Followers

Thursday, November 16, 2006

'குர்ஆன் இறைவேதம் இல்லையாம்' - சொல்கிறார்கள்.

'குர்ஆன் இறைவேதம் இல்லையாம்' - சொல்கிறார்கள்.

சமீபத்தில் ஒரிஜினல் திம்மியும், நல்லவனும் குர்ஆனில்மிகப் பெரிய தவறைக் கண்டு பிடித்து விட்டதாக சந்தோஷப் பட்டுக் கொண்டு பின்னூட்டம் இட்டிருந்தார்கள். அதை அப்படியே கீழே தருகிறேன்:

//நல்லவன் கூறியது...

////இறைவன் கூறுகையில்.மனிதர்களே! மறுமையின் மீது சந்தேகம் இருந்தால் அறிந்து கொள்ளுங்கள் நாம் உங்களை ஒரு துளி இந்திரியத்திலிருந்து படைத்துள்ளோம். (அல் குரான்).//இது தவறான கருத்து. பழங்காலத்தில் பலரும் இப்படிப்பட்ட கருத்தினை கொண்டிருந்தார்கள். இந்திரியத்தின் மூலமாக மனிதனை படைக்க முடியாது. இந்திரியம் எவ்வளவு முக்கியமோ அதே போல பெண்ணின் கருப்பையில் இருக்கும் முட்டையும் முக்கியம். இரண்டும் பாதிப்பாதி கலந்துதான் ஒரு ஆணோ பெண்ணோ பிறக்கிறார்கள். வெறும் இந்திரியத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யவியலாது.அந்த காலத்தில் பெண்ணின் கருப்பையினுள் இருக்கும் முட்டையை அறிந்திராதவர்களாக இருந்தார்கள். கேலன் என்னும் ஒரு கிரேக்க அறிவியலறிஞர் மட்டுமே பெண்ணின் திரவமும் ஆணின் திரவமும் சேர்ந்துதான் கரு உருவாகிறது என்று கருதினார். அப்படி குரானில் இன்னொரு இடத்தில் கூறியிருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும், இந்த இடத்தில் கூறியது தவறுதானே?சுவனப்பிரியன் உங்களது பதில் என்ன?//

ஒரிஜினல் திம்மி கூறியது...

//நாம் உங்களை ஒரு துளி இந்திரியத்திலிருந்து படைத்துள்ளோம். (அல் குரான்).////இது தவறான கருத்து. பழங்காலத்தில் பலரும் இப்படிப்பட்ட கருத்தினை கொண்டிருந்தார்கள். இந்திரியத்தின் மூலமாக மனிதனை படைக்க முடியாது.//நன்றி சடையப்பாஇது இறைவேதம் இல்லை என்பதை தெளிவாக நிரூபித்திருக்கிறீர்கள்//

இது இறை வேதம் இல்லை என்று சொல்லிக் கொள்வதில் என்ன சந்தோஷம் இவர்களுக்கு. ஆனால் இவர்கள் எதை எல்லாம் இறை வேதம் இல்லை என்பதற்கு சான்றாக்குகிறார்களோ அந்த வசனங்களே இது இறை வேதம் தான் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

'குறிப்பிட்டுச் சொல்லப்படும் ஒரு பொருளாகக் கூட இல்லாத ஒரு காலம் மனிதனுக்கு இருந்ததில்லையா? மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத் துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.'
76 : 2 - குர்ஆன்



ஆணிடமிருந்து வெளிப்படும் உயிரணு, பெண்ணிடமிருந்து வெளிப்படுகின்ற சினை முட்டையுடன் இரண்டறக் கலந்து பிறகு தான் அது பெண்ணின் கருவறைக்குச் சென்று குழந்தை உருவாகிறது. இந்த உண்மையைத்தான் அழகாக 'கலப்பு விந்துத் துளியிலிருந்து மனிதனை நாம் படைத்தோம்' என்று குர்ஆன் கூறுகிறது.

இந்த உண்மையை கிரேக்கத்திலிருந்து கேலன் என்ற அறிவியல் அறிஞர் வந்து சொல்லித்தான் நல்லவனுக்கும், ஒரிஜினல் திம்மிக்கும் தெரிய வருகிறது. இந்த அரிய உண்மையை சர்வ சாதாரணமாக ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு வெகு அலட்சியமாக குர்ஆன் சொல்லிச் சென்றுள்ளதை அறிந்து வியக்கிறோம்.

மேலும் தங்களின் அன்னையின் கருவில் உருவாவதற்கு முன் நல்லவனும்,ஒரிஜினல் திம்மியும் எங்கு இருந்தார்கள்? இதைக் குர்ஆன் விளக்கும் போது

'குறிப்பிட்டுச் சொல்லப்படும் ஒரு பொருளாக் கூட இல்லாத ஒரு காலம் நல்லவன், ஒரிஜினல் திம்மி போன்ற மனிதர்களுக்கு இருந்ததில்லையா? என்று கேட்கிறது. இதைப் பற்றி மனிதர்களாகிய நாம் என்றாவது சிந்தித்து இருக்கிறோமா? இனிமேலாவது நல்லவனும், ஒரிஜினல் திம்மியும்,எழிலும் சிந்திப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இதே தலைப்பில் முன்பு ஒரு முறை நான் கொடுத்த பதிவினை மேலதிக விளக்கத்திற்காக மீண்டும் ஒரு முறை தருகிறேன்.

'களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம். பின்னர் அவனை பாதுகாப்பான இடத்தில் துளியாக ஆக்கினோம். பின்னர் அந்தத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையை சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.

- 23 : 12,13,14 - குர்ஆன்


புரபஸர் எமிரெடஸ் கெய்த் மூரின் கருத்துக்களை படிப்பதற்கு முன் இவரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்.

டாக்டர் கெய்த் மூர் உலக அளவில் புகழ் பெற்ற உயிரியல் துறை அறிஞர் ஆவார்.இவர் உயிரியலில் மனிதனின் கரு வளர்ச்சியைப் பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். அப்படி அவர் எழுதிய புத்தகங்களில் "The Developing Human" என்ற புத்தகம் அமெரிக்க அரசால் சிறந்த புத்தகமாக தெரிவு செய்யப் பட்டுள்ளது. டாக்டர் கெய்த் மூர் Anotomy and cell Biology துறைகளில் பேராசிரியராக டொராண்டோ பல்கலைக் கழகம் கனடாவில் பணியாற்றுகிறார். இக்கல்லூரியில் Anotomy துறையில் எட்டு வருடங்களாக தலைமைப் பதவியுலும் இருந்து வருகிறார். இனி அவர் தரும் விளக்கங்களை ஆங்கிலத்திலேயே பார்ப்போம்.

In the Holy Quran God speaks about the stages of Mans embryonic development:

“We created man from an extract of clay. Then we made him as a drop in a place of settlement, firmly fixed. Then we made the drop in to an alaqah (leech,suspended thing,and blood clot) then we made the alaqah in to a mudghah (chewed – like substance)…… “ - Quran 23 : 12,13 ,14

literally, the Arabic word alaqah has three meanings : 1) leech 2)suspended thing 3)blood clot.
1) In comparing a leech to an embryo in the alaqah stage, we find similarity between the two as we can see in figure 1. also the embryo at this stage obtains nourishment from the blood of the mother, similar to the leech ,which feeds on the blood of others.

Figure 1 : Drawing illustrating the similarities in appearance between a leech and a human embryo at the alaqah stage. (leech drawing from Human development as Described in the Quran and sunnah. Moore and others page 37, modified from integrated principles of zoology, Hickman and others.Embbroyo drawing from The developing Human, Moore and persaud,page 73)

2)The second meaning of the word alaqah is “suspended thing.” This is what we can see in figures 2 and 3 the suspension of the embryo, during the alaqah stage, in the womb of the mother.

Figure 2 : We can see in this diagram the suspension of an embryo during the alaqah stage in the womb (uterus) of the mother. ( The developing Human, Moore and persaud, 5th edition page 66

3) The third meaning of the word alaqah is “blood clot.” We find that the external appearance of the embryo and its sacs during the alaqah stage is similar to that of a blood clot. This is due to presence of relatively large amounts of blood present in the embryo during the stage.(see figure 4). Also during the stage, the blood in the embryo does not circulate until the end of the third week. Thus the embryo at this stage is like a clot of blood.

Figure 3 : In this photomicrograph, we can see the suspension of an embryo (marked b) during the alaqah stage (about 15 days old) in the womb of the mother. The actual size of the embryo is about 0.6 mm. (The developing Human,Moore,3rd edition page 66,from Histology, Leeson and Leeson.)

Figure 4 : Diagram of the primitive cardiovascular system in an embryo during the alaqah stage. The external appearance of the embryo and its sacs is similar to that of a blood clot, due to the presence of relatively large amounts of blood present in the embryo. (The developing Human, Moore 5th edition, page 65.)

ஆக 'அலக்' எனும் அரபி சொல்லுக்கு வரும் மூன்று விளக்கங்களும் கரு வளர்வின் ஆரம்பத்தில் உள்ள அடுத்தடுத்த நிலைகளை மிகத் துல்லியமாக விளக்குகிறது.

அடுத்த நிலையான 'முத்கா' என்ற நிலையை குர்ஆன் விளக்குகிறது. 'முத்கா' என்றால் நாம் ஒரு சூயிங்கம்மை வாயில் போட்டு நன்றாக மென்றவுடன் வரும் நிலை இருக்கிறதல்லவா அந்த நிலைதான் 'முத்கா' என்று அரபியில் சொல்லப்படும்.ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் “chewed like substance” என்று சொல்லலாம். இதைப்பற்றி திரு கெய்த் மூர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்:

The next stage mentioned in the verse is the Mudghah stage. The Arabic word mudghah means “chewed like substance.” If one were to take a piece of gum and chew it in his mouth and then compare it with an embryo at the mudghah stage, we would conclude that the embryo at the mudghah stage acquires the appearance of a chewed like substance. This is because of the somites at the back of the embryo that “somewhat resemble teethmarks in a chewed substance.” (see figures 5 and 6)

Figure 5 : photograph of an embryo at the mudghah stage (28 days old). The embryo at this stage acquires the appearance of a chewed-like substance, because the at the back of the embryo somewhat resemble teeth marks in a chewed substance. The actual size of the embryo is 4 mm. (The developing Human Moore and persaud, 5th edition, page 82, from professor hideo nishimura, Kyoto university, Kyoto,Japan)

Figure 6 : When comparing the appearance of an embryo at the mudghah stage with a piece of gum that has been chewed , we find similarity between the two.
a) Drawing of an embryo at the mudghah stage. We can see here the somites at the back of the embryo that look like teeth marks. (The developing Human, Moore and persaud,5th edition, page 79)
b) Photograph of a piece of gum that has been chewed


How could Mohammad have possibly known all this 1400 years ago, when scientists have only recently discovered this using advanced equipment and powerful microscopes which did not exist at that time? Hamm and Leeuwenhoek were the first scientists to observe human sperm cells (spermatozoa) using an improved microscope in 1677 (more than 1000 years after Mohammad. They mistakenly thought that the sperm cell contained a miniature preformed human being that grew when it was deposited in the female genital tract.

1981 ஆம் வருடம் புரபஸர் கெய்த் மூர் சவூதி அரேபியா தம்மாம் நகரில் நடந்த ஏழாவது மருத்துவ கருத்தரங்கிற்கு வருகை தந்திருந்தார்.அப்பொழுது அவர் தமது அறிக்கையை பின் வருமாறு சமர்ப்பித்தார் : 'எனக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது குர்ஆனின் மேற் சொன்ன வரிகள். மனிதனின் கருவில் நிகழும் அடுத்தடுத்த நிலைகளை குர்ஆன் மிகவும் துல்லியமாக பட்டியலிடுகிறது.அரிஸ்டாட்டில் மனிதனின் கரு வளர்ச்சியைப் பற்றி நன்கு ஆராய்ந்தார்.ஆனால் அதன் பிறகு தொடர்ந்து வரும் நிலைகளின் மாற்றங்களை அறியும் வாய்ப்பும் வசதியும் அரிஸ்டாட்டிலுக்கு அன்று கிடைக்கவில்லை. அவர் கோழி முட்டையின் கரு வளர்ச்சியின் அடிப்படையைத்தான் விளக்கி விட்டுப் போனார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை கருவியலைப் பற்றிய ஒரு தீர்க்கமான முடிவுக்கு அறிவியல் வரவில்லை. தற்போதுதான் கருவியல் ஓரளவு வளர்ச்சி கண்டுள்ளது. அதற்கான சாதனங்களும் வாய்ப்புகளும் தற்போதுதான் இலகுவாக கிடைக்கின்றன.

மருத்துவம் படிக்காத, எந்த நுண்ணோக்கி வசதியும் இல்லாத, எழுதப் படிக்கத் தெரியாத ஒரு சமூகத்தில் தோன்றிய ஒரு தனி நபரான முகமது நபி இப்படி ஒரு உண்மையை சொல்லவே முடியாது. குர்ஆன் கண்டிப்பாக இறைவனின் வார்த்தைகள் தான் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.' என்று தனது அறிக்கையை சமர்ப்பித்தார்.

இக் கட்டுரையில் வரும் அனைத்து விபரங்களுக்கும் உதவிய புத்தகங்கள் :

1) “The Developing Human” – Moor and Persaud, 5th edition, page8,65,9
2) “Human Development as described in the Quran and Sunnah” – Moor and others page no 36,37,38
3) The reference for this saying is “This is the Truth” (Video Tape) . For copy of this video tape please contact one of the organizations listed .
A) Islamic Foundation Of America
p.o. box – 3415, Merrifield,VA 22116,USA,
Tel : (703) 914-4982, Fax – (703) 914-4984
Mail – ifam@erols.com

B)Bader Islamic Association of Toronto
474 Roncesvalles Avenue, Toronto, Ontario M6R 2N5, Canada
Email : islam@badercenter.com

c) Al- Muntada Al-Islami Centre
7 Bridges Place, Parsons Green, London , SW6 4HW, UK
Mail : muntada@almuntada-alislami.org
mail@jimas.org



இறைவனே மிக அறிந்தவன்

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

3 comments:

Unknown said...

அவர்களுக்கு பெரிதாக விளக்கம் சொல்லி உள்ளீர்கள். புரிந்திருப்பார்கள்.

என்றாலும் கொஞ்சம் பாமர மொழியில் கீழே:
1. 15 கிராம் உளுந்து மாவைக் கொண்டு வடை சுடப்படும்.
2. 15 கிராம் உளுந்து மாவை நீரில் பிசைந்து தேவைக்கேற்ப காரமும் உப்பும் சேர்த்து வடை சுடப்படும்.
3. 15 கிராம் உளுந்து மாவை நீரில் பிசைந்து தேவைக்கேற்ப காரமும் உப்பும் சேர்த்து கொதிக்கும் எண்ணெயில் இட்டு வடை சுடப்படும்.

இந்த மூன்று விளக்கங்களை பாருங்கள். ஒரே செய்தியைத்தான் சொல்கிறது. ஒன்றை விட மற்றது விளக்கமாயுள்ளது. ஆனால் இந்த மூன்று விளக்கங்களும் சரியானவையே.


இவ்வாறுதான் 'மனிதன் ஒரு துளி விந்திலிருந்து படைக்கப்பட்டான்' என்பதையும் 'விந்துத் துளிகளின் கலப்பிருந்து மனிதனை நாம் படைத்தோம்' என்பதையும் மற்ற 'மனித படைப்பைப் பற்றி சொல்லும் வசனங்களையும்' புரிந்து கொள்ள வேண்டும். எல்லாமே சரியானதுதான் ஒன்றுக்கு மற்றது விளக்கமாயிருக்கிறது.

அதற்கு சம்பந்தமில்லாத தவறான வார்த்தைகள் இருந்தால் சுட்டிக்காட்டட்டும். அவர்களால் அவ்வாறு சுட்டவே முடியாது என்பதைத்தான் 14 நூற்றாண்டுகளுக்கும் மேலாக திருக்குர்ஆன் நிரூபித்து வருகிறது.

(மேலுள்ள உதாரணம் குறைகளுள்ள மனிதனாகிய என்னால் கொடுக்கப்பட்டது. அதனால் தயவு செய்து உதாரணங்களைப் பிடித்துக்கொண்டு தொங்காமல் குர்ஆனைப் படித்து கேளுங்கள். விளங்குங்கள்.)

suvanappiriyan said...

//மலம் அள்ளூம் தொழிலை இயந்திரம் வைத்து அந்த மக்களை ஏன் விடுதலை செய்யவில்லை 40 ஆண்டு காலம் ஆட்சி புரியும் உங்கள் அன்பு அண்ணன்களும் கலைஞர்களும் தலைவிகளும். அல்லது சமூக நீதி என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் நீங்களாவது மலம் அள்ளும் தலித்களுக்காக போராடாலாமே. அப்ஸலை விடுதலை செய் மதானியை விடுதலை செய் என காட்டும் தீவிரம் தலித் விடுதலைகளில் காட்டலாமே. உங்களுக்கு இந்தியாவில் ழுழு உரிமை உள்ளது சார். இந்தியா என்ன சவூதியா? உம் என்றால் சிறைவாசம் இம்மென்றால் வனவாசம் என சொல்லுவதற்கு.//
-Kalkari Siva.


ஆஹா! இதுவரை பெரியார் முதல் இன்று உள்ள பகுத்தறிவாளர்கள்வரை தலித் விடுதலைக்கு அவர்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறுவது ஒன்று தான் வழி என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். மேல்சாதி பகுதியிலிருந்து இப்பொழுதுதான் முதல் குரல் வந்துள்ளது. இது மேலும் தொடர வேண்டும். முஸ்லிம்கள் மார்க்கப் பிரச்சாரத்தை இது நாள்வரை தங்களுக்குள்ளேயே செய்து வந்ததால் கால்கரி சிவா போன்றோர்களால் இப்படி எல்லாம் இடித்துரைக்கப் படுகிறது.

எனவே திராவிடர்களே!! முஸ்லிம்களே!நம் நாட்டு பூர்வகுடிகளான தலித்துகளை முன்னேறறுவோம். பல தலைமுறைகளுக்கு முன்பு இந்து மதத்தின் பல சாதிகளிலும் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டோம். நம் முன்னோர்களின் நல்ல முடிவால் பிராமிண்,செட்டியார், நாடார்,மூப்பனார்,தலித் என்று பல சாதிகளிலிருந்து வந்த நாம் 'இஸ்லாம்' என்ற ஒரே சமூகத்தில் பிணைக்கப் பட்டிருக்கிறோம். இன்று சாதிகள் இல்லாத ஒரே சமுதாயமாக இந்தியாவிலும் உலகிலும் தலை நிமிர்ந்து வாழ்கிறோம். நாம் பெற்ற இன்பம் நம் நாட்டு மக்களும் பெற வேண்டும். அதற்கான முழு முயற்ச்சியில் ஈடுபடுவோம்.

-----------------------------------

//பூமி தட்டை என்று பட்வா போட்டான் சவுதியின் தலைமை காஜி. பூமி உருண்டை என்று சொல்பவன் இஸ்லாத்துக்கு விரோதம் என்றான். மேலும், பூமி அசையாமல் நிற்கிறது என்று குரான் சொல்கிறது. அதுவே உண்மை. மீறி சொல்பவர்கள் இஸ்லாத்துக்கு விரோதிகள் என்றும் பட்வா போடப்பட்டது. இதை புகழ்ந்து சவுதி அரசாங்கம் பரிசுகள் கொடுத்தது. நடந்தது 1995 ல் தான் பழைய விஷயமில்லை.

இப்படிப்பட்ட அறிவை தாங்கியவர்களிடம் என்ன பேசுவது?
-JayaRaman //

'அவனே இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான் வெளியில் நீந்துகின்றன.'
21 : 33 - குர்ஆன்

சூரியனால் சந்திரனை அடைய முடியாது. இரவு பகலை முந்தாது. ஒவ்வொன்றும் ஆகாயத்தில் நீந்துகின்றன.
36 : 40 - குர்ஆன்.


ஜெயராமனுக்கே விளங்கக் கூடிய வகையில் குர்ஆன் தௌளத் தெளிவாக அனைத்துக் கோள்களும் நீந்துகின்றன என்று சொல்கிறது. பூமி நிலையாக இருக்கிறது என்ற தகவலை எதிலிருந்து எடுத்தார்? இதை ஷேக் பின் பாஸ் எந்த இடத்திலும் சொல்லவில்லை. அப்படியே சொன்னாலும்அதை முஸ்லிம்கள் உடனே நிராகரித்தும் இருப்பார்கள். பல சிக்கலான சட்டங்களை ஆராய்ந்து இஸ்லாமிய அரும் பணி யாற்றிய ஒரு முதியவரை 'அவன்,இவன்' என்று எழுதும் ஜெயராமனின் தரம் என்ன என்பதும் நமக்கு விளங்குகிறது.

'தோரா (யூதர்களின் வேதம்) அருளப்பட்டு அதன்படி நடக்காமல் இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது.'
62 : 5 -குர்ஆன்

எல்லா விபரங்களும் அறிநது கொண்டே பொய்களைப் புனையும் ஜெயராமனை (யூத வழி வந்தவரல்லவா) நோக்கித்தான் இந்த வசனம் பேசுகிறது.

இது போன்ற எழுத்துக்களால் இஸ்லாம் மேலும் வளருமே அன்றி எந்த குறைவும் வந்து விடாது என்பதையும் சம்பந்தப் பட்டவர்கள் விளங்கிக் கொள்ளட்டும்.

இதே பதிவில் இஸ்லாம் சம்பந்தமாக இவர்கள் உளறி இருக்கும் மற்ற அபத்தங்களுக்கும் நேரம் கிடைக்கும் போது ஆதாரத்தோடு அவ்வப்போது பதில் தருகிறேன்.

'இது மனித குலத்துக்குச் சென்றடைய வேண்டியதாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படவும், வணக்கத்திற்குரியவன் ஒரே ஒருவனே இருக்கிறான் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், அறிவுடையோர் சிந்திப்பதற்காகவும் இது அருளப் பட்டுள்ளது.'
14 : 52 - குர்ஆன்.

அட்றா சக்கை said...

உண்டவீட்டுக்கு ரெண்டகம் செய்தே பழக்கப்பட்டவர்களுக்கு எத்தனை முறை சொன்னாலும் உறைக்காது.

காலை மட்டுமல்லாது மூளையையும் கரியாக்கிக் கொண்டவர்களைத் தான் சொல்கிறேன்.