Followers

Saturday, February 28, 2015

அவிஜித் ராய் கொலைக்கு எனது வன்மையான கண்டனங்கள்!





அவிஜித் ராய் கொலைக்கு எனது வன்மையான கண்டனங்கள்!

அமெரிக்காவில் வசித்து வரும் பங்களாதேசத்தவரான 42 வயதான அபஜித் ராய் அடையாளம் தெரியாத நபர்களால் இரண்டு நாள் முன்பு கொல்லப்பட்டுள்ளார். மெகானிகல் இன்ஜியனரான இவர் பல ஆண்டுகளாக சமூக வலை தளங்களில் எழுதி வருபவர். சர்ச்சைக்குரிய சில விஷயங்களை தனது பிளாக்குகளில் தொடர்ந்து எழுதி வந்துள்ளார். ரபீதா அஹமத் என்ற இஸ்லாமிய பெண்ணை திருமணம் முடித்திருந்தார்.

தனது மனைவியோடு பங்களாதேஷில் ஆட்டோ ரிக்ஷாவில் செல்லும் போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் வெட்டப்பட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை அவசரமாக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் ரத்தம் அதிகம் வெளியாகி விட்டதால் இவரது உயிர் பிரிந்தது. இவரது மனைவிக்கும் காயங்கள் ஏற்பட்டு தற்போது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது பங்களாதேஷில் தேர்தல் பிரசாரம் மும்முரமாகி உள்ளது. எனவே இது அரசியல் சம்பந்தப்பட்ட கொலையா? அல்லது இஸ்லாமிய பெண்ணை மணந்ததால் பெண்ணின் உறவினர் தரப்பில் நிகழ்த்தப்பட்ட கொலையா? அல்லது நாத்திகத்தை தனது எழுத்துக்களில் தொடர்ந்து புகுத்தி வந்ததால் கோபமுற்ற இஸ்லாத்தை சரியாக விளங்காத மூடர்களால் செய்யப்பட்ட கொலையா? என்பது தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது.

பங்களா தேசத்து பிளாக்கர் யூனியனின் தலைவர் இம்ரான் சொல்லும் போது 'உண்மை குற்றவாளிகளை கைது செய்யும் வரை எங்கள் போராட்டம் ஓயாது' என்கிறார்.

'குற்றவாளிகளை கைது செய்ய அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும்' என்கிறார் தவ்ஃபீக் இம்ரோஸ் காலிதி.

நாடு முழுவதும் இந்த கொலைக்கு மிகப் பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசியல் கொலையாகவோ அல்லது பெண் வீட்டாரின் பழி வாங்குதல் கொலையாகவோ இருந்தால் இது எல்லா நாட்டிலும் நடக்கும் ஒன்றுதான் என்று நமது கண்டனத்தை பதிவு செய்து விட்டு சென்று விடலாம்.

ஆனால் அவிஜித் ராய் நாத்திக கருத்துக்களை எழுதியதால் இந்த கொலையை இஸ்லாமிய கண்ணோட்டத்தோடு யாராவது செய்திருப்பார்களேயானால் அவர்கள் இறைவன் முன் குற்றவாளியாக்கப்படுவார்கள். எவ்வளவு பெரிய குற்றம் செய்தவனையும் தனி மனிதர்கள் ஆயுதம் தூக்கி கொல்வதற்கு இஸ்லாம் அனுமதி அளிக்கவில்லை. நம்முடைய உயிரை ஒருவன் எடுக்க எதிரிலே வந்தால் நமது உயிரை காப்பாற்றிக் கொள்ள அந்த நேரத்தில் ஆயுதம் தாங்கி அவனோடு போரிட இஸ்லாம் அனுமதி அளிக்கிறது. மற்ற வேறு எந்த குற்றங்களாக இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கிறது. நீதி மன்றம் இருக்கிறது. காவல் துறை இருக்கிறது. இவற்றின் மூலம்தான் நமது பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள வேண்டுமேயொழிய மூடத்தனமாக ஆயுதம் தூக்குவது இஸ்லாமிய நடைமுறை அல்ல என்பதை விளங்க வேண்டும்.

நபிகள் நாயகம் இஸ்லாத்தை பிரசாரம் செய்த காலங்களில் நாத்திகர்கள், நெருப்பு வணங்கிகள், சிலை வணங்கிகள், கிறித்தவர்கள், யூதர்கள் என்று பலதரப்பட்ட மக்களும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் நபிகள் நாயகத்திடம் வந்து பல குதர்க்கமான கேள்விகளை எல்லாம் கேட்டனர். அத்தனைக்கும் நபிகள் நாயகம் மிகப் பொறுமையாக பதில் அளித்ததை வரலாறுகளில் பார்கிறோம். தனக்கு பணத் தேவை ஏற்பட்ட போது ஒரு யூதரிடம் தனது பொருட்களை அடமானம் வைத்து விட்டு கடன் வாங்கியதை நாம் வரலாறுகளில் படிக்கிறோம். ஆட்சித் தலைவராக இருந்தும் மிரட்டி அவர்களிடம் மாமூல் வசூலிக்கவில்லை. அந்த அளவு மாற்று கருத்துடையவர்களை நபிகள் நாயகம் கண்ணியத்தோடு நடத்தியுள்ளார். எனவே நபிகள் நாயகத்தை பின் பற்றும் ஒரு முஸ்லிம் எதிர்க் கருத்து உடையவர்களை அதே கருத்துக்களைக் கொண்டுதான் விவாதித்து வெற்றி பெற முயல்வான். ஆயுதம் எடுப்பது ஒரு இஸ்லாமியனின் வழி முறை அல்ல என்பதை பதிவு செய்கிறேன்.

கொலைக்கான உண்மையான காரணம் கண்டறியப்பட்டு கொலையாளிகள் கைது செய்யப்பட்டு தக்க தண்டணையை அரசு பெற்றுத் தர வேண்டும். உயிரிழந்த அவிஜித் ராய் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

தகவல் உதவி:
கார்டியன்
28-02-2015

கம்யூனிஸ்டான கொடிக்கால் செல்லப்பாவின் அனுபவங்கள்! - 6

கம்யூனிஸ்டான கொடிக்கால் செல்லப்பாவின் அனுபவங்கள்!



கொடிக்கால் செல்லப்பாவாக இந்து மதத்தில் இருந்த போது.....



கொடிக்கால் அப்துல்லாவாக இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்த போது....

'சமூகத்தில் சாமான்ய மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது இஸ்லாமா? கம்யூனிஸமா?' என்ற தலைப்பின் கீழ் வரிசையாக பார்த்து வருகிறோம். இந்த பதிவில் மற்றொரு தீவிர கம்யூனிஸ்டின் அனுபவங்களைப் பார்போம்.


கம்யூனிஷம் ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சரியான தீர்வை தரும் என்று தனது வாழ்நாளின் பெரும் பகுதியை கம்யூனிஷ பிரசாரத்திலேயே கழித்த கொடிக்கால் செல்லப்பாவை அறியாதவர்கள் தமிழகத்தில் யாரும் இருக்க முடியாது. பல ஆய்வுகள் செய்து கம்யூனிஷத்தை கரைத்து குடித்தவர். அவரும் பல ஆண்டு காலம் செத்துப் போன கம்யூனிஷத்தை தூக்கிக் கெண்டு அலைந்து திரிந்து துவண்டு போய் முடிவில் அந்த கொள்கைக்கே மூடு விழா நடத்தியவர். இனி அவர் பேசுகிறார் நாம் கேட்போம்......

எனக்கு கிடைத்த அனுபவங்கள்

நான் ஒரு இந்துவாக இருந்து கொண்டே முஸ்லிம் மக்களின் வாழ்க்கை முறைகளையும், மார்க்க அனுஷ்டானங்களையும் கூர்ந்து கவனித்து வருகிறேன். நான் சமீபத்தில் அப்துல்லாஹ் அடியார் அவர்களுடன் வேலூருக்கு சென்றிருந்தேன்.

நாங்கள் பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் போது அவர்களிடமிருந்து தொப்பி ஒன்றை வாங்கி தலையில் அணிந்து கொண்டேன். தொப்பியை அணிந்ததும் என் சிந்தனைகள் பலவாறு எழுந்தன. எனது நிலை திடீரென்று உயாந்தது மாதிரி எனக்குள்ளே மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தேன். பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் போதே இஸ்லாமிய மார்க்க சம்பந்தமான விபரங்களை அடியார் அவர்கள் எனக்கு விளக்கிக் கொண்டே வந்தார்கள். நான் எழுப்பிய பல சந்தேக வினாக்களுக்கு, தெளிவான விடை கொடுத்துக் கொண்டிருந்தார். நாங்கள் மாலை சுமார் 6:30 மணியளவில் வேலூரை அடைந்தோம். பஸ்ஸிலிருந்து இறங்கிய எங்கள் தோற்றத்தை கண்டு, பாய் உங்களுக்கு எங்கே போகவேண்டும் என்று ரிக்ஷாக்கரரர் கேட்டார். தொப்பி அணிந்திருந்த என்னை பாய் என்று அவர் அழைத்ததும் எனக்கு மேலும் ஒரு புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஊட்டியது.

நாங்கள் இஸ்லாமிய மதரஸா ஒன்றின் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லி ரிக்ஷாவில் அங்கு சென்றோம். மதரஸாவை அடைந்த எங்களை இஸ்லாமிய மார்க்க முறைப்படி ஒரு பெரியவர் வரவேற்றார். சிறிது நேரத்தில் மதரஸாவின் முதல்வர் வந்தார். அவருக்கு என்னை அப்துல்லாஹ் அடியார் அறிமுகப்படுத்தினார். உடனே முதல்வர் என்னை கட்டித்தழுவி நலம் விசாரித்தார்.

இரவு தொழுகைக்கான நேரம் வந்ததும், அந்த மதரஸாவில் மார்க்க கல்வி கற்க வந்திருந்த மாணவர்களைப் பார்த்தேன். அவர்கள் தொழுகைக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்ததையும் பார்த்தேன். பின்பு அவர்கள் அனைவரும் வரிசை வரிசையாகவும் ஒருவரை ஒருவர் நெருங்கி இணைத்துக்கொள்ளும் வகையில் நின்று தொழுதுக்கொண்டிருந்ததை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். தொழுகை முடிந்ததும், அந்த இஸ்லாமிய நண்பர்களோடு கலந்துரையாட விரும்பி அணுகினேன். என்னுடைய தோற்றத்தை கண்ட அவர்கள் இஸ்லாமிய முறைப்படி 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொன்னார்கள். எனக்கு அந்த சலாமிற்கு பதில் சொல்ல வேண்டிய முறை தெரிந்திருந்ததால் 'அலைக்கும் சலாம்' என்று சொன்னேன்.

அங்கே 8 வயது முதல் 80 வயது வரையுள்ள முஸ்லிம்கள் இருந்தனர். அவர்களிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது அவர்களைப் பற்றி நான் சற்றும் எதிர்பாராத சில தகவல்களை சொன்னார்கள்.

அவர்களில் பெரும்பாலான பெரியவர்களும், சிறியவர்களும் சமீபத்தில் இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்தை தழுவியவர்கள் என்பதை அறிந்ததும், வியப்பும் ஆச்சரியமும் அடைந்தேன். அவர்களுடைய பேச்சு, நடவடிக்கை, அனுஷ்டானங்கள் எல்லாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் முஸ்லிம்களை ஒத்து இருந்தன. அவ்வளவு தூரம் புதிய மார்க்கத்தில் தங்களை இணைத்து ஒன்றி போயிருந்தனர். அவர்களுடைய கண்ணியமான பேச்சும் கனிவான நடவடிக்கையும் அவர்கள் மீது எனக்குள்ள பிடிப்பையும், பாசத்தையும் அதிகப்படுத்தியது.

இரவு மணி 9 ஆகிவிட்டதால் நான் அவர்களிடமிருந்து விடைபெற்று, மீண்டும் நாளை சந்திப்பதாக சொன்னதும் இன்ஷாஅல்லாஹ் (இறைவன் நாடினால்) என்று கூறி அவர்கள் எனக்கு விடை தந்தார்கள். நானும் மீண்டும் அப்துல்லாஹ் அடியார் இருந்த இடத்திற்கு வந்து, நடந்த விபரங்களை விரிவாகச் சொன்னேன். எனது மகிழ்ச்சியில் அவரும் மற்றவர்களும் சேர்ந்துக் கொண்டனர். மறுநாள் அதிகாலை 5 மணிக்கு எழுந்ததும் காலைக் கடன்களை முடித்துவிட்டு சற்று தொலைவில் இருந்த தேநீர் கடைக்கு நான் சென்றேன். அது ஒரு ஜாதி இந்துவின் கடையாக இருந்தது. நான் கல்லாவில் இருந்த உரிமையாளரைப் பார்த்து டீ கேட்டேன். அவர் தொப்பி அணிந்திருந்த என்னைப் பார்த்ததும், பாய்க்கு ஒரு டீ கொடு என்று சொன்னார். அவர் எனது தோற்றத்தை கண்ட மாத்திரத்திலே உரிய மரியாதையை கொடுத்ததை கண்டு ஒரு புத்துணர்ச்சி ஒரு உயர்வைப் பெற்று விட்டது போல் நான் உள்ளுர உணர்ந்து கொண்டிருந்தேன்.

நான் டீயைக் குடித்துவிட்டு தங்கியிருந்த மதரஸாவிற்குச் சென்றேன். அவர்கள் என்னை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார்கள். நான் இப்போது தேநீர் கடையில் நடந்த நிகழ்ச்சியை அவர்களிடம் ஆனந்தத்தோடு எடுத்துச் சொன்னேன். எனக்கு ஏற்பட்ட பூரிப்பில் அவர்களும் பங்கு கொண்டனர்.

இன்னொரு சம்பவத்தைக் கூற விரும்புகிறேன்:-

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய் பட்டிணத்தில் நடைபெற்ற ஒரு மீலாது விழா நிகழ்ச்சியைப் பார்க்க சென்றிருந்த நான் இஸ்லாமிய நண்பர்கள் என் மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக என்னை கண்ணியப்படுத்தி மேடையில் அமர வைத்தனர்.

சிறந்த சிந்தனையாளரும், பேச்சாளருமாகிய அப்துல்லாஹ் அடியார் அவர்களுடைய பேச்சைக் கேட்க பெரும் கூட்டம் திரண்டிருந்தது. நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே பன்னிரண்டு வயதுள்ள ஒரு சிறுவன் 'கிராத்' ஒதினான். அவன் லுங்கியும் தொப்பியும் அணிந்திருந்தான். சிறுவனேயானாலும், அரபு மொழியில் அழுத்தமும் திருத்தமுமாக அவன் உணர்ச்சியோடு ஒதியதை செவிமடுத்த மார்க்க அறிஞர்கள், அச்சிறுவனை உற்று நோக்கினார்கள். அவன் ஓதும் முறை எல்லோரையும் கவர்ந்திழுக்கக் கூடியதாக இருந்தது.

இப்ராஹீம் என்ற அந்த சிறுவன் நெல்லை மாவட்டம், மீனாட்சிபுரத்தில் இந்துவாக இருந்து மதம் மாறி இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்தவன் என்ற செய்தியை தலைவர்; அவர்கள் தந்து, அறிமுகப்படுத்தியது மேலும் வியப்பை தந்தது. புதிய மார்க்கத்தை, வழியை அவன் தேடிக்கொண்டது சாதராணமாக எனக்கு படவில்லை. அவன் புதிய வழியை நன்கு அறிந்து அதைத் தழுவியுள்ளான் என்பதை அறிந்துக் கொண்டேன்.

அடுத்து எதிர்பாராத விதமாக என்னை பேசும்படி விழாத்தலைவர் அறிவித்தபோது சற்று திகைத்தேன். காரணம், அது ஒரு மார்க்க மேடை, அறிஞர்களும் உலமா பெருமக்களும் ஒருங்கே கூடியிருந்த ஒரு விழா அது. அவர்கள் முன்னிலையில் பேசுவது என்பது எனக்குத் தயக்கமாக இருந்தது. ஆனாலும் இறைவனை மனதில் நினைத்துக் கொண்டதும், தைரியமும் உற்சாகமும் தானாக ஏற்பட்டது. பேசத் துவங்கினேன்.

அங்கே கிராத் ஓதிய அந்த இப்ராஹீம் என்னும் சிறுவனுக்கு அவனை பொறுத்தமட்டில் சமூக விடுதலை கிடைத்துவிட்டது என்பதை அந்த இடத்திலேயே உணர்ந்தேன். அந்த மாபெரும் சபை அந்த சிறுவனை கண்ணியப்படுத்திக் கொண்டிருந்தது. அங்கே என்னுடைய நிலையை உணர்ந்தேன்.

இறைவா இந்த சிறுவனுக்கு கிடைத்த விடுதலையும் உயர்வும் எனக்கு எப்போது கிடைக்கும் என்ற ஏக்கத்தை நான் அங்கே வெளிப்படுத்தினேன். அச்சிறுவனை பொறுத்தமட்டில் அவனுக்கு சமூக விடுதலை மட்டுமல்ல. ஒரு புதிய அந்தஸ்தும் கிடைத்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். அச்சிறுவனுக்கு தொழுகையை இமாமாக முன்னின்று நடத்தும் அருமையான கௌரவமும் கிடைத்திருக்கிறது என்பதை அறிந்து நான் ஆச்சரியப்பட்டேன். எவ்வளவு கண்ணியமான மார்க்கம் இஸ்லாம் என்பதை அன்றைய நிகழ்ச்சியில் அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டேன்.

-இந்த கட்டுரை திரு. கொடிக்கால் செல்லப்பா (இன்று கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்) என்ற மூதறிஞர் தனது சொந்த வாழ்க்கைச் சுவடுகளின் அடிப்படையில் கன்னியாகுமரி - விவேகானந்தா கேந்திரத்தில் 1986 அக்டோபர் 2ல் நடைபெற்ற 'தீண்டாமை ஒழிப்பில் காந்திஜீயின் பங்கு' என்ற கருத்தரங்கில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியாகும்.


Friday, February 27, 2015

ஆண், பெண் பற்றி கம்யூனிஷம் கூறிய கருத்துகளுக்கு மறுப்பு - 5



//பதிவர் சுவனப்பிரியன் பதிவிட்டிருக்கும் இரண்டாவது மூன்றாவது பதிவுகளை நான் அலட்சியம் செய்கிறேன். காரணம், விதி எண் ஆறில் குறிப்பிட்டபடி கம்யூனிசத்துக்கும் அந்தப் பதிவுகளுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அப்படி ஏதேனும் இருப்பதாக பதிவர் சுவனப்பிரியன் கருதி, அதை விளக்கிக் கூறினால் தொடரும் பதிவுகளில் அதைப் பார்க்கலாம்.//

அதாவது கம்யூனிஷத்தின் அடிப்படைகளையே ஆட்டம் காணச் செய்யும் செயல்களை இவர் ஒதுக்கி விடுவாராம். கம்யூனிஷம் பெண்களை உடல் உழைப்பு சார்ந்த வேலைகளுக்கு வலுக்கட்டாயமாக இழுத்து வந்தது. அதனை பார்த்து நமது மக்களும் பெண் விடுதலை என்று ஆண்கள் பார்க்கும் வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தனர். அதன் முடிவு என்னவாக இருந்தது? தினத் தந்தியின் வேலைக்குச் சென்ற பெண்களின் உள்ளக் குமுறலை பதிவாகக் கொடுத்திருந்தேன். இதற்கு பதில் சொல்லாமல் ஓடி ஒளிகிறார்.

கார்ல் மாக்ஸூம், லெனினும், ஸ்டாலினும் பெண்கள் சார்பாக கொண்ட கருத்து நடைமுறை சாத்தியமில்லாதது என்பது தெளிவாகிறது. பெரும் பெரும் வால்யூம்களாக நாம் தத்துவங்களை எழுதிக் கொண்டிருக்கலாம். அது நடைமுறை சாத்தியமா என்பதில்தான் அந்த தத்துவங்களின் வெற்றி இருக்கிறது. இங்கு கம்யூனிஷத்தின் கொள்கை ஏட்டுச் சுரைக்காயாகத்தான் உள்ளது.

//ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மனரீதியாக வித்தியாசம் இருக்கிறது என்பது பொய். இதை எந்த அறிவியலாளரும் ஏற்றுக் கொள்வதில்லை.//

நான் பொய் சொல்கிறேனா? அல்லது இந்த கம்யூனிஸ்ட் பொய் சொல்கிறாரா என்பதை இந்து பத்திரிக்கையில் வந்த கட்டுரையின் மூலம் பார்போம்.

அமெரிக்காவில் உள்ள வேய்னே ஸ்டேட் மருத்துவ பல்கலைக் கழகத்தின் உளவியல் மற்றும் நரம்பியல் துறை பேராசிரியர் எட்வர்ட் காஃபி. சென்னையில் எம்.வி.அருணாசலம் அறக்கட்டளை சார்பாக நடந்த அகில உலக நரம்பியல் மற்றும் உளவியல் அமைப்பின் 8 வது மாநாட்டில் 'பாலினத்தின் பாத்திரம் (Role of sexes)" என்ற தலைப்பில் பேராசிரியர் காஃபி உரையாற்றினார். அதில் உரையாற்றும் போது ஏன் ஆண்கள் ஆண்களாக இருக்கினறனர், பெண்கள் ஏன் பெண்களாக இருக்கின்றனர் என்பதற்கான விளக்கம் மனித மூளையில் உள்ளதாகத் தெரிவித்தார்.

உடல் கட்டமைப்பு ரீதியாகவும், செயல்பாடு ரீதியாகவும் ஆண் பெண் மூளைகளில் வித்தியாசங்கள் உள்ளன. மூளையின் அளவிலும், மூளையின் உட் பொருட்களான செர்ப்ரோஸ்பினல் ஃபுளூயிட்டின் (serebrospinal fluid) அளவு மற்றும் வெள்ளை பருப் பொருள் (white matter), சாம்பல் பருப் பொருட்களின் அளவு (gray matter) வரை ஆண் பெண் மூளைகளில் வித்தியாசங்கள் உள்ளன.

இந்த உடல் கட்டமைப்பு ரீதியான வேறுபாடு பிறப்பிலேயே தோன்றுகின்றது. ஆனால் இந்த வேறுபாடு மனிதன் வளர வளர மாறுபடுகின்றதா? அல்லது அதே நிலையில் நீடிக்கிறதா?

இது வரை இந்த கேள்விக்கான பதில் நமக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் மனிதனின் வளர்ச்சிக்கும் வயதுக்கும் ஏற்ப மூளைகளில் மாறுபாடுகள் தோன்றுகின்றன என்பதற்கான புதிய ஆதாரங்கள் தற்போது வெளி வரத் தொடங்கியுள்ளன என்று கூறுகிறார் பேராசியர் காஃபி.

சில வருடங்கள் தொடர்ந்து மூளையைப் புகைப்படங்கள் எடுத்து ஆய்வு செய்ததில் அது ஒரே மாதிரி இருப்பதில்லை, மூளையில் மேலே குறிப்பிட்ட பகுதிகள் வயதுக்கு ஏற்ப மாற்றம் அடைகின்றன என காஃபி விளக்குகின்றார்.

30 வயதுக்கு மேல் மனிதனுக்கு வயது கூட கூட மூளையின் கட்டமைப்பு சுருங்குகின்றது.

நரம்பியல் மற்றும் உளவியலோடு பாலினத்துக்குத் தொடர்பு இருக்கின்றது என்றால் அப்பொழுது கண்டிப்பாக மூளையிலும் வேறுபாடு இருக்கும் என்று குறிப்பிட்டார் பேராசிரியர் காஃபி.

மொழி செயல்பாடுகள் –language function

காட்சி இடம் சார் செயல்பாடுகள்- visual –spatial function

சமூக அறிவாற்றல் திறன்- social cognition skills

உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் முறை- empathy

உணர்வு மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்துதல்-emotion and perception

தேடுதல் மற்றும் பரபரப்பு- seeking and sensation

இவ்வாறு அனைத்து செயல்களிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடு உள்ளதாக அறிக்கை கூறுகிறது.

9 வயதில் மூளையின் வெளிப் பகுதியை மூடி இருக்கும் கோர்டெக்ஸ் (cortex) எனும் பொருள் பெண் மூளையை விட ஆண் மூளையில் பெரிதாக இருக்கின்றது. ஆனால் அடுத்த பத்து ஆண்டுகளில் அதாவது 19 வயதில் இந்த வேறுபாடுகள் மாற்றம் அடைகின்றன.

இந்த வேறுபாடுகள் ஆண் பெண் என்ற பாலினத்தைப் பொருத்து மாறுபடுகின்றது. ஆண் மூளை 'முன் மடலின் (frontal lobe) ' தடிமன் பெண் மூளையை விட வெகுவாக குறைகிறது. ஆனால் மூளையின் பின் பக்கப் பகுதி (posterior region) இதற்கு நேர் மாற்றமாக உள்ளது. அதாவது பெண் மூளையின் பின் பக்க பகுதியின்(posterior region) தடிமன் ஆண் மூளையை விட வேகமாகக் குறைகின்றது.

பண்புகள் ஒரே மாதிரி இருந்தாலும் ஆண் பெண்ணிற்கான அடிப்படை உயிரியல் ஒன்றல்ல.

ஒரே வேலையைச் செய்து முடிப்பதற்கு ஆண் மூளையில் செயல்படும் பகுதியும் பெண் மூளையில் செயல்படும் பகுதியும் வேறு வேறாக உள்ளது.

இந்த உடற் கூறு ரீதியான வேறுபாடு ஆண் பெண்களின் சமுதாய நிலையினாலும் தோன்றி இருக்கலாம். சமூகத்தில் ஆண்கள் தேடக் கூடியவர்களாகவும் (hunter) அனைத்தையும் திரட்டக் கூடியவர்களாகவும் (gatherer), பெண்கள் குழந்தைகளை சுமக்கக் கூடியவர்களாகவும் குடும்பத்தை வீட்டை கவனிக்கக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர் என்பதே இதற்குக் காரணமாக இருக்கும் என பேராசிரியர் காஃபி குறிப்பிடுகின்றார்.

இருந்தாலும் இந்த வேறுபாடுகள் நம்மை வகைப்படுத்தி வரையறுக்கின்றதா? ஆம். இந்த உடற்கூறு ரீதியான வேறுபாடுகள் நம்மை ஆண் பெண் என மட்டும் தான் வேறுபடுத்துகின்றது. தனிப்பட்ட மனிதன் அவனுடைய சிறப்பான மாறுபட்ட திறமைகளை வைத்து வேறுபடலாம். அது எப்படி இருந்தாலும் உடல் நலத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் இந்த ஆண் பெண் உடல் ரீதியான வேறுபாடுகளில் நாம் கண்டிப்பாக கவனம் செலுத்தியாக வேண்டும் எனக் கூறி முடிக்கின்றார் அமெரிக்கப் பேராசியர் காஃபி.

Why boys will be boys and girls will be girls, has an explanation in their brains, Prof. Coffey adds. Structurally, and functionally, there are differences between the brains of men and women, as a collective. Right from brain volume, to cerebrospinal fluid volume, white matter and gray matter, there are differences between the male and the female brain.

http://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/tp-others/article2464138.ece?css=print



கார்ல் மாக்ஸூம், லெனினும், ஸ்டாலினும் பெண்கள் சார்பாக சொன்ன கருத்துக்கள் அனைத்தும் இந்த ஆய்வின் மூலம் குப்பைக் கூடைக்கு சென்று விட்டன. இதை உணர்ந்ததால்தானோ என்னவோ ஸ்டாலின் தன் மகளுக்கு உடலின் கவர்ச்சியை காட்டாது ஆடைகளை அணிய வலியுறுத்தினார். தனது குடும்ப பெண்களை இஸ்லாமிய பெண் போல் நடக்க வைத்து விட்டு செங்கொடி போன்ற ஏமாந்த கம்யூனிஸ்டுகளிடம் தங்கள் உப்பு பெறாத சரக்கை ஏற்றி விட்டு மறைந்து விட்டனர். இது தெரியாத கம்யூனிஸ்டுகள் இதனை வேத வாக்காக நம்பி இன்று வரை மோசம் போய்க் கொண்டுள்ளனர்.

இது பற்றி தமிழர்கள் சுலபமாக விளங்கிக் கொள்ள தமிழனுக்கு பிடித்த சினிமாவிலிருந்தே உதாரணங்களை சொல்வோம்.

எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் ஜோடியாக நடித்த பண்டரிபாய் சில காலம் கழித்து இதே இருவருக்கும் தாயாக நடித்தார். ரஜினி காந்துக்கு 'அன்புள்ள ரஜினிகாந்தில்' மகளாக நடித்த மீனா சில காலம் கழித்து 'தில்லானா.. தில்லானா' என்று அதே ரஜினியோடு டூயட் பாடினார். 10 வருடம் கழித்து தற்போது குழந்தை பெற்றுக் கொண்டு டிவியில் விளம்பர நிகழ்ச்சியில் நடித்து வருகிறார். இன்னும் ஒரு இரண்டு வருடம் போனால் இதே ரஜினிக்கு தாயாக வேஷம் கட்டி வருவார். ஆனால் ரஜினி இன்னும் 10 வருடத்துக்கு சோனாக்ஷி சின்ஹா போன்ற இள நடிகைகளோடு டூயட் பாடி செங்கொடி போன்றவர்களை மகிழ்விப்பார். :-) இந்த எளிய உதாரணமும் விளங்காது கம்யூனிஷ கொள்கையானது அவரை சிந்திக்க விடாமல் தடுத்தால் நம்மால் ஒன்றும் சொல்ல இயலாது.

இதனை சரியாக உணர்ந்ததால்தான் குர்ஆன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடு உள்ளது என்று தெளிவாக கூறுகிறது. அதனை எப்படி கையாள வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.

சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மைபடுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு.

-குர்ஆன் 4:32

சிலரை மற்றும் சிலரை விட இறைவன் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.
-குர்ஆன் 4:34

குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் பெற்றோரும்,உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப் பங்கீடு கட்டாயக் கடமை.(4:7)

ஆண்களிலோ பெண்களிலோ நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
-குர்ஆன் 4:124







கம்யுனிஸத்தை சொல்லப் போய் இஸ்லாத்தை வாங்கி வந்த துரை!



சாராயத்திற்குப் பெயர் போன நெல்லை மாவட்டம் சொக்கம்பட்டி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவன் நான். சாதிச் சண்டையின் பாதிப்பால் இடம் பெயர்ந்து செங்கோட்டை வட்டம் விஸ்வநாதபுரத்தில் வசித்து வருகிறேன்.

சமூகப் பொராளியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் என்னை இணைத்துக் கொண்டு டி.ஐ.ஒய்.எஃப், எஸ்.எஃப்.ஐ போன்ற அமைப்புகளில் பொறுப்பாளர்களாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தேன். இந்த ஈடுபாடு மதங்களையும் அதன் கட்டுப்பாடுகளையும் அதன் சுதந்திரங்களையும் எனக்கு அறியத் தந்தது. ஆனாலும் மதம் ஒரு அபின்: மதங்கள் மனிதனைப் பண்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டவை என்ற மார்க்சிய எண்ணம்தான் என்னில் வேரூன்றி இருந்தது.

வர்ணாசிரமக் கொள்கையை கையில் ஏந்தி திராவிட இனங்களை ஜாதிகளாகப் பிரித்து அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தும் உயர் ஜாதிகள் என்று கூறிக் கொள்பவர்கள் இன்றளவும் செய்யும் கொடுமைகளுக்கு எதிராகவும் அகில உலக ரட்சகனாகத் தன்னைப் பிரகடனப் படுத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் மார்க்சியப் போராட்டங்களில் முழு அளவில் இணைந்து 12 ஆண்டு காலம் போராடி பல முறை சிறை சென்றுள்ளேன்.

நான் சார்ந்திருந்த சமூக மக்கள் உழைக்கும் மக்களாக பள்ளன் என்றும் பறையன் என்றும் சக்கிலியன் என்றும் பல பெயர்களால் அவர்களைத் தீண்டத் தகாதவர்களாக்கி கொடுமைப் படுத்தப் படுவதும் ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என இந்தியச் சூழல் இருந்தாலும் இன்றும் திண்ணியம் கிராமத்திலே தாழ்த்தப்பட்ட சகோதரனுக்கு மனிதக் கழிவை வாயில் திணித்ததும், செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக மத வெறியர்கள் ஐந்து தாழ்த்தப்பட்ட மக்களை அடித்தே கொன்ற கொடுமையும், பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி போன்ற கிராமங்களில் ஜனநாயக உரிமை கூட மறுக்கப்படுவதும் ........ இவை எல்லாமே பல வடிவங்களில் தொடர்ந்து நடக்கும் கொடுமைகள் ஆகும்.

இவற்றுக்கு தீர்வு வெறும் போராட்டங்கள் அல்ல. மனித சட்ட திட்டங்களாலோ ஆணைகளாலோ இவற்றிற்கு தீர்வு காண முடியாது. பிறகு இதற்கு என்னதான் வழி? தொட்டால் தீட்டு, பட்டால் பாவம் என்ற கொடுமைகளுக்கு விடிவு காலம் எப்போது? கார்ல் மார்க்சின் 'மாறாது' என்ற சொல்லைத் தவிர மற்றவை எல்லாம் காலப் போக்கில் மாறும் என்பது வெறும் தத்துவம் தானா?

இந்தத் தலைவர்கள், மேதாவிகள் அவர்தம் கொள்கைகள் காலப் போக்கில் மங்கி நிறமிழந்து போகும் போது எந்த வழிதான் இந்த உலகை உயிர்ப்பிக்கும் என்ற தேடல் எப்போதம் என்னுள் உண்டு.

இந்தச் சூழலில் நெல்லை மாவட்டம் கடைய நல்லூர் ஒன்றிய டி.ஒய்.எஃப்.ஐ பொறுப்பாளராக கட்சியின் மாவட்ட நிர்வாகத்தால் பணியமர்த்தப்பட்டேன். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் கடையநல்லூரில் இஸ்லாமிய மக்களிடம் கட்சியை வளர்ப்பதில் மட்டுமே நாட்டம் கொண்ட மார்க்சிய வாதங்களை எடுத்து வைப்பேன். அதே சமயம் உலக அளவில் சிறுபான்மையினர் கொடுமைப்படுத்தப்படுதல் குறிப்பாக நர வேட்டை நாயகன் நரேந்திர மோடி குஜராத்தில் நடத்திய இனப் படுகொலைகள், இஸ்லாமியப் பெண்கள் மீது நடத்திய தாக்குதல்கள் வகுப்பு வாத பாசிச வெறியர்களால் இந்தியா முழுவதும் நடக்கும் கொடூரச் செயல்கள் பொன்றவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்தும் போராடியும் இருக்கிறேன். இந்தச் சிறுபான்மை மக்களில் பெரும்பாலோர் மௌனிகளாக இருப்பது கோபத்தையும் ஒரு இரக்கத்தையும் கூட என்னுள் ஏற்படுத்தியது.

கட்சியை அறிமுகப்படுத்தி வளர்ப்பதற்காக பகுத்தறிவுப் புத்தகங்கள், மார்க்சியப் புத்தகங்கள், கட்டுரைகள், கவிதைகள், நான் எழுதிய 'போர் வாள்", செம்மண், கிராமத்துக் கரையோரம் ஆகிய நூல்களை எல்லாம் மக்களிடம் எடுத்துச் செல்வேன். அப்படி எடுத்துச் செல்லும் போது 20 வயதான மதினா நகர் டி.எ.அப்துல் அஜீஸ் எனும் நண்பரையும் சந்திக்கச் செல்வேன். அவர் மார்க்க அறிஞரோ அல்லது மார்க்கத்தை முழு அளவில் எடுத்துரைக்கும் அழைப்பாளரோ அல்ல. பத்து வருடங்களுக்கு முன் இஸ்லாத்தில் இணைந்தவர்தான்.

என் நூல்களை அவர் படித்தாரா என்று தெரியாது. என் உணர்வுகளை மதித்து நெருங்கி தோழமை உணர்வோடு பழக ஆரம்பித்தார். அவரை இஸ்லாமிய மக்கள் மத்தியில் மார்க்சிய அறிவைப் புகுத்தி போராட்டவாதியாக ஆக்க முயன்றேன்.

இஸ்லாமிய நண்பர்களிடம் மார்க்சிய வாதங்களை எடுத்துரைத்து தோற்றுப் போகத்தான் முடிந்தது. அப்துல் அஜீஸிடம் நான் தோற்றுப் போனேன். 'நான் மார்க்சியத்தை படிப்பது இருக்கட்டும்: நீங்கள் நபிகளின் வாழ்க்கை முறையை படியுங்கள்' என்று நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை எனக்குத் தந்தார்.

என்ன ஒரு அற்புத வாழ்வு!ஆஹா..! நடைமுறைக் கேற்ற அழகிய வழி காட்டுதல்கள். அந்த மாமனிதரின் வாழ்வு முறை என்னை ஈர்த்தது. ஓரிறைக் கொள்கையின் மீது ஒரு பிரியம் ஏற்பட்டது. சிந்திக்க ஆரம்பித்தேன். திருக்குர்ஆனின் அத்தியாயங்களை ஒவ்வொன்றாகப் படிக்கத் தொடங்கினேன். விஞ்ஞான உலகோடு ஒப்பாய்வு செய்து படித்தேன். நபிகளார் மூலம் மனித குலத்திற்கு இறைவன் அருளிய வழி காட்டுதல்கள் உண்மையானவை: சத்தியமானவை: கண்ணீர் மல்க கரைந்துருகினேன். நான் இப்போது அப்துல் அஜீஸ்.

தீண்டாமையை ஒழிக்கவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடிவு காலம் பிறக்கவும், ஏற்றத் தாழ்வுகளைக் களையவும் அருமருந்தான இஸ்லாத்தை என் சமூக மக்களிடம் எடுத்துச் செல்வேன்.

ஓரிறையை ஏற்று திருமறை வழியில் நடப்பதன் மூலமே மனித குலம் மேம்பாடு அடைய முடியும். மனிதன் மாண்பு பெற இம்மார்க்கமே மகத்தான மருந்து என உலகிற்குப் பறை சாற்றப் போகிறேன்.

-அப்துல் அஜீஸ் (முன்னால் வி.பி துரை)

நன்றி:சமரசம்

-------------------------------------------------------------------

ஆஹா... என்ன ஒரு தீர்க்கமான முடிவு! என்ன ஒரு ஆணித்தரமான வார்த்தைகள்! இனி உங்களை ஒருவனும் சூத்திரன் என்று கூற மாட்டான். நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்கள் நான் ஆதமின் வழி வந்த வாரிசு என்று!

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது இனி ஏட்டளவில் மட்டுமல்ல செயலிலும் நீங்கள் செயல்படுத்தலாம். தமிழனின் பூர்வீக மதத்தை நோக்கி ஓடி வந்த நமது சகோதரன் துரையை இரு கரம் நீட்டி அரவணைப்போம்.

இஸ்லாத்தை வாழ்வியலாக கொண்டு வாழ்ந்து வரும் என்னை ஒருவர் கம்யூனிஸ்டாக மாற்றப் போகிறேன் என்று சவால் விட்டுள்ளார். :-) அதற்காக என்னோடு விவாதமும் செய்து வருகிறார். இவரைப் போன்ற கம்யூனிஸ்டான துரை தற்போது அப்துல் அஜீஸாக மாறி இறைப் பணி செய்து வருகிறார். இதே போன்று என்னோடு வாதிடுபவரும் ஒரு நாள் கண்டிப்பாக கம்யூனிஸத்தை விட இஸ்லாமே சிறந்த வாழ்வு முறை என்ற புரிதலுக்கு வருவார். நாமும் பிரார்த்திப்போம்.

"முஹம்மதே! நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன்."
அல்குர்ஆன் 28:56


'உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! என் உள்ளத்தை உனது மார்கத்தில் உறுதியாக ஆக்கி வைப்பாயாக!' என்பது நபிகள் நாயகம் அவர்களின் பிரார்தனையாக இருந்தது.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : திர்மிதீ 3511

'மனிதனின் உள்ளங்கள் அல்லாஹ்வின் இரண்டு விரல்களுக்கிடையே உள்ளன. அவன் விரும்பியவாறு அந்த உள்ளங்களைப் புரட்டுகிறான்' என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் 4798

'உள்ளங்கள் இறைவனது கைவசத்திலேயே உள்ளன; அதில் எவருக்கும் எந்தப் பங்குமில்லை' என்பதற்கு இவை தெளிவான சான்றுகள்.





Thursday, February 26, 2015

கோடி நன்மைகளை கூட்டித் தருது குர்ஆன் - ராஜேஸ்வரி



அகில இந்திய அளவில் கல்லூரி மற்றும் பல்கலைக் கழக பேராசிரியர்களுக்கு 'எனக்குத் தெரிந்த இஸ்லாம்' என்கிற தலைப்பில் கேரளாவைச் சார்ந்த 'ஃபோரம் ஃபார் ஃபெய்த் அண்ட் ஃப்ராட்டர்னிடி' என்ற தொண்டு நிறுவனம் நடத்திய கட்டுரைப் பொட்டியில் மூன்றாவது பரிசை வென்றிருக்கிறார் மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி.

பேனா முனை பொல வடிவமைக்கப்பட்ட நினைவுப் பரிசுடன் சான்றிதழ், புத்தகங்கள் மற்றும் 25000 ரூபாய் ரொக்கமும் அடங்கிய பரிசு இது.

ராஜேஸ்வரிக்கு இயல்பிலேயே இஸ்லாம் மதத்தின் மீது ஈடுபாடு உண்டு.

'நான் பிறந்தது: வளர்ந்தது மன்னார்குடி. அங்கு முஸ்லிம்கள் அதிகம். என்னோட சின்ன வயசுத் தோழிகள் எல்லோருமே முஸ்லிம் பெண்கள் தான். அவங்களோட பழக்க வழக்கங்கள் பலவும் என்னை ரொம்பவும் ஆச்சரியப்படுத்தியிருக்கு. பாட்டி சொல்லப் போற கதைக்கு காத்துக் கிடக்கிற பேரப் பிள்ளைங்க மாதிரி அவங்க மதத்தைப் பத்தி இன்னும் நிறைய தெரிஞ்சுக்கணும்னு நான் ஏங்கின நாட்கள் கூட உண்டு' என்று நிறுத்தியவர்,

'அப்படி இருந்த எனக்கு இந்தப் போட்டி என் ஆர்வங்களைப் பதிவு செய்றதக்கான வாய்ப்பா அமைஞ்சுது. ஒரு சிறு தவறும் நேர்ந்து விடக் கூடாதுங்கிற கவனத்தோட பல புத்தகங்களைப் படிச்சு நிறைய பேர் கிட்ட கேட்டு விசாரிச்சு, கட்டுரையை எழுதி அனுப்பி வெச்சேன்' என்றார் புன்னகையுடன்.

'ஏக இறைவன், சமத்துவம், சகோதரத்துவம், ஜாதி, இன பெதமின்மை என்று கோடி நன்மைகளை கூட்டித் தொகுத்துத் தருது இஸ்லாமியர்களின் வேத நூலான குர்ஆன். பெண்களுக்கு மேன்மையானதொரு இடம் கொடுத்திருக்கு இஸ்லாம்' என்று ராஜேஸ்வரி இஸ்லாம் பற்றி விவரித்துக் கொண்டே போகிறார்.

வாழ்த்துக்கள் ராஜேஸ்வரி......

நன்றி: அவள் விகடன்.

பெண்களை அடக்கி ஒடுக்குகிறது இஸ்லாம் என்ற வீண் வாதத்தை ஒரு இந்து குடும்பத் தலைவி உடைத்து எறிந்துள்ளார். அதிலும் இவர் ஒரு கல்லூரி பேராசிரியர். போலி பெண்ணியம் பேசி பெண்களின் அமைதியான வாழ்வுக்கு உலை வைக்கும் கம்யூனிஸ்டுகள் மற்றும் நாத்திகர்கள் இந்த பெண்களிடம் பாடம் எடுத்துக் கொள்வார்களாக!.



குறைஷி குலம் உயர்ந்தாக நபிகள் நாயகம் சொன்னார்களா? - 4

செங்கொடியின் கேள்விகளுக்கான எனது பதில்கள்......

//1.கள்ள உறவுக்குள் ஒழியும் கடவுள் எனும் பதிவுக்கான பதில்.//

இரண்டாவது கேள்வியில் இதற்கான பதில் இருக்கிறது.

//2. முதலில் எழுத்து விவாதத்துக்கு நேரம் இல்லை என்று பொய்யாக கூறியதன் காரணம் என்ன?//

பொய்யெல்லாம் கூறவில்லை. கிடைக்கும் ஓய்வு நேரத்தை உங்களோடு வீணாக்காமல் மற்ற ஆக்கபூர்வ பணிகளில் கவனம் செலுத்தலாமே என்றுதான் சொன்னேன்.

//3. நேரடி விவாதத்துக்கு வர வேண்டும் என்று கூறியவர் தன் முடிவை மாற்றிக் கொள்ள நேர்ந்ததற்கான காரணம் என்ன?//

இப்பொழுதும் உங்களுடன் நான் விவாத ஒப்பந்தமெல்லாம் போட்டு விவாதிக்கவில்லையே! 'சமூகத்தில் சாமான்ய மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது இஸ்லாமா? கம்யூனிஸமா?' என்ற தலைப்பில் சில கருத்துக்களை உங்களிடம் கேட்டுள்ளேன். விவாதம் என்று வந்தால் அது நேரிடையாக நடந்து குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கி செய்தால்தான் முடிவுக்கு வரும். இப்போதும் அதற்கு நான் தயார். இதற்கு முன் பல வருடங்களாக உங்களோடு எழுத்து முறையில் விவாதித்து எந்த தரப்பும் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரவில்லை என்பதால் தான் எழுத்து பூர்வ விவாதத்தை மறுக்கிறேன்.

//4.சுவனப்பிரியன் – நெருப்புக்கோழி பதிவில் இருக்கும் குறிப்பான அம்சங்களுக்கான பதில்,//

இரண்டாவது கேள்வியில் இதற்கான பதில் இருக்கிறது.

//5.இந்தப் பதிவில் விவாதிக்கப்பட்டவைகளுக்கான பதில்.//

நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்றாக வரும்.

//6.இந்த விவாதத்துக்கு பொருத்தமான தலைப்பை தேர்ந்தெடுப்பது.//

'சமூகத்தில் சாமான்ய மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது இஸ்லாமா? கம்யூனிஸமா?'

//இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள், இந்த ஆட்சியதிகாரம் குரைஷிகளிடம் தான் இருக்கும் அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை. புஹாரி 3501//


இது பற்றி சற்று விரிவாகப் பார்போம். ஒரு மனிதனிடமிருந்து இரண்டு கருத்துக்கள் வந்திருக்க முடியாது. குறைஷி குலம் உயர்ந்தது என்ற ரீதியில் நீங்கள் பதிந்த நபி மொழி வருகிறது. ஆனால் 10க்கும் மேற்பட்ட நபி மொழிகள் குலம் உயர்த்தி தாழ்த்தி பேசுதலை கண்டிக்கிறது. குர்ஆன் வசனமும் இவ்வாறு மனிதர்களில் உயர்ந்த குலம் தாழ்ந்த குலம் என்ற பாகுபாட்டை காட்டி தீண்டாமை கடைபிடிப்பதை வன்மையாக கண்டிக்கிறது.

குரைஷிக் குலம் பற்றி இனி பார்போம்.

குறைஷிக் குடும்பத்தார் இறைத்தூதர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித் தோன்றல்கள். இதன்படி கஅபாவை நிர்வகிக்கும் பொறுப்பைக் குரைஷிகள் தலைமுறை தலைமுறையாகப் பெறுகின்றனர். இவர்கள் தங்கள் குடும்பங்களை தனித்துவமிக்க குடும்பங்களாக ஆக்கிக் கொண்டனர். எவ்வாறு நமது நாட்டில் பார்பனர்கள் தங்களுக்கென்று தனி உரிமைகள், தனி வழிபாடுகள், தனி ஆளுமைகளை கொண்டிருக்கிறார்களோ அவ்வாறே அன்றைய குரைஷிகள் இருந்தனர்.

குரைஷிகள் தங்களை ஹுமுஸ் என்று அழைத்துக் கொண்டனர். ஹுமுஸ் என்றால் கடுமை, கடினம் என்று பொருளாகும். குரைஷிகள் தங்கள் மார்க்கத்தில் பிடிப்பாக இருப்பதால் அவர்களுக்கு இந்தப் பெயர். (நவவீயின் முஸ்லிம் விரிவுரை)

இவர்கள் ஹஜ், உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து விட்டால் இறைச்சி சாப்பிட மாட்டார்கள்; முடி, கம்பளியினால் ஆன ஆடைகளை அணிய மாட்டார்கள். மக்காவுக்கு வந்தால் இந்த ஆடைகளைக் களைந்து விடுவர். இது அப்துல் அஜீஸ் பின் இம்ரான் அல்மதனீ என்பார் கூறும் விபரமாகும்.

குரைஷிகளிடம் குரைஷி அல்லாதவர் யாரேனும் பெண் பேசி வந்தால், தங்கள் பிள்ளை தங்கள் மார்க்கத்தில் தான் இருப்பாள் என்று நிபந்தனையிட்டே திருமணம் முடித்துக் கொடுப்பார்கள். இந்த அடிப்படையில் சம்பந்தம் கொள்கின்ற கிளையாரில் தாய்கள் மட்டும் ஹுமுஸைச் சார்ந்தவர்கள் ஆவர். (பத்ஹுல் பாரி)

தனித்துவத்தைத் தக்க வைத்தல்

ஆரம்ப காலத்தில் இவர்களது முன்னோர்கள் சீர்திருத்தவாதிகளாக, இறைத்தூதர்களாக இருந்ததால் கஅபா எனும் ஆலயத்தை நிர்வகிக்கும் பொறுப்பைப் பெறுகின்றனர். அதை வைத்துத் தங்கள் குடும்பத்தின் தனித்தன்மையை அப்படியே தலைமுறை தலைமுறையாகத் தக்க வைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஹஜ் என்பது மக்கள் அனைவரும் மக்காவில் ஒன்று கூடுவதாகும். அப்படி ஒன்று கூடும் மக்கள், மக்காவில் கஅபா எனும் ஆலயத்திற்கும், முஸ்தலிபா என்ற இடத்திற்கும், அரஃபா என்ற இடத்திற்கும் கண்டிப்பாக வருகையளிக்க வேண்டும்.

ஆனால் இந்தக் குரைஷிகளோ மற்ற மக்களைப் போன்று அரஃபாவுக்கு வர மாட்டார்கள். முஸ்தலிபா என்ற இடத்திற்கு மட்டும் வருகையளிப்பார்கள்.

மடமைக் காலத்தில் மக்கள் நிர்வாணமாகவே கஅபாவைச் சுற்றி வந்துள்ளனர். ஹும்ஸ் கிளையாரைத் தவிர. ஹும்ஸ் என்றால் குரைஷிகளும் அவர்களது சந்ததிகளும் ஆவர். அவர்களில் ஓர் ஆண் இன்னோர் ஆணுக்கு தவாஃப் செய்வதற்காக ஆடை கொடுப்பார். ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு ஆடை கொடுப்பார். இந்த ஹும்ஸ் கிளையார் யாருக்கு ஆடை கொடுக்கவில்லையோ அவர் நிர்வாணமாக தவாஃப் செய்வார். மேலும் மக்கள் அரஃபாவிலிருந்து திரும்புவார்கள். ஆனால் குரைஷிகளோ எல்லாம் முடிந்த பின்னர் முஸ்தலிஃபாவிலிருந்து தான் திரும்புவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1665

அல்குர்ஆன் வைக்கும் ஆப்பு

இந்த அறியாமைக் காலப் பழக்கத்திற்கு, அகந்தைக்கு, குல வெறிக்குத் தான் அல்குர்ஆன் ஆப்பு வைக்கின்றது.

மக்கள் எங்கிருந்து புறப்படு கிறார்களோ அங்கிருந்து நீங்களும் புறப்படுங்கள்! (2:199) என்ற வசனம் குரைஷிகள் தொடர்பாக இறங்கியது தான். (புகாரி 1665)

அல்குர்ஆனின் இந்த ஆணைப் படி குரைஷிகளின் குடும்ப வெறி அடித்து உடைத்துத் தரைமட்டமாக்கப் படுகின்றது. அதன்படி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்யும் போது அவர்கள் குரைஷிக் குடும்பத்தவராக இருந்தாலும் அரஃபாவில் வந்து நிற்கின்றார்கள்.

அதைப் பார்த்து மற்ற குரைஷிகள் ஆச்சரியப்படுகின்றனர்.

(நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்) அரஃபா தினத்தில் எனது ஒட்டகம் காணாமல் போனது. அதைத் தேடிக் கொண்டு வந்த போது நபி (ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்தில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். அப்போது நான், "இவர் குரைஷிக் குலத்தவராயிற்றே! இவருக்கு இங்கு என்ன வேலை?'' என்று எனக்குள் கூறிக் கொண்டேன்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்யிம்(ரலி)

நூல்: புகாரி 1664

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குரைஷிக் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் வழக்கத்தை அப்படியே தக்க வைத்துக் கொள்வார்கள் என்று குரைஷிகள் எதிர்பார்த்தனர். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அந்த அறியாமைக் காலத்துப் பழக்கத்திற்கு அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப ஆப்பு வைத்து விடுகின்றார்கள்.

"நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நகரத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகின்றதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமை களும் கண்ணியமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்'' என்று பல தடவை கூறினார்கள்.
நூல்: புகாரி 1739

மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்களுடைய தந்தை ஒருவர் தான். ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும், ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும், ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும், ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை, இறையச்சத்தைத் தவிர!
நூல்: அஹ்மத் 22391

அறியாமைக் காலத்து அனைத்துக் காரியங்களும் என் இரு பாதங்களுக்கடியில் போட்டுப் புதைக்கப்படுகின்றன.

நூல்: முஸ்லிம் 2137

அறியாமைக் காலத்து (கொலைக்காக இப்போது) பழி வாங்குதல் (இன்றுடன்) ரத்து செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன் முதலில் ரத்து செய்யப் படுவது எங்களது குடும்பத்தைச் சார்ந்த ரபீஆவுடைய குழந்தைக்காக வாங்க வேண்டிய பழியாகும். ரபீஆ, அப்துல் முத்தலிபுடைய பேரர் ஆவார். இந்த ரபீஆவின் குழந்தை ஸஃத் கிளையாரிடம் பால் குடித்துக் கொண்டிருக்கும் போது ஹுதைல் கிளையினர் கொன்று விட்டனர். (இதுவரை பழி தீர்க்கப்படாமல் இருக்கும் அந்த உயிருக்காக இனி பழி தீர்க்கப்படாது என்று இப்போது அறிவித்து விட்டேன்)

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்கள்: முஸ்லிம் 2137, திர்மிதீ 3012, அபூதாவூத் 1628, 2896, இப்னுமாஜா 3046, 3065, இப்னு குஸைமா

தலைமைப் பொறுப்புக்குத் தாங்கள் மட்டுமே தகுதி என்று எண்ணிக் கொண்டிருந்த குரைஷிகளின் குருட்டு எண்ணத்தையும் நபி (ஸல்) அவர்கள் உடைக்கின்றார்கள். அடிமையாக இருந்த ஸைத் (ரலி) அவர்களையும், அதற்குப் பின் அவரது மகன் உஸாமா (ரலி) அவர்களையும் படைகளுக்குத் தளபதியாக நியமித்து, குலப் பெருமையைக் குழி தோண்டிப் புதைக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள், உஸாமா பின் ஸைத் (ர-) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படையை அனுப்பினார்கள். மக்களில் சிலர் உஸாமா அவர்களின் தலைமையைக் குறை கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "(இப்போது) இவரது தலைமையை நீங்கள் குறை கூறுகின்றீர்கள் என்றால், இதற்கு முன் (முஃத்தா போரின் போது) இவரது தந்தையின் தலைமையையும் நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்குத் தகுதி உடையவராகவே இருந்தார். மேலும் அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராக இருந்தார். இவர் (உஸாமா) தான் அவருக்குப் பின் எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 3730

குரைஷ் குலத்தின் உட்பிரிவான மக்ஸூமியா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடி விட்டார். இது குரைஷிக் குலத்தவருக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியது. தம் குலத்துப் பெண்ணுக்கு திருட்டுக் குற்றத்திற்காக கைகள் வெட்டப் படுவது அவர்களுக்கு இழிவாகத் தோன்றியது. எனவே நபிகளிடம் கை வெட்டும் தண்டனையை கைவிடுமாறு பரிந்துரைக்கப்பட்டது. அப்போது நபி அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

"உங்களுக்கு முன் சென்றவர்கள் தங்களில் உயர்ந்தவர் திருடினால் அவரை விட்டு விடுவார்கள். பலவீனர் திருடினால் அவருக்குத் தண்டனையை நிறைவேற்றுவார்கள். அதனால் தான் அவர்கள் நாசமாயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நான் வெட்டுவேன்'' என்று பிரகடனம் செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 3475

"(தன்) இனத்தை ஆதரித்து, குருட்டு சிந்தனை என்ற கொடியின் கீழ் போரிட்டு கொல்லப்படுபவரின் மரணம் அறியாமைக் காலத்து மரணமே'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் அல்பஜலி (ரலி)

நூல்: முஸ்லிம் 3440

"மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்களுடைய தந்தை ஒருவர் தான். ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும், ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும், ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும், ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை, இறையச்சத்தைத் தவிர!''

(நூல்: அஹ்மத் 22391)


மேலே நாம் பல நபி மொழிகளையும் குர்ஆன் வசனங்களையும் பார்தோம். அவை அனைத்தும் குரைஷி குலம் உயர்ந்தது என்று நினைப்பவர்களுக்கு சம்மட்டி அடியாக அமைந்துள்ளதைப் பார்க்கிறோம். இவ்வாறு சொல்லி விட்டு அதற்கு நேர்மாறான வேறொரு கருத்தை நபிகள் நாயகம் சொல்லியிருப்பார்களா?


இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். குர்ஆனுக்கு மாற்றமாக எந்த நபிமொழிகள் இருந்தாலும் அது இட்டுக் கட்டப்பட்டவை என்று ஒதுக்கி விட வேண்டும். இஸ்லாத்தில் இணைவதாக நடித்த ஒரு சில யூதர்கள் நபி அப்படி சொன்னார் நபி இப்படி சொன்னார் என்று நிறைய கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டனர். அவ்வாறு வரும் நபி மொழிகளை இஸ்லாமியர்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பதையும் இங்கு பதிவு செய்து கொள்கிறேன். குர்ஆனை பாதுகாப்பதாக சொன்ன இறைவன் நபி மொழிகளுக்கு அந்த உத்தரவாதத்தைக் கொடுக்கவில்லை. எனவே இரு வேறு கருத்துக்களை சுமந்த நபி மொழிகள் நமக்கு கிடைத்தால் குர்ஆனோடு அதனை உரசிப் பார்க்க வேண்டும். குர்ஆனை ஒட்டி எந்த கருத்து வருகிறதோ அதனையே நபி அவர்கள் சொன்னதாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். குர்ஆனின் கருத்துக்கு மாற்றமாக ஒரு நபி மொழி கிடைத்தால் நபியவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று அதனை ஒதுக்கி விட வேண்டும். உலக முஸ்லிம்கள் பொதுவாக ஒத்துக் கொண்ட நடைமுறையே இது.

இனி கம்யூனிஸத்தைப் பற்றி வரும் பதிவுகளில் பார்போம்.





Wednesday, February 25, 2015

மதரஸாவில் சேர்ந்து வரும் இந்து மாணவர்கள்!



மதரஸாக்களில் சேர்ந்து வரும் இந்து மாணவர்கள்!

உத்தரபிரதேசம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ளது 'ஜம்யத்துல் அன்ஸார்' என்ற அரபி மதரஸா. இந்த மதரஸாவில் 14 இந்து மாணவர்கள் தாங்களாகவே விரும்பி சேர்ந்து கல்வி பயில்கின்றனர். இது பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.

இந்த மதரஸாவில் முன்பு வெறும் இஸ்லாமிய பாடங்கள் மட்டுமே போதிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஆங்கிலம், அறிவியல், கணிதம், வரலாறு என்று பலதரப்பட்ட கல்விகளையும் இந்த மதரஸா போதிக்கிறது. இந்த மதரஸாவின் முதல்வர் காலித் அன்சாரி சொல்கிறார் 'இந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் உருது மற்றும் அரபி மொழியையும், இஸ்லாமிய சட்டதிட்டங்களையும் தெரிந்து கொள்வது நல்லது என்று நினைக்கின்றனர். அதோடு உலக கல்வியும் சேர்ந்து கிடைப்பதால் இவர்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு கல்வியும் கிடைத்து விடுகின்றது. இது அவர்களின் எதிர்கால வாழ்வை சிறப்பாக்கி வைக்கும் என்று இந்த மாணவர்களின் பெற்றோர்கள் நினைக்கின்றனர்.' என்கிறார்.

ஸ்ரீவாத்ஸவ் என்ற வைதீக இந்து சொல்கிறார் 'பலரும் என்னிடம் உனது குழந்தையை ஏன் மத்ரஸாவில் சேர்த்துள்ளாய் என்று கேட்கின்றனர். தரமான கல்வி, சிறந்த ஆசிரியர்கள், ஒழுக்கம் பேணுதல் என்று அனைத்தும் ஓரிடத்தில் எனது மகனுக்கு கிடைக்கும் போது அவனை அங்கு சேர்ப்பதில் என்ன தவறு?' என்று கேட்கிறார்.

இதே போல் இந்துக்கள் நடத்தும் வித்யா மந்திர் என்ற கல்வி ஸ்தாபனத்தில் சில இஸ்லாமிய மாணவர்களும் படிக்கின்றனர். இந்த பள்ளியில் படித்த இஸ்லாமியர்கள் பலர் பல நல்ல அரசு உத்தியோகங்களில் வேலை கிடைக்கப் பெற்றுள்ளனர். முன்பு கலவரம் நடந்து 50 க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் இறந்த முஸாஃபர் நகருக்கு பக்கத்தில்தான் இந்த அதிசயம் நடந்து வருகிறது.

இந்துக்களையும் முஸ்லிம்களையும் மோத விட்டு அதன் மூலம் ஓட்டு அறுவடை செய்தது இந்துத்வா. தற்போது உண்மையை உணர்ந்த இரு தரப்பும் அன்பினால் நெருங்கி வருகிறது. இந்துத்வாவின் பிரித்தாளும் சூழ்ச்சி நெடு நாளைக்கு நீடிக்கவில்லை.

ஹிந்தி பேசும் மாநிலங்களெல்லாம் இன்று மதரஸா கல்வியை நவீனமயமாக்கி முஸ்லிம்கள் மத்தியில் கல்வி மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் நமது தமிழக மதரஸாக்களோ இன்னும் மத்ஹப் என்ற பெயரில் பல குப்பைகளை பாடங்களாக வைத்து போதித்து வருகின்றன. ஏழு வருடம் தனது வாழ்வை மதரஸாவில் தொலைத்த மாணவன் வெளியேறும் பொது உண்மையான இஸ்லாமிய கல்வியும் இல்லாமல் உலக கல்வியும் இல்லாமல் வருகிறான். போட்டி அதிகமுள்ள இந்த காலத்தில் மத்ஹப் பாடங்களை வைத்து அவனால் என்ன செய்ய முடியும்? இதனால் முடிவில் தட்டு, தாயத்து, ஃபாத்திஹா, தர்ஹா என்று போய் மூடப் பழக்கங்களில் மூழ்கி நஷ்டவாளிகளாக மாறிய பலரைப் பார்கிறோம்.

மதரஸாவை நடத்தும் செல்வந்தர்கள் இனியாவது உலக கல்வியை பாடமாக வைக்க முயற்சி செய்யுங்கள். சிஎம்என் சலீம் போன்றவர்கள் பல நல்ல திட்டங்களை வைத்துள்ளனர். அவர்களிடம் ஆலோசனைகளை கேட்டு அரசு அங்கீகாரத்தோடு மதரஸாக்களை நடத்த முயற்சி எடுங்கள். வீணாக ஏழை மாணவர்களை ஏழு வருடம் மத்ஹப் குப்பைகளை படிக்கவைத்து அவர்களை படு குழியில் தள்ள வெண்டாம்.

பணமும், அறிவும் கொடுக்கப்பட்ட மக்கள் அதனை சரியாக பயன்படுத்தாவிட்டால் அதற்கும் இறைவனிடம் பதில் சொல்ல கடமைபட்டுள்ளனர் என்ற நபி மொழியை சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்து நடவடிக்கை எடுப்பார்களாக! குர்ஆன், ஆங்கிலம், அறிவியல், வரலாறு, புவியியல், கணிதம், கணிணி, விளையாட்டு, என்று வகைப்படுத்தி ஒவ்வொன்றுக்கும் முக்கால் மணி நேரம் ஒதுக்கி சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பாடங்களை எடுங்கள். நபிகள் நாயகம் காட்டித்தந்த அந்த 'முன் மாதிரி சமுதாயமாக' இளைஞர்களை மாற்ற இனியாவது முயற்சியுங்கள்.

'அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று நபியே கேட்பீராக! அறிவுடையோர்தான் நல்லறிவு பெறுவார்கள்'
-குர்ஆன் 39:9


தகவல் உதவி
என்டிடிவி
26-02-2015

'இரத்த பணம்' தர முடியாததால் சிறைவாசம் சவுதி இளைஞருக்கு!



சவுதி அரேபியாவின் ஹஃப்ரல் பாதின் என்ற மாகாணத்தில் மம்தூஹ் அல் துலூஹி என்ற சவுதி இளைஞர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வாகன விபத்தில் 17 பங்களாதேசத்து நாட்டவர் இறக்க காரணமாகியுள்ளார். தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் மீது இவரது வாகனம் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது. தவறு யார் பக்கம் இருந்தாலும் இறந்தவருக்கு உயிரோடு இருப்பவர் இழப்பீட்டு தொகை தந்தே ஆக வேண்டும் என்பது இந்நாட்டின் சட்டம். சவுதி அரசின் சட்டப்படி இறந்தவர்களுக்கு 'இரத்தப் பணம்' எனும் இழப்பீட்டுத் தொகை தரப்பட வேண்டும். கொலையாக இருந்தால் 'கொலைக்கு கொலை' என்ற ரீதியில் இவரும் மக்கள் முன்னிலையில் கொல்லப்பட்டிருப்பார். ஆனால் இது ஒரு வாகன விபத்து என்பதால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு 5.1 மில்லியன் ரியாலை தர வேண்டும் என்று நீதி மன்றம் உத்தரவிட்டது. தொகை மிகப் பெரியது என்பதால் இந்த இளைஞரால் கட்ட முடியவில்லை. எனவே சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த எட்டு வருடங்களாக சிறையில் தனது காலத்தை கழித்து வருகிறார் துலாஹி என்ற இந்த இளைஞர்.

இந்த இளைஞரின் குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது. இவரது குடும்பத்தினர் இவரை சந்திக்க சிறைக்கு வந்து செல்வதற்குரிய பொருளாதார வசதியைக் கூட இவர்கள் பெற்றிருக்கவில்லை. இவரது தாயார் மிகவும் வயதானதால் நோய்வாய்பட்டுள்ளார். 'நான் இறக்கும் முன்பே எனது மகனை பார்த்து விட வேண்டும்: என் மகனின் விடுதலை எப்போது' என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இவரது குடும்பத்தினர் ஒரு தொண்டுள்ளத்தின் மூலம் பணத்தை திரட்டி முயற்சி செய்தனர். ஆனால் எதிர்பார்த்த தொகை சேரவில்லை. தற்போது சிறையில் உள்ள அவருக்காக பலரும் உதவ முன் வந்துள்ளனர். பணம் முழுவதும் வசூலானால் இந்த இளைஞர் விடுவிக்கப்படலாம். இறந்த 17 பங்களாதேசத்து குடும்பத்துக்கும் தலைக்கு 35 லட்சம் வரை தோராயமாக நிவாரணம் கிடைக்கலாம். இறந்த பங்களாதேசத்தவரின் குடும்பங்கள் அந்த இளைஞரை மன்னித்து விட்டு விட்டால் சவுதி இளைஞர் விடுதலை செய்யப்படுவார். பார்ப்போம் இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்படுகிறதா என்று.

தகவல் உதவி
சவுதி கெஜட்
19-05-2014

இறை வசனமான குர்ஆனின் சட்டங்கள் எவருக்கும் பாதிப்பில்லாமல் நடு நிலையாக தீர்ப்பு சொல்ல்க் கூடியது என்பதை இந்த சம்பவத்தின் மூலம் நாம் பார்கிறோம்.

17 உயிர்களை அதுவும் ஒரு விபத்தில் கொன்றதற்காக 8 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் இந்த இளைஞர். மேலும் 5.1 மில்லியன் ரியாலையும் நஷ்ட ஈடாக தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இது சவுதி அரேபியாவின் நிலை. நமது நாட்டிலும் குற்றவியல் சட்டங்கள் எவ்வாறு அமுல்படுத்தப்படுகின்றன என்பதையும் பார்போம்.

குடிகார கூத்தாடி சல்மான் கான் குடி போதையில் காரை ஓட்டி நடை பாதையில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரின் உயிரைக் குடித்து விட்டு இன்று வரை சட்டத்தை ஏமாற்றிக் கொண்டு காலம் கழித்து வருகிறார். அதிகாரத்தில் உள்ளவர்களை அனுசரித்து சென்றால் எவரும் வெளியில் உலவலாம் என்ற நிலை.

மற்றொரு புறத்தில் நமது நாட்டில் ஒரு மாநிலத்தில் ஒரு அரசே 2500 அப்பாவி முஸ்லிம் பொது மக்களை கொன்று குவித்து விட்டு அதற்கு எந்த தண்டனையையும் பெறாமல் அந்த தவறைச் செய்தவர்களை அதை விட மேலான ஒரு பதவியில் நமது மக்கள் அமர்த்தியுள்ளனர். இன்று களிப்புடன் குற்றவாளிகள் எந்த வித வெட்கமும் இன்றி உலாவும் வருகிறார்கள். அவர்களுக்கு இன்று தண்டனை கிடைக்காமல் போகலாம். ஆனால் அகிலத்தின் அதிபதியின் முன்னால் தீர்ப்பு நாளில் தாங்கள் செய்த கொலைகளுக்கான தண்டனையை கண்டிப்பாக பெறுவார்கள். அதுவரை பொறுப்போம்.

டிஸ்கி: இது முன்பு எழுதி பிரசுரிக்கப்படாமல் விடப்பட்ட பதிவு. இந்த செய்தியை இதற்கு முன் படிக்காதவர்களுக்காக பதிகிறேன்.

Tuesday, February 24, 2015

2000 குழந்தைகளின் உயிர் காத்த சிறுவன் ஹஸன்!



ஷோலே ஹிந்தி படத்தில் வரும் அம்ஜத்கான் போல் இருக்கும் இந்த பாகிஸ்தானிய சிறுவனுக்கு வயது 15 தான். பாகிஸ்தானின் ஹாங்கு மாவட்டத்தில் உள்ள இப்றாகிம்ஜாய் நகரில் வசித்து வந்தான். இந்த சிறுவனின் பெயர் அய்த்ஜாக் ஹஸன். ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்கு சென்ற இந்த சிறுவன் பள்ளியின் காம்பவுண்டுக்கு வெளியே நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்கிடமான ஒரு நபர் பள்ளியை நோக்கி வேகமாக வருகிறார். அந்த நபர் கையில் உள்ள ரிமோட் கண்ட்ரோலையும், வயிற்றின் பகுதி சற்று உப்பியிருப்பதையும் நோட்டமிட்ட ஹஸன் இவன் தற்கொலை குண்டுதாரி என்பதை யூகித்துக் கொண்டார். அந்த நேரத்தில் பள்ளியில் 2000க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தன.

அவனை தடுத்து நிறுத்தி பள்ளி குழந்தைகளை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று சக நண்பர்களோடு கூறுகிறான் ஹஸன். ஆனால் அது நமக்கே ஆபத்தாக முடியும் என்று ஹஸனை தடுக்கின்றனர் அவனது நண்பர்கள். எனது உயிரை விட எனது நண்பர்களின் உயிரே முக்கியம் என்று கூறி தற்கொலை குண்டுதாரியை நோக்கி ஹஸன் வேகமாக ஓடுகிறான். இவன் வருவதைப் பார்த்து அவனும் ஓட எத்தனிக்கவே நிலை தடுமாறி பள்ளி வளாகத்தின் காம்பவுண்ட் சமீபமாக அந்த சக்தி வாய்ந்த டைம் பாம் வெடித்து சிதறுகிறது. தற்கொலை குண்டுதாரியும் இளைஞன் ஹஸனும் அதே இடத்தில் தூக்கி எறியப்படுகிறார்கள். இருவருமே அந்த இடத்திலேயே இறந்து விடுகின்றார்கள். ஹஸன் அந்த கொலைகாரனை தடுத்திருக்கா விட்டால் பள்ளி குழந்தைகளில் பல நூறு பேர் இறந்திருப்பார்கள். இந்த இளைஞனின் சமயோஜித வியூகத்தால் பெரும் குண்டு வெடிப்பு தடுக்கப்பட்டது.

'எனது மகன் எனது மனைவியை அவனது தாயை அழ வைத்து விட்டு சென்றது வருத்தமாக இருந்தாலும் ஓராயிரம் குழந்தைகளின் தாய்களின் அழுகுரலை தனது உயிரைக் கொடுத்து தடுத்து நிறுத்தியிருக்கிறான். அதை நினைத்து பெருமைப்படுகிறேன்' என்கிறார் ஹஸனின் தந்தை முஜாஹிர் அலி.

பாகிஸ்தான் அரசு இந்த சிறுவனின் வீர செயலை பாராட்டி பட்டமளித்து கௌரவித்தது. ஹஸன் செய்த இந்த வீர செயலுக்கு பெயர்தான் ஜிஹாத். இந்த செயலுக்கு ஹஸனுக்கு கண்டிப்பாக இறைவனிடத்தில் வெகுமதி உண்டு. இறைவன் இந்த இளைஞனின் உயிர் தியாகத்தை ஏற்றுக் கொண்டு அவனுக்கு சொர்க்கத்தில் நிரந்தர இடத்தை தர நாமும் பிரார்திப்போம். பழைய செய்தியாக இருந்தாலும் ஜிஹாத் என்பது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக இந்த செய்தியை பகிர்கிறேன்.

முகமூடி போட்டுக் கொண்டு கிருத்தவர்களையும், குர்துகளையும், ஷியாக்களையும் தலையை அறுத்து படமாக வெளியிடும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் இந்த சிறுவன் ஹஸனின் தீர செயலை நினைத்துப் பார்க்கட்டும். இஸ்லாம் காட்டும் வழி இதுதான் என்று இனியாவது உணரட்டும். யூதர்களின் கைப்பாவையாக இஸ்ரேலின் ஏவலாளனாக இனியும் இருக்காமல் செய்த பாவங்களுக்குக்காக இறைவனிடம் மன்னிப்புக் கேட்டு தூய இஸ்லாமிய மார்க்கத்தின்பால் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளட்டும்.

தகவல் உதவி
பிபிசி
09-01-2014

http://www.bbc.com/news/world-asia-25663992

Monday, February 23, 2015

என்னை மிகவும் சங்கடப்பட வைத்த ஒரு நிகழ்வு! :-(



என்னை மிகவும் சங்கடப்பட வைத்த ஒரு நிகழ்வு!

ஒரு குடும்பத்திலேயே பல பிரிவுகளை பல பிரச்னைகளை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். மொழி, இனம், கலாசாரம் எல்லாம் முற்றிலும் மாறுபட்ட இந்திய, பாகிஸ்தான், பங்களாதேசத்து நபர்கள் ஒரே அறையில் ஒன்றாக சமைத்து சாப்பிட்டு பல ஆண்டுகள் குடும்பம் போல சகோதர வாஞ்சையோடு வாழ்ந்து வருவதை வளைகுடா நாடுகளில் சர்வ சாதாரணமாக பார்க்கலாம். பிரச்னையில்லாமல் சென்று கொண்டிருந்தாலும் எப்போதாவது சண்டைகள் வருவதும் உண்டு.

எனது கம்பெனி ஆட்களில் அவ்வாறு சண்டைகள், பிரச்னைகள் என்று ஏதாவது ஏற்பட்டால் அலுவலகத்துக்கு எங்களுடைய பாஸ் வரவழைத்து அவர்களை கண்டித்து அனுப்புவது வழக்கம். மொழிப் பிரச்னை வந்து விடக் கூடாது என்பதற்காக இந்த பஞ்சாயத்துகளில் நான் அவசியம் இருப்பேன். :-)

அவ்வாறு சில நாட்களுக்கு முன்பு ஒரு விசித்திரமான வழக்கொன்று சபைக்கு வந்தது. :-) பங்களாதேசத்தைச் சேர்ந்த ஜியாவுதீனுக்கும் நம் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த உஸ்மான் அலிக்கும் அடிதடி தகராறு. இதற்கான பஞ்சாயத்துக்காக அந்த இருவரையும் அலுவலகத்தக்கு அழைத்திருந்தார் எங்கள் பாஸ். நான் உட்பட நால்வரும் பாஸின் அலுவலகத்தில் அமர்ந்தோம். பஞ்சாயத்து தொடங்கியது. வந்தவர்களுக்கு அரபி சரியாக தெரியாததால் என்னைப் பார்த்து பாஸ் கேட்டார்....

'நஜீர்.... என்ன பிரச்னை என்று இவர்களிடம் கேள்'

'என்னப்பா உங்க ரெண்டு பேருக்கும் பிரச்னை?' ஹிந்தியில் அவர்களிடம் கேட்டேன்.

பங்களாதேஷியான ஜியா சொல்ல ஆரம்பித்தான்... 'நஜீர் பாய்! நானும் இன்னும் மூன்று பேரும் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அந்த நேரம் உஸ்மான் அலி அறைக்குள் நுழைந்தான். நுழைந்தவுடன் வேகமாக சப்தத்தோடு காற்றை பிரிய விட்டான். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இது போல் செய்தால் கொசியாக சாப்பிட முடியுமா? எனவே எனக்கு கோபம் அதிகமாகவே எழுந்து அவனை அடித்து விட்டேன்'

இதைக் கேட்டவுடன் எனக்கு சிரிப்பு வந்து விட்டது. சிரிப்பை அடக்கிக் கொண்டு 'இதற்காக அவனை அடிப்பதா?' என்று கேட்டேன்.

'இது முதல் முறை அல்ல. சிரிப்பு காட்டுவதற்காக வேண்டுமென்றே வரவழைத்து செய்தால் மனிதனுக்கு கோபம் வருமா? வராதா?' என்றான் ஜியா.

நான் சிரித்ததை கவனித்த பாஸ் 'ஏன் சிரிக்கிறே.... என்ன நடந்தது. விபரமாக சொல்' என்றார்.

அரபியில் இதற்கு என்ன வார்த்தை என்பதும் தெரியவில்லை. யோசித்து "சாப்பிட்ட உஸ்மானுக்கு கேஸ் பிரச்னை. அதனால் எழுந்தது இந்த சண்டை' என்று ஒருவாறாக சமாளித்து அனைத்தையும் அரபியில் சொல்லி முடித்தேன். இதை பொறுமையாக கேட்ட எனது பாஸ் சப்தமிட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டார். நாங்களும் சேர்ந்து சிரித்து விட்டோம். சிறிது நேரத்திற்கு பிறகு பாஸ் உஸ்மானை பார்த்து பேச ஆரம்பித்தார்...

'உஸ்மான்! நாம் எல்லாம் முஸ்லிம்கள். ஒரு இஸ்லாமியனுக்கு நாணம் மிக மிக அவசியம். வெட்கம் என்பது இறை நம்பிக்கையின் ஒரு பகுதி என்று நமது நபி கூறியது உனக்கு தெரியாதா? சிரிப்பு காட்டுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. சாப்பிடும் போது இவ்வாறு நீ செய்தது தவறு. ஒத்துக் கொள்கிறாயா?'

'ஆம். நான் செய்தது தவறுதான்'

உடன் ஜியாவை நோக்கிய பாஸ்...

'இதோ பார் ஜியா! அவன் என்னதான் தவறு செய்திருந்தாலும் அவனை அடித்தது பெரும் தவறு. நான் எதற்கு இருக்கிறேன். என்னிடம் அந்த விஷயத்தை கொண்டு வராமல் அடித்தது பெரும் தவறு. நீ அடித்ததில் தவறுதலாக எங்கும் பட்டு அவனது உயிர் போனால் அதற்கு யார் பொறுப்பு?'

'தவறுதான் சார். இனி அவ்வாறு நான் செய்ய மாட்டேன்' - ஜியா

'உஸ்மான்! அடித்ததற்காக பணம் ஏதும் வேண்டுமா?' என்று பாஸ் உஸ்மானைப் பார்த்து கேட்டார். ஏனெனில் இவ்வாறு முதலில் யார் அடிக்கிறாரோ அவர் அடி வாங்கியவருக்கு தனது சம்பளத்தின் பாதியைக் கொடுக்க வேண்டும் என்பது கம்பெனி சட்டம்.

'எனக்கு பணம் வேண்டாம்! தவறு என்னிடமும் இருக்கிறது' - உஸ்மான்

'சரி! அப்படி என்றால் இரண்டு பேரும் மன்னிப்பு கேட்டுக் கொண்டு கை கொடுத்துக் கொள்ளுங்கள்' - பாஸ்

பாஸின் கட்டளைக்கு இணங்க இரண்டு பேரும் கை கொடுத்துக் கொண்டு சிரித்தனர்.

'உஸ்மான் இனி உனக்கு ஏதும் வயிற்று பிரச்னை என்றால் கழிவறை பக்கம் சென்று விட வேண்டும். புரிகிறதா?' என்று பாஸ் சொன்னவுடன் எல்லோரும் சிரித்து விட்டோம். அன்றைய வழக்காடு மன்றம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. எல்லோரையும் சிரிக்க வைக்கிறேன் என்று பலரை சங்கடத்துக்கு உள்ளாக்கும் நபர்கள் இந்த பதிவை படித்த பிறகாவது தங்களை சரி செய்து கொள்வார்களாக!

--------------------------------------------

"இறைநம்பிக்கை என்பது அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் அந்த இறை நம்பிக்கையின் ஒரு கிளையாகும்" என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்" என நபித் தோழர் அபூ ஹுரைரா அறிவித்தார்.

- ஆதார நூல்: ஸஹீஹூல் புஹாரி 9.


காரிய கிருக்கன் கராத்தே வீரர் ஹூசைனி!



"அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டி எனக்கு நானே சிலுவையில் அறைந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபடுகிறேன்.”

-கராத்தே வீரர் ஹூசைனி

முதலில் கால்களில் ஆணியை ஹூசைனி அடித்துக் கொண்டார். பின்னர் அவரது மாணவர்கள், ஹூசைனியின் மற்றொரு கையில் ஆணியை அடித்தனர். பின்னர் இரண்டு கால்களிலும் ஆணிகள் அடிக்கப்பட்டது. இதையடுத்து சிலுவை நேராக தூக்கி நிறுத்தப்பட்டது.

முதல்வரிடமிருந்து இதன் மூலம் பிறகு காரியம் சாதித்துக் கொள்ளலாம் என்று எடுத்த நாடகமே இந்த முடிவு. ஷியா முஸ்லிமான ஹூசைனி இப்படி கிறுக்குத் தனமாக ஏதாவது செய்வது நமக்கு ஒன்றும் ஆச்சரியமில்லை. என்றோ இறந்து போன நபிகளின் பேரனின் நினைவாக இன்றும் தங்கள் உடம்பை கீறிக் கொண்டும், ரத்தத்தை வெளியாக்கிக் கொண்டும் இருக்கும் ஷியாக்களின் மூட கொள்கையையே ஹூசைனியும் பிரதிபலிக்கிறார்.

இவர் தனது தவறை திருத்திக் கொண்டு நேர் வழி பெற பிரார்த்திப்போம். இந்த கிறுக்குச் செயலை முதல்வர் ஜெயலலிதா அவர்களும் விரும்ப மாட்டார் என்றே நினைக்கிறேன். இது போன்ற கிருக்கர்களை அந்த இடத்திலேயே காட்டமாக கண்டித்து அறிக்கை விட்டால்தான் மூடப் பழக்கங்கள் சமூகத்தில் குறையும்.



எங்கள் மத பிரச்னையில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள்?



திரு குமரன்!

//கடவுளை அடைய கூடிய மார்க்கம் எல்லார் மதத்திலும் பிரச்சனை உள்ளது அந்த பிரச்சனையை அந்த மதத்தில் உள்ளவர் தான் தீர்க்க வேன்டும் மற்றவர்கள் தலையிட கூடாது//

உங்களோடு முடிந்து விட்டால் இதில் முஸ்லிம்கள் தலையிட ஒன்றுமே இல்லை. ஆனால் முன்பு ராம கோபாலன் நபிகளின் மனைவியைப் பற்றி தரக் குறைவாக பேசினார். அன்றைய கலைஞர் ஆட்சி அதனை கண்டித்தது. ராம கோபாலனிடம் பல பத்திரிக்கையாளர்கள் இது பற்றி கேள்விக் கணைகளை எழுப்பினர். அதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

'கி.வீரமணி ராமனை பற்றியும், மற்ற கடவுள்களைப் பற்றியும் தரக் குறைவாக பேசும் போது இந்த கேள்வியை ஏன் கேட்கவில்லை? எனவேதான் நான் இஸ்லாத்தை விமரிசிக்கிறேன்' என்று சொன்னார். 90 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்து முண்ணனியின் தலைவர் ராம கோபாலனின் பதில்தான் இது.

ராம கோபாலனை எந்த முஸ்லிமும் வம்பிக்கிழுக்கவில்லை. இந்து கடவுள்கள் எவரையும் எந்த இஸ்லாமியரும் இது வரை விமரிசித்தது இல்லை. அதனை இஸ்லாம் எங்களுக்கு போதிக்கவும் இல்லை.

ராம கோபாலன் முறையாக என்ன செய்திருக்க வேண்டும்? கி. வீரமணி அவர்களை சந்தித்து 'உங்களுக்கு என்ன பிரச்னை? சூத்திரன் போன்ற வார்த்தைகள்தான் பிரச்னை என்றால் அதனை நீக்கி விடுகிறோம். சாதி வேற்றுமைகளை களைகிறோம். சாதி பார்காமல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக்குகிறோம். மூடப் பழக்கங்களை ஒழிக்க உங்களோடு நாங்களும் கை கோர்க்கிறோம்' என்று சொல்லியிருப்பாரேயானால் வீரமணி ஏன் விமரிசிக்கப் போகிறார். அதைத்தானே ராம கோபாலன் செய்திருக்க வேண்டும்?

இதோடு விட்டாரா? தலித் மக்களை துணைக்கழைத்துக் கொண்டு தமிழகமெங்கும் விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் பள்ளி வாசலுக்கு முன்னால் நின்று கொண்டு 'பத்து காசு முறுக்கு! பள்ளி வாசலை நொறுக்கு' என்று குத்தாட்டம் போட வைக்கிறார். அவர்களுக்கு சாராயத்தை ஊற்றிக் கொடுத்து அழைத்து வருகிறார். இதற்கு பெயர் பக்தியா? பகல் வேசமா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இதோடு விட்டாரா? முஸ்லிம் பெண்களையாக பார்த்து காதலித்து அவர்களை இந்துக்களாக மாற்றுங்கள் என்று பொது மேடைகளில் பேசுகிறார். இது பல சமூகம் வாழும் நாட்டில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறியாதவரல்ல நீங்கள். எனவே தான் இந்து முண்ணனி, ராம கோபாலன், பிஜேபி, ஆர்எஸ்எஸ், நரேந்திரமோடி, அமீத்ஷா போன்ற தனி நபர்களும் இயக்கங்களும் இந்த சமூகத்தை எங்கு கொண்டு செல்கின்றன என்பதை விளக்க வேண்டியதாக உள்ளது. தேசத் தந்தையை கொன்ற மாபாதகனை தேச பக்தன் என்று கூறி நாடு முழுக்க அவனுக்கு சிலை வைக்கப் போகிறோம் என்று சொல்பவர்களிடம் நாம் எதனை எதிர் பார்க்க முடியும்?

சூத்திரன் சூத்திரனாகவே இழிவை சுமந்து கொண்டு இருக்க வேண்டும். பார்பனனான நான் உயர்ந்த குலமாகவே இருந்து அனைத்து வசதிகளையும் அனுபவித்து வருவேன். இதனை பொருக்காது இஸ்லாத்துக்கு யாராவது மாறினால் இஸ்லாமியர்களை கலவரம் உண்டாக்கி அழித்தொழிப்பேன் என்று பொது மேடைகளில் இந்தியாவெங்கும் கூறி மதக் கலவரத்தை உண்டு பண்ணினால் அதனை இஸ்லாமியர் எந்த எதிர்பும் காட்டாது அமைதி காக்கச் சொல்கிறீர்களா? இன்று வரை இத்தனை கொடுமைகள் நடந்தும் எந்த முஸ்லிமும் எதிர் தாக்குதல் நடத்துவதில்லை. இந்திய சட்டத்தை மதித்து கோர்ட்டு வழக்கு என்றும் அமைதியான போராட்டங்கள் என்றும் தான் சென்று கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் இஸ்லாத்துக்கு எதிராக ஒட்டு மொத்த இந்துக்களும் அணி திரளவில்லை. 3 சதவீதமே உள்ள ஒரு குறிப்பிட்ட சாதியினரும் இந்துத்வாவும்தான் இஸ்லாத்துக்கு எதிராக காய் நகர்த்துகின்றனர். தங்களின் மேட்டிமைத் தனத்தை காத்துக் கொள்வதற்காக இந்து மதத்தை காக்கிறேன் என்ற போர்வையில் வலம் வருகின்றனர். அது காலப் போக்கில் மாறும் என்ற நம்பிக்கையில்தான் இஸ்லாமியரும் அமைதியோடு இந்த மண்ணில் வாழ்ந்து வருகின்றனர். அந்த அமைதி நிலைக்க வேண்டும் என்பதே என் பொன்றோர் அவா. அதனால்தான் தவறுகளை சுட்டிக் காட்டி மற்ற இந்துக்கள் இந்துத்வாவில் வீழ்ந்து விடாமல் எச்சரித்து வருகிறோம்.


Sunday, February 22, 2015

பெஷாவர் தாக்குதலை நடத்திய சூத்திதாரிகள் யார்?

பெஷாவர் தாக்குதலை நடத்திய சூத்திதாரிகள் யார்?



சில மாதங்களுக்கு முன்பு பெஷாவர் பள்ளிக் கூடத்தில் நூற்றுக்கு மேற்பட்ட சிறுமிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நிகழ்வை நாம் மறந்திருக்க மாட்டோம். அதில் பள்ளிக் கூடத்தினுள் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் சிலரின் உடலை பார்த்த பாகிஸ்தானிகள் ஆச்சரியப்பட்டுப் போயினர். ஏனெனில் அந்த தீவிரவாதிகளின் உடலில் பல உருவங்கள் பச்சைக் குத்தப்பட்டிருந்தன. தமிழ் நாட்டில் உள்ள எந்த முஸ்லிமாவது தங்கள் உடலில் பச்சைக் குத்தி பார்த்திருக்கிறீர்களா? இந்துக்களும் கிருத்தவர்களும் தங்கள் பெயர்களையோ தங்கள் காதலியின் பெயர்களையோ தங்கள் கைகளில் பச்சைக் குத்திக் கொள்வதை பார்த்திருப்போம். இஸ்லாத்தில் இவ்வாறு உடலில் பச்சைக் குத்திக் கொள்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் பெஷாவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவனின் உடலில் உருவப் படங்கள் பச்சை குத்தப்பட்டிருந்தன. அந்த நேரத்திலேயே அது வீடியோவாகவும் வந்தது. இது பற்றி எனது கம்பெனியில் வேலை செய்யும் பாகிஸ்தானி சொன்னதாவது 'பலுசிஸ்தான் போன்ற பகுதிகளில் பாகிஸ்தானின் ராணுவமே சில இடங்களில் நுழைய முடியாது. அந்த அளவு சாலை வசதிகளும் இல்லை. இதனை பயன்படுத்திக் கொண்டு ரஷ்யாவிலிருந்து ஆப்கான் வழியாக பாலைவனங்களூடாக பாகிஸ்தான் புகுந்து விடுவர். இவர்களில் பெரும்பாலோர் மொசாத்தால் பயிற்சி கொடுக்கப்பட்டவர்கள். சில நேரம் ஷியா பள்ளிகளில் குண்டு வைப்பார்கள். சில நேரம் சன்னி பள்ளிகளில் குண்டு வைப்பார்கள். மற்ற சில நேரங்களில் இந்திய பார்டர்களில் இங்கிருந்து துப்பாக்கி சூடு நடத்தி இந்தியா பாகிஸ்தானுக்கு முறுகல் நிலையை உண்டாக்குவர். இது இவர்களுக்கு இடப்பட்ட வேலை. பாகிஸ்தானிகள் சிலரும் இதற்கு உடந்தை. இதற்காக அவர்களுக்கு மாதாமாதம் பெரும் தொகை கைமாறாக கொடுக்கப்படுகிறது. ரூட் போட்டுக் கொடுப்பது. உணவு தயாரித்துக் கொடுப்பது போன்ற வேலைகளை இவர்கள் செய்து வருகின்றனர். உள் நாட்டு சிறு குழப்பங்களை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வது இவர்களுக்கு கை வந்த கலை. தங்களின் மீது சந்தேகப் பார்வை பட்டு விடாதபடி மிக கவனமாக காய்களை நகர்த்துவார்கள்' என்று சொன்னார்.

இதனால் என்ன நன்மை என்று நீங்கள் கேட்கலாம்?

முறுகல் நிலை தொடர்ந்து இருந்தால் அமெரிக்க இஸ்ரேலிய ராணுவ தளவாடங்கள் மில்லியன் கணக்கில் விற்பனையாகும். இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டி போட்டுக் கொண்டு ராணுவ தளவாடங்கள் வாங்குவதை தினமும் நாம் பத்திரிக்கையில் படிக்கிறோம். இந்த ஆயுத வியாபாரிகளுக்கு எதிராக ஒபாமாவும் வாயை திறக்க முடியாது. ஏனெனில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு ஒபாமா கட்சியும் எதிர் கட்சியும் தேர்தல் செலவீனங்களுக்காக இந்த ஆயுத வியாபாரிகளையே நாட வேண்டியதாக இருக்கும். எனவே இவர்கள் எதனை சொல்கிறார்களோ அதனையே ஒபாமாவும் மறுப்பேதும் சொல்லாமல் தலையாட்டுவார். எப்படி ஆர்எஸ்எஸ், அதானி, கும்பலுக்கு நமது மத்திய அரசு தலையாட்டுகிறதோ அது போல :-)

அல் ஷபாப், போகோ ஹராம், ஐஎஸ்ஐஎஸ், தாலிபான், இந்தியன் முஜாஹிதீன் என்று நாட்டுக்கு தக்கவாறு இந்த யூதர்களின் முகமூடி மாறிக் கொண்டே இருக்கும். தாலிபான்களை தீவிரவாதிகள் என்று சொல்லாதீர்கள் என்று அமெரிக்கா சமீபத்தில் அவர்களுக்கு சிறந்த சர்டிபிகேட் கொடுத்து கௌரவித்ததையும் நாம் மறந்து விடக் கூடாது. பாகிஸ்தானில் எவ்வாறு மொசாத்துக்கு உதவ ஆட்கள் இருக்கிறார்களோ அதே போல் இங்கும் இந்துத்வாக்கள் அவர்களுக்கு பூரண ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டுள்ளனர். இந்துத்வா ஆட்சிக் கட்டில் ஏறியவுடன் இஸ்ரேலோடு நமது நாட்டின் தொடர்புகள் இன்னும் அதிகமாயுள்ளதை நாம் கவனித்திருப்போம். இனி மறைமுகமாக என்னவெல்லாம் நமது நாட்டில் அரங்கேற்றப் போகிறார்களோ பொருத்திருந்து பார்போம்.

ஐஎஸ்ஐஎஸ் யாருடைய ஆட்கள்? மற்றுமொரு ஆதாரம்!



உலக முஸ்லிம்கள் லட்சக்கணக்கான பேர் இருந்து இறைவனை தொழுதாலும் சேர்ந்து தொழுவார்கள். அடுத்து கஃபா எந்த திசையில்இருக்கிறதோ அந்த திசையை நோக்கித்தான் தொழுவர். நம் முண்டாசுக் கவி பாரதி கூட 'திக்கை வணங்கும் துருக்கர்' என்று பாடினான். பாரதிக்கே தெரிந்த இந்த உண்மை ஐஎஸ்ஐஎஸ்யை தயாரித்த அமெரிக்க சிஐஏக்கும் இஸ்ரேலின் மொஸாத்துக்கும் தெரியவில்லை.

திருடன் எவ்வளவுதான் தடயங்களை அழித்து விட்டு சென்றாலும் ஏதாவது ஒன்றை அவசரத்தில் விட்டு விடுவான் என்று கேள்விப்பட்டுள்ளோம். அதுபோல் சிஐஏக்கும மொசாத்துக்கும் தொழுவது எப்படி என்று தெரிந்த அளவுக்கு ஒரே திசையை நோக்கித்தான் தொழ வேண்டும் என்ற உண்மை தெரியாமல் போய் விட்டது. ஐரோப்பா, அமெரிக்கா, இஸ்ரேல் என்று கூலிக்கு அழைத்து வரப்பட்ட ஆட்களுக்கு சரியான பயிற்சி இல்லாததால் ஆளுக்கொரு பக்கமாக திரும்பி தொழுது கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் உண்மை முஸ்லிம்களாக இருந்தால் அல்லவா இஸ்லாமிய சட்ட திட்டங்கள் சரிவர தெரிந்திருக்கும்? எனவே இது இவர்களின் தவறல்ல. சிஐஏ மொசாத் போன்ற நாசகார உளவு நிறுவனங்களின் தவறு. அவர்களின் அறியாமை இதிலும் வெளிப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் யார் என்பதை உலகுக்கு காட்டிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்கள் கழித்து பல உண்மைகளும் தானாக வெளிவரும். அது வரை பொறுத்திருப்போம்.

தலித்தின் உடலை சுமந்து சென்ற இஸ்லாமியம்!



எண்ணிக்கையில் பெரும்பான்மையினராக காட்டிக் கொள்ள மட்டும் தலித்களை இந்துவாக காட்டுகிறது இந்துத்வம்.

மசூதிகளை இடிக்கவும் சர்ச்களை கொளுத்தவும் இதே தலித்களை பயன்படுத்திக் கொள்கிறது இந்துத்வம்.

கலவரங்களை உண்டு பண்ணி முஸ்லிம்களையும் கிறித்தவர்களையும் கொன்று அவர்களின் சொத்துக்களை கொள்ளயைடிக்க தலித்களை பயனபடுத்திக் கொள்கிறது இந்துத்வம்.

அப்போ நானும் இந்துதானே என்று சாமி கும்பிட கோவிலுக்கு வந்தால் 'உள்ளே வராதே! சாமி குத்தமாயிடும்' என்று அவனை ஒதுக்குகிறது அதே இந்துத்வம்.

தலித்களும் இந்து மதம்தான் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு பார்பனர் இதே தலித் உடலை இந்த முஸ்லிம் சுமந்து செல்வது போல் சுமந்து செல்வாரா?

அந்த பார்பனர் பின்பற்றும் இந்து மத வர்ணாசிரம சட்டங்கள்தான் அதற்கு உதவிடுமா? இந்துத்வாவிற்கு கொடி பிடிக்கும் சில இந்து நண்பர்களிடம் இதற்கு பதில் இருக்கிறதா?

ஆனால் அந்த தலித் இந்து மதமாக இருந்தாலும் அவனும் ஆதமுடைய வழி தோன்றல்தான் என்று குர்ஆன் கூறுகிறது. எனவே தான் இறந்த அந்த தலித் சகோதரனின் உடலை தனது சகோதரனாக பாவித்து தோளில் சுமந்து செல்கிறார் அந்த இஸ்லாமியர். இந்த சகோதரத்துவத்தைத்தான் இஸ்லாமும் விரும்புகிறது.

'மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்'
-குர்ஆன் 4;1

1000 வருடங்களாக பல திட்டங்கள் போட்டும் ஒழிக்காத தீண்டாமையை இந்த ஒரு வசனம் உலக முஸ்லிம்களிடம் தீண்டாமையை ஒழித்துக் கட்டியது. இந்த வசனத்தின் உண்மையை உள் வாங்கிய ஒருவன் மனிதர்களை பேதப்படுத்தி பார்க்க மாட்டான். நான்கு வர்ணங்களாக பிரித்து மனிதர்களிடம் தீண்டாமையை கடைபிடிக்க மாட்டான்.

Saturday, February 21, 2015

இருளில் சேர்த்து விடும் இரு வினைகள் - திருக்குறள்



"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"

- திருக்குறள் 5

பொருள்:

'இருளில் சேர்த்து விடும் இரு வினைகளையும் தவிர்த்து இறைவன் இட்ட கட்டளைப் படி தனது வாழ்வை அமைத்துக் கொள்வோரே புகழோடு வாழ்ந்தவராவார்'

அது என்ன இருளில் சேர்க்கும் இரு வினைகள்? நன்மை தீமையை சொல்கிறாரா வள்ளுவர்? இல்லை. ஏனெனில் இரண்டு வினைகளுமே நம்மை இருளில் சேர்த்து விடும் என்கிறார். நன்மையான காரியங்களை செய்பவரை எப்படி இருளில் கொண்டு சேர்பதாக வள்ளுவர் சொல்வார்? எனவே நன்மை தீமையை இங்கு வள்ளுவர் கூறவில்லை என்பதை அறியலாம். ஆனால் பல விளக்கவுரைகளில் நன்மை தீமை என்றே 'இருளில் நேர்க்கும் இரு வினைகளுக்கு' விளக்கம் அளித்துள்ளனர். கலைஞரும் சாலமன் பாப்பையாவும் கூட நன்மை தீமை என்றே மொழி பெயர்த்துள்ளனர்.

வள்ளுவர் சொன்ன அந்த இரு வினைகள் என்ன என்று பார்போம்.

ஒன்று ஒரு மனிதன் பிறக்கும் போதே அவனோடு சேர்ந்து வரும் இறைவன் விதித்த தீமையை அடிப்படையாக கொண்ட விதி. மற்றொன்று ஒரு மனிதன் பிறந்ததற்கு பிறகு இந்த பூமியில் அவன் இறக்கும் வரை செய்து வரும் தீய வினைகள். அதாவது தீய செயல்கள். இந்த இரண்டு தீய செயல்களையும் எவன் ஒருவன் வென்று விடுகின்றானோ அவனே பாக்கியசாலி என்கிறார் வள்ளுவர்.

இஸ்லாமும் இந்த இரு வினைகளைப் பற்றி பேசுகிறது. மனிதன் இந்த பூமியில் பிறப்பதற்கு முன்பு தாயின் வயிற்றில் ஒரு வானவர் மூலமாக அவனது அனைத்து காரியங்களும் பதியப்படுவதாக நபிகள் நாயகம் அறிவித்துள்ளார். நல்லவனா? தீயவனா? என்பது இங்கு தீர்மானிக்கப்படுகிறது. இது ஒரு வினை. தாயின் வயிற்றிலிருந்து அவன் வெளியேறியவுடன் இந்த உலகில் நன்மை தீமை இரண்டும் இறை வேதங்கள் மூலம் கொடுக்கப்படுகிறது. இந்த இறை வேதங்களை ஆராய்ந்து இறைவன் இட்ட கட்டளைப்படி நன்மை செய்து இறப்பவனுக்கு சொர்கம் தருவதாகவும், இறை கட்டளைகளை மீறுபவனுக்கு நரக வேதனை தருவதாகவும் குர்ஆன் கூறுகிறது. இது இரண்டாவது தீய வினை. இங்கும் இரண்டு தீய வினைகளைப் பார்கிறோம்.

தாயின் வயிற்றில் ஒருவனை கெட்டவனாக இறைவன் எழுதி விட்ட பிறகு அவன் எப்படி நல்லவனாக மாற முடியும்? என்று நீங்கள் கேட்கலாம். முக்காலத்தையும் உணர்ந்தவன்தான் நம்மைப்படைத்த இறைவனாக இருக்க முடியும். படைத்த தனது படைப்பினம் எவ்வாறு வாழ்ந்து மரிக்கும் என்ற புரிதல் இல்லாதவன் எவ்வாறு இறைவனாக முடியும்?

அதே நேரம் கெட்டவனாக இந்த பூமிக்கு அனுப்பப்பட்ட ஒரு மனிதன் ஆய்வு செய்து உண்மையை உணர்ந்து 'இறைவா! எனக்கு நேர் வழியைக் காட்டுவாயாக' என்று பிரார்தித்தால் அந்த பிரார்தனையை ஏற்றுக் கொண்டு எழுதிய விதியை அந்த இறைவனே மாற்றி அமைப்பதாக குர்ஆனிலே சொல்கிறான்.

'பதிவு ஏட்டில் உள்ளவைகளில் இறைவன் நாடியதை அழிப்பான். நாடியதை அழிக்காமல் விடுவான். அவனிடமே தாய் ஏடு உள்ளது'
-குர்ஆன் 13:39

ஆக.... கெட்டவனாக பூமிக்கு அனுப்பப் பட்ட தனது அடியான் தன்னிடம் நேர் வழி காட்ட பிரார்தித்தால் அதனை ஏற்று எழுதிய தாய் ஏடான பதிவு ஏட்டை திருத்தி அவனை நல்லவனாக மரணிக்க செய்கிறான். அதாவது தான் எழுதிய விதியை தானே மாற்றி எழுதுவதாக இங்கு இறைவன் கூறுகிறான். எனவே தான் மற்ற உயிரினங்களுக்கு இல்லாத பகுத்தறியும் ஆன்மாவை விசேஷமாக மனிதனுக்கு மட்டும் இறைவன் கொடுத்துள்ளான். எனவே மனிதனின் முயற்சியில்தான் ஒருவன் நல்லவனா? கெட்டவனா? என்பது தீர்மானிக்கப்படுகிறது என்பதை இதிலிருந்து விளங்குகிறோம்.

இந்து மதத்தின் ஒரு பிரிவான சைவ சமயத்திலும் இந்த இரு வினைகள் சொல்லப்பட்டுள்ளது.மனிதன் பிறக்கும் போது அவனோடு சேர்ந்து வரும் வினையாகிய ஜென்ம பாவம். அதனை சைவத்தில் 'சகச மலம்' என்று கூறுவர். அடுத்து அவன் பூமியில் பிறந்து மரிக்கும் வரை செய்த பாவ காரியங்களை கர்ம பாவம் என்று கூறுவர். இங்கும் அந்த இரண்டு தீய வினைகளும் வருவதைப் பார்கிறோம்.

இது பற்றிய செய்திகளைத் தரும் சங்க கால பாடல்களையும் பார்போம்.

“பற்றி தொடரும் இரு வினை அன்றி வேறு ஒன்றும் இல்லை பராபரமே” – தாயுமான சுவாமிகள்.

"கருவினில் கருவதாய் எடுத்தஏழு தோற்றமும்
இருவினைப் பயத்தினால் பிறந்திறந்து உழன்றிடும்..." - சிவவாக்கியர்

சங்க இலக்கியங்களும், திருக்குறளும், குர்ஆனும் ஒத்த கருத்தைப் பெற்றிருப்பதை கண்டு ஆச்சரியப்படுகிறோம். இது எப்படி சாத்தியமாகிறது? உலக மொழிகள் அனைத்துக்கும் இறைவேதத்தை அனுப்பியுள்ளதாக குர்ஆன் கூறுகிறது.

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்துக்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்'
-குர்ஆன் 14:4


ஆதி மொழியான தமிழுக்கு வேதமும் தூதரும் வந்துள்ளனர். அந்த வேதக் கருத்துக்கள் ஒரு சில இன்றும் உயிர்ப்புடன் இருப்பதால்தான் அவை குர்ஆனோடு ஒத்து போகின்றன. இதன் மேலதிக உண்மைகளை இறைவனே அறிந்தவன்.


கஃபாவில் தற்கொலை செய்து கொண்ட சீனப் பெண் யாத்ரீகர்!



கஃபாவில் தற்கொலை செய்து கொண்ட சீனப் பெண் யாத்ரீகர்!

மெக்கா புனித பள்ளி கஃபாவில் சென்ற திங்கட்கிழமை உம்ரா செய்ய வந்த சீனப் பெண் ஒருவர் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்காலிகமாக கஃபாவை சுற்றுவதற்காக அமைக்கப்பட்ட பாலத்திலிருந்து குதித்து தனது உயிரை போக்கிக் கொண்டுள்ளார்.

கஃபாவின் பாதுகாப்பு துறை அதிகாரி முஹம்மது அல் மாதி உடலை கைப்பற்றி மன்னர் ஃபைஸல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மார்க்க அறிவில்லாத ஒரு சில மூட முல்லாக்கள் 'கஃபாவில் உயிர் பிரிந்தால் நேரடி சொர்கம்' என்று கட்டுக் கதைகளை அறியாத மக்களுக்கு போதித்து வருகின்றனர். இத்தனை நாளும் கம்யூனிஸ பிடியில் இருந்த சீன முஸ்லிம்கள் இஸ்லாமிய அறிவு இன்றியே மூடப் பழக்கங்களால் வளர்க்கப்பட்டுள்ளனர். குடும்ப பிரச்னையினாலும் இதனை செய்திருக்கலாம். இறைவனே உண்மையை அறிந்தவன். தாராள பொருளாதார மயமாக்கல் என்ற கொள்கையில் பன்னாட்டு கம்பெனிகளின் வரவால் சீனா தனது இரும்பு பிடியை தளர்த்திக் கொண்டு மத சுதந்திரத்துக்கு அனுமதி அளித்து வருகிறது. சவுதி அரேபியாவிலிருந்து மார்க்க அறிஞர்கள் பலர் சீனா சென்று உண்மையான இஸ்லாத்தை போதித்தும் வருகின்றனர்.

உலக மக்கள் தொகையை எடுத்துக் கொண்டால் தற்கொலை சதவீதம் இஸ்லாமியரிடத்தில் குறைவாக இருப்பதாக பல்வேறு கணக்கெடுப்புகள் சொல்கின்றன. நமது தமிழகத்தில் கூட இஸ்லாமியர்களிடத்தில் தற்கொலைகள் நடப்பதை மிக அரிதாகவே காணலாம். அதற்கு காரணம் இஸ்லாம் தற்கொலையை கடுமையான குற்றமாக கருதுவதுதான். அடுத்து எந்த ஒரு நஷ்டம் வந்தாலும் அதனை இறைவன் மேல் போட்டு விட்டு 'இறைவன் நாடியதே நடக்கும்' என்று பள்ளி வாசல் சென்று இறை தியானத்தில் ஈடுபட்டு விடுவதால் மனதை லேசாக்கிக் கொள்கின்றனர். கேரளா மாநிலத்தில் நடந்த ஆய்வின் மூலம் கிடைத்த பதிலே நாம் மேலே கண்டது. இஸ்லாமிய கொள்கைகளை தங்கள் வாழ்விலும் கடை பிடிப்பதால் முஸ்லிம்கள் அடைந்த நன்மைகளில் இதுவும் ஒன்று.

நபித் தோழர் அனஸ் அறிவித்தார்: "நபி அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி அவர்கள் 'இறைவனுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன பெரும் பாவங்களாகும்" என்று கூறினார்கள். [நூல்;புஹாரி எண் 2653 ]

உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளதீர்கள் ! -அல் குர்ஆன்(2:195)

உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள் ! இறைவன் உங்கள் மீது மிக கருணை உள்ளவனாக இருக்கிறான்!-அல் குர்ஆன் (4:29)


தகவல் உதவி
சவுதி கெஜட்
17-02-2015

Friday, February 20, 2015

படிக்கத் தொடங்கி விட்ட இஸ்லாமிய சமூகம்!



படிக்கத் தொடங்கி விட்ட இஸ்லாமிய சமூகம்!

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் முஸ்லிம்களை சாம்பிராணி போடுபவர்களாகவும், கறி கடை பாயாகவும், பச்சை தலைப்பாகையோடு முழு ஜிப்பாவோடு தப் அடிக்கும் ஃபக்கீர்களாகவும் காட்டி வந்தனர். பேசும் தமிழ் மொழி கூட 'நம்பள் வரான், நிம்பள் போரான்' என்று மார்வாடி பாஷையை நாமெல்லாம் பேசுவதாக ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் பொய்களையே பரப்பி வந்தது.

இன்று வந்த அழைப்பிதழை பார்த்து அகமகிழ்ந்தேன். வீட்டுக்கு ஒரு பட்டதாரிகள். ரஜினி ரசிகனாகவும், கமல் ரசிகனாகவும் கேடுகெட்ட கூத்தாடிகளுக்கு ரசிகர் மன்றம் அமைத்து வந்த இஸ்லாமிய இளைஞர்கள் இன்று குர்ஆன் மாநாட்டு திடலுக்கு உங்களை அழைக்கிறார்கள். அத்தனை பேரும் பட்டதாரி இளைஞர்கள். கூத்தாடிகளை சுமந்த நெஞ்சங்கள் இன்று குர்ஆனை சுமக்கின்றன.

எல்லா புகழும் இறைவனுக்கே!

சீமானை வம்புக்கிழுக்கும் பிஜேபி ஹெச்.ராஜா

சீமானை வம்புக்கிழுக்கும் பிஜேபி ஹெச்.ராஜா

“ஆதித்தமிழன் அம்மணமாக திரிந்தான்: சீமான் அப்படியிருக்க தயாரா” - ஹெச் ராஜா.

ஆதித் தமிழனை விடுங்கள் அருமை ராஜாவே!

அகோரிகள் இன்றும் அம்மணமாக காசியில்

அலைந்து திரிவதை அறியாதவரா நீங்கள்?

இந்துத்வா பேசிடும் நீங்களும் உங்கள் கூட்டமும்

இதே போன்று அம்மணமாக அலைந்திட தயாரா?

தமிழனின் தொன்மையான வரலாறை தோண்டினால்

'தாம் தூம்' என்று குதிப்பது ஏன் அருமை ராஜாவே!

கைபர் போலன் வழியாக எனது நாட்டுக்குள் புகுந்து

எனது நாட்டு தொப்புள் கொடி உறவை சூத்திரனாக்கி

கோவிலுக்குள்ளும் இன்று வரை அனுமதிக்காத அந்த

கொடுமைகள் வெளி வந்து விடும் என்ற பயமா?

சீமானைப் பற்றி பல முரண்கள் என்னிலும் உண்டு

அதற்காக இந்துத்வா பேசி எனது நாட்டை அழிக்கும்

உம்மைப் போன்றவரெல்லாம் சீமானை வசை பாடுதலை

வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம் என்று

கனவிலும் நினைக்க வேண்டாம்! அருமை ராஜாவே!

எந்நாளும் தமிழர்கள் சிந்தனையை சிதறடித்து விட்ட

ஏமாளிகள் என்று எண்ண வேண்டாம்! அருமை ராஜாவே!

ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமியர்கள் அல்ல சாத்தான்கள் - செசன்ய அதிபர்





ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமியர்கள் அல்ல சாத்தான்கள் - செசன்ய அதிபர்

செசன்ய அதிபர் ரம்ஜான் கதிரோவ் பத்திரிக்கைக்கு பரபரப்பான பேட்டியைக் கொடுத்துள்ளார். ரஷ்ய செய்தி ஸ்தாபனமான டாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அதிபர் ரம்ஜான் கதிரோவ் சொன்னதாக வந்துள்ளதாவது:

'நான் உலக மக்கள் அனைவரிடத்தும் ஒன்று கேட்டுக் கொள்கிறேன். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரை இஸ்லாமியர் என்று சொல்லாதீர்கள். அவர்கள் சாத்தான்கள். அவர்களின் எண்ணம் எல்லாம் எந்த வகையிலாவது பணம் பண்ண வேண்டும் என்பதே. மேற்குலக நாடுகளின் கட்டளைக்கு கீழ்படிந்து இஸ்லாத்தின் பெயரை களங்கப்படுத்துவதே அவர்களுக்கு இடப்பட்ட பணி. தங்கள் பணியை இன்று வரை கச்சிதமாக திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் மறைமுகமாக மேற்குலக நாடுகளால் தாராளமாக தரப்படுகின்றன. ஆயுதங்கள், உடைகள், நவீன சாதனங்கள் எல்லாம் எங்கிருந்து இவர்களுக்கு கிடைக்கின்றன? யாரை திருப்பதிபடுத்த இவர்களின் இந்த வெறியாட்டம்?

கல்லூரிகள், பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள் அனைத்திலும் இந்த கொடியவர்களின் உண்மை முகத்தைப் பற்றிய தெளிவினை விளக்கி பாடம் எடுக்க வேண்டும். இளைஞர்களின் மத்தியில் இந்த சாத்தான்களின் கொடூர குணம் விளம்பரப்படுத்தப்பட வேண்டும்.ஒவ்வொரு வீட்டிலும் இணைய தொடர்பு உள்ளது. இந்த தொடர்பின் மூலம் இந்த கொடியவர்களின் நடவடிக்கை இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டது. இஸ்லாம் இதனை முஸ்லிம்களுக்கு கற்றுத் தரவில்லை என்ற உண்மையை எடுத்துச் செல்ல வேண்டும். இது நம் அனைவரின் மீதும் சுமத்தப்பட்ட கடமையாக நினைத்து செயலில் இறங்க வேண்டும்' என்று காட்டமாக அறிக்கை விட்டுள்ளார்.

தரகவல் உதவி:
மொராக்கன் டைம்ஸ்
22-10-2014

பெண்களை வேலையில் அமர்த்திய கம்யூனிஷ பார்வை - 3



//கம்யூனிசம் சாதிக்காததை இஸ்லாம் சாதித்திருப்பதாக கூறுகிறார். என்ன சாதித்திருக்கிறது என்பதை கூற முன்வந்தால், எது சாதனை? எது வேதனை? என அதை விரிவாக அலசலாம்.// - செங்கொடி

இஸ்லாம் சொல்கிறது எக்காலத்திலும் ஆணும் பெண்ணும் சமமாக முடியாது என்று. ஆனால் கம்யூனிஸமோ ஆணையும் பெண்ணையும் பிரித்து பார்பதில்லை. கணவனும் மனைவியும் கட்டாயமாக வேலை செய்து உற்பத்தியை பெருக்க வேண்டும் என்பது கம்யூனிஸ பார்வை. இது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம். லெனினும், ஸ்டாலினும் சொன்னதை நம்பி வேலைக்கு சென்ற பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றி போலீஸ் கமிஷனர் முன் நமது சென்னையில் சொன்னதை இனி பார்போம்.

கமிஷனர் ராஜேந்திரன் முன்னிலையில் வேலைக்குச் செல்லும் பெண்கள் கொட்டிய உள்ளக் குமுறல்கள் வருமாறு:-

வேலைக்குப் போகும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மூன்று விதமாகச் சொல்லலாம். வீட்டில் சந்திக்கும் பிரச்சினை, அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் ரோட்டில் நடந்து செல்லும் போது, பஸ் ஏற காத்திருக்கும் போது, பஸ்களில், ரெயில்களில் பயணம் செய்யும் போது ஏற்படும் உடல், உள்ள ரீதியான மற்றும் பாலியல் ரீதியான தொல்லைகள், அலுவலகத்தில் தனக்கு மேலும், கீழும் வேலை பார்க்கும் ஆண் அதிகாரிகள் கொடுக்கும் `செக்ஸ்' தொல்லைகள் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

வேலைக்கு பெண்கள் புறப்படும் போது நன்றாக ஆடை அணிந்து, அலங்காரம் செய்து சென்றால் சில கணவர்கள் பொறாமையோடு பார்க்கிறார்கள். இன்னும் சில கணவர்கள் சந்தேகப் பார்வை பார்க்கிறார்கள். இதனால் கணவர்களோடு வீட்டில் கடும் பிரச்சினைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. பையைத் தோளில் தொங்கப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு வெளியே வந்துவிட்டால் பலரும் ஒவ்வொரு விதமாகப் பார்க்கிறார்கள். ரோட்டில் தனியாக நடந்து செல்லும் போது எதிரில் வருபவர் சேட்டை பார்வை வீசுவார். பஸ் ஏற பஸ் நிலையத்தில் காத்திருக்கும் போது, வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை கிண்டல் பாட்டு பாடுகிறார்கள். பஸ்சில் ஏறிவிட்டால் போதும் இடிமன்னர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. பஸ் டிரைவர் `பிரேக்' போட மாட்டாரா என்று பல காமுகர்கள் ஏக்கத்தோடு நிற்கிறார்கள்.

`பிரேக்' அடித்தால் போதும் அந்தச் சாக்கில் பெண்கள் மீது சாய்ந்து அற்ப சுகம் காண்கிறார்கள்.

வெட்கத்தை விட்டுச் சொல்கிறோம், அவ்வாறு சாய்கிறவர்கள் முதலில் மார்பை குறி வைத்துத் தான் பிடிக்கிறார்கள். நாங்கள் அவர்களோடு சண்டை போடுவதா, எச்சரிக்கை செய்வதா, கன்னத்தில் அறைவதா என்பது புரியாமல் சில நேரங்களில் இடி மன்னர்களின் தாக்குதலைத் தாங்கிக் கொண்டு மவுனமாக அழுதுவிட்டுத் தான் வருகிறோம்.

மிரட்டல்

ஒரு வேளை எதிர்த்துச் சண்டை போட்டால், சிலர் பிளேடால் கீறி விட்டு ஓடிவிடுகிறார்கள். இன்னும் சிலர் கேவலமாகத் திட்டுகிறார்கள். இதையெல்லாம் சந்திக்க முடியாமல் நாங்கள் தவிக்கிறோம்.

அலுவலகத்துக்குச் சென்று விட்டால் உயர் அதிகாரிகளும், கீழ் அதிகாரிகளும் செய்யும் பாலியல் தொல்லைகள் சொல்லிமாளாது. இப்போது காணாத குறைக்கு செல்போனில் வேறு `ஓடிப் போகலாம் வர்றீயா' என்று கூப்பிடுகிறார்கள். செல்போன்களில் ஆபாசப் படங்களையும் அனுப்புகிறார்கள். எம்.ஜி.ஆர். ஒரு சினிமா படத்தில் `இப்படித் தான் இருக்க வேண்டும் பொம்பளை' என்ற பாடலை பாடினார். அந்தக் காலம் எல்லாம் இப்போது மலை ஏறிவிட்டது.

பெண்களாகிய நாங்கள் எங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஏதாவது செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். போலீசார் எங்களுக்கு உற்ற துணையாக இருந்து பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

இருட்டான இடங்களில்...

பெண்கள் சில நேரங்களில் வேலைக்குப் போய்விட்டு இரவு வெகு நேரம் கழித்து வீடு திரும்ப வேண்டிய நிலை உள்ளது. அப்போது அவர்கள் ரோடுகளில் தனியாக நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு பெண்கள் தனியாக நடந்து செல்லும் இருட்டான பகுதிகளில் போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு சொல்லியபடி, பெண்களின் சுய பாதுகாப்புக்காக `விசாகா' கமிட்டிகளை அனைத்து பகுதிகளிலும் பலமாக நிறுவுவதற்கு போலீசார் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.

போலீஸ் நிலையத்துக்குப் புகார் கொடுக்க சென்றால் புகார்களை வாங்காமல் இழுத்தடிப்பார்கள், உடனடியாக எப்.ஐ.ஆர். போட மாட்டார்கள் என்ற தவறான எண்ணம் பெண்கள் மத்தியில் உள்ளது. அதைப் போக்கும் வகையில் பெண்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்யவேண்டும்.

பஸ்களில்

தற்போது பெண்கள் செல்லுவதற்கு தனி ரெயில் விடப்பட்டுள்ளது. அது போல, பெண்கள் பயணம் செய்வதற்காக அதிகளவில் மகளிர் பஸ்களை விட வேண்டும். பொதுவான பஸ்களில் பெண்களை முன்பக்கத்தில் ஏறுவதற்கும், ஆண்களை பின்பக்கத்தில் ஏறுவதற்கும் விசேஷ ஏற்பாடு செய்ய வேண்டும். அதோடு பொதுவான பஸ்களில் பெண் கண்டக்டர், ஆண் கண்டக்டர் என்று இரண்டு கண்டக்டர்களை நியமிக்க வேண்டும். தைரியமாக புகார் கொடுக்க வருவதற்கு பெண்கள் மத்தியில் இது போன்ற கூட்டங்களை நடத்தி போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்.

அலுவலகங்களில், பெண்களுக்கு `செக்ஸ்' தொல்லை கொடுப்பவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பதையும், பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் தைரியமாக புகார் கொடுக்க முன் வர வேண்டும் என்ற வாசகத்தையும் எழுதி போட வேண்டும்.

நாங்கள் பஸ்சில் பயணம் செய்யும் போது பல்வேறு தந்திரங்களைக் கையாண்டு தான் இடிமன்னர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றிக் கொள்கிறோம். சில நேரங்களில் முக்கியமான போலீஸ் அதிகாரிகளின் பெயரைச் சொல்லி, அவர்கள் எங்கள் உறவினர்கள் என்று சொல்லி இடிமன்னர்களை மறைமுகமாகப் பயமுறுத்துகிறோம்.

பெங்களூரில் ஆட்டோ டிரைவர்கள் தங்களது பேட்ஜ், உடை போன்றவற்றை அணிந்துகொண்டு நாகரிகமாக நடந்து கொள்கிறார்கள். ஆட்டோவிப் போட்டு இருக்கிறார்கள். சென்னை நகரிலும் ஆட்டோ டிரைவர்களை இது போல் நடப்பதற்கு போலீசார் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு பெண்கள் தங்களது உள்ளக் குமுறல்களை கொட்டி பேசினார்கள்.

தினத் தந்தி
-31 டிசம்பர் 2009

இந்த பெண்களின் உள்ளக் குமுறலுக்கு கம்யூனிஸ்டுகள் என்ன பதிலை வைத்துள்ளனர். இனி வேலைக்கு செல்லும் அனைத்துலக பெண்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க கம்யூனிஸ்ட் காமரேட்டுகள் தயாரா? செங்கொடி இதற்கு ஏற்பாடு செய்வாரா? இங்கும் கம்யூனிஸத்தின் ஆண் பெண் சமம் என்ற கோட்பாடு தோல்வியை தழுவியுள்ளதைப் பார்கிறோம்.

-----------------------------------------------

இனி 1400 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு ஆதாரபூர்வமான நிகழ்ச்சியை நினைவு கூறுவோம்.

நபிகள் நாயகம் வாழ்ந்த காலத்தில் பெண்குழந்தை பிறந்தால் வறுமைக்கு அஞ்சி அதனை உயிரோடு புதைத்து விடுவார்கள். தமிழ் நாட்டில் இன்றும் அந்த கொடுமை உசிலம்பட்டி போன்ற கிராமங்களில் நடந்து வருகிறது. இது போன்ற சூழ்நிலையில்தான் குர்ஆன் 'பெண் குழந்தைகளை கொன்றால் அதற்காக மறுமையில் தண்டிக்கப்படுவீர்கள்' என்ற இறை வசனம் இறங்குகிறது. அன்று முதல் மக்கா மதினாவில் பெண் குழந்தைகளை உயிரோடு புதைக்கும் பழக்கம் அந்த மக்களால் கைவிடப்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஒரு நீண்ட நபி மொழி ஒன்றை பார்போம்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபியவர்களிடம் 'இறைவனின் தூதரே! நான் புது மாப்பிள்ளை' என்று சொல்லி ஊருக்கு விரைவாக செல்ல அனுமதி கேட்டேன். அவர்கள் எனக்கு அனுமதி அளித்தார்கள். 'நீ கன்னிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா? அல்லது வாழ்ந்து அனுபவமுள்ள பெண்ணை மணந்து கொண்டாயா?' என்று கேட்டார்கள். அதற்கு நான் 'வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணைத்தான் மண முடித்துக் கொண்டேன்' என்று பதில் கூறினேன். அதற்கு நபியவர்கள் ' கன்னிப் பெண்ணை மணமுடித்திருக்கக் கூடாதா? நீ அவளுடனும் அவள் உன்னுடனும் விளையாடலாமே' என்று கூறினார்கள்.

நான் 'இறைவனின் தூதரே! எனக்கு சிறு வயது சகோதரிகள் பலர் இருக்கும் நிலையில் என் தந்தை இறந்து விட்டார். எனவே எனது சகோதரிகளுக்கு ஒழுக்கம் கற்பிக்கவோ அவர்களைப் பராமரிக்கவோ இயலாத சிறு வயதுப் பெண்ணை நான் மணந்து கொள்ள விரும்பவில்லை. எனவே தான் அனுபவமுள்ள ஒரு விதவைப் பெண்ணை மணந்து கொண்டேன்' என்று பதிலளித்தேன்.

ஆதார நூல்: புகாரி 2967

பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்த சமூகத்தில் குர்ஆன் இறங்கியதற்கு பிறகு அந்த இளைஞனின் மனதில் ஏற்பட்ட மாற்றத்தை பாருங்கள். தனது சுகத்தை விட தனது சகோதரிகளின் சுகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வயது அதிகம் உள்ள ஒரு பெண்ணை மணந்ததை பார்கிறோம். இந்த தாயுள்ளம் அந்த இளைஞனுக்கு வரக் காரணமாயிருந்தது நபிகள் நாயகத்தின் போதனைகளும் குர்ஆனின் வசனங்களும் தான். இவர் மட்டுமல்ல ஒட்டு மொத்த சமூகமும் பெண்களுக்கு கண்ணியத்தை கொடுக்க ஆரம்பித்தது. அந்த பெண்களுக்கு கல்வியையும் கொடுத்தது இஸ்லாம். அவர்களின் உடல் நிலைக்கு தக்க வேலையை தேர்ந்தெடுத்து கொள்வதையும் இஸ்லாம் தடுக்கவில்லை. இஸ்லாம் விதிக்கும் ஒரே நிபந்தனை ஆணும் பெண்ணும் கலந்து கல்விச்சாலைக்கோ வேலைக்கோ போகக் கூடாது என்பதுதான். பெண்களின் பாதுகாப்பைக் கருதியே இத்தகைய சட்டத்தை இஸ்லாம் வகுத்தது.

ஆனால் கம்யூனிஸமோ ஆணும் பெண்ணும் கலந்து படிப்பதையும், வேலைக்குச் செல்வதையும் ஊக்குவித்தது. பெண்ணுக்கு விருப்பமில்லா விட்டாலும் பொருளாதார ஆசையை காட்டி அவர்களை கட்டாயப்படுத்தியது. அவ்வாறு கட்டாயப்படுத்தி வேலைக்கு அனுப்பிய பெண்கள் படும் துயரங்களைத்தான் நாம் மேலே தினத் தந்தியின் செய்தியில் பார்தோம். கட்டுப்பாடான இந்தியாவிலேயே பெண்களுக்கு இத்தகைய கொடுமை என்றால் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் படும் தொல்லைகளை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

எனவே கம்யுனிஸம் முற்போக்கு பொருள் முதல் வாதம் என்று கூறி பெண்களை படுகுழியில் தள்ளியது. இஸ்லாமோ இறை நம்பிக்கையை ஊட்டி பெண்களுக்கு பாதுகாப்பையும் கல்வியையும் உறுதி செய்து அவர்களின் உடலுக்கு ஏற்ற தகுந்த வேலைகளை கொடுத்து கண்ணியப்படுத்தி வருகிறது.

'சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மைபடுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்.ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு'-குர்ஆன் 4:32

விவாகரத்து இஸ்லாத்தில் மிக எளிதாக்கப்பட்டுள்ளது. பிடிக்கவில்லை என்றால் 'தலாக்' என்று சொல்லி மூன்று மாத இடைவெளி விட்டு மூன்று முறை கூறி கண்ணியமாக பிரிந்து விடுங்கள் என்கிறது இஸ்லாம். ஆனால் இந்து மதத்திலும், கிருத்தவ மதத்திலும் கம்யுனிஸத்திலும், விவாகரத்து கடினமாக்கப்பட்டுள்ளது. அவ்வளவு சுலபத்தில் விவாகரத்து கிடைத்து விடாது. ஆனால் இந்தியா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் எடுத்துக் கொண்டால் விவாகரத்து குறைவாக நடப்பது இஸ்லாமியரிடத்தில்தான். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் மிக அதிக அளவில் விவாகரத்து நடப்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. நமது இந்தியாவிலும் படித்த குடும்பங்களில் மிக அதிக அளவு விவாகரத்துகள் நடப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. பணம்... பணம் என்று ஆணும் பெண்ணும் அலைந்ததால் நிம்மதி போய் மனச் சிதைவுக்கு ஆளாகி முடிவில் விவாகரத்தை நாடுகின்றனர். கம்யூனிஸ சித்தாந்தத்தால் சமூகம் அடைந்த கேடுகளில் இதுவும் ஒன்று.

இந்த இடத்திலும் இஸ்லாம் நிமிர்ந்து நிற்கிறது. கம்யூனிஸம் தனது செல்வாக்கை இழந்து நிற்கிறது.

ப.சிதம்பரம் ஒருமுறை சொன்னார், "இருபத்தைந்து வயதுக்குள் ஒருவன் கம்யூனிஸம் பேசவில்லை என்றால் அவனுக்கு இதயமே இல்லை என்று அர்த்தம்; இருபத்தைந்து வயதுக்குப் பிறகும் கம்யூனிஸம் பேசினான் என்றால் அவனுக்கு மூளையே இல்லை என்று அர்த்தம்" என்று. எங்கோ படித்தது...... :-) பொருளாதார புலி ப.சிதம்பரம் சரியாகத்தான் சொல்லியுள்ளாரா என்று செங்கொடிதான் சொல்ல வேண்டும்.

இறைவன் நாடினால் இனியும் எழுதுவேன். நான் எழுதிய மூன்று பதிவுகளுக்கு உரிய பதிலை செங்கொடி கொடுத்து விட்டால் மேற்கொண்டு தொடரலாம்.

Thursday, February 19, 2015

இந்திய கிரிக்கெட் வீரர்கள் புனித மக்காவில்!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் புனித மக்காவில்!



இந்திய அதிரடி கிரிக்கெட் ஆட்டக்காரர்களான சகோதரர்கள் இர்ஃபான் பதான் மற்றும் யூசுஃப் பதான் ஆகிய இருவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் சகிதம் உம்ரா செய்ய 12-02-2015 அன்று மக்கா வந்திருந்தனர். இவர்களின் உம்ரா பயணத்தை இறைவன் ஏற்றுக் கொண்டு இவர்களின் பாவங்களை மன்னிப்பானாக!

ஓர் உம்ராச் செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும்... (நூல்கள்: புகாரி 1773. முஸ்லிம் 2624. திர்மிதீ 855. நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா. முஅத்தா ஆகிய நூல்களிலும் இடம்பெற்றள்ளது)

''ரமளானில் செய்யப்படும் ஓர் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகரானதாகும், அல்லது என்னோடு ஹஜ் செய்வதற்கு நிகரானதாகும்'' என்று நபி அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: புகாரி 1782, 1863. முஸ்லிம் 2408, 2409)

நபி அவர்கள் செய்த உம்ராக்கள்.

"நபி அவர்கள் நான்கு உம்ராக்கள் செய்துள்ளார்கள்!" என்ற அறிவிப்பு புகாரி 1778, 1780, 4148. முஸ்லிம் 2404, 2406, ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளன.

உம்ராவின் சிறப்பைக் குறித்து நபிகள் நாயகம் வலியுறுத்தியிருப்பதாலும், நபி அவர்கள் உம்ராச் செய்திருப்பதாலும் உம்ராச் செய்வது சிறப்பு மற்றும் நபிவழி. ஆனால், உம்ரா கட்டாயக் கடமை என்று நிறுவ மார்க்கத்தில் ஆதாரம் இல்லை! வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்வார்களாக!

காலத்துக்கு தக்கவாறு கொள்கையை மாற்றும் கம்யூனிஸ்டுகள்! - 2

காலத்துக்கு தக்கவாறு கொள்கையை மாற்றும் கம்யூனிஸ்டுகள்! - 2





மேற்கு வங்க மாநிலத்தின் முன்னால் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியாவை நாம் அறிந்திருப்போம். தனது மாநிலத்தில் தொழில் துறை மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் நேரடி அன்னிய முதலீட்டை கவர்ந்திழுக்கும் நோக்கில் மலேஷியா, இந்தோனேஷியா சென்றார். வெளியுலக பயணத்தைப் பார்த்தவுடன் தான் கம்யூனிஸ்டுகள்" குண்டி சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டு இருப்பது" முதல்வருக்கு விளங்கியது. இந்தோனேஷிய பத்திரிக்கையான 'ஜகார்தா போஸ்ட்' என்ற இதழுக்கு அவர் அளித்த பேட்டியைப் பார்போம்.

'பழைய கொள்கைகளையே பேசி பெருமை பாராட்டிக் கொண்டிருக்கும் வழமையை கம்யூனிஸ்டுகள் கை விட வேண்டும். கொள்கையில் சீர் திருத்தம் கொண்டு வர வேண்டும். மாறி வரும் சூழலுக்கு ஏற்ப புதிய கொள்கைகளை வகுக்க வேண்டும். இல்லாவிட்டால் கம்யூனிஸ்டுகள் அழிந்து போவார்கள்.

மாற்றத்தை விரும்பிதான் எனது மாநிலத்துக்கு அன்னிய முதலீட்டை வெகுவாக அனுமதித்துள்ளேன். சீனாவைப் பாருங்கள். பழைய கம்யுனிஸ கொள்கைகளை பிடித்து தொங்கிக் கொண்டு இருந்திருந்தால் இத்தகைய புரட்சிகரமான மாற்றத்தை அவர்களால் கொண்டு வந்திருக்க முடியாது. எனவே கம்யூனிஸ்டுகள் தங்கள் கொள்கைகளில் மாற்றங்களை புகுத்த வேண்டியது அவசியத்திலும் அவசியம்'

ஆதாரம்:
தினமணி
28-08-2005

மேலே உள்ள கருத்துகள் கருத்து முதல்வாதத்தை வைக்கும் சுவனப்பிரியனின் கருத்தல்ல. பொருள் முதல் வாதத்தை அடிப்படையாக கொண்ட பொதுவுடமைக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான புத்ததேவ் பட்டாச்சாரியாவின் கருத்துக்களே இவை. ஜோதிபாசுவின் ஓய்வுக்குப் பிறகு அவரது இடத்தை நிரப்ப இந்தியாவில் சரியான காம்ரேடு இவர்தான் என்று செங்கொடியின் தலைவர்களால் இனம் காட்டப்பட்டவர். இவரது கருத்துக்கு ஜோதிபாசுவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

"புதிய உலகின் சிற்பி நாங்களே! இனி உலகை ஆளப் போவது கம்யூனிஸமே" என்று இறுமாப்புடன் பதிவுகள் எழுதி வரும் செங்கொடிகள் சற்று இந்த தலைவர்களின் ஆலோசனைகளை கேட்பது நல்லது. வறட்டுப் பிடிவாதத்தினால்தான் சீனாவில் செங்கொடியை இழந்தீர்கள். ரஷ்யாவிலும் செங்கொடியை இழந்தீர்கள். அதன் தொடர்சியாக ரஷ்யா பல நாடுகளாக பிளவுண்டது. இன்று அந்த நாடுகளில் லெனினின் பெயரையும், ஸ்டாலினின் பெயரையும் உச்சரிக்கக் கூட ஆட்களில்லை. முன்பு உச்சரித்த வாய்களெல்லாம் இன்று நபிகள் நாயகத்தை உச்சரித்து முன்பு செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடிக் கொண்டிருக்கின்றன. ஆப்பானிஸ்தான் முஜாஹித்களிடம் வாங்கிய அடியில் கோமாவில் தள்ளப்பட்டீர்கள். கடைசியில் இந்தியாவில் பொய்யான வாக்குறுதிகளை ஏழைகளிடம் கொடுத்துக் கொண்டு காலத்தை கடத்திக் கொண்டுள்ளீர்கள். "ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் ஆண்டி" என்பது போல் எங்கெங்கோ சுற்றி விட்டு தனது இறுதி மூச்சை இந்தியாவில் இழுத்துக் கொண்டிருக்கிறது கம்யூனிஸம். கோமாவுக்கு சென்றவர்கள் திரும்ப வருவது அரிது என்பதால் செங்கொடியின் முயற்சிகள் விழலுக்கு இரைத்த நீரே! :-)

பொருள் இருப்பவனையும் பொருள் இல்லாதவனையும் பரம்பரை விரோதிகளாக மாற்றி தொழிற் கூடங்களை இழுத்து பூட்ட வைத்து இரண்டு பேரையும் நடுத் தெருவில் விட்டதுதான் நீங்கள் இந்த சமூகத்துக்கு செய்த தொண்டு. இதனை மறுக்க முடியுமா உங்களால்? இந்த உலகம் இயங்க பணக்காரனும் ஏழையும் இருந்தே ஆக வேண்டும். இந்த சாதாரண யதார்த்தத்தைக் கூட சரிவர புரிந்து கொள்ளாத உங்களால் சமூகத்துக்கு விடிவை எப்படி கொடுக்க முடியும்?

கருத்து முதல்வாதத்தை வைத்த இஸ்லாம் கம்யூனிஸ்டுகளுக்கே பாடம் எடுக்கும் நிலையில் இன்று உள்ளது. உழைக்கும் ஏழைக்கு உரிய பங்கை அளித்து வருகிறது. பொருள் உள்ளவனும் பொருள் இல்லாதவனும் எந்த நட்டத்தையும் அடையாமல் சிறந்த வழிமுறையை இஸ்லாம் கட்டாய கடமையாக முஸ்லிம்களுக்கு கட்டளையிடுகிறது. பயிரிடும் நிலம், வசிக்கும் வீடு, அணிந்திருக்கும் நகை, இருப்பில் உள்ள பணம், என்று அனைத்தையும் கணக்கிட்டு அதனை தொழிலாளிக்கு மற்றும் இல்லாதவர்களுக்கு உலக முஸ்லிம்கள் கணக்கிட்டு கொடுத்து வருகின்றனர். சத்தமில்லாத ஆர்பாட்டமில்லாத ஒரு புரட்சி உலகமெங்கும் நடந்து வருகிறது. எனது ஓனரான சவுதியும் அவரது சகோதரரும் வருடா வருடம் கணக்கிட்டு லட்சக் கணக்கான ரியால்களை ஏழைகளுக்கு கொடுத்து வருவதை நான் நேரிடையாக பார்த்துள்ளேன். தற்போது தமிழகத்திலும் இந்த செயலானது தொடங்கப்பட்டு பல ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளது நபிகள் நாயகம் கொண்டு வந்த வழிமுறை. ஏனெனில் இந்த இஸ்லாமிய சட்டங்களானது படைத்த இறைவன் கொடுத்த சட்டங்கள் என்று நம்பியதாலேயே அந்த சவுதிகள் லட்சக்கணக்கான ரியால்களை தானமாக தர முன் வருகின்றனர். மறு உலக வாழ்வில் இதனால் தங்களுக்கு நன்மை கிடைக்கும் என்ற எண்ணம் மேலோங்கியதாலேயே இது சாத்தியப்பட்டது.

அதே நேரம் பொருள் முதல் வாதத்தை முன்வைத்த நாத்திக சித்தாந்தமான கம்யுனிஸம் மனிதனால் உருவாக்கப்பட்டடதால் பல திருத்தங்களை காலத்துக்கு தக்கவாறு மாற்ற வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு மாற்றங்களை கொண்டு வந்தும் உழைப்பாளியின் ஏக்கத்தை உங்கள் கொள்கையால் ஈடு செய்ய முடியவில்லை. இஸ்லாத்துக்கும் கம்யூனிஸத்துக்கும் உள்ள வேறுபாடே இதுதான்.

எனது கேரள நண்பன் ஜார்ஜ் மாத்யூ சில வருடங்கள் முன்பு என்னிடம் தமிழகத்தில் தொழில் தொடங்க எந்த மாவட்டம் சிறந்தது என்று கேட்டான்.

'நீ மலையாளிதானே! ஏன் கேரளாவில் தொழில் தொடங்கக் கூடாது?' என்று நான் கேட்டேன்.

'அங்கே சாதாரண மனிதர்கள் தொழில் தொடங்க முடியாது. நிறைய பணம் வேண்டும். தொழில் தொடங்கி லாபமாக நடந்தால் உடன் கம்யூனிஸ்டுகள் லாபத்தில் பங்கு கேட்டு கொடி பிடிப்பர். கம்யுனிஸ்ட் தலைவர்களுக்கு லஞ்சமாக லட்சக் கணக்கில் பணம் செலுத்த வேண்டும். தவறினால் ஸ்ட்ரைக். எங்கெல்லாம் கம்யூனிஸ்டுகள் அதிகமாக உள்ளனரோ அங்கு தொழில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பே இல்லை. எனவே தான் தமிழகத்தில் முதலீடு செய்யலாம் என்று நினைக்கிறேன்'

என்ன ஒரு சத்தியமான வார்த்தை. ஆச்சரியத்தோடு அவனை பார்த்துக் கொண்டிருந்தேன். ஐந்து நாள் மாநாடு போட்டு விளக்கினாலும் இந்த அளவு தெளிவாக கம்யுனிஸத்தை விளக்கியிருக்க முடியாது. கம்யூனிஸம் வளர்வதால் அந்த சமூகம் எவ்வாறு மாறிப் போகும் என்பதற்கு ஜார்ஜ் மேத்யூ சொன்ன இந்த வரிகளே சிறந்த உதாரணம்.

இன்றைக்கு இது போதும் என்று நினைக்கிறேன். இனிவரும் நாட்களிலும் செங்கொடியின் உளரல்களை அடித்து, துவைத்து காயப் போடும் பணி அவ்வப்போது தொடரும். :-)