Followers

Thursday, March 15, 2007

அடிமை வியாபாரம் அனுமதிக்கப்பட்டது ஏன்?

20 comments:

suvanappiriyan said...

அடிமை வியாபாரம் அனுமதிக்கப்பட்டது ஏன்?

'செல்வத்தால் சிறப்பிக்கப் பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமைகளிடம் கொடுத்து, தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. இறைவனின் அருட்கொடையையா நிராகரிக்கிறார்கள்?'

- குர்ஆன் 16 : 71

அடிமை சம்பந்தமாக இது போன்று பல வசனங்கள் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது. திருக்குர்ஆனின் பல வசனங்களில் 'வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள்' என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அடிமைப் பெண்களை குறிப்பபிடப் பயன்படுத்தப்படும் சொல்லாகும்.

'அடிமைப் பெண்களுடன் திருமணம் செய்யாமல் அவர்களின் எஜமானர்கள் குடும்பம் நடத்தலாம்' என்று பல வசனங்களில் கூறப்பட்டுள்ளது.

இன்று அடிமைப் பெண்களோ, அடிமை ஆண்களோ இல்லாததால் இதைப் புரிந்து கொள்வதற்கு இது பற்றிய வரலாறு தெரிந்திருப்பது அவசியம்.

இரண்டு நாடுகளுக்கிடையே போர் நடக்கும் போது, போரில் வெற்றிப் பெற்றவர்கள் தோற்றவர்களை சிறைப்பிடிப்பார்கள். சிறைப்பிடிக்கப்பட்டவர்களில் அண்களும் இருப்பார்கள். குறைந்த அளவில் பெண்களும் இருப்பார்கள்.

இவ்வாறு சிறை பிடிக்கப்பட்டவர்களை அடைத்து வைக்க அன்று சிறைக் கூடங்கள் இல்லை. அவர்களுக்கு உணவளித்துப் பராமரிப்பதும் தேவையற்ற சுமையாக அமையும். எனவே கைது செய்யப்பட்டவர்களைப் போரில் ஈடுபட்டவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பார்கள். அவர்களிடம் வேலை வாங்கி விட்டு அவர்களுக்கு உணவளிப்பது சிரமமாக இருக்காது.

வேலைக்கு ஆள் தேவையில்லை என்ற நிலையில் இருப்பவர்கள் தமக்குக் கிடைத்த அடிமைகளை வசதியானவர்களிடம் விற்று விடுவார்கள். இதனால் அடிமைச் சந்தைகளும் கூட செயல்பட்டு வந்தன. எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் கூட அரபு நாடுகளில் நடைபெற்ற அடிமை வியாபாரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதே!

எத்தனையோ சமூகக் கொடுமைகளை ஒரு உத்தரவின் மூலம் ஒழித்துக் கட்டிய இஸ்லாம் அடிமைகளையும் ஒழித்துக் கட்டியிருக்க முடியாதா? ஏன் அதை இஸ்லாம் ஏற்றுக் கொண்டது? என்ற கேள்வி சிலருக்குத் தோன்றலாம்?

இதில் பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். போர்க் களத்தில் பிடிக்கப்படுவதன் மூலம் அடிமைகள் உருவானாலும் போர் வீரர்கள் உடனுக்குடன் அவர்களை விற்று காசாக்கி விடுவார்கள். பெரும்பாலும் விலை கொடுத்து வாங்கியவர்களிடம்தான் அடிமைகள் இருந்தனர்.

இனிமேல் அடிமைகள் இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டால் அடிமைகளை விலைக்கு வாங்கியவர்கள் பெரிய அளவில் நஷ்டம் அடைவார்கள். அவர்கள் அனைவருக்கும் நஷ்ட ஈடு அளித்தால் அரசை நடத்த முடியாது. நஷ்ட ஈடு அளிக்காமல் உத்தரவு போட்டால் சட்டப்படி அனுமதி இருந்தபோது செய்த வியாபாரத்தில் மக்களுக்கு நஷ்டம் ஏற்படுவது அநியாயமாகும்.

அப்படியே அனைத்து அடிமைகளுக்காகவும் நஷ்ட ஈடு கொடுத்து விடுவிக்க முகமது நபி அவர்கள் கட்டளையிட்டாலும் அது கேடாகத்தான் முடியும்.

ஏனெனில் அடிக்கடி போர்கள் நடந்து கொண்டிருந்த அன்றைய நிலையில் முகமது நபி மட்டும் ஒரு தலைப் பட்சமாக இவ்வாறு அறிவித்தால், முஸ்லிம் கைதிகள் மற்ற நாட்டில் அடிமைகளாக இருக்கும் நிலை ஏற்படும். எதிரிகள் உடனே விடுதலையாகும் நிலையும் ஏற்படும்.

உலக நாடுகள் அனைத்தும் ஒருமித்த தீர்மானத்திற்கு வரும் வரை முகமது நபி மட்டும் முடிவெடுப்பது நன்மை பயக்காது.

நபிகள் நாயகத்தை எதிர்த்துப் போர் செய்தால் நமக்குப் பெரிய இழப்பு ஏற்படாது. அவருக்குத்தான் இழப்பு ஏற்படும் என்ற எண்ணம் சுற்றியுள்ள நாடுகளுக்கு ஏற்படும். எனவேதான் உத்தரவு போட்டு அடிமை முறையை ஒழிக்கவில்லை.

அதே சமயத்தில் அடிமைகளை இல்லாதொழிக்க வேறு பல ஏற்பாடுகளை முகமது நபி செய்தார்.

1.ஒருவர் இறைவனின் மீது சத்தியம் செய்து விட்டு அதை முறித்தாலோ, அல்லது நோன்பை முறித்தாலோ இது போன்ற குற்றங்களுக்குப் பரிகாரமாக வசதியுள்ளவர்கள் அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும்.' என்று முகமது நபி ஆர்வமூட்டினார்.

2. ஒபபந்த அடிப்படையில் அடிமைகள் விடுதலையாவதற்க்கும் முகமது நபி ஏற்பாடு செய்தார். 'உன்னை நான் விடுதலை செய்கிறேன். நீ உழைத்து சிறிது சிறிதாக எனது கடனை அடைக்க வேண்டும் என்று எஜமானர்கள் அடிமைகளிடம் உடன் படிக்கை செய்து விடுவிக்க ஆர்வமூட்டினர்.

3.யாரேனும் அடிமையை விடுதலை செய்தால் அந்த அடிமை பிற்க்காலத்தில் சம்பாதிப்பவைகளுக்கு அந்த எஜமான் வாரிசாவார் என்று சட்டம் கொண்டு வந்து அடிமைகளை விடுவிக்க தூண்டினார்.

4.பொதுவாக மனிதன் செய்யும் நல்லறங்களில் அடிமைகளை விடுவித்தல் சிறப்பானது எனவும் ஆர்வம் ஊட்டினார் முகமது நபி.

தமது வாழ்நாளில் கணிசமான அளவுக்கு அடிமைகளின் எண்ணிக்கையை முகமது நபி குறைத்தார். இது பொதுவாக அடிமைகள் பற்றியது. அடிமைப் பெண்கள் விஷயத்தையும் அறிந்து கொள்வோம்.

அடிமைப் பெண்களாக விற்கப்படுவோர் எஜமான் வீட்டில்தான் தங்கும் நிலை. அவளது கணவன் வேறு நாட்டில் இருப்பான். அல்லது இல்லாமலும் இருப்பான். இந்த நிலையில் அப்பெண்ணை கண்டவர்களும் தகாத முறையில் பார்ப்பதைத் தடுப்பதற்கு வேலி போட்டாக வேண்டும். அவளுக்கும் உடல் ரீதியான தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

இதைக் கருத்தில் கொண்டுதான் அடிமைகளை விலைக்கு வாங்கிய எஜமான் (பல எஜமான் இருந்தால் அவர்களில் ஒரே ஒருவர் மட்டும்) குடும்பம் நடத்தலாம். இவ்வாறு குடும்பம் நடத்தும் போது அவர் குழந்தையைப் பெற்றால் அவளும் குழந்தையும் அடிமைத் தலையிலிருந்து விடுபடுவார்கள் என்று இஸ்லாம் சட்டம் போட்டது.

இதை அந்த சமயத்தில் அனுமதிக்காவிட்டால் அவளுக்காக பரிந்து பேச யாருமில்லாத நாட்டில் அவளது எஜமானையே முழுவதும் சார்ந்திருக்கும்போது அவளை அவன் அனுபவிப்பதை தடுக்க முடியாது போகும்.

அடிமைதானே! நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணம் மற்றவர்களுக்கும் ஏற்படும். அவளுக்கு கணவன் நிலையில் எஜமான் இருக்கிறான் என்ற எண்ணம் ஏற்படும்போது அவளுக்கு பாதுகாப்பு ஏற்படும்.

அவளுடன் ஓர் எஜமானர் தான் குடும்பம் நடத்த வேண்டும் எனக் கூறுவதாலும், அவருக்குப் பிறந்த குழந்தை சொந்த எஜமானனின் குழந்தையாகவே கருதப்படும் என்பதாலும் இது விபச்சாரமாகாது.

அடிமைப் பணெ;கள் என்ற நிலை இருந்த காலத்தில் இந்த அனுமதியை அளிப்பதை தவிர வேறு வழியில்லை. இன்று உலகமெங்கும் அடிமை முறை ஒழிக்கப்பட்டு விட்டதால் இப்போது இதை நடைமுறைப் படுத்த முடியாது.

வேலைக்காரிகளை அடிமைகள் என நினைக்கக் கூடாது. வேலைக்காரிகள் விலைக்கு வாங்கப்பட்டோர் அல்ல. விரும்பினால் இந்த முதலாளியை விட்டு வேறு முதலாளியை அவர்களால் மாற்றிக் கொள்ள முடியும். அடிமைகள் விரும்பியபோது எஜமானை மாற்ற முடியாது.

'தமது மனைவியர் அல்லது அடிமைப் பெண்கள் மீதே தவிர அவர்கள் தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் இழிவுபடுத்தப்பட்டோர் அல்ல.'

'இதற்கு அப்பால் தேடுவோரே வரம்பு மீறியவர்கள்.'

-குர்ஆன் 70 ; 29,30,31

Anonymous said...

'அடிமைப் பெண்களுடன் திருமணம் செய்யாமல் அவர்களின் எஜமானர்கள் குடும்பம் நடத்தலாம்' என்று பல வசனங்களில் கூறப்பட்டுள்ளது.////


ithu kuran vasagam :)
//
அப்படியே அனைத்து அடிமைகளுக்காகவும் நஷ்ட ஈடு கொடுத்து விடுவிக்க முகமது நபி அவர்கள் கட்டளையிட்டாலும் அது கேடாகத்தான் முடியும்.//

///
நபிகள் நாயகத்தை எதிர்த்துப் போர் செய்தால் நமக்குப் பெரிய இழப்பு ஏற்படாது. அவருக்குத்தான் இழப்பு ஏற்படும் என்ற எண்ணம் சுற்றியுள்ள நாடுகளுக்கு ஏற்படும். எனவேதான் உத்தரவு போட்டு அடிமை முறையை ஒழிக்கவில்லை.
///



உலக நாடுகள் அனைத்தும் ஒருமித்த தீர்மானத்திற்கு வரும் வரை முகமது நபி மட்டும் முடிவெடுப்பது நன்மை பயக்காது.



kuran vasagam muzuvathum iRaivanal mugammathuvukku anuppappattathu enbathai poy enRu sollum vagaiyil allavaa ungalin vaatham irukkiRathu :)

you are letting the cat out

-- ezuthiya pin thiruththanggalum , comment maruppugalum ungalin nErmaiyinmaiyai mElum thella thelivaaga kaattakkoodiyavai


anbulla anany

Anonymous said...

super post :) puriyara mathiri irukku vazththugal

suvanappiriyan said...

சுவனப்பிரியன் said...
திருமணம் செய்ய வசதியற்றவர்களை இறைவன் தனது அருளால் தன்னிறைவு பெற்றோராக ஆக்கும் வரை அவர்கள் கற்பொழுக்கம் பேணட்டும். உங்கள் அடிமைகளில் விடுதலைப் பத்திரம் எழுதிக் கேட்போரிடம் நல்லதை நீங்கள் அறிந்தால் அவர்களுக்கு விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுங்கள்.
-குர்ஆன் 24 : 33

அடிமைகளை எந்த வழியிலாவது விடுவிக்க வேண்டும் என்ற கருத்திலேயே குர்ஆன் முழுக்க பல வசனங்களை நாம் பார்க்கிறோம்.

3:57 AM
Anonymous said...
'அடிமைப் பெண்களுடன் திருமணம் செய்யாமல் அவர்களின் எஜமானர்கள் குடும்பம் நடத்தலாம்' என்று பல வசனங்களில் கூறப்பட்டுள்ளது.////


ithu kuran vasagam :)
//
அப்படியே அனைத்து அடிமைகளுக்காகவும் நஷ்ட ஈடு கொடுத்து விடுவிக்க முகமது நபி அவர்கள் கட்டளையிட்டாலும் அது கேடாகத்தான் முடியும்.//

///
நபிகள் நாயகத்தை எதிர்த்துப் போர் செய்தால் நமக்குப் பெரிய இழப்பு ஏற்படாது. அவருக்குத்தான் இழப்பு ஏற்படும் என்ற எண்ணம் சுற்றியுள்ள நாடுகளுக்கு ஏற்படும். எனவேதான் உத்தரவு போட்டு அடிமை முறையை ஒழிக்கவில்லை.
///



உலக நாடுகள் அனைத்தும் ஒருமித்த தீர்மானத்திற்கு வரும் வரை முகமது நபி மட்டும் முடிவெடுப்பது நன்மை பயக்காது.


kuran vasagam muzuvathum iRaivanal mugammathuvukku anuppappattathu enbathai poy enRu sollum vagaiyil allavaa ungalin vaatham irukkiRathu :)

you are letting the cat out

-- ezuthiya pin thiruththanggalum , comment maruppugalum ungalin nErmaiyinmaiyai mElum thella thelivaaga kaattakkoodiyavai


anbulla anany


11:02 AM
Anonymous said...
WASHINGTON - Suspected 9/11 mastermind Khalid Sheikh Mohammed confessed to the beheading of American journalist Daniel Pearl and a central role in 30 other attacks and plots in the U.S. and worldwide that killed thousands of victims, said a revised transcript released Thursday by the U.S. military.

"I decapitated with my blessed right hand the head of the American Jew, Daniel Pearl, in the city of Karachi, Pakistan," Mohammed is quoted as saying in a transcript of a military hearing at Guantanamo Bay, Cuba, released by the Pentagon.
12:04 PM
Anonymous said...

"I was responsible for the 9/11 operation from A to Z," Mohammed said in a statement read Saturday during a Combatant Status Review Tribunal at the U.S. detention facility at Guantanamo Bay, Cuba. Mohammed's confession was read by a member of the U.S. military who is serving as his personal representative.

12:04 PM
Anonymous said...
he is like you guys here :)

He also said some people "consider George Washington as hero. Muslims many of them are considering Osama bin Laden. He is doing same thing. He is just fighting. He needs his independence."
12:05 PM
Anonymous said...
In listing the 28 attacks he planned and another three he supported, Mohammed said he tried to kill international leaders including Pope John Paul II, President Clinton and Pakistani President Pervez Musharraf.
12:06 PM

suvanappiriyan said...

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி! பதில் வர சிறிது தாமதமாகும். பொறுத்துக் கொள்ளுங்கள்.

suvanappiriyan said...

//10:00 AM
அரவிந்தன் நீலகண்டன் said...
மரைக்காயர் சுவனப்பிரியன் இறைநேசன் போன்ற அடிப்படைவாதிகள் போன்றவர் அல்ல ஜோ என நம்புகிறேன்//

:-(

மரைக்காயர் said...

//மரைக்காயர் சுவனப்பிரியன் இறைநேசன் போன்ற அடிப்படைவாதிகள்..//

அடிப்படைவாதி என்று அழைக்கப்படுவதைப் பற்றி டாக்டர் ஜாகிர் நாயக் சொன்ன கருத்து:


நான் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி என்பதில் பெருமை கொள்கிறேன்.:

இறைவனின் மாபெரும் கிருபையினால் - நான் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி. இஸ்லாத்தின் அடிப்படை விதிகளை அறிந்து - அறிந்த விதிகளை பின்பற்றி - அந்த விதிகளை எனது வாழ்க்கையிலும் நடைமுறைபடுத்துகிறேன். ஓரு உண்மையான இஸ்லாமியன் தான் ஒரு அடிப்படைவாதியாக இருப்பதில் ஒருபோதும் வெட்கமுற மாட்டான். நான் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி என்பதில் பெருமை கொள்கிறேன். ஏனெனில் - இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் அனைத்தும் உலகம் முழுவதுமுள்ள மனித குலத்திற்கு பயன் தரக் கூடியவை. இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் எதுவுமே மனித குலத்திற்கு தீழங்கிழைப்பவையோ அல்லது மனித குலத்திற்கு எதிரானவையோ அல்ல. இஸ்லாத்தின் செயல்பாடுகள் சரியானவை அல்ல. மாறாக தவறானவை என்று ஏராளமான பேர் இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை கொண்டிருக்கின்றனர். இந்த தவறான எண்ணம் ஏனெனில் - இஸ்லாத்தைப் பற்றி அவர்கள் அறைகுறையாக அறிந்து வைத்திருப்பதே காரணமாகும். ஓருவர் இஸ்லாம் கற்றுத் தரும் பாடங்களை திறந்த மனதுடனும் - மிகக் கவனத்தோடும் பகுத்தாய்வார் எனில் இஸ்லாம் தனி மனிதனுக்கும் - மொத்த மனித சமுதாயத்திற்கும் - முழு பயனுள்ளது என்ற உண்மையை அறிவதிலிருந்து தவற முடியாது.

suvanappiriyan said...

அடிமைப் பெண்கள் சம்பந்தமாக இன்றைய நடப்பை ஒப்பிட்டு நாம் பார்க்கக் கூடாது. அன்றைய அரபு சமுதாயம் பெண் குழந்தைகளை உயிரோடு புதைக்கக் கூடிய சமுதாயமாக இருந்தது. உலகிலேயே காட்டுமிராண்டிகள் நிறைந்த சமூகம் அன்றைய சமூகம்.

இவர்களுக்கு எதையும் பிரச்சாரம் பண்ண வேண்டுமானால் படிப்படியாகத்தான் செய்ய முடியும். உதாரணத்திற்கு மதுவை எடுத்துக் கொள்ளலாம். முதலில் அரபுகள் தொழும் போது குடிக்க வேண்டாம் என்ற கட்டளை வந்தது. அதற்கு பழகிக் கொண்டவுடன் அதன் தீமையை விளக்கி பிறகு முழுமையாக குர்ஆன் குடியை தடை செய்தது. எந்த ஒரு சட்டமும் அமுல் படுத்தக் கூடியதாகவும் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவத்தை அடைந்தவர்களாவும் இருக்க வேண்டும். எனவேதான் வெறும் ஏட்டில் இல்லாமல் வாழ்வில் பயன்படுத்தக் கூடிய ஒரு மார்க்கமாக இன்றுவரை இஸ்லாம் திகழ்கிறது.

இது சம்பந்தமாக விரிவாக இன்னும் எழுதுகிறேன்.

suvanappiriyan said...

வாங்க இறைநேசன்!

அரவிந்தனுக்கு அழகிய பதிலைக் கொடுத்துள்ளீர்கள். இது போன்று அழகிய பின்னூட்டங்களையும். கருத்து செறிந்த பதிவுகளையும் எதிர்பார்க்கும் சகோதரன்...

சுவனப்பிரியன்.

suvanappiriyan said...

அன்புள்ள அனானி!

இஸ்லாமிய சட்டங்கள் ஒவ்வொரு நபிக்கும் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு ஏற்ப இறைவனால் அருளப்பட்டவை. இது ஆதாமிலிருந்து முகமது நபி வரை அனைவருக்கும் பொதுவான ஒன்று. அந்த சட்டங்களை மக்களோடு மக்களாக இருந்து செயல்படுத்தும் அதிகாரம் முகமது நபிக்கு கொடுக்கப்பட்டிருந்தது. மனிதனுக்கு மனிதன் அடிமை என்ற நிலையை ஒழிக்க இறைவன் விரும்புகிறான். அதை முகமது நபிக்கும் அறிவிக்கிறான். இதை அந்த மக்களிடையே எவ்வாறு கொண்டு செல்வது என்பதன் உரிமையை முகமது நபிக்கு இறைவன் கொடுக்கிறான். முகமது நபி அடிமைகள் விஷயத்தில் சற்று நிதானமாக நடந்து கொண்டதால்தான் அவர்கள் காலத்திலேயே அரபு நாடுகளில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. நம் நாடுகளிலோ இன்றும் கொத்தடிமைகளை வைத்துக் கொண்டு சிரமப்படுகிறோம்.

வாழும் மார்க்கம் இஸ்லாம். எல்லோரும் பின்பற்றத் தக்க மார்க்கம் இஸ்லாம் என்பது இதிலிருந்து தெளிவாகிறதல்லவா! முகமது நபி எடுத்த முயற்ச்சிக்கு அவர் காலத்திலேயே வெற்றி கிட்டி அடிமை முறை ஒழிக்கப்பட்டதா இல்லையா?

எனவே எலிக்குட்டி வெளியே வந்து விட்டது. புலிக்குட்டி வெளியே வந்து விட்டது என்று உங்களுக்கு நீங்களே சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டாம் அனானி!

suvanappiriyan said...

அரவிந்தன் நீலகண்டன் said...
//மரைக்காயர் சுவனப்பிரியன் இறைநேசன் போன்ற அடிப்படைவாதிகள் போன்றவர் அல்ல ஜோ என நம்புகிறேன்//
10:15 AM


ஒரு கொள்கையில் இருந்தால் அதில் உறுதியோடு இருக்க வேண்டும். நான் ஒரு முஸ்லிம். குர்ஆன் என்ன கட்டளையிடுகிறதோ அதை பின்பற்ற வேண்டியவன். குர்ஆன் இறைவனால் அருளப்படவில்லை. இது முகம்மதின் கற்பனை என்று நான் நினைத்தால் அந்த நிமிடமே நான் இஸ்லாத்தை விட்டு விலகி விடுகிறேன். எம்மதமும் சம்மதம் என்று போலியாக என்னால் நடிக்க முடியாது. இதனால் மற்ற மார்க்கத்தவரை விரோதிகளாக பார்க்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. இஸ்லாம் எனக்கு அதைப் போதிக்கவும் இல்லை. எனவே என்னை இஸ்லாமிய அடிப்படைவாதி என்று யாரும் சொன்னால் அது எனக்குப் பெருமையே!

நான் ஏன் குர்ஆனை இறைவனின் வேதம்தான் என்று கூறுகிறேன் என்பதற்கும் எனது முந்தய பதிவுகளில் விளக்கமும் கொடுத்துள்ளேன்.

//ஆக, டான் ப்ரவுன் கிறிஸ்தவத்தின் உருவாக்கத்தின் அடிப்படையில் பல
கிறிஸ்தவமற்ற மதங்களின் சேர்க்கை உள்ளதென்பதைக் கூறியுள்ளது, மூழ்கியுள்ள பெரும் பாறையின் ஒரு சிறிய நுனியே ஆகும்.//-Aravindhan

'வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள் இறைவனின் மீது உண்மையைத் தவிர வேறெதனையும் கூறாதீர்கள். மேரியின் மகன் ஏசு எனும் மஸீஹ் இறைவனின் தூதரும் அவனது கட்டளையால் உருவானவருமாவார். அக்கட்டளையை அவன் மேரியிடம் போட்டான்.அவனது உயிருமாவார்.எனவே இறைவனையும் அவனது தூதர்களையும் நம்புங்கள். கடவுள் மூவர் எனக் கூறாதீர்கள். விலகிக் கொள்ளுங்கள். அது உங்களுக்குச் சிறந்தது. அந்த இறைவனே ஒரே வணக்கத்திற்குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன்.வானங்களில் உள்ளவையும் உலகில் உள்ள அனைத்தும் அவனுக்கே உரியன. அந்த இறைவன் பொறுப்பேற்கப் போதுமானவன்.
-குர்ஆன் 4 : 171

இந்த ஒரு வசனமே பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது.

Unknown said...

தெளிவான விளக்கங்களுக்காக நன்றி சுவனப்ரியன்.
குறை சொல்வதை மட்டுமே தொழிலாகக் கொண்டவர்களுக்கும் அழகான பதிலளித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

Anonymous said...

///அடிமைப் பெண்கள் சம்பந்தமாக இன்றைய நடப்பை ஒப்பிட்டு நாம் பார்க்கக் கூடாது.அன்றைய அரபு சமுதாயம் பெண் குழந்தைகளை உயிரோடு புதைக்கக் கூடிய சமுதாயமாக இருந்தது. உலகிலேயே காட்டுமிராண்டிகள் நிறைந்த சமூகம் அன்றைய சமூகம். //

சுவனப்பிரியன் *காக்கா,

சும்மா குழப்புறீங்களே, அடிமைப் பெண்கள் சம்பந்தமாக இன்றைய நடப்பை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாதென்கிறீர்கள். ஆனால் அன்றைய காட்டரபிகளைத் திருத்துவதற்காக, அரேபியக் காட்டுமிராண்டிகளை நல்வழியில் கொண்டு வருவதற்காக உருவாக்கிய, கையையும், காலையும் வெட்டியெறியும் ஷாரியாவை மட்டும் 21ம் நூற்றாண்டிலும் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று அடம்பிடிப்பது மட்டுமல்ல, அவை சரியானவையெனவும் வாதிக்கிறீர்களே, ஏன்?

நான் முஸ்லீம்களை வெறுக்கவில்லை, எனக்கும் இஸ்லாத்தைப் பற்றித் தெரியும், இஸ்லாமியத் தமிழின் சாரல் என்னிலும் பட்டிருக்கிறது, இஸ்லாமியத் தமிழர்களின் அன்பிலும், நட்பிலும் திளைத்துள்ளேன், ஆனால் நான் கேட்பதெல்லாம், குரானில் கூறப்பட்டுள்ள பல விடயங்கள் அரபிக் "காட்டுமிராண்டிகளை" நல்வழிக்குக் கொண்டு வருவதற்காக, அக்கால அரேபிய சமுதாயத்துக்காகக் கூறப்பட்டவை.

அரேபியர்கள் காட்டு மிராண்டிகளாகத் திரிந்த போது நாங்கள், தமிழர்கள் நாகரீகமடைந்து வானளாவும் கோயில்களைக் கட்டினோம், அந்த தமிழ்ப் பாரம்பரியத்தில் வந்ததாகப் பெருமைப்படும் தமிழ் முஸ்லீம்கள் இஸ்லாத்தை தழுவிக் கொண்டதை ஏற்றுக் கொண்டாலும், காட்டரபிகளுக்காக 1400 ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லப்பட்ட அறிவுரைகளும், விதிகளும், தண்டனைகளும் "தமிழர்களாகிய" உங்களுக்கும் தேவை என்று சொல்வதைத் தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை? :(((

(*காக்கா = Brother/ endearing term):)

suvanappiriyan said...

Naina Mohamed said…

ஏக இறையோனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
அன்பு சகோதரர் சுவன்ப்பிரியன் அவர்களுக்கு
சகோதரர் அரவிந்தன் அவர்களுடைய ஏசு கிருஸ்து சம்பந்தமாக வெளியிட்ட பதிவுக்கு, தாங்களிட்ட பின்னூட்டத்தில் அத்தியாயம் 4 வசனம் 171வுடைய தமிழாக்கத்தை கோடிட்டுள்ளீர்கள்.

//'வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள் இறைவனின் மீது உண்மையைத் தவிர வேறெதனையும் கூறாதீர்கள். மேரியின் மகன் ஏசு எனும் மஸீஹ் இறைவனின் தூதரும் அவனது கட்டளையால் உருவானவருமாவார். அக்கட்டளையை அவன் மேரியிடம் போட்டான்.அவனது உயிருமாவார்.எனவே இறைவனையும் அவனது தூதர்களையும் நம்புங்கள். கடவுள் மூவர் எனக் கூறாதீர்கள். விலகிக் கொள்ளுங்கள். அது உங்களுக்குச் சிறந்தது. அந்த இறைவனே ஒரே வணக்கத்திற்குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன்.வானங்களில் உள்ளவையும் உலகில் உள்ள அனைத்தும் அவனுக்கே உரியன. அந்த இறைவன் பொறுப்பேற்கப் போதுமானவன்.
-குர்ஆன் 4 : 171//

மேல் சொன்ன தமிழ் மொழி பெயர்ப்பில் "அவனது உயிருமாவார்." என்று குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு கூறுவது, ஏசு இறைவனுடைய உயிராவார் என்ற அர்தத்த்தை தருகிறது. இறைவன் நம்மை பாதுகாப்பானாக!.

எனவே அந்த வார்த்தையை பின்வருமாறு திருத்தினால் சரியான அர்த்தமாகும்.
"(எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த)ஓர் ஆன்மா தான்"

இந்த தமிழாக்கமே சரியானதாக இருக்கும். இது ஏசுவும் இறைவனிடத்திருந்து வந்த ஆன்மா (உயிர்) தான் என்ற பொருள் தரும். அரபியில் varoohun (ஆன்மா) minhu (அவனிடமிருந்து) என்று தான் வருகிறது. நான் கூறியிருக்கும் தமிழாக்கம், ஜான் டிரஸ்ட் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

நீங்கள் எடுத்த மொழி பெயர்ப்பு எதிலிருந்து என்பதையும் தெரிய ஆவலாய் இருக்கிறேன்.

எனது கருத்தில் உண்மையிருக்குமானால், புகழனைத்தும் இறைவனுக்கே உரியது. தவறு இருந்தால் எனது சிறுமதியால் வந்த தவறாகும். அதை சுட்டிக் காடடினால் திருத்திக் கொள்வேன்.

நன்றியும், வாழ்த்துக்களுடன்
அன்பு சகோதரன்
நெய்னா முஹம்மது

suvanappiriyan said...

வருகை புரிந்து கருத்தைப் பதிந்த மரைக்காயர், சுல்தான், நைனா முகம்மது,ஆரூரன் ஆகியோருக்கு நன்றிகள் பல. நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது பதில் அளிக்கிறேன்.

suvanappiriyan said...

ஆரூரன் காக்கா!

//சும்மா குழப்புறீங்களே, அடிமைப் பெண்கள் சம்பந்தமாக இன்றைய நடப்பை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாதென்கிறீர்கள். ஆனால் அன்றைய காட்டரபிகளைத் திருத்துவதற்காக, அரேபியக் காட்டுமிராண்டிகளை நல்வழியில் கொண்டு வருவதற்காக உருவாக்கிய, கையையும், காலையும் வெட்டியெறியும் ஷாரியாவை மட்டும் 21ம் நூற்றாண்டிலும் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று அடம்பிடிப்பது மட்டுமல்ல, அவை சரியானவையெனவும் வாதிக்கிறீர்களே, ஏன்?//

அன்றைய அரேபிய காட்டுமிராண்டிகளிடம் அடிமைப்பழக்கம் இருந்தது. அங்கு இந்த சட்டம் தேவைப்பட்டது. நம் நாட்டில் அடிமை முறை கிடையாது. எனவே நம் நாட்டுக்கு அடிமை சட்டம் பொருந்தாது.

அந்த அரேபிய காட்டுமிராண்டிகளிடம் காணப்பட்ட கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற தீமைகள் நம்நாட்டிலும் உலகம் முழுவதும் இன்றும் காணப்படுகிறதே! இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைப் படுத்தப் பட்டதால் அரபு நாடுகளில் குற்றங்கள் குறைந்துள்ளது. நம் நாட்டில் இத்தகைய சட்டங்கள் இல்லாததால்தான் 100 முறை சிறை சென்றவன் 101 வது முறையும் மாமியார் வீட்டுக்கு செல்கிறேன் என்று சிறைக் கூடத்துக்கு செல்கிறான். இஸ்லாமிய சட்டங்களால் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் தரப்படுகிறதா இல்லையா நண்பரே!

//அரேபியர்கள் காட்டு மிராண்டிகளாகத் திரிந்த போது நாங்கள், தமிழர்கள் நாகரீகமடைந்து வானளாவும் கோயில்களைக் கட்டினோம்,//

வானளாவியக் கோவில்களைக் கட்டினீர்கள் சரி. கட்டியவுடன் அதற்காக மண் சுமந்து கல் சுமந்து வியர்வை சிந்தியவர்களை இன்று வரை தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைத்திருப்பது எந்த வகை நியாயம் சார்!

//தமிழ்ப் பாரம்பரியத்தில் வந்ததாகப் பெருமைப்படும் தமிழ் முஸ்லீம்கள் இஸ்லாத்தை தழுவிக் கொண்டதை ஏற்றுக் கொண்டாலும், காட்டரபிகளுக்காக 1400 ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லப்பட்ட அறிவுரைகளும், விதிகளும், தண்டனைகளும் "தமிழர்களாகிய" உங்களுக்கும் தேவை என்று சொல்வதைத் தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை? :(((// -Arooran

நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் இறைவனையும் இறுதி நாளையும் நம்பி இருந்தால் இறைவனுக்குக் கட்டுப்படுங்கள். இத்தூதர் முகம்மதுக்கும், உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள். ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை இறைவனிடமும் இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள். இதுவே சிறந்ததும் மிக அழகிய விளக்கமும் ஆகும்.
-குர்ஆன் 4 : 59

தமிழர்களாகிய றாங்கள் இஸ்லாத்தை ஏற்று அதை வாழ்விலும் கடை பிடிப்பதால் கண்ட நன்மைகளை வரிசையாக பட்டியலிடலாம். விரிவஞ்சி முடிக்கிறேன்.

suvanappiriyan said...

நைனா முகம்மது!

//எனவே அந்த வார்த்தையை பின்வருமாறு திருத்தினால் சரியான அர்த்தமாகும்.
"(எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த)ஓர் ஆன்மா தான்"

இந்த தமிழாக்கமே சரியானதாக இருக்கும். இது ஏசுவும் இறைவனிடத்திருந்து வந்த ஆன்மா (உயிர்) தான் என்ற பொருள் தரும். அரபியில் varoohun (ஆன்மா) minhu (அவனிடமிருந்து) என்று தான் வருகிறது. நான் கூறியிருக்கும் தமிழாக்கம், ஜான் டிரஸ்ட் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டது.//

ரூஹ் என்பதன் நேரடி பொருள் உயிர் என்பதே. அதை ஆன்மா என்றும் குறிப்பிடுகிறோம். இதே போன்று ஆதமை படைத்ததைப் பற்றி இறைவன் கூறும்போது

'ஆதமை நாம் சீர்படுத்தி எனது உயிரை அவருக்குள் நாம் ஊதும்போது அவருக்குப் பணிந்து விழுங்கள்' என்று கூறினோம்.
-குர்ஆன் 15 : 29

இறைவனின் உயிர் என்று தூதர் ஈஸா கூறப்படுவதால் அவரை இறைவனின் மகன் என்று கூற முடியாது. ஏனெனில் 'இறைவனின் உயிர்' என்றால் 'அவனுக்கு உடமையான உயிர்' என்பதுதான் பொருள். 'அவனது ஒரு பகுதியான உயிர்' என்று பொருள் இல்லை.

ஆதமைக் குறிக்கும் போதும் இதே வார்த்தையைத்தான் இறைவன் பயன்படுத்துகிறான். ஏசுவின் மகன் ஈஸா என்று கூறும் கிறித்தவர்கள், அதே வார்த்தையில் விளிக்கும் ஆதமை வசதியாக மறந்து விடுகிறார்கள். தந்தை இல்லாமல் ஏசுவும், தாய் தந்தை இல்லாமல் ஆதமும் சிறப்பாக படைக்கப்பட்டதால் இறைவன் இத்தகைய வார்த்தையை பயன்படுத்துகிறான் என்று விளங்கினால் குழப்பத்திற்கு இடமில்லை.

இறைவனே மிக அறிந்தவன்.

முத்துவாப்பா said...

//மரைக்காயர் சுவனப்பிரியன் இறைநேசன் போன்ற அடிப்படைவாதிகள்//

ஒரு அடிப்படையின் மீது தனது நம்பிக்கைகளை வாழ்க்கையை அமைத்துக் கொள்வதுதானே சிறந்த வழிமுறையாக இருக்க முடியும். காலத்திற்கேற்ப,சந்தர்ப்பத்திற்கேற்ப்ப தனது நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் மாற்றிக்கொள்வது எந்தவிதத்தில் சரி?

தனக்குப் பிடித்த முறையில் தனது ஆன்மீகத் தேடலை வடிவமைத்துக் கொள்ள வழியிருப்பதால்தானே குலதெய்வம் இஷ்டதெய்வம் என்று போய் தெய்வம் முப்பத்து முக்கோடியானது. இத்தகைய நிலைப்பாட்டில் ஒருவன் கிருத்தவத்தையோ இஸ்லாத்தையோ தனது வழியாக தேர்ந்தெடுப்பதில் இவர்களுக்கு ஏன் உடன்பாடில்லை? எல்லோரையும் இந்து என்ற வரையரைக்குள் கொண்டுவர எத்தனிப்பது வர்ணாசிரமத்தை திணிக்கவல்லாமல் வேறெது?

பழமைவாதம் என்பதும் இத்தகைய திரித்தலே. உண்மையில் தற்கால வழிபாட்டுமுறைகளில் மிக நவீனமானது இஸ்லாமே. மிகப்பழமையானது இந்து வழிபாட்டுமுறையே.

எனவே இவர்கள் அடிப்படைவாதிகள் என்று முஸ்லிம்களை கைகாட்டும்போது தாங்கள் எந்த அடிப்படையிலும் இல்லை என்பதை பிரகடனப்படுத்திக் கொள்கிறார்கள்.

suvanappiriyan said...

Muthu vappa!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

//உலக நாடுகள் அனைத்தும் ஒருமித்த தீர்மானத்திற்கு வரும் வரை முகமது நபி மட்டும் முடிவெடுப்பது நன்மை
முகமது முடிவு எடுத்ததுதான் குரானா?

அவர் ஜிபரயிலிடம் சொல்லி,அல்லாவிடம் கேட்டு இருக்க முடியாதா.

இறைவன் படத்த போது அடைமை முறை இல்லை எல்லோரும் ஒரு தாய் தந்தைக்கு பிறந்தவர் என்பீர்கள். அப்படி என்றால் அடிமை மூறை என்பது அல்லாவுக்கு விரோதமான் முறை இல்லையா.

அலாவிற்கு கூட அடிமை முறை தவறு என்று தோனற வில்லை. ஒரு வசனம் கூட இதுக்கு கொடுக்க முடியாதா?.பயக்காது. //