Followers

Sunday, November 30, 2008

ஹேமந்த் கர்கரே - வீரத்திருமகன்!



உண்மையிலேயே தொலைக்காட்சியில் அந்தக் காட்சியைப் பார்த்தவர்களுக்கு மெய் சிலிர்த்திருக்கும். சிக்கலான நேரங்களில் தமக்கு கீழுள்ளவர்களை அனுப்பி விட்டு தலைவன் பின்னால் இருந்து இயக்குவதுதான் உலக மரபு. வழக்கத்துக்கு மாறாக இந்த வீரத் திருமகன் தானே தீவிரவாதிகளை ஒடுக்க முன்னால் சென்று சதிகாரர்களால் குண்டுக்கு பலியாக்கப்பட்டுள்ளார். அவரைக் கொன்றது தீவிரவாதிகளின் குண்டுதானா அல்லது அவரின் எதிரிகளால் இந்த சந்தர்ப்பம் நன்றாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது விசாரணையில் தெரிய வரும்.

மாலேகான் குண்டு வெடிப்பிலும் அதற்கு முன்னும் பின்னும் நடந்த குண்டு வெடிப்புகள் எல்லாவற்றிலும் சங்பரிவாரின் கை இருக்கிறது என்பதை உலகம் அறிய செய்தவர். தான் இந்துவாக இருந்தாலும் தன் நாட்டின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாமியார்களையும், ஜெனரல் புரோகிதையும் உலகின் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர். இதனால் நரேந்திர மோடி, எல்.கே.அத்வானி போன்றோரின் விமர்சனத்துக்கும் உள்ளானவர். சங் பரிவாரும் இவருக்கு குறி வைத்திருந்தது. தன் முடிவு இதனால் இப்படித்தான் இருக்கும் என்று தீர்மானித்து பல கைதுகளை தீவிரமாக செய்த இவர் ஒரு வீரத் திருமகன்தான்.

நாட்டுப் பற்று என்ன என்பதை நாம் இவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு முஸ்லிம் இந்த நாட்டுக்கு துரோகம் இழைக்கிறானா! அவனைப் பிடித்துக் கொடுப்பதில் முதல் ஆளாக முஸ்லிம்கள் இருக்க வேண்டும். அதே போல் ஒரு இந்து இந்த நாட்டை நிர் மூலமாக்க நினைக்கிறானா! அவனை பிடித்து சட்டத்தின் பிடியில் கொடுப்பதில் முதல் ஆளாக இந்துக்கள் இருக்க வேண்டும். நம்ம ஆள்தானே என்று சற்று கண்டும் காணாமல் இருந்தால் பாதிக்கப் படுவது நமது நாடும் நமது குடும்பமும் நமது உற்றார் உறவினர்களும்தான் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

கர்கரேயின் மனைவி நரேந்திர மோடி தர நினைத்து இழப்பீட்டுப் பணத்தை வாங்க மறுத்து விட்டதாக இணையங்களில் பார்த்தேன். இது உண்மையாயிருக்கும் பட்சத்தில் கர்கரேயின் மதிப்பு மேலும் கூடுகிறது. தனது மனைவியையும் தனது குடும்பத்தையும் அந்த மகான் எந்த அளவு பக்குவப்படுத்தியுள்ளார் என்று நினைக்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது. சில சில்லரைகளுக்காக நாட்டையே நிர்மூலமாக்கத் துணியும் கயவர்களுக்கு மத்தியில் இந்த மகான் நிச்சயம் என் பார்வையில் வீரத்திருமகன்தான்.

மேலும் எங்கு குண்டு வெடித்தாலும் உடன் ஏதாவது ஒரு முஜாஹிதீன் பெயரை வைத்து முஸ்லிம்களை கருவறுப்பதையே தொழிலாக கொண்டது நம் காவல்துறை. தற்போதுதான் மீடியாக்களும் வலைப்பதிவர்களும் சற்று நிதானித்து பதிவு எழுதுவதாக நினைக்கிறேன். இந்த மாற்றத்துக்கு அடிகோலிய அந்த வீரத்திருமகன் ஹேமந்த் கர்கரேயும் மேலும் உயிரிழந்த தியாகிகளின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இந்த குண்டு வெடிப்புக்கு காரணமான மனித குல விரோதிகள் அழிந்து நாசமாகட்டும் என்றும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

Tuesday, November 25, 2008

அஸ்ஸலாமு அலைக்கும்!!!

அஸ்ஸலாமு அலைக்கும்

முகமன் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி நான் ஒரு பதிவு இடலாம் என்றிருந்தேன். ஆனால் நான் என்ன சொல்ல நினைத்தேனோ அதை நண்பர் மஸ்தூக்கா அழகாக தனது பதிவில் எடுத்தாண்டுள்ளார். இனி நண்பர் மஸ்தூக்காவின் பதிவின் மீள் பதிவு:

மனிதர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது அழகிய முகமன் கூறித் தங்கள் அன்பை வெளிப்படுத்துவது இனம் நிறம் மொழி தேசம் மதம் இவை எல்லாவற்றையும் கடந்த ஓர் அழகிய பண்பாடு.

இவ்விதம் ஒருவரையொருவர் சந்திக்கும் போது கூறும் முகமன், வெறுப்பு குரோதம், பகை, உயர்வு தாழ்வு ஆகிய அனைத்தையும் அப்புறப்படுத்தி அதற்கு பதிலாக அன்பு, பாசம், சகோதரத்துவம், ஆகியவற்றை ஏற்படுத்தி நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது எனலாம்.

ஒருவர் ஏதோ ஒரு காரணத்திற்காக உங்களை வெறுக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவரிடம் சென்று அழகிய முகமன் கூறி கை கொடுத்தால் அதுவரை அவருக்கு உங்கள் மீதிருந்த வெறுப்பின் அளவு குறைந்து விடும். மென்மேலும் தொடர்ந்து இதனைக் கடைப் பிடித்தால் வெறுப்பு படிப்படியாகக் குறைந்து இறுதியில் அடியோடு அவர் மாறிப்போவதைக் காணலாம்.

ஒருவரையொருவர் சந்திக்கும் போது கூறும் இந்த அழகிய முகமன் எப்படி இருக்க வேண்டும்? அனைவருக்கும் பொதுவானதாக, அனைத்து நேரத்திலும் பயன்படுத்தக்கூடியதாக இருந்தால் தானே முகமன் கூறுவதன் நோக்கம் நிறைவேறும்.

உலகின் பலதரப்பட்ட மக்கள், பல்வேறு மதத்தினர், பல் வேறு மொழி பேசுவோர், பல்வேறு கலாச்சாரங்களைப் பின்பற்றுவோர் எப்படியெல்லாம் முகமன் கூறும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்? கொஞ்சம் அலசி ஆராய்ந்து சரியானதைத் தெர்ந்தெடுப்போமா?

ஆங்கிலேய ஆட்சி ஒரு காலத்தில் உலகின் பெரும் பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால் உலகம் முழுவதும் அம் மொழி வெகு எளிதில் பரவிற்று. பல்வேறு நாடுகளிலிருந்தும் அவர்கள் அடித்து விரட்டப்பட்டாலும், அவர்களது மொழி மட்டும் பலமாக வேரூன்றி கோலோச்சிக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது.

நாகரிகம் என்று கருதி பலரும் ஆங்கில மொழியில் முகமன் கூறுவதைக் காண்கிறோம். ஒருவரையொருவர் சந்திக்கும் போது குட்மார்னிங் சொல்கிறார்கள்.இதையே மாலைப் பொழுதுக்கு வேறு மாதிரியும் இரவுப் பொழுக்கு வேறு மாதிரியும் சொல்ல வேண்டும். பகல் பொழுதில் ஒருவரைச் சந்திக்கும்போது 12 மணிக்கு முன் ஒரு வார்த்தை, அதன் பின் வேறு வார்;த்தை என்று மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். ஒரு வரை சந்திக்கும்போது அவருக்கு வாழ்த்துச் சொல்வதா? அல்லது மணியைப் பார்த்துக் கொண்டிருப்பதா?

நமது நண்பர் அல்லது உறவினரைச் சந்திக்கிறோம் அல்லது அவர்கள் வீட்டுக்குச் செல்கிறோம். அவர்கள் குடும்பத்தில் ஒரு இறப்பு அல்லது துக்கம் நிகழ்ந்திருக்கிறது. அவருக்கு எப்படி குட்மார்னிங் சொல்ல முடியும்? அது அவருக்கு நல்ல காலைப் பொழுதல்லவே! பேட் மார்னிங் என்றல்லவா சொல்ல வேண்டும். இது பழக்கமில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும் நாகரிகமும் இல்லையே!

சிலர் ஹலோ என்கிறார்கள், அவரும் பதிலுக்கு ஹலோ என்பார். சிலர் ஹாய் என்பர்கள். பதிலுக்கு ஒரு ஹாய். அதிகம் ஆங்கிலம் படித்தவர்கள் ஹவ் டு யு டு சொல்வார்கள். பதிலுக்கும் அதே ஹவ் டு யு டு தான். இதில் அழகிய முகமன் எங்கே இருக்கிறது?

தமிழ் பேசும் கிறிஸ்தவச் சகோதரர்கள் சிலர் ஒருவரையொருவர் சந்திக்கும் போது 'ஏசுவுக்கு ஸ்தோத்திரம்' என்கிறார்கள். அதனைக்கேட்டவரும் 'ஏசுவுக்கு ஸ்தோத்திரம்' என்று மறு மொழி சொல்கிறார். ஏசுவைப் புனிதராகக் கருதும் அவர்களைப் பொருத்தவரை இந்த ஸ்தோத்திரம் சரியானதாக இருக்கலாம், அதனை இங்கு நாம் விமரிசிக்கவில்லை. ஆனால் இது எப்படி ஒருவரையொருவர் சந்திக்கும் போது கூறும் முகமன் ஆக இருக்க முடியும்?

வடநாட்டின் சில பகுதிகளில் ஒருவரையொருவர் சந்திக்கும் போது 'ராம் ராம்' என்பர். அதனைக் கேட்பவரும் அதற்கு மறுமொழியாக 'ராம் ராம்' என்பார். அவர்கள் கடவுளாகக் கருதி வணங்கும் இராமரை நினைவு படுத்திக் கொள்கின்றனர்.ஆனால் சந்திப்பவருக்கு உரிய வாழ்த்து இதில் என்ன இருக்கிறது?

இந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட இந்துச் சகோதரர்கள் பலர் 'நமஸ்தே' என்றோ 'நமஸ்கார்' என்றோ கூறுகின்றனர். மலையாளம் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழி பேசும் தென்னாட்டு இந்துச் சகோதரர்கள் 'நமஸ்காரம்' என்று கூறுவர். தமிழர்கள் பலரும் இதையொட்டி 'வணக்கம்' என்கின்றனர். இவை அனைத்தும் 'நான் உங்களை வணங்குகிறேன்' என்ற பொருளையே தருபவை.

யாரை யார் வணங்குவது? அனைவருமே அவர் எம்மதத்தவராயினும் கடவுளை மட்டும் அல்லவா வணங்க வேண்டும்? மனிதரை மனிதர் ஏன் வணங்க வேண்டும்? 'வணங்குதல் என்னும் பொருளில் சொல்வதில்லை முகமன் கூறுமுகமாகத்தான் சொல்கிறோம்' என்று சிலர் வாதிடலாம். அப்படியானால் 'வணக்கம்' என்னும் சொல்லுக்கு வேறு என்ன தான் பொருள்?
முகமன் கூறுமுகாக அவர்கள் சொல்லும் 'வணக்கம்' கூட பெரியவர் சிறியவருக்கோ, ஆசிரியர் மாணவருக்கோ, உயர்ந்தவர் தாழ்ந்தவருக்கோ சொல்வதில்லை. (உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பது எந்த முறையிலும் இருக்கலாம்)

இவை எல்லாவற்றையும் சற்று ஒதுக்கி வைத்து விட்டு இஸ்லாம் சொல்லும் அழகிய முகமன் எப்படி என்று பார்ப்போமா?

ஒருவரையொருவர் சந்திக்கும் போது 'அஸ்ஸலாமு அலைக்கும்'(இறைவின் சாந்தி உங்கள் மீது உண்டாவதாக!) என்று ஒருவர் சொல்ல அதனைக் கேட்டவர் 'வ அலைக்குமுஸ் ஸலாம்' (அவ்வாறே உங்கள் மீதும் இறைவனின் சாந்தி உண்டாவதாக!)

ஆகா! என்ன அற்புதமான வார்த்தைகள்! எத்துனைச் சிறந்த முகமன்! உயர்ந்தவர் தாழ்ந்தவர், பெரியவர் சிறியவர், ஆண்கள் பெண்கள், பெற்றோர் குழந்தைகள், ஆசிரியர் மாணவர், முதலாளி தொழிலாளி, அனைவரும் சொல்லலாம் அனைவருக்கும் சொல்லலாம். மகிழ்ச்சி, துக்கம், கோபம், குதூகலம் எந்த நேரத்திலும் சொல்லலாம். எந்த நேரத்திலும் சொல்லாம், யாரும் சொல்லலாம். யாருக்கும் சொல்லலாம். இனம் புரியாத பேரின்பம் அடைவீர்கள். எங்கே! ஒரு முறை சொல்லுங்கள் பார்ப்போம்.

அஸ்ஸலாமு அலைக்கும் (இறைவனின் சாந்தி உங்கள் மீது உண்டாவதாக!)

Saturday, November 22, 2008

மைக்கேல் ஜாக்ஸன் மீகாயிலாக ஏன் மாறினார்?

மைக்கேல் ஜாக்ஸன் மீகாயிலாக ஏன் மாறினார்?

நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான மைக்கேல் ஜாக்ஸன் இன்று முஸ்லிமாக தனது வாழ்க்கையை மாற்றிக் கொண்டு இன்று மீகாயிலாக நம் முன் வலம் வருகிறார். இவரின் சகோதரர் ஜெராமிக் ஜாக்ஸன் (அப்துல் அஜீஸ்) முன்பு ஒரு பேட்டியில் 'என் சகோதரனையும் இஸ்லாமிய வாழ்க்கை நெறியை ஏற்றுக் கொள்ளச் சொல்வேன்' என்று கூறியிருந்தார். அவர் சொன்னது போல் தன் சகோதரனுக்கு இஸ்லாமிய வாழ்க்கை நெறியை அறிவுருத்தி இன்று இஸ்லாமிய உலகினுள் பிரவேசிக்க வைத்துள்ளார்.

தான் பின்பற்றும், தன் தாய் தந்தையர் பின் பற்றும் ஒரு கொள்கையை விட்டு இஸ்லாத்துக்கு செல்வது என்பது ஏதோ 'எடுத்தேன்: கவிழ்த்தேன்' என்பது போன்ற ஒரு செயலல்ல. அரசின் எதிர்ப்பு: குடும்பத்தின் எதிர்ப்பு: நண்பர்களின் ஏளனம்: அனைத்தையும் தாங்கிக் கொண்டு உலகம் முழுவதும் பரிச்சயமான 'மைக்கேல் ஜாக்ஸன்' என்ற பெயரையும் நீக்கி விட்டு புதுப் பெயரை சூட்டிக் கொள்கிறார் என்றால் அவரின் மனமாற்றத்தை நாம் லேசாக எடை போட்டுவிட முடியாது.

தான் பிறந்து வளர்ந்த அமெரிக்காவைத் துறந்து தற்போது பஹ்ரைனில் குடியேறத் திட்டமிட்டுள்ளாராம். 'கோடிகளால் அமைதி கிட்டாது. இன்று எனக்கு தேவை மன அமைதி.அது இஸ்லாத்தில்தான் எனக்கு கிடைக்கும்' என்று சொல்வது போல் உள்ளது இவரின் மனமாற்றம்.

London based Arabic "al-Mujallah" has recently published an interview of Jermaine Jackson for the first time since he became Muslim. In this interview, he has expressed his passionate love for Islam. Let us see how he responded to various questions: -

What were your feelings after you proclaimed that you were a Muslim?
Jaramike Jackson:
Having embraced Islam, I felt as if I were born again. I found in Islam the answers to those queries which I had failed to find in Christianity. Particularly, it was only Islam that provided satisfactory answer to the question relating to the birth of Christ. For the first time I was convinced about the religion itself. I pray my family members might appreciate these facts.

What happened when you got back to the US after embracing Islam?
Jaramike Jackson:
When I returned to USA, American media orchestrated heinous propaganda against Islam and the Muslims. The gossips were let loose on me which really disturbed my peace of mind. The Hollywood was hell-bent upon maligning the Muslims. They were being projected as terrorists. There are many things where there is consensus between Christianity and Islam, and Quran presents Holy Christ as a virtuous Prophet. Then, I wondered, why Christian America levels baseless allegations against Muslims?

What was the reaction of your brother Michael Jackson?
Jaramike Jackson:
On my way back to America, I brought a number of books from Saudi Arabia. Michael Jackson asked me himself for some of these books for study. Before this, his opinion was influenced by the propaganda of American media against Islam and the Muslims. He was not inimical towards Islam, but he was not favorably disposed towards Muslims either. But after reading these books, he would keep mum and not say anything against Muslims. I think perhaps this is the impact of the study of Islam that he diverted his business interests towards Muslim traders. Now, he has equal shares with the Saudi billionaire prince Waleed bin Talal, in his multi-national company.
It was said earlier that Michael Jackson was against Muslims, then there are rumors that he had become Muslim. What is the real story?
I testify this fact, at least there is nothing in my knowledge that Michael Jackson ever said anything derogatory against Muslims. His songs, too, give message of love for others. We have learnt from our parents to love others. Only those who have their own ax to grind hurl allegations on him. When there can be a nasty uproar against me when I became Muslim, why can it not be so against Michael Jackson. But, so far, media has not subjected him to scathing criticism, although he is threatened for his getting somewhat closer to Islam. But who knows what would it look like when Michael Jackson embraces Islam.

Wednesday, November 19, 2008

ஹாஜிகளே! வருக!! வருக!!!




ஹாஜிகளே! வருக!! வருக!!!

25000 ஹாஜிகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா கண்டங்களில் இருந்து இந்த வருடம் ஹஜ்ஜீக் கடமையை நிறைவேற்ற சவூதி அரேபியா வருகிறார்கள். மேற்கண்ட நாட்டு ஹாஜிகளின் பொறுப்பாளர் அலாவுதீன் இத் தகவலைத் தெரிவித்துள்ளார். இவர்களை கவனிக்கும் பொருட்டு 24 மணி நேரமும் மூன்று ஷிஃப்ட்களாக ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அலாவுதீன் கூறுகிறார்.

மேலும் சவுதியில் பணிபுரிவோர் தக்க அனுமதி இல்லாமல் ஹஜ்ஜீ செய்ய வந்தால் காவலர்களால் பிடிக்கப் பட்டு தண்டனையும் வழங்கப்படும் என்றும் அவர்களின் நாட்டுக்கும் திரும்ப அனுப்பப் படுவார்கள் என்றும் சவூதி அரசு எச்சரித்துள்ளது. எனவே நிர்வாக வசதிக்காக சவூதி அரசு எடுக்கும் இந்நடவடிக்கைக்கு நாமும் ஒத்துழைப்பு கொடுத்து நமது நண்பர்களுக்கும் அறிவுறுத்துவோம்.

ஹஜ்ஜீக் கடமை என்பது கடன்கள் இல்லாமல் உடல் ஆரோக்கியமும் இருந்து மெக்கா செல்வதற்கான முழு ஆவணங்களும் இருந்தால்தான் கடமையாகும். ஆர்வக் கோளாரில் சிலர் வெளியாட்களின் மூலமாக பயண ஏற்ப்பாட்டை செய்து கொண்டு பல சிரமங்களுக்கும் ஆளாகிறார்கள். இந்த வருடம் சவூதி அரசும் மிகவும் கண்டிப்புடன் இருப்பதால் முறையான அனுமதி கிடைக்காதவர்கள் பொறுமையுடன் இருந்து அடுத்த வருடம் முயற்ச்சி செய்வார்களாக!

இறைவன் நமது உள்ளத்தைத்தான் பார்க்கிறான்.

'ஹஜ்ஜுக்குத் தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்: திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் இறை அச்சமே மிகச் சிறந்தது.'

-குர்ஆன் 2:197





Tuesday, November 18, 2008

பெற்றோரையே கொன்ற பிரியங்கா!

பெற்றோரையே கொன்ற பிரியங்கா!

மீரட் நகரில் மிகவும் நாகரிமான குடும்பத்தில் பிறந்த இள நங்கை பிரியங்கா: 2003-ல் பாலிடெக்னிக் முடித்துள்ளார். 2005-ல் மிஸ் மீரட் பட்டத்தையும் வென்றுள்ளார். சாதுவான முக தோற்றம் கொண்ட இந்த பெண்ணின் உள்ளும் கொலை வெறி இருந்துள்ளது பலராலும் நம்ப முடியவில்லை.

தன்னை வளர்த்து ஆளாக்கிய தனது பெற்றோர்களை தனது தோழி அஞ்சுவோடு சேர்ந்து தன் கைகளாலேயே கொன்றுள்ளார் பிரியங்கா! 'கொலையும் செய்வாள் பத்தினி' - என்பது இதுதானோ!

தன் தாய் தன்னை மிகவும் கண்டித்தார். தந்தை தன்னை மற்ற குழந்தைகளைப்போல் நடத்தவில்லை: அக்காள் புருஷன் தன்னோடு தவறாக நடக்க முயற்ச்சித்தார்: என்னை கண்டிக்கும் யாரையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது.
-இவை எல்லாம் தன் பெற்றோர்களை கொன்றதற்க்கான காரணமாக பிரியங்கா மீடியாக்களிடம் சொன்னவை. ஆனால் உண்மையான காரணம் நீதிமன்ற விசாரணையில் வெளி வரலாம்.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது 'பெற்றோர்கள் தன் குழந்தைகளை கண்டிப்பது குற்றமா?' அப்படியே கண்டித்தாலும் தன் பெற்றோர்களையே கொல்லும் அளவுக்கு செல்லும் இளம் தலைமுறையின் விபரீதப் போக்குக்கு யார் காரணம்? பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் அன்பை பரிமாறும் நேரம் குறைவதுதான் இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணமா?- என்று கேள்வி நீண்டு கொண்டே போகிறது.

Wednesday, November 12, 2008

இந்துப் பயங்கரவாதம்

இந்துப் பயங்கரவாதம்

பொய் பேசுகிறர்களா, உண்மையைக் கூறுகிறார்களா என்றறியும் சோதனை நார்கோ அனலைசிஸ் எனப்படும். மாலேகான் குண்டுவெடிப்புச் சதியில் கைது செய்யப்பட்ட இருவருக்கு இச்சோதனை பெங்களூரில் நடத்தப்பட்டது. மாலேகான் குண்டுவெடிப்பு பற்றியும் கூறினார்கள்; எதிர்காலத்தில் எங்கெங்கே குண்டு வைக்கச் சதித் திட்டம் தீட்டியிருக்கிறார்கள் என்பதையும் கூறிவிட்டார்கள். போபால், ஜபல்பூர் ஆகிய இடங்களில் குண்டு வைக்கப் போடப்பட்ட திட்டம்பற்றியும் கக்கி விட்டனர். பணம் தந்தது யார், ஆர்டிஎக்ஸ் தந்ததும், ஆயுதங்களைத் தந்ததும் யார், எந்தெந்த வகையில் உதவினார்கள் என்பதையெல்லாமே தெரிவித்து விட்டனர்.

மாலேகான் குண்டுவெடிப்புச் சதியில் சாமியாரிணி பிரக்யாசிங் தாக்கூர் மற்றும் அவருடைய கூட்டாளிகள் இரண்டு பேர் ஈடுபட்டு முசுலிம்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்த சதிச் செயல் மக்களுக்கு இப்போதுதான் தெரிய வருகிறது. என்றாலும், இந்துத்துவ பயங்கரவாதம் 2006 முதலே கண்காணிக்கப்பட்டு வருகிற சேதிதான்.
6.4.2006 இல் நடந்த நான்டெட் குண்டுவெடிப்பு தொடர் பாகக் கைது செய்யப்பட்ட ராகுல் மனோகர் பாண்டே, மும்பை பயங்கரவாதத் தடுப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் என்கிற பானுராவ் வித்தல்ராவ் சவுத்ரி ஆகியோரின் கைதுகள் தீவிர வலதுசாரி (பிற்போக்கு)ச் சக்திகளின் தொடர்பை உறுதிப்படுத்துகின்றன.

மனோகர் பான்டேவுக்கும், பிரக்யாசிங் தாக்கூருக்கும் பயங்கரவாதப் பயிற்சி மேடையாக, புனே நகரம் விளங்குகிறது.
இவர்கள் இரண்டு பேரிடமும் நடத்தப்பட்ட நார்கோ அனலைசிஸ் (பொய் அறியும் சோதனை) முடிவுகளின்படி, இவர்கள் இருவருக்கும் இச்சதியில் உள்ள தொடர்புகளை இவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். 2003 முதல் 2006 வரை இசுலாமியர்களின் குடியிருப்புப் பகுதிகளில் மகாராட் டிரா மாநிலத்தில் நடத்தப் பெற்ற சதிச் செயல்களில் இரு வருக்கும் உள்ள தொடர்புகளை இவர்கள் ஒத்துக்கொண்டி ருக்கிறார்கள். மனோகர் பான்டே சதியில் ஈடுபட்டதை ஒத்துக்கொண்டார் என்று நார்கோ அனலைசிஸ் அறிக்கை கூறுகிறது.

பொய் அறியும் சோதனையின்போது, நான்டெட் நகரத்து சங் பரிவாரைச் சேர்ந்த லட்சுமண் ராஜ்கொண்டவார் என்பாரின் வீட்டில் நடந்த வெடிவிபத்து பற்றிய விவரங்களை எல்லாம் சொல்லிவிட்டார். இந்த வெடிவிபத்தில் நரேஷ் ராஜ் கொண்டவார் மற்றும் ஹிமான்சு பான்சே ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர், நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். பட்டாசு தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்து என்று காவல்துறையினர் முதலில் நினைத்தனர். பின்னர்தான், வெடிகுண்டு தயாரிக்கும்போது ஏற்பட்டது என்பதை அவர்கள் அறிந்துகொண்டனர். தாங்கள் சக்தி வாய்ந்த வெடிப் பொருள்களைக் கையாள்வதில் பயிற்சி பெற்றவர்கள் என்பதையும் பாண்டே கூறிவிட்டார்.
விபத்தில் இறந்துபோன ஹிமான்சு பான்சே இச்சதிக் குழுவின் தலைவன் என்றும், வெடிகுண்டு தயாரிக்கும் முறை யைக் கற்றுக் கொடுத்ததே இந்த ஆள்தான் என்றும் கூறியதாக ஆய்வு அறிக்கையில் உள்ளது. ஜல்னா, புர்னா, பர்பானி பகுதிகள் உள்ளிட்ட மரத்வாடா பகுதியில் நடந்த எல்லா குண்டுவெடிப்புச் சதிச் செயல்களையும் செய்தவர்களே இந்த ஹிமான்சுவும், பான்டேயும்தான். புனே நகரிலிருந்து வெடிப் பொருள்களை ஹிமான்சு ஏற்றி வந்து, உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் பதுக்கி வைத்திருக்கின்றனர் எனும் விவரமும் வெளி வந்துள்ளது.

உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவும் தொடர்பும் பற்றியும் பான்டே கூறிவிட்டார். ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகள் ஹிமான்சுக்கு எல்லா உதவிகளையும் செய்தன. மிதுன் சக்ரவர்த்தி என்பவன் புனேயிலிருந்து வந்து வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சியை அளித்ததாகவும் பான்டே தெரிவித்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு மராட்டியர்களின் ஆண்டுப் பிறப்பான குடிபாதவ் நாளில்தான் நான்டெட் குண்டு வெடிப்புச் சதிக் கான திட்டமே தீட்டப்பட்ட தகவலையும் பான்டே கூறி விட்டார். ஈத் நாளன்று மசூதியில் வைக்கத் திட்டம் போடப் பட்டிருந்த வெடிகுண்டுதான் வீட்டில் வெடித்துவிட்டது.

பான்டே தெரிவித்த செய்திகளிலேயே முக்கியமானதும், அதிர்ச்சியானதும் என்னவென்றால், இவர்களின் இருப்பிடத்துக்கு வந்து சொற்பொழிவு நிகழ்த்திவிட்டுப் போனவர் விசுவ இந்துப் பரிசத்தின் தலைவர் பிரவீன் தொகாடியா.

பர்பானி, நான்டெட் சதிச் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இவர் நார்கோ அனலைசிஸ் ஆய்வுக்காக அழைத்து வரப்பட்டார்.
பானுராவ் வித்தல் ராவ் சவுத்ரி (சஞ்சய்) தம் வாக்கு மூலத்தில் 2003 ஆம் ஆண்டிலேயே தானும் தன்னுடன் நான்கு பேரும் சேர்ந்து வெடிகுண்டு தயாரிக்கப் பயிற்சி பெற்றதாகத் தெரிவித்தனர்.
ஹிமான்சு பான்சே, மரோட்டி வாக், ராகுல் மனோகர் பான்டே மற்றும் யோகேஷ் ரவீந்திர விடுல்கர் ஆகியோரும் இவருடன் பயிற்சி பெற்றவர்கள் என்கிற விவரத்தையும் கூறியுள்ளார். புனேவில் சின்ககாட் பகுதியில் உள்ள ஆகாஷ் விடுதியில் இவர்களுக்கு வெடிகுண்டுத் தயாரிப்புப் பயிற்சி தரப்பட்டதாம்.

அவரங்காபாத்தில் உள்ள மசூதியில் மறுநாள் வைத்து வெடிப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுதான் ராஜ் கொண்டவாரின் வீட்டில் வெடித்துவிட்டது என்பதை இவர் ஒத்துக்கொண்டுள்ளார்.
நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றதற்குக் காரணமான வெடிகுண்டுகளை வைத்த அபுசலீம் மற்றும் தாவூத் இப்ராகிம் ஆகிய இருவரையும் பழி தீர்ப்பதற்காக ஹிமான்சு திட்டமிட்டார் எனவும் சஞ்சய் கூறினார்.

- நவீன் அம்மேம்பலா, பெங்களூர்,

"தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்", 11.11.2008

Tuesday, November 11, 2008

குர்ஆன் பற்றி சில அறிஞர்களின் கருத்துக்கள்!

குர்ஆன் பற்றி சில அறிஞர்களின் கருத்துக்கள்!

அறிஞர் கொய்தே கூறுகிறார்:

குர்ஆனை எத்தனை முறை பார்த்தாலும் அது முதலில் அந்நியமாகத் தெரிகிறது. பிறகு புதுமையாகத் தெரிகிறது. அடுத்து ஒரு தென்றல் போல் மனதைக் கவர்ந்து செல்கிறது. மதிப்பச்சத்தை ஏற்படுத்துகிறது- அதனுடைய நடையழகு அதனுடைய கருத்துக்கு ஏற்ப கம்பீரமாகவும் வலுவானதாகவும் அச்சத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் அதன் மீது மதிப்புக் கொள்ளச் செய்வதாகவும் அமைந்துள்ளது- இந்த நூல் இவ்வாறு காலங்காலமாக மக்கள் மீது தன் ஆதிக்கத்தை செலுத்தக் கூடியதாக இருக்கிறது.

-Quoted in T.P. Hughes Dictionary Of Islam, Page – 526.

ஜி.மார்கோலத் கூறுகிறார்:

உலகத்திலுள்ள பெரும் மத கிரந்தங்களில் குர்ஆன் திண்ணமாக முக்கிய இடத்தை வகிக்கிறது. உலகில் புரட்சி சகாப்தத்தைத் தோற்றுவித்த இந்த கிரந்தங்களில் அது இளைய வயது கொண்டதாக இருந்த போதிலும் மக்களின் உள்ளங்களை மாற்றுவதிலும் பெரும் பெரும் மக்கள் கூட்டத்தையே வியக்கத்தக்க முறையில் மாற்றி அமைப்பதிலும் அதற்கு இணையான வேறு கிரந்தம் இல்லை. அது முற்றிலும் புதிய சிந்தனையை மக்கள் உள்ளத்தில் தோற்றுவிக்கிறது. அது முதலில் அரேபிய பாலைவனத்தில் சிதறிக் கிடந்த மக்களை இலட்சியத்தைப் பேணும் குழுவாக ஒன்றிணைத்தது. அவர்களை மக்களில் சிறந்தவர்களாக மாற்றியது. ஐரோப்பிய மக்களும் கிழக்கிந்திய மக்களும் இன்றைக்கும் மதிக்கும் அளவுக்கு சமய அரசியல் அமைப்புகளை அது தோற்றுவித்துள்ளது.

-Introduction to J.M.Rodwells The Koran, New york, Every mans library 1977, page 711

ஆர்தர் ஜே.ஆர்.பெர்ரி கூறுகிறார்:

குர்ஆனுடைய கருத்துக்களை வெளிக் கொணர்வதில் முன்னோர்கள் செய்த முயற்ச்சியை விட இன்னும் சிறப்பாக செய்ய நாடினேன். ஆனால் அரபி மொழியில் குர்ஆனில் இருக்கும் அழகையும் ஆழத்தையும் நேர்த்தியையும் மிகக் குறைவாகவே என்னால் கொண்டு வர முடிந்தது. மிகத் துல்லியமாக பின்னிப் பிணைந்து நிற்கும் ஓசைகளை நான் ஆழமாக கவனித்தேன். குர்ஆனில் இருக்கும் கருத்தழகுக்கு சற்றும் குறைந்ததல்ல அதன் இசை நயம் என்பதை உணர்ந்தேன். உலக இலக்கியங்களிலேயே குர்ஆனை இவை இணையற்ற ஒன்றாக விளங்கச் செய்கிறது. குர்ஆனின் இந்த விநோதமான அம்சம் அதற்கேயுரிய தனிப் பாணியாகும். பிறரால் முற்றிலும் கையாள முடியாத பாணியாக அது இருக்கிறது.

'அதனுடைய சொற்களின் ஓசைநயமே மக்களின் கண்களை கசியச் செய்கிறது. உள்ளங்களைப் பரவசமடையச் செய்கிறது.' - என்று பிக்தால் தன் மொழி பெயர்ப்பில் சொன்ன கருத்து எந்த வகையிலும் மிகையானதல்ல.

-The Koran Interpreted, London Oxford University Press, 1964,Page 8.

'நமது அடியாரான முஹம்மதுக்கு நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு அதில் நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஒரு அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்: இறைவனைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்'

குர்ஆன் 2:23

Wednesday, November 05, 2008

பராக் ஒபாமா - என் பார்வையில்



பராக் ஒபாமா - என் பார்வையில்

எல்லோரும் எதிர்பார்த்தபடி பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாகி விட்டார். ஆப்ரிக்க நாட்டைச் சார்ந்த ஒருவர் அதிபராக முதன் முறையாக வெள்ளை மாளிகையை தொடுவது பலராலும் நம்ப முடியவில்லை. பல நீக்ரோ இனத்தவர் ஆனந்தத்தில் கண்ணீர் விட்டு அழுத காட்சி மெய் சிலிர்க்க வைத்தது. கென்ய மக்கள் குழுவினராக ஆனந்த நடனமாடியது கண் கொள்ளாக் காட்சி.

நம் இந்தியாவில் எப்படி ஒரு இனம் இன்று வரை பலராலும் ஒடுக்கப்பட்டு வருகிறதோ அதே போன்ற நிலைதான் அமெரிக்காவிலும். இடமும் பெயரும் மட்டுமே மாற்றம். ஒபாமாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்றவர்களை நிற வெறி பிடித்த வெள்ளையர்கள் அவமானப்படுத்திய நிகழ்ச்சி பல இடங்களிலும் நிகழ்ந்துள்ளது. அரசாள்வதற்கு மன்னருக்கு மகனாக பிறக்க வேண்டும்: மக்களாட்சிக்கு தலைவராக வர இன்ன இனத்தில்தான் பிறந்திருக்க வேண்டும் என்ற கோட்பாடுகளையெல்லாம் தகர்த்து இன்று அமோக வெற்றி பெற்றுள்ளார் ஒபாமா.

அதிலும் அமெரிக்காவில் கணிசமான மக்கள் தொகையை கொண்ட யூதர்களும் ஒபாமாவை ஆதரித்ததுதான் பலருக்கும் ஆச்சரியம். இஸ்லாமிய பாரம்பரியத்தில் வந்தவர்: மதரஸாவில் கல்வி பயின்றவர்: இஸ்லாமிய தீவிரவாதி: முதலாளித்துவத்தை எதிர்ப்பவர்: என்றெல்லாம் ஒபாமாவுக்கு எதிரான பிரச்சாரம். வாக்குச் சீட்டில் ஒபாமா என்பதற்கு பதில் ஒஸாமா என்று அச்சடித்த ஒரு சிலரின் குள்ள நரித்தனம். தேர்தலுக்கு முன் 'அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமாவை வைப்பதும், ஒஸாமாவை வைப்பதும் ஒன்றுதான்' என்று கூறிய ஆஸ்திரேலிய பிரதமரின் திமிர்த்தனம். அமெரிக்க தேவாலயங்கள் முழுவதும் பாதிரிகளால் ஒஸாமாவின் இஸ்லாமிய பின்னணியை வைத்து எதிர்ப் பிரச்சாரம். இதை எல்லாம் முறியடித்து 'மாற்றம் தேவை' என்ற ஒரே முழக்கத்துடன் இன்று அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா அமரப் போகிறார்.

பொருளாதார பின்னடைவு, ஆப்கன் பிரச்னை, ஈராக் பிரச்னை, பாலஸ்தீன பிரச்னை, என்று பல சிக்கல்களை ஜார்ஜ் புஷ் என்ற கிறுக்கனால் மேலும் சிக்கலாக்கப் பட்டுள்ளது. இந்த பிரச்னைகளை எல்லாம் எப்படி சமாளிக்கிறார் என்பதில்தான் ஒபாமாவின் உண்மையான வெற்றி அமைந்துள்ளது.

நிறவெறி, மொழிவெறி, மதவெறி அனைத்தையும் கடந்து சிறந்த உலக தலைவராக மிளிருகிறாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Sunday, November 02, 2008

வைகோவின் வடிகட்டிய தேசத் துரோகம்!!

விடுதலைப் புலிகளைக் கடுமையாக விமர்சித்து எழுதிய ஹிந்து நாளிதழின் கோவை - ஈரோடு அலுவலகங்கள் தாக்கப்பட்டன. ஆனால் இந்தத் தாக்குதலால் தமிழக முதல்வர் தொடங்கி, எந்தவொரு அரசியல்வாதியும் கண்டனம் செய்யவில்லை.

கருத்துச் சுதந்திரத்தக்கும் பத்திரிகை சுதந்திரத்துக்கம் நேர்ந்துள்ள அச்சுறுத்தல் இது என்பது ஓர் அபாயம். விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களுடைய வன்முறையையும் செயல்பாடுகளையும் ந்த மௌன அரசியல்வாதிகள் அங்கீகரிக்கிறார்கள் என்பது மற்றொரு மிகப் பெரிய அபாயம். இந்த மௌன ஆதரவை வைகோ நன்றாக சாதகமாக்கிக் கொண்டிருக்கிறார். தமது பொதுக்கூட்டப் பேச்சில் (அக்டோபர் 21 அன்று) புலிகளுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்திருக்கிறார். இலங்கை துண்டாடப்படாமல் காக்க இந்தியா எந்த விதத்தில் உதவினாலும் சரி, இந்தியாவே துண்டாடப்படும் அபாயம் ஏற்படும் என்று பிரதமரை எச்சரித்திருக்கிறார்! தமிழ் ஈழம் உருவாக உதவுவதற்கு, தாமே படை திரட்டி, தலைமை தாங்கி நடத்திச் செல்ல முடியும் என்றும் அவர் சவால் விட்டிருப்பது, பகிரங்க புலிகள் ஆதரவுப் பேச்சு மட்டுமல்ல; வடிகட்டிய தேசத் துரோகமும்கூட. ஆனால், இதற்கும் தமிழக முதல்வர் மௌனம் காத்து மறைமுக ஆதரவு தெரிவிப்பார் என்று நம்பலாம்!

தமிழக அரசியல்வாதிகள் நினைப்பதுபோல், பிரபாகரன் தமிழ் ஈழத்தைத் தனி நாடாகப் பெற்று, ஆட்சி புரிய அனுமதிக்கப்பட்டால் விடுதலைப்புலிகளின் அடுத்த குறி தமிழகமாக இராது என்பது என்ன நிச்சயம்? அப்போது இங்கே நிலவக்கூடிய கொடுங்கோன்மையில் யாரும் எதையும் மேடைபோட்டுப் பேசக்கூட முடியாது! புலி ஆதரவுப் புயலில் நிலை தடுமாறும் தமிழக அரசியல்வாதிகள் மத்தியில், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சி.ஞானசேகரன் (காங்கிரஸ்) மட்டுமே தெளிவாகச் சிந்தித்தது. தைரியமாகப் பேசியுள்ளார். ராஜீவ்காந்தி கொலையாளிகளை ஆதரிக்கும் வெறிப் போக்கைத் துணிந்து கண்டனம் செய்துள்ளார். தடை செய்யப்பட்ட இயக்கத்தையும் அதன் தலைவரையும் பகிரங்கமாக ஆதரித்துப் பேசுவோரை, தமிழக முதல்வர் கைது செய்யாதது ஏன்? என்று நியாயம் கேட்டிருக்கிறார். தமிழ் உணர்வு என்பது மொழி, பண்பாடு, உரிமைகள் காப்பதில் இருக்க வேண்டியதுதான். ஆனால் அந்த உணர்வு வெறியாக திசை மாறி நாட்டைத் துண்டாட அனுமதித்தால், தமிழ்ப் பண்பாடும் தமிழ் உணர்வும் தழைக்காது. விரைவில் அழிந்துதான் போகும். மும்பையில் ராஜ்தாக்கரே விசிறி விட்டிருக்கும் மராத்தியப் பிரிவினை உணர்வும் இத்தகைய விபத்தையே விளைவிக்கும்.
வரலாற்று ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் பல்வேறு அழகான இழைகளைக் கொண்டு பின்னப்பட்ட நாடு இந்தியா. அதில் ஒவ்வோர் இழைக்கும் தனித் தன்மையும் குணமும் உண்டு என்பதற்காக, இழையிழையாகப் பிரிக்க ஆரம்பித்தால் நாடும் துவண்டு போகும். அதன் மாநிலங்களும் தனித் தனி இழைகளாகி வலுவிழந்து சுருண்டு தொங்கும்.இந்த விபரீதம் நோக்கிச் செல்லவும் மக்களைத் தூண்டவும் முற்படும் சுயநல அரசியல்வாதிகள் ராஜ் தாக்கரேயானாலும் சரி. வைகோவானாலும் சரி, கைதாகி தண்டனை பெற வேண்டும். மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டும்.

-கல்கி (02.11.08)

- - - - - - - - - - - - - - - -