Followers

Saturday, January 18, 2014

சரத் சந்தோஷூம் சையது சுப்ஹானும்!





சரத் சந்தோஷ் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். சையது சுப்ஹான் நமது மதுரையைச் சேர்ந்தவர். இருவரும் விஜய் டிவி நடத்தும் 'சூப்பர் சிங்கர்' போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள். இதில் முதல் இடத்தை பெறுபவருக்கு 60 லட்ச ரூபாய் பெறுமானமுள்ள வீடு கிடைக்கும். ரன்னருக்கு ஒரு கிலோ தங்கமும் கிடைக்கும். செமி ஃபைனலில் முதல் மூன்று இடத்தில் முதல் இடத்தை திவாகரும் இரண்டாம் இடத்தை கேரளாவைச் சேர்ந்த பார்வதியும் பெற்று விட்டனர். மூன்றாம் இடத்துக்கு இரண்டு பேர் போட்டியிடுகின்றனர். அவர்கள் இருவர்தான் சையது சுப்ஹானும் சரத் சந்தோஷூம். இது செமி ஃபைனலே! ஃபைனல் இன்னும் சில வாரங்களில் நடக்கும்.

மூன்றாம் இடத்துக்கான செமி ஃபைனல் தேர்வு தேர்வு எப்படி நடத்தப்பட்டது என்பதை இந்த காணொளி விளக்குகிறது. இரண்டு பேருமே இணைபிரியாத நண்பர்கள். எங்கு சென்றாலும் எங்கு அமர்ந்தாலும் ஒன்றாக செல்வர். ஜாதி மதம் இவர்களை பிரிக்கவில்லை. இந்த இரண்டு உயிர் நண்பர்களுக்கு இடையில் போட்டி. போட்டியின் முடிவுக்கு முன்னால் சையதின தாயாரிடம் கருத்து கேட்டனர். அதற்கு அவர் 'எனக்கு எப்படி சையதோ அது போல் சரத்தும் எனது பிள்ளைதான். யார் வெற்றி பெற்றாலும் சந்தோஷமே' என்று கூறியது மத நல்லிணக்கத்தை மேலும் மெருகூட்டுவதைப் போல் இருந்தது.

மிகக் கடுமையாக நடந்த போட்டியில் சையது சுப்ஹான் வெற்றி பெற்று விடுகிறார். அந்த அரங்கமே வெற்றிக் களிப்பில் இருக்கிறது. ஆனால் வெற்றி பெற்ற சையது சுப்ஹானின் கண்களில் இருந்து வருத்தத்தால் ஏற்பட்ட கண்ணீர் வழிந்தோடி வருகிறது. தனது உயிர் நண்பன் இந்த மாபெரும் போட்டியிலிருந்து விலக நாமும் ஒரு காரணமாக இருந்து விட்டோமே என்ற மன உறுத்துதலால் சையதின் உணர்வுகளை அவரால் கட்டுப்படுத்த முடியாமல் அழுகிறார்.

பிண்ணனி பாடகர் ஸ்ரீநிவாஸ் 'சையத்! நீ ஃபைனலுக்கு தேர்வாகியுள்ளாய்! சந்தோஷமாக இரு!' என்று சொல்கிறார். அனால் சையதோ 'எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது! நான் போயிருந்தால் கூட வருத்தப்பட்டிருக்க மாட்டேன்' என்று சொல்லி தனது நண்பனை கட்டித் தழுவுகிறார். தோல்வியடைந்த சரத்தோ 'சையத் வெற்றி பெற்றது எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது. அவன் ஃபைனலிலும் தனது திறமையை நன்கு காட்டுவான்' என்று தனது நண்பனின் வெற்றியை பெரிதாக எண்ணுகிறார். நெகிழ்ச்சியான தருணம்.

வெற்றி பெற்றவர் நண்பனுக்காக வருத்தப்படுவதும் தொல்வியடைந்தவர் நண்பனின் வெற்றிக்காக சந்தோஷப்படுவதும் பார்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

அண்ணன் தம்பிகளாக உடன் பிறப்புகளைப் போல் வாழ்ந்து வரும் இந்த ஜோடியைப் போல்தான் நமது பாரதத்தில் பெரும்பாலான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. பள்ளி நாட்கள், கல்லூரி நாட்களிலெல்லாம் இந்த மத ஒற்றுமையை மிக சர்வ சாதாரணமாக காணலாம். எனது இரண்டு பையன்களும் வீட்டில் பிரியாணி அல்லது சிறப்பான உணவுகள் எது செய்தாலும் தனது இந்து நண்பர்களுக்காக கேரியரில் வைத்து தூக்கத்தை மறந்து டூ வீலரில் சென்று கொடுத்து விட்டு வருவதை ஆச்சரியத்தோடு பார்ப்பேன். சில நேரங்களில் தனது பாட்டி வீட்டுக்கு சென்று பாட்டியிடம் ஏதாவது பலகாரங்கள் செய்யச் சொல்லி தனது இந்து நண்பர்களுக்கு ஆசையோடு கொண்டு செல்லும் இந்த அன்பை விதைத்தது யார்?

அதே போல் எனது பிள்ளைகளின் இந்து நண்பர்களும் தங்கள் வீடுகளில் பொங்கல், தீபாவளி பலகாரங்களை எங்கள் வீட்டுக்கு அனுப்புவது இன்று வரை தொடர்ந்து வருகிறது. அன்பினால் பிணையப்பட்ட இந்த நட்புக்களை சில அரசியல்வாதிகள் தங்களின் சுயநலத்துக்காக பிரிக்க பார்க்கின்றனர். கலவரங்களை தூண்டி விட்டு ஓட்டுக்களை அறுவடை செய்ய முயற்சிக்கின்றனர்.

அரசியல்வாதிகள் என்னதான் திட்டங்களை தீட்டினாலும் இந்திய மக்கள் தாங்கள் என்றுமே மதத்தால் ஒருவரையொருவர் வெறுக்க மாட்டோம் என்பதை பலமுறை நிரூபித்து வந்துள்ளார்கள். அது வரக் கூடிய பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்.

'மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் இறைவன் உங்களுக்கு தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை இறைவன் விரும்புகிறான்.'
-குர்ஆன் 60:8

17 comments:

Anonymous said...

/முற்போக்கு முகமூடிகள்./
did you see this post by savukku? is it true or false? if it is true what is it that TMMK or tawheed jamath has done so far on this? all muslim orgns have brought entire chennai to a stand still for a second grade movie by copy cat hero kamalhassan.
on this particular case has tmmk or tawhid jamath has organized any protest to arrest these culprits or to educate muslim youths? the issue here is even worse than viswaroopam matter.

i am a muslim and i am ashamed that no muslim orgn is raising voice against these rowdies. what is your opinion?

suvanappiriyan said...

//what is your opinion?//

இந்த விவகாரத்தில் நான் என்ன சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். குடிகாரனுக்கும், பெண்களை போகப் பொருளாக பாவிப்பனுக்கும் இஸ்லாத்தில் இடம் இல்லை. அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க சம்பந்தப்பட்டவர்கள் முயற்சிக்க வேண்டும். இதற்கான போதிய விளக்கத்தை அமைச்சர் நஜீமும் தந்து விட்டார். இதில் மேற் கொண்டு தவ்ஹீத் ஜமாத்தும், தமுமுகவும் என்ன செய்து விட முடியும்? குற்றவாளிகள் எந்த மதமாக இருந்தாலும் எந்த சாதியாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்து இல்லை.

Anonymous said...


புதுடில்லி : சிறையில் இருக்கும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி யாசின் பட்கலை விடுதலை செய்யாவிட்டால் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அச்சுறுத்தல் காரணமாக அவரின் பாதுகாப்பை பலப்படுத் வேண்டும் என கெஜ்ரிவாலிடம் போலீசார் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. யாசின் பட்கல் உள்ளிட்ட 2 பயங்கரவாதிகளை விடவிக்க பயங்கரவாதிகள் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

-தின மலர்

ஆக மோடி மஸ்தான் தனது வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார். :-)

Anonymous said...

மெரினாவில் காணும் பொங்கல் கொண்டாட வந்த கூட்டத்தில் காணாமல்போன 7 வயது சிறுமியை அவரது வீட்டுக்கே அழைத்து வந்து ஒப்படைத்தார் ஒரு முஸ்லிம் இளைஞர்.

சென்னை திருவொற்றியூர் கிராம தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு ராஜா (16), விஜயலட்சுமி (7) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். காணும் பொங்கல் கொண்டாட சிவக்குமார் தனது குடும்பத்துடன் மெரினாவுக்கு வியாழக்கிழமை வந்தார்.

ராஜாவின் கையை சிவக்குமா ரும், விஜயலட்சுமியின் கையை கலைச்செல்வியும் பிடித்துக் கொண்டு மெரினா கடற்கரை கூட்டத்தில் நடந்தனர். அப்போது செல்போன் அழைப்பு வரவே விஜயலட்சுமியின் கையை விட்டுவிட்டு செல்போனில் பேசி னார் கலைச்செல்வி. அப்போது கலைச்செல்வி போலவே இன்னொரு பெண் செல்ல இதுதான் தனது அம்மா என்று அந்த பெண்ணின் பின்னாலே நீண்ட தூரம் சென்றுவிட்டார் விஜயலட்சுமி. அவ்வளவுதான் லட்சக்கணக்கானோர் திரண்ட மணல் வெளியில் பெற்றோரும், சிறுமியும் பிரிந்துவிட்டனர்.

வேடிக்கை பார்த்துக் கொண்டே நீண்ட தூரம் சென்ற பின்னர் தாயை பிரிந்து வந்து விட்டதை அறிந்து விஜயலட்சுமி அழ ஆரம்பித்து விட்டார். பெற்றோரும் விஜயலட்சுமியை தேடினர். பின்னர் அங்கிருந்த காவல் உதவி மையத்தில் சிவக்குமார் புகார் தெரிவித்தார். காவல் துறையினரும் ஒலி பெருக்கியில் அறிவிப்பு செய்தனர்.

இதற்கு இடைப்பட்ட நேரத்தில், ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருந்த விஜய லட்சுமியை, குடும்பத்துடன் மெரினாவுக்கு வந்திருந்த ஒருவர் பார்த்து விவரம் கேட்டார். ஆனால் பதில் சொல்லாமல் தொடர்ந்து அழுத விஜயலட்சுமியின் நிலைமையை உணர்ந்து, தன்னுடன் வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார். விஜயலட்சுமியின் அழுகையை நிறுத்தி, இரவில் வீட்டில் தங்க வைத்து மறுநாள் காலையில் வீட்டின் முகவரியை கேட்டபோது தெளிவாக கூறியிருக்கிறார் விஜயலட்சுமி. உடனே மோட் டார் சைக்கிளில் அவரை ஏற்றிக் கொண்டு அவரது வீட்டுக்கு செல்ல, குழந்தையை காணா மல் பரிதவித்துக் கொண்டி ருந்த கலைச்செல்வியும் அருகே இருந்தவர்களும் விஜய லட்சுமியை கட்டிப்பிடித்து அழத் தொடங்கிவிட்டனர். கடமை முடிந் தது என்று நினைத்து, விஜய லட்சுமியை அழைத்து வந்த நபர் அமைதியாக சென்றுவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து விஜய லட்சுமியின் தந்தை சிவக்குமாரிடம் கேட்டபோது, "எனது குழந்தையை பத்திரமாக அழைத்து வந்தவர் ஒரு முஸ்லிம் நண்பர். அவர் மாதவரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது மட்டும்தான் எங்களுக்கு தெரியும். அவரது பெயர் கூட தெரியவில்லை.

அந்த நல்ல மனிதருக்கு நேரில் நன்றி சொல்ல நினைக்கிறேன். குழந்தை காணாமல்போன நேரம் முதல் நானும், எனது மனைவியும் பித்து பிடித்ததுபோல இருந்தோம்" என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/article5588119.ece?homepage=true

Anonymous said...

/இந்த விவகாரத்தில் நான் என்ன சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்./

when a muslim woman is rapad would you just say that the culprits should be arrested and punished and keep quiet for the police to do its duty?
tmmk and tawhid jamath would have made a big issue(rightly that how it should be done) if such events happen.
but when muslim youths do the mistake you are coolly saying that punishment should be given to them. thats it!!!? this is called hypocrisy.
what is TNTJ and tmmk's responsibility then? disturbing traffic in mount road and creating problems for normal people for some stupid movie?
these two movements are the biggest problems for tamil muslims. hope they change their ways soon.
i have nothing more to say. your blog. u write what you want.

Anonymous said...

சுவனப்பிரியர்,
ஒற்றுமையைப பற்றிய உங்கள் வியாக்கியானம் நன்றாகத்தான் இருக்கிறது.ஆனால்
என்னவோ அரசியல்வாதிகளும் மற்றவர்களும் தான் ஒற்றுமை கெட காரணம் என்று கூறி
மற்றொரு முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டீர்களே. அதாவது
இந்தியாவில் மத பிரச்சனை. மத ஒற்றுமை குலைவுக்கு முக்கிய காரணமே உமது
கூட்டத்தின் மத மாற்ற நடவடிக்கைகள் தான். இந்த நாட்டை இஸ்லாமிய நாடாக்க
வேண்டும் என்ற உமது கூட்டத்தின் மத வெறி தான் ஒற்றுமை குலைய முக்கிய
காரணம். ஊருக்கு ஊர் தாவா அமைப்புகளை வைத்து மக்களை மதமாற்றம் செய்து மத
பிரச்சினைகளுக்கு முதலில் வித்திடுவதே இஸ்லாமிய தாவா அமைப்புகள் தான்.

suvanappiriyan said...

//these two movements are the biggest problems for tamil muslims. hope they change their ways soon.
i have nothing more to say. your blog. u write what you want.//

நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்னைக்கும் தவ்ஹீத் ஜமாத் தலையிட வேண்டும் என்றால் அரசாங்கம் எதற்கு? வழக்காடு மன்றங்கள்தான் எதற்கு? இது ஒரு சிறுபான்மையினர் அமைப்பு. தங்கள் சக்திக்குட்பட்டே இவர்களால் காரியமாற்ற முடியும்.

தவ்ஹீத் ஜமாத் உருவான பிறகுதான் தமிழகத்தில் புரையோடிப் போயிருந்த மூடப் பழக்கங்கள் முதரமாக்கப்பட்டன. இஸ்லாமிய இளைஞர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்தினர். 3.5 சதவீத இட ஒதுக்கீட்டைப் பொராடி பெற்றுக் கொடுத்ததும் இந்த அமைப்புகள்தான். பொய் வழக்குகள் போட்டு இஸ்லாமிய இளைஞர்களை சில காவல்துறை கருப்பு ஆடுகள் சிக்கவைக்க முயற்சித்த போது ஆட்களை திரட்டி உடன் நியாயத்தை பெற்றது இந்த இயக்கங்கள் தான். இரத்ததான முகாமை ஊர் தோறும் நடத்தி தமிழகத்திலேயே பல வருடங்களாக முதலிடத்தில் இருப்பதும் தவ்ஹீத் ஜமாத் தான்.

அரசின் பாரபட்ச போக்கால் வன்முறையை நாடிய இஸ்லாமிய இளைஞர்களை போராட்டம் என்ற ஆயுதத்தின் மூலம் திசை திருப்பி தமிழகத்தை அமைதிப் பூங்காவாக மாற்றியதில் தவ்ஹீத் ஜமாத்துக்கு பெரும் பங்குண்டு. இதை எல்லாம் மறுக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.

Anonymous said...

இஸ்லாமிய
மதவெறி இந்த நாட்டை இஸ்லாமிய நாடாக்க செய்யும் நரி தந்திரம் தான் இந்த
சகோதர உறவு கொண்டாடுவது. முதலில் உறவு கொண்டாடுவார்கள், பிறகு உன் மதம்
தவறு என்னுடைய மதத்திற்கு வா என்று தங்கள் நரித்தனத்தை காட்டுவார்கள்.
கல்வி கூடங்களில், பணி புரியும் இடங்களில் எல்லா இடங்களிலும் உடன்
படிக்கும் மற்றும் பணிபுரிபவர்களிடம் சமயம் பார்த்து தங்கள் மதமாற்ற வேலையை
ஆரம்பிப்பார்கள். இந்தியா எங்கும் பரவலாக இது நடந்து கொண்டுதான்
இருக்கிறது. மேலும் தாவா அமைப்புகள் மூலமாக பல திட்டமிடுதல்கள் மூலம்
மதமாற்றத்தை சிறப்பாக நடத்தி வருகிறார்கள். எனவே சுவனரே அடுத்தவறை சுட்டி
காட்டும் முன் நீங்கள் உங்களை சரி படுத்தி கொள்ளுங்கள்.

suvanappiriyan said...

// ஊருக்கு ஊர் தாவா அமைப்புகளை வைத்து மக்களை மதமாற்றம் செய்து மத
பிரச்சினைகளுக்கு முதலில் வித்திடுவதே இஸ்லாமிய தாவா அமைப்புகள் தான்.//

இஸ்லாமியர்கள் இந்தியாவில் பல தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். மோடி போன்ற பாசிஸ்டுகளால் திட்டம் போட்டு முஸ்லிம்கள் கருவறுக்கப்படுகிறார்கள். அரசு உத்தியோகத்தில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை. தலித்களை விட முஸ்லிம்கள் பின்தங்கி இருப்பதாக சச்சார் கமிட்டி அறிக்கை கூறுகிறது. காவல் துறையும் ராணுவமும் முஸ்லிம்களை பொய் கேசுகளில் உள்ளே சரமாரியாக தள்ளிக் கொண்டிருக்கிறது. நீதிமன்றங்களே இது பற்றிய கவலையை வெளியிடும் அளவில்தான் நிலைமை இருக்கிறது.

இவ்வளவு பிரச்னைகள் இஸ்லாமியர்கள் இந்தியாவில் எதிர் நோக்க அதையும் மீறி இந்து மக்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மதம் மாறுவதற்கான காரணம் என்ன? உங்கள் மதத்தில் உள்ள தீண்டாமை. தமிழை நீச பாசை என்று கூறி ஒதுக்குவது. பார்பனர்களை தவிர மற்றவர்களை சூத்திரர்கள் என்று கூறி இழிவு படுத்துவது என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

உங்கள் மதத்தில் உள்ள கொடுமைகளை கண்டு பொறுக்காமல் அவன் இஸ்லாத்தை நோக்கி ஓடி வருகிறான். கிறித்தவர்களைப் போல் நாங்கள் பணம் கொடுப்பதில்லை. இருந்தும் இஸ்லாம் வளர காரணம் உங்கள் மதத்தில் உள்ள தீண்டாமையே. அதை சரி செய்யுங்கள் பிரச்னைகள் தானாக அடங்கும். அது வரை இது தொடர் கதையே!

Anonymous said...

சுவனரே,
இன்றைய தினத்தில் மத ஒற்றுமையை வளர்க்கிறேன் என்ற பெயரில் மத மாற்றம்
செய்து, அதனை இணைய தளத்தில் விளம்பரம் செய்து திட்டமிட்டே இந்த நாட்டை
இஸ்லாமிய நாடாக்க துடிக்கும் ஒரு வெளிவேட மதவெறி கும்பல் தான் TNTJ. இந்த
கும்பலில் உள்ள முஸ்லீம்களிடம் நட்பு கொள்வதும் பாம்பிடம் நட்பு கொள்வதும்
ஒன்றுதான்.

Anonymous said...

லாகூர்:போலி பாஸ்போர்ட்டில் பயணித்த, குஜராத் பெண்ணை, பாகிஸ்தான் அதிகாரிகள், நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் நிகிதா ரமேஷ். இவரது பெற்றோர் கத்தார் நாட்டில் வசிக்கின்றனர். கத்தாரில் வசித்த போது, பாகிஸ்தானைச் சேர்ந்த, நகை வியாபாரி, முகமது அசாருடன், நிகிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், அசாரை பார்ப்பதற்காக, லாகூர் வந்த நிகிதாவை, விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, அவர் போலி பாஸ்போர்ட்டில் வந்திருப்பது தெரியவந்தது. அசாரை மணந்து, முஸ்லிமாக மாறிவிட்டதாகவும், தற்போது, தன்னுடைய பெயர், இமான் என்றும் நிகிதா தெரிவித்தார்.நிகிதாவை வரவேற்க, விமான நிலையம் வந்த, அசாரிடம் விசாரித்த போது, அவர் சொன்னது உண்மை என்பது உறுதியானது.எனினும், போலி பாஸ்போர்ட்டில் வந்ததற்காக, நிகிதாவை, அதிகாரிகள், கத்தாருக்கு திருப்பி அனுப்பி விட்டனர். "பாகிஸ்தான் சட்டப்படி, போலி பாஸ்போர்ட்டில் வருபவர்களை கைது செய்வதில்லை' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=898761

இந்தியாவுக்கு எதிராக மோடி போட்டுக் கொடுத்த எந்த திட்டத்தை செயல்படுத்த பாகிஸ்தான் வந்தாளோ அந்த ரகசியம் மோடிக்கும், அந்த குஜராத் பெண்ணுக்கும் இறைவனுக்கும் மாத்திரமே தெரியும்.

Dr.Anburaj said...


இதுஒரு சமய நுலா? காட்டறவியின் கூச்சலா?
முஸ்லீம்கள் முஸ்லீம்களோடு மட்டுந்தான் பழக வேண்டும். காபிர்களோடு பழகக்கூடாது, நட்பு பாராட்டக்கூடாது. Qur’an 3:118
3:118. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்(கள் மார்க்கத்தைச் சார்ந்தோர்)களைத் தவிர (வேறெவரையும்) உங்களின் அந்தரங்கக் கூட்டாளிகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; ஏனெனில் (பிறர்) உங்களுக்குத் தீமை செய்வதில் சிறிதும் குறைவு செய்ய மாட்டார்கள்; நீங்கள் வருந்துவதை அவர்கள் விரும்புவார்கள்; அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்தே வெளியாகிவிட்டது; அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்; நிச்சயமாக நாம் (இது பற்றிய) ஆயத்களைத் தெளிவு படுத்திவிட்டோம்; நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்
Qur’an 4:144
4:144. முஃமின்களே! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்; உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கித் தர விரும்புகிறீர்களா?

Qur’an 5:51
5:51. முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.


Qur’an 5:57
5:57. முஃமின்களே! உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிலிருந்தும், காஃபிர்களிலிருந்தும், யார் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களை நீங்கள் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

Qur’an 60:4
60:4. இப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது; தம் சமூகத்தாரிடம் அவர்கள், “உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம்; அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன” என்றார்கள். ஆனால் இப்றாஹீம் தம் தந்தையை நோக்கி: “அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது; ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்” எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது, அன்றியும், அவர் கூறினார்): “எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,”


உங்களது நெருங்கிய உறவினர்கள் காபிர்களாக இருந்தால் அவர்களையும் உதற வேண்டும்.


Qur’an 9:23
9:23. ஈமான் கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும், ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால், அவர்களை நீங்கள் பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால், அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.


Qur’an 58:22
58:22. அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே; (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான்; மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கிறான்; சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள்.

Anonymous said...

January 20, 2014 //

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம், ரஹீம்யார்கான் மாவட்டம், மவுஷாகுனியா பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்டி கட்டா. கடந்த வியாழக்கிழமை வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த இவரது 9 வயது மகளை திடீரென காணவில்லை. மாயமான சிறுமியை போலீசாரும், அவளது உறவினர்களும் தேடி வந்தனர்.

இதற்கிடையே நேற்று சிறுமி வயல்வெளிப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தாள். பிணத்தை கைப்பற்றிய போலீசார் கான்பூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு பிரேதபரிசோதனை செய்ய டாக்டர் மறுத்ததால், சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது, சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

போலீசார் கொலையாளிகளை தேடி வருகிறார்கள். இறந்த சிறுமி இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். அதிகமானோர் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசித்து வருகின்றனர். சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த பெண்கள் கடத்தப்படுதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

பலுசிஸ்தான் மாகாணத்தில் கணிசமான அளவே இந்து மக்கள் உள்ளனர். அவர்கள் தீவிரவாதிகள் மற்றும் கிரிமினல்களால் கடந்த சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளனர்

http://news.tamilstar.com/archives/57799

Anonymous said...

//இஸ்லாமியர்கள் இந்தியாவில் பல தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.// அப்படியா, ஆனால் உங்கள் மத மாற்ற நடவடிக்கைகள் மிக சிறப்பாக நடக்கிறதே, இங்கே நீங்கள் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுவதாக இருந்தால் அது எப்படி நடக்கிறது





//அரசு உத்தியோகத்தில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை//



மூளையை அடகு வைத்த உங்களால் இது போல தான் கூற முடியும். கிறிஸ்தவர்கள் உங்களை விடவும் இந்த நாட்டில் எண்ணிக்கையில் குறைந்தவர்கள் தான். ஆனால் இது போன்ற வார்த்தைகளை அவர்கள் கூறவில்லையே, பெருமளவில் அரசு உத்தியோகத்தில் இருக்கிறார்களே, திறமை இருப்பவனுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும். திறமை அற்றவன்தான் புலம்பி திரிவான் .


//இருந்தும் இஸ்லாம் வளர காரணம் உங்கள் மதத்தில் உள்ள தீண்டாமையே. அதை சரி செய்யுங்கள்//

கண்டிப்பாக நாங்கள் சரி செய்வோம், வரும் காலங்களில் கண்டிப்பாக இது மறையும், ஆனால் அதை வைத்து உமது கூட்டம் இங்கே மத மாற்ற செயல்களில் ஈடுபடுவது நல்லது என்று கூற வருகிறீரா. உமது மதத்தில் உள்ள தீவிரவாதத்தை முதலில் ஒளித்து கட்டிவிட்டு இதை சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்.


///மோடி போன்ற பாசிஸ்டுகளால் திட்டம் போட்டு முஸ்லிம்கள் கருவறுக்கப்படுகிறார்கள். //

//அது வரை இது தொடர் கதையே//

அப்படிஎன்றால் தொல்லை செய்கிறார்கள், கேஸ் போடுகிறார்கள், கருவருக்கிரார்கள் என்று புலம்பகூடாது, உமது கூட்டத்தவரின் செயலுக்கு எதிர் வினைதான் அது. அதுவும் தொடர்ககதையாக நடப்பது தான் நல்லது, இங்கே சுரணை உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் சிறிதளவாவது வெளிப்படுத்தப்படும் அல்லவா . எனவே இந்த நாட்டின் மத பிரச்சனைகளுக்கு உமது கூட்டத்தின் மத மாற்ற நடவடிக்கைகள் தான் முதல் காரணம். மத ஒற்றுமையை பற்றி பேச எந்த அருகதையும் இஸ்லாமியர்களுக்கு இல்லை. நல்ல பிள்ளை வேஷம் போட்டு பதிவுகள் போடாதீர்கள். உமது கூட்டத்தின் நோக்கம் இங்கு எல்லாருக்கும் தெரியும்.

Anonymous said...

//அரசு உத்தியோகத்தில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை//
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அரசு பணியில் 3.5 சதவிகிதம் முஸ்லிம்களின் கோட்டா நிரப்பப்படுவதற்கு ஆள் இல்லை! அனைத்து முஸ்லிம்களின் கவனத்திற்கு பல போராட்டங்களின் மத்தியில் பெறப்பட்ட அரசு பணியில் 3.5 சதவிகிதம் இட ஒதிக்கீட்டில் முஸ்லிம்களின் கோட்டா நிரப்பப்படுவதற்கு ஆள் இல்லை. படித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவகத்தில் உடனடியாக பதிவு செய்ய சொல்லவும். உங்களுக்கு தெரிந்த அனைத்து படித்த முஸ்லிம்களுக்கும் தெரியபடுத்தவும். (பத்திரிக்கைகள் மற்றும் செல் மெசேஜ் மற்றும் டிவி மீடியா, இன்டர்நெட், வெப் சைட் மூலம் இந்த செய்தியை தெரியப்படுந்துங்கள்)அல்லாஹ் நாம் அனைவர் மீதும் அருள்புரிவானாக! அனைவருக்கும் பயனுள்ளத் தகவல்
Source
www.facebook.com/najubudeen.ali

facebook தளத்தில் இஸ்லாமியர் ஒருவர் பதிந்த செய்தி இது. இருக்கும் இடத்தை நிரப்ப ஆள் இல்லையாம். சுவனப்ரியரெ இதற்கு என்ன காரணத்தை கூறுவீர்கள். முதலில் அடகு வைத்த மூளையை மீட்டு சுய உணர்வுக்கு வரவும்.

Anonymous said...

http://www.thowheedvideo.com/dinam_oru_thagaval_bayan/13-01-2014-Ulagalavil-Alaippu-Pani-Ungalaium-Alaikirom/

இதோ, உலகளாவிய அளவில் அண்ணன் PJ மத மாற்றம் செய்ய அழைக்கிறார். ஒட்டு மொத்த உலகமும் மத சண்டை வந்து அழிந்தால்தான் இவர்களுக்கு திருப்தி ஏற்படுமாம். இந்திய அளவில் மட்டும் அல்ல, உலக அளவில் மத பிரச்சனைகளுக்கு காரணம் முஸ்லிம்கள் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. இவர்கள் செய்வதை எல்லாம் செய்வார்களாம், மற்றவர்கள் பொத்தி கொண்டு இருக்க வேண்டுமாம். தன்னுடைய மதத்தை பரப்பியே தீர வேண்டும் என்ற முஸ்லிகளின் மத வெறி தான் தற்காலத்தில் அனைத்து மத சண்டைகள் வர முக்கிய காரணம். இந்த மத வெறியர்களை மக்கள் இனம் கண்டு ஒதுக்கினால் எல்லாம் சரியாகும். இவர்கள் நல்லவர்ககள் போல பேசுவார்கள், மத சார்புஅற்றவர்களாக நடிப்பார்கள், பதிவு போடுவார்கள். ஆனால் தங்கள் மதத்தை பரப்ப வேண்டும் என்பதில் உறுதியாக, குள்ள நரித்தனமாக செயல்படுவார்கள். கூச்சமே இல்லாமல் மத பிரச்சனைகளுக்கு அடுத்தவர்கள் தான் காரணம் என்று கூறுவார்கள். என்ன ஜென்மங்களோ

suvanappiriyan said...

//இதோ, உலகளாவிய அளவில் அண்ணன் PJ மத மாற்றம் செய்ய அழைக்கிறார். //

யாரோ ஒருவர் உங்கள் பூர்வீக மதத்தை விட்டு விடுங்கள் என்று சொன்னால் உடன் நீங்கள் விட்டு விடுவீர்களா? பிளாட்பாரத்தில் வறுமையில் வாடும் ஒரு இஸ்லாமியனிடம் போய் இந்து மதத்துக்கு வந்து விடு என்று கூறிப் பாருங்கள். அவ்வளவு சுலபத்தில் அந்த நபர் இஸ்லாத்தை விட்டு விட மாட்டார். ஆனால் பிரசாரம் பண்ணாமலேயே தினம் 10 பேர் இஸ்லாத்தில் இணைகிறார்கள் என்றால் தவறு உங்கள் மதத்தில் உள்ளது. தீண்டாமையை ஒழித்தால் ஓரளவு கட்டப்படுத்தலாம். அது உங்களைப் போன்றவர்கள் கையில்தான் உள்ளது.