Followers

Friday, September 16, 2022

சகோ பட்டுக்கோட்டை யஹ்யா முகநூல் பக்கத்திலிருந்து

 //சகோ #பட்டுக்கோட்டை_யஹ்யா முகநூல் பக்கத்திலிருந்து//

ஆச்சரியம்
நாங்கள் இருவரும் முன்பிருந்த மார்க்கத்தில் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள்.
ஒரே மார்க்கத்தை சித்தாந்தத்தை பின்பற்றியவர்களாக இருப்பினும் உறவு ரீதியாக எங்களுக்குள் எவ்வித பந்தமும் கிடையாது.
ஆனால்...?
நாங்கள் இப்போது உறவினர்கள் என்பதுதான் ஆச்சரிய அதிசயம்.
காரணம்..?
இறைவனின் பேரருளால் 37 வருடங்களுக்கு முன்பு ராமானுஜம்,இவர் தற்போது ரஹ்மத்துல்லாஹ்வாகவும்,10 வருடங்களுக்கு முன்பு மாரிமுத்து எனும் நான் தற்போது முஹம்மது யஹ்யாவாகவும் ஓரிறைக் கொள்கையை ஏற்று இஸ்லாத்தை தழுவிய முஸ்லிம்கள் நாங்கள்.
பிறப்பின் அடிப்படையில் எங்கள் இருவருக்கும் இருக்கக்கூடிய சொந்த பந்தங்களை விட அதன் பாச நேசத்தை விட... கொள்கைக்காக எங்களுக்குள் ஏற்பட்ட அன்பும் பாசமும் அளப்பரியது.
நாங்கள் அல்லாஹ்வுக்காக ஒருவருக்கொருவர் நேசிக்கின்றோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டமைத்த இறை மார்க்க அடிப்படையிலான சகோதரத்துவம் இது.
எங்கள் இருவருக்காகவும் எங்களின் குடும்பத்தினருக்காகவும் துஆ செய்யுங்கள்.
பட்டுக்கோட்டை யஹ்யா



No comments: