Followers

Saturday, August 31, 2019

மோடியின் டிஜிட்டல் இந்தியா - தலித்துக்கு தனி பானை

மோடியின் டிஜிட்டல் இந்தியா - தலித்துக்கு தனி பானை
மோடியின் மாநிலமான குஜராத்தின் தலை நகர் அஹமதாபாத்தில் உள்ளது சுரேந்திர நகர். இங்குள்ள அரசு பள்ளிகளில் தலித் ஆசிரியர்களுக்கும், மேல் சாதி ஆசிரியர்களுக்கும் தண்ணீர் குடிக்கும் பானைகள் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளன. பச்சை நிறத்தில் அமைக்கப்பட்டுள்ள பானை உயர்சாதியினருக்கானது. இளஞ்சிவப்பு நிறத்தில் அமைக்கப்பட்டுள்ள பானை தலித் ஆசிரியர்களுக்கானது. இந்த சட்டங்களை காலம் காலமாக யாரும் மீறுவதில்லை. ஆசிரியர்கள் மட்டுமல்ல மாணவர்களுக்கும் இதே போன்ற சாதி பாகுபாடு பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தவறுதலாக தலித் ஆசிரியர் பரையா உயர் சாதியினர் பானையில் தண்ணீர் குடித்து விட்டார். இதனை பார்த்து விட்ட மேல் சாதியான பட்டேல் இனத்தைச் சேர்ந்த ரதோட் என்ற ஆசிரியர் கோபமாக 'நீ வால்மீகி சாதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவன். எங்களுக்கான பானையில் நீ எவ்வாறு நீர் அருந்தலாம்' என்று கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இந்த சம்பவம் அறிந்த மேல் சாதி மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் அறிவித்து ஒரு நாள் பள்ளியை மூட வைத்துள்ளனர். இதன் பிறகு தலித் ஆசிரியர் மீது எஃ ஐ ஆர் பதியப்பட்டு அவர் வேறொரு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளாராம்.
இது பற்றி கருத்து கூறிய வேதகம் தொகுதி எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கூறும்போது 'தீண்டாமையை ஒழிக்க இந்த அரசு எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. மக்களின் மனதில் காதி வெறி புரையோடிப் போயுள்ளது. அரசு கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும்' என்கிறார்.
மொழி பெயர்ப்பு ; சுவனப்பிரியன்
தகவல் உதவி
Times Of India
31-08-2019
-------------------------------------------------
நபிகள் நாயகம் சொன்னார்கள்....
"மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்களுடைய தந்தை ஒருவர் தான். ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும், ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும், ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும், ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை, இறையச்சத்தைத் தவிர!”
(நூல்: அஹ்மத் 22391)


பாகிஸ்தானுக்கு கள்ளத்தனமாக உளவு வேலை செய்வது யார்?


இந்த பள்ளிவாசல் எங்கள் கிராமத்தின் அடையாளம்...

பீஹார் மாநிலத்தில் உள்ள நாலாந்தா அருகில் உள்ளது மாரி கிராமம். இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு அதிகம் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களின் தேவைக்காக பள்ளி வாசலும் கட்டப்பட்டது.
காலப்போக்கில் பல முஸ்லிம் குடும்பங்கள் ஊரை காலி செய்து விட்டு நகரங்களுக்கு சென்று விட்டனர். முஸ்லிம்களின் புழக்கத்தில் இருந்த பள்ளிவாசல் ஆட்கள் இன்றி பழுதடையத் தொடங்கியது. தொழுவதற்கு ஆட்களும் இல்லை.
இந்த நிலையில் அந்த கிராமத்து இந்து மக்கள் தங்கள் ஊரில் இருந்த பழமையான பள்ளியை இழக்க மனமில்லாமல் தூய்மைபடுத்தி, வெள்ளையடித்து அழகு செய்தனர். ஐந்து நேரமும் பாங்கு சொல்வதற்காக ஒரு பெண் ட்ரைவ் மூலமாக ஏற்பாடு செய்தனர். தற்போது ஐந்து நேரமும் அங்கு பாங்கின் ஒலி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
'இந்த பள்ளிவாசல் எங்கள் கிராமத்தின் அடையாளம். அதனை இழக்க நாங்கள் விரும்பவில்லை' என்கின்றனர் அக்கிராமத்து இந்து மக்கள்!
மொழி பெயர்ப்பு: சுவனப்பிரியன்
தகவல் உதவி
INDIA TIMES
31-08-2019







இந்தியாவின் முகம் மிக கோரமானதாக இருக்கும்

பல ஆண்டுகளாக அஸ்ஸாமில் வாழ்ந்து வரும் 19 லட்சம் முஸ்லிம்களை நாடற்றவர்களாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது பாஜக அரசு. இனி இவர்கள் வறுமையில் வேலைகள் இழந்து அகதி முகாம்களில் காலம் தள்ளுவார்கள். இதனால் அரசுக்கு மேலும் நிதிச் சுமை அதிகரிக்கும்.
ஏற்கெனவே நாட்டின் பொருளாதாரம் அதள பாதாளத்தை நோக்கி செல்கையில் புது புது பிரச்னைகள் உருவாக்கி மக்களை உணர்வுகளின் மூலம் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாள்கிறது மத்திய அரசு. நாடற்றவர்களாக ஆகும் அந்த மக்களை எங்கு போய் விடுவார்கள்?
இது வரை நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனி ஊடுருவல் நடக்காமல் எல்லைகளை கடுமையாக பாதுகாத்தாலே பிரச்னைகள் முடிவுக்கு வரும். ஆனால் பாகிஸ்தானிலிருந்தும் வங்க தேசத்திலிருந்தும் இந்துக்களை ஆயிரக்கணக்கில் சத்தமின்றி உள்ளே நுழைத்து மேலும் பிரச்னைகளை உருவாக்குகிறது பாஜக. வருங்கால இந்தியாவின் முகம் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும், கிருத்தவர்களுக்கும், சீக்கியர்களுக்கும் மிக கோரமானதாக இருக்கும். அதனை மோடி நன்றாகவே செய்து வருகிறார்.
ஆக்கம் : சுவனப்பிரியன்


2200 கோடி செலவு: ஒரே நாளில் கால்வாயில் உடைப்பு!

2200 கோடி செலவு: ஒரே நாளில் கால்வாயில் உடைப்பு!
ஜார்கண்ட் மாநிலம் ஹஸாரி பாக் மாவட்டத்தில் உள்ள கால்வாயை முழுவதையும் சரி செய்ய 2200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. பல ஆண்டுகளாக பாலம் கட்டப்பட்டு ஒரு வழியாக சமீபத்தில் அதன் கட்டுமான பணிகள் முடிவுக்கு வந்தன. பாஜக இம்மாநிலத்தை ஆள்கிறது. மாநில முதல்வர் பாஜகவை சேர்ந்த ரகுபர்தாஸ் கால்வாயை திறந்து வைத்தார். திறந்து வைத்த 24 மணி நேரத்துக்குள் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக.
ஒதுக்கப்பட்ட 2200 கோடி யை வைத்து எதை கட்டினார்கள்? அதன் தரம் என்ன? அந்த பணம் யார் வீட்டுக்கு சென்றது? என்றெல்லாம் கேள்வி எழுப்பினால் நீங்கள் தேச விரோதியாக சித்தரிக்கப்படுவீர்கள்: கொலை மிரட்டல்களும் வரும்.
தமிழ் மொழி பெயர்ப்பு
சுவனப்பிரியன்
தகவல் உதவி
Times Of India
31-08-2019



புலால் உணவு சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் -ஜாகிர் நாயக்


Friday, August 30, 2019

இந்து பெண்ணுக்கு பிரசவம் பார்த்த இஸ்லாமிய பெண்!

இந்து பெண்ணுக்கு பிரசவம் பார்த்த இஸ்லாமிய பெண்!
'உபியின் கான்பூர் மாவட்டத்தில் இந்து பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. கணவன் தனது மனைவியை பிரசவத்திற்காக வாகனத்தில் ஏற்றி மருத்துவ மனை நோக்கி சென்று கொண்டிருந்தார். போகிற வழியில் வாகன நெரிசல். மொத்த வாகனங்களும் நகராமல் நின்று விட்டது. மனைவியோ வலியால் துடிக்கிறாள். இன்னும் சில நிமிடங்களில் ஏதாவது செய்யவில்லை என்றால் தாயும் சேயும் இறந்து விடுவர் என்ற நிலை. கணவன் செய்வதறியாது கீழே இறங்கி அங்கும் இங்கும் ஓடுகிறான். எவரும் உதவ முன் வரவில்லை. இதனை பார்த்துக் கொண்டிருந்த ஒரு இஸ்லாமிய குடும்பம் இவருக்கு உதவ முன் வருகிறது. அவரது மனைவியை தங்கள் வீட்டுக்கு கொண்டு செல்கின்றனர் அந்த இஸ்லாமிய தம்பதியினர். சில நிமிடங்களில் அந்த இந்து பெண்ணுக்கு அழகிய ஆண் குழந்தை பிறக்கிறது. நன்றிப் பெருக்கால் அந்த தந்தை ஆனந்தக் கண்ணீர் வடித்தார். தாயையும் சேயையும் காப்பாற்றிய அந்த இஸ்லாமிய குடும்பத்துக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வின் ஞாபகார்த்தமாக பிறந்த அந்த ஆண் குழந்தைக்கு இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டத் தியாகி 'திப்பு சுல்தான்' பெயரை இட்டார் அந்த இந்து தந்தை.
முஸ்லிம்கள் என்றாலே விஷத்தைக் கக்கும் பலருக்கு இந்த செய்தி ஜீரணமாகாது. அவர்கள் பர்னால் தடவி தங்களின் குறையை சரி செய்து கொள்வார்களாக! ஜெய் ஹிந்த். ஆதாரத்துக்காக அந்த செய்தியையும் இந்த காணொளியில் இணைத்துள்ளேன்.' என்று முடிக்கிறார் அந்த இந்து துறவி.
------------------------------------------
நான் முன்பே பல முறை கூறி வந்துள்ளேன். இந்துக்கள் வேறு இந்துத்வா வேறு. இரண்டு பேரையும் நாம் பிரித்து பார்க்க ஆரம்பித்து விட்டால் பல சிக்கல்களை இலகுவாக களையலாம்.
அன்று குஜராத்தில் ஒரு இந்துத்வா வெறியன் நிறை மாத கர்பிணியான முஸ்லிம் பெண்ணின் வயிற்றைக் கிழித்து கொன்று சிசுவை வெளியில் எடுத்து நெருப்பில் இட்டான்.
இன்று நிறை மாத கர்பிணி உபியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது ஒரு இஸ்லாமிய குடும்பம் பிரசவம் பார்த்து இரண்டு இந்து உயிர்களை காப்பாற்றியுள்ளது.
இந்த நிகழ்வுகளை எல்லாம் பார்த்து மோடிக்களும், அமீத்ஷாக்களும், யோகி ஆதித்யநாத்களும் வெட்கித் தலை குனிய வேண்டும். இஸ்லாமியர்களை இந்திய நாட்டில் இரண்டாந்தர குடி மக்களாக மாற்ற எப்படி எல்லாம் காய் நகர்த்துகிறீர்கள் என்பதை உங்கள் மனசாட்சியிடம் கேட்டுக் கொள்ளுங்கள். சகோதரர்களாக பழகி வரும் சொந்த நாட்டு மக்களை பிரித்து எதனை சாதிக்கப் போகிறீர்கள்? இனியும் திருந்தவில்லை என்றால் இந்த நாட்டை உண்மையாக நேசிக்கும் இந்துக்களும் முஸ்லிம்களும் கிருத்தவர்களும், சீக்கியர்களும் தக்க பாடத்தை இந்துத்வாவாகிய உங்களுக்கு புகட்டுவார்கள்.
ஆக்கம் : சுவனப்பிரியன்!





Thursday, August 29, 2019

நார்வேயில் நடந்த அழகிய செயலையும் கொச்சைபடுத்தும் பாஸிஸ்டுகள்!



நார்வேயில் நடந்த அழகிய செயலையும் கொச்சைபடுத்தும் பாஸிஸ்டுகள்!
தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டு அது தோல்வியில் முடிந்த நார்வே நாட்டில் உள்ள பேரம் பள்ளிவாசலுக்கு அந்நாட்டு இளவரசர் ஹேகான் நல்லெண்ண அடிப்படையில் வருகை புரிந்தார். அப்போது அங்கு தொழுகைக்கு வந்த இஸ்லாமிய பெண்களோடு கை குலுக்கு முற்பட்டார். ஆனால் அது இஸ்லாமிய பண்பாடு இல்லை என்ற காரணத்தால் தங்கள் நெஞ்சின் மீது கைகளை வைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர் இஸ்லாமிய பெண்கள். . பிறகு சுதாரித்துக் கொண்ட இளவரசர் இஸ்லாமிய முறைப்படி நெஞ்சில் கை வைத்து அன்பை வெளிப்படுத்தினார். இந்த படங்கள் அந்நாட்டு பத்திரிக்கைகளில் வெளியானது.
உடனே பாஸிஸவாதிகள் தங்கள் இளவரசருக்கு அவமானம் நேர்ந்ததாகவும் இஸ்லாமிய பழக்கங்களை தங்கள் நாட்டில் புகுத்த முயற்சிப்பதாகவும் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். ஆணும் பெண்ணும் ஒன்றர கலப்பதால் சமூகத்தில் எத்தகைய பிரச்னைகள், சண்டைகள், விவாகரத்துகள், கொலைகள் நடந்து வருகின்றன என்பதை அறியாதவர்கள் அல்ல நாம். அப்படியிருக்க வலிந்து ஆண்களையும் பெண்களையும் ஒன்றாக்கி சமூகத்தை சீரழிப்பதில்தான் சிலருக்கு எத்தனை கொண்டாட்டம்? ஹெச்.ராஜாக்களும், சுப்ரமணியம் சுவாமிகளும் நார்வேயிலும் உள்ளனர்... 
ஆக்கம் : சுவனப்பிரியன்
சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மைபடுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு.
-குர்ஆன் 4:32
ஆண்களிலோ பெண்களிலோ நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
-குர்ஆன் 4:124


மோடியும் அமீத்ஷாவும் காணத் துடிக்கும் இந்து ராஷ்ட்ரா!

மோடியும் அமீத்ஷாவும் காணத் துடிக்கும் இந்து ராஷ்ட்ரா!
மதுரை திருமங்கலம் தாலுகா பேரையூர் அருகே உள்ள P.சுப்புலாபுரம் பகுதியில் #பட்டியலின_மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மரணமடையும் நபர்களின் உடலை #பொது_மயானத்தில் தகனம் செய்ய #மாற்று_சாதியினர்தடைவிதித்துள்ளதாக தெரிகிறது.
இதனால் அவர்கள் மயானத்திற்கு எதிரே உள்ள வெட்ட வெளியில் உடலைகளை தகனம் செய்து வந்தனர். இதனிடையே கடந்த வாரம் பட்டியலினத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.
அப்போது தொடர் மழை பெய்ததால், அவரின் உடலை வெட்டவெளியில் தகனம் செய்ய முடியவில்லை. இதனால் மயானத்தில் தகனம் செய்ய அனுமதி கேட்டுள்ளனர்.
ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி #கொட்டும்_மழையில்_உடலை_தார்ப்பாய்_இட்டு_மூடி_வைத்துள்ளனர். பின்னர் இறந்தவரின் உடல் மழையில் நனைந்ததால் #பெட்ரோல்_ஊற்றி வேதனையுடன் இறுதி சடங்கை முடித்து வைத்துள்ளனர்.


துப்பாக்கியால் சுட்ட சசிகுமார் மற்றும் அவனது நண்பர்கள் கைது. :-(




சுங்கச் சாவடியில் பணம் தர மறுத்து தகராறில் ஈடுபட்டு துப்பாக்கியால் சுட்ட சசிகுமார் மற்றும் அவனது நண்பர்கள் கைது. 

மாற்றுமத பெண்களை பள்ளி வாசலுக்குள் அனுமதித்து

கேரள வெள்ளத்தில் மாற்றுமத பெண்களை பள்ளி வாசலுக்குள் அனுமதித்து அவர்கள் தங்கவும் உணவு உண்ணவும் ஏற்பாடு செய்த முஸ்லிம்கள்.
சபரி மலையில் பெண்கள் தீட்டானவர்கள் என்று சொல்லி வழிபாடு பண்ண மறுத்ததையும், அனைத்து வயதான பெண்களையும் தொழும் பள்ளியில் அனுமதித்து அவர்களை உறங்கவும் வைத்து உணவும் கொடுத்த இஸ்லாமியர்களையும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும்.
மனித நேயம் எங்கு வாழ்கிறது என்பதை இந்நிகழ்வு அழகாக எடுத்துக் காட்டுகிறது.


தொடரும் கற்பழிப்புகள்: கொலை மிரட்டல்கள்!

தொடரும் கற்பழிப்புகள்: கொலை மிரட்டல்கள்!
உபி மாநிலத்தில் ஸ்வாமி சின்மயானந்தாவின் ஆசிரமத்தில் பல ஆண்டுகள் தங்கியிருந்த சட்டக் கல்லூரி மாணவி தற்போது மாயமாகி உள்ளார். ஸ்வாமி சின்மயானந்தா பல பெண்களின் வாழ்வை சீரழித்திருப்பதாகவும் தன்னையும் கொடுமைபடுத்தியதாகவும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் 'மோடிஜி! நான் மிகவும் ஆபத்தில் உள்ளேன். என்னையும் எனது குடும்பத்தினரையும் சின்மயானந்தாவின் ஆட்கள் கொன்று விடுவார்களோ என்று அஞ்சுகிறேன். அதிகாரவர்கம் அனைத்தும் சின்மயானந்தவுக்கு ஆதரவாக உள்ளனர். எங்களை காப்பாற்றுங்கள்' என்று கோரிக்கை வைத்துள்ளார்.
ஸ்வாமி சின்மயானந்தா முந்தய வாஜ்பாய் அரசில் யூனியன் அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டக் கல்லூரி மாணவிக்கு நீதி கிடைக்குமா? அல்லது வழக்கம் போல் இவரும் கொல்லப்படுவாரா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.



உபியின் பாலியா மாவட்டத்தில் நடந்த நவீன தீண்டாமை!

உபியின் பாலியா மாவட்டத்தில் நடந்த நவீன தீண்டாமை!
மதிய உணவு பரிமாறப்படும் போது எல்லா மாணவ மாணவிகளுக்கும் சில்வர் தட்டில் உணவு பரிமாறப்பட்டு இஸ்லாமிய மாணவ மாணவிகளுக்கு மட்டும் இலையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. உபியின் பாலியா மாவட்டத்தில் இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது. இதே போன்று முஸ்லிம் சிறுவர் சிறுமிகளை அவமானப்படுத்தும் நோக்கில் பாராபங்கி, மீரட் மாவட்டங்களிலும் நடந்துள்ளது.
ஒன்றுமறியா குழந்தைகளிடம் வீரத்தைக் காட்டும் இந்த கோழைகளை மனித இனத்திலேயே சேர்க்க இயலாது. யோகி ஆதித்யநாத்தின் அரசின் லட்சணம் இதுதான்.
இதை எல்லாம் எதற்கு செய்கிறார்கள்? இவ்வாறெல்லாம் கொடுமை மற்றும் அவமானப்படுத்தினால் வெறுப்புற்று இந்து மதத்துக்குள் முஸ்லிம்கள் வந்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் செய்கிறார்கள்.
மூடர்களே! உயிரும், உடைமைகளையும் இழப்போம்: பல அவமானங்களையும் சகித்துக் கொள்வோம். உயிரே போனாலும் எங்கள் நம்பிக்கையான ஏக இறைக் கொள்கையை மட்டும் விட்டுத் தர மாட்டோம். இன்னும் என்னவெல்லாம் கொடுமைகளை நிகழ்த்த வேண்டுமோ அத்தனையையும் நிகழ்த்தி விடுங்கள். நீங்கள் எந்த அளவு எங்களுக்கு கொடுமைகளை கொடுக்கிறீர்களோ அந்த அளவு எங்களின் இறை நம்பிக்கையானது மேலும் வலுப்பெறும்.


தண்யா தஸ்னம் அமெரிக்க ஆராய்ச்சி மையமான நாஸாவுக்குப் போகிறார்.

மதுரையைச் சேர்ந்த டீக்கடைக்காரர் ஜாகிர் உசேனின் பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் தண்யா தஸ்னம் அக்டோபரில் அமெரிக்க விண் வெளி ஆராய்ச்சி மையமான நாஸாவுக்குப் போகிறார்.
ஏழைக் குடும்பத்திலிருந்து தேர்வாகியுள்ள இந்த சகோதரியை வாழ்த்துவோம்.


Wednesday, August 28, 2019

கொடூரத்தின் உச்சம் ..!! 😡

கொடூரத்தின் உச்சம் ..!! 😡
11 நாள் குழந்தைக்கு பாதரசம் ( #மெர்க்குரி வைத்தியம் )
Dr.Safi.
Neonatal Pediatrician
Nagercoil .
நாகை மாவட்டம். மயிலாடுதுறையின் அரசு மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஒரு கர்ப்பிணி தாய்க்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது ,
தாயையும்
சேயய்யும் ,
முதல் மூன்று நாட்கள் மருத்துவ கண்காணிப்பிற்கு பிறகு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் ,
இன்று மீண்டும் அந்த குழந்தையை மிகவும் மோசமான நிலையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர் ,
மருத்துவ விசாரிப்பில் அந்த குழந்தைக்கு அந்த குழந்தையின் தாய்வழி பாட்டி ,
குழ்ந்தையின் வயிற்றை சுத்தமாக்க வெற்றிலைக்குள் ஏதோ ஓர் திரவத்தை சேர்த்து கொடுத்துள்ளார் ,
பிறகு முதல்கட்ட விசாரணையில் அனைத்து குழந்தைக்கும் இது தரும் வழக்கம் என சொல்லி காண்பித்ததில் ,
அது
உலோகதிரவமான #பாதரசம் என அறியப்பட்டது ,
மேலும் அதை கொடுத்ததால் குழந்தைக்கு அமிலத்தன்மை மிகுந்த மலம் வெளியேறி ,
உணவுக்குழாய் முதல் மலதுவாரம் வரை முழுதும் புண்ணாகி உள்ளது ,
மேலும் மலம் பட்ட இடம் முழுதும் பொங்கி உள்ளது ,
தற்போது அக்குழந்தை மிகவும் கவலைக்குரிய வகையில் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிசு அறுவை சிகிச்சை பிரிவில் உள்ளது ,
மொத்தத்தில் சிசு மருத்துவனான நான் சொல்லிக்கொள்வது
பாட்டி வைத்தியத்திற்கு ஜால்ரா போடுவோரே...!!
எனக்கு தெரிந்த சில தான் அன்றாடம் கடந்து வரும் பாட்டி வைத்திய இம்சைகள் பின்வருமாறு
குழந்தை பிறந்த உடனே ,
1. மிக உயரிய சத்துக்கள் நிரம்பிய சீம்பால் தர மறுப்பது ,
2. சர்க்கரை கலசல் ( சர்க்கரை கலந்த நீர் ) கொடுக்க முனைவது ,
3. தொப்புளில் சுண்ணாம்பு வைப்பது ,
4. பனங்கற்கண்டு பொடித்து தருவது ,
5. தலையில் சளி வராமல் இருக்க உச்சி பொடி ( தலை உச்சிக்கும் , சளிக்கும் என்னமா சம்பந்தம் ) வைப்பது ,
6. சிகப்பு , சௌப்பு , மந்தம் ,மாந்தை , வயிறு ஏற்றம் , குடல் குடச்சல் , வயறு உபசம் என நாட்டு மருந்து கடைகளில் விற்கும் ஆதாரமற்ற , சம்பந்தமே இல்லாத , அல்லது வீட்டிலேயே தயாரித்த வசம்பு முதல் எண்ணில் ஆமணக்கு எண்ணெய் வரை அனைத்தையும் அந்த பேச தெரியாத பிஞ்சு வாயில் திணித்தல் ,
7. அழுததற்கெல்லாம் நோய் கற்பித்தல் ,
ஊரில் உள்ள மருத்துவர் அனைவரையும் சந்தித்து , சந்தையில் இருக்கும் அனைத்து மருந்தையும் வாய்வழியாக ஊத்திவிடுதல் ,
8. மூக்கு அடைத்தால் , மூக்கில் ஊதுவது , மூக்கு துவாரத்தை உறிவது , காதுக்குள் ஊதுவது ,
மூக்கில் எண்ணெய் விடுவது என பொல்லாங்கு செய்தல் ,
9.. சிசுவிற்கு கண் கூழை இருந்தால் உடனே தாய்ப்பால் , கழுதைபால் என எதையேனும் ஊற்றுவது ,
10. குழந்தை சிணுங்கினால் , அழுதால் , நெளிந்தால் , உமட்டினால் ,துப்பினால் , உறங்காமல் இருந்தால் ,
என பாரபட்சமே இல்லாமல்
சர்வலோக நிவாரணையாக
அனைத்து அறிகுறிக்கும் ஒரே மருந்து .
சாராயம் கலந்த க்ரைப் வாட்டர் !!
அந்த மருந்தை கொடுத்த உடனே குழந்தை ஏன் உறங்கி விடுகிறது என எவரும் யோசிப்பதில்ல ??
கடைசியாக ...
இந்த பாட்டிகளின் உச்சபட்ச அட்டகாசத்தின் மிக முக்கியமான ஒன்று .
தாய்ப்பால் மாற்ற முனைவது !!
-------பால் பத்தல -------
இதை சொல்லாத பாட்டிமார்களே தற்கால பேறுகால வீடுகளில் இல்லை என்றே சொல்லலாம்த
காரணம் ..
மிக எளிது.
சுணக்கம் ,
சோம்பல் ,
மற்றும்
பாட்டி வைத்தியம் !!
சிசு மருத்துவனின் கடைசி வேண்டுகோள் ..!
தாய்மார்களே ,
பாட்டிகளே...!!
உங்கள் வயதையும் , அதன் காரணமாய் இருக்கும் பேறுகால அனுபவங்களையும் உளமாற மதிக்கின்றோம்
ஆனால்.
எந்த குழந்தையானாலும் சரி ,
அக்குழந்தையின் அழுகை என்பது அந்த சிசுவின் பாஷை ,
அந்த பிஞ்சுக்கு பேச தெரியாது ,
3 மாதம் முடியாத குழந்தைக்கு சிரிக்க கூட தெரியாது ,
ஆக
3 மாதம் வரை ,
அந்த உயிருக்கு தெரிந்ததெல்லாம்
சப்புவது ,
உறிவது ,
அழுவது ,
நெளிவது ,
கை கால் அசைப்பது ,
மல ஜலம் கழிப்பது ,
இவ்வளவுதான் ,
இந்த வாயில்ல சிசுக்களை வைத்துக்கொண்டு உங்கள் விசேஷ சிகிச்சை முறைகளையும் ,அனுபவமிக்க சிறப்பு வைத்தியங்களையும் செய்து கொண்டு அந்த உயிரோடும் , அதன் ஆரோக்கியத்தோடும் தயவுசெய்து விளையாடாதீர் ??
வெற்றிலையும்
பாதரசமும் ...!!!!
என்ன கலவை சார் இது !!!!
எனக்கு தெரிந்தவரை இம்மாதிரி செய்யும் பாட்டிமார்களுக்கு கடுமையான தண்டனைகள் அறிமுகப்படுத்திடவும் வேண்டும் !!
இவை யாவும் தவறு என உணர தண்டனைகள் கொடுக்கப்பட்டால் தான் முடியும் .!
அக்குழந்தை விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டி முடிக்கிறேன் ..!!


போலீசார் முன்னிலையில் தாக்கப்பாட்டார் பியூஷ்...

போலீசார் முன்னிலையில் தாக்கப்பாட்டார் பியூஷ்...
பிஜேபியின் பொருளாதார குளறுபடிகளை கேட்கப் போய் அடி வாங்கி வந்துள்ளார்.
பொருளாதாரத்தைப் பற்றி கொஞ்சமாவது அடிப்படை அறிவு இருப்பவர்களிடம் அவர் வாதம் செய்திருக்க வேண்டும்!
இந்துத்வாவாதிகளிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியுமா?


குவைத் இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு...

குவைத் இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு இன்று சற்றுமுன் எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது:
குவைத்தில் இந்திய தூதரகத்தில் இன்று தங்கள் நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் இந்தியர்கள் தனிப்பட்ட தகவல்கள் எதையும் கேட்டு இந்திய தூதரகத்தின் எந்த அதிகாரியும், ஊழியர்களும் உங்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டுக் மாட்டார்கள் எனவும் யாரும் ஏமாற கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு காரணம் குவைத்தில் இந்திய தூதரகத்தில் வேலை செய்யும் அதிகாரிகள் என்ற பெயரில் பல இந்தியர்கள் தொடர்பு கொண்டு வங்கி தகவல்கள் கேட்பது மற்றும் உங்கள் பெயரில் அந்த புகார் உள்ளது, அதை சரிசெய்ய பணம் செலுத்த வேண்டும், இந்த வழக்கு உள்ளது என்பது போன்று, பல காரணங்களை கூறி யோசிக்கவிடாமல் பதட்டத்தில் நீங்களும் சுதாரித்துக் கொள்வதற்குள் ஏமாற்றி விடுகிறார்கள்.
இது போன்ற பல்வேறு ஏமாற்று வேலைகளை செய்து பலரை அவர்கள் வலையில் விழவைத்து இந்த ஏமாற்றுப் பேர்வழிகள் ஏமாற்றி உள்ளனர். இது தொடர்பாக பல புகார்கள் இந்திய தூதரகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.
இந்த ஏமாற்றுப் பேர்வழிகள் உங்களை பற்றி அனைத்து தகவல்களை நன்கு தெரிந்துகொண்டு இவ்வாறு ஏமாற்றி வருகிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே உங்கள் சிவில் ஐடி, வங்கி அட்டை மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்டவையின் எந்த தகவலும் தெரியாத எந்த ஒரு நபருக்கும் பகிர்வு செய்யாதீர்கள்.
பலர் வளைகுடாவில் வேலை வேண்டும் என்ற ஆர்வத்தில் எதாவது தளத்தில் விளம்பரம் பார்த்தால் சற்றும் யோசிக்காமல் உடன் பாஸ்போர்ட் நகல், சான்றிதழ்கள் நகல் உள்ளிட்டவை அனுப்பும் செயல்களை செய்கிறார்கள். இது முற்றிலும் தவறு, பல நேரங்களில் இது தவறான செயல்களுக்கு பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையே சீரழித்து விடுவார்கள்.
Reporting by Kuwait tamil pasanga Team



ஜாகிர் உசேனின் பத்தாம் வகுப்பு படிக்கும் மகள்



மதுரையைச் சேர்ந்த டீக்கடைக்காரர் ஜாகிர் உசேனின் பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் தண்யா தஸ்னம் அக்டோபரில் அமெரிக்க விண் வெளி ஆராய்ச்சி மையமான நாஸாவுக்குப் போகிறார்.
ஏழைக் குடும்பத்திலிருந்து தேர்வாகியுள்ள இந்த சகோதரியை வாழ்த்துவோம்.


IIT - ஓய்வு பெற்ற பேராசிரியர் மற்றும் அவரது மனைவியின் இறுதி நாட்கள்!!

IIT - ஓய்வு பெற்ற பேராசிரியர் மற்றும் அவரது மனைவியின் இறுதி நாட்கள்!!
இந்த புனிதமான சேவையை செய்து வரும் சகோதரர் Khaalid Ahamed & Uravugal - உறவுகள் அவர்களின் உருக்கமான கட்டுரை!!
நம்மால் இயன்ற அளவு இவர்களுக்கு தேவையான உதவியைச் செய்தால் இன்னும் பல ஆதரவற்ற மக்கள் பலனடைவார்கள்.
----------------------------------------------
கண்ணீரோடு எழுதுகிறேன் 😭
உறவுகள் பற்றி அனைவரும் அறிந்த ஒன்றுதான்.. இத்தனை நாளைவிட நேற்று நடந்த சம்பவம் மனதளவில் பாதிப்பும் அழுகையும் தான் இருந்தது
நேற்று (27-08-2019) இரவு ஒரு சகோதரி என்னை அழைத்து கொட்டிவாக்கத்தில் ஒரு அம்மா ரொம்ப முடியாமல் இருக்கிறார்கள் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கணும் என்றார்கள் நானும் விசாரித்தேன் உறவினர்கள் யாரும் இல்லையா என்றெல்லாம் கணவர் மட்டும் இருக்கிறார் அவரும் வயதானவர் என்றார்கள் . எப்போதும் போல உடனடியாக புகைப்படம் அனுப்புங்கள் என்னவென்று பார்க்கிறேன் என்றேன்.
அடுத்தசில நிமிடங்களில் புகைப்படம் வந்தது பார்த்தவுடன் மனது உடைந்து என்னை அறியாமல் கண்ணில் இருந்து அழுகை வரத்தொடங்கியது. உடனடியாக மத்திய சென்னை ஆம்புலன்ஸ் எடுத்துக்கொண்டு நானும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் காதர் அவர்களும் 20 நிமிடத்தில் சென்றோம்.
சென்று பார்த்தபோது வீட்டில் இருந்து 100 மீட்டர் அளவில் கூட செல்லமுடியாத அளவு துர்நாற்றம் . பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டேன் ஏன் உங்களுக்கு எதுவும் தெரியாத இந்த அளவு வரும் வரை அமைதியாக இருந்திர்கள் என்று அவர்கள் சொன்னது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது . இந்த கணவன் மனைவி வீடு வாங்கி 11 வருடங்களுக்கு முன் இங்கு வந்தார்கள். இதுவரைக்கும் ஒரு நாள் கூட எங்களிடம் பேசியதும் இல்லை. வீட்டை தொறந்து வைத்ததும் இல்லை நாங்கள் பேச சென்றாலும் பேச மாட்டார்கள் என்றார்கள்.
இன்று காலை தான் எங்களிடம் என் மனைவிக்கு ரொம்ப முடியல என்று சொன்னார் நாங்களும் 108 ஆம்புலன்ஸ் தொடர்புகொண்டு வரவைத்து பார்த்தோம். மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கணவர் அனுமதிக்கவில்லை என்றார்கள். காலையில் லேசாக உயிர் இருந்து இருக்கிறது என்றார்கள் . உடனடியாக நாங்கள் உள்ளே சென்று அவரிடம் நாங்கள் உங்கள் பிள்ளைகள் போல் தான் கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுங்கள் என்று சமாதானம் செய்து பார்த்தோம் . அந்த அம்மாவிற்கு எந்த ஒரு அசைவும் இல்லை.
அவரிடம் கேட்டோம் எப்படி நீங்கள் பேசுவீர்கள் என்று கால்களை அமுக்குங்கள் வலியில் லேசாக சத்தம் போடுவார் என்றார். நாங்களும் முயற்சி செய்தோம் ஒரு சத்தம் இல்லை எதுமே இல்லை உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தோம் அவர்களும் வந்தார்கள்.
அப்போது அந்த முதியவரிடம் விசாரித்தோம் என்ன ஆயிற்று என்று .. நான் IIT Retd Professor என்றும்.. எங்கள் மகள் 8 வருடங்கள் முன் மரணம் அடைந்து விட்டார் . ஒரு வருடங்களாக படுத்தப்படுகையாக என் மனைவி இருந்தார். எனக்கும் வயது ஆகிவிட்டது ஒரு வருடமாக நான் சேரில் தான் உக்காந்தே உறங்குவேன் . ஆறு மாதமாக ஒரே பக்கம் படுத்து கொண்டுதான் இருக்கிறார் என்றார். நாங்கள் உடனடியாக சுத்தம்செய்ய முயன்றபோது உடல்முழுக்க அவரை சுற்றி கரப்பான் இருந்தது . அது அந்த அம்மாவை கடித்து ஒரு பக்கம் முழுவதும் அழுகிப்போய் முழுவதும் சிதைந்து சதைகள் எல்லாமே கொட்டிக்கிடந்தது. மனதை கல்லாகி சுத்தம் செய்து வைத்தோம்.
இறுதியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து பார்த்த போது இறந்து விட்டார்கள் என்று உறுதி செய்தார்கள்.
எவ்வளவு மோசமான உடலகளை பார்த்து இருக்கிறேன் அழுத்தது இல்லை ... ஆனால் எப்படியாவது காப்பாத்தணும் என்ற நம்பிக்கையோடு வந்த இடத்தில ஏமாற்றம் மிஞ்சியதே என்ற ஏக்கம் சொல்லமுடியாத கண்ணீரை சிந்தினோம் 💔😭
உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அமரர் அறையில் 3.30 மணியளவில் வைத்துவிட்டு .
இன்று காலை பிள்ளைகள் இல்லாத இந்த தாய்க்கு பிள்ளையாய் இருந்து நல்லடக்கம் செய்ய உள்ளோம் 😞
உறவுகள் என்றும் என்றென்றும் தொடரும் ..
தொடர்புக்கு : 8056205080
----------------------------
Thanks: @Khaalid Ahamed, Uravugal - உறவுகள்




#அகண்ட_பாரதம்_வேண்டும்_என்று_உளரிய சங்கிக்கு சிறப்பான பதில் வீடியோ


இந்தியாவின் ஏவுகணை தொழில் நுட்ப நாயகன் திப்பு சுல்தான்



மத நல்லிணக்கதை இந்தியாவில் வளர்த்த
இந்தியாவின் ஏவுகணை தொழில் நுட்ப நாயகன் திப்பு சுல்தான்
-2:18

அனஸ் இப்றாஹிம் என்ற நீக்ரோ சிறுவன் குர்ஆன் ஓதும் அழகு!

அனஸ் இப்றாஹிம் என்ற நீக்ரோ சிறுவன் குர்ஆன் ஓதும் அழகு!
ஆப்ரிக்காவில் வெள்ளையர்களுக்கு அந்த மண்ணின் மைந்தர்களான கருப்பர்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர். எம்ஜிஆரின் அடிமைப் பெண், ஆயிரத்தில் ஒருவன் படங்களில் அது போன்ற காட்சிகளை அமைத்திருப்பார்கள். மிருகங்களை விட கேவலமாக நீக்ரோக்கள் நடத்தப்பட்டனர். அந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்றதற்கு பிறகு அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. சுதந்திர காற்றை சுவாசித்தனர். அடிமைதனத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர். இஸ்லாம் மிக வேகமாக பரவியது. அனஸ் இப்றாஹிம் என்ற நீக்ரோ சிறுவன் இறைவனின் வேதமாகிய குர்ஆனின் சூரா மாய்தாவை எவ்வளவு அழகாக ஓதுகிறான் பாருங்கள்.
அதே நேரம் நமது நாட்டில் இன்றும் பார்பனர்கள் சூத்திரர்கள் என்ற பேதங்களை கற்பித்து அதற்கு நியாயமும் சொல்லி வருகிறோம். அந்த சிறுவன் ஓதும் குர்ஆனின் சூரா மாய்தாவிலிருந்து ஒரு வசனத்தை தருகிறேன். இன்றும் போற்றி பாதுகாக்கப்படும் மனு ஸ்ருமிதியின் சில ஸ்லோகங்களை பட்டியலிடுகிறேன். இந்து மதத்திலிருந்து எந்த வற்புறுத்தலும் இல்லாமல் இஸ்லாத்தை நோக்கி மக்கள் ஏன் ஓடி வருகின்றனர் என்ற உண்மை விளங்கும்.
------------------------------------------------
நம்பிக்கை கொண்டவர்களே!! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
குர்ஆன் 5:8
-----------------------------------------------------
சூத்திரன் வேதம் ஓதக் கூடாது
சூத்திரனுக்கு இம்மைக்கு உபயோகமான அர்த்த சாஸ்திரத்தை சொல்லி வைக்கலாகாது. தனக்குச் சிஷ்யனாகாத சூத்திரனுக்கு உச்சிட்ட அன்னத்தைக் கொடுக்கக்கூடாது. ஓமம் பண்ணி மிகுதியை சூத்திரனுக்குக் கொடுக்கலாகாது . தருமம், விரதம் இவைகளை ஒரு பிராமணனை முன் வைத்துக் கொள்ளாமல் நேராய் அவனுக்கு
உபதேசிக்கக்கூடாது.
சாவிலும் பேதம்
சூத்திரன் இறந்துபோனால் ஊருக்குத் தெற்குப் பக்கத்திலும், வைசியன் இறந்துபோனால் மேற்குப் பக்கத்திலும். சத்திரியன் இறந்து போனால் வடக்குப்பக்கத்திலும், பிராமணன் இறந்துபோனால் கிழக்குப் பக்கத்திலும் எடுத்துக்கொண்டு போக வேண்டியது. ( அத் 5. சு.92)
"பிராமணனைப் பார்த்து, "நீ இதைச் செய்ய வேண்டும், என்று சொல்லுகிற சூத்திரன் வாயிலும் காதிலும் எண்ணெயைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்" அ.8. சு.272.
"பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம். ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாக மாட்டான்" அ. 8. சு.417.
"பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனை சித்தரவதை செய்து கொல்ல வேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருளை பிராமணன் தம் இஷ்டப்படி கொள்ளையிடலாம்." அ.9. சு.248.
"பிராமணன் மூடனானாலும் அவனே மேலானதெய்வம்" அ. 9. சு. 317.
"பிராமணர்கள் இழி தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் பூஜிக்கத்தக்கவர்கள் ஆவர்கள்." அ. 9. சு.319.
"ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் ஏதோ, அதைத்தான் சூத்திரனைக் கொன்றாலும் செய்ய வேண்டும்." அ.11. சு.131.
"அதுவும் முடியாவிடில் வருண மந்திரத்தை 3 நாள் ஜெபித்தால் போதுமானது." அ.11. சு.132.
"சூத்திரன் எவ்வளவு திறமையுடையவனாக யிருந்தாலும் கண்டிப்பாய் பொருள் சேர்க்கக் கூடாது. சூத்திரனைப் பொருள் சேர்க்கவிட்டால் அது பிராமணனுக்கு துன்பமாய் முடியும்." அ.10. சு.129.