Followers

Thursday, November 09, 2006

முகலாயர்களும் பாரத நாட்டு ரத்தங்களே!

முகலாயர்களும் பாரத நாட்டு ரத்தங்களே!

இன்று இந்தியாவில் முஸ்லிம்களின் மேல் வைக்கப் படும் குற்றச் சாட்டுகளில் ஒன்று 'முஸ்லிம்கள் அனைவரும் அன்னிய நாட்டவர்'. இதில் ஐந்து சதம் கூட உண்மையில்லை என்று சொன்னாலும் குறிப்பிட்ட சிலரும், சில பத்திரிக்கைகளும் இந்த பொய்யை திரும்ப திரும்ப சொல்லி வருகின்றனர். இப்படி கூப்பாடு போடுபவர்களின் வரலாறை நாம் புரட்டினால் அந்த மக்களே வரலாற்று ரீதியாக இந்நாட்டுக்கு அன்னியராகிறார்கள். சரி தலைப்புக்கு வருவோம்.

அன்றைய முகலாயர்கள் இந்தியாவை சுமார் எண்ணூறு வருடங்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். வெளி நாடுகளிலிருந்து வந்தவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் இந்தியாவிலேயே தங்கி இந்நாட்டு மக்களை திருமணம் செய்து கொண்டு இந்நாட்டோடு இரண்டற கலந்து விட்டனர். இருந்தும் இஸ்லாமியர் அன்னிய தேசத்தவர் என்ற குரல் எப்போதாவது ஆங்காங்கே ஒலித்துக் கொண்டிருக்கும்.

முகலாயர்களையும், கேரளக் கரையோரம் வந்த ஒரு சில அரபுகளையும் தவிர்த்து மற்ற முஸ்லிம்கள் அனைவரும் முன்னால் இந்துக்களே! இஸ்லாத்தின் கொள்கைகளால் கவரப் பட்டும் தீண்டாமையிலிருந்து விடுபடவும் இஸ்லாத்தை தழுவிக் கொண்ட இந்துக்களே இன்றைய இந்திய முஸ்லிம்கள். இந்த முகலாயர்களில் கூட ஒரு சில அரசர்கள் இந்நாட்டு பெண்களை மணமுடித்து பாரத நாட்டு பிரஜைகளான வரலாறை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. நான் படித்த அந்த ஒரு சில விபரங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

**********************************

இந்து இளவரசியை மணந்த அக்பர்!

முகலாயப் பேரரசர் அக்பர் ஆஜ்மீருக்குச் சென்று திரும்புகையில் சாம்பர் (Sambhar) என்ற ஊரில் ஆம்பர் (Ambar)மன்னர் ராஜா பார்மலின் மகளை இந்து மரபுப்படி திருமணம் செய்தார். அக்பரின் முகலாய வழியும், இராஜபுத்திர வழியும் இத்திருமணத்தால் ஒன்று சேர்ந்தது.

க.வெங்கடேசன், அக்பர்,சென்னை.
1972 –Page 47,48

ஷா பாய் என்று ஜெய்ப்பூர் ஆவணங்களில் அழைக்கப்படும் இராஜபுத்திர இளவரசியை, அக்பரை திருமணம் செய்து கொண்டதற்கு பின் மரியம்-உஸ்-ஸமானி (Mariam-uz-zamani) என்று அழைக்கப்பட்டார்.

Ashirbadilal Srivastava, Akbar The Great, volume 2, Agra, 1973, Page 59.

******************************************

இந்து இளவரசிக்குப் பிறந்த ஜஹாங்கீர்!

முகலாயப் பேரரசர் அக்பரின் வாரிசான ஜஹாங்கீர் இராஜபுத்திர ராணி ஷாபாய் என்ற மரியம் உஸ் ஸமானிக்குப் பிறந்தவர். ஓர் இந்துப் பெண்ணுக்குப் பிறந்தவர் என்பதால் முகலாயப் பேரரசில் ஜஹாங்கீர் அரசுரிமையை இழக்கவில்லை. அக்பருக்குப் பின் ஜஹாங்கீரே அரசப் பொறுப்பிற்கும் வந்தார்.

“Already earlier in the year 1562, Akbar had married a Rajput Princess if Jaiour, who was to become the mother of his successor Jahangir”.
Laurence Binyon, Akbar, Edinburgh, 1932, page 59.

********************************************

இராஜபுத்திர இளவரசிக்குப் பிறந்த ஷாஜஹான்!

முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் மார்வாடா மன்னர் ராஜா உதயசிங்கின் மகளை திருமணம் செய்தார். அந்த இராஜபுத்திர இளவரசி ஜகத்கஸாயினி என்பவரின் வயிற்றில் பிறந்தவர்தான் முகலாயப் பேரரசர் ஷாஜஹான்.

ஷாஜஹானின் தந்தையார் ஜஹாங்கீர், அக்பருக்கும் இராஜபுதன இளவரசிக்கும் பிறந்தவர். ஜஹாங்கிருக்கும் இராஜபுதன இளவரசிக்கும் பிறந்தவர் சாஜஹான். ஷாஜஹானின் உடலில் ஓடிய ரத்தத்தில் முகலாய ரத்தத்தை விட இந்திய ரத்தமே அதிகமாக இருந்தது என்பர் வரலாற்றாசிரியர் லேன்பூல்.

குலாம் ரசூல், இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள், தஞ்சாவூர்.
1998, page 461.

“Like his father Shah-jahan was the offspring of a union with a Rajput princess, a daughter of the proud Raja of Marwar, and had more Indian than Mughal blood in his veins.”

Stanley Lane-poole, Aurangzib, New Delhi, Page 14.

************************************

ஹிந்து ராணியின் பேரன் ஒளரங்கஜேப்!

இத்தகைய ஷாஜஹானுக்கு மகனாகப் பிறந்த மஹா சக்ரவர்த்தியாகிய ஒளரங்கஜேப் ஒரு ஹிந்து ராணியின் பேரனாயிருந்தும் மதத் துவேஷிகள் அவரையும் சும்மா விடவில்லை. அபாண்டப் பழிகளை அவர் மீது அடுக்கிக் கொண்டே செல்கிறார்கள் என்பதனை அறிகிறபோது வேதனையான விசித்திரமாகத்தான் இருக்கிறது. அது மட்டுமா?

நவாப் பாயின் கணவர் ஒளரங்கஜேப்!

ஒளரங்கஜேப்புக்குப் பின் முகலாயப் பேரரசில் அரியணை ஏறிய பகதூர்ஷாவின் தாயார் நவாப் பாய் (Nawab Bai)காஷ்மீர் இந்து அரசரின் மகள். (She was the daughter of Raja Raju of the Rajuari State of Kashmir) இராஜ புதன வழியில் வந்த நவாப் பாயின் (ரஹ்மத்துன்னிஷா) கணவர் யார் தெரியுமா? மாமன்னர் ஒளரங்கஜேப்தான்.

பரூக்கி, இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள்,
page 545.

உதயபுரி மஹல் அல்லது பாய் உதயபுரி (Udai Puri Mahal) என்ற மனைவியும் ஒளரங்கஜேப்பிற்கு இருந்ததாகச் சொல்லப் படுகிறது. (Kam Baksh) காம்பக்ஸ்என்ற ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தவர் இவர்தான்.

டி.எப்.ஆர். மஆலிசாஹிப், முஸ்லிம் மன்னர்களின் இந்து ராணிகள், பத்ஹூல் இஸ்லாம்.
1957, November, Chennai.

ஐம்பது வயதைத் தாண்டிய நிலையில்.....

ஹிந்து இராஜபுத்திர ராணியார் ஷாபாய், ஜகத் கஸாயினி ஆகியோரின் வழியில் கி.பி.1618 ல் தோன்றியவர் ஒளரங்கஜேப். அவரது வாழ்வில் நவாப் பாய், உதயபுரி மஹல் என்ற இரு இந்துப் பெண்களை திருமணம் செய்து கொண்டவர் ஒளரங்கஜேப்.

ஹெச்.எல்.ஓ.காரட், சீதாராம் கோலீ, இந்து தேச சரித்திரம்,
1942, Page 170, Chennai.

இது போல் இந்துக்களோடு ரத்த உறவும், திருமண பந்தமும் உடைய ஒரு அரசர் இந்துக்களை கொடுமை படுத்தினார் என்று நம் வரலாற்றுப் பாட நூல்களில் தொடர்ந்து படித்து வருகிறோம். அதோடு இந்த மன்னர்கள் இந்த தேசத்தை எந்த அளவு நேசித்திருந்தால் திருமண உறவு முதற் கொண்டு நம் நாட்டிலேயே ஏற்படுத்திக்கொண்டு இங்கேயே இறக்கவும் விருப்பம் தெரிவித்திருப்பார்கள். இன்று இவர்களின் உறவுகள் இந்தியர்களை மணந்து இந்நாட்டு இரத்தம்ஆகி விட்ட பிறகு எப்படி இவர்களை நாம் அன்னிய தேசத்தவர் என்ற வார்த்தையை பிரயோகிக்க முடியும்?

பிற மதத்தவரின் பிரார்த்தனைக்கு அனுமதி!

'நமது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்த நாளில் பனாரஸிலும் அதன் சுற்றுப் புறங்களிலுமுள்ள இந்துக் குடிமக்கள் சிலரால் கொடுமைப் படுத்தப் படுவதாகவும் புராதனமான இந்துக் கோவில்களின் பொறுப்பிலுள்ள பிராமணர்கள் அங்கிருந்து வெளியேறும்படி அச்சுறுத்தப் பட்டு மிரட்டலுக்கு ஆளாகி அதனால் அந்த வகுப்பினர் மன வேதனைக்கு ஆளாகி இருப்பதாகவும் நமது மேன்மைக்குரிய புனித அரசவைக்குத் தகவல் வந்துள்ளது. எனவெ இந்த அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. பிராமணர்களையோ மற்ற இந்து குடிமக்களையோ சட்ட விரோதமாகத் தலையிட்டுத் தொல்லைக்குட்படுத்தக் கூடாது. அவர்கள் தங்கள் தொழிலைத் தொடர்ந்து செய்து வரவும் இறைவன் அளித்த இந்த வரமான இந்த சாம்ராஜ்யம் நிலைக்கும் வகையில் அவர்கள் சமாதானம் நிறைந்த மனதுடன் பிரார்த்தனைகள் நடத்தவும் முன்பு போலவே அனுமதிக்க வேண்டும். இந்த ஆணையை அவசரமானதாக மேற்கொண்டு இது வந்து சேர்ந்ததும் அதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும்.'
இவ்வாறு ஒளரங்கஜேப்பின் பனாரஸ்ஃபார்மன் என்ற சாசனத்தில் கூறப்பட்டுள்து.

பி.என்.பாண்டே, இஸ்லாமும் இந்திய கலாச்சாரமும், டாயல் மொழி பெயர்ப்பு,சென்னை.
1987, Page 61.

'சதி'யை நிறுத்தியவர் ஒளரங்கஜேப்!

ஆதரவற்ற துர்பாக்கியவதியான ஒரு பெண்ணை 'சதி' (உடன்கட்டை ஏறுதல்) உயிருடன் எரிக்க முயன்றனர். ஆடசித் தலைமை வகித்த ஒளரங்கஜேப் இதை அறிந்து அந்த கொடுமையை தடுத்து நிறுத்தினார். அதோடு எந்த ஓர் இந்துப் பெண்ணையும் உயிருடன் எரிக்க அதிகாரிகள் அனுமதி அளிக்கக் கூடாதென்றும் உத்தரவு பிறப்பித்தார்.

இதனை அறிந்த உயர் ஜாதி இந்துக்கள் தங்கள் மத விஷயத்தில் ஒளரங்கஜேப் தலையிடுவதாக புகார் கூறினர். 'உயிருள்ள ஒரு பெண்ணை எரிப்பது அவர்களுடைய மத நம்பிக்கை என்றால் அத்தகைய மோசமானச் செயலை செய்திட அனுமதி அளிக்காமலிருப்பதே தன்னுடைய நம்பிக்கை என்று ஒளரங்கஜேப் உறுதியாக நின்றார். உயர் பிரிவைச் சேர்ந்தவர்கள் பலரது எதிர்ப்பை மீறிதாம் இட்ட கட்டளையை நிறைவேற்றிடவும் பணித்தார். பலவந்தமாக உடன் கட்டை ஏற்றப்படும் பெண்களின் நகை, ஆபரணங்களைப் பெற்று அனுபவித்து வந்தவர்கள் பாதிப்பிற்குள்ளாயினர்.

விளைவு, மதத் தலைவர்கள் ரகசிய இடத்தில் ஒன்று கூடினர். ஒளரங்கஜேப் அரசைக் கவிழ்க்க சதி செய்தனர். அவரைக் குறித்து ஹிந்து மத விரோதி என பொய்களைப் புனைந்துரைத்தனர்.

ஜோசப் இடமருகு, பிராமண மதம், (மலையாளம்) தமிழில் த.அமலா, சென்னை 1995, Page 227
Premnath Bazaz, The Role Of Bhagavadgita in Indian History, New delhi 1975, Page 339



அரசியல் வேறு மதம் வேறு!

ஒளரங்கஜேப்பிடம் அவரது முஸ்லிம் நண்பர்கள் அவரது அரசாங்கத்திலுள்ள இரண்டு முஸ்லிம் அல்லாதவரை அவர்கள் சார்ந்திருந்த மதத்தின் காரணமாக பதவியில் வைத்துக்கொள்ளக் கூடாதென்று கூறியபோது அதனை ஏற்க மறுத்தவர் ஒளரங்கஜேப். 'அரசியலுக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை. அரசியல் விவகாரங்களில் மதம் என்பது கிடையாது. அவரவர்கள் அவரவரது மத்தைப் பின்பற்றட்டும்.' என்று சொன்னவர் ஒளரங்கஜேப்.

டி.என.ராமச்சந்திரன், நமது சரித்திர பாரம்பரியம், நாகப்பட்டினம்
1950, Page 80

இது போன்று தன் நாட்டு மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட ஒளரங்கஜேப் இந்துக்களைக் கொடுமை படுத்தினார் என்று எழுதுவது நேர்மையான வாதம் தானா என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.



எனது தேசத்து ஏழைகளுக்கு......

ஒரு சமயம் புனித மக்கா நகரத்தின் ஷெரீப் பொருள் உதவி வேண்டி தனது தூதரை ஒளரங்கஜேப்பிடம் அனுப்பியபோது அவரக்கு பொருளுதவி செய்ய மறுத்ததோடு 'எனது தேசமான இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அந்தப் பணத்தை வினியோகிக்க்க் கூடாதா? என்று கேட்டு விட்டு 'இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான்' என்றும் அந்தத் தூதரிடம் பதில் தந்தவர் ஒளரங்கஜேப்'

டி.என். ராமச்சந்திரன், நமது சரித்திர பாரம்பரியம், நாகப்பட்டினம்.
Page 80, 81.

நம்நாட்டை எந்த அளவு நேசித்திருந்தால் இத்தகைய வார்த்தை ஒளரங்கஜேப்பின் வாயிலிருந்து வந்திருக்கும்? இவரைப் பற்றிய மேலதிக விபரங்களை நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது பதிக்கிறேன் இறைவன் நாட்டம் இருப்பின்.

********************************************

சுப்ரமணிய பாரதி!

'முகமதியர்களுக்கு இது அன்னிய தேசமன்று. அவர்கள் இங்கே இன்றைக்கு நேற்றைக்கு வந்து குடியிருக்கும் ஜனங்களில்லை. இந்நாடு ஹிந்துக்களுக்கு எவ்வளவு சொந்தமோ அவ்வளவுக்கு முகமமதியர்களுக்கும் சொந்தம். இந்தியாவிலே முகமதியர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் எந்த உபாயத்திலேனும் பகை மூட்டிவிட வேண்டுமென்று அன்னியர்கள் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார்கள். நம்மவர்கள் மூடத்தனத்தால் மேற்படி பிரயத்தனம் கைக் கூடும்படி விட்டு விடுவோமேயானால் அதுவே நமக்கு நாசகாலமாக முடியும்.'

6-10-1906 - 'இந்தியா' இதழில் 'முகமதியப் பிரதிநிதிக் கூட்டம்' எனும் தலையங்கத்தில் தேசியக் கவி சுப்ரமணிய பாரதியார் தெரிவித்திருக்கும் கருத்து.


என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.

13 comments:

suvanappiriyan said...

நண்பர் எழிலுக்கு!

'பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்!'
17 : 37 - குர்அன்

இந்த வசனத்தைப் பொய்யாக்குவதற்காக மிகுந்த சிரமம் எடுத்துக் கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

//இந்த இடம் இரண்டு டெக்டானிக் பிளேட்டுகள் சேரும் இடம். பிலிப்பைன் பிளேட்டும் பசிபிக் பிளேட்டும் சேரும் இந்த இடத்தின் ஆழம் 10,911 மீட்டர்கள். அதாவது 35798 அடிகள். //

//கடல் மட்டத்திலிருந்து எவரெஸ்ட் மலை இருக்கும் உயரத்தை விட கடல் மட்டத்திலிருந்து இந்த ஆழம் அதிகமானது.//

//1960இல் அமெரிக்க கப்பற்படையின் பாத்திஸ்கேப் டிரிஸ்ட்டீ என்ற நீர்மூழ்கி மூலமாக அமெரிக்க நேவி லெப்டினண்ட் டான் வால்ஷ் என்பவரும் ஜாக் பிக்கார்ட் என்பவரும் இதற்குள் இறங்கினார்கள்.//

நீங்கள் வசனத்தை சரியாக படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.'பூமியில் கர்வத்துடன் நடக்காதே!பூமியை பிளந்து விட முடியாது' என்று இங்கு இறைவன் சொல்வது நிலப்பரப்பை. நாம் சிலரிடம் பேச்சுவாக்கில் 'நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடக்காதே!' என்று சொல்லுவோம். இதன் உட்பொருள் நிலப்பரப்பைத்தான் குறிக்கும். நீர்ப்பரப்பைக் குறிக்காது. அதே அளவுகோலைத்தான் நாம் இங்கும் பயன் படுத்த வேண்டும்.

திடப் பொருளைத்தான் நாம் பிளப்போம். திரவப் பொருளை பிளக்க மாட்டோம். பிரிக்க செய்வோம். (ஹைட்ரஜனையும், ஆக்சிஜனையும் பிரிப்போம்.)இங்கு இறைவன் பிளத்தல் என்ற வார்த்தையை உபயோகப் படுத்துவது திடப் பொருளான நிலப்பரப்பை. நீங்கள் குறிப்பிடும் திரவப் பொருளான கடல் நீரை அல்ல.

'கடலின் ஆழத்தில் சென்றுமலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்!' என்று வசனம் இருந்திருந்தால் உங்கள் வாதம் சரியாக பொருந்திப் போகும். ஆனால் மிகவும் தெளிவாக குர்ஆன் 'பூமியைப் பிளந்து மலைகளின் உயரத்தை' என்று குறிப்பிடுகிறதே! இங்கு கடலின் ஆழத்தை குர்ஆன் குறிப்பிடவில்லையே! 'பூமியைப் பிளந்து' என்ற வார்த்தையை இன்னொரு முறை நன்றாக சிந்தித்துப் பாருங்கள். உங்கள் வாதம் தவறு என்பது விளங்கும்.

//இந்த நீர்மூழ்கி இதன் அடி ஆழத்துக்கு வரை சென்றது. அந்த அடி ஆழத்தில் மீன்களும் ஷ்ரிம்புகளும் இருப்பதை பார்த்தார்கள். அந்த ஆழத்தில் தரை தெளிவானதாகவும் அமுங்குவதாகவும் இருந்தது என்று இதில் சென்றவர்கள் கூறினார்கள்//

உங்கள் வாதப்படி கடலில் சென்று மலைகளின் உயரத்தை அடைவதாக இருந்தாலும் கடலின் ஆழத்தில் மிருதுவாக ஆராய்ச்சியாளர்களுக்கு தென் பட்ட தரை மட்டத்தைத்தான் அளவாக கொள்ள வேண்டும். அங்கிருந்து செல்வதுதான் குர்ஆன் சொல்லும் சவாலாக எடுக்க முடியும். நிலப்பரப்பில் மனிதன் இதுவரை மூன்று கிலோ மீட்டர் வரையே போயிருக்கும் போது கடலுக்கு அடியிலிருந்து செல்வதும் சாத்தியப்படாது.

எனவே இது இறை வேதம்தான் என்பது மேலும் உறுதியாகிறது..

கால்கரி சிவாவுக்கு!

மனிதன் எவ்வளவுதான் முயன்றாலும் இறைவனுக்கு சமமாக முடியாது. மனிதன் என்றுமே மனிதனாகத்தான் இருப்பான். தெய்வமாக முடியாது.புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். :-((

வஜ்ரா said...

1000 வருஷத்துக்கு முன்னாடி வந்த முகலாயர்கள் மண்ணின் மைந்தர்கள் தான் என்றால் ஏன் 3000 வருஷத்துக்கு முன்னாடி வந்ததாகக் கூறப்படும் பார்ப்பானர்களை இன்னும் வந்தேறிகள் என்று சொல்வதை ஆதரிக்கிறீர்கள் ?

....
ஐயா திராவிட குஞ்சுக்களா இந்தப் பதிவக் கொஞ்சம் கண்டுக்குங்க கண்ணுங்களா..!!

விடாது கருப்பு உங்கள் விரல்கள் என்ன தொழுனோயால் சுறுங்கிவிட்டதா...? இந்தப் பதிவில் வந்து பின்னூட்டம் போடுறது தானே ?

சீனு said...

ஔரங்கசீப்பை எல்லோரும் வில்லனாகவே பார்த்திருக்கிறோம். ஆனால், அவர் ஒரு நல்ல ஆட்சியை தந்தவராகவே தெரிகிறது. தன் உணவுக்கு கூட தானே வேலை செய்து சம்பாதித்தாராம்!!!

suvanappiriyan said...

உஜ்ஜயினுள்ள சிவ ஆலயத்தில் அணையாமல் எரிந்து கொண்டிருந்த நந்தா விளக்கிற்காக தினமும் நான்கு சேர் நெய்யை முகலாய அரசாங்கமே வழங்கி வந்திருக்கிறது. உஜ்ஜயினி மகா கலேஷ்வரர் கோவிலின் அர்ச்சகராயிருந்த தேவ நாராயணனின் கோரிக்கையின் பேரில் இதற்கான உத்தரவு அப்பொது வழங்கப் பட்டிருந்தது.

ஹக்கீம் முகமது மெஹ்தி என்ற அதிகாரி கோவிலின் நந்தா விளக்கிற்குத் தினமும் நான்கு சேர் நெய்வழங்க சபுதரா கொத்வாலின் தாசிலதாருக்கு உத்தரவிட்டுள்ளார். முகலாயப் பேரரசில் ஒளரங்கசீப்பின் ஆடசியின் போது இந்த ஆணை அமுலில் இருந்தது.

P.N.pande, Islam And Indian culture, Page 67.

'உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற பாகுபாடு இன்றி எல்லா மட்டத்திலுமுள்ள மக்களின் நலன்களை மேம்படுத்த நாம் சலிக்காமல் மேற்கொண்டு வரும் முயற்சிகள் மிகுந்த அன்போடும் பரிவோடும் செயல்படுத்தப் பட வேண்டும். நமது புனிதமான சட்டத்தின் படி புராதனக் கொவில்கள் எதையும் அழிக்கக் கூடாது. ' - ஒளரங்கஜேப்

P.N.Pande, Islam And Indian Culture, Page 45

வாசகன் said...

//1000 வருஷத்துக்கு முன்னாடி வந்த முகலாயர்கள் மண்ணின் மைந்தர்கள் தான் என்றால் ஏன் 3000 வருஷத்துக்கு முன்னாடி வந்ததாகக் கூறப்படும் பார்ப்பானர்களை இன்னும் வந்தேறிகள் என்று சொல்வதை ஆதரிக்கிறீர்கள் ?// - VAJRA

மிஸ்டர் வஜ்ரா,
மொகலாயர்கள் இந்திய பூர்வக்குடிகளுடன் இரண்டறக் கலந்துவிட்டதைப் போல, பார்ப்பன இனத்தவரும் குலம் கோத்திரம் பாராமல் கலந்துவிட்டிருந்தால் உங்கள் கேள்வி நியாயமாயிருந்திருக்கும். அந்தோ பரிதாபம், பூணூலைத் தாண்டி அவர்களால் வர முடியவில்லையே அய்யா!

"விடாது கருப்பு" போன்றவர்கள் தேகா ராக்கியத்தோடு இருக்கும் போதே தீண்ட விரும்பாத வஜ்ராக்கள் "சுவனப்பிரியன்"களை எதிர்க்க மட்டும் பயன்படுத்திக்கொள்ள முயல்வதை ஒற்றைப் பின்னூட்டத்தில் புரியவைத்துவிட்டீர்கள் வஜ்ரா, நன்றி.

suvanappiriyan said...

வஜ்ரா!

//1000 வருஷத்துக்கு முன்னாடி வந்த முகலாயர்கள் மண்ணின் மைந்தர்கள் தான் என்றால் ஏன் 3000 வருஷத்துக்கு முன்னாடி வந்ததாகக் கூறப்படும் பார்ப்பானர்களை இன்னும் வந்தேறிகள் என்று சொல்வதை ஆதரிக்கிறீர்கள் ?//

நான் யாரையும் ஆதரிக்கவில்லையே! எவரையும் வந்தேறிகள் என்று என் எழுத்தில் குறிப்பிட்டதில்லை. ஆனால் முகலாயர்களுக்கும், ஆரியர்களுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. முகலாயர்கள் இந்நாட்டு மக்களோடு திருமண உறவு கொண்டு தன் வாரிசுகளின் ரத்தத்தில் இந்திய ரத்தத்தையும் கலந்து விட்டனர். ஆனால் ஆரியர்களோ முவாயிரம் வருடங்களுக்கு முன்னால் நமது நாட்டுக்கு வந்திருந்தாலும் இன்று வரை திருமண உறவை தங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்கிறார்கள். ஆரியர்கள் இந்திய பூர்வ குடிகளோடு ஒட்டாமல் தங்களை உயர்ந்த ஜாதி என்று கூறிக் கொண்டு இருப்பதனால் திராவிடர்களால் ஏசப் படுகிறார்கள். இந்த பிரச்னை முடிவுக்கு வர ஒரே வழி ஆரியர்களும் திராவிடர்களும் கலப்பு திருமணம் செய்வதை அதிகரிக்க வேண்டும். ஆனால் இந்து மதத்தில் இது சாத்தியப் படுமா என்பது கேள்விக் குறியே!

இன்னொரு விஷயம்! இன்று பாகிஸ்தானில் இருக்கும் மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற நகரங்களில் வாழ்ந்தவர்களும் திராவிடர்களே என்று அறிய முடிகிறது. இது பற்றி மேலதிக விபரம் அறிந்தவர்கள் தெரியப் படுத்தினால் நன்றாயிருக்கும்.

suvanappiriyan said...

சீனு!

//ஔரங்கசீப்பை எல்லோரும் வில்லனாகவே பார்த்திருக்கிறோம். ஆனால், அவர் ஒரு நல்ல ஆட்சியை தந்தவராகவே தெரிகிறது. தன் உணவுக்கு கூட தானே வேலை செய்து சம்பாதித்தாராம்!!!//
நம் வரலாற்றை பள்ளிகளில் எழுதியவர்கள் திட்டமிட்டு ஒளரங்கஜேப்பை கொடுமைக்காரராக மாற்றி விட்டனர். ஒருக்கால் அவரும் எல்லா மன்னர்களையும் போல் குடியும் கூத்துமாக இருந்துஆடம்பர வாழ்வு வாழ்ந்து மக்களின் பணத்தை சுருட்டி இருந்தால் 'மாமன்னர் ஒளரங்கசீப்' என்ற பெயரும் கிடைத்திருக்கும்.

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

குமரகுருபரர்

குமர குருபருக்கு காசியில் கேதார மந்திரமும், கேதாரத் துறையும், அறச்சாலை (குமாரசாமி மடம்) முதலியன அமைத்திட உதவிய முகலாய மன்னர் ஒளரங்க ஜேப்.
-ஸ்ரீ ஆதி குமரகுருபர சுவாமிகள் அருளிச் செய்த 'நீதி நெறி விளக்கம்', திருப்பனந்தாள் காசி மடம் வெளியீடு,
1960, page 7

ஒளரங்கசீப்பின் ஆடசி காலத்தில் குமர குருபருக்கு தன்ஆன்மீகப் பணிகளை செய்ய அரசே பல உதவிகளை செய்து கொடுத்தது.
-அ.மார்கஸ், இசுலாமியருக்கு எதிரான கட்டுக் கதைகள், பாண்டிச்சேரி,
1994, Page 7.

காசியில் குமரகுருபரர் சிவபெருமானுக்குக் கோயில் கட்டி நித்திய நைமித்தியங்களை நடத்தினார். இன்றும் கூட அங்கே தமிழ்நாட்டு முறையில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
-உ.வே.சாமிநாதய்யர், நல்லுரைக்கோவை, இரண்டாம் பாகம்,சென்னை.
1946, page 146.

'ஹிந்து, ஜெயின் ஆலயங்களுக்கும் பூஜீதர்களுக்கும் ஒளரங்கசிப்பால் மான்யங்கள் வழங்கப் பட்டன. ஹிந்து சாதுக்களுக்கும் அறக் கட்டளைகள் அளிக்கப்பட்டன.' - பம்பாயைச் சேர்ந்த ஞானசந்தர் என்பவரின் கூற்று இது.
Pakistan Historical Society, October 1951, Page 247-254

கே.கே.தத்தா என்பவர் ஒளரங்கஜேப் இந்துக்களுக்கும் குறிப்பாக அந்தணர்களுக்கு மானியம் வழங்கியதையும் அது குறித்து பிறப்பித்த அரச ஆணைகளையும் வரிசைப்படுத்தி புள்ளி விபரங்களுடன் வெளியிட்டுள்ளார்.
K.K.Datta, Some Firmans, Sanads and Parwanas, (1578-1802), Patna, Part 2

suvanappiriyan said...

வாரணாசி விசுவநாதர் ஆலயம்!

வங்காளத்திற்குப் பயணம் செய்து கொண்டிருந்த ஒளரங்கஜேப் வாரணாசி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது ஆட்சியின் கீழிருந்த ஹிந்து ராஜாக்கள் ஒளரங்கஜேப்பிடம் 'பயணத்தை ஒரு நாள் நிறுத்தித் தங்கிச் சென்றால் அந்த நாளில் எங்களது ராணிகள் கங்கையில் குளித்து விட்டு விசுவநாதரை தரிசனம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்'என்று கோரிக்கை வைத்தனர்.

ஹிந்து அரசர்களும் ராணியரும் கங்கைக் கரையில் தங்கி விசுவநாதர் ஆலயத்தில் வழிபட்டுச் செல்ல வேண்டுமென்ற கோரிக்கையை தயக்கமின்றி ஏற்றுக் கொண்டவர் ஒளரங்கஜேப்.

அதனைத் தொடர்ந்து ஒளரங்கஜேப்பின் அன்றைய வழிப்பயணம் நிறுத்தப் பட்டது. வாரணாசிக்கு இடையேயான ஐந்து மைல்தூரம் முழுவதும் முகலாயப் பெரரசின் இராணுவத்தினர் நிறுத்தப் பட்டார்கள்.

இந்து ராணிகள் பல்லக்குகளில் சென்று புனித கங்கையில் நீராடினர். காசி விசுவநாதர் ஆலயத்தில் வழிபட்டார்கள். (ஒளரங்கஜேப் ஆட்சியில் அவரவர் விருப்பப்படி வணங்கிட அனுமதிக்கப் பட்டனர் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்)

பூஜைகள் முடிந்தபின் ஹிந்து ராணிகள் திரும்பினர். ஆனால் கட்ச் சமஸ்தானத்தின் ராணி மட்டும் திரும்பவே இல்லை. உடனே அந்த ராணியைத் தேடிக் கண்டு பிடிக்க முழு அளவிளான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனாலும் ராணியைப் பற்றிய தகவல் எதுவும் தெரியாததால் ஒளரங்கஜேப் ஆத்திரமடைந்தார். ராணியைத் தேடிக் கண்டு பிடித்திட தனது மூத்த அதிகாரிகளை அனுப்பி வைத்தார்.

அதிகாரிகள் தீவிரமாகத் தேடுகையில் விசுவநாதர் ஆலயத்தில் உள்ள ஒரு சிலை மட்டும் அசைந்தது. அந்தச் சிலையை அசைத்த போது பாதாளச் சுரங்கம் ஒன்றிற்குச் செல்லும் படிக் கட்டுகள் காணப்பட்டன. உள்ளே இறங்கிப் பார்த்தபோது அங்கே காணாமல் போன ராணி அவமானப் பட்ட நிலையில் அழுது கொண்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது.

நடந்த சம்பவம் குறித்து ஹிந்து ராஜாக்கள் தங்களது எதிர்ப்பை உரத்த குரலில் வெளியிட்டார்கள். இந்த அக்கிரமத்திற்கு தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்று ஒளரங்கஜேப்பிடம் கோரினார்கள்.

அந்த இடத்தின் புனிதத் தன்மை மாசு படுத்தப்பட்டு விட்டதை உணர்ந்ததால் ஒளரங்கஜேப் விசுவநாதர் விக்கிரகத்தை வேறு இடத்திற்கு மாற்றிட உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அந்தக் கோவில் தரைமட்டமாக்கப் பட்டது. அந்தக் கோவிலின் மடாதிபதி கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார்.

ஆதாரம்: பிஷம்பர்நாத் பாண்டே, 'இஸ்லாமும் இந்திய கலாசாரமும்'
Page : 70,71

இதனை தஸ்தாவேஜூகளின் சான்றுகளுடன் டாக்டர் பட்டாபி சீதாராமையா 'ஃபெதர்ஸ் அண்ட் ஸ்டோன்ஸ்' (The Feathers and the Stones)என்ற தனது நூலிலும் பாடனா அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் பி.எல்.குப்தாவும் இந்த நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டுள்ளனர். மேற்கண்ட அவமானகரமான துயரச் சம்பவம் குறித்து பி.என்.பாண்டே என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

P.N.Pande

“Aurangzeb came to Know of it. He was very much enraged. He sent his senior officers to search for the Rani. Ultimately they found that the statue of Ganesh: which was fixed in the wall was a movable one. When the statue was moved. They saw a flight of stairs that led to the basement. To their horror, they found the missing Rani dishonoured and crying. The basement was just beneath Lord Vishwanaths seat. The Rajas expressed their vociferous protests. As the crime was heinous the Rajas demanded examplary action. Aurangzeb ordered that as the sacred precinets has despoiled. Lord Viswanath may be moved to some other place. The temple be razed to the ground and the Mahant be arrested and punished.”

P.N.Pande, Islam And Indian Culture, Page 55

உண்மை இவ்வாறு இருக்க நம் நாட்டு பாட நூல்களில் ஒளரங்கஜேப் 'இந்து கோவில்களை மத வெறியினால் இடித்தார்' என்று பொய்களைப் புனைந்திருக்கிறார்கள். பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கிறோம் என்பதை சமூக ஆர்வலர்கள் உணர்ந்து பொய்யாக புனைந்த வரலாறுகளை திருத்த முன் வர வேண்டும்.

suvanappiriyan said...

தமிழ் மகன்!

"விடாது கருப்பு" போன்றவர்கள் தேகா ராக்கியத்தோடு இருக்கும் போதே தீண்ட விரும்பாத வஜ்ராக்கள் "சுவனப்பிரியன்"களை எதிர்க்க மட்டும் பயன்படுத்திக்கொள்ள முயல்வதை ஒற்றைப் பின்னூட்டத்தில் புரியவைத்துவிட்டீர்கள் வஜ்ரா, நன்றி.

இன்றைய நாட்டு நடப்பை மிக அழகாக சொல்லி விட்டீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

suvanappiriyan said...

முஸ்லிமாக மதம் மாறுகிறேன் என்ற அரசர்!

விஜய நகர அரச சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ஸ்ரீரங்க ராயலு பிஜப்பூர் காரர்கள் கர்நாடகத்தை வென்று தெற்கிலிருந்து முன்னேறி வருவதையும் கோல்கொண்டா தளபதிகள் வடக்கிலிருந்து முன்னேறி வருவதையும் கண்டு தன்னுடைய ராஜ்ஜியம் தனது கரங்களிலிருந்து நழவிக் கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார். எனவே தக்காண சுல்தான்களிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு அளிக்கும் படி வேண்டி ராமராவ் என்ற பிரதிநிதியை ஒளரங்கஜேப்பிடம் அனுப்பி வைத்தார். ஆனால் இதில் தலையிட ஒளரங்கஜேப் விரும்பவில்லை.

ரங்கராயலுக்கு போர் நெருக்கடிகள் இன்னும் அதிகமானபோது ஸ்ரீனிவாஸ் என்ற பிராமணத் தூதுவரை ஒளரங்கஜேப்பிடம் அனுப்பி வைத்தார். 'இரண்டரை கோடி ரூபாயும், இருநூறு யானைகளும், தன்னிடமுள்ள ஆபரணங்களையும் தருவதுடன் வருடாந்திர வரியைத் தொடர்ந்து கட்டிடவும் தனது ராஜ்ஜியத்தை முகலாய சாம்ராஜ்ஜியத்துடன் இணைத்து விட்டு பின் தனது பகுதியை ஒரு ஜாகீராகத் தனக்குத் திரும்பக் கொடுப்பதற்கும் சம்மதம்' என்று ஸ்ரீரங்க ராயலு தெரிவித்தார்.

மேலும் 'தானும் தனது உற்றார் உறவினர்களும் குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்பதாகவும்' சொல்லி அனுப்பியவர் ஸ்ரீரங்கராயலு.

“….the Raja promised tp turn Muslim with all his relatives and dependents!……”

உளள்த்தில் மாற்றம் ஏற்படாமல் ஆட்சி போகிறதே என்ற பயத்தினால் இஸ்லாமாவதை தாம் விரும்பவில்லை என்று கூறிய ஒளரங்கஜேப் அந்த அரசரின் கோரிக்கையை நிராகரித்தார்.

Sir Jadunath Sarkar, History Of Aurangzib, Calcutta, 1912 vol. 1, Page 248, 249

இந்த சம்பவத்தைப் பற்றி சொல்லும் போது 'இந்தக் கோரிக்கையின் பெயரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இந்தியாவில் முகலாயர்கால ஆட்சியின் பண்பைப்பற்றி நல்ல விளக்கத்தைத் தருகிறது.'என்கிறார் ஜாதுநாத் சர்க்கார்.

History Of Aurangzeb, Page 249.

Unknown said...

நண்பருக்கு வணக்கம். இஸ்லாமிய அரசர்கள் இந்துப் பெண்களை திருமணம் செய்தார்கள் என்று கதைகள் சொல்லி இருக்கின்றிர்கள் ஆனால். ஒரு அரசராவது இஸ்லாமிய பெண்னை திருமணம் செய்ததாக உங்களால் சொல்ல முடியுமா? அத்துடன் அவ்வாறான ஒரு கதையை எந்த ஒரு இஸ்லாமிய வரலாற்றிலும் கேல்வி பட்டதாகவும் தெரியவில்லை .

suvanappiriyan said...

நண்பர் ரமேஷ் ஜெயராஜ்!

//இஸ்லாமிய அரசர்கள் இந்துப் பெண்களை திருமணம் செய்தார்கள் என்று கதைகள் சொல்லி இருக்கின்றிர்கள் ஆனால். ஒரு அரசராவது இஸ்லாமிய பெண்னை திருமணம் செய்ததாக உங்களால் சொல்ல முடியுமா? //

அவர்களின் நோக்கம் தங்களுக்கு இந்த நாட்டின் மீது உள்ள அன்பை வெளிப்படுத்தவும், தங்களின் ரத்தம் இந்த இந்திய மண்ணோடு கலக்க வேண்டும் என்றும் நினைத்தார்கள். இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கும் ஒரு பாலமாக இருக்க இந்த திருமணங்கள் மிகவும் உதவின. எனவே தான் இஸ்லாமிய பெண்களை விடுத்து இந்து பெண்களை அவர்கள் மணந்து கொண்டது.