Followers

Monday, February 13, 2006

பெண்ணின் கருவறை சுருங்கி விரிதல்.

பெண்ணின் கருவறை சுருங்கி விரிதல்.

'ஒவ்வொரு பெண்ணும் தனது கருவறையில் சுமப்பதையும், கருவறைகள் சுருங்குவதையும், விரிவடைவதையும் அல்லாஹ் அறிகிறான். ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் நிர்ணயிக்கப் பட்ட அளவு உள்ளது.' குர்ஆன் 13:8

திருக் குர்ஆனின் 13;8 வசனம் மிகப் பெரும் அறிவியல் உண்மையைக் கூறும் வசனமாகும்.

பொதுவாக மனித உடலுக்கு என சில தனிப் பட்ட தன்மைகள் உண்டு. தனக்குள் அது அன்னியப் பொருள் எதனையும் ஏற்றுக் கொள்ளாது.நாம் சாப்பிடும் உணவுகளையும் ஜீரணித்துக் கொண்டு பிறகு கழிவாக வெளியேற்ற முயற்ச்சிக்கிறது. நம் கண்களை எடுத்துக் கொள்வோம். கண்களில் ஏதேனும் தூசிகள் விழுந்து விட்டால்அதை எப்படியாவது வெளியேற்றவே கண் முயற்ச்சிக்கும்.

இது போலவே பெண்களின் கருவறைகளும் அமைந்துள்ளன. ஆயினும் கருவறை அன்னிய உடலின் விந்துத் துளியை தன்னுள் ஏற்றுக் கொள்கிறது. பல மாதங்கள் தனக்குள் விந்துத் துளியை கருவாக வளர்த்து திடீரென அதை வெளியேற்றுவதற்காக முயற்ச்சிக்கிறது. இவ்வாறு முயற்ச்சிக்கும் போது கருவறை சுருங்கி விரிகிறது.இதன் காரணமாகவே பிரசவ வேதனை ஏற்படுகிறது. இதனைத் தான் இவ் வசனம் கூறுகிறது.

'ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் நிர்ணயிக்கப் பட்ட அளவு உள்ளது' என்ற சொற்றொடர் மிகவும் முக்கியமாக கவனிக்கப் பட வேண்டிய ஒன்றாகும். இயற்கைக்கு மாற்றமாக அன்னியப் பொருளை ஏற்றுக் கொண்டிருந்த கருவறை ஒரு குறிப்பிட்ட நேரம் வந்ததும் குழந்தையை வெளியேற்றுவதற்கு முயற்ச்சிக்கிறது. அந்த குறிப்பிட்ட நேரத்தை நானே தீர்மானித்தேன் என்று இறைவன் கூறுகிறான்.

அன்னிய பொருளை கருவறை பல மாதங்களாக ஏற்றுக் கொண்டது எப்படி? என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

இயற்கைக்கு மாறாக இறைவன் தன் வல்லமையை புகுத்தி ஒரு காலக் கெடுவை நிர்ணயிக்கிறான். அந்த நிர்ணயித்தின் படியே நீண்ட காலம் அன்னியப் பொருளை கருவறை சுமந்து கொண்டிருக்கிறது என இந்தச் சொற்றொடர் விளக்குகிறது.

எழுதப் படிக்கத் தெரியாத முகமது நபி தன் கற்பனையால் இத்தகைய அறிவியல் உண்மைகளை சொல்ல முடியாது. இது நம் அனைவரையும் படைத்த இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

பெண்ணின் கருவறை சுருங்கி விரிதல்.

பெண்ணின் கருவறை சுருங்கி விரிதல்.

'ஒவ்வொரு பெண்ணும் தனது கருவறையில் சுமப்பதையும், கருவறைகள் சுருங்குவதையும், விரிவடைவதையும் அல்லாஹ் அறிகிறான். ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் நிர்ணயிக்கப் பட்ட அளவு உள்ளது.' குர்ஆன் 13:8

திருக் குர்ஆனின் 13;8 வசனம் மிகப் பெரும் அறிவியல் உண்மையைக் கூறும் வசனமாகும்.

பொதுவாக மனித உடலுக்கு என சில தனிப் பட்ட தன்மைகள் உண்டு. தனக்குள் அது அன்னியப் பொருள் எதனையும் ஏற்றுக் கொள்ளாது.நாம் சாப்பிடும் உணவுகளையும் ஜீரணித்துக் கொண்டு பிறகு கழிவாக வெளியேற்ற முயற்ச்சிக்கிறது. நம் கண்களை எடுத்துக் கொள்வோம். கண்களில் ஏதேனும் தூசிகள் விழுந்து விட்டால்அதை எப்படியாவது வெளியேற்றவே கண் முயற்ச்சிக்கும்.

இது போலவே பெண்களின் கருவறைகளும் அமைந்துள்ளன. ஆயினும் கருவறை அன்னிய உடலின் விந்துத் துளியை தன்னுள் ஏற்றுக் கொள்கிறது. பல மாதங்கள் தனக்குள் விந்துத் துளியை கருவாக வளர்த்து திடீரென அதை வெளியேற்றுவதற்காக முயற்ச்சிக்கிறது. இவ்வாறு முயற்ச்சிக்கும் போது கருவறை சுருங்கி விரிகிறது.இதன் காரணமாகவே பிரசவ வேதனை ஏற்படுகிறது. இதனைத் தான் இவ் வசனம் கூறுகிறது.

'ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் நிர்ணயிக்கப் பட்ட அளவு உள்ளது' என்ற சொற்றொடர் மிகவும் முக்கியமாக கவனிக்கப் பட வேண்டிய ஒன்றாகும். இயற்கைக்கு மாற்றமாக அன்னியப் பொருளை ஏற்றுக் கொண்டிருந்த கருவறை ஒரு குறிப்பிட்ட நேரம் வந்ததும் குழந்தையை வெளியேற்றுவதற்கு முயற்ச்சிக்கிறது. அந்த குறிப்பிட்ட நேரத்தை நானே தீர்மானித்தேன் என்று இறைவன் கூறுகிறான்.

அன்னிய பொருளை கருவறை பல மாதங்களாக ஏற்றுக் கொண்டது எப்படி? என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

இயற்கைக்கு மாறாக இறைவன் தன் வல்லமையை புகுத்தி ஒரு காலக் கெடுவை நிர்ணயிக்கிறான். அந்த நிர்ணயித்தின் படியே நீண்ட காலம் அன்னியப் பொருளை கருவறை சுமந்து கொண்டிருக்கிறது என இந்தச் சொற்றொடர் விளக்குகிறது.

எழுதப் படிக்கத் தெரியாத முகமது நபி தன் கற்பனையால் இத்தகைய அறிவியல் உண்மைகளை சொல்ல முடியாது. இது நம் அனைவரையும் படைத்த இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

ஜோதிடமும், வாஸ்துவும், இஸ்லாமும்

ஜோதிடமும், வாஸ்துவும், இஸ்லாமும்

நம்முடைய முன்னேற்றத்துக்கு இறைவனின் கருணையும், கடுமையான உழைப்பும், திட்டமிடலுமே! அதை விடுத்து படித்தவர்கள் முதல், பாமரர்கள் வரை ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் மூழ்கி கிடப்பது வேதனையிலும் வேதனை. நம் நாட்டின் ராக்கெட் டை ஏவுவதிலிருந்து, சமீபத்தில் நடந்த திமுக மாநாடு வரை ஜோதிடர்களின் ஆலோசனைப் படி ராகு காலம் பார்த்து நடத்தப்படுகிறது. இப்படி நேரம் காலம் பார்த்து நடத்துபவர்கள் தங்களை பகுத்தறிவாதிகள் என்று வேறு சொல்லிக் கொள்கிறார்கள். இந்த ஜோதிடமும் அதைச் சார்ந்த வாஸ்து சாஸ்திரம் முதலானவை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளதா? என்றால் அதுவும் இல்லை.

மானசரா, மயாமாதம், மனுஷாவியா(ஏதாவது புரிகிறதா) போன்ற நூல்களின் அடிப்படையில்வாஸ்து சாஸ்திரம் கடை பிடிக்கப் படுவதாக அறிய முடிகிறது. வாஸ்து பற்றி விஞ்ஞான பூர்வமாக நிரூபித்தால் ரூ அய்ந்து கோடி வழங்கப்படும் என்று ஆந்திர மாநிலம் அய்தராபாத்தில் உள்ள ஜன விஞ்ஞான வேதிகா (ஜே.வி.சி) நிறுவனம் அறிவித்துள்ளது. இது பற்றி அதன் அமைப்பாளர் டி.வி.ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 'மதம் மற்றும் நம்பிக்கையின் பெயரால்சிலர் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். 'ஆஸ்துமா' மருத்துவத்துக்கு மீன் மருத்துவம் என்பதும் இது போன்ற செயல் ஆகும். ஒரு கட்டிடம் என்பது கட்டிட அமைப்பின் முறைப்படி கட்டப்பட வேண்டுமே தவிர 'வாஸ்து' முறைப்படி அல்ல. வாஸ்து பற்றி விஞ்ஞான ரீதியாக நிரூபித்தால் ரூ5 கோடி வழங்கத் தயார்' என்று கூறினார்.

தினத்தந்தி 20-6-2005

இது ஒரு புறம் இருக்க முஸ்லிம்களிலும் ஒரு சிலர் ஜோதிடத்திலும், சூன்யத்திலும் நம்பிக்கை வைத்து தங்களின் வாழ்நாளை வீணாக்கி வருகின்றனர். தாயத்து தகடுகள் என்று எழுதுபவருக்கே புரியாத மொழியில் எதை எதையோ எழுதி வைத்து, அதை வீடுகளில் தொங்க விடுகிறார்கள். உடம்பில் தாயத்தாக கட்டிக் கொள்கிறார்கள். 786 என்ற எண் புனிதமானது என்று எண்ணுகிறார்கள். (ஒரு சினிமாவில் எதிரி சுடும் போது ரஜினி கழுத்தில் கிடக்கும் 786 என்ற டாலர் அவர் உயிரை காப்பாற்றும்) பத்திரிக்கைகளில் வரும் ராசி பலனில் நம்பிக்கை வைக்கிறார்கள். இப்படியான பல தவறான நம்பிக்கைகளில் முஸ்லிம்கள் வீழ்ந்து கிடக்கிறார்கள். இது போன்ற நம்பிக்கைகளைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

முகமது நபி கூறுகிறார், 'எவன் ஜோதிடன் அல்லது குறிகாரனிடம் சென்று அவன் சொல்வதை நம்புகிறானோ அவன் முகம்மதுக்கு இறக்கி அருளப்பட்ட வேதத்தை நிராகரித்தவன் ஆவான்'

ஆதாரம்: அஹமத்

பத்தரிக்கைகளில் வரும் ராசி பலன்களில் நம்பிக்கை வைப்பதும் இந்த வகையை சேர்ந்ததுதான். அதிலுள்ள கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் அமைந்த வான சாஸ்திரங்களை ஒருவன் நம்பினால் அவனும் இறை மறுப்பாளன் ஆகிறான். இதைப்பற்றி முகமது நபி கூறும் போது,

'இறைவனின் அருளாலும், அவனுடைய கருணையாலும்தான் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறியவர் இறைவனை நம்பியவர் ஆவார். இன்னின்ன நட்சத்திரங்களால்தான் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறியவர் இறை நிராகரிப்பாளரும், நட்சத்திரத்தையே வணங்கியவராவார்' என்றார்.

ஆதாரம்: புகாரி

'யார் தாயத்தைக் கட்டி தொங்க விட்டுக் கொள்கிறாரோ திண்ணமாக அவர் இறைவனுக்கு இணை வைத்து விட்டார்' என்பது நபி மொழி.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர்
நூல்:அஹ்மத்

'சூன்யக்காரன் எங்கு சென்றாலும் ஒரு போதும் வெற்றி பெற மாட்டான்' அல் குர்ஆன் (20:69)

ஒவ்வொரு ஊரிலும் சூன்யம் எடுக்கிறேன் பேர்வழி என்று சாமியார்கள், மௌலானாக்கள் என்று பல போலிகளிடம் நகைகளையும் பணத்தையும் இழந்த கதைகள் பத்திரிக்கைகளில் ஏராளம். மறைவான விஷயங்கள் இறைவனைத் தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள். அப்படி தெரியும் என்று அவன் வாதிட்டால் இறைவனின் வல்லமையோடு அவன் போட்டி போடுகிறான். இத்தகைய ஏமாற்றுப் பேர்வழிகள்மணலில் கோடு கிழித்துப் பார்ப்பது, சோழி போட்டுப் பார்ப்பது, கை ரேகை பார்ப்பது,பீங்கானில் நீர் ஊற்றிப் பார்ப்பது, கண்ணாடியில் பார்ப்பது போன்ற பல் வேறு வழி முறைகளைக் கையாள்கிறார்கள். இவர்கள் ஒரு முறை உண்மை கூறினால் 99 தடவை பொய சொல்பவர்களாகவே இருக்கின்றனர்.இது போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளிடமிருந்து நாம் தான் நம் குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைகள்!

மாற்றான் தோட்டத்து மல்லிகைகள்!

கல்விமான்கள் பலரின் கருத்துக்களை கீழே தந்துள்ளேன். மாற்று மதத்தவர்கள் தெரிந்து வைத்திருக்கும் அளவு கூட முஸ்லிம்களில் பலர் குர்ஆனைப் பற்றிய அறிவு இல்லாமல் இருக்கிறார்கள். முஸ்லிம்களில் எத்தனை வீடுகளில் குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்பு உள்ளது? கேட்டால் 'இதை எல்லாம் மௌலானாக்கள் தான் விளங்க முடியும். நமக்கு அந்த அளவு அறிவு ஏது? என்று பதில் சொல்கிறோம். 'நீங்கள் விளங்குவதற்காகவே இந்த குர்ஆனை மிகவும் இலகுவாக ஆக்கியிருக்கிறோம்' என்று குர்ஆனில் இறைவனே குறிப்பிடுகிறான். அப்படி இருக்க இன்னும் ஏன் தயக்கம். மாற்று மதத்தவர்களுக்கு விளங்குகிறது, முஸ்லிம்களாகிய உங்களுக்கு விளங்கவில்லை என்பது நகைப்பிற்கிடமானது அல்லவா?

காலங் காலமாய் ஒடுக்கப் பட்டு, தீண்டத் தகாதவர்களாய் மனதுக்குள் புழுங்கித் தவிக்கும் என் சகோதரர்களுக்கும் இந்த பதிவிலேயே தீர்வும் இருக்கிறது.

ஆர்தர் ஜே.ஆர்பெர்ரி (Arthur J.Arberry) கூறுகிறார்:

குர்ஆனுடைய கருத்துக்களை வெளிக் கொணர்வதில் முன்னோர்கள் செய்த முயற்சிகளை விட இன்னும் சிறப்பாக செய்ய நாடினேன்.ஆனால் அரபி மொழியில் குர்ஆனில் இருக்கும் அழகையும் ஆழத்தையும் நேர்த்தியையும் மிகக் குறைவாகவே என்னால் கொண்டு வர முடிந்தது. மிகத் துல்லியமாக பின்னி பிணைந்து நிற்கும் ஓசைகளை நான் ஆழமாக கவனித்தேன. குர்ஆனில் இருக்கும் கருத்தழகுக்கு சற்றும் குறைந்ததல்ல அதன் இசை நயம் என்பதை உணர்ந்தேன். உலக இலக்கியங்களிலேயே குர்ஆனை இவை இணையற்ற ஒன்றாக விளங்கச் செய்கின்றன. குர்ஆனின் இந்த விநோதமான அம்சம் அதற்கேயுரிய தனிப் பாணியாகும். பிறரால் முற்றிலும் கையாள முடியாத பாணியாக அது இருக்கிறது. அதனுடைய சொற்களின் ஓசை நயமே மக்களின் கண்களை கசியச் செய்கிறது. உள்ளங்களை பரவசமடையச் செய்கிறது' என்று பிக்தால் தம் மொழி பெயர்ப்பில் சொன்ன கருத்து எந்த வகையிலும் மிகையானதல்ல.

-The Koran Interpreted , London: Oxford University Press, 1964, Page 10

சரோஜினி நாயுடு

இஸ்லாம் தோற்றுவித்த உன்னத மரபுகளில் ஒன்று நீதி மற்றும் நியாய உணர்வாகும். குர்ஆனை நான் ஆய்ந்து படித்த போது அது அறிவுறுத்திய புரட்சிகரமான கொள்கைகள், வெற்று ஞானமாக இல்லாமல் வாழ்வின் நடை முறை போதனையாக நடைமுறை வாழ்வுக்கு இசைவானதாக முழு உலகிற்கும் பொருந்தக் கூடியதாக இருப்பதைக் கண்டேன்.

-Sarojini Naidu, Lectures on”The Ideals Of Islam” see sand writings of Sarojini Naidu, Madras, page 167

சுவாமி விவேகானந்தர்

மற்ற அனைத்து மக்களையும் விட அத்வைத கொள்கை தங்களுக்கு முன்னரே அறிமுகமாய் இருப்பதற்கு இந்துக்கள் பெருமை அடையலாம். ஆயினும் நடைமுறை அத்வைதம்- அதாவது மாந்தர்கள் அனைவரையும் தம்மைப் போல் சமமானவர் என்று பாவிப்பதும், அவ்வாறே நடந்து கொள்ளும் தன்மையும் இந்துக்கள் மத்தியில் அறவே மலரவில்லை. ஆனால் இத்தகைய சமத்துவத்தை ஒரு மதம் பாராட்டத்தக்க அளவில் அணுகி இருக்கிறது என்றால் அது இஸ்லாம் மட்டுமே என்று நான் அனுபவ பூர்வமாய்க் கூறுகிறேன்.

நான் அழுத்தமாய்ச் சொல்கிறேன், நடைமுறைக்கு இசைவான இந்த இஸ்லாமிய செயல் பாடின்றி வேதாந்தக் கருத்துக்கள் - அது எவ்வளவு தான் சிறப்பானதாக பெருமைக்குரியதாக இருந்தாலும்- பரந்து கிடக்கும் மனித குலத்துக்கு அது பயனற்றதாகவே அமையும்.

Letters Of Swamy Vivekananda page 463
__________________________________________________________________

சர் சி.பி.ராமசாமி அய்யர்

இஸ்லாம் என்றால் எனன? இன்றைக்கு உலகில் செயல்படும் ஒரே ஜனநாயக நெறி என்றே இஸ்லாத்தை நானும் மற்ற சிந்தனையாளர்களும் கருதுகிறோம். நான் ஓர் இந்து. இந்து சமய நம்பிக்கையில் ஆழ்ந்த பற்று கொண்டிருந்தாலும் நான் இதை தைரியமாகவே கூறுகிறேன். மனித குலம் ஒன்றே என்பது இந்து மதத்தின் அடிப்படை தத்துவமாக இருந்தாலும் அதனை நடைமுறைப் படுத்துவதில் எனது சொந்த மதம் வெற்றி பெற வில்லை. இறைவன் முன் மனிதர்கள் அனைவரும் சமமே எனும் அடிப்படைச் சிந்தாந்தத்தை நடைமுறை படுத்துவதில் இஸ்லாத்தின் செய்முறையைப் போனறு வேறெந்த மதமும் - அவற்றின் மதக் கருத்தோட்டம் எதுவாயினும் சரியே- கடைபிடிக்கவில்லை. தென் ஆப்ரிக்காவின் போயர் இன மக்கள் பிரச்னை, ஆஸ்திரேலியா அல்லது தென் அமெரிக்க நாடுகள் அல்லது இங்கிலாந்தின் பல்வேறு தரப்பட்ட மக்களின் பிரச்னைகள் போன்று இஸ்லாத்தில் எத்தகைய இனப் பிரச்னைகளும் இருக்கவில்லை.

Sir C.P. Ramasamy Iyer, Eastern Times, 22nd December, 1944
_______________________________________________________________________

மகாத்மா காந்தி

தென் ஆப்ரிக்காவில் உள்ள அய்ரோப்பியர்கள் இஸ்லாம் பரவி விடும் என்று பயப்படுவதாக சிலர் கூறினார்கள். இஸ்லாம் ஸ்பெயினுக்கு நாகரீகத்தைக் கற்று தந்தது. மொராக்கோவுக்கு ஒளியைக் கொண்டு வந்தது. உலகுக்குச் சகோதரத்துவம் எனும் கொள்கையை போதித்தது. தென் ஆப்ரிக்காவில் உள்ளவர்கள் வெள்ளை இனத்தாருடன் சம உரிமை கோரக் கூடும் என்பதால் தென் ஆப்ரிக்காவில் உள்ள அய்ரோப்பியர்கள் இஸ்லாமின் வருகைக்காக அஞ்சுகிறார்கள். அவர்கள் நன்றாக பயப்படலாம். சகோதரத்துவம் என்பது பாவம் என்றால். கறுப்பு நிறத்தவர்களுடன் சமத்துவத்திற்காக அவர்கள் அஞ்சினால் அந்த அச்சத்துக்கும் காரணம் உண்டுதான்.

Mahatma Gandhi Quoted in “Mohamed The Prophet Of The Islam” by Ramakrishna Roa. Page 8

அன்னி பெசன்ட் அம்மையார்

அரேபியாவின் இந்தத் துதருடைய வாழ்க்கையையும், ஒழுக்கப் பண்புகளையும், தூய நடத்தையையும் படிப்பவர்கள் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை அறிந்தவர்களுக்கு அந்த வல்லமை மிக்க மாபெரும் இறைத் தூதர்களில் ஒருவரான இறுதித் தூதரைக் குறித்து உயர்வான எண்ணமே ஏற்படும். எனது இந்த நூலில் நான் பலருக்கும் தெரிந்த பல விஷயங்களையே சொல்லி இருக்கிறேன் என்றாலும் நானே அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைத் திரும்பத் திரும்பப் படிக்கும் ஒவ்வொரு முறையும் ஆற்றல் மிக்க அரபு போதகரின் மீது புதிய ஒரு மதிப்பும் புதிய ஒரு மரியாதை உணர்வும் ஏற்படுவதை நான உணர்கிறேன்.

Annie Besant, The life and Teachings of Mohamed 1932, page 4

லாமார்டின்

தத்துவ போதகர், சொற்பொழிவாளர், இறைத்துதர், சட்ட நிபுணர், மாபெரும் போர் வீரர், கருத்துக்களை வென்ற வரலாற்று வீரர், பகுத்தறிவுப் பூர்வமான கொள்கைகள் நம்பிக்கைகளை நிலை நாட்டியவர், மாயைகள் கவர்ச்சிகள் இல்லாத பகுத்தறிவு ரீதியில் ஒரு கொள்கை வழி நாகரீகத்தை உருவாக்கி அளித்த மாமேதை, ஒரே ஆன்மீகத் தலைமையில் இருபது பூவுலகப் பேரரசுகளின் நிறுவனர் தாம் முஹம்மத் அவர்கள்.

Lamartine, Historie De La Turquie, Paris, 1854 Volume 2, page 276, 277

.சுப்ரமணியபாரதியும் இஸ்லாமும.

சுப்ரமணியபாரதியும் இஸ்லாமும.

பள்ளித் தலம் அனைத்தும கோவில் செய்குவோம், திக்கை வணங்கும் துருக்கர், தில்லி துருக்கர் செய்த பழக்கமடி என்றெல்லாம் சொல்லி கருத்துகளை திரித்து பாரதியை ஒரு இஸ்லாமிய எதிர்ப்பாளராகத்தான் நம் ஊடகங்கள் நமக்கு காட்டியுள்ளன. நானும் 'பாஞ்சாலி சபதம்' படிக்கும் காலங்களில் இவர் ஒரு சார்பு உடையவரோ என்று நினைத்ததுண்டு. இருந்தும் அவருடைய எழுத்து நடை, வார்த்தைகள் போர்க் குணத்துடன் விழுகின்ற பாங்கு, சொல்ல வருவதை எளிமையாக சொல்வது போன்றவற்றால் அவர் கவிதைகளை ஒரு வெறியுடன் படித்த காலமெல்லாம் உண்டு. நம் தாய் மொழிப் பற்று, நம் நாட்டின் உயர்வில் அவருக்கு இருந்த ஆவல் போன்றவற்றை எல்லாம் படிக்கும் போது சில நேரங்களில் என் உடல் சிலிர்க்கும்.

சமீபத்தில் இணையத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் போது சில அரிய தகவல்களை திரு மாலன் பாரதியைப் பற்றி எழுதியிருந்தார். அதைப் படித்தவுடன் பாரதியைப் பற்றிய என் எண்ணம் மேலும் உயர்ந்திருக்கிறது. இந்த பதிவில் பாரதி ஒரு இடத்தில் மன்னர் அக்பரை பூஜிக்க வேண்டும் என்று சொன்னதில் நான் மாறுபடுகிறேன். நம்மைப் படைத்த இறைவனைத் தவிர வேறு யாரும் பூஜிக்கத் தக்கவர்கள் அல்ல என்பது என் கருத்து.அதோடு வேறொரு இடத்தில் முகமது நபி தன் கனவில் வந்து சொன்னதாக பாரதி சொல்கிறார். முகமது நபி காலத்தில் அவரை நேரில் பார்க்காத எவரும் கனவிலும் பார்க்க முடியாது என்பது முகமது நபியின் கூற்று. எனவே பாரதி கனவில் வேறு யாரையோ பார்த்து விட்டு இவர் முகமது நபியாக இருக்கலாமோ என்று நினைத்திருக்கலாம். மேலும் தற்போது கிடைப்பது போல் எளிய தமிழில் குர்ஆன் அந்த காலத்தில் பாரதிக்கு கிடைத்திருந்தால் அவர எண்ணங்களில் பல மாற்றங்கள் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். திரு மாலனின் பதிவை அப்படியே தருகிறேன். உங்களின் கருத்துக்களையும் சொல்லுங்களேன்.!

பாரதியும் இஸ்லாமும்மாலன்

" மாரியம்மனிலிருந்து மகாவிஷ்ணு வரை எல்லாக் கடவுள்கள் மீதும் பாடல்கள் எழுதுகிறார். வேதத்தைப் புகழ்கிறார். உபநிஷதங்களின் அடிப்படையில் புதுக் கவிதை படைக்கிறார். கீதையை மொழி பெயர்க்கிறார். ஒருவேளை பாரதியார் என்னைப் போல இந்துத்வா ஆளோ? இஸ்லாம் பற்றி என்ன சொல்கிறார் 'உங்க' பாரதியார்?" என்று வம்பளக்க வந்தார் என் பக்கத்து வீட்டுக்காரர்.
ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் நேரம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போரடிக்கத் துவங்கியிருக்க வேண்டும். வம்புக்கு அலையும் அவர் என் வாயைக் கிளற வந்திருந்தார்.
"சொல்கிறேன், சொல்கிறேன். ஆனால் சொன்னால், அதை உம்மால் தாங்க முடியுமா என்றுதான் எனக்குக் கவலை"

"அப்படி என்ன ஐயா அதிர்ச்சி கொடுக்கப்போகிறீர்?"

"சொல்லட்டுமா? சொல்வதைக் கேட்டுவிட்டு, என்னைத் திட்டினால் கூட பரவாயில்லை. பாரதியைத் திட்டினால் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன்"

"சும்மா பூச்சி காட்டாதீரும். சொல்லும் அதையும்தான் கேட்போம்"

"நீங்கள் தினமும் பூஜை செய்து, விழுந்து கும்பிடுகிறீர்களே, அந்தக் கடவுள், அல்லாதான் என்கிறார்" என்றேன். என் இந்து நண்பர் முகத்தை சுருக்கினார்.கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், " என்ன சொன்னீர் மறுபடி சொல்லும்" என்றார்.

"பிரம்மம், பிரம்மம் என்று நீங்கள், அதாவது இந்துக்கள், சொல்கிறீர்களே அந்த பிரம்மம் அல்லா என்கிறார் பாரதியார்."

"நிஜமாவா? இல்லை நீர் கயிறு திரிக்கிறீரா?"

நான் என் மேஜை மீதிருந்த தராசு என்ற புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அது பாரதியார் எழுதிய நூல்களில் ஒன்று:
நேற்று பட்டணத்திலிருந்து ஒரு சாமியார் நம்ம கடைக்கு வந்திருந்தார்.அவர் சொன்னார்: ஹிந்துக்களுடைய வேதம் மிகவும் பழமையானது. அதிலும் நம்ம குரானைப் போல அல்லாவைத்தான் புகழ்ந்து பேசுகிறது. ஆனால் அல்லா என்கிறதற்கு அவர்களுடைய பாஷையிலே ப்ரஹ்ம என்கிறார்கள். அதில் ரிஷிகள் என்று பாடினவர்கள் அல்லாவினுடைய உண்மையை அறிந்தவர்கள்"
பக்கத்து வீட்டுக்காரர் புத்தகத்தை வாங்கிப்பார்த்தார்." இது பாரதியாரின் ஒரு பாத்திரத்தின் கூற்று. இதை எப்படி பாரதியின் கூற்றாக எடுத்துக் கொள்ள முடியும்?" என்று கேள்வி போட்டார். என்னை மடக்கி விட்டதாக அவருக்கு ஒரு பூரிப்பு.

"சரி, உமது திருப்திக்கு அப்படியே வைத்துக் கொள்ளும். ஆனால், அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் எழுதிய முகம்மதிய ஸ்திரீகளின் நிலமை என்ற கட்டுரையில், ' பரமாத்மாவான அல்லா ஹீத்த ஆலா அருள் புரிவாராக' என்று எழுதியிருக்கிறார். அது மட்டுமல்ல, இன்னொரு இடத்தில் இந்தியாவில் உள்ள இந்துக்கள் அக்பரை பூஜிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே அதற்கு என்ன சொல்கிறீர்?"

"இது என்ன புதுக் கதை?"

"இது கதை அல்ல. கதை போன்ற நடையில் எழுதப்பட்ட கட்டுரைகளில் சொல்லப்படுவதையே பாத்திரத்தின் கூற்று என்று தள்ளிவிடுகிற ஆள் நீங்கள்.அதனால் பாரதியாரின் கட்டுரை ஒன்றிலிருந்து வாசித்துக் காட்டுகிறேன். அதை நீர் அவருடைய கூற்று அல்ல என்று மறுக்க முடியாது."

"படியுமேன். கேட்போம்"

"நமது நாட்டில் தோன்றி நமது நன்மைக்குப் பாடுபட்ட மகான்களை எல்லோரும் ஒன்று சேர்ந்து பூஜிப்பதே நமது கடமை. இதை நாமெல்லோரும் நமது முகமதிய சகோதரர்களுக்குக் காரியத்தில் காட்ட, அக்பர் போன்ற மகமதிய மகான்களின் உற்சவத்தைக் கொண்டாட வேண்டும்"

"மதங்களிடையே சமரசம் நிலவ வேண்டும் என்ற கருத்தில் இதை சொல்லியிருப்பார். அக்பரை அவர் குறிப்பிட்டிருப்பதே அதற்குச் சான்று. அவர் இந்துக்களோடு நட்புப் பாரட்டியவர் அல்லவா?"

" 'மகமதிய சாஸ்திரங்களைப் படித்தால் இந்துக்களுக்கு அறிவு விசாலப்படும்' என்கிறார் பாரதியார். அதையாவது நம்புவீரா?"

"நீர் சொல்வதைப் பார்த்தால் கைவசம் ஆதாரம் வைத்திருக்கிறீர் என்று நினைக்கிறேன். எங்கே எடுத்து விடும் பார்ப்போம்"

நான் படித்துக் காட்டினேன்:" எல்லா வித்தைகளும் கலந்தால்தான் தேசத்தினுடைய ஞானம் பரிமளிக்கும். கலந்தால் பொது இன்பம். ஒன்றை ஒன்று கடித்தால் இரண்டுக்கும் நாசம். முகமதிய சாஸ்திரங்களைக் கற்றுக் கொண்டால் ஹிந்துக்களுக்கு அறிவு விசாலப்படும்."

"அதையெல்லாம் பாரதியார் படித்திருக்கிறாரா?"

"படித்திருக்கிறார் என்பது மட்டுமல்ல. அவற்றைப் பற்றி சரளமாக, தெளிவாகப் பேசுகிறார். மதங்கள் பற்றிய கட்டுரைகளில் மட்டும் அல்ல, அரசியல் பேசும் போதல்ல, பொது விஷயங்கள் பேசும் போது கூட அவற்றைக் குறிபிடுகிறார். நம்பிக்கையே காமதேனு என்ற தலைப்பில் அவர் எழுதியிருப்பதைப் படியுங்கள். முகமது நபியின் வாழ்க்கை சரித்திரத்தை இத்தனை சுருக்கமாக தெளிவாக இஸ்லாமியர் அல்லாத இன்னொருவர் எழுத முடியுமா என்று வியந்து போவீர்: "பழைய பொய்ச் சிலைகளின் வணக்கத்தை ஒழித்து எங்கும் வியாபித்து நிற்கும் பிரம்மத்தையே தொழ வேண்டும் என்று முகமது நபி அலகிவஸ்லாம் அவர்கள் ஒரு புதிய மதம் உண்டாக்கினார் என்ற கோபத்தால், குராயிஷ் கூட்டத்தார் அவருடைய சிஷ்யர்களைப் பயமுறுத்தியும், கொலை செய்தும் அடக்கிவிட்டு நபியையும் கொல்ல வேண்டுமென்ற சதி செய்து கொண்டிருக்கையிலே அந்த மகான் மெக்கா நகரத்திலிருந்து தப்பி மெடீனா நகரத்திற்குச் செல்லும் போது, பின்னே அவரைப் பிடிக்கும் பொருட்டாகக் குராயிஷ் குதிரைப்படைத் துரத்திக் கொண்டு வந்தது. நபியானவர் தம்மோடு வந்த ஒரே சிஷ்யருடன், அங்கு ஒரு புதரில் ஒளிந்திருந்தார். துரத்தி வரும் குதிரைகளின் காலடி சமீபமாகக் கேட்டது. சிஷ்யன் பயந்து போய், "இனி என்ன செய்வது?" என்று தயங்கினான். அப்போது நபி, " அப்பா, நான் அல்லாவின் தர்மத்தை நிலை நிறுத்தும் பொருட்டாக வந்திருக்கிறேன். என் காரியம் நிறைவேறும் வரை எனக்கு மரணம் இல்லை." என்று சொல்லி அபயதானம் செய்தார். ஆபத்து வரவில்லை. குதிரைப்படையோர் இடம் தெரியாமல், ஏமாறித் திரும்பினார்கள். முகமது நபி பின்னிட்டுக் காலானுகூலம் பெற்று அந்த ராஜ்யத்துக்கெல்லாம் தானே ராஜேஸ்வரராய், தமது தரிசனத்தை என்றும் அழியாமல் நிலை நிறுத்திச் சென்றார். நம்பிக்கையே காமதேனு. அது கேட்டவரமெல்லாம் தரும்"

"கட்டுரைகளில் ஆங்காங்கே இஸ்லாம் பற்றிக் குறிப்பிட்டுள்ள பாரதி, கவிதைகளிலோ, கதைகளிலோ இஸ்லாமியர்கள் பற்றி எழுதியிருக்கிறாரா?"
பாரதியினுடைய முதல் சிறுகதையும், கடைசி சிறுகதையும்

இஸ்லாமியர்களைப் பற்றியதாகவே அமைந்தது ஒரு தற்செயலான ஒற்றுமை. அவர் ஆசிரியராக இருந்த சக்ரவர்த்தினி என்ற பெண்கள் முன்னேற்றத்திற்கான இதழில், 1905ம் ஆண்டு நவம்பர் மாதம் அவரது முதல் கதை வெளியாயிற்று. துளசிபாயீ என்ற அந்தக் கதை உடன் கட்டை ஏற நிர்பந்திக்கப்பட்ட ஒரு ராஜபுத்திரப் பெண்ணை அப்சல்கான் என்ற முகமதிய இளைஞன் காப்பாற்றிக் காதலித்து மணம் செய்து கொள்வதைச் சொல்லும் கதை. இந்தக் கதை பிரசுரமாகிய காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் ஒரே மதத்திற்குள், ஒரே ஜாதிக்குள் காதல் என்பதே ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பாரதியாரோ, முரண்பட்டதாகக் கருதப்பட்ட இரு மதத்தைச் சேர்ந்தவர்கள் காதலிப்பது, ஒரு இந்து விதவையை இஸ்லாமிய இளைஞன் ஏற்று வாழ்வளிப்பது, உடன்கட்டை என்ற வழக்கத்தைக் கண்டிப்பது, ராஜபுத்ர வீரர்களோடு நடக்கும் சிறு சண்டையில் இந்து இளைஞன் ஒருவனின் தலை கொய்யப்படுவது என்று கதையை எழுதிக் கொண்டு போகிறார். அந்தக் காலகட்டத்தில் அது ஒரு புரட்சிகரமான கதையாகத்தான் இருந்திருக்க முடியும். இஸ்லாமியர்கள் மீதுள்ள அன்பினாலும், உடன்கட்டை போன்ற பெண்ணடிமை வழக்கங்கள் மீதிருந்த வெறுப்பினாலும் இந்தக் கதையை அவர் எழுதியிருக்க வேண்டும்.
அவரது கடைசிக் கதை இரயில்வே ஸ்தானம். அவர் காலமாவதற்கு சில மாதங்களுக்கு முன் எழுதிய கதை. சொத்துக்காக முன்று பெண்களை மணந்த இஸ்லாமியர் ஒருவர் படும்பாட்டைக் கதை விவரிக்கிறது. அந்தக் கதையும் ஒரு சர்ச்சைக்குள்ளானது. அந்தக் கதையில் இஸ்லாமியர் ஒருவர், சகோதரிகள் மூவரை மணந்து கொள்வதாக பாரதி எழுதியிருப்பார். கதை பிரசுரமான பிறகு ஒரு இஸ்லாமிய நண்பர், மனைவி உயிருடன் இருக்கும் போது, அவளுடன் பிறந்த மற்றொருத்தியைத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பது இஸ்லாமிய சாஸ்திரங்களின் கொள்கை என்பதை பாரதிக்கு சுட்டிக் காட்டுகிறார். தனது தவறை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளும் பாரதி, இந்துக்களிடையே இருக்கும் வழக்கம் இஸ்லாமியர்களிடமும் இருக்கும் என்றெண்ணி எழுதிவிட்டதாக ஒப்புக் கொள்கிறார்."

"அவருக்கு இஸ்லமிய நண்பர்கள் அதிகம் இருந்தார்களோ?"

"அவர் பிறந்து வளர்ந்த எட்டையபுரம், சீறாப்புராணம் பாடிய கவிஞர் உமறுப் புலவர் வாழ்ந்த ஊர். அவர் எட்டையபுரத்தின் அரசவைக் கவிஞராகவும் விளங்கியவர். அவரது கல்லறை இன்றும் அங்கு இருக்கிறது. எட்டையபுரத்தில் கணிசமான அளவில் இஸ்லாமியர்கள் வாழ்ந்திருக்கிறர்கள். எனவே இளம் வயதிலேயே அவருக்கு இஸ்லாமியருடன் பழக்கம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. புதுவையில் வாழ்ந்த காலத்தில், இஸ்லாமியர் ஒருவரது தேநீர்க் கடையில் 'தாடி ஐயர்' (பாரதிக்கு இப்படியும் ஒரு பட்டப் பெயர் உண்டு) தேநீர் பருகிய காட்சியைக் கண்டு அங்கிருந்தவர்கள் பலர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அன்று இந்துக்களும் இஸ்லாமியரும் பொது இடங்களில் ஒன்றாக அமர்ந்து உண்ணும் வழக்கமில்லை.' ஹிந்து-முகமதியர் கூட்டு விருந்து' என்று 1906 செப்டெம்பரில் சுதேசமித்ரன் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. இரண்டு சமயத்தாரும் ஒன்று சேர்ந்து உண்பது அத்தனை அபூர்வமாக இருந்தது. அதனால் பாரதி முகமதியரின் தேநீர் கடைக்குச் சென்று தேநீர் அருந்துவது அதிர்ச்சியோடு பார்க்கப்பட்டது. புதுவையிலிருந்து வெளியேறி தனது மனைவியின் ஊரான கடையத்தில் வாழ்ந்த போது இஸ்லாமியர்களோடு நட்புப் பாராட்டிய காரணத்தால் அவர் அக்கிரகாரத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். ஆனால் அதற்குப் பின்னும், 1918ம் ஆண்டு ராவண சமுத்திரம், பொட்டல் புதூர் ஆகிய ஊர்களில் இஸ்லாம் மார்க்கத்திஒன் மகிமை என்ற தலைப்பில் உரையாற்றி இருக்கிறார்."
"இஸ்லாம் மார்கத்தின் பெருமைகளைத்தான் பாரதி பேசுவாரா? அதன் மீது ஏதும் விமர்சனங்கள் ஏதும் கிடையாதா?"

"இஸ்லாமியர்களிடையே உள்ள இரண்டு வழக்கங்கள் மீது பாரதிக்கு உடன்பாடில்லை. ஒன்று அவர்களிடையே உள்ள, கோஷா என்னும் பர்தா அணியும் வழக்கம். அது அவர்களுக்குப் பாதுகாப்பு என்ற வாதத்தை பாரதி ஏற்பதில்லை.' கனி கண்டவன் தோலுரிக்கக் காத்திருப்பேனோ?' ' வன்ன முகத்திரையைக் களைந்திடென்றேன், நிந்தன் மதங் கண்டு துகிலினை வலிதுரிந்தேன்' என்றெல்லாம் எழுதி மூலம் ஒரு பெண்ணை அடைய நினைப்பவருக்கு இந்தத் துணித்திரை பெரும் அரண் அல்ல என்று சுட்டிக்காட்டுக்கிறார்.

பலதார மணத்தை இகழ்ந்துரைப்பதற்காகவே ரயில்வே ஸ்தானம் கதை எழுதப்படுகிறது. பலதார மணம் செய்து கொள்பவர்கள் ஒரு மனைவியைத் தவிர மற்றவர்களுக்கு மணவிலக்குக் கொடுத்து, அவர்கள் மற்றவர்களை மணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற யோசனை அந்தக் கதையில் வைக்கப்படுகிறது. இந்த யோசனையை முகமது நபியே தனது கனவில் தோன்றிச் சொன்னதாக பாரதி எழுதுகிறார்."

"ரொம்பத் துணிச்சல்தான்.அந்த துணிச்சலை இஸ்லாமியர்கள் இந்துக் கோயில்களை இடித்ததை விமர்சிக்கப் பயன்படுத்தியிருக்கலாமே?"

"அதைக் குறித்தும் அவருக்கு ஒரு கருத்து இருந்தது: " நாமும் அவர்கள் பேரில் பூர்வீகக் குற்றங்களை எடுத்துரைத்தல் தப்பிதம். அவர்களும் நம்மை உடன் பிறந்தவர்களெனெ பாவித்து நடக்க வேண்டும்" என்று ஓரிடத்தில் எழுதுகிறார்".

வம்பு கிடைக்காத ஏமாற்றத்தோடு எழுந்து கொண்டார் நண்பர்."ஓ! அப்படியா!அப்ப நான் வர்ரேன். உங்க 'பாய்' பாரதியாரிடமும் சொல்லுங்க!' என்றார் நண்பர் கிண்டலாக.

நான் புன்னகைத்தேன்.

டாக்டர் ஆத்மராமும் இஸ்லாமும்

டாக்டர் ஆத்மராமும் இஸ்லாமும்


உணர்வு: உங்களைக் குறித்து சிறு அறிமுகம் செய்து கொள்ளுங்களேன்! ஆத்மராம்: நான் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிராமண வைசிய குலத்தில் பிறந்து, மிகச்சிறு வயதிலேயே சென்னை வந்து கோபாலபுரத்தில் வளர்ந்தவன். எனது பள்ளிப் படிப்பு கல்லூரிப் படிப்பு எல்லாம் சென்னையில் தான். லயோலா கல்லூரியில் படித்த நான் 'ஸ்டேட் பர்ஸ்ட் அவுட் கோர்ஸ்' மாணவனாக தேர்வு பெற்றேன். அடுத்து ஐ.ஐ.டி.யில் படித்து பி.டெக் பட்டம் பெற்றேன். ஐ.ஐ.டி.யில் எனது படிப்பு முடிந்ததுமே அமெரிக்காவில் உயர்கல்வி யும், வேலை வாய்ப்பும் பெறுவதற்கான 'விசா' எனக்குக் கிடைத்தது. 19 வயதிலேயே 1965ல் அமெரிக்காவுக்கு முதன்முதலில் சென்ற நான் இன்று அமெரிக்க குடியுரிமை பெற்றவனாக உள்ளேன். அமெரிக்காவில் நான் உயர்கல்வி படித்து எம்.எஸ்.ல் தேறியதும், 3 துறைகளில் ஆய்வு செய்து பி.எச்.டி. செய்து, டாக்டர் பட்டம் பெற்றேன். மேலும் நான் உலகளாவிய அளவில் மிக உயர்ந்த அந்தஸ்துகள் பலவற்றை பெற்றுள் ளேன். அமெரிக்க விண்வெளி ஆய்வுக்கழகமான 'நாஸா'வில் கவுரவ உறுப்பினராகவும், ஐ.நா கல்விக் கழகத்தில் பேராசிரியராகவும் 25 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளேன். ஐ.எம்.எஃப். என்ற சர்வதே நிதி அமைப்பு மற்றும் 'உலக வங்கி' ஆகியவற்றில் தலா மூன்றரை ஆண்டுகள் சிறப்பு உறுப்பினராகவும், ஐரோப்பிய யூனியனின் பொருளாதாரக் கொள்கை அமைப்பு காரியதரிசி போன்ற பல பொறுப்புகளை வகித்துள்ளேன். இஞ்சினியரிங் துறையில் 41 புத்தகங்களை எழுதியுள்ளேன். எனது புத்தகங்கள் உலகில் பல நாடுகளிலும், பல்கலைக் கழகங்கள் பலவற்றிலும் பாடப்புத்தகங்களாக வைக்கப்பட் டுள்ளன. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ உட்பட உலகப் புகழ்பெற்ற பல பிரபலங்கள் எனது மாணவர்கள்... பிர்லா கோளரங்கத்தின் சாஃப்ட்வேர் எனது ஆலோசனைப்படி அமைக்கப்பட்டது. மேலும் இந்தியாவில் இன்று கோடிக்கணக் கானோர் அன்றாடம் பயன்படுத்தும் செல்போன் சாஃப்ட்வேரை முதன் முதலில் தயாரித்து வழங்கியது நான் தான் என்றும், அதைத்தான் பரவலாக அனைவரும் பயன்படுத்தி வருகி றார்கள் எனவும் பல விபரங்களைக் கூறி நம்மை திகைக்க வைத்தார்.

உணர்வு: உங்களுக்கு இஸ்லாத்தின் மீது ஆர்வம் எப்படி ஏற்பட்டது? ஆத்மராம்: நான் உட்பட 16 மாணவர்கள் முதன் முதலாக அமெரிக்கா சென்ற போது. அங்குள்ள விதிமுறைகள் சரிவர தெரியாத தால், சில காரணங்களால் அமெரிக்க போலிசாரால் கைது செய்யப்பட்டோம்.... அப்பொழுது அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 'நுஸ்ரத் அலி' என்பவர், நான் தமிழ் பேசுவதைப் பார்த்து என்னை அணுகி, ''நீ மதராஸ்காரனா? நானும் நாகப்பட்டிணத்தைச் சேர்ந்தவன் தான். இந்திய நாடு பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தான் சென்ற நான் இப்போது அமெரிக்க பிரஜையாக உள்ளேன். கவலைப்படாதே'' என ஆறுதல் கூறி என்னையும், என்னுடன் சேர்ந்து கைதான வர்களையும் நீதிமன்றத்தின் மூலம் விடுதலை பெற உதவி செய்தார். மேலும், அவரது வீட்டிற்கு அழைத்து தங்க வைத்து பலவித உதவிகளைச் செய்தார். அவர் மூலமாக இஸ்லாம் குறித்த அறிமுகம் உண்டானது. மேலும் நான் முதன்முதலில் பி.எச்.டி. ஆய்வில் தேறியதும் எனக்கு, டாக்டர் பட்டம் தருவதற்கு பரிந்துரை செய்தவர் எனது பேராசிரியரான 'இர்ஷத் அலி' என்ற முஸ்லிமே ஆவார். அவர் அன்று செய்த உதவியால்தான் இன்று நான் பல்வேறு உயர்வுகளை அடைய முடிந்தது. இதன் வாயிலாக இஸ்லாம் பற்றி மேலும் அறிய முற்பட்டு, பல்வேறு நூல்களை படித்து தேறினேன். அடிப்படையில் நான் பிராமண வைசிய குலத்தில் பிறந்ததால் இயல்பாகவே ஏகத்துவக் கொள்கை மீது எனக்கு ஆர்வம் உண்டு. எங்களது குல தெய்வம் 'ஒப்பிலி அப்பன்' என்ப தாகும். கும்பகோணத்திற்கு அருகிலுள்ள ஒப்பிலி அப்பன் கோவிலில் உள்ள சிலையில் ஏகத்துவ கொள்கையை வலியுறுத்தும் 'மா ஏகம் சரணம் வ்ரஜா' என்ற மந்திரம் பொறிக்கப்பட் டுள்ளது. அதிலிருந்தே நான் ஏகத்துவக் கொள்கையை ஆய்வு செய்யத் தொடங்கி னேன். மேலும், சகோதரர் பிஜேயின் பிரச்சாரத்தை தொலைக்காட்சி வாயிலாக பார்க்க ஆரம்பித்தது முதல் ஏகத்துவக் கொள்கையில் உறுதி ஆகிவிட்டது.

உணர்வு: இதைச் சற்று விளக்கமாக கூறுங்களேன்...
ஆத்மராம்: 2001ம் ஆண்டு என நினைக்கிறேன். நான் அமெரிக்காவில் எனது அலுவலகத்தில் சேட்டிலைட் சேனல்கள் ஒவ்வென்றையும் ஆய்வு செய்து கொண்டிருந் தேன். அமெரிக்காவில் ஃப்ரீ சேனல்கள் மட்டுமே 250க்கும் மேல் இருக்கும். மேலும் 'கட்டண சேனல்'கள் வேறு பலநூறு இருக்கும். அவற்றை நான் ஆய்வு செய்து கொண்டிருக் கும் போது திடீரென்று ஒரு தமிழ் குரல் கேட்டது. அந்தக் குரலின் வசீகரம் என்னை கவர்ந்தது. அந்தச் சேனலை டியூன் செய்தேன். அது விண் டிவி என நினைக்கிறேன். அதில், பிஜே அவர்களின் பேச்சை முதன்முதலில் கேட்டேன். அதில் இதன் தொடர்ச்சி நாளை தொடரும் என பாக்கர் அறிவிப்பார். அப்போது தான் அவர்கள் முதன்முதலில் எனக்கு அறிமுகம். அதன் பிறகு பிஜேயின் நிகழ்ச்சி களை தொடர்ந்து பார்த்து ஏகத்துவத்தையும், இஸ்லாத்தின் சிறப்புகளையும் நல்ல முறையில் உணர்ந்து கொண்டு வருகிறேன். நான் 2001 நவம்பர் மாதம் முதன்முதலில் பிஜேயுடன் தொலைபேசி வாயிலாக பேசினேன். அப்புறம் அடிக்கடி அவரிடம் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்று வருகிறேன். நான் உலகின் பல நாடுகளுக்கும் சென்ற போதும் பிஜேயுடன் தொலைபேசி வாயிலாக உரையாடி உள்ளேன். அந்த உறவு இன்று வரை தொடர்கிறது. உணர்வு: பிஜேயின் கேள்வி நேரத்தின் போது உங்களுக்கு மட்டும் தொலைபேசி இணைப்பு உடனடியாக எப்படி கிடைக்கிறது? ஆத்மராம்: அது மட்டும் ரகசியம்.... தலைவர் பி.ஜே.யும், பாக்கரும் கூட இது குறித்து என்னிடம் கேட்டார்கள். அது தொலைபேசி தொழில்நுட்ப ரகசியம் என்பதே எனது பதில். நான் தற்போது 9 மாத விடுமுறையில் எனது அலுவல் விஷயமாக இந்தியா வந்துள்ளேன். ஒரு நாள் எதேச்சையாக விண் டிவி பார்க்கும் போது பிஜேயின் கேள்வி நேரம் ஒளிபரப்பானது. அது முதல் வாராவாரம் அவருடன் உரையாடி வருகிறேன்.

உணர்வு: குடந்தை மாநாட்டில் உங்கள் அனுபவத்தைக் கூறுங்களேன்? ஆத்மராம்: தவ்ஹீது ஜமாஅத்தின் அன்பான அழைப்பை ஏற்று குடந்தை பேரணிக்கு குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டேன். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்ட அந்த அற்புத நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். பலவிதங்களிலும் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமுதாயம் எங்களைப் போன்று முன்னேறிய சமூகமாக மாற இட ஒதுக்கீடு மூலமே முடியும். அது விரைவில் கிடைக்கும் என நம்புகிறேன். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் பிஜே பொதுச் செயலாளர் பாக்கர் மற்றுமுள்ள நிர்வாகிகளின் வழிகாட்டல் படி முஸ்லிம்கள் உரிமையைப் பெறுவது உறுதி! உணர்வு: ஏகத்துவத்தை நன்கு உணர்ந்தாக கூறும் தாங்கள் இன்னும் உருவ வழிபாடு செய்கிறீர்களா. பிறப்பின் அடிப்படை யில் பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்ற கொள்கையை ஒப்புக் கொள்கிறீர்களா? ஆத்மராம்: மனுநீதி அடிப்படையிலான சாதி அமைப்பு முறை நல்ல நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் நாளடைவில் அதன் நோக்கம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்று உலகில் பிராமணர்கள் என்று கூறிக் கொள்ளும் எவரும் மனுநீதி குறிப்பிடும் பிராமணர் ஆகமாட்டார்கள். எனவே பிராமணர் என்று யாரும் இல்லை. பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கூடாது. உருவ வழிபாடு ஆன்மீகத்தின் ஓர் அங்கமே! சாதாரண மக்கள் இறைவனை அடைவதற் கான ஒரு எளிய முயற்சிதான். எப்படி எல்லா நதிகளிலும் கடலில் சென்று கலக்கிறதோ அது போன்றே வழிபாட்டு முறை பலவாறாக இருந்தா லும் கடவுளை அடைவதே நோக்கமாகும். நான் உருவ வழிபாட்டை தவிர்த்து வருகிறேன். உருவமற்ற வழிபாட்டு முறை ஆன்மீகத் தின் உயர்ந்த படித்தரம் எனினும் அதனை எல்லோராலும் பின்பற்ற முடியாத நிலையே உள்ளது. ஒவ்வொருவரும் அதை உணர்ந்து திருந்தினால்தான் தடுக்க முடியும். நாளடை வில் அது குறைந்து விடும். படித்தவர்களால் மட்டுமே அது சாத்தியம். நான் படித்தவன் என்பதால், இறைவன் நாடினால் இஸ்லாத்தை முழுமையாக கடைபிடிக்கக் கூடியவனாக மாறுவேன்... என்றார். அவரது நேர்வழிக்காக நாமும் பிரார்த்திப்போமாக!

பெண்ணுக்கு பல கணவர்கள்

பெண்ணுக்கு பல கணவர்கள்

திரு ஜாகிர் நாயக் அவர்களால் கொடுக்கப்பட்ட பதில்கள் இவை. தமிழ்ப் படுத்த நேரமின்மையால் ஆங்கிலத்திலேயே தருகிறேன். இது பற்றிய சந்தேகங்களைப் பின்னூட்டம் இட்டால், அதற்கான பதிலை தர முயற்ச்சிக்கிறேன்.

சுவனப்பிரியன்

POLYANDRY
Question:
If a man is allowed to have more than one wife, then why does Islam prohibit a woman from having more than one husband?
Answer:
A lot of people, including some Muslims, question the logic of allowing Muslim men to have more than one spouse while denying the same ‘right’ to women.
Let me first state emphatically, that the foundation of an Islamic society is justice and equity. Allah has created men and women as equal, but with different capabilities and different responsibilities. Men and women are different, physiologically and psychologically. Their roles and responsibilities are different. Men and women are equal in Islam, but not identical.
Surah Nisa’ Chapter 4 verses 22 to 24 gives the list of women with who you can not marry and it is further mentions in Surah Nisa’ Chapter 4 verse 24 "Also (prohibited are) women already married"
The following points enumerate the reasons why polyandry is prohibited in Islam:
1. If a man has more than one wife, the parents of the children born of such marriages can easily be identified. The father as well as the mother can easily be identified. In case of a woman marrying more than one husband, only the mother of the children born of such marriages will be identified and not the father. Islam gives tremendous importance to the identification of both parents, mother and father. Psychologists tell us that children who do not know their parents, especially their father undergo severe mental trauma and disturbances. Often they have an unhappy childhood. It is for this reason that the children of prostitutes do not have a healthy childhood. If a child born of such wedlock is admitted in school, and when the mother is asked the name of the father, she would have to give two or more names! I am aware that recent advances in science have made it possible for both the mother and father to be identified with the help of genetic testing. Thus this point which was applicable for the past may not be applicable for the present.
2. Man is more polygamous by nature as compared to a woman.
3. Biologically, it is easier for a man to perform his duties as a husband despite having several wives. A woman, in a similar position, having several husbands, will not find it possible to perform her duties as a wife. A woman undergoes several psychological and behavioral changes due to different phases of the menstrual cycle.
4. A woman who has more than one husband will have several sexual partners at the same time and has a high chance of acquiring venereal or sexually transmitted diseases which can also be transmitted back to her husband even if all of them have no extra-marital sex. This is not the case in a man having more than one wife, and none of them having extra-marital sex.
The above reasons are those that one can easily identify. There are probably many more reasons why Allah, in His Infinite Wisdom, has prohibited polyandry.

கார்ட்டூன் -தீவிரவாதம் தீர்வாகுமா?

கார்ட்டூன் -தீவிரவாதம் தீர்வாகுமா?

டேனீஷ் கார்ட்டூனுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தோம். உலகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. டெனமார்க்கின் பொருள்களுக்கும் தடை போடப்பட்டது. அந்த நாடும் தனது தவறை உணர்ந்து கொண்டது. பிரச்னையை இத்தோடு விட வேண்டியதுதானே! சில நாடுகளில் தூதரகத்தை எரிப்பது, ஆட்களைக் கடத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது முகமது நபியின் போதனைக்கே எதிரல்லவா? இரண்டு நாட்களாக திரிபோலியில் கலவரத்தில் பலர் இறந்துள்ளார்கள். பிலிப்பைன்ஷிலும் கலவரம். ஆப்கானிஷ்தான், பாகிஸ்தானிலும் உயிர் இழப்புகள். இது போன்ற தீவிரவாதம் யாரால் ஊக்குவிக்கப் பட்டாலும் நம் எதிர்ப்பைக் காட்ட வேண்டும். இந்த போராட்டத்தில் தீவிரவாதத்தை நுழைப்பவர்கள் கண்டிப்பாக இஸ்லாமிய எதிரிகளே! இத்தனை நாடுகளிலும் போன உயிர்களை இவர்களால் திரும்ப கொண்டு வர முடியுமா? நிர்க்கதியாய் நிற்கும் அவர்களின் குடும்பத்துக்கு என்ன பதிலை இவர்கள் வைத்திருக்கிறார்கள்? கண்டிப்பாக குர்ஆனிலிருந்தோ, முகமது நபியின் வார்த்தைகளில் இருந்தோ இவர்கள் செய்யும் செயலுக்கு ஆதாரம் காட்ட முடியாது. தீவிரவாதத்தை தூண்டி விடும் இது போன்ற நபர்கள் தங்களின் சொந்த வாழ்க்கையில் இஸ்லாத்தை சரி வர கடை பிடிக்காதவர்களாகவே இருக்கின்றார்கள்.

இத்தனைக்கும் காரணம் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களே என்று கூறுவேன்.எந்த மார்க்க அறிஞராவது இது போன்ற தீவிர வாதம் தவறு என்று சொல்லி இருக்கிறார்களா? இவர்கள் நினைத்திருந்தால் இத்தனை உயிர்கள் பறி போவதை சொற் பொழிவுகளின் மூலமே தடுத்திருக்க முடியும். நேற்று உபியில் நடந்த கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சியின் ஹஜ் விவகாரங்களுக்கான அமைச்சரும், மார்க்க அறிஞருமான முகம்மது யாகூப் குரைஷி கார்ட்டூன் வரைந்தவர்களை கொலை செய்பவருக்கு 11.5 மில்லியன் டாலர் பரிசு தருவதாக அறிவித்துள்ளாராம். இந்த பரிசு பணத்தையும் பொது மக்களிடம் வசூலித்துக் கொடுப்பாராம். பொது மக்களிடம் வசூலித்துக் கொடுப்பதற்கு இவர் எதற்கு? இதுதான் முகமது நபியின் வழி காட்டலா?

தொழுகின்ற பள்ளியில் ஒருவர் சிறுநீர் கழிக்கிறார். முகமது நபியின் தோழர்கள் அவரை தடுக்க அவரை நோக்கிச் செல்கின்றனர். அவர்களை தடுத்த முகமது நபி அந்த மனிதர் சிறுநீர் கழிக்கும் வரை பொறுமையுடன் இருந்து பிறகு அவரை அழைத்தார். அவர் வந்தவுடன். 'நண்பரே! இது நாங்கள் இறைவனை வழி படுவதற்காக ஏற்படுத்தப்பட்ட தூய்மையான இடம். இனிமேல் இது போன்ற தவறைச் செய்யாதீர்கள்' என்று அறிவுரை பகர்ந்தார். அவரும் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். முகமது நபியின் செயலோடு மேற் சொன்ன யாகூப் குறைஷியின் செயலை ஒப்பிட்டுப் பாருங்கள்.

குர்ஆனையும், நபியின் வாழ்க்கை முறையையும் போதிப்பதை விட்டுவிட்டு தங்கள் கற்பனையில் உதிப்பவற்றை எல்லாம் மார்க்கம் என்று எழுதி வைத்ததன் பலன், இன்று வரை அனுபவிக்கின்றோம். அமைச்சருக்கு தன் பெயர் பத்திரிக்கையில் வர வேண்டும் என்ற அற்ப விளம்பர உத்தியைத் தவிர வேறில்லை. இதுபோல் பொது மக்களை உசுப்பி விட்டு ஓடி ஒளிந்து கொள்வதே இவர்களின் வாடிக்கை. பிறகு இதன் பலனை இஸ்லாத்தின் தலையில் கட்டி விட்டு இந்த முல்லாக்கள் கம்பி நீட்டி விடுவார்கள். உலக கல்வியிலும், மார்க்க அறிவிலும் முஸ்லிம்கள் பின் தங்கி இருக்கும் காலமெல்லாம் இது போன்ற முல்லாக்களின் காட்டிலே மழைதான்.

கல்விக் கண்ணைத் திறக்கும் சவூதி - 2

கல்விக் கண்ணைத் திறக்கும் சவூதி - இரண்டு

இதன் முந்தைய பதிவில் வகுப்புகளின் நேரம், பாடங்கள் பற்றி பாரத்தோம். இதில் பயிலும் மாணவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள்) அனைவரையும் இலவசமாகவே ஹஜ்ஜூப் பயணத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். இதே பயணத்திற்கு வெளியில் ஏற்பாடு செய்து சென்றால் 1500 அல்லது இரண்டாயிரம் ரியால் வரை செலவு பிடிக்கும். இந்த கல்விக் கூடங்களின் செலவினங்களுக்கு அரசாங்கமே பணத்தை ஒதுக்கி விடுகிறது. ஒரு சில கோடீஸ்வரர்களும் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை இதற்கு செலவு செய்து புண்ணியத்தை தேடிக் கொள்கிறார்கள். அந்த ஹஜ்ஜூப் பயணத்தின் அனுபவங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

மெக்கா புறப்பட ஆறு மினி வேன்கள் தயார் நிலையில் நின்றன. விடியற்க்காலைத் தொழுகை (பஜ்ர்) யுடன் கிளம்ப வேண்டும் ஆதலால் நாங்கள அனைவரும் இரவே கல்விக் கூடத்துக்கு வந்து விட்டோம். இரவு சாப்பாடு முடிந்தவுடன் பள்ளியில் உள்ள மினி தியேட்டருக்கு அழைத்துச் செல்லப் பட்டோம். அங்கு கணிணியின் உதவி கொண்டு பவர் பாயிண்டில் ஹஜ்ஜூ என்றால் என்ன? எப்படி முகமது நபியின் கட்டளைப்படி கிரியைகளைச் செய்வது போன்ற விளக்கங்கள் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டன. அதன் பிறகு உறக்கம். ஒரு சிலரின் குறட்டைச் சப்தத்தால் சிறிது தூக்கம் தடை பட்டாலும், அதையும் மீறி அசதியில் நன்றாக தூங்கினோம்.(எவ்வளவோ விஞ்ஞானம் முன்னேறினாலும் இந்த குறட்டைக்கு இதுவரை ஏன் நம் விஞ்ஞானிகளால் ஒரு விடிவு காணப்படவில்லை?)

காலைத் தொழுகை முடிந்தவுடன் பயணம் ஆரம்பமானது. ஆறு வேன்களிலும் 'மன்னர் பஹதின் கௌரவ விருந்தாளிகள் ' என்ற வாசகம் பொறிக்கப்பட்ட துணி பேனர்கள் மின்னின. உண்மையும் அதுதான். இந்த கல்விச் சாலைகள் மூலம் செல்பவர்கள் மன்னரின் கௌரவ விருந்தினர் என்ற அந்தஸ்த்தைப் பெறுகின்றனர். இருபது லட்சம் மக்கள் கூடும் நிகழ்ச்சியில் எங்கு சென்றாலும் எங்களுக்கு எந்த தடையும் இல்லை.தங்கியிருக்கும் பத்து நாட்களுக்கும் அனைத்து இடங்களிலும் எங்களுக்காக டெண்ட் போடப்பட்டுமுன் பதிவு செய்யப் பட்டு இருக்கும். இதற்கெல்லாம் முதற்கண் நன்றியை இறைவனுக்கு தெரிவித்து விட்டு எங்களின் பயணத்தைத் தொடர்ந்தோம்.

பயணத்தின் வழி நெடுக கேள்வி பதில் எங்கள் ஆசிரியர்களால் நடத்தப்பட்டது. உஸாமா பின் லாடனிலிருந்து இந்திய அரசியல் வரை அலசப் பட்டது.
முகமது சுல்தான் என்ற சவூதி பேராசியர் ஜிஹாதைப்(புனிதப் போர்) பற்றி ஓரு பிரசங்கம் செய்தார்.அவர் தன்னுடைய பேச்சில் ' ஜிஹாத் என்ற புனிதப் போரை பலரும் தங்கள் இஷ்டத்துக்கு வளைக்கிறார்கள். ஒரு மனிதனின் உயிரை எடுக்க எந்த தனி மனிதனுக்கும் உரிமையில்லை. உங்களை ஒருவன் கொல்ல வரும்போதும், உங்களின் குடும்பத்தை ஒருவன் அநியாயமாக அழிக்க வரும்போதும் மட்டும்தான் தற்காப்புக்காக ஆயுதத்தை எடுக்கலாம். இது தவிர வேறு காரணங்களுக்கு ஒருவன் தன்னிச்சையாக ஆயுதம் ஏந்தினால், அவன் தவறாக இஸ்லாத்தின் பெயரால் வழிகாட்டப் பட்டுள்ளான். அவனுடைய செயலுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுபோன்றவர்களால்தான் சாந்தியும் சமாதானத்தையும் போதிக்கும் இஸ்லாத்துக்கு உலகில் கெட்ட பெயர் ஏற்படுகிறது' என்று விளக்கினார்.ஜிஹாத் சம்பந்தமாக பலரும் பல கேள்விகளைக் கேட்டனர். அது அத்தனைக்கும் ஆதாரபூர்வமான முகமது நபியின் வார்த்தைகளையும்(ஹதீதுகள்), குர்ஆன் வசனங்களையும் எடுத்துக் காட்டி விளக்கினார்.இந்த நீண்ட தூர பயணம் கேள்வி பதில் நிகழ்ச்சியிலேயே சென்றது. இப்படியே நீண்ட பயணம் முடிவில் மக்கா நகரில் உள்ள மினா என்ற இடத்தில் முடிந்தது. எங்களுக்காக ஒதுக்கப்பட்ட கூடாரங்களில் தங்க வைக்கப் பட்டோம். ஓய.வு எடுத்தப்பிறகு பலவேறு தலைப்புகளில் ஹஜ்ஜைப் பற்றிய சொற்பொழிவுகள் நடத்தப்பட்டது.தம்மாம்,ரியாத்,கஸீம், நஜ்ரான் போன்ற ஊர்களில இருந்து அரசு செலவில் வந்தவர்கள் அனைவரும் ஒரே இடங்களில் தங்க வைக்கப் பட்டோம்.எங்களுக்கு மிக அருகிலேயே நம் ஊர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் குடும்பத்தோடு தங்கியிருப்பதாக சொன்னார்கள். பார்த்துப் பேச ஆவல் இருந்தாலும் வந்த வேலை ஹஜ் என்பதால் அந்த ஆர்வத்தை மூட்டை கட்டி வைத்து விட்டோம்.இது பற்றிய மேலும் சில செய்திகளை அடுத்த பதிவில் காண்போம் இறைவன் நாடினால்.

சேர நாட்டுக்குப் போவோமா! -இரண்டு

சேர நாட்டுக்குப் போவோமா! -இரண்டு

முன்பெல்லாம் ஒரு பாடல் பிறக்க மூன்று நாட்கள் நான்கு நாட்கள் தேவைப்படும். பாடலின் தரமும் மனதிலேயே நெடுநாட்களுக்கு தங்கியிருக்கும்.ஆனால் இப்பபொழுது எல்லாம் பாடல்கள் அதிகமாக கம்ப்யூட்டர் துணை கொண்டு இசைக்கப்படுவதால் மனதைத் தொடுவதில்லை.ஒரு நல்ல ட்யூன் கிடைத்தால் போதும். அதை சீவி சிங்காரித்து, நடை போட்டு, உடை போட்டுசிம்பொனி ரேஞ்சுக்குநம்ம மென் பொருள் நமக்குத் தேவையானதை கொட்டி விடுகிறது.(ஏ.ஆர்.ரஹ்மான் உபயம்). இது போன்ற பாடல்களை மேடையில் பாடி இசைப்பதற்கு இளையராஜா.ரஹ்மான் போன்றவர்களுக்கு வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம் ஆனால் நானோ,நீங்களோ இது போன்ற கச்சேரிகளைப் பண்ண முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள் கேரளாவில். எப்படி?

ஒரு இன்னிசைக் கச்சேரியில் பாடகரும் பாடினார். வாத்திய கருவிகளும் இசைத்தது. எல்லாம் எங்கிருந்து? மேடைக்குப் பின்னால் குறுந்தகட்டில் பாடல் ஓடிக் கொண்டிருக்கும். அதற்கேற்ப பாடகரும், வாத்திய கருவி இசைப்பவர்களும் அபாரமாக நடிப்பார்கள். நம் கவுண்டமணியும், கார்த்திக்கும் உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு கதையிலும் நடிப்பார்கள் அல்லவா! அதைப்போல. காசையும் வாங்கிக் கொண்டு ரசிகர்களுக்கு ஏமாளிப் பட்டத்தையும் சேர்த்தே கொடுத்திருக்கிறார்கள்.

இதைப்பற்றி கேரள இசை விமர்சகர் ரவி மேனன் தொலைக்காட்சிப் பேட்டியில் கூறும்போது, 'இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ரசிகர்களை ஏமாற்றி இது போன்று பணம் பறிப்பதை சட்டப்படி தண்டிக்க வேண்டும் சமீபத்தில் வளைகுடாவில் நடந்த இன்னிசைக் கச்சேரியில் இதே போன்ற நாடகம் ரசிகர்களுக்கு தெரிந்து போய் பெரும் பிரச்சனையாகி உள்ளது. இதில் உண்மையிலேயே உயிரைக் கொடுத்து இன்னிசைக் கச்சேரி நடத்துபவர்களின் மதிப்பு இது போன்ற போலிகளால் சரிய வாய்ப்புள்ளது' என்கிறார். நம் தமிழ் நாட்டில் இது போன்ற சம்பவம் ஏதும் நடந்துள்ளதா என்று தெரியவில்லை. இனி கச்சேரிகளுக்குச் சென்றால் முன் வரிசையில் உட்கார்ந்து ஒவ்வொரு பாடலுக்கும் இது போலியா அல்லது அசலா என்று கண்காணிக்க வேண்டியிருக்கும்.

சேர நாட்டுக்குப போவோமா!

சேர நாட்டுக்குப போவோமா!

நேற்று என் மலையாள நண்பர் ஜார்ஜ் மேத்யூ அறைக்கு செனறபோது ஆசியாநெட்டில் செய்திகள் பார்க்க நேர்ந்தது. அதில் ஒரு செய்தி என் மனதில் ஆழ பதிந்து விட்டது. கேரளா மூவாற்றுப்புழை என்ற கிராமத்தில், பவானி என்ற பெண்மனி ஆசிரியையாக வேலை செய்து வந்தார். திருமணமும் நடந்தது. பவானிக்கு குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். ஆனால் பாருங்கள் திருமணமாகி இருபது வருடங்களாக இறைவன் குழந்தை பாக்கியத்தை கொடுக்கவில்லை. இதில் நான்கு வருடத்திற்கு முன்பு கணவனும் இறந்து விடுகிறார். இருந்தும் குழந்தை வேண்டும் என்ற ஆவல் மட்டும் குறையவில்லை.

எனவே குழந்தை பாக்கியம் வேண்டி இன்னொரு திருமணமும் செய்து கொண்டார். ஆனால வயது அதிகமாகி விட்டதால் கருத்தரிப்பது கடினம் என்று மருத்துவர்கள் கூறி விட்டனர். இருந்தும் குழந்தை ஆசையில் டெஸ்ட் ட்யூப் மூலமாக பிள்ளை பெற்றுக் கொள்ள விருப்பப்பட்டார். அவர் நினைத்தபடியே அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தைக்கு கண்ணன் என்ற பெயரிட்டார். 'பவானி கண்ணனை இவ்வளவு பிரியமாக வளர்க்கிறாளே குழந்தைக்கு பத்து பதினைந்து வயதாகும்போது தாய் உயிரோடு இருப்பாளா?' என்று அக்கம பக்கத்தில் உள்ளவர்கள் பேசிக் கொண்டனர். அய்ம்பது வயதுக்குப்பிறகு பிறந்த குழந்தையாதலால் ஆசியாநெட் நிறுவனத்தார் குழந்தை பிறந்தவுடன் பேட்டியும் எடுத்தனர்.

இரண்டரை வயதான கண்ணனோடு பவானியின் வாழ்க்கை சந்தோஷமாக கழிந்தது. நேற்று தன. குழந்தையுடன் வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தார் பவானி. சமையல் வேலை முடிந்து கண்ணனை தேடி இருக்கிறார். கண்ணன் குளிப்பதற்காக பெரிய பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து வைத்துள்ளார் பவானி. விளையாட்டாக கொல்லைப்பறம் சென்ற கண்ணன் அந்த பாத்திரத்தில் விழுந்து விட்டான். விழுந்த கண்ணனுக்கு அதிலிருந்து வெளியேற முடியவில்லை. பிறகு என்ன தவமிருந்து பெற்றெடுத்த குழந்தையை பிணமாகத்தான் தூக்கினார் பவானி. அதே ஆசியாநெட் இறப்பையும் படம் பிடித்து ஒளிபரப்பியது. அந்த தாய் குழந்தையைப் பார்த்து கதறி அழுதது கலங்காத என் கண்களையும் கண்ணீர் வர வைத்து விட்டது.

மனிதன் என்னதான் முயற்ச்சித்தாலும் இறைவன் முன்னால் தோற்று விடுகிறான் அல்லவா?

Saturday, February 11, 2006

சிறையில் வாடும் நம்மவர்கள்

சிறையில் வாடும் நம்மவர்கள்

சவூதி அரேபியாவில் கிட்டத்தட்ட பதினைந்து இந்தியர்கள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். ஒரு நபரால் விபத்துகளில் மற்றொருவர் மரணத்தை தழுவும்போது பகரமாக ஒரு லட்சம் ரியால்(சுமார் பன்னிரண்டு லட்சம் ரூபாய்) தர வேண்டும் என்பது சவூதி சட்டம். இதை மேலே சொன்ன பதினைந்து இந்தியர்களும் தர முடியாமல் வருடக்கணக்கில் சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர். இவர்கள் அனைவருமே குறைந்ந சம்பளத்தில் வேலை செய்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.

இதில் எட்வர்ட் வாஷிங்டன்(மகாராஷ்டிரா) என்பவரின் நிலை பரிதாமானது. இவர் கடந்த 2002 லிருந்து அல்கோபாரில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். டிரக் ஓட்டுனரான இவர் இரண்டு சவூதி இறப்பதற்க்கு காரணமாயுள்ளார். பகரமாக இரண்டு லட்சம் சவூதி ரியால் அந்த குடும்பத்திற்கு தர வேண்டும்.

ஹம்ஸா(கேரளா) என்பவர் இறப்புக்கு பகரமாக தர வேண்டிய தொகை இரண்டு லட்சத்து பதிமூன்றாயிரம் ரியால். இவர் கதீப் நகரத்தில் உள்ள சிறையில் 2004 லிருந்து அடைபட்டுள்ளார்.

ஆந்திராவைச் சார்ந்த முகம்மது ஓசாத் ரியாத் சிறையில் 2004 லிலிருந்து அடைபபடடுள்ளார்: இவர் கொடுக்க வேண்டிய தொகை இரண்டு லட்சம் ரியால்.

மொய்னுதீன்(கேரளா) அல்கஸீம் சிறையில் 2002லிருந்து சிறையில் வாடுகிறார். இவர் கொடுக்க வேண்டிய தொகை ஒரு லட்சம் ரியால்.

தமிழரான அகஸ்டின் துரை 2004 லிருந்து ரியாத் சிறையில் உள்ளார். இவர் கொடுக்க வேண்டியது இரண்டு லட்சம் ரியால்.

கேரளாவைச் சார்ந்த அப்துல் சமது அலஹஸா சிறையில் 2005 லிருந்த அடைப்பட்டுள்ளார். இவர் கொடுக்க வேண்டிய தொகை மூன்று லட்சம்;

மேலும் மீரான் அலி (கேரளா) , முகம்மது பஷீர் (கேரளா) , சலிம்கான் (ராஜஸ்தான்) , ஹனீபா (கேரளா) , அலி அக்பர் (கேரளா) , முஸ்தபா (கேரளா), அரவிந்த ராஜன் (கேரளா) போன்றோரும் இழப்பீட்டுத் தொகை தர முடியாமல் சிறையில் வாடுகின்றனர்.

வளைகுடா சென்று வாரி வந்து விடுகிறேன் என்று வந்தவர்கள், இன்று வாழ வழி இன்றி சிறையில் வாடுகின்றனர். வசதியற்ற இவர்களால் இவ்வளவு பெரிய தொகையை கொடுக்க முடியாது. நம் அரசாங்கமோ அல்லது சவூதி அரசாங்கமோ மனது வைத்தால்தான் ஒரு வழி பிறக்கும். அல்லது இந்த செய்தியைப் படிக்கும் செல்வந்தர்கள் உரியவர்களைத் தொடர்பு கொண்டு சிறையிலிருந்து மீட்டெடுத்தால் புண்ணியத்தை தேடிக் கொள்ளலாம்.

அன்புடன்
சுவனப்பிரியன்

Sunday, February 05, 2006

கல்விக் கண்ணைத் திறக்கும் சவூதி

மற்ற வளைகுடா நாடுகளுக்கும் சவூதி அரேபியாவுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. இங்கு பணி புரியும் அநேக வெளி நாட்டவர் வேலைகள் செய்து கை நிறைய சம்பாதிப்பதோடு, போனசாக மார்க்க கலவியும் கற்றுக் கொள்கிறார்கள்.

எப்படி என்றால் தலைநகர் ரியாத்தை எடுத்துக் கொள்ளுங்கள் இங்கு பழைய தொழில் நகரமாகட்டும் அல்லது புதிய தொழில் நகரமாகட்டும் எங்கெல்லாம் வெளிநாட்டவர் அதிகம் உள்ளனரோ அங்கெல்லாம் ஒரு கல்விக் கூடத்தை அரசு அரசு செலவில் நிர்மானித்துள்ளனர். இவற்றின் வேலை நேரத்தை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கும். ஒவ்வொரு நாளும் இரவு ஏழு அல்லது எட்டு மணியிலிருந்து பத்தரை பதினேரு மணிவரையும். வெள்ளிக்கிழமைகளில் தொழுகைக்கு பிறகும் பாடங்கள் எடுக்கப் படுகிறது. நாம் தங்கியிருக்கும் வீடு வரை வாகனம் வந்து அழைத்துச் சென்று திரும்பவும் நம்மை வீடு வரை வந்து சேர்க்கிறது. இந்த நேர மாற்றம்வெளி நாட்டவரின் வேலை நேரத்தை கணக்கில் எடுத்து செயல் படுத்தப்படுகிறது. பாட புத்தகம். நோட் புத்தகம், எழுதுகோல. ஸ்கூல் பேக் என்று அனைத்துமே இலவசம். வகுப்பகள் முடிந்தவுடன் நம் ஊர் மதிய உணவு திட்டம் போல் அனைவருக்கும் உயர்தரமான சாப்பாடும் கொடுக்கப்படுகிறது. பரீட்சையில் முதல் மதிப்பெண், இரண்டாவது மதிப்பெண் எடுப்பவர்களுக்கு ஊர் வரை விமானப் பயணத்திற்கான காசோலை,கணிணி,செல்போனகள், சைக்கிள்கள் என்ற பரிசு மழைகளும் உண்டு. இதில் கூடுதலாக ஒவ்வொரு நாட்டவரின் மொழியை அனுசரித்து, அவ்வந்நாட்டு ஆசிரியர்களைக் கொண்டே பாடங்கள் எடுக்கப் படுவது தனிச் சிறப்பு. குர்ஆன் விளக்கம், முகமது நபியின் வாழ்க்கை வரலாறு, அரபி மொழிப்பயிற்சி., அரபி மொழி இலக்கணம் என்று பாடங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு பாடங்கள் ஆங்கிலத்திலேயே எடுக்கப் படுகிறது. நான் ஆங்கிலத்தில் கொஞ்சம் வீக் என்பதால் ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் ஆங்கிலப் பாடத்தையே எடுத்தேன். எங்கள் வகுப்பில் பாடம் எடுக்கும் அனைவரும் சவூதி நாட்டவர். இவர்கள் அனைவரும் சேவை மனப்பான்மையுடன் இலவசமாகவே பாடங்கள் எடுக்கின்றனர். இந்த ஆசிரியர்கள் அனைவரும் சவூதி பலகலைக்கழங்களில் மிகப் பெரும் வேலைகளில் இருப்பவர்கள். அமெரிக்கா சென்று பட்டம் பெற்று வந்தவர்கள். எந்த சந்தேகம் கேட்டாலும் முகம் சுளிக்காது அவர்கள் மாணவர்களை அணுகும் முறைமிகவும் பாராட்டத் தக்கது.

என் வகுப்பில் பதினைந்து பிலிப்பைன் நாட்டவர், மூன்று இந்தோனேஷியர், இரண்டு ஆந்திரா(இந்தியா) எனது அடுத்த வகுப்பில் பரிட்டானியர், ஆப்ஃரிக்க நாட்டவர் என்று ஒரு கலவையாக வகுப்புகள் செனறு கொண்டிருக்கிறது. இதில் என்னையும்,இந்தோனேஷியரையும் தவிர்த்து மற்ற அனைவரும் புதிதாக முஸ்லிம் ஆனவர்கள். எங்களை விட புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள் மிகுந்த ஈடுபாட்டோடு பாடங'களை கவனிப்பதும், உடனுக்குடன் குறிப்புகளை எடுப்பதும், லெக்சர்களை வாக்மேன்களில் பதிவு செய்து வீட்டுக்கு எடுத்துச் செல்வதும்பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. இது பற்றி மேலும் சில தகவல்களை, அவர்களின் வாயிலாகவே அடுத்தடுத்த பதிவுகளில் காண்போம் இறைவன் நாட்டம் இருந்தால்.

அன்புடன்
சுவனப்பிரியன்.

கார்ட்டூனுக்கு எதிராக!

முகமது நபியின் கார்ட்டூனுக்கு எதிராக நேற்று லெபனானில் டென்மார்க் நார்வேயின் தூதரகங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இந்த தாக்குதலில் 28 பேர் காயமடைந்தனர். இது போன்ற வன்முறையை இஸ்லாம் அனுமதிக்க வில்லை என்றாலும் சிலரது உணர்வுகளை கட்டுப்படுத்துவது இயலாததாகி விடும். தற்போது லெபனானிலும் சிரியாவிலும் உள்ள தங்கள் நாட்டவர்களை நார்வேயும் டென்மார்க்கும் திரும்ப அழைத்துக் கொண்டுள்ளன.

இந்த தாக்குதல்களை நாங்கள் அனுமதிக்க முடியாது என்று அய்ரோப்பிய யூனியனின் தற்போதைய தலைமையான ஆஸ்திரியா அறிவித்துள்ளது. அமெரிக்காவும் இந்த கலவரத்தில் சிரிய அரசுக்கும் பங்குண்டு என்று தன பங்குக்கு பிரச்னையை ஊதி வருகிறது. அந்த கார்ட்டூனின் மறு பதிப்பை வெளியிட்ட நாடுகளான ஜெர்மனி, இத்தாலி, ஸ.பெயின் போன்ற நாடுகளுக்கு எதிராகவும் கோபக்கனல் திரும்பினால் பிரச்னை மேலும் சிக்கலாகும்.

நேற்று ஆப்கானிஷ்தானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர் டென்மார்க்குக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இங்கு அய்நா அனுப்பிய டென்மார்க் துருப்புகள் சுமார் 170 உள்ளனர். இந்த வருடம் இந்த எண்ணிக்கையை 360 ஆக உயர்த்தப்போவதாக வேறு முன்பு உளறி வந்தது. இங்குள்ள படையினரின் உயிரும் தற்போது கேள்விக்குறி ஆகி உள்ளது. நேற்று பாரிசிலும் ஆயிரத்துக்கு மேற்பட்டவர் டென்மார்க்குக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்

இங்கு ஒன்றை நாம் சிந்திக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் யாரும் நபிகள் நாயகத்தை பார்த்தில்லை. அவர்களின நாட்டைச் சேர்ந்தவரும் அல்ல. இருந்தும் முகமது நபியின் மேல் இவர்கள் வைத்திருக்கும் அன்பு கலந்த மரியாதை நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

முகமது நபியைப் பற்றி கேலிச் சித்திரம்

முகமது நபியைப் பற்றி கேலிச் சித்திரம் வரைந்து பிரச்சினையில் மாட்டியிருக்கும் டென்மார்க் அரசைப் பற்றி பத்திரிக்கைகளில் படித்திருப்போம். இந்த பிரச்சனையால் டென்மார்க்கின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. மக்கா, மதினாவில் ஒவ்வொரு கடைகளிலும் ' டேனிஷ் பொருள்களை புறக்கணிப்போம்' என்ற வாசகம் அடங்கிய போர்ட் வைக்கப்பட்டுள்ளது. வளைகுடா முழுவதும் ஏறக்குறைய இதே நிலைமைதான். இந்த காரணங்களால் இரண்டு மில்லியன் டாலர் நஷ்டத்தை ஒவ்வொரு நாளும் அனுபவிக்கிறது டேனிஷ் அரசு. அளவுக்கதிகமான சுதந்திரம் ஒரு நாட்டையே பிரச்சினைக்கு இட்டுச் சென்றுள்ளது.

'டேனிஷ் பொலிடிக்கன்' என்ற பத்திரிக்கையின் முனனால் எடிட்டர் ஹெர்பர்டர் புன்டிக் தலைமையில் கோபனஹெனில் பள்ளிவாசல் கட்டுவதற்காக நன்கொடை தற்போது வசூலிக்கப்படுகிறது. இதேபோல் டென்மார்க் அரசு அங்குள்ள முஸ்லிம்களை வளைகுடாவுக்குச் சென்று இங்கு உள்ள உண்மையான நிலவரங்களை விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. டேனிஷ் இமாம் ஃபதே அலிவ் சொல்லும் போது. 'டென்மார்க் முஸ்லிம்கள் இந்த விவகாரத்தில் அரசுக்கு உதவ வேண்டு' என்று ஆட்சியாளர்கள் கேட்டுக் கொண்டதாக கூறியுள்ளார்.