Followers

Saturday, March 31, 2012

பிரிட்டன் மக்களிடம் ஏன் இந்த திடீர் மாற்றம்?

பிரிட்டன் மக்களிடம் ஏன் இந்த திடீர் மாற்றம்?

பிரிட்டனில் வாழும் முஸ்லீம்கள் அரசின் பல்வேறு நெருக்குதல்களுக்கும், தொல்லைகளுக்கும், தொந்தரவுகளுக்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருந்தும் அல்லாஹ்வுடைய கிருபையால் லட்சக்கணக்கான மக்கள் (குறிப்பாக கிறித்தவர்கள்) இஸ்லாத்தை நோக்கி அலை, அலையாய் வந்துகொண்டு இருகின்றனர்.



இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன் என்ற தலைப்பில் “The Independent” என்ற பிரிட்டன் பத்திரிக்கை ஓர் ஆய்வு தகவலை வெளியிட்டுள்ளது.

(பார்க்க http://www.independent.co.uk/news/uk/home-news/the-islamification-of-britain-record-numbers-embrace-muslim-faith-2175178.html)

கிறித்துவ உலகத்தின் அடித்தலமான ஐரோப்பாவே இஸ்லாத்தை நோக்கி வேகமாக நகர்வதை பார்த்து கிறித்தவ உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஐரோப்பா கண்டத்தில் பிரான்ஸில் தான் முஸ்லீம்கள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகின்றது, ஆனால் தற்போது பிரான்ஸை காட்டிலும் இஸ்லாமிய வளர்ச்சி விகிதம் பிரிட்டனில்தான் அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வு தகவல் தெரிவிக்கின்றது.

2001 – ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டவர்களின் எண்ணிக்கை 14,000 முதல் 25,000 வரை இருக்கலாம் என கணெக்கெடுக்கப்படது, ஆனால் தற்போதைய கணக்கெடுப்பில் ஒரு லட்சத்திற்க்கும் மேற்பட்டவர்கள் முஸ்லீம்களாக மாறியுள்ளார்கள் என “Faith Matters” என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆய்வாளர்கள், மசூதிகளில் சென்று எத்தனை முஸ்லீம்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள் என்று கணக்கெடுத்துள்ளனர், அதில் தலைநகர் லண்டனில் மட்டும் 1400 முஸ்லீம்கள் கடந்த ஓராண்டில் பள்ளிவாசல்களில் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர், (அமைப்புகள் மூலமாக, தனி நபர் மூலமாக இஸ்லாத்தை ஏற்றவர்கள் தனி), இப்படி பிரிட்டன் முழுவதும் பள்ளிவாசல்களில் எடுத்த கண்க்கெடுப்பின் படி 5200 நபர்கள் ஓர் ஆண்டில் இஸ்லாத்தை தழுவியுள்ளனர் (அல்ஹம்துலில்லாஹ்).

பிரான்ஸ் ஜெர்மனியில் இஸ்லாத்தை ஏற்ற நபர்களில் எண்ணிக்கை ஆண்டு ஒன்ற்றிக்கு 4000. எனவே “The Independent” நடத்திய இந்த புது ஆய்வின் படி ஐரோப்பா கண்டத்தில் பிரிட்டன் மக்கள்தான் இஸ்லாத்தை தழுவுவதில் முன்னனியில் உள்ளனர். இந்த ஆய்வை நடத்திய “Faith Matters” அமைப்பின் இயக்குனர் கூறுகையில் நாங்கள் இந்த தகவலை பள்ளிவாசலில் திரட்டினோம், முழுவதுமாக எடுக்கப்பட்ட எண்ணிக்கை அல்ல, முழுவதும் கணக்கெடுத்தால் இந்த எண்ணிக்கை பன்மடங்காக இருக்கும் என தெரிவித்தார் .
ஏன் முஸ்லீம்களாக மாறினார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், இஸ்லாத்தை பற்றி ஊடகங்கள் தொடர்ந்து பொய்பிரச்சாரம் செய்து வருகின்றது, இந்த பொய் பிரசாத்தை பார்ப்பவர்கள், படிப்பவர்கள் இஸ்லாத்தை அறிய ஆர்வமடைகின்றனர், இந்த ஆய்வில் பலர், இஸ்லாத்தின் உன்னதமிக்க கருத்தினால் ஈர்க்கப்படு, உண்மை மார்க்கமான இஸ்லாத்தை ஏற்றுகொள்கின்றனர்.

இஸ்லாத்தை அறிவு பூர்வமாகவும், ஆதரபூர்வமாகவும், தர்க்க ரீதியாகவும் எதிர்க்க முடியாத கிறித்தவ உலகம் பொய் பிரச்சாரங்கள் மூலமாக இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க முழுவீச்சில் செயல்பட்டுவருகின்றது. பிரிட்டனை சேர்ந்த இஸ்லாத்தை ஏற்ற இரண்டு இளைஞர்களை சுட்டுகொன்ற CIA இவர்கள் தீவிரவாதிகள் , பயங்கரவாதிகள் என பத்திரிக்கையில் செய்திகளை பரப்பி மக்களை அச்சமுற செய்கின்றனர், “Faith Matters” ஆய்வில் இங்கிலாந்தில் வரும் செய்திகளில் 32 % செய்திகள் இஸ்லாத்தை தீவிரவாத்தோடு சம்மந்தபடுத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.

கிறித்துவர்களிடம் இருப்பது, பொய்களும், ஆபாசங்களும், மனிதனுக்கு உதவாத கதைகளும் நிறைந்த பைபிள் தான். இந்த பைபிளை வைத்து கொண்டு கிறித்துவகளை தக்கவைக்க முடியாது என்பதை கிறித்தவ மிஷினரிகள் நன்றாக உணர்ந்துள்ளன, பொய்களையும் புரட்டுகளையும் சொல்லி கிறித்துவர்களை ஏமாற்றி கிறித்துவத்தை வாழவைத்து கொண்டிருக்கின்றனர் பாதிரிமார்கள். மேற்கத்திய நாடுகள் போடும் டாலருக்காளுக்காக விவாத வேஷம் போடும் சான்(SAN) போன்ற அமைப்புகள் கூட பைபிள் இறைவேதம் என நிரூபிக்க பைபிளிலிருந்து ஒரு ஆதாரத்தையும் காட்ட முடியாமல் கண்டபடி உளறி கொட்டியது.

ஒரு காலத்திலும் கிறித்துவர்களால் அறிவுபூர்வமாகவும், ஆதார பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் “கிறித்துவம் இறைவனின் மார்க்கம்” என்பதை நிருபிக்க முடியாது என்பது இவர்களின் இஸ்லாத்திற்க்கெதிரான பொய்பிரசாரங்களிலிருந்து தெளிவாக விளங்குகின்றது.
அல்லாஹ்வின் கிருபையால் பிரிட்டனில் வாழும் கிறித்துவர்கள் பைபிளின் தரத்தை அறிந்து சத்திய மார்க்கமான இஸ்லாத்தை தழுவி வருகின்றனர். கேத்தரீன் என்ற கிறித்துவ பெண்மனி இஸ்லாத்தை ஏற்று தற்போது பிரிட்டன் இஸ்லாமிய அமைப்பிற்க்கு தலைவியாக உள்ளார். இவர்களை போன்ற பலர் கிறித்துவர்கள் மத்தியில் தொடர்ந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்து பலரை கிறித்துவத்திலிருந்து விடுவித்து நேர்வழியான இஸ்லாத்தின் பக்கம் அழைத்துவருகின்றனர்

பிரிட்டனை சேர்ந்த இஸ்லாத்தை தழுவிய சிலர் கருத்து தெரிவிக்கையில் …
பவுல் மார்ட்டின் : எனக்கு எனது நண்பர்கள் மூலம் குர்ஆன் அறிமுகமானது, குர்ஆனை படிக்கும் போது அதனுடைய அறிவியல் உண்மைகளை பார்த்து வியந்து போனேன், (குர்ஆன் இறை வேதம் என்பதை உணர்ந்து) இஸ்லாத்தை தழுவினேன்.

(குர்ஆன் குறித்த விவாததிற்க்கு வரமால் ஓடி ஒளியும் சானின் (SAN) தந்திரம் தற்போது விளங்குகின்றது, லண்டனை சேர்ந்த இந்த “பவுல் மார்ட்டின்” போல் கிறித்துவர்கள் குர்ஆனின் அறிவியல் அற்புதங்களை பார்த்து ஆயிரகணக்கில் இஸ்லாத்தை தழுவிவிடுவார்கள் என பயந்து போய் தந்திரங்கள் செய்து தப்பிக்க நினைகின்றது சான்(SAN)).
டென்னிஸ் ஹார்ஸலி : நான் ஒரு கிறித்துவர், கத்தோலிக்க பள்ளியில் படிதேன், நண்பர்கள் மூலம் இஸ்லாம் எனக்கு அறிமுகமானது, பின்பு நான் குர்ஆனை படிக்கும் போது ஏசு, மேரி, தோரா பற்றிய பல்வேறு உண்மையான தகவல்கள் குர்ஆனில் இருந்தது. எனவே கிறித்துவத்தில் இருப்பவர்கள் இஸ்லாத்தை ஏற்பது இயற்க்கையானது என கருதுகின்றேன் (அதாவது நீங்கள் உண்மையாக ஏசுவை நம்புவதாக இருந்தால், மேரியை மதிப்பாதாக இருந்தால், தோராவை நம்புவதாக இருந்தால் இஸ்லாத்தை ஏற்றுகொள்வதுதான் உண்மையான நம்பிக்கையின் அடையாளமாக இருக்கும்)

கதீஜா ரியோபுக் : நான் கிறித்துவ குடும்பத்தில் பிறந்தவள், என் குழந்தையுடன் வார வாரம் சர்ச்சிற்க்கு செல்வேன், இஸ்லாத்தில் இணைந்ததும் கிடைத்த அமைதி சர்ச்சில் கிடைக்கவில்லை, ரோமன் கத்தோலிக்க பிரிவை சேர்ந்த எனது தாயால் நான் இஸ்லாத்தை ஏற்றதை ஜீரனித்து கொள்ளமுடியவில்லை, நான் இப்போது ஹிஜாப் அணிகின்றேன், நோன்பு வைக்கின்றேன், வாழ்வில் அமைதியை உணர்கின்றேன்

ஹனா தஜீமா : நான் பல மதங்களை ஆய்வு செய்தேன், குர்ஆன் அறிவு பூர்வமாக இருந்தது, பெண்களுக்கு உரிமையை தருவாதக இருந்தது எனவே ஆழ்ந்த மத பற்றுள்ள எனது குடும்பத்திலிருந்து நான் இஸ்லாத்தை தழுவினேன்

இது கிறித்துவத்திலிருந்து இஸ்லாத்தை தழுவிய சிலரின் கருத்துக்கள், பின்பற்றுவதற்க்கு பைபிளில் ஒன்றும் இல்லை (புறக்கணிப்பதற்க்கு நிறைய உள்ளது), எனவே இந்த மக்களுக்கு உண்மைய எடுத்து சொன்னால் இஸ்லாத்தை ஏற்க்க கோடிகணக்கான கிறித்துவர்கள் இஸ்லாத்தை ஏற்க தயாராக இருகின்றனர் இன்ஷா அல்லாஹ். நாம் சத்திய மார்க்கமான இஸ்லாத்தை இந்த கிறித்துவ மக்களுக்கு எடுத்து சொல்வதுதான் மீதமிருக்கும் வேலை.

இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். “எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களைப் பதிவு செய்வாயாக!” என அவர்கள் கூறுகின்றனர். (அல் குர்ஆன் 5: 83)

கிறித்துவ மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துவைக்கும் இந்த புனித பணியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தொடர்ந்து செய்து கொண்டு இருகின்றது அல்லாஹ்வின் உதவியுடன் கிறித்துவ பாதிரிமர்களுடன் பல விவாதங்களை செய்து உண்மையை நிலை நாட்டியுள்ளது,
சான் (SAN) மட்டும் குர்ஆன் குறித்த விவாத்திற்க்கு வந்தால் குர்ஆனின் அற்புதங்களை கிறித்தவர்களுக்கு விளக்கி, பைபிளில் மிச்சம் மீதியுள்ள அபத்தங்களை தோலுரித்து காட்டி “குர்ஆன் தான் இறை வேதம்” என்பதை நிச்சயம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அல்லாஹ்வின் உதவியுடன் நிருபித்து காட்டும் இன்ஷா அல்லாஹ்.
S.சித்தீக்.M.Tech
நன்றி:TNTJ.NET

-------------------------------------------------------------




மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளையில் கடந்த 30-3-2012 அன்று கிருஷ்ண மூர்த்தி என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை முஹம்மது அர்சத் என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!

--------------------------------------------------------------




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளையில் 22.03.2012 அன்று சிவா என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை பாரக் என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!

--------------------------------------------------------------




இராமநாதபுரம் வெளிப்பாட்டிணம் கிளையில் 25.03.2012 அன்று இராமநாதபுரம் தீன் நகரைச் சேர்ந்த சகோதரி சிகப்பியம்மாள் (ஹாஜரா) அவர்களின் குடும்பத்தினர் 4 பேர் இஸ்லாத்தை தங்களது வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்.
சகோதரி. சிகப்பியம்மாள் அவர்கள் தன்னை ஹாஜராவாகவும்,
சகோதரி. பூபதி தன்னை ரில்வானா பேகமாகவும்
சகோதரி. கமலி தன்னை நிலோபர் நீஷாவாகவும்,
சகோ. கரண் தன்னை முஹம்மது ஹாரூனாகவும் பெயர்களை மாற்றிக் கொண்டனர்.
இவர்களுக்கு குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் இஸ்லாம் குறித்த புத்தகங்கள் வழங்கப்பட்டது.

--------------------------------------------------------------




ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளையில் கடந்த 25-3-2012 அன்று சுரேஷ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளையில் கடந்த 25-3-2012 அன்று சுரேஷ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். இவருக்கு மாநிலச் செயலாளர் எம். அப்துல் ஹமீது அவர்கள் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளை விளக்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

Friday, March 30, 2012

ராடாரின் பயன்களைப் பற்றி சற்று ஆராய்வோமா!

'தாவூதுக்கு நம் அருளை வழங்கினோம்.'மலைகளே! பறவைகளே! அவருடன் சேர்ந்து துதியுங்கள்' எனக் கூறினோம். போர்க் கவசங்களைச் செய்வீராக! அவற்றின் வளையங்களை ஒழுங்குபடுத்துவீராக!' எனக் கூறி அவருக்கு இரும்பை மென்மையாக்கினோம்.'
-குர்ஆன் 34:10,11

'அதை சுலைமானுக்கு விளங்க வைத்தோம். இருவருக்குமே அதிகாரத்தையும் கல்வியையும் வழங்கினோம். பறவைகளையும் மலைகளையும் தாவூதுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அவை இறைவனைத் துதித்தன. நாம் எதையும் செய்யக் கூடியவராவோம்'

-குர்ஆன் 21:79

'சுலைமானுக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப்படி அவர் நினைத்தவாறு பணிந்து அது சென்றது'

-குர்ஆன் 38:36

மேலே உள்ள வசனங்கள் இறைத் தூதர் சுலைமானுக்கும் இறைத் தூதர் தாவூதுக்கும் இறைவன் கொடுத்த சில சிறப்பியல்புகளை சொல்லிக் காட்டப்படுகிறது. இந்த வசனங்கள் நாம் தற்போது உபயோகத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மின் காந்த அலைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகப் படுகிறது. இது பற்றிய முழு உண்மையை இறைவனே அறிந்தவன். சூரா 34:10 ல் உபயோகப்படுத்தப்பட்டுள்ள 'அவ்விபி' என்ற அரபு வார்த்தையானது “திரும்பப் பெறப்படும் ஒலி” என்ற அர்த்தத்தைக் கொடுக்கும். இது தற்போது நமது பயன்பாட்டில் உள்ள ரேடாரின் தொழில் நுட்பத்தை ஒத்திருக்கிறது.

ரேடாரின் இயக்கம் என்பது ஒலி பிரதிபலிப்புக்கு நெருங்கிய தொடர்புடையது. உதாரணத்துக்கு ஒருவர் ஒரு பள்ளத்தாக்கிலோ அல்லது ஒரு குகையிலோ நின்று கொண்டு வேகமாக சப்தமிட்டால் அவருடைய ஒலியே அவருக்கு பிரதிபலிப்பாக திரும்ப வருவதை உணருவார். (படம் 1) (மனிதர்கள் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல..அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது...புனிதமானது....:-)) இதிலிருந்து காற்றில் நமது ஒலியானது எவ்வாறு பயணிக்கிறது. எவ்வளவு தூரம் பயணிக்கிறது என்பதை துல்லியமாகக் கணக்கிட முடியும்.





ரேடாரின் தொழில் நுட்பத்தில் மின் காந்த அலைகளின் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுவதாக நாம் முன்பு பார்த்தோம். ஒலியானது மைக்ரோவேவ் அதிர்வெண் சிக்னல்களால் உமிழப்பட்டு அவை திருப்பி அனுப்பப்படுகிறது. இத்தகைய சமிக்ஞைகளை நாம் எகோ(echo) என்கிறோம். ரேடார் சாதனமானது ஒளியின் அளவையும் அவற்றின் தூரத்தையும் கணக்கிட்டு எதிரொலிக்கும் வேலையை செய்து தருகிறது. (படம் 2)



ரேடாரின் அதிர்வெண்கள் உபயோகத்துக்குத் தக்கவாறு மாறுபடும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. மின் காந்த ஆற்றல் வானொலி தொலைக்காட்சி என்று நமது தேவைக்குத் தக்கவாறு ரேடாரின் அதிர்வெண்களும் மாறுபடும். (படம் 2).

எகோவாக பிரதிபலிக்கும் ஒலிகள் எண்களாக மாற்றப்பட்டு ரேடார் ரிசீவர் மூலமாக டேட்டாவாக சேமிக்கப்படுகிறது. (படம் 3)




முடிவாக இந்த டேட்டாக்கள் படங்களாக மாற்றப்படுகிறது. (படம் 4)




குர்ஆன் 34:10ல் அரபி மொழியின் வினைச் சொல் 'அலென்னா' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் அர்த்தமானது 'இணக்கமானதாக நாம் மாற்றுவோம்' என்ற பொருளில் வரும். குர்ஆனில் இங்கு தேர்ந்தெடுத்து இந்த வார்த்தையை இறைவன் பயன்படுத்தியிருக்கிறான். அதாவது கடினத் தன்மை உடைய இரும்பை இலகுவானதாக மாற்றித் தருகிறான். ரேடார் தொழில் நுட்பத்தில் மென்மைப்படுத்தப்பட்ட இரும்பையே நாம் உபயோகப்படுத்துகிறோம். (படம் 5)




“அவர் நினைத்தவாறு பணிந்து அது சென்றது'” என்று இறைத் தூதர் சாலமன் காற்றுக்கு கட்டளையிட்டது மின் காந்த சமிஞ்கைகளின் உதவியால் இருக்கலாம். இறைவனே இதன் முழு உண்மையையும் அறிந்தவன்.

ரேடாரின் உபயோகத்தை இன்று நாம் நிதர்சனமாக பார்த்து வருகிறோம். கோள்களின் அமைப்பு, பூமியின் அமைப்பு, ஒரு நாட்டின் அமைப்பு, ஒரு ஊரின் ஏன் ஒரு வீட்டின் அமைப்பையையே இன்று ரேடாரின் உதவி கொண்டு துல்லியமாக கணக்கிட்டு விடுகிறோம்.



'பின்னர் வானம் புகையாக இருந்தபோது அதை ஒழுங்குப் படுத்த நாடினான். விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் கட்டப்பட்டு நடக்க வேண்டும் என்று அதற்கும் பூமிக்கும் கட்டளையிட்டான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின.'
-குர்ஆன் 41:11,12

இது போன்ற வசனங்களை எல்லாம் நாம் பார்க்கும் போது எப்படி காற்றும், பூமியும் மலைகளும், பேச முடியும் என்ற கேள்வி எழலாம். இறைவனுடைய ஆற்றல் எப்படிப்பட்டது என்றோ அல்லது அவனது ஆற்றல் எதை எல்லாம் உள்ளடக்கியது என்றோ நம்மால் ஒருக்காலும் விளங்க முடியாததாகும். அவன் அனைத்து சார்பியல் நிலைகளையும் ஒப்பீடுகளையும் கடந்து தமக்குத் தாமே சம்பூரணமானவன். எனவே அவனது அறிவாற்றலுக்கு முன்னால் உயிருள்ளவை உயிரற்றவை என்ற பாகுபாடு கிடையாது.

மனிதர்களாகிய நாம் கூட உயிரற்ற பொருட்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்வதைப் பார்க்கலாம். உதாரணத்திற்கு விண்வெளிக்கு செலுத்தப்படும் ராக்கெட்டை எடுத்துக் கொள்வோம். அதை விண்ணில் செலுத்தவதற்கும் அது விண்வெளியில் செய்யப்படக் கூடிய வேலைகளையும் நாம் பூமியில் இருந்து கொண்டே கட்டளைகளை அதற்கு பிறப்பிக்கிறோம். அவைகள் நமது கட்டளைகளை உடன் நிறைவேற்றுகின்றன. (சம்பள உயர்வு கேட்பதில்லை: வேலை நிறுத்தமும் செய்வதில்லை.:-)) இயக்கத்தில் சில குறைபாடுகள் இருந்தால் அதையும் சரி செய்ய சொல்லி அவை சமிக்ஞை தருகிறது. பொறியாளர்கள் சரி செய்தவுடன். அவை தங்களின் வேலைகளை சரி வர செய்கின்றன. இந்த பொருட்களுடன் நாம் உரையாட மனித மொழிகளை உபயோகிக்காமல் மின் அணு மொழியில் இயந்திரங்களோடு உரையாடுவதால் அவற்றின் வேலைகளை நம்மால் வாங்க முடிகிறது. எனவே உயிரற்ற பொருட்கள் விளங்கும் மொழியில் நமது பரிமாற்றம் இருந்தால் அத்தகைய அறிவு நமக்கு கொடுக்கப்பட்டிருந்தால் எவற்றுடனும் நம்மால் சம்பாஷனை நடத்த முடியும் என்று அறிகிறோம். அற்பனான மனிதன் ராக்கெட்டுகளோடு உரையாடும் போது நம்மை படைத்த இறைவன் மலைகளோடும், காற்றோடும் நதிகளோடும் உரையாட கருத்துப் பரிமாற்றம் செய்ய வல்லமை உடையவனே என்றும் நாம் நம்புகிறோம்.


1 http://rst.gsfc.nasa.gov/Sect8/Sect8_1.html
2 http://tr.wikipedia.org/wiki/Radar
3 http://tpub.com/neets/book11/46.htm
4 http://southport.jpl.nasa.gov/cdrom/sirced03/cdrom/DOCUMENT/
HTML/TEACHERS/MODULE02/MOD2SECB.HTM
5 http://physics.bu.edu/~duffy/PY106/MagMaterials.html

Monday, March 26, 2012

என்ன கொடுமை சரவணா இது!



இந்த படத்துக்கு வந்த பின்னூட்டங்கள். மொழி தெரிந்தவர்கள் விளக்கமளிக்கவும். இது என்ன சடங்கு என்பதையும் விளக்கினால் பலரும் தெரிந்து கொள்ளலாம்.

பாவம் அந்த வாயில்லா ஜீவன்.

• പ്പോ തപ്പോ തപ്പാണി - ആനയ്ക്ക് വാല്‍ വരപ്പ് !!!!!!!
Yesterday 6:17 AM


JERRY CHERIAN - ബലി കൊണ്ടുക്കുകയാണ് . ദേവ പ്രീതിക്കായി മൃഗ ബലി..
Yesterday 6:19 AM


Vishnu Kumar V - :(
Yesterday 6:24 AM


manu sarangadhar - മൃഗബലി വാളും പിടിച്ചു കാലന്‍ നിക്കണ കണ്ടില്ലേ , ഇപ്പൊ ആ പോത്തിന്റെ തല താഴെ ഡിം
Yesterday 6:26 AM


Prejith Prabhakar - അല്ല ഇവന്മാര് ആ പോത്തിനെ ബലാല്സം്ഗം ചെയ്യാന്‍ പോകുവാ ..
Yesterday 6:32 AM


തപ്പോ തപ്പോ തപ്പാണി - കുണ്ടറ ആണോ ഈ സ്ഥലം
Yesterday 6:34 AM


Prejith Prabhakar - അല്ല പുനലൂര്‍ :))http://www.blogger.com/img/blank.gif
Yesterday 6:55 AM

-------------------------------------------------------------


புருஷன் பொண்டாட்டி சண்டை!


'10 நிமிஷமா செல்லுல யார்கிட்டே பேசிக்கிட்டு இருந்தீங்க!'

'போச்சுடா... சந்தேகமா! ஆபீஸ் விஷயமா பேசிக்கிட்டிருந்தேம்மா!'

'என்னை நம்பச் சொல்லுறீங்களா! ஆம்பள புத்திய காம்பிச்சுட்டீங்கள்ளே!'

'நீதான் இப்போ பொம்பள புத்தியை காம்பிக்கிறே! எப்பப் பார்த்தாலும் சந்தேகம். ச்சே..அதுக்குத்தான் நாலு எழுத்து படிக்கனுங்கறது'

'எங்க அப்பாவை சொல்லனும்! எத்தனையோ மாப்பிள்ளை வந்தும் உங்களுக்குப் போய் கட்டி வச்சாருல்ல! அவர சொல்லனும்'

'ஐயோ!...ஐயோ!...நீ பொம்பளயாடி நீ! பிசாசு...பேய்...இந்த வர்றேன் வீட்டுல வந்து வச்சுக்கிறேன் கச்சேரியை...'

-------------------------------------------------------------



விஜயகாந்தின் அரசியல் எதிர்காலம்.

-------------------------------------------------------------

ஒரு ஜோக்.

ஒரு பெண்மணி டாக்டரிடம் சென்று "டாக்டர் கண்ணாடில பார்த்தேன்,.என் முகம் பூராவும் சுருக்கங்கள். தலைல நிறைய வெள்ளை முடிகள். தாடைக்குக் கீழே சதை கூட கொஞ்சம் தொங்குகிறது.உதடு கருத்துப் போச்சு. எனக்கு வயதாகிக் கொண்டே வருகிறது போல இருக்கு. இதை மாற்ற முடியுமா? எனக்கு நல்ல செய்தியே இல்லையா? என்றாள் கவலையாக.

டாக்டர் 'ஏன் இல்லை? இப்போதே உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்கிறேன்' என்றார்....

பெண்மணி : ' என்ன டாக்டர் அது'?

டாக்டர்: 'வாழ்த்துக்கள்..உங்கள் கண்பார்வை நன்றாக இருக்கிறது'

-----------------------------------------------------------




மந்திரத்தால் பணம் வரவழைக்கிறார். மோர் வரவழைக்கிறார். நோய்களை குணமாக்குகிறார். நமது நாட்டு வறுமையை ஓட்டி விட மன்மோகன் சிங் இந்த சாமியாரின் உதவியை நாடலாம்.:-)

Sunday, March 25, 2012

மார்க்கத்தின் குருவானவர் எப்படி இருக்க வேண்டும்? -திருமந்திரம்

குரு என்பவர் மட்டுமே இறை உபதேசம் பண்ண இயலும். குரு இறைநிலையை உணர்ந்தால் மட்டுமே தன்னுடைய சிஷ்யனுக்கு உண்மையை உபதேசிக்க இயலும். அதனால் தான் திருமூலர்:



குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்வார்

குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்

குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்

குருடுங் குருடுங் குழிவிழுமாறே – 1680 , திருமந்திரம்




வேடதாரிகளை விட்டுவிடுங்கள் அவர்கள் குருட்டு வழியினர். குருடனுக்கு குருடன் வழி காட்டினால் இருவரும் வீழ்ந்து அழிவர்." என்கிறார் திருமூலர்.

கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக

உள்ள பொருளுடல் ஆவியுடன் ஈக

எள்ளத் தனையும் இடைவிடாதே நின்று

தெள்ளி யறியச் சிவபதந்தானே.



1693 : -திருமந்திரம் 6ம் தந்திரம்

விளக்கம்:

குருவாக ஒருவனை அவசரப்பட்டுத் தேர்ந்தெடுக்கலாகாது. மிக நன்றாக யோசித்துத் தெளிந்த பின்னரே ஒருவனைக் குருவாகக் அடைதல் வேண்டும். அப்படிப் பெறப்படும் குருவானவன் நல்லவனாய், நாம் அறியாதவற்றை அறிந்தவனாய், நமக்கு அவற்றை எடுத்துச் சொல்பவனாய், நம்மை நன்னெறிப்படுத்துவனாய், குற்றமில்லாதவனாய், நமக்குப் பிறவிப் பயன் கொடுப்பவனாய் அமைதல் வேண்டும்.

திருமந்திரத்தின் இந்த இரண்டு பாடல்களும் முகமது நபிக்குப் பொருந்தி வருவதை எண்ணி வியக்கிறோம். ஒரு இறைத்தூதர் எப்படி இருக்க வேண்டும். எப்படி வாழ வேண்டும். என்ன விஷேச சக்திகளை பெற்றிருக்க வேண்டும் என்று திரு மூலர் அழகாக இந்த பாடலில் வர்ணிக்கிறார். நமது தமிழ் மொழிக்கு வந்த இறைத் தூதரின் இலக்கணங்கள் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்று தமிழில் இறங்கிய இறை வேதம் பட்டியலிட்டிருக்கலாம். அதையே திரு மூலர் தனது பாடலில் எடுத்தாண்டிருக்கிறார் என்று நான் எண்ணுகிறேன்.

-----------------------------------------------------------

முகமது நபி அவர்களுக்கு ஆடு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்பொழுது உணவுகள் குறைவாக இருந்த காலம். தமது குடும்பத்தாரிடம் 'இந்த ஆட்டை சமையுங்கள்' என்று கூறினார்கள். பெரிய பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அந்த உணவு வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. உணவு கிடைக்காத தோழர்கள் எல்லாம் அழைக்கப்பட்டனர். முகமது நபி அவர்களும் அவர்களுடன் அமர்ந்து கொண்டனர். உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் அமர்ந்து சாப்பிடலானார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் முகமது நபி அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு இடம் கொடுத்தார்கள். அப்போது ஒரு கிராமவாசி 'என்ன இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு நபி அவர்கள் 'இறைவன் என்னை அடக்கு முறை செய்பவனாகவும் மமதை பிடித்தவனாகவும் ஆக்கவில்லை. பெருந்தன்மை மிக்க அடியானாகவே ஆக்கியுள்ளான்.' என்று விடையளித்தார்.

-ஆதாரம் -அபுதாவுத் 3773, பைஹகீ 14430

பலரும் அமர்ந்து சாப்பிடும் ஒரு தட்டில் மேல் நிலையில் உள்ளவர்கள் ஒன்றாக சாப்பிடுவதை கவுரவக் குறைவாகவே கருதுவார்கள். மேலும் அன்றைய சமூக அமைப்பில் மண்டியிட்டு அமர்வது தாழ்த்தப்பட்டவர்களுக்கான பழக்கமாக இருந்தது. இதனால்தான் அந்த கிராமவாசி கூட அமர்ந்ததை குறை காண்கிறார். தாம் ஒரு ஆட்சியாளர் என்றோ மதத்தின் தலைவர் என்றோ, வீட்டின் உரிமையாளர் என்றோ முகமது நபி அவர்கள் நினைக்கவில்லை. மற்றவர்களைப் போல் பசித்திருக்க்க் கூடிய ஒரு மனிதனாக மட்டும் தான் தம்மை முன்னிறுத்துகிறார்கள். இப்படி ஒரு பண்பான ஆட்சியாளரை நாம் பார்த்திருக்கிறோமா?

ஒரு மனிதர் முதன் முதலாக முகமது நபி அவர்களைச் சந்திக்க வருகிறார். பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் உடலை வளைத்து பவ்யமாக குடி மக்கள் நிற்பதுதான் அன்றைய வழக்கம. முகமது நபியையும் அதுபோல் நினைத்துக் கொண்டு உடல் நடுங்கி பய பக்தியுடன் வந்தார். 'சாதாரணமாக இருப்பீராக! உலர்ந்த இறைச்சியைச் சாப்பிட்டு வந்த குறைஷிக் குலத்துப் பெண்ணுடைய மகன்தான் நான்.' என்று கூறி அவரை சகஜ நிலைககு கொண்டு வந்தார்கள்.

-நூல் இப்னுமாஜா 3303.


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நமது தமிழ்நாட்டு முதல்வர் மேடையில் பேசும் போது மற்ற அமைச்சர்கள் நின்று கொண்டிருப்பதை பார்க்கிறோம். முதல்வரின் கால்களில் விழுவதையும் பார்க்கிறோம். அதுவும் இந்த இருபதாம் நூற்றாண்டில். ஆனால் முகமது நபியோ ஒரு மன்னர். அதிலும் மதத் தலைவர் தனது குடிமக்களிடம் எவ்வளவு அன்யோன்யமாக பழகியிருக்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் விளக்குகிறது.

தரையில் எதுவும் விரிக்காமல் அமர்வார்கள். தரையில் அமர்ந்து சாப்பிடுவார்கள். ஆட்டில் தாமே பால் கறப்பார்கள். அடிமைகள் அளிக்கும் விருந்தையும் ஏற்பார்கள்.

-தப்ரானி 12494

அகழ் யுத்தத்தின் போது முகமது நபி அவர்களும் மக்களுடன் சேர்ந்து அகழ் வெட்டினார்கள். மண் சுமந்தார்கள். முகமது நபி அவர்களின் வயிற்றை மண் மறைத்தது.

-புகாரி 2837, 3034,4101


முகமது நபி அவர்கள் மதினா வந்தவுடன் பள்ளிவாசலைக் கட்டிய போது அவர்களும் மக்களோடு சேர்ந்து கல் சுமந்தார்கள்.

-புகாரி 3906


இப்படி எந்த வேலையிலும் பின் வாங்காமல் மக்களோடு மக்களாக ஒன்றரக் கலந்திருந்ததுதான் முகமது நபி அவர்களின் வாழ்க்கையாக இருந்தது. எனவே இன்று வரை அவரது புகழ் மேலும் மேலும் எட்டுத் திக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. ஒரு இறைத்தூதர், ஒரு குரு எவ்வாறு தனது மக்களுக்கு இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக முகமது நபி அவர்கள் திகழ்ந்து வருகிறார.

--------------------------------------------------------

டிஸ்கி:

ஒரு அவசர உதவி!

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஷெரீப் என்ற பெயருடைய ஒரு சகோதரர் டூ வீலரில் போகும் போது லாரி மோதி அந்த இடத்திலேயே இறந்துள்ளார். கடந்த 10 நாட்களாக ரியாத் சுமைசி ஹாஸ்பிடலில் உடல் உள்ளது.

அவருடைய ஸ்பான்ஸர் தமாம். அங்கிருந்து ஓடி வந்து ரியாத்தில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஏழு வருடமாக ஊர் செல்லவில்லை. வயது சுமாராக 45 இருக்கும்.

அவரது செல் நம்பர் 0542039717. அதுவும் பொலீஸ் வசம் உள்ளது. தெரிந்தவர்கள் உடன் தொடர்பு கொண்டு உடலை அடக்கம் பண்ண ஏற்பாடு செய்யவும்.

.

Wednesday, March 21, 2012

பெண்மைக்கு ஒரு அழகிய முன்மாதிரி சகோ ஹயாத் சிந்தி!

சர்வதேச பெண்கள் தினத்தில் அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கை ஒன்று உலகின் தைரியமிக்க பெண்கள் 150 பேரை தேர்ந்தெடுத்து கௌரவித்துள்ளது. அதில் முன்னால் அமெரிக்க அதிபர் கிளின்டன் மனைவி ஹிலாரி கிளிண்டனும் ஒருவர். இந்த பட்டியலில் சவுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் இடம் பெற்றுள்ளனர். ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்க வேண்டும் என்று போராடிய மனால் அல் ஷரிஃப். மற்றொரு சவுதி பெண்மணி அறிவியல் அறிஞர் ஹயாத் சிந்தி.



இந்த பட்டியலில் உள்ள மேலும் சிலர்: நோபல் பரிசு வென்ற எமனைச் சேர்ந்த தவக்கல் கேர்மன், நோபல் பரிசு வென்ற சோமாலியாவின் ஹவா அப்தி, லிபியாவின் இமான் அல் ஒபைதி, சிரியாவின் தல் அல் மல்லோகி, எகிப்தின் தேவர்தஸ், ஆப்கானிஸ்தானின் நூர்ஜஹான் போன்ற சிறந்த பெண்மணிகள் இடம் பெற்றுள்ளனர்.

'இவர்கள் அனைவரும் தங்கள் நாட்டில் பெண்கள் முன்னேற்றத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்டதற்க்காக எங்கள் பத்திரிக்கையின் பட்டியலில் தைரியமிக்க பெண்மணிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்' என்கிறது இந்த பத்திரிக்கையின் ஆசிரியர் குழு.

டெய்லி பீஸ்ட் என்ற இந்த பத்திரிக்கை உயிரியல் துறை ஆராய்ச்சியில் சாதனை புரிந்ததற்காக இந்த தேர்வை செய்திருக்கிறது. இவரது கண்டுபிடிப்பு வளரும் நாடுகளில் பல உயிர்களைக் காப்பாற்றக் கூடியதாக இருக்கும் என்று இந்தப் பத்திரிக்கை மதிப்பிடுகிறது. இவரது கண்டு பிடிப்பால் மருத்துவர் அல்லாதவர் கூட நோயாளியின் நோய் தாக்கத்தைக் கண்டறிய முடியும்.

ஹயாத் சிந்தியின் ஆரம்ப பள்ளிப் படிப்பு சவுதி அரேபியாவிலேயே தொடங்கியது. அதன்பிறகு தனது கல்லூரி வாழ்க்கையை லண்டனில் தொடங்க ஆசைப்பட்டார். இவரது தந்தை ஒரு பெண் தனியாக நாடு விட்டு நாடு சென்று படிப்பதை விரும்பவில்லை. இருந்தும் இந்தப் பெண் தனது தந்தையை வற்புறுத்தி கல்லூரி படிப்பை லண்டனிலேயே தொடங்கினார். லண்டன் வந்த இவர் முதலில் சேர்ந்தது இங்கிலீஷ் கல்லூரி. அதன்பிறகு கேம்ப்பிரிட்ஜ் பலகலைக் கழகத்தில் சேர்ந்து கல்வி பயின்றார். லாப நோக்கமற்ற அமெரிக்காவில் இயங்கி வரும் ஒரு ஆராய்ச்சி பணியில் தன்னை தற்போது இணைத்துக் கொண்டுள்ளார் ஹயாத் சிந்தி.

ஹயாத் சிந்தி ஏற்கெனவே 100 சகதி மிக்க பெண்கள் பட்டியலில் சியோ மேகஸின் நடத்திய போட்டியிலும் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.

மேலும் இவர் அறிஞர்களின் கற்பனைகள், புத்தி கூர்மை போன்றவற்றை ஒருமுகப்படுத்தி அதனை தொழில் வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுத்த முடியும் என்ற நோக்கில் செயல்படும் ஒரு அமைப்பையும் ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் வளைகுடாவில் உள்ள அறிஞர்களை பயன் படுத்தி இந்த பிராந்தியத்தில் சிறந்த மாற்றங்களை கொண்டு வரவும் முயற்சி எடுக்கிறார்.

'நான் எங்கிருந்து வந்திருக்கிறேன் என்பதில் பெருமைபடுகிறேன். எனது அடையாளத்தை நான் என்றுமே உதாசீனப்படுத்தியதில்லை. சில நேரங்களில் சில அறிஞர்கள் தங்களின் முன்னேற்றத்திற்க்காக அவர்களின் கலாசாரத்தை கைவிடுவர். ஆனால் நீங்கள் உங்கள் அடையாளத்தோடுதான் உங்களின் முன்னேற்றத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் உங்களுக்கு உண்மையான வெற்றி' என்கிறார் தனது வாழ்நாளில் அதிக நாட்களை அமெரிக்காவில் கழித்த சகோதரி ஹயாத் சிந்தி,

-நன்றி அரப் நியூஸ்
14:03:2012

இஸ்லாத்தை ஓரளவு தனது ஆட்சியிலும் சவுதி அரேபியா கடைபிடித்து வருவதை அறிவோம். இஸ்லாமிய ஆட்சிகளில் பெண்களின் உரிமை ஏகத்தக்கும் மறுக்கப்படும் என்ற வாதம் வைக்கப்படுகிறது. அத்தகைய வாதம் தவறு என்பதை இது போன்ற செய்திகள் உறுதிபடுத்தகின்றன. பெண்கள் முன்னேற்றத்துக்கு இஸ்லாம் தடையில்லை என்பதற்கு இந்த பெண்மணியும் ஒரு உதாரணம்.

நம்நாட்டிலும் பல பெண்கள் பல சாதனைகளை படைத்து வருகின்றனர். அது இயல்பாக நடைபெற்று வரும் ஒன்று. அனால் இஸ்லாமிய சூழலில் இஸ்லாத்தை முழுவதும் கடைபிடித்து இது போன்று சமூக சேவையிலும் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த பெண்மணி இஸ்லாமிய பெண்களுக்கு ஒரு முன் மாதிரி என்றால் மிகையாகாது.

--------------------------------------------------------------

சவுதி அரேபியா சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த செய்தி மற்றுமொரு உதாரணம்:

By ABDULATEEF AL-MULHIM, ALMULHIMNAVY@HOTMAIL.COM
Published: Mar 17, 2012 01:01 Updated: Mar 17, 2012 01:01

AS IN THE present and in the past, the biggest challenge for any governing body is educating the youth. Saudi Arabia is one of the countries which has a high percentage of its population being young men and women between the ages of 16-30. The government of Saudi Arabia had and still has education as its most important priority. Schools are in every city, town and village. Education is free from elementary to the university level and beyond. Saudi Arabia had always had educated Saudis abroad.

In the mid the 1970s, King Khaled announced a new council of ministers reshuffle. The new Cabinet had had many Saudi Ph.D. graduates from the US. The doctorate degrees were from the best schools in the world, such as Yale University. Those ministers were a fine product of an ongoing program of overseas scholarship for young Saudis by the government. In today’s world, Saudi Arabia had and still has the highest number of students who are on full scholarships abroad. This scholarship covers plane tickets, tuition, medical insurance, monthly pay, accompanying spouse pay, children's day care expenses, annual round trip ticket and emergency leave round trip ticket from wherever the student is to his hometown in the Kingdom. In addition, there is within the Kingdom scholarships for Saudi students at private universities. Public, government universities are free for all citizens. And each student attending public university in the Kingdom is eligible for a monthly pay of $300 per month.

The overseas scholarship started long time ago. It started at a very small scale when the founder of modern Saudi Arabia, King Abdul Aziz, saw the need for Saudis to have the best education in the most advanced countries. During the 1940s and 1950s, Saudi Arabia had massive oil explorations and with the wealth coming from oil revenue, new projects for the benefit of Saudi citizens were in the planning. At that time, there was severe shortage of university graduates or skilled workers. And a number of young Saudi men were sent to the West for higher education. The scholarship continued and peaked in 1974 when King Faisal saw the need for graduates with various specialties during the 1970s economic boom. The program slowed down in the 1980s after many universities and specialties were introduced to the education system in Saudi Arabia.

When Custodian of the Two Holy Mosques King Abdullah became king in August 2005, he launched the largest scholarship program for Saudis in history. Tens of thousands of students (male and female) were sent from Saudi Arabia to top world universities all over the world. The United Sates and the United Kingdom had the lion’s share. But, there are Saudi students in Australia, New Zealand, Canada, China, Europe and many other countries as well. Saudi Arabia ranks number one in the world with the highest percentage of its budget being allocated for education. And while the world economy is slowing down, the Saudi economy is booming. Thus, this new Saudi economic boom is in need of more educated Saudis with more advanced sciences. The Custodian of the Two Holy Mosques scholarship program is designed to get young Saudis the best education from the best international schools. Thirty percent of Saudi students abroad are enrolled in the top 100 schools worldwide and 70 percent are enrolled in the top 500 schools. Billions of dollars have been allocated for this program and there was massive expansion of the Saudi educational missions in major world capitals. The expansion is designed to take care of the tens of thousands of Saudi students abroad. Those educational missions have round-the-clock supervision of the conduct of the students. The Saudi educational missions are on daily contact with the students. All needs of the students are reported, monitored and met.
Nowadays, Saudi infrastructure and massive build up of new roads, hospitals, railroad tracks, universities, airports and sea ports require the finest educated brains. And the presence of thousands of Saudi students in various countries had and still has a positive impact for Saudi Arabia, not only in education, but also in social development. Those young Saudi students are the best ambassadors for Saudi Arabia. They learn from the world and they give the world a taste of Saudi culture. We have seen many events and exhibitions which were organized by Saudi students in their universities and communities about Saudi food, heritage and history. And in addition to cultural exchanges, Saudi students are exposed to the work ethics of different countries. For Saudi students living abroad, it is a lesson of self-reliance and understanding of other cultures which would make them appreciate what they and others have. The majority of the Saudi students abroad are there for their bachelor degrees, but a lot are seeking higher education. Either master's degrees or Ph.Ds. The health care sector has especially benefited from sending students abroad supervised by the Ministry of Higher Education. The ministry is spending $6 billion to build additional hospitals which are attached to some Saudi universities and to expand some existing hospitals. They are called university hospitals. The medical treatment in these hospitals are free of charge. These hospitals will need a very high number of Saudi doctors. And at this time, there are hundreds of doctors who graduated from Saudi medical schools, but they are continuing their specializations in countries like America and Canada. Most of the Saudi medical graduates from Saudi medical schools enroll in KAPLAN Medical Prep programs for their United States Medical Licensing Exam (USMLE). Also the scholarship is going to be an asset for the Kingdom to bring very important and strategic new innovations. New graduates will bring with them the knowledge of sciences which would help Saudi Arabia enter the field of research and development. The overseas scholarship is in parallel to the expansion of the existing universities and the establishment of new universities in the Kingdom. King Abdullah and Crown Prince Naif are always in constant communication with education officials to ensure that the best standards are met. King Abdullah and Crown Prince Naif are always present when an educational institute is being officially inaugurated. And they are both present when a major graduation ceremony is held in any university in the Kingdom. Saudi Arabia is investing billions of dollars in the most important assets for any country, the youth.

In present time, due to the constant graduation of Saudi students in different countries, there is an annual graduation ceremony for Saudi students being held in some world capitals such as Washington D.C. and it is attended by Saudi officials from the Ministry of Higher Education and various government departments. At this stage, Saudi new graduates are ready to be part of the driving force to build and maintain the country. And with thousands of students coming back home to the Kingdom, it is very important for these new Saudi graduates to be oriented and briefed about the availability of jobs and the description of those jobs in the Kingdom. The Ministry of Higher Education under the leadership of Dr. Khalid Al-Anqari can hire some of the new graduates to be a link between the Saudi job market and the new graduates. Those hired by the Ministry of Higher Education can be like a public relations body which would give the Saudi companies the status of new graduates, their specialty and their track record of education while abroad. Also, it is important for the new public relation body to be like a hiring agent for the new students and they would direct them to the proper place and the proper company or government agency. The Saudi job market is the largest in the Middle East. So, it is very important for the new Saudi graduates to be hired short time after their arrival from abroad. And with the present economic boom, it is not difficult to absorb the new graduates in the job market. We all know that the other Gulf states also have an economic boom and those countries are also in need of highly skilled and highly educated young men and women. And if our young men and women are not absorbed by our job market, then we will see Saudi brains being utilized by other Gulf states. Saudi government has spent time and billions of dollars to educate those young men and women, so, it would be a great loss for us to see them leave the country and work in a neighboring Gulf state.




We, the Saudis have to give our young men and women time to adopt and time to refine their skills. And it is also important to give them more on job training in order to refine and improve their skills. We, the Saudis want to cultivate what we have planted. Taking care of the youth and educating them is the most important thing for any country to develop itself. Youth are the driving mechanism for the development of any society. Saudi Arabia now is entering a new era in development. The government is looking for different venues to diversify the massive Saudi economy. Now, we are looking for solar energy. Mining for different minerals is expanding. All those new projects need the finest educated Saudis to develop them and to sustain its operation. The Kingdom of Saudi Arabia now is one of the leading countries in human developments and the Ministry of Education and the Ministry of Higher Education went the extra mile to fulfill the goals of development. The Custodian of the two Holy Mosques scholarship program to educate young men and women is an important and strategic step to ensure the continuity of the Saudi prosperity.

'என் இறைவா! எனக்குக் கல்வி ஞானத்தை அதிகப்படுத்து' எனக் கூறுவீராக!
-குர்ஆன் 20:114

Sunday, March 18, 2012

ஆஸ்கார் ரஹ்மானுக்கு கொடுத்தது தவறு- இஸ்மாயில் தர்பார்.

ஆஸ்கார் ரஹ்மானுக்கு கொடுத்தது தவறு- இஸ்மாயில் தர்பார்.

கேள்வி: ஏ.ஆர்.ரஹ்மான் வேறொருவர் பாடலை திருடி ஆஸ்கார் விருது பெற்று விட்டார்? ஆஸ்கார் விருது பணம் கொடுத்து வாங்கப்பட்டது என்று சொன்னீர்களாமே?





இஸ்மாயில் தர்பார்: நான் இரண்டு வருடம் முன்பு நாக்பூர் சொந்த வேலையாக போனபோது ஒரு நிருபர் ஆஸ்கார் அவார்டைப் பற்றி கேட்க 'உரியவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. ஒரு தொகைக்கு வாங்கப்பட்டது' என்றேன். இப்பொழுதும் அதைத்தான் சொல்கிறேன்.






கேள்வி: எப்படி விலை கொடுத்து வாஙகப்பட்டது என்று சொல்வீர்கள்? படமும் சிறப்பாக இருந்தது, பாடலும் சிறப்பாக இருந்தது.

இஸ்மாயில் தர்பார்: பாடல் சிறப்பாக இருந்ததா? அது அவருடைய பாடலா? அவர் சொந்தமாக டியூன் போட்டு எழுதியதா? அப்படி அது அவர் போட்ட மெட்டு என்று நிரூபித்து விட்டால் காலம் பூராவும் அவருக்கு சேவை செய்ய தயாராக இருக்கிறேன். ஆஸகார் விருது கொடுக்கும் அளவுக்கு அந்த பாடலில் என்ன இருக்கிறது?

கேள்வி: அது விருது கொடுப்பவர்களின் பொருப்பு அல்லவா? ஆஸ்கார் கமிட்டியிடம் தங்கள் கருத்தை வாபஸ் வாங்குவதாக சொன்னீர்களாமே!

இஸ்மாயில் தர்பார்: ஆம். ஆஸ்கார் கமிட்டியினர் என்னை தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாதல்லவா? எனவே அவர்களுக்கு எனது நிலையை விளக்கினேன். வரும் காலத்தில் நானும் கூட எனது படத்தை ஆஸ்காருக்கு அனுப்பலாம். எனவே அவர்களிடம் முறுகல் நிலையை விரும்பவில்லை. ஆனால் ரஹ்மான் விஷயத்தில் எனது கருத்து அப்படியேதான் இருக்கிறது.

கேள்வி: அவர்மேல் உள்ள பொறாமையில்தான் இவ்வாறு அபாண்டமாக குற்றம் சாட்டுகிறிர்கள் என்ற கருத்து வைக்கப்படுகிறதே?

இஸ்மாயில் தர்பார்: எனக்கு எந்த பொறாமையும் இல்லை. நான் உழைக்கிறேன். என் குடும்பமும் நானும் சாப்பிடுகிறோம். நான் சப்பாத்தி சப்ஜி சாப்பிடுகிறேன். அவர் இட்லி சாம்பார் சாப்பிடுகிறார்.(வட நாட்டுக்காரன் தனது புத்தியை காட்டியதற்கு எனது கண்டனங்கள். இட்லி சாம்பாரின் அருமை இவருக்கு எங்கு தெரியப் போகிறது? ) இவை அனைத்தையும் எனக்கு தருவது இறைவனே! நான் யாருக்கும் கூஜா தூக்க வேண்டிய அவசியமும் இல்லை. அவரிடம் உள்ள திறமையை மக்கள் முன் வைக்காமல் விருதுகளை வாங்க என்ன செய்ய வேண்டும்? யாரை பிடிக்க வேண்டும் எனபதை எல்லாம் நோட்டம் விட்டுக் கொண்டு பணம் பண்ணுவதிலேயே குறியாக இருக்கிறார். அதிலும் சொந்த பாடலாக இருந்தாலும் பரவாயில்லை. வேறொருவரின் பாடலுக்கு இவர் எப்படி விருது வாங்கிக் கொள்ளலாம். இதுதான் எனது கேள்வி. அவருக்கு கூஜா தூக்குபவர்கள் அவரை கீழே தள்ளப் பார்க்கிறார்கள். நான் அவரது தவறை சுட்டிக் காட்டி சரியான வழிக்கு அழைத்து வர முயற்ச்சிக்கிறேன்.

கேள்வி: விருது விவகாரத்தில் முன்பும் ஒருமுறை விமரிசிக்கப்பட்டீர்கள்தானே?

இஸ்மாயில் தர்பார்: ஆம். முன்பு தேவதாஸ் படமும் சாதியா(அலைபாயுதே) படமும் நேசனல் அவார்டுக்காக போட்டியில் இருந்தபோது விருதை சாத்தியாவுக்கு கொடுத்தார்கள். இரண்டரை வருடம் கஷ்டப்பட்டு அந்த படத்துக்கு இசை அமைத்ததன் வலி எனக்குதான் தெரியும். இதனால் 10 படங்கள் என் கையை விட்டு போனது. அதுவும் சாதியா ஒரு டப்பிங் படம். இந்த படத்துக்கு நேஷனல் அவார்ட் கொடுத்து எனது படத்தை ஒதுக்கியது என்ன வகை நியாயம்?

கேள்வி: உங்களுக்கு நேஷனல் அவார்ட் கிடைக்கவில்லை என்ற பொறாமையால்தான் ரஹ்மான் மீது குற்றம் சுமத்துகிறீர்கள் என்கிறார்களே?

இஸ்மாயில் தர்பார்: இதற்கு முன்பே பதில் சொல்லி விட்டேன். ரஹ்மான் என்னிடம் நேரிடையாக வந்து 'யாருடைய பாடலையும் திருடவில்லை. எனது சொந்த மெட்டு' என்று சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்.... ஒரு இசை அமைப்பாளனான எனக்கு நன்கு தெரியும் அந்த பாடல் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று.

(இரண்டு காணாளிகளின் சுருக்கம் இது. ஹிந்தி தெரியாதவர்களுக்காக மொழி மாற்றம் செய்தேன்,)


இஸ்மாயில் தர்பார் குறைபட்டுக் கொண்ட தேவதாஸ் பாடல்.
http://www.youtube.com/watch?v=UyERhf2GnWY&feature=related

ஒருவரின் பாடலை திருடுவது என்பது எல்லோரும் செய்து கொண்டிருப்பதே! முதலில் இந்த ராகங்களுக்கும் பாடல்களுக்கும் எவரும் உரிமை கொண்டாட முடியாது. ஏழு ஸ்வரங்களை வைத்து அவரவர் திறமையால் பாடலை உருவாக்குகிறார்கள். மக்களின் ரசனையை புரிந்து கொண்டு சில மாற்றங்களை செய்பவர் பிரபல்யம் ஆகிறார். சங்கர் கணேஷ் போன்றவர்கள் கூசசப்படாமல் மற்றவர்களின் பாடல்களை அதே வருடத்திலேயே சில உல்டா செய்து “பட்டு வண்ண ரோசாவாம்” (உச்சி வகுந்தெடுத்து) மாதிரி அமைத்து விடுவார்கள்.

'தங்கப்பதக்கத்தின் மேலே....” என்ற டிஎம்எஸ்ஸின் எம்ஜிஆர் பாடல் நமக்கு எல்லாம் தெரிந்த ஒன்று. ஏ.ஆர்.ரஹ்மானின் 'என்ன விலை அழகே...' பாடலை கேளுங்கள். அந்த பாடலுக்கும் இந்த பாடலுக்கும் உள்ள ஒற்றுமையை உணருவீர்கள். இதற்காக எம்எஸ்வி ரஹ்மானை கோபிக்க முடியுமா?

எனவே இதை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் ஈஸியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பொறாமைபடுபவரின் முக பாவம் எவ்வாறு செல்லும் என்பதற்கு இந்த காணொளி ஒரு சாட்சி.:-) நமது பதிவுலகில் கூட ஒரு பதிவர் 'மகுடம் ஏறும் பதிவுகளெல்லாம் தரமானவை அல்ல' என்று குறை பட்டுக் கொண்டார். இவருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக தமிழ்மண மகுடத்தை தூக்கி விடுங்கள் என்று சொல்லவதும், ரஹ்மானை பிடிக்காததால் ஆஸ்கார் விருதையே கொச்சைப் படுத்தும் இஸ்மாயில் தர்பாரும் கொஞசம் சிந்திக்க வேண்டும். ரஹ்மான் இவரை கண்டு கொள்வதே இல்லை. அவர் பாட்டுக்கு மேலும் மேலும் சிகரத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறார். :-)


பால் மோர்லேயுடன் ஏஆர்ஆர்....


வைர முத்து ரஹ்மான் பற்றி ...


சங்கர் மகாதேவன் ரஹ்மானைப் பற்றி...

யுடியூபில் வந்த சில கமெண்டுகள்:

a R Rahman is such a good hearted fellow. He is a genius guy in music that everyone knows. You (ismail) don't know how to praise your own indian...Westners have been telling that Indian hate each other. Now, you proved once again..shame on you...bloody ismail...you r such a jealous fellow...if you want publicity try doing other ….
jsenthilsg

hehehhehh why would THE ARR react to stupid people like you... never seen such a looser .. first go and train yourself for todays world and todays music.... update your knowledge and take some medicines. Devdas music was just ok.... it was a sanjay lelal bansali film so u got noticed... dumbo.. sanjay lela bansali's music in gujarish has proved who is the master behind hum dil de chuke sanam and devdas... :D take your medicines and sit at your home .
giteshmediatec

டிஸ்கி: ரஹ்மான் சார்! இளம் வயதிலேயே நான்கு தலைமுறைக்கு சொத்து சேர்த்தாகி விட்டது. அது போதும். சினிமா துறைக்கு ஒரு தலைமுழுக்கைப் போட்டுவிட்டு இருக்கும் பணத்தை தொழிலில் முதலீடு செய்யுங்கள். ஒரு உம்ரா ஹஜ்ஜையும் முடித்துவிட்டு நற்பணி மன்றங்கள் அனாதை ஆசிரமங்களில் கவனத்தை செலுத்துங்கள். இஸ்மாயில் தர்பார் முதற்கொண்டு சினிமாத் துறையை தூரமாக்குங்கள். தர்ஹா வணக்கத்தையும் அது சரிதானா என்பதை குர்ஆனை திறந்து கொஞ்சம் பார்வையிடுங்கள். இவை எல்லாம் உங்களின் மறு உலக வாழ்க்கையை செம்மையாக்கும் வழிகள். சிந்திப்பீர்களாக!

Friday, March 16, 2012

இறை வேதத்தில் மற்றுமொரு அதிசயம்- ஹாமான்!

குர்ஆன் மீது மாற்றார் வைக்கும் பல குற்றச்சாட்டுகளில் ஒன்று 'முகமது நபி குர்ஆனை பைபிள் தோராவிலிருந்து நகல் எடுத்து குர்ஆனாக தந்திருக்கிறார்' என்பது. இதற்கு அவர்கள் வைக்கும் வாதம் இறைத் தூதர்கள் மற்றும் அவர்கள் சம்பந்தமான வரலாறுகள் சில மூன்று வேதங்களிலும் ஒன்றாக வருவதை ஆதாரமாக காட்டுகின்றனர். பெயர்களும் இடங்களும் சில அத்தியாயங்களில் ஒத்து வந்தாலும் வரலாறுகளில் ஏகத்துக்கும் மாற்றம் இருக்கிறது. ஏசு நாதரின் இறப்பு, அவரின் போதனைகள், அதே போல் மோசே, ஆபிரஹாம் போன்ற இறைத் தூதர்களின் வரலாறுகளும் பல மாற்றங்களை குர்ஆனில் கொண்டுள்ளதை வசதியாக மறந்து விடுகின்றனர்.

'அப்பூமியில் பலவீனர்களாகக் கருதப்பட்டோர் மீது அருள் புரியவும், அவர்களைத் தலைவர்களாக்கவும், அப்பூமிக்கு உரிமையாளர்களாக ஆக்கவும், அப்பூமியில் அவர்களுக்கு ஆதிக்கத்தை ஏற்படுத்தவும், பிர்அவுன், ஹாமான், மற்றும் அவ்விருவரின் படையினரும் எதை அஞ்சினார்களோ அதை அவர்களுக்குக் காட்டவும் நாடினோம்'.

-குர்ஆன் 28:5,6

'மூசாவை(மோசே) நமது சான்றுகளுடன், தெளிவான ஆற்றலுடனும் ஃபிர்அவுன், ஹாமான், காரூன் ஆகியோரிடம் அனுப்பினோம். 'பெரும் பொய்யரான சூன்யக்காரர்' என்று அவர்கள் கூறினர்.

-குர்ஆன் 40:23,24

'பிரமுகர்களே! என்னைத் தவிர உங்களுக்கு வேறு கடவுளை நான் அறியவில்லை.' என்று ஃபிர்அவுன் கூறினான். 'ஹாமானே! எனக்காகக் களிமண்ணைச் சுட்டு எனக்கொரு மாளிகையைக் கட்டு. அதன் மீது ஏறி மூசாவின் இறைவனைப் பார்க்க வேண்டும். அவர் பொய்யர் என்றே நான் நினைக்கிறேன்' என்றான்.

-குர்ஆன் 28:38


இது போன்று பல இடங்களில் ஃபிர்அவுன் மற்றும் ஹாமானின் வரலாறுகள் குர்ஆனில் சொல்லப்படுகிறது. ஆச்சரியமாக இந்த ஹாமானைப் பற்றி பைபிளிலோ அல்லது தோராவிலோ எந்த தகவலும் காணப்படவில்லை. முன்பு சொல்லப்பட்டிருக்கலாம். பின்னால் வந்த மத குருமார்கள் அந்த வரலாறுகளை எல்லாம் அழித்திருக்கலாம். ஹாமான் என்ற அமைச்சரைப் பற்றி பைபிளில் வந்தாலும் அது எகிப்தை தொடர்பு படுத்தி வரவில்லை. பைபிளின் பழைய ஏற்பாட்டில் மூஸா காலத்து எகிப்திய வரலாற்றில் ஹாமான் என்ற பெயரே எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. ஹாமான் என்பவன் எகிப்து அரசன் பாரவோவின்(ஃபிர்அவுன்) அதிகாரி அல்லது ஊழியன் என்கிறது குர்ஆன். இறைத்தூதர் மோசே காலத்தவனாக இந்த ஹாமான் அறியப்படுகிறான். ஆனால் பைபிளில் எஸ்தர் 3:1 அதிகாரத்தின் படி ஹாமான் என்பவன் பெர்சிய அரசனின் மந்திரியாவார். இறைத் தூதர் மோசேவுக்குப் பிறகு 1000 வருடங்கள் கழித்து வருகிறது பெர்சிய அரசனின் வரலாறு.
இந்த கதையை தவறாக விளங்கித்தான் முகமது நபி குர்ஆனில் ஹாமானின் பாத்திரத்தை உருவாக்கினார் என்று விமரிசிப்பவர்கள் சொல்கின்றனர். மோசே காலத்தில் ஹாமான் என்ற ஒருவனே இல்லை என்ற வாதம்தான் வைக்கப்பட்டது.









பண்டைய எகிப்தியர்களின் எழுத்து முறையானது சித்திரங்களைக் கொண்டே அமைக்கப்பட்டிருந்தது. இந்த எழுத்துக்கள் அகழ்வாராய்ச்சியில் முன்பு கிடைத்தாலும் அதன் அர்த்தம் என்ன என்பதை ஆராய்ச்சியாளர்கள் விளங்காமலே இருந்தனர். ஏனெனில் இந்த மொழி மக்களின் உபயோகத்திலிருந்து தூரமாக்கப்பட்டு வேறொரு புது மொழி அந்த மக்கள் பேச ஆரம்பித்திருந்தனர். எனவே சித்திரங்கள் கொண்ட இந்த மொழியானது வழக்கொழிந்து ஏறக்குறைய செத்த மொழியாகவே ஆகி விட்டது.



கிபி 394ல் இந்த மொழி பற்றிய சில குறிப்புகள் கிடைக்கின்றது. ஆனால் இதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் இதே கால கட்டத்தில் எவருக்கும் இல்லாமல் இருந்தது. கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு தான் அதாவது 1799 ஆம் அண்டு 'ரொஸிட்டா ஸ்டோன்' “rosetta stone” என்ற இந்த எழுத்து முறைகளை புரிந்து கொள்ளக் கூடிய கல் வெட்டுகள் கிடைக்கிறது. இந்த கல் வெட்டுகளில் உள்ள விபரங்கள் மூன்று பாகங்களாக பிரித்து எழுதியுள்ளார்கள். Hieroglyphics (எகிப்திய சித்திர எழுத்து முறை), demotic ( சமயம் சார்ந்த மொழி), கிரேக்கம் என்ற மூன்று பகுதிகளாக செய்திகள் தொகுக்கப்பட்டிருந்தது. இதில் கிரேக்க மொழியின் உதவி கொண்டு மற்ற இரண்டு மொழிகளின் விபரங்களையும் ஆராய்ச்சியாளர்கள் சுலபத்தில் கண்டு கொண்டனர். இதன் மூலமே சித்திர எழுத்துக்களின் உண்மையான விளக்கம் வெளி உலகுக்கு தெரிய ஆரம்பித்தது. இதன் மொழி பெயர்ப்பை ஜீன் பிரான்ஸிஸ் அழகிய முறையில் மொழியாக்கம் செய்து உலகுக்கு அளித்தார். இவ்வாறாக வழக்கொழிந்த ஒரு மொழிக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் பண்டைய எகிப்தின் கலை, பண்பாடு, மதம் பற்றிய புதிய தகவல்கள் நமக்கு கிடைக்கப் பெற்றன.




ஆச்சரியமாக அந்த கல்வெட்டுகளில் மன்னன் பாரோவுடைய வரலாறும் அவனுக்கு உதவியாக இருந்த ஹாமானின் வரலாறும் பொறிக்கப்பட்டுள்ளது. வியன்னாவில் உள்ள ஹோஸ் அருங்காட்சியகத்தில் இந்த கல்வெட்டுகள் இன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.




அதில் கிடைக்கும் மேலதிக விபரமாவது கற்களைக் கொண்டு பெரும் கட்டிடங்களை எழுப்பும் கூட்டத்தின் தலைவனின் பெயர் ஹாமான் என்று பொறிக்கப்பட்டுள்ளது. மன்னன் பாரோவுடைய ஆட்சியைப் பற்றியும் சில குறிப்புகள் கிடைக்கின்றன. கல் வெட்டு கூறும் இந்த கருத்து அப்படியே குர்ஆனோடு ஒத்துப் போவதை எண்ணி வியக்கிறோம். மன்னன் பிரவுன் சொன்ன அந்த மாளிகையை கட்ட உதவியவன் பெயர் ஹாமான் என்று குர்ஆன் கூறுகிறது.

'பிரமுகர்களே! என்னைத் தவிர உங்களுக்கு வேறு கடவுளை நான் அறியவில்லை.' என்று ஃபிர்அவுன் கூறினான். 'ஹாமானே! எனக்காகக் களிமண்ணைச் சுட்டு எனக்கொரு மாளிகையைக் கட்டு. அதன் மீது ஏறி மூசாவின் இறைவனைப் பார்க்க வேண்டும். அவர் பொய்யர் என்றே நான் நினைக்கிறேன்' என்றான்.

-குர்ஆன் 28:38


பாரோ மன்னன் ஹாமானிடம் நேர்த்தியான முறையில் கட்டிடம் கட்டுமாறு கட்டளையிடுகின்றான். நாம் கேட்பது இறைத் தூதர் மோசே காலத்தில் ஏறத்தாழ பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஹாமான் என்ற நபரைப் பற்றிய விபரம் குர்ஆனில் எவ்வாறு இடம் பெற்றது? பைபிளிலோ தோராவிலோ கட்டிடம் கட்டிய ஹாமானின் பெயர் இடம் பெறாத போது முகமது நபிக்கு இந்த வரலாறும் பெயரும் எவ்வாறு தெரிய வந்தது? கட்டிட வல்லுனனான ஹாமானின் பெயர் 200 வருடங்களுக்கு முன்புதான் ஆராய்ச்சியாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. முகமது நபி என்ற ஒரு தனி மனிதர் இந்த குர்ஆனை கற்பனையில் கொண்டு வந்திருக்க முடியாது என்பதற்கு இந்த வசனங்களும் ஒரு சான்று.

மனிதக் கரங்களால் திருத்தப்பட்ட பைபிளிலும், தோராவிலும் தவறிருக்கலாம். மனிதக்கரம் புகாத குர்ஆனில் அறிவியலுக்கோ வரலாறுகளுக்கோ எந்த முரணும் காண முடியாது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. அடுத்து எகிப்தியர்களின் பூர்வீக மொழி அரபியன்று. கலாசார மாற்றங்களினால் அவர்களின் பூர்வீக மொழி மறைந்து போய் இன்று அரபி பொது மொழியாக ஆக்கப்பட்டது.

'ஒரு மனிதர்தான் இவருக்குக் கற்றுக் கொடுக்கிறார்' என்று அவர்கள் கூறுவதை அறிவோம். யாருடன் இதை இணைக்கிறார்களோ அவரது மொழி வேற்று மொழியாகும். இதுவோ தெளிவான அரபு மொழி.

-குர்ஆன் 16:103

Thursday, March 15, 2012

கொஞ்சம் கலகலப்பா இருப்போம்! வாங்கண்ணா!



'ஏம்மா குழந்தை! உனக்கு உட்கார வேற இடமே கிடைக்கல்லயா?'

-------------------------------------------------------------


அலுவல நேரத்திலும், கல்லூரிக்கு செல்லும் நேரத்திலும் குறட்டை விட்டு தூங்குபவர்களை எழுப்ப இதுதான் சரியான வழிங்கண்ணா!

--------------------------------------------------------------

இப்படி எல்லாரும் தொடர்ந்து சாப்பிட ஆரம்பிச்சா எத்தனை ஐந்தாண்டு திட்டங்கள் போட்டாலும் தாங்காது சாமி!


--------------------------------------------------------------

இவங்க எல்லோரும் முக்கியமா என்ன பேசிக்கறாங்க

'கலைஞர் தீக்குளிக்கப் போறாறாமே! இநத வயசுல இது தேவையா! ஐயோ பாவம்'

'அது சரி கலைஞருக்கு பிறகு யாரு? ஸ்டாலினா, அழகிரியா, கனிமொழியா?'

'ராமர் கோவில் கட்டுவோம் என்று சொல்லியும் பிஜேபி உபியில இந்த அடி வாங்கியிருக்குதே! அடுத்த தேர்தல்ல பாபர் மசூதி கட்டுவோம் என்று சொன்னாலும் சொல்லுவாங்க. ஓட்டுககாக எதையும் செய்யறவங்கததானே!'

'ஜெயலலிதாவும் சசிகலாவும் ரகசியமா சந்திச்சாங்களாமே! உண்மையா?'

-------------------------------------------------------------




அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

--------------------------------------------------------------

டார்வின் இந்த செடியை பார்த்தால் பரிணாமத்துக்கு உடான்ஸ் விட புது காரணங்கள் தேட வேண்டி வரும். :-)


-------------------------------------------------------------



இந்த அனுபவம் யாருக்காவது உண்டுங்களா? :-)

------------------------------------------------------------



பாவத்தின் சம்பளம்!

-----------------------------------------------------------

Tuesday, March 13, 2012

பிரபஞ்சம் விரிவடைகிறது என்பது உண்மையா?

பிரபஞ்சம் விரிவடைகிறது என்பது உண்மையா?

இதன் பின்னர் பூமியை விரித்தான்'
-குர்ஆன் 79:30

'வானத்தை நாம் ஆற்றலைக் கொண்டு படைத்தோம்: நிச்சயமாக நாம் அதை விரிவாக்கம் செய்பவராவோம்.'
-குர்ஆன் 51:47

'பூமியை நாம் விரித்தோம்: நாம் அழகுற விரிப்பவர்கள்.'
-குர்ஆன் 51:48

பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம்.
-குர்ஆன் 15:19



மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
-குர்ஆன் 13:3

இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.

-குர்ஆன் 55:10

'பூமியை விரித்தான்' என்ற குர்ஆனின் வசனத்தில் வரும் 'தஹாஹா' என்ற சொல் 'தஹ்வு' என்ற சொல்லின் மூலத்திலிருந்து வந்தது. இங்கு தஹ்வு என்ற சொல்லுக்கு விரித்தல் என்ற பொருள் வரும்.

நாம் அமரும் பாயை சுருட்டுங்கள் என்கிறோம். பாயை விரியுங்கள் என்கிறோம். இங்கு சுருக்கப்பட்ட பொருள் விரிவடையும்போது என்ன வார்த்தையை பயன்படுத்துகிறோமோ அதே வார்த்தையை கொண்டு பூமியையும் இறைவன் கையாள்கிறான்.





பல காலமாகவே இந்த பிரபஞ்சம் நிலையான ஒன்று என்றுதான் அறிவியலார் கூறி வந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் ரஷ்ய இயற்பியல் விஞ்ஞானி அலெக்சாண்டர் ஃபிரைட்மேனும் பெல்ஜிய விஞ்ஞானி லேமைட்ரீயும் பிரபஞ்சத்தின் விரிவடைதலை கண்டறிந்தனர். இந்த உண்மை 1929ல் தொலைநோக்கி சோதனை மூலம் விஞ்ஞானி எட்வின் ஹப்பிளால் நிரூபிக்கப்பட்டது. மேலும் நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்கள் ஒன்றை யொன்று விலகிச் செல்வதையும் தனது சோதனையில் கண்டறிந்தார் ஹப்பிள்.

பிரபஞ்சம் விரிவடைவது சம்பந்தமாக மூன்று அமெரிக்கர்கள் நோபல் பரிசை பகிர்ந்து கொண்டனர். அதன் காணொளியைப் பார்ப்போம்.



உப்பி விரிகிறது. அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு பொருள் என்று கருதக் கூடாது. அது சோப்புக் குமிழி போல உப்பிக் கொண்டே போகும் ஒரு கோளம்'
-விஞ்ஞானி ஹப்பிள்.
இதைத்தான் இறைவனும் 'பூமியை விரித்தான்' அதாவது பூமியை விரிவாக்கம் செய்தான் என்று குர்ஆனில் கூறுகிறான். விஞ்ஞானி ஹப்பிளின் கருத்தை அப்படியே பிரதிபலிப்பதை பார்க்கவில்லையா!
'பிரபஞ்சம் இருவித முடிவுகளில் சிதைந்து போகலாம்! ஒன்று குமிழிபோல் உப்பிக் கொண்டு அது தொடர்ந்து விரியலாம்! அல்லது பெரும் வெடிப்பில் [Big Bang] தோன்றிய பிரபஞ்சம், ஒரு பெரும் நெருக்கலில் [Big Crunch] மறுபடியும் நொறுங்கி முடிந்து போகலாம்! எனது யூகம், பிரபஞ்சம் பெரும் நெருக்கலில் ஒரு சமயம் அழிந்து போய்விடும் என்பது! பிரபஞ்சத்தின் பிரளய முடிவுகளை முன்னறிவித்த முனிவர்களை விட எனக்கு ஓர் பெரிய சலுகை உள்ளது! இப்போதிருந்து பத்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு எது நிகழ்ந்தாலும், என் கருத்து பிழையான தென்று நிரூபிக்கப்பட நான் உயிரோடு இருக்கப் போவதில்லை ' என்று புன்னகை புரிகிறார், ஸ்டாஃபென் ஹாக்கிங்!



முன்பு பூமியில் இருந்த நிலப்பரப்பு அனைத்தும் ஒன்றாகவே இருந்தன. பூமியானது விரியத் தொடங்கியவுடன் ஒன்றாக இருந்த நிலப்பரப்புகள் கண்டங்களாகவும், நாடுகளாகவும், தீவுக் கூட்டங்களாகவும் பிரிகின்றன. இதனை இந்த காணொளி அழகாக விவரிக்கிறது.



ஹாக்கிங் கூறுகிறார்:

'இருபதாம் நூற்றாண்டிற்கு முன்னர் ஒருவர் கூட பேரண்டம் விரிந்து செல்கிறது அல்லது சுருங்கி வருகிறது எனும் கருத்தைத் தெரிவிக்கவில்லை. பேரண்டம் மாற்றமே இன்றி நாம் காண்பது போலவே எக்காலமும் இருந்திருக்கிறது என்றே பலரும் நம்பி வந்தனர். பெரும்பாலான மக்களின் மன நிலையும் இதை ஒட்டியே அமைந்திருந்ததும் காரணமாக இருக்கலாம்.'

-எ ஃப்ரீ ஹிஸ்டரி ஆஃப் டைம் (பக்கம் 6)
“The discovery that the universe is expanding was one of the great intellectual revolutions of the 20th century.
(பேரண்டம் விரிவடைகிறது எனும் இக்கண்டுபிடிப்பு இருபதாம் நூற்றாண்டின் பெரும் அறிவுப் புரட்சிகளில் ஒன்றாகும்)
(அதே புத்தகம் பக்கம் 42)



உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகளான ஐசக் நியூட்டன் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற அறிஞர்கள் கூட பிரபஞ்சம் விரிவடைகிறது என்ற செய்தியை அறிந்திருக்கவில்லை. அது பற்றிய சிந்தனையும் அவர்களுக்கு எழவில்லை. இது போன்ற ஒரு வார்த்தைப் பிரயோகத்தை முகமது நபி என்ற ஒரு மனிதரால் சொல்லியிருக்க முடியுமா? என்று சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம். படிப்பறிவற்ற அந்த சமூகத்தையும் தனது தாய் மொழியையே எழுத படிக்க தெரியாத முகமது நபியையும் இங்கு நாம் நினைவில் நிறுத்தி பார்க்க வேண்டும். இந்த உண்மைகளை ஆராய்ந்தால் குர்ஆனின் வார்த்தைகள் நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தைகள் என்ற முடிவுக்கே வருவோம்.

மேலும் விபரங்கள் அறிய...
http://en.wikipedia.org/wiki/Universe

Monday, March 12, 2012

உடல் உறுப்புகளை தானம் செய்யலாமா?

உடல் உறுப்புகளை தானம் செய்யலாமா?

கேள்வி:
ஓரிறையின் திருப்பெயரால்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ் வபரகாதஹு,

அன்பின் சகோதரர் சுவனப்பிரியன் அவர்களுக்கு!

உங்கள் அன்பின் சகோதரன் முஹமத் இக்பால் இடம் ஒரு சந்தேகம் உள்ளது.இறை நாடினால் அதற்கு எனக்கு நீங்கள் விளக்கம் அளிக்கவும் சகோ. சகோ இஸ்லாம் பார்வையில் உடல் உறுப்புகளை தானம் செய்யலாமா?கூடாதா?கொஞ்சம் தெளிவு படுத்தவும் இன்ஷா அல்லாஹ்.


பதில்:
வஅலைக்கும் சலாம் சகோ முஹம்மது இக்பால். உடல் உறுப்புகளை நமது உடலுக்கு பாதகம் வராமல் தாராளமாக பிறருக்கு தானம் செய்யலாம். மார்க்கத்தில் இதற்கு தடை இல்லை. முழு உடலையும் ஆராய்ச்சிக்காக கொடுப்பதை தவிர்த்து கொள்ள வேண்டும். ஏனெனில் குளிப்பாட்டுவது, உடலை அடக்கம் செய்வது போன்ற செயல்களை உடலை தானம் செய்யும போது நம்மால் நிறைவேற்ற முடியாது. அவசியம் உள்ளவர்கள் மற்ற மதத்தவர்களிடம் பெற்றுக் கொள்வார்கள்.

எனவே இரத்தம் கொடுப்பது, கண்தானம் செய்வது, கிட்னி தானம் செய்வது போன்றவை மார்க்கத்தில் தடை செய்யப்படவில்லை. தாராளமாக கொடுக்கலாம்.

இந்த காணொளியில் உங்கள் கேள்விக்கான விளக்கம் இருக்கிறது. பார்த்து தெளிவு பெறுங்கள்.



-------------------------------------------------------

சவூதியின் அல்பாஹா நகரில் சாலை விபத்தொன்றில் இறந்த சவூதி இளைஞன் ஒருவனின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவனுடைய பெற்றோர் முன்வந்துள்ளனர்.
அல்பாஹா நகரின் மன்னர் ஃபஹத் மருத்துவமனையின் உறுப்பு தானப் பிரிவு பொறுப்பாளரிடம் சவூதி உறுப்பு தான மையம் (SOTC) வைத்த கோரிக்கை படி, அந்தப் பொறுப்பாளர் இறந்த இளைஞனின் பெற்றோரை அணுகி "இறைவனுக்காக, இறந்த மகனின் உறுப்புகளை தானம் வழங்குங்கள்" என்று கேட்டுக்கொண்டார். இது பற்றி கருத்து தெரிவித்த இறந்த இளைஞனின் சகோதரர், "இறைவனுக்காக, இம்மாபெரும் கொடைக்கு எங்கள் பெற்றோர் ஒப்புக்கொண்டார்கள்" என்று கூறினார்.

அல்பாஹா மருத்துவத்துறை பொறுப்பாளர் மாஜித் ஆல் ஷாத்தி கூறுகையில், "சவூதி உறுப்பு தான மையத்தின் மருத்துவக் குழு கடந்த சனியன்று வானூர்தியில் அல்பாஹா வந்தடைந்தது. 10 நுட்ப வல்லுநர்களும், அறுவை சிகிட்சை மருத்துவர்களையும் கொண்ட அந்தக் குழு தேவையான உறுப்புகளை தானம் பெற்றுச் சென்றது. இவையாவும், பாதுகாப்புத்துறை அமைச்சர் இளவரசர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் வழிகாட்டுதல் படி நடைபெற்றது" என்றார்.

சவூதி உறுப்பு தான மையம் (SOTC) இயக்குநர், அந்தக் குடும்பத்தினருக்கான தனது பிரார்த்தனைகளைத் தெரிவித்துக்கொண்டார். மேலும், இளவரசர் சல்மான், அல்பாஹா மாகாண சுகாதாரத்துறை இயக்குநர் அப்துல்ஹமீது அல்காம்தி ஆகியோருக்கு நன்றிகளையும் அவர் தெரிவித்தார்.

Friday, March 09, 2012

மார்ச் மாத ரூம் சொற்பொழிவு!

கடந்த வெள்ளி காலை 10 மணியளவில் எங்களது ரூமில் 'இறைவனின் படைப்புகள்' என்ற தலைப்பில் குர்ஆனின் 'தேனீக்கள்' என்ற அத்தியாயத்திலிருந்து சிறந்த சொற்பொழிவை சகோதரர் அன்சாரி அவர்கள் நிகழ்த்தினார். போன கூட்டத்திற்கு 4 பேர் மட்டுமே வந்திருந்தனர். இந்த மாத கூட்டத்துக்கு 11 பேர் வந்திருந்தனர். அடுத்த மாதம் இடப் பற்றாக் குறையால் ஹாலில்தான் கூட்டத்தை நடத்த வேண்டும் போல் இருக்கிறது. விடுமுறை நாளில் சுகமான காலை தூக்கத்தை தியாகம் செய்து இறைவனின் மார்க்கத்தை அறிந்து கொள்வதற்க்காக வருகை புரிந்த நண்பர்களை சகோதரர் நிஜாம் வரவேற்றார்.

'கால் நடைகளை உங்களுக்காகவே அவன் படைத்தான். அவற்றில் குளிரை தடுக்கும் கம்பளி போன்ற பயனும் உண்டு: அவற்றிலிருந்து உணவாக சாப்பிடுகிறீர்கள்.'

'மாலையில் ஓட்டிச் செல்லும் போதும் காலையில் ஓட்டிச் செல்லும் போதும் அதில் உங்களுக்கு அந்தஸ்து இருக்கிறது.'

'பெரும் சிரமத்துடனே நீங்கள் சென்றடையும் ஊருக்கு உங்கள் சுமைகளை அவை சுமந்து செல்கின்றன. உங்கள் இறைவன் நிகரற்ற அன்புடையோன்: இரக்கமுள்ளவன்'

'குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள், ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்லவும் மதிப்புக்காகவும் அவன் படைத்தான். நீங்கள் அறியாதவற்றை இனி படைப்பான்.

-குர்ஆன் 16:5,6,7,8 (தேனீக்கள்)


மனிதப் படைப்பான நமக்கு இறைவன் எத்தகைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளான். அன்றைய கால மக்கள் அறியாத எத்தனையோ புதிய வசதிகளையும் இன்று நாம் அனுபவித்து வருகிறோம். அதற்காக இறைவனை நாம் என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா? அவனது அருட்கொடைகளை எண்ணி நன்றி செலுத்தியிருக்கிறோமா என்றால் பெரும்பாலோரிடமிருந்து இல்லை என்ற பதிலே வரும்.

அந்த இறைவன் நாடி விட்டால் ஒரு நிமிடத்தில் நம்முடைய வாழ்வை இருக்கும் இடத்திலிருந்தே பறித்து விட முடியும். கருணையாளனான அந்த இறைவன் தன்னை எதிர்ப்பவர்கள், தன்னை தூற்றுபவர்கள், மனிதர்களுக்கு துரோகம் செய்பவர்கள் அனைவரையும் விட்டு வைத்திருக்கிறான். வரும் காலங்களிலாவது நேர்வழியைப் பெற மாட்டார்களா! என்ற நல்ல எண்ணத்திலேயே இன்றுவரை அவர்கள் அனைவரையும் விட்டு வைத்திருக்கிறான். இந்த கருணையை பலர் கையாலாகததனம் என்று நினைத்து வாழ்க்கையை வீணிலும் விளையாட்டிலும் கழித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த கூட்டத்தில் எல்லாம் நம்மை சேர்க்காமல் இறை வசனங்களை கேட்க ஆர்வமுடன் வந்திருக்கும் நம் அனைவரின் இம்மை மறுமை வாழ்வு சிறப்பாக அமைய பிரார்த்தித்தவனாக எனது இந்த சிற்றுரையை முடிக்கிறேன்.'
என்று தனது சிற்றுரையை முடித்தார் சகோதரர் அன்சாரி.



அதன் பிறகு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தையொட்டியுள்ள கிராமத்திலிருந்து தமிழ்ச் செல்வன் என்ற இளைஞன் போன வருடம் டிரைவர் பணிக்காக வந்துள்ளார். அவர் தனது பேச்சில்.

'நான் சிதம்பரம் அண்ணமலை பல்கலைக்கழகத்திலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வந்துருக்கேங்கண்ணா! பத்தாம் வகுப்பு வரை படிச்சிருக்கேங்கண்ணா! போன வாரம் தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேங்கண்ணா! என் குடும்பத்தவர்கள் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர். என் தம்பி ரொம்பவும் எதிர்த்தாங்கண்ணா! ஏக இறைவனை நம்ம பழைய மதத்திலேயே இருந்துக்கிட்டு கும்பிடலாமே என்று எங்க அம்மா கேட்டாங்கண்ணா! எந்த கோவிலுக்கு போனாலும் ஏதாவது ஒரு சாமி சிலைதானே இருக்கு. ஏக இறைவனை நான் எப்படி அங்கு வணங்க முடியும்? எந்த முறையிலே நான் வணங்குறது. எந்த சாமியை நான் வணங்குறதுண்டு கேட்டங்கண்ணா. அதற்கு எங்க அம்மா எந்த பதிலும் சொல்லாமல் 'உன் விருப்பப்படி இருந்து கொள்' என்று சொல்லிட்டாங்கண்ணா. முதலில் எதிர்த்துக்கிட்டு இருந்த என் தம்பியும் இப்ப தன் முடிவை மாத்திக்கிட்டாண்ணா. அவனையும் இஸ்லாத்துல சேர்த்துருவங்கண்ணா!

ஒரு சின்ன சிக்கல். உங்களை மாதிரி அரபியில் குர்ஆனை சரளமாக ஓத சிரமமாக இருக்கிறது. அதுக்கு மட்டும் கொஞ்சம் ஏற்பாடு பண்ணுங்க. பல பேரோட சொற்பொழிவு எனக்கு சரியா புரிய மாட்டேங்குது. ஆனா அண்ணன் பிஜே பேசினா எனக்கு தெளிவா விளங்குது. அவரோட சிடிக்களை பார்த்துதான் இந்த முடிவையே எடுத்தேன். அவருக்கு ரொம்ப நன்றிங்கண்ணா! எனக்கு மெக்கா போய் கஃபாவை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அதற்கும் ஏற்பாடு பண்ணுங்கண்ணா!'

என்று மிக இயல்பாக வெள்ளாத்தியாக கொச்சைத் தமிழில் பேசி முடித்தார். ஒரு வாரத்தில் அவருக்குள் ஏற்பட்டுள்ள மாற்றத்தை எண்ணி வியந்தோம். இறைவன் ஒருவனுக்கு நேர்வழியை காட்ட எண்ணி விட்டால் அதற்கு திரை ஏது? தமிழ்ச் செல்வன் என்ற பழைய பெயரிலேயே அவர் இஸ்லாத்தில் இருக்கலாம். ஆனால் இந்த பெயரில் இருந்தால் 'இவர் என்ன சாதி? படையாச்சியா, செட்டியாரா, தலித்தா' என்ற கேள்வி வரும். தற்போது தனது பெயரை முஹம்மது என்று மாற்றியுள்ளார். இனி உலக முஸ்லிம்களில் ஒருவராக ஐக்கியமாகி விட்டார். சாதியும் ஒழிந்தது. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற 2000 வருடத்திய மூதாதையரின் திராவிட பாரம்பரியத்துக்கு மீண்டு வந்துள்ளார் தமிழ்ச் செல்வன்.

இனி உலகின் எந்த பள்ளியிலும் முதலில் சென்றால் முன் வரிசையில் அமரலாம். கஃபாவுக்குள் சென்றாலும் முதல் ஆளாக சென்று நிற்கலாம். வழிபடுவதற்கு கட்டணம் ஏதும் இல்லை. இனி கூனி குருகி உயர் சாதியினர் முன்னால் செல்ல வேண்டியதில்லை. நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு செல்லலாம்.

"தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி
வாடித் துன்ப மிக வுழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப் பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?"


என்று இறுமாப்போடு வர்ணாசிரமத்தை தூக்கிப் பிடிப்பவர்களைப் பார்த்துக் கேட்கலாம்.

----------------------------------------------

தவ்ஹீத் ஜமாத் ரியாத் மண்டலம் சார்பாக உம்ரா பயணம் ஏற்பாடு செய்துள்ளனர். உம்ரா முடித்து விட்டு அங்கிருந்து ஜெத்தா சென்று ஒரு நாள் கப்பல் பயணமும் ஏற்பாடு செய்துள்ளனர். குடும்பத்தோடு வருபவர்களுக்கும் ஏற்பாடு ஆகியுள்ளது. வரும் மார்ச் 28,29,30 புதன்கிழமை கிளம்பி வெள்ளிக்கிழமை ரியாத் திரும்புகின்றனர். இறைவன் நாடினால் இதில் சகோதரர் முஹம்மதும்(தமிழ்ச் செல்வன்) பயணிப்பார்.

“விவேகத்துடனும், அழகிய அறிவுரைகள் மூலமாகவும் உம் இறைவனின் மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக ! மேலும் மிகச் சிறந்த முறையில் மக்களிடம் விவாதம் புரிவீராக !”
-குர்ஆன் 16:125

“மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.”

-குர்ஆன் 4:1

“மார்க்க விஷயத்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும், அல்லாஹ் விலக்கவில்லை. நிச்சயம் அல்லாஹ் நீதி செய்கிறவர்களை நேசிக்கிறான்.”
-குர்ஆன் 60:8

Wednesday, March 07, 2012

சமீபத்திய எனது உம்ரா பயணம்!

மதியம் 3 மணிக்கு (03-03-2012) சொகுசு வண்டியில் மெக்கா நோக்கி பயணப்பட்டோம். நாங்கள் வந்த பஸ்ஸில் 15 பேர்தான் இந்திய பாகிஸ்தான் மற்றும் எகிப்தை சேர்ந்தவர்கள். மற்ற அனைவரும் சவுதிகள். குடும்பம் சகிதமாக வந்திருந்தனர். எனது தாயார் உம்ரா பயணமாக தமிழகத்திலிருந்து வருவதால் அவர்களுக்கு உதவும் முகமாக எனது பயணம் அமைந்திருந்தது. இடையில் தொழுகைக்காக ஒரு இடத்தில் பஸ் நிறுத்தப்பட்டது. இரண்டு தொழுகைகளையும் சுருக்கி சேர்த்து தொழுது விட்டு இரவு உணவையும் ஹோட்டலில் கழித்து விட்டு பயணத்தை தொடர்ந்தோம்.

இரவு இரண்டு மணி அளவில் உம்ராவுக்காக உடுத்தப்படும் சீருடையான இஹ்ராம் கட்டுவதற்காக ஒரு எல்லையில் நிறுத்தப்பட்டது. உலகின் பல பாகங்களிலிருந்து வருபவர்களுக்காக நான்கு புறமும் எல்லைகள் நிறுவப்பட்டுள்ளன.

1529. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி அவர்கள் மதீனாவ வாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும் ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்ஃபாவையும் யமன் வாசிகளுக்கு யலம்லமையும் நஜ்த் வாசிகளுக்கு கர்னையும் இஹ்ராம் அணியும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் வசிக்குமிடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் மக்கவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.
புஹாரி Volume :2 Book :25



எங்களுக்குரிய எல்லை வந்ததும் அனைவரும் குளித்து விட்டு இஹ்ராம் துணியான வெள்ளை உடையை உடுத்திக் கொண்டோம். தைக்கப்படாத தூய வெள்ளை உடையான இந்த உடையையே உம்ரா பயணம் மேற் கொள்பவர் அணிய வேண்டும். பெண்கள் பழைய உடையிலேயே இருக்கலாம். அரபி, இந்தியன், பாகிஸ்தானி, மதராஸி, மலையாளி என்று மக்களை கூறு போடாமல் எல்லோரும் ஒரு தாய் மக்களே என்பதை உணர்த்தும் விதமாக இந்த தூய வெள்ளை உடுத்துவது உம்ரா ஹஜ் செய்பவர்களுக்கு கடமையாகும்.

பேண்ட் சர்ட், பஞ்சாபி ஆடை, சவுதிகள் அணியும் நீள அங்கி எல்லாம் மாறி பஸ் முழுக்க தூய வெள்ளைக்கு மாறியது.(ஒரு சில பெண்களைத் தவிர) பல மொழிகளைப் பேசிக் கொண்டிருந்த அனைவரும் 'லப்பைக் அல்லாஹூம்ம லப்பைக்' என்ற பிரார்த்தனையை மனதுக்குள் சொல்ல ஆரம்பித்தனர்.



'வந்து விட்டேன்! இறைவா! உன்னிடமே வந்து விட்டேன்! உனக்கு யாதொரு இணையுமில்லை. உன்னிடமே வந்து விட்டேன். நிச்சயமாக புகழும் அருட்பாக்கியங்களும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு யாதொரு இணையுமில்லை.'

என்ற பிரார்த்தனையை மனதுக்குள் சொல்லிக் கொண்டே வந்தோம். மெக்கா எல்லையை பஸ் அடைந்தவுடன் எங்களின் லாட்ஜூக்கு சென்று உடைமைகளை வைத்து விட்டு காஃபாவை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். பதினைந்து நிமிடத்தில் பள்ளியை அடைந்தோம். உலக மக்கள் அனைவரும் ஒரே உடை, ஒரே வாக்கியம், ஒரே மாதிரியான பிரார்த்தனைகளோடு பலரும் கஃபாவுக்குள் நுழைந்தனர். இப்படி ஒரு ஒற்றுமையை உலகில் வேறு எங்கும் நம்மால் பார்க்க முடியாது. உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமான ஒரு மார்க்கம் இது என்பதை இந்த நிகழ்வு நமக்கு தெரிவிக்கிறது.

நான் மெக்கா வருவதற்கு முன்பே எனது தாயார் முன்பே ஜெத்தாவிலிருந்து மெக்கா வந்து விட்டார். எனவே அந்த குரூப்போடு சேர்ந்து உம்ரா கடமையை நிறைவேற்றி விட்டார். நானும் எனது குரூப்பும் உம்ராவை முடித்து விட்டு ரூமுக்கு திரும்பி விட்டோம்.. அதன் பிறகு குளித்து விட்டு தாயாரின் ஹோட்டலை தேடினேன். ஆச்சரியமாக நாங்கள் தங்கியிருந்த பகுதியிலிருந்து 100 மீட்டர் வித்தியாசத்தில் எனது தாயாரின் ரூமும் இருந்தது. நெகிழ்ச்சியான சந்திப்பு. பிறகு தாயாரோடு மதிய உணவு அருந்தி விட்டு 4 மணி அளவில் கஃபாவுக்கு சென்றோம். தொழுதுவிட்டு சேர்ந்தே வலம் வந்தோம். பல பிரார்த்தனைகள். உலக அமைதிக்காகவும், எனது தாய் நாட்டின் அமைதிக்காகவும், உலக முஸ்லிம்களின் அமைதிக்காகவும், எனது குடும்பத்தின் அமைதிக்காகவும் எனது தாயாரோடு சேர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டேன்.

இங்கு புரோகிதர் யாரும் கிடையாது. அவரவர் தொழுது விட்டு தங்களது தாய் மொழியில் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான். இங்கு கேட்கப்படும் பிரார்த்தனைகள் இறைவனால் உடன் அங்கீகரிக்கப்படுவதால் பலரும் அழுது பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

“கூட்டம் குறைவாக இரவு இரண்டு மணிக்கு இருக்கும். அப்பொழுது வரலாம்” என்று எனது தாயார் சொல்லவே ரூமுக்கு திரும்பினோம். இரவு இரண்டு மணிக்கு திரும்ப வந்தால் அதே கூட்டம் தான் கொஞ்சம் கூட குறையவில்லை. ஹஜ் நேரம் இல்லையாதலால் கூட்டம் குறைவாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஹஜ்ஜைப் போலவே நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு தான் இருக்கிறது. உலக முஸ்லிம்களுக்கு இறை பக்தி அதிகமாகி விட்டதையே இது காட்டுகிறது. தமிழகத்தில் கூட நாகூர் தர்ஹாவுக்கு கூட்டம் வருவது இல்லை என்றும் இந்த வஹாபிகள் வந்து அனைவரையும் சந்தனக் கூடு வைபவத்திலிருந்து தூரமாக்குவதாகவும் ஒரு பதிவர் கூட வயிறெறிந்து பதிவிட்டிருக்கிறார். அந்த அளவு தூய்மையான இஸ்லாமிய ஆர்வம் சமீப காலங்களில் மக்களிடம் வந்துள்ளது. அந்த ஆர்வம் தமிழகத்தையும் விடவில்லை. தர்ஹா வணக்கம், சூஃபியிசம் எல்லாம் மறைந்து ஏகத்துவவாதிகளாக தமிழக முஸ்லிம்களும் மாறி வருகின்றனர். மகிழ்ச்சிக்குரிய விடயமல்லவா!

முஸ்லிம்களைத் தவிர்த்து மற்ற மார்க்கங்களில் நாத்திகம் அதிகரித்து வருவதை நாம் பார்க்கிறோம். இந்த நவீன உலகில் நாத்திகனாக இருப்பது அறிவு ஜீவிக்கு அடையாளமாக பொய்யான தோற்றத்தில் காட்டப்படுகிறது. ஆனால் முஸ்லிம்களைப் பொருத்த வரையில் படித்தவரிலிருந்து பாமரர் வரை இறை பக்தியில் திளைப்பதை பார்க்கிறோம். நாத்திகம் இங்கு மிகவும் குறைவு. அதற்கு காரணம் மனித கரம் புகாத இறை வேதமான குர்ஆன் என்றால் மிகையாகாது.



வரும் கூட்டத்தை சமாளிக்க கஃபாவை விஸ்தரிக்கும் பணியில் சவுதி அரசு ஈடுபட்டுள்ளது. அருகில் இருக்கும் பெரும் பெரும் கட்டிடங்கள் எல்லாம் இடிக்கப்படும் காட்சியை பார்த்துக் கொண்டே சென்றோம். 2020 வாக்கில் புதுப் பொலிவுடன் காஃபா மிளிரும் இன்ஷா அல்லாஹ்.
காஃபாவில் ஆப்ரஹாம் நபி நின்று பிரார்த்தனை செய்த இடத்தில் நாமும் நின்று பிரார்த்தித்தால் இறைவன் உடன் ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கை இருப்பதால் அங்கு எப்போதுமே கூட்டமாக இருக்கும். தொழுது துவா கேட்டனர் பலர் அந்த நெரிசலிலும். அங்கு நின்ற ஒரு பெண் போலீஸ் என் தாயார் அதிக நேரம் பிரார்த்தனை செய்வதைப் பார்த்து மற்றவர்களுக்கு வழி விடச் சொன்னார். ஆனால் என் தாயாரோ நகருவதாக இல்லை. தொழுது பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள். அந்த பெண் போலீஸோ என்னிடம் சொல்லி அழைத்து செல்லுமாறு சொன்னார். என தாயாரோ அந்த பெண் போலீஸிடம் 'இந்தியாவிலிருந்து வந்திருக்கிறோம். எங்களுக்கு கொஞ்சம் அதிக நேரம் கொடுத்தால் என்ன?' என்று தமிழிலேயே சற்று சூடாக அந்த பெண் பொலீஸிடம் பேச ஆரம்பித்தார். 'ஆஹா...நமக்குக் கூட இவ்வளவு தைரியமாக பேச வராதே!” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். அவர்கள் நாட்டில் வந்து: நேற்று வந்த எனது தாயாருக்கு: இந்த இடத்தின் மீது அவர்கள் எடுத்துக் கொண்ட உரிமையை நினைத்து ஆச்சரியப்பட்டுப் போனேன்.

அந்த பெண் போலீஸோ புன்முறுவலோடு அவர்கள் சொல்வதை கேட்டுக் கொண்டே மற்ற பக்கம் சென்று விட்டார். சில பெண்கள் அருகில் இருக்கும் கருப்புக் கல்லை தொட்டு விட வேண்டும் என்று ரொம்பவும் முயற்ச்சிக்கின்றனர். முடியாதவர்கள் தூரத்திலிருந்தே சைகையின் மூலமாக கைகளை உயர்த்தினாலே போதுமானது. அந்த நன்மை கிடைத்து விடும். இது பலருக்கு விளங்காதலால் அந்த இடத்தில் பெரும் தள்ளு முள்ளு. அங்கு ஒரு இரும்பு வேலி அமைத்து ஒவ்வொருவராக விட்டால் பல வயதானவர்கள் சிரமப்படுவது குறையும். இதை சவுதி அரசு ஆவண செய்ய வேண்டும். இங்குள்ள தாவா சென்டரிலும் இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன்..

அடுத்த நாள் கஃபாவில் வலம் வரும் போது நானும் தாயாரும் பிரிந்து விட்டோம். கூட்டத்தில் எங்கு தேடுவது? சுற்றை முடித்து விட்டு தாயாரை செல் போனில் தொடர்பு கொண்டேன். அவர்களோ மர்வா குன்றுக்கு பக்கத்தில் உள்ள வெளி வாயிலில் காத்திருக்கிறேன் என்று அழகான வழியை சொன்னார்கள். மற்றவர்களிடம் விசாரித்துக் கொண்டு அந்த இடத்தை சென்று அடைந்தேன். மெக்காவில் அவர்களுக்கு வழி காட்ட நான் ரியாத்திலிருந்து போக முடிவில் எனக்கு அவர்கள் வழி காட்டினார்கள். :-) எப்படியோ நல்லமுறையில் மூன்று நாட்கள் மெக்காவில் தாயாரோடு தங்கி விட்டு அலுவலகத்தில் ஆள் இல்லாததால் ரியாத் திரும்பினேன். எனது தாயாரோ இன்னும் நான்கு நாட்களில் மெதினா சென்று விட்டு அங்கிருந்து ஜெத்தா பின் மெட்ராஸ் செல்வார்கள் இறைவன் நாடினால்.

ஓர் உம்ராச் செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும்... (நூல்கள்: புகாரி 1773. முஸ்லிம் 2624. திர்மிதீ 855. நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா. முஅத்தா ஆகிய நூல்களிலும் இடம்பெற்றள்ளது)
''ரமளானில் செய்யப்படும் ஓர் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகரானதாகும், அல்லது என்னோடு ஹஜ் செய்வதற்கு நிகரானதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: புகாரி 1782, 1863. முஸ்லிம் 2408, 2409)


டிஸ்கி: உம்ரா முடிந்து விட்டது. திரும்பவும் ஊருக்கு சென்று சன் டிவி ராஜ் டிவி குடும்ப சீரியல்களை பார்த்துக் கொண்டு கண்ணைக் கசக்கிக் கொண்டு இருக்காமல் செய்திகள், உலக நடப்புகள், தவ்ஹீத் புரோக்ராமகள் அதிகம் பாருங்கள் என்று மறைமுகமாக சொன்னேன். ஒத்துக கொண்டார்கள். அப்பாடா....சீரியல்களுக்கு கொஞ்சம் விடுதலை. :-)

Thursday, March 01, 2012

சூரியன் தனக்குரிய பாதையில் நகர்கிறதா?

இரவும் பகலும் மாறி மாறிவருவதைக் கண்ட மனிதன், இதைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினான். அறிவியல் அறிஞர் அரிஸ்டாட்டில் பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 'புவி மையக் கோட்பாட்டை உருவாக்கினார். அதாவது பூமியைச் சுற்றியே சூரியன், சந்திரன் போன்ற மற்ற கோள்கள் சுற்றுவதாகவும் இதனாலேயே இரவு பகல் ஏற்படுவதாகவும் தனது ஆராய்ச்சி முடிவை வெளியிட்டார். அரிஸ்டாட்டில் சொன்னதால் உலகமும் ஒத்துக் கொண்டது.



ஆனால் இவரின் ஆராய்ச்சி தவறு என்றும் சூரியனைச் சுற்றியே மற்ற கோள்கள் இயங்குகின்றன என்ற உண்மையை குர்ஆன் வெளியிடுகிறது. ஆனால் அறிவியல் உலகம் குர்ஆன் இறங்கி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகே இந்த உண்மையை ஒத்துக் கொள்கிறது. அறிவியல் அறிஞர் கோபர் நிக்கஸ்(1473-1543), ஜோஹன்னஸ் கெப்ளர்(1571-1630) போன்றோர் குர்ஆன் இறங்கி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகே இந்த உண்மையை உணருகின்றனர்.



உலகம் கோள வடிவமானது என்ற உண்மையை நாம் கடலில் கப்பலின் வரவை வைத்தே எளிதாக கண்டு கொள்ளலாம். அந்த காலத்தில் பூமியின் வடிவத்தை காண இது ஒன்றுதான் வழியாக இருந்தது. அறிவியல் வளர்ந்த இந்த காலத்தில் வேண்டுமானால் கப்பலின் உதாரணம் தேவைப்படாமல் இருக்கலாம். அந்த காலத்திய மக்களுக்கு உண்மையை உணர்த்துவதற்க்கு குர்ஆன் கப்பலையே உதாரணமாக எடுத்துக் கொள்கிறது.

இனி குர்ஆன் வசனத்தைப் பார்ப்போம்.

'அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான வெளியில் நீந்துகின்றன.'
-குர்ஆன் (21:33)

'வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும் மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும் .......விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.'
-குர்ஆன் 2:164


மேற்கண்ட குர்ஆன் வசனம் வானில் எதுவும் ஓய்ந்திருக்கவில்லை என்றும் விண்ணகப் பொருட்கள் யாவும் விண்ணில் நீந்துகின்றன என்றும் பறை சாற்றுகிறது. இதன் மூலம் பூமி நிலைத்திருக்கவில்லை அதுவும் நீந்துகிறது என்ற உண்மையை கூறி புவி மையக் கோட்பாட்டை நிராகரிக்கிறது குர்ஆன்.



'அடுத்து சூரியன் ஒரு இடத்திலேயே நிலை பெற்றிருக்கிறது. அது நகரவில்லை என்றுதான் சமீபகாலம் வரை அறிவியல் அறிஞர்கள் நம்பி வந்தனர். கோபர் நிகஸ், கெப்ளர், கலிலியோ போன்ற தலை சிறந்த அறிவியல் அறிஞர்கள் கூட சூரியன் நகரவில்லை. அது ஒரே இடத்தில் நிற்கிறது என்றே கூறி வந்தனர். அரை நூற்றாண்டு காலம் தமது மொட்டை மாடியில் வானத்தை ஆராய்ந்து 1783 ஆம் அண்டு விஞ்ஞானி ஹெர்ஷல் சூரியனும் நகர்கிறது என்ற உண்மையை கண்டு பிடித்தார். இதே கருத்தை 'சூரியனும் நீந்துகிறது' என்று அழகான வார்த்தைகளைப் போட்டு கூறிய குர்ஆனை நினைத்து பிரமிக்கிறோம்.

அறிவியல் அறிஞர் பி.டூயிக் அவர்கள் நட்சத்திரங்களின் நகர்வை ஒரு உதாரணத்தோடு விளக்குகிறார். ஒரு நட்சத்திரம் நமது நிலவின் அகலம் எவ்வளவோ அவ்வளவு தூரம் நகர்ந்ததாக பூமியிலிருந்து பார்க்க வேண்டுமானால் அதற்காக 190 வருடங்கள் காத்திருக்க வெண்டும் எனக் கூறுகிறார். சுருங்கக் கூறின் பூமியிலிருந்து பார்க்கும் போது நட்சத்திரங்கள் யாவும் நகராமல் ஒரே இடத்திலேயே இருப்பதாகத் தோன்றும் என்பதே இதன் பொருளாகும். நமது கண்களுக்கு நட்சத்திரங்கள் எதுவும் நகருவதாக பார்க்க முடியவில்லை. அப்படி நகருவதாக ஒரவர் 1400 வருடங்களுக்கு முன்பு சொல்வதாக இருந்தால் அவர் வானியல் விஞ்ஞானியாக இருக்க வேண்டும். அல்லது இந்த செய்தி இறைவனிடமிருந்து வந்ததாக இருக்க வேண்டும்.

The Sun orbits the center of the Milky Way galaxy at a distance of approximately 26,000 light-years from the galactic center, completing one revolution in about 225–250 million years. It's approximate orbital speed is 220 kilometers per second, plus or minus 20 km/s. This is equivalent to about one light-year every 1,400 years, and about one AU every 8 days. These measurements of galactic distance and speed are as accurate as we can get given our current knowledge, but will change as we learn more.

# ^ Kerr, F. J.; Lynden-Bell D. (1986). "Review of galactic constants" (PDF). Monthly Notices of the Royal Astronomical Society 221: 1023–1038.

இது எவ்வாறு குர்ஆனால் சாத்தியப்பட்டது? முகமது நபி என்ற ஒரு தனி மனிதரால் இத்தகைய உண்மையை எவ்வாறு குர்ஆனில் சொல்ல முடிந்தது?

'பாதைகளையுடைய வானத்தின் மீது சத்தியமாக'
-குர்ஆன் 51;7




இங்கு குர்ஆன் வானத்தில் பாதைகள் இருக்கிறது என்று கூறுகிறது. அது என்ன வானத்தில் பாதைகள்? சூரியன், சந்திரன், பூமி போன்ற எண்ணற்ற கோள்களையும் நட்சத்திரங்களையும் கும்பலாக இழுத்துக் கொண்டு ஓடினால் அதற்குரிய பாதைகள் வகுக்கப்பட்டால்தான் சாத்தியமாகும். இல்லை என்றால் ஒன்றோடொன்று மோதி பெரும் அழிவு ஏற்படும். அடுத்து மனிதர்களும் வானத்தில் பயணிக்கலாம் என்ற செய்தியையும் குர்ஆன் கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த தலைப்பை யொட்டி சூரியன் சம்பந்தமாக குர்ஆனில் வரும் வரும் வேறு பல வசனங்கள்.

36:38. இன்னும் சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய இறைவன் விதித்ததாகும்.

36:40. சூரியன் சந்திரனை நெருங்கிப் பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் தம் வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.

6:78. பின் சூரியன் (மிக்க ஒளியுடன்) உதயமாவதைக் கண்டபோது : “இதுவே என் இறைவன்; இது எல்லாவற்றிலும் பெரியது” என்று அவர் கூறினார். அதுவும் அஸ்தமிக்கவே, அவர், “என் சமூகத்தாரே! நீங்கள் (ஆண்டவனுக்கு) இணைவைக்கும் (ஒவ்வொன்றையும்) விட்டு நிச்சயமாக நான் விலகி விட்டேன்” என்று கூறினார்.


----------------------------------------------

இனி அனானியின் கேள்விக்கு வருவோம்!

நாம் மேலே பார்த்த குர்ஆன் வசனங்கள் சூரியனைச் சுற்றி பூமியும் மற்ற கோள்களும் சுற்றி வருவதாகவும் சூரியன் இவை அனைத்தையும் கோர்த்துக் கொண்டு ஒரு இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருப்பதாகவும் பார்த்தோம். தற்கால அறிவியல் அறிஞர்களும் இதை மெய்ப்பிப்பதாகவும் கண்டோம்.



ஆனால் இதற்கு மாற்றமாக முகமது நபி சொன்னதாக அனானி சொல்லும் ஒரு ஹதீதை பார்ப்போம்.

//அந்த பதிவில் எப்படி சூரியன் மறைந்ததும் அல்லாவின் காலடியில் சென்று அமர்ந்துகொள்கிறது. எப்படி அடுத்த நாள் காலை வரைக்கும் அல்லாஹ்வின் காலடியில் அமர்ந்து “அல்லாஹ் அல்லாஹ் நான் அடுத்த நாள் காலையில் கிழக்கில் உதிக்கலாமா அல்லாஹ்” என்று கேட்டுகொண்டிருக்கிறது என்பதையும், அடுத்த் நாள் காலையில், சரி போய் கிழக்கில் உதிச்சிக்க்கோ என்று அல்லாஹ் சொல்வதையும் அடுத்த நாள் காலையில் சூரியன் கிழக்கில் உதிப்பதையும் அறிவியல் பூர்வமாக நிரூபித்து இந்த நஜஸ் காபிர்களின் வாயை மூட வைக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.//

குர்ஆனானது முகமது நபி காலத்திலேயே பாதுகாக்கப்பட்டு விட்டது. ஆனால் அதற்கு விளக்க உரையாக அமைந்த முகமது நபியின் ஹதீதுகள் சிலவற்றில் யூதர்களின் கைவரிசை புக ஆரம்பித்தது. இஸ்லாத்தின் வெற்றியை பொறுக்காத ஒரு சில யூதர்களும் கிறித்தவர்களும் சிலை வணங்கிகளும் முஸ்லிம்களாக மாறுவதாக நடித்தனர். பாதினியாக்கள் என்ற இவர்கள் முதன்முதலில் தற்போதய ஈரானில் உருவானார்கள். இவர்களில் பலரை முகமது நபி காலத்திலேயே முஸ்லிம்கள் அடையாளம் கண்டு கொண்டனர். நபியவர்களின் மரணத்திற்கு பிறகு 'நபி என்னிடம் இப்படி சொன்னார்' 'நான் நபியிடம் இப்படி ஒரு சட்டத்தைக் கேள்வியுற்றேன்.' என்று பலரும் மக்கள் மத்தியில் குழப்பத்தை உண்டு பண்ணினர். இதன் பிறகு சுதாரித்துக் கொண்ட நபித் தோழர்கள் அதற்கு பின் வந்த மேதைகள் ஹதீதுகளை தரம் பிரிக்கின்றனர். அறிவிப்பவர் உண்மையாளரா, முகமது நபியை பார்த்தவரா?, பொய் சொல்லாதவரா? மனநலம் பாதிக்கப்படாதவரா? என்றெல்லாம் ஆராய்ந்து 'நம்பத் தகந்தவை' 'நம்பத் தகாதவை' என்ற இரு வேறு பிரிவாக நபிமொழிகள் பிரிக்கப்பட்டன.

எனவே நபி மொழிகளை தெரிந்து கொள்ள அதில் நல்ல பாண்டித்தியம் வேண்டும். இப்படி ஹதீது கலையில் தேர்ச்சி பெறாதவர் ஹதீதை அணுகுவதற்கு ஒரு இலகுவான வழி உண்டு. ஒரு ஹதீஸ் குர்ஆனை ஒத்திருந்தால் அது நம்பகமான ஹதீஸ். ஒரு நபிமொழி குர்ஆனின் கருத்துக்கு மாறுபட்டால் அது நம்பத்தக்க ஹதீது இல்லை என்று புறம் தள்ள வேண்டும்.

ஒருமுறை அன்னை ஆயிஷாவிடம் முகமது நபி அவர்களின் வாழ்வு எவ்வாறு இருந்தது என்று ஒரு நபித் தோழர் கேட்டார். அதற்கு அன்னை அவர்கள் 'அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது' என்று பதிலளித்தார்கள். எனவே குர்ஆனுக்கு மாற்றமாக ஒரு கருத்தை முகமது நபி சொல்லியிருக்க மாட்டார் என்ற முடிவுக்கு வருகிறோம்.

குர்ஆனை மக்களுக்கு இறைவனிடம் இருந்து வாங்கித் தந்தது யார்? முகமது நபி. வாங்கிக் கொடுத்த ஒரு நபர் அதற்கு விளக்க உரையாக அதற்கு நேர்மாறான விளக்கத்தை கொடுக்க முடியுமா? முடியாது. எனவே இங்கு குர்ஆன் சொல்லும் சூரியனின் ஓட்டத்தை எடுத்துக் கொள்கிறோம்.

மேலும் உலகில் அணுவும் அவனன்றி அசையாது. எனவே இறைவன் நினைத்தால் சூரியன் என்ன அனைத்து கோள்களையுமே தினமும் வந்து அனுமதி வாங்கி செல்லும்படி சொல்லலாம். அவை அனைத்தும் கீழ்படியும். இந்த நபி மொழி உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஒருக்கால் இந்த அர்த்தத்திலும் அந்த நபி மொழி வந்திருக்கலாம்.

'அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுமதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன அவற்றை மக்களில் பெரும்பாலலோர் அறிய மாட்டார்கள். எனவே, சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறவர் தம் மார்க்கத்திற்கும் தம் மானம் மரியாதைகளுக்கும் களங்கம் ஏற்படுத்துவதிலிருந்து விலகி விடுகிறார். சந்தேகத்திற்கிடமானவைகளில் விழுகிறவர் வேலியோரங்களில் (கால் நடைகளை) மேய்ப்பவரைப் போன்றவராவார். அவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கிறது. எச்சரிக்கை! நிச்சயம் அல்லாஹ்வின் பூமியில் அவனுடைய எல்லைகள் அவனால் தடை செய்யப்படடவையாகும். எச்சரிக்கை! உடலில் ஒருசதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும். அது சீர் குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். புரிந்து கொள்ளுங்கள். அதுதான் இதயம்!' என்று இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்: என நுஃமான் இப்னு பஷீர் அறிவித்தார்.

புஹாரி:52

Volume :1 Book :2



இறைவனே அறிந்தவன்.