Followers

Saturday, February 25, 2012

இறைத் தூதருக்கான சில முன்மாதிரிகள்!

எனக்கும் எனக்கு முன்னர் வந்த நபிமார்களுக்கும் இடையிலான உதாரணம் ஒரு கட்டிடத்தைக் கட்டிய மனிதனின் உதாரணத்தை ஒத்ததாகும்.

“அந்த மனிதர் ஒரு வீட்டை அழகாகவும், நேர்த்தியாகவும் கட்டினார். ஒரேயொரு கல் வைக்கும் இடத்தை மட்டும் விட்டுவிட்டார். அந்த வீட்டை மக்கள் சுற்றிப் பார்த்து (அதன் அழகையும், நேர்த்தியையும் கண்டு) வியந்தனர். இந்த இடத்தில் உள்ள கல் மட்டும் வைக்கப்பட்டிருக்கக் கூடாதா? என்று கூறினர். விடுபட்ட அந்த இடத்தை அடைக்கும் கல் நானாவேன். நான் நபிமார்களில் இறுதியானவன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்”
அறிவிப்பவர்: அபூஹுரைரா
ஆதாரம்:புஹாரி-3535, முஸ்லிம்:6103


இந்த நபி மொழியை படிக்கும் நமக்கு பல உண்மைகள் தெரிய வருகிறது. ஒரு கூட்டத்தை தனக்கு பின்னால் அமைத்துக் கொள்ள விரும்புபவர் தன்னையே முன்னிலைப் படுத்திக் கொள்ள விரும்புவார். ஆனால் இந்த நபி மொழியில் அந்த கட்டடம் மிக நேர்த்தியாக கட்டப்பட்டு விட்டது. ஒரே ஒரு கல் மட்டுமே பாக்கியிருந்தது. அதனை வைத்து அந்த கட்டடத்தை முழுமைபடுத்தி விட்டதாக முகமது நபி இங்கு சொல்கிறார். இஸ்லாம் என்ற கட்டிடம் ஆதாமிலிருந்து ஏசு நாதர் வரை சிறுக சிறுக கட்டப்பட்டு முகமது நபி காலத்தில் ஒரு கல்லை வைத்து பூர்த்தி செய்யப்படுகிறது. இங்கு உலகில் பிறந்த அனைத்து தூதர்களுக்கும் இஸ்லாமிய வெற்றியை பங்கிட்டு விடுகிறார் முகமது நபி.

இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் முகமது நபி குர்ஆனை தனது சொந்த முயற்சியால் புனைந்து கூறினார். இது கடவுளின் வார்த்தை அல்ல என்ற குற்றச்சாட்டை வைக்கின்றனர். அவர்களின் கூற்று உண்மையானால் இப்படி ஒரு வார்த்தையை முகமது நபி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. எநத ஒரு சாதாரண மனிதனுமே தனது அறிவை மற்றவருக்கு பங்கிட்டு கொடுக்க விரும்ப மாட்டார். ஒருவருக்கு சிஷ்ய கோடிகள் உருவாவதற்கு அந்த நபரின் அறிவும், அவரின் ஆன்மீக சொற்பொழிவுகளும்தான் முக்கிய காரணம். இங்கு அந்த அறிவும் ஞானமும் உலகில் பிறந்த அனைத்து தூதர்களுக்கும் பங்கிட்டு கொடுக்கப்படுகிறது.

மற்றொரு இடத்தில் இறைத் தூதர் ஏசுநாதரையும், இறைத்தூதர் மோசேயையும் தன்னை விட தாழ்த்த வேண்டாம் என்ற கட்டளையையும் தனது தோழர்களுக்கு பிறப்பிக்கிறார் நபிகள் நாயகம். தனது காலில் யாரும் விழக் கூடாது என்றும் தான் வரும் போது யாரும் மரியாதை நிமித்தம் எழுந்திருக்கக் கூடாது என்றும் தனது தோழர்களுக்கு கட்டளையிடுகிறார். இப்படி ஒரு தலைவரை நம வாழ்நாளில் பார்த்திருக்கிறோமா? என்பதை நாம் சிந்திக்கக் கடமைபட்டுள்ளோம்.


பைபிளில் வரும் வேறொரு உவமையைக் கேளுங்கள்.

“வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாகவிட்டு, புற தேசத்திற்குப் போயிருந்தான்.”
“கனிகாலம் சமீபித்த போது, அதன் கனிகளை வாங்கிக் கொண்டு வரும்படி தன் ஊழிக்காரரைத் தோட்டக்காரரிடத்தில் அனுப்பினான்.”

“தோட்டக்காரர் அந்த ஊழிக்காரரைப் பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலை செய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.”

“பின்னும் அவன் முந்தியவர்களிலும் அதிகமான வேறே ஊழியக்காரரை அனுப்பினான். அவர்களையும் அப்படியே செய்தார்கள்.”

“கடைசியிலே அவன் என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.”

“தோட்டக்காரர் குமாரனைக் கண்ட போது இவன் சுதந்தரவாளி இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக்கொள்வோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டனர்.”

“அவனைப் பிடித்து திராட்சைத் தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலை செய்தார்கள்.”

“அப்படியிருக்க திராட்சைத் தோட்டத்தின் எஜமான் வரும் போது அந்தத் தோட்டக்காரனை என்ன செய்வான் என்று கேட்டார்.”

“அதற்கு அவர்கள்: அந்தக் கொடியரைக் கொடுமையாய் அழித்து, ஏற்ற காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கத்தக்க வேறொரு தோட்டக்காரரிடத்தில் திராட்சத் தோட்டத்தைக் குத்தகையாகக் கொடுப்பான் என்றார்கள்.”

“இயேசு அவர்களை நோக்கி: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக் கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா?”

“ஆகையால் தேவனுடைய இராச்சியம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.”

“இந்தக் கல்லின் மேல் விழுகிறவன் நொருங்கிப் போவான். இது எவன் மேல் விழுமோ அவனை நசுக்கிப் போடும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.” (பைபில் மத்தேயு:21-33-44)


ஈஸா(அலை) அவர்கள் ஒரு உதாரணம் கூறியதாக பைபிள் கூறுகின்றது.

ஒருவர் தனது தோட்டத்தைக் குத்தகைக்கு விடுகின்றார். அதன் கணிகளைப் பெற்று வர தனது அடிமைகளை அனுப்புகிறார், தூதர்கள் அனுப்புகிறார்கள். அந்தத் தோட்டக்காரர்கள் அவர்களைக் கொலை செய்துவிடுகின்றனர். இறுதியில் தனது மகனை அனுப்புகிறார். அவரையும் கொலை செய்துவிடுகின்றனர். அந்த எஜமான் வந்து என்ன செய்வர் என்று கேட்டதும் யூதர்கள் அவர் வந்து தோட்டத்தைச் செய்தவர்களைக் கொன்றுவிட்டு தோட்டத்தை உரிய முறையில் பராமரிக்கும் ஒருவரிடம் ஒப்படைப்பார் என்கின்றனர். இந்த பதிலைப் பெற்ற ஈஸா(அலை) அவர்கள் “இவ்வாறுதான் தேவன் இராஜ்ஜியம் உங்களிடமிருந்து பரிக்கப்பட்டு அதை சரியாகப் பராமரிக்கும் இன்னொரு கூட்டத்தாரிடம் ஒப்படைக்கப் படும்” என்று கூறுகின்றார்.

இப்றாஹீம் நபிக்கு இஸ்மாயீல், இஸ்ஹாக் என இரு புதல்வர்கள் இருந்தார்கள். இஸ்ஹாக் நபியின் சந்ததியில் தான் தூதர்கள் வந்தார்கள். இஸ்ரவேலர்கள் தூதர்களில் பலரைக் கொலை செய்தார்கள். மற்றும் பலரைப் பொய்ப்பித்தனர். ஈஸா நபியின் வருகையுடன் இந்தத் தூதுத்துவம் அவர்களிடமிருந்து பரிக்கப்பட்டு மற்றொரு கூட்டத்தாருக்குக் கொடுக்கப்படும் என்று கூறுவதுடன் அது யாருக்குக் கொடுக்கப்படும் என்றும் கூறுகின்றார்கள்.

தவ்றாத்தில் கூறப்பட்டது போல் ஒதுக்கப்பட்ட கல் என இஸ்மாயீல் நபி பரம்பரை கூறப்படுகின்றது. நபியவர்களும் நான் அந்த விடுபட்ட கல் என்று கூறுவதுடன் தன்னுடன் (நுபுவ்வத்) இறைத் தூதுத்வ கட்டிடம் முழுமை பெறுவதாகக் கூறுகின்றார்கள்.

ஈஸா(அலை) அவர்கள் அந்தக் கல் பற்றிக் கூறும் போது “அந்தக் கல்லின் மீது விழுகிறவன் நொருங்கிப் போவான். அந்தக் கல் எவன் மீது விழுமோ அவன் நசுங்கிப் போவான் என்ற வாசகம் நபியவர்களை யாரும் அழிக்க முடியாது. அவர்களோடு மோதுபவர்களும் தோற்றுப் போவர். அவர் யாருடன் மோதுகின்றாரோ அவர்களும் தோற்றுப் போவர் என்று கூறுகின்றார்கள். இது நபி(ஸல்) அவர்களது வாழ்வில் நடந்தேரியது.

முகமது நபியை கொலை செய்ய முயன்ற யூதர்கள் முடிவில் தோல்வியை தழுவியதையும் நாம் வரலாறுகளில் பார்க்கிறோம். முகமது நபி காலத்திலேயே அரபுலகம் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்ததையும் சரித்திரங்களில் நாம் பார்க்கிறோம்.

நானே அந்த விடுபட்ட கல் என நபி(ஸல்) அவர்கள் கூறுவதன் மூலம் தனது தூதுத்துவத்தை உண்மைப்படுத்தி உறுதிப்படுத்தும் அதே நேரம் தானே இறுதி நபிhttp://www.blogger.com/img/blank.gif, தனக்குப் பின் நபி இல்லை என்ற சத்தியத்தையும் நிலைநாட்டிவிட்டதையும் பார்க்கிறோம்.


தினமணியில் பழ கருப்பையா அவர்கள் இஸ்லாம் பற்றி சொல்லியிருக்கும் ஒரு கட்டுரை. படித்துப் பாருங்கள்.

58 comments:

VANJOOR said...

பா.ராகவன்: ஒரு மனிதரின் பிறப்பே எப்படி முக்கியத் தருணமாகும்? என்கிற கேள்வி எழலாம்.

மற்ற இறைத்தூதர்களைப் பற்றிய தகவல்களுக்கு நாம் புராணக் கதைகளையே ஆதாரங்களாகக் கொள்ள வேண்டியிருக்கிற நிலையில்,

இவர் ஒருவரைக் குறித்த விவரங்களை மட்டும்தான் கதைகளிலிருந்து அல்லாமல்,

சரித்திரத்தின் பக்கங்களிலிருந்தே நாம் பெற முடிகிறது.

காலத்தால் நமக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது மட்டுமே இதற்குக் காரணமல்ல.

அவரது காலத்தில் வாழ்ந்தவர்கள், அவருடன் நேரில் பழகியவர்கள், அவரது பிரசங்கங்களை, போதனைகளைக் கேட்டவர்கள் எழுதிவைத்த குறிப்புகள் ஏராளமாக இருக்கின்றன.

முகம்மது குறித்த ஒவ்வொரு தகவலும் பல்வேறு நிலைகளில் சரிபார்க்கப்பட்டு, ஒப்புநோக்கப்பட்டு, அவருடன் நேரடியாகப் பழகியவர்கள் விவரித்துள்ளவற்றுடன் பொருந்தினால் மட்டுமே அச்சேறின.

இதனால், முகம்மது குறித்த விவரங்களின் நம்பகத்தன்மை பற்றிய அத்தனை கேள்விகளும் அடிபட்டுப் போய்விடுகின்றன.

ஆதாரம் இல்லாத ஒரு குட்டிக்கதை, கதையின் ஒருவரி... ஒரு சொல் கூடக் கிடையாது. - பா.ராகவன்

சொடுக்கி சித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்மது நபி, இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வைத்ததில்லை. - பா.ராகவன் படிக்கவும்.


.

Robin said...

//. விடுபட்ட அந்த இடத்தை அடைக்கும் கல் நானாவேன். நான் நபிமார்களில் இறுதியானவன்// தன்னை இறுதி நபி என்று காட்டிக்கொள்வதற்காக முகமது இட்டுக்கட்டிய உவமைதான் இது.

//இஸ்லாம் என்ற கட்டிடம் ஆதாமிலிருந்து ஏசு நாதர் வரை சிறுக சிறுக கட்டப்பட்டு முகமது நபி காலத்தில் ஒரு கல்லை வைத்து பூர்த்தி செய்யப்படுகிறது.// இயேசு நாதர் போதித்தது அன்பு வழி, அவர் எதிரிகளையும் நேசித்தார். முகமது ஒரு வன்முறையாளர், தன் எதிரிகளை தீர்த்துக்கட்டியவர், ஒழுக்கமற்றவர். இப்படிப்பட்ட ஒருவர் இயேசுநாதருக்குப் பின் வந்த நபி நான்தான் என்று சொல்வது நகைப்புக்குரியது.

//“இவ்வாறுதான் தேவன் இராஜ்ஜியம் உங்களிடமிருந்து பரிக்கப்பட்டு அதை சரியாகப் பராமரிக்கும் இன்னொரு கூட்டத்தாரிடம் ஒப்படைக்கப் படும்” என்று கூறுகின்றார்.// அவர் சொன்னது யூதர்களிடமிருந்து மற்றவர்களுக்கு என்பது. அது இஸ்மாயில் பரம்பரை மட்டுமல்ல அனைவருக்கும். யோவான் 4 அதிகாரம்.

//நபியவர்களும் நான் அந்த விடுபட்ட கல் என்று கூறுவதுடன் தன்னுடன் (நுபுவ்வத்) இறைத் தூதுத்வ கட்டிடம் முழுமை பெறுவதாகக் கூறுகின்றார்கள்.// தன்னை இறுதி நபி என்று காட்டிக்கொள்வதர்காகத்தான் இவ்வாறு கூறுகிறார்.

//ஈஸா(அலை) அவர்கள் அந்தக் கல் பற்றிக் கூறும் போது “அந்தக் கல்லின் மீது விழுகிறவன் நொருங்கிப் போவான். அந்தக் கல் எவன் மீது விழுமோ அவன் நசுங்கிப் போவான் என்ற வாசகம் நபியவர்களை யாரும் அழிக்க முடியாது. அவர்களோடு மோதுபவர்களும் தோற்றுப் போவர். அவர் யாருடன் மோதுகின்றாரோ அவர்களும் தோற்றுப் போவர் என்று கூறுகின்றார்கள். இது நபி(ஸல்) அவர்களது வாழ்வில் நடந்தேரியது.// இது இயேசு நாதர் தன்னை பற்றி சொன்னது, உங்கள் இஷ்டத்திற்கு கற்பனை செய்யாதீர்கள்.

முகமது என்பவரை இறைத்தூதர் என்று காண்பிப்பதற்காக மனிதக் கரங்களால் மாற்றப்பட்டுவிட்டதாக நீங்கள் குற்றஞ்சாட்டும் பைபிளை துணைக்கழைப்பது சரியா?

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் said...

அஸ்ஸலாமு அலைக்கும் அருமையான ஆக்கம் சகோ.பைபிளிலிருந்தும் உதாரணங்கள் அருமையாக எடுத்துகாட்டியுள்ளீர்கள்.எத்தணை உதாரணங்கள் எடுத்துவைத்தாலும் நம்பிக்கையற்றவர்கள் அதை பொய்ப்பிக்கவே முயற்சி மேற்கொள்கின்றார்கள் என்பது மிகவும் வேதனையாக உள்ளது.

Seeni said...

mashaa alla!
nalla thakaval!

UNMAIKAL said...

// Robin said...

இயேசு நாதர் போதித்தது அன்பு வழி, அவர் எதிரிகளையும் நேசித்தார். முகமது ஒரு வன்முறையாளர், தன் எதிரிகளை தீர்த்துக்கட்டியவர், ஒழுக்கமற்றவர். இப்படிப்பட்ட ஒருவர் இயேசுநாதருக்குப் பின் வந்த நபி நான்தான் என்று சொல்வது நகைப்புக்குரியது.//

ஆபாச வர்ணனைகள் கர்த்தரின் வார்த்தைகளான புனித பைபிளில் இருப்பது தான் புனித பைபிளின் நல்ல போதனைகளை பார்! படி!

ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதமாக இருக்கவேண்டும்.

அதன் ஒவ்வொரு வசனங்களையும் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம் – யாரிடம் வேண்டுமானாலும் படித்துக்காட்டலாம், எப்பொழுது வேண்டுமானாலும் அதன் கருத்துக்களை விளக்கலாம் என்பது ஒரு இறை வேதத்தினுடைய பொது நியதி.

இது எல்லா வேதங்களுக்கும் இருக்கப்படவேண்டிய ஒரு பொதுவான தகுதியும் கூட.

பைபிள் கர்த்தரின் வார்த்தைகள். பைபிள் புனிதமானது.

புனித பைபிளில் வரும் வசனங்களை எவராவது தன் குடும்பத்தோடு – குறிப்பாகத் தன் தாய், தந்தை, மகன், மகள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரோடும் சேர்ந்து படிக்க இயலுமா?

சிந்தித்துப் பாருங்கள் சகோதரர்களே!

விபச்சார சகோதரிகள் பற்றி சொல்லப்படும் இந்த கதையின் வர்ணனையின் மூலம் கர்த்தர் இவ்வுலக மக்களுக்கு என்ன சொல்ல வருகின்றார்? இதனால் என்ன பயன்?


சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

>>>>>>>>> அடங்காத‌ காம வேசிகள் . புனித பைபிளின் நல்ல போதனைகளை பார்! படி! <<<<<<<<<<<<<

.

suvanappiriyan said...

திரு ராபின்!

//இயேசு நாதர் போதித்தது அன்பு வழி, அவர் எதிரிகளையும் நேசித்தார். முகமது ஒரு வன்முறையாளர், தன் எதிரிகளை தீர்த்துக்கட்டியவர், ஒழுக்கமற்றவர். இப்படிப்பட்ட ஒருவர் இயேசுநாதருக்குப் பின் வந்த நபி நான்தான் என்று சொல்வது நகைப்புக்குரியது.//

நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாவது சந்திரசூரியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால்,. அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும் அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால், அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய்.
- (உபாகமம் – 17: 2-5)

அதற்கு அவர், இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்.
- (லூக்கா: 22:36)
“ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்ட வேண்டும்” என்று கூறும் அதே பைபிள் தான், “உன் எதிரியிடமிருந்து உன்னைப் பாதுகாத்துக் கொள்ள உன் ஆடையை விற்றாவது ஒரு வாளை வாங்கிக் கொள்” என்று கட்டளையிடுகிறது. அதாவது “நீ ஆடையின்றி நிர்வாணமாக இருந்தாலும் ஆயுதமின்றி மட்டும் இருக்காதே” என்று பைபிள் கட்டளையிடுகிறது.
ஏக தெய்வ கொள்கையை விட்டு பல தெய்வ கொள்கைக்கு சென்றவர்களை தேடிப்பிடித்து கொல்லச் சொல்கிறது பைபிள். இதன்படி ஏசுவை வணங்குபவரும் மேரியை வணங்குபவரும் பரிசுத்த ஆவியை வணங்குபவரும் எந்த லிஸ்டில் வருவார்கள் என்பதை உங்கள் அறிவுக்கே விட்டு விடுகிறேன்.

"தேவனிடத்தில் கேட்ட சத்தியத்தை சொன்ன மனுஷனாகிய என்னை கொள்ள தேடுகிறீர்கள் ஆபிரகாம் இப்படி செய்யவில்லையே "

யோவான் 8 : 40

'ஆபிரஹாமைப் போல நானும் ஒரு தூதர்தானே! என்னை வணங்க முற்படுகிறீர்களே' என்று எவ்வளவு அழகாக உங்களைப் பார்த்து ஏசு கேட்கிறார் பார்த்தீர்களா? ஆப்ரஹாம் சொன்னதையும் ஏசு சொன்னதையும் தானே முகமது நபியும் சொன்னார். புதிதாக ஒன்றும் சொல்லவில்லையே.

ஏசுவை சாந்த சொரூபியாகவே படங்களில் பார்த்து உங்களுக்கு அந்த எண்ணம் வந்திருக்கிறது. கிறித்தவராக இருந்தும் பைபிளை முழுமையாக இன்னும் படிக்கவில்லை என்றே நினைக்கிறேன். இனி படித்துப் பாருங்கள். இதை விட மோசமாக குரூரத் தன்மையோடு போர்க்களக் காட்சிகளையும் பைபிளிலிருந்து தரட்டுமா? இது போதும் என்று நினைக்கிறேன்.

//முகமது என்பவரை இறைத்தூதர் என்று காண்பிப்பதற்காக மனிதக் கரங்களால் மாற்றப்பட்டுவிட்டதாக நீங்கள் குற்றஞ்சாட்டும் பைபிளை துணைக்கழைப்பது சரியா?//

பைபிளை முழுவதுமாக மாற்றி விட்டால் அதனை யாரும் தொட மாட்டார்கள். எனவே பவுலுக்கு பிரச்னைக்குரிய வசனங்களை மட்டும் நீக்கி விட்டு அங்கு தனக்கு தோதுவாக சில கருத்துகளையும் சேர்த்துக் கொண்டார். பின்னால் வந்தவர்கள் மேலும் கற்பனைகளை கலந்துள்ளனர். உண்மையிலேயே ஏசு போதித்த வசனங்களும் அதே பைபிளிலேயே இன்னும் இருக்கிறது. அது போன்ற ஒரு சில வசனங்களைத்தான் நான் எடுத்துக் காட்டுகிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் வாஞ்சூர் பாய்!

//மற்ற இறைத்தூதர்களைப் பற்றிய தகவல்களுக்கு நாம் புராணக் கதைகளையே ஆதாரங்களாகக் கொள்ள வேண்டியிருக்கிற நிலையில்,

இவர் ஒருவரைக் குறித்த விவரங்களை மட்டும்தான் கதைகளிலிருந்து அல்லாமல்,

சரித்திரத்தின் பக்கங்களிலிருந்தே நாம் பெற முடிகிறது.//

பா. ராகவனின் அருமையான ஆக்கத்தையும் தந்து ஓட்டும் அளித்து பதிவிட்ட சில நிமிடங்களிலேயே அதை மெயிலிலும் தெரிவித்த உங்கள் சுறுசுறுப்பு என்னை வியக்க வைக்கிறது. இறைவன் மேன்மேலும் உங்களுக்கு உடல்நலத்தையும் ஆன்மீகத்தில் தெளிவையும் தந்தருள அந்த ஏக இறையை பிரார்த்திக்கிறேன்.

வருகைக்கும் கருத்தக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ அப்துல் அஜீஸ்!

//அஸ்ஸலாமு அலைக்கும் அருமையான ஆக்கம் சகோ.பைபிளிலிருந்தும் உதாரணங்கள் அருமையாக எடுத்துகாட்டியுள்ளீர்கள்.எத்தணை உதாரணங்கள் எடுத்துவைத்தாலும் நம்பிக்கையற்றவர்கள் அதை பொய்ப்பிக்கவே முயற்சி மேற்கொள்கின்றார்கள் என்பது மிகவும் வேதனையாக உள்ளது.//

அவர்களுக்கு நேர்வழி காட்ட நாம் பிரார்த்திப்போம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ சீனி!

//mashaa alla!
nalla thakaval!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

UNMAIKAL said...

Robin said...

//இயேசு நாதர் போதித்தது அன்பு வழி, அவர் எதிரிகளையும் நேசித்தார். முகமது ஒரு வன்முறையாளர், தன் எதிரிகளை தீர்த்துக்கட்டியவர், ஒழுக்கமற்றவர். இப்படிப்பட்ட ஒருவர் இயேசுநாதருக்குப் பின் வந்த நபி நான்தான் என்று சொல்வது நகைப்புக்குரியது.//


கர்த்தரை வ‌ழிப‌டாத‌ ஆண்க‌ள் பெண்க‌ள் மீது தண்டணையாக‌ கட்டுக்கடங்காத காமத்தீயை பற்றி எரிய செய்து இழிவான பாலுணர்வு அதிக‌ரிக்க‌ செய்து அவர்களை தகாத ஓரினசேர்க்கை உறவு கொள்ள விட்டு விட்டார் கர்த்தர்.. – பைபிள்.

புதிய ஏற்பாடு. NEW TESTAMENT.

பைபிள்: உரோமையர். 1 அதிகாரம் ஸ்லோக‌ங்கள் 21 – 28

BIBLE: ROMANS CHAPTER 1. VERSES 21. -28

___
25. தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.

25.Who changed the truth of God into a lie, and worshipped and served the creature more than the Creator, who is blessed for ever. Amen.

26. இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான (ஓரினசேர்க்கை- LESBIAN)அநுபோகமாக மாற்றினார்கள்.

26.For this cause God gave them up unto vile affections: for even their women did change the natural use into that which is against nature:

27. அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை (ஓரினசேர்க்கை HOMOSEXUAL) நடப்பித்து தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.

27.And likewise also the men, leaving the natural use of the woman, burned in their lust one toward another; men with men working that which is unseemly, and receiving in themselves that recompense of their error which was meet.

28. தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு (ஓரினசேர்க்கை?) ஒப்புக்கொடுத்தார்.

28. And even as they did not like to retain God in their knowledge, God gave them over to a reprobate mind, to do those things which are not convenient;

சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

1.>>>>
கர்த்தரை வ‌ழிப‌டாத‌வ‌ர்க‌ளுக்கு ஓரினசேர்க்கை தண்டணையாக ? –
<<<<<<

UNMAIKAL said...

// Robin said...

இயேசு நாதர் போதித்தது அன்பு வழி, அவர் எதிரிகளையும் நேசித்தார். முகமது ஒரு வன்முறையாளர், தன் எதிரிகளை தீர்த்துக்கட்டியவர், ஒழுக்கமற்றவர். இப்படிப்பட்ட ஒருவர் இயேசுநாதருக்குப் பின் வந்த நபி நான்தான் என்று சொல்வது நகைப்புக்குரியது.//

சுட்டியை சொடுக்கி படியுங்கள்.


2. >>>>>
ம‌த‌ம்மாற்ற‌ செய்ய‌ மொள்ள‌மாரித்த‌ன‌ம். –
<<<<<<


3.>>>>>
மதம் மாற்ற முயற்ச்சிப்பவர்களை கொல்லவாம். –
<<<<<


4. >>>>>
கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி -
<<<<<<

5. >>>>>>
கொல்லப்படுவீர்கள்? ஞாயிற்றுகிழமைகளில் வேலை செய்தால்.. –
<<<<<<


6. >>>>>
கல்லெறிந்து கொல்லுங்கள்? அடங்காத துஷ்டப்பிள்ளைகளை
<<<<<<


7. >>>>>
திருமணத்துக்கு முன் மனைவி கன்னியா? சோதிக்க?? –
<<<<<<


8. >>>>>
ஓரினச்சேர்க்கையாளர்களை கொலை செய்ய??
<<<<<<

9. >>>>>>
ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.(பைபிள் புதிய ஏற்பாடு மத்தேயு 5 : 39)

** ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...??? **

ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா?

** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா?
என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது.**

புதிய ஏற்பாடு பைபிள்: யோவான்:18 : 22 – 23. ல்
“ இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்..

இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி;

நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.**

ஒரு போலி மாயையை ஏற்படுத்தி தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக வேண்டி ** ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...??? ** என்று

இயேசு போதித்தார் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்..
<<<<<<<


10. >>>>
பைபிளில் மாபெரும் தவறா?. இப்டிலாமா பைபிள் சொல்லுது? – பூமி உருண்டை அல்ல தட்டையாம் ? பூமிக்கு அஸ்திவாரமாம்?, பூமிக்கு தூண்களாம் ?
பூமிக்கு நான்கு மூலைகளாம்?. சூரியன் தான் நகருகுறது. பூமியல்லவாம்!!
விஞ்ஞான அறிவிற்கு புறம்பான பைபிள் கூற்றுகள்.!!! கல்வி அறிவு பெற்ற கிறிஸ்துவ மிஷனரிகளை வெட்கி தலை குனிய செய்யும் புனித‌ பைபிளின் ஸ்லோக‌ங்களில் சில‌.
<<<<<<



.

Robin said...

//ஆபாச வர்ணனைகள் கர்த்தரின் வார்த்தைகளான புனித பைபிளில் இருப்பது தான் புனித பைபிளின் நல்ல போதனைகளை பார்! படி! // உங்கள் இறைத்தூதரே ஆபாசமாக நடந்தவர்தானே. ஆறு வயது சிறுமியைக்கூட அவர் விட்டு வைக்கவில்லையே. ஆபாசத்தைப் பற்றி பேச உங்களுக்கெல்லாம் எந்த அருகதையும் இல்லை.

சிராஜ் said...

சகோ சுவனப்பிரியன்,

வழக்கம் போல் அர்த்தம் பொதிந்த பதிவு. பகிர்விற்கு நன்றி. சகோ ராபினுக்கு கொடுத்த பதிலும் அருமை. தொடரட்டும் உங்கள் பணி.

Robin said...

@சுவனப்பிரியன்
இயேசு நாதரோ அவர் சீடர்களோ யாரையும் கொல்லவில்லை, கற்பழிக்கவில்லை, கொள்ளையடிக்கவில்லை. முகமதுவும் அவரது கூட்டமும் செய்யாத செய்யாத அட்டூளியமே இல்லையே.

UNMAIKAL said...

பைபிள் படுகொலைகள்.

1492 இல் வெள்ளையினவாதிகள் உருவாக்கிய பைபிளின் துணை கொண்டு, பைபிள்வாதிகள் தமது காலனியாதிக்க நோக்கத்துக்காக, அமெரிக்காவை தற்செயலாக (பைபிள் உருவாக்கிய கடவுளுக்கு அமெரிக்கா இருந்தது தெரியாது) பைபிள் வாதியான கொலம்பஸ் கண்டுபிடித்தன்.

பைபிளுக்கு வெளியில் இருந்த ஐரோப்பிய அறிவியல் வரைபடங்களில் அமெரிக்கா உள்ளிட்ட உலக வரைபடம் இருந்தும், பைபிளின் ஆசி பெற்ற படுகொலை காலனிய செய்திதான், அமெரிக்க வரலாறும் நினைவுகளுமாகியது.

இதற்கு முன்பே, அங்கு மக்கள் இருந்த வரலாற்றையே இவர்கள் மறுத்தனர். அவர்களை காட்டு விலங்குகள் என்ற சித்தரித்தனர். பைபிள் இந்த மக்கள் கூட்டத்தைப் பற்றி என்றும் பேசியதில்லை. அவர்களை மனிதர்களாக கூட எற்றுக் கொள்ளவில்லை.

ஒரு கையில் பைபிளும் மறு கையில் ஆயுதமாக அந்த மக்களை வேட்டையாடிய பைபிளின் விசுவாதிகள், அங்கு துப்பாக்கியின் அதிகாரத்தில் சபைகளை உருவாக்கியதுடன், 340 தூக்கு மேடைகளை நிறுவி 50000 பேரை கழுவேற்றி படு கொலையும் செய்தானர்.

துப்பாக்கியின் பாதுகாப்புடன் பைபிளை தூக்கியபடி 1492 இல் இறங்கிய ஹெத்தி மற்றும் டொமினிகள் தீவில் வாழ்ந்த 30 லட்சம் பேரை, 40 வருடங்களின் பின்பு அதாவது 1532 இல் வெறும் 300 மக்களைத் தான் உயிர் வாழ விட்டுவைத்தனர் பைபிள் சபையினர்.

மிகுதி அனைவரையும் வலுக்கட்டயமாக படுகொலை செய்து கத்தாரிடம் அனுப்பி வைத்தனர்.
இன்று அமெரிக்கா என்று அழைக்கப்பட்ட பிரதேசத்தில் அன்று வாழ்ந்த இரண்டு கோடிப் பேரை, இன்று வெறும் 16 லட்சமாக்கினர் பைபிள்வாதிகளும் பைபிள் சபையினரும்.

மெக்சிக்கோவில் பைபிள் வாதிகள் பைபிளுடன் புகுந்த போது வாழ்ந்த 2.5 கோடி மக்களில் இன்று எஞ்சியிருப்போர் வெறும் 20 லட்சம்தான்.

கொன்று பரலோகம் அனுப்பிவைத்தது போக 4000 பேராக மட்டும் எஞ்சியிருந்த "சேயன்" இனமக்களை காயடித்தனர் பைபிளின் சபையைச் சேர்ந்த பைபிள்வாதிகள்.
வேர்ஜினிய பழங்குடி மக்களின் குழந்தைகளை பைபிளின் பெயரில் கட்டயமாக பறித்துச் சென்றனர்.

பைபிளின் ஆசிபெற்று போர்வையைக் கொடுத்தே, அம்மக்களின் நிலங்களை ஏமாற்றி ஏழுதி வாங்கிக் கொண்டனர்.

இதை எல்லாம் செய்த பைபிள் சபையைச் சேர்ந்த அதன் பாதுகாவலனான கொலம்பஸ் சொன்னான் ".. புதிய ஜானுக்கு இறைவன் கூறிய புதிய உலகம், புதிய சொர்க்கம் ஆகியவற்றுக்கு என்னையே துதனாக்கியிருக்றார். அதை கண்டுபிடிக்கவும் அவரே எனக்கு வழி காட்டினர்." என்றான்.

அற்புதங்களையும், அதிசயங்களையும் ஈவு இரக்கமின்றி உருவாக்கி பைபிள் செய்தியை உலக முழுக்க காலனியாதிக்கத்துடன் விரிவாக்கி, சாட்சியங்களைக் கூட கொலம்பாஸ் மூலம் கடவுள் வெளியிட்டுள்ளார். இதுவே கொலம்பஸ் படு கொலை வரலாறும் செய்தியுமாகும்.

இன்று உலக முழுக்க பைபிளைக் கொண்டு சென்று பரப்பிய வரலாறுகள் எங்கும், துப்பாக்கியின் முனையில் உருவான காலனிய வரலாற்றின் அடக்குமுறையிலான அதிகாரத்தில் தான, பைபிள் உலகச் செய்தியானது.

உலகம் முழுக்க ஒரு கையிலும் பைபிளும், மறு கையில் ஆயுதத்துடன் புகுந்த பைபிள்வாதிகள் மக்களை அடக்கி ஒடுக்கி அவர்களை படுகொலை செய்தனர்.

அடக்கியாள படுகொலை மூலம் உருவாக்கிய இரத்ததையும் உயிருள்ள சதையையும் உரமாக்கி, அதில் வறுமையை விதைத்து உலகைச் சூறையாடி மூலம், வெள்ளையினத்தவனின் நாடுகளை செல்வங் கொழிக்கவைத்தனர்.

பைபிள் வசனங்களை உலகச் சட்டமாக கொண்டு, அதற்கு கட்டுப்பட மறுத்த மக்களை மிருகத்தனமாக வேட்டையாடினர்.

தொடர்ச்சியாக வன்முறை அல்லாத வகையிலும் பொருளாசை காட்டியும், வேலை கொடுத்து மக்களை ஏமாற்றியும், பைளின் செய்தியை சபைகள் மூலம் கொண்டு சென்று காலனியாதிக்கத்தின் எடுபிடிகளை உருவாக்கினர்.

இன்றும் பைபிள் வாதிகள் விசுவாசத்துடன் அதன் பின் தான் தமது உலகமயமாதலை விரிவாக்கின்றனர். மக்களை மந்தையாக்குவதன் மூலம், மூலதனத்தின் விரிவாக்கம் மக்களை தாழ்த்தி அடிமையாக்கின்றது.

தாழ்வுக்காக, எந்தளவுக்கு மக்கள் தங்களைத் தாங்கள் அடிமையாக்கி தாழ்த்துகின்றார்களோ, இதுவே கடவுளின் செய்தியாக ஆசியாக்கி விட, மேய்போர் இதை உலகமயமாதலின் செய்தியாக்கின்றனர்?

மக்கள் தங்களைத் தாங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு தாழ்த்துகின்றனரோ, அந்தளவுக்கு சொத்துகள் சிலரின் கையில் குவிந்து செல்ல அதுவே அவர்களின் பைபிளின் ஆசியாகின்றது. இதன் விளைவாக மக்கள், பைபிளின் ஆசி பெற்ற பரதேசியாகின்றனர்.

இதுதான் பைபிள் வாதிகளின் அடிப்படையானதும் கிறிஸ்துவின் நவீன ஆசிர்வாதமாகும்.
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3735:2008-09-08-17-42-35&catid=70:9600

தொடரும்....

UNMAIKAL said...

உலகில் சாந்தியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த கிறிஸ்துவத்தால் தான் முடியும் என்று ஒரு புறம் கூறிக்கொண்டு

மறுபுறம் சிலுவைப் போர்களில் கோடிக்கணக்கில் மனித உயிர்களை கொன்று இரத்த ஆற்றை ஓட்டியது

போதாதென்று ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், உலகின் இன்ன பிற பாகங்களிலும்

கர்த்தரின் பெயரால் மனித குலத்திற்கே பேரழிவை இக்கிறிஸ்தவ நாடுகளும் அவை சார்ந்து இருக்கக்கூடிய கிறிஸ்தவ மிஷினரிகளும் இப்போதுமட்டுமல்ல எப்போதுமே ஏற்படுத்தியே வந்துள்ளன என்பது பலரும் அறிந்ததே.

இது ஒருபுறமிருக்க இதுபோன்ற பயங்கரவாத செயல்களை போதிக்கக்கூடிய வசனங்களும்,

தீவிரவாதத்தை வலியுறுத்தக்கூடிய வசனங்களும்,

மனித உரிமை மீறலை ஆதரிக்கக்கூடிய குறிப்பாக உலக அமைதிக்கு வேட்டு வைக்கக் கூடிய வசனங்கள் பைபிளில் அதிகமதிகம் காணப்படுகின்றது என்ற உன்மையைச் சொன்னால் மட்டும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

.

UNMAIKAL said...

கொலை மற்றும் கொள்ளைக்கு பைபிளின் வழிகாட்டல்:

படையெடுத்து செல்லும் இடங்கள் கைப்பற்றப்பட்டால் சிறை பிடிக்கப்பட்ட ஆண்கள் அனைவரையும் கொலை செய்ய வேண்டுமாம்!

ஒரு நாட்டின் மீது படையெடுத்து அந்நாடு வெற்றி கொள்ளப்பட்டால் அங்கு சிறைபிடிக்கப்பட்ட கைதிகள் அனைவரையும் வெட்டிப் படுகொலை செய்ய வேணடும் என்றும் பைபிள் உபதேசம் செய்கிறது.

உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி.... (உபாகமம் - 20:13)

ஒரு நாட்டின் மீது அத்து மீறி படையெடுத்துச் சென்றால் அங்கு சிறைபிடிக்கப்பட்ட எல்லா ஆண்களையும் வெட்டி சாய்க்க வேண்டும்.

இதுவே இறைகட்டளை என்றல்லவா மேற்கண்ட பைபிள் வசனம் குறிப்பிடுகிறது?

மேற்கண்ட பைபிளின் வரிகளையும் சிலுவை யுத்தங்களில் நடைபெற்ற வன்கொடுமைகளையும் சற்று நினைவு கூறுங்கள்.

அது ஒரு புறம். ஈராக் மற்றும் ஆப்கானில் நடைபெற்ற ஈவு இரக்கமற்ற படுகொலைகளையும்

சமீபத்தில் இஸ்ரேலில் நடைபெற்ற இனப் படுகொலைகளையும்

மேற்கண்ட பைபிளின் வசனத்தையும் சற்று ஒப்பிட்டுப் பாருங்கள்?

இதைச் செய்தது யார்?

அதே பைபிளை வேதமாகப் பின்பற்றும் பைபிளின் மீது கை வைத்து சத்தியப் பிரமாணம் எடுக்கும் அமெரிக்க, இஸ்ரேல் ஆதிக்க சக்திகள் தானே?

இப்போது சொல்லுங்கள் பயங்கரவாதம் எங்கிருந்து உபதேசிக்கப்படுகிறது?

கொள்ளையடிக்க வேண்டும்

ஒரு நாட்டின் மீது படையெடுத்துச் சென்றால் அந்நாட்டு மக்களின் உடைமைகளை கொள்ளையிட வேண்டும் என்றும் அவ்வாறு கொள்ளையிடப்பட்ட பொருட்களை அனுபவிக்க வேண்டும் என்றும் பைபிள் உபதேசம் செய்கிறது.

பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அநுபவிப்பாயாக (உபாகமம் - 20:14)

ஃபலஸ்தீன் மண்ணை அக்கிரமமாக ஆக்கிரமித்ததுடன் இருக்கும் மிச்சம் மீதி இடங்களையும் ஆக்கிரமிக்கும் கொடுமையான எண்ணத்துடன் அம்மக்களை அடக்கி யுத்தம் செய்து,

மக்களின் அடிப்படை தேவைகளான மின்சாரம், குடிநீர் போன்றவற்றைக் கூட அவர்களுக்குச் செல்ல விடாமல் தடைவிதித்து,

பலஸ்தீனையே சிறைசாலையாக உருமாற்றி இனப்படுகொலைகள் நடத்தும் இஸ்ரேலின் ஈனச் செயலும்

“பயங்கர ஆயுதங்கள் உள்ளன” என்ற பொய்க் காரணம் கூறி ஈராக்கை ஆக்கிரமித்து

இப்போது இரானையும் சீண்டி

முஸ்லிம் நாடுகளின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையிட நினைக்கும் ஆதிக்க சக்திகளின் செயலையும்
பைபிளின் மேற்கண்ட உபதேசத்தையும் சற்று நினைத்துப் பாருங்கள்.

அந்தப் பைபிளின் மீது கை வைத்து தானே சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்?


சொடுக்கி படியுங்கள்
>>>>>
கன்னிப்பெண்கள் கர்த்தருக்கு பங்கா? பிடிப‌ட்ட‌ கன்னிப்பெண்க‌ளிலும் அப‌கரிக்க‌ப்ப‌ட்ட‌ பொருட்க‌ள் கால்ந‌டைக‌ளிலும் கர்த்த‌ர் ஆணைப்படி க‌ர்த்தருக்குள்ள பங்கு.-
<<<<<<


.

ராவணன் said...

கட்டுக்கதைகள் எத்தனை எழுதினாலும் உண்மை இருக்கப் போவதில்லை.

குரானை மட்டுமே நம்பும் முகமதியர்களுக்கு எதுவும் புரியாது.

RSS சங்கபரிவாருக்கும் முகமதியர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள்.

suvanappiriyan said...

ராபின்!

//உங்கள் இறைத்தூதரே ஆபாசமாக நடந்தவர்தானே. ஆறு வயது சிறுமியைக்கூட அவர் விட்டு வைக்கவில்லையே. ஆபாசத்தைப் பற்றி பேச உங்களுக்கெல்லாம் எந்த அருகதையும் இல்லை.//

முகமது நபி வாழ்ந்த காலத்தில் 6 வயது 9 வயது போன்ற பெண்களை மணப்பது வழக்கமாக இருந்தது. நிச்சயம் என்று நம்மூர்களில் நடத்துவோமே அது போல் பேசி வைத்துக் கொள்வார்கள். ஆனால் அவர்கள் பூப்பெய்த உடன்தான் கணவனின் வீட்டுக்கு குடும்பம் நடத்த செல்வார்கள். ஏன் இன்றைய இந்தியாவில் இன்றும் கூட இந்த திருமணங்கள் பல கிராமங்களில் சர்வசாதாரணமாக இந்த விஞ்ஞான யுகத்திலும் நடந்து வருகிறது.
நமது முண்டாசு கவிஞன் பாரதியாரும் 6 வயது பெண்ணை மணந்தவர்தான். பெண் உரிமைக்கு பாடுபடும் ஆர்வலர்கள் இதை கண்டு கொள்ள மாட்டார்கள்.
பால்ய விவாகம் தவறு என்பது சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட ஒரு சிந்தனையாகும். அதற்கு முன் இது குறித்த சிந்தனையே மக்களிடம் இருக்கவில்லை என்று கூறலாம். இந்த சிந்தனை ஏற்பட்டப் பிறகும் கூட பால்ய வயது என்பதில் ‘வயதை’ தீர்மாணிப்பதில் இன்றோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது பெரும் வேறுபாடு இருந்தது.

பால்ய விவாகம் தவறு என்ற சிந்தனையே எட்டாத - தவறாகக்கூட கருதப்படாத - ஒரு காலத்தில் நடந்த திருமணத்தை, அது தவறு என்று தீர்மானிக்கப்பட்ட காலத்தில் (ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு) இருந்துக் கொண்டு ‘அது தவறு’ என்று விமர்சிப்பது எந்த வகையில் நியாயம் என்பதை நாம் முதலாவதாக சிந்திக்க வேண்டும்.

முகமது நபி அவர்கள் முடித்த பல்வேறு திருமணங்களில் ஆய்ஷா நாயகி மட்டுமே கன்னிப் பெண். மற்ற அனைவரும் இறைத்தூதரின் வயதுக்கு ஒப்பவர்கள் - சிலர் அவர்களின் வயதை விட அதிக வயதை அடைந்தவர்கள். மற்ற அனைவரும் விதவையர்கள், கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட கைம்பெண்கள் ஆகியோர் தான்.

அடுத்து மற்ற மனைவியரை விட அன்னை ஆயிஷாவிடமிருந்துதான் அதிக ஹதீஸ்களை முஸ்லிம்கள் பெற்றுக் கொண்டனர். மற்ற தோழர்களை விட குடும்ப சம்பந்தமான பல வழிகாட்டுதல்கள் எங்களுக்கு அன்னை ஆயிஷா மூலமே கிட்டியது. இவை எல்லாம் இந்த திருமணத்தால் உலக முஸ்லிம்களுக்கு மனித இனத்துக்கு கிடைத்த நன்மைகள்.

ராவணன் said...

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக் தொடர்ந்து இந்த ஆண்டு ஈரான் அல்லல் படப்போவது உறுதி.

இன்னும் சில ஆண்டுகளில் அரேபியா முழுதும் அல்லல் படும்.

அதன்பின்னர் உலக மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள். அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் எங்கும் நிறைந்திருக்கும்.

இதற்கு அனானி பதில் கூறுவார்.

UNMAIKAL said...

// ராவணன் said...
கட்டுக்கதைகள் எத்தனை எழுதினாலும் உண்மை இருக்கப் போவதில்லை.

குரானை மட்டுமே நம்பும் முகமதியர்களுக்கு எதுவும் புரியாது.

RSS சங்கபரிவாருக்கும் முகமதியர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. //

ராவணன் என்ன ஞானியா? கற்றறிந்த அறிஞனா?

அறிஞர்களை தலைவர்களை வரலாற்றாசிரியர்களை பிரபலங்களை விடவா அறிந்து தெளிந்துவிட்டாய் ராவணா?

சுட்டியை சொடுக்கி படித்து தெளிவடையவும்.

>>>>> இஸ்லாம் வெறுக்கப்பட வேண்டுமா? எதை மறுக்க? எதை ம‌றைக்க? அறிஞர்கள் தலைவர்கள் வரலாற்றாசிரியர்கள் பிரபலங்கள் கூற்றில் எதை மறுக்க? எதை ம‌றைக்க? . <<<<<<

.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,

/////இஸ்லாம் என்ற கட்டிடம் ஆதாமிலிருந்து ஏசு நாதர் வரை சிறுக சிறுக கட்டப்பட்டு முகமது நபி காலத்தில் ஒரு கல்லை வைத்து பூர்த்தி செய்யப்படுகிறது./////

பதிவு முழுக்க இதனை எடுத்து சொன்னவிதம் அருமை சகோ.சுவனப்பிரியன்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ சகோ.ராபின்,

////“ஆகையால் தேவனுடைய இராச்சியம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.”////

---இன்னும் கொடுக்கப்படப்படவில்லையா..? எனில்.... இனி, யாருக்கு தரப்படும்..?

Anonymous said...

Mr Ravanan,

///ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக் தொடர்ந்து இந்த ஆண்டு ஈரான் அல்லல் படப்போவது உறுதி. இன்னும் சில ஆண்டுகளில் அரேபியா முழுதும் அல்லல் படும்.///

அல்லல்படட்டுமே!
தங்களுக்கு கவலையாக இருக்கிறதா?

///அதன்பின்னர் உலக மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள். அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் எங்கும் நிறைந்திருக்கும்.///

தங்களின் எண்ணம் பலிக்கட்டும்.

///இதற்கு அனானி பதில் கூறுவார்.///

அர்த்தமில்லாமல் அடிக்கடி குதறும் தங்களை, அனானி குதறக் கூடாதா?

- Ismath

suvanappiriyan said...

சலாம் சகோ சிராஜ்!

//வழக்கம் போல் அர்த்தம் பொதிந்த பதிவு. பகிர்விற்கு நன்றி. சகோ ராபினுக்கு கொடுத்த பதிலும் அருமை. தொடரட்டும் உங்கள் பணி.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி.... (உபாகமம் - 20:13)

ஒரு நாட்டின் மீது அத்து மீறி படையெடுத்துச் சென்றால் அங்கு சிறைபிடிக்கப்பட்ட எல்லா ஆண்களையும் வெட்டி சாய்க்க வேண்டும்.

இதுவே இறைகட்டளை என்றல்லவா மேற்கண்ட பைபிள் வசனம் குறிப்பிடுகிறது?//

ராபினுக்கு மிக அழகிய முறையில் பைபிளிலிருந்து மேற்கோள்களை காட்டியிருக்கிறீர்கள். இனி அதை விட இது உயர்ந்தது. இதை விட அது உயர்ந்தது என்ற பாட்டை பாட மாட்டார்.

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ ராவணன்!

//ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக் தொடர்ந்து இந்த ஆண்டு ஈரான் அல்லல் படப்போவது உறுதி.

இன்னும் சில ஆண்டுகளில் அரேபியா முழுதும் அல்லல் படும்.

அதன்பின்னர் உலக மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள். அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் எங்கும் நிறைந்திருக்கும்.

இதற்கு அனானி பதில் கூறுவார்//

பதில் யார் கொடுத்தாலும் என்ன கொடுக்கப்படுகிறது என்று பாருங்கள். நான் கொடுக்கும் பதிலைவிட மிக அழகாகவே சகோ இஸ்மத் பலருக்கும் பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்..

அப்கானிஸ்தான் பாகிஸ்தான் ஈராக் லிபியா என்று பிரச்னைகள் வருவதற்கு மூல காரணமே அந்த அரசுகள் உண்மையான இஸ்லாத்தை கடைபிடிக்காததுதான். இன்று ஓரளவு குர்ஆனின் படி ஆட்சி நடத்தி வரும் சவுதி அரேபியாவில் எந்த சிக்கலும் இல்லை. மக்கள் மிகவும் அமைதியாகவும், சுபிட்சமாகவும் வாழ்ந்து வருகிறார்கள். தமிழ் நாட்டிலிருந்து பல இந்து நண்பர்கள் குடும்பத்தோடு 10 வருடம் 20 வருடம் என்று தங்களது சொந்த நாட்டில் வாழ்வது போல் வாழ்ந்து வருகின்றனர். இதே போன்ற சட்டம் மற்ற நாடுகளுக்கும் வந்தால் அனைத்து முஸ்லிம் நாடுகளிலும் அமைதி தவழும்.

அடுத்து முஸ்லிம் நாடுகளில் எங்கெல்லாம் பிரச்னை இருக்கிறதோ அதற்கு மூல காரணமாக இஸ்ரேலோ அமெரிகக்காவோ பின்னால் இருக்கும். ஏனெனில் அரபு நாடுகளை ஒன்று சேர விடாமல் பிரித்து இருக்கும் செல்வங்களை கொள்ளையடிக்க வேண்டும். இதை நன்றாகவே இஸ்ரேலும் அமெரிக்காவும் செய்து வருகிறது.

ஆனால் இது அதிக நாட்களுக்கு நீடிக்காது. ஆட்சி கவிழ்ந்த பல நாடுகளில் இஸ்லாமிய ஆட்சி மலரப் போகிறது. அதன் பிறகு நிலைமை சீராகும். கவலைப்படாதீர்கள்.

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//---இன்னும் கொடுக்கப்படப்படவில்லையா..? எனில்.... இனி, யாருக்கு தரப்படும்..?//

பார்ப்போம் ராபின் பதில் தருகிறாரா என்று. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ இஸ்மத்!

//அர்த்தமில்லாமல் அடிக்கடி குதறும் தங்களை, அனானி குதறக் கூடாதா?

- Ismath//

சிலருக்கு உண்மை இப்படித்தான் கசக்கும் சகோ இஸ்மத். ராவணனுக்கு உடனுக்குடன் பதில் வந்து விடுகிறதே என்ற எரிச்சல். நீங்கள் தொடர்ந்து கருத்துக்களை சொல்லி வாருங்கள்.

suvanappiriyan said...

சகோ ராபினுக்கு!

……“In line with Islamic belief, the Gospel treats Jesus as a human being and not a God. It rejects the ideas of the Holy Trinity and the Crucifixion and reveals that Jesus predicted the coming of the Prophet Mohammad,” the newspaper reported.

“In one version of the gospel, he is said to have told a priest: ‘How shall the Messiah be called? Mohammad is his blessed name.’…….

http://english.alarabiya.net/articles/2012/02/26/197060.html

1500 ஆண்டு கால பழைய பைபிள் ஒன்று துருக்கி தேவாலயத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் ஏசு இறைத் தூதரே என்பதற்கும் முகமது நபியின் முன்னறிவிப்பும் அராமிக் மொழியில் அமைந்த இந்த பைபிளில் காணப்படுகிறது. கொடுத்துள்ள சுட்டியில் மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ளவும்.

-தகவல் அனுப்பித் தந்த சகோ ஆஷிக்குக்கு நன்றி!

NKS.ஹாஜா மைதீன் said...

சலாம் சகோ...

அருமையான விளக்கங்கள்...

suvanappiriyan said...

சலாம் சகோ ஹாஜா மைதின்!

//சலாம் சகோ...

அருமையான விளக்கங்கள்...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ஷர்புதீன் said...

where is votty pattai?

suvanappiriyan said...

Sheik Mansoor on February 14, 2012 at 1:43 pm

முஸ்லிம்களில் பலர் அடிப்படைவாதிகளாகவும் – பயங்கரவாதிகளாகவும் இருப்பது ஏன்?.

பதில்

உலக விஷயங்கள் பற்றி விவாதிக்கும் பொழுதும் மதங்களை பற்றி விவாதிக்கும் பொழுதும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இஸ்லாமியர்கள் அடிப்படைவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் சுட்டிக்காட்டப் படுகின்றனர். இஸ்லாத்தின் எதிரிகள் உலகத்தில் உள்ள எல்லா ஊடகங்களின் வாயிலாகவும் இஸ்லாமியர்களை அடிப்படைவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் தவறாக அடையாளம் காண்பிப்பதில் உறுதியாக இருக்கிறார்கள். மேற்படி தவறான தகவல் மற்றும் தவறான பிரச்சாரம் – இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதற்கும் தவறாக விமரிசிக்கப்படுவதற்கும் காரணங்களாக அமைந்து விடுகின்றன. உதாரணத்திற்கு அமெரிக்காவின் ஒக்லகாமா நகரில் நடந்த வெடி குண்டு விபத்தின் பின்னனியில் “மத்திய கிழக்கு நாடுகளின்” கைவரிசை இருக்கிறது என அமெரிக்காவின் அனைத்து ஊடகங்களும் போட்டி போட்டுக்கொண்டு அறிவிப்பு செய்தன. ஆனால் அந்த வெடிகுண்டு வெடிக்க காரணமாயிருந்த குற்றவாளி அமெரிக்காவின் ஆயுதபடையைச் சார்ந்த ஒருவன்தான் என்று பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
அடுத்து இஸ்லாமியர்கள் மீது சுமத்தப்படும்; “அடிப்படைவாதம்” பற்றியும் – “தீவிரவாதம்” பற்றியும் நாம் ஆராய்வோம்.

1. அடிப்படைவாதத்திற்கான விளக்கம்:
தான் சார்ந்திருக்கும் கொள்கையை மன உறுதியுடன் பற்றிப் பிடித்து அந்த கொள்கையை தன் வாழ்க்கையில் மிகச் சரியாக நடைமுறைபடுத்துபவனுக்கு அடிப்படைவாதி என்று பெயர். உதாரணத்திற்கு மருத்துவர் ஒருவர் சிறந்த மருத்துவர் என பெயர் பெற வேண்டுமெனில் – அவர் சார்ந்திருக்கும் மருத்துவ கொள்கையின் அடிப்படையை அறிந்து – அறிந்த மருத்துவ கொள்கையை பின்பற்றி – அதை நடைமுறைபடுத்தினால் அவர் ஒரு சிறந்த மருத்துவர் என்று அழைக்கப்படுவார். இதனை வேறு வார்த்தையில் சொல்வதென்றால் – மருத்துவதுறையில் அவர் ஒரு அடிப்படைவாதி. கணிதத் துறையில் ஒருவர் சிறந்த கணித மேதை என பெயர் பெற வேண்டுமெனில் – அவர் சார்ந்திருக்கும் கணிதக் கொள்கையின் அடிப்படையை அறிந்து – அவர் அறிந்த கணிதக் கொள்கையை பின்பற்றி – அதை நடைமுறைபடுத்தினால் அவர் ஒரு சிறந்த கணித மேதை என்று அழைக்கப்படுவார். இதனை வேறு வார்த்தையில் சொல்வதென்றால் – கணிதத்துறையில் அவர் ஒரு அடிப்படைவாதி. . அறிவியல் துறையில் ஒருவர் சிறந்த அறிவியல் மேதை என பெயர் பெற வேண்டுமெனில் – அவர் சார்ந்திருக்கும் அறிவியல் கொள்கையின் அடிப்படையை அறிந்து – அறிந்த அறிவியல் கொள்கையை பின்பற்றி – அதை நடைமுறைபடுத்தினால் அவர் ஒரு சிறந்த அறிவியல் மேதை என்று அழைக்கப்படுவார். இதனை வேறு வார்த்தையில் சொல்வதென்றால் – அறிவியல் துறையில் அவர் ஒரு அடிப்படைவாதி.

2. எல்லா அடிப்படைவாதிகளும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல.
எல்லா அடிப்படைவாதிகளுக்கும் ஒரே வர்ணம் ப+சக் கூடாது. எல்லா அடிப்படைவாதிகளும் நல்லவர்கள் என்றோ அல்லது கெட்டவர்கள் என்றோ வகைப்படுத்த முடியாது. அவர்கள் சார்ந்திருக்கும் துறை அல்லது அவர்களால் செய்யப்படும் செயல் ஆகியவற்றைக் கொண்டே அவர்கள் நல்ல அடிப்படைவாதியா அல்லது கெட்ட அடிப்படைவாதியா என்பதை வகைப்படுத்த வேண்டும். கொள்ளையடிக்கும் – சிறற்த கொள்ளைக்காரன் சமுதாயத்திற்கு தீங்கு விளைவிப்பதால் அவனை ஒரு கெட்ட அடிப்படைவாதி என்று கொள்ளலாம். அதே சமயம் ஒரு சிறந்த மருத்துவர் சமுதாயத்திற்கு பயனுள்ளவராக இருப்பதால் அவர் ஒரு நல்ல அடிப்படைவாதி மருத்துவர் என கொள்ளலாம்.

suvanappiriyan said...

Sheik Mansoor on February 14, 2012 at 1:43 pm

3. நான் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி என்பதில் பெருமை கொள்கிறேன்.:

இறைவனி;ன் மாபெரும் கிருபையினால் – நான் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி. இஸ்லாத்தின் அடிப்படை விதிகளை அறிந்து – அறிந்த விதிகளை பின்பற்றி – அந்த விதிகளை எனது வாழ்க்கையிலும் நடைமுறைபடுத்துகிறேன். ஓரு உண்மையான இஸ்லாமியன் தான் ஒரு அடிப்படைவாதியாக இருப்பதில் ஒருபோதும் வெட்கமுற மாட்டான். நான் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி என்பதில் பெருமை கொள்கிறேன். ஏனெனில் – இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் அனைத்தும் உலகம் முழுவதுமுள்ள மனித குலத்திற்கு பயன் தரக் கூடியவை. இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் எதுவுமே மனித குலத்திற்கு தீழங்கிழைப்பவையோ அல்லது மனித குலத்திற்கு எதிரானவையோ அல்ல. இஸ்லாத்தின் செயல்பாடுகள் சரியானவை அல்ல. மாறாக தவறானவை என்று ஏராளமானபேர் இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை கொண்டிருக்கின்றனர். இந்த தவறான எண்ணம் ஏனெனில் – இஸ்லாத்தைப் பற்றி அவர்கள் அறைகுறையாக அறிந்து வைத்திருப்பதே காரணமாகும். ஓருவர் இஸ்லாம் கற்றுத் தரும் பாடங்களை திறந்த மனதுடனும் – மிகக் கவனத்தோடும் பகுத்தாய்வார் எனில் இஸ்லாம் தனி மனிதனுக்கும் – மொத்த மனித சமுதாயத்திற்கும் – முழு பயனுள்ளது என்ற உண்மையை அறிவதிலிருந்து தவற முடியாது.

4. “அடிப்படைவாதத்திற்கு” டிக்ஷ்னரி தரும் விளக்கம்:

அடிப்படைவாதத்திற்கு வெப்ஸ்டர் டிக்ஷ்னரி தரும் விளக்கம் என்னவென்றால் “பாதுகாக்கும் கொள்கையை” அடிப்படையாக கொண்டு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் தோன்றிய இயக்கம் என்பதாகும். நவீன நாகரீகத்தை எதிர்த்தும் பைபிளின் கொள்கைகளான – நம்பிக்கை மற்றும் ஒழுக்கங்கள் மட்டுமல்லாது – வரலாற்று உண்மைகளையும் பைபிளிள் உள்ளபடியே நிலை நிறுத்த வேண்டியும் தோன்றிய இயக்கமாகும். “கடவுளால் எழுத்து வடிவில் அருளப்பட்ட கட்டளைகளே பைபிள்” என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து இயங்கி வரும் இயக்கமாகும். எனவே ஆரம்ப காலங்களில் அடிப்படைவாதம் என்றால் மேற்குறிப்பிட்ட கொள்கைகளை அடிப்படையாக கொண்டு இயங்கி வந்த இயக்கம் என்று பொருள் கொள்ளப்பட்டது.
அடிப்படைவாதத்திற்கு ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரி தரும் விளக்கம் என்னவெனில் “மதங்களின் தொன்மையான அல்லது அடிப்படையான கோட்பாடுகளை நெறி பிறழாது நடைமுறைபடுத்துவது – குறிப்பாக இஸ்லாமிய மத கோட்பாடுகள்” என்பதாகும்.
இன்றைக்கு ஒரு மனிதன் “அடிப்படைவாதம்” என்ற வார்த்தையை உபயோகிக்கும்போது உடனே அவனது எண்ணத்தில் இஸ்லாமியன் – ஒரு பயங்கரவாதியாக தோன்றிவிடுகிறான்.
5. ஒவ்வொரு இஸ்லாமியனும் ஒரு பயங்கரவாதியாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு இஸ்லாமியனும் ஒரு பயங்கரவாதியாக இருக்க வேண்டும். பயத்துக்கு காரணமானவன் பயங்கரவாதி. காவல்துறையை பார்த்தவுடன் கொள்ளையடிப்பவர்கள் பயப்படுகின்றனர். எனவே கொள்ளையருக்கு காவல் துறையினர் பயங்கரவாதிகள். அதேபோல திருட்டு கொள்ளை மற்றும் வல்லுறவு போன்ற சமுதாயத்தின் குற்றங்களைச் செய்யும் ஒவ்வொரு குற்றவாளிக்கும் – ஒவ்வொரு இஸ்லாமியனும் ஓர் பயங்கரவாதியாக தோன்ற வேண்டும். சமுதாயக் குற்றவாளிகள் – ஒரு இஸ்லாமியனை காணும்போதெல்லாம் பயப்படவேண்டும். சமுதாயத்தில் உள்ள எல்லா மனிதர்ளுக்கும் மத்தியில் தீங்கு இழைப்பவனுக்கு பயங்கரவாதி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவது உண்மை. ஆனால் ஒரு உண்மையான முஸ்லிம் சமுதாயத்தில் குறிப்பிட்டவர்களுக்கு – அதாவது சமுதாய குற்றவாளிகளுக்கு – மாத்திரம் பயங்கரவாதியாக தோன்ற வேண்டுமே தவிர சமுதாயத்தின் அப்பாவி பொதுமக்களுக்கு அல்ல. மாறாக ஒரு இஸ்லாமியன் – அப்பாவி பொதுமக்களுக்கு மத்தியில் அமைதியை நிலைநாட்டுபவனாக இருக்க வேண்டும்.

suvanappiriyan said...

6. மனிதர்கள் செய்கிற ஒரே வகையான செயலுக்கு – “பயங்கரவாதிகள்” என்றும் “விடுதலைப் போராட்ட வீரர்கள்” என்றும் இரண்டு வகையான முத்திரைகள்.

வெள்ளையர்களால் ஆளப்பட்டுக் கொண்டிருந்த இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் – இந்திய சுதந்திரத்திற்காகப் போராடியவர்களை பயங்கரவாதிகள் என பிரிட்டிஷ் அரசாங்கம் முத்திரை குத்தியது. ஆனால் அதே வீரர்கள் இந்தியர்களால் – சுதந்திர போராட்ட வீரர்கள் என அழைக்கப் பட்டார்கள். இவ்வாறு ஒரே வகையான மனிதர்கள் – அவர்கள் செய்த ஒரே வகையான செயலுக்கு இரண்டு வகையான முத்திரைகள் குத்தப்பட்டார்கள். அவர்கள் “பயங்கரவாதிகள்” என்று ஒரு தரப்பினராலும் – “சுதந்திரப் போராட்ட வீரர்கள்” என்று மறு தரப்பினராலும் அழைக்கப்பட்டார்கள். இந்தியாவை ஆள பிரிட்டிஷ்க்கு உரிமை இருக்கிறது என்ற கருத்தைக் கொண்டவர்கள் அவர்களை “பயங்கரவாதிகள்” என்று அழைத்தனர். இந்தியாவை ஆள பிரிட்டிஷ்க்கு உரிமை இல்லை என்ற கருத்தைக் கொண்டவர்கள் அவர்களை “சுதந்திரப் போராட்ட வீரர்கள்” என்று அழைத்தனர்.
எனவே ஒரு மனிதனைப் பற்றி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னால் – அவனது கருத்தையும் அறிவது அவசியம். இரண்டு தரப்புகளும் தீர விசாரிக்கப்பட்டு – விசாரணையின் முடிவுகள் அலசி ஆராயப்பட்டு – அதற்கான காரண காரியங்கள் மற்றும் செயலுக்கான நோக்கம் அனைத்தையும் அறிந்த பின்புதான் அந்த மனிதனைப்பற்றி ஒரு நிலையான முடிவு க்கு வரவேண்டும்.

7. இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்.
“இஸ்லாம்” என்ற வார்த்தை “ஸலாம்” என்ற அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. ஸலாம் என்றால் அமைதி என்று பொருள். இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் – இஸ்லாத்தை பின்பற்றுவோர் அமைதியை கடைபிடிக்குமாறு போதிப்பதுடன் உலகம் முழுவதும் அமைதியை நிலை நாட்டுமாறும் போதிக்கிறது.
இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாம் அமைதியை கடைபிடிப்பதில் ஒவ்வொரு இஸ்லாமியனும் ஒரு அடிப்படைவாதியே. சமுதாயத்தில் அமைதியையும் – நீதியையும் நிலைநாட்டுதல் வேண்டி – ஒவ்வொரு இஸ்லாமியனும் – சமுதாயக் கொடுமைகளுக்கு எதிரான ஒரு தீவிரவாதியாக இருக்க வேண்டும்.

Rabbani said...

ஸலாம் சகோ
பதிவும் பின்னூட்டங்களும் அருமை வழக்கம்போல இதிலும் நண்பர் ராபின் விவாதத்தை அரைகுறையோடு விட்டுவிட்டு தப்பிவிட்டார்

suvanappiriyan said...

சலாம் சகோ ரப்பானி!

//ஸலாம் சகோ
பதிவும் பின்னூட்டங்களும் அருமை வழக்கம்போல இதிலும் நண்பர் ராபின் விவாதத்தை அரைகுறையோடு விட்டுவிட்டு தப்பிவிட்டார்//

தப்பி விட்டாலும் பின்னூட்டங்கள் மூலமாக சிறிதாவது தெளிவடைந்திருப்பார்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Ganesan said...

// முகமது நபி வாழ்ந்த காலத்தில் 6 வயது 9 வயது போன்ற பெண்களை மணப்பது வழக்கமாக இருந்தது. நிச்சயம் என்று நம்மூர்களில் நடத்துவோமே அது போல் பேசி வைத்துக் கொள்வார்கள். ஆனால் அவர்கள் பூப்பெய்த உடன்தான் கணவனின் வீட்டுக்கு குடும்பம் நடத்த செல்வார்கள். ஏன் இன்றைய இந்தியாவில் இன்றும் கூட இந்த திருமணங்கள் பல கிராமங்களில் சர்வசாதாரணமாக இந்த விஞ்ஞான யுகத்திலும் நடந்து வருகிறது.
நமது முண்டாசு கவிஞன் பாரதியாரும் 6 வயது பெண்ணை மணந்தவர்தான். பெண் உரிமைக்கு பாடுபடும் ஆர்வலர்கள் இதை கண்டு கொள்ள மாட்டார்கள்.//

முகமது செய்து கொண்டது பால்ய விவாகம் என்பதே தவறு!! பால்ய விவாகம் என்பது சிறுவனுக்கும், சிறுமிக்கும் நடப்பது. வயோதிக கிழவருக்கும் சிறுமிக்கும் நடப்பது இல்லை.

பால்ய விவாகம் தவறு என்ற சிந்தனை எழுவது இயல்பே. இந்த நூற்றாண்டு சிந்தனை அந்த நூற்றாண்டு சிந்தனை என்றேல்லாம் சப்பை கட்டு கட்ட அவசியம் இல்லை. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் பால்ய விவாகத்தில் தவறு செய்தோர் திருமணம் செய்து கொள்ளும் சிறுவனோ சிறுமியோ அல்ல. அவர்களின் பெற்றோரே குற்றவாளி. பாரதிக்கு திருமணம் நடந்த போது அவருக்கு வயது 14 . செல்லமாவுக்கோ வயது 7. 14 வயது சிறுவனை குற்றம் சாட்ட முடியாது. பாரதியின் தந்தையாரே இவ்விஷயத்தில் தவறிழய்தவர் என்று கருத முடியும்.

முகமது விஷயமே வேறு. ஆயிஷாவை குறை சொல்ல முடியாது. திருமணத்தின் போது அவர் வெறும் சிறுமி. திருமணத்துக்கு ஆசை பட்ட முகமது தான் குற்றவாளி. முகமது ஆயிஷாவுடன் இல்லற வாழ்வை ஆயிஷாவின் 9 ஆம் வயதில் தொடங்கியுள்ளார். இது எந்த காலத்திலும் அசிங்கமே. நடு நிலை கொண்டு பார்ப்போர் அவ்வாறு தான் சொல்வர். சுவனம் கிடைக்காதோ என்ற பயமோ, முகமதை குற்றம் சொன்னால் தெய்வ தண்டனை கிடைத்துவிடும் என்ற பயமோ இன்றி யோசித்து பார்த்தால் உங்களுக்கு இது புரியும்.

suvanappiriyan said...

திரு கணேசன்!

//முகமது விஷயமே வேறு. ஆயிஷாவை குறை சொல்ல முடியாது. திருமணத்தின் போது அவர் வெறும் சிறுமி. திருமணத்துக்கு ஆசை பட்ட முகமது தான் குற்றவாளி. முகமது ஆயிஷாவுடன் இல்லற வாழ்வை ஆயிஷாவின் 9 ஆம் வயதில் தொடங்கியுள்ளார். இது எந்த காலத்திலும் அசிங்கமே. நடு நிலை கொண்டு பார்ப்போர் அவ்வாறு தான் சொல்வர். //

நாம் வாழும் இந்த இருபதாம் நூற்றாண்டை கணக்கில் எடுத்து பேசுகிறீர்கள். 1400 வருடங்களுக்கு முன்பு அந்த சமூகத்தில் விபசாரம் தலைவிரித்தாடியது. ஒரு பெண்ணை பலர் உபயோகப்படுத்தி விட்டு முடிவில் குழந்தைக்கு யார தகப்பன் என்பதை அந்த பெண்ணின் முடிவுக்கே விட்டு விடுவார்களாம். அந்த பெண் கை காட்டும் ஒருவன்தான் அந்த குழந்தைக்கு தகப்பன். அடிமை முறை மூலமாக பெண்கள் மிருகங்களை விடக் கேவலமாக நடத்தப்பட்டனர். இந்த நிலையில்தான் இஸ்லாம் அங்கு மறு உதயமாகிறது.

அன்னை ஆயிஷாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றால் பெரிய பெண்ணாக வளர்ந்தவுடன் சொல்லியிருக்கலாமே! தான் முகமது நபியுடன் கடைசி காலம் வரை சந்தோஷமாக இருந்ததாகவே அன்னை ஆயிஷாவின் அறிவிப்பு வருகிறது. குடும்ப சம்பந்தமான சில சிக்கலான சட்டங்கள் அன்னை ஆயிஷா மூலமே எங்களுக்கும் உலகுக்கும் கிட்டியது.

புஹாரி :2574 ஆயிஷா (ரலி).
1583. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, ‘நாளை நான் எங்கே இருப்பேன்? நாளை நான் எங்கே இருப்பேன்?’ என்று என்னுடைய (முறை வரும்) நாளை மனத்தில் எண்ணியவாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள். எனவே, அவர்களின் (மற்ற) துணைவியர், தாம் விரும்பிய இடத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்கலாம் என்று அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். எனவே, அவர்கள் (விரும்பியபடி) தாம் இறக்கும்வரை என் வீட்டிலேயே இருந்தார்கள். அவர்கள் எந்த நாளில் முறைப்படி என் வீட்டில் தங்கி வந்தார்களோ அந்த நாளில் என் வீட்டில் வைத்து அவர்கள் இறந்தார்கள். என் நெஞ்சுக்கும் நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் இடையே அவர்களின் தலையிருந்தபோது, அவர்களின் எச்சில் என் எச்சிலுடன் கலந்திருந்த நிலையில் அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றிக் கொண்டான்.

புஹாரி :2574 ஆயிஷா (ரலி).


அன்னை ஆயிஷா அவர்கள் எந்த அளவு சந்தோஷமாக கடைசி வரை நபியவர்களுடன் இருந்தனர் என்பதை விவரிக்கும் ஹதீது இது.


உலக மக்களுக்கு குடும்ப சட்டங்கள் தெளிவாக கிடைக்க வேண்டும் என்ற காரணத்தால் இந்த ஏற்பாட்டை இறைவன் செய்திருக்கலாம். ஏனெனில் முகமது நபியின் இளமைக்காலத்தில் 40 வயதுக்கு மேற்பட்ட ஒரு விதவையை திருமணம் முடித்து புரட்சி பண்ணியதை வசதியாக மறந்து விடுகிறீர்கள். உடல் சுகம்தான் முக்கிய காரணமாக இருந்திருந்தால் இளமையில் 40 வயதுக்கு மேற்பட்ட ஒரு விதவையை திருமணம் முடிக்க அவசியம் இல்லை.

தந்தை அபூபக்கர்அவர்களைப் போன்றே ஆயிஷா அவர்களும் அறிவுக் கூர்மை பெற்றவராகத் திகழ்ந்தார்கள். முழுக்குர்அனையும் மனனம் செய்த இவர்கள் 2210 நபிமொழிகளை உலகிற்கு வழங்கி உலகிலேயே அதிகமான ஹதீஸ்களை அறிவித்தவர் என்ற பெருமையைப் பெறுகிறார்கள்.மார்க்கச்சட்டங்கள் என்னும் ஃபிக்ஹுக் கலையிலும்,பாகப்பிரினை சட்டவிளக்கங்களிலும் தேர்ந்தவர்கள். அரபுநாட்டு வரலாறு,கவிதைகள், பழமொழிகள்,வம்சா வழித்தொடர்கள் ஆகியவற்றை அதிகமதிகம் அறிந்தவர்கள்.இவர்கள் அபார நினவாற்றலைப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அபூஹுரைரா,இப்னு அப்பாஸ்,இப்னு உமர் போன்ற அறிவு மேதைகள் தங்களின் நினைவாற்றலை இவர்களிடமே உறுதி செய்து கொளவார்கள்.

ஒரு இறைத்தூதர் என்பவர் ஒரு மனிதன் மனைவியிடம், மகனிடம், உற்றார் உறவினரிடம், குடும்ப வாழ்வில் எப்படி வாழ வேண்டும் என்பதை விளக்குபவராக இருக்க வேண்டும். அதறகான ஏற்பாடாகத்தான் முகமது நபி அவர்களின் திருமணம் இருந்தது.

//சுவனம் கிடைக்காதோ என்ற பயமோ, முகமதை குற்றம் சொன்னால் தெய்வ தண்டனை கிடைத்துவிடும் என்ற பயமோ இன்றி யோசித்து பார்த்தால் உங்களுக்கு இது புரியும்.//

எனக்கு சுவனம் கிடைப்பதும் கிடைக்காததும் இறைவனின் சித்தம். அது ஒரு புறம் இருக்கட்டும்.

இந்த இருபதாம் நூற்றாண்டிலும் இன்றும் பல கோவில்களில் சிறு பெண்களை பொட்டு கட்டி விட்டு அவர்களை நிரந்தரமாக தேவதாசிகளாக மாற்றி வருகிறீர்களே அவர்களின் பக்கம் உங்கள் கருணை பார்வையை திருப்புங்கள். புண்ணியமாக போகும்.

suvanappiriyan said...

திரு கணேசன்!

//முகமது விஷயமே வேறு. ஆயிஷாவை குறை சொல்ல முடியாது. திருமணத்தின் போது அவர் வெறும் சிறுமி. திருமணத்துக்கு ஆசை பட்ட முகமது தான் குற்றவாளி. முகமது ஆயிஷாவுடன் இல்லற வாழ்வை ஆயிஷாவின் 9 ஆம் வயதில் தொடங்கியுள்ளார். இது எந்த காலத்திலும் அசிங்கமே. நடு நிலை கொண்டு பார்ப்போர் அவ்வாறு தான் சொல்வர். //

அக்கால அரபு நாட்டில் சிறுவர் சிறுமியருக்கு மூன்று வயது முதல் ஆறு வயதுக்குள் மணம் பேசி வைப்பது வழக்கமாக இருந்தது.அந்த வழமைப்படி தான் ஆயிஷா(ரலி) அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பின்னர் ஹிஜ்ரத்திற்குப்பின்னர் அவர்களின் ஒன்பதாவது வயதில் நபி அவர்கள் மணவாழ்க்கை நடத்தினர்.(ஹதீஸின் சுருக்கம்: ஆதாரம் புகாரி 3894,முஸ்லிம்,அஹ்மத்:25823)

சிறுவயதில் திருமணம் செய்ததை ஆதாரமாகக் கொண்டு நாமும் பருவமடையாத சிறுமிகளை திருமணம் செய்யலாம் என நாம் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது.
நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவை திருமணம் புரிந்தது அந்நாட்டு வழமைபடித்தான். பின்னர் திருமணம் தொடர்பான சட்டங்கள் இறைவனால் வழங்கப்பட்டு சிறுமிகளை திருமணம் செய்வது தடை செய்யப்பட்டுவிட்டது.
உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ளமுடியும்? (அல்குர்ஆன்:4:21)
திருமணம் என்பது ஒரு பெண் ஆணிடம் எடுக்கும் உறுதியான உடன்படிக்கை என்று இவ்வசனம் கூறுகிறது.உடன்படிக்கை எடுக்கும் போது அது என்ன என்பது உடன்படிக்கை எடுக்கும் இருவருக்கும் தெரியவேண்டும்.சிறுமியாக இருந்தால் உடன்படிக்கை என்னவென்பது தெரியாது. எனவே, சிறுமிகளின் திருமணம் இவ்வசனத்தின் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம். பின்வரும் நபிமொழியும் இதற்கு சான்றாக உள்ளது.

நபி(ஸல்) அவர்கள், கன்னி கழிந்த பெணணை அவளது (வெளிப்படையான) உத்தரைவைப் பெறாமல் மணமுடிக்க வேண்டாம்.கன்னிப்பெண்ணிடம் (ஏதேனும் ஒரு முறையில்) சம்மதம் பெறாமல் மணமுடித்துக் கொடுக்கவேண்டாம். என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எவ்வாறு கன்னிப் பெண்ணின் அனுமதி (யைத் தெரிந்து கொள்வது?) என்று மக்கள் கேட்டார்கள். (உடனே) நபி அவர்கள் அவள் மெளனம் சாதிப்பதே (அவளது சம்மதம்) என்று கூறினார்கள். (புகாரி: 5136)

திருமணத்தில் மணமகளின் சம்தத்தைப் பெறச் சொன்ன நபி அவர்கள் கன்னிப் பெண்ணையும், விதவைப் பெண்ணையும் குறிப்பிட்டார்கள். ஆனால், பருவ வயதை அடையாத சிறுமியைப் பற்றிக் குறிப்பிடவில்லை. சிறுமியைத் திருமணம் புரியலாம் என்றிருந்தால் அச்சிறுமியிடம் சம்மதம் பெறவேண்டுமா? அல்லது வேண்டியதில்லையா? என்பதைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கவேண்டும். இதிலிருந்து சிறுமியைத் திருமணம் புரிதல் இஸ்லாத்தில் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ, கணேசன் அவர்களுக்கு தாங்கள் அழகாகவும் அதேசமயம் நன்றாக‌ புரியும்புடி அளிக்கும் பதில் அருமை.இப்பதிலை கண்டு அவர் தெளிவடைவார் என்றே கருதுகின்றேன்.

Ganesan said...

//ஒரு இறைத்தூதர் என்பவர் ஒரு மனிதன் மனைவியிடம், மகனிடம், உற்றார் உறவினரிடம், குடும்ப வாழ்வில் எப்படி வாழ வேண்டும் என்பதை விளக்குபவராக இருக்க வேண்டும். அதறகான ஏற்பாடாகத்தான் முகமது நபி அவர்களின் திருமணம் இருந்தது.//

//சிறுவயதில் திருமணம் செய்ததை ஆதாரமாகக் கொண்டு நாமும் பருவமடையாத சிறுமிகளை திருமணம் செய்யலாம் என நாம் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது.
நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவை திருமணம் புரிந்தது அந்நாட்டு வழமைபடித்தான். பின்னர் திருமணம் தொடர்பான சட்டங்கள் இறைவனால் வழங்கப்பட்டு சிறுமிகளை திருமணம் செய்வது தடை செய்யப்பட்டுவிட்டது.//

என்ன தான் சொல்ல வருகிறீர்கள் சுவனபிரியன்? ஒரு பக்கம் ஒரு இறை தூதர் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று இந்த கருமம் இறைவனால் நடந்தது என்கிறீர்கள். கொஞ்ச நாளில் கடவுளே இந்த மாதிரி செயல்களை தடை செய்ததாகவும் சொல்கிறீர்கள். என்ன இழவோ போங்க.

இன்னோரு கேள்வி. இறைவனால் தடை செய்யப்பட விஷயம் என்றால் அது கேவலமான ஒன்று தானே? அதுவும் இந்த அசிங்கத்தை உங்கள் இறைவன் 1400 வருடத்திற்கு முன்பே தடை செய்ததை கவனிக்கவும். அதனால் இந்த விஷயம் அசிங்கம் என்பது 20 வதாம் நூற்றாண்டு சிந்தனை என்றெல்லாம் இனியாவது சொல்லாதீர்கள்.

//40 வயதுக்கு மேற்பட்ட ஒரு விதவையை திருமணம் முடித்து புரட்சி பண்ணியதை வசதியாக மறந்து விடுகிறீர்கள். உடல் சுகம்தான் முக்கிய காரணமாக இருந்திருந்தால் இளமையில் 40 வயதுக்கு மேற்பட்ட ஒரு விதவையை திருமணம் முடிக்க அவசியம் இல்லை.//

புரட்சியாவது மண்ணாவது. இந்த 40 வயது விதவை ஏதோ வழியற்ற கைம்பெண் போல் அல்லவா சொல்கிறீர்கள். கதீஜா ஒரு பணக்காரர். முகமதோ அவரின் தொழிலாளி. அதுவும் அப்போது இந்த இறை தூதர் பட்டமெல்லாம் முகமதுக்கு கிடையாது. பணக்கார முதலாளியை அதுவும் 15 வயது மூத்தவரை திருமணம் செய்வதுமே ஒரு நல்ல காரியமாய் படவில்லை.. பேரும், பின் பற்ற கூட்டமும் சேர்ந்த பின் அல்லவா மற்ற கூத்தெல்லாம். ஹும்ம்.

suvanappiriyan said...

திரு கணேசன்!

//என்ன தான் சொல்ல வருகிறீர்கள் சுவனபிரியன்? ஒரு பக்கம் ஒரு இறை தூதர் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று இந்த கருமம் இறைவனால் நடந்தது என்கிறீர்கள். கொஞ்ச நாளில் கடவுளே இந்த மாதிரி செயல்களை தடை செய்ததாகவும் சொல்கிறீர்கள். என்ன இழவோ போங்க.//

ஒரு இழவும் இல்லை. இறைத்தூதருக்கென்று சில தனிப்பட்ட உரிமைகளை இறைவன் வழங்குவான். முஸ்லிம்களுக்கு ஒரே நேரத்தில் நான்கு மனைவிகளுக்கு மேல் திருமணம் முடிக்கக் கூடாது. ஆனால் இந்த சட்டம் முகமது நபிக்கு பொருந்தாது. இதுபோல்தான் 2210 ஹதீஸ்களை ஒருவர் மனனம் செய்வதென்பது அவ்வளவு சாதாரண காரியம் அல்ல. பல தோழர்கள் இவரிடம் வந்துதான் ஹதீஸ் கலையை கற்றிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒருவர் தூதருக்கு மனைவியாக இருப்பதே சாலப் பொருத்தம் என்பது இறைவனின் ஏற்பாடு. மேலும் முகமது நபி இறக்கும் வரையில் அன்னை ஆயிஷாவின் திருமண வாழ்வு மகிழ்ச்சிக்குரியதாகவே இருந்தது.

பால்ய விவாகம் அனுமதிக்கப்பட்டது என்று முகமது நபி குர்ஆனிலிருந்து கற்பனையாகவும் சொல்லியிருக்க முடியும். யாரும் கேட்க முடியாது. ஆனால் அன்றைய வழக்கப்படி செய்த இந்த பால்ய விவாகம் தடை செய்யப்படுவதாக குர்ஆன் கூறுவதிலிருந்து இது முகமது நபியின் சொந்த கற்பனையல்ல என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரமாக உள்ளது.

//இன்னோரு கேள்வி. இறைவனால் தடை செய்யப்பட விஷயம் என்றால் அது கேவலமான ஒன்று தானே? அதுவும் இந்த அசிங்கத்தை உங்கள் இறைவன் 1400 வருடத்திற்கு முன்பே தடை செய்ததை கவனிக்கவும். அதனால் இந்த விஷயம் அசிங்கம் என்பது 20 வதாம் நூற்றாண்டு சிந்தனை என்றெல்லாம் இனியாவது சொல்லாதீர்கள்.//

நாங்கள் அசிங்கம் என்று குர்ஆன் கூறுவதால் 1400 வருடங்களுக்கு முன்பே பால்ய விவாகத்தை தடை செய்து விட்டோம். முன்னேறிய சமூகம் படித்த சமூகம் என்று கூறிக்கொள்ளும் உங்கள் சமூகத்தில் இன்றும் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது. மொகலாயர்களும், வெள்ளைக்காரனும் சில சட்டங்களை போட்டு தடை செய்ததால் பல சிறுமிகள் இந்தியாவில் விதவையாகாமல் தப்பித்தனர்.

பொட்டு கட்டி விடும் பழக்கம் இன்றும் தொடர்வதைப் பற்றி கூறியிருந்தேன். வசதியாக மறந்து விட்டீர்களே!

//புரட்சியாவது மண்ணாவது. இந்த 40 வயது விதவை ஏதோ வழியற்ற கைம்பெண் போல் அல்லவா சொல்கிறீர்கள். கதீஜா ஒரு பணக்காரர். முகமதோ அவரின் தொழிலாளி. அதுவும் அப்போது இந்த இறை தூதர் பட்டமெல்லாம் முகமதுக்கு கிடையாது. பணக்கார முதலாளியை அதுவும் 15 வயது மூத்தவரை திருமணம் செய்வதுமே ஒரு நல்ல காரியமாய் படவில்லை.. பேரும், பின் பற்ற கூட்டமும்.. //

நமக்கு பிடிக்காதவர் எது செய்து செய்தாலும் குற்றமாகத்தான் தெரியும். இத்தனை வருடமாக பெரியாரையும் தாண்டி கட்டிக் காத்து வந்த வர்ணாசிரமக் கொள்கை இஸ்லாத்தால் தரை மட்டமாகிறதே என்ற ஆற்றாமை உங்கள் எழுத்தில் தெரிகிறது. என்ன செய்வது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் உண்மைகளை முன்புபோல் மறைக்க முடியாதே! இணையம் என்ற மகத்தான சக்தி ஒரு ஆயிரம் வருடம் முன்பும் இருந்திருந்தால் சூத்திரன் என்ற சொல்லே தமிழ் அகராதியில் இருந்து எடுக்கப்பட்டிருக்கும்.

suvanappiriyan said...

சலாம் சகோ அப்துல் அஜீஸ்!

//கணேசன் அவர்களுக்கு தாங்கள் அழகாகவும் அதேசமயம் நன்றாக‌ புரியும்புடி அளிக்கும் பதில் அருமை.இப்பதிலை கண்டு அவர் தெளிவடைவார் என்றே கருதுகின்றேன்.//

தூங்குபவர்களை எழுப்பி விடலாம். தூங்குவது போல் பாசாங்கு செய்பவர்களை எழுப்ப முடியாது. அவரது வேதமே ஓரிறையை பறைசாற்றுவதை நன்கு அறிந்தவர். கணேசனுக்கு இல்லாவிட்டாலும் இந்த பதில்கள் படிக்கும் மற்றவர்களுக்காகவே!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

Mr Ganesan,


///இறைவனால் தடை செய்யப்பட விஷயம் என்றால் அது கேவலமான ஒன்று தானே? அதுவும் இந்த அசிங்கத்தை உங்கள் இறைவன் 1400 வருடத்திற்கு முன்பே தடை செய்ததை கவனிக்கவும்.///


இறைவனால் தடை செய்யப்பட்ட அனைத்தும் கேவலமான விடயமல்ல. கால மாற்றங்களால் பின்னால் வரும் மனித சமூகத்திற்கு பொருந்தாத விடயங்கள் இருப்பதால், அவன் சிலவற்றை காரண காரியங்களோடு, தடை விதிக்கிறான்.

முதல் மனிதர்களான ஆதம் (அலை), ஹவ்வா (அலை) அவர்களின் பிள்ளைகள் - சகோதரர்களுக்குள்ளே திருமணம் செய்தார்கள். அப்படி அவர்கள் செய்தது தவறா? அசிங்கமா? அதை இறைவன் அசிங்கம் என்று தடை செய்திருந்தால், இப்பூவுலகில் மனித குலமே இருந்திருக்காது! பிற்பாடு தடை செய்கிறான்! அன்று அனுமதித்தது, பின்னால் தடை!

இதே போலத்தான், பால்ய விவாக அனுமதி இருக்கும் தருவாயில் நடந்த, நபிகளாரின் விவாகம். பின்னால் தடை.

- Ismath

Ganesan said...

// பொட்டு கட்டி விடும் பழக்கம் இன்றும் தொடர்வதைப் பற்றி கூறியிருந்தேன். வசதியாக மறந்து விட்டீர்களே!//

// இத்தனை வருடமாக பெரியாரையும் தாண்டி கட்டிக் காத்து வந்த வர்ணாசிரமக் கொள்கை இஸ்லாத்தால் தரை மட்டமாகிறதே என்ற ஆற்றாமை உங்கள் எழுத்தில் தெரிகிற//

சுவனப்பிரியன், என்னை பற்றி உங்களுக்கு நான் எழுதி வந்துள்ள கமெண்ட்ஸ் தவிர என்ன தெரியும்? நான் உயரமா, குள்ளமா? ஒல்லியா, குண்டா? கருப்பா, சிவப்பா? பொட்டு கட்டுவதை ஆதரிப்பவனா, எதிர்ப்பவனா? வர்ணாசிரம வாதியா, வர்நாசிரமதிர்க்கு எதிரியா? என்று எதுவுமே உங்களக்கு தெரியாது. முகமது செய்தது தவறு என்று சொன்ன ஒரே காரணத்துக்காக என்னை பொட்டு கட்டுவதை ஆதரிப்பவன், வர்ணாசிரம வாதி என்றெல்லாம் சொல்வது வேடிக்கையாய் உள்ளது.

Ganesan said...

// கால மாற்றங்களால் பின்னால் வரும் மனித சமூகத்திற்கு பொருந்தாத விடயங்கள் இருப்பதால், அவன் சிலவற்றை காரண காரியங்களோடு, தடை விதிக்கிறான். //

//அதை இறைவன் அசிங்கம் என்று தடை செய்திருந்தால், இப்பூவுலகில் மனித குலமே இருந்திருக்காது! பிற்பாடு தடை செய்கிறான்! அன்று அனுமதித்தது, பின்னால் தடை!//

நீங்கள் சொல்வதை படித்தால் உங்கள் இறைவன் காரண காரியத்தோடு செய்வதாய் படவில்லை,அவ்வளவாய் விவரம் இல்லாமல் செய்வதாய் புரிகிறது. ஏன் படைக்கும் போதே ஆதாம் - ஹவ்வா, இஸ்மத் - இஸ்மத்தி, முகமத்-முகமத்தி என்று மூன்று ஜோடிகளை படைத்திருந்தால் இவ்வளவு குளறுபடி தேவை பட்டிருக்காதே. அது போலவே தான் முகமது ஆயிஷா விஷயமும். முகமது கல்யாணமாகி செட்டில் ஆகும் வரை காத்திருக்காமல் இந்த கண்றாவியை முதலிலேயே தடுத்திருக்கலாம். முகமதுக்கு இவ்வளவு கெட்ட பெயர் வந்திருக்காது.

//இதே போலத்தான், பால்ய விவாக அனுமதி //

ஒரு கிழவருக்கும் சிறுமிக்கும் நடந்ததை பால்ய விவாகம் என்று நீங்களும் சுவனபிரியனும் மீண்டும் மீண்டும் சொல்வதை பார்த்தாலே உங்கள் தர்ம சங்கடம் புரிகிறது. நாகரிகமாய் வெளியே சொல்ல முடியாத விஷயத்தை முகமது செய்ததால் வந்த வினை.பாவம் நீங்கள்.

Ganesan said...

// ஒரு இழவும் இல்லை. இறைத்தூதருக்கென்று சில தனிப்பட்ட உரிமைகளை இறைவன் வழங்குவான்.//

வேறு எந்த தூதராவது 11 மனைவி, அதிலும் 9 வயது சிறுமி மனைவி என்று உரிமைகள் பெற்று உள்ளனரா?

Anonymous said...

Mr Ganesan,

//உங்கள் இறைவன் காரண காரியத்தோடு செய்வதாய் படவில்லை,அவ்வளவாய் விவரம் இல்லாமல் செய்வதாய் புரிகிறது. ஏன் படைக்கும் போதே ஆதாம் - ஹவ்வா, இஸ்மத் - இஸ்மத்தி, முகமத்-முகமத்தி என்று மூன்று ஜோடிகளை படைத்திருந்தால் இவ்வளவு குளறுபடி தேவை பட்டிருக்காதே.///

முதலில் மூன்று ஜோடிகளைப் படைத்திருந்தால்கூட, ஒரு ஜோடியின்மூலம் படைத்திருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைப்பீர்கள்.

இறைவன் மனிதகுலத்தை எப்படிப் படைத்திருக்க வேண்டும் என்று, இப்பூவுலகில் தற்போது வாழும் ஏறத்தாழ 700 கோடிப் பேரினதும் கருத்துகளை செவிமடுத்தால், கோடிக்கணக்கான கருத்துக்களை நமக்கே உள்வாங்க முடியாமல் இருக்கும்.

ஆக, இருவரின் மூலம் மனித சந்ததிகள் பெருகியது, காரண காரியத்தோடு ஒவ்வொரு செயலையும் இயக்கும் இறைவன் செயல் ஏற்புடையது.


///ஒரு கிழவருக்கும் சிறுமிக்கும் நடந்ததை பால்ய விவாகம் என்று நீங்களும் சுவனபிரியனும் மீண்டும் மீண்டும் சொல்வதை பார்த்தாலே உங்கள் தர்ம சங்கடம் புரிகிறது. நாகரிகமாய் வெளியே சொல்ல முடியாத விஷயத்தை முகமது செய்ததால் வந்த வினை.பாவம் நீங்கள்.///

53 வயதில், பருவமடைந்த 9 வயது பெண்ணை, முஹம்மது (ஸல்) அவர்கள் மணந்தார்கள் என்று சொல்வதற்கு நாம் ஏன் தர்ம சங்கடப் படவேண்டும்? நாங்கள் அப்படி இல்லை என்று மறுத்தோமா? இல்லையே!

இது இக்காலத்திற்கு ஒவ்வாதது என்று விழுந்து அடித்துக் கொண்டு, எல்லாரையும் பரிகசிக்கிறீர்கள். உங்கள் பரிகசிப்பைப் பார்த்து, நாங்கள்தான் பரிதாபப்பட வேண்டும்.

///நாகரிகமாய் வெளியே சொல்ல முடியாத விஷயத்தை முகமது செய்ததால் வந்த வினை.பாவம் நீங்கள்.///

சிறிய வயது பெண்களை முஹம்மது (ஸல்) அவர்கள் காலத்தில், ஆண்கள் மணப்பது வழமை.

இதை வெளியில் என்ன, எல்லாரும் தெரிந்த விடயந்தான்!

முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, ஹதீஸ்களில், அவர்கள் மணந்த பெண்மணிகளைப் பற்றி, நிறைய அறிவிப்புகள் இருக்கின்றன. அவர்களின் வரலாறு அப்படியே பதியப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் முஸ்லிம் அல்லாதவர்களும் படிக்கிறார்கள்.

என்னமோ இது ஒரு மாபெரும் தவறு என்றும் ஏதோ புதுக் கண்டுபிடிப்பு மாதிரி, நீங்கள் பீற்றிக்கொண்டு திரிகிறீர்கள். நீங்கள் முஸ்லிம்களை நையாண்டி பண்ணி கேலி செய்வதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இதனால், நீங்களே உங்களைக் கொச்சைப்படுத்திக் கொள்கிறீர்கள்.

பருவமடைந்த ஒன்பது வயது பெண்ணை முஹம்மது (ஸல்) அவர்கள் மணம் புரிந்தது, தற்போது உலகில் வாழும் கிட்டத்தட்ட 200 கோடி முஸ்லிம்களுக்கு தெரிந்த விடயம். உலகில், இஸ்லாத்தை ஏற்றுக்கொள்பவர்களும் இவைகளை தெரிந்துதான் ஏற்றுக் கொள்கிறார்கள், பெரும்பாலும்! யாரும் தவறு என்று சொல்வதில்லை.

உலகில் உள்ள எந்த முஸ்லிமும், முஹம்மது (ஸல்) அவர்கள் செய்த திருமணங்களையோ போதனைகளையோ மறுக்காமல் ஏற்றுக்கொள்ளும்போது, எங்கேயோ இருக்கும் உங்களைப் போன்ற ஜீவன், இந்த தளத்தில் வந்து அர்த்தமில்லாமல் வெறியுடன் குதறுவதை, யார் கருத்தில் எடுக்கப் போகிறார்கள்?

பூனை கண்ணை மூடினால், உலகம் இருண்டிடாது!

- Ismath

Ganesan said...

திரு இஸ்மத், நீங்கள் சொல்ல வந்ததை, "வெறியுடன் குதருதல், பீற்றல்" போன்ற அடை மொழிகளை தவிர்த்து கண்ணியமாகவே சொல்லி இருக்கலாம். கோவத்தில் எழுதிய கருத்துக்கள் போலும். போகட்டும், பரவாயில்லை.

என் எண்ணம் முஸ்லிம்களை கிண்டல் செய்வது இல்லை. சுவனபிரியனின் கட்டுரை தலைப்பே "இறை தூதருக்கான சில முன்மாதிரிகள்" என்பதே. உங்கள் தூதரை பற்றிய முரண்பாடுகளை நான் சுட்டி காட்டினேன். அவ்வளவே. உங்கள் பதிலில், இந்த முரண்பாடுகளை நாங்கள் முஸ்லிம்கள் பெரிதாய் நினைக்கவில்லை என்று சொல்ல வருகிறீர்கள். அது உங்கள் உரிமை, கருத்து சுதந்திரம். இந்த முரண்பாடுகளை பெரிதாய் நினைக்க எனக்கும் பிறர்க்கும் அதே போன்ற உரிமையும், கருத்து சுதந்திரமும் உண்டு என்பதை மட்டும் சுட்ட விழைகிறேன். நன்றி.

Anonymous said...

UFO said...
///முதலில் மூன்று ஜோடிகளைப் படைத்திருந்தால்கூட, ஒரு ஜோடியின்மூலம் படைத்திருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைப்பீர்கள்.///

இல்லை இல்லை இஸ்மத் பாய்.

நாங்கள் அப்படி நினைக்க மாட்டோமே.

ஆதாம் - ஹவ்வா====='இவர்களும் இவர்களின் சந்ததியும்தான் பிராமணர்கள்' என்போம்.

இஸ்மத் - இஸ்மத்தி===='இவர்களும் இவர்களின் சந்ததியும்தான் ஷத்திரியர்கள்' என்போம்.


முகமத்-முகமத்தி===='இவர்களும் இவர்களின் சந்ததியும்தான் வைசியர்கள்' என்போம்.

அட, நாகாவது சூத்திரர்கள் ஜோடி எங்கேப்பா?

கணேசா!

கற்பனை பண்ணும்போது கூட உங்க சாதி வெறி போகலியே?

நாலாவது சூத்திரர் சோடியை கடவுள் படைக்க கூடாதோ?

என்னய்யா இது நியாயம்?
1:34 PM

Anonymous said...

Mr Ganesan,

///திரு இஸ்மத், நீங்கள் சொல்ல வந்ததை, "வெறியுடன் குதருதல், பீற்றல்" போன்ற அடை மொழிகளை தவிர்த்து கண்ணியமாகவே சொல்லி இருக்கலாம். கோவத்தில் எழுதிய கருத்துக்கள் போலும். போகட்டும், பரவாயில்லை.///

உங்களது குற்றச்சாட்டுகளுக்கு, சுவனப்பிரியனே பதிலளித்து விட்டார். அந்தப் பதிலில், நீங்கள் திருப்தி அடையலாம் அல்லது அடையாமலும் இருக்கலாம்.

திருப்தி அடையாமல் இருக்கும்போது, மேலும் அதைப்பற்றி விலாவாரியாக வினாக்களைத் தொடுத்து, பதில்களைப் பெற பூரண உரிமை தங்களுக்கு உண்டு.

வினாக்களைத் தொடுக்கும்போது, நாம் யாரிடம் பேசுகிறோம் என்ன பேசுகிறோம் அவர்கள் என்ன கொள்கைகளைக் கொண்டவர்கள் என்றறியாமல், நாலாந்தர எழுத்துக்களை பிரஸ்தாபிக்கும்போது, அதே பாணியில் பதிலளிக்க வினா தொடுக்கப்படுபவர்களாலும் உந்தப்படுகிறார்கள் என்பதை நீங்கள் மறந்து விடுகிறீர்கள்.


**** பேரும், பின் பற்ற கூட்டமும் சேர்ந்த பின் அல்லவா மற்ற கூத்தெல்லாம். ஹும்ம்.*****


எமது நபிகளாரைப்பற்றி, இப்படியெல்லாம் குதறுவதை நாம் கண்ணியக் குறைவு என்று சொல்லக் கூடாது?? அப்படித்தானே!

அது, தங்களின் கருத்துரிமை, பேச்சுரிமை என்ற கருத்தாடல்களுக்குள் வரும் சொல்லாடல்கள். அதையும் நாம் ஏற்க வேண்டும் என தாங்கள் எதிர்பார்க்கிறீர்கள்???


****வெறியுடன் குதருதல், பீற்றல்****

இப்படியாக நீங்கள் சொல்லும் அடைமொழிகள், தங்களுக்கு கண்ணியக் குறைவு என்று எமக்கு வேறு அறிவுரை சொல்கிறீர்கள். இப்படிப்பட்ட பேச்சுரிமைகள், கருத்துரிமைகள் தவிர்க்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்.

தங்கள்மீது எனக்கு கிஞ்சித்தும் சினமில்லை. தங்களின் எழுத்துக்களில் வரும், நீங்கள் சொல்லும் கண்ணியக்குறைவான வார்த்தைகளுக்கே எனது ஆட்சேபனை.

இறைவன் தங்களை நேர்வழியில் செலுத்தட்டும்!

- Ismath

Ganesan said...

// **** பேரும், பின் பற்ற கூட்டமும் சேர்ந்த பின் அல்லவா மற்ற கூத்தெல்லாம். ஹும்ம்.*****
எமது நபிகளாரைப்பற்றி, இப்படியெல்லாம் //

உங்களின் நம்பிக்கையை தாக்கிய கருத்து அது.

//****வெறியுடன் குதருதல், பீற்றல்****//

கருத்தை சாடாமல் கருத்து சொன்னவரை சாடும் தனி மனித தாக்குதல் இது.

// இறைவன் தங்களை நேர்வழியில் செலுத்தட்டும் //

ஹா ஹா!!!! இதில் இந்த மாதிரி ஜோக்குகள் வேறயா.

Anonymous said...

Mr Ganesan,

///உங்களின் நம்பிக்கையை தாக்கிய கருத்து அது.///

நம்பிக்கையைப்பற்றியா எழுதினீர்கள்? இல்லையே! எதைப்பற்றி எழுதியதே அறியாத நீங்கள், நம்பிக்கை பற்றிய கருத்தை எழுதியதாக இப்போது புதிதாக உளறுகிறீர்கள்!

///கருத்தை சாடாமல் கருத்து சொன்னவரை சாடும் தனி மனித தாக்குதல் இது.///

கருத்து என்றால் என்ன, கருத்தை எப்படிச் சொல்ல வேண்டும் என்றறியாத உங்களுக்கு, அதை பண்புடன் கருத்தாடல் செய்த சகோதரர்களின் விளக்கத்திற்கு பதிலளிக்க முடியவில்லை என்ற அவமானத்தின் பிரதிபலிப்புத்தான், 'கருத்து சொன்னவரை சாடும் தனி மனித தாக்குதல்' என்னும் தங்கள் வாசகம்.

// இறைவன் தங்களை நேர்வழியில் செலுத்தட்டும் //

///ஹா ஹா!!!! இதில் இந்த மாதிரி ஜோக்குகள் வேறயா.///

நான் எழுதிய, மேல் சொன்ன மனோபாவம் உள்ளவர்கள் மாத்திரம்தான், நேர்வழியை அடைவதை இகழ்ச்சியாக, நகைச்சுவையாக எடுத்துக்கொள்வர்.

- Ismath

suvanappiriyan said...

கணேசன்!

இறைத் தூதரை மரியாதை இல்லாமல் அழைக்கும் உங்கள் பின்னூட்டத்தை மட்டுறுத்தி விட்டேன். கண்ணியமான முறையில் தொடருங்கள்.

Anonymous said...

சூப்பர் அப்பு !

அப்படி போடு !!!!

Anonymous said...

கணேசன் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாததால்தான் அவரின் பின்னூட்டத்தை மட்டுறுத்தியதாக என்க்குப்படுகிறது