Followers

Monday, July 06, 2009

1,500 எருமை மாடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன்!



மணப்பாறை : மணப்பாறை அருகேயுள்ள மட்டப்பாறைப்பட்டியில் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று ஆயிரத்து 500 எருமை கிடாக்கள் வெட்டி பலியிடப்பட்டன. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, 20 கி.மீ., தொலைவில் மட்டப்பாறைப்பட்டி உள்ளது. இங்குள்ள பத்ரகாளியம்மன் கோவில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக பொதுமக்கள் வணங்கி வருகின்றனர்.

அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து வணங்கி செல்வது வழக்கம். பக்தர்கள் தாங்கள் எண்ணியது நிறைவேறி விட்டால், எருமை கிடா பலியிட்டு, நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டிக்கொள்வர். ஏழு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவை சுற்றுப்புற 54 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து நடத்தி வருகின்றனர். கடந்த 2002ம் ஆண்டு நடந்த திருவிழாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட எருமை கிடாக்கள் வெட்டி பலியிடப்பட்டன. அதற்கு ரெட்கிராஸ் அமைப்பு மற்றும் மிருகவதை தடுப்பு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து, சர்ச்சையை ஏற்படுத்தியதால், அப்போதிருந்த அ.தி.மு.க., ஆட்சியில் கோவில்களில் உயிர்பலி கொடுக்க தடை விதித்து கடுமையான சட்டம் கொண்டு வரப்பட்டது. உயிர்பலி தடைசட்டத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. அதன்பின் சில மாதங்களில் கோவில்களில் உயிர்பலி தடைசட்டத்தை அரசு வாபஸ் பெற்றது.

இந்நிலையில், ஏழு ஆண்டுகளுக்குப்பிறகு கடந்த ஒரு வாரமாக திருவிழா நடந்து வருகிறது. மட்டப்பாறைப்பட்டி ஊரார் செல்வம், தவளவீரன்பட்டி முக்கியஸ்தர் ராமசாமி, சீரங்கன், வேலுச்சாமி, அணியாப்பூர் செல்வம் மற்றும் 54 ஊர்களைச் சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்களும், பொதுமக்களும் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். விழாவையொட்டி, பத்ரகாளியம்மனுக்கு பொங்கல் வைத்து ஆடு, கோழி பலியிடும் சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று பகல் 2 மணிக்கு கருப்பண்ணசாமிக்கு எருமை கிடா பலியிடும் பூஜை நடந்தது. வீரப்பூர் ஜமீன்தார் சவுந்திரபாண்டியன் மற்றும் குடும்பத்தினர் மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அரிவாள் பூஜை நடந்தது. பகல் 2.45 மணிக்கு ஜமீன்தார் சவுந்திரபாண்டியனின் எருமைகிடா முதலில் பலியிட, தொடர்ந்து பக்தர்களின் நேர்த்திக்கடனாக செலுத்திய எருமை கிடாக்கள் பட்டியிலிருந்து ஒவ்வொன்றாக அழைத்து வரப்பட்டது. வழியில் நின்ற வாலிபர்கள் தங்களிடமிருந்த உருட்டுக் கட்டையால் எருமை கிடாக்களை தாக்கினர்.

பின்னர் எருமைகிடாக்கள் பலியிடத்துக்கு கொண்டு வரப்பட்டு பலியிடப்பட்டன. கோவில் முன் தோண்டப்பட்ட குழியில் பலியிடப்பட்ட எருமைகிடாக்கள் போடப்பட்டன. வேண்டுதல் உள்ள பக்தர்கள், எருமைகிடாக்களின் தலையிலிருந்து வடியும் ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டு கோவிலை சுற்றிவந்து குழிக்குள் எருமைகிடாக்களின் தலையை போட்டனர். பக்தர்கள் உப்பு வாங்கி சென்று குழியில் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று இரவு வரை தொடர்ந்து ஆயிரத்து 500 எருமை கிடாக்கள் வெட்டி பலியிடப்பட்டன. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த 50 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.

நன்றி:
-தின மலர்

நேர்த்திக் கடனுக்காக உயிர்ப்பலி கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொல்லப்பட்ட எருமைகளை யாருக்கும் பயன்படாமல் குழியில் போட்டு புதைத்ததுதான் மனதுக்கு நெருடலாக இருந்தது. இந்த இறைச்சியை பதப்படுத்தி தேவையுள்ள வறியவர்களுக்கு கொடுத்திருந்தால் வறியவர்களின் வாழ்த்து கிடைத்திருக்குமே! இதற்கு இந்து மதத்தில் தடையிருக்கிறதா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் விளக்கம் தரவும்.

இதே போன்று முஸ்லிம்களிடத்திலும் ஹஜ் பெருநாளன்று கோடிக்கணக்கான ஆடுகளும் மாடுகளும் ஒட்டகங்களும் உலகம் முழுவதும் அறுக்கப்படுகின்றன. சவூதி அரேபியாவில் ஹஜ் பெருநாளன்று வெட்டப்படும் அனைத்து உயிர்களையும் பதப்படுத்திஆப்கானிஸ்தான், ஆப்ரிக்கா நாடுகள், இந்தோனேஷியா போன்ற வறிய நாடுகளுக்கு சவூதி அரசாங்கம் அனுப்பி வைக்கிறது. இது போன்ற ஒரு வழி முறையை நமது அரசாங்கமோ அல்லது இந்து மக்களோ ஏன் முயற்சி செய்யக் கூடாது.

முஸ்லிம்களை எப்படி வம்புக்கிழுக்கலாம் என்று ரூம் போட்டு யோசிக்கும் ஆர்.எஸ்.ஸோ அல்லது பி.ஜே.பியோ இதற்கும் சிறிது நேரத்தை ஒதுக்கினால் அந்த உயிர்கள் உரிய வறியவரைச் சென்றடையுமல்லவா?

'பலி கொடுக்கப்பட்ட உயிர்களின் மாமிசங்களோ அவற்றின் ரத்தங்களோ இறைவனை சென்றடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள இறை அச்சமே இறைவனை சென்றடையும்.'

-குர்ஆன் 22:37

23 comments:

Anonymous said...

ஏங்க ஆளுக்காளு ஒடம்புல சவுக்கால அடிச்சுக்கிராங்களே ஷியா காட்டுமிராண்டிங்க அத பத்தியும் எழுதுங்க

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

சரியான கேள்வி... இப்படியான விடயங்களால்தான் மதமே வெறுத்துப்போனது..


ஒரு நோண்டல் :

அது சரி ஏன் "ஆயிரத்து 500" மற்றும் "50 ஆயிரம்" எண்டு பாவிச்சிருக்கிறீங்கள். வித்தியாசமான கொள்கை ஏதும் கடைப்பிடிக்கிறீங்களோ.

ஒரு தகவல்: இப்படி எழுதினால் தேடுபொறிகளில் தேடினாலும் பதிவு கிடைப்பது கடினம். :-))

suvanappiriyan said...

மதுவதனன்!

//சரியான கேள்வி... இப்படியான விடயங்களால்தான் மதமே வெறுத்துப்போனது..//

மதத்தை வெறுத்து நாத்திகத்தின் பக்கம் போனால் அது மேலும் கேடாக முடியும். மதத்தில் உள்ள குறைகளை களைய நாம் முயற்ச்சிக்க வேண்டும்.

//அது சரி ஏன் "ஆயிரத்து 500" மற்றும் "50 ஆயிரம்" எண்டு பாவிச்சிருக்கிறீங்கள். வித்தியாசமான கொள்கை ஏதும் கடைப்பிடிக்கிறீங்களோ.

ஒரு தகவல்: இப்படி எழுதினால் தேடுபொறிகளில் தேடினாலும் பதிவு கிடைப்பது கடினம். :-))//

அது என்னுடைய எழுத்து அல்ல. தின மலரிலிருந்து காப்பி பேஸ்ட் செய்தது. எனவேதான் 'நன்றி தினமலர்' என்ற குறிப்பையும் கொடுத்துள்ளேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

Anany!

//ஏங்க ஆளுக்காளு ஒடம்புல சவுக்கால அடிச்சுக்கிராங்களே ஷியா காட்டுமிராண்டிங்க அத பத்தியும் எழுதுங்க//

இதற்கு முன்பு ஷியாக்கள் செய்யும் சில நடவடிக்கைகளை கண்டித்து ஒரு பதிவே போட்டிருக்கிறேன். உடம்பை கீறிக் கொண்டும், சவுக்கால் அடித்துக் கொண்டு செல்லும் இந்த பழக்கத்துக்கும் இஸ்லாத்துக்கும் துளி கூட சம்பந்தம் கிடையாது. இறந்து போன தனது சொந்தத்துக்காக ஒருவர் வாய் விட்டு ஒப்பாரி வைத்து அழுகிறார். இதைப்பார்த்த முகமது நபி அவரை கண்டிக்கிறார். வருத்தம் மனதுக்குள் இருக்க வேண்டும் என்றும் உபதேசிக்கிறார். அடுத்து மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக் கூடாது என்றும் கட்டளை இடுகிறார்.

இவை அனைத்துக்கும் மாற்றமாகத்தான் ஷியாக்களின் நடவடிக்கை இருக்கின்றது. இவை எல்லாம் தவறு என்று தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்து வருகிறோம். அதற்கு நல்ல பலனும் கிடைத்து வருகிறது.

aik said...

பச்சைப்புள்ளைகளோட ஆண்குறியையும் பெண்குறியையும் வெட்டறாங்களே காட்டுமிராண்டிகள்.
அதைப்பத்தியும் எழுதுங்க அய்யா

suvanappiriyan said...

ஐக்!

//பச்சைப்புள்ளைகளோட ஆண்குறியையும் பெண்குறியையும் வெட்டறாங்களே காட்டுமிராண்டிகள்.
அதைப்பத்தியும் எழுதுங்க அய்யா//

பெண் குறியை வெட்டச் சொல்லி இஸ்லாம் சொல்லவில்லை. எகிப்து போன்ற நாடுகளில் கிராமங்களில் ஒரு சிலர் செய்வதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இதற்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தம் கிடையாது.

ஆண் குறியை வெட்டுவது (சுன்னத்,விருத்த சேதனம்) இல்லற இன்பத்தை அதிகமாக்கும். நோய் கிருமிகள் ஆண் குறியில் தங்காது வெளியாக்கும். மேலதிக விபரங்களை நல்ல மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

//காட்டுமிராண்டிகள். //

நீங்கள் யாரை சொல்கிறீர்கள்? திண்ணியத்தில் மலம் தின்ன வைத்தவர்களையா? பஞ்சாயத்து போர்டு தேர்தலில் வெற்றி பெற்ற தாழ்த்தப்பட்டவரை வெட்டிக் கொன்றவர்களையா? இன்று வரை மற்ற சாதிகளை கோவிலுக்குள் அனுமதிக்காமல் வெளியில் நிறுத்தி வைத்திருக்கிறீர்களே அவர்களையா? கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்.

aik said...

உங்களது மதம் கூறுகின்றது என்பதால்தான் இந்த காட்டுமிராண்டித்தனமான விஷயங்களை செய்கிறார்கள்.

ஆண்குறி வெட்டுவதும் பெண்குறி வெட்டுவதும் தீமையே.

மருத்துவர்கள் இதனை எதிர்த்து போராட்டமே நடத்துகிறார்கள்.

http://www.doctorsopposingcircumcision.org
http://www.infocirc.org/vice.htm
http://magickriver.blogspot.com/2009/03/circumcision-is-bad-idea.html
http://www.doctorsopposingcircumcision.org/pdf/sorrells_2007.pdf


இந்த பக்கத்தை பாருங்கள்.

அப்புறம் இந்தியாவில் இருக்கும் தீண்டாமைக்கெல்லாம் வெளியிலிருந்து வந்த வந்தேறி முஸ்லீம்களே காரணம் என்று நிறைய வரலாற்றாசிரியர்கள் எழுதியிருக்கிறார்களே. படிப்பதில்லையா அய்யா?

Gokul said...

சுவனப்பிரியன்,

ஏழைகளுக்கு உணவாக கொடுப்பது என்பது நல்ல யோசனை, அதனை யாருக்கும் கொடுக்காமல் புதைப்பது சுகாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினையும் கூட.


// வறியவர்களுக்கு கொடுத்திருந்தால் வறியவர்களின் வாழ்த்து கிடைத்திருக்குமே! இதற்கு இந்து மதத்தில் தடையிருக்கிறதா என்று தெரியவில்லை. //

இந்து மதத்தை பொறுத்தவரை மதம் வேறாக சமூகம் வேறாக இருக்கிறது நீங்கள் அறியாததல்ல , மேலும் எந்த வித கட்டாயங்களும் பின்பற்றாத மதம் இந்து மதம் அதனால் இந்த கேள்விக்கு பதில் தடை இல்லை என்பதே.


// முஸ்லிம்களை எப்படி வம்புக்கிழுக்கலாம் என்று ரூம் போட்டு யோசிக்கும் ஆர்.எஸ்.ஸோ அல்லது பி.ஜே.பியோ//

முன்பு பெரியார் பேச்சையும், பின்பு இந்த பலி விஷயத்தையும் எழுதி நீங்கள் செய்வதற்கு பெயர் என்ன?

suvanappiriyan said...

ஐக்!

//இந்தியாவில் இருக்கும் தீண்டாமைக்கெல்லாம் வெளியிலிருந்து வந்த வந்தேறி முஸ்லீம்களே காரணம் என்று நிறைய வரலாற்றாசிரியர்கள் எழுதியிருக்கிறார்களே.//

இந்திய வரலாறும் தெரியவில்லை: யார் வந்தேறிகள் என்பதை தெரிந்தும் தெரியாததுபோல் பாசாங்கு செய்யும் உங்களை நினைத்து பரிதாபம்தான் பட முடியும். வேறு ஒன்றும் சொல்வதற்க்கில்லை.

suvanappiriyan said...

கோகுல்!

//ஏழைகளுக்கு உணவாக கொடுப்பது என்பது நல்ல யோசனை, அதனை யாருக்கும் கொடுக்காமல் புதைப்பது சுகாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினையும் கூட.//

என் கருத்தை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி!

//இந்து மதத்தை பொறுத்தவரை மதம் வேறாக சமூகம் வேறாக இருக்கிறது நீங்கள் அறியாததல்ல , மேலும் எந்த வித கட்டாயங்களும் பின்பற்றாத மதம் இந்து மதம் அதனால் இந்த கேள்விக்கு பதில் தடை இல்லை என்பதே.//

விளக்கம் அளித்தமைக்கு நன்றி!

//முன்பு பெரியார் பேச்சையும், பின்பு இந்த பலி விஷயத்தையும் எழுதி நீங்கள் செய்வதற்கு பெயர் என்ன?//

பெரியார் பேசுவதற்கும் அத்வானியும் ராஜ்நாத் சிங் பேசுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பெரியார் தனது சமூகத்தில் நிலவிய மூடப்பழக்கங்களை எதிர்த்து மக்களை விழிப்படைய செய்தார். அத்வானியோ தான் பிரதமர் ஆவதற்காக தனது நாட்டு மக்களையே இரு கூறாக பிரித்தார். கோவில் இடித்துதான் மசூதியை கட்டினார்கள். இங்குதான் ராமர் பிறந்தார். என்ற பொய்யான காரணங்களை கூறி இந்தியா முழுவதும் ரத்த ஆறை ஓட விட்டார். அத்வானி கூறுவதெல்லாம் பொய் என்று எடுத்துக் கூற சிலராவது முன் வர வேண்டாமா? இன்னும் 3000 பள்ளிவாசல் அவர்கள் கணக்கில் இருக்கிறதாம்.

நமது மக்கள் இன்னும் சாதிப்பேயிலும், மூடப்பழக்க வழக்கங்களிலும் ஊறித் திளைத்து வருகிறார்கள். இன்று நான் முஸ்லிமாக இருந்தாலும் இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னால் என் முன்னோர்களும் ஒரு ராமசாமியாகவோ அல்லது ஒரு கந்தசாமியாகவோதான் இருந்திருப்பார்கள். என் தொப்புள் கொடி உறவான இந்த மக்களின் மூடப்பழக்க வழக்கங்களை விமர்சிப்பது தவறென்கிறீர்களா?

aik said...

//இந்திய வரலாறும் தெரியவில்லை: யார் வந்தேறிகள் என்பதை தெரிந்தும் தெரியாததுபோல் பாசாங்கு செய்யும் உங்களை நினைத்து பரிதாபம்தான் பட முடியும். வேறு ஒன்றும் சொல்வதற்க்கில்லை.//

அப்படியா? பார்ப்பனர்கள்தான் வந்தேறிகள் என்று சொல்லவருகிறீர்களா?
அவர்கள் வந்தேறிகள் அல்ல, இந்த நாட்டின் மக்கள் என்று ஏற்கெனவே நிரூபணம் ஆகிவிட்டது அது தெரியுமா? 1947க்கு முன் வெள்ளைக்காரன் சொன்னதெல்லாம் பொய் என்று ஆகிவிட்டது. அதுவாவது தெரியுமா?
பரிதாபம்.

ஆனால் இங்கே இருக்கும் மரைக்காயர்களும் ராவுத்தர்களும் இன்னும் பல முஸ்லீம்களும் அரேபியாவிலிருந்து வந்தேறி முஸ்லீம்கள்தான் என்று அவர்களே கூறிக்கொள்வது மட்டுமல்ல, எல்லோருக்க்கும் தெரிந்ததும். அதுவாவது தெரியுமா? தமிழ்நாட்டில் உருது பேசும் முஸ்லீம்கள் எல்லோருமே வட இந்தியாவிலிருந்து இங்கே வந்த முஸ்லீம்கள். அதுவாவது தெரியுமா?

suvanappiriyan said...

ஐக்!

//அவர்கள் வந்தேறிகள் அல்ல, இந்த நாட்டின் மக்கள் என்று ஏற்கெனவே நிரூபணம் ஆகிவிட்டது அது தெரியுமா? 1947க்கு முன் வெள்ளைக்காரன் சொன்னதெல்லாம் பொய் என்று ஆகிவிட்டது. அதுவாவது தெரியுமா?//

அப்படியா? இந்த வாதத்தில் உங்களுக்கே நம்பிக்கை இருந்தால் சரிதான்.

//ஆனால் இங்கே இருக்கும் மரைக்காயர்களும் ராவுத்தர்களும் இன்னும் பல முஸ்லீம்களும் அரேபியாவிலிருந்து வந்தேறி முஸ்லீம்கள்தான் என்று அவர்களே கூறிக்கொள்வது மட்டுமல்ல, எல்லோருக்க்கும் தெரிந்ததும். அதுவாவது தெரியுமா?//

கேரளக் கடற்கரை ஓரம் ஒரு குழுவினர், தமிழகத்தின் ஒரு சில கடற்கரை ஓர கிராமங்கள் என்று வெளிநாட்டு முஸ்லிம்களை ஆயிரத்துக்குள் அடக்கி விடலாம். அவர்களும் தமிழக மக்களோடு திருமண உறவு வைத்து திராவிடர்களோடு ரத்த கலப்பு ஏற்பட்டு விட்டது. மற்ற அனைத்து முஸ்லிம்களும் இந்துக்களாக இருந்து மதம் மாறியவர்களே!

//தமிழ்நாட்டில் உருது பேசும் முஸ்லீம்கள் எல்லோருமே வட இந்தியாவிலிருந்து இங்கே வந்த முஸ்லீம்கள். அதுவாவது தெரியுமா?//

இது ஒன்றும் புதிய செய்தி அல்லவே! வட நாட்டில் ஏற்பட்ட மதக் கலவரத்திலிருந்து தப்பி தமிழகம் வந்தவர்களே இங்குள்ள உருது முஸ்லிம்கள். இதை நாங்களும் மறுக்கவில்லையே! வடநாடு இந்தியாவுக்கு வெளியிலா இருக்கிறது? :-)))

aik said...

ரொம்ப நல்லது கந்தசாமி,

எப்போது வந்தேறி மரைக்காயர்களும் ராவுத்தர்களும் வெளி மாநிலத்திலிருந்தும் பாகிஸ்தானிலிருந்து வந்த பட்டாணிகளும் தமிழ்நாட்டை விட்டு கிளம்பப்போகிறார்கள்?

suvanappiriyan said...

ஐக்!

//ரொம்ப நல்லது கந்தசாமி,//

என்ன ஒரு சந்தோஷம் எங்களை மறுபடியும் சாதிப் படுகுழியில் தள்ளுவதற்கு!

//எப்போது வந்தேறி மரைக்காயர்களும் ராவுத்தர்களும் வெளி மாநிலத்திலிருந்தும் பாகிஸ்தானிலிருந்து வந்த பட்டாணிகளும் தமிழ்நாட்டை விட்டு கிளம்பப்போகிறார்கள்?//

இன்றைய பாகிஸ்தான் 50 வருடங்களுக்கு முன்பு இந்தியாவின் ஒரு பகுதி. முஸ்லிம்களுக்கு தனி நாடு கிடைத்தும் அங்கு செல்லாமல் தாய் மண்ணின் பற்றால் இந்த நாட்டிலேயே தங்கிவிட்ட அந்த மக்களை வாழ்த்த வேண்டாமா ஐக்!

முதலில் கைபர் கணவாய் வழியாக வந்த நீங்கள் எப்பொழுது இடத்தைக் காலி பண்ணுகிறீர்களோ அதற்கு அடுத்த கட்டமாக நீங்கள் சொல்லும் நபர்களை வெளியேற்றுவதைப்பற்றி யோசிப்போம். பதில் திருப்தியா!

aik said...

கந்தசாமி என்னைக்கும் கந்தசாமிதான் அய்யா.

தண்ணியை தெளிச்சதும் துளசி சிக்கன் சிக்ஸிடிபை ஆயிடுமா என்ன?

பன்னியோட சேந்து கண்டதையும் தின்னாலும் கன்னுக்குட்டி கன்னுக்குட்டிதானே?

//இன்றைய பாகிஸ்தான் 50 வருடங்களுக்கு முன்பு இந்தியாவின் ஒரு பகுதி. முஸ்லிம்களுக்கு தனி நாடு கிடைத்தும் அங்கு செல்லாமல் தாய் மண்ணின் பற்றால் இந்த நாட்டிலேயே தங்கிவிட்ட அந்த மக்களை வாழ்த்த வேண்டாமா ஐக்!
//

தாய்மண் பற்றா? பாகிஸ்தான் தானே தாய்மண். அங்கே போகவேண்டியதுதானே?
தனக்குத்தான் முஸ்லீம் நாடு வேண்டுமென்று பாகிஸ்தானை உருவாக்கிவிட்டு அங்கே இருக்காமல் அங்கிருந்த இந்துக்களை துரத்திவிட்டு ராஜ்ஜியம் பண்ணியாயிற்றே பிறகு இங்கே ஏன் பாகிஸ்தான் முஸ்லீம்கள்?

//முதலில் கைபர் கணவாய் வழியாக வந்த நீங்கள் எப்பொழுது இடத்தைக் காலி பண்ணுகிறீர்களோ அதற்கு அடுத்த கட்டமாக நீங்கள் சொல்லும் நபர்களை வெளியேற்றுவதைப்பற்றி யோசிப்போம். பதில் திருப்தியா!
//

இப்ப வந்த நீங்கள் முதலில் கிளம்புங்கள். நீங்கள் வந்தெறிகள் என்பதை நீங்களே மறுக்கவில்லையே.
ஆனால் பாப்பான்கள் வந்தேறிகள் இல்லை என்றுதானே ஆய்வுகள் சொல்லுகின்றன. அதனை நாங்கள் அப்புறம் பாத்துக்கொள்கிறோம்
சரியா?

suvanappiriyan said...

ஐக்!

//கந்தசாமி என்னைக்கும் கந்தசாமிதான் அய்யா.

தண்ணியை தெளிச்சதும் துளசி சிக்கன் சிக்ஸிடிபை ஆயிடுமா என்ன?//

இதற்கு பெயர்தான் ஆரியம், வர்ணாசிரம் என்பது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களின் உயர்சாதிப் பற்றை விட முடியாது என்பதற்கு உங்களின் இந்த பின்னூட்டமே சான்று.

//தாய்மண் பற்றா? பாகிஸ்தான் தானே தாய்மண். அங்கே போகவேண்டியதுதானே?//

இதை முதலில் உங்கள் தலைவர் அத்வானியிடம் சென்று சொல்லுங்கள். அவர்தான் பாகிஸ்தானிலிருந்து இங்கு வந்து பிரதமராக கனவு காண்பவர். இந்து முஸ்லிம்களிடையே பிளவுகளையும் உண்டு பண்ணியவர்.

//ஆனால் பாப்பான்கள் வந்தேறிகள் இல்லை என்றுதானே ஆய்வுகள் சொல்லுகின்றன.//

எந்த ஆய்வு சொல்கிறது?

aik said...

ஐக்!

//கந்தசாமி என்னைக்கும் கந்தசாமிதான் அய்யா.
தண்ணியை தெளிச்சதும் துளசி சிக்கன் சிக்ஸிடிபை ஆயிடுமா என்ன?//

இதற்கு பெயர்தான் ஆரியம், வர்ணாசிரம் என்பது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களின் உயர்சாதிப் பற்றை விட முடியாது என்பதற்கு உங்களின் இந்த பின்னூட்டமே சான்று.
//

கந்தசாமி,
நான் இந்துமனுஷனா இருக்கறதையும் தாலிபான் மிருகமா இருக்கறதையும் பேசறேன். நீங்க என்னடான்னா... சாதிவெறி பிடிச்சி எப்ப பார்த்தாலும் அதையே பேசுறீங்க..

//தாய்மண் பற்றா? பாகிஸ்தான் தானே தாய்மண். அங்கே போகவேண்டியதுதானே?//

இதை முதலில் உங்கள் தலைவர் அத்வானியிடம் சென்று சொல்லுங்கள். அவர்தான் பாகிஸ்தானிலிருந்து இங்கு வந்து பிரதமராக கனவு காண்பவர். இந்து முஸ்லிம்களிடையே பிளவுகளையும் உண்டு பண்ணியவர்.
//

ஆமாண்ணா, சொந்த நிலத்திலேர்ந்து துரத்தப்பட்டு ஓடிவந்து இந்தியாவில் அடைக்கலமா வந்த இந்துக்களோட சின்ன வயசில ஓடிவந்தவரு அவரு. அவருதான் இந்து முஸ்லீம் பிரிவினையை உருவாக்கினாரா? நல்லா இருக்கு நீங்க் சொல்றது.

சிந்து மாகாணத்தில எல்லா பாப்பானுங்களையும் கஜினியே அந்த காலத்திலேயே கொன்னுட்டார்.அப்புறம், அங்க வந்து வந்தேறிய முஸ்லீம்கள், பாகிஸ்தான் ஒரு முஸ்லீம் நாடுன்னு சொல்லி அங்க இருக்கிற மிச்ச இந்துக்களையெல்லாம் சொந்த நாட்டிலேர்ந்தே துரத்திவிட்டாங்க. அவங்க எங்க போவாங்க? ஆப்கானிஸ்தானுக்கா? எதுவேணாலும் உள்ள நுழையலாம்னு இந்துக்கள் இந்தியாவை தொறந்து வச்சிருக்கறமாதிரி பாகிஸ்தானை வச்சிருந்தா பரவாயில்லையே? ஆனா இந்துவா இருந்தா கொலை கொள்ளை அடக்குமுறைன்னுல்ல வச்சிருக்கானுங்க வந்தேறி முஸ்லீம்கள்?

//ஆனால் பாப்பான்கள் வந்தேறிகள் இல்லை என்றுதானே ஆய்வுகள் சொல்லுகின்றன.//
எந்த ஆய்வு சொல்கிறது?//

படிங்க நல்லா படிங்க.

suvanappiriyan said...

Dear friends!

I have some problemes in my net work connection. So we will meet again after two or three days. Thanking you.

எழிலி said...

அன்புள்ள சுவனப்பிரியன்..

aik
இவர் ஒரு பாசிவெறிபுடிதவர் எழில் என்ற ஒருதளத்தை உருவாக்கி சில விசம பிரச்சினைகளை ஆதரமற்று எழுதி வருகிறார். இவரது படைப்புகளை படிப்பவர்கள் இந்துமததிற்க்கு வந்த நோயாக (aik)கருதுவார்கள் அப்படி மதஙகளை காயப்படுத்தி தனக்கு இருக்கும் வெறியை ஒரு வேசியை விட அநாகரிக செயலில் தன்னை இடுபடுதிக்கொள்ளுகிறார்.

இந்தியாவில் மதங்களின் ஆய்வில் இந்து என்ற மதம் இருந்தாக சான்று இல்லை எனலாம். திரவிட இனமே அகண்ட பAரததில் வாழ்ந்தாகவும் ஆரியர்களின் வருகயால் எற்பட்ட போர்களினால் தெந்கோடியில் தனக்கென ஆட்சிகளை திரவிடர்கள் அமைத்து கொண்டார்கள். திரவிடர்களிடம் இருந்த நாகரிகம், மருத்துவம்,வேளாண்மை,கூட்டு குடும்ப வாழ்க்கை முறைகளை தெறிந்து கொண்டு, திரவிடர்களிடம் நட்புரவை வளர்துக்கொள்ள வந்தவர் தான் அக்த்தியா மாமுனி.
திராவிடனும், கைபர் கானாவாய் வழியாக வந்த ஆரியர்களும் சேர்ந்த கால்ச்சராமாக வும், அவர் அவர் செய்யும் தொழிலுக்கேற்ப ஏற்படுத்த பட்ட ஜாதி களையும்
வைத்து மனிதர்களுக்குள் பிரிவினைய் ஏற்படித்தியதுதான் இந்து மதம். மக்கள் பலர் தங்களுக்குள் ஒரு மற்றத்தை விருப்ம்பிய போதுதான் வியாபர செய்ய வந்த அரேபியர்களிடம் இருந்து அவர்களது கலாச்சரங்களையும் நாகரீகங்களையும் மக்கள் சிலர் ஏற்றுக் கொண்டு வாழ்ந்தார்கள். நூற்றண்டுகள் கழித்துதான் முகாலாயர்கள் படை எடுப்பு ஏற்பட்டு முகாலாயர்கள் ஆட்சி மாற்றங்கள் வருகிறது.இங்கு முஸ்லிம் திரவிட வம்ச வழியினர்களே
அவ்ர்களே எங்கள் தொப்புள் கொடி உறவினர்கள் எங்களை நாசமாக்கி எங்கள் சமுதாய வாழ்க்க்கையை வீணடித்த ஆரியக்கூட்டங்களே நீஙகள் எங்கள் நாட்டை விட்டு ஒடுஙகள். திரவிடன் சொல்லுகிறேன். இந்த மண்ணின் சொந்தக்காரன் சொல்லுகிறேன்

suvanappiriyan said...

எழிலி!

திரு ஐக் விதர்ப்பமாக சில கேள்விகளை கேட்டதால்தான் நானும் சில பதில்களை சொல்ல வேண்டியதாகி விட்டது. அவருக்கு சில உண்மைகளை உங்கள் பின்னூட்டத்தின் மூலம் விளக்கியுமிருக்கிறீர்கள். நன்றி!

அடுத்து மனிதர்களை திராவிடன் என்றும் ஆரியன் என்றும் அரபி என்றும் ஐரோப்பியன் என்றும் பிரித்துப் பேசுவதை நான் ஏற்பதில்லை. உலக மனிதர்கள் அனைவரும் ஆதாம், ஏவாள் என்ற இரு மனிதர்களிடமிருந்து பல்கி பெருகியவர்களே நாம் அனைவரும். அந்த வகையில் நீங்களும், நானும், ஐக்கும், கோவிக்கண்ணனும், டோண்டுராகவனும், நேசகுமாரும், எழிலும் போன்ற எல்லோருமே உறவினர்களாகிறோம். இஸ்லாமும் கிறித்தவமும் இந்து மதமும் போதிப்பதும் இதைத்தான். இதை உணராதவர்கள் தான் பிரிவினையை உண்டு பண்ணி குளிர்காய்கிறார்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Gokul said...

//இந்தியாவில் மதங்களின் ஆய்வில் இந்து என்ற மதம் இருந்தாக சான்று இல்லை எனலாம். திரவிட இனமே அகண்ட பAரததில் வாழ்ந்தாகவும் ஆரியர்களின் வருகயால் எற்பட்ட போர்களினால் தெந்கோடியில் தனக்கென ஆட்சிகளை திரவிடர்கள் அமைத்து கொண்டார்கள். திரவிடர்களிடம் இருந்த நாகரிகம், மருத்துவம்,வேளாண்மை,கூட்டு குடும்ப வாழ்க்கை முறைகளை தெறிந்து கொண்டு, திரவிடர்களிடம் நட்புரவை வளர்துக்கொள்ள வந்தவர் தான் அக்த்தியா மாமுனி.//

எழிலி,

நீங்கள் சொன்ன இந்த கருத்து இன்னும் முழுமையாக எல்லா அறிஞர்களாலும் ஒத்துக்கொள்ள படவில்லை , இன்னும் இது தீவிர சர்ச்சையிலே இருக்கிறது. மேலும்

//மக்கள் பலர் தங்களுக்குள் ஒரு மற்றத்தை விருப்ம்பிய போதுதான் வியாபர செய்ய வந்த அரேபியர்களிடம் இருந்து அவர்களது கலாச்சரங்களையும் நாகரீகங்களையும் மக்கள் சிலர் ஏற்றுக் கொண்டு வாழ்ந்தார்கள். நூற்றண்டுகள் கழித்துதான் முகாலாயர்கள் படை எடுப்பு ஏற்பட்டு முகாலாயர்கள் ஆட்சி மாற்றங்கள் வருகிறது.//

அரேபியர்களிடம் மக்கள் விரும்பி இஸ்லாமை ஏற்றார்கள் என்பது உண்மையாக இருக்கலாம் ஆனால் அது மிக மிக சிறுபான்மையினர்தான் , இஸ்லாம் மதம் ஏற்பட்டது கி.பி.ஆறாம் நூற்றாண்டில் , சுமார் நானூறு வருடங்களில் டில்லியில் முதல் மசூதி கட்டப்பட்டது, அதாவது முகமது கோரி யுத்தத்தில் வென்றபிறகு , அதற்கு முன்னாள் இந்தியாவில் மசூதி இல்லை, இது ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. எனவே டில்லியில் அடிமை வம்சம் வந்த பிறகுதான் இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான மசூதிகள் கட்டப்பட்டன (அதை தவறென்றும் கூறவில்லை, யார் ஆட்சி செய்கிறார்களோ அவர்கள் மதம் உயர்ந்தது என்று அறியப்பட்ட காலம் அது, உலகம் முழுவதும் அப்போது அப்படித்தான் இருந்தது)

//இங்கு முஸ்லிம் திரவிட வம்ச வழியினர்களே
அவ்ர்களே எங்கள் தொப்புள் கொடி உறவினர்கள்//

இங்குள்ள முஸ்லிம் திராவிட வம்சத்தின் தொப்புள் கொடி உறவுகள் என்பதில் எனக்கும் மகிழ்ச்சிதான் , சுவனபிரியன் சொன்ன மாதிரி எந்த பிரிவினைக்கும் எனக்கும் உடன்பாடில்லை ஆனால் உருது பேசும் முஸ்லிம் தமிழனுக்கு தொப்புள் கொடி உறவென்றால் தமிழ் பேசும் ஆரியன் எதிரியா? சமஸ்க்ரிதம் மூலம் கடவுளை தொழுவது தவறென்றால் அரபி மூலம் தொழுவதும் தவறுதான் , இது என்ன இரட்டை நிலை?

சுவனபிரியன் ,

நான் இங்கே அரபி மூலம் தொழுவது தவறு என்று கூறுவது எழிலிக்கு ஒரு வாதத்தின் பேரில்தான், மற்றபடி அதை ஒரு பிரச்சினையாக ஆக்க அல்ல.

suvanappiriyan said...

திரு கோகுல்!

//ஆனால் உருது பேசும் முஸ்லிம் தமிழனுக்கு தொப்புள் கொடி உறவென்றால் தமிழ் பேசும் ஆரியன் எதிரியா?//

உருது பேசும் முஸ்லிம்கள் வட நாட்டிலிருந்து வந்திருந்தாலும் தமிழ் முஸ்லிம்களோடு திருமண உறவு அதிகமதிகம் வைத்து தமிழ் முஸ்லிம்களோடு இரண்டற கலந்து விட்டனர். என் மாமி(அத்தை) மகளை இரண்டு வருடம் முன்பு ஒரு உருது குடும்பத்தில் மணமுடித்து கொடுத்தோம். ஒரு வருடம் உருது மொழி பேச சிரமப்பட்ட என் அத்தை மகள் இன்று சரளமாக உருது பேகுவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். இவர்களுக்கு போன வருடம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையிடம் திராவிட இரத்தமும் வட நாட்டு ரத்தமும் கலந்துவிட்டதல்லவா! இது போன்ற திருமண உறவுகளை பிராமணர்களும் திராவிடர்களோடு வைத்துக் கொண்டால் பிறகு எதிர்ப்பு எங்கிருந்து வரும்? ஏன் இந்த வழியை பிராமணர்கள் பின் பற்றக் கூடாது?

//சமஸ்க்ரிதம் மூலம் கடவுளை தொழுவது தவறென்றால் அரபி மூலம் தொழுவதும் தவறுதான் , இது என்ன இரட்டை நிலை?//

இஸ்லாம் ஒரு உலகலாவிய மதம். எந்த நாட்டுக்கு நீங்கள் சென்றாலும் பாங்கு(தொழுகைக்கான அழைப்பு) ஒலியைக் கேட்டவுடன் இங்கு ஒரு பள்ளிவாசல் இருக்கிறது என்று எவரும் விளங்கிக் கொள்வார். வங்காள மொழியிலான தேசிய கீதத்தை இந்திய ஒருமைப்பாட்டுக்காக நாம் ஏற்றுக் கொள்ளவில்லையா? அது போல்தான் உலக ஒருமைப்பாட்டுக்காக அரபி மொழியில் இறைவனை வணங்குகிறோம். இதனால் அரபி மொழி உயர்ந்தது என்றோ அரபி அல்லாதவர் அரபி மொழி படித்தால் அவர் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்றோ எங்கும் குறிப்பிடப்படவில்லை. இந்த இடத்தில்தான் இரட்டை நிலை எடுக்கும் நிர்பந்தம் ஏற்படுகிறது.

உலக மொழிகள், இனங்கள் அனைத்தையும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் ஒரே தரத்தில் வைத்துப் பார்ப்பதால்தான் இஸ்லாம் உலக மொழிகள் அனைத்திலும் வெகு இலகுவாக ஊடுருவி விடுகின்றது. எனவேதான் திராவிடர்கள் முஸ்லிம்களோடு அன்யோன்யமாக மாமன் மச்சான் என்று உறவு முறை கொடுத்து பழகுகிறார்கள். அதே நேரம் ஒரே மதத்தை சார்ந்த ஆரியர்களை சற்று தூரத்தில் வைத்திருப்பதையும் நாம் அனுபவத்தில் பார்க்கிறோம்.

Unknown said...

இதில் கவலைப்பட ஒன்றும் இல்லை சகோ...

பார்ப்பான ஆதிக்கம் பற்றி மட்டும் பேசும் கலக கண்மணிகள் இது போன்ற இல்லாத சாமிகளுக்கு அளிக்கபடும் உயிர் பலிகளை பற்றி மூச்சு விடுவதில்லை...(ஒட்டு முக்கியமே ))))

இஸ்லாம் கிறிஸ்தவம் போல ஒருங்கமைக்கப்பட்ட மதங்கள் அல்லாமல் சுயம்பு மதம்,தர்ம மதம் என இவர்கள் கூறி கொண்டு செய்யும் இது போன்ற மூட பழக்கங்களை எத்தனை பெரியார் வரினும் திருத்த முடியாது ...

நான் அசைவ எதிர்ப்பாளன் ஆயினும் ,யாருக்கும் உபயோக படாது புதைக்கப்பட்ட மாமிசங்களை சாமியா வந்து சாப்பிட போகுது????? என கேட்க தோன்றுகிறது ...

முறையான கடவுள் வழிபாடு,ஆன்மீக போதனை,வாழ்வியல் நெறிகளை தனி மனித வாழ்வில் செயற்படுத்தல்,,,,முக்கியமா கோவில்ல வம்பளக்க வருகிறவர்களை வெளியே அனுப்புதல் ...போன்றவை இடம் பெறணும் என்பதே அனைவரின் அவா ...