Followers

Monday, January 03, 2011

புது வருடத்தில் பொங்கட்டும் மகிழ்ச்சி!

புது வருடத்தில் பொங்கட்டும் மகிழ்ச்சி!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்பொழுதுதான் நேரமும் தனிமையும் கிடைத்திருக்கிறது. தமிழ் மணத்தின் பக்கம் வந்தால் பழைய முகம் யாரையும் காணவில்லை. அதிகம் புதிய பதிவர்களாக காண முடிந்தது. புதிய பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

பழைய நண்பர்கள் கோவி கண்ணன், டோண்டு ராகவன், செந்தழல் ரவி, நல்லடியார், முப்தி, தருமி, மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.

வருட கடைசி கணக்கெடுப்பதற்க்காக சவுதி நகரங்களான கஸீம், தபுக் போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. முன்பு தபுக் சென்றது விமானத்தில். இந்த முறை பேருந்தில் சென்றதால் (17 மணி நேரம)சற்று சோர்வு ஏற்பட்டது. அங்கும் பழைய நண்பர்கள் அப்துல் அஜீஸ், ஜின்னா, அய்யுப்(மும்பை) போன்றவர்களை சந்தித்ததில் களைப்பும் நீங்கியது. மூன்று நாட்களுக்குப் பிறகு ரியாத் திரும்பினேன்.

நேரம் கிடைக்கும் போது இனி பதிவுகளை எழுத எண்ணியுள்ளேன். பின்னூட்டங்களின் மூலம் நிறை குறைகளை சுட்டிக் காட்டுங்கள். நன்றி.

'காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷடத்தில் இருக்கிறான். நம்பிக்கைக் கொண்டு நல்லறங்கள் செய்வோரையும் உண்மையை போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர'
-குர்ஆன் 103:1,2,3

6 comments:

கோவி.கண்ணன் said...

//பழைய நண்பர்கள் கோவி கண்ணன், டோண்டு ராகவன், செந்தழல் ரவி, நல்லடியார், முப்தி, தருமி, மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.//

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி !

உங்களுக்கும் நல்வாழ்த்துகள்

suvanappiriyan said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கோவி கண்ண்ன்! உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Anonymous said...

வருக! வருக! வாழ்த்துக்கள்!

-anvar

Anonymous said...

வருக! வருக! வாழ்த்துக்கள்!
-Anvar

தருமி said...

//பழைய நண்பர்கள் கோவி கண்ணன், டோண்டு ராகவன், செந்தழல் ரவி, நல்லடியார், முப்தி, தருமி, மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.//

மகிழ்ச்சி
நன்றி

அன்பும் வாழ்த்துகளும்....

Anonymous said...

hello suvanappiriyan keep it up your work -anvar