Followers

Thursday, October 27, 2011

சவூதி இளவரசர் சுல்தான் அப்துல் அஜீஸ் அவர்களின் சில நினைவுகள்:

இளவரசர் குழந்தைகளிடமும் நாட்டு மக்களிடமும் அன்போடு நடந்து கொண்ட விதம்.



அமெரிக்க மருத்துவமனையிலிருந்து இளவரசரின் உடல் கொண்டு வரப்படுகிறது.



இளவரசருக்கு மறுமையில் கிடைக்கக் கூடிய நன்மைகளுக்காக பரிந்துரைத்து மற்றவர்களால் நடத்தப்படும் ஜனாஜா(இறப்புத்) தொழுகை:. ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இத்தொழுகை நடத்தப்பட வேண்டும்.



ஒரு நாட்டின் இளவரசர்: பல கோடிகளுக்கு அதிபதியானவர்: இவரின் இறுதிச் சடங்கு எந்த ஆடம்பரமும் இல்லாமல் மிக எளிமையாக நடத்தி முடிக்கப்படுகிறது.

சிமெண்ட் கட்டிடம் கூட இல்லாமல் மண்ணாலும் கூழாங்கற்களாலும் இவரது மண்ணறை கட்டப்படுகிறது.



அதே சமயம் நமது சிங்கார சென்னையில் ஒரு சாமான்யனின் இறப்புக்காக தண்ணி அடித்து விட்டு தப்பாட்டமும் ஆடிக் கொண்டு போக்குவரத்துக்கு எந்த அளவு இடைஞ்சல் தருகிறார்கள் என்பதைத்தான் இங்கு நாம் பார்க்கிறோம்.

38 comments:

Anonymous said...

சென்னையில் பெண்கள் தனியாக கார் ஒட்ட முடியும்,விரும்பிய உடையை அணிய முடியும்,வெளியே சுதந்திரமாக செல்ல முடியும், இன்னும் பல உரிமைகள் உண்டு. இவையெல்லாம் சவுதியில் உள்ள பெண்களுக்கு கிடைக்காத உரிமைகள்.இந்தியாவில் சவுதியில் உள்ளது போல் மரணதண்டனையை பொதுவில் தலையை வெட்டி நிறைவேற்றுவது இல்லை.

தருமி said...

//அமெரிக்க மருத்துவமனையிலிருந்து இளவரசரின் உடல் கொண்டு வரப்படுகிறது.//


ஓ! அமெரிக்காவிலிருந்தா ...?

suvanappiriyan said...

பெயரிலி!

//சென்னையில் பெண்கள் தனியாக கார் ஒட்ட முடியும்,விரும்பிய உடையை அணிய முடியும்,வெளியே சுதந்திரமாக செல்ல முடியும், இன்னும் பல உரிமைகள் உண்டு. இவையெல்லாம் சவுதியில் உள்ள பெண்களுக்கு ......//

-31 டிசம்பர் 2009 தினத் தந்தி

வேலைக்குப் போகும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மூன்று விதமாகச் சொல்லலாம். வீட்டில் சந்திக்கும் பிரச்சினை, அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் ரோட்டில் நடந்து செல்லும் போது, பஸ் ஏற காத்திருக்கும் போது, பஸ்களில், ரெயில்களில் பயணம் செய்யும் போது ஏற்படும் உடல், உள்ள ரீதியான மற்றும் பாலியல் ரீதியான தொல்லைகள், அலுவலகத்தில் தனக்கு மேலும், கீழும் வேலை பார்க்கும் ஆண் அதிகாரிகள் கொடுக்கும் `செக்ஸ்' தொல்லைகள் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

வேலைக்கு பெண்கள் புறப்படும் போது நன்றாக ஆடை அணிந்து, அலங்காரம் செய்து சென்றால் சில கணவர்கள் பொறாமையோடு பார்க்கிறார்கள். இன்னும் சில கணவர்கள் சந்தேகப் பார்வை பார்க்கிறார்கள். இதனால் கணவர்களோடு வீட்டில் கடும் பிரச்சினைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. பையைத் தோளில் தொங்கப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு வெளியே வந்துவிட்டால் பலரும் ஒவ்வொரு விதமாகப் பார்க்கிறார்கள். ரோட்டில் தனியாக நடந்து செல்லும் போது எதிரில் வருபவர் சேட்டை பார்வை வீசுவார். பஸ் ஏற பஸ் நிலையத்தில் காத்திருக்கும் போது, வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை கிண்டல் பாட்டு பாடுகிறார்கள். பஸ்சில் ஏறிவிட்டால் போதும் இடிமன்னர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. பஸ் டிரைவர் `பிரேக்' போட மாட்டாரா என்று பல காமுகர்கள் ஏக்கத்தோடு நிற்கிறார்கள்.

`பிரேக்' அடித்தால் போதும் அந்தச் சாக்கில் பெண்கள் மீது சாய்ந்து அற்ப சுகம் காண்கிறார்கள்.

வெட்கத்தை விட்டுச் சொல்கிறோம், அவ்வாறு சாய்கிறவர்கள் முதலில் மார்பை குறி வைத்துத் தான் பிடிக்கிறார்கள். நாங்கள் அவர்களோடு சண்டை போடுவதா, எச்சரிக்கை செய்வதா, கன்னத்தில் அறைவதா என்பது புரியாமல் சில நேரங்களில் இடி மன்னர்களின் தாக்குதலைத் தாங்கிக் கொண்டு மவுனமாக அழுதுவிட்டுத் தான் வருகிறோம்.

suvanappiriyan said...

……..மிரட்டல்

ஒரு வேளை எதிர்த்துச் சண்டை போட்டால், சிலர் பிளேடால் கீறி விட்டு ஓடிவிடுகிறார்கள்.
இன்னும் சிலர் கேவலமாகத் திட்டுகிறார்கள். இதையெல்லாம் சந்திக்க முடியாமல் நாங்கள் தவிக்கிறோம்.

அலுவலகத்துக்குச் சென்று விட்டால் உயர் அதிகாரிகளும், கீழ் அதிகாரிகளும் செய்யும் பாலியல் தொல்லைகள் சொல்லிமாளாது. இப்போது காணாத குறைக்கு செல்போனில் வேறு `ஓடிப் போகலாம் வர்றீயா' என்று கூப்பிடுகிறார்கள். செல்போன்களில் ஆபாசப் படங்களையும் அனுப்புகிறார்கள். எம்.ஜி.ஆர். ஒரு சினிமா படத்தில் `இப்படித் தான் இருக்க வேண்டும் பொம்பளை' என்ற பாடலை பாடினார். அந்தக் காலம் எல்லாம் இப்போது மலை ஏறிவிட்டது.

பெண்களாகிய நாங்கள் எங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஏதாவது செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். போலீசார் எங்களுக்கு உற்ற துணையாக இருந்து பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

இருட்டான இடங்களில்...

பெண்கள் சில நேரங்களில் வேலைக்குப் போய்விட்டு இரவு வெகு நேரம் கழித்து வீடு திரும்ப
வேண்டிய நிலை உள்ளது. அப்போது அவர்கள் ரோடுகளில் தனியாக நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு பெண்கள் தனியாக நடந்து செல்லும் இருட்டான பகுதிகளில் போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு சொல்லியபடி, பெண்களின் சுய பாதுகாப்புக்காக `விசாகா' கமிட்டிகளை அனைத்து பகுதிகளிலும் பலமாக நிறுவுவதற்கு போலீசார் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.

போலீஸ் நிலையத்துக்குப் புகார் கொடுக்க சென்றால் புகார்களை வாங்காமல் இழுத்தடிப்பார்கள்,
உடனடியாக எப்.ஐ.ஆர். போட மாட்டார்கள் என்ற தவறான எண்ணம் பெண்கள் மத்தியில் உள்ளது. அதைப் போக்கும் வகையில் பெண்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்யவேண்டும்.

பஸ்களில்

தற்போது பெண்கள் செல்லுவதற்கு தனி ரெயில் விடப்பட்டுள்ளது. அது போல, பெண்கள் பயணம் செய்வதற்காக அதிகளவில் மகளிர் பஸ்களை விட வேண்டும். பொதுவான பஸ்களில் பெண்களை முன்பக்கத்தில் ஏறுவதற்கும், ஆண்களை பின்பக்கத்தில் ஏறுவதற்கும் விசேஷ ஏற்பாடு செய்ய வேண்டும். அதோடு பொதுவான பஸ்களில் பெண் கண்டக்டர், ஆண் கண்டக்டர் என்று இரண்டு கண்டக்டர்களை நியமிக்க வேண்டும். தைரியமாக புகார் கொடுக்க வருவதற்கு பெண்கள் மத்தியில் இது போன்ற கூட்டங்களை நடத்தி போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்.

அலுவலகங்களில், பெண்களுக்கு `செக்ஸ்' தொல்லை கொடுப்பவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பதையும், பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் தைரியமாக புகார் கொடுக்க முன் வர வேண்டும் என்ற வாசகத்தையும் எழுதி போட வேண்டும்.

நாங்கள் பஸ்சில் பயணம் செய்யும் போது பல்வேறு தந்திரங்களைக் கையாண்டு தான் இடிமன்னர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றிக் கொள்கிறோம். சில நேரங்களில் முக்கியமான போலீஸ் அதிகாரிகளின் பெயரைச் சொல்லி, அவர்கள் எங்கள் உறவினர்கள் என்று சொல்லி இடிமன்னர்களை மறைமுகமாகப் பயமுறுத்துகிறோம்.

பெங்களூரில் ஆட்டோ டிரைவர்கள் தங்களது பேட்ஜ், உடை போன்றவற்றை அணிந்துகொண்டு நாகரிகமாக நடந்து கொள்கிறார்கள். ஆட்டோவிப் போட்டு இருக்கிறார்கள். சென்னை நகரிலும் ஆட்டோ டிரைவர்களை இது போல் நடப்பதற்கு போலீசார் அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு பெண்கள் தங்களது உள்ளக் குமுறல்களை கொட்டி பேசினார்கள்.
-31 டிசம்பர் 2009
Dina thandi

suvanappiriyan said...

தருமி!

//ஓ! அமெரிக்காவிலிருந்தா ...?//

நான் தஞ்சையில் வைத்தியம் பார்க்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். என் உடலின் நோய் தீர்க்கும் வசதி தஞ்சையில் உள்ள மருத்துவமனையில் இல்லை என்றால் மெட்ராஸ் அப்போல்லோவைத்தான் நாடுவேன். இதில் அப்போல்லோ மருத்துவமனை பெருமைபட்டுக் கொள்ள என்ன இருக்கிறது. அவர்கள் கொடுக்கும் சிகிச்சைக்கு உரிய பணத்தை சில நேரங்களில் கூடுதலாகவே கூட நோயாளிகளிடம் கறந்து விடுகின்றனரே!

suvanappiriyan said...

திருமங்கலம் : திருமங்கலம் அருகே காங்கேயம் நத்தத்தை சேர்ந்த முத்துமணி,70, நேற்று இறந்தார். இவரது இறுதி
ஊர்வலத்திற்கு முன் சென்றவர்கள் வெடிகள் வெடித்தனர். இதை அந்த தெருவில் வசிப்பவர்கள் எதிர்த்தனர். இதனால், இறந்தவர் உடலை அங்கு வைத்தனர். அதை தொடர்ந்து, இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. திருமங்கலம் டி.எஸ்.பி.,ரவிச்சந்திரன், தாசில்தார் மோகன் மற்றும் அதிகாரிகள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். அதன் பின், இறந்தவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

-28-10-2011
தினமலர்

தருமி said...

//மதமே வேண்டாம் என்று எந்த கட்டுப்பாடும் இன்றி அமெரிக்காவில் தெருக்களில் அலைந்து திரியும் பல இளைஞர்கள்தான் இன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.//

ஓ! இப்படிப்பட்ட அமெரிக்காவிற்கா உங்க ஷேக் துரை போய்ட்டாருன்னு ஒரு ஆச்சரியம்தான்!

//பணத்தை சில நேரங்களில் கூடுதலாகவே கூட நோயாளிகளிடம் கறந்து விடுகின்றனரே!//

ஓ! இப்படிப்பட்ட அமெரிக்காவிற்கா உங்க ஷேக் துரை போய்ட்டாருன்னு ஒரு ஆச்சரியம்தான்!

George said...

சுவனப்பிரியன் அவர்களே, ஒரு காபிர் தேசத்தில் போய், தனது உண்மை மார்க்கத்தை ஆரம்பித்த நாட்டை ஆட்சி செய்யும் மன்னரின் மகன் மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டால், அல்லா கோபித்து கொள்ள மாட்டாரா, அவர்தான் தனது நேரடி பதிப்பான குரானில் 'யூதர்களிடமும் கிறிஸ்தவர்களிடமும் தொடர்பு வைத்து கொள்ள வேண்டாம்' என்று கூறி இருக்கிறாரே. யூதர்களும் கிறிஸ்தவர்களும் அதிகம் உள்ள அமெரிக்காவில் சிகிச்சை எடுதததால் இளவரசருக்கு சொர்கத்தின் சுக போகங்கள் எதிலும் அல்லா கை வைத்து விட மாட்டாரா

suvanappiriyan said...

@ஜார்ஜ்!

'மார்க்க விஷயத்தில் உங்களிடம் போரிடாதோருக்கும் உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் இறைவன் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை இறைவன் விரும்புகிறான்.'
-குர்ஆன் 60:8

'மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர்: உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியோர்: உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே இறைவன் உங்களுக்கு தடை செய்கிறான்'
-குர்ஆன் 60:8

மேற்கண்ட இறைவனின் இரண்டு கட்டளைகளையும் உன்னிப்பாக கவனித்தோமானால் பல விளக்கங்கள் பெறலாம். முஸ்லிம்களை ஒழிப்பதையே தங்கள் தொழிலாக கொண்டு செயல்படும் சங் பரிவார் அமைப்புகள், இஸ்ரேல், மற்றும் இஸ்ரேலிய நாட்டுக்கு முஸ்லிம்களை அழிப்பதில் உதவி புரியும் யூத கிறித்தவர்களையும் இந்துத்வா வாதிகளையும் நண்பர்களாக ஆக்கிக் கொள்வதையே இந்த வசனம் தடுக்கிறது. மோடி, அத்வானி, சாது பிரக்யாசிங், இஸ்ரேலிய யூதர்கள் போன்றவர்கள் இந்த பட்டியலில் அடங்குவர்.

அதே சமயம் இன்று வரை முஸ்லிம்கயோடு அண்ணன் தம்பிகளாக சகோதர பாசத்தோடு பழகி வரும் அனைத்து இந்து, கிறித்தவ, யூத மக்களையும் அதே சகோதர பாசத்தோடு அரவணைக்க வேண்டம் என்பதே குர்ஆனின் கட்டளை. அமெரிக்க ஆட்சியாளர்கள் இஸ்லாத்துக்கு விரோதமாக இருந்தாலும் அமெரிக்க மக்கள் இஸ்லாமியர்களை நேசிக்கவே செய்கிறார்கள். உலகில் அதி வேகத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் மக்களில் அமெரிக்கர்களே அதிகம். இன்னும் 10 வருடங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகி விடுவார்கள் என்கிறது ஒரு புள்ளி விபரம். எனவே அமெரிக்க மக்கள் முஸ்லிம்களுக்கு நண்பர்களே! அங்குள்ள மருத்துவ மனைகள் அரசால் நிர்வகிக்கப்படுவதில்லை. எனவே இதில் எந்த குற்றமும் இல்லை.

தருமி said...

//முஸ்லிம்களை ஒழிப்பதையே தங்கள் தொழிலாக கொண்டு செயல்படும் சங் பரிவார் அமைப்புகள், இஸ்ரேல், //

இந்த இஸ்ரேலருக்குக் கை கொடுப்பதே நம்ம ஆளுங்க அமெரிக்கர் இல்லைங்களா?

நமக்கு வேண்டுவதுபோல் விவாதங்களை வைப்பது எவ்வளவு எளிதாகி விடுகிறது!!!! உண்மையெல்லாம் இரண்டாம் இடத்திற்குத்தான்!!!!

suvanappiriyan said...

தருமி!

//நமக்கு வேண்டுவதுபோல் விவாதங்களை வைப்பது எவ்வளவு எளிதாகி விடுகிறது!!!! உண்மையெல்லாம் இரண்டாம் இடத்திற்குத்தான்!!!!//

நான் முன்பே சொன்னது போல் இஸ்ரேலுக்கு உதவுவது அமெரிக்க அரசாங்கமே. அமெரிக்க மக்கள் அல்ல. அதுவும் அமெரிக்க ஆட்சியாளர்கள் தேர்தலின் போது வட்டித் தொழிலில் மூழ்கி கோடீஸ்வர்களாக இருக்கும் யூதர்களின் கையையே நம்பியிருக்க வேண்டியிருககிறது. அமெரிக்க அரசும் நிர்பந்தத்தின் பேரில்தான் இஸ்ரேலுக்கு உதவி செய்கிறது. அடுத்து மருத்துவ மனைகள் அரசாங்கத்தால் நடத்தப்படுவதில்லை. எனவே அங்கு சென்று சிகிச்சை எடுப்பது இஸ்லாத்துக்கு விரோதம் அல்ல என்பதையே சொல்ல வந்தேன்.

அதே சமயம் எவ்வளவுதான் நிர்பந்தம் இருந்தாலும் நியாயத்தின் பக்கமே நிற்க வேண்டும். அது தவறியதால்தான் ஒட்டு மொத்த உலக மக்களும் அமெரிக்காவை அழிவு சக்தியாக பார்க்க வைத்துள்ளது.

தருமி said...

நன்றி நன்கு மெழுகியதற்கு.

suvanappiriyan said...

இப்னு ஷகீர்!

முதலில் இஸ்லாமிய பெயரில் ஒளிந்து கொண்டு எழுதுவதை தவிர்க்கவும். நீங்கள் என்னதான் வேடம் போட்டாலும் உங்கள் எழுத்து நடை உங்களை காட்டிக் கொடுத்து விடுகிறது. :-)

//ஆதாரம் வேண்டுமா? அல்குரானை படியுங்கள். படித்துவிட்டீர்களா? அவ்வளவுதான்.//

குர்ஆன் மட்டும் அல்ல பைபிளிலிருந்தே ஆதாரத்தைத் தருகிறேன்.

'பின்பு ஏசு கலிலியோ எங்கும் சுற்றித் திரிந்து அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து ராஜ்ஜியத்தின் சுவிசேசத்தைப் பிரசிங்கித்தார்'
-மத்தேயு 4:23

'இயேசு கலிலயோவில் வந்து தேவனுடைய ராஜ்ஜியத்தின் சுவிசேசத்தைப் பிரசிங்கித்தார்'
-மாற்கு 1:15

'காலம் நிறைவேறிற்று. தேவனுடைய ராஜ்ஜியம் சமீபமாயிற்று. மனம் திரும்பி சுவிசேசத்தை விசுவாசியுங்கள் என்றார்.
-மாற்கு 1:15

தேவனுடைய புத்தகமான சுவிசேசத்தை விசுவாசியுங்கள் என்று ஏசு தனது நாவாலேயே சொல்ல ஏசு எப்படி கடவுளாக்கப்பட்டார்? அதற்கும் பைபிளேலேயே விளக்கமும் இருக்கிறது.

'மகாகனம் பொருந்திய தெயோப்பிலுவே! நீங்கள் முழு நிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை ஆரம்பம் முதல் கண்ணாரக் கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு அறிவித்தபடியே அவைகளைக் குறித்து சரித்திரம் எழுத அனேகர் ஏற்பட்டபடியினாலே ஆதி முதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்து நானும் உமக்கு உபதேசிக்கப் பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறிய வேண்டுமென்று அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.
-லூக்கா 1:2-4

நான் எழுதியது இறைவனின் வேதம் அன்று: பரிசுத்த ஆவியின் தூண்டதலால் எழுதப்பட்டதுமன்று: தான் விசாரித்தறிந்ததையே எழுதியிருக்கிறேன் என லூக்கா ஒப்புக் கொள்கிறார்.கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களின் தொகுப்பை செவி வழியாக கேட்டு தாம் பதித்திருப்பதாக லூக்காவே ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்கிறார்.

இயேசு உபதேசித்த இன்ஜிலை(பைபிளை) மறைத்து விட்டு மற்றவர்களின் செவி வழி செய்திகளையே பைபிள் என்று நமக்கு காட்டுகிறது கிறித்தவ உலகம். எனவே ஏசு உபதேசித்த அந்த சுவிசேசம் நமக்கு கிடைக்குமானால் கிறித்தவர்களில் நாத்திகர்களின் எண்ணிக்கையும் குறையும்: தருமியும் 'நான் ஏன் மீண்டும் கிறித்தவனானேன்?' என்று பல பதிவுகளை போட்டு தள்ளுவார்.

suvanappiriyan said...

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் உள்ள அம்மன் சிலையில் இருந்து பால் வடிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடியில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி பீடம் உள்ளது. இதனை இந்திராணி என்பவர் நிர்வகித்து வருகிறார். நேற்று காலையில் பொன்செல்வி என்பவர் ஆதிபராசக்தி பீடத்தில் உள்ள அம்மன் சிலைக்கு அபிஷேகம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அம்மன் சிலைக்கு கீழே பால் தேங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்ற அவர் அம்மன் சிலையை உற்று நோக்கி பார்த்த போது அம்மன் சிலையின் உட்புறத்தில் இருந்து பால் சொட்டு சொட்டாக வடிவதை அவர் கண்டார். அம்மன் சிலையில் இருந்து திடீரென சொட்டு சொட்டாக பால் வடிவதை கண்ட பொன்செல்வி இது குறித்து கோவில் நிர்வாகியிடம் தகவல் தெரிவித்தார். அம்மன் சிலையில் இருந்து பால் வடியும் சம்பவம் அப்பகுதி மக்களிடம் வேகமாக தெரியவந்தது. தகவலை கேள்விப்பட்ட பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அம்மன் சிலையில் இருந்து பால் வடியும் அதிசயத்தை ஆச்சரியத்துடன் பார்த்ததோடு மட்டுமல்லாது பயபக்தியுடன் வழிபட்டும் சென்றனர். அம்மன் சிலையில் இருந்து பால் வடிந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

-தினமலர்
30-10-2011

George said...

//நன்றி நன்கு மெழுகியதற்கு.// ஆமோதிக்கிறேன்
//அமெரிக்க மக்கள் முஸ்லிம்களுக்கு நண்பர்களே! அங்குள்ள மருத்துவ மனைகள் அரசால் நிர்வகிக்கப்படுவதில்லை// //நான் முன்பே சொன்னது போல் இஸ்ரேலுக்கு உதவுவது அமெரிக்க அரசாங்கமே. அமெரிக்க மக்கள் அல்ல//
அப்படிஎன்றால் அமெரிக்க அரசாங்கத்தை வேறு நாட்டினர் நிர்வகிக்கிரார்களா. நம் நாட்டில், மக்களில் ஒருவர்தான் அரசை நிர்வகிக்கவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அது போன்று தான் அமெரிக்க குடி மக்கள் தான் அரசை நிர்வகிக்கவும் தேர்ந்தெடுக்கபடுகிறார்கள் என்று நினைத்திருந்தேன். அப்படி இல்லையோ. இப்போது தான் தெரிகிறது அமெரிக்கா அரசாங்கத்தை நடத்துவது வேற்று நட்டு மக்கள் என்று.
உலகில் அதிக எண்ணிக்கையில் யூதர்கள் வாழும் நாடு அமெரிக்காதான். அந்த யூதர்களில் யாரும் அந்த மருத்துவமனையை நிர்வகிக்க மாட்டார்களா அல்லது அங்கே யூத மருத்துவர்கள் இருக்க மாட்டார்களா.
//மோடி, அத்வானி, சாது பிரக்யாசிங், இஸ்ரேலிய யூதர்கள் போன்றவர்கள் இந்த பட்டியலில் அடங்குவர். // பிறரை குற்றம் சொல்லும் முன் அனைவரும் நாம் எப்படி என்று பார்த்து கொள்வது நல்லது சுவனப்பிரியன் அவர்களே, மோடி, அத்வானி போன்றவர்களினால் ஏற்பட்ட வன்முறைகளை எந்த விதத்திலும் நான் நியாயபடுத்தவில்லை. ஆனால் அவர்களை மத வெறியர்கள் என்று குற்றம் சாட்டுவதற்கு முஸ்லிம்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கூறுங்கள். முஸ்லிம்கள் யாரும் மத வெறியுடன் இல்லையா? அல்லது எந்த மத கலவரமும் முஸ்லிம்களால் ஏற்பட்டதில்லையா. மத பற்று உள்ள எல்லாருக்கும் மதம் பிடிக்கத்தான் செய்யும். அமெரிக்கா விரைவில் இஸ்லாமிய நாடாக மாறிவிடும் என்று கூறி வருகிறீர்களே அது மத வெறி இல்லையா? கிறிஸ்தவர்கள் வெளிப்படையாகவே மத பிரசாரம் செய்கிறார்கள். அது போல நீங்கள் தாவா அமைப்புகள் நடத்துவதில்லையா? அதன் பெயர் என்ன. என் மதம் பரவ வேண்டும் என்ற எண்ணம் தானே காரணம். அது போல மோடியும் அத்வானியும் தங்கள் மதத்தை காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு கண்டு விட்டீர்கள். அவர்கள் செய்தால் அது மத வெறி. நீங்கள் செய்தால் மத பற்றா? தெரியாமல் கேட்கிறேன் இஸ்லாம் என்ன சாதித்து விட்டது என்று இஸ்லாமை பரப்ப போராடி வருகிறீர்கள். தான் சாகும் தருவாயில் கூட "யூத கிறிஸ்தவர்கள் மீது சாபம் உண்டாகட்டும்" என்றும் "அரபு தேசத்தில் இஸ்லாம் மட்டுமே இருக்க வேண்டும்" என்று பிற மக்கள் மீது வெறுப்பை தூவி சென்ற ஒருவரை எப்படி இறைவனின் தூதராக ஏற்று கொள்ள சொல்கிறீர்கள். இஸ்லாமை தங்கள் நெறியாக ஏற்று கொண்ட எத்தனை நாடுகள் முழு கல்வி அறிவு பெற்றுள்ளன, எந்த இஸ்லாமிய நாடு எந்த பிரச்சினையும் இல்லாமல் முழு அமைதியுடன் உள்ளது, சவுதியை உதாரணமாக சொல்லாதீர்கள். அதன் ஆட்சியாளர்கள் அமெரிக்க அடிவருடிகள் என்பது உலகத்திற்கே தெரியும். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு செல்லும் இந்து மக்கள்கூட அந்த நாட்டின் வளர்சிக்கு எதாவது ஒரு வகையில் தங்கள் பங்களிப்பை அளிக்கின்றனர். அமெரிக்கா இஸ்லாமிய மயம் ஆகும் என்று கூறும் நீங்கள், அதாவது முஸ்லிம்கள் என்ன செய்தார்கள் அந்த நாட்டிற்கு. இதுவரை எதுவும் சாதிக்கவில்லை என்றபிறகு அங்கே இஸ்லாம் வந்தால் மட்டும் என்னவாகிவிட போகிறது. முஸ்லிம்கள் சென்று குடியேறும் எந்த நாட்டில் அமைதி நிலவுகிறது. இங்கிலாந்திற்கு பிழைக்க போன முஸ்லிம்கள் அங்கே இஸ்லாமிய சட்டத்தை அமலாக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துகிறார்களாம். இது போன்று ஒரு இஸ்லாமிய நாட்டில் பிற நாட்டில் இருந்து சென்றவர்கள் நடந்து கொள்ள முடியுமா? அப்படி நடந்தால் விட்டு வைப்பர்களா. இது இங்கிலந்துகரர்களின் தவறுதானே. இவர்களை உள்ளே அனுமத்தித்ததால் தானே இந்த நிலை. அப்படியே அமரிக்கா இஸ்லாமிய மயம் ஆனாலும், 800 ஆண்டுகளாக இஸ்லாமிய நாடாக இருந்த ஸ்பெயின் மறுபடியும் கிறிஸ்தவ நாடாக மாறவில்லையா அது போல் அமெரிக்காவும் புத்தி தெளிந்து மாறிவிடும் கவலை வேண்டாம்.

George said...

//இயேசு உபதேசித்த இன்ஜிலை(பைபிளை) மறைத்து விட்டு மற்றவர்களின் செவி வழி செய்திகளையே பைபிள் என்று நமக்கு காட்டுகிறது கிறித்தவ உலகம்//
சுவனப்பிரியன் அவர்களே, காலம் காலமாக பைபிள் மனித கரம் பட்டுவிட்டது என்று கூறி வருகிறீர்களே தவிர, மனித கரம் அதில் விளையாடும் வரை அந்த வார்த்தைகளை கூறிய கடவுள் என்ன விளையாடி கொண்டு இருந்தார் என்று உங்களில் யாரும் கூறுவதில்லை. கடவுள் எல்லாவற்றிலும் உயர்ந்தவன், எல்லாம் தெரிந்தவன் என்று கூறுகிறீர்கள். பைபிளை கொடுக்கும்போது பிற்காலத்தில் அதில் மனித கரம் விளையாடும் என்று கடவுளுக்கு தெரியாதா? வேலை வெட்டி இல்லாமல் மனித கரம் விளையாடுவதற்கு எதற்காக பைபிளை கொடுத்துவிட்டு பிறகு 'அய்யயோ மனித கரம் விளையாடுது' என்று புலம்ப வேண்டும். பைபிளை மனிதன் ஒளித்து வைக்கும் வரை சும்மா இருந்துவிட்டு அடுத்த பதிப்பான குரானில் அதை பற்றி கூறும் கடவுளுக்கு, அது எங்கே போனது என்று கூறும் அளவுக்கா சக்தி இல்லை.
// எனவே ஏசு உபதேசித்த அந்த சுவிசேசம் நமக்கு கிடைக்குமானால் கிறித்தவர்களில் நாத்திகர்களின் எண்ணிக்கையும் குறையும்//
உங்கள் குரானில் தான் எல்லாவற்றிகும் விடை இருக்கிறதே, பைபிள் மனிதர்களால் எழுதப்பட்டது என்று எல்லோர்க்கும் தெரியும். குரான் கடவுளால் எழுதப்பட்டது ஆயிற்றே. இன்ஜீல் ஒளித்து வைக்கப்பட்டு இருக்கிறது என்றால் அது எங்கே இருக்கிறது என்று குரானில் இருக்குமே. அல்லதான் மிகைத்தோனும் ஞானம் உடையவனும் ஆயிற்றே. அவருக்கு தெரியாமல் இருக்காதே. மேலும் நீங்கள் கூறுவது போல் மறைக்கப்பட்ட பைபிள் கிடைத்தால் குரானுக்கு இங்கே என்ன வேலை இருக்கிறது. அனைவரும் பைபிளை பின்பற்றிவிட்டு போகலாமே. பைபிள் மறைக்கப்பட்டதால் தானே குரான் இறக்கப்பட்டது.

இயேசு உபதேசித்த அந்த சுவிசேசம் கிடைத்தால் 'அனைவரும் கிறிஸ்தவர்களாக மாறுங்கள்' 'சவூதி கிறிஸ்தவ தேசமாக மாறட்டும்' என்று நீங்களும் பதிவுகளை போட்டு தள்ளுவீர்களா?.

எல்லா மதமும் 100 சதவீதம் தங்களை சுத்தமாக காட்டி கொள்ளும் யோக்கியதை கிடையாது சுவனப்ரியன் அவர்களே. இஸ்லாமில் சதி பிரிவினை இல்லை என்று கூறி கொள்கிறீர்கள். இந்து சமயத்தில் சாதியால் மக்களை பிரித்தார்கள் என்றால் நீங்கள் மதத்தால் பிரிக்கிறீர்கள். தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் தெருக்களில் வரகூடாது என்று பிராமணர்கள் கூறியதற்கும். உங்கள் பள்ளிவாசல்களில் பெண்களும் பிற மதத்தவரும் வரகூடாது என்று உங்கள் மதம் கூறுவதற்கும் என்ன வித்தியாசம். ஒரு தார் சாலையில் பிற மதத்தவன் நடக்க கூடாது என்று கட்டளை இடுபவனா உண்மை கடவுள். நீங்கள் என்னவோ இது சமயத்தை குறை கூறி கொண்டு இருகிறீர்கள். உண்மை கடவுள் என்பவன் இந்த சாதி பிரிவினையையும் மத பிரிவினையையும் கூற மாட்டான்.

suvanappiriyan said...

ஜார்ஜ்!

//அது போல மோடியும் அத்வானியும் தங்கள் மதத்தை காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு கண்டு விட்டீர்கள்.//

தங்கள் மதத்தை மோடியும் அத்வானியும் தாராளமாக காப்பாற்றிக் கொள்ளட்டும். ஆனால் அதற்காக முஸ்லிம்களையும் கிறித்தவர்களையும் அழித்து இந்து மதத்தை வளர்க்க வேண்டும் என்பதைத்தான் இங்கு எதிர்க்கிறோம். தான் திரும்பவும் ஆட்சியில் வர வேண்டும் என்ற அற்ப சுகத்துக்காக கோத்ரா ரயில் விபத்தை முஸ்லிம்கள் தலையில் கட்டி ரத்த ஆறை ஓட விட்டதை மனிதனாக பிறந்த எவனும் அனுமதிக்க மாட்டான்.

//தான் சாகும் தருவாயில் கூட "யூத கிறிஸ்தவர்கள் மீது சாபம் உண்டாகட்டும்" என்றும் "அரபு தேசத்தில் இஸ்லாம் மட்டுமே இருக்க வேண்டும்" என்று பிற மக்கள் மீது வெறுப்பை தூவி சென்ற ஒருவரை எப்படி இறைவனின் தூதராக ஏற்று கொள்ள சொல்கிறீர்கள்.//

தங்களின் நபிமார்களை கடவுளாக்கிய யூத கிறித்தவர்களைத்தான் முகமது நபி சபித்தார். இறக்கும் தருவாயில் அப்படி ஒரு வார்த்தை வரவில்லை என்றால் இன்று முகமது நபியும் ஒரு கடவுளாக்கப்படடிருப்பார்.

//உங்கள் குரானில் தான் எல்லாவற்றிகும் விடை இருக்கிறதே, பைபிள் மனிதர்களால் எழுதப்பட்டது என்று எல்லோர்க்கும் தெரியும். குரான் கடவுளால் எழுதப்பட்டது ஆயிற்றே. இன்ஜீல் ஒளித்து வைக்கப்பட்டு இருக்கிறது என்றால் அது எங்கே இருக்கிறது என்று குரானில் இருக்குமே. அல்லதான் மிகைத்தோனும் ஞானம் உடையவனும் ஆயிற்றே. அவருக்கு தெரியாமல் இருக்காதே. மேலும் நீங்கள் கூறுவது போல் மறைக்கப்பட்ட பைபிள் கிடைத்தால் குரானுக்கு இங்கே என்ன வேலை இருக்கிறது. அனைவரும் பைபிளை பின்பற்றிவிட்டு போகலாமே. பைபிள் மறைக்கப்பட்டதால் தானே குரான் இறக்கப்பட்டது.//

இறைவன் எனறால் அவனுக்கு இறந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் என்ற அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும். பைபிளுக்குப் பிறகு குர்ஆன் இறக்கப்பட வேண்டும்: முகமது நபி இறுதி தூதராக இருப்பார் என்பது இறைவனால் முன்பே தீர்மானிக்கப்பட்டது. இதைத்தான் ஏசுவும் பைபிளில் 'எனக்குப் பின்னால் ஒரு தேற்றறிவாளன் வருவார்' என்று கூறி சென்றிருக்கிறார். இதை எல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இறைவனுக்கு ஏன் வந்தது? என்ற நியாயமான கேள்விக்கு நியாய தீர்ப்பு நாளில் பதில் சொல்வதாக இறைவன் கூறுகிறான். அது வரை பொறுப்போமே! ஏனெனில் இது போன்ற செயல்களை விளங்கும் அளவுக்கு நமக்கு அறிவு கொடுக்கப்பட வில்லை என்று இறைவனே கூறுகிறான்.

//உங்கள் பள்ளிவாசல்களில் பெண்களும் பிற மதத்தவரும் வரகூடாது என்று உங்கள் மதம் கூறுவதற்கும் என்ன வித்தியாசம்.//

பெண்கள் மசூதிக்கு வர வேண்டாம் என்றோ மற்ற மதத்தவர் பள்ளிவாசலுக்குள் நுழையக் கூடாது என்றோ இஸ்லாம் தடை விதிக்கவில்லை. அப்படி எங்கேனும் முஸ்லிம்கள் நடந்து கொண்டால் அவர்களை திருத்த வேண்டும்.

suvanappiriyan said...

தருமி!

///இஸ்லாமிய பெயரில் ஒளிந்து கொண்டு எழுதுவதை தவிர்க்கவும்.//

அது ஏனுங்க சுவனப்பிரியன் ... உங்களைப் போல் இஸ்லாமியத்தைப் பற்றி எழுதுவோர்களில் மிகப் பலரும் அடையாளம் இல்லாமல் எழுதுகிறார்களே .. ஏன்?//

நான் இஸ்லாமிய மதத்தை சேரந்தவன் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கிறதா? இல்லை... இதுபோல் அராபிய பெயர்களை தவிர்த்து சொந்த மொழிகளில் பெயர்களை வைப்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை. நீங்கள் கூட உங்கள் பெயரை மறைத்து தருமி என்ற புனை பெயரில்தான் எழுதி வருகிறீர்கள்.

ஆனால் இப்னு ஷகீர் என்ற பெயரிலோ யாசிர் என்ற பெயரிலோ எழுதுபவர்கள் இஸ்லாத்திலும் நாத்திகர்கள் இருக்கிறார்கள் என்பதை காட்டுவதற்காக அராபிய பெயர்களில் ஒளிந்து கொண்டு எழுதுகிறார்கள். அடுத்து இப்னு ஷகீர் என்றால் ஷகீருடைய மகன் என்று பொருள் வரும். சம்பந்தப்பட்ட நண்பர் ஒரு இந்து அல்லது கிறித்தவ தாய் தந்தைக்கு பிறந்து விட்டு 'நான் ஷகீருடைய மகன்' என்று அவரை அழைத்துக் கொள்வது அவரது பிறப்புக்கே இழுக்கல்லவா? இனிமேலாவது சொந்த பெயரில் தனது கருத்தை வைப்பார் என்று நம்புவோமாக!

தருமி said...

நேர்மையற்ற பதில்.
//நீங்கள் கூட உங்கள் பெயரை மறைத்து தருமி என்ற புனை பெயரில்தான் எழுதி வருகிறீர்கள்.//
ஊரு, பேரு, முகவரி, பார்த்த வேலை, என்று எந்த ஒன்றையும் மறைக்காத என்னப்பார்த்து நீங்கள் சொல்லும் வார்த்தைகள் எத்தனை நேர்மையற்றது.

நீங்கள் ஒரு புனைப்பெயரில் UAE-யிலிருந்து என்பதைத் தவிர வேறு என்ன உங்களைப் பற்றி தெரியும்? இப்படி ‘மறைந்த ஜீவியம்’ உங்களுக்கே,இஸ்லாமியத்தை ஆதரிக்கும் உங்களுக்கே, தேவையென்றால் எதிர்த்து எழுதுபவர்களைப் பார்த்து கேள்வி கேட்கக்கூட உங்களுக்குத் த்குதியில்லை. அதுவும் ஒரு இஸ்லாமியன் தன் மதத்தை எதிர்ப்பதற்கு எவ்வளவு பயப்பட வேண்டியதுள்ளது என்பதும் நன்கு எங்களுக்குப் புலனாகிறது. இதைத்தான் மதத்தீவிரவாதம் என்கிறேன்.

பாவம் அந்த மக்கள்!

//அராபிய பெயர்களை தவிர்த்து சொந்த மொழிகளில் பெயர்களை வைப்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை.//

அடப் பாவமே .. இதற்கும் மதத்திற்கும் என்னய்யா தொடர்பு!! இங்கும் எங்கும் மதம் தானா .. கடவுளே!

தருமி said...

//இனிமேலாவது சொந்த பெயரில் தனது கருத்தை வைப்பார் என்று நம்புவோமாக!//

மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புகிறீர்கள் என்பது அவ்வளவு நன்றாக இல்லையாதலால், இன்னொன்று சொல்கிறேன்!

கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல்லால் எறிகிறீர்கள்!

suvanappiriyan said...

தருமி!

//நீங்கள் ஒரு புனைப்பெயரில் UAE-யிலிருந்து என்பதைத் தவிர வேறு என்ன உங்களைப் பற்றி தெரியும்? இப்படி ‘மறைந்த ஜீவியம்’ உங்களுக்கே,இஸ்லாமியத்தை ஆதரிக்கும் உங்களுக்கே, தேவையென்றால் எதிர்த்து எழுதுபவர்களைப் பார்த்து கேள்வி கேட்கக்கூட உங்களுக்குத் த்குதியில்லை.//

எதிர்த்து எழுதுபவர்கள் அதனை ஏன் இஸ்லாமிய பெயரில் எழுத வேண்டும் என்றுதான் கேட்கிறேன். அடுத்து என்னை பற்றி பெரிதாக சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை என்பதால்தான் இதுவரை தெரிவிக்கவில்லை. நான் தஞ்சை மாவட்டத்துக்காரன். எனது உண்மையான பெயர் நஜீர் அஹமது, எனது இமெயில் ஐடியும் கொடுத்துள்ளேன், எனது செல் நம்பரையும் கொடுத்துள்ளேன். இந்துத்வத்தை ஆதரிக்கும் திரு டோண்டு ராகவனை சென்னையில் இரண்டு மணி நேரம் சந்தித்து பேசியும் இருக்கிறேன். இது போல் அவசியம் ஏற்பட்டால் என்னை வெளிக்காட்டிக் கொள்ளத் தயங்கியதே இல்லை. அடுத்த முறை ஊர் வரும்போது மதுரையிலேயே வந்து உங்களை சந்திக்கிறேன்.

//மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புகிறீர்கள் என்பது அவ்வளவு நன்றாக இல்லையாதலால், இன்னொன்று சொல்கிறேன்!
கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல்லால் எறிகிறீர்கள்!//

இப்னு ஷகீர் என்ற பெயரின் அர்த்தத்தில் உள்ள அனர்த்தத்தைத்தான் விமரிசித்தேன். இவ்வளவு கோபப்படுவதைப் பார்த்தால் ......

தருமி said...

சுவனப்பிரியன்,

இந்தப் பதிவிலும் , இந்தப் பதிவிலும் குரானின் ‘பிறப்பு’ பற்றி வரலாற்றின் அடிப்படையில் இரு நூல்களில் சொன்னவைகளைத் தொகுத்து அளித்தேன். நீங்கள் வழக்கமாக selective ஆக இருப்பீர்களே அதுபோல் அப்பதிவுக்கு நீங்களோ வழக்கமாக வாதிடுவோர்களோ வரவில்லை. முகமதுவின் காலத்திற்குப் பின் ஏற்பட்ட பல நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும்போது ஒன்று நிச்சயமாகத் தெரிகிறது. குரான் மனிதக் கரங்களால் தீண்டப்படாமல் வைத்திருக்கிறீர்கள் - அதாவது குரான் தொகுக்கப்பட்ட பின். பேஷ்! ஆனால் தொகுக்கப்படும் முன் நடந்த வரலாறு பல கேள்விக்குள்ளாக்குகின்றது.

அதேபோல் வேறு பல கேள்விகளைப் பல இடங்களில் நான் மட்டுமல்ல மற்றைய பதிவர்களும் அடிக்கடி கேட்டாகி விட்டது. ஆனால் பலமுறை பதில் சொல்லிவிட்டதாகச் சொல்கிறீர்கள் - கிளிப்பிள்ளைக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டது போல் திருப்பி திருப்பி சொல்கிறீர்கள் - 1400 ஆண்டுகளாக!

பதிலில்லா கேள்விகளை சீக்கிரம் ஒரு பட்டியலிட வேண்டும் - பதில் பெற அல்ல; என் தொகுப்பாக.

மனிதனின் வரலாறு 6000 ஆண்டுகள் என்று சொல்கிறீர்களா அல்லது சில லட்சக்கணக்கான ஆண்டுகள் என்கிறீர்களா என்று தெரியவில்லை. இரண்டில் எதுவாயினும், எத்தனை நபிகளை அனுப்பி, ஒவ்வொரு முறையும் ஜிப்ரேலுக்கு வேலை கொடுத்து, editing, copying, pasting, altering, ... இப்படி பல வேலைகளை அல்லா எடுத்துக் கொண்டு இருந்தவர், நிறைய நபிகளை அனுப்பியவர் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்து முகமது என்பவரைக் கடைசி நபி என்று நிறுத்தி விட்டார். வந்த நபிகளின் கால வரையறை என்ன? ஏன் இத்தனை முறை மனிதக் கரங்களால் மாற்றம் ஏற்பட்டுக் கடவுள் ஏமாற வேண்டும்? பின் ஏன் இப்போது இவரை மட்டும் கடைசி என்று குறிப்பிடவேண்டும் ... இப்படிப் பல கேள்விகள்; பதிலுக்கு மறுமைக்காலம் வரை பொறுத்திருக்க வேண்டும். ஆனான் என் போன்றோருக்கு இந்த ‘வரலாற்றில்’ எந்த லாஜிக்கும் இல்லை என்பதே முக்கியம்.

//அவர் ஏன் ஒரு படிப்பறிவில்லாதவரை, தான் சொன்னதை அப்படியே மாற்றாமல் கொடுக்க முடியாத ஒருவரை எதற்காகத் தேர்ந்தெடுக்க வேண்டும்? //

இதற்கும் மறுமைக்காலத்தில் பதில் என்பீர்கள்!

அதைவிட, 23 ஆண்டுகளாகத் தொடர்ந்து வஹி வந்தும் எழுதப் படிக்க்த் தெரியாத ஒரு மனிதன் 23 ஆண்டுகளாக அதே போல் எழுதப் படிக்கத் தெரியாதவனாகவே கடைசி வரை இருந்தார் என்பது நம்ப முடியாத கதை! அப்படி ஒரு மனிதரையா அல்லா தேர்ந்தெடுத்திருப்பார்??!! நம்ம ஊரு ஆளுக அஞ்சாறு மாசத்திலேயே அடுத்த மாநில மொழியையோ, அரபி மொழியையோ ( என் நண்பர்கள் இதில் அடக்கம்.) தெரிந்து கொள்கிறார்கள்.

//இறந்ததுமே தலைமைக்குப் போட்டியும் சண்டைகளும் ஆரம்பித்து விட்டன.
முகமது நபி காலத்திலேயே குர்ஆனை எழுதுவதற்கென்றே பலரை நபிகள் நாயகம் நியமித்திருந்தார். 23 வருடகாலம் இந்த பணி தொடரந்து நடந்தது.// இப்படி என் பழைய பதிவில் எழுதியுள்ளேன். வஹி வந்த ஒருவர் இப்படியா 23 ஆண்டு காலம் வரை ஆள் வச்சி எழுதி வைத்திருப்பார்; வேடிக்கைதான்!

தொகுக்கப்பட்ட வசனங்களும் கால வரிசையில் பதிவு செய்யப்பட்டிருந்தால் பொருளுண்டு. ஆனால் நீளம் பார்த்து தொகுக்கப்படுவதே மனிதக் கரம் செய்த லாஜிக் இல்லாத வேலை தானே!? அதிலும் மெக்காவிலும் மெதீனாவிலும் வைத்து சொன்ன வசனங்கள் தீவிரத்தில் மாறுபட்டிருப்பதேன்?

இதுபோல் இன்னும் நிறைய .... 1400 ஆண்டுகளாக .... என்றும் இதே கிளிப்பிள்ளையின் பதில்கள் ....

தருமி said...

உங்களைப் பற்றிக் கேட்டவுடன் இவ்வளவு விவரம் எதற்கு? ஒற்றுமையான குழுவில் இருக்கும் உங்களுக்கே இவ்வளவு தயக்கம் என்றால் மற்றவருக்கு என்னென்ன தயக்கமோ?
நீங்கள் குற்றம் சொல்பவர்களின் இஸ்லாமிய அறிவைப் பார்க்கும்போது அவர்கள் இஸ்லாமிய என்றே எனக்குத் தோன்றுகிறது. அவர்களின் பெயரில் காண்பிக்கும் ஆராய்ச்சியை அவர்கள் எழுதும் விஷயங்களில் காட்டுவது நன்று.

எனக்கும் தான் ‘சுவனப்பிரியன்’ என்ற பெயர் பலவற்றை நினைவு படுத்துகிறது. பெரிய லிஸ்டே மனதில் தோன்றுகிறது. எனக்கும் பிடித்த பெயராகப் போய் விட்டது.

தருமி said...

//இது போல் அவசியம் ஏற்பட்டால் என்னை வெளிக்காட்டிக் கொள்ளத் தயங்கியதே இல்லை//

!!!!!!!!!!

suvanappiriyan said...

தருமி!

//வந்த நபிகளின் கால வரையறை என்ன?//
ஏசு நாதருக்கும் ஆப்ரஹாமுக்கும் ஓரளவு காலத்தை கணிக்க முடியும். மற்ற தூதர்களின் காலம் துல்லியமாக தெரியவில்லை. அது தெரிந்தும் ஒன்றும் ஆகப்போவதில்லை. ஏனெனில் குர்ஆன் இறங்கியவுடன் மற்ற வேதங்களின் சட்டங்கள் மனிதக் கரங்கள் பட்டதால் ஒதுக்க வேண்டும் என்பது குர்ஆனின் கட்டளை.

// ஏன் இத்தனை முறை மனிதக் கரங்களால் மாற்றம் ஏற்பட்டுக் கடவுள் ஏமாற வேண்டும்?//
கடவுள் ஏமாற வில்லை. இன்று நானும் நீங்களும் இது சம்பந்தமாக இணையத்தில் விவாதித்துக் கொண்டிருப்போம் என்ற செய்தியும் முன்பே இறைவன் புறத்தில் பதியப்பட்டிருக்கிறது. எனவே ஆதம் நபி முதல் நபிகள் நாயகம் வரை இறைத் தூதர்களை அனுப்புவது என்பது முன்பே இறைவனால் முடிவு செய்யப்பட்டது. இப்படி ஒரு விளையாட்டை இறைவன் ஏன் நம்மோடு விளையாட வேண்டும் என்ற கேள்விக்குத்தான் நியாயத் தீர்ப்பு நாளில் பதில் சொல்வதாக இறைவன் கூறுகிறான்.

// பின் ஏன் இப்போது இவரை மட்டும் கடைசி என்று குறிப்பிடவேண்டும் ...//
முந்தய பதிலே இதற்கும்


//23 ஆண்டுகளாக அதே போல் எழுதப் படிக்கத் தெரியாதவனாகவே கடைசி வரை இருந்தார் என்பது நம்ப முடியாத கதை! அப்படி ஒரு மனிதரையா அல்லா தேர்ந்தெடுத்திருப்பார்??!!//
அதுதான் இவருக்கு உள்ள சிறப்பே! எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் தோராவையும், பைபிளையும் படித்து தனது சொந்த சரக்கையும் சிறிது சேர்த்து குர்ஆனாக்கி விட்டார் என்று அநியாயத்துக்கு பழி போடுவீர்கள்.

இந்த விஞ்ஞான யுகத்திலேயே எழுதப் படிக்க தெரியாமலேயே கை நாட்டாகவே இருந்து இறந்த எத்தனையோ பேரை எனக்குத் தெரியும். ஒரு மொழியை ஈஸியாக பேசி விடலாம். ஆனால் இலக்கண சுத்தத்தோடு பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் அதுவம் இன்றைய அறிவியலுக்கு மாற்றமில்லாத ஒரு இலக்கியத்தை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. இதனால்தான் அன்றைய பெரும் கவிஞர்கள் எல்லாம் 'இது முகமதின் வார்த்தைகள் அல்ல' என்று அடித்துக் கூறினார்கள்.

//அதிலும் மெக்காவிலும் மெதீனாவிலும் வைத்து சொன்ன வசனங்கள் தீவிரத்தில் மாறுபட்டிருப்பதேன்?//
இந்த வசனம் மக்காவில் அருளப்பட்டது: இந்த வசனம் மதினாவில் அருளப்பட்டது என்று எந்த குறிப்பும் மூலப்பிரதியில் இல்லை. விரிவுரை எழுதியவர்கள் தாங்களாகவே இங்குதான் அருளப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவில் ஓரத்தில் குறித்திருப்பார்கள். இதற்கு ஹதீது ஆதாரம் கிடையாது. அதை தெரியாததால் வசனங்களின் பொருள்களில் மாறுதல் ஏதும் வந்து விடப் போவதில்லை. எனவே இது தேவையில்லாத ஆராய்ச்சி.

//எனக்கும் பிடித்த பெயராகப் போய் விட்டது.//
இறைவனுக்கு பிடித்தவாறு வாழ்க்கையில் நடந்து நீங்களும் சுவனத்தை அடைய பிரார்த்திக்கிறேன்.

சார்வாகன் said...

ஸலாம் நண்பரே!
சவுதி மீது நமக்கு பல விமர்சனங்கள் இருப்பினும் ,இறந்த இளவரசருக்கு நம் அஞ்சலிகள்.இப்படி அஞ்சலி செலுத்துவது இஸ்லாமின் படி சரியா இது குறித்து கொஞ்சம் விளக்கவும்.
நன்றி

தருமி said...

//விரிவுரை எழுதியவர்கள் தாங்களாகவே இங்குதான் அருளப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவில் ஓரத்தில் குறித்திருப்பார்கள். ...எனவே இது தேவையில்லாத ஆராய்ச்சி.//

அப்படிப் போடுங்க ... நமக்கு எப்படி வேணுமோ அப்படி மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும். நல்ல philosophy!

பின்னால் சொன்ன வஹித்துகளில் தீவிரத்தன்மை கூடியுள்ளது என்பது நிஜம். அதை மறைக்க அதை தேவையில்லாத ஆராய்ச்சி என்று சொல்லி விடலாம்.

:)

தருமி said...

//அதுதான் இவருக்கு உள்ள சிறப்பே! எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் தோராவையும், பைபிளையும் படித்து தனது சொந்த சரக்கையும் சிறிது சேர்த்து குர்ஆனாக்கி விட்டார் என்று அநியாயத்துக்கு பழி போடுவீர்கள்.//

இதைத் தான் கிளிப்பிள்ளைப் பதில் என்று கூறுகிறேன்.

எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் மட்டும்தான் சொந்த சரக்கைச் சேர்க்க முடியுமா? வாயினால் சொல்லும்போது சேர்க்க முடியாதோ?

இதெல்லாம் என் முயலுக்கு மூன்று கால் கதை தான். நீங்கள் ஏமாந்து நம்பிக்கொண்டிருப்பது போதும்; எங்களையும் அதே போல் ஏமாந்திருக்க சொல்லாதீர்கள் ...

தருமி said...

//நீங்களும் சுவனத்தை அடைய பிரார்த்திக்கிறேன். //

அய்யா ... ஜாலி .. ஜாலி!!!!!!

ஆனாலும் இந்த வாழ்க்கையில் மறுக்கப்பட்டவைகளுக்கு அடுத்த வாழ்வில் ஆசைப்படுவது.,, அனுபவிப்பது .. அவைகளுக்குப் ‘பிரியவனாக’ இருப்பது தவறாகப் படுகிறது!!! ம்ம்.. ம்.. என்ன செய்வது ...?!

தருமி said...

இந்த வாழ்க்கையில் நான் சொன்னபடி நடந்தால் மறு வாழ்வில் எல்லையில்லா மது. எண்ணிக்கையில்லா மாது, குறையாத பாலின ஆற்றல் என்று பரிசாகச் சுவனத்தில் தருவேன் என்பது ஒரு கடவுளின் தரக்குறைவான பரிசு;

இந்த வாழ்வில் தீது என்று தள்ளிவைக்கப்பட்ட தீயவைகளை கடவுள்

சுவனப்பரிசாகத் தருவாரென்ற நம்பிக்கையில் நல்லவைகள் / தீயவைகள் (தீவிரவாதம்) செய்து அந்தச் சுவனத்தின் மேல் பிரியமுடன் இருப்பது

ஒரு மனிதனுக்கும் கேவலம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

suvanappiriyan said...

சலாம் சார்வாகன்!

//சவுதி மீது நமக்கு பல விமர்சனங்கள் இருப்பினும் ,இறந்த இளவரசருக்கு நம் அஞ்சலிகள்.இப்படி அஞ்சலி செலுத்துவது இஸ்லாமின் படி சரியா இது குறித்து கொஞ்சம் விளக்கவும்.//

இறந்தவர் பாவங்கள் ஏதும் செய்திருந்தால் அவருக்காக இறைவனிடம் பாவமன்னிப்பு அந்த நபரின் நெருங்கிய உறவினர்களோ மற்றவர்களோ கேட்க அனுமதி உண்டு. எனவேதான் அதற்காக தொழுகையும் நடத்தப்படுகிறது. ஒப்பாரி வைத்து சத்தம் போட்டு அழுவதை இஸ்லாம் தடுக்கிறது. துக்கம் மூன்று நாள் வரைதான் அனுஸ்டிக்க வேண்டும். அதன்பிறகு சகஜநிலைக்கு திரும்பி விட வேண்டும். இறநதவர் சமாதியின் மீது கற்களைக் கொண்டு கட்டடம் கட்டி அதை நிரந்தரமாக மக்கள் பார்வையில் வைக்கக் கூடாது. தவறாக முன்பு யாரேனும் கட்டியிருந்தால் அதை இடித்து தரை மட்டத்துக்கு கொண்ட வர வேண்டும்.

ஒரு சில முஸ்லிம்கள் ஏழாம் நாள், 40ம் நாள், வருடம் என்று முல்லாக்களைக் கொண்டு வந்து பாத்திஹா ஓதி சாப்பாடு செய்வார்கள். இது இந்துக்களிடமிருந்து கடன் வாங்கிய பழக்கம். இதை தவறு என்று அனைத்து கிராமங்களிலும் எடுத்துச் சொல்லி தற்போது இந்த பழக்கம் மிகவும் குறைந்து விட்டது.

suvanappiriyan said...

தருமி!

//எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் மட்டும்தான் சொந்த சரக்கைச் சேர்க்க முடியுமா? வாயினால் சொல்லும்போது சேர்க்க முடியாதோ?//

வாயினால் சொல்வதில் தவறுகள் வராதா? 'பின்னோக்கி செல்லும் இரவு' என்பதை கல்லூரி பேராசிரியரான உங்களுக்கே அதுவும் அறிவியல் யுகத்தில் வாழும் இந்த நூற்றாண்டைச் சேர்ந்த உங்களுக்கு விளங்கவில்லை. படிப்பறிவற்ற சமூகத்தில் வாழ்ந்த எழுதவும் படிக்கவும் தெரியாத ஒருவர் இந்த உண்மைகளை எப்படி சொல்ல முடிந்தது. இது மட்டுமா? இது போல் குர்ஆனில் நூற்றுக்கணக்கான வசனங்களை அவரால் எப்படி சொல்ல முடிந்தது என்ற கேள்விக்கான உங்களின் பதில் என்ன?

'குர்ஆனை முஹம்மது இட்டுக் கட்டி விட்டார்' என்று அவர்கள் (தருமி போன்றவர்கள்) கூறுகிறார்களா? 'நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள். இறைவனையன்றி உங்களால் இயன்றவர்களை துணைக்கு அழைத்து கொள்ளுங்கள்' என்று முஹம்மதே கூறுவீராக!'
-குர்ஆன் 10:38

George said...

//தங்கள் மதத்தை மோடியும் அத்வானியும் தாராளமாக காப்பாற்றிக் கொள்ளட்டும். ஆனால் அதற்காக முஸ்லிம்களையும் கிறித்தவர்களையும் அழித்து இந்து மதத்தை வளர்க்க வேண்டும் என்பதைத்தான் இங்கு எதிர்க்கிறோம்.// பிறரை அழித்து தான் மதத்தை வளர்ப்பது என்ற கேவலத்தை அவர்கள் செய்வது எந்த விதத்திலும் ஏற்று கொள்ளத்தக்கது அல்ல. ஆனால்
இது தானே இஸ்லாமியர்களின் தேசங்களிலும் பிற மதத்தவருக்கு நடந்து கொண்டு இருக்கிறது. பெரும்பான்மை சமூகம் எப்போதுமே சிறுபான்மையினரை நசுக்கி கொண்டு தானே இருக்கிறது. அல்லாவினால் நேரடியாக அருளப்பட்ட மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் மட்டும் இதில் விதி விலக்காகவா இருகிறீர்கள்.

//தங்களின் நபிமார்களை கடவுளாக்கிய யூத கிறித்தவர்களைத்தான் முகமது நபி சபித்தார். இறக்கும் தருவாயில் அப்படி ஒரு வார்த்தை வரவில்லை என்றால் இன்று முகமது நபியும் ஒரு கடவுளாக்கப்படடிருப்பார்.//
சுவனப்ரியன் அவர்களே, நபிகளை எல்லாம் கடவுளாக்கி கொண்டு இருந்தால் இன்று லட்ச கணக்கில் கடவுள்கள் இருந்திருப்பார்கள். மேலும் முகமது அவர்கள் ஒரு சொல் சொன்னால் தான் உயிரையும் விட தயாராக அன்று முஸ்லிம்கள் இருந்தார்களாமே, தனது படத்தை வரையவேண்டம் என்று கட்டளை இட்டது போல் தன்னை கடவுளாகக வேண்டாம் என்று கூறி இருந்தால் கேட்காமலா இருந்திருப்பார்கள். இப்படி வெறுப்பை உமிழ்ந்து தான் அதை கூற வேண்டுமா. இந்த வார்த்தைகள் அவரை கடவுளாக ஏற்று கொள்ள மட்டும் தடுக்கவில்லை சுவனப்பிரியன் அவர்களே, ஒரு மனிதனாகவே அவரை நினைக்க தடுக்கிறது. இறைவனோ இறை தூதரோ செய்யும் செயல் அல்ல இது.

//பெண்கள் மசூதிக்கு வர வேண்டாம் என்றோ மற்ற மதத்தவர் பள்ளிவாசலுக்குள் நுழையக் கூடாது என்றோ இஸ்லாம் தடை விதிக்கவில்லை. அப்படி எங்கேனும் முஸ்லிம்கள் நடந்து கொண்டால் அவர்களை திருத்த வேண்டும்.//
நகைச்சுவை செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன், தமிழ் நாட்டுக்கு வந்தால் இங்கு இருக்கும் பள்ளி வாசல்களுக்கு ஒருமுறை சென்று வாருங்கள். "பிற மதத்தவர் நுழைய அனுமதி இல்லை' 'பெண்களுக்கு அனுமதி இல்லை' 'பெண்கள் இந்த வாசல் வழியாக வர கூடாது' என்பன போன்ற அறிவிப்பு விளம்பரங்கள் எல்லா பள்ளிவாசல்களிலும் தொங்கும். நீங்கள் அவர்களை கொஞ்சம் திருத்த முயற்சி செய்யுங்களேன்

//குர்ஆனை முஹம்மது இட்டுக் கட்டி விட்டார்' என்று அவர்கள் (தருமி போன்றவர்கள்) கூறுகிறார்களா? 'நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள். இறைவனையன்றி உங்களால் இயன்றவர்களை துணைக்கு அழைத்து கொள்ளுங்கள்' என்று முஹம்மதே கூறுவீராக!'
-குர்ஆன் 10:38//

சுவனப்ரியன் அவர்களே அல்லாவின் இந்த சவாலை ஏற்று யாராவது இது போன்ற அத்தியாயத்தை படைத்து யாராவது கொண்டு வந்தால், இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து தீர்ப்பு கூற இருவரையும் விட பெரியவர் ஒருவர் வேண்டுமே, அதாவது அல்லாவையும் புதிய அத்தியாயத்தை படைக்கும் ஒருவரையும் விட மேலானவர்தானே இந்த விசயத்தில் தீர்ப்பு கூற முடியும் அவரு யாரு?

தருமி said...

//'நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள். இறைவனையன்றி உங்களால் இயன்றவர்களை துணைக்கு அழைத்து கொள்ளுங்கள்' என்று முஹம்மதே கூறுவீராக!'//

ஒண்ணு சொல்றேன்; கோவிச்சுக்காதீங்க. இந்த ‘அறைகூவல்’ ரொம்ப சின்னப்பிள்ளைத் தனமா இருக்கு!

ஒரு அஞ்சு வயசுப்பிள்ளைட்ட போய் நீங்களோ நானோ ஒரு சவால் இடுவோமா? very pathetic challenge ...பாவம் அந்தக் கடவுள்!

எல்லாம் தெரிந்த எந்தக் கடவுளாவது இப்படியெல்லாம் தன் படைப்புகளையே பார்த்து இப்படி ஒரு சவால் கொடுக்குமா? இந்த ஒரு வசனத்தை வைத்தே இது கட்டாயம் ஒரு சராசரி மனிதனின் வார்த்தைகள் என்பது புரிகிறது.

கடவுளை / அல்லாவை இந்த அளவு கீழே இறக்காதீர்கள். பாவம் அந்தக் கடவுள்!

ஆனால் இதெல்லாம் யோசிப்பவர்களுக்கு மட்டுமே!

suvanappiriyan said...

தருமி!

//இந்த வாழ்வில் தீது என்று தள்ளிவைக்கப்பட்ட தீயவைகளை கடவுள் சுவனப்பரிசாகத் தருவாரென்ற நம்பிக்கையில் நல்லவைகள் / தீயவைகள் (தீவிரவாதம்) செய்து அந்தச் சுவனத்தின் மேல் பிரியமுடன் இருப்பது ஒரு மனிதனுக்கும் கேவலம்.//

வட்டி வாங்கக் கூடாது என்று யார் சொன்னது? இறைவன்தான் எனக்கு கட்டளையிடுகிறான். எனவே எனக்கு லாபம் என்றாலும் நான் வட்டி வாங்குவதில்லை: குடிப்பதில்லை: விபசாரம் செய்வதில்லை: திருடுவதில்லை: மனிதன் என்ற முறையில் இந்துக்களிலும் பலர் இதுபோன்ற நல்ல குணங்களை பின் பற்றுபவர்கள் உண்ணார்கள். ஆனால் இதனை நான் இறைவன் தடுக்கிறான் என்பதற்காக ஒரு வைராக்கியத்தோடு இருக்கிறேன். இங்கு இழந்த சில சுகங்களுக்காக இறைவன் மறுமையில் பரிசளிப்பதாக வாக்களிக்கிறான். அதுதானே முறையும் கூட.

மனிதனுக்கு கேவலம் என்பது உங்களின் எண்ணம். எனக்கு நான் பொறுத்துக் கொண்டதற்காக இறைவன் எனக்கு தரும் பரிசாக நினைக்கிறேன்.

//உங்கள் மதத்தின் இந்த அடிப்படை உண்மை எனக்குக் கசக்கிறது//

எனக்கு இனிக்கிறது.

தருமி said...

//மனிதனுக்கு கேவலம் என்பது உங்களின் எண்ணம். //

மனிதனுக்கும் மட்டுமல்ல; தரும் கடவுளுக்கும், பெரும் மனிதனுக்கும் கேவலம் என்றல்லவா கூறியுள்ளேன்.

//இறைவன் எனக்கு தரும் பரிசாக நினைக்கிறேன்.//

நல்ல இறைவன்! மிக நல்ல பரிசு!!

ஜமாய்ங்கள்!!!!!!!!!!!!!!

தருமி said...

சுவனப்பிரியன்
//விக்கியில் வரும் செய்திகள் எல்லாம் குர்ஆனுக்கோ அரபு மொழிக்கோ ஆதாரமாக கொள்ள முடியாது.//
நியாயம் தான். மேற்கோள் கொடுத்ததும் இந்தப் பதில் வரும் என்று நினைத்து விட்டேன். கொடுத்தி விட்டீர்கள்.

//அதுவும் ஆண்களுக்கு மட்டும் தான். பெண்களுக்கு என்ன கொடுப்பான் என்று முன்பே கேட்ட என் கேள்விக்கு இதுவரை பதிலேதும் இல்லை.//

//முன்பு பதிலளித்த கேள்வியையே திரும்பவும் கேட்டால் என்ன செய்வது?//

என்ன பதில் கொடுத்திவிட்டீர்கள்! எப்போதும் அதே இரு மேற்கோள்களைக் காட்டி விட்டால் பதில் சொல்லி விட்டதாக நான் எடுத்துக் கொள்ள வேண்டுமோ! கொஞ்சம் ‘பச்சையாகக்’ கேட்க கூச்சப்பட்டு கேட்ட கேள்விக்கு இதுதான் பதிலென்றால், இப்போது பச்சையாகவே கேட்டு விடுகிறேன்:

56:7-40
22. அழகிய கண்களை ய்டைய ‘ஹூர்’ எனும் மங்கையரும் அவர்களுக்காக இருப்பர்..24, இவைகள் அனைத்தும் உலகில் அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களுக்குக் கூலியாக அவர்களுக்குக் கிடைக்கும். (நீங்கள் இதைத்தானே இனிக்கும் என்று சொன்னீர்கள்?)
மேலும் -
Al Hadis, Vol. 4, p. 172, No. 34
Ali reported that the Apostle of Allah said, "... When a man desires a beauty, he will have intercourse with them."

ஆண்களுக்கு பாலியல் சுகத்திற்காக இப்படி பெண்கள் கிடைக்குமென்றால் பெண்களுக்கு இணையாக அதுபோல் ஆண்கள் கிடைக்குமா; அவர்களும் பாலியல் சுகம் கொள்வார்களா? (//will have intercourse with them//)

Koran 52:24
Round about them will serve, to them, boys (handsome) as pearls well-guarded.
Koran 56:17
Round about them will serve boys of perpetual freshness.

நீங்கள் சொன்னது போல் ’'இளமை மாறாத சிறுவர்கள்’ என்றே எடுத்துக் கொள்வோம். அவர்களைப் பற்றி குரானில் சொல்லும்போது அவர்களை எதற்காக் - as pearls well-guarded - இப்படி வர்ணிக்க வேண்டும். 'வெறும் உதவி’ செய்யும் இளைஞர்களுக்கு இத்தனை adjectives எதற்கு?

இதே போல் பெண்களுக்கும் இவர்கள் அல்லது இளம் பெண்கள் மது ஓடுகின்ற ஊறிலிருந்து நிரப்பப்பட்ட கோப்பைகளையும், கெண்டிகளையும் பளிங்குக் கிள்ளங்களையும் ஏந்தியவாறு சுற்றிக் கொண்டு இருப்பார்களா?


Koran 83:23-26
The righteous will surely dwell in bliss. Reclining upon soft couches they will gaze around them: and in their faces you shall mark the glow of joy. They shall be given a pure wine to drink, securely sealed, whose very dregs are musk...

சுவனத்தில் ஆண்களுக்கு குடிக்க மது கரை புரண்டோடும்; குடித்தாலும் ஒன்றுமே ஆகாதாமே! (நீங்கள் இதைத்தானே இனிக்கும் என்று சொன்னீர்கள்?) இதே போல் பெண்களும் கரைபுரண்டோடும் மதுவை குடிப்பார்களா?

இதைப் பற்றியெல்லாம் குரானில் சொல்லவில்லை; ஆகவே எனக்குத் தெரியாது என்று கூறினீர்கள் என்றால் - என் கேள்வி: ஏனிந்த பாலியல் வேறுபாடு கடவுளுக்கு என்பது என் கேள்வி; ஆண்களுக்குக் கொடுப்பது போல் பெண்களுக்கு என்ன கொடுக்கப்போகிறார்?
அல்லது, இதைப் பற்றியெல்லாம் குரானில் சொல்லவில்லை; ஆகவே எனக்குத் தெரியாது. வேண்டுமானால் மறு வாழ்வு சமயத்தில் அல்லாவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற 1400 வருடப் பதிலைத் தரப்போகிறீர்களா?

தாய்மடி said...

பொதுவாகவே அராபியர்கள் அமெரிக்காவின் தழுவலில் உணவு உட்பட பலவற்றைகளை மேற்கொள்கின்றனர் அன்பரே...