Followers

Tuesday, October 10, 2006

பாராளுமன்றத் தாக்குதலில் அஃப்ஸலின் பங்கு!

பாராளுமன்றத் தாக்குதலில் அஃப்ஸலின் பங்கு!

யார் இந்த அஃப்ஸல்?

'1990-ல் அப்ஸல் 'ஜே.கே.எல.எஃப்' என்ற இயக்கத்தால் கஷ்மீரில் வாழும் ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் போல் கவரப்பட்டார். பாகிஸ்தானுக்கும் ஒரு முறை சென்றார். இயக்கத்தில் இருந்த கருத்து வேறுபாடுகளால் மனம் உடைந்து டெல்லி சென்றார். டெல்லியில் தன்னுடைய படிப்பை தொடர்ந்திட முடிவு செய்தார்.அவர் எப்போதும் படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.அதற்கு முன் அவர் எம்.பி;பி;எஸ் (மருத்துவப் பட்டத்திற்காக படித்துக் கொண்டிருந்தார். என் கணவர் சாதாரண வாழ்க்கையையே வாழ்ந்திட விரும்பினார். அதனால் நமது இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தார். எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவருடைய சான்றிதழ்களைத் தர மறுத்து விட்டனர். சான்றிதழ்களை தந்திட வேண்டும் என்றால் இன்னும் இரண்டு பேரை சரணடையச் செய்திட வேண்டும் எனக் கட்டாயப் படுத்தினர். இதனால் இன்னும் இரண்டு பேரை சரணடையச் செய்தார். அதன் பின்னர் அஃப்ஸலுக்கு ஒரு சான்றிதழைத் தந்தார்கள். அதில் 'அவர் ஒரு சரணடைந்தவர்' எனக் குறிப்பிட்டிருந்தார்கள். சரணடைந்த ஒருவராக கஷ்மீரில் வாழ்க்கை நடத்துவது மிகவும் சிக்கலான ஒன்று. ஆனாலும் அவர் தன் குடும்பத்தோடு கஷ்மீரிலேயே வாழ்ந்திடுவது என முடிவு செய்தார்.'

'1997-ல் அவர் ஒரு சிறு வியாபாரத்தைத் தொடங்கினார். அது மருத்துவம் - மருந்து ஆகியவை தொடர்பான வியாபாரம். மருத்துவ கருவிகளை வாங்கி விற்பதும் இதில் அடங்கும். அடுத்த வருடம் நாங்கள் திருமணம் முடித்துக் கொண்டோம். அப்போது அவருக்கு வயது 28. எனது வயது 18.'

'நாங்கள் கஷ்மீரில் வாழ்ந்த காலங்கள் வரை இந்திய பாதுகாப்புப் படையினர் எங்களைத் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டே இருந்தார்கள். யார் யார் மீதெல்லாம் சந்தேகம் இருக்கின்றதோ அவர்களைப் பற்றிய தகவல்களைத் தந்திட வேண்டும். அவர்களை உளவு பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என அழுத்தங்களும் அல்லல்களும் தந்து கொண்டே இருந்தார்கள். '22 ரைஃபிள்ஸ்' என்ற ராணுவப் பிரிவைச் சார்ந்த மேஜர் இராம் மோகன் ராய் என்பவர் அஃப்ஸலை சித்திரவதை செய்தார். அவருடைய மரம ஸ்தானத்தில் மின்சாரத்தைப் பாய்ச்சி சித்திரவதை செய்தார். அஃப்ஸலை அவமானப் படுத்தினார். கேவலமான சொற்களைக் கொட்டி வைதார்.'

'சில நாட்கள் கழித்து சிறப்புக் காவல் படையினர் அவரைத் தங்களுடைய ஹம்ஹமா முகாமிற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த முகாமில் வைத்து டி.எஸ்.பி.டாரிந்தர் சிங், டி.எஸ்.பி. வினாய் குப்தா ஆகியோர் ஒரு லட்சம் ரூபாய் கேட்டார்கள். இந்த ஒரு லட்சம்ரூபாயை கொடுக்கும் அளவிற்கு நாங்கள் வசதியானவர்கள் அல்ல. அதனால் நாங்கள் எங்களிடமிருந்தவை அனைத்தையும் விற்றுவிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானோம்.என்னுடைய திருமணத்தில் கிடைத்த சிறிய தங்க நகையையும் விற்பனை செய்ய வேண்டியதாயிற்று. இத்தனையையும் அஃப்ஸலை இந்தச் சித்திரவதைகளிலிருந்து காப்பாற்றிட இழக்க வேண்டியதாயிற்று.'

'அஃப்ஸலை குளிர்ந்த நீரில் நிறுத்தி வைத்தார்கள். பெட்ரோலை அவருடைய மலத் துவாரத்தில் ஊற்றினார்கள்.ஒரு அதிகாரி சாந்தி ஷிங் என்பவர் அஃப்ஸலை கடுங்குளிரில் தலை கீழாக தொங்க விட்டார். மணிக்கணக்கில் தொங்க விட்டார். அவருடைய மறைவிடத்தில் மீண்டும் மின் அதிர்ச்சியைப் பாய்ச்சினர். இந்த சித்திரவதை ரணங்களிலிருந்து வெளியே வந்திட அவர் பல மாதங்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டியதாயிற்று.'

'அஃப்ஸல் ஏதேனும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். அதனால்தான் அவரை இப்படி சித்திரவதை செய்திருக்கலாம் என நீங்கள் நினைக்கலாம். இப்படிச் சித்திரவதை செய்யப் பட்டது அவரிடமிருந்து தகவல்களைச் சேகரிக்கத்தான் என்றும் நீங்கள் நினைக்கலாம். ஆனால் கஷ்மீரில் இருக்கும் சூழலை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். கஷ்மீரில் வாழும்; ஒவ்வொருவருக்கும் அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்திருக்கும். அவர் அங்கு நடப்பவற்றில் பங்கு பெறுகிறாரோ இல்லையோ அங்கு என்ன நடக்கிறது என்பது நிச்சயமாகத் தெரிந்திருக்கும். மக்கள் அனைவரையும் தகவல் சொல்பவர்களாக மாற்றுவதன் மூலம் அண்ணனுக்கு எதிராக தம்பியையும், கணவனுக்கு எதிராக மனைவியையும், பிள்ளைகளுக்கு எதிராக பெற்றோரையும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அஃப்ஸல் தன் குடும்பத்தோடு அமைதியாக வாழவே விரும்பினார். ஆனால் எஸஃ.டி.எஃப் என்ற சிறப்புக் காவல் அதற்கு அனுமதிக்கவில்லை.'

'இது போன்ற குரூரமான சூழ்நிலையிலிருந்து அஃப்ஸல் தன்னை விடுவித்துக் கொள்ள விரும்பினார். அவர் தக் வீட்டை விட்டு வெளியேறினார்.தன் குடும்பத்தையும் தொடர்ந்தார் டெல்லி வந்தார்.டெல்லியில் வந்து வயிறு பிழைக்க விரும்பினார். அங்கே தன்னுடைய வாழ்க்கையைச் சீர் செய்திட முயற்சி செய்தார். வாழ்க்கை ஓரளவுக்கு நிலை பெற்றதும் என்னையும் எங்களது நான்கு வயது மகனையும் டெல்லிக்கு அழைத்து வாழ வைப்பதாக முடிவு செய்தார்.எல்லாக் குடும்பங்களையும் போல நாங்கள் ஒன்றாய் வாழ்ந்திட விரும்பினோம். ஆனால் மீண்டும் சிறப்புக் காவல் படையினர் என் கணவரை டெல்லியிலும் துரத்த ஆரம்பித்தனர். அத்தோடு எங்களுடைய எல்லாக் கனவுகளும் தகர்ந்து தவிடு பொடியாயின.

'சிறப்புக் காவல் படையினர் என் கணவரிடம் முஹம்மத் என்பவரை கஷ்மீரிலிருந்து டெல்லிக்கு அழைத்து வர வேண்டும் எனக் கட்டாயப் படுத்தினார்கள். என்னுடைய கணவர் இந்த முஹம்மத் என்பவரையும், தாரிக் என்பவரையும் சிறப்புக் காவல் படையின் கஷ்மீர் முகாமில் வைத்தே சந்தித்தார். இவர்களைப் பற்றி என்னுடைய கணவருக்கு எதுவும் தெரியாது. அதே போல் ஏன் இப்படியொரு பணியைச் (கஷ்மீர் சிறப்புக் காவல் படையின் முகாமிலிருந்து இவர்களை டெல்லிக்கு அழைத்து வரும் பணியை) செய்யச் சொல்கிறார்கள் என்பதும் என் கணவருக்குத் தெரியாது. '

'இவற்றை எல்லாம் என் கணவர் நீதி மன்றத்தில் விரிவாக எடுத்துச் சொன்னார். ஆனால் நீதி மன்றமோ பாதியை எடுத்துக் கொண்டது. மீதியை எடுத்துக் கொள்ள மறுத்து விட்டது. என்னுடைய கணவர் முஹம்மதை காஷ்மீரிலிருந்து டெல்லிக்கு அழைத்து வந்தார் என்பதை எடுத்துக் கொண்டது. ஆனால் முஹம்மதை சிறப்புக் காவல் படைதான் தன் முகாமிலிருந்து டெல்லிக்கு அழைத்துச் செல்லும்படி பணித்தது என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்தது.'

'கீழ் நீதி மன்றங்களில் அஃப்ஸல் என்ற என் கணவருக்கு வாதாட யாரும் இல்லை. நீதி மன்றம் ஒரு வழக்கறிஞரை நியமித்தது. அவரோ என் கணவரிடம் என்ன நடந்தது என்பதை எப்போதும் கேட்டதில்லை. அதே போல் அவருக்கு எதிராகச் சாட்சியம் சொன்னவர்களைக் குறுக்கு விசாரணையும் செய்யவில்லை. அந்த வழக்கறிஞர் என் கணவரை வெறுத்தார். நீதிபதி திங்காரா அவர்களிடம் என்னுடைய கணவர் 'அந்த வழக்கறிஞர் எனக்காக வாதாட வேண்டாம் ' என்று எவ்வளவோ சொன்னார். ஆனால் நீதிபதி திங்காரா அதைக் கண்டு கொள்ளவே இல்லை. உண்மையில் என் கணவர் கீழ் நீதி மன்றத்தில் தனது தரப்பில் எதையும் எடுத்துச் சொல்லிட இயலவில்லை. என்னுடைய கணவர் எதையேனும் சொல்லிட முற்படும் போதெல்லாம் நீதிபதி அதைக் கேடக மறுத்து விட்டார். அவர் தன்னுடைய துவேஷங்களை வெளிப்படையாகவே நீதி மன்றத்தில் காட்டினார்.'

'உயர் நீதி மன்றத்தில் ஒருவர் மனித உரிமை வழக்கறிஞர் எனக் கூறிக் கொண்டு என்னுடைய கணவருக்காக வாதாட முன் வந்தார். என் கணவரும் அதை ஏற்றுக் கொண்டார். ஆனால் அவர் என் கணவருக்காக வாதிடவில்லை. மாறாக நீதி மன்றத்திடம் என் கணவரைத் தூக்கிலிட்டுக் கொலை செய்யக் கூடாது: விஷ ஊசியைப் போட்டுத்தான் சாகடிக்க வேண்டும் என வாதாடினார். என் கணவருக்காக ஒரு வழக்கறிஞரை வைத்திடும் வாய்ப்பு எனக்கிருக்கவில்லை. எனக்கு டெல்லியில் யாரையும் தெரியாது. வேறு வழியின்றி என் கணவர் எஸ்.ஏ.ஆர் ஜீலானியைக் காப்பதற்காக ஏற்படுத்தப் பட்ட வழக்கறிஞர் குழுவுக்கு கடிதம் எழுதினார். இந்தக் குழு 'சுசில்குமார்' என்ற வழக்கறிஞரை வைத்தது. ஆனால் இவரால் உச்ச நீதிமன்றம் சாட்சியங்களுக்குள் செல்ல முடியாது. அதனால் என் கணவருக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை.'

'என் கணவரைத் தூக்கில் போட்டு விடக் கூடாது என்றும் அவருடைய வழக்கை நியாயமாக நீதியாக விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதி மன்றத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.தன்னுடைய தரப்பு வாதத்தைச் சொல்லிட வாய்ப்பளிக்கப்படாத ஒருவரை நீங்கள் (உச்சநீதி மன்றம்) தூக்கிலிட மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். சம்பவம் நடந்தவுடன் காவல் துறையினர் என் கணவரை ஊடகங்களின் மூலம் ஒப்புதல் வாக்கு மூலம் தந்திட கட்டயப் படுத்தினார்கள். இது வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னரே நடைபெற்றது.

'காவல் துறையினர் அவரை அவமானப் படுத்தினார்கள். அடித்தார்கள். சித்திரவதை செய்தார்கள்.அவருடைய வாயில் மூத்திரத்தைப் பெய்தார்கள்.'

'இவற்றை எல்லாம் வெளிப்படையாகச் சொல்வதற்கு வெட்கமாகவெ இருக்கின்றது. ஆனால் சூழ்நிலைகள் என்னைக் கட்டாயப் படுத்தியதால்தான் இவற்றை எல்லாம் சொல்லிட வேண்டியதாயிற்று. இவற்றை எல்லாம் எழுத்தில் வடிப்பதற்கு மிகையான தைரியம் தேவைப்பட்டது. இப்பொது ஆறு வயதாகி விட்ட என் மகனின் தந்தையைக் காப்பாற்றிடுவதற்காக நான் இவற்றை எல்லாம் சொல்லிட வேண்டியதாயிற்று.'

'என்னுடைய கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக உச்ச நீதி மன்றம் பேசுமா? என் சார்பில் நீங்கள் பேசுவீர்களா?நான் என் கணவருக்காகவும் என் மகனின் தந்தைக்காகவும் வாதாடுகிறேன் என்பது உண்மைதான். அதே நேரத்தில் கஷ்மீரில் வாடும் என்னைப் போன்ற பெண்களுக்காகவும் வாதாடுகின்றேன்.'

இந்த மொத்த விவகாரத்திலும் நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எஸ்.டி.எஃப் என்ற சிறப்புப் பாதுகாப்புப் படையின் கண்காணிப்பில் நீண்ட நாட்கள் இருந்தவர்கள் என்பது புலப்படும். இதனால்தான் விருப்பு வெறுப்பற்ற ஒரு விசாரணை நாடாளுமன்றத் தாக்குதலில் மேற் கொள்ளப் பட வேண்டும் என ஜன நாயக உரிமைகளுக்கான மக்கள் குழுமம் கேட்கிறது.

-நாடாளுமன்ற தாக்குதலில் சம்பந்தம் உள்ளதாக அப்ஸல் என்ற கஷ்மீரி கைது செய்யப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.மாவட்ட தலைமை நீதிபதி திங்காரா அவர்களாலும், பின்னர் உச்ச நீதி மன்றத்தாலும் தண்டிக்கப் பட்டவர். இந்த தண்டனையைப் பற்றி அஃப்ஸலின் மனைவி தபஸ்ஸூம் தான் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் தமிழாக்கத்தைத்தான் நாம் மேலே பார்த்தது.

Source : Annexe 18 of : December, 13,
Terror Over Democracy By Nirmalangshu Mukherji:
A Wifes Appeal for justice :
Published by Promilla & co, New Delhi.

அஃப்ஸல் நம் பாராளுமன்றத்தை தாக்க திட்டம் தீட்டியிருந்தால் உண்மையிலேயே தூக்கு தண்டனை கொடுக்க தகுதியானவர்தான். ஆனால் இங்கு அன்றைய பி.ஜே.பி அரசும், இந்துத்துவ வாதிகளும், நீதிபதிகளும் திட்டமிட்டு ஏற்கெனவே அவர்களின் கஸ்டடியில் இருந்தவர்களை வைத்து நடத்திய நாடகமாகத்தான் மேற் சொன்ன மனுவின் மூலம் தெரிய வருகிறது. இந்த மனுவில் உள்ள விபரங்கள் உண்மையாகும் பட்ஷத்தில் உண்மைக் குற்றவாளிகளை மக்கள் முன் கொண்டு வந்து உச்ச பட்ச தண்டனையை கொடுக்க வேண்டும்.
இது சம்பந்தமான பதிவை தற்போது வெளியிட்டிருக்கும் நண்பர் ரோசா வசந்துக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

25 comments:

We The People said...

இந்த திரைகதை வசனம் எந்த படத்துல வருது தலைவா??!!! ராம் ஜெத்மலானி எழுதி தந்தது மாதிரி தெரியுது!! பேஷ்! பேஷ்!! ரொம்ப ஓவரா இருக்கு!!

சிறில் அலெக்ஸ் said...

இத்தனை கசப்பான அனுபவங்களை இந்திய அரசிடம் பெற்ற இவர் பார்லிமெண்ட்டை இடித்திருந்தாலும் அது நல்ல விஷ்யமே.

ஒரு கட்டிடம் இடிந்துவிடுவதல்ல இறையாண்மைக்கு இழிவு. தன் நாட்டை நம்பியிருக்கும் ஒரு பிரஜையை அவனுக்குரிய உரிமையை மறுத்து அவனை சித்ரவதை செய்வதுதான் இறையாண்மைக்கு இழுக்கு.

அப்சல் விஷ்யத்தில் இன்னொருபக்கத்தை தெளிவுபடுத்தும் பதிவைத் தந்ததற்கு நன்றி.

புதுச்சுவடி said...

அன்புள்ள சுவனப் பிரியன்,

நல்ல பதிவு.

நாடாளும் மன்றத் தாக்குதல் என்பது அன்றைய பீஜேபீ அரசினால் 'பொடா'ச் சட்டத்தைக் கொண்டு வருவதற்காக அரங்கேற்றப் பட்ட நாடகம். அதில் பலியானோர் அப்பாவிகள்.

ஜீலானியையும் அப்ஸானையும் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்ததைப்போல் அஃப்ஸலையும் விடுதலை செய்திருக்க வேண்டும்; ஆனால் அவரது முந்தைய இயக்கத் தொடர்பு காவல்துறைக்கு வாய்ப்பாக அமைந்து விட்டதால் நீதிமன்றம் அஃப்ஸலைத் தீவிரவாதியாகவே பார்க்கிறது.

விருதுநகர் பாண்டியம்மாள் வழக்கும் உப்புக் கோட்டை ஸுஜாதா வழக்கும் தமிழகம் அறிந்த ஒன்று...

╬அதி. அழகு╬ said...

உண்மைகள் வெளிவரத் தொடங்கி விட்டன. அரசியலிலும் நீதித் துறையிலுமுள்ள அயோக்கியர்களின் முகமூடி கிழிபட்டு தொங்குகின்றன. இனி அயோக்கியர்களுக்கான தண்டனைகள் நிறைவேற்றப் படவேண்டியது ஒன்றே நம் முன் மீந்திருப்பது.

Sirajudeen said...

xU mwpQh; nrhd;dhH. ‘,e;jpa ehL [dehaf ehlh? ,y;iyah? vd;W gyH Mjq;fg; gLfpwhHfs;. ehd; mtHfsplk; Nfl;gJ ,Jjhd; ,J vg;NghJ [dehaf ehlhf ,Ue;jJ. ,g;NghJ ,y;yhky; Nghtjw;F vd;W’.
cjhuzj;jpw;F ghghp k];[pj; tpraj;ij vLj;Jf; nfhs;Sq;fs;. vd;W R.S.S, vd;w tp\tpj;J 1924 y; ,e;jpahtpy; Kisj;jNjh md;wpypUe;J ,d;W tiu ,e;j ,e;jpa ehL my;Nyhyg; gl;Lf;nfhz;bUf;fpwJ. ,e;j fhtp cilazpe;j fWg;ghLfs; vy;yh murplq;fisAk; Mf;fpukpj;jjd; tpisT ePjp vd;gNj ,e;jpahtpy; nrj;Jtpl;lJ.

suvanappiriyan said...

எஸ்.ஏ.ஆர். ஜீலானி!

தூக்குத் தண்டனை வழங்கப்பட்டவர்களில் நாடாளுமன்றத் தாக்குதலுக்கு சதி செய்தார் எனக் குற்றம் சாட்டப்பட்ட எஸ்.ஏ.ஆர். ஜீலானி என்பவரும் உண்டு. இவர் டெல்லிப் பல்கலைக் கழகத்தில் அரபித் துறைத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர். ஜீலானி அவர்களை டெல்லி உயர்நீதி மன்றம் வழக்கிலிருந்தே விடுதலை செய்தது. அவரை விடுதலை செய்திடும் போது இந்த வழக்கில் சமர்ப்பிக்கப் பட்ட சாட்சியங்கள் எத்துணை பொய்யானவை போலியானவை என்பதைத் தெளிவுபடுத்தியது.

ஜீலானியின் மீது பதினெட்டு சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப் பட்டதாக கீழ் நீதிமன்றம் கூறிற்று. அதனால் மரண தண்டனையும் வழங்கிற்று. அந்த பதினெட்டு சாட்சியங்களும் போலியானவை என உயர் நீதி மன்றம் கூறிற்று. அத்தனை சாட்சியங்களையும் ஒட்டுமொத்தமாக நிராகரித்தது உயர் நீதி மன்றம்.

அதே போல் அஃப்சல் என்பவரைப் பற்றிய காவல் துறையின் கூற்றுக்கள் முழுமையாக உடைந்து தகர்ந்து துகள் துகள்களாகப் போய்விட்டன.

'செல் போன்களைத்தான்' மிக முக்கியமான சாட்சியமாக அரசு தரப்பு காட்டுகிறது. அதற்கும் ஆதாரமாக குற்றம் சுமத்தப் பட்டவர்களின் வாக்கு மூலங்களையே காட்டுகின்றது. இந்த வாக்கு மூலங்கள் அனைத்தும் கொடுமையும் குரூரமும் நிறைந்த சித்திரவதைகளுக்குப் பின் வாங்கப் பட்டவை. ஆகவே இந்த வழக்கின் அடிப்படை ஆதாரங்கள் அல்லது சாட்சியங்கள் யதார்த்தமானவை அல்ல. அவை உருவாக்கப் பட்டவை. இதனால் இந்த வழக்கு விசாரணையில் உண்மைகள் வெளிவர தவறி விட்டன.

அதே போல் 'சுயமான சாட்சியங்கள்' எனக் காவல் துறை கொண்டு வந்து நிறுத்திய சாட்சியங்களும் வாங்கப் பட்ட சாட்சியங்கள்.

குற்றவாளிகளிடம் வாக்கு மூலங்கள் என வாங்கப் பட்டவை 'பொடா' என்ற பாசிச பயங்கர வாதச் சட்டத்தின் கீழ் வாங்கப் பட்டவை. இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த வாக்கு மூலங்கள் காவல் துறை அதிகாரிகளிடம் வழங்கப் பட்டவை அல்ல. அவை பார தூரமான சித்திரவதைகளின் கீழ் வழங்கப் பட்டவை என்பதை ஏற்கெனவே சுட்டிக் காட்டியிருக்கிறோம்.

இந்த வாக்கு மூலங்கள் - அதாவது காவல் துறையினர் முன் வழங்கப் பட்ட இந்த வாக்கு மூலங்கள் அனைத்தும் பின்னர் நீதிபதிகளின் முன் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (criminal procedure code) பிரிவு முன்னூற்றுப் பதின் மூன்றின் கீழ் வழங்கப் பட்ட வாக்கு மூலங்களுக்கு முற்றிலும் மாறானவை.

இப்படி நீதிபதிகளின் முன் வழங்கப் பட்ட வாக்கு மூலங்களில் (அதாவது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வாக்கு மூலங்களில்)பல வழக்கின் போக்கையே மாற்றுபவை. இதில் முஹம்மது அஃப்ஸல் என்பவர் வழங்கிய வாக்கு மூலம் மிகவும் முக்கியமானது.

அந்த வாக்கு மூலம் நம்பத் தகுந்தது. இதனால் நீதி மன்றங்கள் இதில் சில பகுதிகளை நம்பின. இந்த வாக்கு மூலம் இந்த வழக்கில் மறைத்து வைக்கப் பட்ட பல முக்கிய பகுதிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வாக்கு மூலத்தை இதர வாக்கு மூலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்திடும் போது இந்த சதியில் பாதுகாப்பு முகவர்களின் (security agencies) பங்கு முண்டோ என்ற கசப்பான சர்ச்சையும் கிளம்பியிருக்கின்றது.

முஹம்மது அஃப்ஸலுக்கு அவருடைய வரலாற்றையும் வாதத்தையும் முழுமையாக சொல்லிட எந்த வாய்ப்பும் வழங்கப்பட வில்லை. இதோடு முஹம்மது அஃப்ஸல் என்பவரின் தரப்பை நீதிமன்றத்தில் யாரும் சமர்ப்பிக்வில்லை.

இதனால் முழு வழக்கிலும் காவல் துறையினரின் கூற்று நிரூபிக்கப் படாமலேயே நின்றது. பெரிய திரிபுகளும் கற்பனைக் கதைகளும் இயற்கையான நீதி மறுக்கப் பட்ட நிலையிலுமே (Against National Justice) வழக்கு முடிந்தது.

-நிர்மலாங்ஷூ முகர்ஜி
ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் குழு
Terror Over Democracy

suvanappiriyan said...

கஷ்மீரில் பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளைக் கடத்திச் சென்று நிர்வாணமாக படம் பிடித்து வைத்துக் கொண்டு அந்தப் படங்களைக் காட்டி மிரட்டி அந்தப் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது வழக்கம்.இப்படி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப் பட்ட இளம் பெண்கள் நாற்பத்தி மூன்று பேர் மீட்கப் பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் படை அதிகாரிகள், காவல் துறையினர், அரசியல்வாதிகள் இவர்கள் தான் இதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். வழக்கமான பாணியில் எட்டாம் வகுப்பு பெண் குழந்தை ஒன்றை கடத்திச் சென்றதில் தான் இந்த விவகாரம் வெளியே வந்துள்ளது. இதில் பாதுகாப்புப் படையைச் சார்ந்த பதிமூன்று பேர் உடந்தை.

காவல் துறை இதனை சரிவர புலன் விசாரணை செய்யாது என்பதால் இந்த வழக்கு மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மத்திய புலனாய்வுத் துறையும் இதனைச் சரிவர புலனாய்வுச் செய்திட வில்லை என கஷ்மீர் உயர்நீதி மன்ற நீதிபதி நீதி மன்றத்திலேயே வருத்தப் பட்டுள்ளார்.

-Indian Express. Pune.
29-04-2006

'ஜம்மு கஷ்மீரில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களை அடிக்கடி இஸ்லாமியர்கள் அங்கு வாழும் இந்துக்கள் மீது நடத்தும் போர் என்றே காட்டுகின்றார்கள். இது மீடியாக்களின் வழியாக பெரிதுபடுத்தப் படுகிறது. இந்த ஊடகங்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் கொலை செய்யப்படும் முஸ்லிம்களைப் பற்றிய செய்திகளை அதிகமாக வெளியிடுவதில்லை. கொல்லப் பட்டவர்களில் எண்பது சதவீதம் முஸ்லிம்களே என்ற உண்மை திட்டமிட்டு மறைக்கப் படுகிறது.'

-The Hindu
2-5-2006

கடந்த பதினாறு வருடங்களுக்குள் எட்டாயிரம் பேர் வரை காணாமற் போய் விட்டார்கள். இவர்களில் அதிகமானோர் பாதுகாப்புப் படையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்டவர்கள். அந்த இளைஞர்கள் எங்கு அடைத்து வைக்கப் பட்டுள்ளார்கள் என்ற ஒரு விபரமும் பெற்றோர்களுக்கு இதுவரை தெரியப் படுத்தப் படவில்லை.

ஸாஹிருத்தீன் என்ற பத்திரிக்கையாளர் தனது 'அவர்கள் காற்றில் கரைந்து போனார்களா?' என்ற நூலில் காணாமற்போன நான்காயிரம் பேர்களின் பட்டியலைத் தருகிறார்.

ஐநூறு பேருக்கும் அதிகமாக கஷ்மீரில் இளைஞர்கள் காணாமல் போனதை உயர் நீதி மன்றமே ஒப்புக் கொண்டிருக்கிறது.

காணாமற்போனோரின் பெற்றோர்கள் அமைப்பும், மனித உரிமைகள் அமைப்பும் எட்டாயிரம் பேர் என்று கணக்கு சொல்கிறது.

இவை எல்லாம் கஷ்மீர் மக்கள் கடைபிடித்து வரும் இஸ்லாமிய கலாச்சாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக சீர்குலைத்து அவர்களிடையே கலாச்சார பேரழிவை ஏற்படுத்தும் முயற்சி என்று தான் கஷ்மீர் மக்கள் நினைக்கின்றனர். அடக்கு முறையால் மக்களை தற்காலிமாக வெல்லலாம். ஆனால் அவர்களின் மனங்களை வெல்ல நம் அரசு முயல வேண்டும். நம் நாட்டு அறிவு ஜீவிகளும், அரசும் இதற்கான முயற்ச்சியில் உடன் இறங்க வேண்டும்.

suvanappiriyan said...

பில் கிளிண்டன் வருகையின் பொது முப்பந்தைந்து சீக்கியர்கள் காஷ்மீர் சத்தீசிங் புராவில் கொல்லப் பட்டார்கள். அதைச் செய்தவர்கள் என ஐந்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீதுபழியைப் போட்டார்கள். அவர்களை கொலை செய்து வழக்கை முடித்துக் கொண்டார்கள்.

முன்னால் அமெரிக்க உள்துறைச் செயலாளர் மெடலின் ஆல்பிரைட் 'தி மைட்டி அண்ட் ஆல் மைட்டி' என்றொரு நூலை எழுதியுள்ளார். இந்த நூலுக்கு பில் கிளிண்டன் முன்னுரை எழுதியுள்ளார். கிளிண்டன் இந்தியா வந்த வேளையில் தான் இந்தப் படுகொலைகள் நடந்தன. இந்தப் படுகொலைகளை நடத்தியது ஹிந்துத்துவ வாதிகள் என்று பில் கிளிண்டன் அந்த நூல் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

இந்தப் படுகொலைகளைச் செய்தது கஷ்மீர் தீவிரவாதிகள் என்று குற்றஞ்சாட்டி வழக்கம் போல் ஐந்து கஷ்மீரிகளை இராணுவம் சுட்டுக் கொன்றது.

இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து ஆம்னஸ்டி இண்டர் நேஷனல், பஞ்சாபி மனித உரிமைகள் அமைப்பு, அரச ஒடுக்குமுறைக்கான இயக்கம் (The movement against state repression) ஆகிய அமைப்புகள் விசாரணை நடத்தி வெளியிட்ட அறிக்கையின் விவரங்களைச் சுட்டிக் காட்டித்தான் பில் கிளின்டன் இவ்வாறு கூறியுள்ளார்.

சீக்கியர்களை படுகொலை செய்தவர்கள் ராணுவச் சீருடை அணிந்திருந்தனர். சீக்கியர்களைச் சூழ்ந்து அவர்கள் சீக்கியர்கள் தானா என்று பரிசோதித்து உறுதிப்படுத்திய பின் குருத்வாராவின் சுவரைப் பார்க்குமாறு திருப்பி நிறுத்தி கொலைகாரர்கள் அந்த அப்பாவிகளைச் சுட்டுக் கொன்றார்கள். படுகொலைகளை நிகழ்த்தி விட்டு திரும்பிப் போகும் போது ஹிந்துத்துவ கோஷங்களை எழுப்பினார்கள் அந்தக் கொலைகாரர்கள்.

சீக்கிய பெருங்குடி மக்கள் அன்று அமைதி காத்தார்கள். அதனால் முஸ்லிம்களைத் தாக்கிடவில்லை. (ஒரு வேளை அவர்களுக்கு இவை எல்லாம் தெரிந்திருக்கலாம்.)

அப்போது முதல்வராக இருந்த ஃபரூக் அப்துல்லா ஓய்வு பெற்ற உச்ச நீதி மன்ற நீதிபதி எஸ்.ஆர். பாண்டியன் அவர்களைத் தலைவராகக் கொண்டு ஓர் விசாரணைக்கு உத்தரவிட்டார். ஆனால் அதிகாரிகள் பாண்டியனுடன் ஒத்துழைக்க மறுத்து விட்டனர். இதனால் நீதிபதி பாண்டியன் தன பொறுப்பை சரி வர நிறை வேற்ற இயலாது என்று கூறி இராஜினாமா செய்து விட்டார். பின்னர் இந்த வழக்கு மத்திய புலனாய்வுத் துறையின் கைகளுக்குச் சென்றது. அவர்கள் இது எதிர் தாக்குதல் அல்ல மாறாக பட்டவர்த்தனமான படுகொலை என்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

கொல்லப் பட்ட அந்த ஐந்து முஸ்லிம்களும் நமது ராணுவச் சிறையில் பல மாதங்கள் இருந்தவர்கள். அந்த முஸ்லிம் இளைஞர்களை கொலை செய்து விட்டு எதிர் தாக்குதல் என்ற எண்கவுண்டரில் கொன்றதாக அறிவித்து விட்டார்கள்.

மத்திய புலனாய்வுத் துறை ஒரு லெப்டினென்ட் கலோனல்,இரண்டு மேஜர்கள், ஒரு சுபேதார் போன்றவர்கள் மீது தற்போது வழக்கு தொடர்ந்துள்ளது. பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதே போல் கஷ்மீரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த ஒரு சோறு பதம்.

Source: India today. May 9. 2006, “The Mighty And Almighty” –Medlin Albret

We The People said...

//'செல் போன்களைத்தான்' மிக முக்கியமான சாட்சியமாக அரசு தரப்பு காட்டுகிறது. அதற்கும் ஆதாரமாக குற்றம் சுமத்தப் பட்டவர்களின் வாக்கு மூலங்களையே காட்டுகின்றது.//

சுவனப்பிரியன் அப்ப பாராளமன்ற தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் அப்சல்தான், தன் பெயரில் வாங்கினார் என்பதற்கான ஆதரம் - காரின் RC புக்கை விட்டுப்புட்டீங்களே!! அதுவும் பாதுகாப்பு படை வாங்கித்தந்தா??

அது சரி இதை எல்லாம் வாங்கிதற பாதுகாப்பு படைக்கு என்ன பயன்?? நம்ம பாராளமன்றம் தாக்கப்பட்டால் என்ன அவர்களுக்கு லாபம்?? ஓவரா திரைக்கதை வடிவமைக்காதீர்கள் சுவனப்பிரியன்.

suvanappiriyan said...

அழகு!

//இனி அயோக்கியர்களுக்கான தண்டனைகள் நிறைவேற்றப் படவேண்டியது ஒன்றே நம் முன் மீந்திருப்பது.//

எண்ணற்ற அப்பாவிகள் படும் சித்திரவதைகள் முடிவுக்கு வரும் அந்நாளை நாம் அனைவரும் எதிர்ப் பார்ப்போம். நீதி கிடைக்க இந்த ரமலானில் இறைவனிடமும் பிரார்த்திப்போம்.

suvanappiriyan said...

வி த பீபுள்!

//இந்த திரைகதை வசனம் எந்த படத்துல வருது தலைவா??!!! ராம் ஜெத்மலானி எழுதி தந்தது மாதிரி தெரியுது!! பேஷ்! பேஷ்!! ரொம்ப ஓவரா இருக்கு!!//

ஏற்கெனவே பல திரைக் கதைகளை எழுதிப் பழக்கப் பட்ட கும்பல் அல்லவா நீங்களெல்லாம்! அது தான் பழைய ஞாபகம் வருகிறது போல.

நீதித்துறையிலும் காவல் துறையிலும் உள்ள கறுப்பாடுகளை நீக்கினால் பல கொலைகளையும பல குண்டு வெடிப்புகளையும் எப்படி திட்டம் போட்டு உங்கள் கும்பலால் செய்யப் பட்டது என்ற உண்மை வெளி வரும். பொறுத்திருங்கள். உண்மை என்றுமே உறங்கியதாக சரித்திரம் இல்லை.

suvanappiriyan said...

சிறில் அலெக்ஸ்!

//ஒரு கட்டிடம் இடிந்துவிடுவதல்ல இறையாண்மைக்கு இழிவு. தன் நாட்டை நம்பியிருக்கும் ஒரு பிரஜையை அவனுக்குரிய உரிமையை மறுத்து அவனை சித்ரவதை செய்வதுதான் இறையாண்மைக்கு இழுக்கு.

அப்சல் விஷ்யத்தில் இன்னொருபக்கத்தை தெளிவுபடுத்தும் பதிவைத் தந்ததற்கு நன்றி.//

அழகாக சொன்னீர்கள். ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்து விடலாம். ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப் படக் கூடாது என்ற நியதிக்கேற்ப அரசு மறு விசாரணைக்கு உத்தரவிட்டு நீதியை நிலை நாட்ட வேண்டும்.தன் நாட்டு மக்களையே திட்டம் போட்டு சீரழிக்கும் அதிகார வர்க்கம் நிறைந்தது உலகிலேயே நம் நாடாகத்தான் இருக்கும் போல் தெரிகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

suvanappiriyan said...

புதுச் சுவடி!

//விருதுநகர் பாண்டியம்மாள் வழக்கும் உப்புக் கோட்டை ஸுஜாதா வழக்கும் தமிழகம் அறிந்த ஒன்று...//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. குறிப்பிட்டிருக்கும் இரண்டு வழக்குகளைப் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. தகவல் தந்தமைக்கு நன்றி.

suvanappiriyan said...

நண்பர் சிராஜீத்தீனின் கருத்து யுனிகோடில்!

//ஒரு அறிஞர் சொன்னார் 'இந்தியா ஜனநாயக நாடா இல்லையா என்று பலர் ஆதங்கப் படுகிறார்கள்.நான் அவர்களிடம் கேட்பது இது எப்போது ஜனநாயக நாடாக இருந்தது? இப்போது இல்லாமல் போவதற்கு' என்று. ஆர்.எஸ்.எஸ் என்ற விஷ வித்து இந்தியாவில் என்று முளைத்ததோ அன்றிலிருந்து இன்று வரை இந்த இந்திய நாடு அல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த காவி உடை அணிந்த கறுப்பாடுகள் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்ததின் விளைவால் நீதி என்பதே இந்தியாவில் செத்து விட்டது.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிராஜீத்தீன். யுனிகோடில் எழுத முயற்ச்சியுங்கள்.

suvanappiriyan said...

நியமத்!

//ungalin ippadivu kanngalil kanneerai varavalaithu vittana//

நமக்கே இந்த அளவு அதிர்ச்சியாய் இருக்கிறதே! சம்பந்தப் பட்ட குடும்பத்தவரின் நிலை எப்படி இருக்கும் என்று நாம் நினைத்துப் பார்க்க கடமைப் பட்டிருக்கிறோம். குர்ஆன் இறங்கிய இந்த மாதத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்திப்போம். தற்போது அது ஒன்றுதான் நம்மால் முடிந்தது.

பதிவுகளைப் படித்து தொடர்ந்து பின்னூட்டம் இட்டு வருகிறீர்கள். நன்றி.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

The Supreme Court judgment nails every lie being repeated by supporters of Afzal like you.His role in preparing for the attack has been documented in the judgment.He had helped them in many ways.He deserves death
for his actions.

In the Kashmir Sex Scandal the J&K Bar Association prevented any lawyer from appearing on behalf of accused.
So the Supreme Court transferred
the case to Chandigarh.Afzal was not denied legal assistance or access to justice.But those who support him now did nothing when
J&K bar association prevented lawyers from appearing in the
Sex Scandal case.In fact they
all joined hands to turn this
issue in to a conspiracy theory.

Cyril should know that they attacked parliament when it was
in session.Members of the parliament and ministers were
there.So it was not an attack
on the building but on the sovergnity of India.

Thanks for making your support
to terrorists and enemies of India
so open.Your true colors are in the
open now.
http://ravisrinivas.blogspot.com

Muse (# 01429798200730556938) said...

அரசு வன்முறை ஏழைகளின் மீது பாயும் கொடுமை என்பதை விளக்கும் வகையில் அமைந்திருக்கிறது இந்த வாக்குமூலம். இத்தகைய கொடுமைகளுக்குள்ளானபோது தன்னுடைய கணவரைச் சந்திக்கும் ஆறுதலையாவது அரஸாங்கம் அவருக்கு அளித்ததா?

வாசகன் said...

சாதகமாக இருந்தால் பொய்யையும் 'ஆய்வு' என்பார்கள்.
பாதகமாக இருந்தால் உண்மையையும் 'திரைக்கதை' என்பார்கள்.
RAM (Racial Supremacy, Administration, Money)க்காக சொந்த நாட்டின் மக்களையும் 'அகதி'யாக்குவார்கள்.
கடைசியில் மக்களின் மேல் பழியை போட்டு 'வீ தி பீப்பிள்' என்பார்கள்.

suvanappiriyan said...

வீ த பீபள்!

//அது சரி இதை எல்லாம் வாங்கிதற பாதுகாப்பு படைக்கு என்ன பயன்?? நம்ம பாராளமன்றம் தாக்கப்பட்டால் என்ன அவர்களுக்கு லாபம்?? ஓவரா திரைக்கதை வடிவமைக்காதீர்கள் சுவனப்பிரியன்.//

'நாடாளுமன்ற தாக்குதல் நடை பெற்ற போது பாரதிய ஜனதா கட்சி சங்பரிவாரத்தையே திருப்தி செய்திட இயலாமல் திணறிக் கொணடிருந்தது. மொத்த சங்க பரிவாரமும் விரக்தி வயப்பட்டு நின்றது. தங்கள் விரக்தியை சிறுபான்மை மக்களை கொலை செய்வதிலும் அவர்களைச் சீண்டி விடுவதிலும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். 'கிரஹாம் ஸ்டீன்ஸ்' என்ற கிறித்தவ சமூக ஊழியரின் கொலை,பாதிரி பெண்களின் கற்பழிப்பு இவை எல்லாம் இந்த விரக்தியின் வெளிப்பாடுகளே! இறுதியாக அயோத்தியாவில் கோவில் கட்டுவோம் என்றும் மிரட்டினார்கள்.'

'பாரதீய ஜனதா கடசியினர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் அக்கட்சியினர் பெரிய தொழில் நிறுவனங்களின் உதவிகளை பெரிய அளவில் பெற்றிருந்தார்கள். தாங்கள் பெற்ற உதவிகளுக்கு கைமாறாக தொழிலாளர்களின் உரிமைகளை முடக்கிப் போடுவோம் என்று பணமுதலைகளுக்கு வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் தொழிலாளர் உரிமைகளை முடக்கிப் போட்டிட இயலவில்லை. காரணம் தொழிலாளர் அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன. இந்த எதிர்ப்புகளில் இவர்களின் சொந்த அமைப்பான பாரதீய மஸ்தூர் சபாவே கலந்து கொண்டது.'

“குஜராத்தில் முஸ்லிம்கள் தீவிரவாத தாக்குதலில் ஈடுபடப் போகின்றார்கள் என்ற பீதியை ஏற்படுத்தி தேர்தலில் ஜெயித்தார்கள். இந்தப் பீதி இந்து ஓட்டுக்களை அவர்களுக்கு ஒட்டு மொத்தமாகப் பெற்றுத் தந்தன். அதே பாணியில் அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலும், அதே ஆண்டு நடந்த பாராளுமன்றத் தாக்குதலும் பாரதீய ஜனதாக் கட்சிக்கு ஒரு புது வாழ்வையே தந்தன.”

-Dec 13 Terror Over Democracy
By Nirmalangsho Mukherjee.

பாராளுமன்றம் தாக்குதல் என்ற நாடகத்தால் யார் அதிகம் பலன் பெற்றார்கள் என்று விளங்குகிறதா? பாரதீய ஜனதா தன் ஆட்சியில் மக்களுக்கு ஒன்றும் குறிப்பிடும் படியாக செய்யவில்லை. சங் பர்வாரத்தின் நெருக்குதல் வேறு. இதை எல்லாம் சமாளிக்க ஒரு மிகப் பெரிய அதிர்ச்சியை நாட்டு மக்களுக்கு கொடுக்க வேண்டும். அதைத்தான் பிஜேபியினர் திட்டம் போட்டு செய்தனர். அவர்கள் நினைத்தது போல் அந்த நேரத்தில் எழுந்த பல பிரச்னைகள் காணாமல் போயின. பத்திரிக்கையிலிருந்து நாட்டு மக்கள் வரை பாராளு மன்ற தாக்குதல் பற்றியே பேச ஆரம்பித்தனர். இப்போது புரிகிறதா இதனால் பலன் பெற்றவர்கள் யாரென்று!

ஆனால் இரு தரப்பிலும் இறந்தவர்கள் அப்பாவிகளே! இதன் சூத்திரதாரிகள் இன்னும் மரியாதையோடு நாட்டில் உலா வந்து கொண்டிருப்பதுதான் வேதனையிலும் வேதனை.

suvanappiriyan said...

ரவி ஸ்ரீநிவாஸ்!

//The Supreme Court judgment nails every lie being repeated by supporters of Afzal like you.His role in preparing for the attack has been documented in the judgment.He had helped them in many ways.He deserves death
for his actions.//

குற்றம் சாட்டப் பட்டவரின் வாக்கு மூலத்தையே எடுத்துக் கொள்ளாமல் அன்றைய பிஜேபி அரசும், காவல் துறையும், நீதி மன்றமும் ஒரு சார்பாக முடிவெடுத்து தண்டனை வழங்கியிருப்பதாகத்தான் சமூக ஆர்வலர்கள், அஃப்ஸலின் மனைவி போன்றோரின் குற்றச் சாட்டு. அஃப்ஸல் குற்றவாளிதான் என்பது நிச்சயமானால், மறு விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிக்கு தண்டனை கொடுப்பதில்என்ன சிரமம் நம் அரசுக்கு? ஒருக்கால் அவர் சதியில் ஈடுபட வில்லை என்றால் ஒரு அப்பாவியை தூக்கில் ஏற்றிய அவப் பெயர் நம் நாட்டுக்கு வருமல்லவா?

//So it was not an attack
on the building but on the sovergnity of India.//

பாராளுமன்றத் தாக்குதல் நம் நாட்டு சுதந்திரத்துக்கும், அமைதிக்கும், இறையாண்மைக்கும் விடப்பட்ட சவால் என்பதை நானும் மறுக்கவில்லை. தாக்கியதும், அதற்கு திட்டமிட்டதும் யார் என்பதுதான்இங்கு பிரச்னையே! அஃப்ஸல்தான் என்பது மறு விசாரணையிலும் உண்மையானால் அப்படிப்பட்ட துரோகியை தூக்கிலும் போடுங்கள். எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.

//Thanks for making your support
to terrorists and enemies of India
so open.Your true colors are in the
open now.//

எனக்குள் இருக்கும் தேச பக்தியையும் நாட்டுப் பற்றையும் நான் யாருக்கும் விளக்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை.நான் பிறந்த மண். என் குழந்தைகளையும் என் உறவினர்களையும் என் நாட்டு மக்களையும் சந்தோசமாக வாழ வைத்துக் கொண்டிருக்கும் மண். இந்தியர்கள் என்றால் ஒரு வித மரியாதையோடு மற்ற நாட்டுக்காரர்களால் பார்க்க வைக்கப் படும் மண்.இத்தகைய பெருமை வாய்ந்த இந்த மண்ணின் அமைதிக்கும் இறையாண்மைக்கும் பங்கம் வரவழைப்பனை அதிகார மிருப்பின் என் கையாலேயே தண்டனையை கொடுக்கவும் தயங்க மாட்டேன் என்றும் கூறிக் கொள்கிறேன். இதைத் தான் இஸ்லாமும் விரும்புகிறது.

'பூமியில் குழப்பம் விளைவிப்போருக்கு சாபம் உள்ளது. அவர்களுக்கு மறுமையில் கேடு உண்டு.'
13 : 25 - குர்ஆன்.

suvanappiriyan said...

ராஜ்!
RAM (Racial Supremacy, Administration, Money)க்காக சொந்த நாட்டின் மக்களையும் 'அகதி'யாக்குவார்கள்.
கடைசியில் மக்களின் மேல் பழியை போட்டு 'வீ தி பீப்பிள்' என்பார்கள்.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

suvanappiriyan said...

ம்யூஸ்!

//அரசு வன்முறை ஏழைகளின் மீது பாயும் கொடுமை என்பதை விளக்கும் வகையில் அமைந்திருக்கிறது இந்த வாக்குமூலம்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ம்யூஸ். சட்டம் தன் கடமையை சரிவர செய்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Muse (# 01429798200730556938) said...

இத்தகைய கொடுமைகளுக்குள்ளானபோது தன்னுடைய கணவரைச் சந்திக்கும் ஆறுதலையாவது அரஸாங்கம் அவருக்கு அளித்ததா?

ரவி ஸ்ரீநிவாஸ் said...

The Supreme Court judgment answers
questions about denial of justice
to him.The advocate who argued on
his behalf had refuted the claims
made by Afzal.See my blog for details.This case has been heard
by three courts.The Supreme Court
had given a judgment that is fair.
It had acquitted Geelani.The
Supreme Court is the highest court
of the land under the Indian Constitution and it has given
a judgment taking into account
all the evidences, submissions
and arguments.It had concluded
that there was enough evidence
to award death sentence.It had
indicated what were those evidences also.It had taken into
account the arguments made on
behalf of Afzal.It had not convicted all the accused.
So what else need to done in this.
Who/which court should go into
this case again.In India courts are
not controlled by the government.

Still you repeat the same old lies.
Have you ever bothered to read the
judgment.

You have not answered my question
regarding sex scandal case in Kashmir.

In the Kashmir Sex Scandal the J&K Bar Association prevented any lawyer from appearing on behalf of accused.
So the Supreme Court transferred
the case to Chandigarh.Afzal was not denied legal assistance or access to justice.But those who support him now did nothing when
J&K bar association prevented lawyers from appearing in the
Sex Scandal case.In fact they
all joined hands to turn this
issue in to a conspiracy theory."

They turned it into a conspiracy
theory aganist India.Some groupd
used this to indulge in moral
policing.What is your response
to that.Do you support these.

suvanappiriyan said...

ரவி ஸ்ரீநிவாஸ்!

//The advocate who argued on his behalf had refuted the claims made by Afzal.//

'கீழ் நீதி மன்றங்களில் அஃப்ஸல் என்ற என் கணவருக்கு வாதாட யாரும் இல்லை. நீதி மன்றம் ஒரு வழக்கறிஞரை நியமித்தது. அவரோ என் கணவரிடம் என்ன நடந்தது என்பதை எப்போதும் கேட்டதில்லை. அதே போல் அவருக்கு எதிராகச் சாட்சியம் சொன்னவர்களைக் குறுக்கு விசாரணையும் செய்யவில்லை. அந்த வழக்கறிஞர் என் கணவரை வெறுத்தார். நீதிபதி திங்காரா அவர்களிடம் என்னுடைய கணவர் 'அந்த வழக்கறிஞர் எனக்காக வாதாட வேண்டாம் ' என்று எவ்வளவோ சொன்னார். ஆனால் நீதிபதி திங்காரா அதைக் கண்டு கொள்ளவே இல்லை. உண்மையில் என் கணவர் கீழ் நீதி மன்றத்தில் தனது தரப்பில் எதையும் எடுத்துச் சொல்லிட இயலவில்லை. என்னுடைய கணவர் எதையேனும் சொல்லிட முற்படும் போதெல்லாம் நீதிபதி அதைக் கேடக மறுத்து விட்டார். அவர் தன்னுடைய துவேஷங்களை வெளிப்படையாகவே நீதி மன்றத்தில் காட்டினார்.'

'உயர் நீதி மன்றத்தில் ஒருவர் மனித உரிமை வழக்கறிஞர் எனக் கூறிக் கொண்டு என்னுடைய கணவருக்காக வாதாட முன் வந்தார். என் கணவரும் அதை ஏற்றுக் கொண்டார். ஆனால் அவர் என் கணவருக்காக வாதிடவில்லை. மாறாக நீதி மன்றத்திடம் என் கணவரைத் தூக்கிலிட்டுக் கொலை செய்யக் கூடாது: விஷ ஊசியைப் போட்டுத்தான் சாகடிக்க வேண்டும் என வாதாடினார். என் கணவருக்காக ஒரு வழக்கறிஞரை வைத்திடும் வாய்ப்பு எனக்கிருக்கவில்லை. எனக்கு டெல்லியில் யாரையும் தெரியாது.

//Supreme Court is the highest court of the land under the Indian Constitution and it has given a judgment taking into account all the evidences, submissions and arguments.It had concluded that there was enough evidence to award death sentence.It had
indicated what were those evidences also.It had taken into account the arguments made on behalf of Afzal.It had not convicted all the accused. So what else need to done in this.
Who/which court should go into this case again//

சுப்ரீம் கோர்ட் என்ன இறைவனின் ஆணையா? அங்கு அமர்ந்திருப்பவர்களும் மனிதர்கள்தானே! முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூசன் இந்த கேஷைப் பற்றி வாதிடும்போது சொன்னவை

“When such a serious offence has been committed by investigating official. It is only by having them punished that such fabrication of documents and the giving of perjury evidence can be stopped by the court.”

அதாவது இந்த வழக்கை விசாரித்தவர்கள் பாரதூரமான தவறுகளைச் செய்துள்ளார்கள். ஆவணங்களைத் தங்கள் விருப்பத்திற்குத் திரிப்பது, பொய் சாட்சியங்களைத் தயாரிப்பது ஆகியவற்றில் எந்தக் கவலையும் இல்லாமல் ஈடுபட்டிருக்கின்றார்கள்.இவர்களை இந்திய தண்டனைச் சட்டம் 194,195களின் கீழ் ஆயுள் தண்டனைகளை வழங்கிட வேண்டும். அப்போது மட்டுமே இது போன்ற கடுமையான குற்றங்களிலிருந்து அவர்களை தடுக்க இயலும்.'

இப்படி அனல் பறக்கும் வாதங்களை அவர்கள் எடுத்து வைத்ததற்க்கான காரணம் வழக்கு விசாரணை முழுவதும் கோணலாகவும் ஒருதலைப் பட்சமாகவுமே நடத்தப்பட்டது.

தூக்குத் தண்டனை வழங்கிடுவதில் நீதிபதி அவர்கள் காட்டிய வேகம் அவர்களது கண்களை மறைத்துவிட்டது. உண்மைகள் ஓரங்கட்டுப் பட்டு விட்டன. மூத்த வழக்கறிஞர் சாந்தி பூசன் அவர்கள் பட்ட ஆதங்கத்திற்கு அளவே இல்லை. அவர் மேலும் தன் வாதத்தை வைத்திடும் போது இப்படிக் குறிப்பிட்டார்.

“The investigating official were prepared to forge and fabricate documents against the appellants”

அதாவது 'மனுதாரர்களுக்குஎதிராக ஆவணங்களை பொய்யாக புனைந்திடவும் உருவாக்கிடவும் தயாராக இருந்தனர்.'

ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் குழுமம்(PUDR: Peoples Union For Democratic Rights) என்ற அமைப்பு இவ்வழக்கில் தரப்பட்ட சாட்சியங்களையும் ஆவணங்களையும் ஆராய்ந்து பார்த்து விட்டு இப்படிக் குறிப்பிட்டது.:

“There is no evidence which unerringly implicates them, or whose authenticity is beyond reproach”

அதாவது 'தவறுகளே இல்லாமல் இவர்களைக் குற்றத்திற்குள்ளாக்கிடும் சாட்சியங்கள் எதுவுமில்லை. அவதூறு-புனைந்துரை-குறைகள்- இவை இல்லாமல் எந்த சாட்சியமும் இல்லை.'

(Dec: 13, Terror Over Democracy, Page 49-50)

An unjust law and unfair Trial

அதாவது 'அநீதியான சட்டம் - நியாயத்தின் வரம்புகளுக்கு அப்பாற்பட்ட விசாரணை' இவற்றால் மூடப்பட்டதுதான் இந்த வழக்கும் விசாரணையும்.

அப்படி என்ன நடந்தது?

ஆமாம் இந்த வழக்கில் தாங்கள் நினைப்பதையே தீர்ப்பாக வழங்கிட இந்த வழக்கு முற்றாக பொடாவின் கீழ்கொண்டு வரப்பட்டது.

அத்தனை வாக்கு மூலங்களும் பொடாவின் கீழ்தான் பெறப்பட்டன. இதனால் தங்களுக்கு சாதகமான பகுதிகளை எடுத்துக் கொண்டு தங்களுக்கு வேண்டாத ஆனால் உண்மைகளை வெளிக் கொண்டு வரும் பகுதிகளை விட்டு விட்டார்கள்.

அப்ஃஸலின் மனைவி தபசும் தான் எழுதிய கடிதத்தில் மிகவும் தெளிவாகவே இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

அடுத்து ஜீலானியின் சம்பவத்துக்கு வருவோம்:

டெலிபோனில் தன் சகலையுடன் பேசிய பேச்சுதான் முக்கிய ஆதாரம். அந்த பேச்சை கஷ்மீரி மொழியிலிருந்து ஹிந்திக்கு மொழி மாற்றம் செய்தது 'ரஷீத்' என்ற நான்காம் வகுப்பு வரை படித்த ஒரு பழ வியாபாரியைத் தான்.

ஒலி பொறியியலாளர்கள் அந்த டேப்களிலிருந்து (ஒலிப் பேழைகளிலிருந்து) வரும் ஒலியைப் பிரித்தறிந்திட முயன்றார்கள். இயலவில்லை. பின்னர் வழக்கு சிறப்பு நீதிமன்றத்திலிருந்து டெல்லி உயர் நீதி மன்றம் வந்தது. நீதிபதிகள் இந்த டேப்களில் என்ன பதிந்திருந்தது என்பதைக் கேட்டுத்தெரிந்திட காதைக் கூர்மையாக்கிக் கொண்டு கேட்டார்கள். பின்னர் இப்படிக் கூறினார்கள்.

“The voice was so inaudible that we could not make head or tail of the conversation”
(Annex 16,para346)
(Quoted from Dec 13 : Terror Over democracy , chapter: Who attacked parliament, Page no 65)

இதன் பொருள்: 'ஒலிப் பேழையிலிருந்து வந்த சப்தம் சற்றும் செவி மடுத்திட முடிந்ததாய் இல்லை. எங்களுக்கு வாலும் புரிந்திடவில்லை, தலையும் புரிந்திட இயலவில்லை.'

ஆனால் நமது டெல்லி சிறப்பு புலனாய்வு துறையினர் கண்டுபிடித்த நான்காம் வகுப்பு படித்த பழ வியாபாரி போலீஸ்ஸ்டேஷனிலேயே வைத்து டேப்பைக் கேட்டு அதில் என்னச் சொல்லி இருக்கின்றது என்பதைச் சொல்லி விட்டாராம்.

அடுத்து இந்த ஒலிப் பேழையை டெல்லியிலுள்ள கஷ்மீர் மொழி வல்லுனர்கள் - முறையாக அந்த மொழியைப் பயின்று தேர்ச்சிப் பெற்ற பல்கலைக் கழக பேராசிரியர்கள் - இவர்களிடம் கொடுத்து மொழி பெயர்க்கச் சொல்லிடலாம் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் முறையிட்டார்கள்.

இந்த முறையீட்டை நீதிபதியே முன் வந்து மறுத்தார். ஓர் எதிர்க் கட்சி வழக்கறிஞர் போல் தனது வாதங்களைப் பதிவு செய்தார்

சிறப்பு நீதிமன்ற நீதிபதி இப்படி வாதாடினார்:

'துளசிதாஸ், கபீர்தாசர் இன்னும் இது போன்றவர்கள் எந்தப் பல்கலைக் கழகத்தில் பயின்று மேதாவியானார்கள்?'

இப்படி கஷ்மீரிலுள்ள பழக்கடை வியாபாரி ஒருவரை துளசிதாஸ், கபீர்தாஸ் போன்றோருக்கு ஒப்பிட்டு அவருடைய மொழி பெயர்ப்பை ஏற்றுக் கொண்டார் நீதிபதி.

Annex 11 Para 204,
December 13: Terror Over Democracy,
Chapter who attacked Parliament,
PP 65-66

ஸ்ரீநிவாஸ் குறிப்பிடும் நம் நாட்டு நீதித் துறையின் லட்சணம் இதுதான்.

//Still you repeat the same old lies.Have you ever bothered to read the judgment.//

யார் பொய்யையே திரும்ப திரும்ப சொல்லி வருவது என்பது மறு விசாரணைக்கு உத்தரவிட்டால் தெரிய வரும்.

//You have not answered my question regarding sex scandal case in Kashmir.//

பாலியல் பலாத்காரம் சம்பந்தப்பட்ட இந்த ஒரு வழக்கு மாத்திரம் அல்ல. தினம் தினமும் இது போல் பல வழக்குகள். பிரச்னை அஃப்ஸலைப் பற்றியதால் இது சம்பந்தமாக பிறிதொரு நாளில் என் வாதத்தை விரிவாக வைக்கிறேன்.

//They turned it into a conspiracy
theory aganist India.Some groupd
used this to indulge in moral
policing.What is your response
to that.Do you support these.//

அருந்ததிராய், வழக்கறிஞர் நந்திதா, நிர்மலாங்சு முகர்ஜி, ராம் ஜெத்மலானி, சாந்தி பூசன், காலிங்சன் சால்வஸ், திருமதி காமினி ஜெய்ஸ்வால், நித்தியா ராமகிருஷ்ணன், போன்ற சமூக ஆர்வலர்கள் அஃப்ஸலை இந்த அளவு ஆதரிக்க என்ன அவசியம் வந்து விட்டது. இந்த சமூக சேவகர்கள் அனைவரும் நம் நாட்டுக்கு எதிரானவர்களா? அஃப்ஸல் பக்கம் நியாயம் இருக்கப் போய்தானே இந்த அளவு நீதிக்காக போராடுகிறார்கள். இதனால் அரசின் கோபத்திற்கும், போலீஸாரின் கண்காணிப்பிற்கும் உள்ளாகிறார்கள்.

நான் முன்பே கூறியது போல் நியாயமான மறு விசாரணைக்கு உத்தரவிட்டு அதிலும் அஃசலின் குற்றம் நிரூபிக்கப்படுமானால் தாராளமாக தூக்கில் தொங்க விடட்டும். அப்பொழுதுதான் இது போன்ற குற்றச் செயல்கள் குறைய வாய்ப்பிருக்கிறது.

எது எப்படியோ இன்று தான் கடைசி நாள் என்று நினைக்கிறேன். 'ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஒரு நிரபராதி தண்டிக்கப் படக் கூடாது' என்ற உலக நியதியின் மரபு நம் நாட்டில் காக்கப் படுகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.






.