Followers

Sunday, December 31, 2017

முகமது நபி-க்கு தெரியாததா மோடிக்கு தெரிந்து விட்டது?

முகமது நபி-க்கு தெரியாததா  மோடிக்கு தெரிந்து விட்டது?


நினைத்த படியெல்லாம் மாற்றம் செய்யமுடியாத ஒரு மதம் இருக்கு என்று சொன்னால் அது இஸ்லாமிய மார்க்கம் மட்டும்தான்

முகமது நபி-க்கு தெரியாததா  மோடிக்கு தெரிந்து விட்டது?


பழ.கருப்பையா
 அதிரடி பேச்சு..


Saturday, December 30, 2017

உவைசி சொன்ன குரங்கு கதை!

உவைசி சொன்ன குரங்கு கதை!

'ஒரு குரங்கு ஆற்றில் இருந்த மீன்களை பிடித்து கரையில் போட்டுக் கொண்டிருந்தது. இதனை பார்த்த மற்ற குரங்குகள் 'ஏன் இப்படி செய்கிறாய்?' என்று கேட்டதாம்.

அதற்கு அந்த குரங்கு 'இந்த மீன்கள் தண்ணீரில் மூழ்கி இறந:து விடாமல் இருக்க இவைகளை கரைகளில் சேர்க்கிறேன்' என்றதாம். இந்த குரங்கு கதை போல் இருக்கிறது தற்போதய முத்தலாக் சட்டம்.'

29-12-2017 அன்று உவைசி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை

இந்த கதை இஸ்லாமிய பெண்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் மோடிக்கும் அமீத்ஷாவுக்கும் பொருந்தும்

புதிய தலைமுறை பேட்டியில் சகோ அருள் மொழி

'1400 வருடங்களுக்கு முன்பு வந்த சட்டங்கள் என்று சொல்கிறார்கள். ஒரு வக்கீல் என்ற முறையில் தலாக் சம்பந்தமான அனைத்து சட்டங்களையும் அலசி ஆராய்ந்துள்ளேன். குர்ஆனில் இஸ்லாமிய பெண்களுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படவில்லை என்பதை அறிந்து கொண்டேன். தலாக் சொல்ல காரணம் சொல்லச் சொல்லும் குர்ஆன் குலா சொல்ல பெண்களுக்கு எந்த விளக்கமும் சொல்லத் தேவையில்லை என்றும் குர்ஆன் கூறுகிறது. பெண்களுக்கு பல சுதந்திரத்தை 1400 வருடங்களுக்கு முன்பே வொல்லப்பட்டுள்ளதை எண்ணி ஆச்சரியமுறுகிறேன்.

உண்மையில் பெண்கள் மேல் மோடிக்கு அக்கறையிருந்தால் காசியில் பிருந்தாவனத்தில் இந்து விதவைகள் கண்ணீரும் கம்பலையுமாக வாழ்க்கையை கடத்துகின்றனர். அவர்களுக்கு ஒரு முடிவை மோடி சொல்லட்டும்.

-புதிய தலைமுறை பேட்டியில் (29-12-2017) திராவிடர் கழக பெண்மணி சகோ அருள் மொழி

Friday, December 29, 2017

முஸ்லீம் ஆண்கள் எல்லாரும் அடிமுட்டாள்கள்..!



முஸ்லீம் ஆண்கள் எல்லாரும் அடிமுட்டாள்கள்..! எதற்காக 'தலாக் தலாக் தலாக்' என்று மும்முறை கூறிவிட்டு ஜெயிலுக்கு போகவேண்டும்..? அதற்கு பேசாமல் எதுவுமே சொல்லாமல் மனைவியை அம்போவென விட்டுட்டு... இந்தியாவின் பிரதமர் ஆகிவிடுங்களேன்..!!


தமிழாக்கம் முஹம்மது ஆஷிக்

Wednesday, December 27, 2017

மாட்டுக் கறி அரசியலும் அலுவலக நட்பும்!

சில நாட்களாக மண்டையைக் குடையும் ஒரு சம்பவம்... (கொஞ்சம் பெரிய பதிவு. ஆனால் சொல்லாமல் கடந்துபோக முடியவில்லை.)

புதிய வேலை, புதிய சூழல், புதிய நண்பர்கள் என்று பெங்களூரில் ஒரு மாதமாக வாழ்க்கை செல்கிறது. கோவையை விட்டுப் பிரியவேண்டிய கட்டாயம் என்றாலும் ஒரு மாற்றத்துக்காக ஏற்றுக்கொண்டு பார்ப்போமென்று இங்கு வந்துவிட்டேன். ஆனால் அதைச் சொல்லவல்ல இந்தப் பதிவு. தொடரவும்.

புதிய வேலை, புதிய நண்பர்கள் என்று சொன்னேனல்லவா. அதில்தான் சம்பவமே. எங்கள் batchல் நான் மட்டும்தான் தமிழ்நாடு. சொல்லப்போனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாநிலம். ஆனால் எங்களுக்குள் இந்திதான் பிரதான மொழி. நான் மட்டும் ஆங்கிலம். இதையும் சொல்லவல்ல இந்தப் பதிவு. தொடரவும்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாநிலமென்று சொன்னேனல்லவா. அதில் மூவர் கேரளா. ஓரளவு என்னிடம் தமிழில் பேசுபவர்கள் இவர்கள்தான். அதைத்தாண்டி தோழி ஒருவர். பெங்களூர்வாசி. ஆனால் நன்றாகவே தமிழ் பேசுபவர் என்பதால் சிறிது நாட்களிலேயே என்னுடன் நல்ல நட்பாகிவிட்டார். அரட்டை, கிண்டல், கேலி, பாடல், கலாய்ப்பு என்று கலகலப்பாகவே இருவரும் வேலைசெய்வோம். தேடிவந்து பேசுவார், வம்பிழுப்பார், சந்தோஷம், சோகம் என எல்லாவற்றையும் பகிருவார். வேலையில் சந்தேகம், சிக்கல் என எல்லாவற்றுக்கும் என்னை நாடுமளவுக்கு நெருக்கம்.

இப்படியிருக்க டிசம்பர் 23, அதாவது கிறிஸ்துமஸுக்கு இரண்டு நாட்கள் முன்பு நடந்தது அந்த சம்பவம். கேரள நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். அருகில் தோழியும் இருந்தார். கேரள நண்பர்களில் ஒருவர் கிறிஸ்த்தவர். இன்னொரு கேரள நண்பர், கிறிஸ்த்தவ நண்பர் கிறிஸ்த்துமஸ் முடிந்து கேரளாவிலிருந்து வருகையில் தனக்கு பீஃப் ஃப்ரை வீட்டிலிருந்து எடுத்துவருவதாகச் சொன்னதை என்னிடம் சொல்ல, நான் அதை கிறிஸ்த்தவ நண்பரிடம் உடனே போட்டு உடைத்தேன்.

என்ன மச்சி.. அவனுக்கு மட்டும் பீஃப் ஃப்ரைய்யா? எனக்கில்லையா?” எனக்கேட்க, அதற்கு கிறிஸ்த்தவ நண்பர், “இல்ல மச்சி. அது காலைலயே செஞ்சிடுவாங்க. நானும் இவனும் சாய்ங்காலம் கிளம்புறோம். உனக்கு அடுத்தநாள்தான் தரமுடியும். அதுக்குள்ள கெட்டுப்போயிடும்” என்று விளக்கிக்கொண்டிருக்க, அருகில் இருந்த நம் தோழி அதை அறைகுறையாக் கேட்டு, நாங்கள் பேசுவது சிக்கன் பற்றி என்று நினைத்து, “சிக்கனெல்லாம் அன்னிக்கே சாப்பிட்டுடனும். அடுத்த நாள் வெச்சு சாப்பிடக்கூடாது” என்று விளக்கமளித்தார். அப்போது கிறிஸ்த்தவ நண்பரும், நானும், “நாங்க பேசுறது சிக்கன் பத்தியில்ல. பீஃப்” என்றொம்.

ஒருநொடி திகைத்த தோழி என்னைப் பார்த்து, “நீ பீஃப் சாப்பிடுவியா?” என்றார். சற்றும் யோசிக்காமல் ஆர்வமாக “ம்ம்ம்..” என்று தலையசைத்தேன். உடனே தனது chairஐ (office chair with wheels) இரண்டடி பின்னால் இழுத்துக்கொண்டு தனது கணினியைப் பார்த்து திரும்பினார். யோசித்தார். பிறகு என்னைப் பார்த்து, “என்கிட்ட பேசாத. சரியா?” என்றார். நான் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. “ஓய்.. என்னாச்சு?” என்றேன் சிரித்துக்கொண்டே. “நிஜமாதான் சொல்றேன். பேசாத. சரியா?” என்றார். அதன்பிறகுதான் கவனித்தேன். அவர் முகத்திலோ, “பேசாத” என்ற வார்த்தையிலோ கோபம் தெரியவில்லை. மாறாக, பதற்றம் தெரிந்தது.

இப்ப என்னாச்சு?”

ஒன்னுமில்ல. விடு.”

ஏன் இதுவரை யாரும் பீஃப் சாப்பிட்டதா நீ கேள்விப்பட்டதே இல்லையா?”

அதப் பத்தி பேசாத. ப்ளீஸ் (தலையில் கைவைத்துக் கொண்டு). மாட நான் சாமி மாதிரி நினைப்பேன். நாம கும்பிடுற தெய்வம். அதப்போயி நீ... வேணாம் விட்டுடு.”

கொஞ்ச நேரம் அமைதியானவர் பிறகு எழுந்து சென்று சக தோழிகளுடன் ஐக்கியமானார். அதன்பிறகு வேலைமுடிந்து கிளம்பும்வரை அவர் என்னிடம் பேசவில்லை. நானும் பேசவில்லை.

இந்த சம்பவத்தில் அந்தத் தோழி மீது கோபமோ, என் மனதை புண்படுத்திவிட்டார் என்ற வருத்தமோ சற்றும் இல்லை. மாறாக மனம் எதையெதையோ யோசித்தது. எங்கெங்கோ சென்றது.

சிக்கன் சாப்பிடுவது பற்றி சாதாரணமாக டிப்ஸ் கொடுக்கும் அவருக்கு மாட்டுக்கறி என்றதும் அவ்வளவு சென்ஸிடிவ்வான உணர்வு எங்கிருந்து வந்தது? மிகக்குறைந்த நாட்களிலேயே அவ்வளவு சோஷியலாக பழகிய ஒருவர், மாட்டுக்கறி என்கிற வார்த்தையை கேட்டதுமே தலைகீழாக மாறுவதற்கு எந்த இடம் ஆரம்பப் புள்ளியானது?

அல்லது இப்படி உணருபவர்கள்தான் இத்தனை நாட்களாக நாம் செய்திகளாகக் கடந்துவந்த மாட்டுக்காக மனிதர்களைக் கொல்லும் ஒரு காட்டுமிராண்டிக் கூட்டத்தின் மதஅரசியலுக்கு மூலதனமா என்று மனம் அசைபோட்டது.

சமீபமாக தேயத்தேய திரும்பத்திரும்ப பார்த்த அம்பேத்கர் படத்தின் ஒவ்வொரு வசனங்களும் எதிரொலித்தது. ஒருவன் தாழ்த்தப்பட்டவனாகவோ, தீண்டத்தகாதவனாகவோ வெறுக்கப்பட, அந்தத் தோழி போன்ற வெள்ளந்தி மனம்படைத்த, இந்தியாவின் ஆபத்தான அரசியலைத் துளியளவும் அறியாத, பெரும்பான்மை மக்கள்தான் தொடக்கப்புள்ளியா? அந்த வெள்ளந்தி மனதுக்குள், மாட்டுகறி என்பது ஒரு சமூகத்தின் வாழ்வுவழி அடையாளம் என்பதைவிட, அது தீண்டாமை, அருவறுப்பு போன்றவற்றின் அடையாளம்தான் என்று இயற்கையாகப் பதிந்தது எப்படி?

இந்துமதம் என்றொன்று இந்துக்களிடம் புனிதப்படுவது அந்தத் தோழி பதட்டமடைந்த அந்த ஒரு நொடியிலா? அத்தனை நாள் அந்நியோன்யத்தையும் தாண்டி, அந்த ஒரு நொடிப்பொழுதில் அந்தத் தோழியின் கண்களுக்கு நான் தீண்டத்தகாதவனாக மாறவிட்டேனா? அவ்வளவு நாட்கள் எங்களுக்குள் இருந்த ஒரு சகஜமான உணர்வுப்பறிமாற்றம் அந்த ஒரு நொடியில் சுக்குனூறாகச் சிதறிப்போனதா? அது எங்கோ காவிக்கொடியுடன் கோஷமெழுப்பும் ஒரு கூட்டத்திற்குக் கிடைத்த வெகுமதியா? மனித உணர்வுகளை நொடிப்பொழுதில் மாற்றும் வல்லமை படைத்ததா மதஅரசியல்? இன்னும் என்னென்னவோ மனதுக்குள் ஓடியது.

அன்றிரவு நிம்மதியான உறக்கமில்லை. அப்படி ரியாக்ட் செய்த தோழியிடம் மாட்டை வைத்து நடத்தப்படும் மதஅரசியல் என்கிற இழிவைப்பற்றி மனதுக்குள் இருப்பதையெல்லாம் அந்த நொடியே கொட்டித்தீர்த்திருக்க வேண்டுமென்று ஒருபக்கம் தோன்றியது. ஆனால் மறுகனமே, அத்தனை நாளில் வளர்ந்த நட்பை மாட்டுக்கறி என்கிற ஒரு வார்த்தையால் அப்படியே உதறத்துணிந்த ஒருவரிடம் மேற்கொண்டு என்ன விளக்கி என்ன பயனென்றும் இன்னொரு பக்கம் சிரிக்கத் தோன்றியது.

இனி அந்தத் தோழியை எப்படி சகஜமாக அணுகுவேன் என்று தோன்றியது. அதே உணர்வு அவருக்கும் இருக்குமா என்பதல்ல என் கவலை. அப்படியே அவருக்கு இருந்தாலும் “அவன் மாட்டுக்கறி திங்கிறவன். அருவறுப்பானவன்” என்றுதான் தோன்றும் என்பதில் ஐயமில்லை.

ஆனால் என்னால் அவரை சகஜமாக அணுக முடியாது என்பதற்கான காரணம் என்ன தெரியுமா? யாரோ, எங்கோ, எப்போதோ, ஏதோ ஒரு மூலதனத்துக்காக துவக்கிய ஒரு நம்பிக்கையுணர்வால் இன்று அந்தத் தோழி போன்ற பல வெள்ளந்திகளால் (அவர்களே அறியாமல்) சகமனிதனை சமமாக பாவிக்க முடியாமல் போனதே என்ற பரிதாபமும், மனித உணர்வுகளையே தனக்கேற்றார்போல் ஆட்டுவிக்கும் சக்தி படைத்த மதஅரசியலின் மேலுள்ள தீராத வெறுப்பும்தான் காரணம்.

செத்தாலும் சாதி, மத வெறுப்பாளனாகவே சாக விரும்புகிறேன்.

| By Vaishnav Sangeeth






Tuesday, December 26, 2017

இந்த Video வை கண்டிப்பா பாருங்கள்,

இவ்வுலகில் இறைவன் நமக்கு கொடுத்த சுகங்கள் குறைவு என்ற எண்ணம் யாருக்காவது இருந்தால்,

இந்த Video வை கண்டிப்பா பாருங்கள்,


இனியாவது இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள்!


பெண்கள் ஜனாஸா பயிற்சி

பெண்கள் ஜனாஸா பயிற்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி கிளை

நாள் : 25-12-17

இடம்: ராஜிக் காம்ப்ளக்ஸ், ராஜாத்தி நகர்.

பயிற்சி யளித்தவர்கள்: சகோதரி ஃபைரோஸ்பானு ஆலிமா,
சகோதரி ஃபாத்திமா ருமானா ஆலிமா

இதில் 80 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.



Monday, December 25, 2017

இல்லாத லவ் ஜிஹாதும் பொல்லாத காவிகளின் சதியும்

நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
இராஜகிரி கிளை

நாள் :24:12:17

தலைப்பு : இல்லாத லவ் ஜிஹாதும் பொல்லாத காவிகளின் சதியும்

எண்ணிக்கை :1000



Sunday, December 24, 2017

கோவிலில் குண்டுகளை மறைத்து வைத்த ஆர்எஸ்எஸ்

திருவனந்தபுரம்,
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள கோவில் அருகே 7 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கீழூரில் ஆர்.எஸ்.எஸ் மையத்திற்கு அருகே உள்ள பகவதி அம்மன் கோவில் வளாகத்தை ஊழியர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கோவில் அருகே உள்ள பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது அங்கு பக்கெட்டில் வைத்து மறைத்துவைக்கப்பட்டிருந்த 7 வெடிகுண்டுகள்  கண்டுபிடித்தனர். பின்னர், இது தொடர்பாக காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவலர்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் , வெடிகுண்டுகளை ஆய்வு செய்த போது, அவை அனைத்தும் சமீபத்தில் தயாரிக்கப்பட்டவை என கண்டு பிடிக்கப்பட்டது. வெடிகுண்டுகளை பறிமுதல் செய்த காவலர்கள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கோவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால் நிர்வகிக்கப்படுகிறது. கடந்த வருடம் சங்பரிவார் அமைப்பை சேர்ந்த பாலகோகுலம், குழந்தைகளுக்காக நடத்திய சோப யாத்ரா என்ற ஊர்வலம், இந்த கோவிலில் தான் நிறைவுற்றது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆர்.எஸ்.எஸ். ஊழியர் தீக்‌ஷித் , கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை காலத்தின் போது, கண்ணூர் மாவட்டம் தலசேரியில் உள்ள தனது வீட்டில் வெடி குண்டு தயாரித்த போது, எதிர்பாராதவிதமாக அது வெடித்து உயிரிழந்தார். அப்போது அவரது வீட்டை ஆய்வு செய்த காவலர்கள் அங்கிருந்த ஆயுதங்களை கைப்பற்றினர். தீக்‌ஷித்-தின் தந்தை பிரதீப் பாஜக-வை சேர்ந்தவர். அவரது சகோதரர் தில்ஜித், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 2015 கேரளா பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டவர்.
சமீப காலமாக பண்டிகை காலங்களில் , ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் வெடிகுண்டுகள் தயாரிக்கும் போது ஒன்று அது வெடித்து உயிரிழக்கின்றார்கள் அல்லது தயாரிக்கும் போது காவலர்களிடம் பிடிபடுகிறார்கள்.
கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களை நிர்வாகிகளாக கொண்ட கோவில்களை ஹிந்துத்துவா அமைப்புகள் தங்களது பயிற்சி களமாக பயன்படுத்தி வருகின்றனர். மாநிலத்தில் சாதி கலவரங்களையும், வன்முறையையும் தூண்டி விட்டு பின்னர் சிறுபான்மையர் மீது பழி போடுவதே அவர்களது வழக்கமாக உள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம், கூத்துபறம்பு பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் வழிபாடு நடந்து கொண்டிருக்கும் போது அங்கிருதவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் வெடிகுண்டுகளை வீசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் உதவி
தீக்கதிர்
08-09-2017




Wednesday, December 13, 2017

சுன்னத் ஜமாஅத் என்றும், ஷாஃபி, ஹனஃபி என்றும் பிரிவுகள் ஏன்?

ஒரு இறைவனை வணங்கும் முஸ்லிம்களிடத்தில் தவ்ஹீத் ஜமாஅத், சுன்னத் ஜமாஅத் என்றும், ஷாஃபி, ஹனஃபி என்றும் பிரிவுகள் ஏன்?
(இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) - 26-11-2017
இடம் : உடன்குடி - தூத்துக்குடி மாவட்டம்
உரை : பீ.ஜைனுல் ஆபிதீன்
(மாநிலத் தலைவர், TNTJ)


மோனிகா இன்று இஸ்லாமிய பிரசார பெண்ணாக...!


அமெரிக்காவை விட மத்திய பிரதேச சாலைகள் சிறப்பாம்!

அமெரிக்காவை விட மத்திய பிரதேச சாலைகள் சிறப்பாம்!

'நான் வாஷிங்டன் ஏர்போர்டில் இறங்கி வெளியே வந்தேன். அங்கு ஒன்றை புரிந்து கொண்டேன். நம் நாட்டு சாலைகள் அமெரிக்க சாலைகளை விட சிறந்ததாக உள்ளதை தெரிந்து கொண்டேன்'.

-மத்திய பிரதேச பிஜேபி முதல்வர் சவுஹான்.

பொய் பேசுவதற்கும் ஒரு தில் வேண்டும். அது சவுஹானுக்கு நிறையவே உள்ளது. இதே வீடியோவில் மத்திய பிரதேச சாலைகளின் லட்சணத்தை பாருங்கள்.

மேலும் இதே மத்திய பிரதேசத்தில் தான் ஒரு பெண்மணி சரியான மருத்துவ மனை இல்லாமல் ரோட்டோரத்தில் தனது குழந்தையை பெற்றறெடுத்தாள்.





அத்வானி அஸ்ரஃப் ஜஹாங்கீரை 20 முறை சந்தித்துள்ளார்!

அத்வானி அஸ்ரஃப் ஜஹாங்கீரை 20 முறை சந்தித்துள்ளார்!

மணி சங்கர் ஐயர் பாகிஸ்தான் உயர் அதிகாரிகளை வெளிப்படையாக சந்தித்ததை அரசியலாக்குகிறார் மோடி. ஆனால் இவரது குரு அத்வானியோ பாகிஸ்தான் ஹை கமிஷனர் அஸ்ரஃப் ஜஹாங்கீரை 20 முறைக்கு மேல் ரகசியமாக சந்தித்துள்ளார். இந்த சந்திப்புகளுக்கு கரன் தாபர் மீடியேட்டராக இருந்துள்ளார். பல முறை இரவு நேர நடுநிசியில் அத்வானி வீட்டிலும் நடந்துள்ளது. அப்போது வாஜ்பாய் அரசு அதிகாரத்தில் இருந்தது. பாராளுமன்ற தாக்குதல் நடந்ததும் இந்த நேரங்களில்தான்.

அண்டை நாடுகளோடு முறுகல் நிலை வைக்காது நட்போடு செயல்பட்டால் இரு நாடுகளுக்குமே லாபம். ஆனால் மோடியோ பாகிஸ்தான் பெயரை காட்டி இந்திய மக்களை பயமுறுத்தி ஓட்டு அறுவடை செய்ய முயற்சிக்கிறார். மிகவும் கேவலமான அரசியல் யுத்தியை கையிலெடுத்துள்ளார் மோடி. இது அவருக்கே கேடாக முடியும்.


Tuesday, December 12, 2017

நபி வழியை புறக்கணித்தால் இது தான் நிலை!

நபி வழியை புறக்கணித்தால் இது தான் நிலை!

இறைவன் ஒருவனை மட்டுமே வணங்குகள்: நபிகள் நாயகம் எதனைச் சொன்னார்களோ அதனை மட்டுமே மார்க்க வழிபாடாக பின் பற்றுங்கள். நபிகள் நாயகம் காட்டித் தராத மவுலூது, திக்ருகள், தர்ஹா வழிபாடுகளை விட்டொழியுங்கள் என்று நாம் சொன்னால் 'நஜாத்', 'வஹ்ஹாபி' ' குழப்பவாதி' என்று பலரும் வசைபாடுகின்றனர்.


இறை வணக்கத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை நபிகளிடம் பயிலாமல் நமது சொந்த விருப்பத்தில் செய்தால் அது எந்த அளவு கிறுக்குத் தனத்தில் கொண்டு போய் விடும் என்பதற்கு இந்த வீடியோ சிறந்த உதாரணம். இனிமேலாவது ஏகத்துவவாதிகள் சொல்வதில் உள்ள நல்லவைகளை ஏற்க வருவீர்களா?


சாதி வெறியர்களுக்கு சரியான தீர்ப்பு!

சாதி வெறியர்களுக்கு சரியான தீர்ப்பு!

உடுமலை: உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கவுசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள குமரலிங்கத்தை சேர்ந்தவர் சங்கர். இவர், பழநியை சேர்ந்த கவுசல்யா என்பவரை காதலித்து ஜாதி மறுப்பு கல்யாணம் செய்து கொண்டார்.பின்னர் கடந்த 2016 மார்ச் 13ல் உடுமலையில், கவுசல்யாவின் உறவினர்கள், சங்கரை சராமரியாக வெட்டி கொன்றனர். கவுசல்யா படுகாயமடைந்து சிகிச்சை பெற்றார்.

நீதிபதி அலமேலு நடராஜன், கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலைத்தமிழ்ச்செல்வன், மதன் என்கிற மைக்கேல் ஆகியோருக்கு தூக்கு தண்டனை வழங்கினார்.மேலும் ஸ்டீபன் தன்ராஜ் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்த மணிகண்டன் என்பவருக்கு 5 வருட சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார்.

தூக்கு தண்டனை பெற்ற இந்த இளைஞர்களின் கோர முடிவுக்கு யார் பொறுப்பு?


ராமதாஸ், அன்பு மணி ராமதாஸ், காடு வெட்டி குரு போன்றோர் இனியாவது வெறித்தனமாக சாதி வெறியை தூண்டுவதை விட வேண்டும்.


Monday, December 11, 2017

சமண மதத்தை முற்றாக அழித்த சைவம்!



கி.பி.ஐந்து ஆறு ஏழாம நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டில் சமண சமயமும் பௌத்த மதமும் பெரிதும் செழித்து வளர்ந்திருந்தது. சைவ வைணவ மதங்கள் முடங்கிக் கிடந்தன. மக்களில்பெரும்பாலோர் சமணராகவும் பௌத்தராகவும் இருந்தனர். நாட்டை ஆண்ட மன்னர்களும் சமண பௌத்த மதங்களைத் தழுவியிருந்தனர்.

கி.பி.ஏழாம் நூற்றாண்டில் சைவ அடியார்களான நாயன்மார்களும், வைணவ அடியார்களான ஆழ்வார்களும் 'பக்தி' இயக்கத்தை ஆயுதமாகக் கொண்டு சமண பௌத்த மதங்களை அழித்திட முற்பட்டனர்.

'சமண சமயம் பலவிதத்தில் தாக்கப்பட்டது. கொடுமைப் படுத்துதல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல், நில புலங்களைக் கவர்தல் முதலிய செயல்கள் நிகழ்ந்ததைக் காண்கிறோம். இந்துக்கள் சமண மதத்தை அழித்த செய்திகள் பல உள்ளன.

-மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்

Page 68.

'வெறுப்போடு சமணர் முண்டர் வீதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரியன்கள் பேசில் போவதே நோயதாகிக் குறிப்பெனக் கடையுமாகில் கூடு மேல் தரையை ஆங்கே அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா நகருளானே!'

-தொண்டரடிப் பொடியாழ்வார், திருமலை, எட்டாவது பாடல்.


ஆழ்வாரின் இந்தப் பாடலின் மூலம் அக்காலத்தில் சமயப் போர் எவ்வளவு வேகம் கொண்டிருந்தது என்பது விளங்குகிறது. இங்கு சாக்கியர்கள் என்று வருவது பௌத்தர்களைக் குறிக்கும்.

திருநாவுக்கரசர்!

தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள பாடலிபுத்திரத்தில் சிறப்புப் பெற்றிருந்த சமணப்பள்ளி இருந்தது. இங்கிருந்து தான் சர்வநந்தி என்பவர் 'லோகவிபாகம்' என்னும் நூலை எழுதினார்.கி.பி. 458 - ல் சிம்மவர்மன் என்னும் பல்லவ மன்னன் காஞ்சிபுரத்தை அரசாண்டிருந்த போது அவ்வரசனது இருபத்திரண்டாவது ஆட்சி ஆண்டில் 'லோகவிபாகம்'பாகத மொழியிலிருந்து வட மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. இதன் பிறகு நூற்று அறுபது ஆண்டுகளுக்கு பின்னர் திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் புகழானார், மாதினியார் புதல்வராகப் பிறந்தவர் மருணீக்கியார். இவரது சமய அறிவால் சமணர்கள் 'தருமசேனர்' என்னும் பெயர் கொடுத்து அவரைப் போற்றினார்கள். நெடுங்காலம் சமணகுருவாக பாடலிபுத்திர சமணப் பள்ளியில் இருந்த தருமசேனர் சமண சமயத்தை விட்டு சைவ சமயத்திற்கு வந்த போதுதான் திருநாவுக்கரசர் என்ற பெயர் மாற்றம் பெற்றார்.
-மயிலை சீனி. வேங்கடசாமி, மகேந்திரவர்மன்,

Chennai, Page 27-29
-Mysore Archaeological Report, 1909-10, Page 112

சமண மதம் துடைக்கப் படுதல்

சமண சமயத்தவனாக இருந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மனைச் சைவ சமயத்தில் திருநாவுக்கரசர் சேர்த்தார். அத்தோடு நின்று விடாமல், தாம் அப்பர், தருமசேனர் என்னும் பெயருடன் தங்கியிருந்த பாடலிபுத்திர சமணப் பள்ளியை இடித்துத் தள்ளவும் ஏற்பாடு செய்தார்.

பல்லவ அரசனும் சமணக் கல்லூரியை ஒழித்தான். பள்ளிகளையும் பாழிகளையும் அழித்தான். அவற்றின் சிதைவுகளைக் கொண்டு வந்து திருவதிகையிற் 'குணதரஈச்சரம்' என்று தன் பெயரால் கோவில் ஒன்று கட்டினான்.
-Page 275, பல்லவர் வரலாறு


இங்கு சமணர் கோவில் இருந்தது என்பதை உறுதிப்படுத்த மஞ்சக் குப்பம் சாலையில் யாத்திரிகர் பங்களாவுக்கு அருகில் இன்றும் சமணத்திற்கு உருவம் காணப்படுகிறது.
-South Arcot District, Gazetter, Page 369.

பெரிய புராணம் தரும் செய்தி!

'வீடறியாச் சமணர் மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த காடவனுந் திருவதிகை நகரின் கட்கண்ணுதற்குப் பாடலிபுத்திரத்தில் மண் பள்ளியொடு பாழிகளுங் கூட இடித்துக் கொணர்ந்து குணதரவீச்சரம் எடுத்தான்.

-தெய்வப் புலவர் சேக்கிழாரடிகள் அருளிய திருத் தொண்டர் மாக்கதை, ப.இராமநாதபிள்ளை

-திருநாவுக்கரசு நாயனார் புராணம், பாடல் 146, பக்கம் 289.


இஸ்லாம்

இதே கால கட்டத்தில் தான் மக்காவில் இஸ்லாம் தோன்ற ஆரம்பித்தது. முகமது நபி தன்னுடைய பிரச்சாரத்தை துவக்கியது இந்த கால கட்டத்தில்தான். இஸ்லாம் தொன்றுவதற்கு முன்பே உலகின் பல்வேறு பாகங்களில் ஒரு மதத்தவரின் வழிபாட்டுத் தவங்களை இன்னொரு மதத்தினர் அழித்ததையும் அல்லது அதனை தங்களது வழிபாட்டுத் தலமாக மாற்றியதையும் சரித்திரத்தில் நாம் காண முடிகிறது.
-வரலாற்றின் வெளிச்சத்தில் ஒளரங்கஜேப், செ. திவான்.


திருஞான சம்பந்தருக்கனுப்பிய தூது!

'மங்கையர்க்கரசியும் குலச்சிரையாரும் ஓர் பிராமணன் மூலமாக திருஞான சம்பந்த மூர்த்திக்கு ஒரு திருமுகம் அனுப்பி, மதுரைக்கு வந்து சமண இருளைப் போக்கி சைவப் பயிர் முன் போல் தழைக்க அனுக்ரஹிக்கும்படி வேண்டினர்.'

-கா.சு. சேஷகிரி அய்யர், சிவபிரானது 64 திருவிளையாடற்சுருக்கம், பக்கம் 84.


கழுவிலேறிய சமணர்கள்!

'பாண்டியவரசர் குலச்சிறை நாயனாரை நோக்கி சமணரைக் கழுவிலேற்றி முறை செய்யுமாறு பணித்தார். பிள்ளையார் அவர் செய்த சிவா பராதங்கருதி விலக்காதிருந்தார். குலச்சிறை நாயனார் முறை செய்யச் சமணர் யாவரும் கழுவிலேறி மாண்டார்கள்.'

-சதாசிவ செட்டியார், தேவாரப் பதிகங்கள், சென்னை 

1925, page 18

'அரசர் குலச்சிறையாரை நோக்கி, 'சமணர்களைக் கழுவிலே ஏற்றுக என்று ஆஞ்ஞாபித்தார்..... திடபக்தியுடைய அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நிறையாக நாட்டு வித்து அவைகளில் ஏற்ற, அதிபாதகர்களாகிய சமணர்கள் எண்ணாயிரவரும் தானாகவே ஏறினார்கள்.'

ஏ.ஜி.கோமதி அம்மாள், திருத் தொண்டர் பெரிய புராணம், சைவம் வளர்த்த அரசி, கோவில்பட்டி
1948, Page 18

'அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நாட்டிய பின் தோல்வியுற்று நின்ற சமணர் அனைவரும் அத்தறிகளில் ஏறி உயிர் துறந்தனர்.'

க. வெள்ளைவாரணன்,பன்னிறு திருமறை வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
1972, Page 144

சமணர்கள் அனுபவித்த கொடுமை!

'மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.'

-அ.பொன்னம்பலம், அப்பரும் சமபந்தரும், சென்னை

1983, Page 28

'கழுவிலேறாத சமணர்களை எல்லாம், சைவாச்சாரத்தைக் கொண்டவர்கள் ஒவ்வொருத்தராகப் பிடித்து அந்த முத்தலைக் கழுமரங்களிலே ஏற்றியிருத்திக் கொன்றார்கள். அந்த சமணர்களுக்குப் பாரம்பரியாக அடியார்களானவர்கள் சாவப்பயந்து மனங்குலைந்து விபூதி பூசிக் கொண்டார்கள். அந்த விபூதி கிடையாமல் பசுவின் கோமயத்தை எடுத்திட்டுக் கொண்டார்கள். அதுவும் கிடைக்காத சிலர் பசுவின் கன்றைத் தோள் மேலே தூக்கிப் போட்டுக் கொண்டார்கள்.'

'விபூதி, கோமயம், பசுவின் கன்று இந்த மூன்றுங் கிடையாத சிலர் விபூதி பூசின நெற்றியுடனே நெற்றியை மோதிப் பூசிக் கொள்ள கோமயத்திலுமப்படியே மோதியிட்டுக் கொண்டும் இப்படியாகத் தங்கள் பாசங்களை வென்று பிழைக்க எண்ணினவர்களைக் கொல்லாமல் விட்டு விட்டனர்.'

-பூவை கலயாண சுந்தர முதலியார் பொழிப்புரை, திருவிளையாடற் புராணம்,சென்னை,

1925, Page 494.

நாய் நரி தின்ற சமணர் உடல்கள்!

விபூதி பூசியவர்கள் உயிர் தப்பினர். அதற்கு உடன் பட மறுத்ததால், கழுவிலேற்றிக் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் என்ன ஆயிற்று தெரியுமா?

'கழுவிலேறி இறந்தவர்களெல்லாம் சுற்றப்பட்ட பருந்துகளும், காக்கைகளும், நரிகளும், நாய்களும், தொடர்ந்து கௌவிப் பிடித்திழுத்துத் தின்னக் கிடந்தார்கள்.'


'மற்றிவர் தம்மை யூற்றஞ் செய்திலர் யாருஞ் சுற்றிய சேனங்காக நரிகணாய் தொடர்ந்து கௌவிப் பற்றிநின் றிர்த்துத் தின்னக் கிடந்தனர்.'


பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், உ.வே.சா.பதிப்பு, சென்னை
1937, Page 1195.

'கூன் பாண்டியன் சைவத்திற் புகுந்த நாளே சமணமும் வீழ்ந்த நாளாகும். அதன்பின் புத்தமதம் திரும்பத் தலை தூக்கவே இல்லை. நம்பியாண்டார் நம்பி காலமாகிய பதினோறாவது நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து அவை அழிந்து பொயின.'

பெ. சுந்தரம் பிள்ளை எழுதிய 'திருஞான சம்பந்தர் காலம்' என்ற ஆங்கில நூல்.

'திருஞான சம்பந்தர் மதுரையில் எட்டு ஆயிரம் சமணரைக் கழுவில் ஏற்றினார் என்று சைவ சமய நூல்களாகிய பெரிய புராணம், திருவிளையாடற்புராணம், தக்கயாகப் பரணி முதலிய நூல்கள் கூறுவதும் இவற்றை நினைவு படுத்த மதுரைப் பொற்றாமரைக் குளத்து மண்டபத்தின் சுவற்றில் சமணரைக் கழுவேற்றும் காட்சியைச்சித்திரம் தீட்டி வைத்திருப்பதும், மதுரைக் கொவிலில் நடை பெற்று வரும் உற்சவங்களில் ஐந்து நாள் கழுவேற்று உற்சவம் ஆண்டு தோறும் நடைபெற்று வருவதும் இவை நடைபெற்றதற்கு முதன்மையான சான்றுகளாகும்.'

மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும், பக்கம் அறுபத்தெட்டு.

திருமங்கையாழ்வார்

தொள்ளாற்றுப் போர் வென்ற நந்தியின் பாட்டனான பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் திருமங்கையாழ்வார் வாழ்ந்திருந்தார். அவர் சமண பௌத்த சமயங்களைத் தாக்கி வைணவ சமயத்தை நிலை நிறுத்தினார்.
-மாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, சென்னை, பக்கம் இருநூற்று எழுபத்தேழு.


கி.பி.எட்டாம் நூற்றாண்டினரான இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் சோழ நாட்டின் ஒரு பகுதியான ஆலி நாட்டை ஆண்ட குறுநில மன்னர் திருமங்கை ஆழ்வார்.
இவர் நாகப் பட்டினத்துப் பௌத்த விகாரத்தில்இரந்த பொன்னால் வேயப்பட்ட புத்தர் சிலையைக் கவர்ந்து வந்து அதைக் கொண்டு பல கொவில் திருப்பணிகள் செய்தார். பௌத்த சமண சமயங்கள் மீது நாயன்மாரைப் போலவே மிக்க வெறுப்புற்றவர் என்பதை இவரது பாடல்களைக் கொண்டு நன்கு உணர முடிகிறது.
-மயிலை சினி வேங்கடசாமி, மூன்றாம் நந்திவர்மன்,சென்னை,பக்கம் ஐம்பத்து இரண்டு.

-மா.இராசமாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, பக்கம் இருநூற்று எழுபத்து ஏழு.


'திருமங்கை ஆழ்வார் திருவரங்கம் பெரிய கொவில் விமான மண்டப கோபுராதி கைங்கரியங்கள் செய்யத் திருவுள்ளமாய்ப் பொருள் தேட எண்ணுகையில் நாகப்பட்டினத்தில் ஒரு பொன்னாலான புத்த விக்ரஹமிருப்பதை அறிந்து அதை அறுத்துத் திருப்பணி செய்ய நினைத்து நாகப்பட்டினம் சென்று புத்தன் கோயிலுக்குச் சென்று விக்ரஹத்தை எடுத்து வந்துடைத்துச் சுட்டுரைத்து நன் பொன்னாக்கித் திருமதிள் கைங்கர்யத்துக்கு உபயோகப்படுத்தினர்.'

-நாலாயிர திவ்விய பிரபந்தம், சென்னை, பக்கம் இருபத்திஆறு.


கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை திரு மூர்த்தி மலையிலுள்ள சமணர் கோவில் அமணலிங்கேசுவரர் என்று ஹிந்து மதக் கோவிலாக மாற்றப் பட்டது.
-புலவர் செந்தலை ந. கவுதமன், சூலூர் வரலாறு, பக்கம் நூற்று தொண்ணூற்றொம்பது.


'நாகராஜர் கோவில் தூண்களில் சமண சமயத் தீர்த்தங்கரர்களான பார்வத நாதரும், மகா வீரரும் தவக் கோலத்தில் நின்றும் அமர்ந்தும் காட்சி தருகின்றனர்.

'கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை உள்ள இடைப் பட்ட காலத்தில் நாகராஜர் கோவில் இந்து சமய கோவிலுக்குரிய மாற்றங்களைப் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.'

-எஸ். பத்மநாபன்,குமரி மாவட்ட கொவில்கள், நாகர் கோவில், பக்கம் 51,52


செஞ்சியை ஆட்சி செய்து வந்த வேங்கடபதி நாயக்கர் சமணர்களுக்கு மிகுந்த கொடுமைகளைச் செய்தார். அதனைத் தாங்க முடியாத சமணர்கள் தப்பியோடினர். செஞ்சி அரசன் அந்நாட்டுச் சமணர் தலையை வெட்டிய காலத்தில் வேறு நாடுகளுக்குத் தப்பிப் போய்விட்ட சமணர்களில் காங்கேய உடையாரும் ஒருவர்.
-மயிலை சீனி. வேங்கட சாமி, சமணமும் தமிழும், பக்கம் எழுபத்து நாலு.


திருவாரூர் திருக்குளம்

தமிழ் நாட்டிலே பெரிய அளவிலானதும் பதினெட்டு ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதுமான திருவாரூர் திருக்குளம் இப்போதும் இருக்கிறது. திருவாரூரில் சமணர்கள் செல்வாக்குடன் இரந்த காலத்தில் அந்தத் திருக்குளம் சிறியதாக இருந்தது. அத்துடன் அந்தக் குளத்தின் நான்கு பக்கங்களிலும் சமண சமயத்தவருடைய நிலங்களும், மடங்களும், பள்ளிகளும், பாழிகளும் இருந்தன. அப்போது 'தண'டியடிகள்' என்னும் சைவ நாயனார் அந்தக் குளத்தைப் பெரிய குளமாக்கிட முயற்சி செய்தார். அங்குள்ள அரசன் சமணரை ஊரை விட்டுத் துரத்திய பின்னர் அவர்களுடைய கட்டிடங்களையும் நிலங்களையும் அழித்துப் பறித்து அந்தச் சிறிய குளத்தை இப்போதுள்ள பெரிய குளமாகத் தொண்டினான்.
'பன்னும் பாழிப் பள்ளிகளும் பறித்துக் குளஞ்சூழ் கரைபடுத்து'

-திருத் தொண்டர் புராணம், தண்டியடிகள், பக்கம் அறுபத்தொன்பது.


கும்பகோணம் தாலுகாவைச் சேர்ந்த திருநாகேச்சுவரர் கோயிலின் மண்டபக் கற்றூணில் உள்ள சாசனம் தென் கரைத்திமூர் நாட்டில் இருந்த மிலாடுடையார் பள்ளி என்னும் சமணக் கொவிலைக் குறிப்பிடுகிறது. திருக் கோவலூரில் இருந்த 'மிலாட்' அரசனால் கட்டப்பட்ட இந்தச் சமணக் கோவில் பின்னால் இடிக்கப் பட்டது. அக் கோயிற் கற்களைக் கொண்டு இப்போதுள்ள திருநாகேசுவரத்துச் சைவக் கோயில் கட்டப் பட்டது. இவ்வூருக்கு அருகிலுள்ள வயல்களில் சமண உருவங்கள் இன்றும் காணப்படுகின்றன.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று முப்பத்தொன்பது. 


நன்னிலம் ரயில் நிலையத்திற்கு கிழக்கே வர்த்தமானீச்சுவரர் கோயில் இப்போது உள்ளது. ஸ்ரீவர்த்தமானர்(மகாவீரர்) 24 வது தீர்த்தங்கரர். இவரத பெயரைக் கொண்டே இது பழங்காலத்தில் சமணக் கோயிலாக இருந்ததைத் தெரிந்து கொள்ள முடிகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னரே சைவரால் கைப்பற்றப்பட்ட இச்சமணக் கோவில் சைவக் கோவிலாக்கப்பட்டது.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று நாற்பது.


படிக்க படிக்க ஒவ்வொரு உண்மையாக வெளிவருவது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. தமிழக வரலாற்றை தோண்டிப் பார்த்தோமானால் நமது முன்னோர்கள் மதத்தின் பெயரால் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டும் கழுவிலேற்றியும், ஒரு மதத்தவரின் வழிபாட்டுத்தலத்தை இடித்து மற்றொருவர் கோவில் கட்டிக் கொள்வதுமாக அநியாயங்கள் தடையின்றி அரங்கேறியுள்ளது. இதற்கு அரசர்களும் உடந்தையாய் இருந்திருப்பதுதான் விந்தை. 

நேரம் கிடைக்கும் போது மேலும்பல வரலாறுகளை பட்டியலிடுகிறேன்.

இறைவனே மிக அறிந்தவன்

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்


(சாம நத்தம் என்ற இந்த இடத்தில் தான் தோல்வியுற்ற அனைத்து சமணர்களும் ஒவ்வொருவராக கழுவிலேற்றிக் கொல்லப்பட்டனர்)