Followers

Sunday, June 21, 2009

செவ்வாய் கிரகத்தில் ஏரி: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு



வாஷிங்டன் : செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான மற்றொரு ஆதாரத்தை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா, அங்குள்ள வாயுவின் தன்மை, உயிரினங்கள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய, அமெரிக்கா சில விண்கலங்களை அங்கு அனுப்பியது. இதில், ஒரு விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த கேமராவின் மூலம் எடுக்கப்பட்ட படங்கள், சமீபத்தில் நாசா விண்வெளி மையத் துக்கு கிடைத்துள்ளது.நீர் ஓடியதால் ஏற்பட்ட பள்ளம் ஒன்று படம் எடுத்து அனுப்பப்பட்டுள்ளது. இந்த பள்ளம், 30 மைல் தூரத்துக்கு இருக்குமென விஞ்ஞானிகள் கணக்கிடுகின்றனர்.

ஆயிரத்து 500 அடி ஆழ ஏரியாகவும் இருந்திருக்கலாமென ஆராய்ச்சியாளர்கள் யோசிக்கின்றனர். செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை பனிக்கட்டியாக மாறி விடுகிறது அல்லது ஆவியாகி விடுகிறது.எனவே, செவ்வாய் கிரகத்தில் எந்த இடத்திலாவது உயிரினங்கள் இருக்கக் கூடும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். 350 கோடி ஆண்டுகளுக்கு முன் செவ்வாய் கிரகத்தில் கடலும், ஆறும், ஏரிகளும் இருந்திருக்கின்றன. ஏதோ ஒரு சூழ்நிலையில் இந்த நீர்நிலைகள் மறைந்து போயுள்ளன. அதற்கான காரணத்தை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

-நன்றி தினமலர்

இந்த செய்தி சம்பந்தமாக நான் முன்பு இட்ட பதிவையும் மேலதிக விபரத்திற்க்காக மீள் பதிவு செய்கிறேன்.

'பூமியிலேயே வாழ்வீர்கள்! பூமியிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே பிறகு வெளிப் படுத்தப் படுவீர்கள்' - குர்ஆன் 7;175

"பூமியில் உங்களை நாம் வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறோம். (ஆனால்) குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்." குர்ஆன் 7;10


இது சம்பந்தமாக வரும் வேறு வசனங்கள் (2;36- 7;24- 30;25)பூமியில் மட்டுமே மனிதன் வாழ முடியும் என்று மேற் கண்ட வசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது. வேற்று கிரகத்திலிருந்து மனிதர்கள் வந்தார்கள், பறக்கும் தட்டு வந்தது என்பதெல்லாம் நிரூபிக்கப் படாத செவி வழி செய்திகள். உயிர் வாழ தேவையான ஆக்சிஜன் பூமியில் தான் உள்ளது. சந்திரனுக்கு மனிதன் சென்றாலும் நிரந்தர தங்குதல் என்பது பூமி மட்டுமே!மனிதனின் உடலுக்கு ஏற்றவாறு வெப்பமும் குளிரும் அளவோடு இருப்பது பூமியில் மட்டுமே!

சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும். இன்னும் சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனை சாம்பலாக்கி விடும்.மேலும் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனிலிருந்து 23 டிகிரி சாய்வாக சுழல்கிறது. இப்படி சாய்வாக சுழல்வதால் தான் கோடை, குளிர்,வசந்தம், மற்றும் இலையுதிர் காலங்கள் என்று கால மாற்றங்கள் ஏற்படுகின்றன. வருடம் எல்லாம் ஒரே சீரான வெப்பமோ, குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது.

எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு 'இதில் தான் வாழ்வீர்கள்' என்று எவ்வாறு அடித்துக் கூற முடியும்? எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இந்த வசனமும் இது இறைவனின் சொல்தான் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது.

No comments: