Followers

Tuesday, January 24, 2017

மனித நேயம் - ரியாத் தமிழ்ச் சங்கம்

சவூதி அரேபியா ரியாத்தில் பணிபுரிந்து வந்த ராமநாதபுரம் மாவட்டம், R.S. மங்கலம் வட்டாரம், தும்படைக்காகோட்டை என்ற ஊரைச் சேர்ந்த திரு. மனோகரன் கிருஷ்ணன் என்ற ஒரு தமிழர் கடந்த 11-10-2016 அன்று உடல்நலக்குறைவால் ரியாத் சுமேசி மருத்துவமனையில் மரணமடைந்தார்

அவர் கபீலைவிட்டும் ஓடிச்சென்று வேலைபார்த்த காரணத்தால் அவரின் கபீல் இறந்தவரின் உடலை தாயகம் அனுப்புவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை, இந்த நிலையில் ஜித்தா தமிழ்ச் சங்கம் ரியாத் தமிழ்ச் சங்கத்தை தொடர்பு கொண்டு மறைந்தவரின் உடலை தாயகம் அனுப்பிவைப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டது, ரியாத் தமிழ்ச் சங்கத்தின் சமூகசேவைப்பிரிவு அதனைக் கையிலெடுத்து சகோ. ஜமால் சேட் அவர்களின் தீவிர முயற்சியின் காரணமாக அதற்குறிய ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு தூதரகத்தின் சார்பாக உடலை அனுப்புவதற்குண்டான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு திரு. மனோகரன் அவர்களின் உடல் 22-12-2016 அன்று தாயகம் அனுப்பிவைக்கப்பட்டு 23-12-2016 அன்று அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவர்களின் உறவினர்கள் திரு. ஜமால் அவர்களுக்கும், ரியாத் தமிழ்ச்சங்கத்திற்கும், தூதரகத்தின் சமூகநலப் பிரிவிற்கும் நன்றி செலுத்தி எழுதிய மின்னஞ்சல் கீழேயுள்ளது.

மனிதநேயம் காப்பதற்கு உதவிய நல்லுள்ளங்களையும் தூதுவரகத்தையும் பாராட்டி வாழ்த்துவோம்.

ரியாத் தமிழ்ச் சங்கம்
சவூதி அரேபியா

No comments: