Followers

Wednesday, November 09, 2011

அத்வானியின் குண்டுவெடிப்பு நாடகமும் 39 பெண்களை மணந்த அய்ஸ்வாலும்!



அய்ஸ்வால் : மிசோரம் மாநிலத்தில், 39 பெண்களை மணந்து, 160 குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றாக வசித்து வருகிறார், ஒரு அதிசய மனிதர். வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் உள்ளது பக்தவாங் டியாங்னுவாம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சையோனா, 67. விவசாயம், மரச்சாமான் தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களை நடத்தி வரும் சையோனாவுக்கு, 39 மனைவிகள்.
முதல் மனைவியின் பெயர் ஜதியாங்கி, 71. இவருக்கு ஏழு குழந்தைகள். கடைசி மனைவி பெயர் வன்லால்சியாமி, 31. இவருக்கு, ஐந்து வயது மகள் இருக்கிறாள். சையோனாவுக்கு, 15 மருமகள்கள் உள் ளனர். 29 மகள்கள் திருமணமாகி, கணவருடன் தனியாக வசிக்கின்றனர்.
நான்கு மாடி கட்டடத்தில், 101 பெரியவர்களும், 59 சிறுவர்களும் ஒரே குடும்பமாக வசிக்கின்றனர். கடந்த, 2000ம் ஆண்டு சையோனா, கடைசி திருமணம் செய்து கொண்டார். ஒட்டு மொத்த குடும்பத்தினரும், ஒரே சமையல் அறையில் சமைத்து, ஒன்றாக சாப்பிடுகின்றனர்.
காலை உணவுக்கு 50 கிலோ அரிசியும், இரவு உணவுக்கு 35 முதல் 50 கிலோ தானியத்தையும் சமைக்கின்றனர். அத்துடன் ஒவ்வொரு நாளும் 25 கிலோ உருளைக்கிழங்கு, 15 கிலோ பருப்பு மற்றும் ஏராளமான அளவில் காய்கறிகள் இவர்களின் வீட்டிற்கு தேவைப்படுகின்றன. மாமிசம் சமைத்தால், ஒரு நாளைக்கு 45 கிலோ மாமிசம் சமைக்கின்றனர்.
வீட்டு வேலைகளில் யார், யார் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதை முதல் மனைவி தீர்மானிக்கிறார். வீட்டில் உள்ள ஆண்களை மற்ற வேலைகளுக்கு அனுப்புகிறார் சையோனா. வீடு கட்டுமானப் பணி மற்றும் தோட்ட வேலைகள் போன்றவற்றுக்கும் ஆட்களை அனுப்புகிறார்.

-தினமலர்
9-11-2011

------------------------------------------------------------------

அத்வானி கொலை முயற்சி வழக்கில் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டுச் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீன் என்று அழைக்கப்படும் பக்ருதீனை என்கவுண்டரில் சுட்டுக்கொல்ல காவல்துறை திட்டமிட்டுள்ளதாக நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் பாஜக-வின் தலைவர்களில் ஒருவரான அத்வானி ஊழல் எதிர்ப்பு ரத யாத்திரை வந்தார். அவர் அங்கிருந்து யாத்திரை செல்லும் வழியில் பைப் வெடிகுண்டு ஒன்று காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் கடந்த 1ம் தேதி அப்துல் ரகுமான் மற்றும் இஸ்மத் என்ற இரண்டு இளைஞர்களைக் கைது செய்தனர். இநக்ச் சதி செயலுக்கு இமாம் அலி கூட்டாளியாக கருதப்படும் போலீஸ் பக்ருத்தீன் என்பவரைக் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருவதாக கூறப்பட்டது. ஆனால் காவல்துறையினரின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில், சென்னை மண்ணடியைச் சேர்ந்த எம்.அப்துல்லா என்பவர் சென்னசுயர் நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு(ஹேபியஸ் கார்பஸ்) ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

"நானும், பக்ருதீனும் நண்பர்கள். ஒரு வழக்கு தொடர்பாக சென்னை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினரால் 2003ம் ஆண்டு கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். அதே வழக்கில் பக்ருதீன் என்ற போலீஸ் பக்ருதீனும் (வயது 35) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அந்த வழக்கு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றம் அளித்த ஜாமீன் அடிப்படையில் நான் வெளியே வந்துவிட்டேன்.

இந்த நிலையில், கடந்த 2ம் தேதி சென்னை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினரால் பாஜக மூத்த தலைவர் அத்வானி வரும் பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில் பக்ருதீன் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது அவர்களின் அலுவலகத்தில் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ளார். அவரைப் போலி என்கவுண்ட்டர் மூலம் சுட்டுக்கொலை செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இதுபற்றி நானும், எனது நண்பரும் இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழ்நாடு பொதுச்செயலாளருமான ஜெ.அப்துல் ரஹீமும், தமிழக அரசு மற்றும் டிஜிபி-க்குத் தந்தி அனுப்பி பக்ருதீனை உடனடியாக விடுதலை செய்யும்படி கோரினோம். ஆனால் அவர் விடுதலை செய்யப்படவுமில்லை. இதுவரை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுமில்லை.

காவல்துறையினரின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுக்கு எதிரானது. எனவே சட்ட விரோத காவலில் சிறை வைக்கப்பட்டுள்ள பக்ருதீனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை வெளியில்விட அனுமதிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்."

என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல்
இந்நேரம்.காம்
http://www.inneram.com/2011110920067/police-palnning-for-fake-encounter-in-advani-case

------------------------------------------------------------

குஜராத் மாநிலம் சர்தார்புரா பகுதியில் கடந்த 2002-ம் ஆண்டு கலவரத்தில் 33 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 31 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2002-ல் கோத்ராவில் ரயில் எரி்ப்பு சம்பவத்தை அடுத்து நடந்த கலவரத்தில், சர்தார்புரா பகுதியில் 33 பேர் எரித்துக் கொல்லப்பட்டார்கள். அதுதொடர்பாக நடந்த விசாரணை முடிவடைந்து, இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 73 பேரில், 42 பேரை விடுவித்த நீதிமன்றம், 31 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்துள்ளது.
குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்ட 31 பேர் மீது, கொலை, கொலை முயற்சி மற்றும் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிற விதிகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது அவர்கள் மீதான கிரிமினல் சதித்திட்டக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.

பின்னணி என்ன?

கடந்த 2002-ம் ஆண்டு, பிப்ரவரி 27-ம் தேதி, கோத்ராவில் நடந்த ரயில் எரிப்பு சம்பவத்தில், 59 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, குஜராத் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கலவரம் ஏற்பட்டது. சர்தார்புராவில் நடந்த கலவரத்தில், சிறுபான்மை சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் ஒரு கும்பல் கலவரத்தில் ஈடுபட்டது. உயிருக்கு பயந்து, அப்பகுதி மக்கள் இப்ராஹிம் ஷேக் என்பவர் வீட்டில் பதுங்கியிருந்த நேரத்தில், கலவரக் கும்பல் அந்த வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. அதில், 22 பெணஅகள் உள்பட 33 பேர் எரித்துக் கொல்லப்பட்டார்கள்.

இந்த வழக்கில், கடந்த 2009-ம் ஆண்டு, குற்றங்கள் பதிவு செய்யப்பட்ட பிறகு, 73 பேருக்கும் எதிராக விசாரணை துவங்கியது. சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், கோத்ரா ரயில் எரி்ப்பு சம்பவத்தை அடுத்து, சில உள்ளூர் தலைவர்கள் அந்தத் தாக்குதலுக்குத் திட்டமிட்டதாகவும் விசாரணை அமைப்பு குற்றம் சாட்டியது.

கலவரத்துக்கு முன்பு, குற்றவாளிகள் ஆயுதங்களை விநியோகித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், தாங்கள் இந்த வழக்கில் தவறாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், வெளியில் இருந்து வந்த நபர்கள்தான் வன்முறையில் ஈடுபட்டதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர்கள் உள்பட 112 பேர் சாட்சியம் அளித்திருக்கிறார்கள்.

-பிபிசி தமிழ்ச் சேவை
9-11-2011

10 comments:

VANJOOR said...

வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

*****
ஒட்டுமொத்த இந்திய இஸ்லாமியர்களையும் கொன்று குவிக்க அறிவாளியொருவர்……. விடியோ விளக்கம்.
****


.

suvanappiriyan said...

வாஞ்சூர் பாய்!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

வேதம் கோபால்!

//When India was invaded by foreign powers, the Brahmins proved to be a great obstacle, particularly against religious conversion.
Muslim rulers made special efforts to convert or even kill Brahmins. They destroyed Hindu temples in order to deprive the Brahmins, who were mainly temple priests, of their influence and their income.//

வாரணாசி விசுவநாதர் ஆலயம்! -ஒளரங்கஜேப்

வங்காளத்திற்குப் பயணம் செய்து கொண்டிருந்த ஒளரங்கஜேப் வாரணாசி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது ஆட்சியின் கீழிருந்த ஹிந்து ராஜாக்கள் ஒளரங்கஜேப்பிடம் 'பயணத்தை ஒரு நாள் நிறுத்தித் தங்கிச் சென்றால் அந்த நாளில் எங்களது ராணிகள் கங்கையில் குளித்து விட்டு விசுவநாதரை தரிசனம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்'என்று கோரிக்கை வைத்தனர்.

ஹிந்து அரசர்களும் ராணியரும் கங்கைக் கரையில் தங்கி விசுவநாதர் ஆலயத்தில் வழிபட்டுச் செல்ல வேண்டுமென்ற கோரிக்கையை தயக்கமின்றி ஏற்றுக் கொண்டவர் ஒளரங்கஜேப்.

அதனைத் தொடர்ந்து ஒளரங்கஜேப்பின் அன்றைய வழிப்பயணம் நிறுத்தப் பட்டது. வாரணாசிக்கு இடையேயான ஐந்து மைல்தூரம் முழுவதும் முகலாயப் பெரரசின் இராணுவத்தினர் நிறுத்தப் பட்டார்கள்.

இந்து ராணிகள் பல்லக்குகளில் சென்று புனித கங்கையில் நீராடினர். காசி விசுவநாதர் ஆலயத்தில் வழிபட்டார்கள். (ஒளரங்கஜேப் ஆட்சியில் அவரவர் விருப்பப்படி வணங்கிட அனுமதிக்கப் பட்டனர் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்)

பூஜைகள் முடிந்தபின் ஹிந்து ராணிகள் திரும்பினர். ஆனால் கட்ச் சமஸ்தானத்தின் ராணி மட்டும் திரும்பவே இல்லை. உடனே அந்த ராணியைத் தேடிக் கண்டு பிடிக்க முழு அளவிளான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனாலும் ராணியைப் பற்றிய தகவல் எதுவும் தெரியாததால் ஒளரங்கஜேப் ஆத்திரமடைந்தார். ராணியைத் தேடிக் கண்டு பிடித்திட தனது மூத்த அதிகாரிகளை அனுப்பி வைத்தார்.

அதிகாரிகள் தீவிரமாகத் தேடுகையில் விசுவநாதர் ஆலயத்தில் உள்ள ஒரு சிலை மட்டும் அசைந்தது. அந்தச் சிலையை அசைத்த போது பாதாளச் சுரங்கம் ஒன்றிற்குச் செல்லும் படிக் கட்டுகள் காணப்பட்டன. உள்ளே இறங்கிப் பார்த்தபோது அங்கே காணாமல் போன ராணி அவமானப் பட்ட நிலையில் அழுது கொண்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது.

நடந்த சம்பவம் குறித்து ஹிந்து ராஜாக்கள் தங்களது எதிர்ப்பை உரத்த குரலில் வெளியிட்டார்கள். இந்த அக்கிரமத்திற்கு தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்று ஒளரங்கஜேப்பிடம் கோரினார்கள்.

அந்த இடத்தின் புனிதத் தன்மை மாசு படுத்தப்பட்டு விட்டதை உணர்ந்ததால் ஒளரங்கஜேப் விசுவநாதர் விக்கிரகத்தை வேறு இடத்திற்கு மாற்றிட உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அந்தக் கோவில் தரைமட்டமாக்கப் பட்டது. அந்தக் கோவிலின் மடாதிபதி கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார்.

ஆதாரம்: பிஷம்பர்நாத் பாண்டே, 'இஸ்லாமும் இந்திய கலாசாரமும்'
Page : 70,71

இதனை தஸ்தாவேஜூகளின் சான்றுகளுடன் டாக்டர் பட்டாபி சீதாராமையா (The Feathers and the Stones)என்ற தனது நூலிலும் பாடனா அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் பி.எல்.குப்தாவும் இந்த நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டுள்ளனர். மேற்கண்ட அவமானகரமான துயரச் சம்பவம் குறித்து பி.என்.பாண்டே என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

P.N.Pande

“Aurangzeb came to Know of it. He was very much enraged. He sent his senior officers to search for the Rani. Ultimately they found that the statue of Ganesh: which was fixed in the wall was a movable one. When the statue was moved. They saw a flight of stairs that led to the basement. To their horror, they found the missing Rani dishonoured and crying. The basement was just beneath Lord Vishwanaths seat. The Rajas expressed their vociferous protests. As the crime was heinous the Rajas demanded examplary action. Aurangzeb ordered that as the sacred precinets has despoiled. Lord Viswanath may be moved to some other place. The temple be razed to the ground and the Mahant be arrested and punished.”

P.N.Pande, Islam And Indian Culture, Page 55

suvanappiriyan said...

//When India was invaded by foreign powers, the Brahmins proved to be a great obstacle, particularly against religious conversion.
Muslim rulers made special efforts to convert or even kill Brahmins. They destroyed Hindu temples in order to deprive the Brahmins, who were mainly temple priests, of their influence and their income.//

மொகலாயர்களை அன்னியர்கள் என்று சொலவதே ஒரு வகையில் தவறு. ஏனெனில் அவர்கள் இந்திய பெண்களை மணந்து இந்திய ரத்தத்தோடு அனேகம்பேர் கலந்து விட்டனர். பாபரும், ஹூமாயூனும் வேண்டுமானால் அந்நியர்களாக இருக்கலாம். அவர்களின் வழித்தோன்றல்கள் இந்தியர்களாகவே கருதப்பட வேண்டும்.

இவர்கள் முஸ்லிம்கள் என்பதற்காக இவர்கள் செய்த பல தவறுகளை நியாயப்படுத்த இங்கு வரவில்லை. தங்களின் அரியணையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பல தவறுகளை நம் சேர சொழ பாண்டியர் செய்தவாறு செய்திருக்கிறார்கள் என்பதையும் இங்கு பதிய வைக்கிறேன்.

இந்து இளவரசியை மணந்த அக்பர்!

முகலாயப் பேரரசர் அக்பர் ஆஜ்மீருக்குச் சென்று திரும்புகையில் சாம்பர் (Sambhar) என்ற ஊரில் ஆம்பர் (Ambar)மன்னர் ராஜா பார்மலின் மகளை இந்து மரபுப்படி திருமணம் செய்தார். அக்பரின் முகலாய வழியும், இராஜபுத்திர வழியும் இத்திருமணத்தால் ஒன்று சேர்ந்தது.

க.வெங்கடேசன், அக்பர்,சென்னை.
1972 –Page 47,48

ஷா பாய் என்று ஜெய்ப்பூர் ஆவணங்களில் அழைக்கப்படும் இராஜபுத்திர இளவரசியை, அக்பரை திருமணம் செய்து கொண்டதற்கு பின் மரியம்-உஸ்-ஸமானி (Mariam-uz-zamani) என்று அழைக்கப்பட்டார்.

Ashirbadilal Srivastava, Akbar The Great, volume 2, Agra, 1973, Page 59.

******************************************

இந்து இளவரசிக்குப் பிறந்த ஜஹாங்கீர்!

முகலாயப் பேரரசர் அக்பரின் வாரிசான ஜஹாங்கீர் இராஜபுத்திர ராணி ஷாபாய் என்ற மரியம் உஸ் ஸமானிக்குப் பிறந்தவர். ஓர் இந்துப் பெண்ணுக்குப் பிறந்தவர் என்பதால் முகலாயப் பேரரசில் ஜஹாங்கீர் அரசுரிமையை இழக்கவில்லை. அக்பருக்குப் பின் ஜஹாங்கீரே அரசப் பொறுப்பிற்கும் வந்தார்.

“Already earlier in the year 1562, Akbar had married a Rajput Princess if Jaiour, who was to become the mother of his successor Jahangir”.
Laurence Binyon, Akbar, Edinburgh, 1932, page 59.

********************************************

இராஜபுத்திர இளவரசிக்குப் பிறந்த ஷாஜஹான்!

முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் மார்வாடா மன்னர் ராஜா உதயசிங்கின் மகளை திருமணம் செய்தார். அந்த இராஜபுத்திர இளவரசி ஜகத்கஸாயினி என்பவரின் வயிற்றில் பிறந்தவர்தான் முகலாயப் பேரரசர் ஷாஜஹான்.

ஷாஜஹானின் தந்தையார் ஜஹாங்கீர், அக்பருக்கும் இராஜபுதன இளவரசிக்கும் பிறந்தவர். ஜஹாங்கிருக்கும் இராஜபுதன இளவரசிக்கும் பிறந்தவர் சாஜஹான். ஷாஜஹானின் உடலில் ஓடிய ரத்தத்தில் முகலாய ரத்தத்தை விட இந்திய ரத்தமே அதிகமாக இருந்தது என்பர் வரலாற்றாசிரியர் லேன்பூல்.

குலாம் ரசூல், இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள், தஞ்சாவூர்.
1998, page 461.

“Like his father Shah-jahan was the offspring of a union with a Rajput princess, a daughter of the proud Raja of Marwar, and had more Indian than Mughal blood in his veins.”

Stanley Lane-poole, Aurangzib, New Delhi, Page 14.

************************************

ஹிந்து ராணியின் பேரன் ஒளரங்கஜேப்!

இத்தகைய ஷாஜஹானுக்கு மகனாகப் பிறந்த மஹா சக்ரவர்த்தியாகிய ஒளரங்கஜேப் ஒரு ஹிந்து ராணியின் பேரனாயிருந்தும் மதத் துவேஷிகள் அவரையும் சும்மா விடவில்லை. அபாண்டப் பழிகளை அவர் மீது அடுக்கிக் கொண்டே செல்கிறார்கள் என்பதனை அறிகிறபோது வேதனையான விசித்திரமாகத்தான் இருக்கிறது. அது மட்டுமா?

நவாப் பாயின் கணவர் ஒளரங்கஜேப்!

ஒளரங்கஜேப்புக்குப் பின் முகலாயப் பேரரசில் அரியணை ஏறிய பகதூர்ஷாவின் தாயார் நவாப் பாய் (Nawab Bai)காஷ்மீர் இந்து அரசரின் மகள். (She was the daughter of Raja Raju of the Rajuari State of Kashmir) இராஜ புதன வழியில் வந்த நவாப் பாயின் (ரஹ்மத்துன்னிஷா) கணவர் யார் தெரியுமா? மாமன்னர் ஒளரங்கஜேப்தான்.

பரூக்கி, இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள்,
page 545.

உதயபுரி மஹல் அல்லது பாய் உதயபுரி (Udai Puri Mahal) என்ற மனைவியும் ஒளரங்கஜேப்பிற்கு இருந்ததாகச் சொல்லப் படுகிறது. (Kam Baksh) காம்பக்ஸ்என்ற ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தவர் இவர்தான்.

டி.எப்.ஆர். மஆலிசாஹிப், முஸ்லிம் மன்னர்களின் இந்து ராணிகள், பத்ஹூல் இஸ்லாம்.
1957, November, Chennai.

suvanappiriyan said...

வேதம் கோபால்!

//When India was invaded by foreign powers, the Brahmins proved to be a great obstacle, particularly against religious conversion.
Muslim rulers made special efforts to convert or even kill Brahmins. They destroyed Hindu temples in order to deprive the Brahmins, who were mainly temple priests, of their influence and their income.//
சீக்கியர்கள் தங்கள் மத நடவடிக்கைகள் தவிர அரசியலில் தீவிரம் காட்டிப் பேரரசருக்கு எதிராக ஆலோசனைகளும் ஆயுதங்களும் தந்து கிளர்ச்சிக்கு உதவிக்குக் காரணமான குருதேஜ பஹ்தூர் கொல்லப்பட்டார், எனவே சீக்கியர்கள் எதிரி.

மூடப்பழக்க வழக்கங்களைத் தடுக்கும்பொருட்டு ஜோதிடம் பார்த்தல், பஞ்சாங்கம் தயாரித்தல், குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் தீண்டாமை போன்ற வைகளுக்குத் தடை விதித்ததார். எனவே ராஜபுத்திரர்கள் எதிரி.
காட்டுமிராண்டிகளாக வாழ்ந்து பொது மக்களுக்கும் சமூகத்திற்கும் தொல்லை கொடுத்த 'சத்நாமிகள் ' என்ற கூட்டத்தாரை அழித்ததால் அந்த இனம் பாதுஷாவுக்கு பரம்பரை எதிரி.

மராட்டியர்களின் நாயகனாகக் கருதப்பட்ட சிவாஜியை கைது செய்து சிறையில் அடைத்ததார். அவர் தந்திரமாகத் தப்பிச்சென்று அவுரங்கசீப்புக்கு எதிராக மராட்டிய மக்களிடம் பிரச்சாரம் செய்தகாரணத்தினால் மராட்டியர்கள் எதிரி.

ஷியா முஸ்லிம்கள் தங்கள் உடல் முழுவதும் அலகுகள் குத்திக்கொண்டும் சாட்டையால் தங்களை அடித்துக்கொண்டும், மார்பில் அடித்துக்கொண்டும் மொஹரம் பண்டிகையைக் கொண்டாடினர். அந்த பண்டிகை ஊர்வலத்திற்கு தடை விதித்ததால் ஷியா முஸ்லிம்கள் அவுரங்கசீப்புக்கு எதிரி.
(முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம் - கரைகண்டம் கி. நெடுஞ்செழியன்)

பிற மதத்தவரின் பிரார்த்தனைக்கு அனுமதி!

'நமது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்த நாளில் பனாரஸிலும் அதன் சுற்றுப் புறங்களிலுமுள்ள இந்துக் குடிமக்கள் சிலரால் கொடுமைப் படுத்தப் படுவதாகவும் புராதனமான இந்துக் கோவில்களின் பொறுப்பிலுள்ள பிராமணர்கள் அங்கிருந்து வெளியேறும்படி அச்சுறுத்தப் பட்டு மிரட்டலுக்கு ஆளாகி அதனால் அந்த வகுப்பினர் மன வேதனைக்கு ஆளாகி இருப்பதாகவும் நமது மேன்மைக்குரிய புனித அரசவைக்குத் தகவல் வந்துள்ளது. எனவெ இந்த அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. பிராமணர்களையோ மற்ற இந்து குடிமக்களையோ சட்ட விரோதமாகத் தலையிட்டுத் தொல்லைக்குட்படுத்தக் கூடாது. அவர்கள் தங்கள் தொழிலைத் தொடர்ந்து செய்து வரவும் இறைவன் அளித்த இந்த வரமான இந்த சாம்ராஜ்யம் நிலைக்கும் வகையில் அவர்கள் சமாதானம் நிறைந்த மனதுடன் பிரார்த்தனைகள் நடத்தவும் முன்பு போலவே அனுமதிக்க வேண்டும். இந்த ஆணையை அவசரமானதாக மேற்கொண்டு இது வந்து சேர்ந்ததும் அதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும்.'
இவ்வாறு ஒளரங்கஜேப்பின் பனாரஸ்ஃபார்மன் என்ற சாசனத்தில் கூறப்பட்டுள்து.

பி.என்.பாண்டே, இஸ்லாமும் இந்திய கலாச்சாரமும், டாயல் மொழி பெயர்ப்பு,சென்னை.
1987, Page 61.


'சதி'யை நிறுத்தியவர் ஒளரங்கஜேப்!

ஆதரவற்ற துர்பாக்கியவதியான ஒரு பெண்ணை 'சதி' (உடன்கட்டை ஏறுதல்) உயிருடன் எரிக்க முயன்றனர். ஆடசித் தலைமை வகித்த ஒளரங்கஜேப் இதை அறிந்து அந்த கொடுமையை தடுத்து நிறுத்தினார். அதோடு எந்த ஓர் இந்துப் பெண்ணையும் உயிருடன் எரிக்க அதிகாரிகள் அனுமதி அளிக்கக் கூடாதென்றும் உத்தரவு பிறப்பித்தார்.

இதனை அறிந்த உயர் ஜாதி இந்துக்கள் தங்கள் மத விஷயத்தில் ஒளரங்கஜேப் தலையிடுவதாக புகார் கூறினர். 'உயிருள்ள ஒரு பெண்ணை எரிப்பது அவர்களுடைய மத நம்பிக்கை என்றால் அத்தகைய மோசமானச் செயலை செய்திட அனுமதி அளிக்காமலிருப்பதே தன்னுடைய நம்பிக்கை என்று ஒளரங்கஜேப் உறுதியாக நின்றார். உயர் பிரிவைச் சேர்ந்தவர்கள் பலரது எதிர்ப்பை மீறிதாம் இட்ட கட்டளையை நிறைவேற்றிடவும் பணித்தார். பலவந்தமாக உடன் கட்டை ஏற்றப்படும் பெண்களின் நகை, ஆபரணங்களைப் பெற்று அனுபவித்து வந்தவர்கள் பாதிப்பிற்குள்ளாயினர்.

விளைவு, மதத் தலைவர்கள் ரகசிய இடத்தில் ஒன்று கூடினர். ஒளரங்கஜேப் அரசைக் கவிழ்க்க சதி செய்தனர். அவரைக் குறித்து ஹிந்து மத விரோதி என பொய்களைப் புனைந்துரைத்தனர்.

ஜோசப் இடமருகு, பிராமண மதம், (மலையாளம்) தமிழில் த.அமலா, சென்னை 1995, Page 227
Premnath Bazaz, The Role Of Bhagavadgita in Indian History, New delhi 1975, Page 339

எனது தேசத்து ஏழைகளுக்கு......

ஒரு சமயம் புனித மக்கா நகரத்தின் ஷெரீப் பொருள் உதவி வேண்டி தனது தூதரை ஒளரங்கஜேப்பிடம் அனுப்பியபோது அவரக்கு பொருளுதவி செய்ய மறுத்ததோடு 'எனது தேசமான இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அந்தப் பணத்தை வினியோகிக்க்க் கூடாதா? என்று கேட்டு விட்டு 'இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான்' என்றும் அந்தத் தூதரிடம் பதில் தந்தவர் ஒளரங்கஜேப்'

டி.என். ராமச்சந்திரன், நமது சரித்திர பாரம்பரியம், நாகப்பட்டினம்.
Page 80, 81.

VANJOOR said...

CLICK THE LINK AND SEE VIDEO.

>>>
ஒளரங்கசீப் - இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் வரலாறு
<<<<

CLICK THE LINKS AND READ.


>>> அவுரங்கசீப்.... ? !!! இந்து மத்தினர் மீது விதித்த ( ஜஸியா ) வரி. <<<

>>> ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? கண்காட்சி பெயரால் மதவெறி! <<<

.

suvanappiriyan said...

நோ!

//இந்த 72 கன்னிகள் விடயத்தில் அந்த காலத்து மொழிகள் இவை ஆதலால் அதன் அர்த்தம் வேறு எதையோ குறிக்கும், ஆதலால் அதை சீரியசாக எடுத்து கொள்ள கூடாது என்று சொன்னால் அது வேறு விடயம். அதை பற்றி பேச வேண்டியதே இல்லை!//

'அவர்களும் அவர்களின் பெற்றோர் மனைவியர் மற்றும் சந்ததிகளில் நல்லோரும் நிலையான சொர்க்க சோலைகளில் நுழைவார்கள்.'
-குர்ஆன் 13:23

இங்கு இறைவன் நல்லறம் புரிந்து தனது குடும்பத்தவரையும் நல் வழியில் கொண்டு சென்ற ஒரு மனிதன் தனது குடும்பத்தாரோடு சொர்க்கத்தில் நுழைவதாக கூறுகிறான். எனவே ஹூருல் ஈன்கள் என்ற படைப்பு எப்படி பட்டது? அந்த படைப்பின் சேவை சொர்க்கவாசிகளுக்கு எவ்வாறு இருக்கும் என்பதை இறைவனே அறிவான். அல்லது சொர்க்கத்துக்கு சென்றவர்கள்தான் நம்மிடம் வநது சொல்ல முடியும். அதுவும் தற்போதைக்கு முடியாத ஒன்று. ஒரே வழி ஹூருல் ஈன்கள் என்றால் அரபி அகராதியில் என்ன வருகிறது என்று பார்ப்போம்.

Mates - தோழமையானவர்கள் அல்லது துணையானவர்கள்

Modest Gaze - அடக்கமான பார்வையுடையவர்கள்

Most Beautiful of Eye - அழகிய கண்களையுடைவர்கள்

Well-matched - மிகவும் பொருத்தமான துணையாளர்கள்

Neither man nor invisible being will have touched ere then – களங்கமற்றவர்கள்

வெறும் பாலியல் நோக்கிலேயே நாம் பார்ப்பதால் இந்த வசனங்கள் நமக்கு வித்தியாசமாக தெரிகிறது. 'ஹூருல் ஈன்கள்' என்ற அரபி பதத்துக்கு அரபி அகராதியும், குர்ஆன் விரிவுரையாளர்களும் தரும் விளக்கமே மேலே நாம் பார்ப்பது. அவர்கள் எந்த வகையில் சொர்க்கவாசிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பதை நம்மால் கற்பனை செய்ய முடியாது. அது பெண்ணாகவும் இருக்கலாம், சொர்க்கத்துக்கென்றே பிரத்தியேகமாக படைக்கப்பட்ட படைப்பாகவும் இருக்கலாம். அவர்கள் யாரென்று அறியும் ஆவல் அதிகரித்தால் சொர்க்கத்துக்கு செல்ல என்ன அமல்களை செய்ய வேண்டுமோ அதை செய்து அதனை பெற்று 'ஹூருல்ஈன்களை' நமது கண்களால் பார்ப்போம். பலரது கேள்விக்கு அன்றுதான் விடை கிட்டும்.

என்ன தருமி சார்? இந்த உலகில் நற்காரியங்கள் செய்து சொர்க்கத்தை அடைய நான் ரெடி! நீங்க ரெடியா?

suvanappiriyan said...

மா!

//திருக்குறள்,ஆத்திச்சூடியை விட உயற்வான அல்லது நிகரான அற்ங்கள் திருக்குரானில் உள்ளது.இருந்தால் நிருபிக்கவும் அது பகவத்கீதையாகயிருந்துலும், பைபுளாகயிருந்தாலும் சரி தலைவணங்கி ஏற்றுக்கொள்கின்றேன்.//

தமிழ் காப்பியங்கள் இலக்கியங்களிலேயே மிகவும் உயர்தரமாக வைத்துப் பார்க்கப்பட வேண்டியவற்றுள் ஒன்று நமது திருக்குறள். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால் இங்கும் அறிவியலோடு மோதக் கூடிய ஒன்றிரண்டு குறள்கள் வந்து விடுகின்றன. திருவள்ளுவர் தூதராகவோ திருக்குறள் வேதமாகவோ அந்த காலத்தில் இருந்திருக்கலாம். வழக்கம் போல் சில இடைச் செருகல்களும் ஏறபட்டிருக்கலாம். இறைவனே அறிவான். இனி அந்த குறள்களைப் பார்ப்போம்.

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்பு கொண்டற்று
115 - அதிகாரம்: களவியல்

நான் என் காதலரைக் கண்டது ஒருநாள் தான். ஆனால் அதனால் உண்டான அலரோ, நிலாவைப் பாம்பு கௌவியது போல் என் உடல்எங்கும் பரவியுள்ளது.

இந்த இடத்தில் வள்ளுவர் சிவன் தலையைக் கற்பனை செய்து அன்றைய மக்களின் கிரகணக் கதையை தன் குறளில் எடுத்தெழுதியுள்ளார். அந்த கால மக்களின் நம்பிக்கைக்கு அது சரி. இப்பொழுதும் அந்த கருத்தை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா?

இது போன்று பல குறள்களை என்னால் காட்ட முடியும்.


இப்னு சாகீர் ;- சீரியஸாக விவாதித்துக் கொண்டிருக்கும் போது இடையில் இந்த காமெடி பீஸ் வேற... ஒளிந்து கொண்டு எழுதுவது நரேனாகவோ அல்லது சார்வாகனாகவோ இருக்க வாய்ப்புண்டு நடத்துங்கள்......:-)

தருமி!

//உங்கள் வசனங்கள் -மிக வெளிப்படையான வசனங்கள் - உள்ளன. பின்னும் ஏன் மெழுகுகிறீர்கள்?!//

முன்பே நான் சொன்னது போல் அது பெண்ணாகவும் இருக்கலாம். சுவனத்தில வருபவருக்கு பரிசாகவும் தரலாம். அதை அடைய முஸ்லிம்கள் விருப்பமும் படலாம். இதில் என்ன தவறைக் கண்டீர்கள்?

UNMAIKAL said...

CLICK AND READ THE LINKS


1. உடலுறவுக்கு மோட்சத்தில் கட்டுபாடில்லை. தட்டுபாடில்லை. வேண்டும் எண்ணிக்கைகளில் உனக்கு அனுபவிக்க தேவடியாள்கள் வேண்டுமா? நீ விரும்பிய பெண்கள் வேண்டுமா?


2. பெண்களுக்கு மோட்சம் கிடையாது. அப்படி வேண்டுமென்றால் அவள் இன்னொரு பிறவியெடுத்து ஆணாய்ப் பிறந்தால்தான் மோட்சம் கடவுளுக்கு வேலை என்ன?. உடலுறவுக்கு தேவடியாள்கள் விரும்பிய ஸ்த்ரிகள் நிறைய பேரை மோட்சலோகத்தில் அங்கு போனவன் படைத்துக் கொள்வான்.



3. நள்ளிரவிலும் நாயகியை சேரவேண்டும் என்ற ஆசை கடவுள் ரங்கநாதனுக்கு வந்தது. உடனே தன் அங்கத்தை (ஆண் குறி மட்டும் விர்ரென பறந்துபோய்) ரங்கநாயகி சன்னதிக்குள் அனுப்பி இச்சையை தீர்த்துக்கொண்டு விடுகிறார்



4.
வருடாவருடம் தாசிகளுடன் இரவு முழுதும் தங்கியிருந்துவிட்டு திரும்பும் கடவுள்



5.
32 கன்னிப்பெண்கள் கர்த்தருக்கு பங்கா?



6.
பைபிள் “எசேக்கியேல் ” “அதிகாரம் 23.

5 அகோலாள் என்னுடையவளாயிருக்கும் போது சோரம்போனாள்.

5.And Aholah played the harlot when she was mine; and she doted on her lovers, on the Assyrians her neighbours, - அடங்காத‌ காம வேசிகள் .



7.
கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி


.

naren said...

@சுவனப்பிரியன்!!!

ஆச்சரியம், தினமலரை படிப்பதற்கு. அது தின”மலம்” என்றல்லவா நினைத்தேன்.