Followers

Monday, October 31, 2011

தமிழகத்தின் தவ்ஹீத் கிராமம் - ஓர் ஆய்வு

ஒரு இசமாகட்டும்: அல்லது ஒரு இயக்கமாகட்டும்: எதுவாக இருந்தாலும் நமது நாட்டில் அதிகமாக உலக ஆதாயங்களை வைத்தே நடத்தப்படுகின்றன. நம் தமிழ்நாட்டில் இஸ்லாமிய கிராமங்களில் மூடப்பழக்க வழக்கங்களுக்கு குறைவே இல்லை எனலாம். தர்ஹா வணக்கம்: முல்லாக்களை வீட்டுக்கு அழைத்து வந்து பிறந்ததிலிருந்து இறப்பு வரை அவரை வைத்து பாத்திஹா ஓதுவதாகட்டும்: திருமணத்தில் வரதட்சணை என்ற பெயரில் பெண் வீட்டாரிடம் லட்ச லட்சமாக கொள்ளையடிப்பதாகட்டும்: இவை எதிலுமே இந்து கிறித்தவ மதத்துக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று போட்டி போடுபவர்களாக முஸ்லிம்கள் இருந்தனர்.

ஆனால் கடந்த இருபது இருபத்தைந்து வருடங்களாக மேற்கொண்ட அயராத பிரசாரத்தின் பலனாக இன்று பட்டி தொட்டிகளெல்லாம் குர்ஆன் ஹதீஸின்படி தங்களின் வாழ்க்கையை மாற்றிக் கொண்ட பல கிராமங்களை நம்மால் பார்க்க முடிகிறது. பல இளைஞர்கள் 'வரதட்சணை பெண்ணிடம வாங்கினால் நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்' என்று பெற்றோர்களிடம் வம்பு பண்ணிக் கொண்டிருப்பதை நாம காண்கிறோம். முன்பு அறியாத நாட்களில் வாங்கிய வரதட்சணையை பெண்ணின் தகப்பனிடம் திரும்ப கொடுத்த பல நிகழ்வுகளை நாம் பல ஊர்களில் பார்க்கிறோம். தர்ஹா கொடியேற்றத்தில் கூட்டங்களை காணவில்லை. பள்ளிப் படிப்புகளை பாதியிலேயே விட்ட பல மாணவர்கள் இன்று படிப்பின் அருமை உணர்ந்து மற்ற இன மாணவர்களோடு போட்டி போடும் நிகழ்வுகளை ஆங்காங்கே பார்க்கிறோம். எங்கள் ஊரில் இன்று வீட்டுக்கு ஒரு பட்டதாரி உருவானதை ஆச்சரியத்தோடு பார்க்கிறேன். இருந்த சினிமா ரசிகர் மன்றங்களெல்லாம் நற்பணி மன்றங்களாக மாற்றப்பட்டு உள்ளது. ஆறாவது ஏழாவதோடு பள்ளிப் படிப்பை முடித்த பெண்மணிகள் இன்று காலேஜ் செல்ல பஸ்ஸீக்காக காலையிலேயே வீட்டு வாசலில் காத்திருக்கும் அழகை இன்று எங்கும் பார்க்கலாம்.

இதனை பிடிக்காத சிலர் இவற்றுக்கெல்லாம் முட்டுக்கட்டை போட ஆரம்பித்தனர். இது போன்ற சீர்திருத்தங்களை எல்லாம் செய்தால் பள்ளியில் அனுமதிக்க மாட்டோம் என்று ஒரு சில செல்வந்தர்கள் மிரட்ட ஆரம்பித்தனர். உடனே ஒரு இளைஞன் தனது பெயரில் உள்ள பல லட்சம் பெறுமானமுள்ள ஒரு மனையை பொதுவாக்கி 'அங்கு புதிதாக பள்ளி கட்டி கொள்ளுங்கள்' என்று கொடுத்த அழகை என்னவென்பது. சிங்கப்பூரில் பைலட்டாக வேலை செய்யும் ஒரு இளைஞர் சில கோடிகள் பெறுமானமுள்ள தனது பூர்வீக வீட்டை முதியோர் இல்லமாக மாற்றி ஊருக்கு பொதுவாக்கி தவ்ஹீத் ஜமாத்துக்கு அளித்த ஈகை குணத்தை என்னவென்பது. இவை எல்லாம் சமீப காலங்களில் நடந்த ஒன்றிரண்டு நிகழ்ச்சிகள். இத்தகைய பரந்த மனப்பான்மையை உண்டாக்கியது எது?

'இறைவனின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு பின்னர் செலவிட்டதை சொல்லிக் காட்டாமலும் தொல்லைத் தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.

-குர்ஆன் 2:262

'தமது செல்வங்களை இறைவனின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு இறைவன் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். இறைவன் தாராளமானவன்: அறிந்தவன்:'

-குர்ஆன் 2:261

மேற்கண்ட இது போன்ற இறைவனின் வசனங்கள் அந்த இளைஞர்களின் மனதில் ஆழமாக வேரூன்றியதாலேயே இவை எல்லாம் சாத்தியப்படுகிறது. இந்த மாற்றங்கள் எங்கள் ஊரில் மட்டும் அல்ல: தமிழகம் முழுவதும் ஏறத்தாழ இந்த நிலைதான்.

திருத்துறைப் பூண்டியை ஒட்டிய ஒரு குக்கிராமத்தில் சமீப காலங்களில் ஏற்பட்ட மாற்றங்களை இனி இந்த காணொளியில் காண்போம்.




--------------------------------------------------------------



பரங்கிப்பேட்டையில் கொடிகட்டி பறந்த “கண்டெடுத்த தர்கா கொடியேற்றம் ஊர்வலம்” இந்த வருடம் 28.10.2011 அன்று நடைப்பெற்றது. மக்களின் எந்தவித ஆதரவின்றியும், ஆராவரம்யின்றியும் குதிரை மேல் கொடி வைத்து செல்லும் தர்காவை சேர்ந்த ஒரு நபரும், குதிரை ஒட்டுபவர் ஆகிய இருவரும் மற்றும் ஆட்டோவில் ஒரு சிறுவன் மட்டும் என்று ஊர்வலம் போனதை காண முடிந்தது.

முன்பு எல்லாம் குதிரை மேல் கொடியை வைத்து பிடிக்க பலர், மிகப்பெரிய கூட்டம், ஊர்வலம் முன்பு கையில் கொடியேந்தி சிறுவர் பட்டாளம் செல்ல அதனை தொடர்ந்து தப்ஸ் குழு (பேண்டு வாத்தியம்) முழங்க சினிமா பாடலின் மெட்டுகளில் இஸ்லாமிய(?) பாடல்கள் என்று வெகு விமர்சையாக நடைப்பெற்ற இந்த கொடி ஊர்வலம்…!

இன்று மக்களின் ஆதரவின்றி பார்க்கும் போதும், ஒரு காலத்தில் 365 வலிமார்கள் அடங்கிய தர்கா உள்ள ஊர் என்றும் கூறுவார்கள். ஆனால் இன்று ஒரு சில தர்காக்களை தவிர மற்றவை எங்குயுள்ளது என்று தெரியாத நிலை. இவைகளின் மூலம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் பரங்கிப்பேட்டையில் தவ்ஹீத்தின் (ஏகத்துவ) எழுச்சியும், வளர்ச்சியும் காணமுடிகிறது. அல்ஹம்துலில்லாஹ்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இது போன்ற இஸ்லாமிய அடிப்படை கோட்பாட்டை தகர்க்கும் அல்லாஹ்விற்கு இனை வைக்கும் ஷிர்க் என்னும் பெரும் பாவத்திற்கு எதிரான கடுமையான பிரச்சாரத்தின் விளைவு இன்று பெரும்பலான மக்களை தர்கா என்னும் அல்லாஹ்விற்கு இனை வைக்கும் வழிகேட்டிலிருந்து மக்களை மீள வைத்திருக்கு என்றால் அது மிகையாகது.

எல்லாம் புகழும் அகிலத்தை படைத்த அல்லாஹ் ஒருவனுக்கே!

செய்தி: முஹம்மது இஸ்மாயில்
www.tntj.net

டிஸ்கி: துல்ஹஜ் ஒன்பதாம் நாள் ஹஜ்ஜூக்கு வராத முஸ்லிம்களை நோன்பு வைக்க சொல்லி நபிகள் நாயகம் அறிவுறுத்தியிருக்கிறார்கள். எனவே சகோதரர்கள் மறக்காமல் நோன்பு வைக்க இப்பதிவின் மூலம் நினைவுபடுத்துகிறேன்.

டெல்லியில் உள்ள ஏஜண்டுகள் கடைசி நேரத்தில் செய்த குளறுபடியால் எனது தாயார் இந்த வருடம் ஹஜ் பயணம் செய்யமுடியாது போய்விட்டது. இறைவன் நாடினால் அடுத்த வருடம் இனிதே முடிப்பார்கள். இதனால் நான் மெக்கா செல்லவில்லை. மெக்காவில் உள்ள நண்பர்களுக்கு இதன் மூலம் அறியத் தருகிறேன். இறைவன் நாடினால் அடுத்த வருடம் சந்திப்போம்.

பாகிஸ்தானில் புராதன இந்து கோயில் திறப்பு!




இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியிலுள்ள பெஷாவர் நகரில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க மற்றும் 160 ஆண்டுகள் பழமையான கோரக்நாத் கோவில், பெஷாவர் கோர்ட்டின் உத்தரவின் படி திறக்கப்பட்டது. இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில், அங்குள்ள இந்துக்கள் புத்தாடைகளை அணிந்து கோலாகலமாக கொண்டாடினர். சிறுவர்கள் வெடிகளை வெடித்து மகிழ்ந்தனர். இளைய தலைமுறையினர் பஜனை பாடல்களை பாடியதோடு மட்டுமல்லாமல், அவற்றிற்கேற்ப நடனமாடினர். இந்த கோவிலுக்கு 2 தரப்பினர் உரிமை கொண்டாடியதன் அடிப்படையில் தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாக, இந்த கோவில் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-தின மலர்
31-10-2011
---------------------------------------------------------------------------------
10/31/2011 17:22:5
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து கோயில் ஒன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கோர் கூத்ரி பகுதியில் உள்ள இந்த கோயிலில் இந்து சமூகத்தினர் தீபாவளி கொண்டாடியதாகவும் அந்த பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது. வழிபாட்டுக்காக கோயில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதில் அந்த கோயில் அர்ச்சகர் ஒருவரின் பேத்தியான காம்லா ராணி மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவர் கூறுகையில், எனது தாய் வயதாகிவிட்டாலும் கோயிலை மீண்டும் திறக்க வேண்டும் என்று நீண்டகாலமாக சட்டப் போராட்டம் நடத்தி வந்தார். தற்போது கோயில் திறக்கப்பட்டதில் மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.
--தினகரன்
----------------------------------------------------------------------------


PESHAWAR:
Despite the fact that they probably will not be given control of the property, the Hindu community in Peshawar rejoiced at the Peshawar High Court’s (PHC) orders to reopen a 160-year-old Hindu temple.
On September 15, after hearing a Hindu woman Phool Vatte’s plea, a two-member bench of the PHC directed the authorities to open up the historic Goraknath Temple, situated in the centre of the city’s archeological complex of Gor Kattri, for worship. The court also directed authorities to ensure security arrangements at the place of worship, adding that the control of the property would remain with the government.
However, nearly a week after the PHC’s orders, the shrine which has remained closed since partition is yet to be opened.
The temple belonged to Vatte’s husband Pandit Kambhu Ram, who at the time of partition sent an application to the settlement commissioner saying he would not shift to India and would stay in Pakistan and that his land should not be made waqf property, following which an order was issued by the settlement department, Vatte’s attorney Pervez Iqbal told The Express Tribune.
However, he said that the police later asked Vatte for permission to use the temple and its adjacent building for storing explosives, which she granted but had to struggle to regain its possession in 2002. Soon after, the police detained her son Kaka Ram and the Peshawar Development Authority (PDA) locked up the premises.
Pervez alleged that the police took away statues worth millions of rupees, a table estimated to be around Rs10.5 million and gold embellishments from the dome. He said that in 2003 they moved the Peshawar High Court with a petition which was rejected, after which they turned to civil court, where their case was rejected once again and they were told to approach the Evacuee Property Board (EVP). They were unable to go to the EVP due to financial constraints.
“Instead, what we did was, we wrote an application to the Supreme Court chief justice, the PHC chief justice and other functionaries which was when the PHC chief justice turned the application into a petition on a suo motu and allowed for worship to be carried out at the temple,” Pervez said.
The temple is an archeological site and hence, its control cannot be handed over to a private party, Dr Abdul Samad, consultant to the K-P Department of Archeology told The Express Tribune. The Hindu community can perform their worship anytime. However, the keys will not be handed over to them, he added.

Published in The Express Tribune, September 22nd, 2011.

---------------------------------------------------------------

Pakistan to re-open 160-year-old Hindu temple
September 23, 2011 9:01 pm
Peshawar: The Peshawar High Court’s has ordered the reopening of the 160-year-old Goraknath Temple to allow devotees to worship. The court also directed the Pakistan Government to take control of the temple that is situated in the centre of the Gor Kattri Archaeological Complex in Peshwar.
It also directed the authorities to ensure adequate security at the temple, the Express Tribune reports.
The court gave the order after hearing a Hindu woman Phool Vatte’s plea, whose husband Pandit Kambhu Ram owned the temple and had pleaded that his land should not be made Waqf property during the partition of the Indian sub-continent.
Vatte’s attorney, Pervez Iqbal, said the owner allowed the police to use the temple and its adjacent building for storing explosives, but had to struggle to regain its possession in 2002.
He said the earlier petitions seeking worship at the temple were rejected by the Peshawar High Court and a civil court.
“Instead, what we did was, we wrote an application to the Supreme Court chief justice, the PHC chief justice and other functionaries which was when the PHC chief justice turned the application into a petition on a suo motu and allowed for worship to be carried out at the temple,” Iqbal said.
A consultant to the Kyber Pakhtunkhwa Archaeological Department, Dr Abdul Samad, said the temple ownership cannot handed over to a private party as it is an archaeological site.

---------------------------------------------------------

இஸ்லாமிய நாடாகப் பார்க்கப்படும் பாகிஸ்தானில் மூடப்பட்ட இந்து புராதன கோவில் வழிபாட்டுக்காக திறந்து விடச் சொல்லி கோர்ட் உத்தரவிட்டு அங்கு வழிபாடும் நடக்கிறது. அதே சமயம் 800 ஆண்டுகளுக்கும் முன்பாக அயோத்தியில் தொழுகை நடத்தப்பட்ட பாபர் மசூதியை நேரம் குறித்து இடிக்கின்றனர். அதை அரசும் ராணுவமும் வேடிக்கை பார்த்து விட்டு இன்று வரை அதை முஸ்லிம்களிடம் ஒப்படைக்காமல் இருக்கிறது. ராமன் என்ற கற்பனை பாத்திரத்துக்கு கடவுள் அந்தஸ்தை கொடுத்து பாபர் மசூதி இருந்த இடத்தில் தான் எங்கள் ராமர் பிறந்தார் என்று அடம் பிடிக்கிறது ஒரு கூட்டம். இதற்கு ஆதாரம் என்ன? என்று கேட்டால் எங்களின் நம்பிக்கைதான் ஆதாரம் என்று பதில் வருகிறது. இதில் நமது நாடு மதசார்பற்ற நாடாம்! மசூதியை இடித்த அத்வானிதான் அடுத்த பிரதமருக்கான வேட்பாளராம்.

வாழ்க ஜனநாயகம்.

அதே போல் இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டால் இந்துக்கள் தங்களின் தெய்வங்களை வணங்குவதற்கு முஸ்லிம்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்ற ரீதியிலும் அப்பாவி இந்துக்கள் மனதில் விஷத்தை விதைக்கப்படுகிறது. இவர்கள் கூறும் இந்த கூற்றிலும் உண்மையில்லை என்பதையே இஸ்லாமிய நாடான பாகிஸதானில் அண்மையில் நடந்த கோவில் கும்பாபிசேகம் நமக்கு தெளிவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

Thursday, October 27, 2011

சவூதி இளவரசர் சுல்தான் அப்துல் அஜீஸ் அவர்களின் சில நினைவுகள்:

இளவரசர் குழந்தைகளிடமும் நாட்டு மக்களிடமும் அன்போடு நடந்து கொண்ட விதம்.



அமெரிக்க மருத்துவமனையிலிருந்து இளவரசரின் உடல் கொண்டு வரப்படுகிறது.



இளவரசருக்கு மறுமையில் கிடைக்கக் கூடிய நன்மைகளுக்காக பரிந்துரைத்து மற்றவர்களால் நடத்தப்படும் ஜனாஜா(இறப்புத்) தொழுகை:. ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இத்தொழுகை நடத்தப்பட வேண்டும்.



ஒரு நாட்டின் இளவரசர்: பல கோடிகளுக்கு அதிபதியானவர்: இவரின் இறுதிச் சடங்கு எந்த ஆடம்பரமும் இல்லாமல் மிக எளிமையாக நடத்தி முடிக்கப்படுகிறது.

சிமெண்ட் கட்டிடம் கூட இல்லாமல் மண்ணாலும் கூழாங்கற்களாலும் இவரது மண்ணறை கட்டப்படுகிறது.



அதே சமயம் நமது சிங்கார சென்னையில் ஒரு சாமான்யனின் இறப்புக்காக தண்ணி அடித்து விட்டு தப்பாட்டமும் ஆடிக் கொண்டு போக்குவரத்துக்கு எந்த அளவு இடைஞ்சல் தருகிறார்கள் என்பதைத்தான் இங்கு நாம் பார்க்கிறோம்.

ஆயுள் கூடுவது இறை மறுப்புக்கு ஆதாரமாகுமா? கி. வீரமணிக்கு!



மெல்பர்ன், அக்.26: ஆயுளை நிர்ண யிப்பவன் ஆண்டவன்; பிண்டம் பிடிக்கும் போதே இத்தனை ஆண்டுகள் ஆயுள் என்று ஆண்டவன் தலையில் எழுதி விடு கிறான். அதை யாரே மாற்ற முடியும்! என்று உளறிக் கொண்டிருந்த நம்பிக் கைக்கு மரண அடி கொடுப்பதுபோல ஆஸ்திரேயா வில் மாத்திரை ஒன்றின் மூலம் 150 ஆண்டு கள் மனிதன் வாழலாம் என்பதைக் கண்டுபிடித்து நிரூபித்தும் உள்ளனர்.

மருத்துவ துறை வளர்ச்சியின் காரண மாக, மனிதனின் சராசரி வயது ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 2009ம் ஆண்டின் மதிப்பீட்டின்படி இந்தி யர்களின் சராசரி வயது 69 ஆக உள்ளது. இந்நிலையில், ஆரோக்கியமான உடல்நலத் துடன் 150 ஆண்டுகளைக் கடந்து வாழ் வதற்கான மாத்திரையை கண்டுபிடிப்பதற் கான ஆராய்ச்சியில் மருத்துவர்கள் ஈடு பட்டுள்ளனர். இது அடுத்த 5 ஆண்டுகளில் விற்பனைக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் யுனிவர்சிட்டி பேராசிரியர் பீட்டர் ஸ்மித் கூறுகையில், மனிதனுக்கு வயதாவதை ஒத்திப்போடும் மாத்திரையை கண்டுபிடிப்பது குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 150 ஆண்டுகளைத் தாண்டி வாழ முடியும். அதாவது வயதாவதைத் தடுக்கும். இது மட்டுமல்லாமல் நோய்நொடியின்றி ஆரோக்கியமாக வாழவும் இந்த மாத்திரை உதவும். இந்த மாத்திரை உடலில் உள்ள செல்களை புதுப்பித்து உற்சாகமுடன் இருக்க வகை செய்யும் என்றார்.

ஜீன்களே காரணம்!

ஹார்வர்டு யுனிவர்சிட்டி பேராசிரியரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவருமான டேவிட் சின்க்ளெய்ர் கூறுகையில், மனிதன் வயதாவதற்கு உடலில் உள்ள ஜீன்கள் குழுவே முக்கிய காரணமாக உள்ளது. அவற்றை புதுப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்பை நமது உடல் பெற்றிருக்கிறது. ரெட் ஒயினில் உள்ள ஒரு பொருள் ரெஸ்வரேட்டல் என்ற தாவரத்திலும் உள்ளது. இதை ஈஸ்ட், புழு, ஈ மற்றும் எலி ஆகியவற்றில் செலுத்தியபோது அதன் வாழ்நாள் அதிகரித்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதை அடிப்படையாகக் கொண்டு மனிதனின் வாழ்நாளை அதிக ரிப்பதற்கான மாத்திரையை தயாரிக்க முயற்சி நடைபெற்று வருகிறது என்றார்.

-விடுதலை 27-10-2011


அறிவியல் ஆராய்ச்சியின் மூலம் மனிதனை நோய் வாய்படுத்தக் கூடிய செல்களை ஆராய்ந்து அதனை சில மருந்துகளை மனிதனின் உடலுக்குள் செலுத்துவதன் மூலம் மனிதனின் ஆயுளை அதிகரிக்கலாம் என்று மருத்துவர்கள் கண்டபிடித்திருக்கிறார்கள். இது புதிய கண்டு பிடிப்பும் அல்ல. பல ஆண்டுகளாக மனிதன் ஆயுளை நீட்டிக்க முயற்ச்சித்தவண்ணமே உள்ளான். யாருக்குத்தான் நீண்ட நாள் உயிர் வாழ ஆசையில்லை?

திரு வீரமணிக்கு உடல்நலக் குறைவால் மருத்துவரை அணுகுகிறார். 'தற்போது வந்திருக்கா விட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்து வந்திருக்கும்' என்று கூறி மருத்துவர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து பிழைக்க வைக்கிறார். உடன் வீரமணி அவர்கள் மருத்துவரை கடவுள் என்று கூறுவாரா? அந்த மருத்துவரை பாராட்டவே செய்வார். அதுபோல் மனிதர்கள் 150 வருடம் வாழும் வகையில் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டால் அது மருத்துவர்களின் ஆராய்ச்சியின் பலனை நாம் அனுபவிக்கிறோம் என்று பெருமைபட்டுக் கொள்ளலாம். இத்தகைய திறமையை அந்த மருத்துவர்களுக்கு கொடுத்தது அந்த இறைவன் அல்லவா? இனி வரும் காலங்களில் மனிதனின் ஆயுளை 150 வருடம் என்று நீட்டிக்க இறைவன் முடிவெடுத்து விட்டால் அதை தடுக்கும் சக்தி உலகில் வேறு ஏது?

'இறைவன் நாடியதை அழிப்பான்: நாடியதை அழிக்காது விட்டு வைப்பான். அவனிடமே தாய் ஏடு உள்ளது'
-குர்ஆன் 13:39

இந்த வசனத்தின் மூலம் விதியை எழுதிய இறைவன் சில நேரங்களின் மனிதர்களின் பிரார்த்தனையை ஏற்று மாற்றவும் செய்வதாக கூறுகிறான்.

அடுத்து வீரமணி அவர்கள் மனிதனின் உயிர் எங்கிருந்து வருகிறது? உயிர் உடலை விட்டு பிரிந்தவுடன் அது எங்கு செல்கிறது? போன்ற கேள்விகளுக்கு அதே மருத்துவர்களின் துணையோடு பதிலளிப்பாரா?

Monday, October 24, 2011

நரேந்திர மோடிக்கு பிடி இறுகுகிறது!




அகமதாபாத், அக்.23- 2002 இல் குஜராத்தில் நடைபெற்ற முஸ்லிம் கள் படுகொலைத் தாக் குதல்களில் முதல்வர் நரேந்திர மோடிக்கும் பங்கு இருக்கிறது என்ற குற்றச்சாற்று பதிவு செய்ய போதுமான ஆதாரங்களை, ஜகியா ஜஃப்ரி வழக்கில் உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் (அமிகஸ் குரியா) ராஜு ராமச்சந்திரனின் அறிக்கை தந்திருக்கிறது.

ரகசிய ஆவணம்
அந்த அறிக்கை இன் னமும் ரகசிய ஆவண மாகத்தான் பாதுகாக் கப்பட்டு வருகிறது. என் றாலும், 1200 பேருக்கும் மேலானவர்கள் கொல் லப்பட்ட 2002 ஆம் ஆண்டு வன்முறைத் தாக்குதல்களைப் பற்றி விசாரணை செய்து தகுந்த குற்றவியல் நட வடிக்கைகளை மேற்கொள்ள உச்ச நீதி மன்றத்தால் நியமிக்கப் பட்ட சிறப்பு விசா ரணைக் குழுவுடன் அமி கஸ் குரியா வழக்கறி ஞரின் அறிக்கையின் தகவல்கள் இப்போது பகிர்ந்து கொள்ளப் பட்டுள்ளன.

நரேந்திர மோடி மீது எந்த வழக்கும் தொடர முடியாது என்று சிறப்பு விசாரணைக் குழு தெரி வித்து இருந்த கருத்தை வழக்குரைஞரின் அறிக்கை ஏற்றுக் கொள்ள பலமாக மறுக் கிறது என்று அகமதா பாத்தில் உள்ள தகவல் அறிந்த வட்டாரங்கள் பிரபல ஓர் ஆங்கில நாளிதழுக்கு தெரிவிக் கின்றன. இந்துக்கள் தங்களின் கோபத்தை தீர்த்துக் கொள்ள அனு மதிக்க வேண்டும் என்று காவல் துறை அதி காரிகளுக்கு நரேந்திர மோடி அறிவுரைகள் அளித்த கூட்டத்தில் கலந்து கொண்ட சஞ் சீவ் பட் உள்ளிட்ட மூத்த காவல்துறை அதி காரிகளிடம் குறுக்கு விசாரணை செய்யப் பட்டால்தான், முதல்வர் குற்றவாளியா அல்லது குற்றமற்றவரா என்று தீர்மானிக்க முடியும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
முஸ்லிம்கள் தாக்கப் பட்ட நேரத்தில் அகம தாபாத் காவல்துறை கட்டுப்பாட்டு அறை களில் இரண்டு அமைச் சர்கள் இருந்தனர் என்ற உண்மையே சஞ்ஜிவ் பட்டின் கூற்று உண்மை யாக இருக்கலாம் என்று கருதச் செய்கிறது என்று அறிக்கை தெரிவித் திருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.

முதலமைச்சர்மீது குற்றச் சாற்று

விசாரணை நீதி மன்றம் ராமச்சந்திரனின் கருத்தினை ஏற்றுக் கொண்டால், இந்திய குற்றவியல் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் முதல் அமைச்சர் மீது குற்றச் சாற்று பதிவு செய்யும் நிலை ஏற் பட்டுவிடும். அவற்றில் 153-ஏ (சமூகங்களி டையே விரோதத்தை வளர்க்கும் அறிக்கை களை வெளியிடுதல்), 153-பி (தேசிய ஒருமைப் பாட்டுக்குக் எதிரான கருத்துகள் தெரிவித்தல்), 505 (பொதுமக்களி டையே கலவரம் விளை விக்கும் அறிக்கைகளை வெளியிடுதல்) 166 (தீங்கு விளைவிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு பொது ஊழியர் சட்டத்திற்குக் கீழ்படி யாமல் செயல்படுவது) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாற்றுகள் பதிவு செய்யப் படலாம்.

ஒரு பொது ஊழியர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று சட்டம் தெரி விப்பதையும், அதனை ஏற்றுக் கொள்ளாமல் கீழ்ப்படிய மறுத்து செயல்படுவதன் மூலம் தீங்கு விளையும் என் பதையும் நன்கு அறிந் திருக்கும் ஒரு பொது ஊழியர் செய்தால், ஓராண்டு வரை அவ ருக்கு சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று பிரிவு 166 தெரிவிக்கிறது. தலைமை நிருவாக அதிகாரியாக இருந்த நரேந்திர மோடிக்கு மாநிலத்தில் ஏற்பட்ட கலவரங்களை அடக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இருந்தன.

உச்சநீதிமன்றம் நியமித்தக் குழு

மோடியின் மீதும் மற்றும் 61 பேர் மீதும் திருமதி ஜாஃப்ரி அளித்த புகாரின் மீது விசாரணை நடத்துவ தற்கு உச்சநீதிமன்றம் இந்த சிறப்பு விசா ரணைக் குழுவை நிய மித்தது. அந்த குழு சாட்சிகளிடம் விசா ரணை செய்து அளித்த அறிக்கையை தனிப் பட்ட முறையில் பரி சீலனை செய்து மதிப் பீடு செய்யும்படி உச்ச நீதிமன்றம் அமிகஸ் குரியா வழக்கறிஞரை கேட்டுக் கொண்டது.

முதல்வர் மீதான குற்றச்சாற்றுக்கு முக்கிய மான ஆதாரமாக இருக் கும் காவல்துறை அதி காரி சஞ்ஜிப் பட் முரண் பாடு கொண்ட, நம் பத்தகாத சாட்சி என்ப தால், மோடியின் மீதான வழக்கை முடித்துக் கொள்ளலாம் என்று சிறப்பு விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின் றன. அகமதாபாத்தில் முஸ்லிம்கள் மீது தாக் குதல் நடந்தபோது காவல்துறை கட்டுப் பாட்டு அறைகளில் இருந்த இரண்டு அமைச் சர்களும் காவல்துறை யின் செயல்பாடுகளில் குறுக்கிட்டதற்கான ஆதாரமாக ஆவணங் கள் ஏதும் கிடைக்க வில்லை என்றும் சிறப்பு விசாரணைக் குழு தெரி வித்துள்ளது.

மோடி காவல் துறைக்கிட்ட உத்தரவு

27.2.2002 அன்று நடைபெற்ற காவல் துறை உயர் அதிகாரி களின் கூட்டத்தில் தங் களின் கோபத்தை தீர்த் துக் கொள்ள இந்துக் களை அனுமதிக்கும்படி மோடி காவல்துறை அதிகாரிகளுக்கு அறி வுரை அளித்தார் என்று சிறப்பு விசாரணைக் குழு முன் சஞ்ஜிவ் பட் சாட்யிம் அளித்திருந் தார். காந்திநகரில் உள்ள முதல்வரின் இல்லத்தில் அன்று பின்மாலைப் பொழுதில் இந்த கூட் டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மற்ற அதிகாரிகள் எவரும் சஞ்ஜீவ் பட் அக் கூட் டத்தில் கலந்து கொண் டதாகத் தெரிவிக்க வில்லை என்று சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

சிறப்பு விசாரணைக் குழுவின் முடிவுகளை அமிகஸ் குரியா வழக்குரைஞர் ஏற்றுக் கொள்ள வில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சாட்சியம் எடைபோட்டுப் பார்க்கப்படவேண்டுமே யன்றி, எண்ணப்படக் கூடாது என்றும், சஞ்ஜீவ் பட்டிடமும் முதல்வர் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட மற்ற காவல்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை செய்தால் அன்றி இது நிகழாது என்றும் வழக்குரைஞர் விவாதிக்கிறார்.

மற்ற அதிகாரிகளை பாதிக்கப்பட்ட நபர்கள் கேள்வி கேட்டு தீவிரமாக குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்காமல் இந்த நிலையில் வழக்கை முடித்துக் கொள்வது சரியானதாகவும், முறையானதாகவும் இருக்காது என்று அமிகஸ் குரியா வழக்குரைஞர் கருத்து தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. பட் பொய் சொன்னார் என்பது அப்போது வெளிப்படலாம்; அதே போல் மற்ற காவல்துறை அதிகாரிகள் பொய் சொல்லினர் என்பதும் வெளிப் படலாம்.

இரண்டு அமைச்சர்கள் தொடர்பு

உள்துறையுடன் தொடர்பு இல்லாத இரண்டு அமைச்சர்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைகளில் இருந்தனர் என்பதே சஞ்ஜிவ் பட்டின் சாட்சியம் உண்மையானது என்பதைக் காட்டக்கூடும் என்ற கருத்தை அவர் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த இரு அமைச்சர்களும் முதல்வரின் ஆதரவையும் ஆசியையும் பெற்றவர்கள் என்பதை சிறப்பு விசாரணைக் குழுவே முன்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.
அமிகஸ் குரியா வழக்குரைஞரின் கருத்தை சிறப்பு விசாரணைக் குழு நிராகரித்தால், திருமதி ஜாஃப்ரியும் அவருடன் இணைந்த மனுதாரார்களும் இதனை எதிர்த்து விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். சிறப்பு விசாரணைக் குழுவின் கருத்தை ஏற்றுக் கொள்ளாமல், விசாரணை நீதிமன்றம் சொந்தமாக, சுதந்திரமான முறையில் அமிகஸ் குரியா வழக்குரைஞரின் கருத்தைப் பற்றி பரிசீலனை செய்து முடிவெடுக்கலாம்.

- (நன்றி: தி இந்து 23-10-2011 தமிழில்: த.க.பாலகிருட்டினன்.)

'இறைவனை அஞ்சிக் கொள்' என்று அவனிடம் கூறப்பட்டால் அவனது ஆணவம் அவனைப் பாவத்தில் ஆழ்த்துகிறது. அவனுக்கு நரகமே போதுமானது. அது மிக கெட்ட தங்குமிடம்'
-குர்ஆன் 2:206

Indore: A cartoonist of a leading city-based eveninger was arrested on the charges of "fanning communal sentiments" through a cartoon perceived to be based on a controversy surrounding Gujarat Chief Minister Narendra Modi's fast and his move to allegedly refuse wearing a skull cap, police said today.

39-year-old Harish Yadav alias Mussveer was arrested from his residence in Malharganj area last night, they said.

"Yadav has been booked under section 295-A (deliberate and malicious acts, intended to outrage religious feelings or any class by insulting its religion or religious beliefs) of IPC for the cartoon published in 'PrabhatKiran' on September 20," Malharganj police station in-charge Suresh Saijwar told PTI here.

The FIR was lodged by one Javed and the offence is non-bailable and he (Yadav) would be produced before a court later, he said.

Meanwhile, defending the freedom of expression, Prabhatkiran editor Prakash Purohit said,"the cartoon was drawn in the backdrop of Gujarat Chief Minister Narendra Modi's fast and a skull-cap offered (to him) by a religious person from minority community which he refused to wear. There was nothing objectionable in the cartoon on which the newspaper employee was picked up forcefully by the police".

"The cartoon was very well-convincing and appreciated by readers. It appears that the saffron party wants to crush freedom of expression of journalists through its minority wing," Purohit alleged.

-IBNLive.com

Saturday, October 22, 2011

சவுதி இளவரசர் சுல்தானின் அகால மரணம்!



மன்னர் அப்துல்லாவுக்கு அரசை கொண்டு செல்வதில் மிகவும் உறுதுணையாக இருந்த இளவரசர் சுல்தான் இன்று மரணம் அடைந்த செய்தி பலரையும் வருத்தத்திற்குள்ளர்கியது. பாதுகாப்பு அமைச்சராகவும் விமானத்துறையையும் கவனித்து வந்த இளவரசர் சுல்தான் சில காலமாகவே நோய்வாய்பட்டிருந்தார். தனது சகோதரனின் இழப்பு தனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று மன்னர் அப்துல்லா தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அன்னாரை இழந்து துக்கத்தில் இருக்கும் அவரது குடும்பத்தாருக்கு நம்முடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

சவுதி மன்னருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருக்கும் சுல்தானின் மரணம் சவுதியின் இயல்பு வாழ்க்கையை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. தொலைக்காட்சியில் செய்தியில் சொன்னதோடு சரி. கடைகள் அடைக்கப்படவில்லை. திறந்திருக்கும் கடையை மூடச் சொல்லி நிர்பந்திக்கவில்லை. நம் நாட்டில் மெரீனா பீச்சில் ஆட்சியாளர்களுக்கு தனியாக சமாதி எழுப்புவதுபோல் இங்கு எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை. எல்லோரையும் அடக்கக் கூடிய பொது மைய வாடிக்குத்தான் அவரது உடலும் கொண்டு வரப்படும். அடக்கம் செய்தவுடன் சிமெண்டால் சமாதி கட்டப்படாது. வெறும் மண்ணால்தான் இவரது உடல் மூடி அடக்கம் செய்யப்படும்.

சொல்லி வைத்தாற்போல் சவுதியின் ஆட்சியாளர்கள் ஓரளவு குர்ஆனின் வழியிலேயே ஆட்சியை கொண்டு செல்கிறார்கள். மிகப் பரந்த நாடு. அதிலும் பல வெளிநாட்டவர்களை கொண்டு வேலை வாங்கி செயல்படும்நாடு. எனவே ஒன்றிரண்டு குறைகள் இருந்தாலும் நிறைகள் அதிகம் இந்த ஆட்சியாளர்களிடம் நிறைந்து காணப்படுகிறது.

சவுதி ஆட்சியாளர்களை பின்பற்றி மற்ற இஸ்லாமிய நாடுகளும் தங்களின் ஆட்சி முறையை மாற்றி அமைத்துக் கொண்டால் வன்முறை குறையும். அமைதி தவழும்.

ஒருமுறை உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான இளவரசர் தலாலின் சகோதரரோடு அழைப்பு வழிகாட்டல் மையம் நடத்திய ஒரு விழாவில் சந்திக்க நேரிட்டது. எங்கள் அனைவரிடமும் கைகுலுக்கி குசலம் விசாரித்து எங்களோடு ஒன்றாக தரையில் அமர்ந்து அளாவளாவினார். தனியாக அவருக்கு சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தும் அதை மறுத்து எங்களுடனேயே சேர்ந்து அமர்ந்து ஒரே தட்டில் சாப்பிட்டது மறக்க முடியாதது.

இது போன்ற ஆடம்பரமற்ற ஆட்சியாளர்களை அனைத்து நாடுகளும் பெற்று சவுதியை போல் செல்வத்திலும் கொழிக்க அந்த ஏக இறையை இறைஞ்சுகிறேன்.

முந்தய மன்னர் பஹத் இறந்தபோது அவரது உடலை சாதாரண மண் தரையில் அடக்கம் செய்தததைத்தான் பார்க்கிறோம்.



2748. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! தருமத்தில் சிறந்தது எது?' என்று கேட்டார். 'நீங்கள் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருளாசை கொண்டவராகவும் செல்வந்தராக விரும்பிய வண்ணம் வறுமையை அஞ்சியவராகவும் இருக்கும்போது தர்மம் செய்வதே சிறந்த தர்மம் ஆகும். உன் உயிர் தொண்டைக் குழியை அடைந்து விட்டிருக்க, 'இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்; இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்" என்று சொல்லும் (நேரம் வரும்) வரை தருமம் செய்வதைத் தள்ளிப் போடாதே. (உன் மரணம் நெருங்கி விடும்) அந்த நேரத்திலோ அது இன்னாருக்கு (உன் வாரிசுகளுக்கு) உரியதாய் ஆகி விட்டிருக்கும்" என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். -ஆதாரம் புகாரி

Thursday, October 20, 2011

லிபிய அதிபரை கொன்றாகி விட்டது....அடுத்து?




அமெரிக்கா நேட்டோவின் போர்வையில் மற்றொரு அநியாயத்தை நிறைவேற்றியிருக்கிறது. என்னதான் லிபிய அதிபர் மோசமானவராக இருந்தாலும் 42 ஆண்டு காலம் இந்த நாட்டை செல்வ செழிப்பிலேயே கொண்டு சென்றார். எண்ணெய் வளம் அதற்கு கைகொடுத்தது. அதிலும் எந்த நேரமும் அமெரிக்காவை தன் அருகே நெருங்க விடாமல் பார்த்து கொண்டார். மற்ற முஸ்லிம் நாடுகளையும் அமெரிக்காவிடமிருந்து சற்று தூரமாக இருக்குமாறு உபதேசித்து வேறு வந்தார். தனது ஆட்சியை தக்க வைக்க சில நேரங்களில் அமெரிக்காவிடமும் ஒத்து போனார் கடாபி.

இது போதாதா... அமெரிக்க தனது குள்ள நரித் தனத்தை கடாபியின் எதிரிகளின் மூலம் கலவரமாக விதைத்தது. நேட்டோ படைகளின் மூலம் பல ஆயிரம் அப்பாவிகளை கொன்று குவித்தது. போதாதற்கு கடாபியின் ராணுவமும் பொதுமக்களை சகட்டு மேனிக்கு சுட்டு தள்ளியது. மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி.

லிபிய எண்ணெய் வயல்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே அமெரிக்காவின் திட்டம். ஆப்கானிஸ்தானத்திலும், ஈராக்கிலும் ஏதேதோ எதிர்பார்த்து சென்று முடிவில் கையை சுட்டுக் கொண்டது போல் லிபியாவிலும் அமெரிக்காவுக்கு சரியான எதிரடி காத்திருக்கிறது. மற்ற நாடுகளில் பெற்ற தோல்வியைவிட லிபியாவில் அமெரிக்கா மிக அதிகமாக இழப்புகளை சந்திக்கும் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

//Earlier, the US Secretary of State Hillary Rodham Clinton had offered millions of dollars in new aid to Libya in a so-called token of goodwill, and had urged the new leadership in the country to commit to a retribution-free future.//

அமெரிக்காவிற்க்குள்ளேயே இது போன்ற அடாவடியாக மற்ற நாட்டுக்குள் மூக்கை நுழைப்பதை பெரும்பான்மையோர் எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். அமெரிக்க மக்களை வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் மேலும் மேலும் பல பிரச்னைகளை உண்டுபண்ணுகின்றன. ஆட்சியாளர்களோ லிபியாவுக்கு இத்தனை கோடி டாலர், இஸ்ரேலுக்கு இத்தனை கோடி டாலர் உதவி என்று பெருமையாக அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவை எல்லாம் அமெரிக்க மக்களின் கனவுகளை நனவாக்குமா? கடாபியும், சதாம் ஹுசைனும், ஹோஸ்னி முபாரக்கும் அந்நாட்டு மக்களால் எவ்வாறு பந்தாடப்பட்டார்களோ அது போன்ற நிலை ஒபாமாவுக்கும் வரும் காலம் வெகுதொலைவில் இல்லை.




இது ஒருபுறமிக்க லிபியாவுக்கு அருகிலேயே சோமாலியா மொகதிஸுவில் 42 குழந்தைகள் கடந்த வாரத்தில் மட்டுமே இறந்திருக்கின்றன. சுகாதாரமற்ற குடிநீர் 162 குழந்தைகளை காலரா பாதித்தவர்களாக மாற்றியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் 75 சதவீதமான குழந்தைகள் டயரியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது.

கூறுகெட்ட அமெரிக்க ஆட்சியாளர்களே!.... உங்களுடைய படைபலத்தையும் பொருளாதார வசதியையும் அறிவியல் முன்னேற்றத்தையும் பயன்படுத்தி இது போன்ற வறிய நாடுகளை தத்தெடுத்து அவர்களை நலமாக்கினால் உன் மக்கள் நலமாக வாழ மாட்டார்களா? வறிய நாடுகள் உங்களை வாழ்த்தாதா? இத்தனை நாடுகளிலும் கொள்ளையடித்து உன் நாட்டு மக்களுக்கு என்ன சுகத்தை கொடுத்து விட்டாய்?

இனியும் இதுபோன்ற அழிவுகள் தொடர்ந்தால் நம் கண் முன்னேயே அமெரிக்க தேசத்தின் அழிவுகளை வெகு சீக்கிரத்தில் காணலாம்.

--------------------------------------------------

உதாரணத்துக்கு சமீபத்திய பத்திரிக்கை செய்திகள்....

வெள்ளி, 14 அக்டோபர் 2011 13:39

லாஸ் ஏஞ்சல்ஸ், அக்.14- அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத் தில் சியல் பீச் நகரில் உள்ள ஒரு சலூனுக்குள் அடையாளம் தெரி யாத மனிதன் ஒருவன் புகுந்தான். அங்கிருந் தவர்களை நோக்கி அவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 6 பேர் அந்த இடத்திலே யே பலியானார்கள். 3 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் மருத் துவமனையில் உயிர் இழந்தனர்.

அடையாளம் தெரியாத மனிதன் துப் பாக்கியால் சுட்ட தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் அந்த இடத் தை சுற்றி வளைத்தனர். துப்பாக்கியால் சுட்ட அந்த மனிதனை மடக்கி பிடித்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் வெளியூரை சேர்ந்தவர் என்றும், காரில் வந்த அவர் சலூன் கடை அருகே காரை நிறுத்தி விட்டு சலூனுக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர்? எதற் காக துப்பாக்கியால் சுட் டார் என்பன போன்ற விவரங்களை காவல் துறையினர் வெளியிட வில்லை.
-viduthalai 18-10-2011


திங்கள், 17 அக்டோபர் 2011 14:13
டெகுசிகல்பா,அக்.17- ஹோண்டுராஸ் தலைநகர் டெகுசிகல்பாவில் உள்ள விமான நிலையத்தில் முகமூடி அணிந்த மனிதன் கண்மூடித்தனமாக சுட்டதில் 6 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் சான் பெட்ரோ சுலாவில் உள்ள லமெசா சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக் கிழமை நடந்தது. இது குறித்து காவல்துறை ஆணையர் ஜுலியன் ஹெர்நாண்ட்ஸ் கூறியதாவது: துப்பாக்கி ஏந்தி வந்த முகமூடி மனிதன் விமான நிலையத்தின், கார் நிறுத்தும் இடத்தில் காத்திருந்து அவர்கள் வந்ததும் சுட்டதில் அவர்கள் பலியானர்.3 பேர் காயமடைந்தனர்.

பலியானவர்களும் ஆயுதங் களுடன்தான் வந்துள்ளனர்.ஆனால் அவற்றை அந்தக் கொலையாளி எடுத்துச் சென்று விட்டதாக தெரிகிறது. முகமூடி அணிந்து வந்த நபர் யார் என்பது குறித்தும், அவர் தாக்குதல் நடத்தியதற் கான காரணம் குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

-viduthalai 18-10-2011

சவுதியில் தமிழ்மண தடை சம்பந்தமாக!

யார் செய்திருந்தாலும் இது கண்டிக்கப்பட வேண்டியதே!

தமிழ்மண நிர்வாகம் இது சம்பந்தமாக வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்தும் ஆர்வக் கோளாறினால் இது போன்ற நிலையை சில சகோதரர்கள் எடுத்துள்ளார்கள். இதில் எனக்கு முற்றிலும் உடன்பாடில்லை. எனவே நமது நிலையை விளக்கி சவுதி இணையதள நிர்வாகத்துக்கு மெயில் அனுப்ப வேண்டும். இன்னும் 24 மணி நேரத்தில் குறைந்தது 25 பேராவது அனுப்பினால்தான் தமிழ்மணம் சவுதியில் திரும்பவும் தெரிய வாய்ப்பிருக்கிறது.

எனவே தயவு செய்து சகோதரர்கள் உடன் மெயிலை கீழ்காணும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.



http://www.internet.gov.sa/resources/block-unblock-request/unblock/view?set_language=en

Wednesday, October 19, 2011

மெக்காவை நோக்கி புறப்படலாமா?

உலக முஸ்லிம்கள் அனைவரிடத்திலும் ஒரு நீங்காத கனவு என்றுமே இருந்து வரும். தனது வாழ்நாளில் ஒரு முறையேனும் புனிதத் தலங்கள் நிறைந்திருக்கும் மெக்கா மதீனாவை பார்க்க மாட்டோமா! ஹஜ் பயணத்தை முடித்து விட மாட்டோமா எனறு ஆவலுடன் பொருளாதார தன்னிறைவுக்காக காத்திருப்பர். ஏனெனில் ஹஜ் பயணம் என்பது செல்வந்தர்களுக்கு உரிய கடமை. கடன்கள் இல்லாமல் பொருளாதார தன்னிறைவு பெற்றவர்களுக்கே இது கடமையாகிறது.

'அந்த ஆலயத்தில் இறைவனுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்றவர்களுக்கு கடமை'
-குர்ஆன் 3:97


ஒரு சிலருக்கு சம்பாதிக்க வந்த இடத்தில் போனஸாக சொற்ப செலவுகளிலேயே ஹஜ் பயணத்தை முடிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. இது போல் வாய்ப்பு கிட்டி இரண்டு முறை ஹஜ் பயணத்தை முடித்தவன் நான்.

மும்பை, உத்தர பிரதேசம் போன்ற பகுதிகளில் வறியவர்கள் கூட தங்களின் வருமானத்தில் தினமும் ஒரு பகுதியை ஹஜ் பயணத்துக்காக ஒதுக்குவார்களாம். இப்படி எழுபது என்பது வயது வரை பணம் சேர்த்து ஹஜ்ஜுக்கு வரும் இந்தியர்கள் பலரை நாம் பார்க்க முடியும்.

மெக்கா மதினாவில் பல ஆண்டுகள் வேலை செய்து வரும் சிலர் ஹஜ் முடிக்காமலேயே கூட நாடு திரும்பி விடுகின்றனர். சிலர் ஆர்வம காட்டுவதில்லை. இதே போல் தமிழகத்தில் பல கோடிகளுக்கு சொந்தக்காரரகளாக இருந்தாலும் ஹஜ் செய்து விடுவோம் என்ற எண்ணம் பலருக்கு வருவதில்லை.

ஆண்டான், அடிமை, ஏழை, பணக்காரன், கறுப்பன், சிவப்பன் என்ற பாகுபாடுகளை எல்லாம் தூரமாக்கி தைக்கப்படாத இரண்டு வெள்ளை துண்டுகளை உடுத்திக் கொண்டு 'இறைவனுக்கு அடிபணிய வந்து விட்டோம்' என்று உலக மக்கள் அனைவரும் ஒரு குரலில் எழுப்பும் ஓசை பல சாம்ராஜ்ஜியங்களை நிலைகுலையச் செய்தது. செய்து கொண்டிருக்கிறது. ஒரு முறை ஹஜ் செய்தவர் தான் உயர்ந்தவன் என்ற எண்ணத்தை கண்டிப்பாக தூரமாக்கி விடுவார். உலகையே தங்கள் காலடியில் வீழ்த்த துடித்துக் கொண்டிருக்கும் அமெரிக்க ஐரோப்பிய நாட்டு ஹாஜிகளும், ஆப்ரிக்க ஹாஜிகளும் ஓரணியில் நின்று அந்த ஏக இறைவனை வணங்குவதை பார்த்த பின்பு யாருக்குத்தான் வர்ணாசிரம எண்ணம் வரும்?



1, 2 நைட் கிளப்புகளே கதி என்று கிடந்த அமெரிக்க இள வயது மங்கைகள் இன்று குர்ஆனைப் பற்றிய ஆராய்ச்சியில்...











4.கறுத்த ஆப்பரிக்கருக்கும் வெள்ளை நிற அமெரிக்கருக்கும் ஒரே உடை...ஒரே வழிபாடு...ஒன்றாகவே தங்கவும் வேண்டும்.



5.குர்ஆனை ஆர்வமுடன் விளங்கி படிக்கும் இளைஞர்கள்....





6.தள்ளாத வயதிலும் இறைவனைப் பற்றிய பயம்...





7.ஹஜ்ஜை முடித்து வழக்கமான உடைக்கு திரும்பி ஓய்வு எடுக்கும் அமெரிக்க ஐரேப்பிய ஆப்ரிக்க முஸ்லிம்கள்


இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு வருபவர்களில் எனது தாயாரும் ஒருவர். தந்தைக்கு உடல்நலம் ஒத்து வராததால் தாயார் மட்டும் ஹஜ்ஜுக்கு வருகிறார். அவருக்கு உதவி செய்வதற்காக நானும் 3 நாட்கள் மெக்கா செல்ல தீர்மானித்துள்ளேன். எந்த வித பிரச்னையும் இல்லாமல் நலமுடன் ஹஜ்ஜுப் பயணத்தை முடிக்க இறைவன் துணை புரிய வேண்டும். எனது தாயாரின் ஹஜ் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட சகோதர சகோதரிகளும் பிரார்த்திக்கவும்.

'நீங்கள் எந்த நன்மையை செய்தாலும் இறைவன் அறிகிறான். ஹஜ்ஜுக்கு தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள். திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் இறை அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! எனனை அஞ்சுங்கள்'
-குர்ஆன் 2:197

Monday, October 17, 2011

தமிழ் மணம்

முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கூறும் முகமனை கேலி செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்று பலரும் சிந்தித்திருக்கலாம். ஒரு இந்துத்வவாதியோ அல்லது ஒரு நாத்திகரோ போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போனால் யாரும் அதனை பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் ஒரு திரட்டியை நடத்திக் கொண்டிருக்கும் நிர்வாகிகளில் ஒருவர் தமிழ்மணத்தின் அடையாளத்தோடு வெளியிட்டதுதான் பிரச்னை இந்த அளவு சென்றதற்கு காரணமே!

இஸ்லாத்தின் மீது அவருக்கு வெறுப்பு இருந்திருந்தால் தனி பதிவாக அவரது சொந்த பெயரில் வெளியிட்டிருந்தால் அதற்கு தக்க பதிலை முஸ்லிம் பதிவர்களும் கொடுத்திருப்பார்க்ள்.

ஆனால் பலராலும் மதிக்கப்பட்ட பழைய திரட்டிகளில் ஒன்றான தமிழ் மணத்தின் அடையாளத்தோடு இத்தகைய வசைபாடல் வந்ததைத்தான் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு பிரச்னையை முடிப்பதே அந்த குறிப்பிட்ட நிர்வாகிக்கு அழகு. அதை செய்வார் என்று எதிர்பார்ப்போம்.

'முஹம்மதே! உமக்கு முன் பல தூதர்கள் கேலி செய்யப்பட்டனர். எதைக் கேலி செய்தார்களோ அதுவே கேலி செய்தோரைச் சூழ்ந்தது'
-குரஆன் 6:10

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.

Thursday, October 13, 2011

நெகிழ வைத்த ஒரு நிகழ்வு!

இரண்டு மாதத்துக்கு முன்பு ஒரு அவசர வேலை காரணாக தமிழகம் செல்ல நேரிட்டது. நோன்பின் முதல் நாள் எனது பயணம். எப்பொழுதும் சவுதியா விமானத்தில்தான் செல்வேன். இந்த முறை நமது நாட்டு விமானமான ஏர்இந்தியாவில் பயணிப்போமே என்று எண்ணினேன். பெட்ரோல் பணத்தைக் கூட திரும்ப செலுத்தாத அளவுக்கு நட்டத்தில் ஓடிக் கொண்டிருப்பதால் அந்த நிறுவனத்துக்கு நமது பயணமும் ஒரு ஊன்றுகோலாக இருக்குமே என்ற எண்ணத்தில் புக் செய்து கொண்டேன். கூடிய வரை படிக்கும் நாமும் ஏர் இந்தியாவிலேயே பயணம் செய்ய முயற்ச்சிப்போமாக!

விமானம் ரியாத்திலிருந்து 6:45 புறப்படுவதாக இருந்தது. நான் நோன்பாகையால் ஒரு கேக், ஒரு பாட்டில் தண்ணீர், ஒரு ஜீஸ் சகிதமாக முன்னெச்சரிக்கையாக வாங்கிக் கொண்டு விமானத்தில் அமர்ந்தேன். சவுதியா விமானமாக இருந்தால் கண்டிப்பாக நோன்பு திறக்க ஏற்பாடு செய்வார்கள். ஏர் இந்தியாவில் தரவில்லை என்றால் எப்படி நோன்பு திறப்பது என்ற முன்னெச்சரிக்கையே இவற்றை வாங்கச் சொன்னது. எனக்கு நடுவில் இருக்கை கிடைத்தது. வலது புறமும் இடது புறமும் அமர்ந்தவர்களிடம் ஒரு 'ஹலோ' சொல்லி விட்டு இருக்கையில் அமர்ந்தேன்.

சற்றும் எதிர்பாராத விதமாக ஏர் இந்தியா நிர்வாகம் பயணிகள் அனைவருக்குமே இரண்டு பேரித்தம் பழங்கள், ஒரு ஜீஸ், ஒரு கேக், ஒரு தண்ணீர் பாட்டில் என்று விநியோகிக்க ஆரம்பித்தனர். எனக்கு வலது புறம் அமர்ந்தவர் கொடுத்த மாத்திரத்திலேயே சாப்பிட ஆரம்பித்து விட்டார். நோன்பு திறக்க இன்னும் பத்து நிமிடம் இருக்க சாப்பிடுகிறாரே என்று நினைத்துக் கொண்டேன். ஒருக்கால் இந்து நண்பராகவோ அல்லது கிறித்தவ நண்பராகவோ இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். எனது இடது புறமாக அமர்ந்திருந்தவர் 'நோன்பு திறக்க இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது?' என்று கேட்டார். நானும் 'இன்னும் 10 நிமிடம் பாக்கி இருக்கிறது' என்று பதிலளித்தேன்.

நேரமும் வந்தது. விமானத்தில் அனைவரும் நோன்பு திறந்தோம். எனது இடது புறம் அமர்ந்திருந்தவரும் நோன்பு திறந்தார். அதன்பிறகு இருக்கையில் அமர்ந்தவாரே மாலை நேர (மஹ்ரிப்) தொழுகையை தொழுது கொண்டேன். நான் செய்யும் ஒவ்வொரு அசைவையும் இடது புற நண்பர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.

நான் தொழுகையை முடித்தவுடன் எனது செயல்களை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த நண்பரிடம் 'நீங்களும் தொழுகலாமே? அமர்ந்து கொண்டு கூட தொழுகலாம்' என்று கூறினேன். அதற்கு அவர் 'சாரி. நான் முஸ்லிம் அல்ல. சௌராஷட்ரா வகுப்பை சார்ந்தவன். சவுதி வந்த நாள் முதல் இந்த நாட்டின் சுற்று சூழல் என்னையும் நோன்பு வைக்க ஆர்வத்தை ஏற்படுத்தியது. இப்படி இறைவனுக்காக நோன்பு வைப்பதில் மிகுந்த மன நிறைவை அடைகிறேன். எனக்கு தொழுக தெரியாது. எனவேதான் நீங்கள் தொழுததை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன்.' என்று சொன்னவுடன் அவரை ஆச்சரியத்தோடு பார்த்தேன்.

எனது வலது புறம் அமர்ந்திருந்தவர் தோற்றத்தில் முஸ்லிமைப் போல் இருந்ததால் 'உங்கள் பெயர் என்ன?' என்று கேட்டேன். 'அபுபக்கர்' என்று கூறினார். சிறிது நேரத்தில் விமானப் பணிப் பெண்ணிடம் 'மது கிடைக்குமா?' என்று கேட்டார். பணிப்பெண்ணும் தருகிறேன் என்று சென்று விட்டார். நான் அபுபக்கரிடம் 'முஸ்லிம் தாய் தந்தையருக்கு பிறந்து விட்டு நோன்பு நாளில் நோன்பும் வைக்காமல் மது அருந்துகிறாயே தம்பி! இறைவனின் பயம் உனக்கு கிடையாதா?' என்று கேட்டேன். அதற்கு அவர் 'இரண்டு வருடமாக மது அருந்தாமல் கட்டுப்பாட்டோடு இருந்தேன். விமானத்தில் மது அருந்தலாம் என்று தான் ஏர் இந்தியாவிலேயே பயணிக்கிறேன்' என்றார் கூலாக.

உடன் எனக்கு அருகில் இருக்கும் இந்து நண்பரைக் காட்டி 'இவர் இந்துவாக இருந்தாலும் இறைவன் மேல் உள்ள பிரியத்தால் நோன்பு வைக்கிறார். தொழுவதற்கும் ஆர்வத்தோடு இருக்கிறார். முஸ்லிம் தாய் தந்தையருக்கு பிறந்த நீங்கள் இறப்புக்கு பின்னால் இறைவன் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதிலை வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்டவுடன் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. சிறிது நேரத்தில் எனக்கு அருகில் இருக்கும் இருக்கையை காலி செய்து விட்டு கடைசியில் சென்று உட்கார்ந்து கொண்டார்.

இடது புறம் அமர்ந்திருந்த இந்து நண்பர் இஸ்லாம் சம்பந்தமாக பல கேள்விகளை கேட்டுக் கொண்டே வந்தார். எனது வலைதள முகவரியையும், டார்வின் சம்பந்தமான கேள்விகளுக்கு நண்பர் ஆசிக்கின் வலைத்தளத்தையும் அடுத்து ஆன்லைன்பிஜே வலைத்தளத்தையும் மேலதிக விளக்கங்களுக்காக கொடுத்தேன். அவரும் ஆர்வமுடன் தனது லேப்டாப்பில் குறித்துக் கொண்டார்.


முஸ்லிம் தாய் தந்தையருக்கு பிறந்தும் இஸ்லாத்தை விளங்க அபுபக்கரால் முடியவில்லை. ஆனால் வேலை நிமித்தமாக சவுதி வந்தவருக்கு இந்து மதத்தில் பிறந்தும் இஸ்லாத்தின் மேல் ஒரு அதீத பற்றை கொடுத்த இறைவனின் கிருபையை என்னவென்பது?

'தான் நாடியோருக்கு ஞானத்தை வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர யாரும் சிந்திப்பதில்லை'
-குர்ஆன் 2:269