Followers

Thursday, September 28, 2006

இந்து மத வேதங்களில் காணப்படும் இறை இல்லம் !

இந்து மத வேதங்களில் காணப்படும் இறை இல்லம் !

நம்மை படைத்த இறைவனை எந்த சக்தியாலும் பூமியில் பார்க்க முடியாது. அதற்கான சக்தி நம் கண்களுக்கு கொடுக்கப் பட வில்லை என்று முன்பு பார்த்தோம். யாரும் காணாதபடிக்கு இப்பிரபஞ்சத்திற்கு அப்பால் இருக்கும் இறைவனே வணக்கத்திற்கு தகுதியானவன். மனிதர்களை விட உயர்ந்த தன்மை கொண்டவனைத்தான் நாமும் இறைவன் என்று வணங்க முடியும்.அந்த இறைவன் தன்னை வணங்குவதற்காக முதல் ஆலயத்தை உலகில் நிர்மாணிக்கிறான். முதன் முதலாக ஆதாம் மூலமாக உலகில் கட்டப் பட்ட முதல் இறை இல்லமான கஃபாவை நோக்கி உலக மக்கள் அனைவரும் தொழ வேண்டும் என்பது இறைவனின் கட்டளையாகும்.

'அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும் பாக்கியம் பொருந்தியதாகவும மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் மக்காவில் உள்ளதாகும்'
3 : 96 - குர்ஆன்

இக்கட்டிடம் நோவா காலத்தில் ஏற்பட்ட ஜலப்பிரளயத்தால் சிதிலமடைந்தது. அதன் பிறகு ஆபரஹாம் இறைக் கட்டளைப் படி அந்த பாலைவனத்தைக் கண்டு பிடித்து தனது மனைவியையும் தனது மகன் இஸ்மாயீலையும் குடியமர்த்தினார். இறைவனின்அற்புதமாக என்றும் (இன்றும்) வற்றாத ஸம்ஸம் கிணறு ஏற்பட்டபின் அந்த பாலைவனம் ஊராக மாறியது. அங்கே முதல் ஆலயத்தை தந்தையும் மகனும் மறுபடியும் கட்டினார்கள். இநத ஸம்ஸம் நீரூற்று இன்று வரை வற்றாமல் ஹஜ்பயணம் செய்பவரிலிருந்து உள்ளூர் மக்கள் வரை பல கோடி பேரின் தண்ணீர தேவையைப் பூர்த்தியாக்குகிறது. இது இறைவனின் அருட்கொடைதான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

ஏக இறைவனை வணங்குவதற்காக கட்டப் பட்ட இந்த தொன்மையான ஆலயத்தை முன்னோக்கியே அதிகமான இறைத் தூதர்களும் அவர்களைப் பின் பற்றியவர்களும் வணங்கியிருக்கின்றார்கள்.



மக்காவில் இருக்கும் ஆதி இறை இல்லமான கஃபாவை பல வேதங்களும் சிறப்பித்துச் சொல்கின்றன. இந்த இறை இல்லத்திற்கு பல பெயர்களை குர்ஆனிலும், முகமது நபியின் வாக்குகளிலும் ஆங்காங்கே பல இடங்களில் கோடிட்டுக் காட்டப் படுகின்றன. அவைகள் பின்வருமாறு: கஃபா, கஃபதுல்லா, பைத்துல்லாஹ், பைத்துல் ஹரம், பைத்துல்அதீக், பைத்துல் மஃமூர், மஸ்ஜிதுல் ஹராம் என்று பல பெயர்களில் குறிப்பிடப் படுகிறது.

இதே கஃபாவை இந்து மத வேதங்களும் பல இடங்களில் பல பெயர்களில் குறிப்பிடுகின்றன. அவை பின் வருமாறு : இலாஸ்பாத், இலயாஸ்பாத், நபா பிரிதிவி, நபிகமால், ஆதி புஷ்கார் திர்தா, மக்தேஷ்வர், துரா காபன் போன்றவை. இனிஇவை ஒவ்வொன்றைப் பற்றியும் சிறிது விரிவாக பார்ப்போம்.

1).இலாஸ்பாத்

இல் (il) இல்லய்யஃ (illiah) இலா (ila) இலாயா (ilya) - சமஸ்கிரத சொல்லான இதன் பொருளானது 'வணக்கத்திற்குரிய ஒன்று' என்பதாகும்.

(வணக்கத்திற்குரியவனை அரபியில் 'இலாஹ்' என்றும், ஹீப்ரூவில் 'எல, எலோஹ், எலோஹிம்' என்றும் அராமிக்கில் 'எல்லாய்' என்றும் கூறப்படுவதை முன்பே பார்த்தோம்.)

'பாத்' என்பது இடத்தைக் குறிக்கும் சொல்லாகும். இலாஸ்பாத் என்பதற்கு 'இலா' விற்குரிய இடம் - 'வணக்கத்திற்குரிய இடம்' என்றாகிறது.

Sir M. Monier Williams - தனது சமஸ்கிரத - ஆங்கில அகராதியில் 'இலாஸ்பாத்' என்பது புண்ணியஸ்தலத்தின் பெயராகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இலா (ila) எனபது குறிப்பிட்ட கடவுளின் பெயர். "இலாஸ்பாத்" என்னும் போது "கடவுளுக்குரிய ஸ்தலமாகும்" என்று Griftith தன்னுடைய மொழி பெயர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

பைத்துல்லாஹ் (இறைவனின் இல்லம்) என்று அரபியில் கூறுவதையே இந்து கிரந்தங்கள் சமஸ்கிரதத்தில் "இலாஸ்பாத்" என்று கூறுகிறது.

இலயாஸ்பாத்

இலயாஸ்பாத் 'பிரதி விகா பவித்திரஸ்தான்' என்று பண்டித ஸ்ரீராம் சர்மா ஆச்சாரியர் இந்தியில் மொழி பெயர்த்துள்ளார். 'பூலோகத்திலுள்ள புண்ணிய ஸ்தலம்' என்பது இதன் பொருளாகும்.

மக்தேஷ்வர்

'மக்' என்பது 'மக்கா' நகரைக் குறிக்கிறது. 'ஈஸ்வர்' என்றால் கடவுள். 'மக்தேஷ்வர்' என்றால் 'மக்காவின் கடவுள்' என்று Sir. M. Monier Williams தன் சமஸ்கிரத ஆங்கில அகராதியில் கூறுகிறார்.

நபா ப்ரதிவியா

'நபா' என்பதன் பொருள் 'மையம்'. 'பிரதிவி'என்பதன் பொருள் 'பூமி'. 'நபா ப்ரதிவி' என்னும் பொழுது பூமியின் மையம் என்றாகிறது. பூமத்திய ரேகையை ஒட்டியே மக்கா நகர் அமைந்திருப்பதையும் நாம் பார்க்கிறோம்.

'இலாயாஸ்த பதே வாயம் நபா ப்ரதிவியா ஆதி'
3 : 29 : 4 - ரிக் வேதம்

'இறைவனின் இல்லமானது பூமியின் மையத்திலுள்ளது' என்று கஃபாவைக் குறித்து ரிக் வேதம் தகவல் தருகிறது.

நபிகமால் :

படைப்பினங்கள் அனைத்தையும் படைத்த ஈஸ்வரன் அதன் பிதிநிதியாக பரம்மனை நியமித்தார். எல்லா சிறப்பியல்புகளையும் பூமி பெற்ற பின்பு பிரம்மன் தன்னுடைய சிம்மாசனத்தை பூமி மீது அமைத்தார். பூமி தாவரங்களைப் பிரசவித்ததும் 'ஜம்பு துவிப்' என்ற இடத்தில் ஆகும்.

ஜ+அம்பு+துவிப் = வாழ்வு + நீர் + தீவு = நீர் எங்கு கிடைக்கிறதோ அங்கு தான் வாழ்க்கை துவங்குகிறது.

அந்த மையப் பகுதியிலிருந்து தான் செயல் மற்றும் வழிபாடும் துவங்கியது. நபிகமால் - பூமிக்குள்ளிருந்து எடுக்கப் பட்ட பாறைகளாலும், கனிமப் பொருள்களாலும் அடுக்கப் பட்டதாகும். அது ஆரியர்கள் அல்லாதவர்கள் குடியிருக்கும் இடமாகவும், அறிந்து கொள்ள முடியாத இடத்திலும் இருக்கிறது. நபிக்கமால் ஒன்று கூடும் மையமாகவும் குடி நீர் (ஸம் ஸம் நீரைக் குறிக்கிறது) வழங்கும் இடமாகவும் இருக்கும்.
- ஹரிவன்ஸ் புராணா இரண்டாம் பாகம்
499 ஆம் பக்கம் - பண்டிட் ஸ்ரீராம்சர்மா வின் 'பதம புராணா' மொழி பெயர்ப்பு.

ஆதி புஷ்கார் திர்தா:

திர்தா என்றால் மிகவும் புராதன புனித ஸ்தலம் என்பதாகும். பதம் புராணாவில் நபி கமாலுக்கு இந்த சொல் உபயோகப் படுத்தப் பட்டுள்ளது.

புஷ்கார் திர்தாவிற்கு சேவை புரிவோமானால் பாவங்கள் நம்மை விட்டு மீட்கப் படுகிறது. புஷ்கார் திர்தாவிற்கு புண்ணிய யாத்திரை செல்கின்றவர்கள், நிலையான வெகுமதிக்கு தகுதியுடையவராவார். புஷ்கார் திர்தா புண்ணிய ஸ்தலங்களிலெல்லாம் மிகப்பழமையானது. இங்கு சென்று நீராடுபவர்களுடைய பாவங்கள் கழுவப் பட்டு விடுகிறது.
94 அக்டோபர் - பக்கம் 96 - கல்யாண்

தரு காபன்:

சமஸ்கிரதத்தில் 'தர்' என்பதற்கு 'வனாந்திரம்' என்று பொருள் வரும். அரபு பாலைவனத்தை 'வனாந்திரம்' என்றே கூறுவர். அரபுலகை பைபிளும் வனாந்திரம் என்றே கூறுகிறது. 'காபன்' என்பது தெளிவாக கஃபாவைக் குறிக்கும் சொல்லாகும். 'தருகாபன்' என்பதற்கு வனாந்திரத்திலுள்ள கஃபா என்ற பொருளாகிறது.

நலந்த விஷால் ஷப்த் ஷாகர் என்ற அகராதியானது 'தருகாபன்' என்பதற்கு வனாந்திரத்திலுள்ள புண்ணிய ஸ்தலம் என்ற பொருளைத் தருகிறது.

' ஏ பக்தர்களே! கடற்கரை அருகிலிருக்கும் 'தருகாபன்' மனிதனுடையது அல்ல. அங்கு நீ வழிபாடு பண்ணுவாயாக! அது நீ சொர்க்கம் செல்ல பரிந்தரை செய்யும்'

10 : 155 : 3 - ரிக் வேதம்

இந்து மத நண்பர்கள் ஆதி இறை இல்லத்தை முற்றிலும் மறந்தாலும் அறிந்தோ அறியாமலோ முஸ்லிம்கள் கஃபாவுக்கு செய்யும் வணக்கத்தைப் போன்று சில கிரியைகளை இன்றும் செய்து வருகிறார்கள். முஸ்லிமகள் அந்த கஃபாவை நோக்கி தொழுதும் ஏழு முறை சுற்றி வலம் வந்தும் தங்கள் பிரார்த்தனைகளை இறைவனிடம் கேட்கிறார்கள். இதைத் தொலைக் காட்சியிலும் பல முறை பார்த்திருப்போம். இதே போல் இந்துக்களும் காஃபா வடிவில் வீட்டிற்கு ஒரு துளசி மாடம் கட்டி அதில் துளசிச் செடி வைத்தும், ஊருக்கு ஒன்றிரண்டு கற்பக் கிரகம் (கோவிலினுள்) கஃபா வடிவில் சதுரமாக கட்டி அதனுள் விக்ரகங்களை வைத்தும் வணங்குகிறார்கள். அதனை வலமும் வருகிறார்கள். மேலும் திருமண விஷேஷ நாட்களில் அக்னி குண்டமும் (கஃபா வடிவில்) கட்டி அதில் அக்னி வளர்த்தும் அவைகளை வணங்கியும் வலம் வரவும் செய்கிறார்கள். இந்த பழக்கங்களெல்லாம் முன்பு கஃபாவை வணங்கி வந்ததன் தாக்கத்தினாலும் இருக்கலாம். இது விபரங்களை இறைவனே அறிவான்.

'எவருடைய அறிவு அவரிடமிருந்து எடுக்கப் பட்டு விடுகிறதோ அவரே போலி தெய்வங்களை வணங்குவர்.'

- பகவத் கீதை - அதிதியாயம் 7 - வசனம் 20

'நம்மை படைத்த இறைவனை கற்பனை செய்ய நம்மால் முடியாது'

-ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் 4 - 19
-யஜூர் வேதம் 32 - 3

'இயற்கையை வணங்குபவர் இருளில் நுழைந்து விட்டனர்'

-யஜீர் வேதம் 40 : 9

மேற்கண்ட வசனங்களின் மூலம் நம் விருப்பத்திற்கு கடவுள்களின் உருவங்களை உருவாக்கி வணங்குவது கூடாது என்று விளங்குகிறோம்.


There are various places of pilgrimage in Hinduism. One of the sacred places mentioned in
1). Rigved, Bk. 3 hymn 29 verse 4 is “Ilayspad, which is situated at Nabha prathvi.”
‘Ila’ means God or Allah, and ‘spad’ means place, therefore Ilaspad means place of God. Nabha means center and prathvi mean earth. Thus this verse of the Veda prescribes pilgrimage to a place of God situated at the center of the earth.

Sanskrit-English dictionary by M. Monier Williams (Edition 2002) states that Ilaspad is “Name of a Tirtha” i.e. place of Pilgrimage – however its location is not known.

2). Rigved Bk. 3 hymn 29 verse 11
Prophet Muhammad (pbuh) is mentioned as ‘Narashansa’.
Thus we can conclude that this Ilayspad, place of pilgrimage mentioned in Rigved is Makkah.

3).Makkah is also mentioned as Ilaspad i.e. Allah’s holy place in
Rigved Book 1 hymn 128 verse 1

4).The first House (of worship)
Appointed for men
Was that at Bakka
Full of blessing and of guidance
For all kinds of beings.
(Al Quran 3:96)

‘Bacca’ is another name for Makkah and we know today that Makkah is situated at the center of the earth.

பிரபஞ்சத்தைப் படைத்து காத்து அருள் செய்யும் இறைவன் இப் பிரபஞ்சத்திற்கு அப்பால் இருக்கிறான். படைப்புகள் வேறு அதைப் படைத்தவன் வேறு. அந்த படைப்பாளனையே வணங்குவோம். இறப்புக்கு பின்பு சுவனத்தையும் அடைவோம்.

இறைவனேமிக அறிந்தவன்

தகவல் உதவிக்கு நன்றி
ஜாகிர் நாயக், அபு ஆசியா

என்றும் அன்புடன்
சுவனப் பிரியன்

முகமது நபியையே கண்டிக்கும் குர்ஆனிய வசனம்!

முகமது நபியையே கண்டிக்கும் குர்ஆனிய வசனம்!

'தன்னிடம் அந்த குருடர் வந்ததற்காக இவர் (முகம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார்.'

80 : 1, 2 -குர்ஆன்

ஒரு முறை முகமது நபி உயர் குலத்தவரான குரைஷிகளிடம் இஸ்லாமிய போதனைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது அவர்கள் 'முகம்மதே! நீர் சொல்லும் கொள்கைகள் நன்றாகத்தான் இருக்கிறது. ஒரே இறைவனை ஏற்க்கச் சொல்கிறீர். ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் ஒரு நிபந்தனை. கருப்பு அடிமைகளோடு எங்களையும் ஒன்றாக உடகார வைத்து போதிக்கிறீரே அது தான் எங்களுக்கு சிரமமாக இருக்கிறது. எங்களுக்கு ஒரு நாள் அந்த அடிமைகளுக்கு வேறொரு நாள் என்று பிரித்து உபதேசம் செய்தால் உம்முடைய கோரிக்கையை பரிசீலிக்கிறோம்' என்ற ரீதியில் கோரிக்கை வைக்க ஆரம்பித்தனர்.

இதன் மூலம் நம் நாட்டு பிராமணியத்தையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு அந்த மக்களிடத்தில் நிற வெறியும் குலப் பெருமையும் நிறைந்திருந்ததை விளங்க முடிகிறது. முகமது நபியும் சிறிது யோசிக்கிறார்கள். முதலில் அவர்கள் கோரிக்கையை ஏற்று இஸ்லாத்துக்குள் வரவழைப்போம். பிறகு நம்முடைய பிரச்சாரத்தால் அவர்களின் நிற வெறியை போக்கி விடலாம் என்று மனதுக்குள் நினைத்தவராக மேற்க் கொண்டு குரைஷிகளிடம் பேச முகமது நபி முற்படுகிறார்.

அந்த நேரத்தில் அந்த சமுதாயத்தில் இழிவாக கருதப்பட்டவரான அப்துல்லா என்பவர் அந்த இடத்துக்கு வருகிறார். இவருக்கு கண் தெரியாது. முகமது நபி சிலருடன் பேசிக் கொண்டிருப்பதை உணர்ந்து கொண்ட இந்த குருடர் 'இறைவனின் தூதரே! அஸ்ஸலாமு அலைக்கும்' என்று கூறுகிறார். இதை முகமது நபி விரும்பவில்லை. அங்கு பிரச்சினையே இது போன்ற இழி குலத்தவர் குறிப்பிட்ட சபைக்கு வரக் கூடாது என்பதே! எனவே முகமது நபி முகத்தை சற்று கடுகடுப்பாக்கிக் கொண்டு அப்துல்லாவுக்கு பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார். அப்துல்லாவும் 'இறைவனின் தூதர் ஏதோ சங்கடத்தில் இருக்கிறாரபோல' என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு சென்று விடுகிறார்.

இந்த நேரத்தில் தான் இறைவனிடமிருந்து ஒரு வசனம் இறங்குகிறது.

'தன்னிடம் அந்த குருடர் வந்ததற்காக இவர் (முகம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது முகம்மதே உமக்கு எப்படி தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம்.'

'யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர். அவன் பரிசுத்தமாக ஆகா விட்டால் உம் மீது (குற்றம்) ஏதும் இல்லை. இறைவனை அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர். அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை. விரும்பியவர் படிப்பினை பெற்றுக் கொள்வார்.'

80 : 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 - குர்ஆன்

முகமது நபி கோபம் அடைந்ததோ, முகத்தை சுளித்ததோ கண் தெரியாத இந்த மனிதருக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்காது. அவர்கள் முகத்தை சுளித்துக் கொண்டு உயர் குலத்தவரோடு பேசிக் கொண்டிருந்திருக்கலாம்.

ஆனால் உடனடியாக இறைவன் புறத்திலிருந்து எச்சரிக்கை வருகிறது.

உம்மை ஆர்வத்தோடு தேடி வருகின்ற இந்த குருடரை உயர் குலத்தவருக்காக விரட்டி அடிக்கிறீரா? என்று இறைவன் முகமது நபியைக் கண்டிக்கிறான்.

குர்ஆன் முழுக்க ஒவ்வொரு வசனத்திலும் 'முகம்மதே! மக்களுக்குக் கூறுவீராக!' என்று அடிக்கடி நேரிடையாகக் குறிப்பிடும் இறைவன், இந்த குறிப்பிட்ட வசனத்தில் மட்டும் ஏதோ ஓர் மூன்றாம் மனிதரிடம் பேசுவது போல் 'இவர் கடுகடுத்தார். அலட்சியம் செய்தார்' என்ற ரீதியில் வசனம் அமைந்திருப்பதிலிருந்து இறைவனின் கோபம் நமக்கும் விளங்குகிறது.

இப்படி ஒரு சம்பவம் நடந்தது அந்த குருடருக்கே மற்றவர்கள் சொல்லித்தான் தெரிகிறது. இந்த சம்பவம் நமக்கு ஒரு உண்மையை விளக்குகிறது.

குர்ஆனை முகமது நபி தாமே சொந்தமாக உருவாக்கியிருந்தால் இவ்வளவு கடுமையாக விமர்சனம் செய்கின்ற ஒரு வாசகத்தைத் தமக்கு எதிராக அவர்கள் உருவாக்கியிருக்க முடியாது.

காலா காலத்துக்கும் இந்த வேதத்தைப் படிப்பவர்களெல்லாம் தம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று நினைத்து இந்த வசனத்தை நீக்கியும் இருக்கலாம். யாருக்கும் தெரியப் போவதில்லை.

குர்ஆன் முகமது நபி உருவாக்கியது அல்ல என்பதாலும் இறைவன் புறத்திலிருந்து வந்தது என்பதாலும் தான் இதைக் கூட நபிகள் நாயகம் அவர்கள் அந்தக் குருடர் மத்தியிலும் தம்மைப் பெரிதும் மதிக்கின்ற சமுதாயத்தின் மத்தியிலும் 'இறைவனே என்னைக் கண்டித்து விட்டான்' என்று பிரகடனம் செய்கிறார்கள்.

இந்தக் குர்ஆன் இறைவன் அருளியதுதான் என்பதற்கு இந்த சம்பவத்தை சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.அது மட்டுமல்லாமல் முகமது நபியே ஆனாலும் அவர்கள் இறைவன் விருப்பத்திற்கு மாற்றமாக எதையும் செய்ய அதிகாரம் இல்லை என்ற செய்தியும் நமக்கு கிடைக்கிறது.

செய்பவர் யார் என்று பார்த்து இறைவன் நீதி வழங்க மாட்டான். செய்யப் படும் காரியத்தைத்தான் அவன் பார்ப்பான் என்பதையும் இதிலிருந்து அறியலாம்.

ஒரு சாதாரண மனிதராகக் கருதப்பட்ட கண் தெரியாதவருக்காக தனது தூதரையே இறைவன் கண்டிக்கிறான் என்றால் இது எவ்வளவு அற்புதமான ஒரு மார்க்கம்! இது போன்ற ஒரு கடவுள் கொள்கையினால் மனித குலத்திற்கு எவ்வளவு பயன் கிட்டும் என்பதை எல்லாம் இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

முகமது நபி கூட இந்த சம்பவத்திற்கு பிறகு அப்துல்லா இப்னு மக்தூம் என்ற அந்தக் குருடரிடத்தில் முன்பிருந்ததை விட அதிக மரியாதையோடு நடந்து கொண்ட வரலாற்றையும் பார்க்கிறோம்.

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.

Saturday, September 23, 2006

கவிக்கோ அப்துல் ரஹ்மானின் சிந்தனைத் துளி!

கவிக்கோ அப்துல் ரஹ்மானின் சிந்தனைத் துளி!

குர்ஆன் எனும் கடலோரம்...........!

குர்ஆன்- ஒரு மகா சமுத்திரம்
நாம் அதன் கரையிலேயே
உலா வருகிறோம் - ஆம்
ஓதுதல் எனும் கரையில்
காலையிலோ மாலையிலோ
'பரக்கத்' எனும் காற்று வாங்குகிறோம்.

கடலைப் பார்த்தாலே நமக்கு
ஒருவித அச்சம்தான்
கரையிலேயெ - நின்று விடுவோம்
குர்ஆன் மீதும் நமக்கு
ஒரு வித மதிப்பச்சம் அதனால் -
மத்ரஸா எனும் கரையைத் தாண்டுவதில்லை.

கடலின் -
மேற்பரப்பை மட்டுமே நாமறிவோம்
அதன் பிரம்மாண்டத்தை அறிய மாட்டோம்
குர்ஆனை -
மேலோட்டமாகவே நாம் ஓதுவோம்
அதன் மகத்துவத்தை
நாம் அறிய மாட்டோம்

புதையல்களை ஒளித்து வைத்திருக்கும்
கடலின் ஆழத்தை நாம் கண்டதில்லை
வாழ்வின் பொக்கிஷங்கள் குவிந்திருக்கும்
குர்ஆனின் - ஆழிய அர்த்தங்களையும்
நாம் உணர்ந்ததில்லை.

கடல் அலையின் -
ஓசை நம்மோடு பேசினாலும்
அதன் மொழி நமக்கு புரிவதில்லை.

குர்ஆன் வசனங்களின் -
ஒலிநயம் நம்மிடம்
ஆயிரமாயிரம் சேதி சொல்கிறது
அதன் மொழியோ நமக்கு அந்நியம்.

கடல -
நாம் அறியாதது எனினும்
அதன் கதைகளை நிறையக் கேட்டதுண்டு
குர்ஆனை -
நாம் அறியாவிட்டாலும் அதன் -
பெருமைகளை நிறைய பேசுவதுண்டு.

ஏழு கடல்களும் அதற்கப்பால்
சிறை வைக்கப்பட்ட ராஜகுமாரியும்
நாம் படித்த கதை
ஏழு வானமும் அழகிய சுவனக் கன்னிகளும்
குர்ஆன் நமக்குச் சொல்லும் உண்மை.

ராஜகுமாரி மேல் நமக்கு ஆசைதான்
ஆனால் - ராஜகுமாரனைப் போல்
வீர சாகசம் புரிய நாம் தயாரில்லை.

சுவனத்தின் மீதும் தூய கன்னியர் மீதும்
நமக்கு ஆசைதான் ஆனால்
அதனை அடைவதற்காய் -
நல்லடியார்களைப் போல்
இறைவழியில் உழைக்க நாம் தயாரில்லை.

கடற்கரையில் -
பௌர்ணமியின் கனவொளியில்
பாறை மேல் வந்தமரும்
கடற்கன்னியரை
வர்ணிக்கக் கேட்டு வாய் பிளந்து
நிற்பது போல்

குர்ஆனில் -
சுவனத்து (ஹூருல்ஈன்) மங்கையரைப்
பற்றிய
வர்ணனைகளை வசனங்களில் வாசித்து
ஏக்கப் பெருமூச்சு விடுகிறோம்.

கடற்கன்னி மேல் ஆசையிருந்தும்
அலைகளின் சீற்றத்தைக் கண்டு மருண்டு
கடலில் நாம் குதிப்பதில்லை.

சுவன மங்கையர் மேல் ஆசையிருந்தும்
இறைச்சட்டங்களுக்கு மிரண்டு போய்
குர்ஆனுக்குள் - முழுமையாய் நுழையவும்
நாம் தயாரில்லை.

கடலில் -
யாராவது நீச்சலடித்தால்
வியப்போடு வேடிக்கை பார்ப்போம்
குர்ஆனை -
யாராவது விரிவுரை செய்தால்
வாய் பிளந்து கேட்டுக் கொள்வோம்

கடலில் -
பயணம் செய்பவர்கள்
மேற்பரப்பை மட்டுமே பார்ப்பார்கள்
குர்ஆனை -
மனனம் செய்பவர்கள் - மேலோட்டமாக
ஓதுவதுடன் மட்டுமே நின்று விடுவார்கள்.

கடலில் -
முத்தெடுக்க ஆசையுண்டு ஆனால் -
மூச்சடக்கி மூழ்க நாம் தயாரில்லை.

குர்ஆனின் -
பரக்கத் மீது ஆசையுண்டு. ஆனால் -
அதனைக் கற்று - எந்நிலையிலும்
உறுதியாய் பின்பற்ற நாம் தயாரில்லை.

கடலின் -
முத்துக்கள் கிடைக்காவிடினும்
அலைகளில் ஒதுங்கும்
கிளிஞசல்களோடு நாம்
திருப்தியடைகிறோம்.

குர்ஆனின்படி வாழாவிட்டாலும்
அதனை - நோய் நிவாரண
தாயத்துகளாக கட்டிக் கொள்கிறோம்.
படிக்காமல் பாத்திரத்தில் எழுதிக்
கரைத்துக் குடித்து விடுவோம்.

மொத்தத்தில் -
கடற்கரைக்கு வந்தும்
கடலை அறியாமலே நாம் திரும்பி விடுகிறோம்
குர்ஆனை நாம் பெற்றிருந்தும் -
குர்ஆனிய சமூகத்தில் பிறந்திருந்தும்
குர்ஆனை அறியாமலே மரணித்து விடுகிறோம்.

கடற்கரை மணலில் கால்தடம் பதித்து
முகவரி இல்லாமல் போனவர்களைப் போல்
குர்ஆனை அறியாது வாழ்ந்து அழிந்து போன
குருட்டுச் சமூகத்துடன்
நாமும் சேர்ந்து கொள்கிறோம்.

ஆனாலும்,
'நான் கடலைப் பார்த்திருக்கிறேன்' என்று
பெருமையாய்ச் சொல்லும் பாலகனைப் போல்
நாங்கள் - குர்ஆனுக்கு
சொந்தக்காரர்கள் என்று
பெருமைப்பட்டுக் கொள்வோம்.

-'கவிக்கோ' அப்துர் ரஹ்மானின் 'கடற்கரை' கவிதையைத் தழுவி எழுதப்பட்டது.

நன்றி
சமரசம்.

நோன்பு கடமையாக்கப் பட்டதன் காரணம்!

நோன்பு கடமையாக்கப் பட்டதன் காரணம்!

நாமெல்லாம் ஆவலோடு எதிர்பார்த்திருந்த ரமலான் மாதம் வந்து விட்டது. இந்த மாதத்தின் சிறப்பிறகு முக்கிய காரணம் இந்த மாதத்தில் தான் மனித குலத்தின் வழிகாட்டியான குர்ஆன் இறக்கி அருளப்பட்டது.

'இந்தக் குர்ஆன் ரமலான் மாதத்தில் தான் அருளப்பட்டது. அது மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும்.பொய்யை விட்டு உண்மையை பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.'

2 : 185 - குர்ஆன்

ஆக ரமலான் மாதத்தில் நாம் ஒரு மாதம் நோன்பு நோற்பது இந்த மாதத்தில் குர்ஆன் அருளப்பட்டது என்பதால் ஆகும்.

முகமது நபி அவர்கள் கூறினார்கள் : 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முகம்மது அவர்கள் இறைவனின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நாட்டுதல், ஏழைகளுக்கான வரியை கணக்கிட்டு வழங்குதல், ரமலானில் நோன்பு நோற்றல், ஹஜ் செய்தல் ஆகிய ஐந்து காரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது.

அறிவிப்பவர் : இப்னு உமர் நூல் : புகாரி 8

இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளதில் ஒரு அம்சமாக நோன்பு விளங்குவதால் இதன் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

இந்த நோன்பை இறைவன் முகமது நபி அவர்களின் சமுதாயத்துக்கு மட்டும் கடமையாக்கவில்லை. மாறாக முன் சென்ற சமுதாயத்துக்கும் நோன்பு கடமையாக்கப் பட்டிருந்தது. இதைப் பற்றி குர்ஆனில் கூறும் போது

'நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப் பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது.'

2 : 183,184 - குர்ஆன்

இந்த வசனத்தின் மூலம் நாம் இறை அச்சம் உடையவர்களாக மாற வேண்டும் என்பதற்காகவும் நோன்பு நம் மீது கடமையாக்கப் பட்டது என்று இறைவன் கூறுகிறான்.

வசதி இருக்கிறது. தனக்கு முன்னால் வித விதமான உணவு வகைகள் இருக்கிறது. யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டு விட்டால் எவருக்கும் தெரியப் போவதுமில்லை. இருந்தாலும் என் இறைவன் எனக்கு கட்டளை இட்டு விட்டான். எனவே நான் எந்த உணவையும் குறிப்பிட்ட நேரம் வரை தொட மாட்டேன் என்ற உறுதியும் இந்த நோன்பின் மூலம் நமக்கு கிடைக்கிறது.

'யார் பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் இறைவனுக்கு எந்தத் தேவையுமில்லை.' என்று முகமது நபி அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: நபித் தோழர் அபூ ஹீரைரா
1903 - புகாரி

இதன் மூலம் நோன்பு ஒரு மனிதனை தவறான வழிகளிலிருந்து மீள்வதற்கு துணை புரிய வேண்டும். அது இல்லாத படசத்தில் அவர் பசித்திருப்பதனால் இறைவனுக்கு எந்தத் தேவையுமில்லை என்பது முகமது நபியின் அறிவுரையாகும். இந்த நோன்பின் மூலம் வறியவர்களுக்கு பசியின் கொடுமை எப்படி இருக்கும் என்பதை செல்வந்தர்களும் உணருவதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது. மேலும் தேவைக்கு அதிகமான கொழுப்புக்ள் நம் உடம்பில் இருந்தால் நோன்பின் மூலம் அவை எல்லாம் சரி செய்யப் படுகின்றன. இதன் மூலம் மருத்துவத்துக்கும் நோன்பு ஒரு வகையில் காரணமாகிறது.

'உங்களில் நோயாளியாகவோ பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்கு சக்தி உள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரம்.'

2 : 184 - குர்ஆன்

பயணத்தில் இருப்பவர் வேறொரு நாளில் கணக்கிட்டு அந்த நோன்பை பூர்த்தியாக்க வேண்டும். வயது முதிர்ச்சியினால் நோன்பு நோற்க முடியாதவர், நோய் குணமாகி விடும் என்பதை எதிர்பார்க்க முடியாத தொடர்ச்சியான நோயிலிருக்கும் நோயாளிகளும் நோற்காத ஒவ்வொரு நோன்புக்கு பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும். மற்ற சாதாரண நோயாளிகள் தமது உடல்நிலை சரியானதும் விடுபட்ட நோன்புகளை கணக்கிட்டு நோற்பது கடமையாகும்.

'நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது.அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை'

2 : 187 - குர்ஆன்

இதன் மூலம் இரவு நேரங்களில் நோன்பு மாதங்களில் மனைவியோடு சந்தோஷமாக இருப்பது அனுமதிக்கப் பட்டுள்ளது.

'முகமது நபி அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது வெப்பத்தின் காரணமாக தமது தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்ததை நான் பார்த்துள்ளேன்' என்று நபித் தோழர் ஒருவர் அறிவிக்கிறார்.

ஆதார நூல்கள் : அஹமத், அபூ தாவூத், நஸயீ

நோன்பு வைத்திருப்பவர் உச்சி வெயில் நேரத்து வறட்சியைக் குறைத்துக் கொள்வதற்காக குளிப்பதும், தலையில் தண்ணீர் ஊற்றிக் கொள்வதும் கூடும் என்பதை இதிலிருந்து அறியலாம்.

'நோன்பு பாக்கி உள்ள நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்காக அவரது பொறுப்பாளர் நோன்பு நோற்க வேண்டும்' என்று முகமது நபி அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா, நூல் புகாரி

ஒரு மனிதர் முகமது நபி அவர்களிடம் வந்தார். 'இறைவனின் தூதரே! என தாய் மீது ஒரு மாத நோன்பு கடமையாக உள்ள நிலையில் மரணித்து விட்டார். அவரது சார்பில் நான் அதை நிறைவேற்றலாமா? என்று கேட்டார். அதற்கு முகமது நபி அவர்கள் 'ஆம் நிறைவேற்றலாம். இறைவனின் கடன் நிறைவேற்றப் பட அதிகம் தகுதியானது.' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்
1953 - புகாரி

இறந்தவரின் சொத்துக்காக மட்டும் வாரிசாக ஆசைப் படுவோர் மார்க்கம் அவர்கள் மீது சுமத்திய இந்தக் கடமையைச் செய்வதில்லை. நாமறிந்தவரை பெற்றோருக்காக ஹஜ் செய்பவர்களைக் கூட காண்கிறோம். ஆனால் நோன்பு நோற்பவர்களைக் காண முடிவதில்லை.

'முஸ்லிமான ஆண்களும் பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும் பெண்களும், உண்மை பேசும் ஆண்களும் பெண்களும், பொறுமையை மேற் கொள்ளும் ஆண்களும் பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும் பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும் பெண்களும், இறைவனை அதிகம் நினைக்கும் அண்களும் பெண்களும்ஆகியோர்களுக்கு இறைவன் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.

33 : 35 - குர்ஆன்

நோன்பு நோற்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இறைவன் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயாரித்துள்ளதாக வாக்களித்துள்ளதால் நோன்பை விடாது வைத்து இறைவனின் அன்பை பெற்றுக் கொள்வோமாக!

ரமலான் வந்து விட்டாலே சவூதியில் வாழ்க்கை முறை அப்படியே மாற்றத்திற்கு உள்ளாகி விடும். வேலை நேரம் அனைத்து கம்பெனிகளிலும் ஒரு மணி நேரம் அல்து இரண்டு மணி நேரம் குறைக்கப் பட்டு விடும். சில கம்பெனிகள், அலுவலகங்கள் அனைத்தும் இரவு எட்டிலிருந்து நள்ளிரவு இரண்டு அல்லது மூன்று மணி வரை வேலை நேரம் இருக்கும். பகல் பொழுது அனைத்தும் தூக்கத்திலேயே சென்று விடும். இந்த சூழலைப் பார்த்து மாற்று மத சகோதரர்கள் பலர் அவர்களாகவே விரும்பி நோன்பிருக்கும் காட்சியையும் பார்க்கிறோம். மாலை நேரம் ஆகி விட்டால் பள்ளிகளில் நோன்பு திறப்பவர்களுக்காக சவூதி வீடுகளில் இருந்தும், ஹோட்டல்களிலிருந்தும் பல வித உணவு பதார்த்தங்கள் வந்த வண்ணம் இருக்கும். அதை சவூதி நாட்டவரே அனைவரையும் அமர வைத்து பரிமாறுவது ஒவ்வொரு ரமலானிலும் நாம் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

சென்ற நோன்பில் இருந்தவர்கள் இந்த வருட நோன்பில் நம்மிடையே இல்லை. எனவே எல்லாம் வல்ல இறைவன் இந்த ரமலான் மாதத்தை அடையும் பாக்கியத்தை நமக்குத் தந்து, அந்த ரமலானில் கடை பிடிக்கும் காரியங்களை வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்கக் கூடியவர்களாக நம்மை ஆக்கி வைப்பனாக!

இணைய நண்பர்கள் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்களைக் கூறிக் கொள்கிறேன்.

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.

Saturday, September 16, 2006

பீட்டர் அல்போன்ஸீம் இஸ்லாமும்!

பீட்டர் அல்போன்ஸீம் இஸ்லாமும்!

திருமறையைப் பற்றி பேசுவதும் திருத் தூதரைப் பற்றி பேசுவதும் இறைவனை நான் புகழ்வதற்கு சமம் என்றே எண்ணுகிறேன். எனவே தான் இன்று இறைவனுடைய கருணையை நினைத்து நனறி சொல்கிறேன்.

திருக் குர்ஆனைப் பற்றி யார் தெரிந்து கொள்ள வேண்டுமோ,யார் புரிந்து கொள்ள வேண்டுமோ அவர்களுக்கான செய்திகளைத் தர இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர். எனக்கு ஒர சந்தேகமுண்டு. நம்முடைய மார்க்க அறிஞர்கள் தான்அதனை எனக்கு விளக்க வேண்டும். திருக் குர்ஆனை முஸ்லிம் அல்லாதவர்கள் புரிந்து கொள்ளாதது ஒரு விஷயம். அது இயற்கையும் கூட. ஆனால் முஸ்லிம்களே சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்களா என்று எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. முதல் பணி திருக்குர்ஆனை நாம் உண்மையாக புரிந்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் நமக்கு இருக்கின்ற மன சஞ்சலங்கள் சந்தேகங்கள் எல்லாம் அறுந்து போய் விடும்.

உலகத்திலே பயப்படுவதற்கு ஒன்றுமேயில்லை. புரிந்து கொண்டால் பயமில்லை. இந்த உலகிலே தவறாக புரிந்து கொள்ளப் பட்டிருக்கிற மதம் இஸ்லாம். இன்று யாரிடமும் போய்க் கேளுங்கள். இஸ்லாம் என்றால் என்ன?சாதாரணமாக இன்று என்ன நினைக்கிறார்கள்? அது தீவிரவாதிகளின் மதம்: அடிப்படை வாதிகளின் மதம். முன்னேற்றத்திற்கு விரோதமான மதம். ஜனநாயகத்துக்கு விரோதமான மதம். வாழ்க்கையிலே விஞ்ஞான வளர்ச்சி, அறிவியல் முன்னேற்றம், கல்வி இவற்றுக்கு எல்லாம் விரோதமான மதம் பெண்ணடிமைத் தனத்தை சாஸ்வாதமாக தனக்குள் எடுத்துக் கொண்டுள்ள மதம் - இப்படித்தானே இஸ்லாமை நிறைய பேர் புரிந்து கொண்டிருக்கிறோம்.இஸ்லாமை நாம் சரியாக புரிந்து கொண்டிருந்தால் நமக்கு அந்த பயம் இருந்திருக்காது. நாம் தைரியமாக சொல்ல முடியும் இது உண்மையிலேயே இறைவன் அருளிய மதம் என்ற யாரும் சொல்ல முடியும்.

நம் நாட்டிற்கு மிகப் பெரிய தேவை என்னவென்றால் நாம் ஒவ்வொருவரும் நாம் சார்ந்திருக்கின்ற மதங்களின் ஆழமான தத்துவங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.இதில் ஒருவர் மட்டும் புரிந்து கொண்டால் போதாது. நான் மட்டும் திருக் குர்ஆனைப் புரிந்து கொண்டால் போதுமா? நீங்கள் பைபிளையும் புரிந்து கொள்ள வேண்டும். பகவத் கீதையையும்் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் திருக் குர்ஆனைப் படிக்கின்ற போது எனக்கு பைபிளைப் படிக்கும் தோற்றமே வரும். பெயர்களை மட்டும் அல்ல வாசகங்களையும் சொல்லுகிறேன். இயேசு நாதர் உபவாசத்தை முடித்து விட்டு வரும் போது சாத்தான் அவரை சொதனைக்கு உட் படுத்துவான். விவிலியம் படித்தோருக்கு தெரியும். ஒர பெரிய மலை உச்சிக்குப் போய் அவரை நிறுத்தி, 'பார்: இது முழுவதையும் பார்.நிலப் பரப்புகளைப் பார். அங்கு இருக்கும் சுரங்கங்கள், வளங்கள், நிலங்கள், பழங்கள் எல்லாம் உனக்குத் தான் நீ என்ன செய்ய வேண்டும்? நீ என் காலில் விழுந்து வணங்க வேண்டும். அப்பொழுது ஏசு நாதர் சொல்வார் 'உலகமெல்லாம் எனக்கு கொடுத்தால் கூட இறைவனுடைய கால்களைத் தவிர வேறு கால்களை நான் வணங்க மாட்டேன்' என்று சொல்வார். அதே தான் முகமது நபிக்கும் நடக்கிறது. அவரைப் பார்த்து சொல்லுகிறார்கள் 'உங்களுக்கு பணம் வேண்டுமா? எத்தனைக் கோடி வேண்டுமானாலும் தருகிறோம். நீங்கள் ராஜாவாக முடி சூட்டிக் கொள்ள விரும்ர்கிறீர்களா? ராஜாவாகவே முடி சூட்டி வைக்கிறோம். ஆனால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த ஏக இறைவனை மறுக்க வேண்டும்.'

முகமது நபி என்ன பதில் சொல்கிறார்? மிக அற்புதமாக சொல்கிறார். 'ஒரு கையில் சந்திரனையும், இன்னொரு கையில் சூரியனையும் கொடுத்து இதை நீர் செய்ய சொன்னால் கூட என் உயிருக்கு பொறுப்பானவன் மீது ஆணையாக் சொல்கிறேன். இந்தப் பணியில் நான் வெற்றி பெறுவேன்.இல்லையேல் வீர மரணம் அடைவேன்.'

இயேசு நாதர் நபிகள் நாயகம் இரண்டு பேர்வாழ்க்கையிலும் ஒரேமாதிரி சம்பவம் தானே நடந்துள்ளது.சிலர் திருக்குர்ஆனைப் படித்து விடுவதோடு அதைப் புரிந்து கொண்டதாக நினைத்துக் கொள்கிறார்கள். அங்கு தான் தவறு ஆரம்பிக்கிறது என்று நினைக்கிறேன்.

நபிகள் மிக அருமையாகச் சொல்கிறார். 'நான் இரண்டை உங்களிடம் விட்டு விட்டுச் செல்கிறேன் ஒன்று திருக்குர்ஆன் இரண்டு என்னுடைய வாழ்க்கை.

நபியுடைய வாழ்க்கை என்பது குர்ஆனைப் புரிந்து கொள்வதற்கான வழி. அது மொழி என்றால் இது அகராதி.

குர்ஆனின் ஒவ்வொரு வாசகத்தையும் நபிகளுடைய வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.எங்கெல்லாம் நமக்கு சந்தேகம் வருகிறதோ, இது அப்படி இருக்குமோ இப்படி இருக்குமோ என எப்பொழுதெல்லாம் தடுமாற்றம் வருகிறதோ அப்பொழுதெல்லாம் நபிகளுடைய வாழ்க்கையோடு அதை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் அதனுடைய உண்மையான கருத்து நமக்குத் தெரியும்.

திருக்குர்ஆன் இறைவனுடைய நூல் என்ற நான் மழுமையாக நம்புகிறேன். இறைவன் தான் இதனை அருளியிருக்க முடியும் என்பதை நான் ஏதோ மேடைப் பேச்சுக்காக ஒப்புக்காக சொல்லவில்லை. நான் இதை உள்ளபடியே நம்புகிறேன். ஏன்? நபியவர்கள் நல்லவர்கள். கருணையுள்ளவர்கள், தயாள குணமுள்ளவரே ஒழிய அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது.

குர்ஆன் ஒரு கடல் போல..... அதில் இல்லாத பொருளே கிடையாது. மெரீனா கடற்கரையில் நின்று கொண்டு நான் கடலையும் வானையும் அளந்து விட்டேன் என்று சொல்வது எவ்வாறு அறியாமையோ அது போல குர்ஆனுடைய அகலத்தையும் அளவையும் இன்னும் அளந்து முடிக்கவில்லை. அதில் சொல்லாத விஷயங்கள் என்ன இருக்கின்றன? ஒரு தாய் தன் பிள்ளைக்கு எத்தனை ஆண்டுகள் பாலூட்ட வேண்டும் என்றும் அதில் சொல்லப் பட்டுள்ளது. சூரியன், சந்திரன், கோள்கள், நட்சத்திரம், அனைத்தைப் பற்றியும் உலகிலுள்ள அரசாங்கங்கள் கடை பிடிக்க வேண்டிய தர்மங்கள் பற்றியும் தனி மனித வாழ்க்கையில் கடை பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் பற்றியும் கல்வி - அறிவியலைப் பற்றியும் இப்படி சகல செய்திகளையும் படிக்காத ஒருவர் எப்படி சொல்ல முடியும்? ஆகவே அவருக்கு எப்பொழுதோ யாரோ ஒருவர் அருளியிருக்க வேண்டும். அருளியவர் யார்? அருளியவன் இறைவன் என்பதில் நமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. அவர் எழுதப் படிக்கத் தெரியாதவர் என்பது உனக்கு எப்படி தெரியும் என்று சிலர் கேட்கலாம்?

எதிரிகளுக்கும் நபிகளாருக்கும் இடையே உடன் படிக்கை ஏற்படுகிறது. உடன்படிக்கை யாருக்கும் யாருக்கும் என்று கேட்ட பொழுது 'ரசூலுல்லாஹ்' அதாவது இறைவனின் தூதருக்கும் எதிர்த் தரப்பினருக்கும் என்று எழுதுகிறார்கள். உடனே எதிரிகள் ஆட்சேபிக்கிறார்கள். உங்களை இறைத் தூதர் என்று நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. ஆகவே 'இறைவனின் தூதர்' எனும் வார்த்தையை நீக்கும் படிச் சொல்கிறார்கள். உடன் படிக்கையில் ரசூலுல்லாஹ் எனும் வார்த்தை எங்கே இருக்கிறது என்று கேட்டுத் தெரிந்து கொண்டு நபிகளாரே தம் கைப்பட அதை அழித்து விட்டு 'முஹம்மது என்றே போடுங்கள்' என்று கூறினார்.

அதே போல் எகிப்தில் உள்ள அரசருக்கு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு கடிதம் எழுதுகிறார் அதிலும் கூட கையெழுத்து இல்லை. முத்திரை தான் பதித்திருந்தார்கள்.அக்கடிதம் இன்று கூட உள்ளது.


எழுதப் படிக்கத் தெரியாத பள்ளிக் கூடம் போகாத ஒருவருக்கு ஈரேழு உலகத்தில் உள்ள அற்புதங்கள், அதிசயங்கள், உலக வரலாறு, அரசியல் சாணக்கியம், இவை அத்தனையும் ஒரு புத்தகத்தில் வருகிறது என்றால் அது இறைவனால் அருளப்பட்ட புத்தகமாகவே இருக்க முடியும்.அதில் மூன்றே விஷயங்கள் தான் முக்கியமானவை. The most simple pure religion இஸ்லாம் தான். அதில் பெரிய ஆசார சடங்குகள் எதுவும் இல்லை.

யாரெல்லாம் ஒரே இறைவனை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவனுக்கு இணை கற்ப்பிக்காமல் வணங்குகிறார்களோ, மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் எல்லோரும் இஸ்லாமியர்கள்.

அரபு மொழியில் சொல்வதை தமிழில் சொல்லுங்கள். எதிர்ப்பெ இருக்காது. 'பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்' என்று நீங்கள் சொன்னால் அரபி அறியாதோர், இவர் ஆதோ நம்மை திட்டுகிறார் என்று நினைப்பார். 'அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப் பெயரால்' என்று சொன்னால் யாருக்குஇங்கே கோபம் வரப் போகிறது?

கம்ப்யூட்டர் என்ற விஷேஷமான கருவி இன்று உலகின் முகவரியையே மாற்றி வைத்திருக்கிறது. இன்று இண்டர் நெட், இ மெயில் பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து வந்துநமது வீட்டுக் கதவைத் தட்டுகிறது.

இதில் நாம் செய்ய வேண்டியது என்ன? நம்முன் மிகப் பெரிய கேள்விக் குறி உள்ளது.

மதம் தேவையா?

மதம் தேவையெனில் எந்த மதம்?

மதம் தேவையா என்ற கேள்விக்கு நாம் வாழும் காலத்திலேயே பதிலைப் பார்த்து விட்டோம். எழுபது ஆண்டுகள் மதமே இல்லாமல் இருந்த ரஷ்யாவும் சினாவுமம் இன்று என்ன ஆனது? அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஆன்மீக வாசல்களைத் திறந்து விட்டிருக்கிறார்கள்.

ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ஓரினச் சேர்க்கை இன்று சர்வ சாதாரணமாகி விட்டது. டெல்லியிலும்Gay community உருவாகி விட்டது. ஓரினச் சேர்க்கை ஒப்பந்தங்களை சட்டப் பூர்வமாக்கக் கோரி நீதி மன்றங்களில் வழக்குகள் உள்ளன. இது தற்போது நமது தலை நகரிலும் வந்து விட்டது. கடந்த ஒரு வார காலமாக டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தஸ்தான் டைம்ஸ், இந்த போன்ற பிரபல நாளிதழ்களில் கூட இது சரிதானே என்று தோற்றமளிப்பது போன்ற கட்டுரைகள் வருவதைப் பார்க்கிறோம்.

ஆன்மீகம்,இறை நம்பிக்கை, இறையச்சம் இல்லை என்றால் இதுவரை நாம் ஏற்றுக் கொண்டிருக்கின்ற மனித உறவுக்கான நிறுவனங்கள் - திருமணம், குடும்பம், குழந்தை, தாய், தநதை, மகள், மகன், சகொதரி இது போன்ற உறவுகளெல்லாம் அழிந்து விடக் கூடிய அபாயம் இருக்கிறது. முதியவர்களுக்கு மரியாதை, நல்லெழுக்கம், மதிப்பிடுகள் இவை எல்லாம் தகர்ந்து போகும் இறையச்சம் இல்லை எனில்.

எப்படிப்பட்டமதம் தேவை?

நமக்கு சாந்தியும் சமாதானமும் தருகின்ற மதம் தேவை. இந்தியாவைப் போன்ற நாடுகளிலே பல்வேறு கலாச்சார அமைப்புகளைச் சார்ந்தவர்கள் எப்படி சமாதானமாக வாழ்வது என்று கற்றுத் தருகின்ற மதம்தான் நமக்கு வேண்டும்.

நம்மை பிரிக்கின்றவற்றை மதமாக ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்த உரை கல்லை வைத்துப் பார்த்தால் இஸ்லாம் இதற்கு நூற்றுக்கு நூறு பொருந்தும்.

நபிகள் ஒரு போதும் சொன்னதில்லை, எல்லோரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று! இன்னும் சொல்கிறார்,'இஸ்லாத்தை நிர்பந்திக்காதீர்கள்!' திருக்குர்ஆனை யார் மேலும் நிர்பந்திக்காதீர்கள்.

அது மட்டும் அல்ல இதர மதத்தைச் சார்ந்தவர்களைப் பழிக்காதீர்கள். மற்ற மதக் கருத்துக்களை விமர்சனத்திற்கு உள்ளாக்காதீர்கள். இதர மத சகோதரர்களை அன்போடு எற்றுக் கொள்ளுங்கள். இது நபிகளின் வாக்கு.

நபிகளின் வழியைப் புறக்கணித்து விட்டு வெறும் தாடியும், தொப்பியும் மட்டும் வைத்துக் கொண்டால் மட்டும் இஸ்லாமியர்கள் ஆகி விட முடியாது. இப்படிச் சொல்வதற்காக யாரும் கோபப் படக் கூடாது.

நபிகள் வாழ்ந்து காண்பித்தார். மதினாவில் வாழ்ந்த யூதர்களுக்கு முகமது நபி பாதுகாப்பு தருகிறார். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் நபிகள் வாழ்ந்து காட்டினார்கள்.

நபிகளார் காலத்தில் உயர்குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடி விட்டாள். குற்றம் நிரூபிக்கப் படுகிறது. நபிகளிடம் சிலர் வந்து அப் பெண்ணை தண்டிக்கக் கூடாது எனப் பரிந்துரைக்கின்றனர்.

'என் மகள் பாத்திமா இதைச் செய்திருந்தாலும் அவள் கையை வெட்டியிருப்பேன்' என்று நபிகள் கூறினார்கள். இங்கே தான் இந்த நூற்றாண்டுக்கு நபிகள் எப்படி பொருந்துகிறார் என்று பார்க்க வேண்டும்.

நபிகளார் இறக்கும் போது அவர் ஆட்சி செய்த சமஸ்தானம் பெரிய சமஸ்தானம். அரபு நாடு முழுவதும் அவரைத் தட்டிக் கேட்க ஆளே இல்லை. அவர் குரலை எதிர்த்துப் பேச ஆளில்லை. திருத்தூதரின் வார்த்தைதான் சட்டம். அவரின் வாழ்க்கைதான் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் சாசனமாக இருந்தது. அந்த கடைசி நாட்களிலே ஈச்சம் பாயிலே படுத்திருந்தார். கிழிந்த அங்கியைப் போட்டிருந்தார். நாளையோ நாளை மறுநாளோ மரணம். அப்பொழுது பக்கத்தில் இருப்பவரிடம் கேட்கிறார் 'நான் யாருக்காவது கடன் கொடுக்க வேண்டி இருக்கிறதா?'. பக்கத்திலிருப்பவர் சொவ்கிறார் 'ஒருவருக்கு மூன்று திர்ஹம் கொடுக்க வேண்டியுள்ளது.' அதற்கு முகமது நபி, 'உடனே அவரைக் கூப்பிட்டுக் கொடுத்து விடு. நான் நானை இறைவன் முன் கடனாளியாக நிற்க விரும்பவில்லை'.

இதுதான் நண்பர்களே திருக்குர்ஆனுடைய முழுச் செய்தி.

நாம் ஒவ்வொருவரும் கடன் வாங்கி இருக்கிறோம்.வசதியானவர்கள், படித்தவர்கள், திறமைகளைப் பெற்றவர்கள், நல்ல குடும்பங்களைப் பெற்றவர்கள், நிம்மதியாக வாழ்கிறவர்கள், பசியில்லாமல் வாழ்கிறவர்கள், தேவைக்கு உடுத்துகின்றவர்கள், அத்தனையும் நாம் இறைவனிடம் வாங்கிய கடன். இந்தக் கடனை நாம் திருப்பிக் கொடுக்கவில்லை என்று சொன்னால் இறைவன் முன் கடனாளியாகத் தான் நிற்போம்.

போர்க் கைதிகள் வந்து நிறுத்தப் பட்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் நபிகளாரின் அருமை மகள் பாத்திமா வருகிறார். உழைத்துக் காய்த்த தன் கைகளைக் காண்பிக்கிறார். நபிகளிடம், ' என் தந்தையே கைதிகளில் ஒருவரை என் வேலையாளாக அனுப்புங்கள்' என்று கேட்கிறார்.

நபிகள் கூறுகிறார், 'போரில் தந்தையை, தலைவனை இழந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களது வீட்டுக்குத்தான் இந்தக் கைதிகளை அனுப்புவேன். உன்னை இறைவன் பார்த்துக் கொள்வான்'

கடின உழைப்பு. இரக்கம், மனித நேயம், சமத்துவம்- இதுதான் இறைவன் தரும் செய்தி!

அரேபிய சமூகம் தமது சமூகத்தை விட நான்கைந்து மடங்கு பூர்ஷ்வா குணம் கொண்ட சமூகம்! கருப்பன், அடிமை என்று பேதம் காட்டிய சமூகத்தில் பிலாலைக் கொண்டு வந்து 'பாங்கு' சொல்ல வைக்கிறார் நபிகளார்.

அதுதான் முதல் இட ஒதுக்கீடு! அப்படித்தான் நாம் அதைப் பார்க்க வேண்டும்.

நாம் எப்படிப் பட்ட சமூக அமைப்பை அமைத்துக் கொள்ள வேண்டும்? அந்த அமைப்பில் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு, தாழ்த்தப் பட்டவர்களுக்கு, நலிந்தவர்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் எனபதை நபிகள் நாயகம் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்.

இதுதான் இந்த நூற்றாண்டிற்க்குப் பொருத்தமானது.

நான் மன நிறைவோடு விடை பெற ஆசைப் படுகிறேன். திருக்குர்ஆனுடைய செய்திகளைச் சொல்லும் போது திரு நபியின் வாழ்க்கையையும் நீங்கள் சேர்த்தே சொல்ல வேண்டும் என்பது மிக மக்கியம்.

ஓர் அற்புதமான வாக்கியம் உள்ளது.

'நான் கேட்டேன் -மறந்து விட்டேன்
நான் பார்த்தேன் - ஞாபகத்தில் வைத்திருந்தேன்
நான் செய்து பார்த்தேன் - புரிந்து கொண்டேன்'

I heard – I forgotten
I saw – I remember
I did it – I understood it

ஆகவே நபியின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சொல்லும் போதுதான் திருக் குர்ஆனின் செய்திகள் மனதில் பதியும்.

குர்ஆனைப் புரிய வைப்பது பிரச்சாரம் செய்வது எப்படி என்றால் குர்ஆனைப் பேசுவதாலோ கருத்தரங்கம் நடத்துவதாலோ அல்ல.

குர்ஆனைப் போல் வாழ்வதால் மட்டுமே அந்த குர்ஆனைப் பிரபலப் படுத்த முடியும்.

குர்ஆனின் படி வாழ்ந்து காட்டுங்கள் எனக் கூறி விடை பெறுகிறேன்.

- சென்னை சூளைமேடு பகுதியில் 'ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்' சார்பாக நடைபெற்ற 'குர்ஆன் அறிமுக விழாவில்' காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆற்றிய உரை.

இந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்

இந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்

இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி கியான்' என்றும் கூறுவர். இந்த வேதங்கள் சமஸ்கிரத மொழியில் அமைந்திருப்பதைக் காண்கிறோம். வேதம் இறக்கியருளப்பட்டக் காலத்தில் எழுத்துப் பயிற்சி இல்லாததால் ஆசிரியர்கள் வேதங்களை வாய் வழியாக ஓதி வந்தனர். அவ்வாறு தலைமுறை தலைமுறையாகச் சென்ற பல நூற்றாண்டுகளாக வாய் மொழியாகவே ஓதப் பட்டு வந்த வேதங்களை இன்று வரை கற்கப் பட்டும் கற்பிக்கப் பட்டும் ஓதப் பட்டும் வருகின்றன. சென்ற ஒரு நூற்றாண்டுக் காலத்திற்க்குள்ளாகத் தான் வேதங்களை எழுதுவது, அச்சிடுவது, மொழி பெயர்ப்பது என்னும் பழக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

எழுத்து முறை உலகிலேயே முதன் முதலாக பினீசியர் என்னும் கிழக்கு மத்திய தரைப் பிரதேச மக்களால் கண்டு பிடிக்கப் பட்டது என்பதை நாம் அறிவோம். பினீசியாவிலிருந்து மெசப்பட்டோமியா வழியாகவும் பாரசீகம் வழியாகவும் வந்து இப்புதுமை இந்தியாவை அடைந்திருக்க வேண்டும். ஆதியில் இந்தியாவில் பழக்கத்திற்கு வந்த எழுத்து முறை 'பிராமி' எனப்படும். இவ்வெழுத்துக்களிலேயே அசோகரது கல் வெட்டுக்கள் பொறிக்கப் பட்டுள்ளன.

இந்துக்களின் வேதங்கள் கி.மு. 1500 க்கும் கி.மு. ஆயிரத்துக்கும் இடைப் பட்ட காலத்தில் இயற்றப் பட்டதாக இருக்கலாம். சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு வியாஸர் அவற்றை தொகுத்தும் வகுத்தும் ரிக், யசூர், சாம, அதர்வம் என்று பாகு படுத்தி பதிப்பித்து இருக்கலாம் என்று இந்து மதப் பெரியார்கள் கூறுகின்றனர். ஆனால் அதற்கான சான்றுகள் எதையும் கூறவில்லை.

வேதம் அருளப்பட்ட காலம் எழுத்துப் பயிற்சி என்பது இல்லாத காலமாதலால் வேதம் அருளப் படும்போது அது எழுதி வைக்க சாத்தியமில்லை.

காலம் காலமாக வேத மொழியாக (வாய் மொழியாக) இருந்த கிரந்தங்கள் பின்பு பிரகிருத மொழிக்கு மாற்றப் பட்டது. (பாகத அல்லது பிராகிருத மொழி என்பது பாமர மொழியாகும்) பின்பு பிராகிருத மொழியிலிருந்து சமஸ்கிரதத்திற்கு மாற்றப் பட்டது. (சமஸ்கிரதம் என்றால் செப்பனிடப் பட்ட மொழி - அறிஞர்கள் மொழி) இவ்வாறு காலம் காலமாக வாய் மொழியாக இருந்து பின்பு மொழி பெயர்ப்புக்கு உட்பட்டு வந்ததால் அதில் இடைச் சொருகல் ஏற்படவும் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.

நூஹ் (நோவா) நபிக்கு அருளப்பட்ட வேதம் அப்படியே இப்போது இருக்குமானால் அது மொழி மாற்றத்தைத் தவிர மற்றெல்லா வகையிலும் அது திருக் குர்ஆனுக்கு ஒத்ததாகவே இருக்கும்.

இறைவன் குர்ஆனில் பல இடங்களில் தூதர்களைக் குறிப்பிடும் போது நோவா, அப்ரஹாம், மோஸே, தாவீது, ஏசு, முகமது என்று அனைத்து இறைத் தூதர்களையும் சிலாகித்துக் கூறுகிறான்.

முகமது நபிக்கு குர்ஆனையும், ஏசு நாதருக்கு இன்ஜீலையும், தாவூத் நபிக்கு ஜபூரையும், இப்றாகீம் நபிக்கு சில ஆகமங்களையும் வழங்கியதாகக் கூறுகிறான். ஆனால் நோவாவுக்கு கொடுக்கப் பட்ட வேதம் பற்றி நேரிடையாக எதுவும் குறிப்பிடவில்லை.

இனங்களைக் குறிப்பிடும் போது யூதர்கள்,கிறித்தவர்கள், ஸாபியீன்கள், முஸ்லிம்கள் என்று பிரித்தறிவிக்கிறான். அதில் ஸாபியீன்களுக்கு வேதம் அருளப்பட்டதாகவும் கூறுகிறான்.

குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதிய இப்னு கஸீர் தன்னுடைய விளக்கத்தில் ஸாபியீன்கள் என்பவர்கள் நூஹ் நபியுடைய இனத்தவர்களே என்று கூறுகிறார்.

ஸாபியீன்கள் நெருப்பை வணங்குபவர்களாகவும், சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை வணங்குபவர்களாகவும் கிரக பலன், சோதிடம், இவற்றில் நம்பிக்கையுடையவர்களாகவும் இருந்திருக்கின்றனர். மேலும் வானவர்களை (தேவர்களை) வணங்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள் என்று மார்க்க அறிஞர்கள் விளக்கம் கொடுக்கின்றனர். இந்த வணக்க வழி பாட்டு முறைகள் அனைத்தும் அப்படியே அமையப் பெற்ற இனத்தவர் இந்துக்களே என்று தெளிவாக அறிகிறோம். ஆகவே குர்ஆன் கூறும் ஸாபியீன்கள் என்பவர் இந்துக்களே என்று தெளிவாக விளங்க முடிகிறது.

இந்த ஸாபியீன்களுக்கு அனுப்பப் பட்ட தூதர் அதாவது இந்து சமூகத்திற்கு அனுப்பப் பட்ட தூதர் நூஹ் (நோவா) நபி அவர்களே!

குர்ஆன் தவ்ராத்தையும், இன்ஜீலையும், ஜபூரையும், இப்றாஹீமின் ஆகமங்களையும் தவிர்த்து முதல் வேதம் (ஸீஹீஃபில் உலா), முன்னோர்களின் வேதம் (ஜீபூருல் அவ்வலீன்) என்ற பெயர்களையும் குறிப்பிடுகிறது. முதல் வேதம், முன்னோர்களின் வேதம் என்றால் குர்ஆன், இன்ஜீல், ஸபூர், தவ்ராத், இப்றாகீமின் ஆகமங்களுக்கு முந்தியதாகத்தான் இருக்க வேண்டும்.

இந்த வேதங்கள் அருளப்பட்ட தூதர்களுக்கு முந்தைய தூதர் நோவா தான். நோவா (நூஹ்) நபியின் சமுதாயம் தான் ஸாபியின்கள். ஸாபியீன்கள் தான் இக்காலத்தில் இந்துக்கள் என்றழைக்கப்படுகின்றனர். இந்துக்கள் தங்களிடையே உள்ள வேதங்களை 'ஆதிகிரந்தம்' என்றும் ' ஆதி கியான்' என்றும் கூறுகின்றனர். 'ஸீஹீபில் உலா' 'ஜீபூருல் அவ்வல்' என்னும் பெயர்களுக்கு இணையான சமஸ்கிரத சொல் 'ஆதி கிரந்', 'ஆதி கியான்' ஆகும். இதன் மூலம் குர்ஆன் கூறும் முன்னோர்களின் வேதம் என்பது 'ஆதி கிரந்தம்', 'ஆதிகியான்' என்பது தெளிவாகிறது.

இந்த பெயர் மாற்றம் தவிர்க்க முடியாதது ஆகும். குர்ஆன் கிறித்தவர்களை நசாராக்கள் என்று அழைக்கிறது. கிறித்தவர்கள் எவரும் தங்களை நசாராக்கள் என்று கூறிக் கொள்வதில்லை. அது போல் கிறித்தவர்களின் வேதத்தை குர்ஆன் 'இன்ஜீல்' என்ற கூறுகிறது. கிறித்தவர்களோ அதனை பைபிள் என்கின்றனர். குர்ஆன் தாவூதுக்கு அருளிய வேதத்தை 'ஜபூர்' என்று அழைக்கிறது. யூதர்களும், கிறித்தவர்களும் அதை 'சங்கீதம்'என்று தான் அழைக்கிறார்கள். எனவெ இந்த பெயர் மாற்றம் என்பது காலத்துக்கு தக்கவாறு மாறுகிறது என்பது தவிர்க்க முடியாதது.

நோவா அவர்களுக்கு அருளப்பட்ட இவ்விரு வேதங்களில் ஒன்று ஜலப் பிரளயத்துக்கு முன்பும், மற்றொன்று ஜலப் பிரளயத்துக்கு பின்பும் அருளப் பட்டதாய் இருக்கலாம். இறைவனே நன்கறிந்தவன்.

'நிச்சயமாக இது முன்னோர்களின் வேதங்களிலும் அறிவிக்கப் பட்டிருக்கிறது.'
26 : 196 - குர்ஆன்

சங்கீதத்தையும், தோராவையும், சுவிஷேஷங்களையும் தவிர்த்து முன்னோர்களின் வேதங்களிலும் அறிவிக்கப் பட்டிருப்பதாக இறைவன் குறிப்பிடுகிறான்.

உலகிலேயே பழமையான வேதங்கள் இந்துக்களிடமுள்ளது. ஓரளவுக்கு மூல மொழியில் உள்ள வேதங்களும் இந்துக்களுடையதே! நிச்சயமாக இது முன்னோர்களின் வேதங்களிலும் அறிவிக்கப் பட்டிருக்கிறது என்று குர்ஆன் கூறியதை மெய்ப்பிக்கும் படியாக இந்துக்களிடமுள்ள கிரந்தங்களிலும் குர்ஆனுக்கு ஒத்த கருத்துடைய சில வசனங்களையும், குர்ஆனுக்கு இணையான நடையழகையும் முன்பு கண்டோம்.

'நபியே! இன்னும் உமக்கு முன்னர் வஹீ மூலம் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம்.'
16 : 43,44 - குர்ஆன்
என்று இறைவன் குரஆனில் கூறுகிறான்.

தொன்மையான காலத்து மரபுச் செய்திகளைத் தொகுத்தே அழகான பாடல்களை உருவாக்கியிருக்கிறேன்
8 : 6 : 11 - ரிக் வேதம்

இதிலிருந்து குர்ஆன் 'குறிப்பிடும் தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும்' கொண்டு தொகுக்கப் பட்ட பாடல்களையே ரிக்,யஜீர்,சாம,அதர்வண வேதங்கள் என்று விளங்கிக் கொள்ளும் படியாக ரிக் வேதத்தின் சுலோகம் அமைந்துள்ளது.

இறைவன் நோவா அவர்களுக்கு அருளிய வேதங்களான ஆதி கிரந்தம், ஆதி கியான் போன்றவை தொன்மையான காலம் தொட்டு வாய் மொழியாக, மரபுச் செய்தியாக இருந்தது. அவைகளே ரிக்,யஜீர்,சாம,அதர்வண வேதம் என்று பகுத்து தொகுக்கப் பட்டிருக்கிறது என்று விளங்க முடிகிறது.

வேதங்கள் தவிர்த்து புராணங்கள், உபநிஷத்துக்கள், ஆரண்யங்கள், ஸ்மிருதிகள் எல்லாம் இந்துக்களின் புனித நூல்களாக உள்ளன. குர்ஆனுக்கு விளக்க உரையாக முகமது நபியின் 'நபி மொழிகள்' எவ்வாறு அமைந்திருக்கிறதோ அது போல ஆதி கிரந்தங்களுக்கு ரிஷிகளால் எழுதப் பட்ட வியாக்யானங்களாக இந்த புராணங்களும் உபநிஷத்துகளும், எழுதப் பட்டிருக்க வேண்டும். அல்லது நோவாவுக்குப் பிறகு வந்த இறைத் தூதர்களின் விளக்கங்களின் தொகுப்பாகக் கூட இருக்கலாம்.

'இது முந்தய வேதங்களிலும், ஆப்ரஹாம், மோசேவுடைய வேதங்களிலும் உள்ளது.'
87 : 18,19 -குர்ஆன்

“Ekam Evadvitiyam”
“He is only one without a second.”
(Chandogya Upanishad 6:2:1)

“He who knows Me as the unborn, as the beginning-less, as the Supreme Lord of all the Worlds.”
(Bhagvad Gita 10:3)
and “Of (check – or For Him?) Him there is neither parents nor Lord.”
(Shwetashvatara Upanishad 6:9)

A similar message is given in Shwetashvatara Upanishad & Yajurveda:
“Na Tasya pratima asti”
“There is no likeness of Him.”
(Shwetashvatara Upanishad 4:19 & Yajurveda 32:3)


இறைவனே மிக அறிந்தவன்.

தகவல் உதவிக்கு நனறி
ஜாகிர் நாயக், அபு ஆசியா

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்