Followers

Saturday, October 26, 2019

மெய்சிலிர்த்து பாராட்டிய இரத்த வங்கி அலுவலர்

"இஸ்லாமிய பெண்மணி இரத்த தானம் வழங்கியதை மெய்சிலிர்த்து பாராட்டிய இரத்த வங்கி அலுவலர்"

பிறர்நலம் நாடுதலே இஸ்லாம் என்ற நபிகளார் போதனையின் அடிப்படையில் மனிதநேய பணிகளை குமரி மாவட்டத்தின் மருத்துவ அணி தொடர்ச்சியாக செய்துவரும் நிலையில்...

(24/10/2019) அன்று நெய்யூர் CSI மருத்துவமனையில் அனுமதிக்கட்டிருந்த சிலுவைமுத்து என்ற நோயாளிக்கு O+ positive ஒரு யுனிட் இரத்தம் தேவைபட்டது.

TNTJ குமரி மாவட்ட மருத்துவ அணியை தொடர்பு கொண்டதன் பெயரில் திங்கள் நகர் கிளையின் சார்பில் "கதீஜா என்ற பெண்மணி" இரத்த தானம் செய்ய முன்வந்தார்கள்.

இரத்த வங்கியில் பணிபுரியும் ஜெயக்குமார் என்று அலுவலரும், மற்ற பெண் ஊளியர்களும் பர்தா அணிந்த நிலையில் இரத்த தானம் செய்யவந்த கதீஜா அவர்களை மிக வரவேற்றனர்.

ஜெயக்குமார் அலுவலர் கூறுகையில்,

கடந்த இரண்டு வருடத்தில் இரண்டே இரண்டு பெண்கள் தான் இரத்த தானம் செய்துள்ளனர். இந்த பெண்மணியை பாராட்டி இது போன்ற மனித நேய பணிகளில் இஸ்லாமியர்கள் அதிகம் செய்வதை வெளியுலகத்திற்கு கொண்டு செல்லும் விதமாக போட்டோ பிடித்து இன்ஸ்டோகிராம், பேஸ்புக் போன்ற வலைதளங்களில் பகிர்ந்து இஸ்லாம் தீவிரவாத செயலில் ஈடுபடுவதாக தவறான தகவல்கள் பகிரபடுவதை தடுக்கும் விதமாக நான் செயல்படுவேன் என உணர்ச்சி மிகுந்து கூறினார்.

ஆக, மனித இரத்ததை ஓட்டுபவர் முஸ்லிம் இல்லை, மனித இரத்ததை கொடுத்து காப்பாற்றுபவர் முஸ்லிம் என்கிற கருத்தை அவர் மனதில் உள்ளதை வெளிப்படையாக கூறும் விதமாக ஜெயக்குமார் என்ற இரத்தவங்கி அலுவலரின் வார்த்தை அமைந்தது நமக்கு சந்தோஷம் அடைந்தது.

அல்ஹம்துலில்லாஹ்..!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
குமரி மாவட்டம்
திங்கள்நகர் கிளை



Friday, October 25, 2019

பல கோடி பெறுமானமுள்ள நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமிய கல்லூரி!

பல கோடி பெறுமானமுள்ள நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமிய கல்லூரி!
மயிலாடுதுறையில் உள்ள நீடூர் மன்பாஹூல் ஹூதா அரபிக் கல்லூரி பல ஆண்டுகளாக சிறப்பாக கல்விப் பணி ஆற்றி வருகிறது. தற்போது பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள 21 ஏக்கர் நிலத்தை மருத்துவ கல்லூரி அமைப்பதற்காக தானமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஜாமிஆ மிஸ்பாவுல் ஹூதா கல்லூரி நிர்வாகிகள் 8 பேர் அடங்கிய குழு நாகப்பட்டினம் ஆட்சியர் பிரவீன் நாயரை சந்தித்து இதற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது.
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
26-10-2019
தானமாக அளித்த நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள். தானமாக அளிப்பதோடு நின்று விடாமல் அக்கல்லூரியில் கணிசமான அளவு இஸ்லாமிய மாணவ மாணவிகள் ஆர்வமுடன் சேருவதற்கான வழி வகைகளை ஏற்படுத்த வேண்டும். மருத்துவ துறையில் இஸ்லாமிய சமூகம் மிகவும் பின்தங்கியுள்ளது.


விடுதலைப் போராட்டத்தில் அலிசகோதரர்கள்;

விடுதலைப் போராட்டத்தில் அலிசகோதரர்கள்;
பதிவு 2:
பிரிட்ஷாரின் ரவ்லட் சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டங்கள் நடந்த போது பல்வேறு தலைவர்கள் கைது செய்யப்பட்டு கொடூரமான சினறத்தண்டனைக்கு உள்ளானார்கள் பாரிஸ்டர் டாக்டர் சைஃபுத்தீன் கிச்சுலு என்ற பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவரும் சத்யபால் என்ற இன்னொரு தலைவரும் ரகசியமாக கைது செய்யப்பட்டு தர்மாசலா சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து மக்கள் 13 ஏப்ரல் 1919-ஜாலியன் வாலாபாக்கில் அணிதிரண்டனர். அங்கு நடந்த பிரிட்டிஷரின் துப்பாக்கி சூட்டில் நானூறுக்கும் மேலானேர் மற்றும் பல சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் பட்டு நிரந்தரமான பாதிப்புக்குள்ளாயினர்.
நாடெங்கும் போராட்டத்தில் பலர் உயிரிழந்த நிலையில் மகாத்மா காந்தி தலைமையில் காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தது. பிரிட்டிஷாரின் தயாரிப்புகளையும் அவர்களின் பணிகளையும் பகிஷ்கரிக்கவும் மவுலனா முஹமது அலி தலைமையிலிருந்த கிலாபத் இயக்கம் ஆதரவு தெரிவித்தது. மற்றும் தீண்டாமை எதிர்ப்புக்கும் இந்த கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டது.
கிலாபத் கமிட்டின் தலைவர்களும், ஜமீயதே உலமாவின் தலைவர்களும் காங்கிரஸ் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களாகவே இருந்தார்கள். மகாத்மா காந்தி உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் முஸ்லிம் லீக் மாநாடுகளிலும் கலந்து கொண்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
மகாத்மாவின் அழைப்பை ஏற்று காயிதே மில்லத் அவர்கள் சென்னை கிருத்துவக் கல்லூரியில் தன் இறுதியாண்டு தேர்வை பகிஷ்கரித்து வெளியேறினார்கள். தன்கைகளால் நெய்யப்பட்ட கதர் ஆடையும் தொப்பியையே அணியலானார்கள். மகாத்மாவின் கவுஹாட்டி மாநாட்டிற்கு பிறகு ஒத்துழையாமை இயக்கத்தை வலியுறுத்தி நடந்த முதல் கூட்டம் தன் சொந்த ஊரில் நெல்லையில் ஸ்ரீனிவாசன் அய்யங்கார் தலைமையில், ராஜாஜி போன்ற பல தலைவர்களை அழைத்து காயிதே மில்லத் மற்றும் அவர் இளவல் இணைந்து நடத்திக்காட்டினார்கள்.
ஜாமியத்தே உலமாவின் தலைவர்கள் டெல்லி மாநாட்டில் பிரிட்டிஷ் பொருள் வாங்குவதும் பிரிட்டிஷாரின் இராணுவம், அரசு மற்றும் காவல்துறையில் பணி செய்வதும் ஹராம் என்று (Mutafika Fatwa)முதஃபிகா ஃபத்வா அளித்து தீர்மானம் இயற்றினார்கள். அதை ஆமோதித்தது மட்டுமல்லாமல் ஒரு படி அதிகம் சென்று நாட்டு விடுதலைக்கு புரட்சி செய்யுமளவிற்கு கிலாபத் தலைவர்களான அலி சகோதரர்கள் அழைப்பு விடுத்தார்கள்.
கிலாபத் மற்றும் காங்கிரஸின் வருடாந்திர மாநாடுகள் ஒரே காலத்தில் ஒரே இடத்தில் சில வருடங்களாக நடந்து வருவதையும் அதனால் மக்களிடம் ஏற்பட்டுள்ள ஒற்றுமையை சுட்டிக்காட்டி பேம்மேபார்டு (BAMFORD) பிரிட்டிஷ் அரசின் உளவுத்துறையின் துணைத் தலைவர் வைஸ்ராயிற்கும், இங்கிலந்திலுள்ள தலைமை பீடத்திற்கும் தொடர்ந்து எழுதிவந்தார். இந்த ஒற்றுமைக்கு முக்கிய பாலமாக மகாத்மா காந்தி செய்லபட்டு வருவதின் ஆபத்தையும் தெளிவுபடுத்தினார் அலி சகோதார்களோ இரண்டு வருடங்களில் நாட்டின் விடுதலையை போராடும் இயக்கங்கள் இணைந்து பிரகடணம் செய்யும் என்று முழக்கமிட்டு வந்தார்கள்.
மகாத்மா காந்தியும் அலி சகோதரர்களும் நாடு முழுவதும் இணைந்து பயணம் செய்து ஆதரவு திரட்டி வந்தார்கள். சில வருடங்கள் முன்பு இருந்த வகுப்புக் கலவரங்கள் அறவே மறைந்து இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து பிரிட்டிஷாரை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் செய்து வந்த நிலையில் விரைவில் சுதந்திர பிரகடனம் செய்வதற்கான ஆயத்தங்கள் நிகழ்ந்தன. காகிநாடாவில் காங்கிரஸ் மற்றும் கிலாபத் இயக்கங்கள் இணைந்து இப்பிரகடணம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பல தலைவர்களும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் தேசவிரோத குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்கள்.
லார்ட் ரீடிங் (Lord Reading) புதிய வைஸ்ராயாக இந்த கொந்தளிப்பான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த இந்தியாவிற்கு அனுப்பட்டார் பதவியேற்ற ஒரிரு நாட்களில் 19- மே மாதம் 1921-யில் பிரிட்டிஷ் அரசின் உள்துறை மந்திரி (Secretary of State) எட்வின் S.மாண்டேகுவிற்கு எழுதிய கடிதத்தில்
“It is idle to underestimate the importance of Mohamed Ali’s position as the head of the Khilafat Movement. He is a real factor in the situation. He is the ostensible link between Mohamedan and Hindu. If trouble comes between him and Gandhi it means the collapse of the bridge over the gulf between Hindu and Mohamedan” (Nanda, 1989, P303) என்று கடிதம் எழுதினார்.
“கிலாபத் இயக்கத்திற்கு தலைமைப் பொறுப்பிலுள்ள முஹமது அலியின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுவது தவறானது. இன்றைய சூழலுக்கு அவர் முக்கிய காரணமாவார் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் அவர் மறுக்க முடியாத இணைப்பாவார். அவருக்கும் காந்திக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டால் அது இந்து முஸ்லிம்களுக்கிடையில் உள்ள இணைப்புப் பாலத்தின் அழிப்பை ஏற்படுத்துவதாகும்.”
முதலில் அலி சகோதரர்கள் காந்தியுடன் கல்கத்தாவிலிருந்து கேரளத்திற்கு ரயிலில் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் கைது
செய்யப்பட்டார்கள். அடுத்தடுத்து ஜவஹர்லால் நேரு,ராஜாஜி,அபுல் கலாம் ஆசாத் போன்ற தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
பிரிட்டிஷ் அரசு நிலை குலைந்து இருந்த நேரத்தில் எந்த சுதந்திர போராட்டத்திலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த ஒரு கூட்டம் இந்து முஸ்லிம் இணைந்து பெறப்போகும் வெற்றியை விரும்பாமல் பிரிட்டிஷ் அரசிற்கு ஆதரவு கரம் நீட்டினர்.
அந்தமான் சிறையிலிருந்தும் இக்கருத்தை வலியுறுத்தும் கடிதங்கள் வைஸ்ராயிற்கும் இங்கிலாந்திலிருக்கும் தலைமை பீடத்திற்கும் அனுப்பப்பட்டன.
அந்தமானில் சிறையிலிருந்து அனுப்பியவர் இந்துத்துவ கொள்கையின் வித்தகர் V.D.சாவர்கர் ஆவார்.
அதற்கு பகரமாக தன் விடுதலையை கோரியிருந்தார்...
(இன்னும் வரும்)
Dawood Miakhan அவர்களின் பதிவிலிருந்து...




Thursday, October 24, 2019

'ஜெய் ஸ்ரீராம்' கூறு என்று சொல்லி கொல்லப்பட்ட முஸ்லிம்கள் எத்தனை பேர்?

இத்தனை லட்சம் இந்துக்கள் அரபு நாடுகளில் இருந்தும் இன்று வரை ஒரு வரை கூட 'அல்லாஹூ அக்பர்' என்று கூறி வற்புறுத்தவில்லை. எவரையும் மத்தின் பெயரால் கொல்லவில்லை. அவை எல்லாம் இஸ்லாமிய நாடுகள்.
மதசார்பற்ற நாடு என்று கூறிக் கொள்ளும் நமது இந்தியாவில் 'ஜெய் ஸ்ரீராம்' கூறு என்று சொல்லி கொல்லப்பட்ட முஸ்லிம்கள் எத்தனை பேர்? மாட்டுக் கறி வைத்திருந்தார்கள் என்று கூறி கும்பலாக சென்று தாக்கிய இந்துத்வா கோழைகள் எத்தனை பேர்?
இஸ்லாம் அமைதியை விரும்புகிறது. ஆர்எஸ்எஸ், பிஜேபி நாட்டில் ரத்தக் களறியை விரும்புகிறது. அதன் மூலம் அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க விரும்புகிறது.


*தமிழகத்தில் கூட்டு முயற்சி அளித்த பலன்!!!

*தமிழகத்தில் கூட்டு முயற்சி அளித்த பலன்!!! 100 நபர்களுக்கு மேல் TNPSC அரசு பணியில் இன்று !!!*
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தமிழகத்தில் சிறுபான்மையினர்கள் அரசு துறையிகளில் பணியில் சேர வேண்டும் என்பதற்காக எம்பவர் இந்தியா ஃப்வுண்டேசன் கடந்த 3 ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறது. அல்ஹம்துலில்லாஹ், இன்று வரை ஏறத்தாழ 16 TNPSC சென்டர்களை பல மாவட்டங்களில் ஜமாத்தார்கள் மற்றும் இயக்கங்களோடு இணைந்து செயல்பட்டு உருவாக்கியது. இது ஒற்றுமைக்கான சிறந்த உதாரணமாகவும் திகழ்கிறது. நீங்கள் எந்த அமைப்பிலும் இருந்து கொள்ளுங்கள். எந்த ஜமாத்திலும் இருந்து கொள்ளுங்கள். முஸ்லிம்களை சக்திபடுத்த தயாரா? நீங்கள் ஆம் என்ற சொன்னால் எம்பவர் இந்தியா ஃப்வுண்டேசன் உங்களோடு சேர்ந்து பல்வேறு திட்டங்களை உங்கள் பகுதியில் அமுல்படுத்த தயாராக உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 16 க்கும் மேற்பட்ட TNPSC சென்டர்கள் மூலம் 100 க்கும் அதிகமானோர் அரசு பணிகளில் இணைந்துள்ளனர். இது முற்றிலும் ஒரு கூட்டு முயற்சியாலே சாதிக்க முடிந்தது. தற்போது கீழ்காணும் ஊர்களில் இலவச TNPSC வகுப்புக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தங்களது துவா மற்றும் தங்களது சொந்தங்களில் தகுதியான மாணவர்களுக்கு இந்த செய்தியை தெரிவிக்கவும்.
நமது சென்டர்கள் செயல்படும் ஊர்கள்
சென்னை, திருத்தணி, செங்குன்றம், திருச்சி, மதுரை, தேனி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்குடி, பொள்ளாச்சி, நெல்லை - மேலப்பாளையம், நெல்லை - போட்டை, நெல்லை - செய்துங்கநல்லுார், கடையநல்லுார், பன்பொழி, உடன்குடி, காயல்பட்டிணம்
பள்ளிகூட ஆசிரியர்கள் TNPSC வகுப்பு எடுக்க தயாரானால் அவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாமினை நடத்துகிறோம். TNPSC புத்தகங்களை இலவசமாக வழங்குகிறோம் (PDF)
தற்போது குரூப் 2 மற்றும் அதனை தொடர்ந்து சில தேர்வுகள் வரும் நிலையில் அனைத்து சென்டர்களிலும் மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே நமது சமூக மாணவ மாணவியர் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
*பயிற்சி காலம் - 6 மாதங்கள் - சனி ஞாயிறு மட்டும்*
*கல்வி தகுதி - 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்துவிட்டு இடைநிறுத்தம் செய்தவர்கள், கல்லுாரி முதலாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு மற்றும் பட்ட படிப்பு முடித்தவர்கள், ஐ.டி.ஐ மற்றும் டிப்பொளமா மாணவர்கள் மற்றும் படித்து முடித்தவர்கள்*
*இந்த TNPSC பயிற்சி பெற மாணவ மாணவியர் பின்வரும் தகவல்களை கீழ்கண்ட வாட்ஸப் நம்பரில் அனுப்பவும்*
74185 50395
தங்களது பெயர்
தொலைபேசி
படிப்பு
வயது
வீட்டு விலாசம் மற்றும் மாவட்டம்
*TNPSC வகுபு்பு நடத்த ஆர்வமுள்ள ஆசிரியர்களும் எங்களை வாட்ஸப் நம்பரில் தொடர்பு கொள்ளவும்*
*இந்த செய்தியை நமது இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமிய குருப்புகளுக்கும் அனுப்புங்கள்*
இப்படிக்கு
*எம்பவர் இந்தியா ஃபவுண்டேசன், தமிழ்நாடு பிரிவு*