Followers

Saturday, October 23, 2021

என்று ஒழியும் இந்த சாதி வெறி?

 தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு முடி வெட்ட மாட்டார்களாம்....


அதே சாதியினர் வயலில் கால் வைத்து உழுது பயிரிட்டு தரும் அரிசியை மட்டும் சாப்பிடுவார்களாம்.


எந்த அளவு சாதி வெறி இந்த மக்களின் மனதில் ஊறியுள்ளது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்....


என்று ஒழியும் இந்த சாதி வெறி? 




3 comments:

Dr.Anburaj said...

சில ஊர்களில் முஸ்லீம்களுக்கு மட்டும் என்று நாவீதர்கள் உள்ளார்கள். இவர்கள் கடை வைத்திருந்தாலும் முஸ்லீம்களுக்கு மட்டும் தான் சிகை அலங்காரம் செய்வார்கள். இது போன்ற சிக்கல்தான் இது.இவர்கள் தங்கள் சாதியில் ஒருவனை நாவிதனாக பயிற்சி அளித்து உருவாக்க வேண்டும். அல்லது அரசிடம் புகாா் செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனிதா்களை அவமதிப்பது தீண்டாமை சட்டம். சட்டததை பயன்படுத்த அரிசனங்கள் முன் வர வேண்டும். எந்த ஊா் என்று எனக்கு தெரிவித்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரை நான் தொடா்பு கொண்டு பேசுகின்றேன்.

Dr.Anburaj said...

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே
மனிதர்களை நடமாடும் கோவில் என்று அழைக்கிறது திருமந்திரம்.
ஏழைகளின் உள்ளே வாழும் இறைவன் பசித்திருக்கையில் படமாடக் கோயிலில் இருக்கும் இறைவனுக்கு பொருளைக் காணிக்கையாக அளித்தால் அது நடமாடும் கோயில்களான ஏழைகளுடன் பசியில் வாடும் இறைவனுக்கு சென்றுச் சேராது. ஆனால் நடமாடும் கோயில்களான ஏழைகளுக்குத் தரும் பொருளானது படமாடும் கோயிலில் (சிலைவடிவில்) உள்ள இறைவனுக்கு உடனே சென்றுவிடும் என்பது திருமூலா் கூற்று.
பாரபட்சம் பாா்க்காமல் எல்லா உயிா்களுக்கும் கருணை செய்யும் இறைவனிடம் அன்பும் பக்தியும் செய்யவிரும்பினால் நம் சொந்த பந்தங்களிடம் காட்டும் அதே அன்பை துன்பப்படும் ஏழைகள், ஆதரவற்றோோ் மற்றும் பிற ஜீவராசிகள் மீது அன்பும் இ்ரக்கம் காட்டுவதே சாியான வழியாகும். இறைவனுக்கு நீங்கள் செலுத்த விரும்பும் காணிக்கைகளை ஏழைகளுக்கு கொடுத்து உதவுங்கள் அவை உடனடியாக இறைவனை சென்றடையும், இறைவன் இருவகையான கோயில்களில் குடிகொண்டு வாசம் செய்கின்றான் என்று திருமூலா் குறிப்பிடுகின்றாா்.
ஓம் நமசிவாய
- சித்தர்கள் தபோவனம்
http://www.sithargaltapovanam.org

Dr.Anburaj said...

பாலிமா் செய்தி
மூடி வெட்ட மாடடேன்” என்று அறிவித்த நபா் தீண்டாமை தடுப்பு சட்டத்தின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊரை விட்டு ஓடி ஒழிந்த மேற்படி நபா் சிதம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளாா்.

-- போதுமா அரேபிய அடிமையே.