Followers

Friday, November 25, 2011

ரம்மி சூதாட்டமல்ல! அது அறிவை வளர்க்கும் விளையாட்டு!





சென்னை : "ரம்மி" சூதாட்டம் அல்ல என்று சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. சென்னை தி.நகரில் இயங்கி வரும் மகாலெட்சுமி கலாச்சார மையத்தில், ரம்மி விளையாடியதாக 59 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்க‌ளை விடுதலை செய்யக் கோரி அந்த மையம் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ராஜேஸ்வரன், ரம்மி சூதாட்டமல்ல என்றும், அது அறிவை வளர்க்கும் விளையாட்டு என்று தீர்ப்பு அளித்துள்ளார். அதேபோல், ரம்மி விளையாட்டின் போது பந்தயம் கட்டி விளையாடுவது சட்டத்திற்கு புறம்பானது அல்ல என்றும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- பத்திரிக்கைச் செய்தி
25-11-2011

பம்பாய் முதலான பெரு நகரங்களில் பெண்களை விலைமாதர்களாககி அதற்கு சட்ட அதிகாரமும் கொடுத்தாகி விட்டது. அடுத்து அரசாங்கமே சாராய கடைகளை நடத்தி சாமான்ய குடிமக்களை நிரந்தர குடி(போதை) மக்களாக மாற்றியாகி விட்டது. சூதாட்டம் ஒன்று தான் பாக்கியாக இருந்தது. இன்று அதனையும் சட்டபூர்வமாக்கி நமது நாடு சகல சௌபாக்கியங்களையும் பெற்ற ஒரு வல்லரசாக மாறி விட்டதை நினத்து ஒவ்வொரு இந்தியனும் பூரிப்படைய வேண்டும்.


நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு என்ன குழந்தை பிறக்கும் என்பது தொடர்பாக ரூ.150 கோடிக்கு சூதாட்டம் நடக்கிறது. இதில் மும்பை தாதாக்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிரிக்கெட் வீரர்கள் மீதுதான் இதுவரை கோடிக்கணக்கில் சூதாட்டம் நடந்தது. இம்முறை சற்று வித்தியாசமாக சூதாட்டம் நடக்கிறது. கிரிக்கெட் வீரர்களுக்கு பதிலாக இதில் சிக்கி இருப்பவர் ஐஸ்வர்யா ராய். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவருக்கு 11.11.11 தேதியில் (இன்று) தான் குழந்தை பிறக்கும் என்று பலர் கூறி உள்ளனர். ஆனால் சிலர் இதில் மாறுபடுகின்றனர்.
குழந்தைகள் தினமான நவம்பர் 14ம் தேதிதான் குழந்தை பிறக்கும் என்று கூறி வருகின்றனர். எந்த நாளில் குழந்தை பிறக்கும் என்பதை வைத்து மும்பை தாதாக்கள் சூதாட்டம் நடத்துகின்றனர். இதுதவிர ஐஸ்வர்யாவுக்கு ஆண் குழந்தை பிறக்குமா? பெண் குழந்தை பிறக்குமா? என்ற பந்தயமும் சூடுபிடித்துள்ளது. இதை மையமாக வைத்து ரூ.150 கோடிக்கு உலகம் முழுவதும் சூதாட்டம் நடக்கிறதாம். மும்பை தாதாக்கள்தான் இதில் அதிகம் ஈடுபாடு காட்டி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒரு சிலர் ஐஸ்வர்யாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டரிடம் தொடர்பு கொண்டு, ‘ஐஸ்வர்யாவுக்கு எப்போது, என்ன குழந்தை பிறக்கும் என்று தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களிடம் பேசுவதை டாக்டர்கள் தவிர்த்து வருகின்றனர். ‘ஐஸ்வர்யாவை மையமாக வைத்து கோடிக்கணக்கில் சூதாட்டம் நடப்பது பற்றி தகவல் வந்துள்ளது. இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை கண்காணித்து வருகிறோம் என்று மும்பை போலீசார் கூறி உள்ளனர்.
-இணைய செய்தி

ஒரு மனிதனுக்கு சிந்தனை சுதந்திரம் அளவுக்கதிகமாக கொடுத்தால் எங்கு போய் விடும் என்பதற்கு மேற்கண்ட செய்தியே ஒரு சிறந்த உதாரணம்.

ஐஸ்வர்யராய்க்கு எந்த குழந்தை எப்பொழுது பிறக்கும் எனபதைப் பற்றிய கவலை அபிசேக் பச்சனுக்கும் அமிதாப் பச்சனுக்கும் இருந்தால் அதை வரவேற்கலாம். அவர்கள் குடும்பததில் சற்றும் சம்பந்தமில்லாத நம் இந்திய ரசிக சிகாமணிகள் பல கோடி ரூபாய் பணம் வைத்து சூதாடும் கூத்தை என்ன சொல்வது?

கிரிக்கெட் போன்ற ஆட்டங்களை வைத்து கோடிக் கணக்கில் சூதாடப்படுகிறது. இனி இதற்கும் அனுமதி அளிக்கப்படலாம். சோம்பேறித் தனத்தை உருவாக்கும் இந்த விளையாட்டுக்கு தேவையற்ற பில்டப்புகள். நமது குடிமகனும் அனைத்து பிரச்னைகளையும் மறந்து ஐந்து நாள், ஒரு நாள் மேட்சுகளையும் சச்சின் சதம் அடித்து விட்டால் பிறவிப் பயனை அடைந்து விட்டதாகவும் நினைத்து சந்தோஷப் பட்டுக் கொள்ளலாம். சைனாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு தடை என்று கேள்விப்பட்டேன். நமது நாட்டுக்கும் அந்த தடை அவசியம். அதற்கு பதில் கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, கபடி போன்ற விளையாட்டுகளை அரசு அதிகம் ஊக்குவிக்கலாம்.

‘நம்பிக்கை கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், பலி பீடங்களும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.’

குர்ஆன் 5:90

'சிறுமை பல செய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.'
-குறள்: சூது, 4

பல்வேறு இழிவு தரும் துன்பங்களைச் செய்து உள்ள பெருமையையும் கெடுக்கும் சூதாட்டத்தைப் போல கொடிய வறுமையைத் தரக் கூடியது வேறொன்றுமில்லை.

9 comments:

மதுரை சரவணன் said...

naammaa seekkirama vallarasaakurathukku rammi uthavumo..!

Jafarullah Ismail said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இனி தொடர்ந்து திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்களும் அங்கீகரீக்கப்படுமோ?

suvanappiriyan said...

மாங்குரோவ் காடுகளை அழித்து கிரிக்கெட் மைதானம் நிறுவ உள்ளதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெளிப்படையான எதிர்ப்பையும், ஆட்சேபத்தையும் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் நேற்று தென்மாநில வன அமைச்சர்களின் 4- ஆவது மாநாட்டை தொடங்கி வைத்து அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நாட்டின் மதிப்பிட முடியாத சொத்து மாங்குரோவ் காடுகள். தென் மாநிலங்களில்தான் இந்த காடுகள் அதிகம் உள்ளன. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக இக்காடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. காரணம் மனிதர்களின் விஷமத்தனமான திட்டங்கள்தான்.

சுனாமி போன்ற இயற்கை பேரிடரின்போது மனித சமுதாயத்துக்கே அரணாகவும் உள்ளவை மாங்குரோவ் காடுகள்தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி தாக்கிய போது இதை அனுபவத்தின் மூலம் உணர்ந்தோம். கடலோரப் பகுதியில் மாங்குரோவ் காடுகள் இருந்த பகுதியில் எல்லாம் பாதிப்பின் தன்மை குறைவாக இருந்ததை நாம் அறிவோம்.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த மாங்குரோவ் காடுகளை அழித்து எடகொச்சி என்ற இடத்தில் கிரிக்கெட் மைதானம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளனர். இதற்கு கேரளத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே ஒருமித்தமாக ஆதரவு தெரிவித்துள்ளது கவலை அளிக்கும் விஷயம்.

இந்த இடத்தில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக நமக்கு மாங்குரோவ் காடுகள் முக்கியமா? அல்லது கிரிக்கெட் முக்கியமா? என்ற கேள்வியை நமக்கு நாமே எழுப்பி பதில் தேட முற்பட வேண்டும்.

காடுகள் அழிந்தால் என்ன நடக்கும் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாமலேயே பலர் செயல்படுவதுதான் இன்று மோசமான பருவ கால மாறுதல்களைத் தோற்றுவித்து வருகிறது.

தென் மாநிலங்களில் மாங்குரோவ் காடுகள் அழிந்து வருவது கவலைக்குரிய விஷயம். இக்காடுகளை பாதுகாக்கவும், இக்காடுகளின் பரப்பளவை விரிவாக்கவும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அமைச்சர் ஜெயராம் ரமேஸ்.

naren said...

சுவனப்பிரியன்!!!!
இந்த தீர்ப்பின் மூலம் சூதாட்டம் சட்டபூர்வமாக்கப்பட்டது என்று நீங்கள் நினைப்பது தவறு. நீதிமன்றம் சரியாகத்தான் தீர்ப்பு சொல்லியுள்ளது. நீங்கள் தீர்ப்பை முழுமையாக படிக்கவில்லை என நினைக்கிறேன். மார்க்க அறிஞர் இங்கு http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/ches_soothatama/ என்ன சொல்கிறார்...

//சூதாட்டத்திற்கும், விளையாட்டுக்கும் நேரடியாக எந்தச் சம்பந்தமும் இல்லை. எந்த விளையாட்டையும் சூதாட்டமாகவும் ஆக்க முடியும். சூது கலக்காமலும் விளையாட முடியும்.
இப்போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு இன்ன தொகை தரப்படும் என்று போட்டியில் பங்கேற்காதவர்கள் அறிவித்தால் அது பரிசு எனப்படும். இதற்கு மார்க்கத்தில் தடை இல்லை. இவ்வாறு எந்த விளையாட்டையும் விளையாடலாம். அது சூதாட்டமாகாது.
போட்டியில் பங்கு பெறுபவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தொகையைச் செலுத்தி, யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் மொத்த தொகையையும் எடுத்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் விளையாடினால் அது சூதாட்டமாகி விடும். சாதாரண கபடிப் போட்டியைக் கூட இந்த முறையில் நடத்தும் போது அது சூதாட்டமாகி விடுகின்றது.
செஸ் போட்டியானாலும், மல் யுத்தமானாலும் வேறு எந்த விளையாட்டானாலும் இந்த அடிப்படையில் நடத்தும் போது அது சூதாட்டமாகும்//.

மேலும் ஒரு காணொளியில் அண்ணன் பி.ஜே அவர்கள் சீட்டாடுவது பணம் கட்டாமல் பொழுது போக்குகாக ஆடினால் அது சூது ஆகாது என்று சொன்னார் என்று ஞாபகம்.

இந்த நியதியை வைத்து தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் நாங்கள் பணம் வைத்து சூதாடவில்லை பொழுதுப் போக்குகாக ஆடினோம் என்று, எப்பொழுதுமே பொய் வழக்கு போடும் உண்மை வழக்கு போடாத போலீஸுக்கு, எதிராக நிருபித்து வெளியே வந்திருக்கிறார்கள்.
அதனால் நீதிமன்ற தீர்ப்பினால் சூதாட்டம் சட்டபூர்வம் பெற்றுவிட்டது என்பது தவறு. காசு வைத்து ஆடினால் சட்டப்படி தண்டனை பெறுவார்கள். பொய் கேஸு போடும் போலீஸ் எப்பொழுதும் உண்மை குற்றவாளிகளை பிடிப்பதில்லை. அதனால் போலீஸ் குற்றம்சாட்டுபவர்கள் எல்லாம் குற்றவாளி இல்லை.

மற்ற குடி, மற்ற சூதாட்டம் எல்லா நாடுகளிலும் சமூகத்திலும் இருக்கின்றது. இல்லாத இடமே இல்லை. இதை ஒரு வியாதியாக நவீன மருத்துவம் கருதுகிறது அதற்கு தகுந்தாற்ப் போல் சிகிச்சைப் பார்த்தால் நிவர்த்தி செய்ய முடியும். இது சமுதாய கலாச்சார பிரச்சனை. இதற்கும் மதத்திற்கும் சுதந்திரத்திற்கும் சம்பந்தமில்லை. சுதந்திர்மில்லாத நாடுகளிலும் சூதாட்டம், குடி இருக்கத்தான் செய்கிறது.

naren said...

பதிவின் சமுதாய அக்கறை தெரிகிறது. உண்மையில் இந்த தீமைகளை களைய வேண்டிய ஒன்று. இதற்கு தொடர் பன்முக முயற்சிகள் தேவை. இந்த தீமைகளினால் பாதிக்கப்படுவது குடும்பங்கள் அதுவும் முக்கியமாக குழந்தைகள்தான். அது சமுதாய சூழலையும் பாதிக்கும்.

பதிவிற்கு நன்றி.

கார்ட்டூன் அருமை. ’தினமணி’ பஸ் கட்டண கார்ட்டூனை ஒத்துள்ளது. இருந்தாலும், இந்த இந்து, பார்பன, பாசிச, ஆர்.ஸ்.ஸ், தமிழின விரோதி, கைக்கூலிகள் ஏடுகளான தினமலத்தையும் தினமணியையும் நீங்கள் படிப்பது எனக்கு ஒரு சின்ன வருத்தம் தான்.

suvanappiriyan said...

நரேன்!

//மேலும் ஒரு காணொளியில் அண்ணன் பி.ஜே அவர்கள் சீட்டாடுவது பணம் கட்டாமல் பொழுது போக்குகாக ஆடினால் அது சூது ஆகாது என்று சொன்னார் என்று ஞாபகம்.//

ரம்மி விளையாட்டின் போது பந்தயம் கட்டி விளையாடுவது சட்டத்திற்கு புறம்பானது அல்ல என்றும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்குதான் பிரச்னையே! கபடி போன்ற விளையாட்டுகளில் விளையாடுபவர் யாரும் பணம் கட்டுவதில்லை. வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு அமைப்போ அல்லது அரசாங்கமோ பரிசுகளை அளித்தால் அதை சூது என்று சொல்ல மாட்டோம். அதைத்தான் பிஜேயும் தனது காணொளியில் கூறுகிறார்.

//மற்ற குடி, மற்ற சூதாட்டம் எல்லா நாடுகளிலும் சமூகத்திலும் இருக்கின்றது. இல்லாத இடமே இல்லை. இதை ஒரு வியாதியாக நவீன மருத்துவம் கருதுகிறது அதற்கு தகுந்தாற்ப் போல் சிகிச்சைப் பார்த்தால் நிவர்த்தி செய்ய முடியும். இது சமுதாய கலாச்சார பிரச்சனை. இதற்கும் மதத்திற்கும் சுதந்திரத்திற்கும் சம்பந்தமில்லை. சுதந்திர்மில்லாத நாடுகளிலும் சூதாட்டம், குடி இருக்கத்தான் செய்கிறது.//

ஒத்துக் கொள்கிறேன். இங்கு சவுதியில் கூட வியாழக்கிழமைகளில் சில ரூம்களில் 10 12 பேர் அமர்ந்து நாள் முழக்க பணம் வைத்து ரெம்மி ஆடுவதை பார்த்திருக்கிறேன். பணம் வைத்து விளையாடுவது நிரூபிக்கப்பட்டால் இங்கும் ஜெயில் தண்டனை உண்டு. ஓரளவு பயத்துடனாவது இங்கு பலர் தவிர்ந்து கொள்கிறார்கள். இவ்வளவு பெரிய சமூக கொடுமையை இந்த அரசு அங்கீகரிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? என்றுதான் கேட்கிறேன்.

//கார்ட்டூன் அருமை//


நன்றி!

//இந்து, பார்பன, பாசிச, ஆர்.ஸ்.ஸ், தமிழின விரோதி, கைக்கூலிகள் ஏடுகளான தினமலத்தையும் தினமணியையும் நீங்கள் படிப்பது எனக்கு ஒரு சின்ன வருத்தம் தான்.//

ஹா...ஹா...வஞ்சப் புகழ்ச்சியா? அவர்கள் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களாக இருந்தாலும் தமிழக மக்களால் அதிகம் படிக்கப் படக் கூடிய பத்திரிக்கைகள். இவர்களின் செய்தி தமிழக மக்களை ஓரளவுக்கேனும் பாதிக்கும். இவர்கள் இஸ்லாத்துக்கு எதிராக என்னவெல்லாம் பொய்களை அவிழ்த்து விடுகிறார்கள், வர்ணாசிரமத்தைக் கட்டிக்காக்க என்னென்ன கதைகளை ஜோடிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காகவாவது நாம் படிக்க வேண்டும்.

அது போன்ற செய்திகளை கோடிட்டு தவறை சுட்டிக்காட்டி அதை பதிவிடுவதற்காகவும் நாம் அவசியம் படிக்க வேண்டும். படித்தவர்களில் 1000 பேரையாவது சென்றடைந்தால் அது நமக்கு ஒரு வெற்றிதானே!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ ஜபருல்லா!

//இனி தொடர்ந்து திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்களும் அங்கீகரீக்கப்படுமோ?//

சொல்ல முடியாது...நீங்கள் சொல்வது போல் நடந்தாலும் நடக்கலாம். 'தனி மனித சுதந்திரத்தில் தலையிட மாடடோம்' என்ற சப்பைக் கட்டோடு இனி அனுமதிக்கப்படலாம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

suvanappiriyan said...

நோ!

//ஒரு திரு சுவனப்பிரியனையே நம்மால் தாங்க முடியாதபொழுது கோடிக்கணக்கான சுவனப்பிரியங்கள் உதித்து கொண்டிருக்கும் ஒரு தேசம் எப்படி இருக்கும்
என்று கற்பனை செய்து பாருங்கள்.//

தவறான புரிதல். பாகிஸ்தானில் மதரஸாக்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. முல்லாக்களின் பேச்சையே வேத வாக்காக நம்புபவர்கள் பலர். குர்ஆன் என்ன சொல்கிறது. முகமது நபி எதை போதித்தார் என்ற உண்மை அந்த மக்களை இன்னும் சென்றடையவில்லை.

அஜ்மல் கசாப்புக்கும் மும்பைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? அந்த இளைஞனுக்கு பெரும் தொகையை கொடுத்து கூடவே குர்ஆனின் வசனங்களை தப்பும் தவறுமாக அவனுக்கு விளங்க வைத்து இன்று தூக்கு தண்டனையை எதிர் நோக்கி உள்ளான். முல்லாக்களின் தவறுகளாலும் நமது நாட்டின் உளவுத்துறையின் மெத்தனத்தாலும் இன்று இஸ்லாம் விமர்சனத்துக்குள்ளாகிறது.

சுவனப்பிரியனின் சிந்தனையில் என்ன ஓடுகிறது? இந்த உலகமும் இதில் உள்ள மனிதர்கள் யாவரும் ஒரு தாய் மக்களே! தருமி, வால்பையன், நோ, சார்வாகன், அனலைஸ்ட், நரேன் போன்ற அனைவருமே சுவனப்பிரியனின் சகோதரர்களே குர்ஆனின் கூற்றுப்படி. எனவே இந்துக்களையும் கிறித்தவர்களையும் யூதர்களையும் சகோதரர்களாகவே சுவனப்பிரியன் இன்று வரை நினைத்து வருகிறார். சுவனப்பிரியனைப் போலவே பாகிஸ்தானிய மக்களும் குர்ஆன் ஹதீஸ் இரண்டை மட்டும் தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டால் பாகிஸ்தான் சுவனஸ்தானாக மாறி விடும்.

முன்பு தமிழகத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் பலர் தவறான வழிகாட்டுதலால் வன்முறையை நாடினர். அது தவறு என்று தவ்ஹீத் பிரசாரம் கடந்த 25 ஆண்டுகாலமாக இடையறாது நடைபெற்றதன் காரணமாக இன்று அதே இளைஞர்கள் கல்வியின் பால் ஆர்வம் ஏற்பட்டு பட்டதாரிகளாக வருடாவருடம் வெளி வருகின்றனர். சினிமா நடிகனுக்கு பின்னால் சென்ற இஸ்லாமிய இளைஞர கூட்டம் இன்று குர்ஆனையும் ஹதீஸையும் ஆராய்ந்து கொண்டிருக்கிறது.

இது போன்ற நிலைக்கு பாகிஸ்தான மாறும் போது பல சுவனப்பிரியன்கள் அங்கும் உதிப்பார்கள். அப்பொழுது இந்தியாவின் மீது உள்ள வெறுப்பு மறைந்து நம்மோடு நேசக்கரத்தை நீட்டுவார்கள். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.

தருமி!

//ஒரு பாகிஸ்தானுக்கே இவ்வளவு சொல்றீங்க .. போராட்டம் நடக்கும் எல்லா இஸ்லாமிய நாடுகளில் Islamic Brotherhood தான் வரப்போகுதாம்.


அல்லாதான் நம்மைக் காப்பாற்றணும்!//

கவலைப்படாதீர்கள். 'பிரதர் ஹூட்(இஹ்வான்கள்) ஆட்சியில் கிறித்தவர்களும் யூதர்களும் சிறப்பாகவே நடத்தப்படுவார்கள். இஸ்ரேலும் அமெரிக்காவும் இடையில் புகுந்து குள்ளநரித்தனத்தை காட்டாமல் இருந்தால் அனைத்தும் நலமுடனே நடக்கும்.

suvanappiriyan said...

//1400 ஆண்டுகளாக எல்லாவிதக் கேள்விகளுக்கும் பதிலளித்து விட்டோம் என்பது அதில் மிக முக்கியமான ஒன்று. இதனாலேயே கேட்ட கேள்விகளுக்கு நாம் கொடுத்துள்ள பதில் முழுமையானதா, சரியானதா என்று அவர்கள் எப்போதும் சிந்திப்பதில்லை. அடுத்த பக்கத்தில் வரும் விவாதத்தில் உண்மையிருக்கிறதா என்ற கேள்விகள் அவர்களுக்கு வருவதேயில்லை. கண்ணாடி முன் நின்று பதில் சொல்லும் பாணியைத்தான் பார்க்க முடிகிறது.//- -தருமி!

ஏதோ நீங்கள்தான் அறிவாளி போலவும் மற்றவர்களெல்லாம் மூளை சலவை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறிக் கொள்வது சற்று மிகைப்படுததல். அது ஒருபுறம் இருக்க கருவியலில் பல ஆராய்ச்சிகள் செய்த டாக்டர் கெய்த் மூர் என்ன சொல்கிறார் என்பதை இந்த மூன்று காணொளிகளிலும் பார்த்தக் கொள்ளுங்கள். கருவியலைப் பற்றி நீங்களோ நானோ விவாதிப்பதை விட டாக்டர் கெய்த் மூர் விவாதிப்பதுதான் சரியாக இருக்கும்.