Followers

Sunday, November 12, 2006

குண்டு வெடிப்புகளில் ஈடுபடும் இந்துத்வா!

குண்டு வெடிப்புகளில் ஈடுபடும் இந்துத்வா!

மும்பையிலிருந்து முந்நூறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மாலிகானில் 8 -9-2006 அன்று மூன்று தொடர் குண்டு வெடிப்புகள் நடை பெற்றன. முஸ்லிம்கள் தொழுகைக்காக குழுமும் வெள்ளிக் கிழமைகளில் இதற்கு முன்னும் பல இடங்களில் இதே போன்ற நடைமுறை பின்பற்றப்படுவதை நாம் பார்க்கிறோம். இந்தியாவில் அதுவும் மராட்டிய மாநிலத்தில் இது சர்வ சாதாரணம். இந்தியாவில் எங்கு குண்டு வெடித்தாலும் அனைத்து மக்களின்ஒட்டு மொத்த பார்வை முஸ்லிம்களை நோக்கியே திரும்புவது வாடிக்கையாகி விட்டது. இதற்கு காரணம் ஊடகத் துறையில் நீக்கமற நிறைந்திருக்கும் இந்துத்துவ வாதிகளே! மிக சாமர்த்தியமாக முஸ்லிம்களை சிக்க வைக்க கூட்டு சதியே இந்திய ஊடகத் துறையில் நடந்து வருகிறது.

பாபர் மசூதி இடிப்பின் போது 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட சம்பவத்திலும் கையெறி குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக செய்திகள் வந்தன. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அதன் முக்கிய 'டூம்' என்ற வளைந்த கூரைகளைத் தகர்க்க குண்டுகள் பயன்படுத்தப் பட்டன.

25-4-20003 மராட்டிய மாநிலத்தில் நந்தித் எனுமிடத்திற்குப் பக்கத்தில் பிரபாணி என்ற முஸ்லிம்கள் அதிகமாக வாழம் இடத்தில் குண்டுகள் வெடித்தன. இதுவும் வெள்ளிக் கிழமை ஜீம்ஆத் தொழுகை அன்றே நடந்தது.

21-8-2004 புர்னா,ஜால்னா என்ற முஸ்லிம்கள் நிறைந்த இடங்களில் குண்டுகள் வெடித்து பதினெட்டு முஸ்லிம்கள்காயமடைந்தனர்.

2006 ஏப்ரல் மாதத்தில் பார்பானி என்ற முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இடத்தில் குண்டுகள் வெடித்தன. இதில் 25 முஸ்லிம்கள் காயமடைந்தனர்.

இவை அனைத்தும் இந்து தீவிரவாதிகள் வைத்த குண்டுகள் என்பது இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஐ.ஜி.சூரிய பிரதாப் குப்தா தரும் வாக்கு மூலம்

6-10-2006, Front Line, Page 20

இவை எல்லாம் வெளியே வந்த செய்திகள். வெளிவராத அமுக்கப் பட்ட குண்டு வெடிப்புகள் இன்னும் ஏராளம். எனவே குண்டு வெடிப்புகளில் அதிக தொடர்புகளைக் கொண்டுள்ள இயக்கம் பஜ்ரங் தள் என்பது இப்பொதுதான் ஒவ்வொன்றாக நாட்டு மக்களுக்கு தெரிய ஆரம்பிக்கிறது.

மாலிகான்:

மும்பையிலிருந்து முந்நூறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது இந்நகரம். இன்றுவரை புறக்கணிப்பிற்கும் இந்துத் தீவிரவாதிகளால் அவ்வப்போது அழிவுக்கும் அலைக்கழிப்பிற்கும் ஆளாகிநிற்கும் ஒரு நகரம்தான் மாலிகான். இங்கு வாழ்பவர்களில் எழுபத்தைந்து சதவீதம் முஸ்லிம்கள். நெசவுதான் இவர்களின் தொழில்.

இங்குள்ள முஸ்லிம்களுக்கு ஒரு சிறப்பான வரலாறு உண்டு. 1857-ல் அங்கிலேயருக்கு எதிராக மாபெரும் சிப்பாய்ப் புரட்சி ஒன்று நடந்தது. சிப்பாய்ப் புரட்சியில்கலந்து கொண்ட குடும்பங்களில் பல இந்நகரத்தில் உள்ளன. இந்த சிப்பாய் புரட்சிக்குப் பின் ஆங்கிலேயர்கள் ஆழமான விசாரணையை நடத்தினார்கள். முஸ்லிம்களை கொடுமையும் படுத்தினார்கள். ஆங்கிலேயர் கட்டவிழ்த்து விட்ட குரூரங்கள் தாங்காமல் டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களிலிருந்து இடம் பெயர்ந்து வந்த முஸ்லிம்கள் தான் மாலிகானில் குடியேறினார்கள். இவர்களில் சிறு பகுதியினர் பிவண்டியிலும் குடியேறினார்கள். சிப்பாய்ப் புரட்சிக்கு காரணமானவர்கள் இவர்கள்என்பதால் ஆங்கிலேயர்கள் இவர்களுக்கு எந்த அடிப்படை வசதியையும் செய்து தரவில்லை. சுதந்திர இந்தியாவிலும் இவர்களின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. தினமும் பன்னிரண்டு மணியிலிருந்து பதினான்கு மணிவரை உழைத்திடும்இந்த பாட்டாளி மக்களுக்கு வார விடுமுறை கூட இல்லை. கிடைக்கும் கூலியும் மிகக் குறைவு. அடிக்கடி பாசிஸ்டுகளால் நடத்தப்படும் வகுப்புக் கலவரங்களில் தங்களுக்கென சேர்த்து வைத்தவைச் சூறையாடப் பட்டு விடுகின்றன. இப்போது நடந்த குண்டு வெடிப்புகளில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக செய்தி வருகிறது. காயம் அடைந்தோரோ இதிலும் அதிகம்.

இவ்வளவு இன்னல்களையும் தாங்கி வரும் இந்த மக்களை தற்போது போலீஸார் மிகவும் தொந்தரவுக்கு உள்ளாக்குகிறார்கள். அங்கு எஞ்சியிருக்கும் முஸ்லிம்கள் தான் குண்டு வைத்தார்கள் என்ற பார்வையில் முஸ்லிம் இளைஞர்களைக் காவல் துறையினர் திடுதிப்பென்று அழைத்துச் செல்வதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஃபிரண்ட் லைன் நிருபர் முஸ்லிம் எதிர்ப்பு எழுத்தாளர் பிரவின் சுவாமி என்பவர் கொடுக்கும் ஒரு தகவலைப் பார்ப்போம்:

மாலிகான் குண்டு வெடிப்பைப் புலன் விசாரணை செய்யும் காவல் துறையினர் மாலிகான் பகுதியில் வாழும் முஸ்லிம்களை அழைத்துச் சென்று 'நீங்கள் ஒப்புதல் வாக்கு மூலம் தாருங்கள் லட்சக் கணக்கில் பணம் தருகின்றோம் என ஆசை காட்டுகின்றனர்

இப்படி ஆசை காட்டப்பட்டவர்களில் ஒருவரின் பெயர் முஹம்மது இர்பான். இவர் குண்டு வைப்பதாக ஒத்துக் கொண்டால் ரூபாய் ஐந்து லட்சம் தருவதாக ஆசை காட்டியிருக்கிறார்கள். இந்த முஹம்மது இர்பான் ஒரு நூற்பாலையில் கூலி வேலை செய்பவர். இவர் மீது பல வழக்குகளை பதிவு செய்துள்ளார்கள். ஆனால் இந்தப் பெரும் பழியை எப்படி ஏற்பது என்று நடுங்கிப்போய் ஒத்துக் கொள்ள மறுத்து வந்து விட்டார். இதனால் அவரை சித்ரவதை செய்து அனுப்பியுள்ளனர் போலீசார்.

6-10-2006, Front Line

எதிர் காலம் இருள் மயமாகத் தோன்றும் ஒரு முஸ்லிம் கூலித் தொழிலாளிக்கு ஐந்து லட்சம் ரூபாய் என்பது மிகப் பெரியதொரு தொகையாகும். கிடைக்கும் அடிகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் நொடிப் பொழுதில் தனவந்தனாக மாறிடவும் முஹம்மது இர்பான் முடிவு செய்திருந்தால் இன்று முஸ்லிம்கள் குற்றவாளிக் கூண்டில் நின்றிருப்பார்கள். மொத்தப் பழியும் அவர்கள் மேல் சுமத்தப் பட்டிருக்கும்.

நந்தித் இப்போது இந்துத்துவத் தீவிரவாதிகளின் புகலிடம் என்பதுஎல்லோருக்கும் நன்றாகவே தெரியும். இந்த நந்தித் தீவிரவாதிகளால் பள்ளிவாசலில் குண்டு வைக்கப் பட்ட பார்பானி, புர்னா, ஜால்னா, மாலிகான் இவையெல்லாம் ஒரு பகுதியின் அடுத்தடுத்த ஊர்கள்தான். இந்தப் பகுதியை 'மராத்வாடா பகுதி' என்றழைக்கின்றனர்.

இந்த மராத்வாடா பகுதிதான் இந்துத் தீவிரவாதிகளின் தற்போதய இலக்கு என்பது இப்போது தெளிவாகி வருகின்றது. புர்னா,ஜால்னா,பார்பானி ஆகிய இடங்களில் உள்ள பள்ளி வாசல்களில் குண்டு வைத்தவர்கள் இந்துத் தீவிரவாதிகள் என்பது பட்டவர்த்தனமாக நிரூபிக்கப்பட்ட பின்பும் காவல் தறையினர் அந்தத் திசையில் தங்கள் விசாரணையைத் திருப்பி விடவே இல்லை. போலீசார் முஸ்லிம்களையே சுற்றி வருகிறார்கள்.

நந்தித் குண்டு வெடிப்புகளைப்பற்றிப் பேசிடும்போது கே.பி.இராகுவான்ஷி என்ற காவல்துறை அதிகாரி இப்படிக் கூறினார்.

'இதர பள்ளிவாசல்களில் (புர்னா,ஜால்னா,பார்பானி) குண்டு வைத்த அதே கும்பல் தான் இதனைச் செய்திருக்கின்றன. இவர்கள் பஜ்ரங்தளத்தைச் சேர்ந்தவர்கள். வெடிகுண்டுகளைத் தயாரிப்பது பூஜை செய்வதற்கல்ல. அவை தீவிரவாத செயல்களைச் செய்து அப்பாவிகளைக் கொலை செய்வதற்கும் சமுதாயத்தைப் பிளப்பதற்கும்தான். நாங்கள் இதில் மெத்தனமாக இருப்போம் என்ற கேள்விக்கே இடமில்லை.'

Communalism Combat, June 2006, Page 29,Interview K.P.Irakuwancy.

இப்படிப் பேட்டி தந்தவர் ஒரு சாதாரண காவல்துறை அதிகாரி அல்ல. அவர்தான் மராட்டிய மாநிலத்தின் ATS_Anti Terrorism Squad என்ற தீவிரவாதச் செயல்களைத் தடுக்கும் சிறப்புக் காவல் துறையின் தலைவர்.

இரசாயனப் பரிசோதனைகளும் முடிந்திருக்கின்றன. அவற்றிலும் பல தகவல்கள் அடங்கியிருப்பதாகக் கூறுகின்றனர். சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் இறந்திருக்கின்றனர். அவர்களின் பெயர்கள் ஹிமான்ஷீ பான்சி, (வயது 27), நரேஷ் ராஜ் கொண்டுவார்(வயது 26)

இவர்களும் இன்னும் இவர்களோடு காயம் பட்டவர்களும் கைது செய்யப்பட்டுப் பிணையில் விடப்பட்டவர்களும் இந்துத்துவத் தீவிரவாதிகள்தான். ஆனால் பிணையில் அவர்கள் வெளியே வந்து ஊர் சுற்றிக் கொண்டும் இதர இடங்களில் குண்டு வைத்துக் கொண்டும் அலைகின்றார்கள். அவர்களின் பிணைகளை ரத்து செய்வதற்கோ விசாரணையை முன்னெடுத்து செல்வதற்கோ இந்தக் காவல் துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாலிகானில் சம்பவம் நடந்த அன்று இறந்த உடல்களை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு அக்கில் அஹமது குரைஷி எனபவர் (இஸ்லாம்புரா என்ற ஊரில் வசித்துவரும் தையல் வேலை செய்பவர்) உதவி செய்திருக்கின்றார். அப்போது ஆம்புலன்ஸில் உடலை ஏற்றும் போது சடலத்தின் தாடி தனியாக கழன்று கீழே விழுந்திருக்கிறது. அவர் உடனே பயந்து போய் காவல் துறையினரிடம் விபரத்தை சொல்லியிருக்கிறார். காவல் துறையினர் உடன்வந்து தாடியைக் கைப்பற்றி சென்றிருக்கின்றனர்.

இந்த செய்தி பத்திரிக்கையாளர்களுக்கும் தெரிந்து போய் 'போலித் தாடியோடு சடலம் கிடைத்தது உண்மையா?' என போலீசாரிடம் கேட்கின்றனர். 'உண்மைதான். ஆனால் நாங்கள் தான் செய்தியைச் சொன்னோம்என்று பத்திரிக்கையில் எழுதி விடாதீர்கள்' என்றனர் போலீசார்.

போலித் தாடியுடன் இறந்து கிடந்த சடலத்தின் முகத்தை வெளியிட்டிருந்தால் இந்நேரம்அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எந்த அமைப்பைச் சேர்ந்தவர்?என்ற உண்மைகள் தெரிய வந்திருக்கும். முஸ்லிம்களின் எதிர்ப்பைத் தங்கள் நாடி நரம்புகளிலெல்லாம் ஓட விட்டிருக்கும் மராட்டியக் காவல் துறை நிச்சயமாக அந்த போலி தாடிக்குரிய சடலத்தை ஆய்வு செய்திருக்கும். அவர்முஸ்லிம் அல்ல என்று தெரிந்திட வந்ததும் பல பேர் முன்னிலையில் கிடைத்த உடலை சாமர்த்தியமாக மறைத்து விட்டனர். பத்திரிக்கையில் முதல் நாள் ஒத்துக்கொண்ட காவல் துறையினர் மறுநாளே சாமர்த்தியமாக மறைத்து விட்டனர்.

கிடைத்த அழுத்தமான -உண்மையான தடயங்களை மறைத்து விட்டு முஸ்லிம் இளைஞர்களை அழைத்துச் சென்று பணம் தருகிறோம் குற்றத்தை ஒப்புக் கொள்ளுங்கள். இல்லையேல் அவ்வப்போது அழைத்து உதை தருவோம் பெற்றுக் கொள்ளுங்கள் எனப் பணி செய்கின்றார்கள் நீதியை நிலைநாட்டிட வேண்டியவர்கள்.

வெடித்த குண்டுகள் அனைத்தும் சைக்கிளில் கொண்டு வரப்பட்டவை. சைக்கிளோடு கட்டப் பட்டிருந்தவை. அந்தச் சைக்கிள்களுக்குப் பக்கத்தில்தான் போலி தாடி சடலம் கிடந்தது என்று அக்கீல் குரைஷி கூறுகிறார். இந்த சைக்கிளை விற்றது தினேஷ் அகர்வால் என்பவர். வாங்கியவரின் பெயரையும் இதே கடைக்காரர் போலீசாரிடம் கூறியுள்ளார். ஆனால் இது பற்றி எந்த தகவலையும் போலீசார்இதுவரை வெளியிடவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் அபூ ஆசிம் அஸ்மி அவர்கள் ZEE News. Com என்ற இணைய தளத்தில் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.:

குண்டு வெடிப்பு நடந்த அன்று முஸ்லிம் அல்லாத ஒருவர் இந்துக்களை மாலிகான் நகருக்குள் போக வேண்டாம் என்றும் அங்கு குண்டுகள் வெடிக்கக் கூடும் என்றும் எச்சரித்துள்ளார். இப்படி எச்சரிப்பதைக் காதால் கேட்ட கடைக்காரர் ஒருவர் செய்தியை எல்லோரிடமும் சொல்லியிருக்கின்றார். இந்த கடைக்காரரை விசாரித்தால்மேலும்பல தகவல்கள் வெளிப் படலாம். ஆனால் காவல் துறையினர் இதைப்பற்றிக் கவலைப் படவில்லை.

குண்டு வெடித்த இடங்களுள் ஒன்றான முஷாவுரா சவுக் (இது ரஹ்மானி பள்ளிவாசலுக்குப் பக்கத்தில் இருக்கிறது) பக்கத்தில் முஸ்லிம் அல்லாத தொழிவாளர்கள் கழிவு நீர்ப் பைப்புகளைப் புதைத்துக் கொண்டிருந்தார்கள்.இவர்களைச் சிலர் பதினோரு மணிக்குள் அவ்விடத்தை விட்டு வெளியேறி விடும்படி கூறியிருக்கின்றார்கள்.

இந்தக்கழிவு நீர்ப்பணியாளர்களை மிகவும்எளிதாகக் கண்டுபிடித்து விடமுடியும்.அவர்களை விசாரித்தால் இவர்களை எச்சரித்தவர்கள் மூலம் குற்றவாளிகளைக்கண்டுபிடிக்க முடியும்.

கிடைத்த தகவல்கள் அனைத்தையும் காற்றிலே பறக்க விட்டு விட்டு இந்த குண்டு வெடிப்புகளைப் பற்றிய தகவல்களை யாரேனும் தந்தால் அவர்களுக்கு ஐந்துலட்ச ரூபாய் சன்மானம் தருவதாக அறிவித்துள்ளனர்.

இவை எல்லாம் நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. புலன் விசாரணைகளை மேற் கொள்பவர்கள் கற்றகலைதான் இவை எல்லாம். ஆனால் மனம் இருந்தால்தானே வழி பிறக்கும்!

மராட்டிய மாநிலக் காவல் துறையும் கூச்சமில்லாமல் ஓர் உண்மையை ஒத்துக்கொள்கின்றனர். 'நாங்கள் முஸ்லிம்களைத் துரத்தவும் அவர்களின்அமைப்புகளைத் தோண்டி எடுக்கவும் தான் கற்றுக் கொண்டுள்ளோம். இந்துத்துவ அமைப்புகளைப் பற்றி எங்களிடம் போதிய தகவல்கள் இல்லை.' இப்படிச் சொல்வதற்கு இந்தக் காவல்துறை வெட்கப்பட வேண்டாமா?

Radiance, Frontline – 6-10-2006.

ஆர்.டி.எக்ஸ் என்ற வெடி பொருள் பற்றி:

'ஆர்.டி.எக்ஸை யார் பயன் படுத்துவார்கள் என்பது குறித்து ஒரு முடிவுக்கும் வந்திட இயலவில்லை. மாலிக்கானில் நாற்பது முஸ்லிம்களைக் கொன்ற குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன்பு காவல்துறையினர் அஹ்மத் நகரில் 195 கிலோ வெடி பொருட்களைக் கைப்பற்றினர். அதில் ஆர்.டி.எக்ஸ் என்ற சக்தி வாய்ந்த வெளிநாட்டு வெடி பொருள்களும் உண்டு. இந்த வெடி பொருள்களை வைத்திருந்தவரின் பெயர் சங்கர் ஷெல்கி.'

'புலனாய்வுத் துறையினர் இந்த வெடிப் பொருட்களைப் பற்றிக் குறிப்பிடும்போது 1993ல் மும்பையில் நடந்த குண்டு வெடிப்புகளைப் போல் பன்மடங்கு சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை நிகழ்த்தப் போதுமானவையாகும். இதை அவர் நமது ராணுவத்திடமிருந்து வாங்கி இருக்கிறார் என்று( from decommissioned Indian Army Ordiance) புலனாய்வுத் துறைக் கண்டுபிடித்துள்ளது.

'ஷங்கர் ஷெல்கி போலிப் பெயர் ஒன்றில் செல்போன் ஒன்றை வாங்கிப் பயன்படுத்தி இருக்கின்றார். அதிலிருந்து இருநூறு முறை ராணுவத்தில் சிலரோடு பேசியுள்ளார்.

இராணுவத்தின் கவனக் குறைவை இவர் பயன்படுத்தி இருக்கின்றார் என்றே எண்ணிடத் தோன்றும் அளவில் அவர் செயல்பட்டிருக்கின்றார். ராணுவத்தின் கவனக்குறைவு ஒரு பெரும் பிளாக் மார்க்கெட்டை ஆர்.டி.எக்ஸீக்கு பயன்படுத்தி இருக்கின்றது எனத் தெரிய வருகின்றது.

காவல்துறை ஷங்கர் ஷெல்கியை கைது செய்யும் முன் செப்டம்பர் பத்தாம் நாள் தற்கொலை செய்து கொண்டார். இதிலிருந்து நமக்கு தெரிய வருவது ஆர்.டி.எக்ஸ் என்பது எவருக்கும் இலகுவில் கிடைக்கும் என்பதே! ஆனால் பத்திரிக்கைகள் முழுவதும் ஆர்.டி.எக்ஸ் என்றால் முஸ்லிம்கள்தான் என்று எழுதுகின்றன.

Praveen Swamy in Front Line
6-10-2006, PP: 21/22

ஒரு நாட்டின் சிறுபான்மை மக்களை அதிகார வர்க்கம் இந்த அளவு தொல்லைப் படுத்தினால் இந்நாட்டின் மீது வெறுப்புற்று உண்மையிலேயே தீவிரவாதத்தை நாடினால் நாட்டில் எங்கிருந்து அமைதி வரும். அற்ப அரசியல் ஆதாயத்துக்காக இது போன்ற சதி செயல்களில் ஈடுபடும் பஜ்ரங்தள தீவிரவாதிகளை மக்கள் இனம் கண்டு சமூகத்திலிருந்து ஒதுக்கவேண்டும். தீவிரவாதிகள் எந்த மதத்திலிருந்து தோன்றினாலும் அது அந்த மதத்தை முன்னேற்றாமல் பின்னோக்கியே இழுத்துச் செல்லும் என்பதை காலம் காட்டிக் கொண்டு தான் இருக்கிறது.

இந்த நேரத்தில் இஸ்லாமிய தீவிரவாதத்தையும் சுட்டிக்காட்ட வேண்டும். எங்கோ ஒரு சில இஸ்லாமியர் செய்யும் தவறுகளால் இந்தியாவில் ஒட்டு மொத்த இஸ்லாமியரும் தவறாக பார்க்கப் படுகிறார்கள். இது போன்று அப்பாவிகளை இலக்காக்கும் ஒரு சில இஸ்லாமியர் இறைவனின் கோபத்தையே சம்பாதிக்கிறார்கள். மற்ற இஸ்லாமியருக்கும் பிரச்னையைக் கொடுக்கிறார்கள்.

'நம்பிக்கை கொண்டோரே! இறைவனுக்கு கட்டுப் பட்டு நீதிக்கு சாட்சிகளாக ஆகி விடுங்கள். ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள். அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள். இறைவன் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.'
5 : 8 - குர்ஆன்

'நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலை நாட்டுவோராகவும் இறைவனுக்கு சாட்சி கூறுவோராகவும் ஆகிவிடுங்கள்.வாதியோ பிரதிவாதியோ செல்வந்தனாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்குமே இறைவனே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின் பற்றாதீர்கள். நீங்கள் சாட்சியத்தைப் புரட்டினாலோ புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை இறைவன் நன்கறிந்தவனாக இருக்கிறான்.'
4 : 135 - குர்ஆன்

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.

7 comments:

வஜ்ரா said...

Malegaon blasts: SIMI activist held

Mumbai cops join the dots between Malegaon and 7/11

பொய்ப்பிரச்சாரம் செய்ய எந்த அவசியமும் இல்லை. இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் என்பது உலகறிந்த ரகசியம்.

திருவடியான் said...

http://www.outlookindia.com/fullprint.asp?choice=1&fodname=20061113&fname=Cover+Story&sid=1

Just for your information and further reading.

Unknown said...

சென்ற வாரம் எவன் செய்த செயல் அது என்று தெரிந்துபோனதே ? வழக்கம்போல இதுவும் நீங்கள் வைத்த குண்டு என்று . 100 க்கு 1 உங்க மேலயே வெடிச்சா பழிய இந்துக்கள் மேல போட்டுலாம் பாருங்க .

Unknown said...

அதுதான் போனவாரம் தெரிஞ்சுபோச்சே குற்றவாளிகள் நீங்கள்தான் என்று ? 100 க்கு 1 உங்காளுக மேலயே போட்டு டெஸ்ட் செய்ய வேண்டியது , பழிய இந்து அமைப்புகள் மேல போடவேண்டியது .

Unknown said...
This comment has been removed by a blog administrator.
suvanappiriyan said...

At 7:47 AM, சுல்தான் said...
வஜ்ரா மாதிரி மகா ப்ராம்ணாள் பேச்செயெல்லாம் எடுத்துக்காதேங்கோ. அவா இருக்ற எடம் அப்டி. அவா இருக்ற எடத்திலுள்ளவா இந்த அம்பியக் கடிப்பா. என்ன செய்வா பாவம் விட்டுங்கோ.
கொடுத்துள்ளவற்றுக்கு விளக்கமிருந்தால் சொல்லுவதை விட்டு விட்டு, பொதுவாக முஸ்லீம்களை கேவலமாகப் பேசுவதால் இப்படி.

suvanappiriyan said...

வஜ்ரா!

//பொய்ப்பிரச்சாரம் செய்ய எந்த அவசியமும் இல்லை. இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் என்பது உலகறிந்த ரகசியம்.//

இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்று வரை பொய்யிலேயே காலத்தை ஓட்டுபவர்கள் யார் என்பது நம் நாட்டவருக்கு நன்றாகவே தெரியும். விளக்க வேண்டிய அவசியமே இல்லை.

-----------------------------------


திருவடியான்!

வருகைக்கும் சுட்டியை தந்தமைக்கும் நன்றி.