Followers

Sunday, June 26, 2022

காவிபயங்கரவாதம்

 

".... குற்றவாளிகளில் பெரும்பாலோர் பிராமணர்களாக இருக்கிறார்கள். நாமெல்லாம் ஒரே ஜாதியை சார்ந்தவர்கள், ஒரே மதத்தை சார்ந்தவர்கள்... ஒரு முஸ்லிம் பெண்ணின் வன்புணர்வு கொலையில் நமது பிராமணர்களை குற்றவாளிகளாக காட்டக்கூடாதென பல வழிகளில் எனக்கு அழுத்தம் கொடுத்தார்கள். ஒரு போலீஸ் அதிகாரி என்ற முறையில் நான் அவர்களிடம் சொன்னேன்... ' எனக்கு மதமில்லை, என்னுடைய ஒரே மதம் எனது போலீஸ் யூனிபார்ம் தான்' என்று. அவர்களது எல்லா தந்திரங்களும் எங்களிடம் எடுபடாததால், அவர்களது குடும்பத்தார்களும், ஆதரவாளர்களும் மிரட்டவும் அச்சுறுத்தவும் செய்தார்கள். கம்புகளை எடுத்து வந்தார்கள். பயங்கரமாக கோஷமிட்டார்கள். மூவர்ணக்கொடியோடு ஊர்வலங்கள் நடத்தினார்கள். பல கிராமங்களுக்கான சாலைகளை அடைத்தார்கள். கடைசியில் நீதிமன்றத்தையும் மறித்தார்கள். ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு வரும்போதெல்லாம் வழக்கறிஞர்கள் கும்பலாக கோஷமிட்டு மிரட்டி அச்சுறுத்தினார்கள். நீதிமன்றத்திற்கு வெளியேயும் அச்சுறுத்தும் கும்பல்கள் நிறைந்திருக்கும். சில காவல்துறையினரும் குற்றவாளிகளுக்காகவே இருந்தார்கள். ஒருவிதமான சட்டமற்ற தன்மையையும் பீதியையும் நிறைத்து வைத்திருந்தார்கள். ஆனால், அமைதியாகவும் உறுதியாகவும், அர்ப்பணிப்புணர்வோடு எங்கள் பணிகளை தொடர்ந்தோம். . நீதித்துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அனைத்துவிதமான ஆதாரங்களோடும் சாட்சிகளோடும் எங்களது விசாரணை நிறைவடைந்துள்ளதால், நீதி நிலைக்குமென நம்புகிறோம்... "
----- ஆசிஃபா வன்புணர்வு கொலைவழக்கு சிறப்பு புலனாய்வு குழுவின் ஒரே பெண் அதிகாரியான திருமதி. ஷ்வேதாம்பரி ஷர்மாஅவர்களின்பேட்டி
காவிபயங்கரவாதம்
Murathbi Bi
2019



Thursday, June 23, 2022

நாடு ஆபத்தான பாதையில் பயணிக்கிறது ..!!

 இதோ சற்று படியுங்கள் ...


1- ஜெட் ஏர்வேஸ் கதை முடிந்தது ..
2- ஏர் இந்தியா அதிக பட்ச நஷ்டத்தில் ...
3-BSNL's ன் 54,000 பேர் வேலை இழக்கும் அபாயத்தில் ...
4- HAL நிறுவனத்தில் சம்பளம் போட பணமில்லை ...
5- தபால் துறை 15000 கோடி ரூபாய் நஷ்டத்தில் என்ற செய்தி ..
6- வீடியோகான் நிறுவனம் வங்கிக் கடனில் சிக்கி சீரழிவு ...
7- டாடா டொகாமோ நசுக்கப்பட்டது ..
8- ஏர்டெல் நசுக்கப்பட்டது..
9-JP குரூப் கதை முடிந்தது ..
10- ONGC ன் மிக மோசமான நிலை ...
11- அதிக அளவு கடன் வாங்கிய , நாட்டின் முதல் 36 பேர் தற்போது உள்நாட்டில் இல்லை ...
12- 35 மில்லியன் கோடி அளவிலான கடன் தள்ளுபடி கேட்டு வரிசையில் காத்திருக்கும் பலர் ..
13- PNB அதோகதி ...
14- மிச்சமிருக்கும் வங்கிகளும் தொடர் நஷ்டத்தால் திணறும் சூழல் ...
15- நாட்டின் மீதான கடன் $ 131100 மில்லியன் டாலர் ..
16- விற்பனையில் ரெயில்வே ...
17- செங்கோட்டை உட்பட நாட்டின் புராதான சின்னங்கள் வாடகைக்கு ...
18 - பணமதிப்பிழப்பிற்கு பின் வேலையிழந்து திண்டாடும் பல லட்சம் பேர் ..
19 - 45 வருடங்களாக இல்லாத - வேலைவாய்ப்பின்மை ..
20 - முந்தைய ஆட்சியில் இறந்தவர்களை விட மூன்று மடங்கு அதிக - படை வீரர்கள் உயிரிழப்பு ..
21- 5 விமான நிலையங்கள் அதானிக்கு ..
22- உள்நாட்டு உற்பத்தி / தேவைகள் வீழ்ச்சி ..
23- நாட்டின் மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனம் மாருதி - தனது உற்பத்தியை குறைத்தது ..
24- வாங்க ஆளில்லாமல் -
Rs. 55000 கோடி மதிப்பிலான கார்கள் தயாரிப்பு தொழிற்சாலைகளில் கிடக்கின்றன ...

நாடு ஆபத்தான பாதையில் பயணிக்கிறது ..!!

இதில் எதுவும் ஊடகங்களில் - மீடியாக்களில் வராது ...!!

நீங்கள்தான் - இந்த செய்திகளை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் ..!!

Monday, June 20, 2022

கர்நாடகா, குல்பர்கா மாவட்டம்- தேவதாசி முறை

 

கர்நாடகா, குல்பர்கா மாவட்டம், சித்தாப்பூர் கிராமத்தில், தேவதாசியாக கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட 10 வயது சிறுமி மீட்பு-- செய்தி.

 

கோவில் பூசாரி~ ''எங்கள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தேவதாசி முறை வழக்கத்தில் உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலித் சிறுமிகள், பூசாரிகளிடமும் சாதிஇந்து நில உடமையாளர்களிடமும் தேவதாசிகளாக '"சேவை'" செய்கிறார்கள்! இது இந்து மத சடங்காக பின்பற்றப்படுகிறது'' என்கிறார் பூசாரி.

 

ஆய்வு 1982 லேயே தடை செய்யப்பட்ட போதிலும் ..... கர்நாடகாவில் 10,000 பெண்கள் தேவதாசிகளாக இருப்பதாக சொல்கிறார் என்கிறார் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் விட்டல் சிக்கானி ...!! இப்போது புரிகிறதா ..... இந்நிலைமை தமிழ்நாட்டில் உண்டா .....? பெரியாரை தமிழரல்ல என சித்தரிக்க முயல்பவர்களின் கவத்திற்கு .....? இது ,,,,,, வந்தேறியின் உழைப்பு, வடுகனின் உழைப்பு!!






Sunday, June 19, 2022

முஸ்லிம் ஆன நான் ஏன் ராமனை வணங்க வேண்டும்?

 அஸ்ஸாம் - கச்சார்


கச்சார் கல்லூரி வளாகத்தில் ஏபிவிபி தேச விரோத கும்பல் 'இந்தியாவில் இருக்க வேண்டும் என்றால் ஜெய் ஸ்ரீராம் கூறியே ஆக வேண்டும்' என்று கூச்சலிட்டு செல்கிறது. இந்த தேச விரோத கும்பல் மீது அரசோ கல்லூரி நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


முஸ்லிம் ஆன நான் ஏன் ராமனை வணங்க வேண்டும்? இந்திய நாட்டுக்கு ஆரியர்கள் வருகைக்கு பிறகே ராமனை கடவுளாக வணங்கும் வழக்கம் ஒரு சிலரிடம் ஏற்பட்டது. இவ்வாறு கைபர் போலன் கணவாய் வழியாக உள்ளே வந்த ராமனை நான் ஏன் வணங்க வேண்டும்? இந்தியனாக இருப்பதற்கும் ராமனை கடவுளாக ஏற்பதற்கும் என்ன சம்பந்தம். ராமனை கடவுளாக வழிபடுவது ஒரு சில இந்துக்களின் வழக்கம். பெரும்பாலான இந்துக்கள் தங்கள் குல தெய்வங்களையே வணங்கி வருகின்றனர். கிராமம் தோறும் இந்துக்கள் தங்கள் முன்னோர்களையே சிலைகளாக வடித்து வணங்கி வருகின்றனர்.


கைபர் போலன் கணவாய் வழியாக எனது நாட்டுக்குள் புகுந்து தங்கள் கலாசாரத்தை எனது நாட்டு மக்களின் மேல் அடாவடியாக புகுத்தும் 2 சதவீதமே இருக்கும் ஆரிய கும்பலின் கடவுளை நான் ஏன் வணங்க வேண்டும். இன்னும் 100 ஆண்டுகளானாலும் ஆர்எஸ்எஸ் போன்ற தேச விரோத கும்பலின் பாய்ச்சல் முஸ்லிம்களிடம் எடுபடாது என்று மட்டும் சொல்லி வைக்கிறோம்.











 

Saturday, June 18, 2022

கர்நாடகா! பசவகல்யாண் ஹல்யால் கிராமம்.

 

கர்நாடகா!

 

பசவகல்யாண் ஹல்யால் கிராமம்.

 

பள்ளிக் கூடத்தில் மதிய உணவு சமைக்க ஒரு தலித்தை அரசு நியமித்துள்ளது. இதனால் பள்ளியின் புனிதம் கெட்டு விட்டதாக மேல் சாதி இந்துக்கள் புகார் அளித்துள்ளனர். தங்கள் பிள்ளைகளையும் பள்ளிக்கு அனுப்பப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர். மேல் அதிகாரிகள் பலரும் பேசிப் பார்த்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. தாங்கள் மட்டுமல்லாமல் தங்கள் குழந்தைகளுக்கும் சாதி வெறியை ஊட்டி வளர்க்கின்றனர் பெற்றோர். வேதங்களில் சாதி உள்ளவரை இவர்கள் மனதில் இருந்து சாதி வெறியை அகற்ற முடியாது. அதிலும் பிஜேபி ஆட்சி அமைந்தவுடன் சாதி வெறி இந்த மக்களிடத்தில் அதிகரித்துள்ளது.

 

இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு நபிகள் நாயம் ஆற்றிய உரை...

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.

 

(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

 

தலைமைக்குக் கீழ்ப்படிவீர்

 

மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள். (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!

 

(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

 

 

நபிகள் நாயகத்தை நாங்கள் உயிரினும் மேலாக மதிக்கிறோம் என்பதற்கு அவர்களின் போதனைதான் முக்கிய காரணம்...