Followers

Wednesday, September 23, 2009

பவுல்(பால்) எவ்வாறு கிறித்துவை கடவுளாக்கினார்?-2

பவுல்(பால்) எவ்வாறு கிறித்துவை கடவுளாக்கினார்?-2

ஏசுவுக்குப் பின்னர் அவருடன் வாழ்ந்த சிஷ்யர்கள்(அப்போஸ்தலர்கள்) தங்களை ஒரு சிறு கூட்டமாக அமைத்துக் கொண்டு ஏசு அவர்கள் கொண்டு வந்த போதனையைப் பரப்பலாயினர். யூதர்களுடைய பழக்க வழக்கங்களையே அந்த அப்போஸ்தலர்களும் கடைபிடித்து வந்தனர். யூத கோவில்களில் நடைபெறும் வணக்க முறைகளையே இவர்களும் பின்பற்றி வந்தனர்.

அப்போஸ்தலர்களின் பிரச்சாரங்களின் விளைவாக பலரும் கிறித்தவ மார்க்கத்தின்பால் ஈர்க்கப்பட்டனர். ஒரு மார்க்கத்தையும் சேர்ந்திராது காட்டுமிராண்டி வாழ்க்கை நடத்தி வந்த பாமர மக்களும் ஏசுவின் போதனையின் பக்கம் திரும்பலாயினர். இப்படிப் புதிதாக கிறித்தவ மார்க்கத்தில் சேர்ந்தவர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டன. இந்த சலுகை பவுல் மற்றும் அவரைச் சார்ந்தவர்களால் வழங்கப்பட்டது. புதிதாக கிறித்தவ மார்க்கத்தில் இணைபவர்கள் விருத்த சேதனம்(சுன்னத்) செய்து கொள்ளத் தேவையில்லை என்றும், வணக்க முறைகளில் சில விதிகள் அவர்களுக்காகத் தளர்த்தப்படலாம் என்றும் பவுல் கருதினார். யூதர்களைப் போன்று பல அனுஷ்டானங்களை அப்போஸ்தலர்கள் கடைபிடித்து வந்தனர். ஆனால் புதிதாக கிறித்தவ மார்க்கத்திற்கு வந்தவர்கள் இவற்றை எல்லாம் கடை பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என பவுல் வாதிக்கலானார்.

ஆக இப்படியாக ஈஸா நபி(ஏசு) மரித்து ஒரு நூற்றாண்டுகளுக்குள்ளாக இரண்டு கோஷ்டிகள் கிறித்தவ மார்க்கத்தில் தோன்றி அலை மோதின. ஏசு நாதரோடு கூடவே இருந்த அப்போஸ்தலர்கள் காட்டிய வழியில் செல்லும் கூட்டம் ஒன்று. இவர்கள் பெரும்பாலும் யூத பழக்க வழக்கங்களையே அனுஷ்டித்து வந்தனர். மற்றொன்று பவுல்(பால்) தலைமையில் இயங்கிய கூட்டம். யூத பழக்க வழக்கங்களை தொடர்ந்து பின்பற்ற வேண்டியதில்லை என்றும் புதிதாக மார்க்கத்தில் வருகின்றவர்கள் விஷயத்தில் அதிக கண்டிப்பு அவசியமில்லை என்றும் இவர்கள் கருதினார்கள். விருத்த சேதனம், ஓய்வு நாள், யூத வணக்க முறை, பலி(குர்பானி), பன்றி இறைச்சியை விலக்குதல் ஆகிய பிரச்னைகள் குறித்து இரு கூட்டத்தினருக்குமிடையே பலத்த மோதல்கள் எழுந்தன.

ஏசுவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் அப்போஸ்தலர்களுடன் சேர்ந்து ஏசு கடைபிடித்த பழக்க வழக்கங்களையே பின் பற்ற வேண்டும் என்று கூறினர். இக் கூட்டத்தினர் பவுலை 'விரோதி' என அழைத்தனர். ஏசு மரித்து 70 ஆண்டுகள் வரை இக்கூட்டமே (ஜூதியோ கிறிஸ்டியானிடி) பெரும்பான்மையாக இருந்தனர். ஆரம்பத்தில் பீட்டரும் யோவானும் கூட இக் கூட்டத்தினருடன்தான் இருந்தனர். ஏசுவின் சொந்தமான ஜேம்ஸ் என்பவர் இக் கூட்டத்தின் தலைவராக இருந்தார். அவருக்குப் பின் ஏசுவின் மற்றொரு சொந்தமான கிளியோபாஸ் தலைமை ஏற்று நடத்திச் சென்றார். யூத-கிறித்தவர்கள் என இக்கூட்டம் அழைக்கப்பட்டது.

யூத-கிறித்தவர்களான இவ்வமைப்பினரே முதன்முதலாக சுவிசேஷங்களை ஹீப்ரு மொழியில் எழுதலானார்கள். கிறித்தவ மார்க்கத்தைப் பற்றிய பல நூல்களையும் அவர்கள் தொகுக்கலானார்கள். ஏசு மறைந்து ஒரு நூற்றாண்டு வரை இவர்களது கையே மேலோங்கி இருந்தது. ஜெருஸலம், பாலஸ்தீனம் மட்டுமல்லாது எகிப்து ரோம் வரை கூட இவர்களது ஆதிக்கம் பரவி இருந்தது. அதனால்தான் பவுல் எழுதிய நிரூபங்களில் 'மோதல்கள்' பற்றி அதிகம் குறிப்பிடுகிறார். கலாத்தியா, கோரிந்த், கோலோசேயா, ரோம், தெசலோனியா ஆகிய இடங்களில் எல்லாம் பவுல் எதிர்ப்பை சமாளிக்க வேண்டியிருந்தது.

சிரியாவிலும் ஆசியா மைனரிலும் யூத-கிறித்தவர்களின் கூட்டமே மிகைத்திருந்தது. கிரேக்க நாட்டிலும் இவர்களின் பிரச்சாரமே மேலோங்கி இருந்தது. ஆப்ரிக்க கண்டத்திற்கு கிறித்தவ மார்க்கத்தை முதன் முதலில் எடுத்துச் சென்றதே இக் கூட்டம்தான். முதன்முதலாக சுவிசேஷங்களை எழுத ஆரம்பித்ததும் இவர்களே.

இத்தகைய பின்னணியில்தான் மற்ற சுவிசேஷங்கள் எழுதப்படலாயின. எதிரி கோஷ்டியின் பிரச்சாரங்களை முறியடிக்க வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் எழுதப்பட்டவையே இன்று வழக்கில் இருந்து வரும் சுவிசேஷங்கள் ஆகும். கி.பி.70 ஆம் ஆண்டிலிருந்து சுவிசேஷப் போராட்டங்கள் ஆரம்பமாயின. யூதக்-கிறித்தவர்கள் யூதர்களில் ஒரு உட்பிரிவுதான் என்றும் பவுல் கோஷ்டியினர் பிரச்சாரம் செய்யலானார்கள்.

ஆனால் கி.பி. 70 ஆம் ஆண்டில் இருந்து நிலைமை மாறலாயிற்று. அப்போது நடைபெற்ற யுத்தத்தில் யூதர்கள் தோற்றுப் போயினர். அவர்கள் ஜெருஸலத்தில் இருந்து விரட்டப்பட்டனர். புதிதாக கிறிஸ்தவ மார்க்கத்தில் சேர்ந்தவர்கள் கூட்டமே பெரும்பான்மையாக இருந்தது. இவர்களுக்கு பவுல் அதிக சலுகைகளை அளித்திருந்ததால் பவுலின் பக்கமே இக்கூட்டம் சார்ந்து நின்றது. பெரும்பான்மையாகிவிட்ட இம் மக்கள் கூட்டம் ஜெருஸலத்தையும் பிற பகுதிகளையும் கைப்பற்றிக் கொண்டது. இறுதியில் பவுலுடைய கோஷ்டிக்கு வெற்றி கிட்டிவிட்டது. பவுல் எடுத்துச் சொன்னதும் விளக்கிச் சொன்னதுமான மார்க்கம்தான் கிறித்தவ மார்க்கம் என்றாகி விட்டது. யூத-கிறித்தவர்களின் செல்வாக்கு மங்கியது. அவர்கள் பல இடங்களுக்கு சிதறிப் போய் விட்டார்கள்.

இந்த வெற்றியைப் பார்ப்பதற்கு பவுல் உயிருடன் இல்லாவிட்டாலும் அவர் எடுத்துக் கொண்ட கட்சியே கிறித்தவ மார்க்கம் என்று நிலை நிறுத்தப்பட்டு விட்டது. யூதர்களை ஒட்டிய கிறித்தவர் நாளடைவில் நலிவடைந்து இல்லாமலேயே மறைந்து விட்டார்கள்.

13 comments:

Robin said...

உங்களுக்கு நன்றாக கதை எழுத வருகிறது :)

தருமி said...

நான் வாசித்த கட்டுரையில் பவுலின் எழுத்து இன்னும் மற்றவை பற்றியும் நிறைய இருந்தது. சேமிக்க நினைத்து விட்டு விட்டேன்.

நன்றி

suvanappiriyan said...

ராபின்!

//உங்களுக்கு நன்றாக கதை எழுத வருகிறது :)//

பேராசிரியர் எட்மண்ட் ஜேக்கப், பேராசிரியர் ஜே.பி.சாண்டரோஸ் தொகுத்துள்ள என்சைக்ளோபீடியாவில் 'பைபிள்' என்ற தலைப்பில் உள்ள ஆய்வு, ஜெருஸலத்திலுள்ள பைபிள் பள்ளியின் தலைமை நிர்வாகி ஃபாதர் தேவாக்ஸ் 1962 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆராய்ச்சி தொகுப்பு, 1678 ஆம் ஆண்டு ரிச்சர்டு சைமன் என்ற ஆராய்ச்சியாளர் எழுதிய 'பழைய ஏற்பாட்டின் வரலாறு குறித்து ஓர் ஆய்வுரை' என்ற நூல், பிரெஞ்சு மன்னர் பதினைந்தாம் லூயினுடைய மருத்துவர் ஜீன் அஸ்ட்ரக் என்பவர் 1753 ஆம் ஆண்டு 'பழைய ஏற்பாடு' குறித்து வெளியிட்ட ஆராய்ச்சி நூல், பாரிஸ் கத்தோலிக்க கலைக்கூடத்தில் பணியாற்றும் பேராசிரியர் பாதர் கன்னென்ஜியஸ்ஸ்ர் எழுதிய ஆராய்ச்சி நூல், போன்ற எண்ணற்ற நூல்களை மாரிஸ் புகைல் தனது வாதத்துக்கு ஆதாரமாக இப்புத்தகத்தில் விவரிக்கிறார். இவரும் ஒரு கிறித்தவரே. இதில் என்னுடைய கருத்து எதுவுமே இல்லை.

எனவே என் சொந்த கற்பனையில் எந்த கதையும் எழுதவில்லை என்பதை விளங்கியிருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். கிறித்தவத்தில் மட்டும் அல்ல. முகமது நபி இறப்புக்கு பின் அபுபக்கர், உமர் போன்றோரின் ஆட்சிக்குப்பின் யார் தலைமைக்கு வருவது என்ற போட்டியால், தவறான புரிதலால் ஈராக்கில் முஸ்லிம்களே ஒருவரை ஒருவர் எதிரிகளாக பாவித்தனர். ஷியா சன்னி என்ற இரண்டு பிரிவுகள் தோன்றி இன்று வரை அந்த சண்டை தொடர்ந்து வருகிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

suvanappiriyan said...

வால் பையன்!

//நல்லது எது கெட்டது எது என்று யாருக்கு விளக்குகிறார்!?
உஅலகம் தோன்றி கோடான கோடி வருடங்களில் தீடிரென்று மனிதனை படைத்து யாருக்கு நல்லது சொல்லி தருகிறார்!//

மனிதர்களுக்குத்தான்.

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.'
குர்ஆன்-14:4

'உமது சமுதாயத்தை இருள்களிலிருந்து வெளிச்சத்துக்குக் கொண்டு செல்வீராக! இறைவனின் அருட்கொடைகளை நினைவூட்டுவீராக!'
குர்ஆன் 14:5

//குரான் மட்டும் அறிவியலோடு ஒன்றி இருக்குதாக்கும்!

உனது வெளிச்சதற்காக சூரியனை படைத்தேன் போன்ற வாசகமும்,
தினமும் இரவில் என்னை சூரியன் வணங்கச்செய்தேன் என்றும் வருகிறதா இல்லையா!?

இரவில் எப்போது சூரியன் கடவுளை வணங்க செல்கிறது!//

குர்ஆனில் எந்த இடத்தில் இது போன்ற வாசகம் வருகிறது என்று வசன எண்களோடு சொன்னால் பலரும் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

//உருவமற்ற கடவுள் ஏன் மனிதர்களுக்கு மட்டும் மனித வடிவில் இறைத்துதரை அனுப்ப வேண்டும்!
மற்ற விலங்குகலூக்கு ஏன் அனுப்பவில்லை!

அதை படைத்தது வேறு கடவுளா!?//

மனிதர்களுக்கு நேர்வழி காட்ட மனிதர்களிலிருந்துதானே தூதர்களை அனுப்ப முடியும்! நல்லவை கெட்டவை என்ற பாகுபாடு மிருகங்களுக்கு கிடையாது. என் வீட்டு ஆடு உங்கள் வீட்டிலும் வந்து மேய்ந்து விட்டு சென்று விடும். அதற்காக அதனை தண்டிக்கவும் முடியாது. அதை நேர்வழியில் செலுத்துவது ஆட்டின் சொந்தக்காரனான என் பொருப்பில் வந்து விடும்.

suvanappiriyan said...

பவுல் கண்ட புது மார்க்கம்!

'கர்த்தரின் பிரமாணம் உத்தமமானது. அது புது உயிர் கொடுக்கிறது. கர்த்தரின் சாட்சியம் நம்பப்படத் தக்கது. அது பேதையை ஞானியாக்குகிறது. கர்த்தரின் கட்டளைகள் நேர்மையானவை. அவை இருதயத்தைச் சந்தோஷிக்கும். கர்த்தரின் கற்பனை தூயது. அது கண்களைத் தெளிவிக்கிறது.
-சங்கீதம் 19:7,8

பழைய ஏற்பாட்டில் காணப்படும் இந்த வசனங்கள் கர்த்தரின் வார்த்தைகளும் பிரமாணங்களும் மனிதனுக்கு நேர்வழி காட்டும் என்று போதிக்கின்றன.

கர்த்தரின் இந்த போதனைக்கு முரணாகப் பவுல் கருத்துத் தெரிவிக்கிறார். அது பைபிளிலும் இடம் பெற்றுள்ளது.

'முந்தின கட்டளை பலவீனமுள்ளதும் பயனற்றதுனமாய் இருந்ததினிமித்தம் அது தள்ளப்படுகிறது. நியாயப் பிரமாணம் ஒன்றையும் பூரணப்படுத்தியதில்லை.'
எபிரேயர் 7:18

முந்தைய நியாயப் பிரமாணத்தைப் இயேசு தள்ளினால் அதில் ஓரளவாவது நியாயம் இருக்கும். இயேசுவுக்குப் பின்னால் வந்த பவுல் கர்த்தரின் நியாயப் பிரமாணம் பரிபூரணமானதன்று: பலவீனமானது என்கிறார். கர்த்தரையே அலட்சியம் செய்யும் பவுலடிகளை கிறித்தவ உலகம் நம்புவதுதான் வேதனைக்குரியது.

? said...

The Quran Affirms:Paul Passed On The True Gospel of Christ

இது பற்றி தாங்களின் மேலான கருத்துகள் யாதோ?

suvanappiriyan said...

இன்று ஒரு சிறிய விபத்து. வலது கையில் கட்டுடன் அமர்ந்துள்ளேன். கை சரியானவுடன் திரும்பவும் வருகிறேன்.

பின்னூட்டம் இட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

educations said...

assalamu alaikkum. please write more and more.I am waiting for your post

கிறிஸ்துவின் ஊழியன் said...

நண்பரே,
மிகவும் நேர்த்தியான மார்கத்தில் இருக்கிறோம் என்ற நினைப்பில் பிறரை அலட்சியம் செய்து வருகிறீர்... "நேர்த்தி என்பது வேறு உண்மை என்பது வேறு" - நாங்கள் உண்மையை காண்கிறோம், நீங்கள் நேர்த்தியை காண்கிறீர்...

"ஒரே இறைவன், உருவமற்ற இறைவன்" - இதெல்லாம் கேட்க நன்றாக தான் இருக்கிறது, ஆனால் இந்த தத்துவம் முதலில் உண்மையாக இருக்கவேண்டும்.... கடவுளுக்கு எந்த தத்துவம் உண்மை என்பதை நீங்கள் இஸ்லாமை மட்டும் பார்த்துவிட்டு கூறாதீர்....

//முந்தைய நியாயப் பிரமாணத்தைப் இயேசு தள்ளினால் அதில் ஓரளவாவது நியாயம் இருக்கும். இயேசுவுக்குப் பின்னால் வந்த பவுல் கர்த்தரின் நியாயப் பிரமாணம் பரிபூரணமானதன்று, பலவீனமானது என்கிறார். கர்த்தரையே அலட்சியம் செய்யும் பவுலடிகளை கிறித்தவ உலகம் நம்புவதுதான் வேதனைக்குரியது// - சுவனப்பிரியன்

பைபிளை முழுவதாக படித்துவிட்டு கூறுவது போல் பேசாதீர்... ஒரு கட்டுரையை தொக்குப்பதற்கு முன் யோசியுங்கள், பிறரை இழிவு படுத்தாதீர்...

பவுல் பழைய பிரமாணத்தை அலட்சியம் செய்யவில்லை... ஆபிரகாமின் தேவனாகிய யேகொவாவே (கர்த்தர்) 'பழையதை தள்ளி, புதிய பிரமாணத்தை ஏற்படுத்துவேன்' என்று கிறித்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே கூறுகிறார்...

"இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன். நான் அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவரக் கைப்பிடித்த நாளிலே, அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார். அந்நாட்களுக்குப் பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: கர்த்தரை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்." - எரேமியா 31:31-33

இதன் படி வந்ததே புதிய பிரமாணம்... இன்ஜீலே (puthiya yerppadu) இறுதி வேதம். (தவராத்தை உறுதி செய்து, புதிய பிரமாணங்களை ஏற்படுத்தி, சமாதானத்தை கூறி, பாவ மன்னிப்பை அருளி முடித்த இறுதி இறை வேதம்)

முகமது கள்ள தீர்க்கதரிசி....

முகமது வருவதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே இயேசு கூறியது:
"அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும். அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள். அந்தக் காலம் வரும்போது நான் இவைகளை உங்களுக்குச் சொன்னேனென்று நீங்கள் நினைக்கும்படி இவைகளை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்" - யோவான் 16:2,3,4 (பைபிள்)

"விஷமங்கள் முற்றிலும் நீங்கி, மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்." - திருக்குர்ஆன் 8 : 39

"நீங்கள் அவர்களுடன் போர் புரியுங்கள்; உங்களுடைய கைகளைக் கொண்டே அல்லாஹ் அவர்களுக்கு வேதனையளித்து அவர்களை இழிவு படுத்தி, அவர்களுக்கெதிராக அவன் உங்களுக்கு உதவி செய்வான்." - திருக்குர்ஆன் 9 : 14

"சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள்" - திருக்குர்ஆன் 9 : 5

கிறிஸ்துவின் ஊழியன் said...

நண்பா சுவனப்பிரியரே, பவுல் இன்னொன்றையும் கூறியுள்ளார், அதனையும் உங்கள் கட்டுரையில் சேர்த்து கொள்ளவும்... முகமது (அல்லாவின் சாந்தி அவர் மேல் நிலைக்கட்டும்) பிறப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பவுல் இன்னொன்றையும் கூறி விட்டு சென்றார்... அது கீழே...

அப்போஸ்தலர் 20: 25-31 வசனங்கள்

"இதோ, நான் உங்களுக்குள்ளே சஞ்சரித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கம்பண்ணினதைக் கேட்டவர்களாகிய நீங்களெல்லாரும் இனி என் முகத்தைப் பார்க்கமாட்டீர்களென்று அறிந்திருக்கிறேன். தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே, எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன்"

------->ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்<------

------>நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும்<------

------->உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்<--------

------->ஆனபடியால், நான் மூன்றுவருஷகாலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்திசொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள்<-------

நாங்கள் நரக நெருப்பை விரும்புகிறோம் என்றே வைத்து கொள்ளுங்கள் சுவனப்பிரியரே

கிறிஸ்துவின் ஊழியன் said...

சுவனப்பிரியனே,
பவுல் கூறவில்லை ஐயா, ஏசுவே யூதமரபுகள் படியின்றி, நீதியின் படி உத்தமர்களாய் இருக்க சொல்கிறார்... அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்... விருத்தசேதனம் செய்த முஸ்லிம்கள் அனைவரும் அமைதி வடிவானவர்களும் அல்ல, விருத்த சேதனம் செய்யாத கிறிஸ்தவர்கள் அனைவரும் தீவிரவாதிகளும் அல்ல... எங்களுக்கு மாம்சத்தில் விருத்தசேதனம் தேவையில்லை, மனதில் விருத்தசேதனம் போதும்.... எங்களுக்கு மரபு முக்கியம் அல்ல, மனசாட்சி தான் முக்கியம்...

"இயேசு அவர்களை நோக்கி: ஒரே கிரியையைச் செய்தேன், அதைக்குறித்து எல்லாரும் ஆச்சரியப்படுகிறீர்கள். விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல், பிதாக்களால் உண்டாயிற்று; பின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான்; நீங்கள் ஓய்வுநாளிலும் மனுஷனை விருத்தசேதனம்பண்ணுகிறீர்கள். மோசேயின் நியாயப்பிரமாணம் மீறப்படாதபடிக்கு ஓய்வுநாளில் மனுஷன் விருத்தசேதனம் பெறலாமென்றால், நான் ஓய்வுநாளில் ஒரு மனுஷனை முழுவதும் சுகமாக்கினதினாலே என்மேல் எரிச்சலாயிருக்கலாமா? தோற்றத்தின்படி தீர்ப்பு செய்யாமல், நீதியின்படி தீர்ப்புசெய்யுங்கள் என்றார்" - யோவான் 7:21-24

இன்று உங்கள் இஸ்லாமை முதலிடத்திற்கு வர விடாமல் தடுத்து நிற்கும் ஒரு பெரிய முட்டுக்கட்டை கிறிஸ்தவம்.... ஆனால் எங்களுக்கு எண்ணிக்கை முக்கியம் அல்ல... இயேசுவின் பெயரை உலக முடிவிற்குள் அறிய செய்ய வேண்டும்.... அவ்வளவு தான்...

ஒரு கிறிஸ்தவன் தவறு செய்தால், "இயேசு சொன்னபடி நடந்தான்" என்று கூற முடியாது... ஏன் எனில் மனசாட்சி பிரகாரம் நல்லவனாக இருக்க சொல்லி இயேசு, பவுல், அப்போஸ்தலர்கள் கூறுகின்றனர்....

ஆனால் பிடிபடும் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்ன கூறுகின்றனர்? சிந்தியுங்கள்... தங்கள் குரானை நானும் படித்து இருக்கிறேன்... நிச்சயமாக அது கர்த்தர் அருளின இறுதி வேதம் அல்ல... சமாதானத்தை கூறும் இஞ்சிலே இறுதி வேதம்.... 'வெட்டுங்கள் குத்துங்கள் கொல்லுங்கள்" என்று கூறும் புத்தகம் நிச்சயமாக --->இறுதி வேதம்<---- அல்ல... வேண்டுமென்றால் கர்த்தரும் அல்லாவும் வேறு, அல்லா கொடுத்த வேதம் குரான் என்று கூறி கொள்ளுங்கள்....

மேலும் கிறிஸ்தவ பிரிவுகளை கண்டு பிடித்த நீங்கள், இஸ்லாமின் சுன்னி-ஷியா பிரிவுகள் பற்றியும் கூறிவிடுங்கள்...

கவலை படாதீர்கள்.... இறுதி காலத்தில் இஸ்லாம் தான் உலகத்தின் முதல் மார்க்கமாக இருக்கும்....

கிறிஸ்துவின் ஊழியன் said...

நண்பரே,
நீங்கள்(உங்களை மட்டும்) உண்மை மிக்கவராக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? இயேசு எங்களுக்கு இறைவன் என்றால் உங்களுக்கு அவர் நபி அல்லவா? எல்லா நபிமார்களும் ஒன்று என்ற உங்கள் நம்பிக்கை வெறும் காகித தாளில் மட்டும் தானா? நபியை பற்றி சரியாக சொல்வது உங்களுக்கு அவசியம் அல்லவா?

"அவர் உடலோடு வான் எழுந்து சென்று இன்றும் உயிரோடு பரலோகத்தில் இருக்கிறார்" என்று கிறிஸ்தவம் கூறுவது போன்று இஸ்லாமும் கூறுகிறதே ஐயா, அதை அறிந்த முஸ்லிமாக இருந்தும் ஏன் இது போன்ற சொற்களை பயன் படுத்துகிறீர்?

//இப்படியாக ஈஸா நபி(ஏசு)------> மரித்து<------- ஒரு........................// - சுவனப்பிரியன்

//ஏசு -------->மரித்து<--------- 70 ஆண்டுகள் வரை// - சுவனப்பிரியன்

அவர் பட்ட சிலுவை பாடுகளை கூட 'இல்லை' என்று கூறிவிட்டீர்கள், போகட்டும்... ஆனால் அவருக்கு 'வான் எழுந்த நபி' என்று உங்கள் முகமது வழங்கிய ஸ்தானத்தையாவது முழுமையாக தாருங்கள் ஐயா...

suvanappiriyan said...

உங்கள் கேள்விகளுக்கு உரிய பதில்களை நேரம் கிடைக்கும் போது தருகிறேன். அல்லது புதிய பதிவாகவே இடுகிறேன். அது வரை சற்று பொறுமையாக இருங்கள்.