Followers

Saturday, March 31, 2012

பிரிட்டன் மக்களிடம் ஏன் இந்த திடீர் மாற்றம்?

பிரிட்டன் மக்களிடம் ஏன் இந்த திடீர் மாற்றம்?

பிரிட்டனில் வாழும் முஸ்லீம்கள் அரசின் பல்வேறு நெருக்குதல்களுக்கும், தொல்லைகளுக்கும், தொந்தரவுகளுக்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருந்தும் அல்லாஹ்வுடைய கிருபையால் லட்சக்கணக்கான மக்கள் (குறிப்பாக கிறித்தவர்கள்) இஸ்லாத்தை நோக்கி அலை, அலையாய் வந்துகொண்டு இருகின்றனர்.



இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன் என்ற தலைப்பில் “The Independent” என்ற பிரிட்டன் பத்திரிக்கை ஓர் ஆய்வு தகவலை வெளியிட்டுள்ளது.

(பார்க்க http://www.independent.co.uk/news/uk/home-news/the-islamification-of-britain-record-numbers-embrace-muslim-faith-2175178.html)

கிறித்துவ உலகத்தின் அடித்தலமான ஐரோப்பாவே இஸ்லாத்தை நோக்கி வேகமாக நகர்வதை பார்த்து கிறித்தவ உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஐரோப்பா கண்டத்தில் பிரான்ஸில் தான் முஸ்லீம்கள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகின்றது, ஆனால் தற்போது பிரான்ஸை காட்டிலும் இஸ்லாமிய வளர்ச்சி விகிதம் பிரிட்டனில்தான் அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வு தகவல் தெரிவிக்கின்றது.

2001 – ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டவர்களின் எண்ணிக்கை 14,000 முதல் 25,000 வரை இருக்கலாம் என கணெக்கெடுக்கப்படது, ஆனால் தற்போதைய கணக்கெடுப்பில் ஒரு லட்சத்திற்க்கும் மேற்பட்டவர்கள் முஸ்லீம்களாக மாறியுள்ளார்கள் என “Faith Matters” என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆய்வாளர்கள், மசூதிகளில் சென்று எத்தனை முஸ்லீம்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள் என்று கணக்கெடுத்துள்ளனர், அதில் தலைநகர் லண்டனில் மட்டும் 1400 முஸ்லீம்கள் கடந்த ஓராண்டில் பள்ளிவாசல்களில் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர், (அமைப்புகள் மூலமாக, தனி நபர் மூலமாக இஸ்லாத்தை ஏற்றவர்கள் தனி), இப்படி பிரிட்டன் முழுவதும் பள்ளிவாசல்களில் எடுத்த கண்க்கெடுப்பின் படி 5200 நபர்கள் ஓர் ஆண்டில் இஸ்லாத்தை தழுவியுள்ளனர் (அல்ஹம்துலில்லாஹ்).

பிரான்ஸ் ஜெர்மனியில் இஸ்லாத்தை ஏற்ற நபர்களில் எண்ணிக்கை ஆண்டு ஒன்ற்றிக்கு 4000. எனவே “The Independent” நடத்திய இந்த புது ஆய்வின் படி ஐரோப்பா கண்டத்தில் பிரிட்டன் மக்கள்தான் இஸ்லாத்தை தழுவுவதில் முன்னனியில் உள்ளனர். இந்த ஆய்வை நடத்திய “Faith Matters” அமைப்பின் இயக்குனர் கூறுகையில் நாங்கள் இந்த தகவலை பள்ளிவாசலில் திரட்டினோம், முழுவதுமாக எடுக்கப்பட்ட எண்ணிக்கை அல்ல, முழுவதும் கணக்கெடுத்தால் இந்த எண்ணிக்கை பன்மடங்காக இருக்கும் என தெரிவித்தார் .
ஏன் முஸ்லீம்களாக மாறினார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், இஸ்லாத்தை பற்றி ஊடகங்கள் தொடர்ந்து பொய்பிரச்சாரம் செய்து வருகின்றது, இந்த பொய் பிரசாத்தை பார்ப்பவர்கள், படிப்பவர்கள் இஸ்லாத்தை அறிய ஆர்வமடைகின்றனர், இந்த ஆய்வில் பலர், இஸ்லாத்தின் உன்னதமிக்க கருத்தினால் ஈர்க்கப்படு, உண்மை மார்க்கமான இஸ்லாத்தை ஏற்றுகொள்கின்றனர்.

இஸ்லாத்தை அறிவு பூர்வமாகவும், ஆதரபூர்வமாகவும், தர்க்க ரீதியாகவும் எதிர்க்க முடியாத கிறித்தவ உலகம் பொய் பிரச்சாரங்கள் மூலமாக இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க முழுவீச்சில் செயல்பட்டுவருகின்றது. பிரிட்டனை சேர்ந்த இஸ்லாத்தை ஏற்ற இரண்டு இளைஞர்களை சுட்டுகொன்ற CIA இவர்கள் தீவிரவாதிகள் , பயங்கரவாதிகள் என பத்திரிக்கையில் செய்திகளை பரப்பி மக்களை அச்சமுற செய்கின்றனர், “Faith Matters” ஆய்வில் இங்கிலாந்தில் வரும் செய்திகளில் 32 % செய்திகள் இஸ்லாத்தை தீவிரவாத்தோடு சம்மந்தபடுத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.

கிறித்துவர்களிடம் இருப்பது, பொய்களும், ஆபாசங்களும், மனிதனுக்கு உதவாத கதைகளும் நிறைந்த பைபிள் தான். இந்த பைபிளை வைத்து கொண்டு கிறித்துவகளை தக்கவைக்க முடியாது என்பதை கிறித்தவ மிஷினரிகள் நன்றாக உணர்ந்துள்ளன, பொய்களையும் புரட்டுகளையும் சொல்லி கிறித்துவர்களை ஏமாற்றி கிறித்துவத்தை வாழவைத்து கொண்டிருக்கின்றனர் பாதிரிமார்கள். மேற்கத்திய நாடுகள் போடும் டாலருக்காளுக்காக விவாத வேஷம் போடும் சான்(SAN) போன்ற அமைப்புகள் கூட பைபிள் இறைவேதம் என நிரூபிக்க பைபிளிலிருந்து ஒரு ஆதாரத்தையும் காட்ட முடியாமல் கண்டபடி உளறி கொட்டியது.

ஒரு காலத்திலும் கிறித்துவர்களால் அறிவுபூர்வமாகவும், ஆதார பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் “கிறித்துவம் இறைவனின் மார்க்கம்” என்பதை நிருபிக்க முடியாது என்பது இவர்களின் இஸ்லாத்திற்க்கெதிரான பொய்பிரசாரங்களிலிருந்து தெளிவாக விளங்குகின்றது.
அல்லாஹ்வின் கிருபையால் பிரிட்டனில் வாழும் கிறித்துவர்கள் பைபிளின் தரத்தை அறிந்து சத்திய மார்க்கமான இஸ்லாத்தை தழுவி வருகின்றனர். கேத்தரீன் என்ற கிறித்துவ பெண்மனி இஸ்லாத்தை ஏற்று தற்போது பிரிட்டன் இஸ்லாமிய அமைப்பிற்க்கு தலைவியாக உள்ளார். இவர்களை போன்ற பலர் கிறித்துவர்கள் மத்தியில் தொடர்ந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்து பலரை கிறித்துவத்திலிருந்து விடுவித்து நேர்வழியான இஸ்லாத்தின் பக்கம் அழைத்துவருகின்றனர்

பிரிட்டனை சேர்ந்த இஸ்லாத்தை தழுவிய சிலர் கருத்து தெரிவிக்கையில் …
பவுல் மார்ட்டின் : எனக்கு எனது நண்பர்கள் மூலம் குர்ஆன் அறிமுகமானது, குர்ஆனை படிக்கும் போது அதனுடைய அறிவியல் உண்மைகளை பார்த்து வியந்து போனேன், (குர்ஆன் இறை வேதம் என்பதை உணர்ந்து) இஸ்லாத்தை தழுவினேன்.

(குர்ஆன் குறித்த விவாததிற்க்கு வரமால் ஓடி ஒளியும் சானின் (SAN) தந்திரம் தற்போது விளங்குகின்றது, லண்டனை சேர்ந்த இந்த “பவுல் மார்ட்டின்” போல் கிறித்துவர்கள் குர்ஆனின் அறிவியல் அற்புதங்களை பார்த்து ஆயிரகணக்கில் இஸ்லாத்தை தழுவிவிடுவார்கள் என பயந்து போய் தந்திரங்கள் செய்து தப்பிக்க நினைகின்றது சான்(SAN)).
டென்னிஸ் ஹார்ஸலி : நான் ஒரு கிறித்துவர், கத்தோலிக்க பள்ளியில் படிதேன், நண்பர்கள் மூலம் இஸ்லாம் எனக்கு அறிமுகமானது, பின்பு நான் குர்ஆனை படிக்கும் போது ஏசு, மேரி, தோரா பற்றிய பல்வேறு உண்மையான தகவல்கள் குர்ஆனில் இருந்தது. எனவே கிறித்துவத்தில் இருப்பவர்கள் இஸ்லாத்தை ஏற்பது இயற்க்கையானது என கருதுகின்றேன் (அதாவது நீங்கள் உண்மையாக ஏசுவை நம்புவதாக இருந்தால், மேரியை மதிப்பாதாக இருந்தால், தோராவை நம்புவதாக இருந்தால் இஸ்லாத்தை ஏற்றுகொள்வதுதான் உண்மையான நம்பிக்கையின் அடையாளமாக இருக்கும்)

கதீஜா ரியோபுக் : நான் கிறித்துவ குடும்பத்தில் பிறந்தவள், என் குழந்தையுடன் வார வாரம் சர்ச்சிற்க்கு செல்வேன், இஸ்லாத்தில் இணைந்ததும் கிடைத்த அமைதி சர்ச்சில் கிடைக்கவில்லை, ரோமன் கத்தோலிக்க பிரிவை சேர்ந்த எனது தாயால் நான் இஸ்லாத்தை ஏற்றதை ஜீரனித்து கொள்ளமுடியவில்லை, நான் இப்போது ஹிஜாப் அணிகின்றேன், நோன்பு வைக்கின்றேன், வாழ்வில் அமைதியை உணர்கின்றேன்

ஹனா தஜீமா : நான் பல மதங்களை ஆய்வு செய்தேன், குர்ஆன் அறிவு பூர்வமாக இருந்தது, பெண்களுக்கு உரிமையை தருவாதக இருந்தது எனவே ஆழ்ந்த மத பற்றுள்ள எனது குடும்பத்திலிருந்து நான் இஸ்லாத்தை தழுவினேன்

இது கிறித்துவத்திலிருந்து இஸ்லாத்தை தழுவிய சிலரின் கருத்துக்கள், பின்பற்றுவதற்க்கு பைபிளில் ஒன்றும் இல்லை (புறக்கணிப்பதற்க்கு நிறைய உள்ளது), எனவே இந்த மக்களுக்கு உண்மைய எடுத்து சொன்னால் இஸ்லாத்தை ஏற்க்க கோடிகணக்கான கிறித்துவர்கள் இஸ்லாத்தை ஏற்க தயாராக இருகின்றனர் இன்ஷா அல்லாஹ். நாம் சத்திய மார்க்கமான இஸ்லாத்தை இந்த கிறித்துவ மக்களுக்கு எடுத்து சொல்வதுதான் மீதமிருக்கும் வேலை.

இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். “எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களைப் பதிவு செய்வாயாக!” என அவர்கள் கூறுகின்றனர். (அல் குர்ஆன் 5: 83)

கிறித்துவ மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துவைக்கும் இந்த புனித பணியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தொடர்ந்து செய்து கொண்டு இருகின்றது அல்லாஹ்வின் உதவியுடன் கிறித்துவ பாதிரிமர்களுடன் பல விவாதங்களை செய்து உண்மையை நிலை நாட்டியுள்ளது,
சான் (SAN) மட்டும் குர்ஆன் குறித்த விவாத்திற்க்கு வந்தால் குர்ஆனின் அற்புதங்களை கிறித்தவர்களுக்கு விளக்கி, பைபிளில் மிச்சம் மீதியுள்ள அபத்தங்களை தோலுரித்து காட்டி “குர்ஆன் தான் இறை வேதம்” என்பதை நிச்சயம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அல்லாஹ்வின் உதவியுடன் நிருபித்து காட்டும் இன்ஷா அல்லாஹ்.
S.சித்தீக்.M.Tech
நன்றி:TNTJ.NET

-------------------------------------------------------------




மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளையில் கடந்த 30-3-2012 அன்று கிருஷ்ண மூர்த்தி என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை முஹம்மது அர்சத் என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!

--------------------------------------------------------------




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளையில் 22.03.2012 அன்று சிவா என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை பாரக் என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!

--------------------------------------------------------------




இராமநாதபுரம் வெளிப்பாட்டிணம் கிளையில் 25.03.2012 அன்று இராமநாதபுரம் தீன் நகரைச் சேர்ந்த சகோதரி சிகப்பியம்மாள் (ஹாஜரா) அவர்களின் குடும்பத்தினர் 4 பேர் இஸ்லாத்தை தங்களது வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்.
சகோதரி. சிகப்பியம்மாள் அவர்கள் தன்னை ஹாஜராவாகவும்,
சகோதரி. பூபதி தன்னை ரில்வானா பேகமாகவும்
சகோதரி. கமலி தன்னை நிலோபர் நீஷாவாகவும்,
சகோ. கரண் தன்னை முஹம்மது ஹாரூனாகவும் பெயர்களை மாற்றிக் கொண்டனர்.
இவர்களுக்கு குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் இஸ்லாம் குறித்த புத்தகங்கள் வழங்கப்பட்டது.

--------------------------------------------------------------




ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளையில் கடந்த 25-3-2012 அன்று சுரேஷ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளையில் கடந்த 25-3-2012 அன்று சுரேஷ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். இவருக்கு மாநிலச் செயலாளர் எம். அப்துல் ஹமீது அவர்கள் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளை விளக்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

13 comments:

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
மைனஸ் புலிகளின் தாக்குதலு(ஓட்டு)க்கு தயாராக இருங்கள்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ அப்துல் அஜீஸ்!

//அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
மைனஸ் புலிகளின் தாக்குதலு(ஓட்டு)க்கு தயாராக இருங்கள்.//

உண்மையை எதிர் கொள்ள முடியாமல் இருக்கும் ஒருவர் தனது கோபத்தை இவ்வாறு தீர்த்துக் கொள்கிறார். அவரது மனமும் சற்று சாந்தியடையட்டுமே!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Seeni said...

brittan thakavaluku
nantri!

allaku akbar!

Nasar said...

// இஸ்லாத்தை அறிவு பூர்வமாகவும், ஆதரபூர்வமாகவும், தர்க்க ரீதியாகவும் எதிர்க்க முடியாத........//

இஸ்லாமின் எழுச்சியே , எதிர்ப்பில்தான் உள்ளது என்பதை வசதியாக மறந்துவிட்டார்கள் போலும் ......
அதுனாலே பத்து மடங்கு மைனஸ் ஓட்டு விழுந்தாலும் கவலையில்லை ...
** இஸ்லாத்துக்கு யாரும் தேவையில்லை, ஆனால்
நமக்குதான் இஸ்லாம் மிகத தேவை என்பதை மறக்கவேண்டாம் "

suvanappiriyan said...

சகோ சீனி!

//brittan thakavaluku
nantri!

allaku akbar!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

மைனஸ் ஓட்டு குத்தும் புண்ணியவான்கள் :-) அதற்கான காரணத்தையும் சொன்னால் நன்றாக இருக்கும்.

suvanappiriyan said...

சலாம் சகோ நாஸர்!


//இஸ்லாமின் எழுச்சியே ,
எதிர்ப்பில்தான் உள்ளது என்பதை வசதியாக மறந்துவிட்டார்கள் போலும் ......
அதுனாலே பத்து மடங்கு மைனஸ் ஓட்டு விழுந்தாலும் கவலையில்லை ...
** இஸ்லாத்துக்கு யாரும் தேவையில்லை, ஆனால்
நமக்குதான் இஸ்லாம் மிகத தேவை என்பதை மறக்கவேண்டாம் " //

சரியாக சொன்னீர்கள். மாங்கு மாங்கு என்று மைனஸ் ஓட்டை குத்துவதை விட்டு விட்டு ஏன் இந்த மக்கள் இப்படி அலை அலையாக இஸ்லாத்தை நோக்கி வருகிறார்கள் என்று கொஞ்சம் அவர்கள் சிந்தித்தார்களானால் அனைத்தும் பிளஸ் ஓட்டுகளாக மாறும். யார் அதிகம் எதிர்க்கிறார்களோ அவர்களைத்தான் இஸ்லாம் உடன் சென்றடைந்தது. முகமது நபியை கொல்வதற்காக வாளெடுத்து வந்த உமரை இஸ்லாம் எவ்வாறு வென்றெடுத்தது என்பதை சரித்திரம் இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறது.

சகோதரர்களுக்காக பிரார்த்திப்போம்.

Anonymous said...

போன நூற்றாண்டில் உலகின் பல பகுதியை அநியாயமாக கைப்பற்றி பலரை கொன்று ஒழித்தவனுங்க, நம்ம நாட்டை 200 வருடம் ஆண்ட நாதாரி வெள்ளைக்கார கூட்டத்துக்கு பைத்தியம் பிடித்துவிட்டதை கேட்கும் போது சந்தோஷம் பிடிபட மாட்டீங்குது.

suvanappiriyan said...

அனானி!

//போன நூற்றாண்டில் உலகின் பல பகுதியை அநியாயமாக கைப்பற்றி பலரை கொன்று ஒழித்தவனுங்க, நம்ம நாட்டை 200 வருடம் ஆண்ட நாதாரி வெள்ளைக்கார கூட்டத்துக்கு பைத்தியம் பிடித்துவிட்டதை கேட்கும் போது சந்தோஷம் பிடிபட மாட்டீங்குது.//

முன்பு பைத்தியமும் ஆதிக்க வெறியும் அதிகம் ஆட்கொண்டிருந்தது உண்மையே! பைத்தியம் தெளிவதற்கு வாய்ப்பும் உளளதல்லவா! அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. வரவேற்போம்.

சிராஜ் said...

சலாம் சகோ சுவனப்பிரியன்,

இன்னும் சில நூற்றாண்டுகளில் மொத்த ஐரோப்பாவும் இஸ்லாமிய மயம் ஆகும், இன்ஷா அல்லாஹ்.
நமக்கு எதிர்ப்புதான் உற்சாக டானிக் என்பதை எதிரிகள் மறந்து விட்டார்கள்.
பாவம், இஸ்லாமிய வரலாற்றை இன்னும் படிக்கவில்லை போலும்.
இப்பொழுது நடக்கும் விஷயங்கள் நமக்கு சாதகமானதே.

suvanappiriyan said...

சலாம் சகோ சிராஜ்!

//இன்னும் சில நூற்றாண்டுகளில் மொத்த ஐரோப்பாவும் இஸ்லாமிய மயம் ஆகும், இன்ஷா அல்லாஹ்.
நமக்கு எதிர்ப்புதான் உற்சாக டானிக் என்பதை எதிரிகள் மறந்து விட்டார்கள்.
பாவம், இஸ்லாமிய வரலாற்றை இன்னும் படிக்கவில்லை போலும்.
இப்பொழுது நடக்கும் விஷயங்கள் நமக்கு சாதகமானதே.//

உங்கள் வாக்கு பலிக்கட்டும். விழுந்திருக்கும் மைனஸ் ஓட்டுக்களை பார்த்தீர்களா? அந்த அளவு சம்பந்தப்பட்டவர்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது இந்த பதிவு. வர்ணாசிரமம் சரிவதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியுமா என்ன?

சிராஜ் said...

இது வர்ணாசிரம குரூப் இல்ல சகோ. இது ஏதோ ஒரு கும்மி அடிக்கிற குரூப்.

Nizam said...

//இது ஏதோ ஒரு கும்மி அடிக்கிற குரூப்.// சிராஜ் பாய் நானும் உங்களுடன் உடன்படுக்கிறேன்.

Anonymous said...

//வர்ணாசிரமம் சரிவதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியுமா என்ன? //

Adichu vidunga periyavare. kaasa panama...