Followers

Wednesday, October 25, 2006

இறைத் தூதர் பற்றி - சகோதரர் எழிலுக்கு!

இறைத் தூதர் பற்றி - சகோதரர் எழிலுக்கு!

சகோதரர் எழில் எனக்கு அளித்திருக்கும் கேள்விகள்.


அன்பு சகோதரர் சுவனப்பிரியனுக்கு,

///சகோதரர் எழிலுக்கு!//உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் பதில் சொல்லமுடியாத போது, "இத்துடன் இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்" என்று நழுவுகிறீர்கள். //எந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது என்று நழுவினேன் என்பதை விளக்கினால் நானும் தெரிந்து கொள்வேன்.//

மன்னிக்க வேண்டுகிறேன். இவ்வாறு நான் எழுதியதை தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒரு சில இடங்களில் நீங்கள் இவ்வாறு எழுதியது அதன் மீது தொடர்ந்து விவாதம் நடப்பதை நீங்கள் விரும்பவில்லை என்ற தோற்றத்தை தந்தது. அவ்வள்வே.

/////நீங்கள் இயேசு கிரிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தில் வாழ்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.அப்போது உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில குறைகளும் ஒரு சில நிறைகளும் கொண்ட மனிதர்கள்) தன்னை உண்மையான இறைதூதர் என்று அழைத்துக்கொண்டு போதிக்கிறார்கள்.நீங்கள் யாரை உண்மையான இறைதூதர் என்று பின்பற்றுவீர்கள்? எப்படி? ஏன்?//'மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும் நற்செய்தி கூறவும் நபிமார்களை இறைவன் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான்.'2 : 213 - குர்ஆன்ஒருவர் தன்னை இறைவனின் தூதர் என்று சொல்வதற்கு முதல் தகுதி அவருக்கு இறைவனிடம் இருந்து வேதம் வர வேண்டும். ஒவ்வொரு தூதருக்கும் தான் வேதங்களை அருளியதாக இறைவன் குர்ஆனிலும் இதற்கு முந்திய வேதங்களிலும் குறிப்பிடுகிறான்.//
மிகச்சரியான வார்த்தை. இறைவனின் தூதர் என்று சொல்வதற்கு முதல்தகுதி அவருக்கு இறைவனிடமிருந்து வேதம் வரவேண்டும். அப்படி வரும்போது அது இறைவனிடமிருந்துதான் வருகிறது என்ற அடையாளமும் வேண்டும். இல்லையெனில் அது உண்மையிலேயே இறைவனிடமிருந்து வந்த வேதம்தானா என்ற சந்தேகம் வர வாய்ப்பிருக்கிறது.அதற்கு கீழே இன்னொன்றும் எழுதியிருந்தேன். அதாவது "இந்த காலத்தில் உங்களிடம் குரான் அல்லது இயேசுவின் போதனைகள் இல்லை ஆகவே அதனை மேற்கோள் காட்டமுடியாது" என்று குறித்திருந்தேன். அதனை உங்கள் பதிலில் நீக்கிவிட்டீர்கள். இருப்பினும் நீங்கள் சொல்வதையே எடுத்துக்கொள்கிறேன்.

//என்னிடமும் வேதம் இருக்கிறது என்று யாரும் பொய் சொல்ல முடியாது. ஏனெனில் இறைவனின் வார்த்தைக்கும் மனிதனின் வார்த்தைக்கும் மிகப் பெரும் வித்தியாசம் இருக்கும். உதாரணத்திற்கு அரபி மொழி தெரிந்தவர்கள் குர்ஆனின் போதனைக்கும், முகமது நபியின் போதனைக்கும் உள்ள வித்தியாசத்தை மிக எளிதில் விளங்கிக் கொள்வார்கள். குர்ஆனின் எழுத்து நடை மிக உயர்ந்த தரமாக இருக்கும். முகமது நபியின் போதனைகளோ நாம் சாதாரணமாக உரையாடுவது போன்று சாதாரண மொழியில் இருக்கும். இதன் வித்தியாசத்தை மொழி பெயர்ப்புகளிலேயும் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம். மேலும் இன்றைய அறிவியல் கண்டு பிடிப்புகளோடு மோதாமலும் அத்தகைய வசனங்கள் இருக்க வேண்டும். எல்லா காலத்துக்கும் பொருந்தியும் வர வேண்டும்.//

தயவுசெய்து குரான் உண்மையிலேயே இறைவனிடமிருந்து வந்ததா என்று கேட்கவில்லை. இருப்பினும் அதனை உதாரணமாக பயன்படுத்துகிறீர்கள் என்று எடுத்துக்கொள்கிறேன்.ஒரு புத்தகத்தின் நடை மிக உயர்ந்த தரமாக இருக்கும் என்று சொல்வது subjective. ஒருவருக்கு உயர்ந்த தரமாக தோன்றுவது மற்றொருவருக்கு அப்படி தோன்றாமல் இருக்கலாம். ஒரு புத்தகத்தின் நடை மிக உயர்ந்த தரமாக இருக்கிறது என்று பத்து பேர் எழுதியதை மேற்கோள் காண்பித்தால், அதே புத்தகத்தின் நடை மிகச்சாதாரணமானது என்று இன்னொரு பத்து பேர் எழுதியதை வேறொருவர் மேற்கோள் காட்டலாம். அந்த புத்தகத்தை இறைவனின் வேதம் என்று கூறும் நபர்கள் அது மேலான நடை என்றும் அந்த இறைதூதரை ஒப்புக்கொள்ளாதவர்கள் அது கீழான நடை என்றும் சொல்லலாம். (உதாரணமாக கிரிஸ்துவர்களின் இணையப்பக்கங்களில் குரானின் நடை மிகச்சாதாரணமானது, என்று எழுதப்பட்டிருப்பதை பார்க்கலாம்)காளிதாசரின் காவியங்கள் எந்த வித சமஸ்கிருதக்கவிதையையும் விட மிக மிக உயர்ந்தவை என்பது என் எண்ணமாக இருக்கலாம். அதன் கவித்துவமும் நடையும் மிகச்சிறந்தவை என்று நான் கருதலாம். நீங்கள் கருதாமல் இருக்கலாம். கம்பனின் கவி அமுது எட்டிய உயரங்களை இன்னமும் உலகத்தின் எந்த மொழிக்கவிதையும் எட்டியதில்லை என்று நான் கருதலாம். நீங்கள் அப்படி கருதாமல் இருக்கலாம். இவர்கள் இறைதூதர்களா? அவர்களது புத்தகங்களுக்கு குரான் போன்ற அந்தஸ்து உண்டா? கம்பன் சாதாரணமாக பேசுவதற்கும் கவிதையாக பொழிவதற்கும் வித்தியாசம் இருந்திருக்கும். அதனால் கம்பன் இறைதூதராக ஆவாரா? அறிவியல் சம்பந்தமாக எடுத்துக்கொள்வோம். ஒரு இறைதூதரை பின்பற்றுபவர்கள் அவரது புத்தகத்தில் உள்ளவை எல்லாம் அறிவியலை ஒத்து இருக்கின்றன என்று வாதிடலாம். மறுசாரார் அப்படி இல்லை என்று வாதிடலாம். இதனை இரண்டாம் நிலையில் வைப்போம்.ஒரு இறைதூதர் தனது புத்தகத்தில் எந்த விதமான உலக விஷயங்களும் இல்லாமல் வெறும் நல்வாழ்வுக்கான அறிவுரைகள் மட்டுமே எழுதியிருக்கலாம். அதனால் அந்த புத்தகம் அறிவியலுக்கு பொருந்துமா இல்லையா என்ற விவாதத்துக்கே இடமில்லாமல் இருக்கலாம். அல்லவா?
//அடுத்து அந்த இறைத் தூதர்களுக்கு கொடுக்கப் பட்ட அதீத சக்திகள். அந்த மக்கள் தூதர்களிடம் அத்தாட்சியைக் கேட்கும் போது இறைவன் சில அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவான். ஏசு இஸ்ரவேலர்களைப் பார்த்துக் கூறியதாக குர்ஆன் சொல்லும் போது...'உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து அதில் ஊதுவேன். இறைவனின் விருப்பப்படி அது பறவையாக மாறும். இறைவனின் விருப்பப்படி பிறவிக் குருடையும் குஷ்டத்தையும் நீக்குவேன். இறந்தோரை உயிர்ப்பிப்பேன்.நீங்கள் உண்பதையும் உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்'3 : 49 - குர்ஆன்அந்த மக்களை இவர் இறைத் தூதர்தான் என்று விசுவாசம் கொள்வதற்காக இறைவன் இது போன்ற சக்திகளை அந்த தூதர்களுக்குத் தருவான். இதைப் பார்த்தும் இவர் இறைத் தூதர்தான் என்று விசுவாசம் கொள்வர். முகமது நபி காலத்தில் சந்திரன் பிளந்த அற்புதத்தை கேரள அரசன் சேரமான் பெருமாள் தன் சாளரத்தின் வழியாகப் பார்த்து அதிசயிததார். பிறகு தன் ஆஸ்தான ஜோதிடர்களிடம் இது பற்றிக் கேட்க அவர்கள் முந்தய வேதங்களை ஆராய்ந்து அரபுலகில் தூதர்அவதரித்திருப்பதன உண்மையை விளக்குகின்றனர். அதன் பிறகு அரசர் இஸ்லாமியராக மாறி முகமது நபியைச் சந்திக்க மெக்கா நோக்கி புறப்பட்டதையும் நாம் நம் நாட்டு வரலாறுகளில் பார்க்கிறோம். கண்ணதாசனும் கல்கியில் 'சேரமான் காதலி' என்ற தொடரை எழுதியதையம் நாம் அறிவோம். இது போன்று பல அற்புதங்களினால் நாம் ஒருவரை இறைவனின் தூதர் என்று முடிவு செய்கிறோம்.//

அடுத்து, நீங்கள் குறிப்பிடுவது போன்ற வித்தைகளை செய்யும் ஏராளமானவர்கள் இந்தியாவில் இருந்தார்கள். ஏன் இன்னமும் இருக்கிறார்கள். இன்றும்கூட பல மந்திரவாதிகள் ஒன்றுமில்லாத தொப்பியிலிருந்து ஏராளமான பறவைகளை உற்பத்தி பண்ணுகிறார்கள். அவர்கள் எல்லோரும் இறைதூதர்களா? ஏன் இப்போது கூட சுவிசேஷ கூட்டங்களில் பிறவிக்குருடரையும் முடமானவர்களையும் நடக்கவைக்கும் வித்தைகளை பார்க்கலாம். குஷ்டத்தை இன்று மருத்துவர்கள் நீக்குகிறார்கள். பிறவிக்குருடரையும் இன்று பார்வை உள்ளவராகா மாற்றும் தொழில்நுட்பம் வந்திருக்கிறது. (பரிசோதனையில் இருக்கிறது). இந்த மருத்துவர்களும் சுவிசேஷ பிரச்சாரகர்களும் இறைதூதர்களா?ஒரு மேஜிக் ஷோவின் போது, நான் வீட்டிலிருந்து எடுத்து வந்த ரூபாய் நோட்டின் எண்ணை மந்திரவாதி சரியாகச் சொன்னார். இப்படிப்பட்ட திறமையான மந்திரவாதி கூறுவதையும் இறைதூதர் கூறுவதையும் எப்படி வித்தியாசப்படுத்தி பார்க்கப்போகிறீர்கள்?சந்திரன் இரண்டாக தெரிவது முகம்மதுவின் சாட்சியம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். மேலும் இன்னொரு முறை கூறுகிறேன். முகம்மது இறைதூதரா அல்லவா என்பது என் கேள்வி அல்ல. இரண்டு மூன்று நபர்கள் ஆளுக்கொரு கண்கட்டு வித்தை செய்து தனது சாட்சியமே இறைவன் அளித்தது என்று கோரினால், நாம் எப்படி உண்மையான இறைதூதரை கண்டுபிடிப்பது என்பதுதான்.(ஆனால், சந்திரனோ சூரியனோ இரண்டாக தெரிவது கானல் என்று சொல்லப்படும் மிராஜ் வகையைச் சார்ந்த ஒரு நிகழ்வு. ஒரு சந்திரன் இரண்டாக தெரிவது அதிசயமல்ல என்று உங்களுக்கு தெரியும் என்று கருதுகிறேன். வெப்பக்காற்று மேலெழும்போதோ அல்லது குளிர்காற்று மேலெழும்போதோ, அந்த காற்று ஒரு கண்ணாடி போல நின்று அந்த காற்றின் ஒரு பக்கத்திலிருக்கும் சந்திரனை பிரதிபலித்து இரண்டாக காட்டும். இதன் பெயர் லாட்டரல் மிராஜ் lateral mirage. பக்கவாட்டில் இன்னொரு சந்திரன் தோன்றும் லாட்டரல் மிராஜ் அபூர்வமாக தென்படும். ஆனால் அது அதிசயமல்ல.இன்னொருவர் சூரியன் இரண்டாக தெரியும்போது, என் சாட்சியம் இது என்று கூறினால், நாம் எப்படி அதனை புரிந்து கொள்ள வேண்டும்? அப்படிப்பட்ட ஒரு மிராஜ் நடக்கும்போது அதனை ஒருவர் இதுதான் என் சாட்சியம் என்று ஏமாற்றினால் நம்மால் எப்படி அடையாளம் காண முடியும்?)ஆகவேதான், எல்லா இறைதூதர்களுக்கும் பொதுவான அடையாளம் ஒன்றை கேட்கிறேன். இந்திய தூதுவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு இலச்சிணையை இந்திய அரசு கொடுப்பது போன்று, இறைவனும் தன் இறைதூதர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு அடையாளத்தை அனுப்பியிருக்க வேண்டும்.

/////இறைவன் அனைத்து மக்களிடம் இவர்தான் இறைதூதர் என்று பேச முடியுமென்றால், ஏன் இடையே இறைதூதர் என்ற இடைத்தரகர்? சொல்ல வேண்டியதை நேரடியாக இறைவனே எல்லா மக்களிடம் கூறிவிடலாமே? அது ஒன்றும் கடினமான வேலையாக இறைவனுக்கு இருக்காதே? பதில் கூறுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்//'அவன் வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன். ஒரு காரியத்தை அவன் முடிவு செய்யும் போது அது குறித்து 'ஆகு' என்றே கூறுவான். உடனே அது ஆகி விடும்.'2 : 117 -குர்ஆன்'இறைவன் எங்களிடம் பேசக் கூடாதா? அல்லது எங்களுக்கு ஓர் சான்று வரக் கூடாதா?' என்று அறியாதோர் கூறுகின்றனர். இவர்களுக்கு முன் சென்றோர் இவர்களின் கூற்றைப் போலவே கூறினர். அவர்களின் உள்ளங்கள் ஒத்ததாக இருக்கின்றன. உறுதியான நம்பிக்கைக் கொள்ளும் சமுதாயத்திற்கு சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம்.'2 : 118 - குர்ஆன்.தன்னுடைய அடியானான எழில் மற்றொரு அடியானான சுவனப்பிரியனிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்பார் என்று இறைவனுக்குத் தெரிந்ததால்தான் பதிலை இறைவன் குர்ஆனிலேயேத் தருகிறான்.//

நான் கேட்டிருக்கும்கேள்விகளை முன்னரே பலர் கேட்டிருக்கிறார்கள் என்றுதான் தெரிகிறது. அவ்வாறு கேட்பவர்களை "அறியாதோர்" என்று அவமானப்படுத்துவது ஏன் என்று தெரியவில்லை? சாதாரண மக்களும் எந்த வித சந்தேகமும் இல்லாமல் புரிந்து கொள்ளக்கூடியதாகத்தானே இறைதூதரின் குணாம்சங்கள் இருக்க வேண்டும்? இவ்வாறு கேள்வி கேட்கும் வரைக்கும் மக்களை வைத்திருப்பது ஒரு முக்கியமான இறைதூதரை அனுப்பிவிட்டு அதற்கு தக்க சாட்சியங்களை அனுப்பாமல், கேள்வி கேட்பவரை பார்த்து "அறியாதோர்" என்று சரியாகப்படவில்லை. இதனைப்பற்றி இனிய சகோதரர் இப்னு பஷீர் அவர்கள் பதிவு சம்பந்தமாக எழுதியதில் எழுதியிருக்கிறேன்.நம்பிக்கை கொள்ளும் சமுதாயம் என்றால் என்ன? யாரேனும் ஒருவர் தன்னை இறைதூதர் என்றுகூறினால் உடனே நம்பும் சமுதாயமா? அதாவது எந்த கேள்வியும் கேட்கக்கூடாது. எந்த ஆதாரமும் கேட்கக்கூடாது. எந்த சான்றும் கேட்கக்கூடாது. நான் இறைதூதர் என்று ஒருவர் கூறினால் உடனே நம்பிவிடவேண்டும் என்று கூறுகிறீர்களா? அப்படியென்றால் இரண்டு பேர் நான் இறைதூதர் அவர் இறைதூதர் இல்லை என்று கூறினால் யாரை நம்புவீர்கள்? இருவருமே ஒரு சில வித்தைகளை செய்து காட்டுகிறார்கள். இருவரும் எனக்கு இறைவன் கொடுத்த சான்று இது என்று கூறுகிறார்கள். யார் உண்மையான இறைதூதர் என்று நம்புவீர்கள்?
//ஒரு முதலாளி தன் வெலைக்காரனை அனுப்பி தனக்குத் தேவையான பொருட்களை வாங்கி வரச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த முதலாளியால் கடையில் சென்று வாங்குவதற்கு இயலாது. அதனால்தான் அவர் வேலையாட்களை வைத்துள்ளார் என்று நாம் கூற மாட்டோம். அவரால் அந்தக் காரியத்தை செய்ய முடியும். என்றாலும் அவர் தனது அந்தஸ்து காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்கோ கூட வேலையாட்களை வைத்திருக்கலாம். இந்த உதாரணத்தை உங்கள் கேள்வியோடு பொருத்திப் பாருங்கள். உங்கள் கேள்விக்கான விடை கிடைக்கும். இறைவனால் முடியாதது ஒன்றும் இல்லை. ஆனால் இங்கு மனிதர்களை நேர்வழிப் படுத்த வேண்டும். மனிதர்களை நேர்வழிப் படுத்த மனிதர்களைத்தான் தூதராக அனுப்ப முடியும். ஒரு மனிதன் எப்படி இறை வணக்கம் புரிவது? எப்படி திருமணம் செய்து கொள்வது? கொடுக்கல் வாங்கலை எவ்வாறு அமைத்துக் கொள்வது? மாற்று மதத்தவரோடு எவ்வாறு நடந்து கொள்வது? என்பதை எல்லாம் ஒரு மனிதன்தான் செய்து காட்ட முடியும். பிரச்சாரம் பண்ணும் போது எதிர்ப்புகள் வரலாம். நாடு கடத்தப் படலாம். சில நேரங்களில் கொலையும் செய்யப் படலாம். இதற்கு முந்திய சமுதாயங்களில் கூட சில நபிமார்கள் கொல்லப் பட்டும் இருக்கிறார்கள். சில நபிமார்களுக்கு ஆட்சி அதிகாரத்தையும் இறைவன் கொடுத்துள்ளான். எனவே தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாக இறைவன் மனிதனையே அனுப்புகிறான். இந்த ஏற்பாடுஇல்லாமல் வேறொரு ஏற்ப்பாட்டை இறைவன் செய்திருந்தால் 'மனிதர்களாகிய எங்களுக்கு எங்களிலிருந்து ஒரு வழிகாட்டியை இறைவன் அனுப்பியிருக்கக் கூடாதா?' என்று மாற்றியும் கேட்பான் மனிதன்.இறைவனே மிக அறிந்தவன்.///

கேள்வி மிக எளியது. ஒருவர் இறைதூதர் என்பது யார் யாருக்கெல்லாம் நிச்சயமாக தெரியும்? ஒன்று அந்த இறைதூதருக்குத் தெரியும். அவரை அனுப்பிய இறைவனுக்குத் தெரியும். அல்லது இறைவனிடமிருந்து வானவர் வந்திருந்து மக்களுக்கு சாட்சியம் சொன்னால், அந்த வானவருக்கு தெரியும். ஒருவர் வந்து "வானவர் வந்து சொல்ல வேண்டியதுதானே என்று கேட்கிறாய். சாட்சி கொடு என்று கேட்கிறாய். அதெல்லாம் காட்டியும் பல இறைதூதர்களை நீ கொன்றுவிட்டாய். அதனால், நான் உனக்கு எந்த விதமான சாட்சயமும் தரமாட்டேன். நீ நம்பிக்கையுள்ள சமுதாயமாக என்னை நம்ப வேண்டும்" என்று சொன்னால் நீங்கள் உடனே அவரை இறைதூதர் என்று நம்ப ஆரம்பித்துவிடுவீர்களா? ஹிட்லர் "கடவுள் நம்முடன் இருக்கிறார்" என்று மக்களை நம்ப வைத்தார். இங்கிலாந்து பேரரசி தன்னை கடவுளால் நியமிக்கப்பட்டவர் என்று கூறிக்கொள்கிறார். இதே போல பிரான்ஸ் அரசர்களும் கூறிக்கொண்டார்கள். பஹாவுல்லா தன்னை இறைதூதர் என்று கூறிக்கொண்டார். ஜப்பானிய அரசர் தன்னை இறைவனின் வம்சம் என்று கூறிக்கொண்டு 1600 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே வம்சத்தினராக ஆட்சி செய்துவருகிறார்கள். இப்படி கேள்வி கேட்காமல் நம்புபவர்களை, நம்பிக்கையுள்ள சமுதாயம் என்று இறைவன் போற்றுவாரா? மேற்கண்டவர்களில் யார் உண்மையைச் சொல்கிறார் என்று நாம் நம்புவது? கடவுள் உன்னை நியமித்தார் என்பதற்கு சாட்சியம் கொடு என்று கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?சரி அப்படி ஒரு தெளிவான அடையாளத்துடன் ஒரு இறைதூதரை அனுப்பினால், மனிதன் "ஒரு அடையாளமும் இல்லாமல் எங்களிலிருந்து ஒரு வழிகாட்டியை இறைவன் அனுப்பியிருக்கக்கூடாதா?" என்று கேட்பானா? மனிதனையே அனுப்பட்டும். ஆனால் எந்த வித சந்தேகத்தும் இடமின்றி தெளிவான அடையாளத்துடன் அனுப்பட்டும் என்று சொல்கிறேன். பொய் இறைதூதர்களிடம் ஏமாந்து விடாமல் காப்பதற்கு மிகவும் அறிந்த இறைவன் ஏற்பாடு செய்ய வேண்டுமல்லவா? கடவுள் ஒரு சாட்சியம் கொடுத்தால் அதனை மனிதனால் மறுக்க முடியுமா? யானையை யானை என்று ஒரு குழந்தை கூட சொல்லிவிடும். புறாவை புறா என்று குழந்தை கூட சொல்லிவிடும். இதற்கு நிரூபணம் வேண்டாமே? அப்படிப்பட்ட தெளிவான குழப்பமில்லாத அடையாளத்துடன் ஒரு இறைதூதரை அனுப்புவது இறைவனுக்கு கடினமானதா என்ன?முதலாளி வேலைக்காரனை வெறுமே வைத்துக்கொள்வதில்லை. ஒரு காரணத்துடன் தான் வைத்துக்கொள்கிறார். அவருக்கு நிறைய வேலை இருக்கலாம். அவருக்கு இந்த சின்ன வேலையைச் செய்வதற்கு நாமே ஏன் செய்ய வேண்டும். இவர் செய்யட்டும் என்று ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஒப்புக்கொள்கிறேன்.ஆனால், அந்த வேலைக்காரனை ஒருவரிடத்தில் அனுப்பி "என் சார்பாக இவனை அனுப்புகிறேன். இவன் சில விஷயங்களை எப்படி செய்வது என்று சொல்லித்தருவான். அது படி நடவுங்கள்" என்று அனுப்பி வைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது அந்த முதலாளி இந்த வேலைக்காரன், என் வேலைக்காரன் தான் என்பதற்கு அனுப்பியவரிடம் சாட்சியம் அனுப்பி வைக்க வேண்டும். இல்லையென்றால் கண்டவனெல்லாம் நான் தான் அந்த முதலாளியின் வேலைக்காரன் என்று சொல்லிக்கொள்வான். முதலாளி அனுப்பும் அந்த சாட்சியம், அதனை பெறப்பட்டவர் நம்பும்படி இருக்க வேண்டும். ஒவ்வொருவனும் ஒவ்வொரு வித்தை செய்து காண்பித்து, "நான் தான் அந்த முதலாளியின் வேலைக்காரன். அவன் சொல்வதை நம்பாதே, நான் சொல்வதை நம்பு" என்றால் குழப்பமே மிஞ்சும்.முதலாளி உண்மையிலேயே ஒரு வேலைக்காரனை அனுப்பினால், அவர் நிச்சயம் குழப்பமில்லாமல் தன்னுடைய வேலைக்காரனை அடையாளப்படுத்திவிடுவார். அப்படி குழப்பமில்லாத தெளிவான அடையாளம் கொண்ட வேலைக்காரன் வரவில்லை என்றால், முதலாளி எந்த வேலைக்காரனையும் அனுப்பவில்லை என்றுதான் பொருள்.இந்த கருத்துக்களை யோசித்து எழுத தூண்டிய சகோதரர் இப்னுபஷீர் அவர்களுக்கும், சகோதரர் சுவனப்பிரியனுக்கும் மிக்க தாழ்மையான நன்றிகள்
Posted by எழில் on 10.21.2006 at 10:51 AM

8 comments:

suvanappiriyan said...

சகோதரர் எழிலுக்கு!

//கிரிஸ்துவர்களின் இணையப்பக்கங்களில் குரானின் நடை மிகச்சாதாரணமானது, என்று எழுதப்பட்டிருப்பதை பார்க்கலாம்)//

அவர்கள் சொல்வது உண்மையே! குர்ஆன் மிக உயர்ந்த இலக்கிய நடையில் இருக்கும். அதே சமயம் சாதாரண மனிதர்களுக்கும் விளங்கக் கூடிய வகையில் தெளிவாக இருக்கும். நீங்கள் குர்ஆனின் மொழி பெயர்ப்பை படிப்பது போல் பைபிளை அவ்வளவு சுலபமாக படித்து விட முடியாது. அதே போல் காளிதாசனோ கம்பனோ எழுதிய ஆக்கங்களை சாதாரண பாமரன் புரிந்து கொள்வது சிரமம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட தொனியில் குர்ஆன் அமைந்திருப்பதையே இது ஒரு இறை வேதம் என்பதற்கு சான்றாகக் கூறலாம். அதேபோல் ஒரே மனிதரிடமிருந்து இரண்டு தன்மைகள் வெளிப்படுவது மிக அரிது. என் எழுத்து நடையையும் உங்களின் எழுத்து நடையையும் பதிவை தொடர்ந்து படித்து வருபவர்கள் எளிதில் கண்டு பிடித்து விடலாம். அப்படியே என் நடையை நான் திறமையாக மாற்றினாலும் ஒரு நாள் அல்லது பத்து நாட்களுக்கு மேல் என்னால் தாக்கு பிடிக்க முடியாது. ஆனால் முகமது நபியோ இந்த குர்ஆனை இறைவனிடமிருந்து வாங்கித் தந்தது இருபத்தி மூன்று வருடங்கள் எனபதையும் நாம் மறந்து விடக் கூடாது. அன்றைய அரபு பண்டிதர்களே (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) குர்ஆனின் நடை அழகைப் பார்த்து ஆச்சரியப் பட்டனர். 'இது கண்டிப்பாக முகமதின் வார்த்தைகள் கிடையாது. ஆனால் இந்த செய்தி எங்கிருந்து வருகிறது என்பது தான் மர்மமாக இருக்கிறது' என்று தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள். அந்த பண்டிதர்களே முடிவில் இது இறை வாக்குதான் என்று நம்பி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதைப் பார்க்கிறோம்.

//ஒரு இறைதூதர் தனது புத்தகத்தில் எந்த விதமான உலக விஷயங்களும் இல்லாமல் வெறும் நல்வாழ்வுக்கான அறிவுரைகள் மட்டுமே எழுதியிருக்கலாம். அதனால் அந்த புத்தகம் அறிவியலுக்கு பொருந்துமா இல்லையா என்ற விவாதத்துக்கே இடமில்லாமல் இருக்கலாம். அல்லவா?//

ஒரு மதத்தின் பிரச்சாரத்துக்கு 'நீ தொழ வேண்டும், நோன்பு வைக்கவேண்டும், மெக்கா புனிதப் பயணம் செல்ல வேண்டும்' என்று ஆன்மீகக் கட்டளைகளை மட்டுமே இறைவன் குர்ஆனில் கொடுத்திருக்க முடியும். ஆனால் 'ரோம சாம்ராஜ்ஜியம் வெற்றி பெறும் என்ற முன்னறிவிப்பு : பூமியில் மட்டுமே மனிதனால் வாழ முடியும, ஒரு வருடம் என்பது பன்னிரண்டு மாதங்கள் தான்,புவி ஈர்ப்பு சக்தியைப்பற்றிய முன்னறிவிப்பு, சூரியனும் சந்திரனும் அதனதன் பாதையில் நீந்திச் செல்கின்றன என்ற அறிவிப்பு, அனைத்து படைப்புகளிலும் ஜோடியைப் படைத்துள்ளேன் என்ற அறிவிப்பு, ஓரங்களில் பூமி குறைகிறது என்ற அறிவிப்பு, மலைகளை முளைகளாக நாட்டியிருக்கிறேன் என்ற அறிவிப்பு, பால் வயிற்றில் எவ்வாறு சுரக்கிறது என்ற உண்மை, இரு கடல்களுக்கிடையே தடுப்பு, மனிதர்களின் எடைக்கேற்ப பூமியின் எடையும் குறையும் என்ற அறிவிப்பு, ஆணும் பெண்ணும் சேர்ந்து உருவான கலப்பு விந்திலிருந்தே உயிரினம் உருவாதல் என்ற உண்மை, தேன்எவ்வாறு உற்பத்தியாகிறது என்ற உண்மை, விண்வெளிப்பயணம் சாத்தியமே என்ற உண்மை, கர்ப்ப அறையின் தனித் தன்மை, விரல் ரேகைதான் மனிதனின் முக்கிய அடையாளம் என்ற உண்மையைக் கூறுதல் ,மனிதன் மலைகளின் உயரததிற்கு பூமிக்கு அடியில் செல்ல முடியாது என்ற உண்மை போன்ற அந்த மக்களுக்கு அவசியம் இல்லாத செய்திகளை சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

பிற்காலத்தில் மக்கள் அறிவு வளர்ச்சி பெற்று 'இதை இறை வேதம் என்று எப்படி ஒத்துக் கொள்வது?' என்று எழிலைப் போல் கேள்வி கேட்பவர்களுக்கு பதிலளிக்கத்தான் இந்த உண்மைகளை இறைவன் கோடிட்டுக் காட்டுகிறான். ஒன்று இரண்டல்ல குர்ஆன் முழுக்க இது போல் பல நூறு வசனங்கள். அறியாமைக் காலத்தில் வாழ்ந்த எழுதவும் படிக்கவும் தெரியாத ஒரு குருட்டு சமூகத்தில் தோன்றிய முகமது நபி எவ்வாறு இந்த உண்மைகளை சொல்ல முடியும்? எனபதற்கான உங்கள் பதில் என்ன? அதே போல் குர்ஆன் கோடிட்டுக் காட்டும் எந்த உண்மையையும் இது வரை எந்த அறிவியல் அறிஞரும் மறுக்கவில்லை என்பதற்கும் உங்கள் பதில் என்ன?

நம் திருக்குறளை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். நான் தமிழன் என்ற முறையில் திருக்குறள் நம்மிடம் இருப்பதற்கு நானும் பெருமை படுகிறேன்.இரண்டு அடிகளில் திருவள்ளுவர் சொல்லும் கருத்துக்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இத்தகைய பெருமை வாய்ந்த குறளிலும் சில குறைகளைக் காட்டமுடியும். உதாரணத்திற்கு ஒன்றை எடுத்துக் கொள்வோம்.

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்பு கொண்டற்று
115 - அதிகாரம்: களவியல்

நான் என் காதலரைக் கண்டது ஒருநாள் தான். ஆனால் அதனால் உண்டான அலரோ, நிலாவைப் பாம்பு கௌவியது போல் என் உடல்எங்கும் பரவியுள்ளது.

இந்த இடத்தில் வள்ளுவர் சிவன் தலையைக் கற்பனை செய்து அன்றைய மக்களின் கிரகணக் கதையை தன் குறளில் எடுத்தெழிதியுள்ளார். இதே போல் பல குறள்களை என்னால் காட்ட முடியும். அந்த கால மக்களின் நம்பிக்கைக்கு அது சரி. இப்பொழுதும் அந்த கருத்தை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா? மனிதர்கள் எழுதியதில் இது போன்ற குறைகள் வருவது சகஜம். இது போன்று குர்ஆனில் இன்றைய அறிவியலோடு மோதக் கூடிய ஒரு வசனத்தைக் காட்டுங்கள். மேற்கத்திய அறிவியலார் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு முயற்ச்சித்து முடிவில் தோல்வியையே தழுவி பிறகு இஸ்லாத்தை தழுவியதாகத்தான் வரலாறு.

//பல மந்திரவாதிகள் ஒன்றுமில்லாத தொப்பியிலிருந்து ஏராளமான பறவைகளை உற்பத்தி பண்ணுகிறார்கள். அவர்கள் எல்லோரும் இறைதூதர்களா?
ஏன் இப்போது கூட சுவிசேஷ கூட்டங்களில் பிறவிக்குருடரையும் முடமானவர்களையும் நடக்கவைக்கும் வித்தைகளை பார்க்கலா//

அற்புதங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று தந்திரம். மற்றது இறைவனின் செயல். நீங்கள் சொல்லும் மந்திரவாதிகள் அந்த அரங்கத்தில் சில செட்டப்களை செய்து நம் கண்களை மறைத்து சில புறாக்களை வரவழைப்பார்கள். இது தொடருமென்றால் அவர் மேஜிக் தொழிலை நம்ப வேண்டியது இல்லை. தன் வீட்டிலேயே இது போன்ற புறாக்களை உற்பத்தி செய்ய முடியும். அது முடியாததால்தான் நம்மிடம் பத்து இருபது என்று டிக்கெட் போடுகிறார்.

இது போன்ற ஒரு சம்பவம் இறைத் தூதர் மோசேயின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. மோசே சில அற்புதங்களை பிரவுன் என்ற அரசனுக்கு முன்னால் தான் இறைத் தூதர் தான் என்பதை நிரூபிப்பதற்காக செய்து காட்டினார். அந்த அரசனோ இதைவிட சிறந்த மந்திரவாதிகளை அழைத்து வந்து மோசேயோடு போட்டியிட வைத்தான். அந்த போட்டியில் மூசாவே வெற்றி பெறுகிறார். இவரிடம் உண்மை இருக்கிறது என்று உணர்ந்து கொண்ட சூன்யக் காரர்கள் மூசாவின் மார்க்கத்தை ஏற்று முஸ்லிம்களாகிறார்கள். 'என் அனுமதி இன்றி மூசாவின் மார்க்கத்தை நீங்கள் எப்படி ஏற்கலாம்?' என்ற பிர்அவுன் அவர்களை கழுவிலேற்றியும் மாறு கால் மாறு கை வாங்கியும் அந்த சூன்யக் காரர்களை இறை நேசர்களாக்கினான்.

இந்த சூன்யக் காரர்களின் நெஞ்சுறுதியை கண்டு வியந்து போன பிர்அவுனின் மனைவி ஆசியாவும் இஸ்லாத்தை ஏற்கிறார். 'உண்மை மூசாவிடம் இருக்கிறது. நீ சொல்வது அனைத்தும் பொய்' என்று பிர்அவுனிடமே ஆசியா அவர்கள் சொல்ல ஆரம்பிக்கிறார்.

இந்த சம்பவத்தில் அந்த சூன்யக்காரர்களுக்கே மூசா செய்வது சூன்யம்அல்ல. அது இறைவனின் புறத்திலிருந்து கிடைத்த சக்தியால் என்பது அவர்களுக்கு விளங்கியது.

அதே போல் முன்பு இறைவனின் உதவி கொண்டு ஏசு முடவர்களைக் குணமாக்கினார். குருடர்களை பார்க்கச் செய்தார். ஏசுவுக்குப் பிறகு முகமது நபியோடு இது போன்ற அற்புதங்கள் வரும் வாசல் அடைபட்டு விட்டது. இந்த காலத்தில் சுவிஷேஷக் கூட்டங்களில் இது போன்ற அற்புதங்கள் எவ்வாறு நிகழ்த்தப் படுகிறது என்பதை கிறித்தவர்கள் தான் விளக்க வேண்டும்.

//இறைவனும் தன் இறைதூதர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு அடையாளத்தை அனுப்பியிருக்க வேண்டும்.//

இறைத் தூதர்கள் அனைவருக்கும் பொதுவான அடையாளமாக 'நபித்துவ முத்திரை'யைக் கூறலாம். இது அனைத்து தூதுவர்களுக்கும் அவர்களின் முதுகு பக்கத்தில் (இரண்டு புஜங்களுக்கு இடையில்) முட்டைவடிவத்தில் ஒரு அடையாளம் இருக்கும். இதைப் பார்த்தே பல யூதர்கள் இவர் உண்மையான நபிதான் என்ற முடிவுக்கு வந்து முஸ்லிமான வரலாறும் உண்டு.

'நான் முகமது நபி அவர்களின் இருபுஜங்களுக்கிடையே முத்திரையைப் பார்த்தேன். அது சிவந்த சதைத் துண்டாக புறாவின் முட்டை வடிவில் இருந்தது.'
ஆதாரம் : முஸ்லிம் அறிவிப்பவர் : ஜாபிர் பின் சமுரா

உடனே அது போன்ற அடையாளம் உள்ள அனைவருமே தூதர்களாகி விடலாமா? என்று கேட்கக் கூடாது. இந்த அடையாளமும் இருக்க வேண்டும். அவருக்கு வேதமும் அருளப்பட வேண்டும். அந்த வேதம் எல்லா காலத்துக்கும், எல்லா நாட்டவருக்கும் பொருந்தியும் வர வேண்டும். இறைவன் புறத்திலிருந்து சில அற்புதங்களையும் செய்து காட்ட வேண்டும். இத்தகைய தன்மை கொண்டவரைத்தான் நாமும் தூதராக ஏற்றுக் கொள்ள முடியும். பல பேர் தூதரகள் என்று சொன்னாலும் மேற் சொன்ன ஏதாவது ஒன்றில் சறுக்கி அவரின் உண்மை முகத்தைக் காட்டிக் கொடுத்து விடும்.

மேலும் பல கேள்விகளுக்கு ரம்ஜான்விடுமுறை முடிந்து நான்கு நாட்களுக்குப் பிறகு வந்து என் வாதத்தை வைக்கிறேன். மிகவும் சிரத்தை எடுத்து திறமையாக அதுவும் நாகரீகமாக கேள்விகளை வைக்கும் எழிலுக்கு நன்றிகள்.

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.

suvanappiriyan said...

பின்னூட்டம் இடுபவர்கள் நான்கு நாட்கள் பொறுக்க வேண்டுகிறேன். விடுமுறை கழிந்து வழக்கம் போல் சந்தித்துக் கொள்வோம்.

suvanappiriyan said...

எழிலின் மற்ற கேள்விகளுக்கான பதில்!

//நான் கேட்டிருக்கும்கேள்விகளை முன்னரே பலர் கேட்டிருக்கிறார்கள் என்றுதான் தெரிகிறது. அவ்வாறு கேட்பவர்களை "அறியாதோர்" என்று அவமானப்படுத்துவது ஏன் என்று தெரியவில்லை? //

இதை விடக் கடினமான கேள்விகளை எல்லாம் அன்றைய அரபுகள் முகமது நபியிடம் கேட்டிருக்கிறார்கள். அனைத்திற்கும் ஆதாரமான பதில்களைத் தந்து முடிவில் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதாகத் தான் வரலாறு.

'அறியாதவர்கள்' என்று ஏன் இறைவன் சொல்ல வேண்டும் என்ற கேள்வியை மறுமையில் இறைவனை சந்திக்கும் போது நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். எனக்குத் தெரிந்த வரையில் நான் சிறு விளக்கத்தைக் கொடுக்கிறேன்.

இங்கே உலகம் தோன்றுவதற்கும் உயிர்கள் தோன்றுவதற்கும் வெளியிலிருந்து ஒரு ஆள் தேவைப் பட வில்லை. எல்லாமே தானாக உதித்துக் கொள்ள முடியும் என்று அறிவியல் கூறுகிறது.

கடிகாரம், பூட்டு, சாவி, பானை என்று எந்த செயற்கைப் பொருளைப் பார்க்க நேர்ந்தாலும் அவை யாராலோ செய்யப் பட்டது என்பது நமக்குத் தெரிகிறது. தனக்குத் தானாகவே ஒட்டிக் கொண்டும், பொருந்திக் கொண்டும், உருவாகிக் கொள்ளும் கருவியை மனிதன் இதுவரை கண்டு பிடிக்கவில்லை. எனவே செய்யப் பட்டவைகளுக்கு செய்தவர் உண்டு.

சூரியன், உலகம், உயிர்கள் யாவும் செய்யப் பட்டவைகளா? இல்லையே. எனவே செய்தவர் எவரும் இல்லை.

ஒரு நிமிடம் .... செயற்கைப் பொருட்கள் தாமாக செய்து கொள்ள முடியாதபோது.... இயற்கைப் பொருட்கள் மட்டும் எப்படி செய்து கொள்கின்றன? எனில், ஒரு செய்முறை தகவலின் அடிப்படையில் அவை செய்து கொள்கின்றன என்று அறிவியல் சொல்வதால்....இயற்கைப் பொருட்கள் தோன்றுவதற்கு முன்பாகவே ஒரு 'தகவல்' இருந்திருப்பது உறுதியாகிறது. அந்தத் தகவல் ....எது? யார? என்று சிந்தித்துப் பார்த்தால் நம்மை படைத்தவனைப் பற்றியும் இந்த உலகம் உருவானதன் அதிசயத்தைப் பற்றிய உண்மையையும் மனிதன் விளங்கிக் கொள்வான். இதை எல்லாம் சிந்திக்காமல் இறைவன் என்னிடம் நேரிலேயே வரக் கூடாதா? என்னிடம் பேசக் கூடாதா? என்று நாத்திகத் தன்மையோடு கேட்பதால்தான் அவர்களைப் பார்த்து இறைவன் 'அறியாதோர்' என்று விளிப்பதாக எனக்குப் படுகிறது.

//முதலாளி அனுப்பும் அந்த சாட்சியம், அதனை பெறப்பட்டவர் நம்பும்படி இருக்க வேண்டும். ஒவ்வொருவனும் ஒவ்வொரு வித்தை செய்து காண்பித்து, "நான் தான் அந்த முதலாளியின் வேலைக்காரன். அவன் சொல்வதை நம்பாதே, நான் சொல்வதை நம்பு" என்றால் குழப்பமே மிஞ்சும்.//

நான் முன்பே குறிப்பிட்டது போல் நபித்துவ முத்திரை இருக்க வேண்டும், இறைவனிடம் இருந்து வேதமும் வந்து அது எல்லா நாட்டு மக்களுக்கும் பொறுந்தி அறிவியல் கருத்துகளோடு மோதாமலும் இருக்க வேண்டும். இறைவனின் உதவி கொண்டு சில அற்புதங்களையும் செய்திருக்க வேண்டும், இதற்கு முன் பொய் பேசாதவராகவும் நல்லொழுக்க முடையவராகவும் இருக்க வேண்டும். இத்தகைய தகுதிகள் அனைத்தும் பொருந்தி வருவதால்தான் முஸ்லிம்கள் முகமதை தூதராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். முகமது நபிக்குப் பிறகும் 'நானும் நபி' என்று சொல்லிக் கொண்டு வந்தவர்களின் பொய்முகங்கள் சில நாட்களிலேயே உலகுக்குத் தெரிய வந்தது.

இறைவனே மிக அறிந்தவன்!

suvanappiriyan said...

ஒரிஜினல் திம்மி!

//இஸ்லாமில் சேர்ந்தால் அரபு வணிகர்கள் உங்கள் பக்கம் இருப்பார்கள் என்று அரபு வணிகர் தலைவர் கூறினார். இதற்காக அவர் இஸ்லாமில் இணையவும், வணிக உறவுக்காகவும் அரேபியா பயணம் செய்தார். //

விருப்பப்பட்டு இஸ்லாத்தில் இணைந்த சேரமான் பெருமாளை உங்கள் வாதத்திற்காக இந்த அளவு கேவலப் படுத்தக் கூடாது. வணிகத்திற்காகவும், ஆட்சியை தக்க வைப்பதற்காகவும் இஸ்லாத்தில் இணைந்தார் என்றே ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். அந்த அளவு அவருடைய முந்தைய மதம் பலவீனப் பட்டுப் போயிருந்தது என்பதை நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள்.

மேலும் ஆட்சிக் கட்டிலுக்கு ஆசைப்படும் ஒரு அரசன் பெரும்பான்மை மக்களின் மதத்தை சார்ந்திருப்பானா அல்லது வியாபாரக் கூட்டமான அரபியர்களின் பக்கம் சாய்வானா? இதனால் மக்கள் கொதித்தெழ மாட்டார்களா? ஆட்சியைத் தக்க வைக்கும் ஒரு அரசன் தன்நாட்டை தனது சகோதரன் வசம் ஒப்படைத்து விட்டு அரபு நாடு நோக்கி செல்வானா?உங்கள் வாதத்தில் உங்களுக்கே நம்பிக்கை இருக்கிறதா என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

//இறைதூதர் என்ற கருத்தாக்கமே இந்து மதத்தில் இல்லாத போது, எப்படி ஜோதிடர்கள் வேதங்களில் இறைதூதரை பற்றி எழுதியிருப்பதை பார்த்திருக்க முடியும்?//

'ஏ அக்னீ !நியூஹ் அவர் தூதர் என்று ஒப்புக் கொள்கிறேன்.'

1 : 13,14 - ரிக் வேதம்

நோவாவுடைய பெயர் ரிக் வேதத்தில் 51 இடங்களிலும், யஜீர் வேதத்தில் இரண்டு இடங்களிலும், சாம வேதத்தில் எட்டு இடங்களிலும், அதர்வண வேதத்தில் பதினான்கு இடத்திலும் குறிப்பிடப் பட்டுள்ளது

ஆதாரம் வேத ஆராய்ச்சி தொகுப்பான”NOW OR NEVER” – written by Shames Navad



இறைத் தூதர் என்ற கருத்தாக்கமே இந்து மதத்தில் இல்லை என்றால் இந்து மத வேதங்களில் உள்ள இந்த வசனங்களெல்லாம் எங்கிருந்து வந்தது?

1)'ஏ அக்னி! இறந்த இந்த மனிதர் மறு உலகிற்கு செல்வார்'
10 : 16 : 5 - ரிக் வேதம்
2)ஏ கணவன் மனைவியரே! நீங்கள் ஒற்றுமையாய் நல்லறங்கள் செய்யத் துவங்குங்கள். சொர்க்க வாழ்க்கையை உண்மையில் அனுபவிப்பீர்கள்.
6 : 122 : 3 - அதர்வண வேதம்
3)யார் பெரும் பாவியாக, பொய்யனாக, நம்பிக்கையற்றவனாக இருந்தானோ அவன் நரகாஸ்தனத்தில் (நரகத்தில்) இருப்பான்.
4 : 5 : 5 - ரிக் வேதம்

சொர்க்கம் நரகம் போன்றவை அவரவர் செய்த நன்மை தீமைக்கு தக்கவாறு கிடைக்கும் என்று இந்து மத வேதங்களே கூறுவதால் மறுபிறவித் தத்துவம் அடிபட்டுப் போகிறது.

'இந்துவேதங்கள் குறிப்பிடும் புனர் ஜென்மம் என்பது இந்த உலக வாழ்க்கைக்குப் பின் உள்ள மறு உலக வாழ்க்கை ஆகும். திரும்ப திரும்ப ஜன்மம் எடுத்து வரும் வாழ்க்கையல்ல' என்று Dr Farida Ghauhan தன்னுடைய நூலான Punarjanam aur ved (page 93) -ல் கூறுகிறார்.

ஆன்மாவானது மறுபடியும் மறுபடியும் பல ஜென்மம் எடுத்து வரும் என்று எந்த இந்து வேதமும் குறிப்பிடவில்லை என்றுSri Satya Prakash Vidya Lankar தன்னுடைய நூலான Awagawan (Page 104) -ல் குறிப்பிடுகிறார்.

'மறு பிறவித் தத்துவம் என்பது ஒரு கொள்கை அளவில் மட்டுமே இந்து மதத்தில் குறிப்பிடப் படுகிறது. அது உண்மை என்றோ அடிப்படையான தத்துவம் என்றோ கொள்ளப் பட வேண்டியது இல்லை. வேதங்களோ, உபநிஷத்துகளோ இதைக் குறிப்பிடவில்லை.'
-சுவாமி பூமாந்த தீர்த்தர், ஞான பூமி
10 பக்கம்
97 ஏப்ரல்

மரணத்திற்குப் பின் உள்ள மறுமை வாழ்வு பற்றி குர்ஆன் என்ன கருத்து வைக்கிறதோ அதையே தான் இந்து மத வேதங்களும் வைக்கின்றன.

'அந்த அராபியர் தூதர்களுக்கெல்லாம் முத்திரையாக (இறுதியாக) இருப்பார்'
1 : 163 : 1 - ரிக் வேதம்

'ஒரு மிலேச்ச புனிதமான ஆசாரியார் தனது சீடர்களுடன் தோன்றுவார். அவரத பெயர் முகமது ஆகும். அந்த அரபு மகா தேவரை (வானவர் போன்றவரை) 'பஞ்சஹவ்யா' விலும் கங்கை நீரிலும் நீராட்டி (அவரது அனைத்து பாவங்களையும் கழுவி) மனமார்ந்த பெரு மதிப்பையும் பக்தியையும் முன் வைத்துக் கூறுவர்.நான் உமக்குக் கீழ்படிகிறேன். மனித சமுதாயத்தின் பெருமையே! அரபு வாசியே! நீர் தான் சாத்தானை ஒழிக்க ஒரு பெரும் படையை திரட்டி உள்ளீர். நீர் மிவேச்ச நாட்டு எதிரிகளிடமிருந்து பாதுகாக்கப் பட்டவராகவும் உள்ளீர்.நீர் அந்த மேலான பரம் பொருளின் மீது பக்தி கொண்டவருமே அவனின் அம்சமுமாய் இருக்கின்றீர். நான் உமது அடிமை. உமது காலடியில் என்னை ஏற்றுக் கொள்ளும்.'

3 : 3 : 5 - 8 பவிஷ்ய புராணம்

மேற்கள்ட இந்து மத வேதங்களின் கருத்துக்கள் முகமது நபியின் வருகையை முன்னறிவிப்பு செய்கின்றன். இவற்றை எல்லாம் நன்கு ஓதி தெளிந்நிருந்த வேத விற்பன்னர்கள் முகமது நபி வந்திருக்கும் விபரத்தை சேரமானுக்கு அறிவித்திருக்கலாம்.

//ஆனால் கிரிஸ்துவர்களும் அங்கு வந்த அரபு முஸ்லீம்களும் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணுபவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.)//

எதைச் சொல்கிறீர்கள்? காலங்காலமாக தீண்டாமைக் கொடுமையில் சிக்கி அல்லலுற்ற இந்நாட்டுக் குடிமகனை தன் மதத்தில் இணைத்து அவனை மனிதனாக தலை நிமிர்ந்து நடக்க வைத்ததை சொல்கிறீர்களா? உங்கள் அகராதியில் இதற்கு பெயர்தான் உண்டகத்துக்கு ரெண்டகம் என்றால் அப்படியே இருந்து விட்டு போகட்டும். இன்றைய தேதி வரை உங்களால் பாப்பாரப் பட்டியிலும், கீரிப்பட்டியிலும் ஒரு பஞ்சாயத்து தலைவராக ஒரு தலித்தை கொண்டு வர முடியவில்லையே! போங்க சார்! போய் உங்கள் சீர்திருத்தத்தை அங்கே ஆரம்பியுங்கள். இந்நாட்டு பூர்வ குடிகளை மனிதனை விட கேவலமாக நடத்துவதுதான் 'உண்டகத்துக்கு ரெண்டகம்' என்பேன் நான். இனிமேலும் சீர் திருத்தம் வரவில்லை என்றால் மீதம்உள்ள மக்களும் இஸ்லாத்தை நோக்கி வந்து விடுவார்கள். அதற்குள் அவர்களுக்கு சம உரிமை கொடுக்கப்பாருங்கள்.

//ஜோதிடத்தின் அடிப்படையே முற்பிறவிதான். முற்பிறவியின் கரும பலன்களை பிறப்பின் நேரத்தை வைத்து ஊகிப்பதுதான் இந்திய ஜோதிடம். அப்படியென்றால் இஸ்லாமியர்கள் முற்பிறவி கருத்தை ஒப்புக்கொள்கிறார்களா?//

இஸ்லாமியர்கள் ஒப்புக்கொள்வது இருக்கட்டும். முதலில் இந்து மதத்திலேயே புனர் ஜென்மம் என்பது தவறாக புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது என்ற இந்து மத அறிஞர்களின் விளக்கத்தை பார்த்தீர்களா?

suvanappiriyan said...

அனானி!

//என்றாலும்,
அதனால் என்ன பயன் விளையப்போகிறது என்றுதான் விளங்கவில்லை. ஒரு அங்குலம் கூட உங்களால் இவர்களை நகர்த்தமுடியும் என்று தோன்றவில்லை. //

முஸ்லிம்களின் உள்ளஙகளை ஓரளவு சரியாக கணித்திருக்கும் அனானிக்கு நன்றிகள்.!இதற்கு காரணம் எங்களிடம் மனிதக் கரங்கள் புகாமல் பாதுகாக்கப் பட்டிருக்கும் குர்ஆனே! இது இறைவன் அல்லாமல் மனிதர்களால் உருவாக்க முடியாது என்பதை நான் குர்ஆனை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் உணர்கிறேன். நம்பிக்கை மேலும் அதிகமாகிறதே தவிர குறையக் காணோம். உலக முஸ்லிம்கள் அனைவரின் நிலையும் இதுதான்.

//2000 வருடத்திற்கு முன்னதாக உருவாக்கப்பட்டத் திருக்குறள் எவ்வளவு தெளிவாக எழுதப்பட்டுள்ளது என்பதை இந்த உலகம் நன்கு அறியும்.//

திருக்குறளையும், குர்ஆனையும் ஒரே தரத்தில் வைத்து பார்க்க முடியாது என்பதற்கு முந்தய பின்னூட்டத்திலேயே விளக்கியிருக்கிறேன்.

// இருந்தாலும் அந்த நூலை ஒரு மிகச் சிறந்த கருத்துப் பெட்டகமாகத்தான் நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோமே அன்றி அதை கடவுள் அனுப்பிய நூல் என்று நாம் ஒருக்காலும் நம்பியதில்லை. திருவள்ளுவரும் தன்னை ஒரு இறைதூதர் என்று பிரகடனப்படுத்திக் கொண்டதில்லை.//

அது உங்களின் நம்பிக்கை. அதே நம்பிக்கையை முஸ்லிம்களும் கொள்ள வேண்டும் என்றுஎப்படி எதிர்பார்க்கிறீர்கள்?

// அதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று யோசித்துப் பாருங்கள். இந்த இறைதூதர் technique ஆபிரஹாமிய மதங்களுக்கே உரிய ஒரு பொதுவான தந்திரம்.//

ஆபிரஹாமிய மதங்களுக்குள் உள்ளடக்கியதே இந்து மதம் என்று இந்து மத வேதங்களைக் கொண்டே முந்தய பதிவுகளில் விளக்கியிருக்கிறேன். இதை நீங்கள் மறுத்தால் ரிக் யஜூர் சாம் அதர்வண வேதங்களின் ஆசிரியர் யார்? அல்லது யாரால் அருளப்பட்டது? என்ற விபரம்தைக் கொடுங்கள்.

//திருக்குறள் கண்ட இந்த புண்னியபூமியும் இவர்களின் யுத்தகளமாகப் போனதுதான் மிகப் பெரிய சோகம். //

உண்மைதான்! சமணர்களை கழுவில் ஏற்றி கொன்றது, பௌத்தர்களை கொன்று குவித்து புத்த மதத்தை சிறுபான்மை ஆக்கியது, சேர சோழ பாண்டியர்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டு ரத்தம் சிந்தியது, ஆதி திராவிடர்களை மலம் திங்க வைத்து கோவிலுக்குள்ளும் அனுமதிக்காமல், வடம் பிடிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு, தேர்தலில் வென்ற பஞசாயத்து தலைவரை நடு ரோட்டில் வெட்டிக் கொன்றது போன்ற மாபாதக செயல்களை எல்லாம் வள்ளுவர் அவதரித்த இந்த பூமி கண்டிருக்கிறது. இவற்றை எல்லாம் ஞாபகப் படுத்தியதற்கு நன்றிகள் அனானி!

suvanappiriyan said...

ம்யூஸ்!

//பரத கண்டத்தில் ஏற்கனவே, அதீத அஹிம்ஸையின் மூலமும், உடல்தூய்மையினை முன்னிட்டும் ஏற்பட்டுவிட்ட ஏற்றத்தாழ்வுகள் இஸ்லாம், கிருத்துவ ஆட்சிகளால் மேலும் பெரிதாகி

இறுகியது. //

வரலாற்றை எவ்வளவு சாமர்த்தியமாக மறைக்கப் பார்க்கிறீர்கள்? இன்று இந்தியாவில் இருபது கோடியை நெருங்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் எங்கிருந்து வந்தனர். அரபு நாட்டு இறக்குமதியா? அனைவரும் இந்நாட்டு பூர்வீக குடிகள். உங்கள் முன்னோர்கள் செய்த தீண்டாமையின் கொடூரத்தால் மனம் வெதும்பி இஸ்லாத்தை நோக்கி ஓடியவர்கள் தானே அனைவரும்? வங்காளத்தில் தீண்டாமையின் கொடூரம் உச்சக் கட்டத்தில் இருந்ததால் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை தழுவி இன்று பங்களாதேஷ் என்ற நாடே உருவாகி இருக்கிறது. வெள்ளையர்கள் ஆட்சியில்தான் தீண்டாமைக்கு எதிராக பல சட்டங்களை இயற்றி தாழ்த்தப் பட்டவர்களுக்கு ஓரளவு உரிமை கொடுக்கப்பட்டது.

இவ்வளவு ஏன் போன வாரம் ஹரியானாவில் 'கிலா ஜபர்கார்' என்ற கிராமத்தில் ஜாதி இந்துக்கள் தாழ்த்தப் பட்டவர்களை தாக்கி ஒரு கிராமமே நிர்முலமாகி இருக்கிறது. சொந்த நாட்டிலேயே பூர்வ குடிகள் அகதிகளாக்கப் பட்டுள்ளனர். இதற்கும் காரணம் இஸ்லாமியரும் கிறித்தவரும் என்று காரணம் சொல்லப் போகிறீர்களா?

எங்கள் ஊரில் செட்டியார்களும், மூப்பனார்களும்தான் அதிகம். ஒருக்காலத்தில் என் முன்னோர்களில் இந்த சாதிகளில் ஏதாவது ஒன்றில் இருந்திருக்கலாம். என் முன்னோர்கள் மதம் மாறாமல் இருந்திருந்தால் நானும் ஏதாவது ஒரு சாதி சங்கத்தில் ஐக்கியமாகி 'ஸ்ரீரங்கத்தில் கருவறைக்கு செல்ல எங்களுக்கும் உரிமை கொடு, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கு' என்று கத்திக் கொண்டிருப்பேன். அது போன்ற நிலை எல்லாம் ஏற்படாமல் உலக முஸ்லிம்களில் என்னையும் ஒருவனாக்கிய என் முன்னோர்களின் மனதை மாற்றிய அந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும். இதற்காக ஐந்து வேளை என்ன ஐம்பது வேளை கூட என் இறைவனுக்காக சிரம் பணிய தயார்.

ம்யூஸ்!

//இது ஒரு புறமிருக்கட்டும். தர்காக்களை இடிக்கவேண்டும் என்பதுகூட மதவெறியைத்தானே காட்டுகின்றது. மற்ற நம்பிக்கையாளர்களை மதிக்கவேண்டும் என்றால் தர்காக்கள் மூலம்

இறையை வணங்குபவர்களையும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், தொந்தரவு செய்யாமல் இருக்கவேண்டும். அவர்களின் கட்டிடங்களை இடிக்கவேண்டியது நமது கடமை என்று சொல்லுவது

வெறி. கொடூரமான வெறி. //

திராவிடர் கழகத்தை எடுத்துக் கொள்வோம். அந்த கழகத்தின் கொள்கை 'இறைவன் இல்லை' என்பது. அந்த கழகத்தின் தலைவராக ஒருவர் இருந்து கொண்டு தினமும் கோவிலுக்கு சென்று வந்தால் அந்த கழகத்தின் கொள்கைளை அவமதிப்பதாக ஆகாதா? அவருக்கு ஆத்திகத்தில் நம்பிக்கை இருந்தால் திராவிடர் கழகத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும்.

அதே போல் முகமது நபி 'இறைவனைத் தவிர மனிதர்கள் யாரையும் வணங்கக் கூடாது. சமாதிகளை வணங்கக் கூடாது. என்னுடைய சமாதியையும் யாரும் வணங்கக் கூடாது. மனிதர்கள் யாரின் காலிலும் மரியாதை நிமித்தமாக விழக் கூடாது. நான் சபைக்கு வரும்போது மரியாதைக்காக யாரும் எழுந்திருக்கக் கூடாது' என்றெல்லாம் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். மதினாவில் முகமது நபியின் அடக்கஸ்தலத்துக்கு எப்போதும் இரண்டு காவலர்கள் காவலுக்கு நிற்பர். இந்திய பாகிஸ்தானிய மக்கள் முகமது நபியின் அடக்கஸ்தலத்துக்கு நேராக நின்று கையேந்தி பிரார்த்தித்தால் காவலர்கள் அவர்களை தடுத்து 'மசூதிக்கு சென்று இறைவனிடம் பிரார்த்தியுங்கள்' என்று சொல்லும் காட்சியைப் பார்க்கிறோம்.

எனவே ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது. முகமது நபி சொன்னதுக்கு மாற்றமாக நடப்பேன் என்று எந்த முஸ்லிமாவது சொன்னால் அவர் இஸ்லாத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடட்டும். அதனால் இஸ்லாத்திற்கு எந்த நஷ்டமும் வந்து விடப் போவதில்லை. தாங்கள் ஒரு தனி மதமாக இருந்து கொண்டு வேண்டுமானால் நாகூர் தர்ஹாவை வணங்கிக் கொள்ளட்டும். எனவே இஸ்லாத்தைப் பொறுத்த வரை கொள்கையில் சமரசத்துக்கே இடம் இல்லை. அதே சமயம் இஸ்லாமிய ஆட்சியில் சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்என்ற கட்டளையையும் இஸ்லாம் போடுகிறது.

'இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது.'
2 : 256 - குர்ஆன்.

'வேதம் கொடுக்கப் பட்டோரிடமும், எழுதப் படிக்கத் தெரியாதோரிடமும் 'இஸ்லாத்தை ஏற்கிறீர்களா?' என்று கேட்பீராக. அவர்கள் இஸ்லாத்தை ஏற்றால் நேர் வழி பெற்றனர். புறக்கணித்தால் எடுத்துச் சொல்வதே உமது கடமை. இறைவன் தன் அடியார்களைப் பார்ப்பவன்.
3 : 20 - குர்ஆன்.

'மார்க்க விசயத்தில் உங்களிடம் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் இறைவன் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை இறைவன் விரும்புகிறான்.'
60 : 8 - குர்ஆன்.

'தனக்கு இணை கற்ப்பிக்கப்படுவதை (நாகூர்,அஜ்மீர்,ஏர்வாடி போன்ற அடக்கஸ்தலங்களில் சென்று அவர்களிடம் பிரார்த்திப்பதை) இறைவன் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள பாவத்தை தான் நாடியோருக்கு மன்னிப்பான் இறைவனுக்கு இணை கற்ப்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றனர்.'
4 : 48 - குர்ஆன்





ம்யூஸ்!

// "முத்தலிப் கிளையினரே நன்றாக நீரை
இறைத்து வழங்குங்கள்.உங்களுடன் போட்டியிட்டு மக்களும் நீரை இறைக்க
ஆரம்பித்துவிட்டால் நீங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுவிடுவீர்கள் எனும்
அச்சம் மட்டும் எனக்கு இல்லாதிருந்தால் நானும் உங்களுடன் தண்ணீர்
இறைப்பதில் பங்கு பெறுவேன் என்றார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்) (ரஹீக் பக்.562)//

'மக்களுக்கு நன்மை செய்யும் விஷயத்தில் ஒருவர் மற்றவருடன் போட்டியிட வேண்டும்' என்ற போதனைதான் இந்த சம்பவத்தின் மூலம் கிடைக்கிறது. இதில் தீண்டாமை எங்கிருந்து வந்தது?

//இன்றைக்கும் ஸம்ஸம் கிணற்றில் நீர் இறைக்கும் உரிமை முத்தலிப் கிளையினர் என தம்மை குல உரிமை கொண்டாடும் முஸ்லீம்களுக்கு மட்டுமே உரியது.//

சிரிப்பு வரவழைக்கிறீர்கள் ம்யூஸ்! இன்று ஜம் ஜம் நீரை இரைப்பது அனைத்தும் ராட்ஷஸ போர்கள், மிகப் பெரிய குழாய்கள். ஒவ்வொரு வருடமும் ஹஜ்ஜீக்கு வரும் ஹாஜிகள் இந்த நீரை பெரும் ட்ரமகளில் அடைத்து அவரவர்நாட்டுக்கு எடுத்துச் செல்கின்றனர். கஃபாவை சுற்றியிருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் இந்த நீரே குடிநீராக உபயோகப் படுகிறது. நீங்கள் 'ஜம் ஜம்' நீரூற்று என்பது சிறிய கிணறு போல் இருக்கும் என்றும் ஒரு வாளியின் மூலம் உலக மக்களுக்கு முத்தலிபு கிளையினர் இறைத்து கொடுப்பதாகவும் நினைத்து கேட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

//கணவரைத் தவிர வேறோர் ஆண்மகன் அறியாத, அல்லது (ஒரே ஒரு) மனைவியைத் தவிர மற்றோர் பெண்ணை அறியாதிருக்கும் மாந்தருக்கும் இந்த வியாதி வருகின்றதே. உடல் உறவின்

மூலம் மட்டுமன்றி, ரத்ததானம் மூலமும், சுத்தம் செய்யப்படாத ஊசிகளின் மூலமும் ஏற்படுகின்றதே. அப்பாவி குழந்தைகளும் அல்லவா பலியாகின்றனர். இப்படி குழந்தைகளைக்கூட

கொல்லுவதுதான் அல்லாவின் தண்டனையா? அப்படித்தான் என்றால் ஏன்? இப்படிப்பட்ட ஒரு இறை எப்படி கருணையுள்ளவனாக முடியும்?

குழந்தைகளின் சிரிப்பை அனுபவித்திருக்கும் ஒரு தந்தையாக இதற்குப் பதிலளியுங்கள். //

எய்ட்ஸின் துவக்கத்தை நீங்கள் எடுத்துக் கொண்டால் அது ஓரினப்புணர்ச்சியின் மூலம் தான் தோன்றியது. இந்த நோய் பாதித்த ஒருவன் ஒரு பெண்ணோடு கூடும்போது அந்த பெண்ணும் அந்த நோயை பெற்றுக் கொள்கிறாள். இவ்வாறு இருவருக்கும் நோய் தொற்றுவதால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தையும் எய்ட்ஸ் பாதிப்புக்கு உள்ளாகிறது. எய்ட்ஸ் பாதித்த நபர்களிடமிருந்து சோதனை செய்யாமல் ரத்தம் பெறப்படுவதால் ரத்தம் ஏற்றிக் கொள்பவருக்கும் இந்நோய் தொற்றுகிறது.

மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் உடையவருக்கு இந்நோய் வருவதில்லை என்பது நிரூபிக்கப் பட்ட உண்மை. நீங்கள் சொல்வது பொல் தொற்றக் கூடியதாக இருந்தால் சவூதியில் பாதிக்கு மேல் எய்ட்ஸ் பாதித்தவர்களாகத்தான்இருக்க முடியும். ஏனெனில் இங்கு பெரும்பாலும் முப்பது சதவீதத்துக்கு மேல் இரண்டு மூன்று மனைவிகளை உடையவர்கள். ஒவ்வொருவருக்கும் இருபது முப்பது குழந்தைகள் இருக்கிறது. எவருக்கும் எய்ட்ஸ் தொற்றியதாக செய்தி இல்லை. ஒரு சில சவூதிகளுக்கு எய்ட்ஸ்வந்துள்ளதாக சமீபத்தில் செய்தி வந்தது. அதற்கு காரணம் அவர்கள் உல்லாசமாக அமெரிக்கா இங்கிலாந்து பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு சென்று அங்குள்ள விலைமாதர்கள் மூலம் பெறப்பட்டிருப்பதாக அறிக்கை கூறுகிறது.

இது போன்ற தவறுகளுக்கு இறைவன் எப்படி பொறுப்பாக முடியும்? நன்மை எது தீமை எது என்று இறைவன் தெளிவாக காட்டி விட்டான். அதை மீறி ஒருவன் தகாத உறவு கொண்டு தன் மனைவிக்கு அந்த நோயைக் கொடுத்தால் மறுமையில் கணவனின் நல்லறங்கள் பாதிப்புக்குள்ளான மனைவிக்கு கொடுக்கப் படும். அதே போல் குழந்தை பாதிப்படைந்தால் இதற்கு காரணமான தாயோ அல்லது தந்தையோ இவர்களின் நல்லறங்கள் அந்த குழந்தையின் பங்கில் சேர்க்கப் படும். இஸ்லாமிய நம்பிக்கைபடி இந்த உலகம் அற்பமே! நிரந்தரமான உலகம் என்பது இறப்புக்கு பின்னரே கிடைக்கும். அங்கு இறைவன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான்.

'செவி,பார்வை,மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை'
17 : 36 -குர்ஆன்.

மனிதன் தன் செவியால், பார்வையால், உள்ளத்தால் செய்த தீமைகள் நன்மைகள் ஆகிய அனைத்துமே விசாரிக்கப் பட்டு அதற்குரிய பரிசுகளும் தண்டனைகளும் வழங்கப் படும். அப்போது உலகில் எந்த காரணமும் இல்லாமல் மற்றவர்களால் தண்டிக்கப் பட்டவர்கள் குழந்தைகள் உட்பட தக்க பரிசுகளைப் பெறுவார்கள்.

ம்யூஸ்!

//குறைந்தபக்ஷம் தமிழகத்தில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி ப்ரச்சினையைத் தீர்க்க விரும்பாத த்ராவிட கட்சிகளுக்கு எங்கள் ஆதரவு இல்லை என்று தமிழக் இஸ்லாமியர்கள் அறிவிக்கலாமே. ஏன்

செய்வதில்லை?//

உங்கள் மதத்தில் நடக்கும் தீண்டாமைக் கொடுமையை முஸ்லிம்கள் வந்து எப்படி தடுக்க முடியும்? இதை செய்ய வேண்டியது நீங்களல்லவா? இந்த பிரச்னைகளை எப்படி தீர்ப்பது என்பது அரசியல்வாதி முதல் அன்றாடங் காய்ச்சி வரை கேட்டுக் கொண்டிருக்கும் இன்றைய மில்லியன் டாலர் கேள்வி. ஆனால் பதில்தான் யாருக்கும் சொல்லத் தெரியவில்லை.

சரி எனக்கு பதில் தெரிகிறது என்று நான் சொல்ல வந்தால் அந்த பதிலைக் கேட்டு வஜ்ரா முதல் ஜெயராமன் வரை குதிகுதியென்று குதிப்பீர்கள். நமக்கேன் வம்பு.

ம்யூஸ்!

//இந்தியாவில் இந்த ஸைட் கிடைக்கிறது. தங்களின் அறிவுப் பஸிக்காக அந்த விஷயம் முழுவதையும் இங்கே கட்-பேஸ்ட் செய்கிறேன். படித்து மகிழுங்கள//

அந்த கட்டுரையாளர் முக்கியமாக குறிப்பிடுவது ஜாகிர் நாயக் இந்து வேதங்களை பல இடங்களில் தவறாக மொழி பெயர்த்துள்ளார் எனபது தான். இதில்யார் சொல்வது உண்மை என்பதை அறிய ஒரே வழிதான் உண்டு. இந்து வேதங்கள் அனைத்தையும் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும். பெரும் பான்மை மதமான இந்து மதத்திற்கு இது ஒன்றும் சிரமமான காரியம் இல்லை. அரசு செலவிலே கூட ஐந்து சமஸ்கிரத பண்டிதர்களின் குழுவால் வேதங்கள் அனைத்தையும் மொழி பெயர்த்து விட முடியும். ஆனால் இதற்கு அனைவரும் உடன்பட மாட்டீர்கள். ஏன்? அப்படி உடன்பட்டால் பல தெய்வ கொள்கைகளை விட வேண்டி வரும். தற்போது இந்து மத சம்பிரதாயம் என்று சொல்லப் படுபவைகளில் பலவற்றை தொலைக்க வேண்டி இருக்கும். இஸ்லாமிய கிறித்தவ மார்க்கங்களின் கருத்தை ஒத்து இந்து மத வேதங்களின்கருத்தும் அமைந்திருக்கும். இது போன்ற ஒற்றுமை ஏற்படுவதை இந்து மத அறிஞர்கள் விரும்ப மாட்டார்கள்.இங்கு இந்து மதத்துக்காக வாதாடும் வலைப் பதிவர்கள் அனைவரும் சேர்ந்து கூட வேதங்களை மொழி பெயர்க்கும் இந்த அரிய பணியைச் செய்வதற்கு முயற்ச்சிக்கலாமே!

மேலும் இஸ்லாமிய கருத்துக்களை பரப்ப இந்து மத வேதங்களின் துணையும் தேவைப் படுகிறது என்பது தவறான வாதம். இங்கு இந்தியாவில் இஸ்லாம் வளர்ந்ததற்க்கான காரணமே இந்து மதத்தில் காணப்பட்ட தீண்டாமைதான். இதை இந்து மத அறிஞர்களே ஒத்துக் கொள்கிறார்கள். எந்த இந்துவும் இந்து மதத்தின்கருத்துக்களை படித்து விட்டு இஸ்லாத்தை ஏற்கவில்லை. முஸ்லிம்கள் தங்கள் வாதங்களை எடுத்து வைக்க குர்ஆனின் கருத்துக்களும் முகமது நபியின் போதனைகளும் போதுமானது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சர் சி.பி.ராமசாமி அய்யர்

இஸ்லாம் என்றால் எனன? இன்றைக்கு உலகில் செயல்படும் ஒரே ஜனநாயக நெறி என்றே இஸ்லாத்தை நானும் மற்ற சிந்தனையாளர்களும் கருதுகிறோம். நான் ஓர் இந்து. இந்து சமய நம்பிக்கையில் ஆழ்ந்த பற்று கொண்டிருந்தாலும் நான் இதை தைரியமாகவே கூறுகிறேன். மனித குலம் ஒன்றே என்பது இந்து மதத்தின் அடிப்படை தத்துவமாக இருந்தாலும் அதனை நடைமுறைப் படுத்துவதில் எனது சொந்த மதம் வெற்றி பெற வில்லை. இறைவன் முன் மனிதர்கள் அனைவரும் சமமே எனும் அடிப்படைச் சிந்தாந்தத்தை நடைமுறை படுத்துவதில் இஸ்லாத்தின் செய்முறையைப் போனறு வேறெந்த மதமும் - அவற்றின் மதக் கருத்தோட்டம் எதுவாயினும் சரியே- கடைபிடிக்கவில்லை. தென் ஆப்ரிக்காவின் போயர் இன மக்கள் பிரச்னை, ஆஸ்திரேலியா அல்லது தென் அமெரிக்க நாடுகள் அல்லது இங்கிலாந்தின் பல்வேறு தரப்பட்ட மக்களின் பிரச்னைகள் போன்று இஸ்லாத்தில் எத்தகைய இனப் பிரச்னைகளும் இருக்கவில்லை.

Sir C.P. Ramasamy Iyer, Eastern Times, 22nd December, 1944

அன்னி பெசன்ட் அம்மையார்

அரேபியாவின் இந்தத் துதருடைய வாழ்க்கையையும், ஒழுக்கப் பண்புகளையும், தூய நடத்தையையும் படிப்பவர்கள் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை அறிந்தவர்களுக்கு அந்த வல்லமை மிக்க மாபெரும் இறைத் தூதர்களில் ஒருவரான இறுதித் தூதரைக் குறித்து உயர்வான எண்ணமே ஏற்படும். எனது இந்த நூலில் நான் பலருக்கும் தெரிந்த பல விஷயங்களையே சொல்லி இருக்கிறேன் என்றாலும் நானே அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைத் திரும்பத் திரும்பப் படிக்கும் ஒவ்வொரு முறையும் ஆற்றல் மிக்க அரபு போதகரின் மீது புதிய ஒரு மதிப்பும் புதிய ஒரு மரியாதை உணர்வும் ஏற்படுவதை நான உணர்கிறேன்.

Annie Besant, The life and Teachings of Mohamed 1932, page 4

ம்யூஸ்!

//முஹம்மதுவும் நம்மைப் போன்ற ஒரு மனிதர்தானே. நம்மிடமுள்ள பலகீனங்கள் உள்ளவராகத்தானே இருந்தார். நம்மைப்போலத்தானே மரணித்தார். ஆனால் அவர் சொன்னதைமட்டும்

செய்யவேண்டும் என்று ஏன் கூறுகிறீர்கள்?//

வெரி சிம்பிள்.! அவரை இறைவன் தன் தூதராக நியமித்திருக்கிறான். தன் தூதருக்கு வேதத்தையும் வழங்கியிருக்கிறான். இது இறை வேதம் தான் என்பதை முஸ்லிம்களும் பரிபூரணமாக நம்புகிறார்கள். எனவே அந்த தூதரின் சொல் செயல் அங்கீகாரத்தை முஸ்லிம்களும் பின்பற்றுகிறார்கள்.

//இந்தியாவிலுள்ள இஸ்லாமியர் என்னவிருந்தாலும் தாழ்ந்தவர்கள்தான் என்பதால் பாபர் புகாரியை இந்தியாவிற்கு வரவழைத்தார். அவர் குடும்பத்தினர் மட்டுமே, அவர்கள்

உயர் ஜாதியினர் என்பதால் டெல்லி இமாமாக முடியும். அதனால்தான் இதுவரை இமாமாக புகாரி குடும்பத்தார் மட்டுமே இருந்துவருகின்றனர்.//

பாபர் உங்கள் வாதப்படியே புகாரி குடும்பத்தை டெல்லி இமாமாக நியமித்ததாக வைத்துக் கொள்வோம். இதற்கு தீண்டாமைதான் காரணம் என்று எங்காவது சொல்லியிருக்கிறாரா? எந்த ஒரு முஸ்லிமின் வாயிலிருந்தும் நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்ற வார்த்தை வராது. அப்படி சொல்பவன் முஸ்லிமாகவும் இருக்க முடியாது.

மேலும் டெல்லி இமாம் பதவி என்பது மிக உயர்ந்த பதவி என்று தவறாக நினைத்துக் கொண்டு கேட்கிறீர்கள். தமிழகத்தில் ஒரு குக்கிராமத்தில் ஓலைகளால் வேயப்பட்ட ஒரு பள்ளிக்கு என்ன மதிப்பு இருக்கிறதோ அதே மதிப்பு தான் டெல்லி ஜீம்ஆ பள்ளிக்கும் இஸ்லாத்தின் பார்வையில்என்று சொல்லிக் கொள்கிறேன். உலக அளவில் மூன்றே பள்ளிகளில் தொழுவது சிறப்பு என்று இஸ்லாம் கூறுகிறது. ஒன்று மக்காவில் உள்ள கஃபா, இரண்டு மதினாவில் உள்ள மசூதி, முன்றாவது பெத்லஹேமில் உள்ள முஸ்ஜிதுல் அக்ஸா. இந்த மூன்றைத் தவிர வேறு எந்த மசூதியும் இஸ்லாமிய பார்வையில் சிறப்புத் தகுதியை அடையாது. டெல்லி இமாமின் பேச்சை டெல்லி முஸ்லிம்களே கேட்பதில்லை. டெல்லியில் உள்ள ஒரு மசூதிக்கு தமிழகத்தில் ஒரு மூலையில் இருக்கும் நான் சென்று இமாமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் வைக்கும் கோரிக்கை சிறு பிள்ளைத் தனமானது ம்யூஸ்.

suvanappiriyan said...

Sadai Appa!

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

நேசகுமார்!

//முகமதின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அவருக்கு விஷமூட்டப்பட்ட இறைச்சியை ஒரு யூதப்பெண் வழங்கினார். உண்ட பின் தான் முகமதுவுக்கு அதில் விஷமிருப்பது தெரியவந்தது. அப்பெண்ணை அழைத்துவரப்பணித்தார். ஏன் வைத்தாய் விஷம் என்றவர் வினவியதற்கு, உண்மையான நபியானால் இது விஷமிட்ட இறைச்சி என்று விண்ணிலிருந்து எச்சரிக்கை உமக்கு கிடைத்திருக்கும், அப்படிக் கிடைத்து நீர் தப்பித்தால் உண்மையான நபி நீரென்று தெளிந்திருப்பேன் என்று விடையறுத்தார் அந்தப் பெண்மணி.//

இது அந்த யூதப் பெண்ணின் சொந்த கருத்து. ஏனெனில் இதற்கு முன் தங்கள் நபிமார்களையே இதே யூதர்கள் கொன்றும் இருக்கிறார்கள்.ஆனால் முகமது நபியை யாராலும் கொல்ல முடியாது: அவருக்கு இயற்கையான மரணமே ஏற்படும் என்று குர்ஆன் முன்னறிவிப்பு செய்கிறது.

'தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! இதைச் செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர். அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான்.'
5 : 67 - குர்ஆன்

முகமது நபி அன்றைய சமுதாயத்தில் இருந்த சிலை வணக்கம் முதற்கொண்டு அனைத்து தீமைகளையும் தைரியமாக எதிர்த்ததால் ஏராளமான எதிரிகளை சம்பாதித்து வைத்திருந்தார். அவரை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று பல வகையிலும் முயற்சிகள் நடந்தன.

இதற்கெல்லாம் பயந்து கொண்டு முகமது நபி கோட்டை கொத்தளங்களில் ஒளிந்து கொண்டிருக்கவில்லை. குடிசையில்தான் வசித்தார்கள். வாயிற்காப்போன் யாரும் இருக்கவில்லை. வீதியில் சாதாரணமாக நடமாடினார்கள். போர்க்களங்களிலும் நேரிடையாக பங்கெடுத்து கொல்லப் படுவதற்கான வாய்ப்பை எதிரிகளுக்கு தாமாகவே வழங்கினார்.

அதே போல் யூதப் பெண் வைத்த விஷத்தாலும் முகமது நபியைக் கொல்ல முடியவில்லை. போர்க் களங்களில் சிறு காயங்களைத்தான் எதிரிகளால் முகமது நபிக்கு ஏற்படுத்த முடிந்தது. பிரச்சாரத்தில் சில கல்லடிகளையும் அந்த மக்களிடமிருந்து பெற்றார். இது போன்ற சோதனைகளையெல்லாம் பொறுமையாக சகித்து மக்களின் மனங்களை மாற்றுவதே தூதர்களின் கடமை. எனவே தான் விஷம் வைத்த அந்த பெண்ணை அன்போடு அழைத்து விசாரணையும் செய்தார்கள்.

//எனவே ஏக இறை எங்கெல்லாம் தோன்றுகிறதோ அங்கெல்லாம் ரத்த ஆறு ஓடத்துவங்கிவிடுகின்றது, சகிப்புத்தன்மை போய்விடுகிறது. //

தவறு! ஓரளவு இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப் படுத்தும் சவூதியில் எந்த ரத்தக் களறியையும் நம்மால் பார்க்க முடியவில்லை. இங்கு இஸ்லாம் வருவதற்கு முன்னால் இன்று நம் நாட்டில் நடக்கும் சாதிச் சண்டையை விட மோசமாக ஒரு குலத்தவர் மற்ற குலத்தை வெட்டி சாய்த்துக் கொண்டிருந்தனர். இன்று ஈராக்கில் நடக்கும் ரத்தக் களறிக்கு காரணம் அமெரிக்காவும், அந்நாட்டில் கிடைக்கும் பெட்ரோலிய வளமும் என்பது நமக்குத் தெரியும். பல இஸ்லாமிய நாடுகளில் குழப்பங்கள் இருப்பதற்கு காரணமே இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்தாதுதான்.

//முகமது என்பவர் உண்மையிலேயே யாராக இருந்தால் என்ன, கடவுளிடம் நம்மை அழைத்துச் செல்லும் வழிகாட்டியாக ஒருவரை மனது உருவகிக்கும்போது , அந்த ஒருவர் திருமூலரின் நந்திதேவராக - குருவாக, கடவுளிடம் நம்மை அழைத்துச் செல்பவராக உருமாறுகிறார். இராமகிருஷ்ண பரமஹம்சர் முகமதுவை பார்த்தது இப்படித்தான். இயேசுபிரானவிவேகானந்தர் புகழ்வது இதனால்தான். //

//ஆனால், கூடுமானவரை இந்த ஏக இறைவன் அல்லது ஏகப்பட்ட இறைவன்களால் வன்முறை, வெறி ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வது உசிதம். அதைத்தான் இந்தக் கட்டுரையின் முடிவில் சொல்லியிருக்கின்றேன்.//

இஸ்லாத்தை குறை காண தொடர்ந்து முகமது நபியின் வாழ்க்கை வரலாற்றைப் படித்ததனால் உங்கள் சிந்தனையில் பல மாற்றங்கள் தற்போது வர ஆரம்பித்திருக்கிறது. இது தொடர வேண்டும் என்பதே என் போன்றோரின் விருப்பம்.