Followers

Wednesday, October 31, 2012

நாட்டை ஆள்வது முகேஷ் அம்பானியா! மன்மோகன் சிங்கா!

அர்விந்த் கெஜ்ரிவாலின் அடுத்த குற்றச்சாட்டு ஆரம்பம்!



ஏற்கெனவே ராபர்ட் வதேராவின் மீது ஊழல் குற்றச்சாட்டை வைத்தார். பிஜேபியின் தலைவர் நிதின் கட்கரி செய்து ஊழல்களையும் பட்டியலிட்டார். தற்போது ரிலையன்ஸ் கம்பெனி செய்த தில்லுமுல்லுகளையும் அதற்கு பாஜகவும் காங்கிரஸூம் எவ்வாறு துணை போயின என்பதை நேற்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். காங்கிரஸூம் ஊழல் மலிந்திருக்கிறது. பாஜகவும் சளைத்ததல்ல என்பதை நிரூபித்து வருகிறது. முக்கிய கட்சிகள் இரண்டுமே ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதால் நாட்டை யாரிடம் ஒப்படைப்பது என்று நாட்டு மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆரம்பத்தில் ஒரு டேப் ஒலிபரப்பப்படுகிறது. அதில் நீரா ராடியா, ரஞ்சன் பட்டாசார்யா(வாஜபாய் மருமகன்), போன்றோர் எவ்வாறு மந்திரிகளை மாற்றுகின்றனர் அதற்கு எங்கிருந்து உத்தரவு வருகிறது என்பதை அறியக் கூடியதாயிருக்கிறது. இனி கெஜ்ரிவால் வைக்கும் குற்றச்சாட்டுகளை வரிசையாக பார்ப்போம்.

ரிலையன்ஸ் கம்பெனிக்கு பிஜேபி அரசில் கேஸ் எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டது. கேஸானது ஒவ்வொரு குடும்பத்திலும் முக்கிய பங்காற்றுகிறது. எனவே ரிலையன்ஸூக்கு கொடுத்தால் நமது நாட்டு நிறுவனமாக உள்ளதால் நமக்கு மிக குறைந்த விலையில் கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்ததோ வேறு. 2000 லிருந்து இன்று வரை அரசை மிரட்டுவது, இஷ்டத்துக்கு விலையை ஏற்றுவது சில மந்திரிகளையே மாற்றச் சொல்வது என்று ரிலைன்ஸின் ஆதிக்கம தற்போது கொடி கட்டிப் பறக்கிறது.

2004ல் ரிலைன்ஸ் கொடுத்த வாக்கு ஒரு யுனிட் கேஸ் 2.25 டாலருக்கு தருவதாக சொன்னது. 17 வருடங்கள் இதனை தொடர்ந்து நாங்கள் தருவோம் என்ற வாக்குறுதியும் தரப்பட்டது. பதினேழு வருடங்கள் என்று சொல்லி விட்டு 2007 ல் ஒரு குண்டை தூக்கி போட்டது. நாங்கள் 4.25 டாலருக்கே கேஸ் சப்ளை செய்ய முடியும் என்று அரசிடம் தெரிவித்தது ரிலையன்ஸ். ஒரு ஒழுங்கான அரசு வாக்கு தவறும் ரிலையன்ஸின் ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால் பிரணப் முகர்ஜியின் தலைமையில் அமைந்த குழு 4.25 டாலருக்கு ஒத்துக் கொண்டு அவர்களின் பணியை தொடர அனுமதித்தது. 2014 வரை நீங்கள் இந்த 4.25 டாலரில் சப்ளை செய்யலாம் என்று ஒத்துக் கொண்டது அரசு. ஏன் ஒத்துக் கொள்ள வேண்டும்? இதற்கு பின்னணி என்ன? எத்தனை கோடிகள் கை மாறியது? நாட்டு மக்களின் நலனை விட ரிலையன்ஸின் நலன்தான் இவர்களுக்கு முக்கியமாக போய் விட்டது.

இத்தோடு முடியவில்லை. 2014 இன்னும் வரவேயில்லை. 2010ல் மற்றொரு குண்டை தூக்கிப் போட்டது ரிலையன்ஸ் கம்பெனி. அதாவது எங்களால் தற்போது 4.25க்கு சப்ளை செய்ய முடியாது. 14.25 க்குத்தான் எங்களால் கேஸ் சப்ளை செய்ய முடியும் என்றது ரிலையன்ஸ். இவ்வளவு அதிகம் எங்களால் கேஸூக்கான விலையைக் கொடுக்க முடியாது. ஏனெனில் இதனால் மின்சாரத்தின் விலையும் தாறுமாறாக ஏறும். இதற்கு நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று ஜெயபால் ரெட்டி திட்டவட்டமாக மறுத்து விட்டார். அவ்வாறு கொடுத்தால் அரசுக்கு 14ஆயிரம் கோடி இரண்டு வருடத்தில் நஷ்டம் ஏற்படும். 14 ஆயிரம் கோடி இரண்டு வருடத்தில் ரிலையன்ஸ் கம்பெனி லாபம் அடையும. இது அநியாயம். எனவே இதனை நான் தள்ளுபடி செய்கிறேன் என்றார்.

நமது நாட்டின் மொத்த கேஸ் தேவை 15 கோடி யூனிட். இதில் பாதி அளவான 8 கோடி யூனிட்டை ரிலையன்ஸ் கம்பெனி அரசுக்கு தர வேண்டும் என்று ஒப்பந்ம் உள்ளது. 8 கோடி உற்பத்தி செய்வதற்கு பதிலாக 2 கோடி யூனிட் மட்டுமே உற்பத்தி செய்து 'எங்களால் இவ்வளவுதான் முடியும். 8 கோடி யூனிட் நாங்கள் தர வேண்டும் என்றால் நாங்கள் முன்பு கேட்ட 14.15 டாலரான யூனிட்டுக்கு உள்ள விலையை தந்தால் எங்களின் இலக்கை அடைகிறோம்' என்று மிரட்ட ஆரம்பித்தனர்.

தற்போது வேறு வழி இல்லாமல் இந்த ஒப்பந்தத்துக்கு இடைஞ்சலாக இருந்த ஜெயபால் ரெட்டியை அகற்றியுள்ளது காங்கிரஸ் அரசு. இனி என்னவெல்லாம் காட்சிகள் அரங்கேறப் போகிறதோ தெரியவில்லை.

இந்த கேஸ் நமது நாட்டு மக்களின் சொத்து. இதை வெளியில் எடுத்து என்டிபிஸிக்கு தருவதுதான் ரிலையன்ஸின் வேலை. இதற்கு 2.15 டாலரே போதுமானது. இதுவே அந்த கம்பெனிக்கு அதிக லாபத்தை தரும் என்கிறது மும்பை ஹைகோர்டின் தீர்ப்பு. கேஸின் விலை ஏன் தாறுமாறாக எகிறுகிறது இதற்கு யாரெல்லாம் காரணம் என்பது தற்போது விளங்கியிருக்கும். தற்போது ரிலையன்ஸ் கேட்கும் தொகையான 14.25 டாலர் கொடுக்க ஆரம்பித்தால் மின்சாரம் ஒரு யூனிட் 3 ருபாயிலிருந்து 7 ரூபாய்க்கு எகிறும். ஏற்கெனவே விலைவாசி ஏற்றத்தால் அல்லல்படும் பொது மக்கள் மேலும் சுமையை சுமக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்படுவர்.

மொய்லி இதற்கு தலை சாய்ப்பாரா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



(அந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டனர். அதன் காணொளி)

செல்வந்த நாடுகளில் ஏதோ அரசியல்வாதிகள் திருடினால் அது பொது மக்களை அந்த அளவு பாதிக்காது. ஆனால் இந்தியா போன்ற பெரும் பான்மை ஏழைகளை கொண்ட ஒரு நாட்டில் இவ்வாறு நாட்டை சுரண்டுவதற்கு எவ்வாறு மனது வருகிறது? இதற்கு பிஜேபியும் காங்கிரஸூம் ஏன் ஒத்து ஊதுகிறது. ஒரு நாட்டின் எதிர்க் கட்சி சரியாக இருந்தால் அந்த நாடு மிக சிறப்பாக செல்லும்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிஜேபியும் திருடுவதில் சம பங்கு வகிக்கிறது. இவர்கள் எங்கிருந்து காங்கிரஸை காட்டிக் கொடுப்பார்கள்.? 2ஜி அலைக் கற்றையிலிருந்து கேஸ் பிரச்னை வரை நாட்டின் செல்வம் கொள்ளை போக பிஜேபி அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. அதனை காங்கிரஸ் மிக சிறப்பாக முடித்துக் கொண்டிருக்கிறது.





ஒரு பில்லியன் டாலருக்கும் அதிக பெறுமானமுள்ள முகேஷ் அம்பானியின் மும்பை வீடு.
----------------------------------------------------------------------------------

கெஜ்ரிவாலின் அடுத்த குற்றச்சாட்டு

பா.ஜ.க தலைவர் நிதின் கட்கரியின் நிறுவனமான பூர்த்தி ஷுகர் அண்ட் பவரில் முதலீடுச் செய்த நிறுவனங்களின் இயக்குநர்களில் பலர் செக்யூரிட்டி கார்டுகளும், தொழிலாளர்களும்தான் என்பதை வருமானவரித்துறை கண்டுபிடித்துள்ளது. இந்நிறுவனங்களின் வளாகங்களில் வருமான வரித்துறை பகிரங்கமாக நடத்திய சோதனையில் இந்த உண்மை தெரியவந்தது.

மும்பையில் 12 இடங்களிலும், புனே, நாக்பூர், கொல்கத்தா ஆகிய இடங்களிலும் சோதனை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிறுவனங்களில் இயக்குநர்களான 13க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து இதுவரை வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. தங்களின் பெயர்கள் எவ்வாறு இயக்குநர்கள் பட்டியலில் இடம்பிடித்தது என்பதுக் குறித்து தெரியாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரையிலான முதலீடுகளுடன் துவங்கிய நிறுவனத்திற்கு பின்னர் அதிகளவிலான பணம் குவியத் துவங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிடைத்த நிதிகளின் மூல ஆதாரங்களைக் குறித்து தெரிவிக்கவில்லை எனில் வரி ஏய்ப்பு நடத்தியதாக கருதவேண்டி வரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 'நான் ஊழலே செய்ததில்லை' என்று கட்கரி தற்போது சாதிக்கிறார்.

------------------------------------------------------

அமெரிக்க சாண்டி புயலில் சிக்கியவர்களை மீட்பதில் உதவி புரியும் ஹெலிகாப்டர்.







Tuesday, October 30, 2012

நிலம் புயல் நீர்த்துப் போக வேண்டும்!


அமெரிக்காவை நேற்று போட்டு புரட்டி எடுத்த புயலின் வேகம் அடங்குவதற்குள் நம் தமிழகத்தை நிலம் புயல் நாளை தாக்கப் போகிறதாம். ஏற்கெனவே வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை கொட்டித் தீர்க்கிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் ஏற்கெனவே மழையினால் அனைத்து இடங்களும் தண்ணீரில் மிதக்கின்றன. வடிகால் வசதி இல்லாததால் 70, 80 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் வசிக்கும் இந்த நகரம் இன்று செய்வதறியாது தவிக்கிறது. ஒவ்வொரு மழைக் காலங்களிலும் இதே நிலைதான்.

ஏரிகள் நகரமான செங்கல் பட்டில் அநேக ஏரிகளை ரோடுகளாகவும் குடியிருப்பு இடங்களாகவும் மாற்றி விட்டனர். அந்த இடங்கள் எல்லாம் தூர் வாரப்பட்டு ஏரிகளாக முறையாக பராமரிக்கப்பட்டால் இந்த தொல்லையே இருக்காது. தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் நமது அரசாங்கம் தண்ணீர் தேங்கும் என்று எதிர் பார்க்கப்படும் இடங்களில் எல்லாம் இயந்திரங்களைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளதாம். இது ரெட்டிப்பு செலவு இல்லையா? மேலும் இது நிரந்தர தீர்வும் கிடையாது. இயந்திரங்கள் எடுக்கும் தண்ணீரும் வீணாக கடலில் போய்தான் கலக்கும். தண்ணீர் பிரச்னையில் எத்தனையோ கிராமங்கள் அல்லல் பட்டுக் கொண்டிருக்க நாமோ வரும் மழை நீரை சேகரிக்காமல் கடலில் வீணாக கலக்க விடுகிறோம். தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 12 டி எம் சி தண்ணீர் நமக்கு கிடைக்கிறது. இந்த கிருஷ்ணா நீரோடு மழை நீரும் சேர்ந்து கொண்டால் அனைத்தையும் சேமிக்க ஏரிகள் ஒழுங்கான முறையில் இல்லாததால் அனைத்து உபரி நீரும் வீணாக கடலில் கலக்கிறது. பாலாறு வழியாக ஆண்டுக்கு, 7 டி.எம்.சி.,யும், அடையாறு மூலம், 2 டி.எம்.சி.,யும் மழை நீர் கடலில் சேர்கிறது. பள்ளிக்கரணை படுகையில் உள்ள, 33 ஏரிகளில் இருந்து ஆண்டுக்கு ஒரு டி.எம்.சி., மழை நீர் கடலுக்கு செல்கிறது. இதை தடுக்க ஆட்சியாளர்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள்?..

சென்னை கடலூரை இப்புயல் நாளை மதியம் கடக்கும் போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை துறைமுகம் பகுதியில் ஏழாம் நம்பர் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது மேலும் பீதியைக் கிளப்புகிறது. ஒரு மீட்டர் உயரத்துக்கு அலைகள் சீறுமாம். தமிழகத்தின் 11 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. அரசு மிக துரித நடவடிக்கை எடுத்து உயிர்ப் பலிகளும் பொருள் சேதமும் ஏற்படாமல் முடிந்த வரை காக்க வேண்டும். அரசே அனைத்தும் செய்யும் என்ற எதிர்பார்ப்பில் இல்லாமல் தற்போதே தடுப்புகளை ஏற்படுத்தி வெள்ளம் வீடுகளுக்குள் செல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

----------------------------------------------------------


குரு பூஜையில் கொலை!

தமிழகம் முழுவதும் நிலம் புயல் பயத்தால் உறைந்து போயிருக்க நேற்று பசும் பொன் கிராமத்தில் 105 வது தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டுள்ளது. அது சமயம் அங்கு நடந்த சாதி மோதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது அதிர்ச்சியை தருகிறது. ஒரு வேனில் குரு பூஜைக்கு சென்றவர்களை ஒரு கும்பல் மறித்ததாகவும் எனவே வேறு பாதையில் சென்று அங்கும் கலவரம் ஏற்பட்டு டிரைவரை வெட்டியுள்ளார்கள். சிவகுமார், வீரமணி, மலைக் கள்ளன் என்ற மூன்று பேரும் இறந்ததாக போலீசாரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் பரமக்குடியில் தலித் மக்களின் தலைவராகக் கருதப்படுகிற மறைந்த இமானுவேல் சேகரனின் அஞ்சலிக்காக குழுமிய தலித்துக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியதில் ஆறு பேர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது..

ஒவ்வொரு முறையும் இது போல் சாதி தலைவர்களால் பிரச்னை வருகிறது. ஒன்று இதற்கு தடை விதிக்க வேண்டும். அல்லது பலத்த போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். இப்படி வருடா வருடம் வெளியூர்களில் இருந்து ஆட்கள் வந்து பூஜை செய்தால்தான் தேவரின் பெருமை அல்லது இமானுவேலுவின் பெருமை பறை சாற்றப்படுமா?

இன்று மூன்று இளைஞர்களின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது. எத்தனை கனவுகளோடு வாழ்ந்தார்களோ இன்று அநியாயமாக சாதிக் கொடுமையால் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளார்கள். இதற்கு பதிலடியாக இனி எதிர் தரப்பு களத்தில் இறங்கும். ஏன் இந்த வெறி? எதைக் கொண்டு போகப் போகிறோம்?

முஹர்ரம் ஊர்வலம், மீலாது ஊர்வலம், விநாயக சதுர்த்தி ஊர்வலம், சாதி தலைவர்களின் ஊர்வலம் நினைவு நாட்கள், தலைவர்களின் சிலைகள் என்று அனைத்தையும் தடை செய்து சட்டம் இயற்றினால் இது போன்ற விஷமிகளின் செயல் கட்டுக்குள் கொண்டு வரப்படும். ஆனால் ஓட்டுக்களை எதிர் பார்த்து இதை செய்ய அரசுகள் தயங்குகின்றன. எந்த அரசியல் கட்சி தலைவர்களும் யாரையும் கண்டித்து அறிக்கையும் விட மாட்டார்கள். ஏனெனில் அப்படி அறிக்கை விட்டால் அவர்களுக்கு ஓட்டு போய் விடுமே என்ற பயம். அரசாங்கமும் இரண்டு லட்சத்தை கொடுத்து தனது கடமையை செய்ததாக சொல்லிக் கொள்ளும். நாடு போகும் பாதையை நினைத்தால் பயமாக இருக்கிறது. அனைத்து மக்களும் அமைதியாக வாழக் கூடிய சூழலை உண்டாக்க பிரார்ததிப்போம்..

-----------------------------------------------------------

நேற்றைய புயலுக்குப் பிறகு அமெரிக்கா!








Monday, October 29, 2012

அமெரிக்காவை அச்சுறுத்தும் சாண்டி புயல்!

உச்சகட்ட தேர்தல் பிரசாரத்தை எட்டியிருக்கும் அமெரிக்காவை சாண்டி புயல் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. மணிக்கு 90 மைல் மேலும் அதற்கு அதிகமாகவும் புயல் வீசும் என எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அரசால் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை ஏழு பேர் இறந்திருப்பதாக செய்தி வந்துள்ளது. இது அதிகரிக்கக் கூடும் என்று செய்திகள் கவலை தெரிவிக்கின்றன..








(A video of the explosion showed a large fireball light up the New York skyline on the East Side.)

ஹைத்தி மற்றும் பிற கரிபியன் தீவுகளை கடந்த சில நாட்களில் தாக்கி 60க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி கொண்ட இந்த சாண்டி சூறாவளி இப்போது வடக்கே நகர்ந்து, நியார்க்குக்கு அருகே இன்று திங்கட்கிழமை இரவு அமெரிக்க கிழக்கு கடற்கரை நேரப்படி சுமார் 8 மணி அளவில், அதாவது, இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணியளவில், கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.






சூறாவளியின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், கடற்கரையோர பெரு நகரங்களில் நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டன.
நாட்டின் வர்த்தகத் தலைநகரான நியுயார்க்கில், இதுவரை, சுமார் 3,70000 பேர் தாழ்வான இடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். நாளொன்றுக்கு பல லட்சக்கணக்கானோரை ஏற்றிச் செல்லும் நியுயார்க் நகர புற நகர் பாதாள ரயில் அமைப்பு நேற்றிலிருந்து மூடப்பட்டுவிட்டது. பள்ளிகள் மூடப்பட்டிருகின்றன. தலைநகர் வாஷிங்டனும் புயல் எச்சரிக்கைக்கு தப்பவில்லை. அங்கும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.







புயலின் தாக்கத்தால் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. காற்றும் பலமாக உள்ளது. இதனால் அனைத்து இடங்களும் நீரில் மூழ்கி உள்ளன. அமெரிக்காவின் மிகப் பழமையான அணுஉலையிலும் நீர் உட்புகுந்துள்ளது. ஒஸ்டர் க்ரீக் எனும் 1969-இல் கட்டப்பட்ட அணு உலையில் முறையான பராமரிப்பு இருந்தாலும் புயலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் கடல்நீர் அணுஉலைக்குள் வரத் துவங்கி உள்ளது. இது எதிர்பாராத நிகழ்வு என அணுஉலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு 7 மணி முதல் நிலைமை மோசமாகத் துவங்கியதாக தெரிவித்துள்ளனர். அணு உலை வெடிக்கும் அபாயம் இல்லையெனினும், அணு உலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அணு உலையை சுற்றியுள்ள பகுதிகளில் அவசர எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது போன்ற ஒரு நிலை நம் கூடங்குளத்துக்கு வந்தால் அதையும் தாங்கும் திறனை நிர்வாகம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.


எவ்வளவு இயற்கை பேரிடர் வந்தாலும் அமெரிக்க மக்கள் எல்லாவற்றிற்கும் அரசின் உதவியை எதிர் பார்க்காமல் தாங்களே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இதனை நம் மக்களும் பின் பற்ற முயற்சிக்க வேண்டும்.

தமிழ் நாட்டிலும் கடற்கரையோர மாவட்டங்களில் நாளை புயல் வீசலாம் என்ற செய்தி வருகிறது. அரசையே எதிர் பார்க்காமல் பொது மக்களும் களத்தில் இறங்கி தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். நம் தமிழக அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உயிர் பலிகளையும் பொருள் இழப்புகளையும் தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.

---------------------------------------------------------

உலகமே தலை கீழாக புரண்டாலும் நம் தமிழக ரத்தத்தின் ரத்தங்களுக்கு கவலை எல்லாம் எதில் இருக்கிறது என்பதை இந்த ஃபேஸ் புக் ஸ்டில் நமக்கு உணர்த்துகிறது. :-)


Sunday, October 28, 2012

புரோட்டீன்களைப் பற்றி பரிணாமவியல் சொல்வதென்ன?



பரிணாமவியலை ஆதரிக்கும் ஒரு ஆராய்ச்சியாளரின் புலம்பல்:

"ஹையோ..ஹையோ.... நானா இது!....பரிணாமவியலை ஆழ்ந்து படிக்க ஆரம்பிச்சதிலிருந்து என் நிழல் கூட குரங்கு மாதிரியே தெரியுதே! கடவுளே என்னை காப்பாத்து.."

--------------------------------------------------------------------------

நம உடலில் உள்ள அல்புமீன் என்பது நீரில் கரையும் தன்மை உடைய எந்தவொரு புரதப் பொருளையும் குறிக்கும். இவை அடர்ந்த உப்புக்கரைசலிலும் ஓரளவிற்குக் கரையும் தன்மை கொண்டவை.. நமது உடலில் உள்ள கொழுப்பு, கொலஸ்ட்ரால், ஹார்மோன்கள், சர்க்கரை போன்ற அனைத்தையும் ஒரு கட்டுக்குள் வைத்திருப்பதற்கு இந்த புரோட்டீன்கள் மிகவும் உதவுகிறது. நமது உடலின் ரத்தக் குழாய்கள் மூலமாக பயணித்து லிவரிலிருந்து சத்துக்களை பிரித்து கொடுத்து எந்த பொருளுக்கு எத்தனை சதவீதம் தேவை என்பதை தீர்மானித்து தனது வேலையை கச்சிதமாக செய்கிறது. இதில் எந்த தவறும் ஏற்படாமல் எந்த குழப்பமும் இல்லாமல் தனது வேலையை செய்வதை பார்த்து உயிரியல் வல்லுனர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.


(கோழி முட்டையின் வெள்ளைக் கருவில் உள்ள புரதம்)

நமது உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் இந்த புரோட்டீன்கள் சிறந்த சேவையாற்றுகிறது. ஒரு கட்டிடத்திற்கு செங்கல் எவ்வளவு அவசியமோ அதுபோல் நமது உடலுக்கு அல்புமீன் புரோட்டீன்களின் பங்கு மிக அவசியமாகிறது. சிறு நீரகத்தை எடுத்துக் கொண்டால் அங்கு இந்த புரோட்டீன் எந்த நேரமும் தங்குவதில்லை. எப்பொழுதெல்லாம் சிறு நீரகத்தில் பிரச்னை ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் உடன் ஓடி வந்து பிரச்னையை தீர்த்து வைத்து சீராக செய்ல்பட வைப்பதில் இதன் பங்கு முக்கியமானது. இந்த புரோட்டீன்கள் செடிகொடிகளின் விதைகளிலேயும் உள்ளன. ஒரு கோழி முட்டையின் வெள்ளைக் கருவிலும் உள்ளது அல்புமின் என்ற புரதம் . இதன் பலனை உணர்ந்த பலர் முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி விட்டு வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுவதைப் பார்ததிருக்கிறோம். இந்த புரதத்தின் முக்கியத்துவத்தை அறிந்த உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் இதன் செயலைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். நாம் கேட்பது இந்த புரோட்டீனுக்கு இத்தகைய அறிவை கொடுத்து அதனை வேலை வாங்குவது யார்?

ஒரு உயிரி மற்றொரு உயிராக பரிணாமம் அடைந்தால் முக்கியமாக இந்த புரோட்டீனின் அளவும் கூடவோ அல்லது குறைவாகவோ பரிணாமம் அடைந்திருக்க வேண்டும். இது பற்றி பரிணாமவியலார் எந்த தகவலும் அளிக்கவில்லை. இது பற்றி டார்வின் அறிந்திருக்கவுமில்லை.

மற்றொரு அதிசயத்தையும் பார்ப்போம். நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் இரைப் பைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்குள்ள சுரப்பிகளால் நாம் சாப்பிடும் பிரியாணி, மாட்டு கறி, என்று எதையெல்லாம் உள்ளே தள்ளுகிறோமோ அத்தனையையும் கரைத்து உடலுக்கு சக்தியாகவும் தேவையற்றவைகளை மலமாகவும் கொல்லைப் புறம் அனுப்பி விடுகிறது. இவை அனைத்து வேலைகளும் நாம் சாப்பிடும் உணவை விட மிருதுவான இரைப் பையில் நடக்கிறது. கடினமான உணவுகளையே கரைத்து விடும் இரைப் பை பழுதாகாமல் இருப்பதற்கான சூட்சுமம் என்ன? ஆட்டுக் கறியும், மாட்டுக் கறியையும் கரைத்து விடும் இந்த இடம் இரைப் பையையும் கரைத்து விட வேண்டும் அல்லவா? ஆனால் அவ்வாறு நிகழ்வதில்லை. ஏன் நிகழ்வதில்லை?



ஏனென்றால் அந்த இரைப்பையின் சுவர்களில் ம்யூகோஸா என்ற பெயருடைய வழவழப்பான பூச்சு பூசப்பட்டுள்ளது. சாராயம் இதன் எதிரி. நம் குடிமகன்கள் அளவுக்கு மீறி சாராயத்தை உள்ளே தள்ளுவதால் இந்த ம்யூகோஸா என்ற பொருள் கரைந்து வெளியேறி ம்யூகோஸாவின் அளவு குறைந்து விடுகிறது. இதன் பிறகுதான் குடிகாரர்களுக்கு வயிற்றெரிச்சல் ஆரம்பமாகிறது. பல உயிரினத்திற்கும் இந்த பொருளின் அளவு மாறுபட வேண்டும். ஏனெனில் யானையின் செரிமானத்துக்கும் சிங்கத்தின் செரிமானத்துக்கும் குரங்கின் செரிமானத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ம்யூகோஸா என்ற பொருளின் அளவு உயிரினத்தின் செரிமாணத்துக்கு ஏற்ப மாறுபட்டால்தான் அந்த உயிரால் உயிர்வாழ முடியும். பரிணாமம் இஙகிருந்து தொடங்க வேண்டும். இதற்கு எந்த ஆய்வாவது செய்து சமர்ப்பித்துள்ளார்களா என்றால் எதுவும் இல்லை. இந்த இரைப்பையின் உள்ளே ம்யூகோஷா என்ற பொருளை அளந்து அமைத்தவன் யார்? அறிவியல் அறிஞர்களால் இன்று வரை இதற்கான காரணத்தை பெற முடியவில்லை.

அல்புமீனைப் பற்றியும், ம்யூகோஸாவைப் பற்றியும் டார்வின் தனது பரிணாம கொள்கையில் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. பரிணாமம் நடை பெற முதலில் டிஎன்ஏ, குரோமசோம்கள், புரோட்டீன்கள் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அதன் பிறகுதான் புறத் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். இந்த புரோட்டீன்களின் அவசியத்துக்கு காரணத்தை கண்டு பிடிக்காமல் வெளித்தோற்றத்தை வைத்து குரங்கிலிருந்து மனிதன் வந்ததையும் மானிலிருந்து ஒட்டகம் வந்ததையும் தனது கற்பனைத் திறனால் பலரை நம்ப வைத்து விட்டார் டார்வின்.

http://en.wikipedia.org/wiki/Gastric_mucosa
http://www.buzzle.com/articles/albumin-in-urine.html
http://www.albumin.org/
http://en.wikipedia.org/wiki/Albumin

-----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------

இனி பழைய பதிவுகளில் பலர் வைத்த சில வாதங்களை பார்ப்போம்.

நான் முன்பு மான் ஒட்டக சிவிங்கி சம்பந்தமாக கேட்ட பல கேள்விகளுக்கு சார்வாகன் தரும் பதிலைப் பாருங்கள்..

//இது எப்போது நிகழும் எனில் அதாவது பழ ஈ ஜீனோம் பரிசோத்னை போல் பல் உயிரிகளின் ஜீனோம் மீதான மாற்ற நிகழ்வுகள் ஆவணப் படுத்தல் நடக்கும் போது மாறிவிடுவார்கள் என கூகிளாண்டவர்,ப்ளாக்கர், கம்ப்யுட்டர், கீபோர்ட், மத்ர்போர்ட், தமிழ்மணம், இன்ட்லி, இதர திரட்டிகள் அனைத்தின் மீதும் சத்தியம் செய்து கூறுகிறேன்.

அவர்கள் எழுப்பும் ஒவ்வொரு பரிணாம் எதிர்ப்புக் கேள்விக்கும் பதில் அளிக்கப் படும்.// - சார்வாகன்

நானும் சகோ ஆஷிக்கும் வைக்கும் பல கேள்விகளுக்கு தற்போது அவரிடம் பதில் இல்லையாம், ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறதாம். அந்த ஆராய்ச்சி முடிவுகள் வந்தவுடன் நாம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் தந்து விடுவாராம். அதற்காக தமிழ்மணம், இண்ட்லி, கூகுள் மீதெல்லாம் சத்தியமிட்டு சொல்கிறார். :-)

ஆக இதுவரை இவர்கள் எந்த ஆய்வுகளையும் செய்யாமல் அனுமானங்களை வைத்தே காலத்தை ஓட்டியிருப்பது தெளிவாகிறது. இனி வரும் காலங்களில் முடிவுகள் தவறாக வந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது? கல்லூரி பாடமாகவும், ஆராய்ச்சி துறையிலும் இதனை இத்தனை காலமாக எப்படி வைத்திருந்தார்கள்? உலகம் முழுவதும் பல கோடி பேரை நாத்திகத்தின் பக்கம் கொண்டு சென்றதற்கு என்ன பதிலை தரப் போகிறார்கள்?


--------------------------------------------------------

//சரி ஒரு விஷயத்தை அவர் கவனிக்க மறந்துவிட்டார் . இந்த மாதிரி பிரம்மாண்ட வாயில்களை கொண்ட கட்டிடத்திற்கு ஏறி செல்லும் படிகளை பார்த்தீர்கள் என்றால் . அவை சாதாரண மனிதர்கள் நடந்து செல்லும் படிதான் வடிவமைக்க பட்டிருக்கும் . 12 அடி மனிதன் இந்த படிகளில் ஏறினால் கால் இடறி கீழே விழுந்து விடுவான் அல்லது நான்கு படிகளாக தாண்டிதான் போக வேண்டி இருக்கும் . எதற்கு லூசுத்தனமாக படிகளை மட்டும் சிறிதாக கட்டினார்கள் என்று சு.பி.இடம் கேட்டு சொல்லவும் //-.அஞ்சா சிங்கம்

http://unusualplaces.org/madain-saleh/

http://www.quranandscience.com/historical/121-al-hijr-madain-saleh.html
(சவுதி அரசு தற்போது அமைத்த இரும்பு படிகளை இங்கு பார்க்கலாம்).

http://www.pbase.com/adnan_masood/madain_saleh

இந்த வீடுகளின் வாதில்கள் அனைத்தும் தரையிலிருந்தே தொடங்குகிறது. சில வீடுகள் சற்று உயரமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அந்த மக்கள் உயரமாக இருப்பதால் சுலபமாக சென்று விடுவர். ஆனால் நம்மால் முடியாது. நாம் மேலே ஏறுவதற்காக சவுதி அரசாங்கம் இரும்பாலான படிகளை அமைத்துள்ளது. இதைப் பார்த்து விட்டுத்தான் அவர்கள் உயரமானவர்களாக இருந்தால் படிகள் ஏன் சின்னதாக உள்ளது என்ற அறிவார்ந்த கேள்வியை அஞ்சா சிங்கம் கேட்கிறார். சார்வாகனும் அதற்கு 'ஆஹா..ஓஹோ' என்ற பாராட்டு பத்திரம் வேறு வாசிக்கிறார்.

--------------------------------------------------------

அடுத்து வவ்வால் தனது வாதத்தில் மதாயீன் சாலிஹ் வீடுகளாக இருக்க முடியாது. அவை அனைத்தும் நபாத்தியர்களின் கல்லறை என்றார். ஆனால் இங்கு ஒரு மிகப் பெரிய ராட்சச கிணறு உள்ளதை பார்த்தேன். அந்த கிராம மக்கள் அனைவரும் அந்த கிணற்றிலிருந்தே தண்ணீர் எடுத்துள்ளனர். யாராவது மயானத்தில் இவ்வளவு பெரிய கிணறு தோண்டுவார்களா?

http://www.flickr.com/photos/oansari/4454941148/

சவுதி அரசு யாரும் தவறி விழுந்து விடக் கூடாது என்பதற்காக தற்போது இரும்பு கம்பிகளால் அடைத்து வைத்துள்ளது. அதையும் இஙகு சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.


Saturday, October 27, 2012

ஒரு துளி கடல் - குறும் படம்.

ஒரு துளி கடல் - குறும் படம்.



முஸ்லிம்களுக்கு எதிராக சினிமாத் துறை தொடர்ந்து எதிரான கருத்துக்களையே விதைத்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்க படம் ஒன்றும் முகமது நபியைப் பற்றி தவறான தகவல்களை வெளியிட்டு அது பெரும் பிரச்னையாக உலகமெங்கும் பரவியதை நாம் அறிவோம். நம் தமிழக கூத்தாடிகளும் தங்கள் பங்குக்கு எந்த வகையிலாவது இஸ்லாத்தை இழித்து படம் எடுக்க தயங்குவதில்லை. அதில் விஜயகாந்த், அர்ஜூன், கமல ஹாஸன் போன்ற கூத்தாடிகள் முதலிடத்தில் இருப்பதை அறிவோம். தற்போது வெளி வர காத்திருக்கும் விஸ்வரூபமும் அது போன்ற சாயலிலேயே எடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகிறது. யார் எக்கேடு கெட்டாலும் இந்த கூத்தாடிகளின் கல்லா நிரம்ப வேண்டும். அதற்காக எதையும் செய்வார்கள்.

இதனை சட்டம் போட்டு தடுக்க முடியாது. அரசே ஆதரவாக செயல்படும்போது இதற்கு மாற்றாக உண்மைகளை நாமும் திரைப்படங்களாக கொண்டு வர வேண்டும். அந்த வகையில் 'ஒரு துளி கடல்' என்ற இந்த குறும்படம் சிறப்பாக வந்துள்ளது. புதியவர்களின் முதல் முயற்சி என்பதால் சில குறைகள் இல்லாமல் இல்லை. நாடகத்தனமாக சில காட்சிகள் வருகின்றன. இயல்பாக பேசுவது போல் காட்சிகள் அமைக்கப்பட வேண்டும். அந்த சிறுவன் பேசுவது கேமராவுக்கு முன்னால் பயந்து கொண்டே பதட்டத்தோடு பேசுவது போல் உள்ளது. கிராமத்தில் நடக்கும் காட்சிகளை படமாக்கும் போது அதில் பாமரத் தனமும் தெரிய வேண்டும். மேலும் கதைகள் அமைக்கும் போது குர்ஆனின் போதனைகளை ஒட்டியும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களை ஒட்டியும் காட்சிகள் அமைக்கப்பட வேண்டும்.

இணையத்தில் இஸ்லாத்துக்கு எதிரான சதி வலைகளை ஓரளவு முறியடித்து விட்டோம். அதே போல் சினிமாத் துறையிலும் காலடி பதித்து அங்கு அரங்கேற்றப்படும் சதிகளை முறியடிக்க வேண்டும். அமீர் போன்ற இயக்குனர்கள் சிறந்த கதையம்சமுள்ள படிப்பினை ஊட்டும் திரைப்படங்களை எடுக்க முயற்சிக்க வேண்டும். டைரக்டர் அமீரைப் பொறுத்த வரை ஏற்கெனவே தவ்ஹீத் இயக்கத்தில் இருந்தவர். எனவே இஸ்லாமிய வரலாறுகளை ஓரளவு முறையாக தெரிந்தவர். எனவே குறும்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அமீரின் ஆலோசனையையும் அவ்வப்போது கேட்டுக் கொள்வது அவர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.

குறும்படம் வெளியீடு நிகழ்வு

திரைப்பட இயக்குனர் அமீர் அவர்கள் குறும்படத்தின் முதல் பிரதியை வெளியிட கிரியேடிவ் கம்யூனிகேஷன் சென்னையின் துணைத்தலைவர் ஜி.அப்துர் ரஹீம் அவர்கள் பெற்று கொண்டார். இரண்டாம் பிரதியை திரைப்படத்தில் நடித்துள்ள வழக்கு எண் படத்தில் நடித்த ஜெயபால் அவர்கள் பெற்றுக் கொண்டார். மூன்றாம் பிரதியினை அனைத்து முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மத் ஹனிஃபா அவர்கள் பெற்றுக் கொண்டார்.



அதன் பிறகு இயக்குனர் அமீர் வாழ்த்துரை வழங்கினார். முஹம்மத் நபி அவர்களை தவறாக சித்தரித்த திரைப்படத்திற்கு திரைப்படத்தின் மூலம் பதில் சொல்லியுள்ள இக்குறும்படத்தின் இயக்குனர் வி.எஸ்.முஹம்மத் அமீன் அவர்களை நான் பாராட்டுகின்றேன். வருகின்ற காலங்களில் இதை விட தரமான குறும்படங்கள் அதிகமதிகம் இயக்கப்பட வேண்டும் அதற்கு நான் எப்போதும் துணை நிற்பேன் என்று இயக்குனர் அமீர் அவர்கள் தனது உரையில் தெரிவித்தார். இஸ்லாமிய பற்றுள்ள இளைஞர்கள் நவீன தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டு அதன் வாயிலாக இஸ்லாத்தின் நல்ல கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்றார்.

அதன் பிறகு இஸ்லாமிக் ஃபவுண்டேஷன் ட்ரஸ்டின் துணைத்தலைவர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இயக்குனர் அமீர் அவர்களை வரவேற்று, ஒரு துளிக்கடல் குறும்படத்தின் இயக்குனர் வி.எஸ்.முஹம்மத் அமீன் அவர்கள் சிறப்பாகவும், குறுகிய காலத்திலும் இக்குறும்படத்தை இயக்கியுள்ளார் அவருக்கு இறைவன் அதிகமதிக கூலியை கொடுக்க வேண்டும் என்றார். இன்றைய காலத்தில் இஸ்லாத்திற்கு எதிராக வரக்கூடிய எதிர்ப்புகளை அமைதியாகவும், நிதானமாகவும் கையாள வேண்டும். ஒரு வன்முறைக்கு இன்னொரு வன்முறை தீர்வாகாது. எந்த காலத்திலும் இஸ்லாத்தின் மகத்துவத்தையும், வளர்ச்சியையும் தடுக்க முடியாது. இது போன்ற தவறான திரைப்படங்கள் மூலமாக ஒரு காலத்திலும் முஹம்மத்(ஸல்) அவர்களின் மகத்துவத்தை யாராலும் தடுக்க முடியாது. தீமையை நன்மையை கொண்டே தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள குறும்படத்திற்கு எனது வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன் என்றார்..
-----------------------------------------------------------------------

மில்லி கெஜட்டை மீட்டெடுப்போம் வாருங்கள்!

இன்று நமது நாட்டில் முஸ்லிம்களின் குரலை கொண்டு செல்ல சிறந்த ஊடகங்கள் மிக அரிதாகவே உள்ளது. 170 மில்லியன் முஸ்லிம்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் மில்லி கெஜட் தற்போது மிகுந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. 13 வருடங்களுக்கு முன் 16 பக்கங்களை கொண்ட இதழாக வந்ததை 32 பக்கங்களாக மாற்றினர். பல சிறந்த இஸ்லாமிய எழுத்தாளர்கள், மாற்றுமத நண்பர்கள் என்று பலர் இந்த பத்திரிக்கைக்காக அல்லும் பகலும் பாடுபட்டு வருகின்றனர்.

இதன் எடிட்டரான ஜபருல் இஸ்லாம் தற்போது இந்த இதழ் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். பக்கங்களை பழைய படி 16 க்கு குறைக்கலாமென்றும் அல்லது இதழையே நிறுத்தி விடலாம் என்ற நோக்கிலும் உள்ளதாக குறை பட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் சிறுபான்மையினர் ஒரு பத்திரிக்கை அதுவும் ஆங்கிலத்தில் நடத்துவது என்பது எவ்வளவு சிரமம் என்பது நமக்குத் தெரியும். பிராந்திய மொழிகளில் வரும் பத்திரிக்கைகள் உலக அளவிலோ அல்லது ஒட்டு மொத்த இந்தியாவையோ அடைய முடிவதில்லை.

ஒரு இந்தியன் எக்ஸ்பிரஸேர், ஒரு ஹிந்துவோ தங்களின் எண்ணத்தை வெகு விரைவில் முழு உலகுக்கும் முழு இந்தியாவுக்கும் சில மணி நேரங்களில் கொண்டு சேர்த்து விடுகிறார்கள். பல பொய் செய்திகள் உலகை அழகாக வலம் வருகின்றன. உண்மை ஒரு ஓரத்தில் ஒதுங்கி உட்கார்ந்து விடுகிறது.

இந்த நிலை ஏற்படாமல் தடுக்க நாம் இதன் சந்தாதாரர் ஆவோம். நமது சொந்தங்களுக்கு இதன் சந்தாக்களை நாம் கட்டி அவர்களை சென்றடைய செய்வோம். மாற்று மத நண்பர்களுக்கு நமது சந்தாக்களை அளிப்போம்.

எத்தனையோ அநாவசிய செலவுகள் செய்து வரும் நாம் மிக குறைந்த தொகையான இந்த சந்தாக்களை பலருக்காகவும் கட்டி ஒடுக்கப்பட்ட இனத்தவர், இஸ்லாமிய மற்றும் உலக செய்திகளை பலரும் படிக்க உதவி புரிவோம்.

"we are now in the 13th year yet incurring serious losses month after month. We are thinking of two options: either to close down or to further reduce our pages to 16 pages per issue which will further restrict our ability to cover the issues of our community (we had 32 pages/issue which we reduced to 24 pages some time back)."

எடிட்டரின் கடிதம்

http://www.milligazette.com/pages/subscribe

எவ்வாறு சந்தாக்களை அனுப்புவது....

http://www.milligazette.com/misl/subs-faqs-mg.htm

உங்களது சந்தேகங்களுக்கு.......

http://www.milligazette.com/

பத்திரிக்கையை பார்வையிட.....

Friday, October 26, 2012

வேப்பிலை, எலுமிச்சம் பழத்தால் ஓடும் அரசு பேருந்து!


'ஹையோ....என்னை உட்ரும்மா!....நான் பிள்ளை குட்டிக்காரன்'

-----------------------------------------------------

ஆலங்குடி: ஆவி பயத்தால் புதுக்கோட்டை அருகே அரசு பஸ்ஸுக்கு வேப்பிலை கட்டி ஓட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டையிலிருந்து, ஆலங்குடி வழியாக கொத்தமங்கலம், கீரமங்கலம், மேற்பனைக்காடு, பேராவூரணி வரை, அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ், ஆவிகள், பேய்கள் நடமாட்டம் உள்ளதாகக் கூறப்படும், திருவரங்குளம் ஆர்.எஸ்.பதி காடு, கொத்தமங்கலம், மேற்பனைகாடு, காவிரியாறு பாலம் வழியாகச் செல்கிறது. இந்த வழியாகச் செல்லும் போது, பஸ் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன், மேற்பனைகாடு காவிரியாறு பாலத்தில் பைக்கில் சென்றவர்கள் மீது இந்த பஸ் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். காட்டுப்பகுதியில் செல்லும்போது, இந்த பஸ் அடிக்கடி பழுதாகி நின்றுவிடும். இரவு நேரங்களில் பெரும்பாலும் சில பயணிகளுடன் டிரைவர், கண்டக்டர் மட்டுமே தனியாக வரும் சூழல் உள்ளது. இரவு நேரங்களில் காட்டுப்பகுதியில் பஸ் பழுதாகி நிற்பதால், இந்த பஸ்சில் பயணிக்க பயணிகள் பயப்படுகின்றனர். மேலும், டிரைவர், கண்டக்டர்களும் இந்த பஸ்சில் பணி செய்ய தயங்குகின்றனர். இந்த பஸ்சில், "ட்யூட்டி' பார்க்க பெரும்பாலான டிரைவர், கண்டக்டர்கள் தயங்குவதுடன், தங்களை வேறு பஸ்சுக்கு மாற்றித்தரும்படி கூறுகின்றனர். ஆனால், கோட்ட மேலாளர்கள் எச்சரிக்கையை தொடர்ந்து பயந்து கொண்டே வேலை பார்க்கின்றனர். இந்நிலையில், இந்த பஸ் டிரைவர், கண்டக்டர்கள் புதுக்கோட்டையில் உள்ள அம்மன்கோவிலில் அபிஷேகம் செய்தனர். கோவிலில் வைத்து வழிபட்ட எலுமிச்சை பழம், வேப்பிலையை பஸ் முன்னால் கட்டி, பஸ்சை ஓட்டி வருகின்றனர்.


பத்திரிக்கை செய்தி:-
25-08-2012

இறந்தவர்களின் ஆவி (உயிர்) மீண்டு வந்து உயிரோடு இருப்பவர்களைப் பிடித்துக் கொள்கிறது அது தான் பேய் என்று சிலர் கருதுகிறார்கள். இதற்கு சாத்தியமே இல்லை என்று இஸ்லாம் அடித்துக் கூறுகிறது.

''அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதைத் தன்னிடத்தில் நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை வாழ்வதற்காக அனுப்பி விடுகிறான்'' (அல்குர்ஆன் 39:42)

''அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; ''என் இறைவனே! என்னைத் திரும்ப உலகுக்குத் திருப்பி அனுப்புவாயாக!'' என்று கூறுவான். (அல்குர்ஆன் 23:99)
''நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக'' என்றும் கூறுவான். அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையேயன்றி வேறில்லை; அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.'' (அல்குர்ஆன் 23:100)

மரணித்த பிறகு எந்த உயிரும் இந்த உலகத்திற்கு திரும்பி வராது, அவ்வுயிருக்கும் இவ்வுலகிற்கும் இடையில் திரை இருக்கிறது. அதை உடைத்துக் கொண்டு வரவே முடியாது. எனவே இறந்த மனிதனின் உயிர் உயிருடன் இருப்பவரின் உடலில் சவாரி செய்ய முடியவே முடியாது. எனவே இறந்தவனின் ஒரு ஆவி மற்றவனின் உடலில் ஏறும் என்ற நம்பிக்கை மற்றவர்களுக்கு வரலாம். ஆனால் ஒரு முஸ்லிமுக்கு அறவே வரக் கூடாது. ஆனால் நம்மிலும் சிலர் மனநலம் பாதிக்கப்பட்ட பலரை பேய் பிடித்திருப்பதாக நினைத்துக் கொண்டு தர்ஹாக்களில் கட்டிப் போட்டு அவர்களின் நோயை மேலும் அதிகப்படுத்துகிறார்கள். அரசாங்கம் இது போன்று ஏர்வாடி, வேளாங்கண்ணி, நாகூர் போன்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பல நோயாளிகளை மீட்டு அவர்களை மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும். இதனால் பலரின் வாழ்வை அழிவிலிருந்து மீட்கலாம்.

பஸ் டிரைவருக்கு வேப்பிலை கட்டப்பட்டதால் கொஞ்சம் தைரியத்தோடு வண்டியை ஓட்டுவார். அது ஒன்றுதான் இதில் கிடைத்த நன்மை. இதன் மூலம் காசு பார்க்கும் மந்திரவாதிகளுக்கும் சில நன்மைகள். இங்கு சவுதியில் பேய் ஓட்டுகிறேன் என்று யாராவது காசு பார்க்க ஆரம்பித்தால் அவர் கம்பி எண்ண வேண்டியதுதான். :-)






நண்பர்கள் அனைவருக்கும் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

Wednesday, October 24, 2012

மானிலிருந்து பரிணாமம் அடைந்ததா ஒட்டக சிவிங்கி?



பெண் மான்: கீழே இவ்வளவு இலை தழைகள் இருக்க ஏன் கஷ்டப்பட்டு கிளைகளின் இலைகளுக்கு முயற்சிக்கிறே!

ஆண் மான்: நம்முடைய முன்னோர்களில் பலர் இவ்வாறு முயற்சித்து ஓட்டக சிவிங்கியாக மாறினதா டார்வின் சொல்றாரே! நீ கேள்வி படலியா! அதான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்.

பெண் மான்: ஆமாம். அதை அப்படியே நம்பிட்டியே. அதற்கு ஏதாவது ஆதாரங்கள் கொடுத்தாராமா?

ஆண் மான்: அத மட்டும் கேட்காதே! டார்வின் சொல்லிட்டார். நான் நம்புறேன். அவ்வளவுதான்.

பெண் மான்: ??????????????????
----------------------------------------------------------------
1) காட்டில் மான்கள் வாழ்ந்துவந்தன.
2) வறட்சி மற்றும் போட்டி காரணமாக புல்வெளிகளில் உணவு அருகிப்போனது. எனவே இந்த மான்கள் கிளைகளில் உள்ள தழைகளை சாப்பிட முயற்சித்து சிறுக சிறுக இவற்றின் கழுத்து நெடிதானது.
3) குட்டையான கழுத்தைக்கொண்ட மான்கள் இறந்து போயின.
4) சிறிது நீளமான கழுத்துள்ள மான்கள் பிழைத்தன.
5) அம்மான்களிடையே இனப்பெருக்கம் நிகழ்ந்தது
6) இம்முறை பிறந்த குட்டிகளின் கழுத்து முன்பை விட நீளமாக இருந்தது (நீளமான கழுத்துடைய மான்கள் கலப்பில் ஈடுபட்டதால்)
7) இவ்வகை இயற்கையின் தேர்வு மில்லியன் வருடங்களில் மானினத்தை ஒத்த ஒட்டைச்சிவிங்கியின் தோற்றத்துக்கு வகை செய்தது.

இதுவே டார்வின் சொன்ன ஒட்டக சிவிங்கியின் சுருக்கமான பரிணாம தியரி.

இப்படி பல படித்தரங்களை சொன்ன டார்வின் இதற்கு ஆதாரங்களை எந்த இடத்திலும் சமர்ப்பிக்கவில்லை. அறிவியல் அறிஞர்கள் எவரும் இதனை ஒத்துக் கொள்ளவும் இல்லை. மானிலிருந்து ஒட்டக சிவிங்கி வரை பரிணாமம் நடைபெற்றிருந்தால் நடுத்தர உயரத்தையுடைய ஒட்டக சிவிங்கிகளின் படிமங்கள் கிடைத்திருக்க வேண்டும். வழக்கம் போல் இது எவற்றையும் பரிணாமவியலை ஆதரிக்கும் எந்த விஞ்ஞானியும் சமர்பிக்கவில்லை.

பழங்கள் காய்கள் வேண்டுமானால் மரங்களின் உயரத்தில் இருக்கும். ஆனால் மான்கள் சாப்பிடும் இலை தழைகள் மானினுடைய உயரத்திலேயே கிடைத்து விடுவதைப் பார்க்கிறோம். இவற்றிற்கு உயரமான மரங்களில் உள்ள இலை தழைகளை தேட வேண்டிய அவசியம் எழ வாய்ப்பே இல்லை. வறட்சி பஞ்சத்தினால் புல் பூண்டுகள் அழிந்து விட்டன என்ற வாதமும் நிற்காது. ஏனெனில் அத்தகைய கடுமையான வறட்சியில் மரங்களும் கூட தங்களின் உற்பத்தியை நிறுத்தி விடும். மேலும் மான்களை ஒத்த ஆடு மாடுகள் காட்டெருமைகள் யானைகள போன்ற பல மிருகங்களின் உணவு இலை தழைகளே! பஞ்சம் வந்தால் எல்லா மிருகங்களுமே பாதிக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் எல்லா மிருகங்களின் கழுத்துக்களும் ஒட்டக சிவிங்கியைப் போல் நீண்டிருக்க வேண்டும். அப்படி எந்த மிருகத்துக்கும் கழுத்து நீண்டதாக நாம் பார்க்கவில்லை. அப்படியிருக்க மான்களுக்கு மாத்திரம் எவ்வாறு கழுத்து நீண்டது?

ஜூராஃபா என்ற வார்த்தையே அரபி மொழியிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தை. இதன் அர்த்தம் 'அழகிய ஒன்று' என்ற பொருளில் வரும். மனிதன் மிருகங்களுக்கு பெயர் சொல்லி அழைக்க ஆரம்பித்த நாளிலிருந்தே ஒட்டக சிவிங்கிகள் தற்போதுள்ள அமைப்பிலேயே இருந்துள்ளன என்பதை அறியலாம். தற்போது இவை சுதந்திரமாக வாழ்வதற்குரிய எல்லைகள் குறுக்கப்பட்டதால் இதன் முக்கியத்துவ்தை இழந்துள்ளது.


ஒட்டக சிவிங்கி தண்ணீர் அருந்தும் அழகை பாருங்கள். இந்த நீண்ட கால்களும் நீண்ட கழுத்தும் ஓரிடத்தில் ஸ்திரமாக நிற்பதற்கு உதவுகின்றன. அது நடக்கும் போதே ஒரு நாட்டியம் போல் தோன்றும். இந்த உயரங்களில் எது ஒன்று குறைந்தாலும் ஒட்டக சிவிங்கி படுத்து விடும். கழுத்து நீண்டதற்கு காரணத்தை சொன்னவர்கள் கால்கள் உயரமானதற்கு எந்த அறிக்கையும் சமர்பிக்கவில்லை.

ஒட்டக சிவிங்கியின் இதயம் இரத்தத்தை அதன் மூளைக்கு சுமார் இரண்டு மீட்டருக்கு பம்ப் செய்து அனுப்புகிறது. இதன் கழுத்து நீளமானதால் அதன் தேவைக்கு ஏற்ப இதயத்தின் சக்தி கூட்டப்பட்டுள்ளது. இதன் இதயம் ஒரு நிமிடத்திற்கு 150 முறை துடிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மிகப்பெரிய ஆச்சரியம். இந்த மாற்றத்தை நிகழ்த்தியது யார்? மனிதனிலிருந்து மற்ற எந்த உயிரினத்துக்கும் இவ்வளவு அதி சக்தி வாய்ந்த இதயம் அமையவில்லை. இந்த உயிரினத்துக்கு இப்படி ஒரு இதயம் பொருத்தப்பட்டால்தான் இதனால் உயிர் வாழ முடியும் என்று திட்டமிட்ட ஒருவரால்தான் இவ்வாறான இதயத்தைப் பொருத்த முடியும்.


அகாசியா போன்ற உயரமான கருவேல மரத்தின் இலைகளையே இவை சாப்பிடும் என்ற வாதமும் அடிபட்டு போகிறது. ஒட்டக சிவிங்கி மற்ற மிருகங்களான மான்கள் ஆடுகள் சாப்பிடும் வழமையான புற்களையும் சாப்பிடுவதை ஆய்வாளர்கள் ஆய்ந்து அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். மேலும் காலடியில் இருக்கும் புற்களைக் கூட தனது கழுத்தை வளைத்து சாப்பிடும் திறனில் படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தரையோடு ஒட்டிய புற்களை ஒட்டக சிவிங்கி சாப்பிடுவதை இங்கு நாம் பார்க்கிறோம்.



மரபணு ஆய்வுகளும் ஒட்டக சிவிங்கியின் பரிணாம வாதத்தை ஒத்துக் கொள்ளவில்லை.

The evidence from genetic studies has not supported the Darwinian position. In a study of 27 species, including bovidae and giraffes, the results were ‘far from constant’.42

A study of chromosomes found the pronghorn family was the most similar karyotypically, and that the giraffe differed from the other artiodactyls in many significant ways, such as ‘having a preponderance of biarmed autosomes’.43

42. Georgiadis, N.J., Kat, P.W. and Oketch, H., Allozyme divergence within
the bovidae, Evolution 44(8):2135–2149, 1991.

43. Gallagher, D.S. Jr, Derr, J.N. and Womack, J.E., Chromosome conservation
among the advanced pecorans and determination of the primitive
bovid Karyotype, J. Heredity 85(3):204–210, 1994.

இவ்வாறு அறிவியல் துறையில் நிரூபிக்கப்படாத ஒட்டக சிவிங்கியின் பரிணாம செய்தியை உலகம் முழுவதும் பல ஆராய்ச்சி பிரிவு மாணவர்களுக்கு பாடமாக வைத்திருக்கிறார்கள். ஆராய்ச்சி பிரிவில் இவ்வாறு டார்வினின் அநுமானங்களை பாடமாக வைப்பதை அறிஞர்கள் தடுத்து நிறுத்த வேண்டும். உண்மைகளை அந்த மாணவர்களுக்கு பாடங்களாக வைக்க வேண்டும்.

இன்னும் பல கேள்விகள் ஒட்டக சிவிங்கியின் பரிணாமத்தைப் பற்றி எழுகின்றன. அவற்றை பிற்பாடு பார்ப்போம்.அறிவியல் அறிஞர குட் தனது ஆய்வில் இந்த கேள்விகள் அனைத்தையும் வைக்கிறார். பதில் சொல்லத்தான் இன்று டார்வின் நம்மிடம் இல்லை. அவரது ஆதரவாளர்களாவது பதில் சொல்கிறார்களா என்று பார்ப்போம்.

In fact, we have no scientific evidence supporting any one of his naturalistic
explanations, nor do we we have evidence to prefer any plausible naturalistic version over another. All explanations are an attempt to try to explain what exists by developing what amounts to what Gould calls ‘just so stories’.


http://creation.com/images/pdfs/tj/j16_1/j16_1_120-127.pdf

Gould, S.J., Bully for Brontosaurus, Norton, New York, 1991.

Sherr, L., Tall Blondes, a Book about Giraffes, Andrews McMeel, Kansas
City, p. 40, 1997.

Lamarck, J.B. de., Zoological Philosophy, translated by Elliot, H., Macmillan,
London, p. 122, 1914.


'என்னை விட்டுட்டு நீங்க மட்டும் எப்படி சாப்பிடலாம்?'


'யாருப்பா இது...என்னை விட உயரத்துல பறக்குறது?'


'அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ்'

Tuesday, October 23, 2012

கால் நடையாக மெக்கா வந்த போஸ்னிய முஸ்லிம்!



இந்த வருடம் ஹஜ் பயணத்தை முடிக்க போஸ்னியாவிலிருந்து காலந்டையாகவே வந்துள்ளார் செனத் ஹெட்ஜிக். வயது 47.

'சனிக்கிழமை மக்கா வந்து சேர்ந்தேன். எனக்கு எந்த களைப்பும் ஏற்படவில்லை. எனது வாழ்நாளில் மிக சிறந்த நாட்களாக இந்நாட்களை எண்ணுகிறேன். இந்த பயணத்தை மேற் கொள்ள 5700 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க வேண்டியதாக இருந்தது. இதனை 314 நாட்களில் செய்து முடித்தேன். போஸ்னியா, செர்பியா, பலகேரியா, துருக்கி, சிரியா, ஜோர்டான், வந்து அதன் பிறகு சவுதியில் காலடி வைத்தேன். 20 கிலே பெருமானமுள்ள எனது அத்தியாவசியப் பொருட்களும் என்னோடு பயணித்தது.'

எனது பயணத்தை அவ்வப்போது ஃபேஸ் புக்கிலும் அப்டேட் செய்து கொண்டே வந்தேன். இதன் மூலம் பிரச்னைக்குரிய சிரிய அரசிடம் அனுமதி பெறுவதில் சிக்கல் இல்லாமல் போனது. சிரியாவில் 500 கிலோ மீட்டரை 11 நாட்களில் கடந்தேன். அலெப்போ, டமாஸ்கஸ் போன்ற பகுதிகளில அதிக செக் போஸ்டுகள் இருந்தன. எதிலும் பிரச்னையில்லாமல் வெளியேற இறைவன் துணை புரிந்தான்.

இந்த நடை பயணம் எனது இறைவனுக்காகவும் இஸ்லாத்துக்காகவும், போஸ்னியா மக்களுக்காகவும் எனது பெற்றோர் மற்றும் எனது சகோதரிக்காகவும் ஆனது. இறைவன் எனது பயணத்தை மிக இலகுவர்கி வைத்தான். முக நூலும் எனது பயணத்தில் மிக உதவியாக இருந்தது.' என்கிறார் செனத் ஹெட்ஜிக்.

இவர் பயணித்து வந்த பாதை மிக சிக்கலானது. பல்கேரியாவில் தற்போதய காலநிலை மைனஸ் 35 செல்சியஸ். தற்போது ஜோர்டானின் கால நிலை பிளஸ் 44 செல்சியஸ்.(During the pilgrimage, Hadzic faced temperatures ranging from minus 35 Celsius in Bulgaria to plus 44 Celsius in Jordan.) இரு வேறுபட்ட கால நிலைகளையும் எந்த சிக்கலும் இல்லாமல் கடந்து சாதனை படைத்துள்ளார் இந்த போஸ்னிய ஹாஜி.

தகவல் உதவி அரப் நியூஸ்.

ஹஜ் என்பது வசதி உடையவர்களுக்குத்தான் கடமை. இவ்வளவு சிரமம் எடுத்து உயிருக்கு ஆபத்தான இந்த பயணத்தை மேற்கொள்ள இஸ்லாம் இவருக்கு கட்டளையிடவில்லை. விமானம், கப்பல், வாகன ஊர்தி என்று பல வசதிகள் இருக்க உடலை வருத்தி இந்த பயணத்தை மேற் கொண்டது இவரது சொந்த விருப்பத்தில் ஏற்பட்டது. பலர் உலக சாதனை என்று எதை எதையோ செய்து கொண்டிருக்க இவர் ஹஜ் செய்வதிலும் ஒரு சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளார். இவரது ஹஜ்ஜை பரிபூரணமாக இறைவன் ஏற்றுக் கொள்ள நாமும் பிரார்த்திப்போம்..

---------------------------------------------------

டிஸ்கவரி சேனல் ஹஜ் நிகழ்வுகளை மிக தத்ரூபமாக படம் பிடித்துள்ளது. கண்டு களியுங்கள்.

--------------------------------------------------

ஹஜ்ஜூக்கு வருபவர்களில் பலர் ஆடு குர்பான் கொடுப்பதில் பல தவறுகளை செய்து விடுகின்றனர். தங்கள் கைகளால் அறுப்பதுதான் சிறந்தது என்று நினைத்து மலை மேடுகளில் ஆடுகளை அறுத்து அதன் கறிகள் எவருக்கும் உபயோகப்படாமல் அழிகிறது. மற்றும் சிலர் உள்ளூரில் சிலரிடம் பணத்தை கட்டி விடுகின்றனர். அவர்கள் நேர்மையாக அதனை உரிய முறையில் அறுப்பார்களா என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதனை எல்லாம் கருத்தில் கொண்டுதான் சவுதி அரசு ஒரு அருமையான ஏற்பாட்டை பல ஆண்டுகளாக செய்து வருகிறது. ஹாஜிகள் தங்களுக்கான குர்பானிக்கான பணத்தை அல்ராஜி பேங்கில் கட்டி விட வேண்டும். உங்கள் பெயரில் கணிணியில் பதிவு செய்து ரசீதும் தந்து விடுவார்கள். விலையும் நியாயமாக இருக்கும். அந்த ஆடுகளும் மாடுகளும் ஒட்டகங்களும் முறையாக அறுக்கப்பட்டு அவை அனைததும் பதப்படுத்தப்பட்டு ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் உள்ள வறிய முஸ்லிம்களுக்கு அனுப்பப்படுகிறது.

சவுதி அரசே இதனை செய்வதால் பணம் தவறாக பயன் படுத்தப்படுவது தடுக்கப்படுகிறது. கறியும் வீணாகாமல் உறியவர்களை சென்றடைகிறது. மெக்காவில் பல இடங்களில் இதற்கான கவுண்டர் திறக்கப்பட்டு ஆட்கள் ரெடியாக இருப்பர். ஹாஜிகள் தங்களின் குர்பானிகள் உரியவர்களை சென்றடைய அல்ராஜி வங்கியில் பணம் செலுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

-------------------------------------------------

ஹாஜிகள் அரஃபா மைதானத்தில் இருக்கும் போது ஹாஜிகள் அல்லாதவர்கள் நோன்பு இருக்க நபிகள் நாயகம் வலியுறுத்தி இருக்கிறார்கள். எனவே அன்று சக்தி பெற்ற முஸ்லிம்கள் அனைவரும் நோன்பிருந்து நன்மையை தேடிக் கொள்வோம்.

Monday, October 22, 2012

ரியாத்தில் இரத்ததான முகாம் சில தகவல்கள்!


மனித நேயம் என்பதை வெறும் வார்த்தைகளால் சொல்லாமல் அதனை செயலில் காட்டிட ஒரு அருமையான சந்தர்ப்பம் இந்த ரத்த தானம். இதனை சில வருடங்களாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மிகச் சிறப்பாக செய்து வருகிறது. அந்த வகையில் போன வெள்ளிக்கிழமை கிங் ஃபஹத் மெடிகல் சிட்டியில் இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது. மெடிக்கல் சிட்டியின் நிர்வாகிகள் டிஎன்டிஜே நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஹஜ்ஜூக்கு வரும் வெளிநாட்டவர்களின் தேவைக்காக ரத்த தான முகாம் நடத்துமாறு கேட்டுக் கொண்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று வெள்ளிக் கிழமை காலை எட்டு மணியிலிருந்து ஆட்களை கொண்டு வந்து சேர்க்கும் பணியினை டிஎன்டிஜேயின் அங்கத்தினர்கள் சிறப்பாக செயல்படுத்தினர்.



இரத்தம் வழங்கும் கொடையாளிகள், முந்தைய இரவு நன்றாக குறைந்தது 5 - 6 மணி நேரமாவது உறங்கியிருக்க வேண்டும் என்றும், அதிகமான திரவ உணவுகளை சாப்பிட்டிருக்க வேண்டும் எனவும் கொடையாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முஸ்லிமல்லாத தமிழ் சகோதரர்களும் கலந்து கொண்டு, TNTJவின் பணியை பாராட்டி, தொண்டரணியிலும், வாகன சேவையிலும் தங்களையும் ஈடுபடுத்திக் கொண்டனர்.


தமிழர்கள் மட்டுமன்றி பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, சிரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட ஆந்திரா, கேரளா, கர்நாடகா, கஷ்மீர், உ.பி., பீஹார் மற்றும் இதர மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இதில் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.

ரியாத் மண்டலம் தொடர்ச்சியாக KFMC -யில் முகாம்கள் நடத்துவதால், மருத்துவமனை அதிகாரிகளே ரியாத் TNTJ பெயரில் பிரத்தியேகமாக பேனர்கள் தயாரித்து மருத்துவமனையின் பல இடங்களில் வைத்திருந்தனர்.

வெளிநாடுகளிலேயே ஒரே முகாமில் அதிகமாக இரத்த தானம் செய்த மண்டலம் என்ற இடத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



2010 மற்றும் 2011 ஆண்டுகளில் வெளிநாட்டு மண்டலங்களில் தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருவது போன்று, 2012 ஆண்டிலும் ரியாத் மண்டலம் முதலிடத்தை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

நமது தமிழகத்திலும் தொடர்ந்து ஐந்து வருடங்களாக ரத்ததானம் செய்வதில் முதலிடத்தைப் பெற்று வருவது கவனிக்கத் தக்கது. தொழுகை, நோன்பு என்று இதை மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பது இஸ்லாம் அல்ல. மனித நேயத்தோடு செய்யக் கூடிய இது பொன்ற நல்ல செயல்களும் இஸ்லாமிய நடவடிக்கையில் அடங்கும்.

இந்த முறை நானும் இரத்ததானம் செய்தேன். 6 மாதங்களுக்கு முன்பும் கொடுத்துள்ளேன். ஆரோக்கியமான நபர் 4 மாதங்களுக்கு ஒரு முறை கொடுக்கலாம். அங்கு ரத்தம் கொடுக்க வந்த ஒரு சகோதரர் கொஞ்சம் வீக்கானவர் போலிருக்கிறது. ரத்தம் கொடுத்து விட்டு வெளியில் வந்தவருக்கு சிறிது நேரத்திலேயே மயக்கம் வர கீழே விழுந்து விட்டார். பிறகு அவரை தூக்கி சிறிது இளைப்பாற வைத்தோம. நினைவு திரும்பியவுடன் சகஜ நிலைக்கு வந்தார். இது போல் நூற்றில் யாருக்காவது ஒருவருக்கு மயக்கம் வரலாம். எனவேதான் ரத்தம் கொடுத்தவுடன் உடனே வெளியேறாமல் சிறிது ஓய்வெடுத்து விட்டு பிறகு வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த முகாமில் 375 க்கும் மேற்பட்ட சகோதர-சகோதரிகள் கலந்து கொண்டனர். காலை 9 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்ட முகாமில், கொடையாளிகள் கூட்டம் அலை மோதியதால், காலை 8.45 மணிக்கே துவங்கியது. இம்முகாமில் பெண்கள் உட்பட 333 பேரிடம் மட்டும் இரத்தம் பெறப்பட்டது. இரத்த அழுத்தம் அதிகம், ஹீமோகுளோபின் குறைவு, ஹஜ்ஜூக்கான தடுப்பூசி போன்ற காரணங்களுக்காக பல சகோதர-சகோதரிகளால் இரத்தம் வழங்க முடியவில்லை. காலையிலிருந்து தொடர்ச்சியாக பணியாற்றும் இரத்த வங்கி ஊழியர்கள் களைப்புற்ற காரணத்தால், இத்துடன் முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள மாலை 5.15 மணியோடு இரத்த தானம் நிறுத்திக் கொள்ளப்பட்டது. 2011 இல் நடந்த ஹஜ்ஜூக்கான முகாமில் 135 லிட்டர் இரத்தம் பெறப்பட்டது. அதிகபட்சமாக 150 லிட்டருக்கும் மேல் இரத்தம் பெறப்பட்டது இதுவே முதல் முறை.

இரத்த தானம் செய்தவர்கள் அனைவருக்கும் காலை சிற்றுண்டியும், சிறப்பு மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மருத்துவமனை அதிகாரிகள் குருதிக் கொடையளித்தவர்களுக்கும் ரியாத் TNTJ - யினருக்கும் நன்றி தெரிவித்தனர். ரியாத் மண்டலத்தின் இரத்த தான பொறுப்பாளர்களான சகோ. அப்துர்ரஹ்மான் நவ்லக், சகோ. மாஹீன் & சகோ. ஷேக் அப்துல் காதர் மற்றும் மண்டல நிர்வாகிகளின் ஏற்பாட்டில், சிறப்பான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மண்டல செயலாளர் சகோ. ஹாஜா மைதீன் தலைமையில் களப்பணியாற்றிய தொண்டர் அணியினர், கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் கடுமையான உழைப்பும் ஒத்துழைப்பும் இம்முகாம் சிறப்புடன் நடைபெற முக்கிய காரணமாகும். மண்டல துணைச் செயலாளர் சகோ. நூருல் அமீன், மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ. ஹாஜா அலாவுதீன் மேற்பார்வையில், மண்டல/கிளை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பம்பரமாக சுழன்று பணியாற்றி சுமார் 20 வாகனங்களில் கொடையாளிகளை முகாமுக்கு அழைத்து வரும் வண்ணமாயிருந்தனர்.

'ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்'
-குர்ஆன் 5:32

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

-------------------------------------------------------

தமிழர்களின் அளப்பரிய சேவையை பாராட்டி அரப் நியூஸூம் தனது பங்குக்கு இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

A blood donation campaign was held in Riyadh on Friday to help this year’s Haj pilgrims.

King Fahd Medical City (KFMC) teamed up with Tamil Nadu Thowheed Jamaath (TNTJ), and collected 331 units of blood from 375 volunteers at the hospital premises during the weekend.

The event took place at the KFMC Blood bank in Riyadh with the help of men and women from the Asian expatriate community members.

According to a royal decree issued in 1984, the Ministry of Health does not import blood. They are collected from residents and citizens, who voluntarily and regularly donate blood.

The 20 health directorates in the Kingdom make their own arrangements with the blood donors to contribute to this worthy cause.

An official from the Health Ministry said it had stocked 16,000 units of blood to help the Haj pilgrims this year. He added that Friday’s blood donation campaign is part of its contingency plan to stock more blood to provide services to the guests of Allah.

Faisal Mohamed, president of TNTJ Riyadh, said this was the 21st blood donation campaign sponsored by his company.

“The noble act of donating blood will not only give a new lease of life to many, it also heightens our sense of social responsibility by fulfilling the humanitarian and social needs of our local communities,” Mohamed said, adding that the organization not only conducts such events regularly but also arranges a supply of blood as and when required for emergency purposes.

In July, the group conducted a similar campaign to collect blood in aid of Umrah pilgrims.

“We are guided by the Qur’an which says '… and whoever saves a life, it is as though he had saved the life of all mankind! ...' (Al-Qur’an 5:32),” he stressed.

“We got an overwhelming response from our community members as well as from others,” he added.

The donors included mothers from Tamil Nadu whose husbands are working in the Kingdom. Egyptians, Syrians, Pakistanis, Sri Lankans and Bangladeshis also participated in the drive…….

Arab news 22-10-2012

.

Sunday, October 21, 2012

இந்த வருட ஹஜ் பயணத்தில் அமீர் கான்!

இந்த வருட ஹஜ் பயணத்தில் அமீர் கான்!



இந்திய பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களில்(கூத்தாடிகளில்) ஒருவரான அமீர்கான் இந்த வருடம் தனது ஹஜ் பயணத்தை நிறைவேற்றுவதற்காக மெக்கா நோக்கி தனது தாயாரோடு(ஜீனத் ஹூசைன்) புறப்பட்டார். ஹஜ் செய்ய வேண்டும் என்ற தீராத ஆசை தனது தாய்க்கு இருந்ததாகவும் அவருக்கு துணையாகவும் தானும் முதன் முதல் ஹஜ் செய்ய வேண்டியும் இந்த வருடம் மெக்கா செல்வதாக பத்திரிக்கையாளர்களிடம் அமீர் கான் கூறினார்.






மும்பையில் தனது தாயாரோடு.....

ஹஜ்ஜூக்கு செல்வோர் கட்டாயம் அணிய வேண்டிய 'இஹ்ராம்' என்ற வெள்ளைத் துணியை உடுத்திக் கொண்டு மும்பை ஏர்போர்ட் வந்தபோது பலரையும் பரவசத்தில் ஆழ்த்தியது.

ஹஜ் முடித்தவுடன் இதற்கு முன் செய்த பாவங்கள் (இணை வைப்பு மற்றும் மனிதர்களுக்கு செய்த துரோகங்கள் நீங்கலாக) அனைத்தும் மன்னிக்கப்பட்டு புது மனிதனாகிறான்.

எனவே ஹஜ்ஜூக்கு பிறகு இனி படங்களில் நடித்தால் ஆபாசங்களை தவிர்த்து நாட்டு மக்களுக்கு நன்மை தரும் விதமாக கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். 'சத்யமேவ ஜெயதே' போன்ற அருமையான நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தலாம். ஏழை பணக்காரன், வெள்ளையன் கருப்பன், ஐரோப்பியன் ஆப்ரிக்கன் என்ற பேதமையை மறந்து 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற பரந்த மனப்பானமைக்கு வர வழைக்கும் இந்த அழகிய வழி முறை கண்டிப்பாக அமீர்கானை மாற்றும்.



ஜெத்தா ஏர்போர்டில் அமீர்கான்.

நமது இணைய பதிவர்களில் பலரும் இந்த வருடம் ஹஜ் பயணத்துக்காக உலகமெங்குமிருந்தும் வந்துள்ளார்கள். பலரிடம் நானும் அலை பேசியில் பேசி விசாரித்தேன். சகோதர சகோதரிகள் அனைவரின் புனிதப் பயணமும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக மாற நாமும் பிரார்த்திப்போம்.



பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சையத் அஃப்ரிதியுடன் அமீர்கான் மெக்காவில்

'அந்த ஆலயத்தில் இறைவனுக்காக ஹஜ் செய்வது சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் ஏக இறைவனை மறுத்தால் இறைவன் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்'
-குர்ஆன் 3:97


--------------------------------------------------------


சௌதி அரேபியாவுக்கு ஆண் துணையின்றி ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள வந்ததாகக் கூறப்படும் 170க்கும் மேற்பட்ட நைஜீரியப் பெண்களை சௌதி அரேபியா நாட்டை விட்டு வெளியேற்றியதை அடுத்து, சௌதி அரேபியாவுக்கு புனிதப் பயணம் செய்யும் பயணிகளை ஏற்றிச்செல்லும் அனைத்து விமானச் சேவைகளையும் நைஜீரியா இடை நிறுத்தியிருக்கிறது.

நைஜீரிய ஹஜ் பயணிகள் இவ்வாறு நடத்தப்படுவதைப் பற்றி புகார் செய்ய சௌதி அரேபியாவுக்கு நைஜீரிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் தலைமையில் ஒரு குழு செல்லவிருக்கிறது.

தாங்கள் தடுத்துவைக்கப்பட்டபோது, தங்களுக்கு உணவு எதுவும் தரப்படவில்லை என்றும், ஒரே ஒரு கழிப்பறையைப் பகிர்ந்துகொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் தடுத்து வைக்கப்பட்ட நைஜீரியப் பெண்களில் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
ஹஜ் புனிதப் பயணம் முடிந்த பிறகு பல ஆப்ரிக்கர்கள் சௌதி அரேபியாவிலேயே தங்கி, அங்கு பிச்சையெடுப்பதன் மூலமும், விபச்சாரத்தில் ஈடுபடுவதன் மூலமும் பிழைப்பு நடத்துவதாக வரும் செய்திகள் குறித்து சௌதி அரேபியா நீண்டகாலமாகவே கவலை தெரிவித்து வருகிறது.

நன்றி:பிபிசி

-----------------------------------------------------------

சென்னை விமானநிலையத்தில் நின்றுகொண்டு இருந்த ஏர் இந்தியா விமானம் திடீரென விபத்துக் குள்ளானது.இதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னையிலிருந்து சவூதி அரேபியா ஜித்தாவிற்கு, செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் இன்று காலை 10:30 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. இதில் ஹஜ் பயணிகள் 421 பேர், சோதனை முடிந்து விமானத்தில் அமர்ந்திருந்தனர்.

பயணிகளின் சரக்குகளை ஏற்றி வரும் டிராக்டர் எதிர்பாராதவிதமாக, விமானத்தின் மீது மோதியது இதனால் விமானம் குலுங்கியது, மேலும் உள்ளே இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அதிலிருந்த ஹஜ் பயணிகள் அனைவரும் உடனே விமானத்திலிருந்து இறக்கப் பட்டு விமான நிலையத்துக்கு மீண்டும் அழைத்து வரப் பட்டனர்.

இதனை தொடர்ந்து குறிப்பிட்ட ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப் பட்டதாக அறிவிக்கப் பட்டது.

இதேபோன்று பல தடவை சென்னை விமான நிலையத்தில் டிராக்டர் மோதிய விபத்துகள் நடைபெற்றது குறிப்பித்தக்கது,

www.inneram.com

நல்ல நிர்வாகம் பண்றாங்கப்பா! டிராக்டர் இடித்தது இது முதல் முறை அல்லவாம். பல முறை நடந்தும் திருத்திக் கொள்வதாக இல்லை. :-).

Saturday, October 20, 2012

மீன்களையும் விட்டு வைக்கவில்லை என்டோசல்ஃபான்!

மீன்களையும் விட்டு வைக்கவில்லை என்டோசல்ஃபான்!



'நம்ம வீட்டுக்கார பையனோட லேப்டாப்புல ஒரு சேதிய நான் சைடுல பார்த்தேன். அத நான் சொல்லட்டுமா?'

'ம்..ம்......சொல்லு... சொல்லு.....'

'என்சைக்ளோபீடியா தகவல்படி பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு நம்ம மூதாதையர்களில் பல பேர் கால் முளைத்து பரிணாமம் அடைந்து நில வாழ் உயிரினமா மாறிட்டாங்களாம்'

'அடடே....ஆச்சரியமா இருக்கே! அப்போ நீரில் வாழும் நம்முடைய சுவாச உறுப்புகளும் மாற்றமடைந்திருக்கணுமே! அது எப்படி ஆச்சு?'

'இப்படி குறுக்கு கேள்வி எல்லாம் கேட்டா எனக்கு என்ன தெரியும்? நான் சொல்றதை கண்ணை மூடிக்கிட்டு நம்பணும். புரியுதா?'

'???????????????'

--------------------------------------------------------

பல்வேறு வகையான மீன்களில் ஆராய்ச்சி செய்த சலீம் அலி சென்டர் பார் ஆர்னிதாலாஜி அண்ட் நேச்சுரல் ஹிஸ்டரி (SACON) என்ற அமைப்பு கேரளாவில் சிறப்பாக இயங்கி வருகிறது. மாநில அரசின் அங்கீகாரம் மற்றும் ஊக்கத்தில் இந்த அமைப்பு செயல்படுகிறது. சமீபத்தில் நடத்திய ஆய்வில் சில அதிர்ச்சிகரமான உண்மைகளை நமக்கு தந்திருக்கிறது.

கேரளாவில் பாயும் நதிகளில் பூச்சிகொல்லி மற்றும் தீங்கு விளைவிக்கும் விஷங்கள் பற்றி ஆய்வு செய்ய இந்த அமைப்பை கேரளா பயோ டைவர்சிடி போர்டு சமீபத்தில் அங்கீகாரம் அளித்து நியமித்தது. பாலக்காடில் பாயும் சித்துர்புழா என்ற ஒரு சிறு ஆற்றைத் தவிர ஏனைய 44 நதிகளையும் இந்த SACON அமைப்பு ஆய்வு செய்தது.



மிகவும் அதிர்ச்சிக்குரிய கண்டுபிடிப்பாக, ஆய்வுக்கு எடுக்கப்பட்ட 159 மீன்களில் அனைத்திலும் DDT எனப்படும் பூச்சிகொல்லி மருந்தும், என்டோசல்பான் எனப்படும் நச்சு பொருளும் கலந்துள்ளது தெரிய வந்தது.

சமீபத்தில் என்டோசல்ஃபான் உற்பத்திக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் அணி திரண்டதும் இந்தியா அதற்கு ஆதரவு அளித்ததும் பிறகு உச்ச நீதிமன்றம் தலையிட்டு அரசுக்குக் கொட்டு வைத்ததும் மத்திய அரசு என்டோசல்பான் உற்பத்தியாளர்களுக்கு வக்காலத்து வாங்கி நீதிமன்றத்தில் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

'இது சாதாரண விஷயம் அல்ல. இந்த டிடிடி மறறும் என்டோசல்ஃபான் பாதிப்பானது மண், நீர், தாவரம், மிருகங்கள், பறவைகள, மனிதர்கள் என்று அனைத்து ஜீவன்களையும் பாதிக்க தொடங்கியுள்ளது. ஆற்றோரங்களில் உள்ள பலர் தங்களின் குடிநீராக ஆற்று நீரையே பயன்படுத்தி வருகின்றனர். ஆறு மட்டுமல்ல கடலும் பொலிவிழந்து வருகிறது. தொழிற்சாலை கழிவுகள் கடலில் கொட்டப்படுவதால் அங்குள்ள மீன்களும் மிகுந்த பாதிப்படைந்து மனிதனுக்கு தீங்கு விளைவிக்கின்றன' என்கிறார் ஆய்வாளர் சி.எம்.ஜாய்.

விட்டமின் சி உடம்புக்கு தேவை என்று வாரத்துக்கு இரண்டு முறை மீன் குழம்பை விரும்பும் பிரியர்கள் நோய்களை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்களோ? நமது வீட்டிலேயே ஒரு குளத்தை வெட்டி இனி நாமே மீன் வளர்க்க வேண்டியதுதான்.

முன்பு எங்கள் வீட்டில் அழகிய கிணறு இருந்தது. மோட்டர் பம்பு வைத்ததால் எவருமே கிணறை உபயோகப்படுத்துவதில்லை. எனவே அதனை மணலை போட்டு மூடி விட்டோம். முன்பெல்லாம் அந்த கிணற்றில் அருமையான கெழுத்தி மீன்களை வளர்ப்போம் குழம்புக்கு மிக ருசியான மீன். இனி அந்த கிணற்றை சுத்தம் செய்து அதில் மீன் வளர்க்கலாமா என்று யோசிக்கிறேன்.

தொழிற்சாலைகளின் கழிவுகள் ஆற்றில் கலப்பதாலேயே அதிகமாக நீர் மாசுபட காரணமாகிறது. ஆற்றோரங்களில் வாய்க்கால் ஓரங்களில் பலர் காலைக்கடனை கவலையினறி கழிக்கிறார்கள். மழை பெய்தால் அத்தனையும் ஆறுகள் வாய்க்கால்களில் கலந்து நீர் மாசுபடுகிறது. பல வீடுகளின் கழிவு நீர் ஆறுகளிலும் வாய்க்கால்களிலுமே கலக்கின்றன. இவற்றை எல்லாம் அரசு கவனத்தில் கொண்டு கழிவறைகளின் அவசியத்தை மக்களுக்கு போதிக்க வேண்டும். பாடபுத்தகங்களிலும் இது பற்றிய விழிப்புணர்வை சிறு வயதிலிருந்தே மாணவர்களின் மனத்தில் பதிய வைக்க வேண்டும்.
http://www.deccanchronicle.com/channels/cities/kochi/ddt-kerala-fish-453

Friday, October 19, 2012

பரிணாமவியலை கேள்வி கேட்டால் ஜாகிர்நாயக் பதிலாகி விடுமா!

பரிணாமவியலை கேள்வி கேட்டால் ஜாகிர்நாயக் பதிலாகி விடுமா!

குரங்குக்கும் மனிதனுக்கும் உள்ள இடைப்பட்ட படிமங்களின் ஆதாரத்தை விளக்கி இனி பதிவுகள் எழுதப் போகிறேன் என்று சில நாள் முன்பு சார்வாகன் சொன்னார். நானும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தால் அதைப் பற்றிய அறிவிப்பு எதையும் காணோம். ஆனால் சம்பந்தமில்லாமல் ஜாகிர் நாயக்கையும் பிஜேயையும் சம்பந்தப்படுத்தி காமெடி செய்து பரிணாமவியலின் தவறை மறைக்க பார்க்கும் தந்திரத்தை தற்போது செய்து வருகிறார். சரி அதிலாவது தனது தரப்பு வாதம் நிற்கும்படியான செய்திகளைத் தரப்படாதோ? இனி சார்வாகன் சொல்வதைக் கேட்போம்.

//ஜாகிர நாயக் மீது இபோது முஸ்லிம்களே ஒத்துக் கொள்ளும் இருகுற்றச்சாட்டுகள் உண்டு.
1.குரான் 79.30ல் டஹாஹ என்னும் அரபி சொல்லுக்கு இலாத த்வறான பொருள் நெருப்புக் கோழி முட்டை என்று சொல்லி உலகம் நெருப்புக் கோழி முட்டை போல் இருக்கிறது என பொய் சொன்னார்.
http://satyagni.com/science-zakir/

zakir Naik says:
The earth is not exactly round like a ball, but geo-spherical i.e. it is flattened at the poles. The following verse contains a description of the earth’s shape “And the earth, moreover, Hath He made egg shaped.” [Al-Qur'aan 79:30]
The Arabic word for egg here is dahaha, which means an ostrich-egg. The shape of an ostrich-egg resembles the geo-spherical shape of the earth. Thus the Qur’aan correctly describes the shape of the earth, though the prevalent notion when the Qur’aan was revealed was that the earth is flat// - சார்வாகன்!

இது பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

'பூமியை நாம் விரித்தோம்: நாம் அழகுற விரிப்பவர்கள்.'
-குர்ஆன் 51:48

'இதன் பின்னர் பூமியை விரித்தான்'
-குர்ஆன் 79:30

'பூமியை விரித்தான்' என்ற குர்ஆனின் வசனத்தில் வரும் 'தஹாஹா' என்ற சொல் 'தஹ்வு' என்ற சொல்லின் மூலத்திலிருந்து வந்தது. இங்கு 'விரித்தல்' என்ற ரீதியில் பொருள் கொள்வதுதான் அரபு இலக்கணத்தின் படி சரியாகும். ஜாகிர் நாயக்கும் இதை ஒத்துக் கொள்கிறார்.

மேலதிக விபரமாக தனது சொந்த விளக்கமாகத்தான் 'முட்டை' வடிவிலானது என்ற கருத்தை வைக்கிறார் ஜாகிர் நாயக். இவர் ஒரு டாக்டர். அறிவியல் அறிஞர் கிடையாது. எனவே இவரது கருத்தில் தவறும் இருக்கலாம்.

'சார்பியல்' தத்துவத்தை சொன்னபோது ஐன்ஸ்டீனே தவறிழைக்கவில்லையா? 1923 இல் ஐன்ஸ்டைன் மாறாத பிரபஞ்சத்தைப் பற்றி எழுதியதைத் 'தான் செய்த மாபெரும் தவறு ' என்று ஒப்புக் கொண்டார்! அலெக்ஸாண்டர் ஃபிரைட்மன் கருத்தை ஏற்றுக் கொண்டு விரியும் பிரபஞ்சக் கோட்பாடைப் பிரதி பலிக்க, ஐன்ஸ்டைன் தன் சமன்பாடுகளைத் திருத்தி எழுதினார்!

ஆக.. ஐன்ஸ்டீனுக்குக் கூட ஆராய்ச்சியில் தவறு மனிதன் என்ற முறையில் வரலாம். ஜாகிர் நாயக்குக்கும் வரலாம். பிஜேக்கு கூட வரலாம். ஆனால் இறை வேதத்தில் வராது.

'பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை கோள்களும் நமது பூமி உட்பட உப்பி விரிகிறது. அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு பொருள் என்று கருதக் கூடாது. அது சோப்புக் குமிழி போல உப்பிக் கொண்டே போகும் ஒரு கோளம்'
-விஞ்ஞானி ஹப்பிள்.

இதைத்தான் இறைவனும் 'பூமியை விரித்தான்' அதாவது பூமியை விரிவாக்கம் செய்தான் என்று கூறுகிறான்.. விஞ்ஞானி ஹப்பிளின் கருத்தை அப்படியே பிரதிபலிப்பதை பார்க்கவில்லையா!

'பிரபஞ்சம் இருவித முடிவுகளில் சிதைந்து போகலாம்! ஒன்று குமிழிபோல் உப்பிக் கொண்டு அது தொடர்ந்து விரியலாம்! அல்லது பெரும் வெடிப்பில் [Big Bang] தோன்றிய பிரபஞ்சம், ஒரு பெரும் நெருக்கலில் [Big Crunch] மறுபடியும் நொறுங்கி முடிந்து போகலாம்! எனது யூகம், பிரபஞ்சம் பெரும் நெருக்கலில் ஒரு சமயம் அழிந்து போய்விடும் என்பது! பிரபஞ்சத்தின் பிரளய முடிவுகளை முன்னறிவித்த முனிவர்களை விட எனக்கு ஓர் பெரிய சலுகை உள்ளது! இப்போதிருந்து பத்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு எது நிகழ்ந்தாலும், என் கருத்து பிழையான தென்று நிரூபிக்கப்பட நான் உயிரோடு இருக்கப் போவதில்லை ' என்று புன்னகை புரிகிறார், ஹாக்கிங்!

நான் போன பதிவில் கூறியது போல் ஆய்வுகளில் தவறுகள் வரலாம் அது இயற்கை. அதுதான் ஜாகிர் நாயக்கிடம் நடந்தது. ஆனால் பரிணாமவியலை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காக மனிதனின் மண்டை ஓட்டையும் குரங்கின் தாடையையும் ஒட்ட வைத்து பற்களுக்கு சாயங்களை பூசி 40 வருடம் அறிவியல் உலகை ஏமாற்றியிருக்கின்றனர் பரிணாமவியலார். ஒரு சாதாரண படிப்பறிவில்லாதவனை ஈஸியாக புரியாத மொழியில் பேசி சம்மதிக்க வைத்து விடலாம். ஆனால் ஒரு ஆய்வுக் கூடத்தில் அறிவியல் அறிஞரகள் நிறைந்த சபையில் 40 வருடம் இதை மறைக்க வேண்டும் என்றால் ஒரு பெரும் குழுவே வேலை செய்திருக்க வேண்டும். புதிய படிமங்கள் மட்டும் கிடைக்காமல் போயிருந்தால் பரிணாமவியல் உண்மைதான் என்று இன்று வரை சாதித்துக் கொண்டிருப்பர்.

http://en.wikipedia.org/wiki/Ultimate_fate_of_the_universe
http://simple.wikipedia.org/wiki/A_Brief_History_of_Time

------------------------------------------------------

//2. ஜாகிர் நாயக், பி.ஜேவின் " இயேசு இறைமகான என்னும் புத்த்கத்தை அப்படியே த்னது சொந்த சரக்காக் பி.ஜே விடம் அனௌமதி பெறாமல் ஆங்கிலத்தில் எழுதி விட்டார்

இப்போது ஜாகிர் நாயக்கின் மோசடிகள், தவறால் குரான் தவறாகி விடும் என்றால், பில்ட் டௌன் மோசடியால் பரிணாமமும் த்வறாகி விடலாம்
நன்றி//- சார்வாகன்

பி.ஜே யின் புத்தகத்தை அனுமதி பெறாமல் ஜாகிர் நாயக் ஆங்கிலத்தில் மொழி பெய்ர்த்தால் அது அவர்கள் இருவருக்குமிடையில் உள்ள காப்பீட்டு பிரச்னை. பிஜே தனது பதிவுகளை இவ்வாறு காப்பி செய்தால் அதை அதிகம் பெரிதுபடுத்துவதும் இல்லை. சவுதி அரசே கூட பிஜேயின் பல புத்தகங்களை அரபியிலும் ஆங்கிலத்திலும் இன்னும் உலகின் பல மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்துள்ளது. அதற்கு கூட எந்த பிரதிபலனையும் எதிர் பாராமல் இலவசமாகவே மொழி பெயர்க்க அனுமதி கொடுத்தார். ஜாகிர் நாயக் ஏசுவின் வாழ்வை தவறாக விமர்சித்து இருந்தால்தான் அல்லது பொய் சொல்லியிருந்தால்தான் அதை பிரச்னையாக்க முடியும்.

இதனால் பில்ட் டவுன் மோசடியை நியாயப்படுத்தப் பார்க்கிறார். என்ன ஆனது உங்களுக்கு சார்வாகன் உரிக்க உரிக்க வெங்காயம் போல் சென்று கொண்டிருக்கிறதே உங்கள் அனைத்து வாதங்களும்? :-)

---------------------------------------------------------

பிரபஞ்சம் விரிவடைதலைப் பற்றி நான் முன்பு இட்ட பதிவை மேலதிக விபரமாக தருகிறேன்.

பிரபஞ்சம் விரிவடைகிறது என்பது உண்மையா?

இதன் பின்னர் பூமியை விரித்தான்'
-குர்ஆன் 79:30

'வானத்தை நாம் ஆற்றலைக் கொண்டு படைத்தோம்: நிச்சயமாக நாம் அதை விரிவாக்கம் செய்பவராவோம்.'
-குர்ஆன் 51:47

'பூமியை நாம் விரித்தோம்: நாம் அழகுற விரிப்பவர்கள்.'
-குர்ஆன் 51:48

பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம்.
-குர்ஆன் 15:19



மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
-குர்ஆன் 13:3

இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.

-குர்ஆன் 55:10


'பூமியை விரித்தான்' என்ற குர்ஆனின் வசனத்தில் வரும் 'தஹாஹா' என்ற சொல் 'தஹ்வு' என்ற சொல்லின் மூலத்திலிருந்து வந்தது. இங்கு தஹ்வு என்ற சொல்லுக்கு விரித்தல் என்ற பொருள் வரும்.

நாம் அமரும் பாயை சுருட்டுங்கள் என்கிறோம். பாயை விரியுங்கள் என்கிறோம். இங்கு சுருக்கப்பட்ட பொருள் விரிவடையும்போது என்ன வார்த்தையை பயன்படுத்துகிறோமோ அதே வார்த்தையை கொண்டு பூமியையும் இறைவன் கையாள்கிறான்.




பல காலமாகவே இந்த பிரபஞ்சம் நிலையான ஒன்று என்றுதான் அறிவியலார் கூறி வந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் ரஷ்ய இயற்பியல் விஞ்ஞானி அலெக்சாண்டர் ஃபிரைட்மேனும் பெல்ஜிய விஞ்ஞானி லேமைட்ரீயும் பிரபஞ்சத்தின் விரிவடைதலை கண்டறிந்தனர். இந்த உண்மை 1929ல் தொலைநோக்கி சோதனை மூலம் விஞ்ஞானி எட்வின் ஹப்பிளால் நிரூபிக்கப்பட்டது. மேலும் நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்கள் ஒன்றை யொன்று விலகிச் செல்வதையும் தனது சோதனையில் கண்டறிந்தார் ஹப்பிள்.

பிரபஞ்சம் விரிவடைவது சம்பந்தமாக மூன்று அமெரிக்கர்கள் நோபல் பரிசை பகிர்ந்து கொண்டனர். அதன் காணொளியைப் பார்ப்போம்.



உப்பி விரிகிறது. அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு பொருள் என்று கருதக் கூடாது. அது சோப்புக் குமிழி போல உப்பிக் கொண்டே போகும் ஒரு கோளம்'
-விஞ்ஞானி ஹப்பிள்.
இதைத்தான் இறைவனும் 'பூமியை விரித்தான்' அதாவது பூமியை விரிவாக்கம் செய்தான் என்று குர்ஆனில் கூறுகிறான். விஞ்ஞானி ஹப்பிளின் கருத்தை அப்படியே பிரதிபலிப்பதை பார்க்கவில்லையா
!


முன்பு பூமியில் இருந்த நிலப்பரப்பு அனைத்தும் ஒன்றாகவே இருந்தன. பூமியானது விரியத் தொடங்கியவுடன் ஒன்றாக இருந்த நிலப்பரப்புகள் கண்டங்களாகவும், நாடுகளாகவும், தீவுக் கூட்டங்களாகவும் பிரிகின்றன. இதனை இந்த காணொளி அழகாக விவரிக்கிறது.



ஹாக்கிங் கூறுகிறார்:

'இருபதாம் நூற்றாண்டிற்கு முன்னர் ஒருவர் கூட பேரண்டம் விரிந்து செல்கிறது அல்லது சுருங்கி வருகிறது எனும் கருத்தைத் தெரிவிக்கவில்லை. பேரண்டம் மாற்றமே இன்றி நாம் காண்பது போலவே எக்காலமும் இருந்திருக்கிறது என்றே பலரும் நம்பி வந்தனர். பெரும்பாலான மக்களின் மன நிலையும் இதை ஒட்டியே அமைந்திருந்ததும் காரணமாக இருக்கலாம்.'

-எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் (பக்கம் 6)

“The discovery that the universe is expanding was one of the great intellectual revolutions of the 20th century.
(பேரண்டம் விரிவடைகிறது எனும் இக்கண்டுபிடிப்பு இருபதாம் நூற்றாண்டின் பெரும் அறிவுப் புரட்சிகளில் ஒன்றாகும்)
(அதே புத்தகம் பக்கம் 42)



உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகளான ஐசக் நியூட்டன் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற அறிஞர்கள் கூட பிரபஞ்சம் விரிவடைகிறது என்ற செய்தியை அறிந்திருக்கவில்லை. அது பற்றிய சிந்தனையும் அவர்களுக்கு எழவில்லை. இது போன்ற ஒரு வார்த்தைப் பிரயோகத்தை முகமது நபி என்ற ஒரு மனிதரால் சொல்லியிருக்க முடியுமா? என்று சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம். படிப்பறிவற்ற அந்த சமூகத்தையும் தனது தாய் மொழியையே எழுத படிக்க தெரியாத முகமது நபியையும் இங்கு நாம் நினைவில் நிறுத்தி பார்க்க வேண்டும். இந்த உண்மைகளை ஆராய்ந்தால் குர்ஆனின் வார்த்தைகள் நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தைகள் என்ற முடிவுக்கே வருவோம்.

மேலும் விபரங்கள் அறிய...
http://en.wikipedia.org/wiki/Universe


Thursday, October 18, 2012

பரிணாமவியலின் பொய் முகங்கள் அம்பலம்

பரிணாமவியலின் பொய் முகங்கள் அம்பலம்!


'ம் ஹூம்....யம்மாவ்..'

'என்ன குழந்தாய்?'

'எத்தனை நாள் நான் குரங்காவே இருக்கிறது. நான் எப்போ மனுஷனா மாறுவேன்'

'கவலைப் படாதே குழந்தே! நம்ம டார்வின் மாமா கிட்டே சொல்லி ஒன்னய மனுஷனா மாத்திட சொல்லிடறேன்'

'அவருதான் செத்து போயிட்டாரே'

'அவர் போனா என்ன? அவரோட சிஷ்யர்கள் கிட்டே சொல்லி ஒன்னய மனுஷனா மாத்திர்றேன். கவலைப் படாதே'

------------------------------------------------


//பாருங்க நீங்களும் சரியாப் புடிச்சீங்க. வ்ரலாறு,அறிவியலை திரிகாமல் மத பிரச்சாரம் செய்ய முடியாது என்பது உண்மை என்றாலும்,வஹாபிகள் போல் 100% பொய் சொல்ப்வர்கள் நான் பார்த்தது இல்லை.

இவர்களையும் நம்பி ஒரு கூட்டம், நாம் மட்டும் எழுதவில்லை என்றால் ,இவர்கள் பாட்டுக்கு கதை விட்டே,கால்த்தை ஓட்டிக் கொண்டு இருப்பாரகள்.
இதற்குத்தான். உடனே மறுப்பு பதிவு இட்டுவிடுகிறோம்.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் கொடுமை!!!!!!!!

அன்றில் இருந்து இன்று வரை பொய் பொய், மேலும் பொய் இதுவே வஹாபி பிரச்சாரம் ஆகும்!!!// -சார்வாகன்.



இது சார்வாகன் கொடுத்த பின்னூட்ட பதில். அதாவது வஹாபிகள் பொய்களை சொல்லி தங்கள் மார்க்கத்தை பரப்புகிறார்களாம். அதிலும் 100 சதவீதம் பொய்கள் தானாம். ஒருவனை பார்த்து பொய சொல்லுகிறாய் என்று சொல்லும் போது மற்ற அவரது நான்கு விரல்களும் அவரை நோக்கியே திரும்புகின்றன என்பதை ஏனோ மறந்து விடுகிறார்.



இந்த டார்வினிஷ்டுகள் எந்த அளவு பொய்களில் கை தேர்ந்தவர்கள் என்பதற்கு ஒரு சம்பவத்தை நாம் இங்கு எடுத்துக் கொள்வோம்.



இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய அறிவியல் மோசடி என்று சொன்னால் பில்ட்டவுன் மோசடியை சொல்லலாம். மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் அடைந்தான் என்ற பொய்யை நம்ப வைக்க இவர்களுக்கு இடைப்பட்ட படிமங்கள் கிடைக்கவில்லை. இதனை கருத்தில் கொண்டு சார்லஸ் டாசன் என்ற தொல்லுயிரியலாளர் ஆய்வுகளை மேற்கொண்டார். இங்கிலாந்தின் கிழக்கு சிசெக்ஸ் பகுதியில் பில்ட் டவுன் என்ற கிராமத்தில் ஒரு மனித படிமத்தை கண்டெடுத்தார். 1912 ஆம் ஆண்டு தன் நண்பர்கள் ஆர்தர் கீத்வுட்வர்ட், தே சார்டின் போன்ற அறிஞர்களின் துணையுடன் ஆய்வுகளை மேற்கொண்டார்.



(பொய்யாக புனையப்பட்ட மண்டை ஒடு)

இவர்களுக்கு மண்டை ஓட்டின் சில பகுதிகள் மற்றும் தாடையின் சில பகுதிகள் மட்டுமே கிடைத்தன. இவற்றின் உதவியால் சில ஆண்டுகள் கழித்து முழு மண்டை ஓட்டை புனரமைப்பு செய்து புவியியல் கழகத்திடம் ஒப்படைத்தனர். அதற்கு கற்பனையான முகமும் கொடுக்கப்பட்டது.




மனித மண்டை ஓடும் குரங்கின் தாடையும் ஒரே இடத்தில் கிடைத்திருப்பதால் இவை இரண்டும் ஒரே உயிரினத்தின் படிமம்தான் என்பது போன்ற செய்தியை பரப்பினர். இதன் தாடைப் பகுதியில் இருந்த பற்கள் மனிதனை ஒத்து இருந்ததால் குரங்கிலிருந்து மனிதன் பரிணமித்தான் என்பதற்கு இடைப்பட்ட படிம ஆதாரம் கிடைத்து விட்டது என்று வெகுவாக பிரபலப்படுத்தப் பட்டது. இந்த உயிரினத்திற்கு 'பில்ட்டவுன் மனிதன்' என்று பெயர் சூட்டினர். இந்த மனிதன் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவன் என்றும் கதை கட்ட ஆரம்பித்தனர்.



இதில் சந்தேகமடைந்து சிலர் கேள்வி கேட்கப் போக அவர்களை கிண்டலடித்து அவர்களை அடக்கி விட்டனர் பரிணாமவியலார். (தற்போது கூட யாராவது பரிணாமத்தை சந்தேகங் கொண்டு கேள்வி கேட்டால் ஒரு நமட்டு சிரிப்பு சிரித்து விட்டு 'ஹி..ஹி...உங்களுக்கு பரிணாமத்தை புரியும் அளவுக்கு இன்னும் அறிவு வளர வில்லை' என்று சார்வாகன், தருமி போன்றவர்கள் கிண்டலடிப்பதையும் பல இடங்களில் பார்த்திருக்கிறோம்)



கார்டியன் பத்திரிக்கை இந்த செய்தியை 21-11-1912 ஆம் ஆண்டு வெளியிட உலகம் முழுவதும் மனித பரிணாமத்துக்கு இடைப்பட்ட படிமம் கிடைத்தாக செய்தி பிரபலம் ஆனது. 1913 ஆம் ஆண்டு அதே இடத்தில் ஒரு கோரைப் பல்லும் கிடைத்தது. அதே இடத்தில் சில மூளைப் பகுதிகளும் சில தாடைப் பகுதிகளும் கிடைக்க ஆரம்பித்தன. ஈரைப் பேனாக்கி பேனை பெருமாளாக்கும் பரிணாமவியலார் மேலும் ஒரு ஆதாரம் கிடைத்ததாக துள்ளி குதித்தனர்.



முன்பு ஆட்சேபித்த சில அறிஞர்கள் தற்போது கீத்தின் வாதத்தை ஒப்புக் கொள்ள ஆரம்பித்தனர். இடையில் நோய் வாய் பட்டு சார்லஸ் டாசன் இறந்து விடுகிறார். அந்த சுரங்கத்தில் அதன் பிறகு வேறு எந்த படிமங்களும் கிடைக்காததது ஆராய்ச்சியாளர்களை சற்று குழப்பத்தில் ஆழ்த்தியது.



1924 ஆம் ஆண்டிலிருந்து 1946 ஆம் ஆண்டு வரை உலகமெங்கும் பல இடங்களில் பல ஆதி மனிதனின் படிமங்கள் கிடைக்க ஆரம்பித்தன. கிடைத்த படிமங்கள் அனைத்தும் பில்ட்டவுன் படிமங்களோடு ஒத்து வரவில்லை. இது ஆராய்ச்சியாளர்களை மேலும் சந்தேகத்திற்க்குள்ளாக்கியது.



உலகின் பல்வேறு இடங்களில் மனித படிமங்கள் கண்டுபிடிக்கப்பட, இந்த இரண்டு படிமங்களுக்குமான வேறுபாடு பரிணாமவியலாளர்களை சங்கடத்தில் ஆழ்த்தியது. இந்த இரண்டில் எது சரி? பில்ட்டவுன் மனித படிமமா? அல்லது உலகின் மற்ற இடங்களில் சேகரிக்கப்பட்ட படிமங்களா?



பரிணாமத்தை தூக்கிப் பிடிக்கும் ஆய்வாளர்கள் பில்ட்டவுன் படிமத்தையே உண்மை என்று நம்பினர். ஏனெனில் இதை வைத்துதான் குரங்கிலிருந்து மனிதன் பரிணமித்ததை ஆதாரத்தோடு நிறுவ முடியும். ஆனால் காலம் செல்லச் செல்ல நிறைய படிமங்கள் கிடைக்க ஆரம்பித்தன. இவை அனைத்துமே பில்ட்டவுன் படிமத்தோடு ஒத்து வரவில்லை. எனவே ஆய்வாளர்கள் வேறு வழி இன்றி பில்ட்டவுன் படிமத்தை ஆய்வுக்கு கொண்டு செல்லும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.



படிமங்களின் வயதைக் கணக்கிடும் ப்லூரின் சோதனை 1940 வாக்கில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இந்த புதிய யுக்தியைக் கையாண்டு கென்னத் ஒக்லி என்ற தொல்லுயிரியலாளர் பில்ட்டவுன் படிமத்தை ஆய்வு செய்ய ஆரம்பித்தார்.



ஆய்வு ஆரம்பித்தவுடன் முடிவுகள் வர ஆரம்பித்தது. அறிவியல் உலகமே ஸ்தம்பித்து விட்டது. ஆம். பில்ட்டவுன் படிமம் பல பொய்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளதை அறிவயல் உலகம் தெரிந்து கொண்டது. அப்படி என்ன அதிர்ச்சி தரும் பொய்களை சமர்ப்பித்திருந்தனர்?



முதல் அதிர்ச்சி: பில்ட்டவுன் படிமம் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முந்தயது என்று சொன்னது மகா பொய். அது வெறும் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள படிமம்தான்.இது முதல் சறுக்கல். ஏனெனில் மனிதன் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தற்போதய நிலையில் இருந்ததாக படிமங்களின் ஆய்வு உறுதி செய்கிறது.



மனிதன் தறபோதய வளர்ச்சியில் முழுதாக பரிணமித்து உள்ளபோது இடையில் அதன் இடைப்பட்ட இனம் எவ்வாறு வர முடியும் என்று கேட்டனர் ஆய்வர்கள்?



அதிர்ச்சி இரண்டு: மண்டை ஓடு மனிதனுக்கானது. ஆனால் அதன் தாடையோ ஓரங்கூட்டான் குரங்கினுடையது என்பது ஆய்வில் தெரிய வந்தது. வேதிப் பொருட்களைக் கொண்டு அந்த படிமங்கள் ஒரே வயதுடையதாக பொய்யாக காட்டப்பட்டுள்ளது.



அதிர்ச்சி மூன்று: தாடைப்பகுதியில் இருந்த பற்கள் குரங்கின் பற்களாகும்.அதை மனித பற்களாக தெரிய வைக்க கருவிகள் கொண்டு தீட்டப்பட்டு மண்டை ஓட்டின் படிமத்துக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டிருந்தது ஆய்வில் தெரிய வந்தது. மனிதனின் பழங்கால பற்கள் போன்று தோற்றமளிக்க அதனை வர்ணத்தால் மாற்றவும் செய்துள்ளனர்.

இந்த மேசடி வேலையை செய்த கூட்டு களவானிகளாக அறியப்படுபவர்கள். இவர்கள் அனைவருமே பரிணாமவியலை கரைத்து கடித்த அறிஞர்களாம். :-)

1.Charles Dawson,

2.Tielhard de Chardin,

3.W. J. Sollas,

4.Grafton Elliot Smith,

5.Arthur Conan Doyle,

6.Martin A. C. Hinton

ஒரு படித்த அறிவியல் அறிஞர்கள் செய்யும் செயல்களா இது? அதிலும் ஒருவர் அல்ல. பலர் சேர்ந்து செய்த சதி திட்டம் இது. பரிணாவியலை தூக்கிப் பிடிக்கும் அறிவியல் அறிஞர்களின் லட்சணம் இதுதான். ஒரு குழுவாக சேர்ந்து நாற்பதாண்டு காலம் இந்த உலகை முட்டாளாக்கியிருக்கின்றனர் பரிணாவியல் ஆராய்ச்சியாளர்கள். இவர்கள் தங்களின் கருத்தை மெய்ப்பிப்பதற்காக எதையும் செய்யத் தயங்காதவர்கள் என்பது இந்த பதிவின் மூலம் நிரூபணமாகிறது.



1953 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி "தி டைம்ஸ்" மற்றும் "தி ஸ்டார்" பத்திரிக்கைகள் இது குறித்து செய்தி வெளியிட்டன. தி டைம்ஸ் நாளிதழ் இதனை "பித்தலாட்டம்" என்றும் "நேர்த்தியான மோசடி" என்றும் தலையங்கத்தில் குறிப்பிட்டது.

ஆராய்ச்சியில் பிழை ஏற்படலாம். அதை யாரும் குறை காண மாட்டார்கள். ஆனால் ஒரு உயிரினம் மற்றொரு உயிரினமாக பரிணாமம் அடைகிறது என்ற பொய்யை நிரூபிப்பதற்காக உலகை முட்டாளாக்கிய இந்த பரிணாம மோசடிகாரர்களை அறிவியல் உலகம் என்றுமே மன்னிக்காது.


டிஸ்கி: பரிணாவியல் என்றாலே அது ஆஷிக்தான். தற்போது புதிதாக திருமணம் ஆனதால் கொஞ்சம் பிசியாக இருக்கிறார். எனவே அவர் பதிவிலிருந்து சில விபரங்களை எடுத்து கொஞ்சம் எளிதாக்கி இந்த பதிவை வெளியிடுகிறேன். வஹாபிகளை குறை சொல்ல புகு முன் பரிணாமவியலின் உண்மை முகம் என்ன என்பதை சார்வாகனுக்கு விளக்கவே இந்த பதிவு. பரிணாவியல் ஆய்வாளர்களின் பொய்களை அடுக்கினால் 10 பதிவுகள் தேறும். அவைகளையும் நேரமிருப்பின் பிற்பாடு வெளியிடும் எண்ணமும் உள்ளது இறைவன் நாடினால்..

References:
1. Piltdown Man, The Bogus Bones Caper - Richard Harter, Talk Origins Website.
2. Creationist Arguments: Piltdown Man, Talk Origins Website.
3. Piltdown Man - Natural History Museum, London.
4. The Unmasking of Piltdown Man - BBC
5. Fossil fools: Return to Piltdown - Paul Rincon, BBC dated 13th November 2003.
6. Piltdown Man: Timeline of deceit - BBC dated 13th November 2003.
7. Charles Dawson: 'The Piltdown faker' - BBC dated 21st November 2003.
8. Piltdown Man Forgery - Times Archive, Times Online Website.
9. Piltdown Man is revealed as fake - PBS
10. Piltdown Man Forgery (The times article extract) - Clark University.
11. Piltdown Man - wikipedia.
12. Piltdown Man - archaeology - famous hoax: Age of the Sage website.
13.ethirkkural.com/2010/09/evolution-stheory-harry-potter-stories.html