Followers

Wednesday, September 23, 2009

பவுல்(பால்) எவ்வாறு கிறித்துவை கடவுளாக்கினார்?-2

பவுல்(பால்) எவ்வாறு கிறித்துவை கடவுளாக்கினார்?-2

ஏசுவுக்குப் பின்னர் அவருடன் வாழ்ந்த சிஷ்யர்கள்(அப்போஸ்தலர்கள்) தங்களை ஒரு சிறு கூட்டமாக அமைத்துக் கொண்டு ஏசு அவர்கள் கொண்டு வந்த போதனையைப் பரப்பலாயினர். யூதர்களுடைய பழக்க வழக்கங்களையே அந்த அப்போஸ்தலர்களும் கடைபிடித்து வந்தனர். யூத கோவில்களில் நடைபெறும் வணக்க முறைகளையே இவர்களும் பின்பற்றி வந்தனர்.

அப்போஸ்தலர்களின் பிரச்சாரங்களின் விளைவாக பலரும் கிறித்தவ மார்க்கத்தின்பால் ஈர்க்கப்பட்டனர். ஒரு மார்க்கத்தையும் சேர்ந்திராது காட்டுமிராண்டி வாழ்க்கை நடத்தி வந்த பாமர மக்களும் ஏசுவின் போதனையின் பக்கம் திரும்பலாயினர். இப்படிப் புதிதாக கிறித்தவ மார்க்கத்தில் சேர்ந்தவர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டன. இந்த சலுகை பவுல் மற்றும் அவரைச் சார்ந்தவர்களால் வழங்கப்பட்டது. புதிதாக கிறித்தவ மார்க்கத்தில் இணைபவர்கள் விருத்த சேதனம்(சுன்னத்) செய்து கொள்ளத் தேவையில்லை என்றும், வணக்க முறைகளில் சில விதிகள் அவர்களுக்காகத் தளர்த்தப்படலாம் என்றும் பவுல் கருதினார். யூதர்களைப் போன்று பல அனுஷ்டானங்களை அப்போஸ்தலர்கள் கடைபிடித்து வந்தனர். ஆனால் புதிதாக கிறித்தவ மார்க்கத்திற்கு வந்தவர்கள் இவற்றை எல்லாம் கடை பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என பவுல் வாதிக்கலானார்.

ஆக இப்படியாக ஈஸா நபி(ஏசு) மரித்து ஒரு நூற்றாண்டுகளுக்குள்ளாக இரண்டு கோஷ்டிகள் கிறித்தவ மார்க்கத்தில் தோன்றி அலை மோதின. ஏசு நாதரோடு கூடவே இருந்த அப்போஸ்தலர்கள் காட்டிய வழியில் செல்லும் கூட்டம் ஒன்று. இவர்கள் பெரும்பாலும் யூத பழக்க வழக்கங்களையே அனுஷ்டித்து வந்தனர். மற்றொன்று பவுல்(பால்) தலைமையில் இயங்கிய கூட்டம். யூத பழக்க வழக்கங்களை தொடர்ந்து பின்பற்ற வேண்டியதில்லை என்றும் புதிதாக மார்க்கத்தில் வருகின்றவர்கள் விஷயத்தில் அதிக கண்டிப்பு அவசியமில்லை என்றும் இவர்கள் கருதினார்கள். விருத்த சேதனம், ஓய்வு நாள், யூத வணக்க முறை, பலி(குர்பானி), பன்றி இறைச்சியை விலக்குதல் ஆகிய பிரச்னைகள் குறித்து இரு கூட்டத்தினருக்குமிடையே பலத்த மோதல்கள் எழுந்தன.

ஏசுவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் அப்போஸ்தலர்களுடன் சேர்ந்து ஏசு கடைபிடித்த பழக்க வழக்கங்களையே பின் பற்ற வேண்டும் என்று கூறினர். இக் கூட்டத்தினர் பவுலை 'விரோதி' என அழைத்தனர். ஏசு மரித்து 70 ஆண்டுகள் வரை இக்கூட்டமே (ஜூதியோ கிறிஸ்டியானிடி) பெரும்பான்மையாக இருந்தனர். ஆரம்பத்தில் பீட்டரும் யோவானும் கூட இக் கூட்டத்தினருடன்தான் இருந்தனர். ஏசுவின் சொந்தமான ஜேம்ஸ் என்பவர் இக் கூட்டத்தின் தலைவராக இருந்தார். அவருக்குப் பின் ஏசுவின் மற்றொரு சொந்தமான கிளியோபாஸ் தலைமை ஏற்று நடத்திச் சென்றார். யூத-கிறித்தவர்கள் என இக்கூட்டம் அழைக்கப்பட்டது.

யூத-கிறித்தவர்களான இவ்வமைப்பினரே முதன்முதலாக சுவிசேஷங்களை ஹீப்ரு மொழியில் எழுதலானார்கள். கிறித்தவ மார்க்கத்தைப் பற்றிய பல நூல்களையும் அவர்கள் தொகுக்கலானார்கள். ஏசு மறைந்து ஒரு நூற்றாண்டு வரை இவர்களது கையே மேலோங்கி இருந்தது. ஜெருஸலம், பாலஸ்தீனம் மட்டுமல்லாது எகிப்து ரோம் வரை கூட இவர்களது ஆதிக்கம் பரவி இருந்தது. அதனால்தான் பவுல் எழுதிய நிரூபங்களில் 'மோதல்கள்' பற்றி அதிகம் குறிப்பிடுகிறார். கலாத்தியா, கோரிந்த், கோலோசேயா, ரோம், தெசலோனியா ஆகிய இடங்களில் எல்லாம் பவுல் எதிர்ப்பை சமாளிக்க வேண்டியிருந்தது.

சிரியாவிலும் ஆசியா மைனரிலும் யூத-கிறித்தவர்களின் கூட்டமே மிகைத்திருந்தது. கிரேக்க நாட்டிலும் இவர்களின் பிரச்சாரமே மேலோங்கி இருந்தது. ஆப்ரிக்க கண்டத்திற்கு கிறித்தவ மார்க்கத்தை முதன் முதலில் எடுத்துச் சென்றதே இக் கூட்டம்தான். முதன்முதலாக சுவிசேஷங்களை எழுத ஆரம்பித்ததும் இவர்களே.

இத்தகைய பின்னணியில்தான் மற்ற சுவிசேஷங்கள் எழுதப்படலாயின. எதிரி கோஷ்டியின் பிரச்சாரங்களை முறியடிக்க வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் எழுதப்பட்டவையே இன்று வழக்கில் இருந்து வரும் சுவிசேஷங்கள் ஆகும். கி.பி.70 ஆம் ஆண்டிலிருந்து சுவிசேஷப் போராட்டங்கள் ஆரம்பமாயின. யூதக்-கிறித்தவர்கள் யூதர்களில் ஒரு உட்பிரிவுதான் என்றும் பவுல் கோஷ்டியினர் பிரச்சாரம் செய்யலானார்கள்.

ஆனால் கி.பி. 70 ஆம் ஆண்டில் இருந்து நிலைமை மாறலாயிற்று. அப்போது நடைபெற்ற யுத்தத்தில் யூதர்கள் தோற்றுப் போயினர். அவர்கள் ஜெருஸலத்தில் இருந்து விரட்டப்பட்டனர். புதிதாக கிறிஸ்தவ மார்க்கத்தில் சேர்ந்தவர்கள் கூட்டமே பெரும்பான்மையாக இருந்தது. இவர்களுக்கு பவுல் அதிக சலுகைகளை அளித்திருந்ததால் பவுலின் பக்கமே இக்கூட்டம் சார்ந்து நின்றது. பெரும்பான்மையாகிவிட்ட இம் மக்கள் கூட்டம் ஜெருஸலத்தையும் பிற பகுதிகளையும் கைப்பற்றிக் கொண்டது. இறுதியில் பவுலுடைய கோஷ்டிக்கு வெற்றி கிட்டிவிட்டது. பவுல் எடுத்துச் சொன்னதும் விளக்கிச் சொன்னதுமான மார்க்கம்தான் கிறித்தவ மார்க்கம் என்றாகி விட்டது. யூத-கிறித்தவர்களின் செல்வாக்கு மங்கியது. அவர்கள் பல இடங்களுக்கு சிதறிப் போய் விட்டார்கள்.

இந்த வெற்றியைப் பார்ப்பதற்கு பவுல் உயிருடன் இல்லாவிட்டாலும் அவர் எடுத்துக் கொண்ட கட்சியே கிறித்தவ மார்க்கம் என்று நிலை நிறுத்தப்பட்டு விட்டது. யூதர்களை ஒட்டிய கிறித்தவர் நாளடைவில் நலிவடைந்து இல்லாமலேயே மறைந்து விட்டார்கள்.

Tuesday, September 22, 2009

பவுல்(பால்) எவ்வாறு கிறித்துவை கடவுளாக்கினார்?-1

பவுல்(பால்) எவ்வாறு கிறித்துவை கடவுளாக்கினார்?-1

//ஓர் உதவி. முன்பு ஒரு இஸ்லாமியப் பதிவர் பால் எப்படி கிறித்துவத்தை திசை மாற்றினார் என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். paul made jesus into a mythic character.

இதன் நகல் கிடைக்குமா?//-Dharumy

எனது முந்தய பதிவில் தருமி சார் கேட்டதின் நகல் என்னிடம் இல்லையாதலால் இது சம்பந்தமாக நான் படித்ததை தனி பதிவாக போடுகிறேன் என்று சொல்லியிருந்தேன். அதன்படி டாக்டர் மாரிஸ் புகைலின் 'விஞ்ஞான ஒளியில் பைபிளும் குர்ஆனும்' என்ற புத்தகத்தில் உள்ள செய்திகளை அப்படியே தருகிறேன் பலரும் விளங்கிக் கொள்வதற்காக.

டாக்டர் மாரிஸ் புகைல்: பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த இந்த டாக்டர் உடற்கூறு சிகிச்சை வைத்தியத்தில் கை தேர்ந்தவர்.மனிதர்களின் உடல்களை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தவருக்கு அந்த மனிதனின் ஆன்மா பற்றிய சிந்தனை எழுந்து விட்டது. அது பற்றி ஆராயத் தொடங்கி உலக மதங்களின் வேதங்களை ஆராயத் தொடங்கினார். அந்த வகையில் கிறித்துவின் வாழ்வில் எந்த அளவு உண்மை மறைக்கப் பட்டுள்ளது என்பதை அதில் பவுலின் பங்கு எந்த அளவு என்பதை இப்புத்தகத்தில் விரிவாக விளக்கியுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.

பழைய ஏற்பாட்டை எழுதியது யார்?

இக் கேள்வி பலருக்கும் ஆச்சரியத்தை விளைவிக்கலாம். ஒரு சிலர் விவிலிய வேதமான பைபிளின் முன்னுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவலை நம்மிடம் திருப்பிக் கூறுவர். இந்நூல்கள் மனிதர்களினால் எழுதப்பட்ட போதிலும் பரிசுத்த ஆவியினால் தூண்டப்பட்டு கோர்வை செய்யப்பட்டனவாகும் என்றும் எனவே இறைவனே இந்நூலின் ஆசிரியர் என்றும் அவர்கள் சொல்லக் கூடும்.

ஏசு நாதர் இறந்து நானூறு ஆண்டுகளுக்குப் பின்னர் திருச்சபை ஒரு பட்டியலைத் தயாரித்து இதில் அடங்கியுள்ள நூல்களே வேத நூல்கள் என பொது அறிவிப்புச் செய்தது. இந்தப் பட்டியலை கி.பி.1441 ஆம ஆண்டு பிளாரன்ஸில் கூடிய திருச்சபையும் 1546 ஆம் ஆண்டில் டிரென்டில் கூடிய திருச்சபையும் 1870 ஆம் ஆண்டில் கூட்டப்பட்ட முதலாவது வாடிகன் கவுன்சிலும் அங்கீகாரம் செய்து வந்துள்ளன. அந்தப் பட்டியல்தான் 'கேனான்' என்றழைக்கப்படும் வேத நூல் தொகுப்பாக இன்றளவும் இருந்து வருகிறது.

இரண்டாவது வாடிகன் கவுன்ஸில் 1962 ஆம ஆண்டு முதல் 1965 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தாற்போல் மூன்று ஆண்டுகள் கலந்தாலோசனை நடத்திய பிறகு பைபிளின் புதிய வெளியீட்டைக் கொண்டு வந்திருக்கிறது. ஒரு பாமரன் மேலெழுந்தவாரியாக இதைப் படிக்கும் போது இந்த வேதங்கள் செவ்வனே பாதுகாக்கப்பட்டுத்தான் வந்திருக்கின்றன என நம்பி விடுவான். இது குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இலேசில் எழாது.

என்றாலும் குருமார்களில் ஓரிருவர் இத்துறையில் ஆராய்ச்சிகள் செய்யாமல் இல்லை. அவர்கள் தங்களின் கண்டுபிடிப்புகளைத் தொகுத்து வைத்திருக்கின்றனர். அவை பொது மக்களின் பார்வைக்கு கொண்டு வரப் படுவதில்லை. அவை பல நூல் நிலையங்களில் மூலைகளில் தூங்கிக் கொண்டிருக்கின்றன.

அவற்றில் ஒன்று பேராசியர் எட்மண்ட் ஜாக்கப் பிரெஞ்சு மொழியில் எழுதிய 'பழைய ஏற்பாடு' என்ற நூலாகும். அந்நூலில் அவர் கூறியிருப்பதாவது:

'வேதங்கள் என்று சொல்லப்படுபவற்றில் ஆதி காலங்களில் பல வாய் மொழிகள் வழக்கில் இருந்து வந்தன. ஒரே மாதிரியான வாய் மொழிதான் இருந்து வந்தது எனச் சொல்ல முடியாது. பல்வேறு வாக்கு மூலங்கள் மக்களிடையே புழக்கத்தில் இருந்தன.நாளாக நாளாக அவை எழுத்து வடிவம் பெறலாயின. அதிலும் பல பிரிவுகள் வழக்கில் இருந்தன. இறுதியாக மூன்று வகையான வேத நூல்கள் ஹீப்ரு மொழியில் உருவாயின. ஏசு பிறப்பதற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் உள்ள நிலவரம் இது. இந்த மூன்று வேறுபட்ட நூல்களில் இருந்தும் உருவாக்கப்பட்டதே யூதர்கள் இன்று அழைக்கும் பென்டாடெஷ் என்ற தொகுப்பாகும். இதைத்தான் அவர்கள் 'தௌராத் வேதம்' என்கிறார்கள். மேற் கூரிய மூன்று ஹீப்ரோ மொழிகளில் இருந்து பல பகுதிகள் கிரேக்க மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. இவையே பின்னால் உருவான பைபிள்களுக்குக் கருவாக அமைந்தன. மூன்று விதமான வேத நூல்களையும் ஒன்றாகத் தொகுத்து ஒன்று படுத்தும் முயற்சி ஏசு பிறப்பதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை நடந்து வந்தது. இருப்பினும் ஏசு பிறந்து ஒரு நூற்றாண்டு கழிந்த பின்னரே பைபிளுக்குரிய கருப் பொருள்கள் ஒன்று திரட்டப்பட்டன.”

மேற் கூரிய கருத்துக்கள் பேராசிரியர் எட்மண்ட் ஜேக்கப் அவர்களுடைய நீண்ட ஆராய்ச்சிகளின் விளைவுகளாகும்.

மூன்று வகையான வேத நூல்கள் ஹீப்ரு மொழியில் வழக்கில் இருந்திருக்கின்றன. அவை அப்படியே பாதுகாக்கப்பட்டு வந்திருக்குமாயின் இன்று நாம் அவைகளை ஒன்றுடன ஒன்று ஒப்பிட்டுப் பார்த்து உண்மையை உய்த்து உணர்வதற்கு உதவியாக இருந்திருக்கும். துரதிர்ஷ்டவசமாக அவை குறித்து ஒரு துப்புக் கூட இன்று கிடைக்கவில்லை.

பழைய ஏற்பாடு முதன் முதலாக முழுமையாக கிரேக்க மொழியில் கி.மு.மூன்றாவது நூற்றாண்டில் மொழி பெயர்க்கப்பட்டது. அலெக்சாண்டிரியாவில் வாழ்ந்த யூதர்களே இப்பணியைச் செய்து முடித்திருக்கிறார்கள். இந்த கிரேக்க மொழி பெயர்ப்புதான் பிற் காலத்தில் உருவான புதிய ஏற்பாட்டிற்கு மூலமாக அமைந்தது. கி.பி.ஏழாவது நூற்றாண்டு வரை இந்த 'பழைய ஏற்பாடு' அப்படியே பாதுகாக்கப்பட்டிருந்தது.

ஆனால் செயின்ட் ஜெரோம் என்ற மத குரு கி.பி.ஐந்தாவது நூற்றாண்டில் ஹீப்ரு மூல நூல்களில் இருந்து லத்தீன் மொழியில் ஒரு பைபிளைத் தயாரித்தார். இதுவே உல்மேட் என்று அழைக்கப்படுகிறது. செயின்ட் ஜெரோம் தயாரித்த பைபிளே கிறித்தவ உலகத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு பரவலாக வழக்கில் இருந்து வருகிறது. லத்தீன் மொழி பெயர்ப்பு அல்லாமல் அராமிக் மொழியிலும், சிரியாக் மொழியிலும், பைபிள்கள் வெளி வந்தும் இருக்கின்றன.

எனவே ஹீப்ரு, கிரேக்கம், லத்தீன் சிரியாக், அராமிக்,அரபி ஆகிய பல மொழிகளில் விவிலிய வேதம் வழக்கில் இருந்தபோது சில ஆராய்ச்சியாளர்கள் எல்லா நூல்களில் இருந்தும் அவர்களது யுக்திக்கு ஏற்ற வகையில் அங்கிருந்து கொஞ்சம், இங்கிருந்து கொஞ்சம் என்ற முறையில் பல விஷயங்களையும் ஒன்று திரட்டி புதிய பைபிள்களைத் தயாரிக்கலானார்கள். அம் மாதிரித் தயாரிப்புத்தான் 1957 ஆம் ஆண்டு லண்டன் நகரில் அச்சிடப்பட்ட வால்டன் பைபிள் என்பதாகும்.

கிறித்தவர்களுக்குள்ளேயே பலவித உட்பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் ஏற்றுக் கொண்டுள்ள பைபிள்கள் பல மாதிரியானதாகவிருக்கும். வார்த்தை வித்தியாசம், கருத்து வித்தியாசங்கள் உண்டு. பல்வேறு கிறித்தவ பிரிவுகளும் இன்று ஒன்று கூடி ஒரே மாதிரியான பைபிளைத் தயாரிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். கத்தோலிக்கப் பாதிரிகளும், புரோட்டஸ்ட் பாதிரிகளும் கூட்டாக முயற்ச்சித்து இறுதியில் அதில் வெற்றியும் கண்டு விட்டனர். அவர்களது புதிய தயாரிப்புக்கு (The Ecumencial Translation Of The Old Testament) எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. 1975 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்நூல் வெளியிடப்பட்டு விட்டது.

மேலே கூறியவற்றில் இருந்து இன்று வழக்கில் இருக்கும் பழைய ஏற்பாடு என்ற வேதநூல் எப்படி உருவாயிற்று என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். மனிதக் கரம் இதில் அதிகமதிகம் விளையாடி இருக்கிறது. சுமார் இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றில் ஒவ்வொரு தடவை புதிய பதிப்பு தயாரிக்கும் பொழுதெல்லாம் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மொழி பெயர்ப்பிலும் வாசகங்கள் கூட்டிக் குறைக்கப்பட்டிருக்கின்றன. காலா காலமாக இந்தத் 'திருத்தும் வேலை' நடந்தே வந்திருக்கிறது.

குறிப்பு: இஸ்லாத்தை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் முகமது நபியின் போதனைக்கு மாற்றமாக இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளில் எல்லாம் ஊருக்கு ஊர் தர்ஹாக்களைக் கட்டி வைத்து அந்த மகான்களை இறைவனுக்கு சமமாக வழிபடுவதையும் பார்க்கிறோம். அதே போல் ருக்,யஜூர்,சாம,அதர்வண வேதங்கள் உருவ வழிபாட்டைப் போதிக்கவில்லை. சித்தர்கள் கூட 'நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்' என்று உருவ வழிபாட்டைக் கண்டிக்கிறார். திருக்குறளிலும் உருவ வழிபாட்டைப் பற்றி சொல்லவில்லை. ஆனால் இந்து மதம் இன்று முழுக்க முழுக்க உருவ வழிபாட்டையே அடிப்படையாகக் கொண்டு இயங்கும் காட்சியையும் பார்க்கிறோம். இவை எல்லாம் வேத நூல்கள் ஒன்றைச் சொல்ல காலப் போக்கில் மனிதனின் மனம் அந்த வேதக்கருத்துக்களையே மாற்றி அதற்கு எதிரான திசையில் செல்ல ஆரம்பித்து விடுகிறது. இது எல்லா மதத்துக்கும் பொருந்தும். எனவே இப்பதிவு அந்த தவறுகளை சுட்டிக் காட்டத்தானே யொழிய யார் மனத்தையும் புண்படுத்தும் நோக்கம் கண்டிப்பாக இல்லை என்றும் சொல்லிக் கொள்கிறேன்.

-தொடரும்

Saturday, September 19, 2009

சவுதிகளிடம் உள்ள சில நல்ல பழக்கங்கள்.!



நோன்பு மாதம் முடியும் தருவாயில் இருக்கிறது. இந்த நேரத்தில் சவுதி நாட்டவர்களிடம் உள்ள சில நல்ல பழக்கங்களை நாம் தெரிந்து கொள்வோமா!

மாலை நேரம் நெருங்கியவுடன் வேலையின் காரணமாக பலருக்கும் குறித்த நேரத்தில் வீடு சென்று சேர இயலாது. எனவே காலையிலிருந்து பசித்து தாகித்திருந்த பலரும் நோன்பு திறக்கும் நேரத்தில் மிகுந்த சிரமம்எடுத்துக் கொள்வார்கள். ஆனால் இவர்களின் சிரமத்தைக் குறைக்கும் பொருட்டு பல சவுதிகளும் தன் குழந்தைகளுடன் ஒவ்வொரு சிக்னலிலும் காத்திருப்பார்கள். ஒரு பாட்டில் தண்ணீர், ஒரு மோர் பாக்கெட், சில பேரித்தம் பழங்கள், ஒரு பாட்டில் பழ ரசம், ஒரு கேக் இத்தனையும் தங்களின் சொந்த செலவிலேயே வாங்கி நோன்பு திறக்கும் நேரத்தில் சிக்னலில் காத்திருப்பார்கள். ஐந்து நிமிடம் முன்பு சிக்னலில் நிற்கும் அத்தனை பேருக்கும் ஓடி ஓடி அந்த பைகளை கொடுக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சி. சிறுவர்களும் பசியோடு சுறுசுறுப்பாக வேலை செய்வதை நாம் அனைவரும் பார்க்க முடியும். இதுவல்லவோ மனித நேயம்.

அதே போல் பல கோடீஸ்வரர்கள் மசூதிகளில் வரிந்து கட்டிக் கொண்டு நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சிகளை தங்கள் செலவிலேயே செய்வதை பார்க்கிறோம். அதற்காக அவர்களின் உடல் உழைப்பையும் கொடுப்பதை நான் பார்த்து நான் ஆச்சரியப்பட்டுள்ளேன். நோன்பையும் வைத்துக் கொண்டு 200, 300 பேருக்கு பரிமாறுவது என்பது சாதாரண விஷயமல்ல. அதுவும் பசியே என்னவென்று பார்த்திராத சவுதிகள் செய்வதுதான் நமக்கு ஆச்சரியமாக படும்.

அடுத்து நோன்பு முடிந்து பெருநான் ஆரம்பமானவுடன் ஆஸ்பத்திரியில் முடியாமல் இருக்கும் தங்கள் சொந்த பந்தங்களை அவர்களுக்கு பிடித்தமானவைகளை சமைத்துக் கொண்டு பிள்ளைகள், மனைவி சகிதம் சென்று பார்ப்பார்கள். அந்த நேரத்தில் தனிமையில் இருக்கும் அவர்களுக்கும் இந்த நல்ல நாளில் தன் குடும்பத்தவரைப் பார்ப்பதில் மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கும். சவுதிகளின் பெரும்பாலான குடும்பங்கள் பெருநாளன்று மதியம் ஆஸ்பத்திரியில் காணக் கூடியதாக இருக்கும். முகமது நபியின் சொல்லுக்கும் இந்த மக்கள் எந்த அளவு கட்டுப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டேன்.

அதே போல் நோன்பில் செய்த சிறு சிறு தவறுகளுக்கு பரிகாரமாக பிஃத்ரா என்ற தர்மத்தை ஒவ்வொரு நபருக்கும் கடமையாக்கி அதை ஏழைகளுக்கு சென்றடையுமாறு முகமது நபி கட்டளையிட்டுள்ளார். அந்த ஒரு நாளாவது ஏழைகள் சற்று சுயமரியாதையோடு தங்கள் வீட்டிலேயே சமைத்து சாப்பிடட்டும் என்பதற்காக செய்யப்பட்ட ஒரு ஏற்பாடு. இதையும் சவுதிகள் கடை பிடிப்பதால் அன்று கையேந்துபவர்களை பார்ப்பது அரிதாக இருக்கும். கடந்த பத்து பதினைந்து வருடமாக நம் தமிழகத்திலும் இந்த முறையை பின் பற்ற ஆரம்பித்துள்ளனர். பெருநாளுக்கு முதல்நாள் ஒவ்வொரு ஏழைகளையும் ஊரில் கணக்கெடுத்து அவர்கள் வீடு தேடி சென்று இந்த தர்மத்தைக் கொடுக்கின்றனர். இதனால் பெருநாளன்று தற்காலங்களில் வறியவர்களை பார்ப்பதே அரிதாக இருக்கிறது. பல இலட்சங்களை தௌகீது ஜமாத், த.மு.மு.க போன்ற அமைப்புகள் வசூலித்து ஏழைகளுக்கு அளித்து வருகின்றனர்.

இது போன்று சவுதிகளின் மற்ற பழக்கங்களையும் பெருநாளன்று நம் மக்கள் கொண்ட வர பழக வேண்டும். இதற்கு மாற்றமாக புது துணிகளை உடுத்துவதாலோ, கும்பலாக சேர்ந்து சினிமா பார்ப்பதாலோ, பட்டாசு வெடிப்பதாலோ, வகையாக பிரியாணி சமைத்து சாப்பிடுவதாலோ மட்டும் நாம் பெருநாளைக் கொண்டாடியவர்களாக ஆக முடியாது. நம் பக்கத்தில் உள்ள வறியவர்கள், நம் ஊரில் உள்ள வறியவர்களை சாதி மத பேதம் பார்க்காமல் உதவ நாம் பழக வேண்டும்.

இந்த பெருநாளில் என் நாடும், என் மக்களும், உலக மக்களும் அமைதியான வாழ்வு வாழ எல்லோருக்கும் பொதுவான அந்த ஏக இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன்.

எல்லோருக்கும் ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்.

Tuesday, September 15, 2009

போலி டோண்டுவால் நானும் பாதிக்கப்பட்டேன்!

மறந்திருந்த போலி விவகாரம் மோகன் கந்தசாமியின் பதிவால் திரும்பவும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதே மூர்த்தி என்னோடு விளையாண்டதையும் சற்று அசை போடுவோமா?

'இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்' என்ற என் பதிவில் தமிழ் மணத்தின் நிர்வாகிகளில் ஒருவரான காசி ஆறுமுகத்தின் பேரில் 'பதிவுக்குப் பாராட்டுகள்' என்று பின்னூட்டியிருந்தார் மூர்த்தி. நம்மை பாராட்டி காசி எழுதியிருக்கிறார் என்று நானும் சந்தோஷப்பட்டேன். எனக்கு அப்போது போலி விவகாரம் எல்லாம் அந்த அளவு தெரியாது. அந்த பதிவிலேயே டோண்டு ராகவன் 'உங்களை போலி டோண்டு நன்றாக காசியின் பெயரில் ஏமாற்றியிருக்கிறார்' என்று பின்னூட்டியிருந்தார். நான் எழுதுவது பிடிக்காமல் டோண்டு என்னைக் குழப்புகிறாரோ என்று நினைத்து விட்டேன். திடீரென்று ஒரு நாள் என் பதிவுகள் தமிழ் மணத்திலிருந்து நீக்கப்படுகிறது. பிறகு தான் தமிழ் மணத்தின் எச்சரிக்கை கடிதமும் எனக்கு கிடைக்கப் பெற்றது. தாமதமாக நான் அந்த கடிதத்தை பார்க்க நேர்ந்தது என்பதை உணர்ந்து கொண்ட தமிழ் மண நிர்வாகம் பிறகு என்னை திரும்பவும் சேர்த்துக் கொண்டது. அந்த போலியின் பின்னூட்டத்தையும் அழித்து விட்டேன். அப்பொழுதுதான் போலி டோண்டுவின் திருவிளையாடல்கள் மற்றவர்களை எந்த அளவு பாதிக்கும் என்று தெரிந்து கொண்டேன்.

அடுத்ததாக டோண்டுவின் பதிவில் சென்று சில பின்னூட்டங்களை இட்டேன். வந்தது வினை. 'ஏண்டா...சல்மா அய்யுப் என்ற பெயரில் உன் மதத்தை கிழி கிழி என்று கிழித்தானே! அவன் உனக்கு டோண்டு சாரா! இனிமேல் அவனுக்கு பின்னூட்டமிட்டால் இதை விட மோசமாக உன் பதிவில் பின்னூட்டமிடுவேன்' என்று மிரட்டினார். இதற்காக நாம் நம் கருத்தை சொல்லாமல் இருக்க முடியுமா என்று தொடர்ந்து அவருக்கு பின்னூட்டம் இட்டேன். சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் என் தாத்தாவை அழைக்க வரும் போது டோண்டு ராகவனையும் சந்தித்தேன். இது சம்பந்தமாக நானும் அவரும் தனித் தனி பதிவாகவே போட்டுள்ளோம். இது மூர்த்தியை மேலும் எரிச்சல் படுத்தியது. தொடர்ந்து என் பதிவுகளில் என்னையும் என் குடும்பத்தையும் பற்றி எவ்வளவு தரக்குறைவாக எழுத முடியுமோ அந்த அளவு தரக்குறைவாக எழுத ஆரம்பித்தார். அனைத்து பின்னூட்டங்களும் 'டூண்டு' என்ற பெயரில் வரும். படித்தவர்களில் இவ்வளவு தரக் குறைவாகக் கூட எழுத முடியுமா என்று நான் ஆச்சரியப்படுவதுண்டு. அனைத்தையும் படித்து விட்டு 'இறைவன் அவருக்கு நல்ல புத்தியைக் கொடுக்கட்டும்' என்று அழித்து விடுவேன்.

டோண்டு ராகவன் அவர்களோடு எனக்கு நிறைய கருத்து வேறுபாடுகள் உண்டு. சாதியை உயர்த்திப் பிடிப்பதிவிருந்து பல விஷயங்களில் அவரோடு மாறுபடுகிறேன். இதனால் அவரை நான் வெறுக்க வேண்டுமா? அடுத்து 'நீ இவருக்கு பின்னூட்டம் இடக் கூடாது' என்று எந்த உரிமையில் மூர்த்தி எனக்கு கட்டளையிடுகிறார். இது தனி மனிதனின் உரிமையில் தலையிடுவதல்லவா? இதை ஏன் மெத்த படித்த மூர்த்தியும் அவரது நண்பர்களும் உணரவில்லை?

போலி டோண்டுவிடம் சாதி எதிர்ப்பு என்ற நல்ல எண்ணம் இருந்தாலும் அந்த எதிர்ப்பை காட்டிய விதம்தான் பலரையும் எரிச்சல்படுத்தியது. பலரை எதிரிகளாகவும் ஆக்கியது.

சில காலத்துக்குப் பிறகு நம் வாழ்க்கையில் இணையத்தில் இது போன்ற நிகழ்வுகளெல்லாம் நிகழ்ந்துள்ளது என்பதை நினைவூட்டிக் கொள்வதற்காகவே இந்த பதிவு.

'இன்னா செய்தாரே ஒறுத்தல்-அவர்நாண
நண்ணயம் செய்து விடல்.'

Sunday, September 13, 2009

கிருத்தவத்தை தழுவிய முஸ்லிம் மாணவி!



அமெரிக்க பத்திரிக்கைகளில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு நிகழ்வு பாத்திமா ரிப்கா பேரி என்ற முஸ்லிம் மாணவி கிருத்தவ மார்க்கத்தை தேர்ந்தெடுத்ததை. கடந்த 2000 ஆம் ஆண்டு இலங்கையை விட்டு அமெரிக்காவுக்கு குடி பெயர்கிறது பேரியின் குடும்பம். பாத்திமாவுக்கு கண்ணில் சிறு ஆபரேஷன் பண்ண வேண்டி இருந்ததால் அமெரிக்காவில் வந்து குடும்பத்தோடு செட்டில் ஆகிறார்கள். தந்தை முகமது பேரி தனது இரு பிள்ளைகளையும் கிறித்தவ கான்வென்டில் படிக்க வைக்கிறார். இங்குதான் பிரச்னை ஆரம்பம் ஆகிறது.

அந்த கான்வென்டில் கிறித்தவ மார்க்கத்தை போதிக்கிறார்கள். அந்த போதனைகளில் மெய் மறந்த பாத்திமா கிறித்தவராக மாறுகிறார் ரகசியமாக. ஒரு முறை பாத்திமாவின் சகோதரன் தன் தங்கை கையில் பைபிளோடு மற்ற குழந்தைகளிடம் மதப் பிரச்சாரம் செய்வதை பார்த்து விடுகிறான். சகோதரியின் நிலைமையை தனது தந்தையிடம் மகன் சொல்ல பிரச்னை வெடிக்கிறது. தனது மகளை திரும்பவும் இஸ்லாத்துக்குள் வந்து விடுமாறு தந்தை கண்டிக்க பிரச்னை அதிகமாகவே வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார் பாத்திமா. ஓர்லோண்டோவில் உள்ள சர்ச்சில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறார் பாத்திமா.

'படிக்க அனுப்பிய குழந்தையை மனம் மாற்றி என்னிடமிருந்து பிரித்து விட்டனர். என் மகள் இன்னும் மேஜராகவில்லை' என்று தந்தை முகமது கோர்ட்டில் கேஸ் போட்டுள்ளார். பாத்திமாவோ 'என்னை விட என் பெற்றோர் கடவுளைத்தான் அதிகம் நேசிக்கிறார்கள். நான் திரும்பவும் வீட்டுக்கு செல்ல மாட்டேன்' என்கிறார். இவரின் தாயோ 'என் ஒரே மகளை என்னிடம் திருப்பித் தாருங்கள்' என்று கண்ணீர் மல்க கூறுகிறார்.

'நூர் இஸ்லாமிய அழைப்பு மையத்தோடு என் பெற்றோர் தொடர்பு வைத்துள்ளனர். நான் அங்கு சென்றால் என்னையும் தீவிரவாதியாக மாற்றி விடுவார்கள். என்னை கொன்றும் விடுவார்கள்' என்று பாத்திமா தனது பெற்றேறாரைப் பற்றி பேட்டியும் கொடுத்துள்ளார்.

ஆனால் நூர் இஸ்லாமிய அமைப்போ புது முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தை பயிற்றுவிக்கும் அமைப்பாகவும் பல நற்பணிகளையும் செய்து வருகிறது. கொலம்பஸ் மாகாண போலீஸோ பாத்திமாவின் குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை என்கிறது. நூர் இஸ்லாமிய அமைப்பின் நடவடிக்கைகளை மட்டுப்படுத்த பாத்திமாவை பகடைக்காயாக பயன்படுத்துவதாக முகமது பேரியும் மற்றும் பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது குழந்தைகளை பெற்றோர்கள் சேர்க்கும் போதே தனது கலாச்சாரத்துக்கு ஏற்ற பள்ளிகளாக பார்த்து சேர்த்தால் இது போன்ற பிரச்னைகளிலிருந்து நாம் தப்பிக்கலாம். டீன் ஏஜ் பிள்ளைகளின் விஷயத்தில் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த வயதுதான் அவர்களை மிகவும் தடுமாற வைக்கும் வயது.

பிற்காலத்தில் ஏசுநாதர் கடவுளல்ல அவரும் முகமது நபியைப்போல ஒரு இறைத்தூதர்தான் என்ற உண்மையை உணருகிறாரா அல்லது கிறித்தவத்திலேயே ஐக்கியமாகி விடுகிறாரா என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Tuesday, September 08, 2009

நரேந்திர மோடியின் மற்றொரு போலி என்கவுண்டர்!



2004 ஜீன் மாதம் ஒரு இளம் பெண்ணும் மற்றும் மூன்று முஸ்லிம் இளைஞர்களும் 'நரேந்திர மோடியை கொல்ல மும்பையிலிருந்து வந்தார்கள்' என்ற பொய்க் காரணம் கற்ப்பித்து கொல்லப்பட்டனர். ஆனால் அவர்களை போலீஸே மும்பையில் கைது செய்து குஜராத்துக்கு அழைத்து வந்து போலி என்கவுண்டரில் சுட்டுத் தள்ளியுள்ளதாக விசாரணை முடிவில் தெரிய வந்துள்ளது. நீதிபதி எஸ்.பி.தாமங்க் தனது அறிக்கையில் 'குற்றமற்ற இவர்களை தங்களின் பதவி உயர்வுக்காக போலீஸார் அநியாயமாக கொன்றுள்ளனர். பாகிஸ்தானிய அமைப்புகளுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்று கூறியுள்ளார்.

எர்ஷத் ஜஹான் மற்றும் மூன்று அப்பாவி முஸ்லிம்களின் உயிரை குடித்த அதிகாரி டி.வங்சாரா தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார். விசாரணை முடிவில் இதில் நரேந்திர மோடியின் பங்கு எந்த அளவு என்பதும் தெரிய வரும். தான் முதல்வராக நீடிப்பதற்க்காக தன் மக்களையே இந்த அளவு ஒரு அரக்கன் கொன்று குவிப்பதை பார்த்து நடுநிலையாளர்கள் மோடியின் முகத்தில் காரி உமிழ்கின்றனர். இதில் பிரதமராவதற்கான கனவு வேறு.

அமெரிக்கா இவருக்கு விஷா மறுத்ததிலும், நம் நாட்டு நீதிமன்றமே இவரை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டு கூறியதிலும், டெஹல்காவின் புலனாய்வு வெளியானதிலும் வெட்கமடைந்து தனது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் அதை எல்லாம் உதிர்த்தவரல்லவா இவர். இவர் ஆட்சி போன பிறகு இவரது நிலையை நினைத்து பரிதாபப்பட்டேன். பார்ப்போம் இன்னும் எத்தனை காலம் இவரின் ஆட்டம் என்று.

Claiming that Ishrat and the three others were killed by the police officers for their personal interest — to get promotions and appreciation from the Chief Minister — Mr. Tamang appended a list of top police officers, running to about two pages, whom he held responsible for the fake encounter. Besides Mr. Vanzara and his then deputy in the Crime Branch police, N. K. Amin, who along with Mr. Vanzara was arrested in the Sohrabuddin case, the list includes the then Ahmedabad Police Commissioner, K.R. Kaushik, the then chief of the Crime Branch, P.P. Pandey, and another alleged encounter specialist Tarun Barot.

Mr. Tamang’s report said the Crime Branch police “kidnapped” Ishrat and the others from Mumbai on June 12 and brought them to Ahmedabad. The four were killed on the night of June 14 in police custody, but the police claimed that an “encounter” took place the next morning on the outskirts of Ahmedabad. That rigor mortis set in between 11 p.m. and midnight the previous night clearly pointed to the fact that the police pumped bullets into Ishrat’s lifeless body to substantiate the encounter theory.

The report said explosives, rifles and other weapons allegedly found in the car, in which the four victims were “travelling to Ahmedabad from Mumbai,” and some of the weapons found on their person were all “planted” by the police.
Mr. Tamang said there was no evidence to link Ishrat Jahan and another victim, Javed Sheikh, with the Pakistan-based terror group, Lashkar-e-Taiba. Neither was there anything to establish that they had “come” to Gujarat to kill Mr. Modi.
-The Hindu

Sunday, September 06, 2009

பங்களாதேஷிகள் இந்தியர்களாக மாறும் வினோதம்!

சமீப காலமாக சவூதி அரேபிய அரசாங்கம் பங்களாதேஷிலிருந்து பணிக்கு ஆட்கள் எடுப்பதை நிறுத்தி விட்டது. சவூதி நாட்டவர் பங்காளிகளை அதிகம் விரும்புவதில்லை. மேலும் அவர்களில் பெரும்பான்மையோர் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதும் அதிகமான குற்ற செயல்களில் ஈடுபடுவதும் கூட முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அரசாங்கம் விசாக்களை நிறுத்தி ஆறு மாதத்துக்கு மேல் ஆகிறது. ஆனால் புதிய பங்காளிகளின் வருகை மட்டும் குறைந்த பாடில்லை. இது எனக்கு ஆச்சரியமாகப் படவே புதிதாக வந்த ஒரு பங்காளியிடம் இது விஷயமாக பேசிப்பார்த்தேன். அவன் சொன்ன விஷயம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நான்: அரசாங்கம் உங்களுக்கான விசாக்களை அடியோடு நிறுத்தி விட்டது. பிறகு உங்கள் நாட்டவர் எப்படி புதிது புதிதாக வருகின்றீர்கள்?

பங்காளி: இது தெரியாதா? உங்கள் நாட்டுக்கும் எங்கள் நாட்டுக்கும் உள்ள எல்லையோர மாநிலங்களான திரிபுரா,அஸ்ஸாம் போன்றவற்றின் காட்டுப் பகுதிகள் வழியாக இந்தியாவிற்க்குள் நுழைந்து விடுவோம். அங்கிருந்து மும்பையிலோ அல்லது வேறு எல்லையோர மாநிலத்திலிருந்தோ பாஸ்போர்ட் எடுத்து இந்தியனாக வந்து விடுவோம்.

நான்: நீங்கள் எல்லையைக் கடக்கும் போது ராணுவத்தினர் சோதனையிடுவதில்லையா?

பங்காளி: நாங்கள் எல்லையைக் கடப்பது அதிகமாக இரவு நேரங்களில். அப்படியே ராணுவத்தின் கண்ணில் பட்டால் 5000 மோ 10000 மோ கொடுத்து ஊடுருவி விடுவோம். எங்களைப் போன்றோருக்கு பாஸ்போர்ட் எடுப்பதற்க்காகவே நிறைய ஏஜண்டுகள் உள்ளனர்.

நான்: சரி. கள்ள பாஸ்போர்ட் எடுத்து வந்து விடுகிறீர்கள். திரும்பவும் சவூதியிலிருந்து உங்கள் நாட்டுக்கு எப்படி திரும்பி போவீர்கள்?

பங்காளி: வந்த வழியேதான். சவூதியிலிருந்து மும்பை செல்வோம். பிறகு அங்கிருந்து பஸ்ஸில் திரிபுரா, அஸ்ஸாம் பயணிப்போம். அங்கிருந்து இரவில் எல்லையைக் கடப்போம்.

அடப் பாவிகளா! இது என்ன தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் போகிற பயணமா? எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் அவன் சொன்ன செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இது போன்ற ஊடுருவல்காரர்களால் நம் நாட்டுக்கு மிகப் பெரும் ஆபத்து காத்திருக்கிறது. இவர்களை பயன்படுத்தி சமூக விரோதிகளும் பணத்தில் கொழிக்கிறார்கள். நம் நாட்டின் உள் துறை அமைச்சகம் தூங்குகிறதா என்ன? சிதம்பரம் பொறுப்பு எடுத்த பிறகும் இதே நிலைதான்.

இதில் இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. பிற்காலத்தில் இவர்களை களை எடுக்கிறேன் என்ற போர்வையில் நம் நாட்டு பூர்வ குடிகளையும் அரசாங்கத்தால் சந்தேகிக்கப்படலாம். முன்பு மும்பையில் இது போன்ற ஒரு பிரச்னையை நம் நாட்டு பூர்வ குடிகளே சந்தித்து இருக்கிறார்கள்.

சவூதிக்கான இந்திய தூதரும் இதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். சிறுபான்மையினரின் நலன் காப்பது என்பதையும் வேறு நாட்டவர் நம் நாட்டில் கள்ளத்தனமாக குடியேறுதல் என்பதையும் ஒன்றாக போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் அரசு உடன் ஆவண செய்ய வேண்டும்.

Friday, September 04, 2009

பென்டகானில் இஃப்தார் நிகழ்ச்சி!



இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில்தான் அருளப்பட்டது. அது மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். பொய்யை விட்டு உண்மையை பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். இறைவன் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாட மாட்டான்.
-குர்ஆன் 2:1185


இறைவன் விடுத்த கட்டளையை உலக முஸ்லிம்கள் அனைவரும் கடை பிடித்து வருகின்றனர். பென்டகானும் இஃப்தார் நிகழ்ச்சிக்கான கதவை முதன்முறையாக திறந்து விட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் அனைத்து முஸ்லிம்களுக்காவும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை பென்டகான் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. ஜமால் பதானி என்பவரின் மேற்பார்வையில் இந்நிகழ்ச்சி ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. சுமார் 200க்கும் அதிகமான முஸ்லிம்கள் தங்களின் குடும்பத்தோடு கலந்து கொண்டிருந்தனர்.

முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதவருக்கும் புரிந்துணர்வு ஏற்பட இது போன்ற நிகழ்ச்சிகள் பெரிதும் துணை புரிகின்றன. அங்கு வந்த அதிகாரிகளின் வாக்கு மூலத்தை இனி ஆங்கிலத்திலேயே படிப்போம்.

“Tonight is a true representation of what American stands for,” said Nihad Awad, the head of Washington-based Council on American-Islamic Relations, “and for what all Americans can do for themselves and others in this country.” Navy’s Abuhena M. SaifelIslam, who led the Maghreb prayer said it was important to hold Iftarin the Pentagon, which was struck by terrorists in September 2001. “The Pentagon has its own gravity; it would probably lose the significance if we don’t hold it here in the Pentagon.”
But he admitted the event was becoming so popular it was becoming crowded. This was not only due to direct invitations, but also to the fact that “the Iftarinvitation was displayed throughout the Pentagon, so anybody working here — including non-Muslims — could attend if they wanted to.”
தந்தை பெரியாரும் தன் கடைசி காலத்தில் தான் எப்படி இறக்க வேண்டும் என்பதை சொல்லிச் சென்றதை சமீபத்தில் படித்தேன். அதையும் கீழே இணைக்கிறேன்.

முஸ்லிமாகச் சாவேன்: ஈ.வே. ரா அறிக்கை!

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-
‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் வரையிலும் இந்த ஜாதி, மத, புராணப் புரட்டுகளை ஒழிக்கப் போராடி சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன்.

ஏனென்றால் நான் செத்த பிறகு என் சொத்துக்களை, என்னை மோட்சத்திற்கு அனுப்புவதான புரட்டுகளால் என் சந்ததியாரை ஏமாற்றிப் பறிக்கப்படாமலும், அவர்கள் மூடநம்பிக்கையிலீடுபடாமலிருக்கச் செய்யவும்தான் நான் அவ்வாறு செய்யத் தீர்மானித்திருக்கின்றேன்.

நான் செத்தபிறகு என் சந்ததியார் என்னை மோட்சத்திற்கனுப்பப்படுமென்ற மூடநம்பிக்கையினால் பார்ப்பனர் காலைக்கழுவி சாக்கடைத் தண்ணீரை குடிக்காமலிருக்க செய்ய வேண்டுமென்பதற்காகவும்தான் நான் முஸ்லிமாகச் சாவேன் என்கிறேன். (திராவிடன் 05-08-1929)

இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமென்றும்,
இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமென்றும், பகுத்தறிவின் பரிச்சைக்குவிட்டு அதன்படி நடக்கத் தயார் என்றும் முஸ்லிம்கள் இன்று தைரியமாகச் சொல்லுகிறார்கள்.

அந்தப்படிச் சொல்ல மற்ற மதக்காரர்களுக்கு ஏன் தைரியமில்லை?

எனெனில் திரு. முகம்மது நபி கொள்கைகள் அனைத்தும் அநேக விஷயங்களால் அது பகுத்தறிவுக்கு நிற்கத்தக்க யோக்கிதையுடையதாய் இருக்கின்றது. -

குடி அரசு. ஆக. 23, 1931.

அனைவருக்கும் இதயம் கனிந்த ரமளான் நல் வாழ்த்துக்கள்.

Thursday, September 03, 2009

சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறலாமா?

சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறலாமா?

கேள்வி: சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறும் முறைக்கு இஸ்லாத்தில் அனுமதி உள்ளதா? முந்தய காலத்தில் தாய் அல்லாத மற்ற பெண் மூலம் குழந்தைக்கு பால் கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. பால் கொடுப்பதன் மூலம் அந்தப் பெண் தாய் அந்தஸ்தை அடைந்தாலும் தந்தைக்கும் அந்தப் பெண்ணுக்கும் எந்த உறவும் உடல் ரீதியாக ஏற்படுவதில்லை. பால்குடி முறையும் சோதனைக் குழாய் முறையும் ஒன்று போல் தோன்றுகிறதே? விளக்கவும்.

பதில்: சோதனைக் குழாய் மூலம் குழந்தைப் பெறுவதில் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. கணவனின் உயிரணுவை எடுத்து, செயற்கை முறையில் மனைவியின் கரு முட்டையுடன் சேர்த்து சோதனைக்குழாயில் வளர்த்து அதை மனைவியின் கருவறையில் செலுத்துவது ஒரு முறையாகும்.

ஒரு பெண்ணுக்கு அவளது கணவன் அல்லாத வேறொரு ஆணிடமிருந்து உயிரணுவை எடுத்து அதனுடன் அவளது கரு முட்டையைச் சேர்த்து குழந்தை பெற வைப்பது மற்றொரு முறையாகும்.

கணவன், மனைவி ஆகிய இருவரும் அல்லாத வேறு ஆண், பெண்ணிடமிருந்து உயிரணு, கருமுட்டையை எடுத்து அதை குழந்தையில்லாத பெண்ணின் கருவில் வளர்ப்பது மூன்றாவது வழிமுறையாகும். இவற்றில் முதலாவது வழிமுறைக்கு மட்டுமே இஸ்லாத்தில் அனுமதி உள்ளது.

'உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள், உங்கள் விளை நிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்'
குர்ஆன் 2:223


'உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள்' என்ற சொற்றொடர் மூலம் கணவனின் உயிரணுவை எடுத்து செயற்கை முறையில் மனைவிக்குச் செலுத்தலாம் என்றும் கணவன் அல்லாத மற்றவர்களின் உயிரணுவை எடுத்து இவ்வாறு செய்வது கூடாது என்றும் விளங்கலாம்.

பால்குடித் தாய் முறை என்பது இஸ்லாம் அனுமதித்த ஒன்றாகும். கருவறையில் அடுத்த ஆணிண் கருவைச் சுமப்பதற்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை. எனவே இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து இஸ்லாமியச் சட்டத்தைத் தீர்மானிக்கக் கூடாது.

நன்றி:ஏகத்துவம் மாத இதழ்

Wednesday, August 26, 2009

தாயைப் போல பூமியின் அரவணைப்பு!

தாயைப் போல பூமியின் அரவணைப்பு!

'உயிருடன் உள்ளோரையும், இறந்தோரையும் அணைத்துக் கொள்ளக் கூடியதாக பூமியை ஆக்கவில்லையா?'
-குர்ஆன் 77:25,26


பூமிக்கு உள்ள ஈர்ப்பு விசையை இந்த குர்ஆனின் வசனம் மெய்ப்பிக்கிறது. இதை ஒரு சிறு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம். கடைத் தெருவில் ஒரு தாய் தன் குழந்தையை கைகளைப் பிடித்தவாறு நடந்து அழைத்துச் செல்கிறாள். அந்த குழந்தை ஒரு கடையைப் பார்த்து விட்டு அங்கு செல்ல எத்தனிக்கும். உடனே தாயானவள் அந்த குழந்தையை தன் பக்கம் தன் கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டு வருவதைப் பார்க்கிறோம். அப்பொழுதுதான் அந்த குழந்தை தான் தனது தாயின் கட்டுப்பாட்டில் இருப்பதையே உணருகிறது.

அதே போல் தாயின் மார்போடு ஒரு குழந்தை அமர்ந்திருக்கும்போது தலையை அங்கும் இங்கும் அசைக்கும். அதை ஒரு பொருட்டாக அந்தத் தாய் எடுத்துக் கொள்வதில்லை. அதே சமயம் தாயின் அரவணைப்பிலிருந்து துள்ளிக் குதித்து இறங்க முயற்ச்சிக்கும் போது அந்த தாயின் பிடி மேலும் இறுகி தன் குழந்தையை அவளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறாள். இது நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சாதாரண ஒரு நிகழ்வு.

இதையே நாம் பூமிக்கும் பூமிக்கு மேல் வசிக்கும் கோடிக்கணக்கான ஜீவராசிகளையும் பொருத்திப் பார்ப்போம். நம்முடைய அன்றாட வாழ்வில் பூமி நம்மை அரவணைத்திருப்பதை நாம் உணருவதில்லை. எப்படி ஒரு குழந்தை தன் தாயின் அரவணைப்பை உணருவதில்லையோ அதைப் போல. அதே குழந்தை சில வருடங்களில் பெரிதானவுடன், அதே தாய் அந்த குழந்தையை தனியே வெளியில் சென்று விளையாட அனுமதிக்கிறாள். இனி குழந்தைக்கு தனது பாதுகாப்பு தேவையில்லை என்று தாய் உணருவதால் குழந்தையை தனியே விட்டு விடுகிறாள்.

அதே போன்றுதான் ஓரளவு அறிவு வளர்ச்சி அடைந்த மனிதன் பூமியின் ஈர்ப்பாற்றலுக்கு மேலே அதாவது ராக்கெட்டில் சென்றால், இனி தனது ஈர்ப்பாற்றல் மனிதனுக்கு தேவையில்லை என்று கருதி ராக்கெட்டின் பிடிப்பை பூமி தளர்த்தி விடுவதையும் பார்க்கிறோம்.

இந்த இடத்தில் குர்ஆனின் 'அணைத்தல்' என்ற வார்த்தைப் பிரயோகம் மிகவும் இலக்கியத்துடனும், அறிவியல் சார்ந்தும் மிகவும் கவனமாகக் கையாளப்பட்டுள்ளதை நினைத்து நாம் ஆச்சரியப்படுகிறோம்.

மனிதர்கள் மட்டுமின்றி, விலங்கினங்களாயினும் அல்லது உயிரற்ற பொருட்களாயினும் சிதறடிக்கப்படாமல் அவைகளை இருக்கும் இடத்திலேயே இருக்க வைப்பது பூமியின் ஈர்ப்பு விசையே ஆகும்.

மேலும் இந்த பூமி நாம் வாழ்வதற்க்கென்றே விஷேசமாக படைக்கப்பட்ட ஒரு கோளாகும். இதன் காரணமாகவே அதனுடைய ஈர்ப்பு விசை ஒரு இழு விசையாக நமக்குத் தோன்றாமல் நாம் அணிந்திருக்கும் உடை போன்று ஒரு இதமான அணைப்பாகத் தென்படுகிறது. இதற்கு மாறாக பூமியின் ஈர்ப்பு விசை நமக்கு ஒரு இழு விசையாக தென்பட்டால் நம்மால் இதன்மீது ஒரு போதும் வாழ இயலாது.

பூமியும் அசுர வேகத்தில் சுற்றுகிறது. அது சுற்றுவதோடு அல்லாமல் சூரியனையும் குற்றி வருகிறது. அதோடல்லாமல் மொத்த கேலக்ஸியுமே ஒரு இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு காரியங்கள் நடந்தும் நம்மால் அதை உணர முடிகிறதா?

ஆஹா... இறைவன் நம் மீது பொழிந்த கருணைக்கு அளவு உண்டோ?

'உயிருடன் உள்ளோரையும், இறந்தோரையும் அணைத்துக் கொள்ளக் கூடியதாக பூமியை நாம் ஆக்கவில்லையா?'
-குர்ஆன் 77:25,26

Friday, August 21, 2009

வரலாற்றுச் சின்னங்கள் ஒரு பார்வை!



நான் தற்போது பணி செய்து கொண்டிருக்கும் இடம் சவூதியின் மாநிலங்களில் ஒன்றான தபூக். இந்த இடமும் சுற்றியுள்ள இடங்களும் இஸ்லாம், கிறித்தவம், யூதம போன்ற மார்க்கங்களுக்கு மிக நெருங்கிய தொடர்புடைய பல பிரதேசங்களைக் கொண்டுள்ளது. தபூக்கிலிருந்து ஜோர்டான்,எகிப்து, பாலஸ்தீன், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு கடல் மார்க்கமாகவும், தரை மார்க்கமாகவும் எளிதாக பயணிக்க முடியும்.

சில மாதங்களுக்கு முன்பு திபா என்ற கடற்கரை பிரதேசத்துக்கு பயணித்திருந்தோம். மிகவும் அழகிய ஆரவாரம் இல்லாத கடற்கரை. நம் ஊர் மெரீனா கடற்கரையைப் போன்ற பெரிய அலைகளை பார்ப்பது அரிது. நிறமும் சற்று வித்தியாசப்படுகிறது. கடற்கரை ஓரம் நின்று பார்த்தாலே எகிப்தின் கடற்கரைகளை காணக் கூடியதாக இருக்கிறது.

அங்கிருந்து பிறகு மக்னா என்ற இடத்தை நோக்கி பயணித்தோம். இது வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் ஒன்று. 'டென் கம்மேண்ட்ஸ்' படம் பார்த்தவர்கள் கடல் அலைகள் பிளந்து தூதர் மோஸே (மூஸா)வுக்கு வழி விட்ட சம்பவத்தைப் பார்த்திருக்கலாம். அந்த படத்தில் வரும் காட்சி இடம் பெற்ற இடத்தில்தான் நாங்கள் நின்று கொண்டிருந்தோம். அந்த படத்தின் காட்சிகள் சூட் பண்ணப்பட்ட இடத்தையும் அங்குள்ளவர்கள் காட்டினார்கள்.

எகிப்து நாட்டின் பாரோ(பிர்அவுன்) மன்னன் தானே இறைவன் என்றும், தன்னையே வணங்க வேண்டும் என்றும் நாட்டு மக்களை மிரட்டுகிறான். இதற்கு இறைத்தூதர் மோஸேயும் அவரைப் பின்பற்றிய முஸ்லிம்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கோபம் கொண்ட மன்னன் மோஸேயையும் அவரது கூட்டத்தாரையும் அழிப்பதற்கு தனது படையுடன் துரத்துகிறான். மோஸேயும் அவரைப் பின்பற்றிய முஸ்லிம்களும் மன்னனின் தாக்குதலுக்கு அஞ்சி வெருண்டோடுகின்றனர். அப்போது அவர்களின் எதிரே கடல் குறுக்கிடுகிறது. முன்னால் கடல். பின்னால் மன்னனும் அவனது படைகளும்.

'இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டபோது 'நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்' என்று மூஸாவின் சகாக்கள் கூறினர்.
'அவ்வாறு இல்லை என்னோடு என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான்' என்று மூஸா கூறினார்.
'உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக!' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே கடல் பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போல் ஆனது.
அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம். மூஸாவையும் அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மன்னனையும் அவனது கூட்டத்தையும் மூழ்கடித்தோம்.'
-குர்ஆன் 26:61....66.


குர்ஆனின் இந்த வசனத்தின் படி மோஸேயும் அவரது கூட்டத்தாரும் வழி விட்ட கடலில் பயணித்து கடலின் மறு கரையான தற்போது நாங்கள் நிற்கும் இடத்தை அடைகின்றனர். இந்த இடத்தை அடைந்த மக்களுக்கு தாகம் எடுக்கிறது. உடனே அந்த மக்கள் 'மூஸாவே! எங்களுக்காக இறைவனிடம் தண்ணீருக்காகப் பிரார்த்திப்பீராக' என்ற கோரிக்கையை வைக்கிறார்கள். இனி குர்ஆன் சொல்வதைப் பார்ப்போம்.

'மூஸா தனது சமுதாயத்திற்க்காக நம்மிடம் தண்ணீர் வேண்டியபோது 'உமது கைத்தடியால் அந்தப் பாறையில் அடிப்பீராக!' என்று கூறினோம். உடனே அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த்துறையை அறிந்து கொண்டனர்.
-குர்ஆன் 2:60


மலைப்பாங்கான அந்த இடத்தில் ஊற்றுக்கள் வருவதற்கு அதிக சாத்தியங்கள் இல்லை. இறைவனின் ஆற்றலால் 12 ஊற்றுகள் பீறிட்டுக் கிளம்புகின்றன. மக்களுக்கும் தாகம் தணிகிறது. அந்த ஊற்றுகளில் சில ஊற்றுகளைத்தான் நாங்கள் பார்த்தோம். இன்றும் அந்த மலையிலிருந்து தண்ணீர் ஊற்றாக வந்து கொண்டிருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்தோம். சில ஊற்றுகள் பாலைவன புழுதிக் காற்றால் மூடப்பட்டு விட்டது. இந்த இடத்தை புனிதமாக நினைத்து மக்கள் வணங்க அரம்பித்து விடுவார்கள் என்ற பயத்தில் சவுதி அரசு இந்த இடத்தை அதிகம் பிரபல்யப்படுத்தவில்லை.

இந்த இடங்களில் சிலவற்றைத்தான் மேலே ஸ்லைட் ஷோவில் நீங்கள் பார்க்கிறீர்கள். மேலும் மலைகளை குடைந்து வீடுகளை அமைத்த இடங்களையும் பார்வையிட்டோம். அதுபற்றிய விபரங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.

Wednesday, August 19, 2009

மனிதனின் வக்கிரபுத்தி இப்படியா போக வேண்டும்!

ஸ்டார் சேனலில் ஒரு க்விஸ் புரோக்ராம் நடத்துகிறார்கள். இதற்காக பல லட்சங்களையும் அள்ளிக் கொடுக்கிறார்கள். உங்கள் வாழ்க்கையில் நடந்த அந்தரங்க செய்திகளை சம்பந்தப்படுத்தி பல கேள்விகளை கேட்கிறார்கள். அதற்கு நீங்கள் உண்மையான பதிலை சொல்ல வேண்டும். நீங்கள் பொய் சொன்னால் உங்கள் உடலோடு ஒட்டியிருக்கும் 'உண்மை கண்டறியும்' கருவி காட்டிக் கொடுத்து விடும். இந்த கேள்விகளுக்கு நீங்கள் உண்மையான பதில் அளித்தால் பல லட்சங்களைக் கொட்டிக் கொடுக்கிறார்கள். தன் குடும்ப வாழ்வு சீரழிந்தாலும் பரவாயில்லை பல லட்சங்களுக்கு அதிபதியாக வேண்டும் என்ற வெறியில் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். கேள்விகளில் சில மாதிரிகளை கீழே தருகிறேன்.

1.(குடும்ப தலைவி) உங்கள் கணவனை யாருக்கும் தெரியாமல் என்றாவது அடித்தது உண்டா?

2.(குடும்ப தலைவி) திருமணத்துக்கு முன்பு வேறு ஆண்களோடு உங்களுக்கு தொடர்பு இருந்ததா?

3.(குடும்ப தலைவி) தற்போதுள்ள கணவனை விட இன்னார் தனது கணவராக வாய்த்தால் நன்றாக இருந்திருக்குமே என்று என்றாவது எண்ணியது உண்டா?

4.(குடும்ப தலைவி) பத்து பதினைந்து வயதுகளில் உங்கள் சொந்தங்களில் யாராவது உங்களை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்களா?

5. உங்கள் கணவன் உங்களுக்கு ஏற்றவராக இல்லை என்று என்றாவது எண்ணியது உண்டா?

இதே போன்ற ரகங்களில் அமைந்த கேள்விகளே அதிகம் இடம் பெறுகின்றன. இதைவிட கொச்சையாகவும் பல கேள்விகள் கேட்கப்படுகிறது. அந்த அரங்கத்திற்குள் அந்த பெண்ணின் கணவன், குழந்தைகள், அண்ணன், தம்பி, போன்றோரையும் அழைத்து நேரிலேயே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் வைக்கிறார்கள். அவர்களும் சந்தோஷமாக அந்த நிகழ்ச்சியை புன்முறுவலோடு கண்டுகளிப்பது கண்றாவியாக இருக்கிறது.

ஒரு மனிதனின் சிறு வயதில் நடந்த அந்தரங்கங்களை இப்படி வெளிச்சம் போடுவதால் யாருக்கு என்ன நன்மை. ஏற்கனவே சாதி மத வித்தியாசம் இல்லாமல் விவாகரத்து அதிகரித்து வருகிறது. இது போன்ற நிகழ்ச்சிகளால் இந்த விகிதாச்சாரம் இன்னும் அதிகரிக்கும். இதைத்தான் ஸ்டார் டிவி விரும்புகிறதா? இதை எப்படி அரசு அனுமதிக்கிறது என்றும் தெரியவில்லை.

ஒரு உண்மை சம்பவம்:

கணவனுக்கு மனைவி மேல் ரொம்ப நாட்களாக சந்தேகம். இரண்டாவது குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறான். அதை எப்படி தெரிந்து கொள்வது? அதற்கு ஒரு திட்டம் தீட்டுகிறான்.

தன் மனைவியிடம் சென்று 'ஸ்டார் டிவியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் சொல். பல லட்சங்கள் நமக்கு கிடைக்கும். நம் கஷ்டமெல்லாம் தீரும் என்கிறான்'. மனைவியும் சம்மதிக்கிறாள். போட்டிக்கு முன் நம் வீட்டிலேயே ஒத்திகை பார்த்துக் கொள்வோம் என்று கூறி தான் போட்டி நடத்துபவராக மாறி மனைவியிடம் கேள்விகளை கேட்கிறான். 'உங்களுக்கு பிறந்த குழந்தைகள் அனைத்தும் உங்கள் கணவனுக்கு சொந்தமானவர்களா?' என்று கணவன் கேட்க மனைவியோ அப்பாவியாக பரிசை வெல்லனுமே என்று 'ஒரு குழந்தை என் கணவனுக்கு பிறக்கவில்லை' என்று உண்மையைப் போட்டு உடைக்க கோபத்தில் கணவன் மனைவியின் கழுத்தை அறுத்து விடுகிறான். தற்போது கணவன் சிறைச்சாலையில். மனைவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்.

இது போல் இன்னும் எத்தனை குடும்பங்கள் சீரழியப் போகிறதோ? நல்ல வேளை இன்னும் நம் தமிழ் சேனல்கள் பக்கம் இந்நிகழ்ச்சியைக் புண்ணியவான்கள் கொண்டு வரவில்லை என்று நினைக்கிறேன்.

Sunday, August 16, 2009

காந்திஜிக்கு சுதந்திர உணர்வை ஊட்டியவர்கள் யார்?

இன்றைக்கு சுதந்திரம் என்ற பெயர் கேட்டாலே அனைவருக்கும் நினைவில் வருவது மகாத்மா எனும் தேசப்பிதாதான். அந்த மகாத்மாவை தேசப்பிதாவாக மாற்றியவர்கள் யார் என்ற உண்மையை எல்லா வரலாற்றாசிரியர்களும் சாமர்த்தியமாக மறைத்து விட்டனர். ஆனால் மகாத்மா காந்தி தனது சுய சரிதையில் தனக்கு விடுதலை உணர்வை ஊட்டியவர்கள் யார் என்பதை மறக்காமல் குறிப்பிட்டுள்ளார். அவர்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை இப் பதிவில் பார்ப்போமா!

அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி, அப்துல் கரீம் ஆதம் ஜவேரி ஆகிய இருவரும் சகோதரர்கள். குஜராத்தில் போர்பந்தரில் பிறந்த இவர்கள் பல நாடுகளுக்குச் சென்று பெயர் சொல்லும் அளவுக்கு கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கினார்கள். 1865ம் ஆண்டு 'தாதா அப்துல்லாஹ் கம்பெனி' என்ற பெயரில் 50 சரக்கு கப்பல்களையும் 4 பயணிகள் கப்பல்களையும் கொண்ட மிகப் பெரிய நிறுவனத்தை இவர்கள் நிறுவினார்கள்.

இவர்களின் கம்பெனி அலுவலக வேலைகளை முறையாகச் செய்ய சட்டம் தெரிந்த ஒரு நபரை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அப்துல் கரீம் ஆதம் ஜவேரி அவர்கள் போர்பந்தரில் தனது வீட்டிற்க்கு அருகாமையில் இருந்த சட்டம் படித்து முடித்த இளைஞர் காந்தி அவர்களை அலுவலகப் பணிக்காக தனது சகோதரர்களுடன் கலந்து ஆலோசித்து 105 பவுண்டு சம்பளத்திற்க்கு வேலைக்கு அமர்த்தினார்கள்.

காந்தி என்ற அந்த இளைஞர் தேசப்பிதாவாக உருவாக்க விதை விதைத்த நேரம் இதுதான். 1863ம் ஆண்டு முதன்முறையாக காந்தி வேலையில் சேர்வதற்க்காக தென் ஆப்ரிக்கா பயணம் மேற்க்கொண்டார். அந்தப் பயணத்தில் இவர் ஒரு இந்தியன் என்பதால் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப் பட்டார். தென் ஆப்ரிக்காவில் உள்ள அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி அவர்களிடம் பயணத்தைப் பற்றிக் கூறும்போது ' நம் நாட்டிலே நமக்கு சுய மரியாதை இல்லை. அதை வேறு எங்கும் எதிர்பார்க்க முடியாது போலும்' என்றார் காந்தி.

உடனேயே 'நாம் உழைத்து உண்கிறோம். நாம் ஏன் சுய மரியாதையை இழக்க வேண்டும்? நாம் ஏன் நாட்டு மக்களுக்கு சுய மரியாதை கிடைக்க பாடுபடக் கூடாது?' என்ற கேள்விக் கணையைத் தொடுத்து காந்தியின் சுதந்திர உணர்வை தட்டி எழுப்பினர் ஜாவேரி சகோதரர்கள்.

அந்தக் கேள்விதான் காந்தியை தேச விடுதலைப் பற்றிய கவலையை ஏற்படுத்தியது. இதை காந்தி தன் சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார். பின்பு காலங்கள் உருண்டோட ஒரு நாள் அப்துல்லாஹ் கம்பெனி வழக்கறிஞர் பேக்கர் அவர்களுக்கு உதவியாக டர்பனிலிருந்து பிரிட்டோரியாவிற்க்கு புகை வண்டியில் முதல் வகுப்பு பெட்டியில் செல்லும்போது வெள்ளையர்களால் காந்தி அவமானப்படுத்தப் பட்டு மாரிட்ஸ்பார்க் ஸ்டேஷனில் இறக்கிவிடப்பட்டார். அங்குதான் காந்தியின் சுதந்திர உணர்வு கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

காந்தியும் ஜாவேரி சகோதரர்களும் சுதந்திர இந்தியாவைக் காண 'நேட்டால் இந்தியன் காங்கிரஸ்'
(Natal Indian Congress) என்ற அமைப்பை தென் ஆப்ரிக்காவில் நேட்டால் நகரிலுள்ள அவர்களது இல்லத்தில் 1894ம் ஆண்டு மே 22ல் ஆரம்பிக்கிறார்கள்.

அதன் முதல் தலைவராக அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி அவர்களும் முதல் செயலாளராக காந்தியும் நியமிக்கப்பட்டார்கள். இவ்வமைப்பின் மூலம் சுதந்திர உணர்வை மக்கள் மத்தியில் ஊட்டினார்கள். பின்பு 1896ல் நேட்டால் இந்தியன் காங்கிரஸின் இரண்டாவது தலைவராக அப்துல் கரீம் ஆதம் ஜவேரியும் இரண்டாவது செயலாளராக காந்தியும் நியமிக்கப் பட்டார்கள்.

பின்பு காந்தி தனது உறவினர்களைப் பார்ப்பதற்க்காக தாயகம் திரும்பினார்.1897ல் மீண்டும் இரண்டாவது முறையாக தென் ஆப்ரிக்கா சென்றார். தனது குடும்பத்துடன் எஸ்.எஸ். சூர்லேண்ட் என்ற தாதா அப்துல்லாஹ் கம்பெனியின் பயணக்கப்பலில் இலவசமாக பயணம் செய்தார். எஸ்.எஸ்.நாத்ரி என்ற இன்னொரு கப்பலும் சென்றது. மொத்தமாக 800 பயணிகள் பயணமானார்கள்.

இந்த பயணம் வைர வரிகளால் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டும். ஏனெனில் இந்தப் பயணத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் இந்தியர்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள். தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் துறைமுகத்திலிருந்து இந்தியர்கள் இறங்க அனுமதி வழங்கவில்லை.

இந்த தகவல் அறிந்த ஜவேரி சகோதரர்கள் இந்தியர்களின் சுதந்திர உணர்வுக்காக பிரிட்டிஷாரை கடுமையாக எதிர்த்தார்கள். ஜவேரி சகோதரர்களின் கடும் எதிர்ப்பைக் கண்டு கலங்கிய பிரிட்டிஷார் 23 நாட்கள் கழித்து இந்தியர்கள் அந்த துறைமுகத்தில் இறங்க அனுமதித்தனர்.

இது நேட்டால் இந்திய காங்கிரஸின் முதல் வெற்றி என்று வரலாற்றில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த சம்பவம் மறைக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு தாதா அப்துல்லா கம்பெனி பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இதைத் தொடர்ந்து நேட்டால் இந்தியன் காங்கிரஸ் சுதந்திர உணர்வை மக்கள் மத்தியில் பரப்ப ஆரம்பித்தது. சுதந்திர வேட்கையைத் தூண்டும் ஆணிவேராக இருந்த ஜாவேரி சகோதரர்களின் கடல் வாணிபத்தை வீழ்த்த திட்டம் தீட்டினர் பிரிட்டிஷார்.

அதன் விளைவாக அவர்களின் நான்கு பயணிகள் கப்பல்களும் பல துறைமுகங்களில் நின்ற நிலையிலேயே மூழ்கடிக்கப்பட்டன. இன்றைய மதிப்பின்படி கிட்டத்தட்ட 150 கோடி தொகையை ஜாவேரி சகோதரர்கள் இந்திய விடுதலைக்காக இழந்தனர். மூழ்கடிக்கப்பட்ட 4 பயணிகள் கப்பலில் ஒன்று எஸ்.எஸ். கேத்திவ் கப்பல் குஜராத் மாநிலம் போர்பந்தர் துறைமுகத்தில் மூழ்கடிக்கப்பட்டு இன்று வரை கடலுக்கடியில் இருக்கிறது.
நன்றி : விடியல் வெள்ளி

நாட்டு சுதந்திரத்திற்க்காக தங்கள் நிறுவனத்தையும் பணம் பொருள் அனைத்தையும் இழந்த இந்த ஜாவேரி சகோதரர்களை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? ஒருக்கால் இவர்கள் இந்து மதத்தில் அதுவும் உயர் சாதியில் பிறந்திருந்தால் இன்று நமக்கெல்லாம் அறியப்பட்டவர்களாக ஆகியிருப்பார்கள். உண்மைதானே!

Thursday, August 13, 2009

பிச்சைப் பாத்திரம் ஏந்தும் ஏமன் சிறுவர்கள்!



ரமலான் மாதங்களிலும், ஹஜ் நாட்களிலும் மக்கா மதீனா நகரங்களில் வெளிநாட்டவர் அதிகம் இருப்பர். இந்த நாட்களை பயன்படுத்தி சிறுவர்களை பிச்சை எடுக்க வைத்து ஒரு கும்பல் சவூதியில் பிழைக்கிறது. இந்த சிறுவர்கள் அனைவரும் பக்கத்து நாடான ஏமனிலிருந்து கடத்தி கொண்டு வரப்பட்டவர்கள். இந்த சிறுவர்களின் பெற்றோர்களின் ஏழ்மையை பயன்படுத்தி 'உங்கள் குழந்தையை நல்ல வேலையில் அமர்த்தி மாதா மாதம் பணம் அனுப்புகிறோம்' என்று கூறி சவூதிக்கு அழைத்து வருகிறார்கள். ஆனால் இங்கு அவர்களுக்கு கொடுக்கும் வேலையோ முழு நேரப் பிச்சைத் தொழில். ஐந்து நேரத் தொழுகைக்கும் மசூதிக்கு வெளியே இவர்களை நிறுத்தி வைப்பது. தொழுகை நேரம் முடிந்தவுடன் பெட்ரோல் பங்க், கடைத்தெரு என்று இவர்களை பிழிந்தெடுக்கிறது ஒரு கூட்டம். சவூதி அரேபியா முழுவதும் சுமார் 10000 சிறுவர்கள் இது போன்று பிச்சைத் தொழிலில் ஈடுபடுத்தப் படுவதாக அரப் நியூஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் ஒரு புறத்தை மட்டுமே குறை சொல்லி பிரயோசனம் இல்லை. 50 பைசா,ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று சிலலரையை மாற்றி நாம் பிச்சை போட்டு இது போன்ற கும்பல்கள் வளருவதற்கு நாமே காரணம் ஆகிறோம். ஒரு சிறுவன் (அஹமது 10 வயது) ஒரு நாளைக்கு 100 லிருந்து 150 ரியால் வரை சம்பாதிப்பதாகவும் தனது முதலாளிக்கு :-) 75 ரியால் கொடுத்து விடுவதாகவும் அரப் நியூஸூக்கு பேட்டியும் கொடுத்துள்ளான். தன் தந்தையையும் தான் பார்ப்பேனா என்பது சந்தேகமாக இருக்கிறது என்று கண்ணீர் மல்க பெட்டியும் கொடுத்துள்ளான்.

வாங்கும் கரத்தை விட கொடுக்கும் கரம் சிறந்தது என்றார் முகமது நபி. நாம் கொடுக்கும் தர்மம் ஒருவனை பிச்சை எடுக்கும் தொழிலில் இருந்து விலக வைக்க வேண்டும். 5000, 10000 என்று அவனுக்கு கடனாகவாவது கொடுத்து அவனது வாழ்வை முன்னேற்ற நமது தர்மம் பயன்பட வேண்டும். இல்லை என்றால் அந்த நிலை வரும் வரை தர்மம் செய்யாமலே இருந்து விடலாம்.

ஒரு முறை ஒரு நபித்தோழர் அரசாங்க கஜானாவிலிருந்து பொருளுதவி கேட்டு முகமது நபியை அணுகுகிறார். முகமது நபியும் அவரின் தேவைக்கேற்ப பொருளுதவி அளிக்கிறார். அந்த தோழரோ தனக்கு இன்னும் அதிகம் வேண்டும் என்று கேட்கிறார். முகமது நபி சற்று கோபமடைந்தவராக 'தேவைக்கு அதிகமாக ஏன் கேட்கிறாய்? யாசித்து உண்பதை விட உழைத்து உண்பதுதான் சிறந்தது' என்று உபதேசிக்கிறார். உபதேசத்தில் தெளிவடைந்த அந்த தோழர் தான் இறக்கும் வரை யாரிடமும் எதையும் யாசிக்காமல் இறந்து போனதையும் பார்க்கிறோம். முகமது நபியின் இறப்புக்கு பிறகு ஜனாதிபதிகளான அபுபக்கரும், உமரும் அந்த நபர் வறுமையில் வாடுவதைப் பார்த்து பொருளுதவி தருவதற்காக ஆளனுப்புகிறார்கள். அந்த நபரோ 'முகமது நபி என்னை யாசிப்பதில் இருந்தும் தடுத்திருக்கிறார். எனக்கு எந்த உதவியும் வேண்டாம்' என்று மறுத்ததைப் பார்க்கிறோம். அதே அரபுகளில் ஒரு சிலர் சிறுவர்களை கடத்தி பிச்சை எடுக்க வைப்பதையும் பார்க்கிறோம்.

'நான் கடவுள்' படத்தில் பாலாவும் இதே பிச்சைக்காரர்கள் பிரச்னையை மிகவும் அழகாக கையாண்டிருப்பார். திரைப்படத்தைப் பார்த்து பழைய சிவாஜி படங்களில் அழுதும் இருக்கிறேன். புதுப் படங்களில் என் கண்களை கலங்க வைத்தது பாலாவின் இந்த 'நான் கடவுள்'. நம் நாட்டில் பிச்சைக் காரர்களின் நிலையை நினைத்து மனது கனத்தது. படிக்க வேண்டிய வயதில் இவர்கள் ரயிலிலும், பஸ்ஸிலும் பிச்சை எடுப்பதை பார்க்க பரிதாபமாக இருக்கும். கலர் டிவி, சிலைகள் என்றெல்லாம் பணத்தை வீணடிக்கும் அரசு பிச்சைக்காரர்களைப் பற்றி கண்டு கொள்வதே இல்லை. வசதியுடன் உள்ள ஒவ்வொருவரும் ஒரு பிச்சைக்காரரை தத்தெடுத்தால் மிக எளிதில் இந்தப் பிரச்னையை சமாளிக்கலாம். ஆனால் மனது வர வேண்டுமே!

Monday, August 10, 2009

மேகங்களைப் பற்றி சற்று சிந்திப்போமா!



மேகங்களில் ஒரு வகையான மேகம் மலை போன்ற பெரிய மேகமாகும். இது இடி மின்னலுடன் கூடிய மழையோடு சம்பந்தப்பட்டது. இந்த மலை போன்ற மேகங்கள் எவ்வாறு உருவாகின்றன அவை எவ்வாறு மழையையும், பனியையும்,மின்னலையும் உண்டாக்குகின்றன என்பதைப் பற்றி அறிவியலார் ஆராய்ந்துள்ளனர். இந்த மலை போன்ற மேகங்கள் மழையைப் பொழிவிப்பதற்கு கீழ்க்கண்ட மாற்றங்கள் நடைபெற வேண்டும்.

மேகங்கள் காற்றினால் தள்ளப்படுதல்: மேகங்களின் சிறுசிறு துண்டுகளை காற்றானது ஒரு குறிப்பிட்டப் பகுதிக்கு தள்ளுகின்றன. அவைகளை ஓரிடத்தில் குவியச் செய்வதால் மலை போன்ற மேகங்கள் உருவாகத் தொடங்குகின்றன.

ஒன்று கூடுதல்: இந்த சிறிய மேகங்கள் அனைத்தும் ஒன்று கூடி பெரிய மேகமாக ஆகத் தொடங்குகின்றன.

அடுக்கடுக்காக ஆகுதல்: சிறிய மேகங்கள் ஒன்று கூடி பெரிதாகும்போது, பெரிய மேகத்திலிருந்து மேல் நோக்கிய காற்று மின்னோட்டம் அதிகரிக்கின்றது. பெரிய மேகத்தின் மத்திய பகுதியில் இந்த மேல் நோக்கிய காற்று மின்னோட்டம் அதிகமாக உள்ளது. இந்த மேல் நோக்கிய காற்று மின்னோட்டம் மேகங்களைச் செங்குத்தாக வளரச் செய்கிறது. அதனால் மேகங்கள் அடுக்கடுக்காக உருவாகின்றன. இந்த மேல் நோக்கிய வளர்ச்சியானது மேகத்தை வானத்தின் குளிர்ந்த பகுதிக்கு விரியச் செய்ய வைக்கின்றது. அங்கே நீர்த்துளிகளும் பனிக் கட்டிகளும் உருவாகி அவைகள் பெரிதாக வளர்ந்து கொண்டே செல்கின்றன. இந்த நீர்த்துளிகளும் பனிக்கட்டியும் மேல் நோக்கிய காற்று மின்னோட்டத்தினால் மிகவும் கனமாக மாறுகிறது. பின்பு அவைகள் மேகத்திலிருந்து மழையாகவும் பனிக்கட்டியாகவும் பொழிய ஆரம்பிக்கின்றன.

இந்த அறிவியல் உண்மையை குர்ஆன் எப்படி அணுகுகிறது என்று பார்ப்போம்:

'இறைவன் மேகங்களை இழுத்து ஒன்றாக்குவதையும், பின்னர் அதனை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதை நீர் காண்கிறீர். வானத்திலிருந்து அதில் உள்ள பனி மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பியும் விடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது.'
-குர்ஆன் 24:43


இது நம்மைப் போன்ற ஒரு மனிதரின் வார்த்தையாகத் தெரிகிறதா? அல்லது நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தையாகத் தெரிகிறதா என்பதை அவரவரின் ஊகத்துக்கே விட்டு விடுகின்றேன்.

Friday, August 07, 2009

விவேகானந்தர்தான் சொன்னார்



பசு பாதுகாப்பு பிராச்சாரகர் ஒருவரிடம், “மனிதர்கள் பசியாலும், பட்டினியாலும் செத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்களின் உயிரைக் காப்பாற்ற ஒரு பிடி சோறுகூடத் தராமல் விலங்குகளையும், பறவைகளையும் காப்பாற்றுவதற்காக உணவை வாரி வாரித் தரும் சங்கங்களிடம் எனக்கு சிறிதுகூட அனுதாபம் கிடையாது. மனிதன் பட்டினியால் சாவதற்கு அவனது கருமங்கள் காரணம் என்று கரும நியதிக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதாக இருந்தால் இந்த உலகத்தில் எதற்காகவும் முயற்சி செய்வதோ, போராடுவதோ பயனற்ற வேலை. பசுக்களைக் காப்பாற்றும் உங்கள் வேலையும் அப்படிப்பட்டதுதான்” என்றார் விவேகானந்தர்.

இதைக் கேட்ட பசு பாதுகாப்பு பிராச்சாரகர் கொஞ்சம் வெட்கம் அடைந்தவராகத் தடுமாறினார். பிறகு சமாளித்துக் கொண்டு “நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், பசு நமது தாய் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றனவே” என்றார். சுவாமிஜி லேசாகச் சிரித்தபடி “ஆமாம். பசு நம் தாய்தான். எனக்குப் புரிகிறது. வேறு யாருதான் நம்மைப் போன்ற இவ்வளவு புத்திசாலிகளான பிள்ளைகளைப் பெற முடியும்” என்றார்.

(ஆதாரம்: ‘எனது சிந்தனைகள் - விவேகானந்தர்')

Wednesday, August 05, 2009

உலகலாவிய போட்டி! 1500 ரியால் பரிசு மூவருக்கு!

சுவனப்பாதை மாத இதழ் நடத்தும் உலகளாவிய கட்டுரைப் போட்டி

ஸனாயிய்யா – ஜித்தா, சவூதி அரேபியா

சவுதி ரியால் 1500க்கு, மதிப்புள்ள முதல் மூன்று பரிசுகள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட ஆறுதல் பரிசுகள்.

விதிமுறைகள்:
1. கட்டுரைகள் 3 முதல் 6 பக்கத்திற்குள் மிகாமல் இருக்க வேண்டும், தட்டச்சு செய்திருந்தால் 1200-1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும்
2. தட்டச்சு (Typing) செய்யப்பட்ட கட்டுரையின், எழுத்துருவும் (Font) ஈமெயில் மூலமாகவோ, நேரடியாகவோ, தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.
3. கட்டுரையை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்பிக்க விரும்புபவர்கள் மூடிய உறையிலிட்டு, முழுமையான முகவரி மற்றும் தொலைப்பேசி எண்ணுடன் அனுப்ப வேண்டும்
4. பிற கட்டுரைகளிலிருந்து தொகுக்காமல், சொந்தமான ஆக்கங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும், புரட்சிகரமான கருத்துகள், புதுமை ஆக்கங்கள், ஆகியவை மார்க்கத்திற்கு முரண் இல்லாமல், ஆதாரங்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் அளிக்கப்படும, கட்டுரைகள் திருப்பி கொடுக்கப்பட மாட்டாது.
5. கட்டுரைகளை சமர்ப்பிக்கவேண்டிய முகவரி/இடங்கள்:
a. இஸ்லாமிய அழைப்பகம் – ஸனாய்யியா. (Jeddah, K.S.A)
b. துறைமுக நூலகம் – துறைமுகம் (Jeddah, K.S.A)
c. suvanam@gmail.com
d. P.O. Box No. 32628, Jeddah 21438, Saudi Arabia.
6. கட்டுரைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: பிறை 30 ஷஃபான் 1430 (ஆகஸ்ட் 21, 2009).
7. பரிசளிப்பு நாள் பின்பு அறிவிக்கப்படும்.
8. தமிழில் எழுத தெரிந்த அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்
9. சிறந்த கட்டுரைகள் சுவனப்பாதை மாத இதழில் வெளியிடப்படும். (மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் செய்ய ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு).
10. சுவனப்பாதை பத்திரிக்கை குழுவினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் இப்போட்டியில் கண்டிப்பாக கலந்துகொள்ள அனுமதி இல்லை
11. ஒருவர் பல தலைப்புகளில் கட்டுரை சமர்பிக்கலாம்
12. ஒரே தலைப்பில் பலர் கட்டுரை எழுதியிருந்தால் அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்ற கட்டுரை மட்டுமே சுவனப்பாதையில் பிரசுரிக்கப்படும்.
13. ஒரே தலைப்பில் பலர் கட்டுரைகள் எழுதி முதல் மூன்று பரிசுக்களுக்கோ, அல்லது ஆறுதல் பரிசுக்களுக்கோ மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
14. பலர் ஒரே மதிப்பெண்கள் பெற்றிருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
15. ஆசிரியர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

தலைப்புகள்:
1. நபி(ஸல்) உலகத்திற்கோர் முன்மாதிரி
2. நீங்கள் ஒரு நல்ல மனைவியா?
3. தனிக்குடித்தனம் தரமானதா?
4. கருப்பை சுதந்திரம் பெண்ணுரிமையா?
5. இரண்டாம் திருமணத்தை பெண்கள் எதிர்ப்பதேன்?
6. விவாகரத்து ஒரு கழுகுப்பார்வை
7. தஃவாவில் பெண்களின் பங்கு
8. பெண்களும் உடற்பயிற்சியும்
9. அழகு சாதனப் பொருட்கள் – ஒர் ஆய்வு
10. கொடுப்பதும் எடுப்பதும் (மஹர், வரதட்சணை)
11. பத்திரிக்கை தர்மம்
12. பிரிவுகளுக்கு மத்தியில் அழைப்புப்பணி
13. இணையத்தில் இஸ்லாம் (சாதகங்களும் பாதகங்களும்)
14. கல்வியில் கணினியின் பங்கு
15. செல்ஃபோன் சிந்தனைகள்
16. மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் – ஓர் ஆய்வு
17. தவணைமுறை வியாபாரங்கள் – ஓர் ஆய்வு
18. முதல் உதவி மருத்துவங்கள்
19. மருத்துவமும் மனோதத்துவமும்
20. அறிவியல் சாதனைகளில் முஸ்லிம்கள்
21. இறைவனின் அருட்கொடை – ஃபைபாஸ் சர்ஜரி
22. டென்ஷன் ஆவது ஏன்?
23. அழைப்புப்பணியில் புதிய தொழில்நுட்பங்களின் பங்கு
24. முஸ்லிம்களின் நவீன எழுச்சியும் வீழ்ச்சியும்
25. தனிமனித வழிபாடு – ஓர் ஆய்வு
26. கற்காலத்தை நோக்கி மனிதன்
27. வெளிநாட்டு வாழ்க்கை (சாதகமும் பாதகமும்)
28. ஷியாயிசம் ஓர் ஆய்வு
29. ஈராக் – ஒரு வரலாற்றுப் பார்வை
30. சவுதி அரேபியா – ஒரு வரலாற்றுப் பார்வை
31. இலங்கையில் இஸ்லாம் (வரலாற்றுப் பார்வை)
32. கிரிக்கெட்
33. ஷேர் மார்க்கெட்
34. வியாபாரமும் வட்டியும்
35. அரசியலும் நபி(ஸல்) அவர்களும்
36. குடும்பவியலும் நபி(ஸல்) அவர்களும்
37. புறம், கோள் மற்றும் அவதூறு
38. தர்ஹா வழிபாடு மார்க்கமா? – ஓர் ஆய்வு
39. வீரமும் உமர் (ரலி) அவர்களும்
40. பொறுமையும் அபூபக்ர் (ரலி) அவர்களும்
41. உழைத்து உண்ணுதல்
42. அரசாங்க உயர் பதவிகளில் தமிழக முஸ்லிம்கள் இடம்பெறாதது ஏன்? தீர்வு என்ன?
43. அரசிடமிருந்து நமக்குள்ள முழு உரிமையையும் பெற்றுக்கொள்ள வலுவான ஒரே தலைமையின் கீழ் எல்லா முஸ்லிமகளும் அணிதிரள வழி என்ன?
44. பெரும்பாலான தமிழக முஸ்லிம்கள் வெளிநாட்டு வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதேன்?
45. அரசியலில் முஸ்லிம்கள் ஓரங்கட்டப்படுவதேன்?
46. நபி (ஸல்) அவர்களின் இறுதிப்பேருரை
47. குர்ஆன் இறக்கப்பட்டதின் நோக்கம்?
48. மாற்று மதத்தாருக்கு நாம் அளிக்கும் பங்களிப்பு
49. பொறுமையின் அவசியம்
50. நட்பு
--~--~---------~--~----~------------~-------~--~----~

Tuesday, August 04, 2009

பன்றிக் காய்ச்சலுக்கு தீர்வு என்ன?



உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஸ்வைன் ஃப்ளூ என்ற பன்றிக் காய்ச்சலுக்கு இந்தியாவும் தப்பவில்லை. புனேயைச் சேர்ந்த ரீடா ஷேக் என்ற 11 வயது சிறுமி தனது உயிரை இக் கொடிய நோயினால் இழந்துள்ளார். ஒரு உயிர் இழப்புக்கு பின்புதான் நமது நாடு தற்போது சுதாரித்துக் கொண்டிருக்கிறது. சரியான மருத்துவ சிகிச்சை அளிக்காததால்தான் இச்சிறுமியின் உயிர் பிரிந்தது என்று அரசு அறிக்கை கூறுகிறது. விமான நிலையத்தில் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் டாக்டருக்கும் இந்நோய் தொற்றியுள்ளதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் கிட்டதட்ட 500 பேருக்கு இந்நோயின் அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகமானோர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்த பயணிகளாலேயே பாதிக்கப்பட்டுள்ளனர். நோயின் தாக்கம் அதிகம் உள்ள நாடுகளுக்குப் பயணிக்க வேண்டாம் என்று மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது போன்ற நிலைகளில் நாம் என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று இஸ்லாம் அறிவுறுத்துவதைப் பார்ப்போம்.

'ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கு நீங்கள் போகாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது கொள்ளை நோய் பரவி விட்டால் அதிலிருந்து வெருண்டோடுவதற்க்காக அவ்வூரை விட்டு வெளியேறாதீர்கள்.' என்று முகமது நபி கூறினார்.

-முகமது நபி சொல்லக் கேட்டவர் நபித் தோழர் அப்துல்லாஹ் பின் ஆமிர்.
-ஆதார நூல் புகாரி, எண் 5973

இதிலிருந்து நாம் அறிவது ஒரு நாட்டில் தொற்று நோய் பரவி விட்டதாக கேள்விப் பட்டால் அந்நாட்டிற்க்குப் பயணிக்காமல் இருக்க வேண்டும். அடுத்து நாம் இருக்கும் ஊரில் தொற்று நோய் பரவி விட்டால் நோய்க்கு பயந்து வெருண்டோடக் கூடாது என்றும் விளங்குகிறோம். ஏனெனில் நம்மையறியாமல் நம்மை அந்த நோய் தாக்கியிருந்தால் அதை மற்றவருக்கு பரப்பும் காரணியாகவே நாம் ஆகி விடுகிறோம்.

முகமது நபி ஒரு மார்க்க அறிஞராக மட்டும் இல்லாமல் மக்கள் நலனிலும் எவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டுள்ளார் என்பதை நினைத்து ஆச்சரியப்படுகிறோம். இதே முகமது நபியின் பெயரை பயன்படுத்தி தாலிபான்களும், பாகிஸ்தானிய தீவிரவாத குழுக்களும் நடத்தும் கூத்துக்களையும் இந்நேரத்தில் நினைத்துப் பார்க்கிறோம். இதற்க்கெல்லாம் காரணம் இந்த மடையர்கள்(பாகிஸ்தானிய தீவிரவாதிகள்) உண்மையான இஸ்லாத்தை சரிவர விளங்காததே!

Thursday, July 30, 2009

வானங்கள் அடுக்குகளால் படைக்கப்பட்டுள்ளதா?


//சுவனபிரியன்,
நல்ல பதிவு. ஆனால் சில சந்தேகங்கள் ,

குரானில் பூமிக்கு மேல் ஏழு சுவர்கங்கள் இருப்பதாகவும் , (குரான் 2:29; 37:6-7; 67:3; 71:15)
அதில் சூரியனும் சந்திரனும் பூமிக்கு மிக அருகில் உள்ள சுவர்க்கத்தில் இருப்பதாகவும் (37:6-7; 67:5; 78:12-13) சொல்லி இருப்பது உண்மையா?

இதனை இப்போது உள்ள milky way galaxy மூலம் விளக்குவீர்களா?//
-Gokul

வானங்கள் அடுக்குகளால் படைக்கப்பட்டுள்ளதா?

'ஏழு வானங்களை இறைவன் எவ்வாறு அடுக்கடுக்காகப் படைத்துள்ளான் என்பதை நீங்கள் காணவில்லையா?'
-குர்ஆன் 71:15

'அவனே பூமியில் உள்ள அனைத்தையும் மனிதர்களாகிய உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தைப் படைக்க நாடி அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்கு படுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.'
-குர்ஆன் 2: 29

'முதல் வானத்தை நட்சத்திரங்கள் எனும் அலங்காரம் மூலம் நாம் அலங்கரித்துள்ளோம்.'
-குர்ஆன் 37:6

நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் குர்ஆனின் வசனங்களில் சிலவற்றை மேலே பார்க்கிறீர்கள். வானங்களை ஏழு அடுக்குகளாக படைத்துள்ளதாக குர்ஆன் கூறுகிறது. ஆனால் அறிவியல் கண்டுபிடிப்புகள் எதுவும் வானத்தின் அமைப்பையோ அது எத்தனை அடுக்குகளாக்கப்பட்டுள்ளது என்பதையோ துல்லியமாக இதுவரை சொல்லவில்லை. இனி வருங்காலத்தில் வான் ஆராய்ச்சி அதிகரிக்கும் பட்சத்தில் இந்த வசனங்கள் உண்மைப்படுத்தப் படலாம். முன்னால் வாழ்ந்த வானியல் அறிஞர்கள் அனைவரும் வானம் ஒன்றுதான் என்ற நம்பிக்கையிலேயே இருந்தனர். பெரு வெடிப்பு சித்தாந்தத்துக்கு பிறகுதான் வானங்கள் ஒன்றுக்கு மேல் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு தற்கால விஞ்ஞானிகள் வந்துள்ளனர். இப்போதய அறிவியலாளர்களின் கருத்து பேரண்டங்களின் எண்ணிக்கை ஒருகால் எண்ணிலடங்காததாக இருக்கலாம் அல்லது எண்ணிலடங்காத குட்டி குட்டி பேரண்டங்களைக் கொண்ட ஒரு எல்லையற்ற மகாப் பேரண்டமாகவும் இருக்கலாம்.
(ஆதாரம்: எ ஃப்ரீ ஹிஸ்டரி ஆஃப் டைம் - பக்கம் 129-130)

எனவே ஒரே வானம் மட்டுமே இருப்பதற்கு சாத்தியம் இல்லை என்ற கருத்து அறிவியல் உலகில் பரவத் தொடங்கி இருக்கிறது. நம் காலத்திற்கு பிறகோ அல்லது நம் காலத்திலோ பல வானங்களையும் அறிவியலார் நிச்சயமாக கண்டு பிடிப்பர்.

ஆகாயங்களின் எண்ணிக்கை எவ்வளவு என அறிவியலால் தீர்மானிக்க முடியவில்லை என்றாலும் நாம் வசிக்கும் இப்பேரண்டம் அடுக்குகளால் உருவானதே என்பதை அறிவியல் ஆய்வுகள் கண்டு பிடித்துள்ளன.

அறிவியல் அறிஞர் சர் வில்லியம் ஹெர்ஷல் பல வருடங்கள் இடை விடாது முயற்சி செய்து ஆகாயத்தில் 688 அடுக்குகள் உள்ளதாக கண்டுபிடித்தார்.

1924-ல் எட்வின் ஹப்பிள் என்பவர் தாம் பேரண்டம் என்பது காலக்சிகள் எனும் நட்சத்திர மண்டலங்களின் ஏராளமான தொகுதிகளால் உருவானதே எனக் கண்டுபிடித்தவராவார். காலக்சிகள் என்பதை சுருக்கமாக நட்சத்திரக் கூட்டங்கள், நட்சத்திர மேகங்கள், நெபுலாக்கள், ஒற்றை நட்சத்திரங்கள், இரட்டை நட்சத்திரங்கள், பன்மை நட்சத்திரங்கள், வால் நட்சத்திரங்கள், நியூட்ரான் நட்சத்திரங்கள், கருங்குழிகள், மற்றும் நட்சத்திரக் குடும்பங்கள் உள்ளிட்ட மாபெரும் ஒரு அண்டத் தொகுதியாகக் குறிப்பிடலாம். பேரண்டத்தில் இவைகளின் எண்ணிக்கை நூறு கோடி என்றும் ஒவ்வொன்றிலும் பதினாயிரம் கோடி நட்சத்திரங்கள் இருப்பதாகவும் அறிவியலார் ஷேப்லி கணக்கிட்டுள்ளார். ஆனால் நவீன கணக்கீட்டின்படி கேலக்சியின் எண்ணிக்கையும் அவை ஒவ்வொன்றிலும் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையும் சில பதினாயிரம் கோடிகளாகும்.
(ஆதாரம்: எ ஃப்ரீ ஹிஸ்டரி ஆஃப் டைம். பக்கம் 38:39)

நமது அறிவியல் திறமை ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டு வருவதால் இதை விட அதிகமான காலக்சிகள் மற்றும் நட்சத்திரங்கள் பற்றிய விபரங்கள் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப் படலாம். எப்படி பார்த்தாலும் நாம் வசிக்கும் பேரண்டம் காலக்சிகளின் அடுக்குகளால் உருவாக்கப்பட்டிருப்பதால் ஏனைய ஆறு பேரண்டங்களும் அடுக்குகளின் தொகுதிகளாக இருந்து விட்டால் அது எவ்வித அறிவியல் முரண்பாடும் இல்லாததே என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

தகவல் உதவி: 'திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்.'

Tuesday, July 28, 2009

சூரியன் நகர்வது உண்மையா?



'இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் அவனே படைத்தான். ஒவ்வொன்றும் அதனதன் பாதையில் வானவெளியில் நீந்துகின்றன.'
-குர்ஆன் 21:33


ஓரளவு வானியல் அறிவு உள்ளவர்களுக்கு கூட சூரியனும் ஓடுகிறது என்ற செய்தி புதுமையாகவே இருக்கும். சூரியன் ஒரு இடத்தில் நிலையாக நிற்கிறது என்றும் அந்த சூரியனைச் சுற்றியே பூமி, செவ்வாய், சந்திரன் போன்ற கோள்களெல்லாம் அதனதன் பாதையில் சுற்றி வருகின்றன என்றும் நம்பி இருந்தோம். நாம் மட்டும் அல்ல... அறிவியல் அறிஞர்கள் கோபர் நிக்கஸ், கெப்ளர், கலிலியோ போன்ற மேதைகளெல்லாம் கூட சூரியன் நகர்வதில்லை என்ற கொள்கையையே கொண்டிருந்தனர்.

தொலை நோக்கியை கண்டுபிடித்த கலிலீயோ கூட சூரியன் நகர்வதில்லை என்ற நம்பிக்கையிலேயே இறந்தும் போனார். இரவும் பகலும் ஏற்படுவதற்கு சூரியனின் நகர்வு அவசியமில்லை என்பதனாலேயே பெரும்பாலான அறிஞர்கள் சூரியன் நகர்வதில்லை என்ற கோட்பாட்டைக் கொண்டிருந்தனர்.

அறிஞர் ஹெர்ஷலின் கண்டுபிடிப்பு!
அறிஞர் ஹெர்ஷவின் கண்டுபிடிப்பைப் பற்றி அறிவியல் அறிஞர் டூயிக் பின்வருமாறு விளக்குகிறார்.

'ஏனைய நட்சத்திரங்களைப் போன்று சூரியனும் விண்ணில் நகர்கிறது. நட்சத்திரத் தொகுதி ஒன்றில் பிரகாசமான வேகா எனும் நட்சத்திரத்திற்கு உள்ள ஓர் இடத்தை வில்லியம் ஹெர்ஷல் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது அங்குள்ள நட்சத்திரங்களில் அவைகளுக்கு இடையில் உள்ள தூரம் கூடிக் கொண்டே வருவதைக் கவனித்தார். அதே நேரத்தில் அந்த திசைக்கு நேர் எதிர் திசையில் இருந்த நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று நெருங்கி வந்து காட்சி அளிப்பதையும் கவனித்தார்.
இது உள்ளபடியே பூமி உட்பட கோள்கள் அனைத்தையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு சூரியன் நகர்வதனால் ஏற்படும் தோற்றமே இந்த நிகழ்ச்சிக்கு காரணமாகும் என அவர் விளங்கிக் கொண்டார்.

இதை தெளிவாக விளங்குவதற்கு ஹெர்ஷல் ஒரு உதாரணத்தையும் கொடுக்கிறார். ஒரு காட்டிற்குள் மரங்களெல்லாம் ஏறத்தாழ சம தூரத்தில் இருக்கும் ஒரு பிரதேசத்தில் நீங்கள் நடந்து செல்வதாக கற்பனை செய்வோம். அவ்வாறு நடந்து கொண்டிருக்கும் போது இடையிடையே நீங்கள் நடக்கும் திசைக்கு நேராகவும் அல்லது அதற்கு நேர் எதிர் திசையிலும் பார்வையைச் செலுத்துவதாக வைத்துக் கொள்வோம். அப்போது உங்களுக்கு முன்னால் இருக்கும் மரங்கள் ஒன்றுக்கொன்று விலகிச் செல்வதாகவும் உங்களுக்குப் பின்னால் உள்ள மரங்கள் ஒன்றுக்கொன்று நெருங்கி வருவதாகவும் உணர்வீர்கள். இந்த தோற்றம் முற்றிலும் உங்களுடைய சுய நகர்வின் காரணமேயாகும். இதே நிலை சூரியன் நகரும் போதும் ஏற்படுகிறது. சூரியன் எந்த திசையை நோக்கி நகர்கிறதோ அந்தத் திசையில் அடர்த்தியாகத் தெரிந்த நட்சந்திரங்கள் இடைவெளி விட்டுத் தெரிகிறது. இதே போல் இதற்கு எதிர் திசையில் நட்சத்திரங்கள் மேலும் அடர்த்தியாகத் தெரிவதும் சூரியனின் சுயமான நகர்வின் காரணமேயாகும்.
-அஸ்ட்ரானமி ஃபார் எவ்ரிமேன், பக்கம் 297-98

இந்த உண்மைகளை எல்லாம் கண்டுபிடிக்க எத்தனை ஆய்வுகள் எத்தனை அறிஞர்கள் இரவு பகல் பாடுபட வேண்டியிருக்கிறது. ஆனால் இவ்வளவு பெரிய ஆய்வுகளையும் மிகச் சாதாரணமாக சொல்லிச் செல்லும் குர்ஆனின் வார்த்தைகள் வெறும் மனிதனின் வார்த்தை என்று எண்ண முடியுமா?

'சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன.'
-குர்ஆன் 13:2

'சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.'
-குர்ஆன் 36:38

'தக்க காரணத்துடனேயே வானங்களையும் பூமியையும் அவன் படைத்தான். பகலின் மீது இரவை சுருட்டுகிறான். இரவின் மீது பகலை சுருட்டுகிறான். சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலம் வரை ஓடும்.'
-குர்ஆன் 39:5

Saturday, July 25, 2009

ஸ்ருதி ஹாஸனுக்கு என்ன நேர்ந்தது?



நேற்று தற்செயலாக சஹாரா சேனலில்(ஹிந்தி) நடந்த கலந்துரையாடலை கவனித்தேன். அங்கு நமது நடிகர் கமலஹாஸன் மகளின் சினி அரங்கேற்றத்தைப் பற்றி பேச்சு வந்தது. அந்த படத்தில் ஸ்ருதிஹாஸன் ஆடிய சில பாடல் காட்சிகளை போட்டு காட்டினார்கள். அம்மணி முதல் படத்திலேயே தன்னால் எந்த அளவு உடைகளை குறைக்க முடியுமோ அந்த அளவு குறைத்து இந்திய மக்களுக்கு கலைச் சேவை :-) செய்திருக்கிறார்.

என் சிறு வயதில் சலங்கை ஒலி, கைதியின் டைரி, வாழ்வே மாயம், ஏக் துஜே கேலியே போன்ற படங்களை எல்லாம் திரை அரங்குகளில் பல முறை பார்த்தவன். சமூகத்தில் சில மாற்றங்களை ஏற்ப்படுத்த வேண்டும், மூடப்பழக்கங்களை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்பதை எல்லாம் தனது படத்தின் மூலம் தைரியமாக சொல்லக் கூடியவர் கமலஹாஸன். மற்ற நடிகர்களைப் போல் அல்லாமல் ஓரளவு பொது அறிவு நிரம்பப் பெற்றவர். தனது ரசிகர் மன்றங்களை பொது சேவையில் ஈடுபடுத்தி பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கக் கூடியவர் நம் கமலஹாஸன். இப்படிப் பட்ட பின்புலம் உள்ள ஒரு பிரபலத்தின் மகள் சில்க் சுமிதா ரேஞ்சுக்கும் கீழிறங்கி அமீர்கானின் அண்ணன் மகனோடு (ஹீரோவின் பெயர் மறந்து விட்டது) குத்தாட்டம் போடுவதை பார்க்க சகிக்கவில்லை.

கமலஹாஸனிடம் கோடிகள் கொட்டிக் கிடக்கிறது. புகழுக்கும் குறைவில்லை. இப்படிப்பட்ட பின்புலத்தில் உள்ள ஸ்ருதிஹாஸன் எதற்காக இப்படி ஒரு துறையை தேர்ந்தெடுத்தார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒளிப்பதிவு, டைரக்சன், இசை என்று திறமையை வெளிக்காட்டும் துறைகளை தேர்ந்தெடுத்திருந்தால் கமலின் பெயரும் காப்பாற்றப்பட்டிருக்கும்.

எது எப்படியோ! கலந்துரையாடலின் முடிவில் "முதல் படத்திலேயே கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா, கத்ரீனா கைஃப் போன்ற நடிகைகளை எல்லாம் ஆடை அவிழ்ப்பில் பின்னுக்கு தள்ளி விட்டார் ஸ்ருதி ஹாஸன்" என்று சொன்னபோது கமலஹாஸனை நினைத்து பரிதாபப் பட்டேன்.

Monday, July 13, 2009

வானமும் பூமியும் எவ்வாறு நிலை கொண்டுள்ளது?



நாம் வசிக்கும் இந்த பூமியும் வானமும் எவ்வாறு கீழே விழாமல் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை என்றாவது சிந்தித்து இருக்கிறோமா? நம் முன்னோர்களில் சிலர் இந்த பூமியையும் வானத்தையும் நிலவையும் பற்றி என்ன சொல்லி வைத்துள்ளார்கள் என்று பார்ப்போம்.

ஒரு புராணம் நமது பூமியை மூன்று திமிங்கிலங்கள் ஒன்றினைந்து சுமந்து கொண்டிருக்கிறது என்கிறது. மற்றொரு புராணம் ஒரு மீனின் வாலில் பூமி நிலைபடுத்தப்பட்டுள்ளது என்கிறது. வேறு சில புராணங்கள் பன்றியின் மூக்கின் மீது இந்த பூமி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்கிறது. மேலும் சில கதைகளில் ஒரு காளையின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் பூமி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறுகிறது.

பல அரிய கருத்துக்களை கூறிய வள்ளுவரோ 'திங்களை பாம்பு கொண்டற்று' என்று நமது பாட்டிகளின் கதையை ஒட்டி கூறுவதைப் பார்க்கிறோம். அவர் பார்வையில் சந்திர கிரகணம் ஏற்படுவது பாம்பு விழுங்குவதால் ஏற்படுகிறது என்றும் பாம்பு அந்த சந்திரனை கக்குவதால் சந்திர கிரகணம் விலகுகிறது என்ற ரீதியில் சொல்வதைப் பார்க்கிறோம். இது நம் முன்னோர்கள் வானம், பூமி, சந்திரன் பற்றி எந்த அளவு விளங்கியிருந்தார்கள் என்பதை பார்க்க முடிகிறது.

சரி. குர்ஆன் இந்த நிகழ்வுகள் பற்றி என்ன சொல்கிறது என்பதையும் பார்ப்போம்.

'நீங்கள் பார்க்கின்ற தூண்கள் இன்றி வானங்களை இறைவனே உயர்த்தினான்.....நீங்கள் உறுதியாக நம்புவதற்க்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான்.'
-குர்ஆன் 13:2

'நீங்கள் பார்க்கின்ற தூண்கள் இன்றி இறைவனே வானங்களைப் படைத்தான். உங்களை சாய்த்து விடாதிருக்க பூமியில் முளைகளைப் போட்டான்.'
-குர்ஆன்: 31:10


ஆகாயத்தின் கட்டுமானத்தில் எந்த திசையில் எவ்வளவு தூரம் நீங்கள் சென்று பார்த்தாலும் கண்களுக்கு தெரியக் கூடிய எந்த ஒரு தூணையும் நீங்கள் காண இயலாது. ஈர்ப்பு விசையைக் கொண்டே ஒவ்வொரு கோள்களும் பிணையப்பட்டு அந்தரத்தில் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஈர்ப்பு விசையை நம் கண்களால் காண இயலாது. நம் கையில் உள்ள ஆப்பிள் தவறினால் நேராக பூமியை நோக்கி செல்கிறது. ஆப்பிள் பூமியை நோக்கி செல்கிறது என்பதை விட பூமியின் ஈர்ப்பு விசையானது ஆப்பிளை இழுக்கிறது என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும். அந்த ஈர்ப்பு விசையை நம் கண்களால் பார்க்க முடிவதில்லை. இதைத்தான் 'பார்க்கின்ற தூண்களின்றி' என்ற அழகிய வார்த்தையைக் கொண்டு குர்ஆன் நமக்கு விளக்குகிறது.

அறிஞர் அரிஸ்டாட்டில் பூமியை மையமாக வைத்தே அனைத்து கோள்களும் சுழல்கின்றன என்று கூறி வந்தார். அன்றைய கிருத்தவ சபைகளும் அரிஸ்டாட்டிலின் கருத்தையே உண்மை என்று வாதிட்டது. இதன் பிறகு போலந்து நாட்டின் அறிவியல் அறிஞர் கோபர் நிக்கஸ் வானியலைப் பற்றிய ஆய்வை மேற்கொண்டார். இந்த அறிஞர் கிறித்தவ சபையிலும் பணியாற்றி வந்தார். முடிவில் சூரியனைச் சுற்றியே மற்ற கோள்கள் சுழலுகின்றன என்ற 'சூரிய மைய கோட்பாட்டை' உருவாக்கினார். கிறித்தவ சபைக்கு மாற்றாக இந்த கருத்து இருந்ததால் தான் கண்ட உண்மையை தனது நெருங்கிய நண்பர்களிடமே கோபர் நிக்கஸ் சொல்லி வந்தார். பிறகு தனது அறுபதாவது வயதில் ரோமில் 'சூரிய மையக் கோட்பாட்டை வலியுறுத்தி' உரை நிகழ்த்தினார். சும்மா இருக்குமா கிறித்தவ சபை! 'மத நிந்தனை' என்று குற்றம் சாட்டி அவர் கருத்து தவறு என்று அவர் வாயாலேயே சொல்ல வைத்து அவரை மன்னிப்பும் கேட்க வைத்தது கிறித்தவ சபை. இருந்தும் தனது எழுபதாவது வயதில் இறப்பதற்கு முன் சூரியனை மையமாக வைத்தே மற்ற கோள்கள் இயங்குகின்றன என்ற உண்மையை புத்தமாக வெளியிட்டு மறைந்தார் அந்த மேதை.

அறிஞர் நியூட்டனும் கிரக சஞ்சாரங்களை விளக்கி 'பேரண்டம் தாமாகவே காரணமின்றி நிலை பெற்றிருக்கவில்லை. அதனை நிலை நிறுத்தும் கண்ணுக்குப் புலப்படாத ஒரு பிணைப்பு உண்டு. அந்த பிணைப்பே பேரண்டம் மொத்தமும் பரவி நிற்க்கும் ஈர்ப்பாற்றலாகும்.' என்று கூறுகிறார்.

இதனையே குர்ஆன் கூறும் போது பின் வருமாறு விளக்குகிறது.

'வானங்களும் பூமியும் இடம் பெயராதபடி அவனே தடுத்து வைத்துள்ளான். அவ்விரண்டும் இடம் பெயருமானால் அவனன்றி எவரும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. அவன் சகிப்புத் தன்மை உடையவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.'
-குர்ஆன்: 35:41


இன்று இந்த உண்மைகளை எல்லாம் எல்.கே.ஜி படிக்கும் நம் குழந்தைகளுக்குக் கூட தெரிந்திருக்கும். ஆனால் இந்த குர்ஆன் இறங்கிய காலம் 1400 வருடங்களுக்கு முன்பு என்பதையும் அந்த மக்கள் வானியலைப் பற்றிய போதிய அறிவு இல்லாதவர்களாகவும் இருந்ததையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

Friday, July 10, 2009

தற்கொலைகளின் சதவீதம் நாடு வாரியாக!



இந்தியா---------10.65
குவைத்-----------1.95
பிலிப்பைன்ஸ்-----2.10
தாய்லாந்த்--------7.90
சிங்கப்பூர்-------10.05
ரொமானியா-----12.75
அயர்லாந்த்------9.75
அமெரிக்கா------11.05
போர்ச்சுக்கல்----11.20
மால்டோவா-----17.25
சிலி------------10.46
கனடா---------11.65
நியுசிலாந்த்-----12.00
இஸ்ரேல்--------6.25
ஸ்விட்சர்லாந்த்--17.50
ஆஸ்திரேலியா--10.90
சவுத் கொரியா--23.75
பெல்ஜியம்-----21.30
பிரான்ஸ்-------18.30
ஜப்பான்-------24.20
ரஷ்யா---------36.15

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலில் 'கால் அப்' என்ற அமைப்பு தற்கொலைகளின் விகிதாச்சாரத்தை நாடுவாரியாக கணக்கெடுத்து வெளியிட்டுள்ளது. தற்கொலைகளின் விகிதாச்சாரம் மத நம்பிக்கை உள்ளவர்களை விட மத நம்பிக்கை அற்றவர்களிடத்தில் அதிகரித்துள்ளது என்றும் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் தற்கொலைகளின் விகிதாச்சாரம் அதிகரித்துள்ளதை நாம் பார்க்க முடிகிறது. இந்த நாடுகளில் உள்ள மக்கள் கிறித்தவத்தை பின்பற்றினாலும் 90 சதவீத மக்கள் மத நம்பிக்கை அற்றவர்களாகவே உள்ளனர். நமது இந்தியாவிலும் தற்கொலைகளின் விகிதாச்சாரம் அதிகரித்துள்ளதைப் பார்க்கிறோம். பி.சயினாத் என்பவர் ஹிந்து நாளேட்டில் 'சென்ற பத்தாண்டில் மட்டும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 30000' என்கிறார்.

என் பள்ளி தோழன் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டான். 10 ஆம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்த அவன் படிக்க நினைத்தது மருத்துவம. அவனது தகப்பனார் அவனை சேர்த்ததோ பொறியியல் கல்லூரியில். தற்கொலைக்கு இதுதான் காரணம்.

அடுத்து இலங்கை தமிழருக்காக தீக்குளித்து இறந்த முத்துக்குமாரையும் எடுத்துக் கொள்ளலாம். இலங்கைத் தமிழருக்காக தமிழ் மண்ணில் போராட்டம் நடத்தி இருக்கலாம். அல்லது கள்ள தோணியில் சென்று இலங்கை ராணுவத்தை எதிர்த்து போரிட்டு இறந்திருக்கலாம். அதை விடுத்து தனது குடும்பத்தை கொஞ்சம் கூட எண்ணிப் பார்க்காமல் தனது உயிரை மாய்த்து கொண்டதால் எதை சாதித்து விட்டார் முத்துக்குமார்? சில தலைவர்களை சிறையில் தள்ளியதைக் கூட பொறுக்க முடியாமல் தீக்குளித்து சாகும் நமது கழக கண்மணிகளையும் இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியாது.

இதற்க்கெல்லாம் என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? மன நிம்மதி இழப்பதுதான் முதற்காரணம். ஒரு மனிதனுக்கு துன்பம் ஏற்படும் போது தனக்கு ஏற்படும் மன அழுத்தத்தை எங்கு இறக்கி வைப்பது என்ற தடுமாற்றத்தில் விளைவதுதான் அநேக தற் கொலைகள். எந்த மனிதன் இறை நம்பிக்கையில் சற்றும் தளராமல் தனது வாழ்க்கையை செலுத்துகிறானோ அவன் எந்த நிலையிலும் தற்கொலைகளை நாட மாட்டான். பல முஸ்லிம் நாடுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கெல்லாம் தற்கொலைகளின் விகிதாச்சாரம் மிக மிக குறைவாகவே இருப்பதை பார்க்கிறோம். இதற்க்கெல்லாம் காரணம் அந்த மக்களின் வாழ்க்கையே இஸ்லாமாக இருப்பதுதான்.

இறந்தவர்களுக்காக மற்றவர்கள் பிரார்த்தனை செய்யும் விதமாக ஒரு தொழுகை முஸ்லிம்களிடத்தில் உண்டு. இந்த தொழுகையைக் கூட தற்கொலை செய்து கொண்டவருக்காக தொழக் கூடாது என்று முகமது நபி முஸ்லிம்களுக்கு கட்டளை இடுகிறார்.

'நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் இறைவனின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! இறைவனின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.'
-குர்ஆன்: 13:28

'உங்களையே கொன்று விடாதீர்கள். இறைவன் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.'
-குர்ஆன்: 4:29


'யார் ஒரு கூரான ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் தமது கையில் அந்த கூராயுதத்தை வைத்துக் கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டே இருப்பார். யார் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் விஷத்தை கையில் வைத்துக் கொண்டு நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக அதைக் குடித்துக் கொண்டே இருப்பார். யார் மலையின் மீதிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் தள்ளப்பட்டு மேலிருந்து கீழே என்றைக்கும் நிரந்தரமாகக் குதித்துக் கொண்டே இருப்பார்.' என்று முகமது நபி சொல்லக் கேட்டவர் அபுஹூரைரா.

நூல்: முஸ்லிம் 157

என்றெல்லாம் இஸ்லாம் முஸ்லிம்களுக்கு கட்டளை இடுவதாலும், முஸ்லிம்கள் தங்களின் மன அழுத்தத்தை ஒரு நாளைக்கு ஐந்து வேளை இறைவன் முன்னால் இறக்கி வைத்து விடுவதாலும் முஸ்லிம்களிடத்தில் தற்கொலைகளின் விகிதாச்சாரம் குறைவாக உள்ளது. இந்துக்களில் கூட மதப்பற்று உடையவர்கள் தற்கொலைகளை நாடுவது இல்லை என்பதையும் பார்க்கிறோம்.

Monday, July 06, 2009

1,500 எருமை மாடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன்!



மணப்பாறை : மணப்பாறை அருகேயுள்ள மட்டப்பாறைப்பட்டியில் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று ஆயிரத்து 500 எருமை கிடாக்கள் வெட்டி பலியிடப்பட்டன. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, 20 கி.மீ., தொலைவில் மட்டப்பாறைப்பட்டி உள்ளது. இங்குள்ள பத்ரகாளியம்மன் கோவில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக பொதுமக்கள் வணங்கி வருகின்றனர்.

அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து வணங்கி செல்வது வழக்கம். பக்தர்கள் தாங்கள் எண்ணியது நிறைவேறி விட்டால், எருமை கிடா பலியிட்டு, நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டிக்கொள்வர். ஏழு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவை சுற்றுப்புற 54 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து நடத்தி வருகின்றனர். கடந்த 2002ம் ஆண்டு நடந்த திருவிழாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட எருமை கிடாக்கள் வெட்டி பலியிடப்பட்டன. அதற்கு ரெட்கிராஸ் அமைப்பு மற்றும் மிருகவதை தடுப்பு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து, சர்ச்சையை ஏற்படுத்தியதால், அப்போதிருந்த அ.தி.மு.க., ஆட்சியில் கோவில்களில் உயிர்பலி கொடுக்க தடை விதித்து கடுமையான சட்டம் கொண்டு வரப்பட்டது. உயிர்பலி தடைசட்டத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. அதன்பின் சில மாதங்களில் கோவில்களில் உயிர்பலி தடைசட்டத்தை அரசு வாபஸ் பெற்றது.

இந்நிலையில், ஏழு ஆண்டுகளுக்குப்பிறகு கடந்த ஒரு வாரமாக திருவிழா நடந்து வருகிறது. மட்டப்பாறைப்பட்டி ஊரார் செல்வம், தவளவீரன்பட்டி முக்கியஸ்தர் ராமசாமி, சீரங்கன், வேலுச்சாமி, அணியாப்பூர் செல்வம் மற்றும் 54 ஊர்களைச் சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்களும், பொதுமக்களும் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். விழாவையொட்டி, பத்ரகாளியம்மனுக்கு பொங்கல் வைத்து ஆடு, கோழி பலியிடும் சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று பகல் 2 மணிக்கு கருப்பண்ணசாமிக்கு எருமை கிடா பலியிடும் பூஜை நடந்தது. வீரப்பூர் ஜமீன்தார் சவுந்திரபாண்டியன் மற்றும் குடும்பத்தினர் மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அரிவாள் பூஜை நடந்தது. பகல் 2.45 மணிக்கு ஜமீன்தார் சவுந்திரபாண்டியனின் எருமைகிடா முதலில் பலியிட, தொடர்ந்து பக்தர்களின் நேர்த்திக்கடனாக செலுத்திய எருமை கிடாக்கள் பட்டியிலிருந்து ஒவ்வொன்றாக அழைத்து வரப்பட்டது. வழியில் நின்ற வாலிபர்கள் தங்களிடமிருந்த உருட்டுக் கட்டையால் எருமை கிடாக்களை தாக்கினர்.

பின்னர் எருமைகிடாக்கள் பலியிடத்துக்கு கொண்டு வரப்பட்டு பலியிடப்பட்டன. கோவில் முன் தோண்டப்பட்ட குழியில் பலியிடப்பட்ட எருமைகிடாக்கள் போடப்பட்டன. வேண்டுதல் உள்ள பக்தர்கள், எருமைகிடாக்களின் தலையிலிருந்து வடியும் ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டு கோவிலை சுற்றிவந்து குழிக்குள் எருமைகிடாக்களின் தலையை போட்டனர். பக்தர்கள் உப்பு வாங்கி சென்று குழியில் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று இரவு வரை தொடர்ந்து ஆயிரத்து 500 எருமை கிடாக்கள் வெட்டி பலியிடப்பட்டன. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த 50 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.

நன்றி:
-தின மலர்

நேர்த்திக் கடனுக்காக உயிர்ப்பலி கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொல்லப்பட்ட எருமைகளை யாருக்கும் பயன்படாமல் குழியில் போட்டு புதைத்ததுதான் மனதுக்கு நெருடலாக இருந்தது. இந்த இறைச்சியை பதப்படுத்தி தேவையுள்ள வறியவர்களுக்கு கொடுத்திருந்தால் வறியவர்களின் வாழ்த்து கிடைத்திருக்குமே! இதற்கு இந்து மதத்தில் தடையிருக்கிறதா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் விளக்கம் தரவும்.

இதே போன்று முஸ்லிம்களிடத்திலும் ஹஜ் பெருநாளன்று கோடிக்கணக்கான ஆடுகளும் மாடுகளும் ஒட்டகங்களும் உலகம் முழுவதும் அறுக்கப்படுகின்றன. சவூதி அரேபியாவில் ஹஜ் பெருநாளன்று வெட்டப்படும் அனைத்து உயிர்களையும் பதப்படுத்திஆப்கானிஸ்தான், ஆப்ரிக்கா நாடுகள், இந்தோனேஷியா போன்ற வறிய நாடுகளுக்கு சவூதி அரசாங்கம் அனுப்பி வைக்கிறது. இது போன்ற ஒரு வழி முறையை நமது அரசாங்கமோ அல்லது இந்து மக்களோ ஏன் முயற்சி செய்யக் கூடாது.

முஸ்லிம்களை எப்படி வம்புக்கிழுக்கலாம் என்று ரூம் போட்டு யோசிக்கும் ஆர்.எஸ்.ஸோ அல்லது பி.ஜே.பியோ இதற்கும் சிறிது நேரத்தை ஒதுக்கினால் அந்த உயிர்கள் உரிய வறியவரைச் சென்றடையுமல்லவா?

'பலி கொடுக்கப்பட்ட உயிர்களின் மாமிசங்களோ அவற்றின் ரத்தங்களோ இறைவனை சென்றடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள இறை அச்சமே இறைவனை சென்றடையும்.'

-குர்ஆன் 22:37

Thursday, July 02, 2009

'புவி ஈர்ப்பு விசை' பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது?



'இறைவன் வானத்தை உயர்த்தினான்: தராசை நிலை நாட்டினான்: தராசில் நீங்கள் நீதி தவறக் கூடாது என்பதற்க்காக! நியாயமாக எடையை நிலைநாட்டுங்கள்: எடையைக் குறைத்து விடாதீர்கள்'
-குர்ஆன் 55:7-9


'அவன் வானத்தை உயர்த்தினான்' என்ற வாசகம் 'பெரு வெடிப்பு' கொள்கையை மெய்ப்பிக்கிறது. விஞ்ஞானிகள் என்ன கூறுகிறார்கள்? வானம் பூமி நட்சத்திரங்கள் அனைத்தும் ஒன்றாக இருந்து மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டு வானம் மேலே உயர்த்தப்பட்டது என்று கூறுகின்றனர். அதையேதான் குர்ஆனும் கூறுகிறது. இது பற்றி நான் முன்பே ஒரு பதிவு இட்டுள்ளதால் அதற்கு அடுத்து வரும் 'தராசை நிலை நாட்டினான்' என்ற வசனத்தின் விளக்கத்தை சற்று விரிவாகப் பார்ப்போம்.

உதாரணத்திற்கு 600 கிராம் உள்ள இரும்பு துண்டை நாம் வாழும் பூமியில் தராசில் வைத்து நிறுத்தோம் என்றால் 600 கிராமைக் காட்டும். இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை. அதே சமயம் அதே தராசில் அதே 600 கிராம் இரும்புத் துண்டை நீங்கள் நிலவில் வைத்து நிறுத்தீர்கள் என்றால் அதன் எடை வெறும் நூறு கிராமைத்தான் காட்டும். இதற்கு காரணம் நிலவின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையை விட ஆறு மடங்கு குறைவாகும்.

இதிலிருந்து நாம் விளங்குவது பூமியில் ஒரு பொருளை எடை போடும் போது அப் பொருளின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசையையே நாம் எடையாக காண்கிறோம் என்பது தெளிவாகிறது.

அந்த கால அரபிகளுக்கு புவி ஈர்ப்பு விசையைப் பற்றி எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவேதான் 'வானம் உயர்த்தப்பட்டு தராசு நிறுவப்பட்டது' என்று எளிமையான மொழி நடையில் மிகப் பெரும் அறிவியலை குர்ஆன் மனிதர்களுக்குப் போதிக்கிறது. இந்த வாக்கியத்தை இன்றைய அறிவியல் யுகத்தில் படிக்க வேண்டுமாயின் 'வானத்தை உயர்த்தினான்: புவி ஈர்ப்பு விசையால் நிலை நாட்டினான்' என்று படித்தால் இன்னும் அறிவியலோடு நெருங்கி வருவதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம்.

Monday, June 29, 2009

சிலைகள் வைக்க மட்டும் ரூ. ஆயிரம் கோடியா?:



உ.பி., மாநில முதல்வராக இருப்பவர் மாயாவதி. இவர், கடந்த 25ம் தேதி லக்னோ நகரின் பல இடங்களில், தன் சிலைகளையும், பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராமின் சிலைகளையும் திறந்து வைத்தார். சிலைகள் திறக்கப்படுமென, அறிவிக்கப்பட்ட நாளுக்கு ஒன்பது நாட்களுக்கு முன்னதாகவே இவற்றை திறந்து வைத்தார். இந்தச் சிலைகளுக்காக 1,000 கோடி ரூபாய்க்கு மேல் அரசுப் பணம் செலவிடப்பட்டது. இதை எதிர்த்து ரவிகாந்த் என்ற வக்கீல், சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், அவர் கூறியிருந்ததாவது: லக்னோ நகரின் பல இடங்களில், மாயாவதி தன் சிலைகளை நிறுவியுள்ளார். அது மட்டுமின்றி, பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராம் மற்றும் சட்ட மேதை அம்பேத்கரின் சிலைகளையும், பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சின்னத்தையும் நிறுவியுள்ளார். இதற்காக 1,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. தன்னை பெருமைப்படுத்திக் கொள்வதற்காக மாயாவதி, இவ்வளவு அரசுப் பணத்தை வீணடித்துள்ளார். உ.பி., மாநில கலாசாரத் துறையின் பட்ஜெட்டில், 90 சதவீதம் சிலைகள் வைப்பதற்காக செலவிடப்பட்டுள்ளது.

யானைச் சிலைகள்: லக்னோவில் 15 மீட்டர் சுற்றளவில் 60 யானைச் சிலைகளை நிறுவியுள்ளார். இதற்காகவும், அவரின் சிலைகளை நிறுவவும் மட்டும் 52.2 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இவையெல்லாம் அரசியல் சட்டத்தின் 14வது பிரிவை மீறிய செயல். சிலைகள் அமைப்பதற்காக அரசு பணத்தை மாயாவதி செலவிட்டது குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். சிலை வைப்பதற்கு கோர்ட் தடை விதித்து விடக்கூடாது என்பதற்காகவும், சிலைகள் வைப்பதை எதிர்த்து வரும் 3ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக முன்னாள் முதல்வர் முலாயம் சிங் அறிவித்ததாலும், அரைகுறையாகக் கட்டப்பட்ட பல சிலைகளையும் கடந்த 25ம் தேதி அவர் திறந்து வைத்துள்ளார்.

பொது வாழ்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளின் படங்களை அல்லது உருவங்களை பெரிய அளவில் நிறுவக்கூடாது என, கடந்த ஏப்ரல் 1ம் தேதி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதை மீறி சிலைகள் நிறுவப்பட்டுள்ளன என தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, அசோக்குமார் கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாயாவதி சார்பில் உ.பி., மாநில முன்னாள் அமைச்சரும், அம்மாநில அட்வகேட் ஜெனரலுமான எஸ்.சி.மிஸ்ரா ஆஜரானார். உ.பி., மாநில அரசு சார்பில் ஆஜரான வி.வி.லலித் கூறியதாவது: சிலைகள் வைப்பதற்காக மாயாவதி செலவிட்ட அனைத்து தொகைகளுக்கும் மாநில சட்டசபை அனுமதி அளித்துள்ளது என்றார்.

இதன் பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு: சிலைகள் வைக்க அரசு பணத்தை ஏராளமான அளவில் செலவிட்டது தொடர்பாக, முதல்வர் மாயாவதிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். நான்கு வாரங்களுக்குள் நோட்டீசிற்கு அவர் பதில் அளிக்க வேண்டும். மேலும், உ.பி., அரசு, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் தேர்தல் கமிஷனுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். உ.பி., மாநிலத்தில் எழுத்தறிவு சதவீதம் மிகவும் குறைவாக உள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் 5.9 கோடி பேர், தங்களின் ஜீவனத்தை நடத்த முடியாமல் போராடி வருகின்றனர். மேலும், குழந்தைகள் இறப்பு வீதமும் உ.பி., மாநிலத்தில் அதிகளவில் உள்ளது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், சிலைகள் வைப்பதற்காக பல 100 கோடி ரூபாய் பணத்தைச் செலவிட்டதை நியாயப்படுத்த முடியாது. பொது வாழ்வில் உள்ளவர்கள், பொதுமக்களின் பணத்தை முறையாகச் செலவிட வேண்டும். அந்தப் பணத்திற்கு நம்பிக்கைக்குரியவர்களாக நடந்து கொள்ள வேண்டும் என்றனர்.

சிதம்பரம் கண்டனம்: சிலைகள் வைப்பதற்காக முதல்வர் மாயாவதி, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டிருப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து, தன் சிலையையும், தன் கட்சியின் சின்னமான யானைச் சின்னத்தையும் மாயாவதி நிறுவியுள்ளதால் என்ன பயன்? இந்திய அரசியலில் இதை விட வெட்கப்படத்தக்க விஷயம் வேறு இருக்குமா என்ன?

சிலைகள் வைக்க செலவிட்ட 1,000 கோடி ரூபாயை, ஆயிரக்கணக்கான மக்களின் வறுமையைப் போக்கவும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், கல்வி அறிவை மேம்படுத்தவும் செலவிட்டிருக்கலாம் என்றார்.
-பத்திரிக்கைச் செய்தி

இது போன்ற கோமாளிகளை எல்லாம் முதல்மந்திரியாக ஆக்கும் இந்த மக்களை சொல்ல வேண்டும். இந்தியாவிலேயே கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின் தங்கியுள்ள ஒரு மாநிலத்தின் பொருளாதாரம் எப்படி எல்லாம் வீணடிக்கப்படுகிறது என்பதை நினைத்தால் நமது அரசியல் அமைப்பின் மீதே கோபம் வருகிறது.

அரசு பணம் எந்த அளவு விரயமாக்கப்பட்டதோ அத்தனையையும் மாயாவதியின் சொத்திலிருந்து எடுத்து கோர்ட் சமன் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் இது போன்ற கேடுகெட்ட அரசியல்வாதிகள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.

இன்னும் இரண்டு தலைமுறைகளுக்கு பின்னால் மாயாவதியும் ஒரு தெய்வமாக்கப்படலாம். யார் கண்டது? :-))

Thursday, June 25, 2009

மீகாயில் (மைக்கேல் ஜாக்ஸன்) இறைவனடி சேர்ந்தார்!



உலகம் முழுவதும் தனது இசையால் ரசிகர்களை கவர்ந்த மைக்கேல் ஜாக்ஸன் சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இறந்து விட்டதாக பிபிசியின் மூலம் அறிந்தேன். கடைசி காலங்களில் தனது அண்ணன் அப்துல் அஜீஸின்(ஜெராமைக் ஜாக்ஸன்) முயற்ச்சியால் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். தான் தொடர்ந்து ஒரு முழு இஸ்லாமியனாக வாழ முயற்ச்சிக்கிறேன் என்றும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதய நோயால் அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டவருக்கு அங்கேயே மரணமும் நிகழ்ந்து விட்டது.

'எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர இறைவன் சிரமப்படுத்த மாட்டான். அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே!'
-குர்ஆன் 2:286

Wednesday, June 24, 2009

வட்டியில்லா வங்கியை அரசு அறிமுகப்படுத்துமா?



திண்டுக்கல்: வட்டியில்லாமல் கடன் கொடுக்கும் திட்டம் விரைவில் இந்தியாவில் நடைமுறைக்கு வரும், என ஐகோர்ட் நீதிபதி அக்பர் அலி நம்பிக்கை தெரிவித்தார். வட்டியில்லா இஸ்லாமிய வங்கி ஒருங்கிணைப்பு குழுவின் 2வது மண்டல மாநாடு திண்டுக்கல்லில் நடந்தது.

கண்காட்சியை திறந்து வைத்து நீதிபதி அக்பர் அலி பேசியதாவது:
வட்டியில்லாமல் கடன் கொடுக்க முடியுமா என ஆச்சர்யப்பட்டேன். சில வெளிநாடுகளில் இத்திட்டம் நல்லமுறையில் செயல்படுகிறது.விரைவில் இந்தியாவிலும் செயல்பாட்டிற்கு வரும். வட்டி வசூலிப்பதால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை ஒரு நீதிபதியாக இருப்பதால் சாதாரண மக்களை விட அதிகம் தெரிந்து கொள்ள முடிகிறது. வரும் வழக்குகளை விசாரிக்கும் போது கடன்பட்டவர்கள் எவ்வளவு சிரமங்களை அனுபவிக்கின்றனர் என்பதை அறிந்து கொண்டேன். ஒரு காசுகூட வட்டியை குறைக்க மாட்டேன் என கல் நெஞ்சத்துடன் பேசுபவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். அதிக வட்டி வாங்க கூடாது என்ற நடைமுறை சட்டத்தில் உள்ளது.

நீதிபதியாக எங்களுக்கு சில அதிகாரங்களை அரசு கொடுத்துள்ளது. அதில், நாங்கள் நியாயத்தின் அடிப்படையில் வட்டியை குறைத்து நிர்ணயம் செய்து தீர்ப்பு வழங்க முடியும். கந்துவட்டி ஒழிப்பு தண்டனை சட்டமும் நடைமுறையில் உள்ளது. நிதி நிறுவனங்கள் தரும் அதிக வட்டியை நம்பி பெரும் பணத்தை இழந்தவர்களும் உள்ளனர். இப்படி பணத்தை இழந்தவர்களுக்கு வசூலித்து கொடுக்க தனி கோர்ட் உள்ளது. இது தவிர, வட்டி தொல்லையில் இருந்து மக்களை காக்க நிறைய குற்றவியல் நடைமுறை சட்டங்களும் உள்ளன. இவ்வளவு சட்டங்களை தாண்டியும் வட்டி கொடுமைகள் செய்கிறது. சில மனிதர்களுக்கு அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் இறைவன் கொடுத்தாலும், மனிதர்கள் தங்களுக்கு கிடைத்ததை சமமாக பங்கிட வேண்டும். தன்னிடம் எவ்வளவு உள்ளது என்று கணக்கு பார்ப்பதை விட,இருப்பதை மற்றவர்களுடன் பங்கிடும் நல்ல எண்ணம் வேண்டும். செலவினங்களை கூட தர்மமாக செய்ய வேண்டும். வட்டி வாங்க வேண்டாம் என்ற இஸ்லாம் சமூகத்தின் உயர்ந்த அறிவுரையை எல்லோரும் வரவேற்கின்றனர். "கடன் வாங்கியவர்கள் திரும்ப கொடுக்க முடியாவிட்டால் பரவாயில்லை, விட்டு விடு' என்ற இஸ்லாம் உபதேசம் எனக்கு மிகவும் பிடித்தது. இவ்வாறு பேசினார்.
-பத்திரிக்கை செய்தி

இந்த வட்டியினால் சீரழிந்த குடும்பங்கள் அனேகம் உண்டு. எனவே தான் இஸ்லாம் இந்த வட்டியின் பக்கம் நெருங்கக் கூட தடை விதிக்கிறது. இனி குர்ஆன் இடும் கட்டளைகளைப் பார்ப்போம்.

வட்டியை உண்போர் மறுமை நாளில் சாத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே இதற்கு காரணம். இறைவன் வியாபாரத்தை அனுமதித்து வட்டியை தடை செய்து விட்டான்.
குர்ஆன்: 2:275

இறைவன் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான்.
குர்ஆன் 2:276

நம்பிக்கை கொண்டோரே! இறைவனை அஞ்சுங்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்.

அவ்வாறு நீங்கள் செய்யா விட்டால் இறைவனிடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர்ப்பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.
குர்ஆன் 2: 278,279


மேற்கண்ட வசனங்கள் வட்டி வாங்குவதை எந்த அளவு கண்டிக்கிறது என்பதை விளங்கலாம். இதில் மத வித்தியாசம் எல்லாம் இல்லாமல் எங்கும் நீக்கமற இந்த கொடுமை நிறைந்திருப்பதுதான் வேதனையிலும் வேதனை.

முகமது நபி வருகைக்கு முன் அரபு நாடுகளில் வட்டித் தொழில் அனைவரிடத்திலும் தாராளமாக புழக்கத்தில் இருந்தது.

வட்டியை தடை செய்த முகமது நபி இதற்கு முன் யாரெல்லாம் வட்டிக்கு கடன் கொடுத்தார்களோ அவர்கள் அசலை மட்டும்தான் வாங்க வேண்டும்: ஏற்கெனவே பேசப்பட்ட வட்டியானாலும் அதை வாங்கவும் கொடுக்கவும் கூடாது என்று பிரகடனம் செய்தார்.

'தம்மிடம் இருந்தே எதையும் ஆரம்பிக்க வேண்டும்' என்ற கொள்கையின் காரணமாக தமது பெரிய தந்தையின் வட்டிகள் அனைத்தையும் முதலில் தள்ளுபடி செய்தார்.

'எனது பெரிய தந்தையிடம் வட்டிக்கு கடன் வாங்கியவர் அசலை மட்டும் கொடுத்தால் போதும். வட்டியைக் கொடுக்கக் கூடாது' என்று அறிவிப்பும் செய்கிறார். நஷ்டம் ஏற்பட்டாலும் எந்த சட்டமும் முதலில் தம் குடும்பத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள இவரல்லவோ ஒப்பற்ற தலைவர்.

வட்டியின் கொடுமையிலிருந்து நாமும் நமது குடும்பமும் விலகி இருக்கும் சூழலை இறைவன் நம் அனைவருக்கும் தர வேண்டும் என்று கூறி இப்பதிவை முடிக்கிறேன்.

Sunday, June 21, 2009

செவ்வாய் கிரகத்தில் ஏரி: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு



வாஷிங்டன் : செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான மற்றொரு ஆதாரத்தை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா, அங்குள்ள வாயுவின் தன்மை, உயிரினங்கள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய, அமெரிக்கா சில விண்கலங்களை அங்கு அனுப்பியது. இதில், ஒரு விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த கேமராவின் மூலம் எடுக்கப்பட்ட படங்கள், சமீபத்தில் நாசா விண்வெளி மையத் துக்கு கிடைத்துள்ளது.நீர் ஓடியதால் ஏற்பட்ட பள்ளம் ஒன்று படம் எடுத்து அனுப்பப்பட்டுள்ளது. இந்த பள்ளம், 30 மைல் தூரத்துக்கு இருக்குமென விஞ்ஞானிகள் கணக்கிடுகின்றனர்.

ஆயிரத்து 500 அடி ஆழ ஏரியாகவும் இருந்திருக்கலாமென ஆராய்ச்சியாளர்கள் யோசிக்கின்றனர். செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை பனிக்கட்டியாக மாறி விடுகிறது அல்லது ஆவியாகி விடுகிறது.எனவே, செவ்வாய் கிரகத்தில் எந்த இடத்திலாவது உயிரினங்கள் இருக்கக் கூடும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். 350 கோடி ஆண்டுகளுக்கு முன் செவ்வாய் கிரகத்தில் கடலும், ஆறும், ஏரிகளும் இருந்திருக்கின்றன. ஏதோ ஒரு சூழ்நிலையில் இந்த நீர்நிலைகள் மறைந்து போயுள்ளன. அதற்கான காரணத்தை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

-நன்றி தினமலர்

இந்த செய்தி சம்பந்தமாக நான் முன்பு இட்ட பதிவையும் மேலதிக விபரத்திற்க்காக மீள் பதிவு செய்கிறேன்.

'பூமியிலேயே வாழ்வீர்கள்! பூமியிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே பிறகு வெளிப் படுத்தப் படுவீர்கள்' - குர்ஆன் 7;175

"பூமியில் உங்களை நாம் வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறோம். (ஆனால்) குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்." குர்ஆன் 7;10


இது சம்பந்தமாக வரும் வேறு வசனங்கள் (2;36- 7;24- 30;25)பூமியில் மட்டுமே மனிதன் வாழ முடியும் என்று மேற் கண்ட வசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது. வேற்று கிரகத்திலிருந்து மனிதர்கள் வந்தார்கள், பறக்கும் தட்டு வந்தது என்பதெல்லாம் நிரூபிக்கப் படாத செவி வழி செய்திகள். உயிர் வாழ தேவையான ஆக்சிஜன் பூமியில் தான் உள்ளது. சந்திரனுக்கு மனிதன் சென்றாலும் நிரந்தர தங்குதல் என்பது பூமி மட்டுமே!மனிதனின் உடலுக்கு ஏற்றவாறு வெப்பமும் குளிரும் அளவோடு இருப்பது பூமியில் மட்டுமே!

சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும். இன்னும் சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனை சாம்பலாக்கி விடும்.மேலும் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனிலிருந்து 23 டிகிரி சாய்வாக சுழல்கிறது. இப்படி சாய்வாக சுழல்வதால் தான் கோடை, குளிர்,வசந்தம், மற்றும் இலையுதிர் காலங்கள் என்று கால மாற்றங்கள் ஏற்படுகின்றன. வருடம் எல்லாம் ஒரே சீரான வெப்பமோ, குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது.

எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு 'இதில் தான் வாழ்வீர்கள்' என்று எவ்வாறு அடித்துக் கூற முடியும்? எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இந்த வசனமும் இது இறைவனின் சொல்தான் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது.