Followers

Wednesday, November 30, 2011

இந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்

வேதம் புனிதமடைந்தது!


ஆலப்புழா: ஆசார்ய நரேந்திர பூஷன் அவர்களது சீடரும், இந்து ஆன்மீக சாதகருமான சிவானந்த சர்மா அவர்கள், கர்நாடகத்தில் உள்ள பாரம்பரியம் மிக்க சிருங்கேரி மடத்தின் ஆசிரமத்தில் இணைந்துள்ளார். அங்கு அவர் தனது வேத, வேதாந்தக் கல்வியைத் தொடர்வார்; துறவு நெறியில் செல்வார்.

பறையர் சமூகத்தைச் சேர்ந்த சிவானந்த சர்மா அவர்கள், திரு. பி.ஆர்.குஞ்சன் மற்றும் திருமதி தங்கம்மா தம்பதியரின் இளைய மகன் ஆவார். சிறு வயது முதலே ஆன்மிக நாட்டம் கொண்டிருந்த அவர், ஆசார்ய நரேந்திர பூஷன் அவர்களின் வழிகாட்டுதலில் வேத சாஸ்திரங்களையும் இந்து ஞான நூல்களையும் பயின்று வந்தார்.
இதுவரை பிராமணர்களைத் தவிர மற்ற சாதியினரை மடத்தின் பாடசாலைகளிலும், ஆசிரமத்திலும் பயில சிருங்கேரி மடம் அனுமதித்ததில்லை. அத்தகைய இறுக்கமான பழமைவாத நிலைப்பாட்டைத் துறந்து, உண்மையான இந்து நெறிகளின் அடிச்சுவட்டில் ஞானத் தேடலை அங்கீகரிக்கும் விதத்தில் அந்த சம்பிரதாய மடத்தின் இச்செயல்பாடு அமைந்துள்ளது. இதற்காக சிருங்கேரி மடத்திற்கு தமிழ்ஹிந்து தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
இதனுடன் நின்று விடாமல், மேன்மேலும் இச்செயல்பாடு வளர வேண்டும். பெருக வேண்டும். ஒரு பாரம்பரிய மடத்தின் இந்தச் செயல்பாடு மற்ற மடங்களுக்கும் முன்னுதாரணமாக ஆக வேண்டும்.

- -தமிழ் ஹிந்து

இந்த பதிவு தமிழ் ஹிந்துவில் வெளியிடப்பட்டதற்கு செந்தில் என்ற ஒரு பிராமணர் எந்த அளவு கோபப்படுகிறார் என்பதை அவரது பின்னூட்டத்தில் பார்க்கலாம்.

இந்த கட்டுரையை எழுதறதுக்கு கொஞ்சமாவது யோசித்தீர்களா?

1. ஸ்ரீங்கேரி என்பது, சன்னியாசிகள் மடம்.. ஒருவர் சன்னியாசி ஆகிவிட்டால், அவர்களுக்கு ஜாதி பேதம் கிடையாது.. ஆச்சார்யர் நரேந்திர பூஷன் என்பவர், சன்னியாசம் வாங்கிய பொழுதே, அவர் பறையர் என்ற அடையாளத்தை இழந்து விட்டார்.. அவர் சன்னியாசம் வாங்கியதால்தான் அவரை சிரிங்கேரிக்குள் அனுமதிக்கிறார்கள்.. பறையராக இருப்பதால் அல்ல.. பறையர்களுக்கு மட்டும் அல்ல.. எல்லா ஜாதிக்கும் அதே கட்டுப்பாடுதான்.. சொல்லப் போனால், பறையர்களுக்கு கூட, சிருங்கேரி குரு பார்த்து மனது வைத்தால், உள்ளே விடலாம்.. ஆனால் தர்மத்தை விட்டு மேற்கத்திய கலாச்சாரத்தை கடைபிடிக்கும் துபாஷி பிராமணர்களை அந்த பக்கமே அண்ட விடக்கூடாது, என்பதுதான் சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது.. ஆனால் இன்று இருக்கும் நிலையைல் பாருங்கள். .இந்த துபாஷி பிராமணர்கள் சிருங்கேரி மடத்துக்கே ரூல்ஸ் போடுகிறார்கள்..
2. சிரிங்கேரி மடத்தை பற்றி எவ்வளவு கீழ்த்தரமான எண்ணத்தை நீங்கள் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் என்பதை உங்கள் கட்டுரையை திரும்பி பாருங்கள்..
/** இதுவரை பிராமணர்களைத் தவிர மற்ற சாதியினரை மடத்தின் பாடசாலைகளிலும், ஆசிரமத்திலும் பயில சிருங்கேரி மடம் அனுமதித்ததில்லை. அத்தகைய இறுக்கமான பழமைவாத நிலைப்பாட்டைத் துறந்து, உண்மையான இந்து நெறிகளின் அடிச்சுவட்டில் ஞானத் தேடலை அங்கீகரிக்கும் விதத்தில் அந்த சம்பிரதாய மடத்தின் இச்செயல்பாடு அமைந்துள்ளது.
**/
நீங்கள் உருவாக்கிய செயற்கையான இல்லாத ஒரு பொந்து நெறியை சிருங்கேரி மடம் ஆட்படவில்லை என்பதால், அந்த மடம் பழமைவாதமாகிவிட்டது.. இது ஒரு சிந்தா ரீதியான, சித்தாந்த ரீதியான ஒரு வன்முறை ..

2. கலியுகத்திற்கு ஸ்மிருதி எழுதிய பராசரர் உங்களை பொருத்த வரையில் ஒரு முட்டாள்.. ஆதிக்க சக்தி.. பறையர்களை அடக்கி ஆள்வதற்கே, அவரருடைய ஸ்மிருதியில், பிராமணர்கள் மட்டும் வேதம் கற்க வேண்டு என்று எழுதியிருக்கிறார்.. ஆகவே, அவருடைய அடக்குமுறையிலிருந்து, பறையர்களை காக்க, உங்கள் இந்துதுவம் உதித்திருக்கிறது.. அப்படித்தானே உங்கள் நினைப்பு… இல்லையென்றால், இப்படி வேதத்தை ஒரு கேவலப்படுத்தும் தலைப்பை இந்த கட்டுரைக்கு கொடுத்து இருக்க மாட்டீர்கள்..

3. வேதம் கற்பது என்றால் கிறித்துவர்கள் பைபிள் படிப்பது போல எண்ணிக்கொள்வதை நிறுத்துங்கள்.. பைபிளை யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.. அது போல, வேதத்தையும் யார் வேண்டுமானாலும் படிக்கலாம் என்பதுதான் உங்கள் சித்தாந்தமும் நிலைப்படும்.. இது ஒரு ரியாக்ஷனரி வேலை என்பதை அறிவீர்களா?

4. வேதத்தை யார் படிக்கலாம்.. படிக்க கூடாது என்பது சாஸ்திரத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது.. அதை மாற்ற நீங்கள் யார்.. உங்களுக்கு என்ன தகுதி.. அதை முதலில் சொல்லுங்கள்.. காலம் காலமாக பிராமனர்கள் தான் முறியாக வேதத்தை பயின்று பாதுகாத்து வந்துள்ளார்கள்.. அவர்களுக்கே சாஸ்திரத்தை மாற்றும் உரிமை இல்லதபொழுது, இங்கே இருக்கும் துபாஷி பிராமணர்களுக்கும் மற்ற இந்துதுவவாதிகளுக்கும் எப்படி உரிமை வந்தது..

இங்கு இந்த நவீன காலத்திலும் வேதங்களை பிராமணர்களைத் தவிர வேறு யாரும் படிக்கக் கூடாது என்று இந்த அளவு தைரியமாக ஒருவர் வாதிடுவதற்கு மூல காரணமே இந்து மத வேதங்களும், ஸ்மிருதிகளு;ம், காவியங்களுமாகும். எவ்வாறு இது போன்ற கருத்துகள் வேதங்களில் வந்திருக்க முடியும் என்பதற்கு நான் முன்பு இட்ட ஒரு பதிவை மீள் பதிவாக்கி தருகிறேன்.
இனி என்து பழைய பதிவு.




இந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்

இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி கியான்' என்றும் கூறுவர். இந்த வேதங்கள் சமஸ்கிரத மொழியில் அமைந்திருப்பதைக் காண்கிறோம். வேதம் இறக்கியருளப்பட்டக் காலத்தில் எழுத்துப் பயிற்சி இல்லாததால் ஆசிரியர்கள் வேதங்களை வாய் வழியாக ஓதி வந்தனர். அவ்வாறு தலைமுறை தலைமுறையாகச் சென்ற பல நூற்றாண்டுகளாக வாய் மொழியாகவே ஓதப் பட்டு வந்த வேதங்களை இன்று வரை கற்கப் பட்டும் கற்பிக்கப் பட்டும் ஓதப் பட்டும் வருகின்றன. சென்ற ஒரு நூற்றாண்டுக் காலத்திற்க்குள்ளாகத் தான் வேதங்களை எழுதுவது, அச்சிடுவது, மொழி பெயர்ப்பது என்னும் பழக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

எழுத்து முறை உலகிலேயே முதன் முதலாக பினீசியர் என்னும் கிழக்கு மத்திய தரைப் பிரதேச மக்களால் கண்டு பிடிக்கப் பட்டது என்பதை நாம் அறிவோம். பினீசியாவிலிருந்து மெசப்பட்டோமியா வழியாகவும் பாரசீகம் வழியாகவும் வந்து இப்புதுமை இந்தியாவை அடைந்திருக்க வேண்டும். ஆதியில் இந்தியாவில் பழக்கத்திற்கு வந்த எழுத்து முறை 'பிராமி' எனப்படும். இவ்வெழுத்துக்களிலேயே அசோகரது கல் வெட்டுக்கள் பொறிக்கப் பட்டுள்ளன.

இந்துக்களின் வேதங்கள் கி.மு. 1500 க்கும் கி.மு. ஆயிரத்துக்கும் இடைப் பட்ட காலத்தில் இயற்றப் பட்டதாக இருக்கலாம். சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு வியாஸர் அவற்றை தொகுத்தும் வகுத்தும் ரிக், யசூர், சாம, அதர்வம் என்று பாகு படுத்தி பதிப்பித்து இருக்கலாம் என்று இந்து மதப் பெரியார்கள் கூறுகின்றனர். ஆனால் அதற்கான சான்றுகள் எதையும் கூறவில்லை.

வேதம் அருளப்பட்ட காலம் எழுத்துப் பயிற்சி என்பது இல்லாத காலமாதலால் வேதம் அருளப் படும்போது அது எழுதி வைக்க சாத்தியமில்லை.

காலம் காலமாக வேத மொழியாக (வாய் மொழியாக) இருந்த கிரந்தங்கள் பின்பு பிரகிருத மொழிக்கு மாற்றப் பட்டது. (பாகத அல்லது பிராகிருத மொழி என்பது பாமர மொழியாகும்) பின்பு பிராகிருத மொழியிலிருந்து சமஸ்கிரதத்திற்கு மாற்றப் பட்டது. (சமஸ்கிரதம் என்றால் செப்பனிடப் பட்ட மொழி - அறிஞர்கள் மொழி) இவ்வாறு காலம் காலமாக வாய் மொழியாக இருந்து பின்பு மொழி பெயர்ப்புக்கு உட்பட்டு வந்ததால் அதில் இடைச் சொருகல் ஏற்படவும் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.

நூஹ் (நோவா) நபிக்கு அருளப்பட்ட வேதம் அப்படியே இப்போது இருக்குமானால் அது மொழி மாற்றத்தைத் தவிர மற்றெல்லா வகையிலும் அது திருக் குர்ஆனுக்கு ஒத்ததாகவே இருக்கும்.

இறைவன் குர்ஆனில் பல இடங்களில் தூதர்களைக் குறிப்பிடும் போது நோவா, அப்ரஹாம், மோஸே, தாவீது, ஏசு, முகமது என்று அனைத்து இறைத் தூதர்களையும் சிலாகித்துக் கூறுகிறான்.

முகமது நபிக்கு குர்ஆனையும், ஏசு நாதருக்கு இன்ஜீலையும், தாவூத் நபிக்கு ஜபூரையும், இப்றாகீம் நபிக்கு சில ஆகமங்களையும் வழங்கியதாகக் கூறுகிறான். ஆனால் நோவாவுக்கு கொடுக்கப் பட்ட வேதம் பற்றி நேரிடையாக எதுவும் குறிப்பிடவில்லை.

இனங்களைக் குறிப்பிடும் போது யூதர்கள்,கிறித்தவர்கள், ஸாபியீன்கள், முஸ்லிம்கள் என்று பிரித்தறிவிக்கிறான். அதில் ஸாபியீன்களுக்கு வேதம் அருளப்பட்டதாகவும் கூறுகிறான்.

குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதிய இப்னு கஸீர் தன்னுடைய விளக்கத்தில் ஸாபியீன்கள் என்பவர்கள் நூஹ் நபியுடைய இனத்தவர்களே என்று கூறுகிறார்.

ஸாபியீன்கள் நெருப்பை வணங்குபவர்களாகவும், சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை வணங்குபவர்களாகவும் கிரக பலன், சோதிடம், இவற்றில் நம்பிக்கையுடையவர்களாகவும் இருந்திருக்கின்றனர். மேலும் வானவர்களை (தேவர்களை) வணங்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள் என்று மார்க்க அறிஞர்கள் விளக்கம் கொடுக்கின்றனர். இந்த வணக்க வழி பாட்டு முறைகள் அனைத்தும் அப்படியே அமையப் பெற்ற இனத்தவர் இந்துக்களே என்று தெளிவாக அறிகிறோம். ஆகவே குர்ஆன் கூறும் ஸாபியீன்கள் என்பவர் இந்துக்களே என்று தெளிவாக விளங்க முடிகிறது.

இந்த ஸாபியீன்களுக்கு அனுப்பப் பட்ட தூதர் அதாவது இந்து சமூகத்திற்கு அனுப்பப் பட்ட தூதர் நூஹ் (நோவா) நபி அவர்களே!

குர்ஆன் தவ்ராத்தையும், இன்ஜீலையும், ஜபூரையும், இப்றாஹீமின் ஆகமங்களையும் தவிர்த்து முதல் வேதம் (ஸீஹீஃபில் உலா), முன்னோர்களின் வேதம் (ஜீபூருல் அவ்வலீன்) என்ற பெயர்களையும் குறிப்பிடுகிறது. முதல் வேதம், முன்னோர்களின் வேதம் என்றால் குர்ஆன், இன்ஜீல், ஸபூர், தவ்ராத், இப்றாகீமின் ஆகமங்களுக்கு முந்தியதாகத்தான் இருக்க வேண்டும்.

இந்த வேதங்கள் அருளப்பட்ட தூதர்களுக்கு முந்தைய தூதர் நோவா தான். நோவா (நூஹ்) நபியின் சமுதாயம் தான் ஸாபியின்கள். ஸாபியீன்கள் தான் இக்காலத்தில் இந்துக்கள் என்றழைக்கப்படுகின்றனர். இந்துக்கள் தங்களிடையே உள்ள வேதங்களை 'ஆதிகிரந்தம்' என்றும் ' ஆதி கியான்' என்றும் கூறுகின்றனர். 'ஸீஹீபில் உலா' 'ஜீபூருல் அவ்வல்' என்னும் பெயர்களுக்கு இணையான சமஸ்கிரத சொல் 'ஆதி கிரந்', 'ஆதி கியான்' ஆகும். இதன் மூலம் குர்ஆன் கூறும் முன்னோர்களின் வேதம் என்பது 'ஆதி கிரந்தம்', 'ஆதிகியான்' என்பது தெளிவாகிறது.

இந்த பெயர் மாற்றம் தவிர்க்க முடியாதது ஆகும். குர்ஆன் கிறித்தவர்களை நசாராக்கள் என்று அழைக்கிறது. கிறித்தவர்கள் எவரும் தங்களை நசாராக்கள் என்று கூறிக் கொள்வதில்லை. அது போல் கிறித்தவர்களின் வேதத்தை குர்ஆன் 'இன்ஜீல்' என்ற கூறுகிறது. கிறித்தவர்களோ அதனை பைபிள் என்கின்றனர். குர்ஆன் தாவூதுக்கு அருளிய வேதத்தை 'ஜபூர்' என்று அழைக்கிறது. யூதர்களும், கிறித்தவர்களும் அதை 'சங்கீதம்'என்று தான் அழைக்கிறார்கள். எனவெ இந்த பெயர் மாற்றம் என்பது காலத்துக்கு தக்கவாறு மாறுகிறது என்பது தவிர்க்க முடியாதது.

நோவா அவர்களுக்கு அருளப்பட்ட இவ்விரு வேதங்களில் ஒன்று ஜலப் பிரளயத்துக்கு முன்பும், மற்றொன்று ஜலப் பிரளயத்துக்கு பின்பும் அருளப் பட்டதாய் இருக்கலாம். இறைவனே நன்கறிந்தவன்.

'நிச்சயமாக இது முன்னோர்களின் வேதங்களிலும் அறிவிக்கப் பட்டிருக்கிறது.'
26 : 196 - குர்ஆன்

சங்கீதத்தையும், தோராவையும், சுவிஷேஷங்களையும் தவிர்த்து முன்னோர்களின் வேதங்களிலும் அறிவிக்கப் பட்டிருப்பதாக இறைவன் குறிப்பிடுகிறான்.

உலகிலேயே பழமையான வேதங்கள் இந்துக்களிடமுள்ளது. ஓரளவுக்கு மூல மொழியில் உள்ள வேதங்களும் இந்துக்களுடையதே! நிச்சயமாக இது முன்னோர்களின் வேதங்களிலும் அறிவிக்கப் பட்டிருக்கிறது என்று குர்ஆன் கூறியதை மெய்ப்பிக்கும் படியாக இந்துக்களிடமுள்ள கிரந்தங்களிலும் குர்ஆனுக்கு ஒத்த கருத்துடைய சில வசனங்களையும், குர்ஆனுக்கு இணையான நடையழகையும் முன்பு கண்டோம்.

'நபியே! இன்னும் உமக்கு முன்னர் வஹீ மூலம் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம்.'
16 : 43,44 - குர்ஆன்
என்று இறைவன் குரஆனில் கூறுகிறான்.

தொன்மையான காலத்து மரபுச் செய்திகளைத் தொகுத்தே அழகான பாடல்களை உருவாக்கியிருக்கிறேன்
8 : 6 : 11 - ரிக் வேதம்

இதிலிருந்து குர்ஆன் 'குறிப்பிடும் தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும்' கொண்டு தொகுக்கப் பட்ட பாடல்களையே ரிக்,யஜீர்,சாம,அதர்வண வேதங்கள் என்று விளங்கிக் கொள்ளும் படியாக ரிக் வேதத்தின் சுலோகம் அமைந்துள்ளது.

இறைவன் நோவா அவர்களுக்கு அருளிய வேதங்களான ஆதி கிரந்தம், ஆதி கியான் போன்றவை தொன்மையான காலம் தொட்டு வாய் மொழியாக, மரபுச் செய்தியாக இருந்தது. அவைகளே ரிக்,யஜீர்,சாம,அதர்வண வேதம் என்று பகுத்து தொகுக்கப் பட்டிருக்கிறது என்று விளங்க முடிகிறது.

வேதங்கள் தவிர்த்து புராணங்கள், உபநிஷத்துக்கள், ஆரண்யங்கள், ஸ்மிருதிகள் எல்லாம் இந்துக்களின் புனித நூல்களாக உள்ளன. குர்ஆனுக்கு விளக்க உரையாக முகமது நபியின் 'நபி மொழிகள்' எவ்வாறு அமைந்திருக்கிறதோ அது போல ஆதி கிரந்தங்களுக்கு ரிஷிகளால் எழுதப் பட்ட வியாக்யானங்களாக இந்த புராணங்களும் உபநிஷத்துகளும், எழுதப் பட்டிருக்க வேண்டும். அல்லது நோவாவுக்குப் பிறகு வந்த இறைத் தூதர்களின் விளக்கங்களின் தொகுப்பாகக் கூட இருக்கலாம்.

'இது முந்தய வேதங்களிலும், ஆப்ரஹாம், மோசேவுடைய வேதங்களிலும் உள்ளது.'
87 : 18,19 –குர்ஆன்

இந்து என்னும் பெயரானது இடைக் காலத்தில் இடப்பட்ட பெயராகும் என்று சுவாமி விவேகானந்தரும், நேருவும், சங்கராச்சாரியாரும் ஒத்துக் கொண்டிருக்கின்றனர். ஆதியிலே அது சனாதன தர்மம் என்றும் ஷஷ்வத் தர்மம் ஸ்வ தர்மம் என்றும் அழைக்கப் பட்டுவந்தது.

சனாதன என்னும் சமஸ்கிரத சொல்லின் பொருள் நிலையானது, தொடர்ச்சியானது, தொன்மையானது என்பதாகும்.ஷஷ்வத் என்பதற்கு வானையும் பூமியையும் உயர்ந்த எண்ணங்களோடு ஒன்றினைக்கும் நேர்வழி என்று பொருளாகும்.இந்த சனாதனத்தையும் ஷஷ்வத்தையும் ஒன்றினைத்தால் 'நிலையான நேரான மார்க்கம்' என்ற பொருளைத் தரும்.

இறைவன் குர்ஆனிலே இஸ்லாத்தை 'தீனுல் கய்யும' என்று குறிப்பிடுகிறான். 'தீனுல் கய்யும்' என்ற அரபி வார்த்தையைத் தமிழ்ப் படுத்தினால் 'நிலையான நேரான மார்க்கம்' என்ற பொருளைத் தரும். இதன் மூலம் இரண்டு மதத்தின் பெயர்களும் ஒரே விளக்கத்தைக் கொடுக்கின்றன என்று நம்மால் அறிய முடிகிறது.

ஸ்வதர்மம் என்று பகவத் கீதை (18: 45: 47) குறிப்பிடுகிறது.

ஸ்வப்ஹவ நியாக் கர்மம் - 'மார்க்கம் இயற்கையானது. பெற்றோர்களது அல்ல' என்பது இதன் பொருள்.

இதையே தான் 'தீனுல் ஃபித்ரத்' என்று 'இயற்கையான முறையிலான மார்க்கம்' என்று குர்ஆன் குறிப்பிடுகிறது.

இதிலிருந்து சனாதன தர்மம், ஷஷ்வத் தர்மம், ஸ்வதர்மம், என்பதெல்லாம் சமஸ்கிரத மொழியிலமைந்த இஸ்லாத்தின் மறு பெயர்கள் என்று விளங்கிக் கொள்ள முடிகிறது.

“Ekam Evadvitiyam”
“He is only one without a second.”
(Chandogya Upanishad 6:2:1)

“He who knows Me as the unborn, as the beginning-less, as the Supreme Lord of all the Worlds.”
(Bhagvad Gita 10:3)
and “Of (check – or For Him?) Him there is neither parents nor Lord.”
(Shwetashvatara Upanishad 6:9)

A similar message is given in Shwetashvatara Upanishad & Yajurveda:
“Na Tasya pratima asti”
“There is no likeness of Him.”
(Shwetashvatara Upanishad 4:19 & Yajurveda 32:3)


இறைவனே மிக அறிந்தவன்.


என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

18 comments:

rachinnathurai said...

இந்து என்பதோ இஸ்லாம் என்பதோ இனம் கிடையாது அய்யா.இனத்தையும் மதநம்பிக்கையையும் போட்டு குழப்பாதீர்கள்.

ம.தி.சுதா said...

சகோ நான் கடவுளின் தீவிர பக்தன் ஆனால் மதங்களை எள்ளளவும் நம்பாதவன்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)

Aashiq Ahamed said...

சகோதரர் சுவனப்பிரியன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

அந்த செந்தில் என்பவரது கமெண்ட்டை நன்கு நோக்குங்கள். கீழே (Edited and published) என்று இருக்கின்றது. இன்னும் என்னவெல்லாம் சொன்னாரோ....

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

தனபால் said...

தனபால்

அருமையான கற்பனை.

Pebble said...

Assalamu Alaikum,
// ஸாபியீன்கள் என்பவர் இந்துக்களே என்று தெளிவாக விளங்க முடிகிறது.
//
In some article I read as they are the followers of prophet Yahya(AWS). Please clarify this.

suvanappiriyan said...

திரு ரா சின்னதுரை!

//இந்து என்பதோ இஸ்லாம் என்பதோ இனம் கிடையாது அய்யா.இனத்தையும் மதநம்பிக்கையையும் போட்டு குழப்பாதீர்கள்.//

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. நான் இனமும மதமும் ஒன்று என்று எங்கும் சொல்லவில்லையே!

அடுத்து இஸ்லாமை பொறுத்தவரை அது மதமல்ல. அது ஒரு மார்க்கம். நீங்கள் பிறப்பினால் இந்துவாக இருந்தால் நாத்திகரானாலும் இந்துவாகவே கருதப்படுவீர்கள். ஒரு முஸலிம் குர்ஆனையும் முகமது நபியையும் பின்பற்றவில்லை என்றால் அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுகிறான். பிறப்பினால் ஒருவன் முஸலிமாவதில்லை. அவனது நடத்தையினால்தான் முஸ்லிமாகிறான்.

suvanappiriyan said...

சகோ மதி சுதா!

//சகோ நான் கடவுளின் தீவிர பக்தன் ஆனால் மதங்களை எள்ளளவும் நம்பாதவன்...//

நானும மதங்களை நம்புவதில்லை. மார்க்கத்தைத்தான் பின்பற்றுகிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ ஆசிக்!

//அந்த செந்தில் என்பவரது கமெண்ட்டை நன்கு நோக்குங்கள். கீழே (Edited and published) என்று இருக்கின்றது. இன்னும் என்னவெல்லாம் சொன்னாரோ....//

//சன்னியாசம் என்பது, புத்தர் காலத்துக்கு அப்புறம்தான் பிரபலமானது.. நேரிடையாக, பிரம்மச்சரியத்திலிருந்து சன்னியாசத்துக்கு போகலாம் என்பது, புத்தர் கொண்டு வந்த ஒரு கிறுக்குத்தனம்.. அதுக்கு முன்னாடி, அது தவறான ஒன்றாகவே கருதப்பட்டு வந்தது.. இன்னும் கூட, ஆதி சைவ மடங்களில், ஒருவர் திருமணம் செய்து, குழந்தை பெற்ற பிறகே, ஈஸ்வரன் கோயில் கருவரையில் பூஜை செய்யும் அதிகாரம் வரும், என்ற கட்டுப்பாடு இருக்கிறது..//

//தவறு எங்கிருக்கிறது என்பதை தான் பார்க்க வேண்டும்.. தவறு, கார்ப்பரேட் ஆஃபீசுக்கு வேலைக்கு போனதுக்கு அப்புறமும் பூனூலை தொடர்ந்து மாட்டிக் கொண்டிருப்பதில் இருக்கிறது.. தர்மத்தை விட்டு ரொம்ப தூரம் விலகிவிட்டு, மேற்கத்திய பாணியில் இருக்கும் சென்னை போன்ற நகரங்களுக்கு குடி போனபோதே தன்னுடைய பிராமண வர்ணம் போய் விட்டது என்பதை நகரத்து (கெட்டுப்போன துவாஷி ) பிராமணர்கள் உணர வேண்டும்..//

//இந்து மதத்தை உருவாக்கியவர்கள் ஹிந்துதுவவாதிகள்.. சுமார் ஒரு 150 வருடங்கள் தான் இருக்கும்.. அதுக்கு முன்னாடி ஹிந்து மதம் என்ற ஒன்று இல்லவே இல்லை.. இது சம்பந்தமாக ஜடாயுவுடன், இன்னொரு பதிவில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது//

//கஞ்சா அடித்துவிட்டு போதையில் கண்டதை எழுதி தள்ளியவர் தான் பாரதியார்.. யாரையாவது இல்லையென்று சொல்ல சொல்லுங்கள் இங்கே? கஞ்சா ஏற்றிக் கொண்டால் யார் வேணும்னாலும் இபப்டி வாய்க்கு வந்த படி எழுதலாம்..//

//மேக்காலே சில்லபஸ்ல வெள்ளைக்கார முறையில் (மிஷனரி ஸ்கூலை காப்பியடித்து) பள்ளிக்கூடத்தை நடத்திக் கொண்டு நானும் நல்லவன் என வியாக்கியானம் பேசுவது பித்துகுளித்தனமாக இல்லாமல் என்ன சொல்வது? ஓரே ஒரு வித்தியாசம்.. மிஷனரி ஸ்கூலில் பைபிள் வாசிக்கப்படுவது.. இங்கே அதற்கு பதில் காயத்ரி மந்திரத்தையும், வேதத்தையும் வைத்து அதை சீரழித்து விட்டார்கள்.. இதற்கு பெயர் முற்போக்கா? ஒவ்வொன்றிலும், கிறித்துவ மிஷனரிகளை பார்த்து நாம் அடிக்கும் ஈயடிச்சான் காப்பியை பார்க்கலாம்..//

//வேதம் ஓதுவதற்கு என்ன தகுதி இருக்க வேண்டும் என்பதை யாராவது கவலை கொள்கிறார்களா? கிறித்துவன், பைபிள் வாசகத்தை தினமும் சொல்கிறான்.. உடனே இங்கிருக்கும் இந்துதுவவாதிகள் யோசித்தார்கள்.. நமக்கு என்ன இருக்கிறது என்று.. வேதத்தின் மேல் கையை வைத்துவிட்டார்கள்.. இங்கே பார்.. எனக்கும் புனித நூல் இருக்குது.. நானும் இனிமே உன்னை மாதிரி மந்திரம் வாசிப்பேன்..
இதுதானே இன்று நடந்து கொண்டிருக்கிறது..//

///** இந்து தர்மம் பற்றிய நெறிமுறைகளுக்கு யார் அத்தாரிட்டி? **/
இந்து தர்மம் என்றால் என்ன என்று பலமுறை கேட்டுவிட்டேன்.. இன்னும் பதில் இல்லை.. சமீபத்தில் கூட, இந்து மதம் பற்றிய இன்னொரு கட்டுரையில், என்னுடைய கேள்விக்கு இன்னும் நீங்கள் பதில் சொல்ல முடியவில்லை.. இந்து மதமும் இல்லை.. இந்து தர்மமும் இல்லை.. இல்லாத ஒன்றுக்கு ஏது அத்தாரிடி?//

//நம்முடைய் பாரதிய கலாச்சாரத்தில், போதனை என்ற ஒன்றே கிடையாது.. அதனால் தான் மதமாற்றம் என்ற ஒன்று இல்லை.. புத்தன் தான் முதன் முதலில், இந்த போதனை என்ற ஒன்றை சமுதாயத்தில் கொண்டுவந்தார்.. ( Budha is the first one to project himself as the messenger.. b4 that, there is no universal messenger in bharatheeya civilization )
வேதத்தை உருவாக்கின எந்த ரிஷியுமே, அனைவரிடத்திலும் வேதத்தை பரப்ப வேண்டும் என்று சொன்னது கிடையாது.. நான்கு வேதத்தையும் தொகுத்தருளிய வியாசரும் அப்படி சொன்னது கிடையாது.. ஆதி சங்கரர் கூட, அவரவர் பாரம்பரியம்தான் சிறந்தது.. வேதமா பாரம்பரியமா என்று வரும்பொழுது, பாரம்பரியம்தான் பிரதானமாக வரும் என்று சொன்னவர்..
ஆனால், இங்கே இருக்கும் இந்துதுவ வாதிகள் என்ன சொல்கிறார்கள் ??????//


மேலே குறிப்பிட்ட அனைத்து பின்னூட்டங்களும் திரு செந்தில் அதே பதிவில் அளித்தவை. மனிதர் எதைப்பற்றியும் கவலைபடாமல் விளாசி தள்ளுகிறார்.

நானும் பார்த்தேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

தனபால்

//அருமையான கற்பனை.//

அப்படி என்றால் இந்துமத வேதத்தில் எழுதப்பட்ட அனைத்துமே கற்பனை என்கிறீர்களா?

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் பெப்ள்!

//in some article I read as they are the followers of prophet Yahya(AWS). Please clarify this.//

நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், கிறித்தவர்கள், மற்றும் ஸாபியீன்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 2:62)

ஸாபியீன்கள் என்று சொல்லப்படக் கூடியவர்கள் நபியின் காலத்திற்கு முன்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் ஆனால் நபியவர்கள் எந்தக் கொள்கையை சொன்னால்களோ அந்தக் கொள்கைக்கு ஒப்பானவர்களாகத் தான் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை ஹதீஸ்களை ஆய்வு செய்யும் போது நாம் புரிந்து கொள்ள முடியும்.
ஸாபியீன்கள் என்போர் இறைத் தூதர்கள் அனுப்பப்படாத காலத்தில் வாழ்ந்த போதும் தங்களின் சிந்தனையைப் பயன்படுத்தி ஒரே கடவுள் கொள்கையை விளங்கிக் கொண்டவர்கள் என்பது ஹதீஸ்களை நாம் ஆய்வு செய்யும் போது தெரிய வரும் உண்மையாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிறைக் கொள்கையைச் சொன்ன போது அவர்களை இறைத் தூதர் என்று நம்பாத நபிகள் நாயகத்தின் எதிரிகள் நபியவர்களுக்கு ஸாபிஇ என்றே பெயர் வைத்து அழைத்தார்கள்.

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஒரு பயணத்தில் தண்ணீர் கிடைக்காத போது தமது தோழர்களை அனுப்பி வைத்தனர். அவர்கள் தண்ணீர்க் குடத்துடன் ஒரு பெண் செல்வதைக் கண்டு நபிகள் நாயகத்திடம் அவளை அழைத்தனர். அதற்கு அந்தப் பெண் ஸாபியீ என்று சொல்லப்படும் அந்த மனிதரிடமா என்று கேட்டாள். அதற்கு நபித்தோழர்கள் ஆம் அவரிடம் தான் என்று கூறினார்கள். இது நீண்ட ஹதீஸின் ஒரு பகுதியாகும். (பார்க்க : புஹாரி 344)

ஒரு குறிப்பிட்ட தூதரைப் பின் பற்றியவர்கள் என்று ஆதாரமான ஹதீதுகளோ குர்ஆன் வசனங்களோ ஸாபியீன்களைப் பற்றி கிடைக்கவில்லை. கிடைக்கும் செய்திகள் எல்லாம் ஒரு அனுமானமாக செவி வழிச் செய்தியாகவே கிடைக்கின்றன.

இறைவனே உண்மையை அறிந்தவன்.

suvanappiriyan said...

திரு சாரங்!

//மனிதன் எப்படி உச்சா போகவேண்டும் என்பது பற்றி ஆண்டாண்ட கோடி பிரம்மாண்டங்களை படைத்த அல்லாவுக்கு என்ன கவலை பாருங்கள். சுவனத்தில் ஆசை உள்ளவர்களும் தெருக்களில் உச்சா போகிறார்கள் – ரெம்ப நாஸ்தி பண்றதே இவக தான்.
இதை எல்லாமா வேதத்தில் வைப்பது.//


குர்ஆனில் எந்த இடத்தில் இப்படி ஒரு செய்தியைப் பார்த்தீர்கள்? சிறுநீர் சம்பந்தமாக வருவது முகமது நபி அறிவுரைகளாக சொன்ன ஹதீதுகளில் காணக் கிடைப்பது இரண்டையும் பொட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள்.

//இடைக்காலத்தில் வேதத்தில் சொருகல்கள் வந்தது என்று எப்படி சொல்கிறீர்கள் – எதை வைத்து சொல்கிறீர்கள். உங்களது ஆராய்ச்சி முடிவுகளை தாருங்கள் (உங்களை போன்றோர்கள் இப்போது நிறைய குரானை வைத்து ஆராய்ச்சி செய்வதால் கேட்கிறேன் ?)//

ஒரு வேதத்தில் ஒருவரின் கருத்தில் இரு முரண்பட்ட கருத்துக்கள் இருக்க முடியாது. ஒரு இடத்தில் ஒரு இறைவன்தான், வேறு யாரையும் வணங்கக் கூடாது என்று கூறும் வேதம், அடுத்த பாகத்தில் அக்னி, காற்று போன்ற இயற்கை பொருட்களை வணங்க சொல்கிறது. யஜூர் வேதத்தில் இயற்கை பொருட்களையும், மனிதனால் செய்யப்பட்ட சிலைகளையும் வணங்குபவர்கள் இருளில் நுழைந்து விட்டனர் என்று கூறுகிறது. ஒன்றுக் கொன்று எவ்வளவு முரண்பட்ட வசனம் என்பதை பாருங்கள். இதில் ஏதோ ஒன்று தான் இறைவனின் கூற்றாக இருக்க முடியும். இந்த வேதங்கள் செவி வழியாகவே அதிக நாட்கள் உலவி வந்ததால் பல தெய்வ கோட்பாடு இடைச் செருகல் என்பதை நம்மால் யூகிக்க முடியும். 'ஒன்றே குலம் ஓருவனே தேவன்', 'நட்ட கல்லும் பேசுமோ: நாதன் உள் இருக்கையில்' என்ற சித்தர் பாடல்களும், திருக்குறளும் இது போன்ற எண்ணற்ற நூல்கள் நம் மூதாதையர்கள் ஏக இறைவனையே வணங்கி வந்திருக்கின்றனர் என்பது தெளிவாகிறது. இந்து மதம் தனது மூல கொள்கையை இழந்ததால்தான் நாத்திகர்களை அதிகம் கொண்டதாக இந்து மதம் இருக்கிறது.

இன்று குர்ஆனில் இடைச் செருகல் உள்ளது என்று நீங்கள் சொன்னால் உடன் முகமது நபி காலத்தில் கையால் எழுதப்பட்ட மூல பிரதியை எடுத்து வாதிடலாம. இன்றும் கூட இஸ்தான்புல்லிலும் தாஸ்கண்டிலும் மூலப்பிரதிகள் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்து மத வேதங்கள் அருளப்பட்டபோது எழுத்து முறை உபயோகத்தில் இல்லை. முதன் முதலாக வேதங்களை எழுத்து வடிவில் கொண்டு வந்ததன் மூலப்பிரதியும் நம் கை வசம் இல்லை.

இனி விக்கிபீடியா தரும் செய்தியையும் பார்ப்போம்.

இந்து சமயத்தின் கடவுட் கொள்கை

இந்து சமயத்தில், இவ்வாறு பல கடவுள்கள் வணங்கப்படுவதன் காரணமாக இது ஒரு பலகடவுட் கொள்கை சார்ந்தசமயம் எனக் கூறப்படுவதுண்டு. எனினும், பல இந்து சமய ஆய்வாளர்கள் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. ஒரே கடவுளின் பல்வேறு அம்சங்களே பல கடவுள்களாக வணங்கப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவையாகக் கருதப்படும் நான்கு வேதங்களில் மிகப் பழமையான ரிக் வேதத்திலிருந்தே இதற்கு சான்றுகள் காட்டப்படுகின்றன.

வேதகாலக் கடவுள்கள்
வேதகாலக் கடவுள்களுக்கும், தற்காலத்தில் இந்துக்களால் வணங்கப்படும் கடவுள்களுக்கும் இடையில் பெருமளவு வேறுபாடுகள் காணப்படுகின்றன. வேதகாலத்தில் உயர் நிலையில் வைத்து வணங்கப்பட்ட பல கடவுள்கள் தற்காலத்தில் அந்நிலையை இழந்துள்ளார்கள். அக்காலத்தில் கீழ் மட்டத்திலிருந்த கடவுள்கள் இன்று உயர்நிலையில் மதிக்கப்படுகிறார்கள்.
வேதங்கள் முப்பத்து மூன்று கடவுள்களைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. இவர்களுள், இந்திரன், பிரஜாபதிஆகிய கடவுள்கள் தவிர, 8 கடவுள்கள் வசுக்கள் எனவும், 11 பேர் உருத்திரர்கள் எனவும், 12 பேர் ஆதித்தர்கள் எனவும் அழைக்கப்படுகிறார்கள்.
இருக்கு வேதத்தில் காணப்படும் கடவுள்களின் பெயர்கள் சில, வேறு இந்தோ-ஆரிய மக்களினங்கள் மத்தியிலும் புழக்கத்தில் இருந்து வந்திருப்பதைக் காணலாம். கிரேக்கர்களின்ஸேயுஸ் (Zeus), லத்தீன் மொழியிலுள்ள ஜுபிட்டார் (Jupiter) (தேயுஸ் பேட்டர் (deus-pater)என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டது) என்பவை இருக்கு வேதக் கடவுட் பெயரான தியாயுஸ் பிதாஎன்பதுடன் பொருந்தி வருவதைக் காணலாம்.

நேரம் கிடைக்கும் போது மேலும் பார்ப்போம்.

suvanappiriyan said...

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்
-குறள்: 388

நல்ல முறையில் நீதி பரிபாலனம் செய்து மக்கள் எவ்வகையிலும் துன்பப்படாமல் காப்பாற்றும் ஆட்சியாளன் இறைவனென்று வைக்கப்படும் என்கிறார் வள்ளுவர். அதாவது அந்த மன்னன் இறைவனைப் போன்று போற்றுதலுக்குரியவர் என்ற அர்த்தத்தில் வள்ளுவர் கூற பின்னால் வந்தவர்கள் அந்த மன்னனையே கடவுளாக்கி விட்டார்கள்.

அவ்வளவு ஏன் 'நான் பகுத்தறிவாதி' என்று கூறிக் கொள்ளும் கலைஞரே கூட 'அய்யன் திருவள்ளுவர்' என்று புகழ்ந்து இந்த கவிஞரையும் தெய்வசக்தி கொடுத்ததை நம் காலத்திலேயே பார்த்தோம். திருவள்ளுவரைப் பற்றிய முறையான வரலாற்றுக் குறிப்புகளும் நம்மிடம் இல்லை. 1959 ஆம் ஆண்டு கே.ஆர். வேணுகோபால் சர்மா என்ற ஓவியர் கற்பனையில் வரைந்த ஒரு உருவத்தைத்தான் இன்று வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். திருவள்ளுவர் என்ற பெயரே கற்பனையாக சூட்டப்பட்ட ஒன்று. இதற்கு எந்த ஒரு ஆதார நூல்களும் இல்லை. இனி மு.க.ஸ்டாலினின் மகன் முதல்வராகும் போது தாத்தாவின் புண்ணியத்தில் வள்ளுவரும் தமிழ்நாட்டில் தெய்வமாக்கப்படலாம். தமிழ் சமூகம் அதையும் அங்கீகரித்துக் கொள்ளும். :-)

இது ஒரு புறம் இருக்க இந்து மத வேதங்களின் தொகுதிகளில், விளக்கங்களில் ஒன்றாக ஸ்மிருதிகள் விளங்குகின்றன. இந்த வேதங்களும் ஸ்மிருதிகளும் எழுதப்படாமல் காதால் கேட்டு மனனம் செய்தே பாதுகாக்கப்பட்டு வந்தது. எனவேதான் சங்க இலக்கியங்களில் இந்த வகை நூல்களுக்கு 'எழுதாக் கிளவி' என்று பெயரிடுகின்றனர். எழுதி வைத்ததையே நமக்கு தோதாக மாற்றி விடும் மனித மனம் செவி வழிச் செய்தியாகவே பல நூற்றாண்டுகள் இருந்த ஒரு வேதத்தை எந்த அளவு பாதுகாத்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

ஸ்மிருதிகள் என்றால் என்ன?
“இவை தர்மசாத்திரங்கள், நித்தியகருமங்கள், ஆசாரம், விவகாரம், பிராயசித்தம், இராசதர்மம், வருணாசிரமம், அக்நிகார்யம், விரதம் முதலிய பலவற்றைக் கூறும். இவைகள் பல இருடிகளால் (ரிஷிகளால்) கூறப்பட்டவை”.
‘அபிதான சிந்தாமணி’ (பக்கம் 702)

“எல்லாவுலகங்களும் அரசனின்றி அச்சத்தால் எப்பக்கங்களிலும் சிதறுண்டிருக்குங்கால் அவ் வெல்லாவற்றையும் காத்தற் பொருட்டுப் பிரம்ம தேவன், இந்திரன், வாயு, இயமன், சூரியன் அக்கினி, வருணன், சந்திரன், குபேரன் ஆகிய இவர்களுடைய அழிவில்லாத கூறுகளைக் கொண்டு அரசனைப் படைத்தான்.”
-“சுக்கிர நீதி” என்ற வட மொழி நூல்

“பல்வேறு தெய்வங்களின் மனித வடிவமே மன்னன்”
-நாரத ஸ்மிருதி,- ஆ.சிவசுப்பிரமணியன்

அதாவது இறைவனுக்கு உரிய தகுதிகள் அனைத்தையும் நமது முன்னோர்களின் வேதங்கள் அரசனுக்கு தாராளமாக கொடுத்து வந்ததையே மேலே உள்ள வாக்கியங்கள் நமக்கு அறிவுறுத்துகிறது. இந்த கருத்துக்களை சாதாரண மனிதன் சொன்னதாக சொல்லாமல் இறை பக்தியை ஊட்டி வேதங்களின் மூலமாக சொன்னதால் நம் மனத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்து விட்டது.
“மன்னன் இயற்ற வேண்டிய விசாரணைகள் எந்த நாட்டில் நான்காம் வருணத்தாரால் நடை பெறுகின்றதோ அந்நாடு சேற்றில் அகப்பட்ட பசுவைப்போலக் கண் முன்னே துன்பமுறுகின்றது’ என்று குறிப்பிடுகிறார்” (8.21) மனு
நம் நாட்டு சட்டத்தை அம்பேத்கார் தலைமையில்தான் வகுத்ததாக சொல்வார்கள். நமது நாடு முன்னேறாமல் இருக்க இதுவும் ஒரு காரணமோ! தமிழ்நாட்டில் சட்டம் இயற்றும் அதிகாரத்தில் கலைஞர் அமர்ந்திருக்கிறாரே! தமிழ்நாடு ஒரு லட்சம் கோடி கடனில் தத்தளிப்பதற்கு இதுவும் காரணமாக இருக்குமோ!

“நாலாம் வருணத்தோன் அரசனாயிருக்கும் நாட்டில் அந்தணர் வாழக்கூடாது என்பது மனுவின் வழியாகும்” (4.61).
ஜெயலலிதாவை முதல்வராக்குவதற்கு சோ. ராமசாமி ஏன் இவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்கிறார் என்பதன் சூட்சுமம் இப்பொழுதுதான் விளங்குகிறது.

மனுவாறு விளங்க

மனுநெறி சிறக்க

மனுநெறி தழைக்க

உழைத்த நம் மன்னர்கள் தங்களை கடவுளின் அவதாரமாகவே மக்களிடம் காண்பித்து வந்தனர். உயிருடன் இருக்கும் போதே கடவுள் தன்மை வழங்கப்பட்ட மன்னர்கள் இறப்புக்கு பின்னால் வாரிசுகளின் சக்திக்கேற்ப சகதி வாய்ந்த கடவுளாக்கப்படுகின்றனர். வேத ஸ்மிருதிகளே மன்ன்தான் கடவுள் என்று சொல்வதால் மக்களும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.


அடுத்து திரு சாரங்! இன்று கடவுளின் உருவங்களாக வைத்து வணங்கப்படும் தோற்றத்தை எதை வைத்து தீர்மானம் செய்தீர்கள். கடவுள் முருகன் வடிவிலோ பிள்ளையார் வடிவிலோ இருந்ததாக உங்கள் வேதம் சொல்கிறதா?

suvanappiriyan said...

தொல்காப்பியம் புறத்திணையின் சூத்திரம்…

கொடிநிலை கந்தழி வள்ளியென்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன
முன்றுங் கடவுள் வாழ்த்தொடு
கண்ணியமே வருமே

இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கிணியர், கொடிநிலை வெங்கதிர் சூரியன் எனவும், வள்ளி இடை நின்ற கந்தழி ஒரு பற்றுக் கோடுமின்றி, அருவாகித் தானே நிற்கும் தத்துவம் கடந்த பொருள் ஆகும்! என விவரித்துள்ளார்.
ஆதித் தமிழர் இறைவனை உருவமற்ற அருவமாகவே வழுபட்டுத் தொழுதனர். இதை கா.சு. பிள்ளை, முழு முதற்கடவுளின் உண்மையும் – தன்மையும் உணர்ந்து, அவரை அருவமாக வழிபடக் கருதிய தமிழர், அவருடைய குணங்களையும் நினைத்து அவரைத் தொழுதனர். அந்நெறியே தமிழர் செந்நெறியாகும் என விவரித்துள்ளார். (தமிழர் சமயம்.)

PUTHIYATHENRAL said...

நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.

தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

VANJOOR said...

//ஆசார்ய நரேந்திர பூஷன் அவர்களது சீடரும், இந்து ஆன்மீக சாதகருமான சிவானந்த சர்மா அவர்கள், கர்நாடகத்தில் உள்ள பாரம்பரியம் மிக்க சிருங்கேரி மடத்தின் ஆசிரமத்தில் இணைந்துள்ளார். //

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட சிருங்கேரி மடம் கருநாடகத்தில் உள்ளது.

பரசுராமபாகு என்ற மராட்டிய இந்துத் தளபதி கருநாடகத்தின் மீது படையெடுத்தபோது இந்து மடம் என்று சிருங்கேரி மடத்தைக் கொள்ளையடிக்காமல் விட்டுவிடவில்லை.

60 லட்சம் பெருமானம் உள்ள அணிகலன்கள் யானை, குதிரை, பல்லக்கு ஆகியவற்றை அங்கிருந்து கொள்ளையடித்தான்.

சிருங்கேரி மடாதிபதிகள் வணங்கி வந்த சாரதா தேவியின் விக்ரகத்தைப் புரட்டிப் போட்டான்.

பல பிராமணக் குருக்களைக் கொன்றான்.

உயிருக்குப் பயந்து போய் சங்கராச்சாரியார் காஞ்சிலா என்ற இடத்திற்கு ஓடி ஒளிந்தார்.

அங்கிருந்தபடியே மைசூரில் இருந்த திப்பு சுல்தானுக்கு உதவி வேண்டி கடிதம் எழுதினார்.

திப்புவும் சாரதா பீடத்தை மீண்டும் நிறுவ பணமும் தானியங்களும் தந்துதவினார். சாரதா பீடத்தைக் காக்க படைகளையும் அனுப்பினார்.

இச்செய்திகளை சிருங்கேரி சாரதா மடத்திலுள்ள ஆவணங்களால் அறிகிறோம் (சிவண்ணா, 1999 : 4142).


SOURCE: இஸ்லாமியப் படையெடுப்பும் இந்துப் படையெடுப்பும்.- ஆ. சிவசுப்பிரமணியன்.

(மதுரை பாரதி புக் ஹவுஸ், 'இஸ்லாமியர் குறித்த வரலாற்றுத் திரிபுகள்' என்ற தலைப்பில் ஆ. சிவசுப்பிரமணியன் நூலிலிருந்து ஒரு பகுதி. )

.

Wtm said...

எதற்காக உயர்ஜாதி இனத்தவர்கள் திருவள்ளுவர், ஔவையார் பறையர் இல்லை என்று கொக்கரிகின்றார்கள் ? ஒரு தலித் சான்றோனாக இருக்கக் கூடாதா? ஏண்டா நீங்க மட்டும்தான் எல்லாவற்றிலும் இருக்க வேண்டுமா? திருவள்ளுவர் பறையர் என்பதினால் தமிழகத்தில், அதிக அரசுப் பேருந்துகளில் திருக்குறளை புறக்கணித்து வருகின்றார்கள்.

Wtm said...

எதற்காக உயர்ஜாதி இனத்தவர்கள் திருவள்ளுவர், ஔவையார் பறையர் இல்லை என்று கொக்கரிகின்றார்கள் ? ஒரு தலித் சான்றோனாக இருக்கக் கூடாதா? ஏண்டா நீங்க மட்டும்தான் எல்லாவற்றிலும் இருக்க வேண்டுமா? திருவள்ளுவர் பறையர் என்பதினால் தமிழகத்தில், அதிக அரசுப் பேருந்துகளில் திருக்குறளை புறக்கணித்து வருகின்றார்கள்.

Wtm said...

எதற்காக உயர்ஜாதி இனத்தவர்கள் திருவள்ளுவர், ஔவையார்,நந்தனார் பறையர்
இல்லை என்று கொக்கரிகின்றார்கள் ? ஒரு தலித் சான்றோனாக இருக்கக் கூடாதா?
ஏண்டா நீங்க மட்டும்தான் எல்லாவற்றிலும் இருக்க வேண்டுமா? திருவள்ளுவர்
பறையர் என்பதினால் தமிழகத்தில், அதிக அரசுப் பேருந்துகளில் திருக்குறளை
புறக்கணித்து வருகின்றார்கள்