Followers

Friday, March 30, 2012

ராடாரின் பயன்களைப் பற்றி சற்று ஆராய்வோமா!

'தாவூதுக்கு நம் அருளை வழங்கினோம்.'மலைகளே! பறவைகளே! அவருடன் சேர்ந்து துதியுங்கள்' எனக் கூறினோம். போர்க் கவசங்களைச் செய்வீராக! அவற்றின் வளையங்களை ஒழுங்குபடுத்துவீராக!' எனக் கூறி அவருக்கு இரும்பை மென்மையாக்கினோம்.'
-குர்ஆன் 34:10,11

'அதை சுலைமானுக்கு விளங்க வைத்தோம். இருவருக்குமே அதிகாரத்தையும் கல்வியையும் வழங்கினோம். பறவைகளையும் மலைகளையும் தாவூதுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அவை இறைவனைத் துதித்தன. நாம் எதையும் செய்யக் கூடியவராவோம்'

-குர்ஆன் 21:79

'சுலைமானுக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப்படி அவர் நினைத்தவாறு பணிந்து அது சென்றது'

-குர்ஆன் 38:36

மேலே உள்ள வசனங்கள் இறைத் தூதர் சுலைமானுக்கும் இறைத் தூதர் தாவூதுக்கும் இறைவன் கொடுத்த சில சிறப்பியல்புகளை சொல்லிக் காட்டப்படுகிறது. இந்த வசனங்கள் நாம் தற்போது உபயோகத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மின் காந்த அலைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகப் படுகிறது. இது பற்றிய முழு உண்மையை இறைவனே அறிந்தவன். சூரா 34:10 ல் உபயோகப்படுத்தப்பட்டுள்ள 'அவ்விபி' என்ற அரபு வார்த்தையானது “திரும்பப் பெறப்படும் ஒலி” என்ற அர்த்தத்தைக் கொடுக்கும். இது தற்போது நமது பயன்பாட்டில் உள்ள ரேடாரின் தொழில் நுட்பத்தை ஒத்திருக்கிறது.

ரேடாரின் இயக்கம் என்பது ஒலி பிரதிபலிப்புக்கு நெருங்கிய தொடர்புடையது. உதாரணத்துக்கு ஒருவர் ஒரு பள்ளத்தாக்கிலோ அல்லது ஒரு குகையிலோ நின்று கொண்டு வேகமாக சப்தமிட்டால் அவருடைய ஒலியே அவருக்கு பிரதிபலிப்பாக திரும்ப வருவதை உணருவார். (படம் 1) (மனிதர்கள் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல..அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது...புனிதமானது....:-)) இதிலிருந்து காற்றில் நமது ஒலியானது எவ்வாறு பயணிக்கிறது. எவ்வளவு தூரம் பயணிக்கிறது என்பதை துல்லியமாகக் கணக்கிட முடியும்.





ரேடாரின் தொழில் நுட்பத்தில் மின் காந்த அலைகளின் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுவதாக நாம் முன்பு பார்த்தோம். ஒலியானது மைக்ரோவேவ் அதிர்வெண் சிக்னல்களால் உமிழப்பட்டு அவை திருப்பி அனுப்பப்படுகிறது. இத்தகைய சமிக்ஞைகளை நாம் எகோ(echo) என்கிறோம். ரேடார் சாதனமானது ஒளியின் அளவையும் அவற்றின் தூரத்தையும் கணக்கிட்டு எதிரொலிக்கும் வேலையை செய்து தருகிறது. (படம் 2)



ரேடாரின் அதிர்வெண்கள் உபயோகத்துக்குத் தக்கவாறு மாறுபடும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. மின் காந்த ஆற்றல் வானொலி தொலைக்காட்சி என்று நமது தேவைக்குத் தக்கவாறு ரேடாரின் அதிர்வெண்களும் மாறுபடும். (படம் 2).

எகோவாக பிரதிபலிக்கும் ஒலிகள் எண்களாக மாற்றப்பட்டு ரேடார் ரிசீவர் மூலமாக டேட்டாவாக சேமிக்கப்படுகிறது. (படம் 3)




முடிவாக இந்த டேட்டாக்கள் படங்களாக மாற்றப்படுகிறது. (படம் 4)




குர்ஆன் 34:10ல் அரபி மொழியின் வினைச் சொல் 'அலென்னா' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் அர்த்தமானது 'இணக்கமானதாக நாம் மாற்றுவோம்' என்ற பொருளில் வரும். குர்ஆனில் இங்கு தேர்ந்தெடுத்து இந்த வார்த்தையை இறைவன் பயன்படுத்தியிருக்கிறான். அதாவது கடினத் தன்மை உடைய இரும்பை இலகுவானதாக மாற்றித் தருகிறான். ரேடார் தொழில் நுட்பத்தில் மென்மைப்படுத்தப்பட்ட இரும்பையே நாம் உபயோகப்படுத்துகிறோம். (படம் 5)




“அவர் நினைத்தவாறு பணிந்து அது சென்றது'” என்று இறைத் தூதர் சாலமன் காற்றுக்கு கட்டளையிட்டது மின் காந்த சமிஞ்கைகளின் உதவியால் இருக்கலாம். இறைவனே இதன் முழு உண்மையையும் அறிந்தவன்.

ரேடாரின் உபயோகத்தை இன்று நாம் நிதர்சனமாக பார்த்து வருகிறோம். கோள்களின் அமைப்பு, பூமியின் அமைப்பு, ஒரு நாட்டின் அமைப்பு, ஒரு ஊரின் ஏன் ஒரு வீட்டின் அமைப்பையையே இன்று ரேடாரின் உதவி கொண்டு துல்லியமாக கணக்கிட்டு விடுகிறோம்.



'பின்னர் வானம் புகையாக இருந்தபோது அதை ஒழுங்குப் படுத்த நாடினான். விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் கட்டப்பட்டு நடக்க வேண்டும் என்று அதற்கும் பூமிக்கும் கட்டளையிட்டான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின.'
-குர்ஆன் 41:11,12

இது போன்ற வசனங்களை எல்லாம் நாம் பார்க்கும் போது எப்படி காற்றும், பூமியும் மலைகளும், பேச முடியும் என்ற கேள்வி எழலாம். இறைவனுடைய ஆற்றல் எப்படிப்பட்டது என்றோ அல்லது அவனது ஆற்றல் எதை எல்லாம் உள்ளடக்கியது என்றோ நம்மால் ஒருக்காலும் விளங்க முடியாததாகும். அவன் அனைத்து சார்பியல் நிலைகளையும் ஒப்பீடுகளையும் கடந்து தமக்குத் தாமே சம்பூரணமானவன். எனவே அவனது அறிவாற்றலுக்கு முன்னால் உயிருள்ளவை உயிரற்றவை என்ற பாகுபாடு கிடையாது.

மனிதர்களாகிய நாம் கூட உயிரற்ற பொருட்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்வதைப் பார்க்கலாம். உதாரணத்திற்கு விண்வெளிக்கு செலுத்தப்படும் ராக்கெட்டை எடுத்துக் கொள்வோம். அதை விண்ணில் செலுத்தவதற்கும் அது விண்வெளியில் செய்யப்படக் கூடிய வேலைகளையும் நாம் பூமியில் இருந்து கொண்டே கட்டளைகளை அதற்கு பிறப்பிக்கிறோம். அவைகள் நமது கட்டளைகளை உடன் நிறைவேற்றுகின்றன. (சம்பள உயர்வு கேட்பதில்லை: வேலை நிறுத்தமும் செய்வதில்லை.:-)) இயக்கத்தில் சில குறைபாடுகள் இருந்தால் அதையும் சரி செய்ய சொல்லி அவை சமிக்ஞை தருகிறது. பொறியாளர்கள் சரி செய்தவுடன். அவை தங்களின் வேலைகளை சரி வர செய்கின்றன. இந்த பொருட்களுடன் நாம் உரையாட மனித மொழிகளை உபயோகிக்காமல் மின் அணு மொழியில் இயந்திரங்களோடு உரையாடுவதால் அவற்றின் வேலைகளை நம்மால் வாங்க முடிகிறது. எனவே உயிரற்ற பொருட்கள் விளங்கும் மொழியில் நமது பரிமாற்றம் இருந்தால் அத்தகைய அறிவு நமக்கு கொடுக்கப்பட்டிருந்தால் எவற்றுடனும் நம்மால் சம்பாஷனை நடத்த முடியும் என்று அறிகிறோம். அற்பனான மனிதன் ராக்கெட்டுகளோடு உரையாடும் போது நம்மை படைத்த இறைவன் மலைகளோடும், காற்றோடும் நதிகளோடும் உரையாட கருத்துப் பரிமாற்றம் செய்ய வல்லமை உடையவனே என்றும் நாம் நம்புகிறோம்.


1 http://rst.gsfc.nasa.gov/Sect8/Sect8_1.html
2 http://tr.wikipedia.org/wiki/Radar
3 http://tpub.com/neets/book11/46.htm
4 http://southport.jpl.nasa.gov/cdrom/sirced03/cdrom/DOCUMENT/
HTML/TEACHERS/MODULE02/MOD2SECB.HTM
5 http://physics.bu.edu/~duffy/PY106/MagMaterials.html

9 comments:

suvanappiriyan said...

கேள்வி: இன்றைய உலகில் கண்டுபிடிப்புகளுக்கும், விஞ்ஞான வளர்ச்சிகளுக்கும் முழுவதும் காரணமாக இருந்தவர்கள், இருப்பவர்கள், மேற்கத்திய நாட்டினர் தான். இவர்களால் உலகில் சில தீமைகள் ஏற்பட்டிருக்கலாம். அதை விடப் பன்மடங்கு நன்மைகளை உலகிற்குச் செய்துள்ளனர். இன்று அரபு தேசங்களில் மக்கள் வசதியாக வாழ்வதற்கு வழி வகுத்தவர்கள் மேற்கத்திய நாட்டினர். எண்ணெய்க் கண்டுபிடிப்பு, கடல்நீரைக் குடிநீராக மாற்றும் தொழில் நுட்பம் ஆகியவற்றை உதாரணமாகக் கூறலாம். ஆனால், முஸ்லிம்கள் இந்த உலகின் வளர்ச்சிக்கு எந்த விதப் பங்கும் ஆற்றவில்லை. மாறாக, உலகத்தைக் குழப்பத்தில் ஆழ்த்தி, ஒருவருக் கொருவர் சண்டையிட்டுக் கொண்டு - தானும் அழிந்து கொண்டு, மற்ற நாட்டினரையும் அழித்து தீவிரவாதத்தையும், பயங்கரவாதத் தையும் செய்து கொண்டு இந்த உலகத்தை நிம்மதியிழக்கச் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி உலகத்திற்கு எந்த நன்மையும் செய்யாத இவர்களை உலக முஸ்லிம்கள் அனைவரும் ஆதரிப்பது ஏன்? இன்று உலகில் கிறிஸ்தவர்கள், கல்விச் சாலைகள், மருத்துவ மனைகள் ஆரம்பித்து தொண்டாற்றி வருகிறார்கள். அப்படி இந்த உலகத்திற்கு சேவை செய்த, கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய முஸ்லிம்கள் யாரேனும் உண்டா? என மாற்று மத நண்பர் கேட்கிறார். இதற்கு விரிவான பதில் அளிக்கவும். - அபூ மஸ்ஹாத், நெல்லிக்குப்பம்.

பதில்: நவீன கண்டுபிடிப்புகளுக்கு முழுவதும் காரணமாக இருந்தவர்கள் மேலை நாட்டவர் என்ற கூற்று முற்றிலும் தவறானதாகும். மேலை நாட்டவர்கள் விஞ்ஞான ஆய்வு செய்திட மதத்தின் பெயரால் தடுக்கப்பட்ட காலத்திலேயே முஸ்லிம்கள் மிகப் பெரும் கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கினார்கள். இன்றைய கண்டுபிடிப்புகளுக்குப் பெரும்பாலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர்களே முஸ்லிம்கள் தாம்.

வியக்கத்தக்க சாதனைகள் படைத்த முஸ்லிம் விஞ்ஞானிகளில் சிலர்...

(மேற்கத்திய உலகில் இவர்கள் அறியப்படும் பெயர்கள் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது)

பெயர் காலக்கட்டம் துறை (கி.பி.)

அல்குவாரிஸ்மி 780-850 கணிதம்-வானவியல் (அல்காரிஸ்ம்)
அல் ராஜி 844-946 மருத்துவம் (ரேஜஸ்)
அல் ஹைதம் 965-1039 கணிதம்-ஒளியியல்(அல்ஹேஜன்)
அல்பிரூணி 973-1048 கணிதம்-தத்துவம்-வரலாறு
இப்னு சீனா 980-1037 மருத்துவம் (அவிசென்னா)
அல் இத்ரீஸி 1100 புவியியல் (டிரேஸஸ்)
இப்னு ருஸ்து 1126-1198 மருத்துவம்-தத்துவம் (அவிர்ரோஸ்)
ஜாபிர் இப்னு 803 பௌதீகம் ஹையான் (ஜிபர்)
அல் தபரி 838 மருத்துவம்
அல் பத்தானி 858 தாவரவியல் (அல்பதக்னியஸ்)
அல் மசூதி 957 புவியியல்
அல் ஜஹ்ராவி 936 அறுவை சிகிச்சை (அல்புகேஸிஸ்)
இப்னு ஹல்தூண் 1332 வரலாறு
இப்னு ஜுஹ்ர் அறுவை சிகிச்சை (அவன்ஜோர்)

இன்றைய சூழ்நிலையில் மேலை நாட்டவரின் பங்களிப்பு அதிகமாக உள்ளது என்று கூறினால் அது சரி தான்.

இன்றைக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவாக இருப்பதற்கு இஸ்லாம் காரணம் அல்ல.
மேலை நாட்டவர் அதிகம் பங்களிப்புச் செய்வதற்கு அவர்களின் மதமும் காரணம் அல்ல.

மாறாக பொருளாதார வசதி, ஆள்வோரின் ஊக்குவிப்பு போன்றவை காரணங்களாகவுள்ளன. காலச் சக்கரம் சுழலும் போது மேலை நாடுகள் பின் தங்கும் நிலையை அடையலாம். பொருளாதார வசதிகள் இன்னொரு பக்கம் குவியலாம். அப்போது அவர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்.
முந்தைய முஸ்லிம் ஆட்சியாளர்கள் அறிவாளிகளையும், ஆராய்ச்சியாளர்களையும் பெரிய அளவில் ஊக்குவித்தனர்.

இன்றைய முஸ்லிம் ஆட்சியாளர்களோ சுகபோகங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

எனவே தான் முஸ்லிம்களின் பங்களிப்பைக் காண முடியவில்லை. ஆயினும், கடந்த காலத்தின் மீது பழியைப் போட்டு விட்டு முஸ்லிம்கள் தப்பித்துக் கொள்ளக் கூடாது.

அந்த நண்பரின் விமர்சனத்தைச் சவாலாக எடுத்துக் கொண்டு முஸ்லிம் இளைஞர்கள் முயற்சி செய்தாக வேண்டும்.

நமது நாட்டில் கிறித்தவர்கள் தாம் கல்விக் கூடங்களையும், மருத்துவ மனைகளையும் நிறுவியுள்ளனர் என்று நண்பர் கூறுவது உண்மை தான். இந்த நிலையை மாற்றும் கடமை முஸ்லிம்களுக்கு இருப்பதும் உண்மை தான்…..

suvanappiriyan said...

ஆனாலும், இதற்கான காரணத்தையும் அந்த நண்பருக்கு விளக்க வேண்டும்.

.....ஆங்கில வழிக்கல்வி தான் இன்றைக்குக் கல்வி எனப்படுகிறது. வெள்ளையர்கள் இந்த நாட்டை ஆண்ட போது அவர்களை நாட்டை விட்டே விரட்டும் பல்வேறு போராட்டங்களில் கல்வியைப் புறக்கணிப்பதும் ஒரு போராட்ட முறையாக அறிவிக்கப்பட்டது.

எல்லாச் சமுதாயமும் இந்தப் போராட்டத்தில் பெயரளவுக்குத் தான் பங்களிப்புச் செய்தன. ஆனால், முஸ்லிம்களோ முழு அளவுக்கு இப்போராட்டத்தில் குதித்தனர்.

ஆங்கிலம் படிப்பது பாவம் என்று பள்ளிவாசல்களில் மார்க்க அறிஞர்கள் பிரகடனம் செய்தனர்.

இதன் காரணமாக படித்துக் கொண்டிருந்த முஸ்லிம்கள் கல்விச் சாலையை விட்டு வெளியேறினார்கள்.

முஸ்லிம்கள் யாரும் கல்விச் சாலைக்குள் நுழையவில்லை. பாவமான காரியம் என்ற முஸ்லிம் மத அறிஞர்களின் அறிவிப்பினால் தேச பக்தி என்ற பெயரால் தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டனர். (காயிதே மில்லத் அவர்கள் கூட இவ்வாறு படிப்பைப் பாதியில் விட்டு விட்டு வெளியேறியவர் தாம்)

கிறிஸ்தவர்களும், பிராமணர்களும் எவ்விதப் புறக்கணிப்பும் செய்யாமல் கல்விக் கூடங்களை நிறுவி வந்த போது முஸ்லிம்கள் ஆங்கிலம் கற்பது ஹராம்' என்று கூறினார்கள்.

இதனால் வெள்ளையர்கள் மீது கடும் வெறுப்பு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டு விடுதலைப் போரில் தங்களின் சதவிகிதத்தை விட அதிகமான பங்கைச் செய்தனர். நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு இந்தப் புறக்கணிப்பு உதவியது. ஆனால், முஸ்லிம்களுக்குப் பேரிழப்பை அது ஏற்படுத்தியது.

வெள்ளையர்கள் காலத்தில் முஸ்லிம்களுக்கு என தனியாக இட ஒதுக்கீடு இருந்தும் தேச பக்தியின் பெயரால் அதைப் பயன்படுத்தத் தவறினார்கள்.
நாடு சுதந்திரம் பெற்றதும் முஸ்லிம்களுக்கு வெள்ளையர்கள் வழங்கிய இட ஒதுக்கீட்டை நீக்கி ஆள்வோர் நன்றிக் கடன் செலுத்தினார்கள்.

• வெள்ளையர்கள் காலத்தில் நிறுவப்பட்ட கல்வி நிறுவனங்களின் தொடர்ச்சி,
• நிறையக் கல்வி கற்றவர்கள் உருவானதால் அவர்களால் உருவாக்கப்பட்ட கல்வி நிலையங்கள்,
• மேலைநாடுகளிலிருந்து தாராளமாகக் கிடைக்கும் நிதியுதவி

போன்றவை காரணமாக கிறித்தவர்கள் கல்விக்கு அதிகம் பங்களிப்பைச் செய்தனர்.

ஆனால், நாடு விடுதலையடைந்த பிறகு தான் அடிப்படைக் கல்வியிருந்து முஸ்லிம்கள் ஆரம்பித்தார்கள். இவர்களுக்கு பணக்கார முஸ்லிம் நாடுகளின் உதவியும் இல்லை. தமது சொந்தக் காலில் தான் நிற்க வேண்டிய நிலை.

ஆனாலும், 250 ஆண்டு காலத்தில் கிறித்தவ சமுதாயத்தினர் பெற்ற வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது முஸ்லிம்களின் ஐம்பது ஆண்டு கால வளர்ச்சி விகிதம் மிகமிக அதிகம் தான்.

சொந்தக் காலில் தான் நிற்க வேண்டும் என்பதை உணர்ந்து தமிழகத்தில் முஸ்லிம் வள்ளல்கள் பல கல்வி நிறுவனங்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

இவை யாவும் ஐம்பது வருடங்களில் வெளியார் உதவியின்றி முஸ்லிம்கள் செய்த சாதனைகள்.

இன்னும் 50 ஆண்டுகளில் கிறிஸ்தவர்களின் 250 ஆண்டு கால சாதனைக்கு நிகராக அல்லது அதை மிஞ்சும் அளவுக்குச் சாதனை படைப்பார்கள். அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

முஸ்லிம் வள்ளல்கள் உருவாக்கிய கல்வி நிலையங்கள்! தமிழகத்தில் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன் அளித்துவரும் உயர்நிலைக் கல்விக் கூடங்கள்.

1) இஸ்லாமியா கல்லூரி, வாணியம்பாடி 2) புதுக்கல்லூரி, சென்னை
3) ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி
4) சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, பாளையங்கோட்டை
5) சி. அப்துல் ஹக்கீம் கல்லூரி, மேல்விஷாரம்
6) ஜாஹிர் ஹுசைன் கல்லூரி, இளையான்குடி
7) ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி, உத்தமபாளையம்
8) காதிர் முஹைதீன் கல்லூரி, அதிராம்பட்டிணம்
9) ஜஸ்டிஸ் பஷீர் அஹ்மது பெண்கள் கல்லூரி, சென்னை
10) காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி, மேடவாக்கம்
11) முஸ்லிம் கலைக் கல்லூரி, திருவிதாங்கோடு
12) மழ்ஹருல் உலூம் கல்லூரி, ஆம்பூர்
13) எம்.என்.எஸ். வக்ஃப் கல்லூரி, மதுரை
14) கிரஸண்ட் பொறியியல் கல்லூரி, வண்டலூர் (தமிழக பொறியியல் கல்லூரிகளில் முதல் இடத்தை பல ஆண்டுகளாக இக்கல்லூரி பெற்று வந்துள்ளது.)
15) சதக் பொறியியல் கல்லூரி,

கீழக்கரை உட்பட 18 கலைக்கல்லூரிகள், 5 பெண்கள் கலைக் கல்லூரிகள், 12 பொறியியல் கல்லூரிகள், 8 பாலிடெக்னிக்குகள் மற்றும் பல மருந்தியல் கல்லூரிகள் எனப் பலதரப்பட்ட கல்லூரிகளையும், மெட்ரிகுலேசன் பள்ளிக்கூடங்களையும் முஸ்லிம்கள் தமிழகத்தில் நடத்தி வருகிறார்கள்.

இக்கல்லூரிகளில் அதிகம் பயின்று பயன் பெற்றவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது....

suvanappiriyan said...

...அனைத்திந்திய அளவில் அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகமும் பன்னெடுங்காலமாக கல்விச் சேவையை ஆற்றி வருகின்றது.

கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் தமிழகத்தை விட பன்மடங்கு அதிகமான அளவில் முஸ்லிம்கள் கல்வி நிலையங்கள் நடத்தி வருகிறார்கள்.

முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக அந்த நண்பர் கூறுவது மீடியாக்களின் மூளைச் சலவையால் ஏற்பட்ட பாதிப்பு. உண்மை நிலை என்னவென்றால் மற்ற சமுதாயத்தில் தீவிரவாதிகள் சிலர் இருப்பது போல் முஸ்லிம்களிலும் இருக்கிறார்கள். ஆனால், மற்றவர்கள் வெறும் தீவிரவாதிகள் என்றோ, போராளிகள் என்றோ மீடியாக்களில் தொடர்ந்து குறிப்பிடப்படுகின்றனர்.

ஆனால், ஒரு சில முஸ்லிம்கள் இத்தகைய காரியங்களில் ஈடுபட்டால் மட்டும் அவர்களது நடவடிக்கையுடன் இஸ்லாம் சேர்க்கப்படுகிறது. இஸ்லாமியத் தீவிரவாதம், முஸ்லிம் தீவிரவாதம் என்று தவறாமல் மீடியாக்கள் குறிப்பிடுகின்றன. இஸ்ரேல் பயங்கரவாதிகள் கூட யூதத் தீவிரவாதிகள் எனக் கூறப்படுவதில்லை. இந்தப் பாதிப்பின் காரண மாகவே அவர் இவ்வாறு கருதுகிறார். தக்க சான்றுகளை முன் வைத்து அவரது தவறை உணரச் செய்யுங்கள்.

நூலாசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள்.

G u l a m said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அறிவியலோடு அழகிய குர்-ஆன் வசனங்களை பொருத்திய விதம் அருமை.,

அழகிய பதிவு
பகிர்ந்தமைக்கு ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

Seeni said...

alhamthulillaah

nalla pakirvu!

suvanappiriyan said...

சலாம் சகோ குலாம்!

//அறிவியலோடு அழகிய குர்-ஆன் வசனங்களை பொருத்திய விதம் அருமை.,

அழகிய பதிவு
பகிர்ந்தமைக்கு ஜஸாகல்லாஹ் கைரன் சகோ//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ சீனி!

//alhamthulillaah

nalla pakirvu//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சனி, 31 மார்ச் 2012 15:10

புதுடில்லி, மார்ச் 31- நரேந்திரமோடியின் குஜராத் அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் அளவில் நிதி முறைகேடுகளைச் செய்துள்ளதாக இந்திய தலைமைக் கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார். குஜராத் மாநில பெட்ரோலியம் நிறுவனம் 2009 ஆம் ஆண்டு முதல் தவறான முறையில் செயல்பட்டதால், 5000 கோடி ரூபாய்க்கு மேல்இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
தேவையற்ற முறையில் சலுகைகள் அளிக்கப்பட்ட நிறுவனங்களில் கவுதம் அதானி அதானி மின் னாற்றல், ரூயாயின் எஸ்ஸார் குழுமம் மற்றும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் ஆகியவையும் அடங்கும்.
அடக்க விலைக்கும் குறைவான விலையில் எரிவாயுவை விற்ற வகையில் 71 கோடி ரூபாய் அளவுக்கு அதானி நிறுவனத்திற்கும், கெப்பாசிடி கட்டணங்களைத் தள்ளுபடி செய்ததன் மூலம் 12.02 கோடி ரூபாய் அளவுக்கு எஸ்ஸார் நிறுவனத்துக்கும் குஜராத் மாநில பெட்ரோலியம் நிறுவனம் லாபம் அளித்துள்ளது. குஜராத் மாநில பெட்ரோலியம் நிறுவனத்தின் கிருஷ்ணா-கோதாவரி படுகையில் ஒரு நடைமேடையை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கட்டியதால், நடை மேடையின் வாழ்நாள் உறுதித் தன்மைக்கு குஜராத் மாநில பெட்ரோலியம் நிறுவனம்தான் பொறுப்பேற்க வேண்டியுள்ளது.
கிருஷ்ணா-கோதாவரி படுகையில், முறையான நிதி மற்றும் தொழில்நுட்ப மதிப்பீடுகளை மேற் கொள்ளாமல் எண்ணெய் வள ஆய்வுப் பணிகளை குஜராத் மாநில பெட்ரோலியம் நிறுவனம் மேற் கொண்டதன் காரணமாகவே பெரும்பாலான நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் செய்யப்பட்ட மதிப்பீட்டின் அளவு ரூ. 10.223 கோடியாக இருந்தது, இறுதியில் 130 கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டது. இந்தியக் கணக்கு மற்றும் தணிக்கை அதி காரியின் அறிக்கையை சட்டமன்ற அவையில் இறுதி வேலைநாளில் வைத்ததன் மூலம், அதன் மீது அவை யில் விவாதம் மேற்கொள்வதற்கு வாய்ப்பில்லாமல் மோடி செய்துவிட்டார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

-viduthalai

ஸ்டீபன் ராஜ் said...

உங்க மார்க்கத்தில் பர்தா போடுவது பாராட்டத்தக்கதுதானே?

ஏன் உங்கள் சகோக்கள் பர்தா போட்டு வந்தவர்களை அடிக்கிறார்கள்? அதுவும் ஆஸ்திரேலியா சிட்னியில்!

http://www.liveleak.com/view?i=41d_1333370706

ஒன்னுமே புரியலை சகோதரரே.. கொஞ்சம் விளக்குங்களேன்.