Followers

Saturday, November 19, 2022

மாட்டு மூத்திரத்தை கொண்டு வந்து சுத்தம் செய்து

 கர்நாடகா - சம்ரன்ஜ் நகர் தாலுகா


ஹெக்கோதரா கிராமம்..


18-11-2022 கடந்த வெள்ளியன்று இக்கிராமத்தில் தலித் குடும்பத்தினரின் திருமண வைபவம் நடைபெற்றது. திருமணம் முடிந்து விருந்து உண்டு விட்டு வந்த விருந்தினர்கள் பஸ் ஏற சிறிது தூரம் வந்துள்ளனர். அங்கு தண்ணீர் தொட்டி இருந்ததை பார்த்த ஒரு பெண் டேப்பை திறந்து தண்ணீர் அருந்தியுள்ளார். இதனை கண்ட மேல் சாதி இந்துக்கள் கூச்சலிட்டு ஊரை கூட்டி அந்த பெண்ணை சகட்டு மேனிக்கு திட்டி அனுப்பியுள்ளனர். அதன் பின்னர் தண்ணீர் தீட்டாகி விட்டது என்று கூறி டேங்கில் இருந்து முழு தண்ணீரையும் திறந்து விட்டுள்ளனர். அதன் பிறகு மாட்டு மூத்திரத்தை கொண்டு வந்து சுத்தம் செய்து தீட்டை போக்கியுள்ளனர்.


ஒரு மனிதன் வாய் வைத்து குடித்த தண்ணீரை அசுத்தமாகி விட்டது என்று மாட்டின் மூத்திரத்தை கொண்டு சுத்தம் செய்த இவர்களின் அறிவை என்னவென்பது? சனாதனம் இந்த மக்களை எந்த அளவு அரக்கர்களாக மாற்றியுள்ளது?


காசிக்கு சென்று 'ஹர ஹர மஹா தேவ்' என்று மோடிக்கு முன்னால் பாடிய இளையராஜாவுக்கு இந்த கொடுமையெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.











No comments: