Followers

Wednesday, November 22, 2006

பூமி உருண்டை என்பதை எவ்வாறு நிரூபிப்பது?

பூமி உருண்டை என்பதை எவ்வாறு நிரூபிப்பது?

'இறைவன் இரவைப் பகலில் நுழைப்பதையும் பகலை இரவில் நுழைப்பதையும் சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும் நீர் அறியவில்லையா? ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை சென்று கொண்டிருக்கும். இறைவன் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.'
31 : 29 - குர்ஆன்

இந்த பூமியின் அமைப்பானது சமதளம் என்றே முந்தைய கால மக்கள் நம்பியிருந்தனர். அவர்கள் பூமியில் அதிக தூரம் பயணிக்க பயந்ததுண்டு. பூமி சம தளமாக இருப்பதால் எல்லைக்குச் சென்றால் கீழே விழுந்து விடுவோமோ என்ற பயம் தான் காரணம்.

1597 அம் ஆண்டில் வாழ்ந்த ஃபிரான்ஸிஸ் டிரக் என்ற விஞ்ஞானிதான் பூமி உருண்டையானது என்று உறுதியாகக் கூறினார். இந்த உண்மையைத்தான் குர்ஆனும் சொல்கிறது.

பகலும் இரவும் ஒன்றுக்குள் ஒன்று புக வைக்கிறது என்ற இந்த நிகழ்வு பூமி உருண்டையாக இருந்தால்தான் நடைபெறும். சம தளமாக இருந்து பூமி சுற்றாமலும் இருந்தால் ஒன்றோடு ஒன்று புக வைக்கும் நிகழ்வு நடக்காது.

'சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன.'
13 : 2 - குர்ஆன்

நாமெல்லாம் பள்ளியில் படிக்கும் காலத்தில் விஞ்ஞானப் பாடத்தில் சூரியனைப்பற்றி படித்திருப்போம். சூரியனானது நிலையானது. அசைவற்றது. மற்ற கோள்கள் தாம் அதைச் சுற்றி சுழல்கிறது. சூரியன் தன் இடத்தை விட்டு நகர்வதில்லை என்பதாகும்.

அனால் இன்று விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பானது சூரியன் உட்பட அனைத்துக் கோள்களும் சுழல்கின்றன. சூரியன் ஒரு முறை தன்னைத் தானே சுற்றி வர சுமார் இருபத்தைந்து நாட்கள் ஆகிறது. அது மட்டும் அல்ல சூரியனில் கருப்புப் புள்ளிகளும் உள்ளன என்பதாகும்.

நேற்று வரை விஞ்ஞானிகள் சூரியன் அசைவற்றது. நிலையானது. என்று சொன்னவர்கள் இன்று தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டார்கள். 'மற்ற கோள்களோடு சேர்ந்து சூரியனும் ஓடுகின்றது' என்ற குர்ஆனின் கருத்தை இன்று உண்மை என்று அறிவியலாரும் ஒத்துக் கொண்டனர். இந்த இடத்திலும் அறிவியலாரை பின்னுக்குத் தள்ளி விட்டு குர்ஆன் நிமிர்ந்து நிற்கிறது.

சந்திரனின் பிரகாசம்:

'வானத்தில் நட்சந்திரங்களை ஏற்படுத்தி, அதில் விளக்கையும் ஒளி சிந்தும் சந்திரனையும் ஏற்படுத்தியவன் பாக்கியமானவன்'
25 : 61 - குர்ஆன்

சந்திரன் தன் சொந்த ஒளியினாலே பிரகாசிக்கிறது என்று முந்தைய மனிதர்கள் நம்பியிருந்தனர். ஆனால் இன்று சந்திரனின் ஒளியானது அதன் சொந்த ஒளியல்ல. சூரியனின் ஒளியைத்தான் அது பிரதிபலிக்கின்றது என்று விஞ்ஞானிகள் அறிவிக்கின்றனர். அதாவது சந்திரன் சூரியனின் ஒளியை வாங்கி அதைத் திரும்ப வெளியிடுகிறது. ஆகையால் நாம் சந்திரனைக் காணும் போது அதில்காணும் ஒளியானது சந்திரனின் ஒளியல்ல. சூரியனின் ஒளியைத் தான் அது திரும்பக் கண்ணாடி போல் பிரதிபலிக்கிறது என்று சில ஆண்டுகளுக்கு முன்தான் விஞ்ஞானம் கண்டறிந்து கூறியது.

குர்ஆன் சந்திரனின் ஒளிக்கு 'முனீர்' என்னும் பதத்தை உபயோகப் படுத்தியுள்ளது. இந்த அரபி பதத்துக்கு நேரடியான பொருள் பிரதிபலிக்கின்ற ஒளி. மிகவும் கவனமாக நேர்த்தியாக சந்திரனின் ஒளியை பிரதிபலித்தல் என்ற வார்த்தை உபயோகப் படுத்தப்பட்டுள்ளதால் குர்ஆன் இறை வாக்குதான் என்பது மேலும் உறுதியாகிறது.

இறைவனே மிக அறிந்தவன்

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

10 comments:

suvanappiriyan said...

//தலித் மலம் அள்ளுவதற்குக் காரணம் இஸ்லாம். இஸ்லாத்தை இங்கு கொண்டுவந்த வந்தேறி கொள்ளைக்கூட்டங்கள்தாம் இதையும் கொண்டுவந்தன.//
-Nesa Kumar

நல்ல வேளை! இந்தியாவில் தலித்கள் உருவாவதற்கு இஸ்லாம்தான் காரணம் என்று சொல்லாமல் விட்டார்.

இந்தியாவில் எந்த கூட்டம் ஆடு மாடுகளை ஓட்டிக்கொண்டு கைபர் கணவாய் வழியாக வந்தேறிகளாக வந்து கூடாரம் அடித்தது என்பது எல்லோருக்கும் தெரியும். அதை விளக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை.

இன்றுவரை மலம் அள்ளுபவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்நாட்டு பூர்வ குடிகளை கோவிலுக்குள் அனுமதிக்காமல் இருப்பது இஸ்லாமா! பார்ப்பணியமா!

//தலித்தை அரியணையில் ஏற்றிட இந்தியா தயாராகத்தான் இருக்கிறது. ரம்பர் ஸ்டாம்பு என்றாலும் ஜனாதிபதியாக ஒரு தலித் இங்கே இருந்திருக்கிறார். சவுதியில் ரம்பர் ஸ்டாம்பாகவாவது ஒரு அரபியல்லாத, அங்கேயே உழைத்து ஓடாய்ப்போகும் இந்திய-தலித்-முஸ்லிமை தலைவராக நியமிப்பார்களா?//
-Nesa Kumar

சவூதிக்கு ஆட்சியாளராக வரக் கூடியவர் அரச குடும்பத்தவராகவும், சவூதி நாட்டவராகவும் இருக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இது கூட இன்னும் நேச குமாருக்கு தெரியவில்லையா? குமுதத்தில் பல கட்டுரைகளை எழுதிய இவருக்கு இநத விபரம் நான் சொல்லித் தெரிய வேண்டுமா? புதிதாக இஸ்லாம் ஆன பல தமிழ் சகோதரர்கள் சில நேரங்களில் பள்ளியில் இமாமாக நின்று தொழ வைக்கும் அழகிய காட்சியைப் பார்க்கிறேன். அந்த சகோதரரைப் பின் பற்றி பல சவூதிகள் தொழுவதையும் பார்க்கிறேன்.

இதே போன்று கோவிலில் மந்திரம் சொல்ல ஒரு தலித்தை நியமிக்க நேச குமாரால் முடியுமா? இதற்கு சங்கர மடம் ஒத்துக் கொள்ளுமா? வேதத்தைக் காதால் கேட்டாலே ஈயத்தை காய்ச்சி ஊற்றச் சொல்லும் மதம் அல்லவா உங்களின் பூர்வீக மதம்.!

“சூத்திரன் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் இராமன் "சம்புகா" என்பவனைக் கொன்றான். அந்தச் சூத்திரன் அப்போது செய்த தவறு அவன் தவம் செய்தான்.”

சூத்திரன் தவம் செய்ததற்கே உங்களின் கடவுளான ராமன் சம்புகனை கொன்றான். அப்படி இருக்க சூத்திரர்களை கோவிலகளில் வேதம் சொல்ல சமூகம் அனுமதிக்குமா?

//சுவனப்பிரியன் போன்றவர்கள் அது 100% இஸ்லாமிய நாடு என்று சர்டிபிகேட் கொடுப்பதை இணையத்திலேயே பார்க்கிறோம்//
-Nesa Kumar

இது போன்று நான் எங்கும் சவூதிக்கு சர்டிபிகேட் கொடுக்கவில்லையெ! இஸ்லாமிய குற்றவியலை ஓரளவு சரியாக நடைமுறைப்படுத்துகிறார்கள். பெஹ்ரைன், குவைத், கத்தார், ஈராக் போன்ற அக்கம்பக்கத்து நாடுகளுக்கு இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஓரளவு சவூதி தேவலாம் என்றுதான் சொல்லியிருந்தேன்.

suvanappiriyan said...

//ஏற்றதாழ்வுகள் இல்லாத சமுதாயம் என புளகாங்கிதப்பட்டுக்கொள்ளும் முஸ்லிகள் மட்டும் வாழும் மக்கா மதினா வில் கூட ஏன் எல்லோரும் மாளிகைகளில் வாழ்வதில்லை. நம்மூர் முஸ்லிம்கள் அட்டை டப்பாக்களில் வாழ அரேபியர்கள் மட்டும் பளிங்கு மாளிகைகளில் வாழ்வது ஏன்?

இதற்கெல்லாம் பதில் வராது சார்//
-Kalkari Siva
ஆஹா! என்ன அறிவுபூர்வமான வாதம்!எல்லொரும் பணக்காரர்களாய் பென்ஸ் காரில் வலய வந்தால் தொழிற்சாலைகளில் வேலை செய்வது யார்? வேறு கிரகங்களில்இருந்து மனிதர்கள் வருவார்களாமா?

இந்த உலகம் இயங்குவதற்கு மனிதர்களில் பணக்காரன் ஏழை என்ற இரண்டுவர்க்கம் இருந்தே ஆக வேண்டும். பிரச்னை என்ன வென்றால் இந்த ஏழைகளை சூத்திரர்கள் என்று வேதங்களில் எழுதி வைத்துக் கொண்டு அவர்களை ஆலயங்களிலும் அனுமதிக்காமல் இரண்டாம் தர குடி மக்களாக நடத்துவது அதுவும் இந்த நாட்டுக்கு சொந்தமில்லாதவர்கள் இந்நாட்டு பூர்வ குடிகளை மனிதனை விட கேவலமாக நடத்துவது அநியாயம் இல்லையா?

'பிராமணர் இந்த மனு நூலைப் படிக்கலாம் மற்ற வருணத்தாருக்கு ஓதுவிக்கக் கூடாது' - மனுத.சா.அ 1.சு 103) என்றும்
'சூத்திரன் பக்கத்தில் இருக்கும்போது வேதம் ஓதக்கூடாது' (மனு த.சா.அ.1 சு99) என்றும்
'சூத்திரன் பிராமணர்களைத் திட்டினால் அவன் தாழ்ந்த இடமான காலில் பிறந்தவனாகையால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்' (மனு த.சா.அ. 8.சு 270)
'பிராமணனுக்கு மங்கலத்தையும், சத்திரியனுக்கு வலுவையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்கு தாழ்வையும் காட்டுகிற பெயரை இட வேண்டும்' - மனு (த.சா.அ 2 சு,31)

ஆகா! இருபதாம் நூற்றாண்டுக்கு ஏற்ற சட்டங்கள். இந்து ராஷ்டிரம் அமைத்தால் இதுதான் சட்டமாகும் இல்லையா சிவா!

அரபியர்கள் பளிங்கு மாளிகையில் வாழ்ந்தாலும் இறைவனை வணங்குவதற்கு பள்ளிவாசலுக்கு வந்து விட்டால் நேற்று முஸ்லிமான தலித்தை தன் பக்கத்தில் தன் தோளோடு தோளாக இழுத்து நிறுத்தி வைத்துக் கொள்வான். நேற்று முஸ்லிமான தலித் பள்ளிக்கு முதலில் வந்தால் முன் வரிசையில் அவனும், பளிங்கு மாளிகையில் வாழும் சவூதி தாமதமாக வந்தால் அவனுக்கு பின்னால்தான் நிற்பான். இதற்கு பெயர்தான் சமத்துவ சமுதாயம்.
அது போல் என் அலுவலகத்தில் சில நேரங்களில் பார்ட்டி நடக்கும் போது பெரிய தாம்பாளத்தில் சாப்பாட்டையும் இறைச்சிகளையும் பரப்பி நானும், என் முதலாளியும், கக்கூஸையும், அலுவலகத்தையும் சுத்தம் செய்யும் பங்களாதேசியும், இன்னும் பலரும் ஒன்றாக அமர்ந்து ஒரே தட்டில் சாப்பிடுகிறோமே இதை தமிழகத்தில் கொண்டு வாருங்கள் பார்ப்போம். நடமாடும் தெய்வம் :-)இருள்நீக்கி சுப்ரமணியத்தையும், ஒரு தலித்தையும் ஒரே தட்டில் அமர்ந்து சாப்பிடச் சொல்லுங்களேன். கால்கரி சிவாவால் முடியுமா?

அட்றா சக்கை said...

அய்யா சுவனப்பிரியன்,

//நடமாடும் தெய்வம் :-)இருள்நீக்கி சுப்ரமணியத்தையும், ஒரு தலித்தையும் ஒரே தட்டில் அமர்ந்து சாப்பிடச் சொல்லுங்களேன். கால்கரி சிவாவால் முடியுமா?
//

நீங்க வேற .. தலித்தை விடுங்க, மாட்டுக்கறி உண்ணும் கால்கரி சிவா வந்து சென்றால் அவர் தாங்கிப் பிடிக்கும் பார்ப்பனர்களே அவர் வந்து சென்ற, உட்கார்ந்த இடத்தைக் கழுவி விடுவார்கள்.

இறை நேசன் பதிவு பார்க்கவில்லையா?

http://copymannan.blogspot.com/2006/11/blog-post_17.html

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

இந்த விளக்கங்கள் எல்லாம் சூரியன் பூமியைச் சுற்றுகிறது என்பதைக் காட்டவே பயன்படுகிறது அதாவது geocentric modelஐ காண்பிக்கவே பயன்படுகிறது.

http://www.wiki.faithfreedom.org/index.php/The_Geocentric_Quran

இங்கே சென்றால் நீங்கள் சுட்டிக் காட்டி இருப்பதை விட அதிகமான quotationகளுடன் இது விளக்கப்படுகிறது.

விஞ்ஞானம் அடக்கமானது தவறுகள் செய்தால் ஒப்புக் கொள்ளக் கூடியது.

தவறையே சரியானது போல சொல்லக் கூடியது அல்ல.

இறையடியான் said...

இதுக்கெல்லாம் பதில்வருமுன்னு நெனக்கிறிங்க

நீங்களும் பொறுமையா பதி சொல்றீங்க நான் அவங்க ரேஞ்க்கு எறங்கி கத்துறேன் உணர்ந்தது போலவே தெரியல இனியாவது நல்லா எழுதாம்முன்னு இருக்கேன்

இதல்லம் நெனக்கிம்போது என்ன சொல்ல தோனுதுனா

சொக்கா சொக்கா (திருந்துடா)

suvanappiriyan said...

அட்ரா சக்கை!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

-----------------------------------

தமிழ் ரிபர்!

பூமி உருண்டையானது என்பதை 1597 ஆம் ஆண்டில் வாழ்ந்த பிரான்ஸிஸ் டிரக் என்ற விஞ்ஞானிதான் சந்தேகமற ஆதாரத்தோடு நிரூபித்தார். இதற்கு முன்பெல்லாம் அனுமானமாகத்தான் சொல்லப்பட்டது. ஆனால் குர்ஆனோ மனிதர்களைப் பார்த்து சவால் விட்டு இந்த வசனங்களைக் கூறுகிறது.

மேலும் சந்திரனின் ஒளியானது சூரியனிடம் இருந்து வாங்கி கண்ணாடி எப்படி பிரதிபலிக்கிறதோ அதே போன்றுதான் ஒளியை உமிழ்கிறது என்று தற்போதய கண்டு பிடிப்பை குர்ஆனால் எவ்வாறு சொல்ல முடிந்தது?

-------------------------
Thanks for comments Mr valarpirai,Mr Senthil Kumaran,and Mr IraiAdiyan.

Anbudan
Suvanappiriyan

suvanappiriyan said...

ஒரு அரிய நிகழ்ச்சி!

இன்று இரவு இந்திய நேரம் பத்தரை மணிக்கு (சவூதிநேரம் இரவு எட்டு மணிக்கு) சவூதி சேனல் இரண்டில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இஸ்லாத்தைப் பற்றி எதுவும் தெரியாத நான் இன்று ஓரளவு மற்றவருக்கு எடுத்துச் சொல்லும் அளவுக்கு தேர்வு பெற்றது இப்பள்ளியில் சேர்ந்தவுடன்தான். புதிதாக இஸ்லாத்தில் இணைந்தவர்கள் பல கலாச்சாரத்தைக் கொண்ட மக்கள் எந்த அளவு ஈடுபாட்டோடு இந்த மார்க்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளார்கள் என்பதையும் ஆங்கில மொழியில் பார்க்கலாம். நேரம் கிடைப்பவர்கள் பார்த்து பயன் பெறவும்.

suvanappiriyan said...

இறையடியான்!

//நீங்களும் பொறுமையா பதி சொல்றீங்க நான் அவங்க ரேஞ்க்கு எறங்கி கத்துறேன் உணர்ந்தது போலவே தெரியல இனியாவது நல்லா எழுதாம்முன்னு இருக்கேன்//

சிலரின் பாணிக்கு அவர்களின் பாணியிலேயே சென்று பதிலளிப்பதுதான் சிறந்தது. உங்களின் பாணியை தனி மனித தாக்குதல் இல்லாமல் தொடர்ந்து பின்பற்றுங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

suvanappiriyan said...

//எரியும் நரகத்திற்கே அனுப்பப்படுவார்கள். ஏனெனில் அவன் எல்லையற்ற கருணையாளனாக இருக்கிறான்!”
//

ஆ...யார் அந்த கருணையாளன்?
-Kalakri Siva.

1.அல்ஹம்துலில்லாஹி ரப்பில் அலமீன்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே! அவன் அகிலத்தைப் படைத்துப் பராமரிப்பவன்.

2.அர்ரஹ்மான் னிர்ரஹீம்.
அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.

3.மாலிகி யௌமித்தீன்.
தீர்ப்பு நாளின் அதிபதி.

4.இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தயீன்.
(இத்தகைய ஆற்றல் பெற்றிருப்பதால்) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.

5.இஹ்தி நஸ்ஸிராத்தல் முஸ்தகீம்.
எங்களை நேர்வழியில் செலுத்துவாயாக!

1: 1,2,3,4.5 - குர்ஆன்.

எங்களை மட்டும் நேர்வழியில் செலுத்தாமல் கல்லையும், மண்ணையும், மனிதர்களையும் (ஓசோ) வணங்கி வரும்கால்கரி சிவா,நேசகுமார், அரவிந்தன் நீலகண்டன்,ஜெயராமன் போன்ற கோடிக்கணக்கான பேரையும் நேர்வழியில் செலுத்துவாயாக!



//அக்காலத்தில் அரச பதவி யென்றால் இக்காலத்தில் கல்யாண ஆசை. என்னுடன் வேலைப் பார்த்தவனின் அப்பா தன் மகனுக்கு பதிலாக தான் செய்துகொண்டான். இவ்வளவு பணம் மஹராக கொடுத்து என் மகனுக்கு ஏன் கல்யாணம் செய்துவைக்க வேண்டும் எனக்கு இளமை இன்னும் பாக்கியிருக்கிறது என்பது அவன் வாதம்//
-Kalkari Siva.

இதில் தவறு என்ன இருக்கிறது? மஹர் கொடுக்க வசதியில்லாதவன் திருமணம் முடித்தால் மனைவியையும் குழந்தையையும் காப்பாற்றுவது யார? எனவே மகனை விட தகப்பனிடம் மஹர் கொடுக்க வசதியும், இளமையும் இருந்தால் திருமணம் முடித்துக் கொள்வதில் என்ன தவறு?

நான் நடமாடும் தெய்வம் கட்டை பிரம்மச்சாரி, பெண் வாசமே பிடிக்காதுஎன்று போலியாக சொல்லிக் கொண்டு பெண் எழுத்தளர்களையும், சினிமா நடிகைகளையும் அந்தப் புரத்திற்கு அழைப்பதுதான் தவறு. அப்படி அழைத்ததை கண்டித்த உண்மையான தெய்வ பக்தனை ஆள் வைத்து போட்டுத் தள்ளியதுதான் தவறு. ஜெயிலுக்கு போய் வந்தும் இன்னும் சிரித்துக் கொண்டே ஆசி வழங்குவதுதான் மகா தவறு.

suvanappiriyan said...

பொய் கூறிய முன் நெற்றி - ஓர் விளக்கம்!

'இறைவன் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?அவ்வாறில்லை. அவன் விலகிக் கொள்ள வில்லையானால்முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி.'

-குர்ஆன் 96 : 14,15,16

இந்த வசனத்தில் முஸ்லிம்களை எந்த நேரமும் எதிர்த்துக் கொண்டும், அவர்கள் இறைவனை வணங்காமல் தடுத்துக் கொண்டும், பொய் பேசி திரிந்து கொண்டும் இருக்கும் நபர்களைப் பற்றி கூறப்படுகிறது.

குர்ஆன் இங்கு பொய் சொல்பவர்கள், தவறான நடத்தையில் ஈடுபடுபவர்கள் போன்றோரின் முன் நெற்றியைப் பிடிப்போம் என்று கூறுகிறது. பொய் சொல்வதற்கும்,தவறான நடத்தை நடப்பவருக்கும் அந்த நபரின் முன் நெற்றிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. ?

ஒரு மனிதனின் மூளையின் அமைப்பையும் அதன் முன் பக்கத்தையும் ஆராய்ந்து பாருங்கள்.அங்கு நமது தலையின் முன் பகுதியில் பெரு மூளை அமைந்துள்ளதைக் காணலாம். இதைப் பற்றி உயிரியல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? Essential of Anatomy & Physiology என்ற புத்தகம் மூளையின் செயல்பாடுகளை விரிவாக விவரிக்கிறது. மனிதன் அதிகம் உணர்ச்சி வசப்படுதல், பொய்,கோபம், முதலான உணர்வு சம்பந்தப் பட்டவைகள் அதிகம் நிகழ்வது மூளையின் முன் பக்கத்தில் இந்த முன் பக்கம் என்பது காதுகளின் ஓரத்துக்கும், தலையின் முன் பக்கத்திற்கும் அதாவது நெற்றியில் அமைந்துள்ள நரம்புகளால் இந்த செயல்கள் செயல் படுத்தப் படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நெற்றிப் பகுதியின் நரம்புகள் மனிதனின் அநேக செயல்களுக்கு காரணமாக அமைகிறது. இந்த இடமே ஒரு மனிதன் பொய் பேசுவதற்கும் உண்மை பேசுவதற்கும் தூண'டுகோலாய் இருக்கிறது.

இந்த உண்மை கண்டறியப்பட்டது சுமார் எழுபது வருடங்களுக்கு முன்புதான். இந்த உண்மையைத் தான் குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே உண்மைப் படுத்துகிறது. எனவே தான் 'பொய் பேசிய அந்த முன் நெற்றியை நாம் பிடிப்போம்' என்று இறைவன் கூறுகிறான். இந்த குர்ஆன் நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக் காட்டு.

Evidence from
1)This is the Truth (video tape)
2)Essential of Anatomy & Physiology, seeley and others, page 211. Also see The Human Nervous System, Noback and others, page 410,411
Figure 12 : Functional regions of the left hemisphere of the cerebral cortex. The prefrontal area is located at the front of the cerebral cortex. (Essentials of Anatomy & Physiology, Seelay and others, page 210.