Followers

Monday, April 30, 2018

மயிலாடுதுறை மணிக்கூண்டு


தெரிந்துக்கொள்வோம் !

 மயிலாடுதுறை மணிக்கூண்டு

மயிலாடுதுறை கடை வீதியில் நடு மையமாக விளங்கும் மணிக்கூண்டு இன்றும் ஜனாப் அப்துல் காதரின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

இந்த மணிக்கூண்டு அவர் நிறுவியது.  இதன் திறப்பு விழா 1943 நவம்பர் 23ந் தேதி நடந்தது.  அப்போதைய சென்னை மாநில (தமிழ்நாடு) ஆளுநர் ஹோப் என்ற வெள்ளைக்காரர் வந்து, மணிக்கூண்டை திறந்து வைத்தார்.

இந்த விழாவில் ஆளுநரை வரவேற்று மாலை சூட அப்துல் காதர் ஒருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

1943லேயே இந்த மணிக்கூண்டு கட்ட ரூ. 8 ஆயிரம் செலவு ஆயிற்று "நீடூர் மாயவரம் பாத்திரக் கடை ஹாஜி சி.ஈ. அப்துல்காதர் சாகிப் அவர்களால் துனிசியா வெற்றிக்காகக் கட்டிய மணிக்கூண்டு” என்று மணிக்கூண்டில் பொறிக்கப்பட்ட வாசகம் இன்றும் இருக்கிறது.

அது என்ன துனிசியா வெற்றி?

உலகப் போரில் இங்கிலாந்து தொடர்ந்து தோல்வி அடைந்தது.  போர் நடந்த எல்ல இடங்களிலும் ஜெர்மனி வெற்றி பெற்றது ; இங்கிலாந்துக்குத் தோல்வி முதன் முறையாக துனிசியாவில் நடந்த போரில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.  இந்த வெற்றியின் நினைவுச் சின்னமாக இந்த மணிக்கூண்டை அப்துல் காதர் கட்டினார்.

(வட ஆப்பிரிக்காவில் துனிசியா இருக்கிறது).

வாட்ஸ் அப் தகவல்.....



மே 1 - உழைப்பாளர் தினம்


ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும்உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்துஉண்பவர்களாகவே இருந்தனர். ”என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிக்தாம்(ரலி) அறிவித்தார்.
புகாரி: 2072, 2073.

தம் தேவைக்கு அதிகமாக மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூட சதை இல்லாதவனாக மறுமை நாளில் வருவான்… ‘யார் சுயமரியாதையைப் பேணிக் கொள்கிறானோ அவனை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச் செய்வான் யார் பிறரிடம் தேவையற்றவனாக இருக்கிறானோ அல்லாஹ் அவனைத் தேவையற்றவனாக ஆக்குகிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கிறானோ அவனை அல்லாஹ் பொறுமையாளனாக ஆக்குவான் மேலும், பொறுமையை விடச் சிறந்த, விசாலமானஅருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’.
புகாரி: 1474, 1475.

உங்களில் ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக்கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம் அல்லது மறுக்கவும் செய்யலாம். ”என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
புகாரி: 1470, 1471.

நபித்தோழர்கள் பலர் உழைத்து உண்பவர்களாக இருந்தனர். இதனால் அவர்களிடம் (வியர்வை) வாடை வீசும். இதன் காரணமாகவே ‘நீங்கள் குளிக்கக் கூடாதா?’ என்றுஅவர்களிடம் கூறப்பட்டது. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
புகாரி: 2071.





நம்மை ஆண்டி இன்டியன் என்று சொல்வார். :-)


படகு பழுதானதால் கடந்த ஒன்பது நாட்களாக கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த குளச்சலை சேர்ந்த மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை ராணுவம் பத்திமாக மீட்டு அவர்களுக்கு மருத்துவ உதவியும் செய்து நலமுடன் திருப்பி அனுப்பியுள்ளனர்.

ஹெச்.ராஜாவிடம் இதனை சொன்னால் நம்மை ஆண்டி இன்டியன் என்று சொல்வார். :-)






இந்துமதம் வேறு: இந்துத்வா வேறு:

நேற்று மதுரையில் இந்து பெருங்குடி மக்கள் லட்சக் கணக்கில் கூடி வழிபாடு நடத்திய போதும் ஒரு அசம்பாவிதம் இல்லை: போலீஸ் கெடுபிடி இல்லை: இது பக்தி

ஆனால் 60 அல்லது 70 பேர் நடத்தும் விநாயகர் ஊர்வலத்தில் பதட்டம் தொற்றிக் கொள்கிறது: ஆயிரம் போலீஸார் குவிக்கப்படுகின்றனர்: பொது மக்களுக்கும் சிரமம். ஏனெனில் இது அரசியல்.

இந்துமதம் வேறு: இந்துத்வா வேறு: இதனை அனைவரும் உணர்ந்து விட்டால் இந்தியா வல்லரசாகி விடும்.


யோகி ஆதித்யநாத் உனது முகத்தில் காறி உமிழ்கிறேன்!


யோகி ஆதித்யநாத் உனது முகத்தில் காறி உமிழ்கிறேன்!

'யோகி ஆதித்யநாத்! நீயும் உனது வசம் உள்ள காவல் துறையும் சிறுமியை பலாத்காரம் செய்தவர்களை பாதுகாக்கிறது. அந்த சிறுமியின் தந்தையை காவல்துறை அடித்து துன்புறுத்துகிறது. இதனை கண்டு கொள்ளாத உன்னை தாயாகிய நான் சபிக்கிறேன். உனது முகத்தில் காறி உமிழ்கிறேன்.

எனக்கும் ஒரு மகன் இருக்கிறான்.அவனுக்கு எப்படி வாழ வேண்டும் என்ற வாழ்வு முறையை கற்றுக் கொடுத்துள்ளேன். சகோதரியை தாயை அக்கம் பக்கத்தில் உள்ள பெண்களை எத்தனை மரியாதையோடு பார்க்க வேண்டும் என்ற படிப்பினையை கற்றுக் கொடுத்துள்ளேன். உனது கூட்டத்தினரைப் போல அவன் பலாத்காரத்தில் இறங்கியிருந்தால் அந்த நிமிடமே அவனை வெட்டி போட்டிருப்பேன்.

உனக்கும் மோடிக்கும் திருமணம் என்ற பந்தத்தை இறைவன் ஏற்படுத்தவில்லை. உங்கள் இருவருக்கும் ஒரு மகள் இருந்திருந்தால் அவர்களையும் காப்பாற்ற வக்கில்லாமல் பதவியை காப்பாற்றிக் கொள்ள குற்றவாளிகளை தப்ப விட்டிருப்பீர்கள்.

யோகி ஆதித்யநாத்! உனது முகத்தில் காறி உமிழ்கிறேன்.



Sunday, April 29, 2018

சாதிகள் ஒழியும் என்று சொல்கிறார்களே!

சாதிகள் ஒழியும் என்று சொல்கிறார்களே!

மத்திய பிரதேசம் தார் மாவட்டத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வுகள் நடைபெற்றன. அதில் கலந்து கொண்ட பல காவலர்களுக்கு தேர்வின் போது அவர்களது மார்பில் சாதி அடையாளம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்துத்வா ஆட்சி செய்யும் மாநிலங்களில் சாதி வெறி எந்த அளவு ஊட்டப்படுகிறது என்பதற்கு இந்நிகழ்வு ஒரு உதாரணம்.

எந்த காலத்தில் இவர்கள் சாதியை ஒழிக்கப் போகிறார்கள்?

தகவல் உதவி
புதிய தலைமுறை
29-04-2018


Saturday, April 28, 2018

ரியாத்தில் தமிழர்களின் இரத்ததான முகாம்!

ரியாத்தில் தமிழர்களின் இரத்ததான முகாம்!

சென்ற வெள்ளிக் கிழமை கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியுடன் இணைந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் இரத்ததான முகாம்சிறப்பாக நடந்தேறியது.

எல்லா புகழும் இறைவனுக்கே!





புதிய தவ்ஹீத் மார்க்கஸ்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்

புதிய தவ்ஹீத் மார்க்கஸ்

#தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்
வடக்கு மாங்குடி
தஞ்சை வடக்கு

அல்ஹம்துலில்லாஹ்



பல குழந்தைகளை காப்பாற்றியும் இந்த நிலைமை ..

முஸ்லிமா பிறந்து டாக்டராகி இஸ்லாம் சொன்ன மனிதநேயத்தை செய்துகாட்டி பல குழந்தைகளை காப்பாற்றியும் இந்த நிலை டாக்டர் கஃபில் கானுக்கு. மனித நேயத்தை குழி தோண்டி புதைக்கும் காவிகளின் அரசை இறைவன் நாசமாக்குவானாக!

பொ றுமையாளர்களுடன் இறைவன் இருக்கிறான். கண்டிப்பாக இந்த அநியாயங்களுக்கு கூடிய விரைவில் விடை கிடைக்கும்.




கம்யூனிஷ தேசமான சீனாவில் ஜூம்ஆ தொழுகை


கம்யூனிஷ தேசமான சீனாவில் ஜூம்ஆ தொழுகையை முடித்து விட்டு சந்தோஷமாக வெளியேறும் சீன முஸ்லிம்கள். கணவனும் மனைவியும் எவ்வளவு சந்தோஷமாக வெளியாகிறார்கள்.


இன்றும் தமிழகத்தில் பெண்களை பள்ளிக்குள் அனுமதிக்க மறுக்கும் சுன்னத் ஜமாத் முத்தவல்லிகள் இனியாவது பெண்களை அனுமதிப்பார்களாக!

போட்டோ கிளிக்கியது.... Barakath Ali


அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்கள் துணைவியர் பள்ளிவாசல்களுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கோரினால் அவர்களுக்கு அனுமதி அளியுங்கள் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.
நூல் : முஸ்லிம் (754)


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரிடம் அவருடைய மனைவி பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவளை அவர் தடுக்க வேண்டாம்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : முஸ்லிம் (751)


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெண்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்வதற்காக உங்களிடம் அனுமதி கேட்டால் பள்ளிவாசலில் அவர்களுக்குரிய உரிமையைத் தடுக்காதீர்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : முஸ்லிம் (757)