Followers

Monday, September 29, 2008

கடல்களின் சங்கமம் -ஓர் ஆய்வு

கடல்களின் சங்கமம் -ஓர் ஆய்வு

'அவனே இரண்டு கடல்களை ஒன்று சேர்த்துள்ளான். இது மதுரமாகவும தாகம் தீர்ப்பதாகவும் உள்ளது. அது உப்பாகவும் கசப்பாகவும் உள்ளது. அவ்விரண்டுக்குமிடையே ஒரு திரையையும் வலுவான தடுப்பையும் அவன் ஏற்படுத்தியுள்ளான்.
குர்ஆன் - 25 : 53

இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. அவை ஒன்றையொன்று கடக்காது.
குர்ஆன் - 55 : 19

'(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை! அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை.'குர்ஆன் - 27 :62

இரண்டு கடல்கள் சேரக் கூடிய இடத்தில் அவ்விரண்டுக்கும் இடையே தடுப்பையும் தடையையும் ஏற்படுத்தியிருப்பதாக மேற்ச் சொன்ன வசனங்கள் அமைந்துள்ளன.அரபிக் கடலையும் செங் கடலையும் பார்க்கும் போது இதை நாம் உணர்ந்து கொள்ளலாம். இரண்டின் வண்ணத்திலும் வித்தியாசம் தெரியும். ஜோர்டான் நாட்டு எல்லையில் அமைந்துள்ள DEAD SEA சாக் கடல் இதற்கு மேலும் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இந்த கடலில் உப்பின் அடர்த்தி மிகவும் அதிகம்.இது போல் உலகில் உள்ள பல கடல்களின் நிறம் சுவை அதிகம் மாறுபட்டிருக்கிறது. நம் நாட்டில் முக்கடல் சங்கமம் ஆகும் கன்னியாக் குமரியிலும் இதே போன்ற வேறுபாட்டை நாம் காண முடியும்இதை கடல் பற்றி ஆய்வு செய்பவர்கள் ஆராய்ச்சி செய்து இரு கடல்கள் சங்கமம் ஆகும் இடங்களில் இரண்டு தண்ணீரும் சுவையிலும் அடர்த்தியிலும் உப்பின் அளவிலும் வேறுபட்டிருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

'அல்லது ஆழ்கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றெரு அலை! அதன் மேலே மேகம்! ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள்! அவன் தனது கையை வெளிப்படுத்தும் போதுஅதை கூட அவனால் பார்க்க முடியாது. அல்லாஹ் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை.
குர்ஆன் - 24 : 40

இந்த வசனத்தில் கடலைப் பற்றி இறைவன் குறிப்பிடும் போது ஒருவன் கடலுக்குள் மூழ்கும் போது அங்கே அவன் மேல் அலை அடிக்கும் எனவும், அதற்கு மேலேயும் அலை இருக்கும் எனவும் கூறுகிறான்.கடலின் மேற் பரப்பில் அதுவும் கடற்கரை ஓரங்களில் மாத்திரமே அலை இருக்கும் என்று கருதப்பட்ட காலத்தில் கடலின் அடியில் அலைக்கு மேல் அலை இருக்கும் என்ற மாபெரும் அறிவியல் உண்மையை இவ்வசனம் கூறுகிறது. கடலின் ஆழத்தில் கடுமையான அலைகளின் சுழற்சி இருப்பதை சமீபத்தில் தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.கடல் ஆழத்தைப் பற்றிய அறிவு எதுவும் இல்லாத காலத்தில் வாழ்ந்த நபியால் இதைச் சொந்தமாகக் கூறியிருக்க முடியாது. எனவே இந்த வசனமும், இதற்கு முன்பு சொன்ன வசனங்களும் நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தைகள் தான் என்பது மேலும் நிரூபணம் ஆகிறது.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.

2 comments:

suvanappiriyan said...

நேற்று ராஜஸ்தானில் நடந்த கோர விபத்தை நாமெல்லாம் பார்த்திருப்போம். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஒரு நபர் 'கோவிலின் சுவர் இடிந்ததும் மக்கள் பதட்டத்துடன் அங்கும் இங்கும் ஓடினார்கள். வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. பாதுகாப்புக்கு வந்த காவலர்களும் குறைவு. இதுவே உயிர்ப்பலி ஏற்படக் காரணம்' என்று பேட்டிக் கொடுத்ததை நானே சகாராவில் பார்த்தேன். ஆனால் தமிழ் மணத்தில் ஒரு பதிவர் 'இதற்க்கும் முஸ்லிம்கள்தான் காரணம்' என்று பதிவு போடுகிறார். இப்படி பதிவிடும் இது போன்ற விஷச் செடிகள்தான் நம் நாட்டின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டைகள்.

Dr.Anburaj said...


குரானில் விஞ்ஞானம் இல்லை.இல்லை.அமோிக்க விண்கலம் வியாழன் கிரகத்திற் சுற்றுப்பாதைக்குள் நுழைந்து விட்டது இந்த சாதனை குறித்து எழுதுங்கள். குரான் பற்றி எழுதி தங்கள் பக்கங்களை வீணாக்காதீா்கள்