Followers

Tuesday, October 03, 2006

பஜ்ரங் தளத்தினர் வீட்டில் ஒட்டு தாடியும் தொப்பிகளும!

பஜ்ரங் தளத்தினர் வீட்டில் ஒட்டு தாடியும் தொப்பிகளும!

மகாராஷ்டிரா மாநிலம் 'நந்திக்' என்ற சிறு பட்டணம்.இங்கே ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங் தளத்தின் உறுபிபினர் ஒருவரின் வீட்டில் கடந்த ஏப்ரல் ஆறாம் நாள் (2006) நள்ளிரவில் சக்தி மிக்க குண்டுகள் வெடித்தன. இந்த வீட்டில் வெடித்த குண்டுகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அந்தப் பட்டணத்தைச் சுற்றி சுமார் இரண்டு கிலோ மீட்டர் அளவுக்கு வாழ்ந்தவர்கள் ஒரு நடுக்கத்திற்கு ஆளானார்கள். இந்த நடுக்கத்தால் அந்த மக்கள் தாங்கள் வசிக்கும் இடங்கள் நில அதிர்ச்சிக்கு ஆட்பட்டு விட்டன என்றே நம்பினார்கள்.

குண்டு வெடிப்பு நடந்த வீட்டில் இருந்த எல்லாப் பொருட்களும் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. பஜ்ரங் தளத்தின் இரண்டு உறுப்பினர் அந்த இடத்திலேயே இறந்தனர். மூன்று பேர் காயமடைந்தனர்.

இவ்வளவு பெரிய குண்டு வெடிப்பு அதுவும் இந்துத்துவ அமைப்பைச் சார்ந்தவர்களின் இல்லத்தில் நடந்ததால் காவல்துறை வழக்கம் போல் குண்டு வெடிப்பை மூடப் பார்த்தது. காவல் துறையின் முதன்மைக் கண்காணிப்பாளரே பட்டாசு வெடிப்புகள் என்று கதை கட்டி விட்டார். இத்தோடு காவல் துறையினர் இன்னொரு திருப்பணியையும் செய்து முடித்தார்கள். அது....

எல்லாப் பத்திரிக்கை அலுவலகங்களுக்கும் சென்று இந்தக் குண்டு வெடிப்புப் பற்றிப் பத்திரிக்கைகளில் எழுதி விடாதீர்கள். அது பட்டாசுகளின் வெடிப்பாகத்தான் இருக்கும். நீங்கள் பத்திரிக்கைகளில் எழுதினால் அந்த எழுத்துக்கள் எங்களது புலனாய்வுகளைப் பாதிக்கும் எனவும் மிரட்டி வைத்தார்கள். அத்தோடு அந்த வீட்டில் இருப்பவர்கள் பட்டாசு வியாபாரமும் செய்கின்றனர் என்றார்கள்.

பின்னர் அந்த வீட்டைச் சோதனையிட்ட போது குண்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொடிகள் நிரம்ப இருந்திருக்கின்றன. அங்கே குண்டு தயாரிப்பது எப்படி என்பது பலருக்குப் படித்தும் தரப் பட்டிருக்கிறது. இதற்கு ஆதாரம் குண்டுகள் தயாரிப்பது எப்படி? என்பதை விளக்கும் குறிப்புகள் அடங்கிய நோட்டு புத்தகங்கள் அங்கு நிரம்ப கிடைத்திருக்கின்றன. அத்தோடு குண்டுகளை நேரம் குறித்து இயக்கும் டைமர், தூரத்திலிருந்து இயக்கும் 'ரிமோட் கண்ட்ரோல்' இவையெல்லாம் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இத்தனை ஆதாரங்கள் கிடைத்த பின் தான் காவல்தறை மேலதிகாரிகள் அது குண்டு வெடிப்பு என்று ஒத்துக் கொண்டுள்ளார்கள். வட்டாரப் பத்திரிக்கைகள் இதைப் பெரிதாக்கிடவே அந்தப் பகுதி பாரதீய ஜனதாக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவல் துறை அதிகாரிகளை சந்தித்து 'இது சிறிய நிகழ்வு. தயவு செய்து இதை பெரிது படுத்தி விடாதீர்கள்' என்ற கோரிக்கையை வைத்தார். அதே போல் யாரையும் கைது செய்து விடாமலும் பார்த்துக் கொண்டார்.

பிஜேபி யின் இந்த முயற்ச்சிக்குப் பிறகு கண் துடைப்புக்காக நான்கு பஜ்ரங் தள் உறுப்பினர்களைக் கைது செய்து பிறகு பிணையில் விட்டு விட்டார்கள்.

குண்டுகள் தயாரிக்கப் பட்ட இடத்தில் கிடைத்த சில பொருட்கள் எல்லோருடைய உள்ளத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருந்தன.

அந்த பொருட்கள் போலியாக - செயற்கையாக - தயாரிக்கப் பட்ட தாடிகள் (முஸ்லிம்கள் வைத்துக் கொள்ளும் தாடியைப் போன்றவை) மீசைகள ஜிப்பா,் போன்றவைக் கண்டெடுக்கப் பட்டன. இவற்றோடு முஸ்லிம்கள் அணியும் தொப்பிகளும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இவை எல்லாம் ஒரு கலவரத்தை மனதில் கொண்டு திட்டமிட்ட ஏற்பாடுகளின் ஒரு பகுதி என்கிறார் ராம் புன்யானி என்கிற சமூக ஆர்வலர். அந்த திட்டம் என்ன என்பதையும் கள ஆய்வு செய்து அவரே எழுதுகிறார்.

அந்த திட்டம் தான் என்ன?

சில மாதங்களுக்கு முன் சீக்கிய சமுதாயத்தைச் சார்ந்த இளம் பெண் ஒருத்தி ஒரு முஸ்லிம் வாலிபனை காதலித்துத் திருமணம் செய்து கொண்டாள். இந்த தம்பதியினர் சமுதாயத்தின் கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள ஊரை விட்டு ஓடி விட்டார்கள்.

சில மாதங்களுக்கு முன் நடந்த இந்த நிகழ்ச்சி அந்த 'நந்திக' பகுதியில் சீக்கிய சமுதாய மக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே மனக் கசப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த மனக் கசப்புகளை ஒரு சீக்கிய முஸ்லிம் வகுப்புக் கலவரமாக மாற்றிட முயற்சிகள் மேற் கொள்ளப் பட்டு வருகிறது.

அந்த முயற்சியின் ஒரு பகுதிதான் இந்த குண்டு தயாரிப்புக்கள், செயற்கை தாடி, மீசைகள், தொப்பிகள் ஜிப்பா, என்பனவற்றின் அணிவகுப்புகளை பஜ்ரங்தள் செயல் வீரரின் வீட்டில் பார்க்கிறோம்.

குண்டு வெடிப்பு நடந்த 'நந்திக்' சீக்கிய மக்கள் அதிகமாக வாழும் பகுதி. சீக்கியர்களின் வழிபாட்டுத் தலங்களான 'குருத்வாரா' க்கள் நிறைந்த இடம்.

அவர்களின் திட்டப்படி ஒட்டுதாடி,ஜிப்பா, தொப்பிகளோடு சென்று குருத்வாராக்களில் சென்று குண்டு வைப்பது. தாடி தொப்பியை பார்ப்பவர்கள் முஸ்லிம்கள் தான் என்ற முடிவுக்கு வருவார்கள். அதை உறுதிப் படுத்தி பொய் செய்தி கொடுப்பதற்கு ஊடகமும், போலீசும் தயாராகவே இருக்கிறது. இதனால் முஸ்லிம்களை சீக்கியர்கள் தாக்க ஆரம்பிப்பார்கள். இந்த நாட்டின் இரு பெரும் சிறுபான்மை சமுதாயமான சீக்கியர்களும், முஸ்லிம்களும் வெட்டிக் கொண்டு சாக வேண்டும். இரத்த வெறி பிடித்த இந்நுத்வா வாதிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இவை எல்லாம் நடக்காமல் இறைவன் தடுத்து விட்டான். சிறுபான்மையினரின் உயிர்களும் காக்கப் பட்டு விட்டது.

இதில் இன்னொரு செய்தி என்னவெனில் நந்தித்திற்கு பக்கத்தில் உள்ள பார்பானி, புர்னா, ஜால்னா போன்ற பகுதிகளில் அண்மையில் தான் சில குண்டுகள் வெடித்திருக்கின்றன. கலவரங்கள் உண்டாக்கி முஸ்லிம்களை கருவருக்க இவையும் பஜ்ரங் தள்ளின் வேலையதகக் கூட இருக்கலாம். நல்லவேளையாக மக்கள் ஒற்றுமையாக இருந்து அமைதி காத்தனர்.

இதில் பல தகவல்களை ஒன்றினைத்துத் தருகின்ற புனிவானியா கூறுகிறார். :

'இதில் மிகவும் ஆச்சரியத்தை தருவது என்னவெனில், காவல் துறையினர் இதனைக் கண்டு கொள்ளவில்லை. மராட்டிய மாநிலத்தின் உள்துறை அமைச்சர் இதனைக் கண்டு கொள்ளவில்லை. மத்திய அரசாங்கமும் இதில் அக்கறை செலுத்திட வில்லை. ஊடகங்கள் அது பத்திரிக்கைத் துறையாக இருந்தாலும், தொலைக் காட்சிகளாக இருந்தாலும், வானொலியாக இருந்தாலும் எதுவும் இந்த சம்பவத்தைக் கண்டு கொள்ளவில்லை.'

'இதில் ஆர்வம் காட்டி ஒரு முழு புலன் விசாரணையை மேற் கொண்டவர்கள் 'பியுசிஎல' என்ற மனிக உரிமைகளுக்கான மக்கள் குழுமமும் , மகாராஷ்டிராவில் செயல் படும் 'போர், தீவிரவாதம் இவற்றிற்கு எதிரான அமைப்பு' போன்றவை தான். நந்திக்கிலிருந்து வரும் வட்டார பத்திரிக்கைகள் இந்த விஷயத்தில் சிறப்பான சில பணிகளைச் செய்தன என்பதுஉண்மைதான். ஆனால் தேசிய பத்திரிக்கைகள், தேசிய தொலைக் காட்சிகள் இவை இந்த நிகழ்ச்சியை அறவே கண்டு கொள்ளவில்லை.'

'ஏதேனும் ஒரு முஸ்லிம் எந்த வகையிலாவது இதில் சம்பந்தப் பட்டிருந்தால் இந் நேரம் நூற்றுக் கணக்கான முஸ்லிம்களும், பல முஸ்லிம் அமைப்பின் உறுப்பினர்களும் சிறை பிடிக்கப் பட்டுச் சித்திரவதைகளுக்கு ஆட்பட்டிருப்பார்கள். இவர்களை எல்லாம் சேர்த்து அல்காய்தா, ஐஎஸ்ஐ இன்னும் இந்த உலகில் இல்லாத அமைப்புகளை எல்லாம் கண்டெடுத்து நமக்குப் பாடம் சொல்லித் தந்திருப்பார்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறதென்றால் குண்டு வெடிப்புகள், தீவிரவாதம் என்பதெல்லாம் முஸ்லிம்களோடும், இஸ்லாத்தோடும் சம்மந்தப் பட்டவைதான் என்றொரு மனநிலை உருவாக்கப் பட்டு நிலை பெறச் செய்யப் பட்டு விட்டது.'

'ஆர்எஸ்எஸ் லத்தியை பிடித்துக் கொண்டிருந்த காலம் போய் அவர்கள் குண்டுகள் தயாரிக்கும் காலத்தை எட்டிப் பிடித்து நிறைய நாட்களாகி விட்டன என்பதை யாரும் கண்டு கொள்வதில்லை. தேசத் தந்தை மகாத்மா காந்தியைக் கொன்று விட்டு கோட்சேக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று அறிவித்தவர்கள் இவர்கள். கிறித்தவ பாதிரியார் ஸ்டேயின்ஸையும், அவரது குழந்தைகளையும் கொலை செய்து எரித்து விட்டு இதனைச் செய்த தாரா சிங்கிற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என அறிவித்தவர்கள் இவர்கள். நமக்கு நிச்சயமாக தெரியும் மராட்டிய மாநிலத்தின் ஒரு மூலையில் நடந்த இந்த நிகழ்ச்சி அமுக்கப் பட்டு விடும் மறைக்கப் பட்டு விடும். ஒரு பெரும் தீவிர வாத செயலின் அடிப்படை ஆதாரங்கள் புலனாய்வுகளுக்கே உட்படுத்தப் படாமல் போய்விடும்.”

(Source : Issues In Secular Politics) Ram Punyani:

Milli Gazette : 16 – 31 May 2006.

9 comments:

ஜயராமன் said...

நீங்கள் சொல்வது சரியாக இருந்தால் இது பெரிய சதித்திட்டத்துக்கு சான்று.

தாங்கள் கூறியதை சரிபார்க்க, மில்லிகாஸெட் சைட்டில் http://www.milligazette.com/ பார்த்தேன். கிடைக்கவில்லை. சரியான லிங்க் தரமுடியுமா?

நன்றி

இப்னு பஷீர் said...

இத்தகவலுக்கான சரியான சுட்டி:

http://www.pucl.org/Topics/Religion-communalism/2006/nanded.htm

சமீபத்தில் குண்டு வெடிப்புக்குள்ளான மாலேகான் இதே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் உள்ளது என்பதும், அங்கு குண்டு வெடித்த இடத்தில் பொய்த்தாடி வைத்த ஒரு நபரின் பிணம் கண்டெடுக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Sirajudeen said...

http://www.pucl.org/Topics/Religion-communalism/2006/nanded.htm
இந்த லிங்கை காப்பி செய்து பார்த்தால் சுவனப்பிரியன் எழுதிய முழு தகவலும் ஐயராமன் அவர்களுக்கு கிடைக்கும். தகவல் ஆங்கிலத்தில் தேவையென்றால் தெரிவியுங்கள். அடுத்த பதிவில் இணைக்கிறேன்.

suvanappiriyan said...

ஜயராமன்!

//நீங்கள் சொல்வது சரியாக இருந்தால் இது பெரிய சதித்திட்டத்துக்கு சான்று.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

// http://www.milligazette.com/ பார்த்தேன். கிடைக்கவில்லை. சரியான லிங்க் தரமுடியுமா?//

(Source : Issues In Secular Politics) Ram Punyani:

Milli Gazette : 16 – 31 May 2006

குறிப்பிட்ட தேதியில் சென்று பாருங்கள். தனிக் கட்டுரையாக வந்துள்ளது.

suvanappiriyan said...

சிராஜூத்தீன்!
//. தகவல் ஆங்கிலத்தில் தேவையென்றால் தெரிவியுங்கள். அடுத்த பதிவில் இணைக்கிறேன்.//

வருகைக்கும் ஜயராமனுக்கு சரியான லிங்க்கைக் கொடுத்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

இப்னு பஷீர்!

//சமீபத்தில் குண்டு வெடிப்புக்குள்ளான மாலேகான் இதே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் உள்ளது என்பதும், அங்கு குண்டு வெடித்த இடத்தில் பொய்த்தாடி வைத்த ஒரு நபரின் பிணம் கண்டெடுக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது//

வருகைக்கும் ஜெயராமனுக்கு சரியான லிங்க்கை கொடுத்தமைக்கும், பொய்த் தாடி சம்பந்தமாக புதிய தகவலை கொடுத்தமைக்கும் நன்றிகள் பல.

suvanappiriyan said...

Thanks for your visit and comments Mr senthazhal ravi and niyamath!

unmai said...

அஸ்ஸலாமு அலைக்கும்
உங்களுடைய blogspot பார்த்தேன் ரொம்ப சந்தோசம் மேலும் இஸ்லாமிய பணி தொடர அல்லாஹ் உதவி செய்வான்
இமாம் கிழப்பள்ளிவாசல் பண்டராவாடை

unmai said...

அஸ்ஸலாமு அலைக்கும்
உங்களுடைய blogspot பார்த்தேன் ரொம்ப சந்தோசம் மேலும் இஸ்லாமிய பணி தொடர அல்லாஹ் உதவி செய்வான்
இமாம் கிழப்பள்ளிவாசல் பண்டராவாடை