Followers

Tuesday, June 20, 2006

இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்! - நான்கு

இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்! - நான்கு

முகமது நபியைப் பற்றிய முன்னறிவிப்புகள் பலவற்றை இந்து மத வேதங்களில் இருந்து போன பதிவுகளில் கண்டோம். வேறு சில தகவல்களையும் இந்து மத வேதங்களில் இருந்து பார்ப்போமா!

அதர்வண வேதம் :

அதர்வண வேதம் 20 ஆவது புத்தகத்தில் குன்துப் என்ற பெயரில் ஒரு அத்தியாயம் உண்டு. 'குன்துப்' என்பதன் பொருள் 'அமைதியையும் பாதுகாப்பையும் தரக் கூடிய வழிகள்' என்ற பொருள் தரும். இதையேதான் நாம் அரபியில் இஸ்லாம் என்கிறோம். இந்த குன்துப் அத்தியாயத்தை புளூம் ஃபீல்ட், புரபஸர் ரால்ப் க்ரிபித்,பண்டிட் ராஜாராம் போன்றோர் மொழி பெயர்த்துள்ளனர். இந்த அதர்வண வேதத்தில் குன்துப் அத்தியாயத்தில் சுலோகங்கள் ஒன்றிலிருந்து பதின்மூன்று வரை வரக் கூடியவை.

மந்த்ரா ஒன்று

'அவர்தான் நரசன்ஸா அல்லது புகழப் பட்டவர்'

'அவர்தான் கருமா. அமைதியை விரும்பும் அவர் தன் நாட்டவர்களால் துரத்தப் படுவார் 60090 எதிரிகளிடமிருந்து காப்பாற்றப் படுவார்'

சமஸ்கிருத மொழியில் 'கருமா' என்பதற்கு 'அமைதியை பரப்பக் கூடியவர்' என்ற அர்த்தம் வரும். 'நாடு துறப்பவர்' என்ற பொருளிலும் வரும். இந்த இரண்டு செயல்களும் முகமது நபியின் வாழ்க்கையில் நடைபெற்றவை.

'நரசன்ஸா' என்பதற்கு புகழப் பட்டவர் என்று அர்த்தம் வரும். அரபியில் புகழப் பட்டவர் என்ற பதத்தில் வரும் பெயர் முகம்மது. மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வு இல்லை என்று பிரச்சாரம் செய்த அவர் மக்காவிலிருந்து மதினாவுக்கு அவரின் உறவினர்களாலும் எதிரிகளாலும் விரட்டப் பட்டார். அப்போது இருந்த மக்காவின் மக்கள் தொகை ஏறக்குறைய இதே எண்ணிக்கையில் இருந்தது.

மந்த்ரா இரண்டு

'அவர் ஒட்டகத்தில் சவாரி செய்வார். அவருடைய வாகனம் சொர்க்கத்தையும் தொட்டுவிடக் கூடியது'

ஒட்டகத்தில் பிரயாணம் செய்வது பிராமணர்களுக்கு தடுக்கப் பட்டுள்ளது. எனவே இதுவும் முகமது நபியைக் குறிப்பதாக உள்ளது.
முகமது நபி 'மிஃராஜ்' என்ற விண்வெளிப் பயணம் செய்து இறைவனோடு பேசியதையும், சொர்க்கம் நரகத்தை பார்வையிட்டதையும் பற்றி நமக்கு ஹதீதுகளில் காணக் கிடைக்கின்றது.

மந்த்ரா மூன்று :

'அவர் பெயர்தான் மாமாஹ் ரிஷி'

இந்த மந்த்ராவில் வரும் பெயர் மாமாஹ் ரிஷி. எந்த ஒரு இறைத் தூதரும் இந்த பெயரில் இந்தியாவில் அவதரித்ததாக வரலாறுகளில் காணப் படவில்லை. மாமாஹ் என்பதும் முஹம்மது என்பதும் ஒன்று தான் என்று இதன் மூலம் விளங்க முடிகிறது. இதற்கு முன்பே கூட இந்து வேதங்களில் முஹம்மது என்ற முழுப் பெயரும் குறிப்பிடப் பட்டுள்ளது.

மந்த்ரா பதினான்கு :

அந்த தலைவரை நாம் வாழ்த்தி வரவேற்போம். அவரை ஏற்றுக் கொண்டால் தவறுகளில் வீழ்ந்து விடாமல் பாதுகாக்கப் படுவோம்.

அதர்வண வேதம் :

'உண்மையான அந்த இறைவன் புகழப் பட்டவன். போர்க் களத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கை உடையவர்கள் ஆச்சரியப் படத்தக்க வகையில் பத்தாயிரம் பேரை வெற்றிக் கொள்வர். இது இறைவன் கிருபையால் நடக்கும்.'

அதர்வண வேதம் - அத்தியாயம் 21 - சுலோகம் 9

முகமது நபி சந்தித்த பத்ர் போரில் முஸ்லிம்களின் தரப்பில் இருந்தது வெறும் 3000 பேரே. ஆனால் எதிரிகள் தரப்பில் இருந்தது 10000 க்கும் அதிகமானோர். ஆச்சரியப் படும் வகையில் முஸ்லிம்கள் வெற்றியடைந்தனர். இந்த சுலோகத்தில் வரும் கடைசி வார்த்தையான 'அப்ரதி நி பசாயா' என்ற சொல் 'இறைவனால் ஆச்சரியப் படத்தக்க வகையில் இறை மறுப்பாளர்களுக்கு கொடுக்கப் பட்ட தோல்வி' என்ற பொருளில் வரும்.

அதர்வண வேதம் :

'20 அரசர்களும் 60000 எதிரிகளும் சேர்ந்து அந்த புகழப் பட்டவரை எதிர்ப்பர்'

அதர்வண வேதம் - புத்தகம் 20 - அத்தியாயம் 21 - சுலோகம் 9

முகமது நபி பிரசாரம் பண்ணிய காலத்தில் மக்காவின் மக்கள் தொகை ஏறக்குறைய 60000. மக்காவிற்குள்ளேயே ஒவ்வொரு குலத்துக்கும் கோத்திரத்திற்கும் சாதி வாரியாக கிட்டத்தட்ட இருபது தலைவர்கள் இருந்தனர்.இவர்கள் கையில் தான் அன்றைய மக்காவின் ஆட்சி இருந்தது. இவர்கள் தான் முகமது நபியை கடுமையாக எதிர்த்தனர். புகழப் பட்டவர் என்ற பதத்துக்கு அரபியில் முகம்மது பொருள் என்று வரும். 'அபந்து' என்ற வார்த்தைக்கு அர்த்தம் 'உதவி செய்யப் படாதவர்' என்று வரும். மக்காவாசிகளால் ஆரம்பத்தில் நிர்க்கதியாக முஹம்மது நபி விடப் பட்டதைத்தான் இங்கு சுட்டிக் காட்டப் படுகிறது.

சாம வேதம் :

'இந்தக் குழந்தையின் பழக்கம் வித்தியாசமாக இருக்கும். இந்தக் குழந்தை தன் தாயிடமிருந்து பால் அருந்தாது. அத்தகைய சூழ்நிலை அங்கு உருவாகாது.'

சாம வேதம் - அக்னி - மந்த்ரா 64
சாம வேதம் - புத்தகம் 1 - பிரிவு 2 - அத்தியாயம் 2 - சுலோகம் 2

முகமது நபி சிறு வயதில் தாய்ப் பால் அருந்த ஹலீமா என்ற பெண்ணிடம் அனுப்பப் பட்டு அங்கு தான் தனது சிறு வயதை கழித்தார்.அவரை பெற்றது ஆமினாவாகும். போதிய தாய்ப் பால் சுரக்காததால் அன்றைய வழக்கப்படி வாடகைக்கு பெண்களை நியமித்தனர்.

முகமது நபிக்கு அஹமது என்ற பெயரும் உண்டு

'இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அனுப்பப் பட்ட இறைவனின் தூதர். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப் படுத்துபவன் எனக்குப் பின்னர் வரவுள்ள அஹமத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்.' என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக!

குர்ஆன் - 61 : 6

மேற் கண்ட குர்ஆன் வசனத்தில் ஏசு தன் மக்களுக்கு பிரச்சாரம் செய்யும் போது அஹமத் என்ற ஒரு தூதர் எனக்கு பின்னால் வரப் போகிறார் என்று கோடிட்டுக் காட்டுகிறார். இதைத் தான் இங்கு இறைவன் குறிப்பிடுகிறான். முகமது நபிக்கு அஹமது என்ற மற்றொரு பெயரும் உள்ளது இதன் மூலம் தெரிய வருகிறது.

முகமது அகமது என்ற இரண்டு பெயர்களில் இந்து மத வேதங்களில் வரக் கூடிய பல முன்னறிவிப்புகளை இனி வரிசையாகக் காண்போம்.

அ) சாமவேதம் - உத்தரசிகா - மந்த்ரா 1500
(சாம வேதம் இரண்டாவது பிரிவு - புத்தகம் 7 - அத்தியாயம் 5 - செய்யுள் 1

ஆ)சாம வேதம் - இந்திரா அதிகாரம் 2 - மந்த்ரா 152
(சாம வேதம் புத்தகம் 2 - அதிகாரம் 2 - சுலோகம் 8)

இ) யஜூர் வேதா - அதிகாரம் 31 - செய்யுள் 18

ஈ) ரிக் வேதம் புத்தகம் 8 - துதிப் பாட்டு 6 - செய்யுள் 10

உ) அதர்வண வேதம் - புத்தகம் 8 - அதிகாரம் 5 - செய்யுள் 16

ஊ) அதர்வண வேதம் புத்தகம் 20 - அதிகாரம் 126 - செய்யுள் 14

எ) சாம வேதம் - உத்தர்சிக் - மந்த்ரா 1500 - பிரிவு 2

ஏ) சாம வேதம் - புத்தகம் 7 - அதிகாரம் 1 - பகுதி 5 - செய்யுள் 1

'அஹமத் இறைவனிடமிருந்து மனிதர்கள் பின் பற்றக் கூடிய சட்டத்தைக் கொண்டு வருவார். நான் அவரிடமிருந்து சூரியன் தரும் ஒளியைப் போன்ற ஞானத்தைப் பெறுவேன்.'

- சாம வேதம் - இந்திரா அதிகாரம் 2 - மந்த்ரா 152 - புத்தகம் 2 - செய்யுள் ஒன்றிலிருந்து எட்டு வரை

மேலே உள்ள அத்தியாயங்களில் அதிக இடங்களில் அஹமத் என்று வருகிறது. முகம்மதும் அகமதும் இவ்விரண்டும் முகமது நபியின் பெயர்களே! முகமது நபி இறைவனிடமிருந்து குர்ஆன் மூலம் மக்களுக்கு சட்டங்களை வழங்கினார். இதைத் தான் இங்கு சுட்டிக் காட்டப் படுகிறது.

'முஹம்மதே! நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.'

-குர்ஆன் 34 : 28

2 comments:

கோவி.கண்ணன் said...

பிடித்த ஆறுகள் பற்றி அனைவரும் எழுதுகிறார்கள். ஆறுபற்றி நீங்கள் எழுதவேண்டும் என்று அன்புடன் அழைப்பு வைத்திருக்கிறேன்.
http://govikannan.blogspot.com/2006/06/blog-post_21.html

suvanappiriyan said...

I dont know what is the meaning of six. Could you explained me?

Any way thanks to your comments Mr Kovi kannan.