Followers

Monday, November 07, 2011

வேலாயுதம்:-ஏழாம் அறிவு: சினி கூத்து!

வேலாயுதம்:-ஏழாம் அறிவு: சினி கூத்து!

பக்ரீத் விடுமுறை வந்து விட்டது. தமிழ் சினிமா பார்த்து அதிக நாட்கள் ஆகிறதே என்று 'ஏழாம் அறிவும்' 'வேலாயுதம்' படமும் ப்ளாசில் நண்பர் கொடுக்க இரண்டையும் பார்த்தேன். என்னைப் பொறுத்தவரையில் இந்த கூத்தாடிகள் பலன் பெறும் வகையில் தியேட்டரில் சென்றோ அல்லது காசு கொடுத்து சிடிக்களை வாங்கியோ படம் பார்ப்பதில்லை. என் போன்றவர்களின் முயற்ச்சியினால் இன்று தியேட்டர்கள் எல்லாம் வணிக வளாகங்களாக மாறி வருகிறது மகிழ்ச்சிக்குரிய மாற்றம்.

சரி... இனி விமர்சனத்தக்கு வருவோம்

ஏழாம் அறிவு:
ஓரளவு ஆங்கிலப் படங்களை யொத்த கதைக் கரு. போதி தர்மர் என்ற தமிழர் சீனா சென்று அங்குள்ள மக்களை தான் கற்ற கலைகளினால் அவர்களை கவர்ந்து அவர்கள் வழிபடும் தெய்வங்களில் ஒன்றாகிறார். இதுதான் கதைக்கரு.

இதில் நம்ம முருகதாஸ் அண்ணன் கொஞ்சம் மசாலாவையும் கலந்து தனது கற்பனையால் செதுக்கி தமிழர்களை தட்டி எழுப்ப முயற்ச்சித்திருக்கிறர்ர். திரைப்படத்தைப் பார்த்து எவருக்கும் உணர்வுகள் பீரிடப் போவதில்லை. அதிலும் கற்பனை கலந்த ஒருவரின் வரலாறு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. சொல்லப் போனால் போதி தர்மர் பின் பற்றியது பவுத்த மதம் என்று அறிகிறோம். அந்த பவுத்த மதத்தின் சுவடையே இல்லாமல் ஆக்கியது நம் தமிழ் முன்னோர்கள் செய்த பல தவறுகளில் ஒன்று. இந்து மதம் தழைக்காமல் பவுத்தமே நிலைபெற்றிருந்தால் தீண்டாமை என்ற அரக்கன் தமிழகத்தை இந்த அளவு சுவீகரித்திருக்க மாட்டான். எனவே போதி தர்மரை பின் பற்றி இந்து மதத்துக்கு மாறிய தமிழர்கள் அனைவரும் பவுத்த மதத்துக்கே திரும்ப வர வழைக்க முருகதாஸ் அண்ணன் முயற்ச்சிப்பாரா?

இனி படத்தில் உள்ள சில குறைகள்.

ஒருவரின் வாழ்க்கையை படமாக எடுக்கும் போது கூட கவர்ச்சியான டூயட்களும் நடனங்களும் தேவையா? அதிலும் சினிமாவில் பெண்களின் இழி நிலையை அறிந்த உலக நாயகன் என்று தன்னைக் கூறிக் கொள்பவர் தனது மகளை இந்த அளவு கீழிறங்க அனுமதிக்கலாமா? 'நீ மட்டும் சிமரனுடனும், கவுதமியுடனும் இன்னும் பலரோடும் கலைச் சேவை செய்யும் போது நான் மட்டும் அடுப்பங்கரையில் சமையல் செய்வதா?' என்று அம்மணி சண்டைக்கு வந்து விட்டால் என்ன செய்வது என்ற முன்னெச்சரிக்கையும் ஒரு காரணமாக இருக்கலாம்.

தரையில் கிடக்கும் இலை சருகுகளை எல்லாம் ஒன்றாக்கி எதிரியின் மேல் வீசுவதும், அடுத்து எதிரிகள் தங்களைத் தாங்களே அடித்துக் கொள்வதும் அதற்கு ஹிப்னாடிஸத்தைத் துணைக்கழைப்பதும் காமெடியின் உச்சக் கட்டம்.

அடுத்து டிஎன்ஏயின் மூலம் பல தலைமுறைக்கு முன்னால் உள்ள மூதாதயரின் எண்ணங்களையும் ஆற்றல்களையும் தற்போது உள்ள மனிதனுக்கு கடத்துவது என்பதும் டுபாக்கூர். ஏனெனில் ஒரு மனிதனுக்கு இரண்டு உள்ளங்களை இறைவன் படைக்கவில்லை. இது எப்படி இருக்கிறது என்றால் நாகூர் தர்ஹாவிலும், வேளாங்கண்ணியிலும், மாரியாத்தா கோவிலும இறந்து போனவரின் ஆவி இன்னொருவர் உடம்பில் ஏறி விட்டது என்று புரோகிதர்கள் பேய் ஓட்டும் டுபாக்கூர் நாடகம் நடக்கும். அது எந்த அளவு உண்மையில்லையோ அதே அளவுதான் நம்ம சூர்யா அண்ணன் உடம்பிலும் போதி தர்மரின் செயல்கள் புகுந்து விட்டதாக திரைக்கதை அமைத்திருப்பது. டிஎன்ஏவின் மூலம் பரம்பரையை அறிந்து கொள்ளலாம். செயல்களை தூண்டுதல் என்பது நடைமுறை சாத்தியமா எனபதை உயிரியல் படித்தவர்கள்தான் விளக்க வேண்டும். அட...நம்ம ரஜினிகாந்த் ஒரு ஹெலிகாப்டரை கயிற்றை சுழற்றி அதன் ஓட்டத்தையே நிறுத்தும் போது இது தமிழகத்தில் சாத்தியப்படாதா என்று நீங்கள் கேட்டால் நான் ஜூட்....:-)

இனி படத்தில் நிறைவாக....

காதல், அப்பா அம்மா எதிர்ப்பு, வில்லனோடு சண்டை என்றே பல யுகங்களாக பார்த்து வரும் நம் தமிழனுக்கு கஜினி, ஏழாம் அறிவு என்று கொஞ்சம் வித்தியாசமான கதைகளை கொண்டு வரும் ஏ.ஆர்.முருகதாஸை பாராட்டவே வேண்டும்.

-----------------------------------------------

அடுத்து வேலாயுதத்துக்கு வருவோம்....

இந்த படத்தின் மூலம் இஸ்லாமியர்களை இந்த நாட்டுக்கு அந்நியர்களாகவும் விசுவாசமற்றவர்களாகவும் காட்டவே டைரக்டர் முயற்ச்சித்து இருக்கிறார். இந்த கூத்தாடிகளுக்கு எவன் தாலி அறுந்தாலும் பரவாயில்லை அவர்களின் கல்லா நிரம்ப வேண்டும். இதற்கு முன் அர்ஜூன் என்ற கூத்தாடியும், விஜயகாந்த் என்ற (குடி) கூத்தாடியும் தங்களால் இயன்ற அளவு முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் நாட்டுக்கு விசுவாசமற்றவர்களாகவும் காட்டி தங்கள் இந்துத்வா அரிப்பை தீர்த்துக் கொண்டனர். அந்த இடத்திற்கு தற்போது விஜய் என்ற கூத்தாடி வந்திருக்கிறார். தனது அம்மாவுக்கு பெரியம்மா(ஜெயலலிதா) இசைக் கல்லூரியில் ஒரு போஸ்டை கொடுத்தவுடன் தம்பிக்கு முதலமைச்சர் கனவு வேறு வந்து தொலைக்கிறது. யார் கண்டது? தமிழகத்தில் எதுவும் நடக்கலாம்.

கொஞ்சம் தாடி, தோளில் ஒரு துண்டு, சில அரபு வார்த்தைகள் இதைப் பேசி இந்த நாட்டுக்கு எதிரானவர்களாக முஸ்லிம்களை காட்டுவது: இடையே அந்த வில்லன் அடிக்கடி 'அல்லா' என்று உச்சரிப்பது என்று இந்துத்வா வேலைகளை இந்த கூத்தாடிகள் சிறப்பாகவே செய்கின்றனர். இஸ்லாத்துக்கு ஆதரவாக ஒரு சில வசனங்களை பேசி நடுநிலை என்று வேறு காடட முயற்ச்சிப்பது போன்ற கூத்துகளும் உண்டு.

நான் கேட்பது! பாகிஸ்தான் ராணுவம் நம் தமிழகத்தில் குண்டுகளை போட்டால் என் குடும்பமும் எனது பிள்ளைகளும் இறக்க மாட்டார்களா? முஸ்லிம்களை தவிர்த்து அவனால் குண்டுகளைப் போட முடியுமா? முடியாது. அடுத்து தான் பிறந்த நாட்டை நேசிப்பது என்பது எவனும் சொல்லிக் கொடுத்து வருவதில்லை. அது அவர்களின் ரத்தத்திலேயே ஊறியது. எனது கம்பெனியில் சில நேரங்களில் காஸ்மீருக்கு ஆதரவாகவும், இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் சில பாகிஸ்தானிகள் பேசும் போது இந்தியர்களாகிய நாங்கள் ஒருமித்த குரலில் அவர்களை எதிர்ப்பதும் அவர்களின் சண்டையிடுவதும் எங்களுக்குத்தான் தெரியும்! இதை எல்லாம் சொல்லி எங்களை நாங்களே நிரூபித்துக் கொள்ளக் கூடிய அவசியம் அதுவும் இந்த கூத்தாடிகளிடம் எங்களுக்கு ஏற்பட போவதில்லை.

அடுத்து பாகிஸ்தானுக்கு உளவு வேலைகளைப் பார்ப்பதற்கு அவன் முஸ்லிம்களை தேர்ந்தெடுக்க மாட்டான். இந்துக்களை தேர்ந்தெடுத்தால்தான் இந்திய அரசுக்கு சந்தேகம் வராது என்பதால் அவன் தேர்ந்தெடுப்பது அதிகம் இந்துக்களைத்தான். முன்பு பாகிஸ்தான் உளவாளிகளாக பிடிபட்டவர்கள் யார் என்பதும் நமக்குத் தெரியும்.

அடுத்து மாலேகான் குண்டு வெடிப்பிலிருந்து அஜ்மீர் ஹைதரபாத் வரை முன்பு குண்டு வெடித்தவுடன் முஸ்லிம்களை கைது செய்தனர். பிறகு கைது செய்யப்பட்டது அனைவரும் இந்துத்வாவாதிகளே! தற்போது ஆதாரத்தோடு ஹேமந்த் கர்கரே பிடித்து கொடுத்த அத்தனை குற்றவாளிகளும் ஜாமீனில் வெளிவருகிறார்கள். நாடு உருப்பட்டு விடும்.

சில நாட்களுக்கு முன்பு கூட அத்வானியின் ரத யாத்திரை பிசுகிசுத்துப் போனதை கண்ட இந்துத்வா ஒரு சில முஸ்லிம்களின் துணையுடன் பைப் பாமை நம் தமிழகத்திலேயே வைக்கின்றனர். சரியாக வைத்தவர்களே போலீஸுக்கும் தகவல் கொடுத்து வழக்கம்போல் தர்பூசணி பழம் விறபவன்  போன்ற சிறந்த கிரிமினல்களை பிடித்து வைத்துள்ளனர். 'முஸ்லிம் தீவிரவாதிகள் பயங்கர வெடி குண்டுகளுடன் அத்வானியை கொல்ல சதி' என்ற செய்தி அனைத்து ஊடகங்களிலும் பரவலாக வந்து விட்டது. குண்டு வைப்பை கண்டித்து பாஜகவும் போராட்டம் நடத்த போகிறதாம். பிசுபிசுத்த அத்வானியின் ரத யாத்திரை இந்த செய்தியால் சிறிது சூடு பிடித்தது. ஆக இந்துத்வா வாதிகள் நினைத்தது நடந்து விட்டது. பிடி பட்டவர்கள் 'யார் வைக்க சொல்லி பணம் கொடுத்தது?' என்ற உண்மையை சொன்னாலும் பிறகு அது செய்தியாகவே வராது. அந்த அளவு ஆளும் வர்க்கத்தில் அவாள்களுக்கு சக்தி இருக்கிறது. இந்த இந்துத்வா கூத்தாடிகளும், இந்துத்வா பத்திரிக்கையினரும் என்னதான் திட்டம் போட்டு இஸ்லாமியர்களின் பெயர்களை களங்கப்படுத்த நினைத்தாலும் நடுநிலை வகிக்கும் இந்து மக்கள் இஸ்லாமியர்களோடு அதே சகோதர பாசத்துடனேயே பழகுகின்றனர். ஏனெனில் தன்னோடு அண்ணன் தம்பியாக பழகும் நம் நாட்டு இஸ்லாமியர்கள் கூத்தாடிகள் சொல்லும் இஸ்லாமியர்கள் அல்ல என்ற தீர்க்கமான முடிவில் இருப்பதால்தான் இது சாத்தியப்படுகிறது. அத்தகைய நல்லுள்ளம் படைத்த அந்த இந்து சகோதரர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இத்தகைய நல்லுள்ளம் கொண்ட நடுநிலை இந்து சகோதரர்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை இந்துத்வாவின் தில்லு முல்லுகள் தமிழகத்தில் எடுபடாது என்று மட்டும் சொல்லி வைக்கிறோம்.

மற்றபடி சரியான மசாலா கதையை சிறிது பாகிஸ்தான் சாயம் பூசி கல்லா கட்ட நினைத்துள்ளது இந்த கூத்தாடிகள் கூட்டம். விசேசமாக ஒன்றுமில்லை......

23 comments:

Anonymous said...

nalla padhivu vaazhththukkal nandri
surendran

ஆமினா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

//அடுத்து தான் பிறந்த நாட்டை நேசிப்பது என்பது எவனும் சொல்லிக் கொடுத்து வருவதில்லை.//

நச் பாய்ண்ட்...

எங்க ஊரிலும் கூட பல சினிமா தியேட்டர்கள் சுவடு தெரியாமல் வணிக வளாகங்களாக மாறிவிட்டது!

படத்துக்கு விமர்சனமா என்று நினைத்து தான் வந்தேன். ஆனால் நல்லதொரு கட்டுரையும் கூட

வாழ்த்துக்கள் சகோ

வஸ்ஸலாம்

உங்கள் சகோதரி
ஆமினா முஹம்மத்

indian said...

kodutha kaasukku athikama koovura thambi.

VANJOOR said...

இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாய‌த்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ காணுங்கள்.


CLICK


**** ஆதாமின்டே மகன் அபு *****


.

kannan said...

i don't use to spend much time for the watching movies. but very selected and choosy. 7th sense also one of that. since few years i didn't see vijai's movie. i agreed with your point of view. directer should get anough freedom to bring out their creation. same time it shouldn't hurt any religion or community. Muslims are being treated as terrorist in tamil cinema which should be condemned strongly.

best regards from

kannan
abu dhabi.
http://samykannan.blogspot.com/

suvanappiriyan said...

அனானி!

//nalla padhivu vaazhththukkal nandri//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

-----------------------------

சகோதரி ஆமினா!

வஅலைக்கும் சலாம்!

//படத்துக்கு விமர்சனமா என்று நினைத்து தான் வந்தேன். ஆனால் நல்லதொரு கட்டுரையும் கூட//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

திரு கண்ணன்!

//i agreed with your point of view. directer should get anough freedom to bring out their creation. same time it shouldn't hurt any religion or community. Muslims are being treated as terrorist in tamil cinema which should be condemned strongly.//

உண்மையை உரத்து சொன்னதற்கு நன்றி! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

suvanappiriyan said...

இந்தியன் அண்ணாச்சி!

//kodutha kaasukku athikama koovura thambi.//

உங்க இந்துத்வா அமைப்பு மாதாமாதம் உங்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது போல் எங்களுக்கு எதுவும் வர்றதில்லிங்கண்ணா! அப்படி யாராவது கொடுக்கிறவுங்க விலாசத்தை சொன்னால் நான் போய் வாங்கிகிக்கிறேங்கண்ணா. :-)

suvanappiriyan said...

வாஞ்சூர் பாய்!

//இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாய‌த்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ காணுங்கள்.//

சிறந்த ஒரு திரைப்படத்தின் இணைப்பைக் கொடுத்ததற்கு நன்றி!

suvanappiriyan said...

மலர்மன்னன்!

//ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுதல், பிராமணனைத் தவிர மற்ற ஜாதியார் வேதம் படிக்கக் கூடாது என்பதெல்லாம் ஆதாரம் இல்லாத வெற்றுப் பிரசாரம். துவேஷத்தைத் தூண்டிவிடுவதற்காகச் செய்யப்பட்டது. இந்த மாய்மாலப் பொய்கள் யாவும் என்றோ ஆதாரப் பூர்வமாக அம்பலப்படுத்தப் பட்டுவிட்டன!//

'பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும் பிரம்மாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததினாலும் எல்லா வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்கத் தலைவனாகிறான்' - மனு த.சா.ஆ .1 சு., 100 என்றும் 'சூத்திரன் பிராமணர்களைத் திட்டினால் அவன் தாழ்ந்த இடமான காலில் பிறந்தவனாகையால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்' (மனு த.சா.அ. 8.சு 270) என்றும் 'பிராமணனுக்கு மங்கலத்தையும், சத்திரியனுக்கு வலுவையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்கு தாழ்வையும் காட்டுகிற பெயரை இட வேண்டும்' - மனு (த.சா.அ 2 சு,31) என்றும் கூறுவது மனுவின் தருமம் ஆகும்.

உண்ணத்தக்க உயிர்களை நாள்தோறும் கொன்று உண்டாலும் பாவத்தை பிராமணன் அடைய மாட்டான். பிராமணனாலேயே உண்ணத்தக்கவையும் கொல்லத்தக்கவையும் படைக்கப்பட்டிருக்கின்றன- மனு (த.சா.அ.5.சு- 30)

பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனைச் சித்திரவதை செய்து கொல்லுக. ஆனால் பிராமணன் சூத்திரனின் பொருளை கொள்ளையிடலாம்' (மனு த.சா.அ.9.248)

கொடிய குற்றம் செய்தாலும் பிராமணனைக் கொல்லாமலும், மற்ற எத்தகைய துன்பத்திற்கும் ஆளாக்காமலும் அவனுடைய பொருளை அவனுக்குக் கொடுத்து அயலூருக்க அனுப்ப வேண்டும். (மனு த.சா.அ.சு 380)

அரசனானவன் எத்தகைய குற்றத்திற்கும் பிராமணனைக் கொல்ல நினைக்கக் கூடாது'
மனு (த.சா.க.8.சு.380)

நான் எழுதியது ஒரு சில சாம்பிளகளே! இன்னும் பல நூறு வசனங்கள் அள்ள அள்ள குறையாமல் வருகிறது. நான் கேட்பது இப்படி ஒரு கேடு கெட்ட சட்டத்தை நாடு முழுக்க தடை செய்யாமல் நாட்டு மக்களில் ஒரு சாரார் பயபக்தியோடு தினமும் படித்துக் கொண்டிருக்கிறோம். வேத பாட சாலைகளில் குழந்தைகளுக்கு சொல்லியும் கொடுக்கப்படுகிறது. இப்படி சிறு வயதிலிருந்தே கடவுளின் பெயரால் சிறுக சிறுக தீண்டாமை மனதிலே விதைக்கப்படுகிறது. எனவே தான் ஒரு சாரார் எவ்வளவு படித்திருந்தாலும் தீண்டாமையை ஆதரிக்க காரணமே! மலர் மன்னன் போன்ற எல்லாம் அறிந்த ஒரு பதிவரே இதற்கு வக்காலத்து வாங்கினால் தீண்டாமையை இன்னும் எத்தனை யுகமானாலும் மாற்றவே முடியாது. அந்த மக்கள் இஸ்லாத்தையும் கிறித்தவத்தையும் நோக்கி செல்வதையும் தடுக்க முடியாது.

குறள் 948
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

விளக்கம்
நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்)

//லப்பை வாழ்க, ராவுததர் ஒழிக என்கிற சுவர் இலக்கியம் தென்பட்டு மறையும்.//

இப்படி ஒரு சில பிரிவுகள் உண்டாவதற்கு தடை சொல்லும் பல குர்ஆன் வசனங்களை என்னால் காட்ட முடியும். ஆனால் இந்து மதத்தில் வர்ணாசிரமத்தை ஆதரிக்கும் வசனங்களே நான் மேலே காட்டியிருப்பது.

லெப்பை ராவுத்தர் என்றாலும் இஸ்லாமிய வட்டத்துக்குள் இவர் உயர்ந்தவர் அவர் தாழ்ந்தவர் என்ற நிலை இல்லை. அனைவரும் மசூதியில் ஒன்றாக நின்று தொழுகிறார்கள். பெண் கொடுத்து பெண் எடுத்து கொள்கிறார்கள். தங்கள் தொழிலை மாற்றிக் கொண்டால் அவர்களின் லெப்பை ராவுத்தர் என்ற பிரிவும் மறைந்து விடுகிறது. ஆனால் இந்து மதத்தில் பிறப்பால் ஒருவன் இன்ன சாதி என்று தீர்மானிக்கப்டுவதால் அவன் இறக்கும் வரை அவனத இழிவு நீங்குவதில்லை. அதற்கு உறுதுணையாக இருப்பது இந்து மத வேதங்கள்.

Unknown said...

Assalamu alikum
bro! Nice post thanks to sharing! Keep it up!!!

கலியுக தமிழன் KALIYUGA TAMILAN said...

அன்புள்ள சுவனப்பிரியனுக்கு, இனிய வணக்கங்கள்
உங்கள் விமர்சனம் மிகவும் புதுமையாக உள்ளது. பாராட்டுக்கள்...... நான் ஒரு இலங்கை தமிழன். அதுவும் இந்து மதமே சிறந்ததென வாதிடும் இந்துத் தமிழன்.
7ம் அறிவுடன் வேலாயுதத்தை ஒப்பிட்டு பேசக்கூடாது...... வேலாயுதத்தை பார்க்காவிட்டாலும் 7ம் அறிவை கண்டிப்பாக பார்க்கவே வேண்டும், சில பல காரணங்களுக்காக. அடுத்து.........
முஸ்லிம்களை தீவிரவாதிகளாய் காட்டும் போது உங்களுக்கு ஏற்படும் உனர்வுகளை என்னாலும் உணர முடியும்....... இங்கு சிங்கள திரைபடங்களில் தமிழர்களை தீவிரவாதிகளாய் காட்டுவார்கள்...... என்ன செய்வது? சினிமா எடுப்பது அவரவர் சுதந்திரம்......... அதை பார்க்காமல் தவிர்ப்பதே எம்மவர் தந்திரம்!!!
(நான் சூர்யா ரசிகனல்ல........ வெறி பிடித்த தீவிரமான ஷியான் விக்ரம் ரசிகன்)

suvanappiriyan said...

காவ்யா!, மலர்மன்னன்!

இங்கு மொழியை வைத்து சண்டை உக்கிரமாக நடந்து கொண்டிருக்கிறது. நாக்கை அறுக்கும் வரை சென்று விட்டது. மொழிப் பற்று இருக்கலாம். ஆனால் மொழி வெறி இருக்கக் கூடாது.

உலகில் உள்ள மூல மொழிகள் எல்லாமே இறைவன் மனிதர்களுக்கு கற்றுக் கொடுத்ததாக இறைவன் குர்ஆனிலே கூறுகிறான். ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தூதரை அனுப்பியதாக இறைவன் கூறுகிறான். நமது தமிழ் மொழிக்கும் ஒரு தூதர் வந்திருக்கலாம். அவர் திருவள்ளுவராகக் கூட இருக்கலாம்.

14:4. ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்;
30:22. மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.


46:12. இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் நேர்வழி காட்டியாகவும் ரஹ்மத்தாகவும் இருந்தது; (குர்ஆனாகிய) இவ்வேதம் முந்தைய வேதங்களை மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும்; இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.

பள்ளிவாசல்களில் குர்ஆன் அரபியில் ஓதப்படுவது கூட உலக ஒற்றுமைக்காக! அதே பள்ளியில் தமிழில் மார்க்க சொற்பொழிவு நடைபெறும். இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபடும்போது தாய் மொழியான தமிழில்தான் நாங்கள் பிரார்த்திப்போம்.

693. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"உங்களுக்குத் தலைவராக நியமிக்கப் படுபவர் கருப்பு நிறமுடைய (நீக்ரோவான) உலர்ந்த திராட்சைப் பழம் போன்ற தலையை உடையவராக இருந்தாலும் அவருக்குக் கட்டுப்படுங்கள். அவர்சொல்வதைக் கேட்டு நடங்கள்."
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :10 Bhuhary.



இந்த நபி மொழி மூலம் தலைவனாக ஒரு நீக்ரோ நியமிக்கப்பட்டாலும் அவரின் நிறத்தை கொண்டு ஒதுக்காமல் அவரது தலைமையை ஏற்று செயல்பட வேண்டும் என்ற அறிவுறுத்தல் பெறப்படுகிறது. இதனால் நிறத்தாலோ மொழியாலோ குலத்தாலோ ஒருவன் சிறந்தவனாகவோ உயர்ந்தவனாகவோ முடியாது என்பதை விளங்குகிறோம்.

suvanappiriyan said...

போஜிதன்!

//நான் ஒரு இலங்கை தமிழன். அதுவும் இந்து மதமே சிறந்ததென வாதிடும் இந்துத் தமிழன்.//

எனக்கு ஒரு கொள்கை இருப்பதுபோல் உங்களுக்கும் ஒரு கொள்கை. வாழ்த்துக்கள்.

//சினிமா எடுப்பது அவரவர் சுதந்திரம்......... அதை பார்க்காமல் தவிர்ப்பதே எம்மவர் தந்திரம்!!!//

நன்று!

//(நான் சூர்யா ரசிகனல்ல........ வெறி பிடித்த தீவிரமான ஷியான் விக்ரம் ரசிகன்)//

அது என்ன வெறி பிடித்த ரசினன். இங்குதான் தமிழன் ஏமாற்றப்படுகிறான். விக்ரம் தனது படத்துக்கு கோடிக் கணக்கில் பணத்தை வெள்ளையும் கறுப்புமாக வாங்கிக் கொண்டு 'அரசுக்கு துரோகம் இழைக்க மாட்டேன்' என்று வீர வசனம் எல்லாம் பேசுவார். இதனால் உங்களுக்கோ உங்கள் குடும்பத்துக்கோ ஏதாவது பலன் உண்டா? உங்கள் நாடு இன்று சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. உங்களைப்போன்ற இளைஞர்கள் உடைந்த உறவுகளை எப்படி சீர்படுத்துவது என்ற சிந்தனையில் இருக்க பாருங்கள். கூத்தாடிகளை நம் வாழ்க்கையிலிருந்து சற்று தூரமாக்குங்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

indian said...

Ok. Nadakatum. Unga aalungalaa vanthu jalra adipanga. Adichitu appadiye naasama ponga. Dont place any bomb anywhere :)

Anonymous said...

@ Indian,
Hai Hai
)))))Dont place any bomb anywhere :)((((
===Tell this to your RSS khakki trouser friends in saahaa weapon training camps.(with sword, gun and bombs)

suvanappiriyan said...

மார்கண்டேய கட்ஜு: இரண்டாவது, அநேக நேரங்களில் மக்களை பிளவுபடுத்துகிறது மீடியா.

இங்கே பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். ஒருவரை ஒருவர் மதித்தால்தான் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ முடியும். ஆனால் என்ன நடக்கிறது?

ஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் ‘குண்டு வைத்தது நாங்கள்தான் என்று இந்தியன் முஜாஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘ என்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன.

அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள். எஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.

யாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது?

முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.

எந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.

கரன் தாப்பர்: மீடியா இந்த விஷயத்தில் கேர்லசாக நடக்கிறது, தகவல் உண்மையா என்பதை செக் பண்ணாமல் செய்தி வெளியிடுகிறது என்கிறீர்களா அல்லது வேண்டுமென்றே அப்படி செய்வதாக நினைக்கிறீர்களா?

மார்கண்டேய கட்ஜு: மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன். நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.

= கரன் தாப்பர்: மீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்?

மார்கண்டேய கட்ஜு: குண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்தது என்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்?

suvanappiriyan said...

நரேன்!

//என் வாதம் என்னவென்றால், நீங்கள் மற்ற புத்தகங்களை செவி வழி செய்தியென்றால் அதே அளவுகோளில் குரானும் செவி வழி செய்திதான் என்றேன், இதில் குரானை சிறுமைபடுத்துவது எங்கு வந்தது. மற்றவைகளை சிறுமை என்றால் அவைகளும் நீயும் சிறுமையென்னும்.//

செவி வழி செய்தியாக வந்தாலும் குர்ஆனில் அறிவியலோடு மோதக்கூடிய வசனங்களை காண முடியாது. முரண்பாடுகளும் இருக்காது. இதை பைபிளில் சர்வ சாதாரணமாக பார்க்க முடியும். அதே போல் இந்து மத வேதங்களிலும் ஏக தெய்வ வணக்கமும் வரும். பல தெய்வ வணக்கத்தை ஆதரிக்கும் வசனங்களும் வரும். இந்த முரண்பாடுகள் வேதங்களில் வந்தால் இறைவனின் வல்லமைக்கே சவாலாக அமையும். இதைத்தான் நான் சுட்டிக் காட்டுகிறேன்.

//இது மேலே சொன்ன செய்திக்கு எதிர்மறையாக உள்ளதே எழுத படிக்கத் தெரிந்தவர்கள் அந்தக் காலத்தில் எல்லா சமுதாயத்திலும் குறைவாக இருந்திருக்கின்றனர்.//

முகமது நபி பிறப்பதற்கு முன்பே அரபுலகில் அரபி மொழியில் பல இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன. பட்டிமன்றங்கள் கூட கவிதை நடையிலேயே நடத்தப்படும். ஒரு அரபி குர்ஆனக்கு போட்டியாக ஒரு கவிதையை எழுதி அதை எல்லோரிடமும் படித்துக் காட்டி 'இது தான் குர்ஆனுக்கு போடடியா?' என்று அங்குள்ளவர்கள் சிரித்த வரலாறும் உண்டு.

//1) துருக்கியிலும் தாஸ்கண்டிலும் இருக்கும் குரான பிரதிகள் உஸ்மானால் எடுக்கப்பட்ட பிரதிகள் அல்ல.
2) அந்த பிரதிகள் முழுமையான பிரதிகள் அல்ல. ஆய்வுகள் செய்து அது உஸ்மானால் எடுக்கபபட்ட பிர்தகள் என்று கண்டுப்பிடிப்பு இல்லை.
3) அந்த இரு பிரதிகளின் எழுத்து நடை முகமது காலத்து எழுத்து நடையாக இல்லை.//

எழத்துக்கள் காலப்போக்கில் மாற்றம் அடைவது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். திருவள்ளுவர் எழுதிய திருக்குறளின் ஓலைச்சுவடிகள் நாம் எழுதும் தமிழை ஒத்தில்லை. நம்மால் படிக்கவும் முடியாது. ஆனால் வசனத்திலோ பொருளிலோ இன்று வரை திருக்குறளில் எந்த மாற்றமும் வரவில்லை. இதே அளவு கோலை குர்ஆனுக்கும் வைத்துப் பாருங்கள்.

முகமது நபி காலத்தில் புள்ளிகள் இல்லாமலேயே எழுவாய் பயனிலையை வைத்து அன்றைய அரபுகளும் இன்றைய அரபுகளும் குர்ஆனை சரளமாக படித்து விடுவர். ஆனால் என்னைப் போன்ற அரபு அல்லாதவர்களுக்கு புள்ளிகள் இல்லாமல் குர்ஆனை ஓதுவது சற்று சிரமம். தொடர்ந்து முயற்ச்சித்தால் படித்து விடலாம்.

suvanappiriyan said...

அனலைஸ்ட்!

//சொர்க்கம் புகுந்தவர்களுக்குப் பணிவிடை செய்வது அவர்களின் மனதிற்குப் பிடித்தமானதா என இந்தப் இளம் பெண்களுடமும் பையன்களிடமும் கடவுள் கேட்பாரா? அல்லது அவர்கள் உணர்ச்சிகளே இல்லாத ரோபோட்ஸ் ஆ? I would hate to be one of those 72 virgins.//

இஸ்லாத்தில் மலக்குகள் என்ற ஒரு படைப்பு உண்டு. இதையேதான் தேவதைகள் என்றும் தேவர்கள் என்றும் இந்து மதம் சொல்கிறது. இவர்கள் அனைவரும் இறைவன் என்ன கட்டளையிடுகிறானோ அதனை உடன் நிறைவேற்றக் கூடியவர்களாக இருப்பர். இறைவன் எதை எண்ணுகிறானோ அதனை நிறைவேற்றி முடிப்பர். சொர்க்கத்துக்கு சென்றவுடன் அங்கு எல்லாமே இன்பமாக இருக்கும் போது வெறுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.

இப்பொழுது சொர்க்கம் செல்ல உங்களுக்கும ஆசை வருகிறதல்லவா? :-)

//2. நீங்கள் நிரூபிக்க நினைப்பதையே அதற்குச் சான்றாக வைக்க முடியாது. இந்தப் புத்தகம் கடவுள் அருளியது. அதற்கான சான்று எங்கே? புத்தகத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது - Not good enough. Extraordinary claims need extraordinary evidence.//

அதுதான் குர்ஆனிலேயே நூற்றுக்கணக்கான வசனங்கள் சொல்லப்பட்டிருக்கிறதே! ஒரு வசனத்தை எடுதது 'இந்த வசனம் நிரூபிக்கப்பட்ட அறிவியலுக்கு முரண்படுகிறது.' என்று ஒரு வசனத்தை உங்களால ஏன் காட்டமுடியவில்லை? இனியாவது முயற்ச்சித்துப் பாருங்களேன்.
extraordinary evidence= இதற்கு இறைவனே நேரில்தான் வர வேண்டும்.

//3. மனிதரின் மனனம் செய்யும் சக்தியை நம்பவே முடியாது எனப் பல ஆராய்ச்சிகள் நிரூபித்துவிட்டன/நிரூபித்துக்கொண்டிருக்கின்றன. No matter how good anyone's memory is, It's still neither reliable nor objective. உலகம் முழுதுக்கும் அவசியமான வாழ்வியல் புத்தகத்தை கொடுக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கு வேறு வழியே இருக்கவில்லையா?//

மனனம் இங்கு ஒருவர் மடடும் செய்யவில்லை. வஹி வருவதை கேட்டுக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்த அனைத்து நபித்தோழர்களும் குர்ஆனை மனனம் இடுபவர்களாக இருந்தனர். சுவனப்பிரியனான எனக்கே கூட சில அத்தியாயங்கள் முற்றிலும் மனப்பாடமாக தெரியும்.

செவி வழியாக இல்லாமல் வேறு மார்க்கமாக வேதத்தைக் கொடுத்தாலும் அங்கும் உங்களின் கேள்வி வந்து நிற்கும்.

//4. கடவுள் நல்லதென்றால் எதுவும் நல்லது/கூடாதென்றால் கூடாது, சரிதானா? குரான் இல்லாவிடில் உங்களுக்கு நல்லது எது கெட்டது எதெனத் தெரிந்திருக்காதா? நீங்கள் விபச்சாரம் செய்யாமல் / மது அருந்தாமல் இருப்பதற்கு ஒரே காரணம் அல்லா வேண்டாம் என்றது மட்டும் தான், உங்களின் சொந்த முடிவு இல்லையெனில், அந்த எல்லாம் வல்ல கடவுளுக்கு நீங்கள் உண்மையிலேயே நல்லவரில்லை,//

ஐந்து வேளை தொழுது கொண்டு தாடியும் வைத்திருக்கும் பல முஸ்லிம்கள் தவறுகள் செய்கிறார்கள். ஒவ்வொரு மனிதனின் மனமும் தவறை நோக்கியே ஆர்வப்படும். சமூகம் சொந்த பந்தம் இவற்றை கணக்கில் கொண்டு நேர்மையாக வாழ்பவர்களும் இருக்கிறார்கள். இந்து மதத்திலும் கிறித்தவர்களிலும் நாத்திகர்களிலும் நல்லவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அதோடு கடவுள் பக்தியும் சேர்ந்து கொண்டால் மனிதர்களிலேயே சிறந்தவனாக இறைவனால் பார்க்கப்படுகிறான்.

உலகில் தீமைகள் மது,மாது,சூது,கொள்ளை,நம்பிக்கை துரோகம் போன்றவை பலருக்கு அழகாக தெரிவது தனது மனதுக்கு அடிமையானதாலேயே! அந்த மனதை வென்று இறைவனையும் வணங்குபவனே மனிதர்களில் புனிதனாகிறான்.

சிவகுமாரன் said...

புத்தமதம் தழைத்தோங்கும் இலங்கையிலும் சீனாவிலும் என்ன வாழ்கிறது ?

சிவகுமாரன் said...

இந்தியன் முஜாஹிதின் ., ‘ஜய்ஷ் இ முகமத் ,ஹர்கத் உல் ஜிஹாத் போன்ற தீவிரவாத அமைப்புக்கெல்லாம் ஏன் வக்காலத்து வாங்குகிறீர்கள்?

suvanappiriyan said...

சிவகுமாரன்!

// புத்தமதம் தழைத்தோங்கும் இலங்கையிலும் சீனாவிலும் என்ன வாழ்கிறது ?//

நான் புத்தமதத்தை தூக்ககிப் பிடிக்கவில்லை. போதிதர்மர் வாழ்ந்தபடி தமிழர்கள் தங்களை மாற்றிக் கொள்ளச் சொல்லி இந்த படத்தில் பிரசாரம் நடைபெறுகிறது. அதைத்தான் சுட்டிக் காட்டினேன். அதிலும் இந்து மதத்தின் வர்ணாசிரம கொள்கையை ஒப்பிடும்போது புத்தமதம் எவ்வளவோ மேல் என்பேன்.
//இந்தியன் முஜாஹிதின் ., ‘ஜய்ஷ் இ முகமத் ,ஹர்கத் உல் ஜிஹாத் போன்ற தீவிரவாத அமைப்புக்கெல்லாம் ஏன் வக்காலத்து வாங்குகிறீர்கள்?//

என் தாய் நாட்டுக்கு எதிராக அநியாயமாக ஒரு பாகிஸ்தானி செயல்பட்டால் அவனை நாயை விடக் கேவலமாக மதிப்பவன் நான். அது நமது இந்திய முஸ்லிமாக இருந்தாலும் சரியே!

ஆனால் இங்கு குறிப்பிடப்படும் பல தீவிரவாதக்குழுக்களை கற்பனையாக உருவாக்கியதே காவல்துறைதான். தங்களுக்கு பணமுடிப்பும், மெடல்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படுபவை. சில அப்பாவிகளை கைது செய்து கேஸை குளோஸ் பண்ண இவைகள் உதவும். அதைத்தான் நீதிபதியும் சுட்டிக்காட்டுகிறார்.

www.eraaedwin.com said...

மிக மிக அருமையான பதிவு.

நாம் விடாமல் இது போன்ற பதிவுகளை தருவோம்.

இந்த லிங்கை நீங்கள் பார்ப்பது அவசியம் எனப் படுவதால் தருகிறேன்.

http://eraaedwin.blogspot.com/2010/03/blog-post_06.html