமல் உலக முஸ்லிம்களைப் போன்றே நாமும் குழப்பத்தில்தான் இருந்தோம்.
இந்நிலையில், குவைத்திலிருந்து வெளிவரும் ‘அல்முஜ்தமா’ எனும் இஸ்லாமிய அரபு மாத இதழில் அக்டோர் (2014) பிரதியைப் புரட்டிக்கொண்டிருந்தபோது, ஓர் ஆய்வுக் கட்டுரை படிக்க நேர்ந்தது. கட்டுரையை ஃபிரான்ஸ் கலாசாரத் துறை பேராசிரியர் டாக்டர், ஸைனப் அப்துல் அஸீஸ் எழுதியிருக்கிறார். ‘இராக் கிறித்தவர்களும் இனப் படுகொலை பற்றிய ஊகங்களும்’ என்பது
கட்டுரையின் தலைப்பு.
கட்டுரையின் இறுதியில் டாக்டர் ஸைனப் எழுதியிருப்பதன் தமிழாக்கத்தை அப்படியே கீழே தருகிறோம். (இதில் நமது சொந்தக் கருத்து எதுவும் இல்லை.) நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்:
ஐ.எஸ். இயக்கத்தை அரபி இதழ்கள் சுருக்கமாக ‘தாஇஷ்’ எனக் குறிப்பிடுகின்றன. இதன் பொருள் ‘அத்தவ்லத்துல் இஸ்லாமிய்யா’ (இஸ்லாமிய அரசு) என்பதாகும். ‘கிலாஃபத்’ ஆட்சி என விளக்கம் கூறலாம். இந்த இயக்கத்தின் தலைவர் ‘அபூபக்ர் அல்பஃக்தாதி’யை ‘பஃக்தாது கலீஃபா’ என அவருடைய ஆதரவாளர்கள் அழைக்கின்றனர். இவரது பின்புலம் குறித்து முன்னணி இணைய தளங்கள், குறிப்பாக ‘Veteran Today’ எனும் இணையதளம் தோலுரித்துக்காட்டியிருக்கிறது.
பக்தாத் கலீஃபா, இஸ்ரேல் உளவு அமைப்பான ‘மொசாத்’தின் கையாள். இவர் யூதப் பெற்றோருக்குப் பிறந்தவர். அபூபக்ர் அல்பஃக்தாதியின் உண்மையான பெயர்: ஷைமோன் எலியூட். இவரை சியோனிஸ மொசாத், தன் உளவுப் பணிகளுக்காக உருவாக்கிப் பயிற்சியையும் அளித்துள்ளது. உளவுத் துறையிலும் வெளியுறவுத் துறையிலும் அவர் பயிற்சியை முடித்துள்ளார்.
அத்துடன், பல்வேறு இராணுவப் பயிற்சிகளுக்கும் உட்படுத்தப்பட்டார். பல்வேறு சோதனைகளையும் அவர் கடந்துவந்துள்ளார். இதுவெல்லாம் எதற்காக? அரபு மற்றும் முஸ்லிம்களின் வாழ்வையும் இஸ்லாமியச் சிந்தனைகளையும் அழிக்கும் சதிவேலைகளுக்கு எலியூட் தலைமை ஏற்க வேண்டும்; அழிவு சக்திகளை ஒருங்கிணைத்து வழிநடத்த வேண்டும் என்பதற்காகத்தான்!
இதில் பெரிய வேடிக்கை என்ன தெரியுமா? ஐ.எஸ். (Islamic State) அமைப்பு, பயங்கரவாத இயக்கங்களின் ஐ.நா. பட்டியலில் இடம்பெற்றுள்ள அதே வேளையில், அதற்குப் பொருளுதவி செய்வது அமெரிக்காவாகும். 2014 வரி ஆண்டுக்கான இரகசிய கூட்டத்தில் முடிவான சட்டத்திற்கேற்ப ஐ.எஸ். அமைப்புக்குப் பொருளுதவி செய்ய அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது. இது, 2014 செப்டம்பர் 30 வரைக்குமான ஒப்புதலாகும்.
இன்னொரு சுவாரசியம் என்னவென்றால், 2004 முதல் 2009 வரை 5 ஆண்டு காலம் குவாண்டநாமோ சிறையில் அபூபக்ர் அல்பஃப்தாதி இருந்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் சி.ஐ.ஏ. மற்றும் மொசாத் ஆகிய உளவுத் துறை அமைப்புகள் தம் பணிகளுக்காக ஆள் திரட்டியபோது அபூபக்ரைப் பயன்படுத்த எண்ணின. பல்வேறு நாடுகளில் இருக்கும் முஜாஹித்களை ஒரே இடத்தில் திரட்டுவதற்கு வசதியாக ஒரு குழுவை அமைக்கும் பெரிய பொறுப்பினை அபூபக்ரிடம் அவை கொடுத்தன. இக்குழு, முஜாஹித்கள் யாரும் இஸ்ரேலைத் தாக்கிவிடாமல் தடுக்கும் பணியைச் செய்ய வேண்டும் என்பது மொசாத்தின் திட்டமாகும்.
அபூபக்ர் என்ற ஒற்றரை மொசாத் தேர்ந்தெடுத்ததன் நோக்கம், இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்ற நாடுகளின் இராணுவ மற்றும் சிவில் வட்டாரங்களில் ஊடுருவுவதே ஆகும். அகண்ட இஸ்ரேலை உருவாக்குவதற்கு வசதியாகவும் அந்நாடுகளின் ஒவ்வொரு பகுதி மீதும் ஆதிக்கம் செலுத்துவதற்கு வசதியாகவும் சியோனிஸ ஆட்சியை உருவாக்கும் பணியை எளிதாக்க வேண்டும்.
உலகின் நாலா பாகங்களிலிருந்தும் தீவிரவாதிகளின் ஒரு பெரும் படையை ஓரிடத்தில் ஒன்றுசேர்த்து, ஷைத்தானின் உண்மையான படை இதுதான் என உலகத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும். அவர்கள் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ எனும் கலிமா பொறிக்கப்பட்ட கறுப்புக் கொடியைத் தூக்கிக் காட்டுவார்கள். இதன்மூலம், இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்பை உலக மக்களிடம் விதைக்க முடியும் என்பது மொசாத்தின் கனவாகும்.
இப்படையினர், ஈவிரக்கமின்றி கைதிகளைத் துப்பாக்கியால் சுட்டும் கழுத்தை அறுத்தும் கொலை செய்வார்கள். இந்தப் பயங்கரமான காட்சிகளைப் படமாக்கி இணையதளம் உள்ளிட்ட ஊடகங்களில் வெளியிடுவார்கள். இவர்கள் இரத்த வெறிபிடித்த காட்டுமிராண்டிகள் என உலகம் அடையாளம் காண வேண்டும்.
யாராலும் சகிக்க முடியாத, மனிதாபிமானமே இல்லாத இந்த நிலைக்கு ஒரு மனிதன் வரவேண்டுமென்றால், ஒன்று அவன் போதைக்கு அடிமையாக இருக்க வேண்டும்; அல்லது இரத்தத்தையும் பயங்கரத்தையும் பார்த்துப் பார்த்துப் பழகிப்போனவனாக இருக்க வேண்டும். இதுதான் அமெரிக்க சியோனிஸ போர் உத்தியாகக் காலம்காலமாக இருந்துவருகிறது.
சுருங்கக்கூறின், ஐ.எஸ். எனும் இந்தப் படைக்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்பும் அறவே இல்லை. இது, முஸ்லிம்களின் கரத்தாலேயே இஸ்லாத்தின் மீது போர் தொடுப்பதற்காக ‘பிளாக் வோட்டர்’கள் மூலம் அமெரிக்கா நிகழ்த்தும் நாடகமாகும்.



நான் இந்து இல்ல; நான் இப்ப பள்ளனும் இல்ல

நான் இந்து இல்ல; நான் இப்ப பள்ளனும் இல்ல
ஜாதிய ஒழிச்சுக்கட்டிய முகம்மது பிலால்!
முகம்மது பிலால் வியாழன், 06 செப்டம்பர் 2012 23:39
நான் 6.12.1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளன்று, அம்பேத்கர் நினைவு நாளில் சென்னை அசோக் நகர் பள்ளி வாசலில் 1000 பேருடன் இஸ்லாம் தழுவினேன். அதில் 300 பேர் தாழ்த்தப்பட்டவர்கள்.
இதற்கு முன்பே 1981 இல் தென் மாவட்டங்களில் கொடிக்கால் ஷேக் அப்துல்லா போன்றோரின் தலைமையில், மிகப்பெரிய மதமாற்றம் மீனாட்சிபுரத்தில் நடந்தது என்பது பலருக்கும் தெரியும்.
குறிப்பாக, பள்ளர்கள் அதிகமாக இஸ்லாம் தழுவினார்கள்.
பொதுவாக தங்களுக்கு நடக்கிற பிரச்சனைகளுக்கு எதிராகப் போராடுகிற, எதிர்க்கிற, எதிர்த்துத் தாக்குகிற குணம் பள்ளர்களுக்கு உண்டு. வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்க மாட்டாங்க. இயல்பாகவே அப்படி ஒரு குணம். அந்த குணங்களுக்கு ஏற்றதாகக்கூட இஸ்லாத்தை தழுவியிருக்கலாம்.
மதமாற்றத்தில் ஈடுபடுகிற பலருக்கும் பல நோக்கங்கள் இருக்கும். ஒருத்தர் நான் இந்து இல்லன்னு சொல்லி மதம் மாறுவார். இன்னொருத்தர் சாதிக் கொடுமைகள் இருக்கு, அதனால மதம் மாறுகிறோம்னு சொல்லுவார். இன்னும் சிலர் சலுகைக்காக மதம் மாறுகிறோம்னு சொல்லுவாங்க.
ஆனா, மதமாற்றத்தில் நான் முன் வைத்த கருத்து – "பிறவி இழிவு நீங்க வேண்டும்' பொறக்கும்போது பள்ளனா பொறந்திட்டேன். என் பிள்ளைகளும் பள்ளர்களாகப் பிறக்கணும்னு என்ன அவசியம் வேண்டியிருக்கு. இத யார் தீர்மானிக்கிறது? நான் பள்ளனா பொறந்திட்டேன்.
என்னுடைய அடுத்த தலைமுறை பள்ளனா பொறக்கக்கூடாது அதுக்கு உடனடித் தீர்வு இஸ்லாம். இப்ப என் பேரனுங்கள பள்ளன்னு கூப்பாடு போட்டு சொன்னாலும் யாரும் நம்பப் போறதில்ல.
அவன் யாருன்னு ஜமாத்துக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும். ஒரு தலைமுறை மாறிடுச்சு. பையன கொடுத்தோம், பெண் எடுத்தோம்.
இந்த மாதிரியான மாற்றம் நம்முடைய பிறவியிலேயே ஏற்படுணும்னா, அதுக்கு ஒரே தீர்வு இஸ்லாம்தான்.
மதம் மாறுவது என்கிற நிலையில் நீங்க பவுத்தரா, கிறித்துவரா மாறுவது ரொம்ப சுலபம். அது யாரையும் இந்த சமூகத்துல பாதிக்காது.
மதம் மாறுகிறவர்கிட்டேயும் மாற்றத்த கண்டுபிடிக்க முடியாது. வேணும்னா கூட்டம் போட்டு சொல்லிக்கலாம்.
ஆனா, நீங்க இஸ்லாம் மாறுவது என்பது மதமாற்றம் மட்டுமல்ல, உன்னுடைய சமூகத்துல உன்ன அடிமைப்படுத்துகிற கலாச்சாரத்திலிருந்தும் மாறுகிறோம்.
இந்தத் தலைமுறைக்கு அது போதும்.
மறந்தும் இந்த மதத்தோட எந்தத் தன்மையும் உன்னை பாதிக்காது. இத பவுத்தத்தில இருந்து உன்னால சொல்ல முடியாது; கிறித்துவரா இருந்தும் சொல்ல முடியாது. இரண்டிலும் இந்து மதம் நம்மள இழி பிறவியா நடத்துற எல்லா விசயமும் அதுக்குள்ள இருக்குது. பள்ளர்கள் எப்பவோ இஸ்லாம் மதத்தைத் தழுவிவிட்டார்கள் என்று சொல்ல முடியும்.
12 ஆம் நூற்றாண்டில் தென் மாவட்டத்தில் ஒருத்தர்கூட தலித் இஸ்லாமியர் இல்லை.
இந்தக் காலகட்டத்தில்தான் நாகர்மலை, சமணர்மலை, யானைமலை போன்ற பகுதிகளை சைவர்கள் கைப்பற்றுகிறார்கள். மிகப்பெரிய சைவப் போராட்டம் நடக்கிறது. சைவம் எப்படி சமணத்தை வீழ்த்தியதோ, அதைப் போலவே சைவத்தை வீழ்த்த வேண்டும்; சைவத்தை வீழ்த்த வேண்டுமானால், அதை எதிர்க்கின்ற, வீழ்த்துகின்ற சக்தியுடைய ஒன்றோடு கூட்டுச் சேர வேண்டும்.
சமணத்தையோ, பவுத்தத்தையோ கூட்டு சேர்க்க முடியாது. அதுதான் வீழ்ந்து கிடக்குதே.
அப்ப அதை எதிர்க்கிற மதமாக இருந்தது இஸ்லாம்தான்.
இந்த மோதலில் செத்துக் கொண்டிருந்தவர்கள் நம்முடைய முன்னோர்கள்தான். அதனால் அவர்கள் இஸ்லாம் மாறி இருக்கலாம்.
நான் இருக்கிற சோழவந்தான் பகுதி முழுவதும் சைவ மதம் அட்டூழியம் பண்ணிய இடம். இன்னைக்கும் அந்த பாதிப்பு இருக்குது. அது யாருக்கும் தெரியல.
எனக்கு பள்ளர் – பறையர்னு பிரிச்சுப் பார்க்கத் தெரியல. என்னுடைய அதிக காலம் வடக்கேதான் கழிஞ்சது. தந்தை சிவராஜ்தான் தலைவர். பிரச்சனைகள் வடக்கே ஒரு மாதிரியா இருக்கலாம், தெற்கே ஒரு மாதிரியா இருக்கலாம்.
பவுத்தத்தில் கிறித்துவத்தில் சில நல்லதுக இருக்கலாம். சலுகைகள் கிடைக்கலாம். அது, அவரவர் தேவையைப் பொருத்தது. நான் இஸ்லாமியரா இருக்கிறேன்.
ஏற்கனவே இந்த சமூகம் என் பாட்டன், பாட்டிய பேசின இழிந்த நிலையை இப்ப எங்கிட்ட பேச முடியாது.
அதுதான் எனக்குக் கிடைச்ச விடுதலையா பார்க்கிறேன்.
நான் இந்து இல்ல; நான் இப்ப பள்ளனும் இல்ல;
ஜாதிய ஒழிச்சுக்கட்டிய முகம்மது பிலால்!
நேர்காணல் : அன்பு செல்வம்


Monday, October 28, 2019

ஊழலை ஒழிக்க வந்த புண்ணியவான் இவர்தான்!

நேற்றுதான் ஹரியானாவில் ஜனநாயக ஜனதா கட்சிக்கும் பா.ஜ.கவுக்கும் இடையில் கூட்டணி முடிவானது. அதற்குள் இன்று திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜ.ஜ.க தலைவர் துஷ்யந்த் சவுதாலாவின் தந்தை அஜய் சவுதாலா சிறை நிர்வாகத்தால் இரண்டு வாரங்கள் விடுப்பில் வெளியே அனுப்பப்படுகிறார். இவர் தனது தந்தை ஓம் பிரகாஷ் சவுதாலா முதல்வராக இருந்தப்போது ஆசிரியர் நியமனத்தில் ஊழல் செய்த வழக்கில் தந்தையோடு சிறையில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேப்போல 2018ஆம் ஆண்டு ஊழல் வழக்கு ஒன்றில் கைதாகி ஓராண்டு சிறையில் இருந்த சிக்கிம் முதல்வரும், பி.ஜே.பி கூட்டணிக் கட்சித் தலைவருமான திரு.பிரேம் சிங் தமங் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி அடுத்த 6ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடமுடியாது என்பது சட்டம். ஆனால் திடீரென கடந்த மாதம் 6ஆண்டுகளாக இருந்தத் தடையை 1ஆண்டாக தேர்தல் ஆணையம் குறைத்ததையடுத்து அவர் தேர்தலில் நின்று தனது முதல்வர் பதவியை தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டு, அதன்படி நேற்றைய முன்தினம் அவர் தேர்தலில் ஜெயித்தும்விட்டார்.
ஊழலை ஒழிக்க வந்த 'புனிதர்' நரேந்திர மோடி ஊழல்வாதிகளை தண்டிக்கும் விதம் இதுதான்.
'இவ்வளவு பச்சையாக சட்டத்தை வளைத்தால் மக்கள் அதையெல்லாம் கவனிப்பார்கள் என்பதுக்கூடவா மோடிக்கு தெரியாது?' என்று உங்களுக்குத் தோன்றினால், உங்களுக்கு இங்கு தொடங்கியுள்ள பாசிசத்தின் தீவிரம் இன்னும் முழுமையாக விளங்கவில்லை என்றுப் பொருள். காரணம், அனைவருக்கும் இது தெரியவேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம்.
"இனி இங்கு இப்படித்தான். நாங்கள் வைத்ததுதான் சட்டம். ஜாக்கிரதை!" என்று மோடியும், அமித் ஷாவும் சொல்லாமல் சொல்கிறார்கள்.
ஆம்! இனி இங்கு இப்படித்தான். அவர்கள் வைத்ததுதான் சட்டம். ஜாக்கிரதை!
-Ganesh Babu


பலரது முயற்சியும் பலனளிக்காமல் சிறுவனின் உயிர் பிரிந்து விட்டது.

பலரது முயற்சியும் பலனளிக்காமல் சிறுவனின் உயிர் பிரிந்து விட்டது.
இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியவர்களா நாம்.
குடும்பத்தினருக்கு அழ்ந்த அனுதாபங்கள்.
----------------------------------------------
*இஸ்லாம் கூறும் நல்லிணக்கம்*
*மதங்களை கடந்த மனிதநேயம்*
*திருச்சியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர்களுக்கு அய்யம்பேட்டை சக்கரப்பள்ளி மக்கள் சார்பாக உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது*
*அல்ஹம்துலில்லாஹ்*
*இது தான் இஸ்லாம்*
*இதுதான் இஸ்லாம் எங்களுக்கு கற்றுதந்த வழிமுறை*
*ஆபத்து ஏற்படும் நேரங்களில் முதலில் வந்து உதவிகள் புரிவது முஸ்லிம்கள் என்று மீண்டும் மீண்டும் இந்த உலகிற்க்கு உணர்ந்தும் பாடம்*
*இந்த உலகமே எங்களை தீவிரவாதிகள் என்று அவதூறு பரப்பினாலும்*
*உண்மையான இந்து மற்றும் கிருஸ்துவ நண்பர்களுக்கு தெரியும் இஸ்லாமியர்கள் மனித குலத்தின் தோழர்கள் என்று*
*இன்னா செய்தாரே ஒருத்தர்*
*அவர் நாண நன்னயம் செய்துவிடல்*


இந்த நாட்டில் நடத்தப்பட்ட மிகப் பெரிய அயோக்கியத்தன நாடகம் ஒன்று...



இந்த நாட்டில் நடத்தப்பட்ட மிகப் பெரிய அயோக்கியத்தன நாடகம் ஒன்று...
அதாவது
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு CAGல் இருந்த ஒருவர், பல ஆயிரம் கோடி ரூபாய்கள் ஊழல் நடந்ததாக கூறினார்.
இரண்டாமவர் இந்த விஷயத்தை பொதுமக்களுக்கு விளக்குவதற்கு ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார்.உண்ணாவிரதம் எல்லாம் இருந்து உடல் மெலிந்தார்.
மூன்றாவது ஒரு பெண், அவருடன் இணைந்துக் கொண்டார்.
பின்னர் நான்காவது ஒரு மனிதனும் தன்னுடைய அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு அவர்களுடன் அந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
ஐந்தாவதாக ஒரு மனிதர் 2 ஜி ஊழலை பொதுமக்களுக்கு விளக்குவதற்காக இன்னொரு இயக்கத்தை ஆரம்பித்தார்.
ஆறாவது மனிதன் ஒருவர் அதை உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார்.
ஏழாவதாக அதற்கு சாட்சி சொன்னவன் பா சிதம்பரம் அலுவலகத்தில் பணிபுரிந்த ஆசிர்வாதம் ஆச்சாரி என்பவன்.
எட்டாவதாக ஒரு மனிதர் இந்த அத்தனை பேர்களுடைய கடின உழைப்பு அனைத்தையும் (நாடகங்களையும்) தொகுத்து இந்த ஊழலுக்கு எதிராக வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டார்.
ஏழு வருடங்கள் கழித்து ...
குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப் படுகின்றனர். இது ஒரு ஊழலே அல்ல என்றது சட்டமும் நீதிமன்றமும்...
இப்போது முதல் மனிதன் (வினோத் ராய்) பி.சி.சி.ஐ. இன் முதலாளியாகிறார். மேலும் பத்ம பூஷன் விருதும் பெறுகிறார்.
இரண்டாவது மனிதர் அன்னா ஹசாரே, மௌனமாக இருந்து, Z + பாதுகாப்பு பெறுகிறார்.
மூன்றாவது பெண் (கிரன் பேடி) ஒரு கவர்னர்.
நான்காவது மனிதர் (அரவிந்த் கெஜ்ரிவால்) தில்லி முதல்வர்.
ஐந்தாவது மனிதன் (ராம்தேவ்) ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக ஆனார். மேலும் கோடிகளில் நனைகிறார்.
ஆறாவது மனிதன் (சுப்ரமணியம் சுவாமி) எம்.பி. ஆகி கட்சியின் பொறுப்புக்கு வருகிறார்.
ஏழாவது மனிதர் இந்தியாவின் பிரதம மந்திரியாக ஆனார்.
இந்தியர்கள் அனைவரும் முட்டாளாக ஆனோம்.
இது உண்மைகள் நிறைந்த ஒரு ஐயோக்கியத்தனமான நாடகம்.... என்று மனசுக்கு உரைத்தது...
இதில் இன்னொரு பகீர் உண்மை யும் உரைக்குது
அதாவது இந்த நாடகத்தின் நடிகர்கள் வினோதராய்,அன்னா ஹசாரே,கிரண்பேடி,கெஜ்ரிவால்,பாபா ராம்தேவ்,சுப்ரமணியன்சாமி, என அத்தனை பேரும் பிராமணன்கள்..
ஊதி பெரிதாக்கிய அத்தனை ஊடகங்களும் அர்னாப் கோஸ்சுவாமி ஜூனியர் விகடன் ஆனந்தவிகடன் உட்பட பிராமண ஊடகங்கள்.. இவர்கள் அத்தனை பேரும் Rss ல் இருப்பவர்கள்...
வில்லன்களாக கட்டப் பட்டவர்கள் கனிமொழி ஆ.ராசா தயாளு அம்மாள் கருணாநிதி,ன்னு அத்தனை பேரும் சூத்திரர்கள் ன்னு சொல்லப்படுபவர்கள்...
இது காலம்காலமாக நடந்து வரும் ஆரிய தமிழர் போரின் நவீன வடிவம் என்பது தான் நம் அறிவுக்கு உரைக்கும் கொடூரமான உண்மை ....
Beware of பூணூல்ஸ் ..
நாடார் சமூகத்தில் பிறந்து ஆர்எஸ்எஸ் ஷாகாக்களில் கலந்து கொண்டு பார்பன அடிமையாகவே மாறிப் போய் விட்ட அன்பு ராஜ் போன்றவர்களுக்கு தாங்கள் இந்துத்வாக்களால் எவ்வாறு ஏமாற்றப்படுகிறோம் என்று தெரியாமலேயே பிஜேபிக்கு கொடி பிடிக்கிறார்கள். அவர்கள் சுயமாக சிந்திக்கும் ஆற்றலையும் இழந்து விட்டார்கள். தாங்களளே பாதிக்கப்படும் போதுதான் அதன் வலியை உணர்வார்கள். அது வரை கொடி பிடித்துக் கொண்டிருக்கட்டும்.

இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் ரசூல் தேவையில்லை

//So according to you nobody has to introduce God for a child, I agree. However you have to introduce Your rasool to the child if not he will never know about him. Which will again term him as a kaffir according to suvanapriyan.
Nobody have problem in believing one God, but most of us dont need a rasool between God and me.// - Vijay
இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் ரசூல் தேவையில்லை என்பது உங்களின் வாதம். இதனால்தான் பிரச்னைகளே ஆரம்பமாகிறது.
ஏசு நாதர் தன்னை கடவுள் என்று எங்குமே சொன்னதில்லை. ஆனால் அவரை கிருத்தவர்கள் கடவுளின் மகனாக பாவித்து வழிபட்டு வருகின்றனர்.
மோசே இறைத் தூதராகத்தான் யூதர்களிடம் பிரசிங்கித்தார். அவரது இறப்புக்குப் பின் அவரையே கடவுளாக்கி விட்டனர்.
உலக ஆசைகளை வெறுத்து சந்நியாச வாழ்வை மேற் கொண்டார் புத்தர். கடைசியில் அவரையும் கடவுளாக்கி விட்டனர் பவுத்தர்கள்.
நமது நாட்டிலோ நாய், பன்றி, கருடன், மயில் என்று எதை எடுத்தாலும் அதற்கு கடவுள் அந்தஸ்து கொடுக்கிறோம். இறந்து போன நல்லவர்களையும் அரசர்களையும் கடவுளாக வழிபடுகிறோம். இதெல்லாம் கடவுளுக்குரிய இலக்கணமா?
கடவுளுக்கு மனைவி, மக்கள் இருந்தால் கடவுளாக முடியுமா? உறங்குபவர் கடவுளாக முடியுமா? உலக ஆசா பாசங்கள் உடைய ஒருவர் கடவுளாக முடியுமா? நம் காலத்திலேயே கல்கி பகவான் என்ற ஏமாற்று பேர் வழி பல கோடி ரூபாய்களை சுருட்டிக் கொண்டு ஓடியதை பார்த்தோம். நித்தியானந்தா வையும் அவர் அடித்த கூத்துக்களையும் பார்த்தோம்.
இதெல்லாம் ஏன் நடக்கிறது? இது போன்ற மோசடிகள் இஸ்லாமியர்களிடத்தில் ஏன் நடப்பதில்லை என்று என்றாவது சிந்தித்து இருக்கிறீர்களா? அதற்கான காரணம் கடவுளுக்குரிய இலக்கணம் இன்னதுதான் என்று வரையறுக்கப்படாததாலேயே இத்தனை குளறுபடிகள் இந்து மதத்தில் நடக்கின்றன.
கடவுளுக்கான இலக்கணத்தை வகுக்கக் கூடியவர் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத் தூதர்களாகத்தான் இருக்க முடியும். அவர்தான் கடவுளோடு உரையாடக் கூடியவர். மனிதர்கள் இப்படித்தான் வாழ வேணடும். இறைவனை இப்படித்தான் வணங்க வேண்டும் என்ற கட்டளைகளை ஒரு இறைத் தூதர்தான் கொண்டு வர முடியும்.
திருக்குறள், திரு மந்திரம் போன்றவைகள் கூட ஒரு காலத்தில் இறை வேதங்களாக இருந்திருக்கலாம். பின்னால் வந்த ஆட்களால் அவற்றில் மனிதக் கருத்துக்களும் சில புகுந்திருக்கலாம். இறைவனே உண்மைகளை அறிவான். கீழடியில் நடந்த ஆய்வுகளில் தற்போது தமிழர்களால் வணங்கப்படும் எந்த தெய்வத்தின் உருவங்களும் கிடைக்கவில்லை. ஆனால் மிகச் சிறந்த எழுத்தறிவு சமூகமாக இருந்துள்ளனர் தமிழர்கள். தமிழர்களுக்கு வழங்கப்பட்ட இறைத் தூதர்களை மறந்ததால்தான் இன்று தமிழர்கள் தங்களின் தொன்மையான வரலாற்றையும் தெய்வ வழிபாட்டையும்இழந்து நாயையும், பன்றியையும், கருடனையும் வணங்கி வருகின்றனர்.
அதே நேரம் இஸ்லாமியர்களை எடுத்துக் கொள்ளுங்கள். வழிபாடுகள் சம்பந்தமாக எதைச் செய்தாலும் அதனை நபிகள் நாயகம் செய்திருக்கிறார்களா? தங்களுக்கு கட்டளையிட்டிருக்கிறாரா? என்று ஆய்வு செய்த பின்புதான் எந்த வணக்கத்தையும் மேற் கொள்வார்கள். எனவேதான் உலகம் முழுக்க முஸ்லிம்களின் வழிபாடானது ஒரே மாதிரியாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் சாதிக்கு ஒரு கடவுள்: அவர்களுக்கென்று தனி வழிபாடு. ஆனால் அனைவரையும் இந்துக்கள் என்றுதான் சொல்கிறோம். ஒரு சிறிய மாநிலமான தமிழகத்திலேயே இந்த நிலை?
ஆனால் ஹஜ்ஜூக்கு புனித பயணம் மேற் கொள்ளும் ஒரு தமிழனும், ஒரு ஐரோப்பியனும், ஒரு ஆப்ரிக்கனும் எந்த வழி காட்டலும் இல்லாமல் வருடா வருடம் தங்களின் கடமைகளை சரி வர செய்ய முடிவதன் காரணம் நாங்கள் நபிகள் நாயகத்தையும் அவரது பொன் மொழிகளையும் மதிப்பதால்தான்.
எனவே ஓரிறைக் கொள்கையோடு அதனை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் ரசூலும் முக்கியமாகப்படுகிறார்.


காலியாகிறது இந்தியாவின் கஜானா… தங்கத்தையும் விற்கும் ரிசர்வ் வங்கி!

காலியாகிறது இந்தியாவின் கஜானா… தங்கத்தையும் விற்கும் ரிசர்வ் வங்கி!

கடந்த 30 ஆண்டுகளில் முதன் முதலாக இந்திய ரிசர்வ் வங்கி தன்னிடம் இருப்பு வைத்துள்ள தங்கத்தை விற்பனை செய்துள்ளது.

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு ஏற்கனவே 1.76 கோடி லட்சத்தை ரிசர்வ் வங்கி வழங்கியும் நிதிப் பற்றாக்குறை சீரடையவில்லை. இதனால் இருப்பு வைக்கப்பட்டுள்ள தங்கத்தை விற்பனை செய்து அதன் மூலம் வரும் லாபத்தை மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதன் படி ஏற்கனவே 1.15 பில்லியன் டாலர் அளவுக்கான தங்கம் விற்பனை செய்யப்பட்டு விட்டது.

ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்கப்பட்டுள்ள தங்கத்தின் அடிப்படையிலேயே உலக வங்கியிடம் கடன் வாங்க முடியும். தற்போது தங்கம் விற்கப்படுவதால் மேற்கொண்டு கடன் பெறுவது மற்றும் கடனை அடைப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. ஏற்கனவே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிந்து கொண்டிருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கியின் கையிருப்பும் கரைந்து வருவதால் இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து பொருளாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

2019-ம் ஆண்டு இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை பட்டவர்த்தனமாக தெரியவந்தது. எனவே, நாட்டின் பொருளாதார நிலையை மேலும் மூடி மறைக்க முடியாத நரேந்நிர மோடி தலைமையிலான அரசு நிதிச்சுமையை சரிசெய்ய பிமல் ஜலான் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.

தற்போது இந்த ஜலான் குழு தான் ரிசர்வ் வங்கியின் தங்கத்தை விற்கும் ஒரு ஆலோசனையை வழங்கி நாட்டை திவாலாக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.

ஜலான் குழு ஆலோசனைப்படி ரிசர்வ் வங்கி 1.987 மில்லியன் அவுன்ஸ் தங்கத்தை விற்பனை செய்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க கட்சி வேறுபாடுகளின்றி நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு செயல்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தி இருந்தார். மேலும், நாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்து வருவதை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பல முறை சுட்டிக் காட்டினார்.

ஆனால் எதற்குமே செவி சாய்க்காத மோடி அரசு, பொருளாதார மந்த நிலைக்கு ஊபர், ஓலா நிறுவனங்கள் தான் காரணம் என்று சப்பை கட்டு கட்டி தங்களுடைய பொருளாதாரக் கொள்கையின் தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்தது.

இதன் விளைவாக தற்போது நாட்டின் அடிப்படை ஆதாயமான ரிசர்வ் வங்கியின் தங்கத்திலேயே கை வைத்து நாட்டை திவலாக்கும் நிலைக்கு மோடி அரசு இட்டுச்சென்றுள்ளது.

https://www.newsu.in/?p=3313


ஆலிம்கள் அட்வகேட் ஆனபோது...

ஆலிம்கள் அட்வகேட் ஆனபோது...
இரண்டு தினங்களுக்கு முன்பு கேரள உயர்நீதிமன்ற வளாகம் மகிழ்ச்சியால் திளைத்தவர்களால் நிரம்பி வழிந்தது...
மார்க்க கல்வி பயின்ற ஆலிம்கள் மூவர் பின்னர் சட்டம் படித்து தேர்வாகி தங்களை வழக்கறிஞர்களாக பார் கவுன்சிலில் பதிவு செய்ய எர்ணாகுளம் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் விண்ணப்பித்தனர்...
Adv. ஹம்சா ஸக்காஃபி
Adv. ரிஃபாய் ஸக்காஃபி
Adv. அறபாத் ஸக்காஃபி
ஆகியோர் வழக்கறிஞர் பணியை துவங்குவதை காண பெற்றோர்களும், உறவினர்களும், உஸ்தாதுகளும் குழுமி பெருமகிழ்ச்சி அடைந்தனர்...
பள்ளிவாசல் மிம்பர் மேடைகளில் ஆலிம்களாக சமூக அவலங்களுக்கு எதிராக ஒலித்த குரல்கள் நீதிமன்ற அறைகளில் அநீதிக்கு எதிராகவும் ஒலிக்க இறைவன் அருள் புரியட்டும்...
தமிழகத்தில் நமது மதரஸாக்களில் இது போன்று அரசு பாடத் திட்டங்களையும் கொண்டு வந்து ஆலிம்களை உலக அறிவு படைத்தவர்களாக மாற்ற வேண்டும். 7 வருடம் படித்து முடித்து விட்டு ஐந்துக்கும் பத்துக்கும் ஃபாத்திஹா ஓதி மார்க்கம் காட்டாத வழியில்தான் தங்களின் பொருளாதாரத்தை ஈட்டுகின்றனர் தற்கால ஆலிம்கள். இந்நிலை மாற நிர்வாகிகள் முயற்சி எடுப்பார்களாக!


Sunday, October 27, 2019

பாஜக ஆளும் உபியில் பள்ளிகளின் நிலை!

பாஜக ஆளும் உபியில் பள்ளிகளின் நிலை!
மாடுகளை பராமரிக்க கோடிக்கணக்கில் கோசோலைகள் நிறுவ யோகி அரசு நிதி ஒதுக்குகிறது. ஆனால் குழந்தைகள் படிக்கும் கல்விப் கூடங்களுக்கு நிதி ஒதுக்காமல் அலைக்கழிக்கிறது. பிள்ளைகள் மழையில் நனைந்து கொண்டு பாடம் படிக்கின்றனர்.
அங்கு பணி புரியும் ஆசிரியர் கூறுகிறார் 'வருத்தமான விஷயம்தான். என்ன செய்வது? குழந்தைகளின் படிப்பு கெடக் கூடாது என்பதற்காக குடைகளை பிடித்துக் கொண்டு பாடம் எடுக்கிறோம்.' என்கிறார்.
நரேந்திர மோடியோ 'பாரத் மே சப் அச்சாஹே' (இந்தியாவில் எல்லோரும் நலமாக உள்ளனர்) என்று வழக்கமாக புளுகிக் கொண்டுள்ளார்.


நண்பர் விஜய்க்கு எனது பதில்!

நண்பர் விஜய்க்கு எனது பதில்!
//Allah and his rasool never allow a mumin to pray for a kaffir health. Show me evidence from Quran whether your tntj prayer is halal or harram.// -Vijay
குழந்தை சுர்ஜித் பத்திரமாக மீண்டு வர டிஎன்டிஜே தோழர்கள் தொழுகையில் ஈடுபட்டதை செய்தியாக போட்டிருந்தோம். அதற்கு ஆதாரம் கேட்கிறார் நண்பர் விஜய். அவரது கேள்விக்கான விளக்கத்தை தருகிறேன்.
-------------------------------------------------------------------
''பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் முஸ்லிம்களே'' -ஆய்வில் உறுதி!
'பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் (இஸ்லாமிய) இயல்பிலேயே பிறக்கின்றன வளர்ப்பு முறையில் தான் அந்த குழந்தைகள் யூதனாகவும், கிருதுவனகவும், நெருப்பை வணங்ககுடியவனாகவும் வார்த்தெடுக்க படுகின்றனர்.'' (அறிவிப்பவர் அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2568)
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருள் மொழிகளில் இதுவும் ஒன்று அந்த மாமனிதரின் இந்த சொல்லும் அவரின் தனித்துவத்தையும் அவர்களின் துதுத்துவத்தையும் அறுதியிட்டு உறுதி கூறும் அற்ப்புத சான்றுகளில் ஒன்றாக ஒளிர்கிறது.
பிரிட்டனை சார்ந்த ஆய்வாளார் டாக்கர் ஜெஸ்டின் குழந்தைகள் பற்றிய ஒரு ஆய்வில் ஈடு பட்டிருந்தார் சில ஆண்டுகள் தொடர்ந்த அவரது ஆய்வில் குழந்தைகள் பற்றிய பல அரிய தகவல்களை கண்டிறிந்தார்.
பிறக்கும் குழந்தைகள் தனது தாய் மற்றும் தந்தை மற்றும் தன்னை சார்ந்தவர்களின்கொள்கை களையும் கோட்பாடுகளையும் பார்க்காத நிலையிலும் அறியாத நிலையிலும் வேறு எந்த கொள்கைகளையும் கோட்பாடுகளையும் போதிக்க படாத நிலையிலேயும் வளர்க்க பட்டால் அப்படி வளர்க்க பட்ட குழந்தைகளின் உள்ளங்களில் ஏகத்துவம் மட்டுமே குடிகொண்டிருக்கும் என்பதும் அவர் கண்டிறிந்த உண்மைகளில் ஒன்றாகும்.
ஆக இஸ்லாம் என்பது ஏகத்துவம் என்பது இயல்பானது. திசைதிருப்பாமலும் எதையும் போதிக்காமலும் வளர்க்கப்படுகின்ற குழந்தைகளின் உள்ளங்களில் இயல்பாகவே அது தான் குடிகொண்டுள்ளது என்பது ஆய்வாளரின் முடிவாகும்.
இப்போது நாம் மேலே குறிப்பிட்டுள்ள அண்ணல் நபியின் அமுதமொழியை மீண்டும் படியுங்கள்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அந்த அருள் மொழியில் வார்த்தைகள் சொல்லி வைத்தது போல் அளந்து பயன் படுத்தப்பட்டுள்ளது.
வளர்ப்பு முறையில் தான் குழந்தைகள் முஸ்லிமாக ஏகத்துவ வாதியாக வார்த்து எடுக்க படுகின்றனர் என்று சொல்லப்படவில்லை.
மாறாக அந்த ஏகத்துவம் இயல்பாகவே அந்த குழந்தைகளின் உள்ளங்களில் நிலை பெற்றுள்ளது வளர்ப்புமுறையில் தான் அந்த குழந்தைகள் மாற்று மத த்தவர்களாக வார்க்கபடுகின்றனர் என்ற அற்புதமான உண்மையை நயமாக நபிகள் நாயகம் சொல்லி உள்ளார்கள்.
ஒரு ஆய்வாளான் சில ஆண்டுகளை ஆய்வில் செலவு செய்து பல்வேறு சோதனைகளை செய்து இந்த உண்மையை கண்டு பிடிப்பது பெரிய விசயமல்ல.
எந்த ஆய்வுகளிலும் சோதனைகளிலும் ஈடுபடாத முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் இந்த உண்மையை சர்வ சாதாரணமான வார்த்தைகளில் எப்படி சொல்ல முடிந்தது.
அவர் சாதாரண மனிதராக மட்டும் இருந்திருந்தால் அவர்களின் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு எந்த அறிவு இருந்ததோ அந்த அறிவை கொண்டு மட்டுமே அவர்கள் பேசியிருக்க வேண்டும்.
1400 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ஆய்வாளான் சில ஆண்டுகளை ஆய்வில் செலவு செய்து பெற்ற அறிவை அன்றே அண்ணல் நபியால் எப்படி சொல்ல முடிந்தது?!
அவர்கள் யாவற்றையும் அறிந்த படைத்தவனின் துதராக இருந்ததால் மட்டுமே இதை அன்றே சொல்ல முடிந்தது இந்த நபி மொழியும் உத்தநபியின் நுபுவத்தை உறுதி செய்யும் அற்புத வார்த்தைகளில் ஒன்றாகும்.
புகைப்படத்தில் வலது புறம் இருப்பவர்: ஆய்வாளார் ஜஸ்டீன்
இது மட்டுமல்லாது மகள் இஸ்லாத்தை ஏற்று தாய் வேறு மதத்தில் இருந்தாலும் அந்த தாய்க்கு பணி விடை செய்யச் சொல்லி நபிகள் நாயகம் அறிவுறுத்திய நபி மொழியையும் பார்க்கிறோம். மேலும் உலகில் உள்ள அனைத்து மக்களும் ஆதமுடைய வழித் தோன்றல்கள் என்று இஸ்லாம் கூறுகிறது. இதன் மூலம் எனக்கும் நண்பர் விஜய்க்கும் மூதாதையர் ஒருவரே! எனவே யாருடைய நல் வாழ்வுக்காகவும் தாராளமாக பிரார்த்தனை புரியலாம். இஸ்லாத்தில் அதற்கு தடையில்லை.


கிணறுகளை மூடி தருவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு அறிவிப்பு!



தமிழகத்தில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை மூடி தருவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு அறிவிப்பு!


ஒரு நாளைக்கு 1000 பேருக்கு காலை உணவு தரும் சஜாதுல்லா!

ஒரு நாளைக்கு 1000 பேருக்கு காலை உணவு தரும் சஜாதுல்லா!

அரசு மருத்துவ மனைக்கு வருபவர்கள் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்து மக்கள். பல மாதங்களாக தங்கியிருக்கும் அவர்களுக்கு தினமும் உணவகங்களில் உணவு வாங்கி சாப்பிடுவது இயலாத காரியம். எனவே இங்கு வரும் நோயாளிகளுக்கு தனது சொந்த செலவிலும் மற்றும் தன்னார்வ நன்கொடைகளாலும் தினம் 1000 நபர்களுக்கு குறையாது காலை உணவு அளித்து வருகிறார் 25 வயதான ஹைதரபாத்தை சேர்ந்த பார்மஸி படிக்கும் மாணவர் சஜாதுல்லாஹ.

இறக்கும் வரை இந்த பணியை செய்ய நினைத்திருப்பதாக கூறுகிறார்.

இறைவன் இவரது எண்ணங்களை நிறைவேற்றித் தருவானாக!

பசித்தவருக்கு உணவளிக்கும் இது போன்ற இளைஞர்களுக்கு நம்மால் ஆன நன்கொடைகளை தந்து அவர்களை ஊக்குவிப்போமாக!




Saturday, October 26, 2019

கள்ள நோட்டு அடித்த ஐந்து பேரை காவல் துறை கைது செய்துள்ளது!

குஜராத்தில் கள்ள நோட்டு அடித்த ஐந்து பேரை காவல் துறை கைது செய்துள்ளது!
மோடியின் குஜராத் மாநிலத்தை சேர்ந்த சூரத் நகரைச் சேர்ந்த ஐந்து பேர் கள்ள இந்திய ரூபாய் நோட்டுக்களை அச்சடித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். சஞ்சய் பர்மர்(22), ஆஷிஷ் சூரானி(25), குல்தீப் ராவல்(22), அபிஷேக் மங்குயா(23), விஷால் சூரானி(25), இந்த ஐவரும் கள்ள நோட்டு அச்சடித்ததற்காக காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெயர்களை பார்த்தால் மேல் சாதி இந்துக்கள் என்று தெரிகிறது.  கள்ள நோட்டு அடிக்கும் கலையை யூட்யூப்பிலிருந்து கற்றுக் கொண்டுள்ளனர்.
91 யூனிட் 100 ரூபாய் நோட்டுக்கள், 14 யூனிட் 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடித்து அதில் 160000 ரூபாய் புழக்கத்தில் விட்டுள்ளனர். இது அல்லாமல் சூரத் மார்க்கெட் பகுதியில் கள்ள நோட்டை விநியோகித்து வந்த அபிஷேக் சுர்வ்(32) சுமித் நம்பியார்(33) ஆகிய இருவரையும் காவல் துறை கைது செய்துள்ளனர்.
நாட்டின் பொருளாதாரம் அதள பாதாளத்தில் சென்று கொண்டிருக்க இந்த தேச விரோதிகள் நாட்டில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டு மேலும் சீரழிக்கின்றனர்.
'வட மாநில இளைஞர்களின் திறமையை கண்டு இந்த நாடே வியக்கிறது' என்று ஒரு முறை மோடி சொன்னது ஏனோ இப்போது ஞாபகத்துக்கு வருகிறது. 
மொழி பெயர்ப்பு
சுவனப்பிரியன்
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
27-10-2019


சிறுவன் சுஜித் மீண்டு வர இன்று அதிகாலை தொழுகை..

சிறுவன் சுஜித் மீண்டு வர இன்று அதிகாலை....2 மணி
தஹ்ஜத் தொழுகை..

TNTJ நெல்லை மேலப்பாளையம் மஸ்ஜித் மற்றும் TNTJ திருவாரூர் கிளை -1




300 அடி ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் சீனாவில்....

300 அடி ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனை சில நிமிடங்களில் மீட்கும் சீனர்கள்!
சீன அதிபரோடு இளநீர் குடிக்கும் போது இந்த தொழில் நுட்பத்தையும் கேட்டிருந்தால் சிறுவன் இந்நேரம் உயிரோடு மீட்கப்பட்டிருப்பான்...


ஜப்பானிய இளைஞனின் இறைவனைப் பற்றிய தேடல்!

ஜப்பானிய இளைஞனின் இறைவனைப் பற்றிய தேடல்!
'இஸ்லாத்தைப் பற்றிய தவறான பிரசாரம் ஜப்பான் முழுக்க நிரம்பியிருந்தது. ஆனால் முஸ்லிம்களோடு பழக ஆரம்பித்தவுடன் நான் முன்பு கேள்விப்பட்டவை சரியல்ல என்று உணர்ந்தேன். இங்குள்ள ஜூம்ஆ பள்ளிக்கு பலரும் தொழுக வருவர். இப்பள்ளி எப்பொதும் திறந்தே இருக்கும். முஸ்லிம் அல்லாதவர்கள் இதனுள் சென்று சுற்றிப் பார்ப்பர். குர்ஆனின் மொழி பெயர்ப்புகளையும் எடுத்துச் செல்வர். நானும் பள்ளியின் உள்ளே இப்போது செல்கிறேன்.
அரபியில் குர்ஆனை படிப்பது சற்று சிரமமாக இருக்கிறது. ஆனால் ஜப்பான் மொழி பெயர்ப்பை வாசிப்பது மிக இலகுவாக உள்ளது. எனது வீட்டிலும் குர்ஆனின் ஜப்பானிய மொழி பெயர்ப்பு ஒன்று உள்ளது.
புருணை பயணத்திலிருந்து திரும்பியவுடன் இஸ்லாத்தை கற்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும் எனது அறிவில் ஒரு முதிர்ச்சி ஏற்படுவதை உணர்ந்தேன். இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று உளமாற உணர்ந்தேன். இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டேன். எனக்கு சிரமங்கள் ஏற்பட்டாலும் மிக அதிக மகிழ்ச்சி ஏற்பட்டாலும் அனைத்தையும் இறைவனிடம் சமர்ப்பித்து விடுவேன். எனது மனம் லேசாகி விடும். இஸ்லாத்தை ஏற்ற இந்த ஒரு வருடத்தில் எனக்குள் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எல்லா புகழும் இறைவனுக்கே!'
----------------------------------------------
இந்த இளைஞனிடம் குர்ஆன் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது பார்த்தீர்களா? அரபு கலாசாரத்துக்கும் ஜப்பானிய கலாசாரத்துக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? இருந்தும் அந்த இளைஞனை உள்ளத்தை ஈர்க்கிறது என்றால் இது அகில உலகுக்கும் அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரு மறை என்பது விளங்குகிறது.

''இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர்! "எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களை பதிவு செய்வாயாக! என அவர்கள் கூறுகின்றனர்.'' (அல்குர்ஆன் : 5:83)
''அழுது முகம் குப்புற அவர்கள் விழுகின்றனர். அது அவர்களுக்கு அடக்கத்தை அதிகமாக்குகின்றது.'' (அல்குர்ஆன் 17 : 109)
ஏனைய புத்தகங்களை வாசிக்கும் போது ஏற்படாத உள்ளுணர்வு ஏன் குர்ஆனுக்கு மட்டும் ஏற்படுகின்றது என்றால் அல்லாஹ்வின் வசனங்கள் நரகத்தின் அச்சுறுத்தல்களையும், அழிக்கப்பட்ட சமுதாய வரலாறுகளையும், நபிமார்கள் மற்றும் நபித் தோழர்கள் மார்க்கத்திற்காக பட்ட துன்பங்களையும் எடுத்துக் காட்டுகின்றன.


இஸ்ரேல், பாலஸ்தீனம், சோவியத் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட சோதனை இப்போது இந்தியாவுக்கு!

"இஸ்ரேல், பாலஸ்தீனம், சோவியத் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட சோதனை இப்போது இந்தியாவுக்கு!"- வில்லியம் தால்ரிம்பில்
"இந்திய மண்ணில் இருக்கும்போது கிழக்கிந்திய கம்பெனி என்னும் தவறான அதிகாரப்போக்கிற்கு இந்திய அதிகார அமைப்பு எந்த அளவிற்கு ஊக்கமாக இருந்தது என்பதைப் பேச வேண்டியது அவசியம். தற்போதைய கார்ப்பரேட் நிறுவனங்கள் சில அரசியலில் முதலீடு செய்வதுபோலத்தான் அதுவும்."
வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளரும் மானுடவியலாளருமான வில்லியம் தால்ரிம்பில் அண்மையில் சென்னை வந்திருந்தார். முகலாயர்கள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆசியா மீதான பிரிட்டனின் ஆதிக்கம் குறித்த வரலாறுகளைத் தொடர்ந்து எழுதிவருபவர் வில்லியம். The Age of Khali, White Mughals, Koh-i-Noor: The History of the World's Most Infamous Diamond ஆகிய புத்தகங்கள் அவரது படைப்புகளில் அடங்கும். அவரது சமீபத்திய புத்தகம் 'The Anarchy'. அதையொட்டி சென்னை வாசகர்களைச் சந்திக்கும் நிகழ்வுக்கு வந்திருந்தார். அவரை சந்தித்தோம்.
ஃபில்டர் காபிக்கும் ஆட்டோகிராப்களுக்கும் இடையே நம்முடன் வரலாற்று ஆச்சர்யங்களை அடுக்கினார்.
(சிரித்துக்கொண்டே) ஆமாம். ஆறு வருடக் காலம். இந்தியாவின் அத்தனை ஊர்களுக்கும் பயணப்பட்டேன். கொல்கத்தா, டெல்லி, பூனா, பானிபட் எனப் பல ஊர்களுக்கு எனது தேடல் விரிந்தது. தமிழக அளவில் காஞ்சிபுரத்தைச் சுற்றி எனது ஆய்வுகளை மேற்கொண்டேன். கிழக்கிந்திய கம்பெனி எனும் வரலாற்றுப் பிரச்னைதான் இந்தப் புத்தகம். அதற்கான பயணங்களின்போது நான் பார்த்தவற்றை புகைப்படங்களாக்கினேன். எனது மூதாதையர்கள் பலர் புகைப்படக்காரர்களாக இருந்திருக்கிறார்கள். புகைப்படக்கலை எனது ரத்ததில் கலந்திருப்பதாக நம்புகிறேன்.
காஞ்சிபுரம் அடுத்துள்ள பொள்ளிலூரில் நடந்த போரில்தான் கிழக்கிந்திய கம்பெனியின் முதல் தோல்வி தொடங்கியது. அது தோல்வியாக மட்டுமல்ல முற்றிலுமாகப் படையையே தடமின்றி துடைத்தழித்துவிட்டது. திப்பு சுல்தானும் அவரது தந்தையும் நிகழ்த்திய போர் அது. அதுகுறித்த சான்றுகள் திப்பு சுல்தான் அரண்மனையில் சுவரோவியங்களாக இடம்பெற்றிருக்கின்றன. `அனார்க்கி' புத்தகத்தின் அட்டைப்படம் கூட அந்தச் சுவரோவியத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள்தான். அதற்கு ஒருவருடம் முன்புதான் மராட்டிய படைகளுடன் கிழக்கிந்திய கம்பெனி போரிட்டது. ஆனால் அதைக்காட்டிலும் இந்தப் போரில் கம்பெனிக்கு இழப்புகள் அதிகமாக இருந்தன. ஒருவேளை மராட்டிய படைகளுடனும் ஹைதராபாத் நவாப் படைகளுடனும் திப்பு கைகோத்திருந்தால் கம்பெனி தடயமே இல்லாமல் அழிந்திருக்கக் கூடும்.
வரலாற்று ஆய்வாளர்களிடம் உண்மைத் தன்மை என்பது அவசியமாகிறது. உங்கள் படைப்புகளில் அவை எந்த அளவிற்கு நியாயப்படுத்தப்படுகின்றன?
கிழக்கிந்திய கம்பெனி என்பது கார்ப்பரேட் சக்திகளின் தவறான அதிகாரப்போக்கிற்கான சான்று (Corporate power abuse). நான் பிரிட்டனில் இருக்கும்போது அந்த நிலம் இவர்கள் பற்றி அறியாத உண்மைகளை அந்த மக்களுக்குப் பகிர்வேன். ஆனால், இந்திய மண்ணில் இருக்கும்போது கிழக்கிந்திய கம்பெனி என்னும் தவறான அதிகாரப்போக்கிற்கு இந்திய அதிகார அமைப்பு எந்த அளவிற்கு ஊக்கமாக இருந்தது என்பதைப் பேச வேண்டியது அவசியம். தற்போதைய கார்ப்பரேட் நிறுவனங்கள் சில அரசியலில் முதலீடு செய்வதுபோலத்தான் அதுவும். ஒரு வரலாற்று ஆய்வாளரின் உண்மைத் தன்மை இங்குதான் பரிசோதிக்கப்படுகிறது. இந்தப் புத்தகத்தில் அதைதான் பேசியிருக்கிறேன்.
Thanks to
Vikatan



இயற்கை பேரிடரில் மக்களுக்கு உதவ முதல் ஆளாக வருவான்..

இயற்கை பேரிடரில் மக்களுக்கு உதவ முதல் ஆளாக வருவான்..
இன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையிலும் முதல் ஆளாய் உங்கள் Anti Indian..