Followers

Thursday, September 28, 2006

இந்து மத வேதங்களில் காணப்படும் இறை இல்லம் !

இந்து மத வேதங்களில் காணப்படும் இறை இல்லம் !

நம்மை படைத்த இறைவனை எந்த சக்தியாலும் பூமியில் பார்க்க முடியாது. அதற்கான சக்தி நம் கண்களுக்கு கொடுக்கப் பட வில்லை என்று முன்பு பார்த்தோம். யாரும் காணாதபடிக்கு இப்பிரபஞ்சத்திற்கு அப்பால் இருக்கும் இறைவனே வணக்கத்திற்கு தகுதியானவன். மனிதர்களை விட உயர்ந்த தன்மை கொண்டவனைத்தான் நாமும் இறைவன் என்று வணங்க முடியும்.அந்த இறைவன் தன்னை வணங்குவதற்காக முதல் ஆலயத்தை உலகில் நிர்மாணிக்கிறான். முதன் முதலாக ஆதாம் மூலமாக உலகில் கட்டப் பட்ட முதல் இறை இல்லமான கஃபாவை நோக்கி உலக மக்கள் அனைவரும் தொழ வேண்டும் என்பது இறைவனின் கட்டளையாகும்.

'அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும் பாக்கியம் பொருந்தியதாகவும மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் மக்காவில் உள்ளதாகும்'
3 : 96 - குர்ஆன்

இக்கட்டிடம் நோவா காலத்தில் ஏற்பட்ட ஜலப்பிரளயத்தால் சிதிலமடைந்தது. அதன் பிறகு ஆபரஹாம் இறைக் கட்டளைப் படி அந்த பாலைவனத்தைக் கண்டு பிடித்து தனது மனைவியையும் தனது மகன் இஸ்மாயீலையும் குடியமர்த்தினார். இறைவனின்அற்புதமாக என்றும் (இன்றும்) வற்றாத ஸம்ஸம் கிணறு ஏற்பட்டபின் அந்த பாலைவனம் ஊராக மாறியது. அங்கே முதல் ஆலயத்தை தந்தையும் மகனும் மறுபடியும் கட்டினார்கள். இநத ஸம்ஸம் நீரூற்று இன்று வரை வற்றாமல் ஹஜ்பயணம் செய்பவரிலிருந்து உள்ளூர் மக்கள் வரை பல கோடி பேரின் தண்ணீர தேவையைப் பூர்த்தியாக்குகிறது. இது இறைவனின் அருட்கொடைதான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

ஏக இறைவனை வணங்குவதற்காக கட்டப் பட்ட இந்த தொன்மையான ஆலயத்தை முன்னோக்கியே அதிகமான இறைத் தூதர்களும் அவர்களைப் பின் பற்றியவர்களும் வணங்கியிருக்கின்றார்கள்.



மக்காவில் இருக்கும் ஆதி இறை இல்லமான கஃபாவை பல வேதங்களும் சிறப்பித்துச் சொல்கின்றன. இந்த இறை இல்லத்திற்கு பல பெயர்களை குர்ஆனிலும், முகமது நபியின் வாக்குகளிலும் ஆங்காங்கே பல இடங்களில் கோடிட்டுக் காட்டப் படுகின்றன. அவைகள் பின்வருமாறு: கஃபா, கஃபதுல்லா, பைத்துல்லாஹ், பைத்துல் ஹரம், பைத்துல்அதீக், பைத்துல் மஃமூர், மஸ்ஜிதுல் ஹராம் என்று பல பெயர்களில் குறிப்பிடப் படுகிறது.

இதே கஃபாவை இந்து மத வேதங்களும் பல இடங்களில் பல பெயர்களில் குறிப்பிடுகின்றன. அவை பின் வருமாறு : இலாஸ்பாத், இலயாஸ்பாத், நபா பிரிதிவி, நபிகமால், ஆதி புஷ்கார் திர்தா, மக்தேஷ்வர், துரா காபன் போன்றவை. இனிஇவை ஒவ்வொன்றைப் பற்றியும் சிறிது விரிவாக பார்ப்போம்.

1).இலாஸ்பாத்

இல் (il) இல்லய்யஃ (illiah) இலா (ila) இலாயா (ilya) - சமஸ்கிரத சொல்லான இதன் பொருளானது 'வணக்கத்திற்குரிய ஒன்று' என்பதாகும்.

(வணக்கத்திற்குரியவனை அரபியில் 'இலாஹ்' என்றும், ஹீப்ரூவில் 'எல, எலோஹ், எலோஹிம்' என்றும் அராமிக்கில் 'எல்லாய்' என்றும் கூறப்படுவதை முன்பே பார்த்தோம்.)

'பாத்' என்பது இடத்தைக் குறிக்கும் சொல்லாகும். இலாஸ்பாத் என்பதற்கு 'இலா' விற்குரிய இடம் - 'வணக்கத்திற்குரிய இடம்' என்றாகிறது.

Sir M. Monier Williams - தனது சமஸ்கிரத - ஆங்கில அகராதியில் 'இலாஸ்பாத்' என்பது புண்ணியஸ்தலத்தின் பெயராகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இலா (ila) எனபது குறிப்பிட்ட கடவுளின் பெயர். "இலாஸ்பாத்" என்னும் போது "கடவுளுக்குரிய ஸ்தலமாகும்" என்று Griftith தன்னுடைய மொழி பெயர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

பைத்துல்லாஹ் (இறைவனின் இல்லம்) என்று அரபியில் கூறுவதையே இந்து கிரந்தங்கள் சமஸ்கிரதத்தில் "இலாஸ்பாத்" என்று கூறுகிறது.

இலயாஸ்பாத்

இலயாஸ்பாத் 'பிரதி விகா பவித்திரஸ்தான்' என்று பண்டித ஸ்ரீராம் சர்மா ஆச்சாரியர் இந்தியில் மொழி பெயர்த்துள்ளார். 'பூலோகத்திலுள்ள புண்ணிய ஸ்தலம்' என்பது இதன் பொருளாகும்.

மக்தேஷ்வர்

'மக்' என்பது 'மக்கா' நகரைக் குறிக்கிறது. 'ஈஸ்வர்' என்றால் கடவுள். 'மக்தேஷ்வர்' என்றால் 'மக்காவின் கடவுள்' என்று Sir. M. Monier Williams தன் சமஸ்கிரத ஆங்கில அகராதியில் கூறுகிறார்.

நபா ப்ரதிவியா

'நபா' என்பதன் பொருள் 'மையம்'. 'பிரதிவி'என்பதன் பொருள் 'பூமி'. 'நபா ப்ரதிவி' என்னும் பொழுது பூமியின் மையம் என்றாகிறது. பூமத்திய ரேகையை ஒட்டியே மக்கா நகர் அமைந்திருப்பதையும் நாம் பார்க்கிறோம்.

'இலாயாஸ்த பதே வாயம் நபா ப்ரதிவியா ஆதி'
3 : 29 : 4 - ரிக் வேதம்

'இறைவனின் இல்லமானது பூமியின் மையத்திலுள்ளது' என்று கஃபாவைக் குறித்து ரிக் வேதம் தகவல் தருகிறது.

நபிகமால் :

படைப்பினங்கள் அனைத்தையும் படைத்த ஈஸ்வரன் அதன் பிதிநிதியாக பரம்மனை நியமித்தார். எல்லா சிறப்பியல்புகளையும் பூமி பெற்ற பின்பு பிரம்மன் தன்னுடைய சிம்மாசனத்தை பூமி மீது அமைத்தார். பூமி தாவரங்களைப் பிரசவித்ததும் 'ஜம்பு துவிப்' என்ற இடத்தில் ஆகும்.

ஜ+அம்பு+துவிப் = வாழ்வு + நீர் + தீவு = நீர் எங்கு கிடைக்கிறதோ அங்கு தான் வாழ்க்கை துவங்குகிறது.

அந்த மையப் பகுதியிலிருந்து தான் செயல் மற்றும் வழிபாடும் துவங்கியது. நபிகமால் - பூமிக்குள்ளிருந்து எடுக்கப் பட்ட பாறைகளாலும், கனிமப் பொருள்களாலும் அடுக்கப் பட்டதாகும். அது ஆரியர்கள் அல்லாதவர்கள் குடியிருக்கும் இடமாகவும், அறிந்து கொள்ள முடியாத இடத்திலும் இருக்கிறது. நபிக்கமால் ஒன்று கூடும் மையமாகவும் குடி நீர் (ஸம் ஸம் நீரைக் குறிக்கிறது) வழங்கும் இடமாகவும் இருக்கும்.
- ஹரிவன்ஸ் புராணா இரண்டாம் பாகம்
499 ஆம் பக்கம் - பண்டிட் ஸ்ரீராம்சர்மா வின் 'பதம புராணா' மொழி பெயர்ப்பு.

ஆதி புஷ்கார் திர்தா:

திர்தா என்றால் மிகவும் புராதன புனித ஸ்தலம் என்பதாகும். பதம் புராணாவில் நபி கமாலுக்கு இந்த சொல் உபயோகப் படுத்தப் பட்டுள்ளது.

புஷ்கார் திர்தாவிற்கு சேவை புரிவோமானால் பாவங்கள் நம்மை விட்டு மீட்கப் படுகிறது. புஷ்கார் திர்தாவிற்கு புண்ணிய யாத்திரை செல்கின்றவர்கள், நிலையான வெகுமதிக்கு தகுதியுடையவராவார். புஷ்கார் திர்தா புண்ணிய ஸ்தலங்களிலெல்லாம் மிகப்பழமையானது. இங்கு சென்று நீராடுபவர்களுடைய பாவங்கள் கழுவப் பட்டு விடுகிறது.
94 அக்டோபர் - பக்கம் 96 - கல்யாண்

தரு காபன்:

சமஸ்கிரதத்தில் 'தர்' என்பதற்கு 'வனாந்திரம்' என்று பொருள் வரும். அரபு பாலைவனத்தை 'வனாந்திரம்' என்றே கூறுவர். அரபுலகை பைபிளும் வனாந்திரம் என்றே கூறுகிறது. 'காபன்' என்பது தெளிவாக கஃபாவைக் குறிக்கும் சொல்லாகும். 'தருகாபன்' என்பதற்கு வனாந்திரத்திலுள்ள கஃபா என்ற பொருளாகிறது.

நலந்த விஷால் ஷப்த் ஷாகர் என்ற அகராதியானது 'தருகாபன்' என்பதற்கு வனாந்திரத்திலுள்ள புண்ணிய ஸ்தலம் என்ற பொருளைத் தருகிறது.

' ஏ பக்தர்களே! கடற்கரை அருகிலிருக்கும் 'தருகாபன்' மனிதனுடையது அல்ல. அங்கு நீ வழிபாடு பண்ணுவாயாக! அது நீ சொர்க்கம் செல்ல பரிந்தரை செய்யும்'

10 : 155 : 3 - ரிக் வேதம்

இந்து மத நண்பர்கள் ஆதி இறை இல்லத்தை முற்றிலும் மறந்தாலும் அறிந்தோ அறியாமலோ முஸ்லிம்கள் கஃபாவுக்கு செய்யும் வணக்கத்தைப் போன்று சில கிரியைகளை இன்றும் செய்து வருகிறார்கள். முஸ்லிமகள் அந்த கஃபாவை நோக்கி தொழுதும் ஏழு முறை சுற்றி வலம் வந்தும் தங்கள் பிரார்த்தனைகளை இறைவனிடம் கேட்கிறார்கள். இதைத் தொலைக் காட்சியிலும் பல முறை பார்த்திருப்போம். இதே போல் இந்துக்களும் காஃபா வடிவில் வீட்டிற்கு ஒரு துளசி மாடம் கட்டி அதில் துளசிச் செடி வைத்தும், ஊருக்கு ஒன்றிரண்டு கற்பக் கிரகம் (கோவிலினுள்) கஃபா வடிவில் சதுரமாக கட்டி அதனுள் விக்ரகங்களை வைத்தும் வணங்குகிறார்கள். அதனை வலமும் வருகிறார்கள். மேலும் திருமண விஷேஷ நாட்களில் அக்னி குண்டமும் (கஃபா வடிவில்) கட்டி அதில் அக்னி வளர்த்தும் அவைகளை வணங்கியும் வலம் வரவும் செய்கிறார்கள். இந்த பழக்கங்களெல்லாம் முன்பு கஃபாவை வணங்கி வந்ததன் தாக்கத்தினாலும் இருக்கலாம். இது விபரங்களை இறைவனே அறிவான்.

'எவருடைய அறிவு அவரிடமிருந்து எடுக்கப் பட்டு விடுகிறதோ அவரே போலி தெய்வங்களை வணங்குவர்.'

- பகவத் கீதை - அதிதியாயம் 7 - வசனம் 20

'நம்மை படைத்த இறைவனை கற்பனை செய்ய நம்மால் முடியாது'

-ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் 4 - 19
-யஜூர் வேதம் 32 - 3

'இயற்கையை வணங்குபவர் இருளில் நுழைந்து விட்டனர்'

-யஜீர் வேதம் 40 : 9

மேற்கண்ட வசனங்களின் மூலம் நம் விருப்பத்திற்கு கடவுள்களின் உருவங்களை உருவாக்கி வணங்குவது கூடாது என்று விளங்குகிறோம்.


There are various places of pilgrimage in Hinduism. One of the sacred places mentioned in
1). Rigved, Bk. 3 hymn 29 verse 4 is “Ilayspad, which is situated at Nabha prathvi.”
‘Ila’ means God or Allah, and ‘spad’ means place, therefore Ilaspad means place of God. Nabha means center and prathvi mean earth. Thus this verse of the Veda prescribes pilgrimage to a place of God situated at the center of the earth.

Sanskrit-English dictionary by M. Monier Williams (Edition 2002) states that Ilaspad is “Name of a Tirtha” i.e. place of Pilgrimage – however its location is not known.

2). Rigved Bk. 3 hymn 29 verse 11
Prophet Muhammad (pbuh) is mentioned as ‘Narashansa’.
Thus we can conclude that this Ilayspad, place of pilgrimage mentioned in Rigved is Makkah.

3).Makkah is also mentioned as Ilaspad i.e. Allah’s holy place in
Rigved Book 1 hymn 128 verse 1

4).The first House (of worship)
Appointed for men
Was that at Bakka
Full of blessing and of guidance
For all kinds of beings.
(Al Quran 3:96)

‘Bacca’ is another name for Makkah and we know today that Makkah is situated at the center of the earth.

பிரபஞ்சத்தைப் படைத்து காத்து அருள் செய்யும் இறைவன் இப் பிரபஞ்சத்திற்கு அப்பால் இருக்கிறான். படைப்புகள் வேறு அதைப் படைத்தவன் வேறு. அந்த படைப்பாளனையே வணங்குவோம். இறப்புக்கு பின்பு சுவனத்தையும் அடைவோம்.

இறைவனேமிக அறிந்தவன்

தகவல் உதவிக்கு நன்றி
ஜாகிர் நாயக், அபு ஆசியா

என்றும் அன்புடன்
சுவனப் பிரியன்

18 comments:

சும்மா அதிருதுல said...

நல்ல அருமையான கட்டுரை வாழ்த்துக்கள்.

ஞானவெட்டியான் said...

அன்புச் சகோதரர் சுவனப் பிரியன்,
தங்களின் கட்டுரை அருமை. அதைக் கண்டதும் என் கருத்துக்களைப் பதிவு செய்ய எண்ணினேன். பின்னூட்டம் பெரியதாக இருந்ததால் தனியாக என் பதிவில் இட்டுள்ளேன்.
http://njaanavelvi.blogspot.com/2006/09/33_28.html

ஞானவெட்டியான் said...

அன்புச் சகோதரர் சுவனப் பிரியன்,
தங்களின் கட்டுரை அருமை. அதைக் கண்டதும் என் கருத்துக்களைப் பதிவு செய்ய எண்ணினேன். பின்னூட்டம் பெரியதாக இருந்ததால் தனியாக என் பதிவில் இட்டுள்ளேன்.
http://njaanavelvi.blogspot.com/2006/09/33_28.html

ஞானவெட்டியான் said...

அன்புச் சகோதரர் சுவனப் பிரியன்,
தங்களின் கட்டுரை அருமை. என்னுடைய கருத்துக்களை பின்னூட்டமாக இட நினைத்தேன். பெரியதாக இருந்ததால் என் இடுகையில் இட்டுள்ளேன். காண்க.
http://njaanavelvi.blogspot.com/2006/09/33_28.html

சுட்டுவிரல் said...

ஆராய்ச்சி வளம் மிக்க உங்கள் பதிவுகள் நிறைய விழிகளைத் திறக்க வல்லன.
இருட்டை விரட்ட, தடி எடுக்காமல் தீக்குச்சி ஏந்துகிற ஒரு சில வலைப்பதிவர்களில் நீங்களும் இருக்கிறீர்கள் சிறப்புடன். நன்றி சுவனப்பிரியரே.

suvanappiriyan said...

சின்னபுள்ள!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

CAPitalZ said...

ஆதாம் ஏவாள் என்பதே கதை தானே.

அது உண்மையென்றால், ஆதாம் ஏவாளின் பிள்ளைகளுக்குள் தொடர்பு ஏற்பட்டு, உடலுறவு கொண்டு தானே மனித சமூகம் ஏற்பட்டிருக்க வேண்டும்? இது மிகவும் கேவலமாக அல்லவா இருக்கிறது?

______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/

suvanappiriyan said...

சகோதரர் ஞானவெட்டியான் அவர்களுக்கு!

பதிவை படித்து அதற்கு விளக்கமாக தனி பதிவாகவே போட்டமைக்கு நன்றிகள் பல. ஒவ்வொருவரும் தனக்கு தெரிந்த கோணத்தில் பிரச்னையை அலசுவார்கள். அதன்படி தங்களின் கருத்தும் இருக்கிறது.

//கண்வழி சென்று கருத்தினில் கலந்தால் இறைவனை உணரமுடியும்.

"அத்தாற் பிறவி யவரிரு கண்களை
வைத்தார் நுனிமூக் கின்புரு வத்திடை
நித்தார மங்கே நினைக்கவல் லார்க்கு
எத்தாலுஞ் சாவிலை இறையவ னாமே."
(திருமூலரின் ஞானக்குறி - 30)//

நானும் அதே கருத்தைத்தான் சொல்கிறேன். இறைவனின் வல்லமையை அவனின் படைப்பாற்றலை மனிதர்களாகிய நம்மால் உணர முடியும். ஆனால் பார்க்க முடியாது.

'நம்மை படைத்த இறைவனை கற்பனை செய்ய நம்மால் முடியாது'

-ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் 4 - 19
-யஜூர் வேதம் 32 - 3

//பிரபஞ்சமாகிய அண்டத்தில் உள்ளவன் பிண்டமாகிய உடலின் தலையில் உள்ளான்.//

இது உங்களின் சொந்த கருத்து என்று நினைக்கிறேன். அண்டம் பிண்டம் என்று படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தாலும் எந்த கருத்துக்கும் வேதங்களின் ஆதாரம் வேண்டும்.

//புண்ணியத் தலம் நம் உடலின் தலையே ஆகும்.

இதுவும் உங்களின் சொந்த கருத்தே! இதற்கும் நீங்கள் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை.

//அண்டத்தில் உள்ளது பிண்டத்தில். ஆக, பூமியின் மையம் நம் தலையின் மையப்பகுதியே.

இதற்கும் தாங்கள் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை.

//ஆம் நீரும் நெருப்பும் இல்லையெனில் உயிர்கள் வாழமுடியாது. நீரும் நெருப்பும் சேர்ந்துள்ள இடமே கண்கள்தான்.//

இது அறிவியலாரின் கண்டுபிடிப்பா? அல்லது வேதங்களின் கருத்தாக இருந்தால் எந்த இடம் என்ற ஆதாரத்தை தந்தால் நானும் தெரிந்து கொள்வேன்.

//அறிவு, உணர்வு, நினைவு, கருத்து ஆகியவைகள் எல்லாமே இறைநிலைகள். அறிவு எடுக்கப்பட்டுவிட்டால் அறியாமைதான் மிஞ்சும். அறியாமையால் செய்யும் காரியங்களை ஒதுக்கி, அவர்களை நல்வழிபடுத்த முயலல்வேண்டும்.//

உங்கள் கருத்தே என் கருத்தும்.

'நன்மையிலும் இறை அச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்.'

5 : 2 - குர்ஆன்

//இயற்கையே கன்சூல் மஹபியா என்னும் இருள்தான். இருளில் நுழைந்தால்தான் இயற்கையாகிய இறையை உணர இயலும்.//

இங்கு இருள் என்று வேதம் சொல்வது அறியாமை என்ற பொருளில். அறியாமையில் இருக்கும் ஒருவனை உண்மையை விளக்கி நேர் வழிப் படுத்த வேண்டும் என்பது இதன் கருத்து. ஆனால் தாங்கள் கொடுக்கும் விளக்கம் உங்களின் சொந்த கருத்து என்று நினைக்கிறேன்.

மேற்கண்ட வசனங்களின் மூலம் நம் விருப்பத்திற்கு கடவுள்களின் உருவங்களை உருவாக்கி வணங்குவது கூடாது என்று விளங்குகிறோம்.//

//பக்திவழி செல்வோருக்கு இவ்வாறு அறிவுறுத்தினால் துடுப்பு இல்லா படகைப்போல் அவர்கள் தத்தளிப்பார்கள்.//

உண்மைதான்! அதனால் தான் இறைவன் ஒவ்வொரு சமூகத்துக்கும் இறைத் தூதர்களையும், இறை வேதங்களையும் துடுப்பாக கொடுத்து படகை சீராக்குகிறான். ஆனால் மனிதனோ தன் துடுப்பை அஜாக்கிரதையால் தவற விட்டு விட்டு இறைவன் முன் நஷ்டவாளியாகிறான்.

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.'

14 : 4 - குர்ஆன்

//இறைவனேமிக அறிந்தவன்//

//ஐயமேதுமில்லை.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

கேபிடல்!

//ஆதாம் ஏவாள் என்பதே கதை தானே.//

அது உங்களின் கருத்து. இதற்கு மாற்றாக நீங்கள் சொல்வது பரிணாமக் கொள்கையை. ஒரு செல் உயிரி பிறகு ஊர்வணவாகி பிறகு அதற்கு தானாக விட்டலாச்சாரியா படம் போல் கால்கள் முளைத்து பிறகு குரங்கு என்ற நிலைக்கு வந்து இன்று மனிதனாகியிருக்கிறானாம். மனிதனுக்கு பிறகு ஏன் பரிணாமம் நின்று விட்டது என்றால் பதில் சொல்லத் தெரியாது. அமெரிக்காவில் நேற்று ஒரு மனிதன் குரங்காக பரிணாமம் பெற்றான், இன்று ஜப்பானில் பரிணாமம் நடந்துள்ளது என்று எந்த பத்திரிக்கையிலும் செய்திகளையும் நாம் பார்க்க முடிவதில்லை. பரிணாமத் தத்துவம் என்பதே இன்று வரை நிரூபிக்கப் படாத ஒரு கோட்பாடு என்பதை தங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

'மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள். அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்'

4 : 1 - குர்ஆன்

குர்ஆன் கூறும் இந்த உண்மையைத்தான் இன்றைய அறிவியலும் ஒத்துக் கொள்கிறது. இதையும் நீங்கள் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் வேறு எந்த மார்க்கத்தில் மனிதன் உருவாகி பல்கிப் பெருகினான் என்பதை நீங்கள் தான் விளக்க வேண்டும்.

//அது உண்மையென்றால், ஆதாம் ஏவாளின் பிள்ளைகளுக்குள் தொடர்பு ஏற்பட்டு, உடலுறவு கொண்டு தானே மனித சமூகம் ஏற்பட்டிருக்க வேண்டும்? இது மிகவும் கேவலமாக அல்லவா இருக்கிறது?//

கேவலம் என்பது தற்போதய சமுதாயத்திற்கு. அன்றைய சமூகத்தில் அத்தகைய இனப் பெருக்கத்தை இறைவன் அனுமதித்திருந்தான். மக்கள் பெருக்கம் ஏற்பட அன்று அது அவசியமாக இருந்தது. அந்த தேவை முடிந்தவுடன் உடன் பிறந்தவர்களை திருமணம் செய்வது தடை செய்யப் பட்டு விட்டது. அன்று ஏற்பட்ட தடையை இன்று வரை நாம் பாதுகாத்து வருவதால்தான் அது கேவலம் என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது.

suvanappiriyan said...

சுட்டு விரல்!

//ஆராய்ச்சி வளம் மிக்க உங்கள் பதிவுகள் நிறைய விழிகளைத் திறக்க வல்லன.//

இறைவனுக்கே புகழ் அனைத்தும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

அசலமோன்!

எங்கே உங்களின் பின்னூட்டம்? நோன்பு வைத்திருப்பதால் சற்று களைப்பாக இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி!

ஞானவெட்டியான் said...

சகோதரர் சுவனப் பிரியன் அவர்களுக்கு!

//ஒவ்வொருவரும் தனக்கு தெரிந்த கோணத்தில் பிரச்னையை அலசுவார்கள். அதன்படி தங்களின் கருத்தும் இருக்கிறது.//

நான் எனக்கு என் அநுபவத்தால் புரிந்த கருத்துக்களைச் சொல்லுகிறேன்.

//அண்டத்தில் உள்ளது பிண்டத்தில். ஆக, பூமியின் மையம் நம் தலையின் மையப்பகுதியே. இதற்கும் தாங்கள் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை.//

"உலகத்திற் பட்ட உயிர்க்கெல்லா மீசன் நிலவுபோ னிற்கும் நிறைந்து."
(ஞானக் குறள் - 129)

ஈசன் எங்குமிருக்கிறான். பிரபஞ்சத்தில் இருப்பவன் நம் உடலில் இல்லாமலா போய்விடுவான்?
பிரபஞ்சம் - அண்டம்
உடல் - பிண்டம்

"பிண்டதினுள்ளே பேரா திறைவனைக்
கண்டுதா னர்ச்சிக்கு மாறு."
(ஞானக் குறள் - 77 )


//பிரபஞ்சமாகிய அண்டத்தில் உள்ளவன் பிண்டமாகிய உடலின் தலையில் உள்ளான்.// இது உங்களின் சொந்த கருத்து என்று நினைக்கிறேன். அண்டம் பிண்டம் என்று படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தாலும் எந்த கருத்துக்கும் வேதங்களின் ஆதாரம் வேண்டும்.//
//புண்ணியத் தலம் நம் உடலின் தலையே ஆகும். இதுவும் உங்களின் சொந்த கருத்தே! இதற்கும் நீங்கள் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை.//

'தேடியே அலையாதே சிங்கென்றேதான்
சிரத்திலங்குஞ் சிவசூட்சந் தெரிந்துபோகும்
மாடியே மங்கென்ற வெழுத்தைச்சேர்க்க
மரயோக சித்தியடா மனதுள்ளோர்க்கே"
(தெட்சணாமூர்த்தி ஞானச் சுருக்கம் - பாடல் 3)

"கண்டதிலே சூட்சமத்தைச் செப்பக்கேளு
கைலாசஞ் செவிநடுவே வட்டமப்பா
விண்டிடும யேசன்மனை யிடதுநேத்ரம்
விருதுபெற்ற ருத்ரன்மனை வலது நேத்ரம்
கொண்டதொரு மால்வீடு நாக்காமப்பா
கோகனக விதிவீடு மூக்காமையா
துண்டநுனி நடுவாக யெட்கடைக்கீழ்
தும்பிக்கை மூர்த்தியுட சூட்சந்தானே."
(போகர் ஞான சாராம்சம் - பாடல் 63)

இவையெல்லாம் சிரமாகிய தலையில்தான் உளது.

//ஆம் நீரும் நெருப்பும் இல்லையெனில் உயிர்கள் வாழமுடியாது. நீரும் நெருப்பும் சேர்ந்துள்ள இடமே கண்கள்தான்.//
இது அறிவியலாரின் கண்டுபிடிப்பா? அல்லது வேதங்களின் கருத்தாக இருந்தால் எந்த இடம் என்ற ஆதாரத்தை தந்தால் நானும் தெரிந்து கொள்வேன்.//

ஒரு பொருளைக் கண்களால் கூர்ந்து பாருங்கள், நண்பரே! கண்களில் தெரியும் வெப்பம். அதிலிருந்து ஒழுகும் கண்+நீர். நீரும், நெருப்பும் அங்கே இருப்பதை அறிவீர்கள்.

“அண்டங்க ளேழு மகண்டமு மாவியுங்
கொண்ட சராசர முற்றுங் குணங்களும்
பண்டை மறையும் படைப்பளிப் பாதியுங்
கண்ட சிவனுமென் கண்ணன்றி யில்லையே.”
(திருமந்திரம் - 1834)


//இயற்கையே கன்சூல் மஹபியா என்னும் இருள்தான். இருளில் நுழைந்தால்தான் இயற்கையாகிய இறையை உணர இயலும்.//
இங்கு இருள் என்று வேதம் சொல்வது அறியாமை என்ற பொருளில். அறியாமையில் இருக்கும் ஒருவனை உண்மையை விளக்கி நேர் வழிப் படுத்த வேண்டும் என்பது இதன் கருத்து. ஆனால் தாங்கள் கொடுக்கும் விளக்கம் உங்களின் சொந்த கருத்து என்று நினைக்கிறேன்.?//

"இருளது சத்தி ஒளியதெம் அண்ணல்
பொருளது புண்ணியர் போகத்துள் இன்பம்
தெருளது சிந்தையைத் தெய்வமென் றெண்ணில்
அருளது செய்யுமெம் ஆதிப் பிரானே."
(திருமந்திரம் - வயிரவி மந்திரம் - 1095)


//மேற்கண்ட வசனங்களின் மூலம் நம் விருப்பத்திற்கு கடவுள்களின் உருவங்களை உருவாக்கி வணங்குவது கூடாது என்று விளங்குகிறோம்.
//பக்திவழி செல்வோருக்கு இவ்வாறு அறிவுறுத்தினால் துடுப்பு இல்லா படகைப்போல் அவர்கள் தத்தளிப்பார்கள்.//
// 'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.'//

அவிறைத்தூதர்கள் நிறுவிய படிமங்களைத்தான் அவர்கள் வணங்குகிறார்கள். அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். அவர்களைக் கட்டாயப்படுத்த வேண்டாம்.
நமக்குப் புரிந்து விட்டது. நம் வழியில் நாம் செல்வோம். அவர்களும் புரிந்தவுடன் நம்முடன் சேர்ந்துகொள்வார்கள்.


//வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!//
நன்றி. நானும் ஆதரங்கள் தந்து விட்டேன் என நினைக்கிறேன்.

suvanappiriyan said...

சகோதரர் ஞான வெட்டியானுக்கு!

ஆன்மீக கருத்து என்பது இறைவன் புறத்திலிருந்து வர வேண்டும். அல்லது இறைத் தூதர்கள் நமக்கு விளக்க வேண்டும். நீங்கள் காட்டியிருக்கும் ஆதாரங்கள் நம் முன்னோர்களில் சிறந்த ஆன்மீகவாதிகள் தாங்கள் இறைவனைப்பற்றி உணர்ந்தவைகளை பாடல்களாக எழுதியிருப்பதையே! இஸ்லாமியர்களில் கூட குணங்குடி மஸ்தான், உமறுப் புலவர் போன்ற கவிஞர்கள் பல செய்யுள்களை இயற்றியுள்ளனர். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை குர்ஆனுக்கும் நபி மொழிக்கும் மாற்றமாகவே இருக்கும். எனவே அவற்றை எல்லாம் முஸ்லிம்கள் இஸ்லாமிய வரம்பிற்குள் கொண்டு வர மாட்டார்கள். இது போல் நாம் கடை பிடிக்கும் இறைக் கொள்கை இறைவன் அருளியதாக இருக்க வேண்டும்.

//பிரபஞ்சமாகிய அண்டத்தில் உள்ளவன் பிண்டமாகிய உடலின் தலையில் உள்ளான்.//

//ஈசன் எங்குமிருக்கிறான். பிரபஞ்சத்தில் இருப்பவன் நம் உடலில் இல்லாமலா போய்விடுவான்?
பிரபஞ்சம் - அண்டம்
உடல் - பிண்டம்//

இரண்டுமே இறைவனைப் பற்றிய உங்கள் கருத்துக்களே! முதலில் தலையில் இருப்பதாக சொன்ன நீங்கள் அடுத்த பின்னூட்டத்தில் உடல் முழுக்க வியாபித்திருக்கிறான் என்கிறீர்கள். மனிதர்கள் தங்கள் சொந்த முயற்ச்சியில் இறை தேடலை ஆரம்பித்தால் இது போன்ற குழப்பங்களெல்லாம் வரும் என்பதை சுட்டிக் காட்டவே இரண்டையும் எடுத்தெழுதினேன்.

//அவிறைத்தூதர்கள் நிறுவிய படிமங்களைத்தான் அவர்கள் வணங்குகிறார்கள். அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். அவர்களைக் கட்டாயப்படுத்த வேண்டாம்.
நமக்குப் புரிந்து விட்டது. நம் வழியில் நாம் செல்வோம். அவர்களும் புரிந்தவுடன் நம்முடன் சேர்ந்துகொள்வர்கள்.//

'நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள்.'

9:71 - குர்ஆன்

இதன் மூலம் நம் சகோதரர்கள் வழி தவறி தவறான பாதையில் இருந்தால் அதை சுட்டிக் காட்டி திருத்த முயற்ச்சிப்பது நல்லோர்களின் செயல் என்று விளங்குகிறோம்.

'இவ்வுண்மை உங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ளது என்று முகம்மதே கூறுவிராக! விரும்பியவர் நம்பட்டும். விரும்பியவர் மறுக்கட்டும்.'

18 : 29 - குர்ஆன்

உண்மையை எடுத்துச் சொல்வது மட்டுமே நம்மீது கடமை. இதற்காக யாரையும் கட்டாயப் படுத்தக் கூடாது என்றும் விளங்குகிறோம்.

'தர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதைத்தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுக்களில் எந்த நன்மையும் இல்லை. இறைவனின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்கு மகத்தான கூலியை வழங்குவோம்.'

4 : 114 - குர்ஆன்

இதன் மூலம் நம் சகோதரர்களை நேர் வழியின் பால் அழைப்போரை இறைவன் மிகவும் விரும்புகிறான் என்று விளங்குகிறது. அந்த இறைவனின் ஆசியை நானும் நீங்களும் பெற வேண்டாமா?

ஞானவெட்டியான் said...

அன்பு நண்பரே,
இறைவனே நேரடியாக வந்து மறைகளை மொழிந்ததாகச் சரித்திரம் இல்லை.
இறைத் தூதராய் இருப்பினும் நபிகள் நாயகமும் நம் முன்னோர்களில் ஒருவரே. அவர் கூறியதை ஏற்றுக்கொள்ளுபவர்கள், அதே போல் உள்ளதை ஏன் மறுக்கவேண்டும்?
வீண் விவாதம் கால விரையம்.
இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

suvanappiriyan said...

சகோதரர் ஞான வெட்டியானுக்கு!

//இறைவனே நேரடியாக வந்து மறைகளை மொழிந்ததாகச் சரித்திரம் இல்லை.//

உண்மைதான்.

//இறைத் தூதராய் இருப்பினும் நபிகள் நாயகமும் நம் முன்னோர்களில் ஒருவரே. அவர் கூறியதை ஏற்றுக்கொள்ளுபவர்கள், அதே போல் உள்ளதை ஏன் மறுக்கவேண்டும்?//

நான் மொழியால் தமிழன். இனத்தால் திராவிடன். முகமது நபியோ அரபியர். எங்கோ ஒரு மூலையில் இருக்கும் என் மொழியும் அல்லாத என் இனமும் அல்லாத ஏன் என் நாட்டையும் கூட சார்ந்திடாத ஒருவரின் சொல் செயல் அங்கீகாரத்தை நான் ஏன் பின் பற்ற வேண்டும்?அதற்கான முக்கிய காரணம் அவர் ஒரு இறைத் தூதர். இறைத் தூதர் என்ற ஒரே காரணம் தான் என் தாய் தந்தையரின் சொல்லை விட அவரின் சொல்லுக்கு நான் மதிப்பு கொடுக்கிறேன். இது ஏதோ என் பெற்றோர் இஸ்லாமியர். அதனால் வீம்புக்காக நான் முகமது நபியை தூக்கிப் பிடிக்கிறேனா என்றால் அதுவும் இல்லை. இவர் இறைத் தூதர்தான் என்பதற்கு ஒரே ஆதாரம் நம்மிடம் இருக்கும் குர்ஆன். கையெழுத்தே போடத் தெரியாத ஒரு குருட்டு சமுதாயத்தில் தோன்றிய நபிகள் நாயகம் தன் கையால் இத்தகைய எந்நாட்டவருக்கும் பொருந்தக் கூடிய, எக்காலத்துக்கும் ஏற்கக் கூடிய, உலக ஆராய்ச்சியாளர்களே ஆச்சரியப் படத்தக்க ஒரு நூலை தர முடியாது என்பதுதான் நான் இந்த முடிவுக்கு வரக் காரணம்.


'நமது அடியாரான முகம்மதுக்கு நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு அதில் நீங்கள் உண்மையாளராகவும் இருந்தால் இது போன்ற ஒரு அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். இறைவனைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்.'
2 : 23 - குர்ஆன்

'அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? இது இறைவன் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் அனேக முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.'
4 : 82 - குர்ஆன்

இது போன்ற வசனங்களின் சவால்கள் இன்று வரை முறியடிக்கப் படாததால் நான் குர்ஆனை இறை வேதம் என்றே நம்புகிறேன்.இதற்கு முன் அருளிய வேதங்களையும் நம்புகிறேன். மதிக்கிறேன்.

மேலும் நம் முன்னோர்களான தமிழ் அறிஞர்கள் திருவள்ளுவர், சித்தர்கள், திரு மந்திரத்தை அருளியவர்கள், ரிக்,யஜீர், சாம,அதர்வண வேதத்தை அருளியவர்கள் அனைவரையும் நானும் மதிக்கிறேன். இவற்றில் ஏதாவது ஒன்று முன்பு இறைச் செய்தியாகக் கூட வந்திருக்கலாம். இது போன்ற வேதங்களில் புராணங்களில் மனிதக் கருத்துகளும் புகுந்து விட்டதால் இதற்கு முன் அருளிய வேதங்களையெல்லாம் உள்ளடக்கி உலக முடிவு நாள் வரைக்கும் வரக் கூடிய மக்களுக்கு குர்ஆனை இறைவன் வழங்கினான். எனவே தான் மற்ற வேதங்களை நான் மதிப்பதோடு பின் பற்றத் தக்கதாக குரஆனைப் பார்க்கிறேன்.

//வீண் விவாதம் கால விரையம்.
இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.//

தவறு நண்பரே! நடிகைகளின் அங்கங்களை ஆராய்ச்சி செய்து கட்டுரை வெளியிடும் இந்த காலத்தில் இது போன்ற இறைத் தேடலுக்கும் நம் நேரத்தை ஒதுக்கி பயனுள்ள வழியில் நம் பொழுதைக் கழிப்பது வீண் விரயம் அல்ல. நம் இறப்புக்குப் பின் நம்மைத் தொடர்ந்து வரக் கூடிய ராயல்டிகள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

நியமத்!
//idhu pondra katturai melum ida ellam valla iraivanai dua seigireyn//

உங்களைப் போன்றோரின் பிரார்த்தனைகளை என்றும் எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து வருகை தாருங்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அரவிந்தன் நீலகண்டன் said...

//பூமத்திய ரேகையை ஒட்டியே மக்கா நகர் அமைந்திருப்பதையும் நாம் பார்க்கிறோம்.//
அன்புள்ள சுவனப்பிரியன்,
இது தாங்கள் கூறியுள்ளது. தயை செய்து இங்கு கொடுக்கப்பட்டுள்ள உரலை காணவும் :http://jwocky.gsfc.nasa.gov/imglib1/latlon.gif
மக்காவின் தீர்க்க ரேகை 39.49 கிழக்கு
எந்த விதத்தில் மக்கா நகர் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்திருப்பதாக கூறுகிறீர்கள் என தெரிந்துகொள்ளலாமா? (அல்லது 'பூமியின் மையம்' http://www.qiblacentral.com/ போன்ற இஸ்லாமிய பிரச்சார இணைய தளங்களில் அமைந்துள்ளதா? இந்தமாதிரி உலகத்தின் பல புள்ளிகளை உலகமையம் என கூறலாம். உதாரணமாக இங்கே காணவும் எகிப்தின் காஸா உலகமையமாக காட்டும் வரைப்படம் http://mars-news.de/pyramids) ஆனால் நீங்கள் தெள்ளத்தெளிவாக பூ மத்திய ரேகை எனக் கூறியுள்ளதை நோக்கவும். இதைப்போலவே உலகின் அனைத்து மதங்களும் தத்தம் புனித தலத்தை உலகின் மையம்/இதயம் எனக்கூறுகின்றன. இவையெல்லாம் உருவகங்களே அன்றி உண்மை அல்ல.

அன்புடன்
அரவிந்தன் நீலகண்டன்

ASHAK SJ said...

CAPitalZ said...

மனிதப்படைப்பை பற்றி மூன்று கருத்துக்களே உள்ளது
ஒன்று குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான்
இரண்டாவது இஸ்லாமும் கிருஸ்துவமும் சொல்லும் ஆதம் ஏவாள் மூலம், மாறுபட்ட இரட்டை மாறி திருமணம் செய்து மக்கள் உண்டானார்கள் என்பது - இதை பலர் கேவலம் என்று நினைக்கிறார்கள்
மூன்றாவது - பிரம்மன் தன படைப்பையே புணர்ந்து மக்களை உண்டாக்கினான்

மேலே உள்ள மூன்றில் எது அறிவுக்கு சரியென்று படுகிறதோ அதை எடுத்துக்கொள்ளுங்கள், இஸ்லாம் கூறுவது கேவலம் என்று நினைத்தால் ஹிந்து மதம் கூறுவது என்ன என்பதை தெளிவுபடுத்துங்கள்