Followers

Saturday, October 04, 2008

சவூதி அரேபியா- ஒரு படிப்பினை

சவூதி அரேபியா- ஒரு படிப்பினை

'இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் இவர்களுக்கு அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லலையா? வீணானதை நம்பி இறைவனின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா?'

குர்ஆன் - 29:67

இந்த குர்ஆனிய வசனத்தை நாம் ஆழ்ந்து சிந்தித்தால் இதில் பல உண்மைகள் நமக்கு தெளிவாகும். இன்று நம் நாட்டிலும் இன்னும் உலகின் பல நாடுகளிலும் நாள்தோறும் குற்றங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. எத்தனை சட்டங்கள் போட்டாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. ஒரு பெண் தன்னந்தனியாக இரவில் எந்த பயமும் இல்லாமல் சென்று வரும் காலமே நம் இந்திய நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்ததாக எடுத்துக் கொள்ளப்படும் என்று காந்திஜி அன்று சொன்னார். இன்று வரை அத்தகைய நிலை நம் இந்திய நாட்டுக்கு கிட்டவில்லை. சட்டங்களில் உள்ள ஓட்டைகள்தான் இத்தகைய குற்றங்கள் அதிகரிக்க காரணம்.

நான் பணியாற்றிக் கொண்டிருக்கும் சவூதி அரேபியாவில் டிரெய்லர்கள் அதிகம் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு பொருட்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப் படுகிறது. இதில் ஓட்டுனர் ஒருவரே இருப்பார். நம் நாடு மாதிரி கிளீனர் இங்கு கிடையாது. ஓட்டுனர்கள் அதிகமாக பாகிஸ்தானிகளே உள்ளனர். ஒரு சில இந்தியர்களும் உண்டு. இவர்கள் பொருட்களை ஏற்றிச் செல்லும் போது வழியிலே டிரெய்லர்களை மடக்கி பொருட்களை கொள்ளை அடிப்பது சில காலம் நடந்து வந்தது. இதில் சில ஓட்டுனர்களின் உயிரையும் அந்த கொள்ளையர்கள் எடுத்துள்ளார்கள். இதைத் தடுக்க நினைத்த சவூதி அரசு மஃப்டியில் ஆட்களை அமர்த்தி சாமர்த்தியமாக குற்றவாளிகளான இரண்டு சவூதி பிரஜைகளை பிடித்து விட்டனர். குற்றவாளிகளைப் பிடித்து கோர்ட் கேஸ் என்று இழுத்தடிக்காமல் குற்றம் நிரூபிக்கப் பட்டதால் அந்த இருவரின் தலையையும் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் முன்னிலையில் சவூதி அரசு வெட்டியது. வெட்டியதோடு அல்லாமல் எங்கு வழிப்பறி நடந்ததோ அந்த சாலைகளில் மர ஸ்டாண்டில் உடல்களை கட்டி தொங்கவிட்டு விட்டார்கள். இதை நேரில் பார்க்கும் யாருக்கும் அடுத்த முறை திருட மனம் வருமா! இந்த தண்டனை நிறைவேற்றியவுடன் இத்தகைய வழிப்பறி நடப்பது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

இதே போன்று கடமையில் இருந்த ஒரு போலீஸ்காரரை கொலை செய்த எமனியை குற்றம் நிரூபிக்கப் பட்டதால் தலையை வெட்டி பொது மக்கள் பார்வைக்காக கட்டி தொங்க விட்டனர். இதை நானும் நேரில் பார்த்தேன்.

இதை யாராவது காட்டுமிராண்டித்தனம் என்று சொல்ல முடியுமா? குற்றவியல் தண்டனையைப் பொறுத்தவரை இஸ்லாம் மூன்று முக்கிய அடிப்படைகளைப் பார்க்கிறது.

1. குற்றவாளியின் குற்றத்துக்கு ஏற்ப தண்டனை.
2. பாதிக்கப்பட்ட தனிநபர் குடும்பம் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோரைத் திருப்திபடுத்துவதன் மூலம் பழிவாங்கல் என்ற பெயரில் குற்றங்கள் பெருகாமல் தடுப்பது.
3. ஒரு குற்றத்துக்கு வழங்கப்படும் தண்டனையின் மூலம் மீண்டும் அதே குற்றம் நடப்பதைத் தடுப்பது.

மேலே நான் குறிப்பிட்ட தண்டனைகள் நாட்டு மக்கள் என்று பாரபட்சம் காட்டாமல் நிறைவேற்றப்படுவதால்தான் மக்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் கிடைக்கிறது. நம் நாட்டிலோ நிலைமை தலைகீழ். கையும் களவுமாக பிடிபடுகிறார்கள்: வீடியோ ஆதாரங்கள் இருக்கிறது. இவ்வளவு இருந்தும் அரசியல்வாதிகளின் ஆசிகளால் வெளியில் விடப்படுகிறார்கள். பிறகென்ன! அதே குற்றவாளிகள் இன்னும் தைரியத்துடன் குற்றங்களை செய்வதற்கு அரசாங்கமே வழிவகை செய்து கொடுக்கிறது.

மேலே நான் குறிப்பிட்ட குர்ஆனிய வசனத்தையும் இன்றைய சவூதி ஆட்சியையும் சற்று ஒப்பிட்டு பார்ப்போம்.

Federal Bureau Of Investigation (FBI) என்ற அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையில் ஏழு குற்றங்களுக்கான அட்டவணை பெறப்பட்டது.


குற்றம் சவூதி--ஜப்பான்--அமெரிக்கா

கொலை 0.17 ---1.10-------- 5.51
கற்பழிப்பு 0.14-- 1.78 --------32.05
கொள்ளை 0.14 --4.08 --------144.92
தாக்குதல் 0.12-- 23.78------ 323.62
கொள்ளை 0.05- 233.6 ------728.42

இப்பொழுது இந்த குற்றங்களின் விகிதாச்சாரத்தை நாடுவாரியாக பாருங்கள். குர்ஆனுடைய குற்றவியல் சட்டத்தை தயவுதாட்சனியமின்றி சவூதி அரேபியா பின்பற்றுவதால்தான் அந்நாட்டு மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் உத்தரவாதம் கிடைக்கிறது. இந்த குர்ஆனின் சட்டத்தை கைவிட்ட மற்ற முஸ்லிம் நாடுகள் அமைதியிழந்து அல்லலுறுவதையும் நாம் பார்க்கிறோம்.

நம் நாட்டைப் பற்றியோ சொல்லவே வேண்டாம். அமைதியாய் இருந்த நம் இந்திய நாட்டை கேவலம் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக பாபரி மசூதியை இடித்த அத்வானி வருங்கால பிரதமர். தான் ஆட்சிக்கு மறுபடியும் வரவேண்டும் என்பதற்காக தன் மதத்தை சார்ந்த கரசேவகர்களை ரயிலோடு எரித்த(டெஹல்கா புண்ணியம்) நரேந்திர மோடி இன்றைய குஜராத் முதல்வர். நாளைய பிரதமராகவும் பார்த்து பூரிக்கப்படுபவர். சமீபத்தில் நடந்த ஒரிஸ்ஸா கலவரத்தின் சூத்திரதாரிகள் தைரியமாக வெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் நம் நாட்டுக்கு எங்கிருந்து வரும் அமைதி?

சவூதி அரேபியாவைப் பார்த்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அத்வானி முன்பு அமைச்சராக இருந்தபோது 'நம் நாட்டுக்கு அரபு நாட்டு சட்டங்களே தேவை' என்று சொன்னார். பாம் வைப்பவனையும், மதக்கலவரத்தைத் தூண்டுபவனையும் அவன் இந்துவாகட்டும், முஸ்லிமாகட்டும், கிறித்தவனாகட்டும் இரண்டு முறை தலையை பொது மக்கள் முன்னிலையில் நம் அரசாங்கம் எடுக்கட்டும்: பிறகு பாருங்கள் நாமும் சவூதியைப் போல் அமைதி கொண்ட நாடாக மாற்றப்படுவோம்.

'நம்பிக்கைக் கொண்டோர் அனைவரும் சகோதரர்கள்தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள். இறைவனை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.'
-குர்ஆன்: 49:10

27 comments:

Bharathiraja said...

ஆனால் இந்திய அரசோ அல்லது இந்தியாவின் பெரும்பான்மை மக்களோ எந்த ஒரு நூலுக்கும் கட்டுப்படாதவர்கள் அரசியலமைப்பைத்தவிர. சுயமாக சிந்திப்பதைத்தான் எனது பாரம்பரியம் எமக்கு கற்றுத்தந்திருக்கிறது. காட்டுமிராண்டித்தனத்தை அல்ல. நீங்கள் அறியாமல் இருக்கலாம், ஈரக்கில் குண்டு வைத்து ஈராக்கியர்களை கொல்லும் பாதி பேர் சவுதியை சேர்ந்தவர்கள். இவ்வளவு ஏன் சவுதியை சேர்ந்த ஷியா பிரிவு மக்கள் படும் பாடு சொல்லி மாளாது. பஹ்ரைனில் வெள்ளிக்கிழமை தோறும் சவுதியை சேர்ந்த ஷெக்குகள் அடிக்கும் லூட்டி சொல்லில் அடங்காது. உபதேசமெல்லாம் ஊருக்கு மட்டும்தான் ஆனால் அதை அவர்களே கடை பிடிப்பது கிடையாது. சவுதி என்பது பூமியில் உள்ள ஒரு நரகம் (அப்படி ஒன்று இருந்தால்). முதலில் அவர்கள் மற்ற நாட்டினரை மனிதர்களாக மதிக்க பழகட்டும். பிறகு அவர்கள் சட்டத்தை நாம் பழகுவது பற்றி யோசிப்போம். நார்வே, சுவீடன்,ஆகிய நாடுகள் கூட குரான் சட்டத்தை கடை பிடிப்பதில்லை ஆனால் அங்கு குற்ற விகிதம் சவுதியை காட்டிலும் குறைவு, ஏன்? மக்களுக்கு எல்லா வசதிகளும் அமைந்து நல்ல கல்வி கிடைக்குமானால் அவர்கள் மனதளவில் தனிப்பட்ட முறையில் நல்லவர்களாக வாழ முற்படுவார்கள். கடுமையான சட்டங்கள் மக்களிடம் பயத்தை மட்டுமே தொற்றுவிக்கும் பண்புகளை அல்ல.

Anonymous said...

//
குற்றம் சவூதி--ஜப்பான்--அமெரிக்கா

கொலை 0.17 ---1.10-------- 5.51
கற்பழிப்பு 0.14-- 1.78 --------32.05
கொள்ளை 0.14 --4.08 --------144.92
தாக்குதல் 0.12-- 23.78------ 323.62
கொள்ளை 0.05- 233.6 ------728.42//

தவறான தகவல்கள் மற்றும் புள்ளி விபரங்கள். இந்தியாவில் உங்கள் மனைவி (உங்களுக்கு திருமணம் ஆகியிருந்தால் :-) ) தனியே அருகில் இருக்கும் மளிகைக் கடையில் பொருட்கள் வாங்கி விட்டு வீடு திரும்ப முடியும்.இதே நிலைமைதான் நீங்கள் குறிப்பிட்ட மற்ற எல்லா நாடுகளிலும்.

ஆனால் சவூதி அரேபியாவைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டு இருப்பது உண்மையல்ல. சவூதி அரேபியாவில் பெண்களின் குறிப்பாக வெளிநாடுகளைச் சேர்ந்த பெண்களின் கற்புக்கும் உயிருக்கும் 0% கூட உத்தரவாதம் கிடையாது.
அப்படி இருக்குமேயானால் எதற்காக கடைதெருவுக்கு அழைத்துச் சென்றால் கூட மனைவியைக் காருக்குள் அமர வைத்து வெளிப் பக்கமாக தாள் போட்டுச் செல்கிறார்கள். தங்கள் மனைவியை வீட்டுக்குள் வைத்து வெளிப்பக்கமாக பூட்டிச் செல்லாத கணவன்மார் எத்தனை பேர்.
எத்தனை பிலிப்பைன்சைச் சேர்ந்த பணிப்பெண்கள், கேரளத்தைச் சேர்ந்த பணிப்பெண்கள், சவூதியில் பணிபுரியும் வெளிநாட்டவரின் மனைவிகள் அரபிக் காட்டுமிராண்டிகளால் கற்பழிக்கப் பட்டு கொலைசெய்யப் பட்டுள்ளனர். இதற்கெல்லாம் எந்தவிதமான வழக்கோ விசாரணையோ தண்டணையோ கிடையாது.

இரும்புத்திரைக்கு பின் நடைபெறும் இஸ்லாமிய மன்னராட்சியில் நடைபெறும் குற்றங்கள் அனைத்தும் மறைக்கப் படுகின்றன. அவர்கள் மத வேறுபாடின்றி வெளிநாட்டு பெண்களைக் பாலியல் வண்புணர்ச்சிக்கு ஆளாக்குகின்றனர்.

அங்கெ எங்கே பத்திரிக்கை சுதந்திரம் உள்ளது இது போன்ற உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர.

நீங்கள் சொல்லும் புள்ளி விபரங்கள் உங்கள் மனச் சாட்சிக்கு விரோதமின்றி உண்மையானால் உங்களுக்கு ஒரு சவால். உங்கள் வீட்டுப் பெண்களை சவூதி அரேபியாவின் எந்தச் சாலையிலாவது ஒருமுனையில் இறக்கி விட்டுவிட்டு இரண்டு கிலொ மீட்டர்களுக்கு அப்பால் மறு முனையில் நின்று அவர்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? அவர்கள் கற்போடோ அல்லது உயிரோடோ கிடைப்பார்களா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

Anonymous said...

செளதியில் பல வருடங்களாக வசித்து வருகிறேன். நீங்கள் கூறியது போல இஙு பாலும் தேனும் ஒன்றும் ஓடவில்லை. வழிபறி கொள்ளை, திருட்டு என்று பல இடங்களில் இப்போது நடக்க துவங்கிவிட்டன. எனது வீட்டருகில் அசாமை சேர்ந்த ஒரு முஸ்லிம் வீட்டு வேலை செய்யும் சாதாரண தொழிலாளி. அவனுடைய சம்பளமே 500 ரியால் தான். சம்பள நாளன்று அவன் சாலையில் நடந்து வரும்போது இரண்டு செளதிகள் அவனை வழிமறித்து அத்தனை பணத்தையும் பறித்து கொண்டுவிட்டனர். இவன் அவர்களின் காலை பிடித்து மன்றாடி "நானும் உங்களை போல ஒரு முஸ்லிம் தான், என் பணத்தை இப்படி அடித்து கொண்டு செல்கிறீர்களே" என்று கெஞ்சினான். அதற்கு அவர்கள் என்ன கூறினார்கள் தெரியுமா? "நீ முஸ்லிமாக இருந்தால் எங்களுக்கு என்ன? வா, சேர்ந்து தொழுகை செய்யலாம். அவ்வளவுதான் உனக்கும் எங்களுக்கும் இருக்கும் தொடர்பு" என்றான்.

நம் நாடு ஏழை நாடாக இருக்கலாம். நீங்கள் கூறியது போல ஊழல் அரசியல்வாதிகள் உள்ள நாடுதான். ஆனால் நிம்மதியாக பேச, வாழ முடிகிறது.

suvanappiriyan said...

பாரதிராஜா! (பட டைரக்டரோ) :-)

//ஈரக்கில் குண்டு வைத்து ஈராக்கியர்களை கொல்லும் பாதி பேர் சவுதியை சேர்ந்தவர்கள்.//

பொய்யான தகவல். முன்பு அமெரிக்கா உட்பட பன்னாட்டு படைகள் அந்த மக்களைக் கொன்று குவித்ததை உலக மக்கள் அனைவரும் அறிவர். ஒன்றாய் இருந்த ஷியா சன்னிக்களை வெறுப்பேற்றி இன்று ஈராக்கை நரகலோகமாக்கியதும் அமெரிக்காதான்.

//பஹ்ரைனில் வெள்ளிக்கிழமை தோறும் சவுதியை சேர்ந்த ஷெக்குகள் அடிக்கும் லூட்டி சொல்லில் அடங்காது. உபதேசமெல்லாம் ஊருக்கு மட்டும்தான் ஆனால் அதை அவர்களே கடை பிடிப்பது கிடையாது.//

கோடிக்கணக்கில் பணம் புரளும்போது ஒரு சிலர் இன்பத்தை தேடி பஹ்ரைன் செல்வது உண்மையே! நம் நாட்டிலும் பணத்தில் புரளும் எத்தனையோ பேர் மது மாது என்று தவறான வழியில் செல்வதில்லையா? தவறு செய்யும் அந்த ஷேக்குகள் மரணத்திற்கு பின்னால் அதற்குரிய தண்டனையை அடைவார்கள் என்பது இஸ்லாமிய நம்பிக்கை.

//சவுதி என்பது பூமியில் உள்ள ஒரு நரகம் (அப்படி ஒன்று இருந்தால்). முதலில் அவர்கள் மற்ற நாட்டினரை மனிதர்களாக மதிக்க பழகட்டும். பிறகு அவர்கள் சட்டத்தை நாம் பழகுவது பற்றி யோசிப்போம்.//

எந்த ஒரு நாட்டுக்கும் நீங்கள் பணிபுரிய சென்றால் நீங்கள் இரண்டாம் தர குடிமகன்தான். அமெரிக்காவில் இந்தியர்கள் படும் துயரை நீங்கள் பார்க்கவில்லையா? இலங்கையில் தமிழர்களின் நிலை நாம் அறிந்ததுதானே! இங்கிலாந்தில் உள்ள இந்திய மருத்துவர்களுக்கு 'இத்தனை நாட்களுக்குள் வெளியேறிவிடவேண்டும்' என்று கெடு வைத்துள்ளது அரசு. எனவே இது எல்லா நாட்டுக்கும் பொருந்தும். ஆனால் இது போன்ற நிலை கண்டிக்கத்தக்கதே!

//மக்களுக்கு எல்லா வசதிகளும் அமைந்து நல்ல கல்வி கிடைக்குமானால் அவர்கள் மனதளவில் தனிப்பட்ட முறையில் நல்லவர்களாக வாழ முற்படுவார்கள். கடுமையான சட்டங்கள் மக்களிடம் பயத்தை மட்டுமே தொற்றுவிக்கும் பண்புகளை அல்ல.//

ஒத்துக் கொள்கிறேன். கல்வியறிவு முழுவதும் கிடைக்கும் வரையிலாவது சட்டத்தைக் கடுமையாக்கினால் மறறவர்கள் நிம்மதியாக இருக்கலாம் அல்லவா? மேலும் கல்வியில் தேர்ந்தவர்கள்தான் இன்று குற்றச் செயல்களில் அதிகம் அதிலும் திறமையாக செயல்படுகிறார்களாம்.

suvanappiriyan said...

அனானி!

//செளதியில் பல வருடங்களாக வசித்து வருகிறேன். நீங்கள் கூறியது போல இஙு பாலும் தேனும் ஒன்றும் ஓடவில்லை. வழிபறி கொள்ளை, திருட்டு என்று பல இடங்களில் இப்போது நடக்க துவங்கிவிட்டன.//

தேனாறும் பாலாறும் ஓடுவதாக நான் எங்கும் கூறவில்லையே! எங்கு சென்றாலும் உழைத்தால்தான் சம்பளம் கிடைக்கும்.

//"நீ முஸ்லிமாக இருந்தால் எங்களுக்கு என்ன? வா, சேர்ந்து தொழுகை செய்யலாம். அவ்வளவுதான் உனக்கும் எங்களுக்கும் இருக்கும் தொடர்பு" என்றான்.//

என்ன செய்வது! இரக்கமற்ற அரக்கர்கள் எல்லா நாட்டிலும் விரவிக் கிடக்கிறார்கள். இறைவனைப் பிரார்த்திப்பதிலாவது சமத்துவத்தை பேணுகிறானே! அந்த இறைவன்தான் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இது போன்ற சவுதிகளைத் தடுக்க வேண்டும்.

//நீங்கள் கூறியது போல ஊழல் அரசியல்வாதிகள் உள்ள நாடுதான். ஆனால் நிம்மதியாக பேச, வாழ முடிகிறது.//

சி.என்.என் - ஐ.பி.என் தொலைக்காட்சியில் 04.05.2008 அன்று வெளியான செய்தி:

'கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 20000 கற்பழிப்புகள் நடந்துள்ளன. தலைநகர் டெல்லியில் மட்டும் கடந்த மாதம் கற்பழிக்கப்பட்ட பெண்கள் 10 பேர்.'

இதற்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள்?

suvanappiriyan said...

நண்பன்!

//சவூதி அரேபியாவில் பெண்களின் குறிப்பாக வெளிநாடுகளைச் சேர்ந்த பெண்களின் கற்புக்கும் உயிருக்கும் 0% கூட உத்தரவாதம் கிடையாது.
அப்படி இருக்குமேயானால் எதற்காக கடைதெருவுக்கு அழைத்துச் சென்றால் கூட மனைவியைக் காருக்குள் அமர வைத்து வெளிப் பக்கமாக தாள் போட்டுச் செல்கிறார்கள். தங்கள் மனைவியை வீட்டுக்குள் வைத்து வெளிப்பக்கமாக பூட்டிச் செல்லாத கணவன்மார் எத்தனை பேர்.
எத்தனை பிலிப்பைன்சைச் சேர்ந்த பணிப்பெண்கள், கேரளத்தைச் சேர்ந்த பணிப்பெண்கள், சவூதியில் பணிபுரியும் வெளிநாட்டவரின் மனைவிகள் அரபிக் காட்டுமிராண்டிகளால் கற்பழிக்கப் பட்டு கொலைசெய்யப் பட்டுள்ளனர். இதற்கெல்லாம் எந்தவிதமான வழக்கோ விசாரணையோ தண்டணையோ கிடையாது.//

வீட்டு வேலைக்காக வரும் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு சில இடங்களில் உட்படுவது உண்மையே! வீட்டுக்குள் உள்ளே நடப்பதனால் இவைகளை போலீஸ் வரை கொண்டு செல்ல முடிவதில்லை. நம் நாட்டிலும் இது போன்று வீட்டு வேலை செய்பவர்களிடம் தவறாக நடப்பதை அன்றாடம் பத்திரிக்கைகளில் பார்க்கிறோம். இதைத் தடுக்க முதலில் நாம் பெண்களை வீட்டு வேலைக்கு அனுப்புவதை நிறுத்த வேண்டும். இலங்கைப் பெண்களும், இந்தோனேஷியப் பெண்களும்தான் இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

அடுத்து சவூதி நாட்டவர் அனைவரும் பத்தரை மாற்று தங்கங்கள் என்று நான் சொன்னது போல் உங்கள் பின்னூட்டம் உள்ளது. குற்றவியல் சட்டத்தை ஒழுங்காகப் பின்பற்றுவதால் விளையும் நன்மைகளைப் பற்றியதே இப்பதிவு. நான் இங்கு சவூதிகளுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று யாரும் தவறாக நினைத்து விட வேண்டாம்.

//அங்கெ எங்கே பத்திரிக்கை சுதந்திரம் உள்ளது இது போன்ற உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர.//

'அரப் நியூஸ்' பத்திரிக்கை நீங்கள் படிப்பதில்லையா? இது போன்று தவறுகள் நடக்கும் போது அதை பத்திரிக்கையிலும் வெளியிட்டு உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

//இரண்டு கிலொ மீட்டர்களுக்கு அப்பால் மறு முனையில் நின்று அவர்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? அவர்கள் கற்போடோ அல்லது உயிரோடோ கிடைப்பார்களா?//

ஒரு பெண்ணை மொழி தெரியாத ஒரு அன்னிய நாட்டில் தனியாக எதற்கு விட வேண்டும்? அட நம் நாட்டிலேயே நீங்கள் பரீட்சித்துப் பாருங்களேன். ஒரு பெண் தனியாக சென்றால் இதற்காகவே காத்திருக்கும் கூட்டம் எல்லா நாட்டிலும் உண்டு. சவூதி மட்டும் இதற்கு விதி விலக்கா என்ன?

suvanappiriyan said...

இவ்வாண்டுத் தொடக்கத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டக்காரர்கள் கொச்சியிலும் மும்பையிலும் பெண்களை மானபங்கப் படுத்தினர்.
படங்களைப் பார்க்க
. http://www.dinamani.com/gallery/dnGphotos.asp?id=DNQ20080102034726&Cat=NEW+YEAR+BASH+TURNS+TRAGIC
http://in.tamil.yahoo.com/News/National/0801/03/1080103040_1.htm

-- மும்பை : பெண்களை மானப்பங்கப்படுத்திய கும்பலில் 7 பேர் கைது

மும்பை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 3 ஜனவரி 2008 ( 18:30 IST )
ஒட்டு மொத்த மும்பையையும் உறைய வைக்கும்விதமாக நடந்தேறிய புத்தாண்டு தின இரவு கொடூரச் சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை ஜூஹூ கடற்கரையையொட்டி அமைந்திருக்கும் ஓட்டல் ஒன்றில் புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற 2 பெண்கள், நள்ளிரவு 1.40 மணிக்கு பிறகு கடற்கரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.அவர்களில் ஒரு பெண்ணின் கணவரும், மற்றொரு பெண்ணின் ஆண் உறவினரும் உடன் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த சுமார் 70 முதல் 80 பேர்கொண்ட கும்பல் அந்த பெண்களை சூழ்ந்துகொண்டு அவர்களது ஆடைகளை கிழித்தும், கைவைத்தும் மானப்பங்கப்படுத்தியது.
இந்த சம்பவத்தை நேரில் கண்ட இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் புகைப்படக்காரர்கள் இச்சம்பவத்தை புகைப்படமாக எடுத்ததோடு, போலீசாருக்கும் உடனடியாக தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்தனர்.
இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த பெண்களை அந்தக் கும்பலிடமிருந்து மீட்டனர்.இது தொடர்பாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் வெளியாகி, மும்பை வாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் இச்சம்பவம் தொடர்பாக புகார் கொடுக்க அந்த (கலிஃபோர்னியாவில் வசிக்கும் வெளிநாட்டு வாழ் இந்திய ) பெண்கள் விரும்பவில்லை என்ற போதிலும், போலீசார் இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை ஏதும் கொடுக்காமல் தட்டிக் கழித்தனர்.
மேலும் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மும்பை போலீஸ் கமிஷனர் ஜாதவ், சமூகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது சகஜம்தான் என்றும், நீங்கள்தான் உங்கள் மனைவிமார்களை இதுபோன்று வெளியில் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும் அலட்சியமாக கூறியிருந்தார்.
அவரது இந்த பேட்டி மும்பைவாசிகளிடையே கொதிப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், நடந்த சம்பவம் தொடர்பாக சம்பவத்தை நேரில் பார்த்த புகைப்படக்காரர்கள் இருவரும் புகார் கொடுக்க சென்ற போதும் அதனை பதிவு செய்யாமல், சம்பவம் நடந்தது எங்கள் ஏரியாவில் இல்லை எனக் கூறி அவர்களை பல மணி நேரம் போலீசார் அலைக்கழித்தனர்.
பின்னர் உயரதிகாரிகள் தலையிட்டதைத் தொடர்ந்தே வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இதனையடுத்து புகைப்படங்களில் காணப்பட்ட அடையாளத்தின் அடிப்படையில், முதல்கட்டமாக குற்றவாளிகளில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இதர குற்றவாளிகளைப் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என மும்பை காவல் துறை அறிவித்துள்ளது.
இதனிடையே நடந்த அந்த பயங்கரமான சம்பவத்தை தாம் மறக்க விரும்புவதாகவும், அதே சமயம் தாம் கற்பழிக்கப்படவில்லை என்றும், ஆடைகள் ஏதும் கிழிக்கப்படவில்லை என்றும், ஊடகங்கள்தான் இச்சம்பவத்தை பெரிதுபடுத்திவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் கூறியுள்ளார்.

அதே சமயம் சம்பவம் நடந்தபோது தம்மை காப்பாற்ற வராத மும்பைவாசிகள் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள அந்த பெண், இனிமேல் தாம் ஒருபோதும் தன் வாழ்க்கையில் இந்தியாவில் பார்ட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

Mad rush mars celebration of Indian festival

By Mahmood Saberi, Senior Reporter
Published: October 03, 2008, 23:41
Dubai: "Three nights of fun and festivity" turned into a nightmare for many Indian expatriates as girls fainted in the mad scramble to get into the venue at Zabeel Park on Thursday night.
As thousands turned up to rock to 'Disco Dandiya', the scene was instead one of rude and shoving security guards, clothes being torn off women, and others who went home disappointed after waiting nearly two hours at the gate.

http://www.gulfnews.com/Nation/Society/10249708.html

கோவி.கண்ணன் said...

குற்றங்களும் அதற்கான தண்டனைகளும் ஒரு நாட்டின் மக்களின் மன நிலையைப் பொருத்தது தான். அதை எல்லோருக்கும் பொது என்று சொல்லிவிட முடியாது, எந்த நாட்டில் குற்றவிகிதம், மக்கள் மனநிலை மோசமாக இருக்கிறதோ அங்கு கடுமையான தண்டனையும் சட்டங்களும் தேவைப்படும், அதன்படியே அந்த நாட்டு அரசுகள் செயல்படுகிறது. அதை எல்லா நாட்டுக்கும் பொதுவான் சட்டம் என்று சொல்லிவிடமுடியாது ?

கண்ணுக்கு கண், கைக்கு கை என்கிற இஸ்லாமிய சட்டத்தை இந்திய இஸ்லாமியர்களுக்கு மட்டும் இந்திய அரசு வைத்தால், சரியத் சட்டம் போல், குரான் படிதானே இருக்கிறது என்று இந்திய இஸ்லாமியரான நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா ?

Anonymous said...

//அமெரிக்காவில் இந்தியர்கள் படும் துயரை நீங்கள் பார்க்கவில்லையா? //

அடங்கப்பா என்னமோ நேரில் பார்த்தாமாதிரி கத விடுறீங்க. அமெரிக்காவில் உள்ள இந்தியருக்கு அமெரிக்கனுக்கு சமமான உரிமை உண்டுங்கானும். வேணும்னா சர்வேசன்,ILA மாதிரி அமெரிக்கா தமிழ் பதிவரிடம் கேட்டுப் பாரும்.

"வந்தாரை வாழ வைத்து சிட்டிசன்ஷிப்பும் தரும் அமெரிக்கா வாழ்க"!

Anonymous said...

//நம் நாட்டைப் பற்றியோ சொல்லவே வேண்டாம். //


ரொம்ப கரைட்! தனி சிவில் சட்டம் இருக்கற மாதிரி அட்லீஸ்ட் முஸ்லிம்களுக்கு மட்டுமாவது ஷரியத் கிரிமினல் சட்டம் அமுல்படுத்தப் பட்டால் சவுதி அரேபியா மாதிரியே குற்றவிகிதம் குறைந்துவிடும்!

suvanappiriyan said...

கோவிக் கண்ணன்!

//கண்ணுக்கு கண், கைக்கு கை என்கிற இஸ்லாமிய சட்டத்தை இந்திய இஸ்லாமியர்களுக்கு மட்டும் இந்திய அரசு வைத்தால், சரியத் சட்டம் போல், குரான் படிதானே இருக்கிறது என்று இந்திய இஸ்லாமியரான நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா ?//

பாகப்பிரிவினை திருமணம் போன்ற ஒரு சில சட்டங்கள் முஸ்லிம்களுக்கு இருக்கிறது. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் தங்களின் மத கோட்பாடுகளை சரிவர செய்வதற்கு இது போன்ற சட்டங்கள் உதவியாக இருக்கின்றன. இது முஸ்லிம்களுக்குள் நடக்கும் பரிவர்த்தனை.

ஆனால் கிரிமினல் சட்டங்களைப் பொறுத்தவரை ஒரே மதத்தவர் சம்பந்தப்படுவது கிடையாது. ஒரு இந்து மற்றொரு முஸ்லிம் வீட்டிலும் திருடலாம். ஒரு முஸ்லிம் மற்றொரு கிறித்தவர் வீட்டிலும் திருடலாம். கற்பழிப்பு, கொலை போன்ற இன்னபிற கிரிமினல் குற்றங்களும் அனைத்து மதத்தவரும் சம்பந்தப்படுகின்றனர். எனவே திறமையான ஆட்சி இருந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்ற சட்டத்தை அமுல்படுத்தினால் கண்டிப்பாக நான் வரவேற்பேன். நாடும் அமைதியுறும்.

ஒரு குற்றவாளி பிறப்பதில்லை. அவன் சூழ்நிலையால் மாற்றப்படுகிறான். அமைதியான சூழல் கடுமையான சட்டத்தின் மூலமே சாத்தியமாகும்.


//எங்கிருந்தாலும் மனுசன் மனுசந்தான். //

நூத்துல ஒரு வார்த்தை. மலேசிய பேருந்தில் பொழுதுபோக்காக நான் செய்த ஒரு நாள் பயணத்திலேயே இது தெரிந்துவிட்டது.

ஒழுங்கீனத்தில் மலாய்,சீன, இந்திய மக்களுக்குள் வித்தியாசமே இல்லை.//- -கோவிக் கண்ணன் பதிவில் வந்த ஒரு பின்னூட்டம்.

suvanappiriyan said...

அனானி!

//அடங்கப்பா என்னமோ நேரில் பார்த்தாமாதிரி கத விடுறீங்க.//

ஒரு நாட்டைப் பற்றி தெரிந்து கொள்ள நேரில்தான் செல்ல வேண்டும் என்பதில்லை.! ஊடகம், இணையத்தின் மூலம் உலகமே வீட்டுக்கு தற்காலத்தில் வருதுங்கண்ணா!

//"வந்தாரை வாழ வைத்து சிட்டிசன்ஷிப்பும் தரும் அமெரிக்கா வாழ்க"!//

அமெரிக்கா உங்களுக்கு சிடிஷன்ஷிப்பை இரவசமாக தந்துவிடவில்லை. நம் உழைப்பை உறிஞ்சிக் கொண்டு அதற்குப் பகரமாகத் தருவதுதான் சிடிஷன்ஷிப். நாஸாவில் வேலை செய்யும் பாதிக்கு மேற்பட்டவர் ஆசிய நாட்டவரே! தற்போதய பொருளாதார வீழ்ச்சியினால் 'நான்தான் உலகை ஆளப்பிறந்தவன்' என்ற நினைப்பும் தவிடு பொடியாகி விட்டது. இன்னும் பாருங்கள் வேடிக்கையை.

மேலும் மதுரையைச் சேர்ந்த சாப்ஃட்வேர் இன்ஜினீயர் உள்ளூர் அமெரிக்கர்களால் பணத்துக்காக கொல்லப்பட்டது படிக்கவில்லையா?

suvanappiriyan said...

அனானி!

//தனி சிவில் சட்டம் இருக்கற மாதிரி அட்லீஸ்ட் முஸ்லிம்களுக்கு மட்டுமாவது ஷரியத் கிரிமினல் சட்டம் அமுல்படுத்தப் பட்டால் சவுதி அரேபியா மாதிரியே குற்றவிகிதம் குறைந்துவிடும்!//

திருட்டு கொள்ளை கற்பழிப்பு போன்ற செயல்களில் எந்த மதத்தினர் அதிகம் ஈடுபடுகின்றனர் என்ற புள்ளி விபரத்தை அருகில் உள்ள காவல் நிலையத்தில் கேட்டுப் பாருங்கள். உண்மை தெளிவாகும்.

குண்டு வெடிப்பில் கைதாகும் அநேக இஸ்லாமியர் அந்த குண்டு வெடிப்புக்கு சம்பந்தமே இல்லாதவர்கள். தெஹல்கா புலனாய்வைப் படித்தீர்கள்தானே! 'பதவி சுகம் படுத்தும்பாடு தன் மக்களையே மோடிகளால் குண்டு வைத்து கொல்லச் சொல்கிறது.

மேலும் பாபரி மசூதி இடிப்புக்கு முன்னர் காவல் நிலையத்தில் கால் வைக்காதவர்களாக்கும் முஸ்லிம்கள்.

Anonymous said...

நம் உழைப்பை உறிஞ்சிக் கொண்டு அதற்குப் பகரமாகத் தருவதுதான் சிடிஷன்ஷிப். //

சவுதிகாரன் உமது உழைப்பை உறிஞ்சிவிட்டு உம்மிடம் பிச்சைகாசை மட்டும்தானே வீசுகிறான். இங்கு அமெரிக்கனுக்கு சமமான உரிமையை தருகிறான் அமெரிக்கன். ஆயிரஞ்சொன்னாலும் நீரும் சவுதிகாரனும் அங்கு சமம்மா?

Anonymous said...

மேலும் பாபரி மசூதி இடிப்புக்கு முன்னர் காவல் நிலையத்தில் கால் வைக்காதவர்களாக்கும் முஸ்லிம்கள்.//

அப்படியா?

முஸ்லிகள் இந்தியாவில் செய்த கொலை கற்பழிப்பு கண்க்கில் அடங்குமா?

இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி வரலாறே இரத்ததில்தான் எழுதப் பட்டுள்ளது.

Anonymous said...

//குண்டு வெடிப்பில் கைதாகும் அநேக இஸ்லாமியர் அந்த குண்டு வெடிப்புக்கு சம்பந்தமே இல்லாதவர்கள். தெஹல்கா புலனாய்வைப் படித்தீர்கள்தானே! 'பதவி சுகம் படுத்தும்பாடு தன் மக்களையே மோடிகளால் குண்டு வைத்து கொல்லச் சொல்கிறது.

மேலும் பாபரி மசூதி இடிப்புக்கு முன்னர் காவல் நிலையத்தில் கால் வைக்காதவர்களாக்கும் முஸ்லிம்கள்.//

அல்-தக்கியா தானே இது?

Anonymous said...

மேலும் பாபரி மசூதி இடிப்புக்கு முன்னர் காவல் நிலையத்தில் கால் வைக்காதவர்களாக்கும் முஸ்லிம்கள்//

இந்துக்கள் முஸ்லிம்களை விட ரொம்ப நல்லவிங்க.

கைபர் கணவாய் வழியா வந்து முஸ்லிம்கள் இந்துகளை இமசை பண்ணியதற்கு பின்புதான் இந்துக்கள் முஸ்லிம்களை தாக்க ஆரம்பித்தார்கள் தெரியுமா?

முஸ்லிம்கள் பல கோயில்களை இடித்துவிட்டாலும் 1200 வருஷ்ம் பொறுத்து பொறுத்து இப்பதான் ஒரு மசூதிய இடிச்சாங்க!

suvanappiriyan said...

அனானி!

//சவுதிகாரன் உமது உழைப்பை உறிஞ்சிவிட்டு உம்மிடம் பிச்சைகாசை மட்டும்தானே வீசுகிறான்.//

பிச்சைப் காசுக்காகவா இத்தனை லட்சம் இந்தியர்கள் இந்த மண்ணில் பணியில் இருக்கிறார்கள்? எனக்கென்னவோ என் சவூதி எனக்கு கை நிறையவே சம்பளம் கொடுக்கிறார்.

//ஆயிரஞ்சொன்னாலும் நீரும் சவுதிகாரனும் அங்கு சமம்மா?//

கண்டிப்பாக! என் முதலாளியும் என்னோடு பணிபுரியும் சக சவூதி நண்பர்களும் சாப்பாட்டு நேரத்தில் ஒரே தட்டில் அமர்ந்து சாப்பிடுகிறோம். இறைவனை வழிபடும் போது தோளோடு தோள் சேர்ந்து மசூதியில் ஒன்றாக தொழுகிறோம். பண்டிகை நாட்களில் சந்தோஷத்தில் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொள்கிறோம். சில நேரங்களில் அலுவலகத்தில் நான் தலைவராக(இமாமாக) நிற்க என்னைப் பின் பற்றி பல சவூதிகள் தொழுகின்றனர். முதலாளி வரும் போது மரியாதை நிமித்தம் நாங்கள் எழுந்திரித்தால் கண்டிப்பாக 'இனி எழக் கூடாது. முகமது நபி தடுத்திருக்கிறார்' என்று சொல்லும் காட்சியைப் பார்க்கிறோம். அதே நேரத்தில் நான் பிறந்த என் தாய் நாட்டையும் ஒரு கணம் நினைத்துப் பார்க்கிறேன்.

பாவம்! சொந்த நாட்டிலேயே இந்து என்றும் உங்களை சேர்த்துக் கொண்டு பிறப்பிலேயே பேதத்தைக் கற்ப்பித்து இன்று வரை கோவிலுக்குள் ஒரு சாராரை அனுமதிக்காமல் வைத்திருக்கிறார்களே! அங்கு சென்று கேட்க வேண்டும் இந்தக் கேள்வியை.

ஒரு வாரம் முன்பு தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் நுழைந்ததனால் வெறுப்புற்ற வன்னியர்கள் கிராமத்தையே காலி செய்து விட்டார்களாம். 'குமுதம் ரிப்போர்ட்டர்' படியுங்கள் உண்மை விளங்கும்.

:-(

suvanappiriyan said...

//கைபர் கணவாய் வழியா வந்து முஸ்லிம்கள்…..//

:-)

கைபர் போலன் கணவாய் வழியாக வந்தது யார் என்றும் உங்களுக்குத் தெரியவில்லை: இந்திய இஸ்லாமியர்களின் பூர்வீகமும் உங்களுக்குத் தெரியவில்லை.

உயர்சாதி இந்துக்களின் இம்சை தாங்காமல் இஸ்லாத்தைத் தழுவியவர்கள்தான் 95 சதவீத இந்திய இஸ்லாமியர்கள். வெளிநாட்டு முஸ்லிம்கள் என்று எடுத்துக் கொண்டால் கடற்கரையோரம் உள்ள முஸ்லிம்களில் 5 சதம் கூட தேறாது. விபரம் தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் அனானி!

கோவி.கண்ணன் said...

//அனைத்து தரப்பு மக்களுக்கும் கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்ற சட்டத்தை அமுல்படுத்தினால் கண்டிப்பாக நான் வரவேற்பேன். நாடும் அமைதியுறும்.//

அனைத்து தரப்பு பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள் ? அனைத்துத் தரப்பும் ஏகத்துவம் அல்ல, அல்லாவின் மீதும் அவர் சொல்லிய சட்டங்களின் மீதும் நம்பிக்கை இல்லாதவர்கள்.

Anonymous said...

//பிச்சைப் காசுக்காகவா இத்தனை லட்சம் இந்தியர்கள் இந்த மண்ணில் பணியில் இருக்கிறார்கள்? //

பிச்சைகாசு என்றால் ஜஸ்ட் காசு மட்டும். மற்ற உரிமை ஏதுமில்லை. ஆனால் அமெரிக்கா தரும் சம்பளம் சவுதியை விட அதிகம் உரிமையும் அதிகம். அந்த லட்சகணக்கான இந்தியர்களில் அமெரிக்கா வேலை வேண்ட்டாம் சவுதிக்குதான் போவேன் என எத்துனை பேர் சொல்வார்கள்?

Anonymous said...

கைபர் கணவாய் வழியா வந்து முஸ்லிம்கள்
//

அனானி கைபர் கனவாய் வழியாக இந்தியா வந்தது முஸ்லிம்கள் அல்ல, அப்படி வந்தது பிராமணர்கள். இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் ஏன் பாக்கிஸ்தானில் வாழும் முஸ்லீம்களும் கூட ஹிந்துக்களாய் இருந்து பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு காரணங்களூக்காக இஸ்லாமியர்களாய் மதம் மாறியவர்கள். இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் இந்த மண்ணின் பூர்வீக குடிகள். இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள். இஸ்லாம் மதம்தான் அரேபியாவில் இருந்து வந்த மதம். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் அரேபியாவில் இருந்து வந்தவர்கள் அல்ல. இவ்வளவு ஏன்.... சங்பரிவாரங்கள் எங்களைப் பார்த்து தாய் மதத்திற்கு திரும்புங்கள் என்று அடிக்கடி உளருகின்றார்களே!!! நாங்கள் அரேபியாவில் இருந்து வந்திருந்தால் ஏன் எங்களைப் பார்த்து தாய் மதம் திரும்புங்கள் என்று சொல்லப்போகிறார்கள்?

ஜியாவுதீன்

Anonymous said...

//ஆயிரஞ்சொன்னாலும் நீரும் சவுதிகாரனும் அங்கு சமம்மா?//

கண்டிப்பாக!//

சவுதியில் மனித உரிமைகளுக்கு இடமில்லை என்பது தெரிந்த கதை. திடீரென வெளிநாட்டு தொழிலாளியை கைது செய்து காரணமில்லமல் சிறையில் அடத்து வைப்பார்கள். பின் அவனுக்கு தெரியாமல் வழக்கு நடைபெறும். அவனை விசாரிக்க கூட மாட்டார்கள். அவனுக்கு வக்கீல் வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. வழக்கின் முடிவில் அவன் கை கால எடுத்து விடுவார்கள். பெண்கல் நிலமை இன்னும் மோசம். 12 மனி நேர தொடர் வேலை இடையில் உணவு இடைவெளி கூட இல்லாமல். எஜமானர்களால் தொடந்து கற்பழிப்பு. இதுதான் சவுதியில் நடப்பதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

கற்பழிப்புக்கு தண்டனை "அதை" வெட்டுவது நிஜமாகவே அமுல்படுத்த்ப்பட்டால் வெளிநாட்டு பெண்களை வேலைக்கு வைத்திருக்கும் எல்லா சவுதிகாரனும் "அலி"யாகத்தான் இருப்பான்!

http://www.hrw.org/mideast/saudi/labor/

ஆனால் அமெரிக்காவில் வெள்ளை மாளிகை முன்பு ஒரு இந்திய தொழிலாளி போராட முடியும்!!!

http://search.rediff.com/money/2008/apr/01work.htm

அமெரிக்காவையும் சவுதியையும் ஒப்பிடுவதாவது, நல்ல தமாஷ்!

Anonymous said...

//கைபர் போலன் கணவாய் வழியாக வந்தது யார் என்றும் உங்களுக்குத் தெரியவில்லை: //

ஓ, முகம்மது பின் காசிம், கோரி கஜினி பின்பு பாபர் இவனுங்க வேறு வழியாக இந்தியாவிற்குள் வந்தார்களா?

Anonymous said...

//சொந்த நாட்டிலேயே இந்து என்றும் உங்களை சேர்த்துக் கொண்டு பிறப்பிலேயே பேதத்தைக் கற்ப்பித்து இன்று வரை கோவிலுக்குள் ஒரு சாராரை அனுமதிக்காமல் வைத்திருக்கிறார்களே! அங்கு சென்று கேட்க வேண்டும் இந்தக் கேள்வியை.//


ஏன் இஸ்லாமில் ஜாதி இல்லையா? என்ன பெயர் வேறு அம்புட்டுதான்!

சவுதியில் ஷியாக்கள் படும்பாடு தெரியாத என்ன? இவர்களுக்கு வேலைவாய்ப்பு, நீதி, சமூகநீதி, மதசுதந்திரம் எதுவும் மறுக்கபடுகிறது.
“The Ismailis of Najran: Second-Class Saudi Citizens,” படித்து பாரும்!!!

suvanappiriyan said...

கோவிக் கண்ணன்!

//அனைத்து தரப்பு பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள் ?//

என் நாட்டு மக்களைப் பற்றி நான் கவலைப் படாமல் வேறு யார் கவலைப் பட முடியும்?

//அனைத்துத் தரப்பும் ஏகத்துவம் அல்ல,//

உபனிஷத் இந்து மதத்தின் முக்கிய வேத நூல்

'ஏகாம் எவாத்விதியாம்'
'அவன் ஒருவனே!அவனன்றி மற்றொருவர் இல்லை'
-சந்தோக்யா உபனிஷத் 6:2:1
(The principal Upanishad by S.Radha Krishnan page 447&448)
(Sacred books of the east volume1> the Upanishad part 1, page 93)

ஸ்வேதஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 6 : 9
'நசாஸ்யா காஸிக் ஜனிதா நா சதிபஹ்'
'அவனைப் பெற்றவர் யாரும் இல்லை. அவனைப் படைத்தவர் யாரும் இல்லை'
(The principal Upanishad by S. Radha krishnan page 745)
(And in sacred books of the east volume 15> The Upanishadpart 2, page 263)

ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அத்தியாயம் 4 :19
'நா தாஸ்ய ப்ரதிமா அஸ்தி'
'அவனைப் போன்று வேறு யாரும் இல்லை'
(The principal Upanishad by S.Radha Krishnan page 736-737)
(And sacred books of the east volume 15, the Upanishad part 2, page 253)

ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 4 : 20
'நா சம்த்ரஸே திஸ்தாதி ரூபம் அஸ்யாஇ நா சக்சுஸா பாஸ்யாதி காஸ் கனைனாம்'
'அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது. அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை'
(The principal Upanishad by S.Radhakrishnan page 737)
(And in sacred books of the east volume 15, The Upanishad part 2, page 253)

யஜீர் வேதா அதிகாரம் 32 :3
'நா தஸ்யா பிரதிமா அஸ்தி'
'அவனுக்கு இணை வேறு எவரும்இல்லை'

யஜீர் வேதா அதிகாரம் 32 : 3
'அவன் யாருக்கும் பிறக்கவுமில்லை.அவனே வணங்குவதற்கு தகுதியானவன்.'
(The Yajurveda by Devi Chand M.A page 377)

யஜீர்வேதா அதிகாரம் 40 :9
'அந்தாத்மா பிரவிசந்தி யே அஸ்ஸாம்புதி முபஸ்தே'
'இயற்கை பொருட்களை வணங்கியவர்கள் இருளில் நுழைந்து விட்டனர்.' அதாவது காற்று தண்ணீர் நெருப்பு போன்றவற்றை வணங்குபவர்கள் மறுமையில் நஷ்டவாளிகள் என்று கூறப்படுகிறது.

பகவத் கீதை அதிகாரம் 10 :3
'நான் இவ்வுலகில் ஜனிக்கும் முன்பே என்னைப் பற்றி அறிந்தவன் இறைவன். இந்த உலகின் ஈடு இணையற்ற அதிபதி'

மேலே எடுத்துக் காட்டிய இந்து மத வேதங்களின் வசனங்கள் இறை வேதமாகிய குர்ஆனோடு எந்த அளவு ஒத்துப் போகிறது என்பதைப் பார்ப்போம்.

சித்தர் பாடல்களில் வரும 'நட்ட கல்லும் பேசுமோ' கூட ஏகத்துவத்தைத்தான் போதிக்கிறது என்பதை நீங்களும் அறிவீர்கள். எனவே முன்பு நாம் அனைவரும் முன்பு ஏக இறைவனைத்தான் வணங்கி வந்துள்ளோம். பின்னால் வந்த கலாசாரப் புரட்சிதான் நம் முன்னோர்களை பல தெய்வ வணக்கத்துக்கு இழுத்துச் சென்று விட்டது. இந்த பல தெய்வக் கொள்கைளை இந்து மதத்தில் உள்ள சிந்தனைவாதிகள் பலரும் ஒத்துக் கொள்வதில்லை. இதனாலேயே இந்துக்களில் பலர் நாத்திகத்தின் கதவைத் தட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.

//அல்லாவின் மீதும் அவர் சொல்லிய சட்டங்களின் மீதும் நம்பிக்கை இல்லாதவர்கள்.//

அல்லாஹ் என்று சொன்னாலும் கர்த்தர் என்று சொன்னாலும் இறைவன் என்று சொன்னாலும் எல்லாம் ஒருவனைத்தான் குறிக்கும். ஒரு நாட்டில் இந்த சட்டத்தை அமுல்படுத்தி அதில் வெற்றியும் கண்டிருப்பதால் அதையும் ஒரு முறை சோதித்துப் பார்ப்பதில் என்ன தவறு? முஸ்லிம்களின் சட்டம் என்பதாலேயே ஒன்றை ஒதக்குவதே பகுத்தறிவுக்கு எதிரானதல்லவா?

Anonymous said...

If that is your opinion then why do the muslim organizations in Tamilnadu say that hanging Afzal Guru is not the mark of a great civilization?

Why do they appose hanging that bastard in the name of human rights?