Followers

Thursday, October 24, 2019

*தமிழகத்தில் கூட்டு முயற்சி அளித்த பலன்!!!

*தமிழகத்தில் கூட்டு முயற்சி அளித்த பலன்!!! 100 நபர்களுக்கு மேல் TNPSC அரசு பணியில் இன்று !!!*
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தமிழகத்தில் சிறுபான்மையினர்கள் அரசு துறையிகளில் பணியில் சேர வேண்டும் என்பதற்காக எம்பவர் இந்தியா ஃப்வுண்டேசன் கடந்த 3 ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறது. அல்ஹம்துலில்லாஹ், இன்று வரை ஏறத்தாழ 16 TNPSC சென்டர்களை பல மாவட்டங்களில் ஜமாத்தார்கள் மற்றும் இயக்கங்களோடு இணைந்து செயல்பட்டு உருவாக்கியது. இது ஒற்றுமைக்கான சிறந்த உதாரணமாகவும் திகழ்கிறது. நீங்கள் எந்த அமைப்பிலும் இருந்து கொள்ளுங்கள். எந்த ஜமாத்திலும் இருந்து கொள்ளுங்கள். முஸ்லிம்களை சக்திபடுத்த தயாரா? நீங்கள் ஆம் என்ற சொன்னால் எம்பவர் இந்தியா ஃப்வுண்டேசன் உங்களோடு சேர்ந்து பல்வேறு திட்டங்களை உங்கள் பகுதியில் அமுல்படுத்த தயாராக உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 16 க்கும் மேற்பட்ட TNPSC சென்டர்கள் மூலம் 100 க்கும் அதிகமானோர் அரசு பணிகளில் இணைந்துள்ளனர். இது முற்றிலும் ஒரு கூட்டு முயற்சியாலே சாதிக்க முடிந்தது. தற்போது கீழ்காணும் ஊர்களில் இலவச TNPSC வகுப்புக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தங்களது துவா மற்றும் தங்களது சொந்தங்களில் தகுதியான மாணவர்களுக்கு இந்த செய்தியை தெரிவிக்கவும்.
நமது சென்டர்கள் செயல்படும் ஊர்கள்
சென்னை, திருத்தணி, செங்குன்றம், திருச்சி, மதுரை, தேனி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்குடி, பொள்ளாச்சி, நெல்லை - மேலப்பாளையம், நெல்லை - போட்டை, நெல்லை - செய்துங்கநல்லுார், கடையநல்லுார், பன்பொழி, உடன்குடி, காயல்பட்டிணம்
பள்ளிகூட ஆசிரியர்கள் TNPSC வகுப்பு எடுக்க தயாரானால் அவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாமினை நடத்துகிறோம். TNPSC புத்தகங்களை இலவசமாக வழங்குகிறோம் (PDF)
தற்போது குரூப் 2 மற்றும் அதனை தொடர்ந்து சில தேர்வுகள் வரும் நிலையில் அனைத்து சென்டர்களிலும் மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே நமது சமூக மாணவ மாணவியர் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
*பயிற்சி காலம் - 6 மாதங்கள் - சனி ஞாயிறு மட்டும்*
*கல்வி தகுதி - 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்துவிட்டு இடைநிறுத்தம் செய்தவர்கள், கல்லுாரி முதலாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு மற்றும் பட்ட படிப்பு முடித்தவர்கள், ஐ.டி.ஐ மற்றும் டிப்பொளமா மாணவர்கள் மற்றும் படித்து முடித்தவர்கள்*
*இந்த TNPSC பயிற்சி பெற மாணவ மாணவியர் பின்வரும் தகவல்களை கீழ்கண்ட வாட்ஸப் நம்பரில் அனுப்பவும்*
74185 50395
தங்களது பெயர்
தொலைபேசி
படிப்பு
வயது
வீட்டு விலாசம் மற்றும் மாவட்டம்
*TNPSC வகுபு்பு நடத்த ஆர்வமுள்ள ஆசிரியர்களும் எங்களை வாட்ஸப் நம்பரில் தொடர்பு கொள்ளவும்*
*இந்த செய்தியை நமது இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமிய குருப்புகளுக்கும் அனுப்புங்கள்*
இப்படிக்கு
*எம்பவர் இந்தியா ஃபவுண்டேசன், தமிழ்நாடு பிரிவு*


1 comment:

Dr.Anburaj said...

இதுபோல் மத்தியபல்கலைக்கழகத் தோ்வு நீட் தோ்வுகள் மத்திய அரசு பணியில் பல நுழைவு தோ்வு ஆகியவ்ற்றிற்கும் பயிற்சி அளிக்கலாம். இந்துவான சைதை துரைச்சாமி அவர்கள் மிக மிக தியாக உள்ளம் கொண்டவா். இந்துக்களின் சிறப்பே தியாகம்தான். முஸ்லீம்கள் சுயநலவாதிகள் எனவே முஸ்லீம்கள் மட்டும் நன்மை அடைய வேண்டும் காபீர் இந்துக்கள் பலன் அடையக் கூடாது என்று செயல்படுவது உண்மை. போகட்டும் . சைதை துரைச்சாமி போன்ற அமைப்வை அமைத்து ஆவன செய்யுங்கள். முஸ்லீம் இளைஞர்கள் பயங்கரவாதத்தை தொடாமல் இருப்பார்கள். வாழ்க நல்ல செய்தி . பகிர்தமைக்கு நன்றி. நானும் முஸ்லீம் இளைஞர்களிடம் இதைச் சொல்வேன்.