Followers

Tuesday, December 28, 2021

உபி - அமேதி

 உபி - அமேதி


தலித் சிறுமியின் கால்களில் அடித்து அதனை ரசிக்கும் மேட்டுக் குடி.. ஒரு பெண் படம் பிடிக்கிறார். ஒரு பெண் அடி வாங்கும் பெண்ணிடம் கேள்வி கேட்கிறார்.


ஏதேனும் தவறே செய்திருந்தாலும் காவல் துறை வசம் அல்லவா ஒப்படைக்க வேண்டும்?


இந்தியா இந்து ராஷ்ட்ரமாக மாறினால் எப்படி இருக்கும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு




11 comments:

Assignment Help in Australia said...

Online Assignment Writing Service from Anywhere in Australia
Hire our online assignment writers are accessible to students from anywhere in Australia
https://www.shopproessay.com

Dr.Anburaj said...

இவனும் ஒரு இந்துதான். அரேபிய அடிமையே தெரிந்து கொள்.
கடற்கரையில் வேர்கடலை வியாபாரியிடம் பெற்ற ரூ. 25 கடனை 12 ஆண்டுகளுக்கு பிறகு நினைவில் வைத்து திருப்பி கொடுத்த வாலிபர்.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள காக்கி நாடாவை சேர்ந்தவர் மோகன். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு தனது மகன் பிரவீனை கடற்கரைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு வியாபாரி ஒருவர் சைக்கிளில் வேர்க்கடலை விற்று கொண்டிருந்தார். மோகன் தனது மகனுக்கு 25 ரூபாய்க்கு வேர்க்கடலை வாங்கி கொடுத்துள்ளார்.
ஆனால் அப்போது அவரிடம் கொடுக்க பணமில்லை. இந்நிலையில் அந்த வியாபாரி மறுநாள் கொடுக்கும்படி கூறி வேர்க்கடலையை கொடுத்துள்ளார்.
மறுநாள் மோகன், பிரவீன் இருவரும் கடற்கரைக்கு சென்றபோது வேர்க்கடலை விற்றவர வரவில்லை. அதன்பின் மோகன், தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுவிட்டார்.
இதற்கிடையே விடுமுறையில் காக்கிநாடாவுக்கு வந்து பிரவீன், வேர்க்கடலை வியாபாரியிடம் வாங்கிய ரூ.25 கடனை திருப்பி கொடுக்க விரும்பினர். இதற்காக காக்கிநாடா கடற்கரைக்கு சென்று வேர்க்கடலை விற்றவரை தேடினார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பிரவீன் தனது உறவினரும் காக்கிநாடா எம்.எல்.ஏ.வுமான சந்திர சேகரிடம் தெரிவித்தார். மேலும் வேர்க்கடலை விற்றவருடன் பிரவீன் எடுத்த புகைப்படத்தையும் அனுப்பினார்.
அந்த படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அந்த நபரை தேடினர். அதை பார்த்த சிலர் வேர்க்கடலை விற்ற அந்த நபர் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வேர்க்கடலை விற்றவரின் மனைவியை எம்.எல்.ஏ. வீட்டுக்கு பிரவீன் வரவழைத்தார். அவரிடம் பிரவீன் தான் 12 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய 25 ரூபாயுடன் வட்டியோடு சேர்த்து 23 ஆயிரமாக திருப்பி கொடுத்தார்.
நல்ல மனதை பாராட்டுவோம்.❤️👏🏻👏🏻👌🏻🤝

Dr.Anburaj said...

இருட்டை பழிக்க வேண்டாம். விளக்கேற்றுங்கள்.படித்ததில் பிடித்தது மட்டுமல்ல கண்ணீர் வரவைத்த பதிவு ..!
ஏறக்குறைய ஒரு வருடம் கடக்கப் போகும் நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தின் ஒரு குக்கிராமத்திலிருந்து பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் வருகிறது. அதை எழுதியவர் தான் ஒரு கிராமத்து பள்ளிக்கூட வாத்தியார் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறார் .
அதாவது தனது ஒரே மகன் கார்கில் யுத்தத்தில் வீர மரணம் அடைந்து விட்டதாகவும் அவனது முதலாமாண்டு இறந்த தினம் அதாவது நினைவு நாள் இன்னும் சில நாட்களில் அதாவது இன்றைய தேதி (22/05/2000) யில் வரப்போவதாகவும் அவருடைய மகன் இறந்த நினைவு நாளில் அவரது மகன் இறந்து வீழ்ந்த இடத்தை தானும் தன் மனைவியும் பார்க்க விரும்புவதாகவும் முடிந்தால் அதற்கு ஏற்பாடு செய்யுங்கள். முடியாவிட்டால் பரவாயில்லை . நாங்கள் அந்த இடத்தை பார்க்க விரும்புவது தேச பாதுகாப்புக்கு தொந்திரவாக இருந்தால் வேண்டாம். எனது விண்ணப்பத்தை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன் என்ற விண்ணப்ப கடிதம் வந்தது .
கடிதத்தை படிக்க நேர்ந்த ஒரு உயரதிகாரி என்ன செலவு ஆனாலும் பரவாயில்லை. பள்ளிக்கூட வாத்தியார் வந்து போகும் செலவை (டிபார்ட்மென்ட் தராவிட்டால்) நான் எனது சம்பளத்திலிருந்து தருகிறேன். அந்த வாத்தியாரையும் அவரது மனைவியையும் அந்த பையன் இறந்த இடத்திற்கு அழைத்து வாருங்கள் என்ற கட்டளை பிறப்பிக்க ப்பட்டது.
இறந்த மாவீரனின் நினைவு நாளன்று அந்த மலைமுகட்டிற்கு அந்த வயதான தம்பதிகளை இந்திய ராணுவத்தினர் தக்க மரியாதையுடன் கொண்டு வந்தனர். மகன் இறந்து வீழ்ந்த இடத்திற்கு அருகே அழைத்துச்சென்ற போது அங்கே டூட்டியில் இருந்த அனைவரும் அட்டன்ஷனில் விறைப்பாக நின்று சல்யூட் செய்தனர் .
ஒரே ஒரு வீரர் மட்டும் அந்த வயதான கிராமத்து பள்ளிக்கூட வாத்தியாரின் கால்களில் கைப்பிடி மலர்களை தூவி குனிந்து வணங்கி அவர் பாதத்தை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டார் . பின்னர் நிமிர்ந்து ஏனையோரை போல அட்டன்ஷனில் விறைப்பாக நின்று சல்யூட் செய்தார்.
வாத்தியாரோ பதறிப்போய் என்னப்பா இது ...நீ எவ்ளோ பெரிய ஆஃபீசர்.. நீ போய் என் காலை தொட்டு வணங்கலாமா ? மத்தவங்களை போல நீயும் சல்யூட் மட்டும் பண்ண கூடாதா ? நானும் பதிலுக்கு வணக்கம் சொல்லியிருப்பேனே . என்று கேட்க ..."இல்லை சார். இங்கே நான் அவர்களை விட நான் கொஞ்சம் மாறுபட்டு இருக்கிறேன். அதாவது இங்கே இருப்பவர்கள் போன மாதம் தான் இந்த போஸ்டுக்கு டூட்டியில் வந்திருப்பவர்கள் . நான் உங்க பையனோடு அதே படைப்பிரிவில் இதே மலை முகட்டில் பாகிஸ்தானியரோடு சண்டையிட்டவன். உங்கள் பையனின் வீரத்தை களத்தில் நேரடியாக பார்த்தவன் . அதுமட்டுமல்ல "...என்று சொல்லி நிறுத்தினார்.
வாத்தியார் அந்த ஜே.ஸி.ஓ வின் கைகளைப்பிடித்துக்கொண்டு "சொல்லுப்பா ..எதுவா இருந்தாலும் பயப்படாமல் சொல்லு ...நான் அழமாட்டேன் " என்று கூற "நீங்க அழ மாட்டீங்கன்னு தெரியும் சார்.. நான் அழாமல் இருக்கணும்ல " என்று சொல்லி விட்டு தொடர்ந்தார் ...
"அதோ அங்கே தான் பாகிஸ்தானியர் அவர்களின் எச்.எம்.ஜியால் வினாடிக்கு நூற்றுக்கணக்கான குண்டுகளை தெறிக்கவிட்டுக் கொண்டிருந்தனர் . முப்பதடி தூரம் வரைக்கும் நாங்க ஐந்து பேரும் முன்னேறிட்டோம் , அதோ பாருங்க அந்த பாறைக்கு பின்னாடி தான் பதுங்கி இருந்தோம். பாகிஸ்தானிகளும் பாறைக்கு பின்னாடி நாங்க இருக்குறத பாத்துட்டாங்க . கொஞ்சம் கையோ காலோ அல்லது எங்களது கிட் பையோ வெளியே தெரிஞ்சா போதும் . குண்டுகளை படபட வென்று தெறிக்கவிட்டானுங்க. பிரிகேட் ஸ்ட்ரன்த் அளவிலான இந்திய முன்னேற்றம் இன்னும் கொஞ்ச நேரத்துல ஆரம்பிக்க போவுது . என்ன பண்ணுறதுனே தெரியல..... அப்போதான் ...." என்று சொல்லி அந்த ஜே.ஸி.ஓ கொஞ்சம் பெருமூச்சு விட்டார்.
"

Dr.Anburaj said...

2
ன்னப்பா ஆச்சு சொல்லு?" என்று அந்த வாத்தயார் கேட்க ... ஜே.ஸி.ஓ தொடர்ந்தார். "இவனுங்க சுட்டுகிட்டே தான் இருப்பானுங்க ...இது வேலைக்காவாது ... நான் இந்த முப்பதடிக்கு டெத் சார்ஜ் (death charge) பண்ணப்போறேன். அதாவது அவனுங்க சுடுற குண்டுகளை உடம்பில் வாங்கிக்கொண்டு அவனுங்க பங்கர் வரை ஓடி பங்கருக்குள் இந்த வெடிகுண்டை வீசப்போறேன் . அவனுங்களை ஒழிச்சப்புறம் நீங்க பங்கரை புடிச்சிருங்க ன்னு சொல்லிட்டு கிரெனேடோட ஓட தயாரானேன் .
அப்போதுதான் உங்க பையன் என்னைப்பார்த்து . "பைத்தியமாடா நீ ? உன்னை நம்பி வீட்ல பொண்டாட்டியும் ரெண்டு சின்ன குழந்தைகளும் இருக்கு . நான் இன்னும் கல்யாணமாகாதவன் .நான் அந்த டெத் சார்ஜ் பண்ணுறேன் . நீ கவரிங் ஃபயர் கொடுடா போதும்"ன்னு சொல்லிட்டு என் கையிலிருந்த கிரெனெடை பிடுங்கிக்கொண்டு டெத் சார்ஜ் பண்ணார் சார் .
பாகிஸ்தானியர் எச்.எம்.ஜி யிலிருந்து மழை போல குண்டுகள் பாஞ்சது . உங்க பையன் வளைந்து வளைந்து டாட்ஜ் பண்ணி பாகிஸ்தானியரின் பங்கரை அடைந்து வெடிகுண்டின் பின்னை எடுத்துவிட்டு வெடிகுண்டை பங்கருக்குள் சரியாக வீசி பதிமூணு பாகிஸ்தானியரை மேலுலகிற்கு அனுப்பி வைத்தார் சார். எச் எம் ஜி செயலிழந்து பகுதி எங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தது .
உங்க பையனின் உடலை நான்தான் முதலில் தூக்கி எவாக்குவேஷன் செய்தேன். நாப்பத்திரெண்டு குண்டுகளை உடம்பில் வாங்கியிருந்தார் சார் . அவரோட தலையை என் கையில் தான் சார் தூக்கினேன். என் கையில் இருக்கும் போதுதான் சார் உயிர் போச்சு . அவரோட சவப்பெட்டியை உங்க கிராமத்துக்கு கொண்டு போகும் பொறுப்பு டூட்டியை மேலதிகாரியிடம் அப்போ கேட்டுப்பார்த்தேன் சார் . இல்லை என்று சொல்லி வேறு முக்கிய டூட்டி போட்டுட்டாங்க சார் .
ஒருவேளை அந்த சவப்பெட்டியை தூக்கும் பாக்கியம் கிடைச்சிருந்தா இந்த மலர்களை அவனோட காலடியில் தான் போட்டிருப்பேன் . அது கிடைக்கல . ஆனால் உங்கள் பாதங்களில் மலரை போடும் பாக்கியம் கிடைத்தது சார் ." என்று பெருமூச்சுடன் முடித்தார். (i)
கிராமத்து வாத்தியாரின் மனைவியோ புடவை தலைப்பால் வாயை பொத்திக்கொண்டு சத்தம் வராமல் அழுதுகொண்டிருந்தாள் . வாத்தியார் அழவில்லை. அந்த ஜெ.ஸி.ஓ வீரரை தீர்க்கமாக பார்த்தார் , வீரரும் அழவில்லை. வாத்தியாரை பார்த்தார்.
வாத்தியார் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. தன்னுடைய தோளில் தொங்கிக்கொண்டிருந்த ஜோல்னா பையிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து ஜெ.ஸி.ஓ வீரரின் கையில் கொடுத்துவிட்டு "என் பையன் லீவில் ஊருக்கு வந்தால் போட்டுக்கட்டும்னு ஒரு சட்டை வாங்கி வச்சிருந்தேன். ஆனால் அவன் வரல .. அவனது வீர மரணம் பற்றிய செய்தி தான் அப்போ வந்துச்சு..
இனிமேல் அந்த சட்டையை யார் போடப்போறாங்க ..அதான் அவன் உயிர் விட்டஇடத்துலேயே வச்சிறலாம்.ஒரு வேளை அவன் அந்த இடத்துக்கு ஆவியாவாகவாவது வந்து போட்டுக்கட்டும்னு கொண்டு வந்தேன் . ஆனால் இந்த சட்டையை யார் போட்டுக்கணும்னு இப்போ தெரிஞ்சுது மாட்டேன்னு சொல்லாம இதை வாங்கிக்க என்று கொடுத்தார் .
கை நீட்டி வாங்கிக்கொண்ட வீரரின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது சத்தியம்.
பின்குறிப்பு : ஆகவே என் இனிய நண்பர்களே.... நமக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள்.வீணாப்போன அரசியல்வியாதிகளையும், சினிமா நடிகர்களையும் கொண்டாடாமல் உண்மையான செயல்வீரர்களை கொண்டாடுங்கள்....
வாழ்க பாரதம்...
பாரத அன்னைக்கு வணக்கம்...

Dr.Anburaj said...

தெரிந்து கொள்ள..
👉 தயிராக மாற்ற முடியாத ஒரே பால் – ஒட்டகப்பால்
👉 ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் – கங்காரு எலி.
👉 துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.
👉 பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – கரடி.
👉 ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.
👉 சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.
👉 ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.
👉 குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.
👉 சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்(2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.
👉 சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர் . அதனால்தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது.
👉 பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.
👉 நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்க்கும்.
👉 நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க…
ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.
👉 தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.
👉 காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதான் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும்.
👉 மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு – சிங்கம்.
👉 “லங்கா வீரன் சுத்ரா ” என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.
👉 தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு – ஒட்டகம்.
👉 இலைகள் உதிர்க்காத மரம் – ஊசி இலை மரம்.
👉 காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும்.
👉 குளிர் காலத்தில் குயில் கூவாது.
👉 எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார்.
அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர்.
👉 லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.
அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
...2

Dr.Anburaj said...

கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.
👉 கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்துவிடும்.
👉 யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.
👉 கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம்
மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம்.
👉 1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.
👉 ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் – ஈரிதழ்சிட்டு.
👉 வால்டிஷ்ணி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.
👉 ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
👉 பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணிநேரம் பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.
👉 ஒட்டகம் ஒரே சமயத்தில் ௦90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.
👉 தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான்
கராத்தே வீரர் ஆனார் – புருஸ்லீ.
👉 சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.
👉 விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டிஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
👉 சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.
👉 யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.
👉 நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
👉 டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்
👉 புழுக்களுக்கு தூக்கம கிடையாது.
👉 நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

Dr.Anburaj said...

மூன்று தேசங்களால் கவுரவிக்கப் பெற்ற ஓர் இந்தியன்*
பிஜு (பிஜயனந்தா) பட்நாயக் (1916 - 1997) ஒருவர் மட்டுமே இந்தியாவில் மூன்று நாடுகளின் தேசியக் கொடிகளால் உடல் போர்த்தப் பட்டவர். இந்தியா, ரஷ்யா மற்றும் இந்தோனேசியா.
பிஜு 2 முறை ஒடிசாவின் முதல்வராகவும் இருந்திருக்கின்றார்.
பிஜு பட்நாயக் ஒரு விமானி.
இரண்டாம் உலகப் போரின்போது சோவியத் யூனியன் சிக்கலில் இருந்தபோது, ​​டகோட்டா என்ற போர் விமானத்தில் பறந்து ஹிட்லரின் படைகளைக் குண்டுவீசித் தாக்கினார்,
இது ஹிட்லரை பின்வாங்கச் செய்தது. சோவியத் யூனியனால் அவருக்கு அவருக்கு மிக உயர்ந்த விருது மற்றும் குடியுரிமை வழங்கப்பட்டது.
1947 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி
பாகிஸ்தானியர்கள் காஷ்மீரைத் தாக்கியபோது, ​​டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு ஒரு நாளைக்கு பல முறை விமானத்தில் பறந்து வீரர்களை ஸ்ரீநகருக்கு அழைத்துச் சென்றவர் பிஜு பட்நாயக்.
இந்தோனேசியா ஒரு காலத்தில் டச்சுக்காரர்களின் காலனியாக இருந்தது, அதாவது ஹாலந்து. டச்சுக்காரர்கள் இந்தோனேசியாவின் ஒரு பெரிய பகுதியை ஆக்கிரமித்தனர். டச்சு வீரர்கள் இந்தோனேசியாவைச் சுற்றியுள்ள கடல் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் மற்றும் அவர்கள் எந்த இந்தோனேசிய குடிமகனையும் வெளியே விடவில்லை.
1945 இல் டச்சுக்காரர்களிடமிருந்து இந்தோனேஷியா விடுவிக்கப்பட்டது, மீண்டும் ஜூலை 1947 இல் பி.எம். சுதன் ஸ்ஜஹ்ரிர் டச்சுக் காரர்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவர்கள் இந்தியாவின் உதவியை நாடினர். அப்போது இந்தோனேசிய பிரதமர் ஸ்ஜஹ்ரிரை இந்தியாவுக்கு மீட்டு வருமாறு பிஜு பட்நாயக்கிடம் நேரு கேட்டுக் கொண்டார்.
1947 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி, பிஜு பட்நாயக்கும் அவரது மனைவியும் உயிரைப் பொருட்படுத்தாமல் டகோட்டா விமானத்தை எடுத்துக்கொண்டு, டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் பறந்து இந்தோனேசிய ​​ மண்ணில் தரையிறங்கி, இந்தோனேசியப் பிரதமரை பாதுகாப்பாக சிங்கப்பூர் வழியாக. இந்தியாவுக்கு அழைத்து வந்தனர். இந்தச் சம்பவம் இந்தோனேசியர்களுக்குள் அபாரமான ஆற்றலை வளர்த்து, டச்சு வீரர்களைத் தாக்கி, இந்தோனேஷியா முற்றிலும் சுதந்திர நாடாக மாறியது.
பின்னர், இந்தோனேசிய அதிபர் சுகர்னோவின் மகள் பிறந்ததும், பிஜு பட்நாயக்கையும் அவரது மனைவியையும் அழைத்து குழந்தைக்குப் பெயர் சூட்டும்படி வேண்டினார். அப்போது பிஜு பட்நாயக்கும் அவரது மனைவியும் இந்தோனேசியா அதிபரின் மகளுக்கு மேகவதி என்று பெயர் சூட்டினர். இந்தோனேசியா 1950 இல் பிஜு பட்நாயக்குக்கும் அவரது மனைவிக்கும் தங்கள் நாட்டின் கௌரவக் குடியுரிமை விருதான 'பூமி புத்ரா' வழங்கியது. பின்னர் அவருக்கு அவர்களின் 50 வது ஆண்டு சுதந்திரத்தின் போது இந்தோனேசியாவின் மிக உயர்ந்த கவுரவ விருதான 'பிண்டாங் ஜசா உத்மா' விருது வழங்கப்பட்டது.
பிஜு பட்நாயக்கின் மறைவுக்குப் பிறகு, இந்தோனேசியாவில் ஏழு நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்பட்டது, ரஷ்யாவில் ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்பட்டு அனைத்து கொடிகளும் இறக்கப்பட்டன.
நமது வரலாற்றுப் புத்தகங்கள் நமக்குச் சொல்லாத நமது தேசத்தின் ஒரு சிறந்த மனிதரைப் பற்றித் தெரிந்துகொண்டபோது அதை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.

Dr.Anburaj said...

ஒரு LPG சிலிண்டர் வாங்கி
அது தீர்ந்து
இன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அ ந்த நேரம் வரை....
அதை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகையும்
அதனுடன் வந்து சேர்கின்றது என்ற தகவல் நமக்கு எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை...!
இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால்...
சிலண்டர் விபத்து நேரும் போது பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து யாரும் அந்த காப்பீட்டுத் தொகையை
கேட்டு உரிமை கோருவதில்லை!,
நாம் சிலிண்டருக்காக ஒவ்வொரு முறையும் கொடுக்கும் தொகையிலும்
அந்த காப்பீட்டுக்கான பாலிசி தொகையும் சேர்த்துதான் செலுத்தி வருகிறோம்...
இந்த காப்பீடு குறித்து அரசாங்கமோ, எண்ணெய் நிறுவனங்களோ கூட வாடிக்கயாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதும் இல்லை!
சிலிண்டர் விபத்து நேர்ந்து அதன் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் நேர்ந்தால்....
சட்டப்படி அந்த குடும்பம் ரூ.50 லட்சம் வரை சம்மந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து காப்பீட்டுத் தொகை பெற முடியும்!
(இதை உங்கள் சுவற்றிலும் பகிருங்கள் அனைவரும் அறிந்து கொள்ளட்டுமே)
Call: 1800 2 333 555

Dr.Anburaj said...

இன்னும் 10 வருடத்தில் எந்த தொழிலும் இருக்காது கூர்ந்து கவனித்துப் படியுங்கள்புரியும் எதிர்காலம் எப்படி இருக்கும்*
தவறாமல் படியுங்கள்....
GOLDEN AGE COMING SOON?
*2025ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்?*
*என்னென்ன தொழில்கள் இருக்காது ??*
நெலம இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது தவறு, நாம நம்மள மாத்திக்கணும்...!
*1998 ல தொடங்கின Kodak (Photo) நிறுவனம், ஒரு லட்ஷத்தி எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது...!*
இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல...! வெள்ளை பேப்பர்ல print எடுத்து தான் photo பார்க்க முடியும்கறது இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும்னு அவங்க நினைக்கவே இல்ல.
*பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அதுதான் பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்துல நடக்கும்!.*
தெருவுக்கு தெரு மொளைச்ச PCO, *STD & ISD பூத்தெல்லாம் இப்ப எங்க போச்சு??*
எலக்ட்ரானிக் டைப்ரைட்டர், பேஜர், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், ரேடியோ, டேப்ரெக்கார்டர், விசிஆர், வாக்மேன், டிவிடி பிளேயர் என சொல்லி கொண்டே போகலாம். குண்டு பல்பும், டியூப் லைட்டும் போய் CFL பல்பும் போய், இப்ப LED பல்பு தான்.
*எதனால ? ஏன் இப்படினு கேட்டா?*
டெக்னிகலா சொல்லனும்னா Artificial Intelligence. சிம்பிளா சொல்லனும்னா 'Software' என்கிற மென்பொருள். மனுஷ மூளையைவிட திறமையா செயல்படும் இதுங்கதான் மேலதிகமான காரணமா இருக்கும்.!
*உதாரணத்துக்கு சொல்லணும்னா...சொந்தமா ஒரு கல்யாண மண்டபம் கூட வெச்சிக்காம, 'Bharat Matrimony' வருஷத்துக்கு ஆயிரக்கணக்கான கல்யாணங்களை நடத்திக்கொடுக்குது...கமிஷனோட...! இல்லீங்களா..?*
Uber'ங்கறது ஒரு சாதாரண மென்பொருள், ஒரு ஸ்கூட்டர் கூட சொந்தமா வெச்சிக்காம, இன்னைக்கு உலகத்துலயே பெரிய டாக்ஸி சேவை கம்பெனியா கொடி கட்டி பறக்குது..!
*இந்த மாதிரி software tool எல்லாம் எப்படி நல்லா போய்ட்டு இருக்கிற தொழில்களை பாதிக்கும் ?*
அதுக்கும் ஒரு நல்ல உதாரணத்தை சொல்லலாம்: உங்களுக்கு ஒரு சட்டச்சிக்கல் வருது...என்ன பண்றதுனு தெரியலை...! என்ன செய்வீங்க? ஒரு நல்ல வக்கீலா பார்த்து..யோசனை கேப்பீங்க...! சிக்கலோட தீவிரத்தை பொறுத்தோ அவரோட பிரபலத்தை பொறுத்தோ உங்க கிட்ட அவரு அவருடைய Fees வாங்குவாரு..! இல்லையா...!
*இப்ப, அதையே ஒரு கம்ப்யூட்டர் சல்லிசா செஞ்சு கொடுத்தா ? உங்களோட சிக்கல் என்னனு சின்னதா சில வரிகள் type பண்ணின உடனே, Section-னோட சரியான விவரங்கள Probabilities-டன் அந்த கம்ப்யூட்டர் கொடுத்தா? நாட்ல பெரும்பாலான வக்கீல்கள் தலைல துண்ட போட்டுக்கிட்டு தானே போகணும்...! வக்கீலுக்கே தெரியாத பல ஜெயித்த கேஸ்கள் பற்றி கம்ப்யூட்டர் தெளிவாக சொல்லும்.*
IBM Watson, இப்ப அமெரிக்காவுல அதைத்தான் செஞ்சுகிட்டு இருக்கு. ஒரு லாயரால அதிகபட்சம் 70% தான் ஒரு சட்ட சிக்கலுக்கு தீர்வு சொல்லமுடியும்னா, இந்த மென்பொருள் 90% சரியான தீர்வை சில வினாடில சொல்லுது..!
*அதனால, அமெரிக்க பார் கவுன்சிலோட கணக்கு படி, இன்னும் 10 வருஷத்துல அமெரிக்காவுல 90% வக்கீல்கள் காணாம போய்டுவாங்க..! அட யாருமே வராத கடையில இவங்க யாருக்கு டீ போடுவாங்க ? இது ஒரு உதாரணம்தான்!!!!*
ஆடிட்டர்கள் வேலையை cleartax, taxman போன்ற இணையதளம்!,
*டாக்டர்கள் வேலையை Ada app!,*
ப்ரோக்கர்கள் வேலையை magic bricks, quickr, 99acres, இணையதளம்!,
*கார் விற்பனையை carwale, cars24 இணையதளம் !*
என சேவை இலவசமாக தருகின்றன.
*UBER OLA வந்தபிறகு சொந்தகார் தேவையில்லை.*
ஆன்லைனில் சாப்பாடு முதல் துணிமணிவரை கிடைப்பதால் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் ஈயடிக்கும்.
*நெட்பிளிக்ஸ் வந்தபின் மேற்கத்திய நாடுகளில் தியேட்டர்களில் படம் பார்ப்பவர்கள் இல்லை.*
இப்பவே இந்திய லோக்கல் ரயில் டிக்கெட் கூட UTS app மூலம் எடுத்து கொள்ளலாம்.
*80% மேலான சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இனி ஆளுங்க தேவை இல்லை..கம்ப்யூட்டரே பாத்துக்கும். 'Subject Matter Experts'னு சொல்லப்படற விற்பன்னர்கள் தான் இனி பொழைக்க முடியும்..!*......2

Dr.Anburaj said...

2
2025 ல Satellite மூலமா இயக்கப்படும் தானியங்கி கார்கள் ரோட்டுக்கு வந்துடும்.
2021 ஏப்ரல் மாதம் கூகுள் தானியங்கி சைக்கிள் விற்பனைக்கு வருகிறது.
*அதோட result மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா...ஒட்டுமொத்த ஆட்டோமோட்டிவ் சம்பத்தப்பட்ட எல்லா நேரடியான, மறைமுகமான தொழில்கள் நிச்சயம் பாதிக்கப்படும்!.*
அடுத்த 10 வருஷத்துல நிலைமை இதுதான்: யாருக்கும் கார் ஓட்ட வேண்டிய / வாங்கவேண்டிய தேவை இருக்காது,. 'Driving License' என்ற ஒன்று காணாமல் போயிருக்கும். பார்க்கிங் பிரச்சனை என்பதே இருக்காது. ஒரு எடத்துக்கு போகணும்னா.. உங்க செல்லில் இருந்து.. ஒரு மிஸ் கால்.. இல்ல..SMS...! அடுத்த ரெண்டு நிமிஷத்துல உங்க முன்னாடி தானா ஒரு கார் வந்து நிக்கும். நீங்க போகவேண்டிய எடத்துக்கு சமர்த்தா கொண்டுபோய் விட்டுடும். கிலோமீட்டருக்கு இவ்வளோனு நீங்க காசு கொடுத்தா போதும். பொருட்கள் அனுப்புறது முன்னை விட சீக்கிரமாவும் பத்திரமாவும் இருக்கும்.
*இதனால என்னவாகும்ன்னா...அடிக்கடி தேவைப்படாம பார்கிங்க்ல தூங்கற 37% வாகனங்கள் இருக்காது. சொந்தமா ஒரு டிரைவர், இல்ல டாக்ஸி டிரைவர்னு ஒருத்தனும் இருக்கமாட்டான். சிக்னல், ட்ராபிக்ஜாம் பத்தி எல்லாம் யோசிக்கவே மாட்டோம். 'Accident' ரொம்ப கொறஞ்சு போய்டும். சிட்டில 'கார் பார்க்கிங்'காக மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற 17% நிலங்கள் காலியாயிடும். உலக அளவுல மோட்டார் கனரக வாகனங்களின் விற்பனை 90% கும் கீழ போய்டும். 10 கோடி பேர் வரைக்கும் வேலை போகும்.*
Tesla, Apple, Microsoft, google இவங்க கட்டுபாட்ல தான் இந்த டிரைவர்கள் இல்லாத தானியங்கி கார்கள் இருக்கும்
*எல்லா மனிதர்களுக்கும் எஜமான் கூகுள் போன்ற ஒரு நிறுவனம்தான். இப்போதே கூகுளுக்கு நீங்கள் எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியும். உங்கள் சிந்தனையை, நீங்கள் எடுக்கும் முடிவுகளை தீர்மானம் செய்வது கூகுள்தான்.*
எல்லாமே மின்சாரத்துல தான் ஓடும். முப்பதே வருஷத்துல 7% உலகளாவிய மின் உற்பத்தியை கொடுக்கும் சூரிய மின்தொழில்நுட்பம், இன்னும் 10 -15 வருஷத்துல 25% மேல் மின்சார தேவையை பூர்த்தி செய்யும்.
*இதெல்லாம் நம்ம ஊருக்கு லேசுல வராதுங்கனு நீங்க நெனைச்சா..? உங்க நினைப்பை மாத்திக்குங்க... இன்னைக்கு பெரும்பாலான உலக நிறுவனங்களோட எதிர்கால பொருட்களை (Future Products) விற்பனைக்கு வெக்கப்போற முக்கிய சந்தை ஆசிய மார்க்கெட் தான்.. குறிப்பா சீனா & இந்தியா. ஒரு காலத்துல இவங்களால கொஞ்சம் லேட்டா கண்டுக்க படற நிலைமையை செல்போன்கள் மாத்திடுச்சு. 15 வருஷ அமெரிக்க லாபத்தை செல்போன் கம்பெனிகள் 5 வருஷத்துல இந்தியால சம்பாரிச்சிட்டாங்க. இனிமே விடுவாங்களா??*
சரி, மேற்கொண்டு என்னென்ன தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ?
*முக்கியமா 'Banking' எனப்படும் வங்கி சேவைகள். 'BitCoin' னு ஒண்ணை பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா? இல்லனா கூகுளை கேளுங்க...! அடிச்சு சொல்லும் அடுத்த 10 வருஷத்துல உலக கரன்ஸி இப்படி ஏதாவது ஒண்ணு தான்னு.*
அப்புறம், 'Insurance' எனப்படும் காப்பீட்டு திட்டங்கள். மொத்தமா செம்ம அடி வாங்கும்.
*ரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும். சிட்டிக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப்போய் பரவி வாழும் நிலை உருவாகும். வீட்டு பக்கத்திலியே Green House வெச்சு காய்கறி உணவு பொருள்கள் தயாராகும்.*
*விவசாயம்:*�� இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள், மெஷின்களை மேய்க்கும் மேனஜர்களாக தான் இருக்கிறார்கள். நம்ம ஊருக்கு சீக்கிரமே இந்த நெலமை வந்துடும்.
*இன்னும் சொல்லப்போனால் சாப்பாட்டுக்கு மாற்றாக மாத்திரைகள் வந்து விடும்.

Dr.Anburaj said...

3
விண்வெளி வீரர்கள் வானில் இருக்கும் பொழுது மலஜலம் கழிக்க முடியாது. எனவே அவர்களுக்கு மாத்திரை தான் உணவு.*
காத்துல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம் தாகம் எடுக்கறப்போ.
*'Moodies' ங்கற ஒரு App, இப்பவே உங்க முகத்தை scan செஞ்சு உங்க மூடு என்னனு சொல்லுது.. 2022 ல நீங்க பொய் சொல்றீங்களா, இல்ல உண்மைய சொல்றீங்களானு அச்சு பிசகாம சொல்லிடும். யாராலயும் ஏமாத்த முடியாது.*
இப்பவே கூகுள் அசிஸ்டண்டும் Alexa வும், Siriயும், வேலைக்காரர், உதவியாளர், செகரட்டரி வேலைகளை செய்கிறது.
*இப்பவே மனுஷங்களோட சராசரி ஆயுட்காலம் வருஷத்துக்கு 3 மாசம் கூடிகிட்டே போகுது (2012 ல 79ஆ இருந்த சராசரி ஆயுட்காலம் இப்ப 80 ஆயிடுச்சு). 2036ல மனுஷனுங்க நிச்சயம் 100 வருஷத்துக்கு மேல வாழ்வாங்க.*
Tricoder - X னு ஒண்ணு அடுத்த வருஷம் மார்கெட்டுக்கு வருது. உங்க செல்போன்ல உட்கார்ந்துகிட்டு வேலை செய்யும் இது, உங்க கண்ணை ஸ்கேன் பண்ணும். உங்க ரத்த மாதிரியை ஆராயும். உங்க மூச்சுக் காத்தை அலசும். உங்க உடம்புல என்ன வியாதி, எந்த மூலைல எந்த நிலைல இருந்தாலும் சொல்லிப்புடும். அப்புறம் என்ன 2035ல 100 வருஷம் வாழறதெலாம் ஜுஜுபி. டாக்டர்கள் *Clinic* வைக்கத் தேவையில்லாம, Online -ல யே ஒரு Op - ய Treat பண்ண முடியும். In-patient-க்குத்தான் Hospital .
*மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றத்திற்கு ஏற்ப நம்மை தயார்படுத்திக் கொள்ள மட்டுமே நம்மால் முடியும்.*
நமது வாரிசுகள் படித்த பின் வேலைக்கு சென்று சம்பாதிக்க இப்போதைய படிப்புகள் ஒன்றும் உதவாமல் போகலாம்.
*கடந்த நூறு வருடங்களில் நடந்ததை விட அதிவேக பாய்ச்சல் முன்னேற்றம் அடுத்த பத்தாண்டுகளில் நடக்கும்.*
சந்திக்க தயாராவோம்.
எதிர்காலம் நம் கையில் இல்லை.
கடந்த காலமும் நிகழ்காலமும்,
நம் கையிலா இருந்தது என்கிறீர்களா..?