Followers

Monday, July 04, 2022

எனது முன்னோர்கள் இஸ்லாத்தை ஏன் ஏற்றுக் கொண்டனர்?

 

எனது முன்னோர்கள் இஸ்லாத்தை ஏன் ஏற்றுக் கொண்டனர்?




 

இந்திய மண்ணில் பல தலைமுறைகளாக வாழ்ந்தும் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டீர்கள் என்ற கேள்வி வைக்கப்படுகிறது. இந்து மதத்துக்குள்ளேயே இருந்து போராடியிருக்க வேண்டாமா என்றும் கேட்கின்றனர். இத்தனை காலம் பெரியார் முதல் திருமாவளவன் வரை போராடிக் கொண்டுதான் உள்ளார்கள். ஏதாவது தீர்வு கிடைத்ததா? மேலும் மேலும் சனாதனத்தின் பிடி இறுகத்தான் செய்கிறது. சனாதனத்தின் வரலாறுகளில் ஒன்றிரண்டை தருகிறேன். படித்து விட்டு எங்கள் முன்னேர்கள் இஸ்லாத்தை ஏற்றது சரியா? தவறா? என்ற உங்கள் கருத்தை கூறுங்கள்.

 

நந்தன் :

 

 தில்லை நடராசன் கனவில் வந்ததாகக் கூறி, சிவபக்தனாகி, ஆண்டவனை தரிசிக்க வந்தவன் நந்தன். தீண்டப்படாத சமூகத்தைச் சார்ந்தவன். கொள்ளிடம் என்ற சிற்றூரிலிருந்து புறப்பட்டு தில்லைக்கு நடராசனை தரிக்க வந்தபோது தீட்சதப் பார்ப்பனர்கள் தீயில் குளித்து தீட்டைப் போக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். நந்தன் தீயில் குதித்தான். தில்லை நடராசன் நேரில் தோன்றி, எதிரே இருந்த நந்தியை விலகச் சொல்லி, நந்தனுக்கு கர்ப்பக்கிரகத்துக்கு வெளியில் வைத்தே தரிசனம் தந்ததாக பெரிய புராணத்தில் சேக்கிழார் எழுதியுள்ளார். ஆனால் உண்மை நந்தன் தீயில் எரிக்கப்பட்டான் என்பதே...

 

 

சம்பூகன் :

 

பார்ப்பனர்கள் மட்டுமே கடவுளை நேரடியாக தவம் செய்ய உரிமை பெற்றவர்கள். ராமன் ஆட்சியில் சம்பூகன் என்ற சூத்திரன் கடவுளை நோக்கி நேரடியாக தவம் செய்தான். பார்ப்பனர்கள் - இதை அதர்மம் என்று கூறி, சூத்திரன் தவம் செய்ததால், அக்கிரகாரத்தில் பிறக்க வேண்டிய ஒரு குழந்தை, தாயின் கர்ப்பத்திலே இறந்துவிட்டதாக புகார் கூறுகிறார்கள். ராமன் - பிராமண தர்மத்தைக் காப்பாற்ற, தவமிருந்த சம்பூகன் தலையை வெட்டினான். இது வால்மீகி இராமாயணத்தில் உள்ள செய்தி. தமிழில் கம்ப இராமாயணத்தில் கம்பன் இதை எழுதாமல் மறைத்து விட்டான்.

 

 

கர்ணன் :

 

மகாபாரதத்தில் வரும் கர்ணன் - கொடை வள்ளல். அரச குலத்தில் பிறந்து தேரோட்டி குலத்தில் வளர்ந்தவன். தான் சூத்திரர் என்பது தெரிந்தால், பார்ப்பனர் பரசுராமன், தனக்கு போர் தொடர்பான சாத்திரங்களைக் கற்றுத் தர மாட்டார் என்பதால், உயர்குலத்தவன் என்று பொய் கூறி, கல்வி கற்கிறான். ஒரு நாள் பரசுராமன் கர்ணன் மடியில் படுத்து உறங்கினார். கர்ணனை மாட்டிவிட சூழ்ச்சி செய்த இந்திரன், வண்டாக மாற்று உருவம் கொண்டு கர்ணனின் தொடையைத் துளைக்கிறான். தொடையிலிருந்து குருதி கொட்டுகிறது. கர்ணன், தனது குருவின் தூக்கம் கலைந்து விடக்கூடாது என்று, அந்தத் துன்பத்தைத் தாங்கிக் கொள்கிறான். ஆனால், குருதி ஈரம், பரசுராமன் தூக்கத்தை கலைக்கிறது. விழித்து எழுந்த பரசுராமன், கர்ணனின் குரு பக்தியை நெஞ்சுரத்தைப் பாராட்டவில்லை. நீ பிராமணன் அல்லன்; அதனால்தான் வண்டு துளைத்த பெருந் துன்பத்தைத் தாங்கியிருக்கிறாய். எனவே என்னிடம் பிராமணன் என்று பொய் சொல்லி நீ கற்ற போர்க்கலைகளை, அதைப் பயன்படுத்த வேண்டிய நேரத்தில் நீ மறந்து விடவேண்டும் என்று சபிக்கிறேன் என்று கூறுகிறார். இந்த சாபமே கர்ணனின் கடைசிக் கால சாவுக்கும் காரணமாகிறது. இது புராணம்தான். ஆனால், இதன் வழியாக பார்ப்பன வெறியும், அவர்களின் சூத்திர வெறுப்பும் அம்பலமாகிறது.

 

 

ஏகலைவன் :

 

வேட்டுவ குலத்தைச் சார்ந்த (தாழ்ந்த சாதி - பழங்குடி) ஏகலைவன் - பார்ப்பனரான துரோணரிடம் வில்வித்தைக் கற்றுத் தரக் கேட்டான். நீ கீழ் சாதி கற்றுத் தர முடியாது என்று துரோணன் மறுக்கிறான். ஏகலைவன் துரோணன் போல ஒரு உருவத்தைச் செய்து, அதையே குருவாகக் கருதி, வில் வித்தையைக் கற்கிறான். ஒரு நாள், அந்த துரோணன் உருவத்தின்மீது நாய் சிறுநீர் கழித்தது. நெடுந் தொலைவிலிருந்து அதைப் பார்த்த ஏகலைவன், சீற்றமடைந்து மிக நுட்பமாக, குறி பார்த்து அம்பு வீசி, நாயைக் கொல்கிறான். இவ்வளவு திறமையாக அம்பு வீசிய ஏகலைவனைப் பாராட்டவில்லை துரோணன். என்னுடைய உருவத்தை வைத்துத் தானே, வில் வித்தையை கற்றுக் கொண்டாய். எனவே குருதட்சணையாக, கட்டை விரலை வெட்டி கொடு என்கிறான். ஏகலைவன் சிறிதும் தயக்கமின்றி கட்டை விரலை வெட்டித் தருகிறான். கட்டை விரலையே வெட்டிவிட்டால், வில்லை எய்த முடியாது.

 

மேற்கண்ட இரு நிகழ்ச்சிகளும் அன்றைய பார்ப்பனர்கள், சூத்திரர்கள் எந்தக் கல்வியும் கற்கக் கூடாது என்று தடை விதித்திருந்ததை எடுத்துக் காட்டுகின்றன.

 

 

சொன்னது ஒன்றிரண்டு. சொல்லாதது கடலளவு. நமக்கு முன்பே தெரிந்த வரலாறுகள்தான். இத்தனை கொடுமைகளையும் சகித்துக் கொண்டு இந்த சனாதன  மதத்தில் இருக்கத்தான் வேண்டுமா? எங்கள் முன்னோர்கள் செய்தது சரிதானே என்ற முடிவுக்குத்தானே வருவீர்கள்.?

 


2 comments:

Elango said...

ஒரு புதைகுழியில் தப்பி இன்னொரு புதைகுழியில் விழறதா ?

Dr.Anburaj said...

சம்புகனின் கதைகட்டுக்கதை. தாங்கள் குறிப்பிட்டுள்ள பிற சம்பவங்களில் ஒரளவிற்கு உண்மைஉள்ளது.சமூகத்தில் சாதி பித்து தலைக்கேறியது. .பைத்தியம் பிடித்து அலைந்தனா் என்பது உண்மை.ஆனால் எந்த பிரச்சனைக்கும் இந்திய தேசியத்திற்கு அப்பால் .. .மண்வாசனை இல்லாது வேறு திட்டத்தோடு வரும் தீா்வுகள் பிரச்சனைகளைத் தீர்க்காது. எனக்கு தெரிந்து அரேபிய மதத்தவர்களில் சாதி வேறுபாடு கடுமையாக உள்ளது.இறைசசி கடை வைத்திருப்பவன் இறைச்சி வியாபாரம் செய்பவன் வீட்டில் பெண் எடுக்கிறான் கொடுக்கிறான். அதுபோலவே நாவிதா்கள்.முஸ்லீம்கள் உயா் வருவாய் பிரிவினா்.இந்த உயா் வருவாய் பிரிவினா் தங்களின் செல்வாக்கைதக்க வைக்க பாமர முஸ்லீம்களை பகடைக்காயாகவே பயன்படுத்தி வருகின்றனா்.
மேலும் இந்த பிரச்சனையை திருக்குறள் திருமந்திரம் எத்தனையோ சித்தர்கள். . நாயன்மார்கள் ஆழ்வார்கள் தீர்த்து வைத்து விட்டாா்கள்.
அரேபிய மதவாதிகள் தங்களின் பாதுகாப்பிற்கு முஸ்லீம்கள் தேவை என்பதற்காக பெரும் பொருள். . கொடுத்தும். .வாள் கொண்டு உயிா் எடுத்தும். . .அரசில் உயா் பதவி கொடுத்தும். . .மதம்மாற்றி வஞ்சகம் செய்தார்கள்.
பாக்கிஸ்தானில் முற்றிலும் முஸ்லீம்கள். . ..அந்த நாடு சிறப்பாக உள்ளதா?
ஆப்கானிஸதானத்தில் முற்றிலும் முஸ்லீம்கள். . ..அந்த நாடு சிறப்பாக உள்ளதா?
யேமனில் முற்றிலும் முஸ்லீம்கள். . ..அந்த நாடு சிறப்பாக உள்ளதா?
லிபியாவில் முற்றிலும் முஸ்லீம்கள். . ..அந்த நாடு சிறப்பாக உள்ளதா?
லெபனான் முற்றிலும் முஸ்லீம்கள். . ..அந்த நாடு சிறப்பாக உள்ளதா?
மாலியில். .நைஜிரியாவில். . .இன்னும் ஏராளமான ஆப்பிரிக்க நாடுகளில். . ..முற்றிலும் முஸ்லீம்கள். . ..அந்த நாடு சிறப்பாக உள்ளதா?

பொய்களை கட்டுவதில் வல்லவா் சுவனப்பிரியன்.

இந்துக்கள் தங்கள் சமூகத்தில் ஏற்பட்ட புண்களை அவா்கள்தான் சுகமாக்கிக்கொண்டார்கள்.
உடம்புதான் மருந்தைச் சாப்பட வேண்டும்.