Followers

Thursday, December 08, 2011

சீனாவில் வீழ்ந்தது கம்யூனிஷம்!



சீனாவில் வீழ்ந்தது கம்யூனிஷம்!

கம்யூனிஷ ஆட்சியாளர்களால் இது நாள் வரை மத உரிமைகள் மறுக்கப்பட்ட பல சீனர்கள் வேலை நிமித்தமாக சவூதி வந்துள்ளனர். அதிலும் ஜெத்தா-மெககா-மெதீனா மெட்ரோ ரயில் திட்ட காண்ட்ராக்டும் தற்போது சைனாவுக்கே கிடைத்துள்ளது. 5000க்கும் மேற்பட்ட டெக்னீசியன்களும் தொழிலாளர்களும தற்போது சவுதி வந்துள்ளனர்.

கடவுள் என்றால் யார்? இறை தியானம் எப்படி இருக்கும்? மன அமைதியை இறை தியானத்தில் பெறுவது எப்படி என்றெல்லாம் தெரியாமலேயே வெறும் கார்ல் மாக்ஸை மட்டுமே படித்த இந்த இளைஞர்கள் இன்று இறை மார்க்கத்தால் கவரப்பட்டு அதிகமதிகம் இஸ்லாத்தை ஏற்கின்றனர்.

கம்யூனிஷ அரசு கார்ல் மாக்ஸையும், லெனினையும், யும் தான் வேதமாகவும் தூதர்களாகவும் இதுநாள் வரை காட்டி வந்தது. சவுதியின் சட்டதிட்டங்களும் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுத்து வியாபாரங்களையே நிறுத்தும் இந்நாட்டின் சட்டத்தை ஆச்சரியமுடன் பார்க்கின்றனர். எனது அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் 'அழைப்பு வழி காட்டல் மையத்தில் (ஜாலியாத்) தினமும் சீனர்களை பார்க்கிறேன். அரபி கற்றுக் கொள்ள ஆர்வப்படுவதையும், தொழுகைக்கு அழைப்பு விடுத்தவுடன் அனைத்து வேலைகளையும் விட்டு விட்டு பள்ளியை நோக்கி பறந்து வருவதையும் தினமும் பார்த்து வருகிறேன். இவர்களின் உடல் அமைப்புக்கு தாடி சரியாக வளருவதில்லை. ஒரு அன்பருக்கு இரண்டே முடிகள் வளர்ந்துள்ளது. அதை கையால் லாவகமாக வருடிக் கொண்டு என்னோடு பேசும் அழகை என்னவென்பது?

சில மாதங்களுக்கு முன்பு 50 சீனர்கள் மொத்தமாக இஸ்லாத்தை தங்களின் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே! அதைததான் மேலே உள்ள காணொளியில் பார்க்கிறீர்கள். அனைவரும் இளைஞர்கள். படித்தவர்கள். நல்ல சமபளத்தில் உள்ளவர்கள். எனவே ஏதோ பணம் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பிலும் இவர்கள் மாறவில்லை. எந்த மத நம்பிக்கையும் இல்லாமல் வெற்றிடமாக இருந்த மூளை இஸ்லாமிய நடவடிக்கைகளை பார்த்தவுடன் எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் உடன் ஏற்றுக் கொள்ளச் சொல்கிறது. சீனர்களின் பழக்கங்களுக்கும் இஸ்லாத்துக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இனி இவர்கள் தங்களின் உணவு முறைகளை எல்லாம் மாற்றிக் கொள்ள வேண்டும். எதைப்பற்றியும் கவலைபடாமல் ஏக இறைவனை தங்களின் இறைவனாக ஏற்ற இவர்களை வாழ்த்தி வரவேற்போம்.

நமது நாடடில் இந்து மதத்தின் ஆதி மக்களை தொடவும், வேதம் படிப்பிக்கவும், கோவிலுக்குள் நுழைவிப்பதற்கும் இன்றும் போராடிக் கொண்டிருக்கிறோம்.

இதே போன்றுதான் 1400 வருடங்களுக்கு முன்பு மெக்காவிலும் மதினாவிலும் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டது. தங்கள் மொழியே உயர்ந்த மொழி. மற்றவர்களின் மொழிகள் ஊமை மொழிகள் என்று ஏளனம் பேசி வந்தனர். பெண் குழந்தை பிறந்தால் உயிரோடு புதைத்து விடுவார்களாம். சிலர் பெண் குழந்தை பிறந்த செய்தி கேட்டால் சமூகத்துக்குள் வர வெடகப்பட்டுக் கொண்டு சமூகத்திலிருந்து சில வாரங்களுக்கு தலைமறைவாகி விடுவாரகளாம. குலத்தின் பெயராலும் கோத்திரத்தின் பெயராலும் பல ஆண்டுகள் வரை சண்டையிடுவார்களாம். இப்படிப்பட்ட மூர்க்கக் குணத்துக்கு சொந்தமான சவுதிகளை இஸ்லாம் எந்த அளவு பண்படுத்தியிருக்கிறது என்பதைத்தான் காணொளியில் நாம் பார்க்கிறோம். மொழியிலும் நிறத்திலும் தோற்றத்திலும் முற்றிலும் மாறுபட்ட சீனர்களை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவுடன் ஆரத தழுவி நெற்றிக்கு மேல் அன்பினால் முத்தமிடும் இந்த பக்குவத்தை அந்த அரபுகளுக்கு கொடுத்தது எது? இஸ்லாம் அல்லவா?

ஒரு சீனர் இஸ்லாத்தை ஏற்றால் அவர் மூலம் நூற்றுக்கணக்கான பேர் இஸ்லாத்தை ஏற்கும் பாக்கியம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஜெத்தாவில் கூட 600 சீனர்கள் இஸ்லாத்தை ஏற்றதாகவும் இந்த புதியவர்கள் மற்ற 5000 பேரை பிரசாரத்தின் மூலம் கொண்டு வந்துவிட முயற்ச்சிப்பதாகவும் அரம்கோ செய்தியும் தெரிவிக்கிறது. இதே நிலை தொடருமானால் இன்னும் 10 அல்லது 12 வருடங்களில் சீனாவில் இஸ்லாம் கம்யூனிஸத்தை வீழ்த்தி விடும்.

'இறைவனின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். இறைவனை மறுப்போர் வெறுத்தாலும் இறைவன் தனது ஒளியை முழுமையாக்காமல் விட மாட்டான்'
-குர்ஆன் 9:32



from aljazeera:

Riyadh, September 27: Over 600 Chinese nationals working on the Haramain Rail project have embraced Islam in a recent ceremony in Makkah.They are workers of the Chinese Railway Company, which won the multibillion contract for implementing the 450km rail road linking the holy cities of Makkah and Madinah via Jeddah and Rabigh.

Dr. Abdul Aziz Al Khudhairi, undersecretary at the Makkah Governorate, said that this year’s celebration of the Kingdom’s National Day coincides with a number of auspicious and historic occasions.

These included launching of the prestigious international research university – King Abdullah University for Science & Technology (KAUST), celebration of Eid Al Fitr and a recent ceremony of Chinese workers pronouncing their Shahada.

Dr. Abdul Aziz, who witnessed the event, described it as a “direct response to critics of the government for contracting Chinese company.”

Among the converts, there are 70 workers who are engaged in the construction of Makkah monorail project, which links the holy city with the holy sites of Mina, Muzdalifa and Arafat.

“Their conversion took place 24 hours after getting books introducing Islam in Chinese language at their worksite at Arafat, which is outside the Haram area,” he said adding that the credit goes to the Office of the Call and Guidance for Expatriates in Makkah.

Efforts are underway to spread the message of Islam among some 5,000 Chinese nationals working on the Haramain train,” he said adding that the major problem for the Call and Guidance Office is the lack of enough books on Islam in Chinese language.

It is noteworthy that the first phase of Haramain Rail consisting of 70km has well been started a few months ago. This represents expropriation of land, filling works, construction of bridges and tracks. The project is expected to be operational in 2012.-Agencies

சீன முஸ்லிம்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கும் அடுத்து இங்கும் செல்லுங்கள்.

49 comments:

Rabbani said...

masha allah great

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

Salaam to all..! Allaahu Akbar..!

//“Their conversion took place 24 hours after getting books introducing Islam in Chinese language..."//---Subahanallaah..!

'இறைவனின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். இறைவனை மறுப்போர் வெறுத்தாலும் இறைவன் தனது ஒளியை முழுமையாக்காமல் விட மாட்டான்'
-குர்ஆன் 9:32

Here also, in Al-Jubail Dawa Centre, every week in Jummah day....10 men in average who are maximum from Phillippines.... embrace Islam.

Alhamdulillah.

Thanks for sharing Bro.Suvanappriyan.

Nasar said...

எல்லாப் புகழும் பார் போற்றும் வல்லோனுக்கே !!!
கனோளியை பார்க்கும் போதே கண்களில் இருந்து சாரை சாரையாக ..............
நமக்கு அமைதி வேண்டும் என்று உலகத்தில் எங்கு தேடினாலும்,
கிடைக்காது ......இஸ்லாமை தவிர

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
அருமையான் பகிர்வு சகோ
கணொளியை பார்த்தபோது உடல் சிலிர்த்தது சகோ

தொடருங்கள்

Anisha Yunus said...

//ஒரு அன்பருக்கு இரண்டே முடிகள் வளர்ந்துள்ளது. அதை கையால் லாவகமாக வருடிக் கொண்டு என்னோடு பேசும் அழகை என்னவென்பது? //

மாஷா அல்லாஹ்..... ஆனந்தம் பெருகுகிறது. அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள், அல்லாஹு அக்பர்.

என் கல்லூரி நண்பன் ஜப்பானில் இருக்கிறான். அவனின் வருத்தமும் அதேதான், ஜப்பானிய மொழியில் குர்’ஆன் அல்லது இஸ்லாம் பற்றிய நூல்கள் இல்லை என்பதே. அங்கேயும் மக்களுக்கு ஒரு பிடிப்பில்லாத வாழ்வு, எதிலும் பற்றற்ற நிலை என்றே இருப்பதால் அவர்களை ஜப்பானிய மொழியிலல்லாமல் வேற்று மொழியில் தாவாஹ் செய்வது மிக கடினம் என்றான். நானும் தேடிக்கொண்டுள்ளேன் அந்த மொழியில் நூல்களோ/மீடியா வோ கிடைத்தால் அனுப்ப. உங்களின் இடத்தில் தாவாஹ் மையத்தில் இருந்தால் தெரிவியுங்கள் பாய். ஜஸாகுமுல்லாஹு க்ஹைர்.

ஆமினா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மாஷா அல்லாஹ்...

கலிபோர்னியாக் காதலன் said...

ஆஹா...

சீனமும் இஸ்லாமும் பொருதிக் கொள்ளும் நாளைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Masha allah is great.

சுவனப்பிரியன், ஆனாலும் நல்லாவே வாழைப்பழத்துல ஊசியேத்துறீங்க.

Keep it up man!

G u l a m said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சகோ சுவனப்ப்ரியன்

//கடவுள் என்றால் யார்? இறை தியானம் எப்படி இருக்கும்? மன அமைதியை இறை தியானத்தில் பெறுவது எப்படி என்றெல்லாம் தெரியாமலேயே வெறும் கார்ல் மாக்ஸை மட்டுமே படித்த இந்த இளைஞர்கள் இன்று இறை மார்க்கத்தால் கவரப்பட்டு அதிகமதிகம் இஸ்லாத்தை ஏற்கின்றனர்.//

நடுநிலை சிந்தனை இறுதியில் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்படும் என்பதை தான் இந்த பதிவும் பறைச்சாற்றுக்கிறது.

அல்ஹம்துல்ல்லாஹ்! அவர்களை நானும் வரவேற்ப்போம்!

Anonymous said...

dear sir.
i have been watching your propaganda for many years. As such, i am not surprised to hear such story as i had just read. whenever, someone quotes a violent passage from quran, you all will start screaming "out of context", "personal interpretation" or even "islamic misunderstander". i don't know why but i know for sure that you didn't tell the full story. first of all, you shall know that they were supposed to work for railway lines between "makkah and medina". you also know that only muslims can enter both cities. Then, how are they supposed to work on the railway. simple. convert to islam. This also happened in the seventies when militants occupied holy mosque in mecca. saudi government brought french commandoes to rout the militants. before they enter mecca, the commondoes convert to islam. i know that you know all about this but chose to not to reveal.
i read about this economist article weeks ago.
http://en.wikipedia.org/wiki/Grand_Mosque_Seizure
http://www.economist.com/node/17680668

பி.ஏ.ஷேக் தாவூத் said...

ஸலாம்,
மாஷா அல்லாஹ். அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
மனிதர்களால் உருவாக்கப்பட்ட அனைத்து இசங்களையும் சித்தாந்தங்களையும் தவிடு பொடியாக்கி மனித உள்ளங்களை சிந்திக்க வைத்து தன்பால் ஈர்க்க கூடிய வல்லமை இயற்கை மார்க்கமான இஸ்லாம் ஒன்றிற்கு மட்டுமே உரித்தானது. சகோதரரே நீங்கள் சொல்வது போல இன்ஷா அல்லாஹ் சீனாவில் இஸ்லாம தளைத்தோங்க கூடிய காலம் வெகு சீக்கிரத்தில் வரும். சத்தியத்தின் ஒளியை அசத்தியவாதிகள் தமது வாய்களால் ஊதி அனைத்து விட முயற்சிக்கின்றனர். ஆனால் ஒருக்காலும் அவர்கள் தமது முயற்சியில் வெற்றி பெற போவதில்லை.

இறைவா எங்களை நேரான வழியில் செலுத்திய பிறகு உள்ளங்களை தடம் மாற செய்து விடாதே. உள்ளங்களை புரட்ட கூடியவனே எங்கள் உள்ளங்களை நேரான வழியில் செலுத்துவாயாக .

Mohamed Faaique said...

மாஷா அல்லாஹ்..
///நமக்கு அமைதி வேண்டும் என்று உலகத்தில் எங்கு தேடினாலும்,
கிடைக்காது ......இஸ்லாமை தவிர///

உண்மைதான்...

இப்னு அப்துல் ரஜாக் said...

masha ALLAH

Unknown said...

ஸலாம்

மாஷா அல்லாஹ் ...

//ஒரு அன்பருக்கு இரண்டே முடிகள் வளர்ந்துள்ளது. அதை கையால் லாவகமாக வருடிக் கொண்டு என்னோடு பேசும் அழகை என்னவென்பது? //

இதை நான் கண் முன் கொண்டு வந்து ரசிக்கிறேன் .. சூப்பரா இருக்கு பாய் ..

ஹீருல் ஈன் ஒரு சஹாபாவுக்கு தாடியில் ஊஞ்சல ஆடிய ஹதீஸ் நாபகம் வருகிறது ..

Unknown said...

ஸலாம்

மாஷா அல்லாஹ் ...

//ஒரு அன்பருக்கு இரண்டே முடிகள் வளர்ந்துள்ளது. அதை கையால் லாவகமாக வருடிக் கொண்டு என்னோடு பேசும் அழகை என்னவென்பது? //

இதை நான் கண் முன் கொண்டு வந்து ரசிக்கிறேன் .. சூப்பரா இருக்கு பாய் ..

ஹீருல் ஈன் ஒரு சஹாபாவுக்கு தாடியில் ஊஞ்சல ஆடிய ஹதீஸ் நாபகம் வருகிறது ..

Unknown said...

Salam to all.
Masha allah good post bro! Keep it up!!

ashfa said...

அல்லாஹு அக்பர்
பகிர்ந்தமைக்கு ஜஸாக்கல்லாஹு ஹைரன்.

Anonymous said...

as-salaamu alaikum,

could you pls answer the anonys question??? when i first read the story i had the same question....pls explain...

and for those who r happy abt the conversion... we should be happy when we do something to islam rather than just be watching all the happenings.. when i say we should do something.. it could be helping our students & people to become government officials so that many of the illegal or unethical rules against islam can be avoided..and we dont have a strong media presence.. we have so many groups and they are busy fighting with each other...and tntj is ready to join hands with DMK but not with fellow muslims .. wht a tragedy for the muslims...atleast in the political front we need to have a unique voice.. we all should work towards that.. if we unite the bomb blasts carried out by the RSS and its allies will not be blamed on the muslims .. since we are separated our voices are not heard by the government & media...

- Habib

Unknown said...

Allah Akbar! Keep it up Bro Suvanappiriyan.

suvanappiriyan said...

அஸ்ஸலாமு அலைக்கும்!

ரப்பானி, முஹம்மது ஆசிக், நாசர், ஹைதர் அலி, அன்னு, ஆமினா, கலிபோர்னியாக் காதலன், குலாம், அனானி, பி.ஏ.சேக்தாவுத், முஹம்மத் பாய்க், ஒருவனின் அடிமை, இலக்கை நோக்கி, ஜாபர்கான், அஸ்பா, ஹபீப், ஆசிக் அன்வர்,

பின்னூட்டம் மூலம் எனது பணியை மேலும் உற்சாகத்துடன் தொடர தொடர்பு கொண்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஓட்டளித்த அனைவருக்கும் நன்றி. இதே போல் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் கருத்தை அவசியம் பதிவு செய்யுங்கள்.

suvanappiriyan said...

அனானி!

//i have been watching your propaganda for many years. As such, i am not surprised to hear such story as i had just read.//

என்னுடைய செய்திகள் அனைத்தும் ஆதாரத்தின் அடிப்படையிலேயே இருக்கும். இங்கு நான் பதிவிட்ட காணொளியும் பொய்யானது என்கிறீர்களா?

//whenever, someone quotes a violent passage from quran, you all will start screaming "out of context", "personal interpretation" or even "islamic misunderstander". i don't know why but i know for sure that you didn't tell the full story.//

எந்த வொரு வாக்கியத்தையும் முழுமையாக அந்த அத்தியாயத்தையே வாசித்தால்தான் அது எப்போது சொல்லப்பட்டது? யாரை நோக்கி சொல்லப்பட்டது என்ற உண்மை தெரியும். போர்க்களத்தில் எதிரிகளை நோக்கி சொல்லப்பட்ட ஒரு வசனத்தை பொதுவில் வைத்து எப்படி விவாதிக்க முடியும். பாரதப் போரிலும், பைபிளிலும் இதை விட அதிகமான குரூரமான வசனங்களை என்னால் காட்ட முடியும்.

//first of all, you shall know that they were supposed to work for railway lines between "makkah and medina". you also know that only muslims can enter both cities.//

மெக்கா மெதினாவுக்கு வேலைக்கு ஆள் எடுக்கும் போதே முஸ்லிம்களைத்தான் தேர்வு செய்வர். பல தலைமுறைகளாக இஸ்லாமியர்களாக வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் தான் மெக்கா மெதினாவில் வேலை செய்து வருகின்றனர். அந்த வேலையும் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது.

நான் உங்களை ஒன்று கேட்கிறேன். நீங்கள் தற்போது பணியில் இருந்தால் 30000 மாத வருமானம் வருவதாக வைத்துக் கொள்வோம். உங்களிடம் நான் 35000 மாத வருமானம் சவுதியில் கிடைக்க ஆவன செய்கிறேன். நீங்கள் முஸ்லிமாக மாறி விடுங்கள் என்று நான கேட்டால் நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா? யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். சில டாலர்களுக்காக மார்க்கத்தை மாற்றினால் இதை விட அதிகமாக கிறித்தவ மதத்தில் கொடுக்கிறார்கள். அடுத்த வாரமே அங்கு சென்று விடுவார்களே!

நீங்கள் உங்கள் வார்த்தையில் உணமையாளராக இருந்தால் அப்படி மதம் மாற்றப்பட்ட ஒரு நபரையாவது நீங்கள் காட்டுங்கள். கம்யுனிஸ சீன அரசாங்கம் அவ்வளவு சீக்கிரம் தங்களது கொள்கையை விட்டுக் கொடுப்பவர்கள் அல்ல.

ஏனெனில் இவ்வாறு மதம் மாறிய பல சீனர்களை தினமும் நான் பள்ளியில் தொழுகையில் சந்திக்கிறேன். அவர்களின் உறுதியில் பாதி கூட என்னிடம் இருக்குமா என்பது சந்தேகமே! அந்த அளவு இஸ்லாத்தோடு தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இவர்களைப் பார்த்து இப்படி ஒரு அபாண்டத்தை சுமத்த வேண்டாம்.

//before they enter mecca, the commondoes convert to islam. i know that you know all about this but chose to not to reveal.//

அங்கு சென்றதில் அதிகம் பாகிஸ்தானிய கம்மாண்டோக்கள்தான். பிரெஞ்ச் துருப்புகள் மாறியிருந்தாலும் அது அவர்களின் சொந்த விருப்பத்தின்பால் பட்டது. யாரையும் கட்டாயப்படுத்தி இருத்தி வைக்க முடியாது.

ஏன் இவ்வாறு மாறுகிறார்கள் என்பதை பிபிசியில் ஒரு கலந்துரையாடலையே நடத்தியுள்ளார்கள். புதிதாக சேர்க்கிறேன். பார்த்துக் கொள்ளுங்கள்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் திரு ஹபீப்!

//and we dont have a strong media presence.. we have so many groups and they are busy fighting with each other...and tntj is ready to join hands with DMK but not with fellow muslims .. wht a tragedy for the muslims...//

தினப்பத்திரிக்கை அவசியம் வேண்டும். அது மற்றவர்களையும் சென்றடைய நாம் மட்டுமே நடத்தக் கூடாது. இந்து இஸ்லாமிய கிறித்தவ கூட்டணியாக அந்த பத்திரிக்கை இருக்க வேண்டும். நல்லுள்ளம் கொண்ட எத்தனையோ இந்து கிறித்தவ நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் சேர்த்து தினப்பத்திரிக்கை கொண்டு வந்தால் வெற்றியடையலாம். அனைத்து தரப்பு செய்திகளும் அனைத்து மக்களையும் சென்றடையும்.

அடுத்து டிஎன்டிஜே குர்ஆனையும் ஹதீதையும் சொல்லக் கூடிய ஒரு அமைப்பு. அது பிடிக்கவில்லை என்றால் அமைப்பு சாராமல் தாவா பணி செய்யுங்கள். முதலில் 'அனைவருக்கும் கல்வி' என்ற இலக்கை அடைய வேண்டும். அதுதான் இப்போது நமக்கு முன் உள்ள முக்கியமான பிரச்னை. அனைவருக்கம் கல்வி கிட்டியால் பல பிரச்னைகள் தானாக சென்று விடும். அதிலும் இஸ்லாத்துக்கு பங்கம் வராத உலகக் கல்வியாகவும் இருக்க வேண்டும்.

//since we are separated our voices are not heard by the government & media...//

இதற்கு அரசுப் பணிகளில் நாம் சேர ஆர்வப்பட வேண்டும். தற்போது தனி இட ஒதுக்கீடும் நமக்கு கிடைத்துள்ளது. அதன் பலனை நாம் முழுமையாக அடைய வெளிநாட்டு வேலை மோகத்தைக் குறைத்துக் கொண்டு கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

தொடர்ந்து கருத்துக்களை கூறி வாருங்கள். வருகைக்கும் கருத்தக்கும் நன்றி!

Anonymous said...

//எந்த மத நம்பிக்கையும் இல்லாமல் வெற்றிடமாக இருந்த மூளை இஸ்லாமிய நடவடிக்கைகளை பார்த்தவுடன் எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் உடன் ஏற்றுக் கொள்ளச் சொல்கிறது.//
உண்மைதான், மூளை வெற்றிடமாக இருக்கும் மண்டைகள் மற்றும் அது இருந்தும் சிந்திக்க தெரியாத மண்டைகள் கண்டிப்பாக இஸ்லாமை ஏற்று கொள்ளும். உலகம் எங்கும் இஸ்லாமியர்கள் ஏன் படிப்பறிவு குறைந்தவர்களாகவே ஏன் இருக்கிறார்கள் என்பது இப்போது தான் புரிகிறது.

Anonymous said...

கம்யுனிஸம் என்பது பற்றி சுவனப்பிரியனின் புரிதல் என்ன?

சந்தை பொருளாதரத்தின் தலைவனாக இருந்து வரும் சீன பின்பற்றுவது கம்யுனிஸ பொருளாதாரமா?சீன கம்யுனிஸ அரசு என்றால் தலிபான்கள்தான் உண்மையான முஸ்லிம்கள்.

சவுதியில் பணியாற்ற வந்த சில சீனர்கள் சவுதி அரசு மதத்தில் இணைந்தார்கள்.இதே போல் நாளை எண்ணெய் தீர்ந்த பிறகு இந்தியாவில் கூலி வேலை செய்ய வரு சவுதிகள் இந்து மதத்தையும் ஏற்பார்கள்.இதெல்லாம் அரசியலில் சகஜம் சவுதி மதத்தில் இருந்து வெளியேறிய சவுதிகள் சிலரை காட்டினால் சவுதி மதம் வீழ்ந்தது என்றா கூறுவீர்கள்?

சவுதியில் வங்கிகளில் வட்டிக்கு கடன் கொடுக்கப்படுகிறது.அவ்வாறு செய்பவர்களை என்னவோ செய்ததாக சவுதி மதத்தினர் கூறுவர்.அப்படியெனில் சவுதி மதம் வீழ்ச்சி அடைந்ததா?

சென்ற பதிவில் ஒரு பிலிப்பைன்ஸ் நடிகை சவுதி மதத்தை ஏற்றார் என்றால் முஸ்லிமாக் இருந்து கொண்டு கவர்சிக்கன்னிகளாக விளங்கும் ஷகிலா,ஜீனத் அம்மன்,கத்ரினா கைஃப் போன்றவ்ரகள் சவுதி மதம் சரியில்லை என்று முடிவு செய்து விட்டார்கள் என்று கூறலாம.

சவுதிக்காரன் கொடுக்கும் காசுக்கு ரொம்ப்த்தான் கூவுறே வாத்யாரே!!!!!!!!
நீயே இந்தியாவில் இருந்தா ஒரு பதிவும் எழுதாமே பிழைப்பை பார்த்துக் கொண்டுருப்பே.இந்தியாவில் 600 வருடம் சவுதி மத ஆட்சி இருந்தும் இந்தியா முழுதும் சவுதி மதமாகவில்லை.அப்ப இந்து மதம் சவுதி மதத்தை விட சிறந்ததா!!!!!!!!!!

காசு இருக்கிறதை சேர்த்து வைக்கத் தெரியாம ஊதாரித்தனமா சவுதிக்காரன் செலவு செய்ரான் அதை தமிழன் ,பாகிஸ்தான் சீனர் எல்லாம் அனுபவிங்க!!!! காசு தீர்ந்தா அவனை கை கழுவி விட்டுடனும்

suvanappiriyan said...

சகோதரி அன்னு!

//என் கல்லூரி நண்பன் ஜப்பானில் இருக்கிறான். அவனின் வருத்தமும் அதேதான், ஜப்பானிய மொழியில் குர்’ஆன் அல்லது இஸ்லாம் பற்றிய நூல்கள் இல்லை என்பதே. அங்கேயும் மக்களுக்கு ஒரு பிடிப்பில்லாத வாழ்வு, எதிலும் பற்றற்ற நிலை என்றே இருப்பதால் அவர்களை ஜப்பானிய மொழியிலல்லாமல் வேற்று மொழியில் தாவாஹ் செய்வது மிக கடினம் என்றான். நானும் தேடிக்கொண்டுள்ளேன் அந்த மொழியில் நூல்களோ/மீடியா வோ கிடைத்தால் அனுப்ப. உங்களின் இடத்தில் தாவாஹ் மையத்தில் இருந்தால் தெரிவியுங்கள் பாய். ஜஸாகுமுல்லாஹு க்ஹைர்.//

தாஃவா சென்டரில் விசாரிக்கிறேன். ஜப்பானிய மொழியிலும் நான் பார்த்ததாக ஞாபகம. கிடைத்தால் உங்களை தொடர்பு கொள்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

suvanappiriyan said...

அனானி!

//உலகம் எங்கும் இஸ்லாமியர்கள் ஏன் படிப்பறிவு குறைந்தவர்களாகவே ஏன் இருக்கிறார்கள் என்பது இப்போது தான் புரிகிறது.//

உலகத்தைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இந்தியாவில் படிப்பறிவு இஸ்லாமியர்களிடத்தில் குறைவாக உள்ளது ஏன் என்பதை பார்ப்போம்.

சுதந்திர இந்தியாவுக்கு முன் பிராமணர்களை விட அதிக எண்ணிக்கையில் படிப்பிலும் அரசு வேலைகளிலும் முஸ்லிம்கள் சிறந்தே விளங்கினர். வெள்ளைக்காரன் முஸ்லிம்களை நன்றாகவே வைத்திருந்தான். இந்த நேரத்தில்தான் காந்தி தலைமையில் சுதந்திர போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்தது. மசூதிகள் அனைத்திலும் சுதந்திர வேட்கை முத்தி போன மார்க்க அறிஞர்கள் 'ஆங்கிலம் படிப்பது ஹராம். வெள்ளளைக்காரனிடம் யாரும் வேலை செய்ய வேண்டாம்' என்று முழங்கினர். இப்படி ஒரு தவறான முடிவை முஸ்லிம்கள் மடடும் எடுத்தனர். பிராமணர்கள் பிரிட்டிசாரை தாஜா செய்து உயர் பதவிகளில் அமர்ந்து கொண்டனர். அது இன்று வரை தொடர்கிறது.

காயிதே மில்லத் இது போன்ற பேச்சை கேட்டுத்தான் தனது கல்லூரி படிப்பை பாதியில் விட்டார். அப்படி ஒரு தவறை முஸ்லிமகள் அன்று செய்யாமல் இருந்திருந்தால் உங்களைப் போன்றவர்களெல்லாம் இவ்வாறு கேள்வி கேட்க வாய்ப்பு இருந்திருக்காது.

தவறை உணர்ந்த முஸ்லிம்கள் இன்று படிப்பில் அதிகம் கவனம் செலுத்துகின்றனர். இனி நிலை மாறும்.

suvanappiriyan said...

அனானி!

//சவுதி மதத்தில் இருந்து வெளியேறிய சவுதிகள் சிலரை காட்டினால் சவுதி மதம் வீழ்ந்தது என்றா கூறுவீர்கள்?//

இங்கு சிலர் மாறவில்லை. சில கூட்டங்களாக மாறுகின்றனர். மாறியவர்களும் இஸ்லாமிய வணக்கங்களை உளப்பூர்வமாக செய்து வருவதை நான் தினமும் பார்க்கிறேன். இவ்வளவு ஏன்? நம் பெரியார் தாசனிடமோ அல்லது ஏ. ஆர், ரஹ்மானிடமோ சென்று 'நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதனால் என்ன மாற்றத்தை அடைந்தீர்கள்?' என்று கேட்டுப் பாருங்கள். அவர்கள் பதிலளிப்பார்கள் உங்களுக்கு.

//முஸ்லிமாக் இருந்து கொண்டு கவர்சிக்கன்னிகளாக விளங்கும் ஷகிலா,ஜீனத் அம்மன்,கத்ரினா கைஃப் போன்றவ்ரகள்//

இந்து மதத்தைப் போல் யாரும் பிறப்பால் இஸ்லாமாக முடியாது. கவர்ச்சி காட்டி என்று நடிக்க ஆரம்பித்தனரோ அன்றே அவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டனர்.

//சவுதிக்காரன் கொடுக்கும் காசுக்கு ரொம்ப்த்தான் கூவுறே வாத்யாரே!!!!!!!!//

பார்க்கும் வேலைக்குத்தான் இங்கு சம்பளம் வாத்யாரே! ஓய்வு நேரத்தை சினிமாவில் போக்காமல் இது போல் பதிவெழுதி நேரத்தை கடத்துகிறேன். இதற்கெல்லாம் சம்பளம் தரப்படுவதில்லை. ஆர்வத்தில் நாமாக செய்வது.

//இந்தியாவில் 600 வருடம் சவுதி மத ஆட்சி இருந்தும் இந்தியா முழுதும் சவுதி மதமாகவில்லை.அப்ப இந்து மதம் சவுதி மதத்தை விட சிறந்ததா!!!!!!!!!!//

மொகலாயர்கள் 1000 வருடம் ஆட்சி செய்ய வந்தது மதத்தை பரப்புவதற்காக அல்ல. நாடு பிடிககும் ஆசையில் வந்தனர். அவர்களின் ஆசையும் நிறைவேறியது. அதற்கு இங்குள்ள இந்து மன்னர்களும் களம் அமைத்து கொடுத்தார்கள். இருந்தும் இன்று 25 கோடிக்கு மேல் முஸ்லிம்கள் இந்தியாவில்.

//காசு தீர்ந்தா அவனை கை கழுவி விட்டுடனும்//

அவனை கைகழுவி விட்டு விடலாம். ஆனால் இஸ்லாத்தை விட முடியாது.

எனக்கு ஆலோசனை சொல்வதை விட உங்கள் மதத்தில் உள்ள தீண்டாமைகளை களைய பாடுபடுங்கள். இல்லை என்றால் சீனா நிலைதான் இந்தியாவுக்கும்.

VANJOOR said...

??Anonymous said...
as-salaamu alaikum,

could you pls answer the anonys question??? when i first read the story i had the same question....pls explain... //
- Habib
--------------

Anonymous said...
dear sir.
// i have been watching your propaganda for many years. //

பல வருடங்களாகவே சுவ‌ன‌ப்பிரிய‌னின் "பிரசாரத்தை" கவ‌னித்துக்கொண்டு வ‌ருவ‌தாக அனானி கூறுவ‌தை கொண்டே தன்னை தெளிவாக்கி விட்டார்.

Anonymous said...
//i don't know why but i know for sure that you didn't tell the full story. first of all, you shall know that they were supposed to work for railway lines between "makkah and medina". you also know that only muslims can enter both cities. Then, how are they supposed to work on the railway. simple. convert to islam.
i know that you know all about this but chose to not to reveal.//

" மக்கா, ம‌தினாவில் முஸ்லீம் அல்லாத‌வ‌ர்க‌ள் நுழைய‌க் கூடாது என்ற‌ க‌ட்டுப்பாடு இருப்ப‌தினாலே மக்காவையும் ம‌தீனாவையும் இணைக்கும் ர‌யில்வேய் திட்டத்தில் பங்கேற்க‌ சீன‌ தொழிலாள‌ர்க‌ள் இஸ்லாத்தில் மாறினார்கள் என்ற உண்மையை அறிந்திருந்தும் இப்ப‌திவில் சுவ‌ன‌ப்பிரிய‌ன் முழுமையாக கூறாமல் மறைப்பதாக சொல்லுகிறார்.

அறிவு ஜீவிக‌ளே!!

சவூதி அரேபியாவின் ஏனைய‌ ப‌குதிக‌ளை த‌விர்த்து,

முஸ்லீம் அல்லாத‌வ‌ர்க‌ள் நுழைய‌ முடியாத மக்கா மதினா ஆகிய‌ இரு ந‌கரங்க‌ளிலும்

உல‌கில் முத‌ல் த‌ர‌ம் வாய்ந்த‌ சாலைக‌ள் , மிகுந்த‌ காற்றோட்ட‌முடைய‌ சுர‌ங்க‌ பாதைக‌ள், அனைத்து நவீன வசதிகளுமடங்கிய வான‌ளாவிய‌ க‌ட்டிட‌ங்க‌ள், ம‌ருத்துவ‌ம‌னைக‌ள், க‌ல்லூரிக‌ள், போக்குவ‌ர‌வு சாத‌ன‌ங்க‌ள் இத்தியாதி இத்தியாதிக‌ளுட‌ன்,

ல‌ட்ச‌க்க‌ண‌க்காண மிகமிக பிரகாசமான மின் விளக்குகள்,

பல்லாயிரக்கணக்கான‌ ஒரே சீரான‌ ஒலி த‌ரும் ஒலிபெருக்கிக‌ள், மின்விசிறிகள், காண்காணிப்பு கேம‌ராக்க‌ள், சதா நிரப்பப்படும் (குளிர், சுடு) குடி த‌ண்ணீர் தொட்டிக‌ள்,

நூற்றுக்கணக்கான‌ நவீன‌ குளிப்ப‌றை, கழிப்ப‌றைக‌ள், பிரம்மாண்டமான நுழைவாயில்க‌ள்,

எந்த நேரத்திலும் ஒரே சீரான சீதோஷ்ண நிலையில் இருக்கும் சதா சுத்தம் செய்யப்பட்ட பல நூறு ஏக்கர் பரப்பிலான பளிங்கு தரை,

பல நூறு ஏக்கர் ப‌ரப்பில் சதா சுத்தம் செய்யப்பட்ட தொழுகை விரிப்புக‌ள்.

LIFTS, ESCALATORS, etc. etc.

முதலியவற்றை ஒவ்வொன்றிலும் உள்ள‌ட‌க்கிய‌ மக்கா ம‌தீனா புனித‌ப‌ள்ளிக‌ள்

ஆகியவற்றை எல்லாம் சீராக திட்டமிட்டு வடிவ‌மைத்து நிர்மானித்து நிறைவேற்றி நிர்வகித்து பரிபாலித்து வ‌ரும் உலகளாவிய‌ சகலகலா வல்ல‌ முஸ்லீம்க‌ளுக்கு

முஸ்லீம் அல்லாத‌வ‌ர்க‌ள் தடுக்க‌ப்ப‌ட்ட‌ மக்கா, மதீனா ப‌குதிக‌ளில் எதையும் எப்போதும் நிறைவேற்ற‌ முஸ்லீம் அல்லாத‌வ‌ர்க‌ள் உத‌வியும் தேவையோ?
-----------------------------------

அநானி கொடுத்துள்ள விகிப்பீடியா தளத்தின் கட்டுரை >>>> லின்க் <<<< இதோ

வாசகர்களே கட்டுரையில் தேடிபாருங்கள்.

அநானி குறிப்பிடுவதைப்போல்

//Anonymous said...
This also happened in the seventies when militants occupied holy mosque in mecca.

saudi government brought french commandoes to rout the militants. before they enter mecca, the commondoes convert to islam.
http://en.wikipedia.org/wiki/Grand_Mosque_Seizure // --

தமிழில் (மக்காவின் புனித பள்ளியை போராளிகளிடமிருந்து மீட்க சவூதி அரசாங்கம் பிரான்ஸின் கம்மோண்டோ படைகளை அழைத்து வந்து அவர்கள் மக்காவில் நுழைவதற்கு முன்பதாக பிரெஞ்ச் கமோண்டோக்களை இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்தது)என்ற வரிகளே கட்டுரையில் கிடையாது.

மேலும் Grand Mosque Seizure

The neutrality of this article is disputed. Please see the discussion on the talk page. Please do not remove this message until the dispute is resolved. (November 2009)

என்று கட்டுரையின் நம்பத்தன்மை(?)யை பற்றி குறிப்பிப்பட்டிருப்பதையும்

=====================
No evidence

There's no evidence of the French and Pakistani forces being involved. It should be either deleted, or someone should provide proof.--70.230.200.219 12:46, 1 July 2007 (UTC)

LINK: http://en.wikipedia.org/wiki/Talk:Grand_Mosque_Seizure

என்ற விவாதஙகளும் குறிப்பிடப்பட்டிருக்கிறதையும்


அநானி வசதியாக மறந்துவிட்டு மறைத்துவிட்டு இங்கு என்ன ‘செய்ய” ‘சொல்ல’ முயலுகிறார் என்பதை அவரே விளங்கி கொண்டால் சரி.

வாசகர்கள் சரியாக விளங்கிக்கொண்டார்கள்.

.

Aashiq Ahamed said...

எல்லாருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்,

@ ஒரு அனானி சகோதரருக்கு,

//இந்தியாவில் 600 வருடம் சவுதி மத ஆட்சி இருந்தும் இந்தியா முழுதும் சவுதி மதமாகவில்லை.///

உலகில் முஸ்லிம்கள் அதிகம் வாழக்கூடிய நாடுகளில் இரண்டாவது மற்றும் நான்காவது நாடுகளான பாகிஸ்தானும், பங்களாதேஷும் ஒரு காலத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த நாடுகள் தான் என்பது அனானிக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. 60 ஆண்டுகளுக்கு முன்பாக இவை இந்தியாவின் ஒரு பகுதி என்பதும் அனானி சகோதரருக்கு தெரியாமல் இருக்காது. உங்கள் கணக்குப்படி 600 ஆண்டுகளில் ஒரு பாகிஸ்தானும், பங்களாதேஷும் இருக்கும்போது, இன்னும் ஒரு 50 ஆண்டுகள் சேர்த்து 650 ஆண்டுகளில் இந்தியாவும்............... இன்ஷா அல்லாஹ் (கோடிட்ட இடத்தை நிரப்பிக்கொள்ளுங்கள்)

@ எகனாமிஸ்ட் லிங்க் கொடுத்த அனானி சகோதரருக்கு, எகனாமிஸ்ட் அந்த கட்டுரையில் கடைசியில் கூறியிருக்கும் //Some firms would have been put off by the fact that non-Muslims are barred from working in Mecca, so China simply converted hundreds of railway workers to Islam./// -இது, சீன அரசின் எந்த செய்தியின் அடிப்படையில் அமைந்தது என்பதை அறிந்துக்கொள்ள ஆவல்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

suvanappiriyan said...

//ஆனால் ஆபிரகாமிய மதங்கள் அவற்றைப் பின்பற்றுபவர்கள் மனதில் இந்து மதத்தின், பண்பாட்டின் மீது விதைக்கும் வெறுப்பு அந்த மதங்களின் ஒற்றைப் படையான, பன்மையை மறுக்கும் தன்மையினாலும் தீர்க்கதரிசி மதங்களுக்குரிய அடிப்படைவாத தன்மையினாலும் வருவது.//

// இதை நீங்கள் உறுதியாக நம்பினால், ஆபிரகாமிய மதத்தவரோடு இணக்கமாக ஹிந்துக்களால் ஒரு நாளும் வாழ முடியாது என்று corrolary வருகிறது. என் லாஜிக் சரியா, இல்லை ஏதாவது தவறான முடிவுக்கு வந்துவிட்டேனா?//

'இறைவனையும் எங்களுக்கு அருளப்பட்டதையும் ஆப்ரஹாம், இஸமவேல், இஸ்ஹாக், யாகோப், மற்றும் அவர்களின் சந்ததிகளுக்கு அருளப்பட்டதையும் மோசே, ஏசு மற்றும் தூதர்களுக்கு தமது இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்பினோம். அவர்களில் எவருக்கிடையேயும பாரபட்சம் காட்டமாட்டோம். நாங்கள் ஏக இறைவனுக்கே கட்டுப்பட்டவர்கள்' என்று கூறுவீராக.

-குர்ஆன் 3:84

இந்த பதிவில் ஆர்வியும் ஜடாயும் விவாதித்த அத்தனை விஷயங்களுக்குமான தீர்வை இந்த ஒற்றை குர்ஆன் வசனம் தெளிவாக்குகிறது.

Anonymous said...

//எனக்கு ஆலோசனை சொல்வதை விட உங்கள் மதத்தில் உள்ள தீண்டாமைகளை களைய பாடுபடுங்கள். இல்லை என்றால் சீனா நிலைதான் இந்தியாவுக்கும்.. //

இந்து மதத்தில் மட்டும்தான் உள்ளது தீண்டாமை ஆனா இசுலாமில் எல்லோரும் சமம் என்ற குரான் ஆதரிக்கும் பொய்யை (Taqiyya) எத்துனை நாளுக்குத்தான் அள்ளிவிடப் போகிறீர்கள் மிஸ்டர் சுவனபிரியன்?
மதம் மாறிய தலித்துகள் எவ்வாறு மற்ற முசுலிம்களால் கேவலமாக நடத்தப்படுகிறார்கள் என்பது பற்றியும் மதம் மாறிய தலித்துகள் பெயரைச் சொல்லி எவ்வாறு மற்ற முசுலிம்கள் பணம் வசூலித்து ஏப்பம் விடுகிறார்கள் என்பது பற்றியும் 'கருப்பாயி என்கிற நூர்ஜஹான்' என்ற புத்தகத்தில் மீனாட்சிபுரத்தில் மதம் மாறிய அன்வர் விளக்கமாக எழுதியுள்ளாராம், அதாவது ஒப்புதல் வாக்குமுலம் அளித்துள்ளாராம்... உமது கட்டுக்கதை இனியும் செல்லாது!

suvanappiriyan said...

வாஞ்சூர் பாய்!

//…பல்லாயிரக்கணக்கான‌ ஒரே சீரான‌ ஒலி த‌ரும் ஒலிபெருக்கிக‌ள், மின்விசிறிகள், காண்காணிப்பு கேம‌ராக்க‌ள், சதா நிரப்பப்படும் (குளிர், சுடு) குடி த‌ண்ணீர் தொட்டிக‌ள்,

நூற்றுக்கணக்கான‌ நவீன‌ குளிப்ப‌றை, கழிப்ப‌றைக‌ள், பிரம்மாண்டமான நுழைவாயில்க‌ள்,

எந்த நேரத்திலும் ஒரே சீரான சீதோஷ்ண நிலையில் இருக்கும் சதா சுத்தம் செய்யப்பட்ட பல நூறு ஏக்கர் பரப்பிலான பளிங்கு தரை,…//

அருமை....அருமை...அனானிக்கு மிக அருமையாக பதில் கொடுத்துள்ளீர்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ ஆசிக்!

//இது, சீன அரசின் எந்த செய்தியின் அடிப்படையில் அமைந்தது என்பதை அறிந்துக்கொள்ள ஆவல்.//

அனானி பதில் கொடுக்கிறாரா என்று பார்ப்போம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

கரிகாலன் said...

சீனாவில் கம்யூனிசம் வீழ்ந்து நெம்ப நாளாச்சுங்கோ

suvanappiriyan said...

//பீஜப்பூர் தெருவில் பசுவை வெட்ட முனைந்த இஸ்லாமிய கசாப்புக் கடைக்காரன் கையை வெட்டினானே சிறுவன் சிவாஜி அந்த செயல் ஹிந்துத்துவம். பசுவைக் கொல்ல வந்த சிங்கத்திற்குத் தன்னையே பலியாகத்தர முன்வந்தானே மன்னன் திலீபன் அவனது அந்த செய்கை ஹிந்துத்துவம்.//

இந்து மதத்தின் இது போன்ற இந்துத்வா கொள்ளைகளை போஸ்டர் அடித்து தமிழகம் முழுதும் ஒட்டவும். இந்துத்வாவின் பெருமையை அனைவரும் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

Anonymous said...

as-salaamu alaikum,

thanks for the reply bro.

i didn't say i dont like tntj.. just wanted to stress the point that we are not united... they are joining hands with others but hesitant to join with the muslims brothers... apart from that i really appreciate tntj's effort in bringing many muslims to islam....i.e. helping muslims to know the real islam.. rather than living for name-shake...


and CMN saleem is doing a good job in promoting education among muslims..and letting us know the real history of muslims in india and elsewhere..
- Habib

Anonymous said...

கம்யுனிஸம் என்பது பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டது.இறை மறுப்பு அதில் ஒரு சிறு பகுதி.
இஸ்லாமிய பொருளாதாரத்தில் வட்டி இல்லை வட்டி வாங்கினால் ஏதையோ செய்வதாக கூறுவதும் ஈமானுள்ள சவுதி மதத்தினர் கூறுவது வழக்கம்.

இஸ்லாமியர்களின் புண்ணிய பூமியான சவுதியில் வட்டி வங்கிகளில் வழங்கப்படுகின்றது என்றால் சவுதியில் இஸ்லாம் வீழ்ந்தது என்றுதானே அர்த்தம்.
Calculate interest rate

http://www.alrajhibank.com.sa/en/personal/personal-finance/pages/personal-finance.aspx


http://www.bebas-hutang.com/personal-loan-with-al-rajhi-bank/

பிச்சை எடுப்பது இஸ்லாமின் படி தவறு என்றால் சவுதியில் பிச்சை எடுப்பது (பெண்கள் அதிகமாக்)எல்லா இடங்களிலும் உள்ளதை அனைவரும் அறிவோம்.
பல ஹஜ் செல்லும் பயணிகளே செலவை ஈடு கட்ட அங்கேயே பிச்சை எடுப்பதாக்வும் கேள்வி.ஆக‌வே சவுதியில் இஸ்லாம் வீழ்ந்தது என்றுதானே அர்த்தம்.
Despite laws, begging on the rise
By MD HUMAIDAN | ARAB NEWS
Published: Jul 21, 2011 00:25 Updated: Jul 21, 2011 00:25
JEDDAH: The number of beggars in the country exceeds the estimated figure of 150,000 quoted by government statistics, researchers say.

http://www.arabnews.com/saudiarabia/article475414.ece

ஒரு பிலிப்பைன்ஸ் நடிகை ஹிஜாப் அணிந்தால் அல்லாவுக்கு வெற்றி என்றால் கவர்ச்சிக்கன்னி முஸ்லிமாக்களான ஷகிலா ஷர்மிலி,கத்ரினா கைஃப்,குஷ்பு,...ஆகியோரால் அலாவுக்கு தோல்விதானே?
ஷகிலா ஹிஜாப் அணிந்தால் தடுப்பது ஏன்?அவரும் முஸ்லிமா ஆக துஆ செய்யுங்கள்.

இரஹ்மான் ஒரு தர்காவாசி ஆகவே அவர் சவுதி மதம் சேர்ந்தவர் அல்ல‌

சேஷாசல பெரியார்தாச சித்தார்த்த அப்துல்லா இன்னும் தன் இணை வைக்கும் மனைவியோடு வாழ்வது இஸ்லாமின் படி தவறு.ஆகவே அவரும் நரக வாசியே.மண விலக்கு செய்து ஒரு (சிறு வயது )முஸ்லிமாவை மண முடித்து அவரை முஸ்லிம் ஆக்குங்கள்
NILA

Anonymous said...

//உலகில் முஸ்லிம்கள் அதிகம் வாழக்கூடிய நாடுகளில் இரண்டாவது மற்றும் நான்காவது நாடுகளான பாகிஸ்தானும், பங்களாதேஷும் ஒரு காலத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த நாடுகள் தான் என்பது அனானிக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. 60 ஆண்டுகளுக்கு முன்பாக இவை இந்தியாவின் ஒரு பகுதி என்பதும் அனானி சகோதரருக்கு தெரியாமல் இருக்காது. உங்கள் கணக்குப்படி 600 ஆண்டுகளில் ஒரு பாகிஸ்தானும், பங்களாதேஷும் இருக்கும்போது, இன்னும் ஒரு 50 ஆண்டுகள் சேர்த்து 650 ஆண்டுகளில் இந்தியாவும்............... இன்ஷா அல்லாஹ் (கோடிட்ட இடத்தை நிரப்பிக்கொள்ளுங்கள்)//

பாகிஸ்தானும், பங்களாதேஷும் முசுலிம் நாடாக மாறிவிட்ட காரணத்தினால் எப்படியெல்லாம் சீரழிகின்றன என்பது உலகறிந்தது. பங்களாதேஷ் வறுமையில் வாடுகிறது. பாகிஸ்தான் சவுதி மற்றும் அமெரிக்கா போடும் பிச்சையில்தான் உயிரோடு இருக்கிறது. 650 வருடத்தில் இந்தயாவிற்கு கேடுகாலம் பிடிக்குமா? பார்ப்போம்!

suvanappiriyan said...

//இஸ்லாமியர்களின் புண்ணிய பூமியான சவுதியில் வட்டி வங்கிகளில் வழங்கப்படுகின்றது என்றால் சவுதியில் இஸ்லாம் வீழ்ந்தது என்றுதானே அர்த்தம்.//

ஒரு இஸ்லாமியர் வட்டி வாங்கினால் அதற்குரிய தண்டனையை பெறுவார். இஸ்லாமிய வட்டத்துக்குள் இருந்து வெளியேற மாட்டார். ஆனால் கம்யுனிஸ்ட் ஆத்திகனாக இருக்க முடியாது. மேலும் ரஸ்யாவில் ஏற்கெனவே கம்யுனிஸத்தை கை கழுவி விட்டனர். சைனாவின் நிலை நமக்கு தெரிந்ததே! மேலும் இரண்டு நாடுகளிலும் மக்கள் அதிக அளவில் இஸ்லாத்தில் இணைவதால் வரும் காலங்களில் அங்கு முற்றிலுமாக கம்யுனிஸம் துடைக்கப்பட்டு விடும் என்பதுதான் இந்த பதிவின் சாரம்.

//ஒரு பிலிப்பைன்ஸ் நடிகை ஹிஜாப் அணிந்தால் அல்லாவுக்கு வெற்றி என்றால் கவர்ச்சிக்கன்னி முஸ்லிமாக்களான ஷகிலா ஷர்மிலி,கத்ரினா கைஃப்,குஷ்பு,...ஆகியோரால் அலாவுக்கு தோல்விதானே?//

இல்லை. தோல்வி இந்த நடிகைகளுக்குத்தான்.

//சேஷாசல பெரியார்தாச சித்தார்த்த அப்துல்லா இன்னும் தன் இணை வைக்கும் மனைவியோடு வாழ்வது இஸ்லாமின் படி தவறு.//

மனைவியும் மகனும் முஸ்லிமாக மாற சம்மதித்து விட்டதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறாரே!

//இரஹ்மான் ஒரு தர்காவாசி ஆகவே அவர் சவுதி மதம் சேர்ந்தவர் அல்ல‌//

கூடிய விரைவில குர்ஆனை முழுவதுமாக விளங்க வேண்டிய முறையில் விளங்கி தர்ஹா வணக்கத்தை கைவிடுவார் என்று எதிர்பார்ப்போம்.

suvanappiriyan said...

//மதம் மாறிய தலித்துகள் எவ்வாறு மற்ற முசுலிம்களால் கேவலமாக நடத்தப்படுகிறார்கள் என்பது பற்றியும்//

கேவலமாக நடத்தினால் அவர்கள் முஸ்லிம்களே அல்ல. ஒரு தலைமுறைக்கு அவர்களுக்கு சிரமம் இருக்கத்தான் செய்யும். ஏனெனில் வர்ணாசிரமத்தின் பிடி அந்த அளவு நமது சமூகத்தில் ஊறியிருக்கிறது. சிலர் பெண் கொடுக்கிறார்கள். எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. பிரசாரத்தின் மூலம் இதை சரி செய்து வருகிறோம். கூடிய விரைவில் நிலைமை மாறும்.

முன்பு கோவிலுக்குள்ளேயே நீங்கள் அனுமதித்ததில்லை. சட்டை போடக் மூடாது. மேல் சாதியைப் பார்த்தால் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு கூனி குறுகி கும்பிடு போட வேண்டும். என்ற நிலை எல்லாம் முஸ்லிமான தலிததுக்கு இனி இருக்காது.

Anonymous said...

//முன்பு கோவிலுக்குள்ளேயே நீங்கள் அனுமதித்ததில்லை. சட்டை போடக் மூடாது. மேல் சாதியைப் பார்த்தால் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு கூனி குறுகி கும்பிடு போட வேண்டும். என்ற நிலை எல்லாம் முஸ்லிமான தலிததுக்கு இனி இருக்காது.//

இனி இருக்காது எனில் இப்போது இருக்கிறது என ஒப்புக்கொண்டீர்கள் அதுவரை நல்லது.

//முன்பு கோவிலுக்குள்ளேயே நீங்கள் அனுமதித்ததில்லை. சட்டை போடக் மூடாது. மேல் சாதியைப் பார்த்தால் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு கூனி குறுகி கும்பிடு போட வேண்டும். என்ற நிலை எல்லாம் முஸ்லிமான தலிததுக்கு இனி இருக்காது.//

இனி அந்த நிலை இந்து தலித்திற்கும் இனி இருக்காது.

முன்பு இந்து தலித் குறுகி கும்பிடு போட்டால் போதும். ஆனால் முன்பு முசுலிம்கள் அடிமைகளை எவ்வாறு நடத்தினர் என்பது பற்றி குரானில் படித்தாலே இசுலாமின் சமத்துவ லட்சணம் விளங்கிவிடும்.

கரிகாலன் said...

கம்யூனிசம் என்பது பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. இஸ்லாம் இறைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. இறைவனின் கட்டளையை மீறிய ஒரு நாட்டை எப்படி இஸ்லாமிய நாடாக கூறமுடியும்? மேலும், ரஷ்யவிலும் சீனாவிலும் சோசலிசம் இருந்தபோது அங்கிருந்தவர்களெல்லாம் நாத்திகர்களாக இருந்தனர் என்பது முட்டாள்தனமான கருத்து. இந்தப் பதிவிற்கு சீனாவில் வீழ்ந்தது புத்தம் என தலைப்பே பொருத்தமானது

Anonymous said...

Anonymous said...
//ஒரு காலத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த நாடுகள் தான் என்பது அனானிக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. 60 ஆண்டுகளுக்கு முன்பாக இவை இந்தியாவின் ஒரு பகுதி என்பதும் அனானி சகோதரருக்கு தெரியாமல் இருக்காது. உங்கள் கணக்குப்படி 600 ஆண்டுகளில் ஒரு பாகிஸ்தானும், பங்களாதேஷும் இருக்கும்போது, இன்னும் ஒரு 50 ஆண்டுகள் சேர்த்து 650 ஆண்டுகளில் இந்தியாவும்..............//

இந்தியாவில் இருக்கும் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் எண்ணமும் உங்கள் வார்த்தைகளில் தெளிவாக தெரிகிறது. பாபர் மசூதி இடித்தது தவறு இல்லை. இடிக்கபடவேண்டிய பலவற்றை இடிக்காமல் விட்டது தான் தவறு என்று நன்றாக புரிகிறது. உலகிலேயே கேவலமான சாக்கடை தேசமான பாகிஸ்தானை போல் இந்தியாவும் மாறும் நிலை வந்தால். இந்த தேசம் இருப்பதை விட அழிவதே மேல்.

Aashiq Ahamed said...

சகோதரர் அனானி,

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக..

//இந்தியாவில் இருக்கும் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் எண்ணமும் உங்கள் வார்த்தைகளில் தெளிவாக தெரிகிறது. பாபர் மசூதி இடித்தது தவறு இல்லை. இடிக்கபடவேண்டிய பலவற்றை இடிக்காமல் விட்டது தான் தவறு என்று நன்றாக புரிகிறது. உலகிலேயே கேவலமான சாக்கடை தேசமான பாகிஸ்தானை போல் இந்தியாவும் மாறும் நிலை வந்தால். இந்த தேசம் இருப்பதை விட அழிவதே மேல். உங்களை போன்ற ..................... களை தன்னகத்தே வைத்திருப்பது தான் இந்த தேசம் செய்த பாவம்//

சகோதரர் நோ டென்ஷன். கூல் டவுன். வரலாற்றில் என்ன நடந்ததோ அதையும், அதனை அளவுக்கோலாக வைத்து எதிர்காலத்தில் என்ன நடக்கும் (இறைவன் நாடினால்) என்பதையுமே சொன்னேன். இன்னும் இந்தியாவில் இஸ்லாம் பெரும்பான்மை அடையவில்லை என்பதெல்லாம் எந்த அளவு அறியாமைக்கருத்து என்பது உங்களுக்கு இன்னும் புரியவில்லை என்றால் பாகிஸ்தானையும் பங்களாதேஷ்யையும் இன்னொரு முறை பார்த்துக்கொள்ளுங்கள்.

நன்றி...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

கரிகாலன் said...

//ஒரு காலத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த நாடுகள் தான் என்பது அனானிக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.//

இதையே திருப்பிப் போட்டுப் பாருங்களேன். உங்கள் கதை ஆதமிலிருந்து தொடங்குவதால், உங்கள் கதைப்படி இந்த உலகம் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருந்தது என்பது ஆஷிக்கிற்கு மறந்துவிட்டதா?

Aashiq Ahamed said...

சகோதரர் கரிகாலன்,

உங்கள் மீது அமைதி நிலவுவதாக....

///உங்கள் கதை ஆதமிலிருந்து தொடங்குவதால், உங்கள் கதைப்படி இந்த உலகம் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருந்தது என்பது ஆஷிக்கிற்கு மறந்துவிட்டதா? ///

இதற்கு குர்ஆன் குறித்து சற்றே அறிந்திருந்தாலும் பதில் கிடைத்திருக்குமே சகோதரர். அதிகமில்லை, முதல் ஐம்பது குர்ஆன் வசனங்களை படியுங்கள். இன்ஷா அல்லாஹ் விளங்கிக்கொள்வீர்கள். நானே சொல்லலாமே என்று நீங்கள் கேட்டால், இதற்கு விடை கண்டுபிடிக்கவாவது தாங்கள் குர்ஆனை படிக்க மாட்டீர்களா என்ற ஆசையே காரணம்.

அனானி சகோதரர் கேட்ட அறியாமை கேள்விக்கு அவரது பாணியிலேயே பதில் சொன்னேன். அவ்வளவே. அதுக்கூட, ஏனோ தானோ என்று கருத்து கூறாமல், வரலாற்றில் நடந்த உண்மையையே கூறினேன்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

கலிபோர்னியாக் காதலன் said...

//இன்னும் இந்தியாவில் இஸ்லாம் பெரும்பான்மை அடையவில்லை என்பதெல்லாம் எந்த அளவு அறியாமைக்கருத்து என்பது உங்களுக்கு இன்னும் புரியவில்லை என்றால் பாகிஸ்தானையும் பங்களாதேஷ்யையும் இன்னொரு முறை பார்த்துக்கொள்ளுங்கள். //

அட அறிவாளிகளே, அவர்களே இந்தியா வேணாம்ணு போயிட்டாங்க. அப்புறம் என்னாத்துக்கு அவங்கள கணக்கிலெடுக்கணும்?

சரி ஒரு பேச்சுக்குத்தான் கூட்டிப் பாருங்களேன். சுமார் 40% வருது.

2011 India population = 1,21,01,93,422

2001 % of Muslim population = 13.4%
Let us make it 15% for 2011.

It comes to 18,15,29,013.

2011 Pakistan population = 17,80,61,000
2011 Bangladesh population = 14,23,19,000

Assume 100% of population in both countries are Muslims.

So the total Muslim population across subcontinent comes to 50,19,09,013.

This as a % of 2011 Indian population is 41.47%

போதுமா?

Anonymous said...

**
வரலாற்றில் என்ன நடந்ததோ அதையும், அதனை அளவுக்கோலாக வைத்து எதிர்காலத்தில் என்ன நடக்கும் (இறைவன் நாடினால்) என்பதையுமே சொன்னேன்.
**

1947ல இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிஞ்சுது. 1972ல பாகிஸ்தானிலிருந்து பங்களாதேசம் பிரிஞ்சுது.

இதுதாங்க நடந்தது.

எதிர்காலத்தில் (இறைவன் நாடினால்) பலுச்சிஸ்தானும், சிந்தும், பஷ்டூன்களும் பிச்சிகிட்டு போகலாம்.

Anonymous said...

before claiming the success of islam in India one must consider population growth of pakistan and bangladesh and compare it with india. in 1950 pakistan's population was 40 million. in 2011, the population is 187 million. that is 4.675 times the initial population. the population of bangladesh in 1950 was 37million. now it is 150 million. that is 4 times the initial population. whereas in india, in 1950 the population was 361 million. in 2011 it is 1210 millions. that is only 3.35 times increase. with such high population growth one should not believe that islam was and is very successful in india. further more, in 1950 pakistan's 25% of the population was hindus. now after genocide and ethnic cleansing the population of hindus in pakistan is less than 1%. same thing in bangladesh.in 1941 bangladesh's hindu were 28% of the population. now it is about 8%. During the bangladesh's war of independence in the seventies 3 to 5 million hindus were massacred by muslims of west pakistan and other jihadis. also mind the india has huge muslim population and it's muslim birth rate is much higher than hindus. in light of all these, please make your opinion about success of islam in india.

Anonymous said...

//இதே நிலை தொடருமானால் இன்னும் 10 அல்லது 12 வருடங்களில் சீனாவில் இஸ்லாம் கம்யூனிஸத்தை வீழ்த்தி விடும்.//

பாவம், சீனாவின் வல்லரசு கனவு இனி அவ்வளவுதான். அவர்களையும் பீடை பிடித்து கொண்டது