Followers

Saturday, February 09, 2013

சம்பிக்க ரணவக்கவின் சரித்திரப் புரட்டு!



இலங்கை முஸ்லிம்கள் மீது பெரும் பான்மை சமூகத்தினர் வெறுப்புக் கொள்ளும் விதத்தில் அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களில் அதிகமானனோர் நல்ல மக்களாவர். ஒரு சின்னஞ் சிறு குழுவினர் முஸ்லிம்கள் மீது வெறுப்பேற்றும் வண்ணம் அவதூறு பரப்பி முஸ்லிம்களுக்கு எதிராக நாடு தழுவிய இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருகின்றனர்.

மஸ்ஜித்களுக்கு எதிராகச் செயற்படுதல், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் சிக்கலை உண்டுபண்ணுதல் என இவர்களது தேசத் தூரோகச் செயல்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவதை அண்மைய நிகழ்வுகள் மூலம் நாம் அறியமுடிகின்றது.

இந்த நாட்டின் எதிர்க்கட்சியினரும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பேசி சிங்கள இனவாத சக்திகளைக் கவரும் மனநிலைக்கு மாறியுள்ளனர். இஸ்லாமிய ஷரீஆ சட்டம் காட்டுமிராண்டித்தனமானது என்றும் முஸ்லிம்கள் விரும்பாத இன்னும் சில கருத்துக்களையும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசிய பேச்சுக்கள் இதனையே உணர்த்துகின்றன. எனவே, இத்தகைய அவதூறுகளுக்கு எதிராக முஸ்லிம் சமூகம் ஓரணியில் திரண்டு நல்லெண்ணம் வளர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

ஜாதிக ஹெல உருமயவின் சிரேஷ்ட உறுப்பினரும் தற்போதைய பொதுஜன ஐக்கிய முன்னனி அரசாகங்கத்தின் அமைச்சருமான பாடலீ சம்பிக ரணவக்க எழுதியுள்ள “அல் ஜிஹாத், அல் கைதா இஸ்லாமிய அடிப்படை வாதத்தின் கடந்த காலம், தற்காலம், எதிர்காலம்” என்ற நூலில் பெரும் சரித்திரப் புரட்டைச் செய்துள்ளார்.

“வடக்கிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களது சொத்துக்களை புலிகள் கைப்பற்றிக் கொண்டது போல் தப்பி வந்த அந்த முஸ்லிம்கள் புத்தளத்திலும் கல்பிட்டியிலும் உள்ள சிங்களவர்களது சொத்து, செல்வங்களைக் கைப்பற்றிக் கொண்டார்கள். (பக்கம் 278)”

இப்படி ஒரு அண்டப்புழுகை தனது நூலில் அமைச்சர் என்ற உயர் அந்தஸ்தில் இருந்து கொண்டு பதிவு செய்துள்ளார். புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் உண்ண உணவில்லாது அடுத்தகட்ட வாழ்க்கைக்கே வழிதெரியாமல் வந்தவர்கள். எப்படி சிங்கள மக்களது சொத்துக்களை அபகரித்தார்கள்? புலிகள் ஆயுத முனையில் முஸ்லிம்களை வெளியேற்றியது போல் சிங்கள மக்களை முஸ்லிம்கள் எதைக் கொண்டு வெளியேற்றினார்கள்? புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியதை உலகமே அறியும்! சிங்கள மக்களது சொத்துக்களை முஸ்லிம்கள் அபகரித்தார்கள் என்று இவர் மட்டும்தான் சொல்கின்றார். அப்படி முஸ்லிம்கள் அபகரித்திருந்தால் சிங்களவர்கள் சும்மா இருந்திருப்பார்களா? பிரச்சினை வந்திருக்காதா? குறைந்த பட்சம் பொலீஸிலாவது முறைப்பாடு செய்யாமல் இருந்திருப்பார்களா? நமது கண்ணுக்கு முன்னால் நடந்த உண்மை நிகழ்வுகள் குறித்தே இப்படி பொய்யை அவிழ்துவிட்டவர் கடந்த காலம், எதிர்காலம் பற்றிப் பேசினால் எவ்வளவு பெரிய பொய்களையும், கற்பனைகளையும் வெளியிடுவார் என்பதை எவரும் எளிதாக யூகிக்கலாம்.

புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை ஒத்துக்கொள்ளும் இவர், புலிகளுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் தொடர்பிருந்ததாக சித்தரிக்க முற்படுவது அடுத்த அண்டப்புழுகாகும்.

தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் புலிகளுடன் இணையாமல் நாட்டுக்கு விசுவாசமாகவே நடந்து கொண்டனர். முஸ்லிம்கள் புலிகளுக்கு உதவாத காரணத்தினால்தான் வடக்கிலிந்து முழுமையாக விரட்டப்பட்டார்கள். இந்தத் தியாகத்தை சம்பிக்கவோ, அவர் சார்ந்த அமைப்பினரோ இந்த நாட்டுக்காக செய்திருப்பார்களா?

புலிகள் கிழக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற முற்பட்டனர். அதற்காக காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை என முஸ்லிம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். கடத்தல், கப்பம் கோரல், கொலை செய்தல் என எல்லா இன்னல்களையும் தாங்கிக் கொண்டு கிழக்கிலேயே முஸ்லிம்கள் வாழ்ந்தனர். அன்று முஸ்லிம்கள் உயிருக்குப் பயந்து வெளியேறியிருந்தால் புலிகளின் தமிழ் ஈழக் கனவு நனவாகியிருக்கும். பிரபா-கருணா பிரிவும் தவிர்க்கப்பட்டிருக்கும். இன்று வடகிழக்கு தனி நாடாக மாறியிருக்கும். முஸ்லிம்களது உயிர்த் தியாகத்தால்தான் இன்று இது ஒன்றுபட்ட ஒரு தனி தேசமாக திகழ்கின்றது. இந்தத் தியாகத்தைச் செய்த முஸ்லிம்களைத்தான் புலிகளுடன் சேர்ந்தவர்கள் என்றும் தேசப் பற்றில்லாதவர்கள் என்றும் சம்பிக்க சாடி வருகின்றார்.

இந் நாட்டில் புலிகள் நடாத்திய முக்கியமான பல தாக்குதல் சம்பவங்களுக்குப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பலரும் துணை போயுள்ளனர். பணத்துக்காக பல முக்கிய அதிகாரிகளே புலிகளுக்கு உதவியுள்ளனர். ஆனால், முஸ்லிம்கள் இத்தகைய ஈனச் செயல்களில் ஈடுபட்டதில்லை. ஒரு கட்டத்தில் “சிங்கள கொட்டியா” (சிங்களப் புலிகள்) என்ற சொல் பயன்படுத்தப்படும் அளவுக்கு சிங்கள மக்கள் சிலரது உதவி புலிகளுக்குக் கிடைத்துள்ளது. இப்படியிருக்க முஸ்லிம்களுக்குப் புலிகளுடன் தொடர்பிருந்ததாகவும் முஸ்லிம்கள் தேசத் துரோகிகள் என்றும் சம்பிக்க கூறுவது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.

கடாபி இலங்கை வந்த போது இலங்கையை ஒரு இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்று பேசினாராம். கடாபி நாற்பது வருடம் ஆட்சி செய்த லிபியாவையே அவர் இஸ்லாமிய நாடாக மாற்றாத போது இலங்கையை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்று அவர் எப்படிப் பேசுவார் என்றெல்லாம் யோசிக்காமல் சம்பிக்க போன்றவர்கள் கிணற்றுத் தவளைகள் போல் சிந்திப்பது கேள்விக்குறியாயுள்ளது.

முஹம்மத் இப்னு காஸிம் இந்தியா வந்த போது 5000 பிக்குகளைக் கொன்றார் என்றொரு தகவலையும் அவர் குறிப்பிட்டு முஸ்லிம்கள் மீது வெறுப்பேற்றுகின்றார். இந்தியாவை முஸ்லிம்கள் 800 வருடங்கள் ஆண்டுள்ளார்கள். இருந்தும் அங்கே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக மாறவில்லை. இந்தியா வந்த முஹம்மத் இப்னு காஸிம் பிக்குகளைக் கொன்று குவித்திருந்தால் ஆலயங்களை அழித்திருந்தால் 800 வருடங்கள் இது நடந்திருந்தால் எச்ச சொச்சங்கள் கூட இல்லாத அளவுக்கு அங்கு சிலை வணக்கம் அழிக்கப்பட்டிருக்குமே! ஏன் அப்படி நடக்கவில்லை? என்று இந்த சிந்தனைச் சூனியங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

உண்மை என்னவென்றால், இந்தியாவை ஆண்ட முஸ்லிமல்லாத மன்னர்களை விட முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்திய மக்களுடன் நல்ல முறையில் நடந்து கொண்டதால்தான் சிறு தொகையினராக இருந்த முஸ்லிம்கள் பெரும்பான்மை மக்களை 800 வருடங்கள் ஆள முடிந்தது. இல்லையென்றால் பிரிட்டிஷை விரட்டியதை விட வேகமாக முஸ்லிம் ஆட்சியாளர்களை இந்திய மக்கள் விரட்டியிருப்பார்கள். ஆயுத பலத்தை விட ஆள்பலமே மேலோங்கியிருந்த அந்தக் காலகட்டத்தில் முஸ்லிம்களது ஆட்சியை அவர்கள் அங்கீகரிக்கும் அளவுக்கு முஸ்லிம் மன்னர்கள் நாட்டு மக்களுடன் நல்ல முறையில் நடந்து கொண்டனர் என்பதுதான் உண்மை வரலாறாகும்.

இஸ்லாம் பரவுவதற்கு காமமும் பணமும் தான் காரணம் என்று வக்கிர வார்த்தையால் தாக்கியுள்ளார் சம்பிக்க!

“சிலருக்கு அரபிகளது வியாபார மற்றும் காம கலாசாரத்துடன் இணைவதற்கு பாரம்பரிய பௌத்த மதம் தடையாக இருந்தது. உதாரணமாக மலாயாவின் அரசன் (1400 ஆம் வருடம்) பல மனைவியரை வைத்துக் கொண்டு காம சுமகம் பெற பௌத்தம் தடையாக இருந்ததனால் அவன் இஸ்லாத்திற்குள் சென்றான். இஸ்லாம் அப்பகுதிகளில் அப்படித்தான் பரவியது.” (பக்கம் 55)

இது அப்பட்டமான பொய் என்பதற்கு நடைமுறை உலகே சான்றாகும். சில பௌத்த துறவிகள் துறவி ஆடையை அணிந்து கொண்டே காம லீலைகளில் ஈடுபட்ட நிகழ்வுகள் பத்திரிகைகளில் வெளிவருகின்றன. இப்படியிருக்கும் போது ஒரு மன்னன் காமத்துக்காக மதத்தை மாற்ற வேண்டுமா? சம்பிக்க கூட பல பெண்களுடன் வாழ்க்கை நடாத்த விரும்பினால் சட்டபூர்வமாக திருமணம் செய்யாமல் எத்தனை பெண்களுடனும் வாழ எந்த நாட்டிலும் தடையில்லை. இதிலிருந்து இது இவரது கீழ்த்தரமான வக்கிர புத்தியால் எழுந்த கற்பனை என்பது வெள்ளிடை மழை.

இவர் சொல்வது உண்மையென்றால் இஸ்லாத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் பலதார மணம் புரிந்து வாழ்ந்திருக்க வேண்டும். அப்படியும் நடக்கவில்லை. இன்று ஐரோப்பாவில் வெகு வேகமாக இஸ்லாம் பரவி வருகின்றது. அங்கு காமத்துக்கு எந்தத் தடையும் இல்லை. ஆட்டம், பாட்டு, கூத்து, ஆபாசம் என்று அலைபவர்களைக் கூட இஸ்லாம் கவருகின்றது. அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின்னர் பழைய காம வாழ்க்கை வாழ முடியாது என்று நன்றாகத் தெரிந்திருந்தும் வருகின்றார்கள்! இப்படியிருக்க சம்பிக்க கூறும் கூற்று எவ்வளவு பெரிய பொய்யென்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்.

காமத்தைக் காட்டி மதத்தைப் பரப்புவதென்றால் முஸ்லிம்களும் ஆண்-பெண் வேறுபாடின்றி அரைகுறை ஆடையுடன் கலந்து கொஞ்சிக் குலாவும் மதக் கிரியைகளையும் அங்கீகரித்திருப்பர். வேறெந்த மதத்திலும் கடைப்பிடிக்கப்படாத அளவுக்கு ஆண்-பெண் கலப்பில்லாத, கவர்ச்சியான ஆடையமைப்பில்லாத ஆட்டம், பாட்டு, கூத்து போன்றவற்றை அங்கீகரிக்காத சமூகமாக முஸ்லிம் சமூகம் இருப்பதை நடுநிலை மக்கள் சிந்தித்துப் பார்த்து இவரின் கோர முகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இவர் தனது நூலில் அரபு மத்ரஸாக்கள், குர்ஆன் மத்ரஸாக்களைக் கூட தீவிரவாதத்தின் மையங்களாகச் சித்தரித்துள்ளார். இத்தகைய கருத்துக்கள் இனங்களுக்கு மத்தியில் தப்பெண்ணங்களை வளர்ப்பதினாலும் எதிர்காலத்தில் இனக்கலவரங்களுக்குக் காரணமாக அமைவதாலும் இது போன்ற கருத்துக்களையுடைய நூற்களை அரசு தடைசெய்ய வேண்டும்.

தேசிய ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் சீர்குலைக்க எத்தணிக்கும் இத்தகைய தேசத் துரோகக் குற்றவாளிகள் மீது நீதித்துறை தமது கவனத்தைத் திருப்ப வேண்டும்.

இவரது இந்த சிந்தனையை உள்வாங்கிய ஒரு குழு முஸ்லிம்களது கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாம் எனப் பிரச்சாரம் செய்து வருகின்றது. ஒரு கலவரத்தை உண்டுபண்ண சதி செய்து வருகின்றது. கல்விக் கூடங்களில் கூட சில நெருக்கடிகளை முஸ்லிம் மாணவர்கள் சந்திக்கும் இக்கட்டான நிலையும் ஏற்பட்டு வருகின்றது.

எனவே, முஸ்லிம் சமூகப் புத்திஜீவிகள், அரசியல் தலைமைகள் இது குறித்து நிதானமான தூரநோக்குப் பார்வையுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.

சம்பிக்கவின் இது போன்ற கருத்துக்கள் ஐம்பது அல்லது நூறு வருடங்களின் பின் சரித்திரமாக மாறலாம். இன்றில்லாவிட்டாலும் எதிர்காலத்தில் கூட இந்நூல் இனக்கலவரங்களை உண்டுபண்ணும். எனவே, இக்கருத்துக்களுக்கான மறுப்புக்களைப் பதிவு செய்ய வேண்டியுள்ளது. இது போன்ற நூற்களுக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்து அதையும் ஒரு பதிவாக்க வேண்டியுள்ளது. இராமர் கோயிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது என்ற தவறான சரித்திரம்தான் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட அடித்தளமானது. இது போன்று எதிர்காலத்தில் இலங்கையில் பிரச்சினைகள் எழாமல் இருக்க மறுப்புக்களும் பதியப்பட வேண்டும். இது குறித்து முஸ்லிம் புத்திஜீவிகள் கவனம் செலுத்த வேண்டும் என பணிவாய் வேண்டிக் கொள்கின்றோம்…..

இவ்விடயத்தில் அனைத்துத் தரப்பினரையும் அல்லாஹ் ஒன்றிணைப்பானாக!

- S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
– ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்

சிங்கள மொழி தெரிந்தவர்கள் இந்த கட்டுரையை மொழி பெயர்த்து சிங்களவர்கள் மத்தியில் பரப்ப வேண்டும். ஒரு பொய்யை இன்று பதிந்து விட்டால் இன்னும் 10 வருடங்களில் அது வரலாறாக பதியப்பட்டு விடும் கொடுமையை பல இடங்களில் பார்த்து வருகிறோம். சிங்கள மக்களுக்கு தேவையற்ற அச்சத்தை உண்டு பண்ணி குழப்பம் விளைவிக்க பலர் முயன்று வருகின்றனர். இந்துக்களும், முஸ்லிம்களும், கிறித்தவர்களும், பவுத்தர்களும் பகையை மறந்து நட்பு சூழல் உருவாவதை சில நாச காரா சக்திகள் விரும்புவதில்லை. அதற்கு பலியாகி விடாமல் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது.

--------------------------------------------------------------------

//நீங்கள் நினைப்பதுபோல் கிறிஸ்தவ பாதிரி எவரும் எரித்துக் கொல்லப்படவில்லை. நீங்கள் குறிப்பிடுவது ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கு வந்து வனவாசிகளிடையே மத மாற்றம் செய்வதில் ஈடுபட்டவர் தமது மகனுடன் வண்டிக்குள் உறங்குகையில் தீப்பற்றி எரிந்த சம்பவம். அவரது பிரசார வேனில் வெப்பத்தைத் தணிப்பதற்காகக் கூரையிலும் வேனுக்குள் தரையிலும் வைக்கோல் பரப்பப்பட்டிருக்கும்.//

இவ்வளவு அப்பட்டமாக நடந்த ஒரு கொலையை மலர் மன்னன் என்ற ஒருவரால்தான் விபத்து என்று சமாளித்து எழுத முடியும். இதையே மாற்றி எழுதுபவர்கள் 2000 வருடங்களுக்கு முன்பு எந்த மாதிரியான சரித்திர புரட்டுகளை அரங்கேற்றியிருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை. வாழ்க பாரதம். வெல்க மலர்மன்னனின் சமாளிப்புகள்.:-(

திண்ணையில் மலர் மன்னன் எழுதிய ஒரு கருத்துக்கு நான் இட்ட பின்னூட்டமே இது. இந்துத்வா வாதிகள் எந்த அளவு தங்கள் தவறை மறைக்க எவ்வளவு பெரிய பொய்களை வேண்டுமானாலும் அரங்கேற்ற துணிய மாட்டார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

அடுத்து அப்சல் குருவை தூக்கில் போட்டாகி விட்டது. அவன் உண்மையிலேயே எனது நாட்டின் பாராளுமன்றத்தை தாக்க வந்திருந்தால் தூக்கில் போட மிக தகுதியான நபரே. ஆனால் சமூக ஆர்வலர்கள் சொல்வது போல் இது பிஜேபி செய்த அரசியல் நாடகம் என்றால் இதற்கான விலையை இந்த உலகத்தில் பெறா விட்டாலும் மறுமையில் பெற்றுக் கொள்வார்கள். நாம் அனைவரும் கண்டிப்பாக அங்கு சமூகமளித்திருப்போம்.

----------------------------------------------------------

அப்சல் குரு மீதான விசாரணை மற்றும் நீதிமன்ற தீர்ப்பு குறித்து அருந்ததி ராய் எழுப்பிய பதிமூன்று கேள்விகள்.

http://www.guardian.co.uk/world/2006/dec/15/india.kashmir

கேள்வி 1 : இந்த தாக்குதல் நடப்பதற்கு பல மாதங்கள் முன்பிருந்தே பாராளுமன்றத்தின் மீது பெரும் தாக்குதல் நடக்க விருக்கிறது என்று காவல்துறையும் அரசாங்கமும் சொல்லிக் கொண்டேயிருந்தது. 12 டிசம்பர் 2001 அன்று பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஒரு தனிப்பட்ட கூட்டத்தில் பாராளுமன்றம் மீது பெரும் தாக்குதல் நடக்கவிருக்கிறது என்று கூறினார். டிசர்பர் 13 அன்று பாராளுமன்றம் தாக்கபட்டது. இத்தனை எச்சரிக்கைகள், பாதுகாப்பு நடைமுறைகள் அங்கு இருந்தபோதும், எப்படி வெடிப் பொருட்களுடனான அம்பாசிடர் கார் பாராளுமன்ற வளாகத்துல் நுழைந்தது?


கேள்வி 2 : இந்த தாக்குதல் நடந்த சில தினங்களில் டெல்லி காவல்துறை இந்த தாக்குதல் ஜைஸ்-ஏ-முகம்மது மற்றும் லக்சர் ஏ தோய்பா ஆகிய இரு இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை என்று அறிவித்தது. இந்த தாக்குதலை 1998 காந்தகார் விமான கடத்தலில் ஈடுபட்ட முகமது தான் செய்தார் என்று காவல்துறை மிக துள்ளியமாக தெரிவித்தது. (இதனை பின்பு சிபிஐ மறுத்தது) இவைகளில் எவையும் நீதிமன்றத்தில் நிறுபிக்கபடவில்லை. இப்படி கூறிய காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவிடம் என்ன சான்றுகள் இருந்தது?

கேள்வி 3: இந்த மொத்த தாக்குதல்களும் பாராளுமன்றத்தின் கண்கானிப்பு காமிராக்களில் பதிவாகியிருந்தது. காங்கிரஸ் எம்பி கபில் சிபில் அவர்கள் இந்த தாக்குதல்களில் பதிவுகள் எல்லாம் பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் காட்டப்பட வேண்டும் என்றார். அவரது வாதத்தை ராஜ்ய சபாவின் துணை தலைவர் நஜ்மா ஹெப்பதுல்லா ஆதரித்தார், மேலும் இந்த தாக்குதல்கள் தொடர்பான விபரங்கள் அனைத்திலும் பல குழப்பங்கள் உள்ளது என்றார் அவர். பாராளுமன்ற காங்கிரஸ் அவை தலைவர் ப்ரியரஞ்சன் தாஸ்முன்சி அவர்கள் , “நான் அந்த காரில் இருந்து ஆறு பேர் இறங்கியதை பார்த்தேன், ஆனால் ஐந்து பேர் மட்டுமே சுட்டுக் கொல்லப்பட்டனர், கண்கானிப்பு காமிராவின் பதிவில் ஆறு பேர் இறங்கியது பதிவாகியுள்ளது.” என்றார். தாஸ்முன்சி கூறுவது சரி என்றால் ஏன் காவல்துறை ஐந்து பேர் தான் இருந்தார்கள் என்று கூறுகிறது? அப்படி என்றால் யார் அந்த ஆறாவது நபர்? அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார்? அந்த கண்கானிப்பு காமிராவின் பதிவு ஏன் இந்த வழக்கு விசாரனையில் சாட்சியமாக அளிக்கபடவில்லை? இந்த பதிவை ஏன் பொதுமக்கள் பார்வைக்கு அவர்கள் வெளியிடவில்லை?

கேள்வி 4 : இப்படியாக சில கேள்விகளை பாராளுமன்ற் உறுப்பினர்கள் எழுப்பியவுடன் ஏன் அவை ஒத்திவைக்கபட்டது?

கேள்வி 5 : டிசம்பர் 13 தாக்குதல் நடந்து சில தினங்கள் கழித்து இந்திய அரசு இந்த தாக்குதல்களில் பாகிஸ்தானின் தலையீடு இருப்பது தொடர்பாக மறுக்கமுடியாத சாட்சியஙக்ள் உள்ளது என்று அறிவித்தது. அதனால் உடன் இந்திய பாகிஸ்தான் எல்லையில் ஐந்து லட்சம் ராணுவ துருப்புகளை அனுப்பினார்கள். பெரும் அணு ஆயுத போர் சூழல் நோக்கி இந்திய துணை கண்டமே நகர்த்தப்பட்டது. அப்சலை சித்தரவதை செய்து பெற்ற வாக்குமூலங்கள் (இந்த வாக்குமூலங்களை கூட அதன் பின் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது) தவிர்த்து அப்படி எந்த அசைக்க முடியாத சாட்சியம் அரசிடன் இருந்தது?

கேள்வி 6 : எல்லை நோக்கிய இந்த படைகள் அனுப்புதல் என்பது தாக்குதல்களுக்கு வெகு முன்பாகவே தொடங்கப்பட்டதா?

கேள்வி 7: இந்த ராணுவ படைகள் எல்லையில் குவிப்பு ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்தது, அதற்கு மொத்தம் எவ்வளவு செலவானது? இந்த நடவடிக்கைகளில் எத்தனை ராணுவ வீரர்கள் பலியானார்கள்? கண்ணிவெடிகள் கையாண்டதில் மொத்தன் எத்தனை ரானுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் இறந்தார்கள்? தொடர் ராணுவ வாகணங்கள் இந்த கிராமங்களில் வழியே சென்றதால் எத்தனை கிராமவாசிகள் தங்களின் வீடுகளை, வயல்களை இழந்தார்கள்? இந்த விவசாயிகளின் வயல்களில் எத்தனை கண்ணிவெடிகள் புதைக்கபட்டது?

கேள்வி 8 : ஒரு குற்றப்புலனாய்வில் சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த தடையங்கள் எவ்வாறு குற்றம் சாட்டபட்டவருடன் தொடர்புடையவை என்பதை நிறுவுவது காவல்துறையின் பணி. காவல்துறை எவ்வாறு அப்சல் குருவை வந்தடைந்தது? கிலானியின் வாக்குமூலங்களின் வழிதான் நாங்கள் அப்சல் குருவை நெருங்கினோம் என்றது சிறப்பு புலனாய்வு பிரிவு. ஆனால் கிலானியை கைது செய்வதற்கு முன்பாகவே ஸ்ரீநகர் காவல்துறை அப்சல் குருவை தேடும் நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டது. எந்த வகையில் சிறப்பு புலனாய்வு பிரிவு அப்சல் குருவையும் டிசம்பர் 13 அயும் இனைத்தது?

கேள்வி 9 : அப்சல் குரு ஒரு சரணடைந்த தீவிரவாதி அவர் தொடர்ச்சியாக இந்திய ராணுவத்துடன் (STF-J&K)தொடர்பில் இருந்தவர் என்பதை நீதிமன்றமே ஆமோதித்தது, இந்திய ராணுவத்தின் நேரடி கண்காணிப்பில் இருந்த ஒருவர் எப்படி இத்தனை பெரும் தாக்குதல் நடவடிக்கையை திட்டமிட்டார்?

கேள்வி 10 : லக்சர் ஏ தோய்பா, ஜைஸ் ஏ முகம்மது போன்ற அமைப்புகள் இந்தியா மீது ஒரு தாக்குதலை தொடுக்க STF-ன் நேரடி தொரட்பில், கண்காணிப்பில் உள்ள ஒருவரை இந்த பெரும் சதியின் முக்கிய தொடர்பாளராக தேர்வு செய்யுமா?

கேள்வி 11 : தன்னிடம் தாரிக் என்பவர் முகமத் என்பவரை அறிமுகம் செய்து “இவரை நீ தில்லிக்கு அழைத்து செல்” என்று கூறியதாக நீதிமன்றத்தில் அப்சல் குரு தெரிவித்தார். தாரிக் காஷ்மீர் STF-ல் பணியாற்றியவர், தாரிக்கின் பெயர் காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ளது. யார் இந்த தாரிக், அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார்?

கேள்வி 13 : டிசம்பர் 19, 2001, தாக்குதல் நடந்து ஆறு தினங்கள் கழித்து மகாராஷ்டிரத்தின் தானே பகுதி காவல்துறை கண்கானிப்பாளர் எஸ்.எம்.சாங்காரி பாராளுமன்ற தாக்குதல்களில் கொல்லபட்ட ஒருவரை லக்‌ஷர் ஏ தோய்பாவின் முகமத் யாசின் ஃபதே என்று அடையாளம் காண்பித்தார், இவரை மும்பையில் நவம்பர் 2000ல் கைது செய்த்தாகவும், கைது செய்தவுடன் முகமத்தை ஜம்மு காஷ்மீர் காவல்துறை வசம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்தார். இதற்கு சான்றாக அவர் மிக விரிவான விவரனைகளையும் அளித்தார். காவல்துறை கண்காணிப்பாளர் சாங்கிரி கூறுவது சரி என்றால் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒருவர் எப்படி பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டிருக்க முடியும்? அவர் சொல்வது தவறு என்றால், முகமத் யாசின் இப்பொழுது எங்கே இருக்கிறார்?

கேள்வி 13 : பாராளுமன்ற தாக்குதலில் கொல்லபட்ட ஐந்து தீவிரவாதிகள் யார் என்பது பற்றிய விபரங்கள் ஏன் இன்றுவரை வெளியிடப்படவில்லை?

இந்த கேள்விகள் எல்லாம் மிக நியாயமான கேள்விகள், இந்த பாராளுமன்ற தாக்குதல்கள் தொடர்பான அருந்ததி ராய் அவர்களின் முழு கட்டுரையை வாசித்தால் இந்த விஷயங்கள் இன்னும் குவிமையம் பெறும். இவை பெரும் ஆய்வு செய்து கேட்கபட்ட கேள்விகள் அல்ல மாறாக அந்த நேரத்தில் இந்திய பத்திரிக்கைகள் மற்றும் அரசியல் வாதிகளில் பேச்சுகளை தொடர்ந்து கேட்கும் எவருக்கும் இந்த கேள்விகள் கொஞ்சம் யோசித்தாலே வருபவையே. பாராளுமன்ற தாக்குதல் தொடர்பான இந்த கேள்விகளுக்கு இன்று வரை எந்த பதிலும் இல்லாமல் அவை இந்தியாவின் மீது மிதந்தவண்ணம் உள்ளது, இன்று அந்த கேள்விகள் எல்லாம் ஒரு கருமேகமாக தில்லியின் திகார் சிறைச்சாலை மீது ஒரு சாரல் மழையாக பொழியக்கூடும்.

http://www.amuthukrishnan.com/index.php?option=com_content&view=article&id=259%3A-13--13-&catid=22%3A-1&Itemid=52

18 comments:

Peer Mohamed said...


சலாம் காக்கா,

அந்தப் பதிமூன்று கேள்விகளும் முத்துக் கிருஷ்ணனின் தளத்தில் தமிழில் இருக்கிறது. இணைப்பு கீழே

http://www.amuthukrishnan.com/index.php?option=com_content&view=article&id=259%3A-13--13-&catid=22%3A-1&Itemid=52

Unknown said...

அருமையா எழுதியிருக்கீங்க. ஜாதி,மத வேறுபாடு இலங்கையின் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. உழைத்தால் தான் முன்னேற முடியும் என்பது அவர்களுக்கு தெரியாது போல.

ஒன்றே குலம் ஒருவனே தேவன். என்ற திருமூலர் ஞாபகத்துக்கு வருகிறார்

faizeejamali said...

ஸமனர்களை கொல்ல சொல்லும் ஹின்து மத பாடல்கள் நினைவில்லயோ சன்கரா

faizeejamali said...

ஸமனர்களை கொல்ல சொல்லும் ஹின்து மத பாடல்கள் நினைவில்லயோ சன்கரா

Unknown said...

முகம்மது கஜினி கொள்ளையடிச்ச்ப்போ ஏன் எல்லா முஸ்லீம் நாடுகளும் வாய் மூடி இருந்தன?
என்னைப்பொறுத்த வரை தீவிரவாதி என்றால் முஸ்லீம். முஸ்லீம் என்றால் தீவிரவாதி

Anonymous said...

குமரி: மாணவி கடத்திச் சென்று குமரியில் கறபழி்க்கப்பட்டார். கன்னியாகுமரியை சேர்ந்த 18 வயது மாணவி, இன்று தமிழக -கேரள எல்லையான ‌கொட்டாரக்கரையில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து சிலர் கற்பழித்துள்ளது தெரியவந்தது. இது குறி்த்து கொட்டாரக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாணவி பெயர் குறித்த விவரம் வெளியிடப்படவி்ல்லை. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காதலனே அம்மாணவியை ஏமாற்றி கன்னியாகுமரிக்கு கடத்திச்சென்று 12 பேருடன் சேர்ந்து 3 நாட்கள் அடைத்து வைத்து கற்பழித்துள்ளதும், போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=645097

suvanappiriyan said...

திரு மலர் மன்னனின் மறைவு கேட்டு அதிர்ச்சியடைந்தேன். பேரான்டி என்று உரிமையோடு வாக்கு வாதங்களில் கலந்து கொண்டு பதில் சொன்ன அந்த பெரியவரை இனி இணையத்தில் காண முடியாது. முக நூலில் நண்பருக்கான அழைப்பை சில நாள் முன்பு அனுப்பியிருந்தார். நானும் அந்த அழைப்பை ஏற்று நெருங்கிய நண்பர்கள் குழாமில் இணைத்திருந்தேன்.

அவ்வளவுதான் உலக வாழ்க்கை.

அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

suvanappiriyan said...

சலாம் சகோ பீர் முஹம்மது!

//அந்தப் பதிமூன்று கேள்விகளும் முத்துக் கிருஷ்ணனின் தளத்தில் தமிழில் இருக்கிறது. இணைப்பு கீழே

http://www.amuthukrishnan.com/index.php?option=com_content&view=article&id=259%3A-13--13-&catid=22%3A-1&Itemid=52//

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி!

suvanappiriyan said...

திரு ஜெய்சங்கர்!

//அருமையா எழுதியிருக்கீங்க. ஜாதி,மத வேறுபாடு இலங்கையின் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. உழைத்தால் தான் முன்னேற முடியும் என்பது அவர்களுக்கு தெரியாது போல.

ஒன்றே குலம் ஒருவனே தேவன். என்ற திருமூலர் ஞாபகத்துக்கு வருகிறார்//

உங்கள் கருத்தே எனது கருத்தும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ ஃபைஜி ஜமால்!

//ஸமனர்களை கொல்ல சொல்லும் ஹின்து மத பாடல்கள் நினைவில்லயோ சன்கரா//

வருகை புரிந்தமைக்கு நன்றி!

Anonymous said...

இதற்கு முன்னர் இதே சம்பிக்க ரணவக்க எழுதிய இஸ்லாமிய விரோதப் புத்தகத்தின் பெயர் "அல்லாஹு அக்பர்" என்பதாகும். ஒரு தடவை அதனைக் கொழும்பிலுள்ள ஒரு புத்தகக் கடையில் பார்த்தேன். அதனைக் கையிலெடுத்துப் பார்த்து விட்டு வைத்து விட்டேன். பின்னர் அதற்குரிய பணம் எடுத்துக் கொண்டு அந்தத் துவேஷப் புத்தகத்தை வாங்கச் சென்ற போது அவர்கள் அதனை மறைத்து விட்டிருந்தனர். மேற்படி புத்தகத்தில் மக்காவிலுள்ள கஃபாவினுள் புத்தரின் பாதச் சுவடு இருப்பதாகவும் அது ஏற்கனவே பௌத்தர்களின் புனிதத் தலமாயிருந்து பின்னர் அதனை முஸ்லிம்கள் அடித்துப் பறித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறான பொய்ப் பிரச்சாரங்களைச் செய்து இலங்கை முஸ்லிம்களுக்கெதிராக ஒரு கலவரத்தைத் தூண்டும் முயற்சியை இலங்கையின் மந்திரி சபையிலிருக்கும் இந்த நாய் செய்து வருவதை ஜனாபதியும் ஒரு போதும் கண்டிக்கவில்லை. அப்படியிருக்க, இந்த அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு முஸ்லிம் உலமாக்கள் சென்ற முறை ஜெனீவாக் கூட்டத்தில் அரபு நாடுகளை வேண்டிக் கொள்ளும் அவல நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டது. இனியாவது இந்தத் துவேஷ அரசாங்கத்தை இல்லாதொழிக்க இறைவன் எமக்கு உதவி செய்ய வேண்டும்.

- பா.

Anonymous said...

தேனி : தேனி மாவட்டம் எரச்சக்க நாயக்கனூரைச் சேர்ந்தவர் பாண்டி. பெண் குழந்தை பிறந்த நிலையில் முதல் மனைவி இறந்து விடவே இரண்டாவது திருமணம் செய்தார் பாண்டி.
இரண்டாவது மனைவிக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இரண்டாவது மனைவியும் ஒரு சில வருடங்களுக்கு முன்னர்இறந்து விடவே, பாண்டி தம் மூத்த மகளையே திருமணம் செய்து குழந்தையும் பெற்றுக் கொண்டதாகக் கூறப் படுகிறது.

மூத்த மகளை தம் மனைவியாக்கிக் கொண்ட பாண்டி இரண்டாவது மகளையும் உல்லாசத்துக்கு அழைத்ததாகவும் அதிர்ச்சி அடைந்த அவரது இரண்டாவது மகள் எரசக்க நாயக்கனூரில் உள்ள தம் அத்தையின் வீட்டுக்குச் சென்று விட்டார். பாண்டி அங்கும் சென்று பிரச்னை செய்த நிலையில் பாண்டி மீது அவரது அக்காள் காவல்துறையில் புகார் அளிக்கவே காவல்துறை வழக்குப் பதிவு செய்து பாண்டியைக் கைது செய்துள்ளது.(நன்றி inneram)

- N.C.

Anonymous said...

”....அவர்கள் அதனை மறைத்து விட்டிருந்தனர். மேற்படி புத்தகத்தில் மக்காவிலுள்ள கஃபாவினுள் புத்தரின் பாதச் சுவடு இருப்பதாகவும் அது ஏற்கனவே பௌத்தர்களின் புனிதத் தலமாயிருந்து பின்னர் அதனை முஸ்லிம்கள் அடித்துப் பறித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது...”

வாங்காத புத்தகத்தின் உள்ளே இருப்பது தெரியும் அளவுக்கு ஆண்டவன் அருளி இருக்கிறான்! ஆனால் அறபு தெரிந்த முல்லாக்களை அனுப்பி ஜெனிவாவுக்கு ஆதரவு தேடும் போது மட்டும் கோட்டை விட்டுவிட்டார் இந்த அநானி!

ஸ்ரீலங்காவில் முஸ்லிம்கல் ஒப்பாரி வைப்பதோடு சரி. அவனவன் தனது வியாபாரம் தனது பணம் எனப் போய் விடுவான்!

Anonymous said...

///வாங்காத புத்தகத்தின் உள்ளே இருப்பது தெரியும் அளவுக்கு ஆண்டவன் அருளி இருக்கிறான்! ஆனால் அறபு தெரிந்த முல்லாக்களை அனுப்பி ஜெனிவாவுக்கு ஆதரவு தேடும் போது மட்டும் கோட்டை விட்டுவிட்டார் இந்த அநானி!///

ஆண்டவனால் அருளப்பட்டது எல்லா இடத்திலும் கிடைக்கும்.

உமக்கு ஜெனீவாவை விட்டால் வேறொன்றும் தெரியாதுதானே!

முஸ்லிம்கள் அவர்களுக்குள்ள பிரச்னையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நீர் கொஞ்சம் ஒதுங்கி இருந்தால் என்ன?

Anonymous said...

"...முஸ்லிம்கள் அவர்களுக்குள்ள பிரச்னையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நீர் கொஞ்சம் ஒதுங்கி இருந்தால் என்ன?..."

அப்போ ஏன் உலகமே உனக்கு கண்ணில்லையா என ஒப்பாரி வைக்கிறீர்கள்?

தமிழனுக்கு எதிராக ஜெனீவா போன கூட்டம் இப்போது மசூதி உடைப்புக்கு எதிராக மனுக்கொடுக்க்க ஜெனீவா போகிறார்களாமே? ஏன் ஸ்ரீலங்கா அரசில் ஒட்டி உரவாடிக்கொண்டு மஹிந்தாவுக்கு கொடுக்க முடியாதா? உங்களுக்கும் ஜெனீவா மட்டுமா தெரியும்?

Anonymous said...


படிகாத புத்தகத்துள் இருப்பது தெரிகிரது, பார்க்காத விஸ்வரூபத்துக்குள் இருப்பது தெரிகிறது. இப்படித்தான் ஒட்டுமொத்த படமும் குப்பை, கொழுத்த வேண்டும் தடை செய்யப்பட வேண்டும் என கூட்டம் போட்டு கடைசியில் ஆறே ஆறு இடங்களில் மட்டுமே வெட்டு என்கிறார்கள். பொட்டி மாறவேண்டிய கையில் மாறிவிட்டது அதுதான் சங்கதி!

Anonymous said...

///தமிழனுக்கு எதிராக ஜெனீவா போன கூட்டம் இப்போது மசூதி உடைப்புக்கு எதிராக மனுக்கொடுக்க்க ஜெனீவா போகிறார்களாமே? ஏன் ஸ்ரீலங்கா அரசில் ஒட்டி உரவாடிக்கொண்டு மஹிந்தாவுக்கு கொடுக்க முடியாதா? உங்களுக்கும் ஜெனீவா மட்டுமா தெரியும்?///

தமிழனுக்கு எதிராக ஜெனீவா யாரும் போகவில்லை. ஓர் அழிந்துபோன, அயோக்கிய தமிழ்க் கூட்டத்தின் எடுபிடிகளின் மசோதா நிறைவேறாமல் தடுக்க போனார்கள்.

மசூதி அப்படியே இயங்குகிறது.

இலங்கைக் குடி மக்கள், அரசுடன் ஒட்டி உறவாடாமல் வேறு யாருடன் உறவாடுவது?

ஜெனீவா, அரபு தெரிந்த உலமாக்கள் என்று சதா புலம்புவது எளிய தமிழனின் பிறவிக்குணம்.

Anonymous said...

ஹுமன் ரைட்ஸ் வோச், அம்னஸ்ரி இன்ரனஷனல், ஏசியன் ஹியூமன் ரைற்ஸ், என ஆப்கானிஸ்தான், இராக், பாலஸ்தீனம், கோசவோ, பொஸ்னியா என பல நாடுகளில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களை வெளிக்கொணர்ந்த அமைப்புகள் அயோக்கியத் தமிழ்க்கூட்டத்தின் எடுபிடிகளா?
மேலு இவர்கள் புலிகளின் சிறுவர் ஆட்சேர்ப்பு, தற்கொலைத்தாக்குதல், முஸ்லிம் விரட்ட்டி அடிப்புகள் எல்லாவற்றையும் சொல்லிச் சொல்லியே புலிகள் தடையையும் உலகில் ஏற்படுத்தினர். இவர்களா அயோக்கிய தமிழ் கூட்டத்தின் எடுபிடிகள்?
அட்டகாச லொஜிக்!